வியாழன், 27 டிசம்பர், 2012

சாய கிரகமான ராகு கேதுவுடன் மற்ற கிரகங்கள் சேர்க்கை பெற்று ஒரு பாவகத்தில் அமரும் பொழுது தரும் பலன்கள் !



கேள்வி :

 ஒருவருடைய சுய ஜாதகத்தில் சாயா கிரகமான ராகு கேதுவுடன் , சுப கிரகங்களோ , அசுப கிரகங்களோ சேர்க்கை பெற்று அமரும் பொழுது தரும் பலன்கள் என்ன ? ராகு கேதுவுடன் சேரும் கிரகங்கள் ஜாதகருக்கு அவ்வளவு நன்மையை செய்யவதில்லை என்றும் , குறிப்பாக சூரியன் , செவ்வாய் , சனி போன்ற அசுப கிரகங்கள் சேரும் பொழுது ஜாதகருக்கு அதிக தீமையே செய்கின்றது என்பது பொது கருத்தாக இருக்கிறது , உண்மை என்ன ? சற்றே தெளிவாக விளக்கவும்.  நன்றி !

பதில் :

கிரக சேர்க்கை வைத்தே ஒரு ஜாதகத்தில் ஒருவருக்கு யோக அவ யோக நிலையை பற்றி நிர்ணயம் செய்கின்றனர் , குறிப்பாக சுப கிரகங்கள் சேர்க்கை பெரும் பொழுது யோக பலன்களையும் , அசுப கிரகங்களின் சேர்க்கை ஜாதகருக்கு அவ யோக பலன்களை தரும் என்று பலன் நிர்ணயம் செய்கின்றனர் பெரும்பாலான ஜோதிடர்கள் , இதில் சுய ஜாதகத்தில் கிரக சேர்க்கை நிர்ணயம் செய்யும் பொழுது பல விதி விளக்குகள் உள்ளன , இதனால் ஒருவருடைய சுய ஜாதகத்தில் கிரக சேர்க்கை பெறாதா நிலையை கூட யோக நிலை என்றும் , கிரக சேர்க்கை பெற்ற நிலையை கிரக சேர்க்கை இல்லை என்றும் கணிதம் செய்து பலன் சொல்கின்றனர் .


எடுத்துகாட்டாக :

மேற்கண்ட இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு பெரும்பாலான ஜோதிடர்களின் கணிப்பு , ராகு கிரகத்துடன் செவ்வாய் குரு சேர்க்கை பெற்று இருக்கிறது என்றும் , சனி பகவானுடன் எந்த கிரகமும் சேர்க்கை பெறவில்லை என்பதாகவே இருக்கிறது , உண்மையில் இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு ராகு கிரகத்துடன் எந்த ஒரு கிரகமும் ஒரே பாவகத்தில் சேர்க்கை பெறவில்லை, கரணம் இந்த ஜாதகருக்கு லக்கினம் என்பது, சிம்மத்தில் 131.33.44 பாகையில் ஆரம்பித்து, கன்னியில் 162.12.33 பாகையில் முடிவடைகிறது .

இதில் ராகு  ஜாதகத்தில் 126.25.02 பாகையில் அமர்ந்து இருக்கிறார் எனும் பொழுது  , ராகு சிம்மத்தில் அமர்ந்து இருந்தாலும் சிம்மத்தில் உள்ள 12 ம் பாவகத்தில் அமர்ந்து இருப்பதாகவே நாம் எடுத்துகொள்ள வேண்டும் , அதுவே சரியான  ஜோதிட கணிதம் , இதில் சனி பகவான் கன்னியில் அமர்ந்து இருந்தாலும் , அவர் லக்கின பாவகத்திர்க்கு உற்பட்ட 152.39.12 பாகையில் அமர்ந்து  விடுவதால் சனி பகவான் குரு செவ்வாய் பகவானுடன் சேர்க்கை பெற்றதாகவே  நாம் எடுத்துகொள்ள வேண்டும் , இதுவே கிரக சேர்க்கை பற்றிய  துல்லியமான ஜோதிட கணிதம்.

 இங்கே ராகு பகவான் சிம்மத்தில் குரு செவ்வாயுடன்  சேர்க்கை பெற்று இருப்பதுபோல் தெரிந்தாலும் , உண்மையில் அவற்றுடன்  சேர்க்கை பெறவில்லை , சனி கன்னியில் தனித்து நிற்பது போல் தோற்றம் தந்தாலும் , லக்கினத்திற்கு உட்ப்பட்ட பாகைக்குள் அமர்ந்து  இருப்பதால் உண்மையில் குரு பகவானுடனும் செவ்வாய் பகவனுடனும்  சேர்க்கை பெற்று அமர்ந்து இருக்கிறார் என்பதே உண்மை , மேற்கண்ட  எடுத்து காட்டில் இருந்து நாம் தெரிந்து கொள்வது , லக்கினம் மற்றும் 12 பாவகங்களும் எந்த பாகையில்  ஆரம்பிக்கிறது எந்த பாகையில்  முடிவடைகிறது என்று தெரியாத பொழுது , சுய ஜாதகத்தில் கிரக சேர்க்கையை  பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வர இயலாது , மேலும் அந்த கிரக  சேர்க்கை தரும் நன்மை தீமையை பற்றி தெரிந்து கொள்ள முடியவே முடியாது .

ஒரு ஜாதகத்தில் கிரக சேர்க்கை பற்றி முடிவு செய்வதிலேயே இவ்வளவு குளறுபடிகள் ஜோதிடர்களுக்கு இடையே காணப்படும் பொழுது , பாவம் ஜோதிட பலன் காண வந்தவரின் நிலை பரிதாபத்திற்கு உரியது , இதனால் தான் பல  ஜோதிடர்கள் ஆக ஓகோ இது ராஜ யோக ஜாதகம் என்று சொன்ன ஜாதகர்  கூட எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாமல் , விட்டத்தை பார்த்து  கனவு கண்டு கொண்டு இருக்கின்றனர் , ஆக ஜாதகத்தில் துல்லியமாக  பாகை வாரியாக கணிதம் செய்து பலன் காணும் பொழுதே சரியான  பலனை ஜாதகருக்கு சொல்ல இயலும் , அதுவே ஜாதகருக்கு நல்ல வாழ்க்கையை  அமைத்து தரும் .

சரி தாங்கள் கேட்ட கேள்விக்கு உண்டான பதிலுக்கு வருவோம் , சாயா கிரகத்துடன் சேரும்  கிரகங்கள் ஜாதகருக்கு எவ்வித பலனை தரும் ? 

ராகு அல்லது  கேதுவுடன் சேர்ந்து ஒரு பாவகத்தில் அமரும் கிரகங்கள் , அமர்ந்த  அந்த பாவகத்திர்க்கு எவ்வித நன்மை தீமையும் செய்ய இயலாது , அங்கு  அமர்ந்த ராகுவோ கேதுவோ முழு பலனையும் தானே ஏற்று நடத்தும் , மேற்கண்ட  சிம்ம இலக்கின ஜாதகத்தில் கேதுவுடன் சூரியன் , புதன் இரண்டு கிரகமும் சேர்க்கை பெற்று 6 ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கிறது , இங்கு கேதுவுடன்  சேர்ந்த சூரியன் , புதனுக்கு எவ்வித பலனும் 6 ம் பாவகத்திர்க்கு தர வாய்ப்பு  சிறிதும் இல்லை , கேது என்ற கிரகமே ஆறாம் பாவகத்திர்க்கு உண்டான  முழு பலனையும் செய்யும் அதுவும் 100 சதவிகிதம் நன்மையாக , ஆனால்  சூரியன் லக்கினத்திற்கும் , புதன் இரண்டு மற்றும் பதினொன்றாம் பாவகத்திர்க்கு  உண்டான நன்மை தீமை பலனை செய்வார்கள் .

பொதுவாக சாய கிரகமான ராகு கேதுவுடன்  எந்த கிரகமும் சேர்க்கை பெற்று ஒரே  பாவகத்தில் அமர்ந்தாலும் , அந்த பாவகதிர்க்கு எவ்வித நன்மை தீமையும்  செய்ய இயலாது , ஏனெனில் அந்த பாவகதிர்க்கு உண்டான நன்மை தீமை பலன்களை  ராகு கேதுவே 100 சதவிகிதம் நிர்ணயம் செய்யும் என்பதால், ராகு கேதுவுடன்  சேர்க்கை பெற்ற கிரகத்தை பற்றி நாம் எந்த கவலையும் கொள்ள தேவையில்லை, ராகு கேது ஜாதகருக்கும் அந்த பாவகதிர்க்கும் நன்மை  செய்கிறதா ? தீமை செய்கிறதா ? என்பதை மட்டும் பார்த்தால் போதும்,   அதுவே  ஜாதகருக்கு சரியான பலன் சொல்ல உதவும்.

 இல்லை எனில் குத்து மதிப்பாக 12 ராசிக்கும் நன்மைகள் மிக பெரிய அளவிலே, அதிக அளவிலே நன்மைகள் நடைபெறும் ஒரு நல்ல நாளாக விளங்குகிறது, என்று கதை விட்டுக்கொண்டு , காலத்தை கடத்த  வேண்டியதுதான். 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443306969


2 கருத்துகள்: