ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

ராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் !




ராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும்,  லக்கினத்தில் அமர்ந்தால் 100  சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கனத்தில் அமர்ந்தால், கேது களத்திர பாவம் எனும் ஏழாம் வீட்டில் அமருவார் .  கேது லக்கினத்தில் அமர்ந்தால், ராகு களத்திர பாவம் எனும் ஏழாம் வீட்டில் அமருவார்.

இந்த  அமைப்பில் இரு  கிரகங்களும் அமர்ந்தால் லக்கினம் மற்றும் களத்திரம் பாவம் இருவீடுகளும் 100  சதவிகித நன்மையை பெரும் ராசிகள் பின்வருபவன :

ரிஷப லக்கினம் , கடக லக்கினம் சிம்ம லக்கினம் , துலா லக்கினம் , கும்ப லக்கினம் , ஆகிய இலக்கின அமைப்பை பெற்றவர்களுக்கு ராகு கேது இரு கிரகங்களும் லக்கினம் முறையே களத்திற வீடுகளில் அமரும், இப்படி அமரும் ராகு கேது லக்கினம் மற்றும் களத்திரம் என இரு பாவங்களுக்கும் அந்த வீட்டுக்கதிபதியின் பலனை தாம் எடுத்துக்கொண்டு 100  சதவிகித நன்மையை மட்டுமே செயல்படுத்துவார்கள்.

   ரிஷப லக்கினம் , கடக லக்கினம் சிம்ம லக்கினம் , துலா லக்கினம் , கும்ப லக்கினம் , ஆகிய இலக்கின அமைப்பை பெற்றவர்களுக்கு ராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் மிகவும் நன்மையே, இவர்களுக்கு எவ்வித தோஷமும்  ஏற்ப்பட மற்றும் செயல் பட வாய்ப்பு 100  சதவிகிதம் இல்லவே இல்லை . இது இவர்களது முன்னேற்றத்தை பார்த்தாலே தெரிந்து விடும் .

பல ஜோதிடர்கள் ராகு கேது லக்கினத்தில் மற்றும் களத்திர பாவங்களில் அமர்ந்து இருந்தால் போதும் அவை கெடுதல் மட்டுமே செய்யும் என்று தவறான கருத்தை மக்களிடயே புகுத்தி விடுகின்றனர் இதனால், இந்த ஜாதக அமைப்பை பெற்றவர்கள், படும் பாடு திண்டடம் ஆகிவிடுகிறது, இது மாதிரி நுனிப்புல் மேயும் ஜோதிடர்களிடம் , மாட்டிக்கொண்டு சில ஜாதகரின் நிலை கவலைக்கிடமாக உள்ளனர் , 

குறிப்பாக 45  வயது ஆனாலும் திருமணம் ஆகாமல் தவிக்கிற தவிப்பு சொல்ல முடியாது, இதில் ஆண் பிள்ளையை பெற்றவர்கள்  அமைப்பு பரவாயில்லை , பெண் பிள்ளையை பெற்றவர்கள்   நிலை அந்தோ பரிதாபம் . 

என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற வந்த ஒரு பெண்ணுக்கு வயது 38 அந்த பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை காரணம், எந்த ஜோதிடனோ ஒருவன் இந்த பெண்ணுக்கு கால சர்ப்ப தோஷம் மற்றும் களத்திர தோஷம் இதனால் திருமணம் 38 வயதுக்கு மேல் செய்ய்தால்தான் மாங்கல்யம் நிலைக்கும், அதற்க்கு முன் இந்த பெண்ணின் வாழ்க்கையில் திருமணம் நடந்தால் கணவன் விபத்தில் இறந்து விடுவான் என்று கூறியுள்ளான், இதை அந்த பெண்ணின் பெற்றோரிடம் சொல்லியிருந்தால் பரவாயில்லை , பெண்பார்க வந்த மணமகன் வீட்டாரிடம் சொல்லியிருக்கிறான் இது காட்டு தீபோல் ஊரெல்லாம் பரவி அந்த பெண்ணின் வாழ்க்கையே கெட்டு குட்டிசுவர் ஆகிவிட்டது.

உண்மையில் அந்த பெண்ணின் லக்கினம் கடகம், ராகு கேது லக்கினம் ஏழாம் வீடு முறையே மிகவும் சிறப்பாக அமர்ந்து இருந்தனர், ஜாதகத்தில் எவ்வித தோஷமும் இல்லை ,

சரி அப்படியிருக்க இந்த பெண்ணுக்கு ஏன் திருமணம் ஆகவில்லை, என்று பார்த்த பொழுது தான் ஜாதகத்தில் நான்காம் வீடு மற்றும் ஐந்தாம் வீடு ஆகியவை வெகுவாக பாதிக்கப்பட்டு இருந்தது, நான்காம் வீடு ஒரு பெண்ணின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டு இருந்தால், அந்த பெண்ணின்  தகப்பனாரே திருமண தாமதத்திற்கு காரணம் ஆகிவிடுவார்,  ஜாதகியின் தகப்பனார் வரன் பர்தறேன்றால் அந்த பெண்ணுக்கு திருமணம் நடக்க வாய்ப்பே இல்லை அதையும் இதையும் குறை சொல்லி, வரும் வரன்கள் அனைத்தையும் தட்டி கழித்து விடுவார், மேலும் ஐந்தாம் வீடு பாதிக்கப்பட்டால் ஜாதகி தனது பூர்விகத்தை விட்டு 100  கிலோ மீட்டர்  தள்ளி வந்து குடியிருந்திருந்தால் திருமணம் இளம் வயதில் மிகவும் சிறப்பாக நடந்திருக்கும் . என்பதை சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன்.

சில மாதங்களுக்கு முன் அவர்கள் வெளியூர் சென்று விட்டனர், கடந்த மாதம் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்து விட்டது என்று அந்த பெண்ணின் தாயார் கடிதம் மூலம் தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தார். எல்லாம் இறை அருளின் கருணை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696   

சனி, 25 பிப்ரவரி, 2012

உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பான் என்று சொல்லுவது உண்மைய ?





பொதுவாகவே ஒருவருடைய   சுய ஜாதகத்தில் நவகிரகங்கள், ஆட்சி , உச்சம் , நட்பு என்ற நிலைகளில் இருந்தால் அந்த கிரகங்கள்  ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்கும் என்று கணிப்பது முற்றிலும் 
தவறானது , 

உதராணமாக சிம்ம இலக்கின ஜாதகருக்கு சூரியன் சிம்மத்தில் ஆட்சி பலம் பெறுவதும் மேஷத்தில் உச்ச பலன் பெறுவதும் ஜாதகருக்கு அவ்வளவு நன்மை தருவதில்லை, என்பது சிம்ம இலக்கின அமைப்பை சேர்ந்தவர்களை கேட்டு பார்த்தால் தெரியும்.

 இதே சிம்ம இலக்கான ஜாதகருக்கு சூரியன்  கும்பத்தில் அமர்ந்து பகை பெற்றாலும் லக்கினத்துக்கு 100  சதவிகித நன்மையை வாரி வழங்குவதை அனுபவத்தில் பார்க்கலாம்.

இதே போல் கும்ப இலக்கின ஜாதகருக்கு சனிபகவான் துலாம் ராசியில் அமர்ந்தால் நன்மையான பலன்களை சிறிது கூட கொடுப்பதில்லை , மேலும் துலாம் இலக்கின ஜாதகருக்கு மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் ஜாதகரை கடனாளியாகவும் மன ரீதியான பிரச்சனைக்குள் தள்ளிவிடுகிறார் என்பது முற்றிலும் உண்மை. 

ஜாதக கணிதம் செய்யும் பொழுது   சுய ஜாதகத்தில் நவகிரகங்கள், ஆட்சி , உச்சம் , நட்பு என்ற நிலைகளில் இருந்தால் அந்த கிரகங்கள்  ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்கும் என்று கணிதம் செய்வது, நுனி புல் மேய்ந்த கதை ஆகும் .

ஒரு ஜாதகத்தில் எந்தவொரு கிரகமும் ஆட்சி , உச்சம் , நட்பு , சமம் , நீச்சம், பகை என்ற அமைப்பை வைத்து கொண்டு ,  

 ஆட்சி , உச்சம் , நட்பு என்ற அமைப்பை பெற்றால், நன்மை செய்யும் என்றும் . 

 நீச்சம், பகை என்ற அமைப்பை பெற்றால் தீமை செய்யும் என்றும். கணிதம் செய்வது முற்றிலும் தவறான அணுகு முறை .

 மேலும் ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் தனது வீடுகளுக்கு ( அதாவது ஸ்தான பலன் ) என்ன வகையான பலன்களை பெறுகின்றது என்று கணிதம் செய்வதே சரியான ஜோதிட ஆலோசனை வழங்க ஏதுவாக இருக்கும். இந்த அமைப்பில் கணிதம் செய்யும் பொழுது பலன்கள் துல்லியமாக வந்து விடும் என்பது உண்மை .

இந்த அமைப்பில் கணிதத்தின் மூலம் நடக்கும் திசை மற்றும் புத்தி , அந்தரம் , சூட்சமம் ஜாதகருக்கு எந்த வீடுகளின் பலன்களை தருகிறது, அது நன்மையா ,தீமையா என எளிதில் கணிதம்  செய்து ஜாதகரின் நிலையை துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியும் என்பது நிச்சயம் .
 
 மேலும் கோட்சார அமைப்பில் நவகிரகங்கள்  ஜாதகருக்கு நடக்கும் திசை மற்றும் புத்தி , அந்தரம் , சூட்சமம் அமைப்பில் நடத்தும் எந்த  வீடுகளுடன் எவ்விதம் சம்பந்தம் பெறுகிறது என்று கணிதம் செய்து விட்டால், ஜாதக பலன்கள் 100  சதவிகிதம் சரியாக சொல்லிவிட முடியும் .

 ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696   

சனி பார்க்கும் இடம் பாழாகி விடுமா ?







 சனி பார்க்கும்  இடம் பாழாகி விடுமா ?

அந்த காலத்தில் ஒரு செலவாடை உண்டு, மஞ்சள் காமாலை வந்தவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்று, அதுபோல் இருக்கிறது இது ?!

சிறு உதாரணம் :

கும்பலக்கான ஜாதகருக்கு சனிபகவான் சிமத்தில் நின்று பார்வை முறையே, மகரம், கும்பம் , ரிசப ராசியினை பார்வை செய்கிறார் என்று வைத்து கொள்வோம் ஜாதகரின் நிலை எப்படி இருக்கும் ?

நிச்சயமாக சனி  பார்க்கும் பாவங்கள் ஆனா ( 6  ம் பார்வை ) 12  ம் பாவம் , 
(7  ம் பார்வை ) லக்கினம் , ( 10  ம் பார்வை )  4  ம் பாவங்கள் முறையே சனிபகவான்  தனது பார்வையினால் அந்த காரக தத்துவத்திற்கு ஏற்ற படி யோக பலன்களை 100  சதவிகிதம் கொடுப்பவர் ஆகிறார்.

 எனவே சனிபகவான் பார்க்கும் இடங்கள் எல்லாம் பாழ்படும் என்று செல்லுவது கண் தெரியாதவன் கயிலாயத்தை கண்டேன் என்று சொல்லுவதற்கு சமம் .

குறிப்பு :
  

சனிபகவானுக்கு  6 , 7 , 10   இடப்பார்வைகளே உண்டு என்று பழமையான ஜோதிட நூல்கள் சொல்லுகின்றன மேலும் சமஷ்கிருததில் 6  என்ற எண்ணை 3  போல் எழுதுவார்கள், இதுவே சனிபகவானுக்கு 3  ம் இட பார்வையுண்டு என்று மறுத்தல் அடைந்திருக்கலாம் . 

உண்மையில் சனிபகவானுக்கு,   6 , 7 , 10   இடப்பார்வைகளே உண்டு என்பதை அனைத்து பழமையான ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.


சனிபகவானின் மீது ஜோதிடர்களுக்கு என்ன பகையோ தெரியவில்லை, தொடர்ந்து நடக்கும் அனைத்து தீமைகளுக்கும் அவரே காரணம் என்று பலி போடுகிறார்கள், சனிபகவான் ஜோதிடர்களிடம் மாட்டிக்கொண்டு கண்விழி பிதுங்கி விடுகிறார், சனிபகவான் அதிக  தீமை செய்பவராக இருந்தால் அவருக்கு இறைவன், கலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் லாப ஸ்தானம் என மிக சிறந்த இடங்களை கொடுப்பார ?

சனிபகவானின் தத்துவமே ஒருவர் நன்மையை செய்தால் அவருக்கு நன்மையையும் , தீமையை செய்தால் அவருக்கு தீமையும் வழங்கும் பதவியை மட்டும் வகிக்கிறார் என்பதை மக்கள் அனைவரும் உணர வேண்டும் .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435  
9443355696  

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

15 நாட்களில் செல்வ வளம் ? என்ன கொடுமை சரவணன் !



ஒரு வாரத்தில் செல்வ வளம் பெறலாம்  ?

15 நாட்களில் செல்வ வளம் பெறலாம்  ?

 30  நாட்களில் செல்வ வளம் பெறலாம் !?

41  நாட்களில் செல்வ செழிப்பை உண்டாக்கும் அதிசய அதி நுட்ப அஸ்ட்ரோ 
நியுமராலஜி , கிராப்பாலாஜி, நேம்பராலாஜி,  ? மேலும் பல லாசிகள்

 மற்றும்  மந்திர வசிய முறை , கிரகங்களை அக்டிவேசன் & டியாக்டிவேசன் செய்து ஒருவனை கோடிஸ்வரனாக மற்றும் முறை .




மேலே கண்டவைகள் அனைத்தும் பல ஜோதிட புத்தகங்களில் வரும் விளம்பரங்கள் . சற்றே சிந்தனைக்கு எடுத்து கொள்ளவோம் மேல்கண்ட விளம்பரங்களில் காணப்படுவது போல் நடந்து விட்டல், அல்லது ஒருவர்  செய்துவிட்டால் அவர் சத்தியாமாக கடவுள் என்றுதான் கும்பிட வேண்டும் 

 உண்மையில் இந்த விளம்பரங்களை பார்த்து அவர்களை நாடி சென்றவர்களுக்கு கிடைத்தது  என்னவென்றால் திருவோடு மற்றும் திருநெல்வேலி அல்வா தான் என்பதை அனுபவித்தவர்களுக்கு நான்றாக தெரியும் , ஏனெனில் மற்றவனை மாற்றக்கூடிய திறன் உள்ள மனிதன் இதுவரை வரை பிறக்கவில்லை , அப்படி ஒரு மாற்றம் ஒருவருக்கு நடந்திருந்தால் நிச்சயம் அது இறையருளின்  சித்தமாக இருக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும் .

  கிரகங்களை அக்டிவேசன் & டியாக்டிவேசன் செய்து ஒருவனை கோடிஸ்வரனாக மற்றும் முறை இந்த விளம்பரத்தை நன்றாக கவனியுங்கள் நவகிரகங்கள் அனைத்தும் இந்த விளம்பரம் செய்தவரின் வீட்டில் பண்ணையத்தில் கூலி வேலை செய்பவர்கள் போல் விளம்பரம் தந்துள்ளார் என்ன கொடுமையட சாமி கலி காலத்தில் இப்படி எல்லாம நடக்கும் .

 அக்டிவேசன் & டியாக்டிவேசன் செய்ய அது என்ன சிம்கார்டா  இதில் பெருமை வேறு 650  வது தொடரை கடந்து வெற்றி பாதையில் என்று விளம்பரம், எமது நண்பர் ஒருவர் இவரிடம் சென்று ஜோதிட ஆலோசனை 

 ( ஜோதிட ஆலோசனை கட்டணம் மற்றும் இரத்தின ஆலோசனையின் பேரில் ரூபாய் 75 ,000 பெற்றுக்கொண்டுள்ளார் என்பது வேறு கதை )

பெற்று வந்து சில மாதங்களிலேயே உள்ளதும் போச்சுட நொள்ள கண்ணா என்ற நிலையில் எம்மை காண வந்தார்,( உண்மையில் இவரிடம் ஆலோசனை பெறுவதற்கு  முன் நண்பருக்கு சொந்தமாக இரண்டு லாரி இருந்தது ,ஜோதிட ஆலோசனையின்  பலனாக இரண்டு லாரியையும் விற்றுவிட்டு கடனாளியாக மாறிவிட்டார்  ) அவரை பார்த்தால் பரிதாபமாக இருந்தது, முதலில் அவருக்கு சொன்ன ஆலோசனை
( சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்
உங்களது ஜாதக அமைப்பில் எந்த ஒரு யோகமும் இல்லாமல் எதையும் பெற முடியாது ,ஆகவே ஜாதகத்தின் உண்மை நிலையை உணர்ந்து, தனம்பிக்கையுடன் உழைப்பை செய்யுங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும் என்பதாகும்.

ஜோதிடம் என்பது வாழ்வியல் வழிகாட்டி , இதில் நாம்  மூட நம்பிக்கைகளை வளர்த்துகொள்வது  அடி முட்டல் தனம், இதை பார்த்த பிறகாவது மக்கள் சிந்திப்பார்களா ? 

மேலும் இந்த ஜோதிட கலையினை முறையாக கற்றுக்கொள்ளாமல், ஜோதிடகலையில் தேர்ச்சி பெறாமல் தவறான   ஜோதிட ஆலோசனை சொல்பவர்களது வாழ்க்கை வெகு விரைவில்  மிகவும் நசிந்து விடும் என்பது உண்மையிலும் உண்மை.

இந்த தெய்வீக கலையை தவறாக பயன் படுத்துபவர்கள் அனைவரும் அவரது வாழ்நாளில் அதற்க்குண்டான பலனை அனுபவித்தே தீர வேண்டும் . 

 இறை நிலை, மற்றும்  தன்னம்பிக்கை இவைகள்  மட்டுமே மனிதனின் வாழ்க்கையை மாற்றும் தன்மை கொண்டது  ( இதுவும் கர்ம வினைக்கு உட்ப்பட்டு ) என்பதை அனைவரும் கருத்தில் கொள்வது நலம் தரும் .

மேலும் ஜோதிடம் மாந்திரீகம் மருத்துவம் போன்ற துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர்கள் சிலர் மற்றுமே உள்ளனர், இவர்கள் யாரும் இந்தமாதிரி விளம்பரங்கள் கொடுப்பதில்லை,




நல்ல ஜோதிடரை கண்டு சரியான ஜோதிட ஆலோசனை பெற்று வாழ்க வளமுடன் .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696 
 

களத்திர தோஷம் என்றால் என்ன ?


கேள்வி :

களத்திர தோஷம் என்றால் என்ன ?

களத்திர ஸ்தான அதிபதியான சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்தால், களத்திர தோஷம் ஏற்படுமா ? சுக்கிரன் 6 , 7 , 8 , வீடுகளில் இருந்தால்,களத்திர தோஷம் ஏற்படுமா ? ராகு கேது மற்றும் செவ்வாய்  6 , 7 , 8 , வீடுகளில் இருந்தால்,களத்திர தோஷம் ஏற்படுமா ?  இயற்க்கை பாவிகள் 6 , 7 , 8 , வீடுகளில் இருந்தால்,களத்திர தோஷம் ஏற்படுமா ? இதனால் ஏற்ப்படும்  தீமைகள் என்ன ?

பதில் :

சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்தால், களத்திர தோஷம் என்று கணிப்பது  குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த கதைதான். மேலும் சுக்கிரன் 6 , 7 , 8 , வீடுகளில் இருந்தால், களத்திர தோஷம் என்று கணிப்பது முற்றிலும் தவறான கணிதம் ஆகும். 

எந்த ஒரு பாவமும் ( களத்திர ஸ்தானம் உட்பட )  100  சதவிகிதம் பாதிக்கப்பட்டால் மட்டுமே, அந்த பாவத்திற்கு உண்டான பலனை தருவதில்லை  என்பது உண்மை. மேலும் ஒரு கிரகம் ( அது எதுவாக இருப்பினும் ) ஒரு பாவத்தில் அமரும் பொழுது 100  சதவிகிதம் கெடுப்பதில்லை( ராகு கேதுவை தவிர ) .

களத்திர தோஷம் என்பது ஒரு ஜாதகத்தில் 7 ம் வீடு 100  சதவிகிதம் பாதிப்படைந்தால் மட்டுமே,  களத்திர தோஷம் ஏற்ப்படுகிறது. இந்த அமைப்பை பெற்றவர்கள் ஜாதகங்களில் 2  ம் வீடும் சேர்ந்து  கெட்டு விட்டால் தான், ஜாதகருக்கு அதிகமான பதிப்பை களத்திர சம்பந்தமாக அனுபவிக்க நேருகிறது .

உதாரணமாக :

ஒருவருடைய சுய ஜெனன ஜாதக அமைப்பில் 2  மற்றும் 7   ம் பாவங்கள் முறையே 100  சதவிகிதம் பாதிப்படைந்து விட்டால், அந்த ஜாதகருக்கு திருமணம் என்பதே இல்லை, காலம் முழுவதும் திருமணம் இல்லாமல் குடும்பம் அமையாமல் கஷ்டப்பட நேருகிறது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் விதவை , கணவனால் கைவிடப்பட்டவர்கள், மற்றும் வாழ்விளந்தவர்கள் போன்ற பெண்களை திருமணம் செய்து கொல்வது சாலச்சிறந்தது .


இந்த அமைப்பை சேர்ந்த பெண்களை களத்திர தோஷம்,  உள்ள ஆண்கள் 
( அதாவது 2  மற்றும் 7   ம் பாவங்கள் முறையே 100  சதவிகிதம் பாதிப்படைந்த ஜாதக அமைப்பை சேர்ந்தவர்கள்)   திருமணம் செய்து கொள்ளும் பொழுது வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் இந்த களத்திர தோஷம் எந்த விதமான பாதிப்பையும் தருவதில்லை.

மேலோட்டமாக சுக்கிரன் மற்றும் ராகு கேது செவ்வாய், சனி மற்றும் இயற்க்கை பாவிகள் 7  ம் இல்லத்தில்  இருந்தாலே களத்திர தோஷம் என்று சொல்லுவது முற்றிலும் தவறான கருத்து ஆகும் .

இந்த மாதிரி ஜோதிடர்களிடம் ஜாதகர் ஆலோசனை கேட்டு நடப்பாரே ஆயின் வெகு விரைவில் காசி ராமேஸ்வரம் என காவிகட்டி அலைய வேண்டியதுதான் . ஜாதகத்தின் உண்மை நிலையை கண்டறிந்து , உண்மையை 
உணர்ந்து கொண்டு வாழ்க்கையினை பயனுள்ளதாக வாழுங்கள்.

ஜோதிடன் வர்ஷன் 
 9842421435 
9443355696  

வியாழன், 23 பிப்ரவரி, 2012

கால சர்ப்ப தோஷ ஜாதகமா ? கேள்வி பதில் !


நிச்சயம் இது ஒரு கால சர்ப்ப  தோஷ ஜாதகம் இல்லை, இது ஒரு யோக ஜாதகம்!

மேலும் ஜாதக அமைப்பில் ராகு கேது முறையே  மிகவும் சிறப்பான இடங்களில் அமர்ந்துள்ளனர். ராகு லக்கினத்தில் அமர்ந்து  சர நீர் தத்துவத்திற்கு 100  சதவிகித நன்மையான பலன்களை வாரி வழங்கிக்கொண்டு உள்ளார் .
கேது 7 வீட்டில் அமர்ந்து  சர நில தத்துவத்திற்கு  100  சதவிகித நன்மையான பலன்களை வாரி வழங்கிக்கொண்டு உள்ளார் . எனவே ராகு கேது அமைப்பு மிகவும் சிறப்பாக செயல் படுகிறது .

மேலும் லக்கினம் களத்திர பாவம் மிகவும் சிறப்பாக உள்ளது  நடக்கும் ராகு திசை 8 ,11  முறையே 6 ம் வீட்டுடன் தொடர்பு, ராகு திசையில் நடப்பு புத்தி சூரியன் 6  ம் வீடு  1  ஆம் வீட்டுடன் தொடர்பு . இந்த அமைப்பு சற்றே சிறப்பு இல்லை ஜாதகர் உடல் ரீதியாக பதிப்புக்களை கொடுக்க வாய்ப்பு உண்டு. மேலும் வாயிறு சம்பந்த பட்ட பாதிப்பு ஏற்ப்பட அதிக வாய்ப்புண்டு. கடன் வாங்குவது ஜாதகருக்கு நல்லதல்ல.

காலசர்ப்ப தோஷத்திற்கும் இந்த ஜாதகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவே பயம் தேவையில்லை எட்டாம் வீடுமட்டும் சற்றே பாதிக்கப்படுவதால் திடீர் இழப்புகளை சந்திக்க வாய்ப்பு 30  சதவிகிதம் உண்டு.

 வாழ்க வளமுடன்  


மேலும் விபரம் பெற 

ஜோதிடன் வர்ஷன் 
9842421435  
9443355696   

தாரபலம்




தங்களுடைய ஜென்ம நட்சத்திரம் முதல் அன்றைய நட்சத்திரம் வரை எண்ணிக்கொண்டு வந்த தொகையை ஒன்பதில் கழித்து நின்ற மிச்சத்தில்
 2 - 4 - 6 - 8   நட்சத்திர நாட்கள் அனைத்தும் உங்களுக்கு நன்மைதருபவையாக அமையும் . தார பலன்கள் முறையே கீழ்கண்டவாறு அமையும் .

உதராணமாக ஜாதகருடைய நட்சத்திரம் அஷ்வினி யானால் :

அட்டவணையில் கண்டது போல் பலன் தரும் நடைமுறையில் கண்டு பலன் அடையுங்கள் .

மற்ற நட்சத்திர அமைப்பை சேர்ந்த அனைவரும் தமது நட்சத்திரத்தை ஜென்ம தரையாக கொள்ள வேண்டும் .



 அஷ்வினி
 மகம் 
 மூலம் 
 கேது 
 ஜென்மதாரை 
பயம் 
 பரணி 
 பூரம் 
 பூராடம் 
 சுக்கிரன் 
 சம்பத்துதாரை
 சம்பத்து 
 கார்த்திகை 
 உத்திரம் 
 உத்திராடம் 
 சூரியன் 
 விபத்துதாரை 
 விபத்து 
 ரோகிணி
 அஸ்தம் 
 திருவோணம் 
 சந்திரன் 
 ஷேமதரை 
 சேமம் 
 மிருகஷிரிடம் 
 சித்தரை 
 அவிட்டம் 
 செவ்வாய் 
 பிரத்தியதாரை 
 நாசம் 
 திருவாதிரை 
 சுவாதி 
 சதயம் 
 ராகு 
 சாதகதாரை 
தெய்வஅருள்
புனர்பூசம்
 விசாகம் 
 பூரட்டாதி 
 குரு 
 வதை தாரை
 கஷ்டம் 
 பூசம் 
 அனுஷம் 
 உத்திரட்டாதி 
 சனி 
 மைத்தரதரை 
 சுபம் 
 ஆயில்யம் 
 கேட்டை 
 ரேவதி 
 புதன் 
 பரமமைத்தரதரை
 மத்திமம் 

தவ பலன்கள் !




தவத்தின்போது மன அலைச்சுழல் குறைவதால் மனம் அமைதி பெறுகிறது .

தவத்தினால் மனத்திற்கு ஓர்மை , கூர்மை, நேர்மை , சீர்மை, ஆகிய தன்மைகள் கிடைக்கின்றன. ஓர்மை என்பது ஒரே பொருளை அசைவில்லாமல் பார்ப்பது. அதனால் அறிவுக்கூர்மை உண்டாகிறது. மேலும், இப்படித்தான் செயல் ஆற்ற வேண்டும், மாறுதலாக  செயல் பட கூடது. என்ற நேர்மை உண்டாகிறது . எல்லா ஒழுக்கங்களும் அமைந்து இருப்பது சீர்மை .

தவத்தின்போது புலன்களின் இயக்கம் வெகுவாக குறைந்து விடுவதாலும். எப்போதும் அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதை ஒருமுகப்படுத்துவதாலும், நமது உயிர் ஆற்றலின் செலவு தவிர்க்கப்படுகிறது . ஆற்றல் சேமிக்கப்படுகிறது .

உதாரணமாக தண்ணீரை காய்ச்சும் பொழுது நீராவி மேலே வெளியேறும் , நான்குமணி நேரம் கழித்து பார்த்தால் முக்கால் பகுதி  நீர் ஆவியாக மறைந்திருக்கும் . பாத்திரத்தில் கால் பகுதி நீர் மட்டும் இருக்கும்.

இதற்க்கு பதிலாக அந்த பத்திரத்தின் மேல் ஒரு மூடி போட்டு, அந்த நீராவியை குழாய் வழியாக கொண்டு சென்று குளிரவைத்து அந்த நீரை மறுபடியும் அந்த பாத்திரதிற்குல்லேயே விட்டால், பாத்திரத்தில் நீரின் அளவு அவ்வளவு விரைவாக செலவு ஆகாது 1 /4  பங்கு அல்லது 1 /8  பங்கு   செலவாகலாம். மிச்சம் எல்லாம் சேமிக்கப்படும். அது போன்று ஐம்புலன்கள் மூலமும் சிந்தனையின் முலமும் ஓடிக்கொண்டு இருக்கும் நமது  மன ஆற்றலை உள்ளே இருக்கின்ற உயிரின் மீது செலுத்தி தவம் செய்யும் பொழுது, மன ஆற்றல் மீண்டும் மீண்டும் சேமிக்கபடுகிறது. இது நாளடைவில் நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு  வெகுவாக பயன் படுகிறது .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696   

ஜாதக விளக்கம் கேள்வி பதில் !








என்னுடைய உறவிர்னர் ஒருவரின் பிறந்த நேரம் கொடுத்துள்ளேன்.. அவர் செல்லாத கோயில் இல்லை மற்றும் பரிஹர்ரம் இல்லை.செல்லாத ஜோதிடர் இல்லை ??? நான் சொல்வதற்குமுன் அந்த கோயிலிலை பற்றி கூறுவார்..ஏறாத மலை இல்லை ??அவருக்க தொழில் அவ்வளவு சிறப்பு இல்லை மற்றும் திருமணம் தள்ளி செல்கின்றது.... விளக்கம் தேவை

9-3-1975 6.00pm vellakoil

வேலு
கோயம்புத்தூர்


சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு லக்கினம் ஐந்தாம் வீடு ஒன்பதாம் வீடு அனைத்தும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் எனவே சிரமம் அதிகம் ஏற்ப்படும் பழனி முருகன் மட்டுமே நன்மையான பலன் தர முடியும்.

பழனி முருகனை தொடர்ந்து, ஒன்பது வளர் பிறை செவ்வாய் கிழமைகளில் மலையில் தரிசனம் செய்து வர, நலம் பெறுவார்.
வடக்கு திசையில் வாயில் அமைந்த வீடுகளில், வசிப்பிடமாக கொண்டால் மிகவும் சிறப்பான தொழில் முன்னேற்றம் அமையும் .

திருமணம் ஜாதகரை விட மிகவும் வயது குறைந்த பெண்ணை, திருமணம் செய்துகொள்ள வாய்ப்பு ஏற்ப்படும் அடுத்து வரும் சில மாதங்களில்.

தனியாக தொழில் செய்வதை விட, கூட்டு  தொழில்  செய்வது மிகவும் சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும் .

தினமும் சூரிய நமஸ்காரம் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து செய்து வரவும், சகல முன்னேற்றமும் ஏற்ப்படும், இதில் முக்கியமானது குலதெய்வ வழிபடு, மற்றும் பிராமண தர்மம், பித்ரு தர்ப்பணம், கிரகண தோஷ நிவர்த்தி செய்வது ஜாதகருக்கு வெகு விரைவில் முன்னேற்றம் தரும்.

 மேலும் விளக்கம் பெற நேரில் வருவது நலம் தரும் .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696  

புதிதாக ஒரு ஊர் அல்லது நகரத்தில் குடியேருபவர், பார்க்க வேண்டியவைகள் !





மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமிர்தம் எனும் சாஸ்திர நூலில் புதிதாக  ஒரு ஊர் அல்லது நகரத்தில் குடியேருபவர், பார்க்க வேண்டியவைகள் ! எனும் தலைப்பில், சுலோகம் 38 , 39 நான் கண்டு பலன் பெற்றதை உங்களுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

ஒரு ஊர் அல்லது நகரம் மற்றும் நாட்டிலோ புதிதாக குடியேற விரும்புபவன் அதற்க்குண்டான தகுந்த நல்ல நேரத்தை கீழ்க்கண்ட முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு செய்யின் சந்தான பாக்கியம், செல்வம், செழிப்பு முதலியன உண்டாகும். இந்த சக்கரமானது மனித வடிவில் உடையதாகும்.

குடியேற விரும்பும்  ஊர் அல்லது நகரம் மற்றும் நாட்டின் நட்சத்திரம் முதல் அந்த நபரின் ஜென்ம நட்சத்திரம் வரை எண்ணவும்,. இந்த என்னானது முதல்  5க்குள் இருப்பின் இது தலையில் இருப்பதாகவும் இதன் பலன் பணச்செர்க்கை என்றும் கொள்ளவேண்டும். இதற்கடுத்து 3  க்குள்  இருப்பின் இது முகத்தில் இருந்து நாசத்தை சொல்லும்,  இதற்கடுத்து 5க்குள் இருப்பின் மார்பில் அமர்ந்து அது செல்வத்துக்கு உத்தரவாதம் தரும். 

அடுத்த 6 க்குள் இருப்பின் இது இரு பாதங்களில் தல 3 வீதம் அமர்ந்து தான நாசத்தை முன்கூட்டியே அறிவிக்கும். அடுத்த 1 ல் இருந்தால் இது முதுகில் அமர்ந்து உயிருக்கு கண்டத்தை தரும். அடுத்த 4  க்குள் இருப்பின் இது இடுப்பில் அமர்ந்து நல்ல அதிர்ஷ்டத்தை சுட்டிக்காட்டும் .

அடுத்த 2 நட்சத்திரங்கள் குதத்தில் அமர்ந்து அவை உபத்திரவத்தையும் பயத்தையும் முன்கூட்டியே அறிவிக்கும், கடைசி 2  ம் இரண்டு கைகளில் பொருந்தியிருந்து அதாவது வலது, இடது கைகளில் இருந்து முறையே லாபம், வறுமை ஆகியவற்றை காட்டும் .

இது கிழ்கண்டவாறு அமையும் :


நட்சத்திர தொகை
மனிதனின் பகுதி
பலன்
1 முதல் 5 வரை
தலை
பணச் சேர்க்கை
6 முதல் 8 வரை
முகம்
நாசம்
9 முதல் 13 வரை
மார்பு
செல்வம்
14 முதல் 19 வரை
இரு பாதம்
தன நாசம்
20
முதுகு
உயிர்கண்டம்
21 முதல் 24 வரை
இடுப்பு
அதிர்ஷ்டம்
25 மற்றும் 26
குதம்
உபத்திரவம், பயம்
27 மற்றும் 28  
கைகள்
லாபம், வறுமை

 இது நான் அனுபவரீதியாக கண்ட உண்மை, சிறிதுகூட இதில் மாற்றம் வருவதில்லை என்பது வியப்புக்கூரியது

 மகாகவி காளிதாசர் அருளிய இந்த முறையினை பின்பற்றினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் .

ஜோதிடன்  வர்ஷன் 
  9842421435 
 9443355696  

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

திருமணப் பொருத்தம் பற்றி ?




திருமணப் பொருத்தம் பற்றி எமது குருவின் கருத்து :

திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது, ஆண் பெண் இருவர் நட்ச்சத்திரங்களுக்கும் கணம் , ரச்சு, நாடி, யோணி, ராசி, ராசி அதிபதி , வசியம் , வேதை, தினம் , மாகேந்திரம் , ஸ்திரி திரக்கம் , எனும் 11 பொருத்தங்களில் எத்தனை பொருத்தங்கள் உள்ளதென பார்த்து, அதன் படி முடிவு செய்கின்றனர். இன்னும் சிலர், இதற்கும் ஒரு படி மேலே சென்று பட்சி, மரம், என்றும் பொருத்தம் பார்ப்பார், ஆனால் இவ்வாறு பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதில், எவ்வித நன்மையையும் இல்லை .

ரச்சு பொருத்தம் இல்லையென்றால் தம்பதிகள் யாரேனும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்ப்படும். யோணிப் பொருத்தம் இல்லையென்றால், தாம்பத்தியத்தில் திருப்பதி கிடைக்காது. மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் குழந்தை பிறக்காது, போன்ற ஏராளமான தவறான கருத்டுக்களால், ஜோதிடக்கலை மேலும் மேலும் பாதிப்படைகிறது.

ஆயுள், தாம்பத்திய திருப்பதி, குழந்தை பிறப்பு போன்றவை ஒருவரின் ஜாதகத்தை வைத்தே முடிவு செய்ய முடியும். நட்சத்திரத்தை வைத்து முடிவு செய்யவே முடியாது. மேலும் , பெண்ணின் நட்சத்திரம் ஆயில்யம், விசாகம், கேட்டை,மூலம் போன்ற நட்சதிரன்களாக இருந்தால் 'தோஷமான ஜாதகம்" என முத்திரை குத்தி விடுகின்றனர் .

அனேகமாக அனைத்து பஞ்சாங்கங்களிலும் குறிப்பிட்ட பெண் நட்சத்திரத்துக்கு, பொருந்தக்கூடிய ஆண் நட்சத்திரங்களென பட்டியலே கொடுத்துள்ளனர். ஆனால், அவர்களும் ஆண், பெண் இருவரின் ஜாதகத்தை வைத்தே முடிவு செய்ய வேண்டுமென சொல்லுகின்றனர்.

ஏனெனில் நட்சத்திரம் என்பது குறிப்பிட்ட நேரத்தில், உலகில் எந்த மூலையிலும் பிறந்த அனைவருக்கும் பொதுவானது. ஆனால் இலக்கணமும், இலக்கின பாகையும் மாவட்டத்திற்கு மாவட்டம் மாறும்தன்மை உடையது. 

உதாரணமாக 

இப்பொழுது 30 .06 .2006  மாலை மணி 5 .32   ஐ எஸ் டி கு உலகில் எங்கு பிறந்த குழந்தைக்கும், மகம் நட்சத்திரம் என்றும்; கேது திசை இருப்பு 1  வருடம் ; 8  மாதம் ; 29  நாள் இருக்கும். ( அயனாம்சம் 23 -51 -26  )

ஆனால் இதே நேரம் கன்னியாகுமரியில் பிறந்த குழந்தைக்கு விருச்சிக லக்கினமும் ; சென்னையில் பிறந்த குழந்தைக்கு தனுசு லக்கினமுமாக அமையும். இன்னும் மாநிலமும், தேசமும் மாற மாற ஏராளமான இலக்கின வித்தியாசம் ஏற்ப்படும். 

எனவே திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது இருவரின் சுய ஜாதகத்தை தனி தனியாக கணிதம் செய்து அவர்களது எதிர்காலம், குடும்ப ஒற்றுமை என அனைத்தையும் சரி பார்த்து, திருப்பதி இருந்தால் மட்டும் திருமணம் செய்ய வேண்டும் .

மேலும் ஒருவரது ஜாதகத்தில் அந்த தோஷம் உள்ளது இந்த தோஷம் உள்ளது என ஜாதகம் பார்க்க வந்தவரிடம் சொல்லி அவர்களை பயமுறுத்தக்கூடாது . 

மேலும் ஆண் பெண் ஜாதகங்களில் யார் ஜாதகங்களில் குறை என்பதையும், என்ன மாதிரியான குறை என்பதையும் ஜாதகம் பார்க்க வந்தவரிடம் சொல்லகூடாது, ஜாதக பொருத்தம் இல்லை; வேறு ஜாதகம்  பார்ப்போம், என மட்டும் சொல்லிவிடுவது  சிறந்த ஜோதிடனுக்கு அழகு .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696  

திங்கள், 20 பிப்ரவரி, 2012

இயற்கையாக பிறக்கும் குழந்தைக்கும், அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைக்கும், ஜாதக வேறுபாடு வருமா ?



எனது நெருங்கிய நண்பரின் கேள்வி :

இயற்கையாக பிறக்கும் குழந்தைக்கும், அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைக்கும், ஜாதக வேறுபாடு வருமா ?

மேலும் நாம் நமது வசதிக்கு ஏற்றார் போல் நல்ல நேரங்களில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றுக் கொள்வதால் யோகமான வாழ்க்கையை பெற முடியுமா ?

பதில் :

நிச்சயம் ஜாதக வேறுபாடு வருவதற்கு வாய்ப்பு இல்லை,

சில ஜோதிடர்கள் செல்லுவது கேட்டு அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும், யோகமான குழந்தைகளாக மாறி விட்டால் இந்திய வெகு விரைவில் வல்லரசு மற்றும் நல்லரசு நாடக மாறிவிடும் ,

அப்படி நடக்க கண்டிப்பாக வாய்ப்பு இல்லை என்பதே எனது கருத்து , மேலும்  அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும், நிச்சயமாக அந்த குறிப்பிட்ட நேரத்தில்  அறுவை சிகிச்சை மூலம் பிறக்க வேண்டும், என்ற விதியமைப்பு , அந்த குழந்தைக்கு இருக்கும். அந்த குழந்தை பிறந்த சரியான  நேரத்திற்கு உட்ப்பட்டு தனது கர்மவினை பதிவுக்கு ஏற்றார் போல் யோக அவயோக பலன்களை அனுபவிக்கும் என்பதே முற்றிலும் உண்மை.

இயற்கையா பிறக்கும் குழந்தை ஒவ்வொன்றும் மனதளவில் மிகவும் ஆரோக்கியமாக இருக்கின்றது என்று ஒரு ஆய்வு அறிக்கை சொல்லுகிறது . 

ஜாதக ரீதியான உண்மை என்னவென்றால் இயற்கையாகவோ அல்லது அறுவைச்சிகிச்சை மூலமாகவோ பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அதன் அதன் விதிப்படியே பிறக்கின்றது இதில் மனிதனின் பங்கு ஒரு சதவிகிதம் கூட இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுதல் வேண்டும் .

" நீ விதியை மதியால் வெல்வாய் ஆனால் 
அப்படி ஒரு விதி உன் ஜாதகத்தில் இருக்கும் "

என்ற அமைப்பின் படி எல்லா இயக்கங்களும் ஒரு விதிக்கு உட்பட்டே அனைத்தும் இயங்குகின்றன . இதை மனித சக்தியால் மாற்றி அமைக்க முடியவே முடியாது பரிமாற்றம் செய்யவும் முடியாது , இயற்க்கை சக்தியுடன் இணைந்து செயல்பட மட்டும் மனிதனால் முடியுமே தவிர வேறெதுவும் மனிதனால் முடியாது .

நன்மை தீமை அனைத்தும் இதற்குள் அடக்கம் மேலும் இயற்க்கை , இறைநிலை, புதிய கண்டு பிடிப்பு , அதிசயத்தக்க நிகழ்வுகள் , உலக ஆக்கம் உலக அழிவு ,  ஆத்திகம் , நாத்திகம் என அனைத்தும் இதற்குள் அடக்கம் இதுவே காலம் தேவனின் படைப்பு .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696  
 

மங்களங்களை வழங்கும் மங்களன் எனும் செவ்வாய் !






மங்களகரமான வாழ்க்கைக்கு செவ்வாய் பகவானின் அருள் நிச்சயம் ஒவ்வொரு ஜாதகருக்கும் கண்டிப்பாக தேவை , செவ்வாய் பகவானின் பலம் ஒரு ஜாதகருக்கு நன்றாக அமையவில்லை என்றால் அந்த ஜாதகர் படும் பாடு  ஒரு அளவே கிடையாது. 

சிறு உதாரணம், உடம்பில் ரத்தத்தை முழுமையாக ஆட்சி செய்பவர் இந்த செவ்வாய் பகவான் இவரது செயல்பாடுகள் நன்றாக அமைந்தால் ஜாதகருக்கு அனைத்து உறுப்புகளும் நல்ல நிலையில் இயங்கும் , இதற்க்கு மாறாக ரத்த ஓட்டம் சீராக அமையாவில்லை என்றால் உடலின் அனைத்து பாகங்களும் பாதிக்கப்படுவது உறுதி.

இது போல் ஒவ்வொரு ஜாதக அமைப்பினருக்கும் சுய ஜாதக அமைப்பில் செவ்வாய் பகவானின் அமைப்பு நன்றாக அமைந்தால் ஜாதகத்தின் தன்மை சிறப்பாக இருக்கும் இதுவே மாறி அமைந்தால் ஜாதகம் பாதிக்கப்படுவது 
உறுதி,  மேலும் இவரது இயக்கம் மற்ற கிரக அமைப்பை போல் அல்லாமல் முற்றிலும் மாறுபடுகிறது, செவ்வாய் பகவானின் இந்த முரண்பாடு ஜாதக அமைப்பை நன்றாக ஆய்வுக்கு செய்து பலன்களை சொல்லுவது என்பது மிகவும் கடினமான ஒன்று.

மேலும் செவ்வாய் பகவான் கால புருஷ தத்துவ அமைப்பின் படி ஒன்றாம் வீட்டிற்கும் எட்டாம் வீட்டிற்கும் தொடர்புகொள்கிறார் , ராசி அமைப்பில் நெருப்பு, நிலம், காற்று, நீர்  ராசிகளுடன் சம்பந்தம் பெரும் பொழுது,
 நெருப்பு மற்றும் காற்று  தத்துவ ராசிகளில் மட்டும் நன்மையான பலன்களை அதிகம் செயல் படுத்துகிறார் மற்ற ராசி அமைப்பில் இவரது செயல் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

ஜாதக முறைப்படி செவ்வாயின் பலன் நன்றாக அமையாத ஜாதகங்கலையே பழங்காலத்தில் செவ்வாய் தோஷம் என்று குறிப்பிட்டனர் இந்த அமைப்பு பழைய ஜோதிட நூல்களில் , லக்கினத்திற்கு 2 , 4  ,7 , 8 ,  12   வீடுகளில் செவ்வாய் அமர்ந்தால் செவ்வாய் தோஷம் என்றும் இதற்க்கு பல விதி விளக்குகளும் கூறப்படுகின்றன .

சுய ஜாதக அமைப்பில்  லக்கினத்திற்கு 2 , 4  ,7 , 8 ,  12   வீடுகளில் செவ்வாய் அமர்ந்தால் செவ்வாய் தோஷம் என்று கணிப்பது பல விதங்களில் தவறாகி விடுகிறது என்பது மட்டுமே உண்மை, மேற்கண்ட அமைப்பில் செவ்வாய் பகவான் இருந்தாலும் அவர் நல்ல நிலையில் இருந்தால் நன்மையே செய்வார்.

 சுய ஜாதக அமைப்பில்  லக்கினத்திற்கு 1 ,3 ,5 ,6 ,9 ,10 ,11   வீடுகளில் செவ்வாய் அமர்ந்து செவ்வாய் பகவான் கெட்டு விட்டால், ஜாதகத்திற்கு அவர் அளிக்கும் பலன் ஜாதகரால் தாக்கு பிடிக்க முடிவதில்லை .

நன்றாக இருக்கும் செவ்வாய் பகவானால் ஜாதகருக்கு ஏற்ப்படும் நன்மைகள் :

1 , நல்ல உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். கவர்ச்சியான      தோற்றப்பொலிவு, உடல் வலியை தாங்கும் தன்மை.  

2 ,  சுய முயற்ச்சியால் வாழ்க்கையில் முன்னேற்றம் , எதையும் தாங்கும் மன வலிமை.

3 , நீதி நேர்மை நியாம் , இவற்றுக்காக போராடும் குணம் இயற்கையாகவே அமைந்து விடும். சட்ட வல்லுநர் சிறந்த நீதிபதி , காவல் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு , ராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் தன்மை.

4 , மக்களை பாதுகாக்கும் மிக முக்கிய பொறுப்புகள், சிறந்த அரசியல்வாதிகள் , சமுகவழ்க்கையில் மாற்றத்தை ஏற்ப்படுத்தும் சிறந்த எழுத்தாளர்கள் , மற்றும் சமூக புரச்சியாளர்கள்,  சுய சிந்தனையால் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுபவர்கள் , மக்கள் சக்தியை வழி நடத்தும் வாய்ப்பை பெற்றவர்கள், தொழில் முறையில் சிறப்பான நிர்வாக திறன் கொண்டவர்கள் என செவ்வாய் பகவானின் அருள் பெற்றவர்களாக   அதிகம் காணப்படுகின்றனர் .

 5 , மேலும் கடின உடல் உழைப்பாளிகள் , விவசாயிகள் , வாகன ஓட்டுனர்கள் , தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள், விண்வெளி வீரர்கள் , விளையாட்டு  வீரர்கள் என இவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.

 செவ்வாய் பகவான் பலம் குறைந்தால் :

1 , முதலில் பாதிக்கப்படுவது ஜாதகரின் உடல், அமைப்பு வாழ்நாள் முழுவது உடல் ரீதியான பாதிப்பு . ரத்த சம்பந்தப்பட்ட குறைபாடுகள் , இறுதியாக தொழு நோயால் அதிகம் பாதிக்கபடுவது செவ்வாய் பகவான் பலம் குறைந்தவர்களே .

2 , மேலும் திருமண வாழ்க்கை பாதிப்பு , பல தார அமைப்பு , வயது அதிகம் உள்ள பெண்களுடன் தொடர்பு , சமுதாயத்தில் முறையற்ற வாழ்க்கை முறை , மண் மனை வாகனம் யோகம் இல்லாத நிலை, பரத்தையர் சிநேகம் .

3 , மற்றவர்களை சார்ந்து வாழும் முறை , தன்னம்பிக்கை அற்ற நிலை , சுய முயற்ச்சி அற்றவர்கள் , நேர்மையான குணம் இல்லாத தன்மை , இடத்துக்கு தகுந்தார்ப்போல் மாறிவிடும் தன்மை , பணத்துக்கு விலை போய்விடுதல் , கோப  உணர்வால் அனைவரையும் பகைத்துகொல்லுதல்.

4 , முரட்டு சுபாவம், கல் மனது ,மனசாட்ச்சி இல்லாம, செயல் படுதல், பல வகையில் மற்றவர்க்கு துன்பம் தருவது , சுய நலத்தால் மற்றவர்க்கு தீங்கு இளைத்தல், மற்றவர் சொத்துகளை அகபரித்தல் , ஏமாற்றுதல் என தீமையின் மொத்த வடிவமாக மாறி விடுகின்றனர் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களை சிறு வயது முதற்கொண்டே கவனமுடன் வளர்க்க வேண்டும்.

5 ,   இந்த அமைப்பை பெற்ற  அனைவரும் ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஒரு முறை வளர் பிறை செவ்வாய் கிழமை அன்று பழனி சென்று குழந்தை வேலவர் சன்னதியில் வழிபடு செய்வது சிறப்பான வாழ்கையை தரும், பிறகு பழனி மலையேறி முருகனை ராஜ அலங்கார தரிசனம் மாலை 6  முதல் 9 மணிக்குள் தரிசனம் செய்து , போகர் சன்னதியில் தியானம் செய்து வழிபட்டால், செவ்வாய் பகவான் ஜதாகத்தில் வழுவான அமைப்பை பெற்று விடுவார். மேற்சொன்ன நல்ல பலன்களை விருத்தி செய்து பழனி முருகன் அருள் புரிவார் என்பது நிச்சயம் .

வெகு விரைவில் செவ்வாயின் கிரக சக்த்தியை பெற அதிர்ஷ்ட ரத்தினங்களில் பத்ம பொன் புஷ்பரகத்தை  சுத்தி செய்து அணிவது சகல நலன்களையும் வாரி வழங்கும்.

பொதுவாக புஷ்பராகம் மஞ்சள் நிறம் உடையதாக இருக்கும் இந்த   பத்ம பொன் புஷ்பராகம் ரோஸ் கலரில் நல்ல நீரோட்டத்துடன் காணப்படும், பார்ப்பதற்கு செந்தாமரை இதழ் போல் இருக்கும்.

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696  
  

சனி, 18 பிப்ரவரி, 2012

நந்தன ஆண்டு மகர சங்கராந்தி பலன் !




நந்தன ஆண்டு மகர சங்கராந்தி பலன் !

இந்த வருடம் மகர சங்கராந்தி கரஜி நாமகரணம்  கொண்டு கும்பலக்கினம், கும்பராசியில் மேஷம் செவ்வாய் நவாம்சையில் - செவ்வாய் ஓரையில் ஆண் யானை வாகனம் துவங்கிஷி என்கிற பெயரில் உத்திரம் நட்சத்திரம் 2  ம் பாதம் மகர ராசியில் ஸ்ரீ சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கிறார் .

எனவே மழை மிகும் , உணவு பொருட்கள் விலை குறையும் , விமான விபத்து அதிகம் நெருப்பினால் ஆபத்து அதிகம் வெளிநாடு முதலீடு அதிகரிக்கும், போலி ஆன்மீக வாதிகளுக்கு தண்டனை அரசு வழங்கும் ஏழை எளியவர் வாழ்க்கை மேலோங்கும் , கருப்பு பணம் வைத்திருப்போர்கள் அரசு கெடு பிடிக்கு ஆளாவார்கள். கால்நடைகளுக்கு பாதிப்பு , சைவ உணவு விடுதிகள் அதிகரிக்கும் அசைவ வகைகளுக்கு திடீர் நஷ்டம் , பணபுழக்கம் எதிர்பாராத அளவுக்கு இருக்கும் .

பழைய கோவில் திருப்பணிகள் எங்கும்  நடக்கும் தமிழகத்தில் பழைய கோவில்களில் புதையல்கள் கிடைக்கும் குறிப்பாக தலை நகரில் திடீர் நெருப்பால் பாதிப்பு , கணினி பொருட்களுக்கு விற்பனை அதிகரிக்கும் , வண்டி வாகனம் அதிகரிக்கும் செல்லவ செழிப்பு அதிகரிக்கும், வியாபாரம் நல்ல வருவாய் தரும் , நிலங்கள் விலை குறையும் , தங்கம் விலை குறைந்து ஏறும், எங்கும் சுப செய்திகள் ஒலிக்கும் .


கவனத்தில் கொள்க 

ஆண்யானை மீது  சங்கராந்தி வந்துள்ளதால்

ஆண்கள் அனைவரும், தமது சக்திக்கு ஏற்றார்ப்போல் தமது ஒவ்வொரு சகோதிரிகளுக்கு சொர்ணதானம் ( தங்கம் ) வழங்க வேண்டும். இல்லை எனில் அவர்களுக்கு , பொருளாதார நெருக்கடி , உடல் நிலை பாதிப்பு செலவுகள் அதிகம் ஆகும். சொர்ணதானம் செய்யும் பொழுது அனைவருது வாழ்க்கையும் செழிப்புறும் குறிப்பாக ஆண்களது வாழ்க்கை சிறக்கும்.

ஜோதிடன் வர்ஷன் 
9842421435  
9443355696