வெள்ளி, 29 ஜூன், 2012

குடி பழக்கத்தில் இருந்து விடுபட !?



கேள்வி :

அய்யா நான் கடந்த 9 வருடங்களாக போதை மற்றும் குடி பழக்கத்திற்கு ஆளாகி , என்னிடம் உள்ள அனைத்தையும் இழந்துவிட்டேன் , நான் எவ்வளவு முயற்ச்சி செய்தும் என்னால் இந்த பழக்கத்தில் இருந்து விடுபட முடியவில்லை , இந்த தீய பழக்கத்தின் காரணாமாக எனது மனைவி மற்றும் இரண்டு  குழந்தைகளும் என்னிடம் தற்பொழுது இல்லை ,மேலும் திருமண வாழ்க்கை விவாகரத்து வரை சென்று விட்டது , நிம்மதியான வாழ்க்கை இல்லை பணியாற்றும் இடத்திலும் முன்னேற்றம் இல்லை மேலும் அதிக கடன் சுமை வேறு, உறவினர்கள் நண்பர்களும் இப்பொழுது பகை , உடல் நிலையும் தற்பொழுது சரியில்லை நான் என்ன செய்வது என்றே தெரியவில்லை எனக்கு தயவு செய்து ஒரு நல்ல வழிகாட்டுங்கள் .

பதில் :

தங்களது  கேள்வியிலே பதில் இருக்கிறது அன்பரே ! இத்துனை துன்பத்திற்கும் இந்த குடி பழக்கமே காரணம் , இருப்பினும் தங்களது ஜாதக அமைப்பின் படி லக்கினம் மற்றும் களத்திரம் ஆகிய வீடுகள் பாதக ஸ்தானம் எனும் சர நீர் தத்துவ ராசியுடன் சம்பந்தம், மேலும் இந்த பாதக ஸ்தானம் தங்களது லக்கினத்துடன் தொடர்பு பெறுவதால் தங்களுக்கு நேரும் துன்பம் அனைத்திற்கும் தாங்களே காரணம் , மேலும் களத்திரம் மற்றும் நண்பர்களை குறிக்கும் 7 ம் பாவாகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் எனவே சொல்லவே தேவையில்லை, நடக்கும் சந்திர திசையும் இந்த வீடுகளின் பலனையே வாரி வழங்குகிறது கடந்த 8 வருடமாக .

தங்களது ஜாதக அமைப்பின் படி , லக்கினமும் 7 ம் பாவாகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது இதன் வழியில் இருந்து 200 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் ஆச்சரியம் இல்லை , ஒரு ஜாதகத்தில் லக்கினம் பாதக ஸ்தானத்தால் பாதிக்க பட்டால் ஜாதகர் செய்யும் அனைத்தும் தவறாகவே அமையும். எனவே தாங்கள் பெரியவர்களின் பேச்சை கேட்டு நல்ல ஒழுக்கமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்தால் மட்டுமே வாழ்க்கை நல்ல முன்னேற்றங்களை பெற முடியம் , மேலும் 7 ம் பாவாகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு நல்ல நண்பர்களை தந்திருக்க சிறிதும் வாய்ப்பில்லை , சிறந்த மனைவியை அமைந்திருக்கவும் வாய்ப்பில்லை ஆக தவறான ஆலோசனையின் பேரில் தாங்கள் குடிபழக்கத்திற்கு ஆளாகி இருப்பது தெரிய வருகிறது .

ஒருவரது ஜாதக அமைப்பில் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பாதிக்க படுமாயின் , ஜாதகர் எக்காரணத்தை கொண்டும் ஒரு விஷயத்தை பலமுறை ஆலோசனை செய்து செய்ய வேண்டும் அல்லது தனது குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் ஆலோசனை கேட்பது அவசியம்.  இல்லை எனில் அதிக பாதிப்புக்கு ஆளாக வேண்டி வரும் ,ஒருவரது ஜாதக அமைப்பில் களத்திர பாவகம் பாதிக்க படுமாயின் ஜாதக அமைப்பில் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது களத்திர பாவகம் நல்ல நிலையில் இருக்கும் பெண்ணாக தேர்ந்தெடுக்க வேண்டும் , அவசரகதியில் திருமணம் செய்துவிட்டு பிறகு வருந்துவதில் எவ்வித நன்மையையும் இல்லை மேலும் நண்பர்களின் சேர்க்கையை அறவே ஒதுக்குவது அல்லது ஒரு எல்லைகட்டி பழகுவது ஜாதகருக்கும் , ஜாதகரை சார்ந்தவர்களுக்கும் மிகுந்த நன்மை தரும் .

இந்த சந்திர திசை தங்களுக்கு அவ்வளவு நன்மையான பலனை தரவில்லை , இந்த பாதிப்புகள் இன்னும் இரண்டு வருடங்களுக்கு தொடரும் என்பது வேதனைக்குரிய விஷயம் , தங்களது ஜாதக அமைப்பில் நல்லவர் சேர்க்கை மற்றும் தொடர்பை  தரும் ராகு கேது இரண்டும் 100 சதவிகிதம் பாதிக்க பட்டது மிக பெரிய இழப்பே , ஆக தாங்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு ஒரு எல்லை இல்லாமல் போய் விட்டது . ஒரு மனிதனுக்கு வரும் கஷ்டங்களும் துன்பங்களுமே அவரை செம்மை படுத்தும் என்பதை இனியாவது உணருங்கள் , இந்த துன்பம் வர காரணம் எது என்று சற்றே சிந்தித்து பாருங்கள் தங்களுக்கு நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும் அல்ல தங்களை விட பெரியவர்கள் சொல்லும் அறிவுரை ஏற்று வாழ்க்கையை இன்றுமுதல் புதிதாக துவங்குங்கள் எதிர் வர இருக்கும் செவ்வாய் திசையும் ,ராகு திசையும் தங்களுக்கு நல்ல பலனை தர காத்திருக்கிறது .

பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் , நல்ல தொழில் முன்னேற்றம் ஏற்ப்படும் , குழந்தைகள் வழியில் நல்ல எதிகாலம் தங்களுக்கு உண்டு

இதையெல்லாம் அனுபவிக்க உடல் எனும், சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் இல்லை எனில் ஒன்றும் செய்ய இயலாது . தங்கள் இன்றே மது மறுவாழ்வு மையத்தையோ  அல்லது சிறந்த மன நல மருத்துவரையோ அணுகி ஆலோசனை பெறுவது தங்களின் வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றி அமைக்கும், அவர்களின் ஆலோசனை படி நடப்பது தங்களது வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் நன்மையையும் வழங்கும் .

பரிகாரம் :

அகோர மூர்த்தி வழிபாடு  :

திருவெண்காடு ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது.

சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்து வருகிறார்.இது 43 வது உருவம் ஆகும்.இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம்.பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார். மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு.
அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது.இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது.

குடி பழக்கத்திற்கு அடிமையான ஒவ்வொருவரும் வளர் பிறை திங்கள் அன்று  இந்த திரு தளத்திற்கு சென்று முக்குள நீராடி அகோர மூர்த்தி சன்னதியில் 108 நெய் விளக்கேற்றி வழிபாடு செய்வோருக்கு நிச்சயம் நல்ல வழி கிடைக்கும், அன்றைய தினத்திலிருந்து ஜாதகருக்கு அறிவில் விழிப்புணர்வு ஏற்ப்பட்டு இந்த தீமையான பழக்கத்திலிருந்து விடுதலை நிச்சயம் கிடைக்கும் . இந்த வழிபாடு செய்வதற்கு தங்களுக்கு நிறைய தடைகள் ஏற்ப்படலாம் , கடுமையான முயற்ச்சி மேற்கொண்டு வழிபாடு செய்து தங்களின் வாழ்க்கையில் நலம் பெறுங்கள் . 


குடி பழக்கத்தில் இருந்து விடுபட மனோ ரீதியாக சில வழி முறைகள் :

1 )  தன் முனைப்பு சோதனை செய்து கொள்வது குடிபழக்கத்திற்கு அடிமை ஆனா ஒவ்வொருவருக்கும் அவசியம் .
2 ) இந்த தீய பழக்கத்தினால் தனக்கு ஏற்ப்பட்ட இழப்புகள் எவ்வளவு , ஏற்ப்பட போகும் இழப்புகள் எவ்வளவு என்று சற்றே ஒவ்வொரு நாளும் சிந்திப்பது விரைவில் நல்ல பலனை தரும் .
3 ) தனக்கு ஒரு குடும்பம் ஒன்று உண்டு , தன்னை நம்பி உள்ளவர்கள் நிறைய உண்டு என்பதை மனதில் நிறுத்துவது அவசியம், மேலும் தான் இல்லை என்றால் அவர்களின் நிலை , எதிர்காலம் பற்றி தினமும் சிந்திப்பது இந்த பழக்கத்தில் இருந்து விரைவில் மீட்டெடுக்கும் .
4 ) இந்த பழக்கங்களுக்கு அடிமையாக உள்ளவர்களை நண்பர்களாக ஏற்றுகொள்வதை முற்றிலும் தவிர்ப்பதே அனைவருக்கும் நல்லது மேலும் இவர்களால் எவ்வளவு நன்மைஎன்றாலும் அவற்றை ஒதுக்கி விடுவது சாலசிறந்தது .
5 ) அரசுக்கோ அல்லது மற்றவர்க்கோ உங்களின் மீது எந்தவித அக்கறையும் இல்லை என்பதை குடிபழக்கத்திற்கு அடிமை ஆனா ஒவ்வொருவரும் உணருதல் வேண்டும் . தங்களிடம் இருந்து என்ன வருவாய் கிடைக்கும் என்றுதான் பார்ப்பார்கள் .
6 ) மருத்துவர் ஆலோசனை மற்றும் மன நல ஆலோசனை தனக்கு அவசியம் என்பதை குடிபழக்கத்திற்கு அடிமை ஆனா ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டு அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் நடந்தால் நிச்சயம் குடி பழக்கத்தில் இருந்து விரைவில் விடுபட முடியும் .
7 ) எந்த ஒரு பிரச்சனைக்கும் குடிபழக்கம் நல்ல தீர்வை நிச்சயம் தராது என்று உணர்வது அவசியம் வாழ்வில் யாருக்குத்தான் பிரச்சனை இல்லை பிரச்சனை உள்ளவர்கள் எல்லாம் இந்த பழக்கத்திற்கு அடிமையானால் நாடு நிச்சயம் தாங்காது
8 ) வளரும் இளம் பருவத்தினர் மீது பெற்றோர்கள் கண்காணித்து , நல்ல ஒழுக்கத்தை பண்பாட்டினை  கற்று தர வேண்டும் , மேலும் சரியான ஆலோசனைகளை வழங்கவேண்டும், அவர்களுக்கு எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் மன நிலையுடன் இருக்கும் அளவிற்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும் .
9 ) பத்திரிகை செய்தியின் படி 13 வயதில் இருந்தே குடி பழக்கத்திற்கு மாணவர்கள் பலர் அறிமுகமாகி விடுகின்றனர் என்று பயமுறுத்துகிறது , இதற்க்கெல்லாம் காரணம் குழந்தைகள் மேல்  பெற்றோருக்கு அக்கறை இன்மையையே காட்டுகிறது , இனியாவது இந்த பெற்றோர்கள் உணருவார்களா ?

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

விபத்து அல்லது திடீர் இழப்பை தவிர்க்க !


 


சுய ஜாதக அமைப்பில் லக்கினத்திற்கு 8 ம் வீடு சர ராசியாக அமைந்து 8 ம் வீட்டுடன் தொடர்பு பெற்றாலும் , அல்லது 8 ம் வீடு 2 ,6 ,8 ,12 விட்டுடன் தொடர்பு பெற்று தொடர்பு பெரும் வீடுகள் சர ராசியாக அமைந்து நடக்கும் திசை ,புத்தி , அந்தரம் , சூட்சமம் ஆகியன இந்த வீடுகளின் பலனை நடத்தினால் ஜாதகருக்கு எதிர்பாராத இழப்புகள் நிச்சயம் ஏற்ப்படும் . மேலும் 8 ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நடக்கும் திசை ,புத்தி , அந்தரம் , சூட்சமம் ஆகியன பாதக ஸ்தான பலனை நடத்தினால் நிச்சயம் ஜாதகர் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க வேண்டி வரும்.

ஜாதகர் இந்த காலங்களில் வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மிகவும் அதிக கவனமாக இருப்பது நல்லது , மேலும் வண்டி வாகனத்தை சுயமாக இயக்குவதை தவிர்க்கலாம் அல்லது நல்ல ஓட்டுனரை வைத்து கொள்வது சால சிறந்தது . மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் வாகனத்தில் செல்லும் முன் அருட்காப்பு சங்கல்பம் செய்து கொள்வது 100 சதவிகித நன்மையை நிச்சயம் தரும் , இந்த காலங்களில் ஜாதகர் ஆஞ்ச நேயர் வழிபாடு செய்வது எவ்வித இழப்புகளில் இருந்தும் ஜாதகரை 100 சதவிகதம் காப்பாற்றி , இழப்புகளில் இருந்து நிச்சயம் மீட்டெடுக்கும் . அல்லது அருகில் உள்ள காவல் தெய்வங்களை வழிபாடு செய்து நன்மை பெறலாம் .

ஒருவர்  விபத்து அல்லது திடீர் இழப்பை தவிர்க்க , ஜாதகர் தமது குலதெய்வத்தை முறையாக வழிபாடு செய்து வருவாரே ஆயின் நிச்சயம் இந்த பாதிப்புகளில் இருந்து நிச்சயம் காப்பாற்றும் அல்லது நமக்கு முன்னதாகவே உள்ளுணர்வு மூலம் உணர்த்தும் , இதன் காரணமாக நாம் நிச்சயம் விழிப்புணர்வுடன் இருந்து நன்மை பெற முடியும் , இதை மீறி  நமக்கு ஏதாவது விபத்து ஏற்ப்பட்டாலும் நம்மை காப்பாற்ற அல்லது உதவ உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வாய்ப்புகளை , நமது குல தெய்வத்தின் அருள் வழிவகை செய்து தரும் .

இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களுக்கு விபத்து மட்டும் அல்ல திடீர் என பொருள் இழப்பு , சொத்து சுகங்களில் இழப்பு போன்ற நிலைகளும் ஏற்ப்படாலாம் , அல்லது கணவன் மனைவி பிரிவு , தனது சொந்த பூர்வீகத்தை விட்டு  உறவுகளை விட்டு வெகு தொலைவுக்கு சென்று ஜீவனம் நடத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் , மேலும் நண்பர்களால் ஏமாற்ற படும் நிலை, தொழில் கூட்டாளிகாளால் ஏமாற்ற படும் நிலை, தான் நம்பியவர்களால் கைவிட படும் சொல்நிலை உருவாகும், எனவே ஜாதகர்கள் இந்த அமைப்பு இருப்பின் நிச்சயம் அதிக கவனத்துடன் வாழ்க்கை நடத்துவது அவசியம், இல்லை எனில் அதிக பாதிப்புகளை சந்திக்க வேண்டி வரும் .

எனவே இந்த காலகட்டங்களில் அதிக பண முதலீடுகளை செய்வது தவிர்க்க வேண்டும் இல்லை எனில் அதன் வழி துன்பங்களை ஜாதகர் அனுபவிக்க வேண்டும் , மேலும் புதிய தொழில் முயற்ச்சிகளை தவிர்ப்பது ஜாதகருக்கும் அவரது சொத்து சுகம் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பு இல்லையெனில் இவற்றை இழக்கும் சூழ்நிலையை ஜாதகரே உருவாக்கி கொள்வார் , இந்த காலங்களில் ஜாதகருக்கு புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் பழகுவது அவசியம், அவர் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் சரி அவரால் நமக்கு 100 சதவிகிதம் தீமையான பலன்களே நடைபெறும் இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது கசப்பான உண்மை . 

இந்த அமைப்பு ஒரு ஜாதகருக்கு இருப்பின் இந்த வீடுகளின் பலன்கள் திசை ,புத்தி , அந்தரம் , சூட்சமம் ஆகியவற்றில் நடைமுறைக்கு வந்தால் மட்டுமே ஜாதகர் கவலை படவேண்டும், இல்லை எனில் ஜாதகருக்கு எவ்வித பலனையும்  தர வாய்ப்பு சிறிதும் இல்லை எனவே பயம் இல்லாமல் அனைத்து செயல்களையும் மேற்கொள்ளலாம் , இதனால் ஜாதகர் மற்றும் ஜாதகரை சார்ந்தவருக்கும் எவ்வித பாதிப்பும் நிச்சயம் ஏற்ப்படாது .

பெருகிவரும் வாகன விபத்துகளில் இருந்து நாம்மை நாம் நிச்சயம் காப்பாற்றி கொள்ள சாலை விதிகளை மதிப்பதும் , பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது மட்டுமே நமது உயிருக்கு உத்தரவாதம் , நாம் எவ்வளவு வழிப்புணர்வுடன் இருந்தாலும் எதிரில் வரும் நபர் எப்படி இருக்கிறர் என்பதை நம்மால் கணிக்க முடியாது , ஆகவே தலை கவசம் அணியாமல்  இரு சக்கர வாகனத்தை இயக்குவது நமக்கு நிச்சயம் ஆபத்தை உருவாக்கும் , நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் பொழுது சாலை விதிகளை கடை பிடிப்பதையும் , இருக்கை கச்சையை அணிந்து பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்வது நமக்கும் மற்றவருக்கும் நன்மையை தரும், எந்த காரணத்தை கொண்டு நாம் சாலை விதிகளை கடைபிடிப்பதில் இருந்து  தவற கூடாது , இதை உணர்ந்தாலே விபத்துகள் அற்ற நல்ல பயணத்தை அனைவரும் மேற்கொள்ள முடியும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

 

வியாழன், 28 ஜூன், 2012

நவ கிரகங்களின் பலமும் , அவர்களது திசைகளில் தரும் பலன்களும் !


 

ஒருவரது சுய ஜாதக அமைப்பில் நவகிரகங்கள்  பாவகங்களில் அமரும்பொழுது கால புருஷ தத்துவத்திற்கு ஏற்றார் போல் ஆட்சி , உச்சம் , நட்பு , சமம் , பகை , நீசம் என்ற அமைப்பில் அமர்ந்து இருப்பார்கள் , அப்படி அமரும்பொழுது ஜாதகருக்கு ஆட்சி , உச்சம் , நட்பு , சமம் , என்ற நிலையில் இருந்தால் நன்மையையும் , பகை , நீசம் என்ற நிலையில் இருந்தால் தீமையையும் தரும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது , மேலும் அந்த கிரகத்தின் திசை அமைப்பு வரும் பொழுது ராசி அமைப்பில் எவ்வாறு அமர்ந்துள்ளதோ அந்த அமைப்பில் பலனை வழங்கும் என்பது பல ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது .

அப்படி இருக்கும் பட்சத்தில் எம்மிடம் ஜோதிட ஆலோசனை பெற வந்த நபருக்கு  ஜாதக அமைப்பில் சுக்கிரன் உச்ச நிலையில் அமர்ந்து , லக்கினத்திற்கும் நல்ல ஆதிபத்தயம் பெற்று , சரியான வயதில் தனது திசையை நடத்துகிறது ஆகவே தங்களுக்கு  நிறைந்த யோக பலனை தரும் என்று மற்ற ஜோதிடர்களின் கணிப்பாக இருந்தது , இதன் காரணமாக ஜாதகர் சுக்கிரன் திசையில் நிறைய லாபம் பெற முடியும் என்ற ஜோதிடர்களின் கருத்துப்படி,  தொழில்கள் பலவற்றில் நிறைய முதலீடுகளை செய்து அனைத்திலும்,  இழப்புகளை மட்டுமே சந்தித்து கொண்டு இருக்கிறார்.

மேலும் எம்மிடம் அவரின் கேள்வி நான் ஜோதிடர்களின் ஆலோசனையின் பேரில் தான் நிறைய முதலீடுகளை செய்தேன் ஆனால் அவர்களின் கணிப்பின் படி தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் சுக்கிரதிசை 8 வருடமாக கடுமையான இழப்புகளையும் , துன்பங்களையும் மட்டுமே சந்தித்து கொண்டு இருக்கிறேன் , மேலும் கடனாளியாக மாறும் சூழ்நிலையும்  ஏற்ப்பட்டு விட்டது , ஜோதிடர்கள் சொன்னதெல்லாம் பொய்யா என்றார் ? அதற்கு எமது பதில்  கணிப்பு ஜோதிடத்தினால் ஏற்ப்படும் நிலை இது என்றோம் .

அவருடைய ஜாதக அமைப்பை நன்கு கணிதம் செய்து அதன் பலன்களை அந்த ஜாதகருக்கு சொல்லி , அதிலிருந்து விடுபடும் வழி முறைகளை பற்றி ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தோம் .

உண்மையில் அவரது ஜாதக அமைப்பில் நடந்து கொண்டு இருக்கும் சுக்கிர திசை ராசிகட்டத்தில் உச்சத்தில் அமர்ந்து நல்ல நிலையில் இருந்தாலும் , தனது திசையில் பாதக ஸ்தானத்துக்கு  உண்டான பலனை வழங்கி கொண்டு இருந்தது , ஒரு கிரகம் சுய ஜாதகத்தில் என்ன பலம் பெறுகிறது என்பது முக்கியம் அல்ல , அதன் திசையில் எந்த வீடுகளின் பலனை நடத்துகிறது என்பதை சரியாக கணிதம் செய்து கண்டு பிடிக்க வேண்டும் இல்லை என்றால் , நல்ல கிரகத்தின் திசையெல்லாம் நன்மையை செய்யும் , தீய கிரகத்தின் திசையெல்லாம் தீமையை செய்யும் என்று பலன் சொல்வதால், நம்மை நாடி வருபவர்களின்  வாழ்க்கையில் தவறான ஆலோசனை வழங்க வேண்டி வரும் .

மேலும் ராசிகட்டத்தில் ஒரு கிரகம் எந்த நிலையில் இருந்தாலும் சரி என்ன விதமான பலன் பெற்றாலும் சரி , அந்த கிரகத்தின் திசையில் எந்த வீடுகளின் பலனை செய்கிறது என்பதே முக்கியம் , அதன் வழியே நன்மை , தீமை பலன்களை அந்த கிரகத்தின் திசை தரும் என்பதே சரியான ஜோதிட கணிதம் , இவ்வாறு கணிதம் செய்து பலன்களை சரியாக சொன்னோம் என்றால் , நம்மை நாடி வந்தவர் நன்மை பெறுகிறாரோ இல்லையோ , தீமையான பலனை அனுபவிக்காமல் இருக்கலாம் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து .

மேற்கண்ட ஜாதகருக்கு சுக்கிர திசை பாதக ஸ்தான பலனை தந்து 200 சதவிகித தீமையான பலனை அனுபவிக்க நேர்ந்தது , அவருக்கு சரியான ஜோதிட ஆலோசனை கிடைக்காமல் போனதிற்கு காரணம், ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றதே  , எங்களிடம் ஜோதிட ஆலோசனை பெற வரும் அன்பர்க்கெல்லாம்  நாங்கள் அறிவுறுத்துவது குல தெய்வ வழிபாட்டின் அவசியத்தை அனைவரும் உணருங்கள் என்பதே , வருமுன் உணர்த்தும் தன்மை இந்த பூர்வ புண்ணிய வீட்டின் அமைப்பிலிருந்தே நமக்கு கிடைக்கும் , நமக்கு கடுமையான சூழ்நிலைகளில் சரியான வழிகாட்டுதல் கிடைக்க வேண்டும் எனில் ஒவ்வொருவரும் தவறாமல் தமது குலதெய்வத்தை வருடம் ஒரு முறையாவது அமாவாசை திதியில் வழிபடுவது அவசியாமாகிறது .

இதில் சுய ஜாதக ரீதியாக பூர்வ புண்ணியம் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு சரியான வழிகாட்டுதலும் , நல்லவர்கள் சேர்க்கையின் மூலம் வாழ்வில் முன்னேற்றம் இயற்கையாக அமைந்து விடும் .
சுய ஜாதக ரீதியாக பூர்வ புண்ணியம் பாதிக்க பட்டவர்களுக்கே இந்த மாதிரி தவறான ஆலோசனையின் பேரில் இழப்புகளையும் ,துன்பங்களையும் ,அனுபவிக்க வேண்டி வருகிறது.  சுய ஜாதக ரீதியாக பூர்வ புண்ணியம் பாதிக்க பட்டவர்கள் முறையாக தமது குல தெய்வத்தை வழிபடுவார்களே ஆயின் நிச்சயம் பூர்வ புண்ணியம் 100 சதவிகிதம் வழுவடைந்து ஜாதகர் நன்மையான பலன்களை  எந்த திசையிலும் பெற முடியம் .

இதன் மூலம் ஜாதகருக்கு நல்ல ஜோதிடன் , நல்ல நண்பர்கள் , நல்ல மருத்துவர் , நல்ல சட்ட ஆலோசகர் , சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் , தொழில் நல்ல கூட்டாளி , சிறந்த வாழ்க்கை துணை, நல்ல குழந்தைகள்   கிடைக்க பெறுவார்கள் . இதனால் ஜாதகர்  வாழ்க்கையில் படி படியான முன்னேற்றத்தை  பெறுவார் என்பது மறுக்க முடியாத உண்மை .

ஒரு ஜாதகத்தில் பலனை நிர்ணயம் செய்யும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

1 ) நடக்கும் திசை ஜாதகருக்கு எந்த பாவகங்களின்  பலனை தருகிறது ( ராசி அமைப்பில் அந்த கிரகம் எப்படி இருந்தாலும் அதுபற்றி எந்த கவலையும் இல்லை )             
2 ) அந்த பாவகங்கள் ஜாதகருக்கு நன்மையை தருகிறதா? அல்லது தீமையை தருகிறத?
3 ) அந்த பாவகங்களுக்கு  தற்பொழுது கோட்சார கிரக அமைப்புகள்
ஜாதகருக்கு நன்மையை தருகிறதா? அல்லது தீமையை தருகிறதா ?

இது மட்டுமே போதும்  அந்த ஜாதகருக்கு நிச்சயம் சரியான ஆலோசனையை தந்து விட முடியும் அதுவும் 100 சதவிகிதம் உண்மையாக , இதனால் நம்மை நாடி வருபவர்கள் நிச்சயம் தவறான முடிவுகளை எடுக்காமல் வாழ்க்கையில் நலம் பெறுவார்கள் , நமக்கும் புண்ணிய பதிவு கிடைப்பதால் வாழ்க்கையில் இறையருள் சகல முன்னேற்றத்தையும் வாரி வழங்கும் , இதுவே ஜோதிட கலையின் தனி தன்மை . இதற்க்கு மாறாக ஜோதிட  கலையை கையாண்டால் அவர்களை படு குழியில் தள்ளிவிடும் .

குறிப்பு :
 
ஒருவரது ஜாதக அமைப்பில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது அந்த பாவக வழியில் இருந்து 200 சதவிகித தீமையான பலனையே அனுபவிக்க வேண்டி வரும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 27 ஜூன், 2012

ராகு கேது பாதிப்பிற்கு எளிய நிவர்த்தி வழி முறைகள் !



ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் ராகு கேது பிறப்பிலோ அல்லது கோட்சார ரீதியாக பாதிக்கப்பாடுமாயின் அதன் கெடு பலன்களில் இருந்து ஜாதகர் விடுபட சில எளிய வழி
முறைகள் , நவகிரகங்களில் விரைவில் எளிதாக  நமது உடலுடன் உயிர்கலப்பு பெரும் கிரகங்கள் இந்த ராகு கேது என்பதனை மனதில் கொள்க மற்ற கிரகங்களுக்கு இல்லாத தனி தன்மை இந்த சாயா கிரகங்களுக்கு மட்டுமே உண்டு  :

1 ) தனது தாய் வழி அல்லது தகப்பன் வழி தாய் தந்தையருக்கு ( தாத்தா பாட்டி , அம்மாயி ,அப்பிச்சி ) ஒரு பொர்ணமி நாளில் அவர்களுக்கு புத்தாடை கொடுத்து , அவர்கள் கையால் ( அட்சதை தூவி ) ஆசிர்வாதம்பெறுவது ஜாதார் இந்த ராகு கேது கிரகங்களின் பாதிப்பிலிருந்து விடு பட வழி வகுக்கும் , மேலும் திருமண தாமதம் , குழந்தை பாக்கியம் , ஆயுள் விருத்தி , தொழில் முன்னேற்றம் , என ஜாதகருக்கு படிப்படியான முன்னேற்றத்தை நிச்சயம் தரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை இந்த கிரகங்களின் பாதிப்பு மிகவும் கடுமையாக உள்ளவர்கள் கூட தொடர்ந்து மூன்று பொர்ணமிக்கு ஆசிர்வாதம் பெறுவார்களே ஆயின் இதன் வழி நிவர்த்தி பெற்று சகல நலன்களும் பெறுவார்கள் , மேலும் விரைவில் ஜாதகருக்கு ராகு கேது கிரகங்கள்  நன்மையான பலனை விருத்தி செய்து கொடுக்க ஆரம்பிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை .

2 ) அல்லது அருகில் உள்ள  அறுபது வயதை கடந்த பெரியவர்கள் , சதாபிஷேகம் கண்ட தம்பதியரிடம் இது போன்று ஆசிர்வாதம் பெறுவதும், ராகு கேது கிரகங்கள் நன்மையான பலனை தருவதற்கு வழி வகுக்கும் , குறிப்பாக அறுபது வயதை கடந்த பெரியோர்கள் அனைவரிடமும் , ராகு கேதுவால் பாதிக்க பட்டவர்கள் ஆசி பெரும் பொழுது சகல நன்மைகளையும் ராகு கேது கிரகம் தர தவறுவதில்லை.திருமண வாழ்க்கை சரியாக அமையாதவர்கள் , திருமண தடையுள்ளவர்கள் ,குழந்தை பாக்கியம் அற்றவர்கள் , ஜாதக ரீதியாக ராகு கேது கிரகங்களால் அதிகம் பாதிக்க படும் நிலையில் உள்ளவர்களுக்கு , இந்த வழிமுறை விரைவில் பலன் தருகிறது என்பது கண்ணெதிரே  கண்ட உண்மை .

3 ) ஜாதகர் ஆக்னை தீட்சை  , சரியான குருவின் வழிகாட்டுதலில் பெற்று கொள்வது ராகு கேது கிரகங்களின் கெடுதலான பலன்களில் இருந்து விரைவில் மீட்டு எடுக்கும் இதற்க்கு ஜாதகருக்கு நல்ல தேடுதல் இருப்பது அவசியமாகிறது , சிறந்த ஆன்மீக வாதிகள் , மத குருமார்கள் , ஆன்மீக போதனையாளர்கள் , யோக ஆசிரியர்கள் இவர்களிடம் தீட்சை பெறுவதும், ஜாதகருக்கு ராகு கேது கிரக பாதிப்பிலிருந்து விரைவில் மீட்டெடுக்கும் .

4 ) அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி விட்டு , சூரியன் வருவதற்கு முன் சூர்ய நமஸ்காரம் செய்வது , ஜாதகரே சுயமாக ராகு கேது கிரகங்களின் பாதிப்பிலிருந்து சில நாட்களில் விடுபட வழி வகுக்கும் , இந்த முறை மிகவும் எளிதானது ஆனால் தொடர்ந்து செய்யும் பொழுது மட்டுமே ஜாதகர் ராகு கேது கிரகங்களுடன் உயிர்கலப்பு பெறுவது பற்றி உணர முடியும் , இடைவெளி விட்டு விட்டு செய்வது நிச்சயம் பலன் தர வாய்ப்பு இல்லை .

5 ) கலை துறையில் சிறந்து விளங்கும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது இதற்க்கு நிகரான பலனை அள்ளி தரும் ஏனெனில் இவர்கள் அனைவரிடமும் ராகு கேது கிரகத்தின் ஜீவ சக்தி மிகுதியாக காணப்படும் , சித்தர்கள் ஜீவ சமாதி பெற்ற இடங்கள் அனைத்திலும் இந்த கிரகசக்திகள் மிகுந்து காணப்படும் அந்த இடங்களில் ஜாதகர் சென்று உயிர்கலப்பு பெறுவது விரைவான நன்மைகளை தரும் . சித்தர்கள் ஜீவ சமாதி பெற்ற இடங்களுக்கு சென்று முடிந்தது 30 நிமிடங்களாவது தியானத்தில் அமர்வது ஜாதகருக்கு நிச்சயம் நன்மையான பலன்களை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

6 ) புகழ் பெற்ற சிவா ஸ்தலங்களில் எல்லாம் ராகு கேது கிரகங்களின் ஜீவ சக்தி மிகுதியாக காணப்படும் , அந்த தளங்களுக்கு வருடம் ஒரு முறை அல்லது வாழ்வில் ஒருமுறை சென்றுவருவது ராகு கேது கிரக பாதிப்பிலிருந்து ஜாதகரை நிச்சயம் மீட்டு எடுக்கும் குறிப்பாக , திரு காளகஸ்தி , தங்க மேடு தம்பிக்களை அய்யன் கோவில் , மருத மலை , பழனி , திருப்பதி , திருவெண்காடு , திருவக்கரை, சபரி மலை , கொடுமுடி , திரு நணா எனும் கூடுதுறை , நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் , திருச்செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் திரு கோவில் , பாண்டமங்கலம் விஸ்வநாதர் கோவில் , கொல்லி மலை அரப்பளிஸ்வரர் கோவில் , அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் , பாண்டவர்கள் ஐவரும் பூசித்த சிவஸ்தலங்கள் கொங்கு மண்டலத்தில் ஐந்து இடங்கள்  ஆகியன ராகு கேது பாதிப்பிற்கு விரைவான நன்மைகளை தரும் கோவில்கள் .

7 ) ராகு கேது கிரகங்கள் சுய ஜாதக ரீதியாக பாதிக்க பட்டு இருப்பின் மட்டுமே ஜாதகர் இந்த வழி முறைகளை பின்பற்றி நன்மை பெறலாம் , இயற்கையில் ஜாதகருக்கு ராகு கேது கிரகங்கள் நன்றாக அமைந்து இருப்பின் , ஜாதகர் இவ்வித நிவர்த்திகள் எதுவும் தேவையில்லை , மேலும் நல்ல நிலையில் அமர பெற்ற ராகு கேது கிரகங்கள் ஜாதகருக்கு நிச்சயம் எவ்வித தீமையான பலனையும் தருவதில்லை வாழ்க்கையில் மிகசிறந்த முன்னேற்றம் மட்டுமே வாரி வழங்குகிறது . மேலும் தனது ஜாதகத்தில் இந்த சாயா கிரகங்கள் நன்மையை செய்கிறதா தீமையை செய்கிறதா என்று தெரிந்து கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுங்கள் . பொதுவாக ராகு கேது தீமையை மட்டுமே தரும் என்பதில் சிறிதும் உண்மையில்லை இந்த சாய கிரகங்களுக்கு மட்டும் எந்த இடத்தில் அமருகிறதோ அந்த பாவக பலனை தான் மட்டுமே முழுவதும் ஏற்று கொண்டு செய்யும் , மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை எதுவும் அந்த பாவகத்திர்க்கு சம்பந்தம் பெற முடியாது என்பது ஜாதக ரீதியான உண்மை .

வாழ்க வளமுடன்

ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 25 ஜூன், 2012

ராகு கேது எனும் சாயா கிரகங்களின் சிறப்பு !



நவக்கிரகங்களில் சாயாகிரகம் என்று போற்றப்படும் ராகு கேது ஆகிய கிரகங்களுக்கு மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு தன்மை உண்டு , ஒருவரது சுய ஜாதக அமைப்பில் லக்கினம் முதற்கொண்டு 12 பாவகங்களில் எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் அந்தபாவகத்திர்க்கு உண்டான பலனை முழுவதும் தான்  மட்டுமே உரிமை எடுத்து கொண்டு  செய்யும் என்பதே அதன் சிறப்பு தன்மை , இதில் அவரவர் வினை பதிவிற்கு ஏற்றார் போல் நன்மை தீமை பலனை செய்யும் .

ஒருவரது
ஜாதக அமைப்பில் சாயா கிரகங்கள் நல்ல நிலையில் அமர்ந்தால் தரும் பலன்கள் :

ராகு
கேது சுய ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் அமரும்பொழுது ஜாதகருக்கு முதலில் நல்லவர்கள் சேர்க்கை ஏற்ப்படும் , ராகு கேது கிரகங்களின் அமைப்பில் நன்மையான பலன்களை அனுபவிக்கும் நிலையில் உள்ள ஜாதகர்களுக்கு  எங்கு சென்றாலும் , எந்த சூழ்நிலையிலும் நல்ல மனிதர்கள் சேர்க்கை , செல்வந்தர்களின் அறிமுகம் , சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் மற்றும் ஆதரவு . அவர்களால் ஜாதகர் அனுகூலமான பலன்களை பெரும் வாய்ப்பு , அதனால் ஏற்ப்படும் முன்னேற்றம் என நன்மையான பலன்களை இந்த சாயா கிரகங்கள் தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை , மேலும் ஒரு ஜாதகருக்கு நல்லவர்கள் சேர்க்கை ஏற்ப்பட வேண்டும் எனில் அவருக்கு நிச்சயம் ராகு கேது நல்ல நிலையில் இருப்பது அவசியம் .

சாயா
கிரகங்கள் நல்ல நிலையில் அமைந்த ஜாதகருக்கு எந்த விதத்திலும் மற்றவர்களால் தீமையான பலன்கள் நடக்க வாய்ப்பு சிறிதும் இல்லை என்பது உண்மை , ஜாதகர் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேற்றம் மட்டும் காண்பார் என்பது நிச்சயம்  , ஜாதகருக்கு மனதில் நினைக்கும் எண்ணங்கள் எல்லாம் நடைமுறையில் நடப்பதை காண முடியும் . தான் போடும் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெரும் , அதன் வழி ஆதாயம் ஜாதகர் நிச்சயம் பெறுவார்முக்கியமாக அரசியலில் , கலை துறையில் , தொழில் துறையில் சிறந்து விளங்க வேண்டும் எனில் சுய ஜாதகத்தில் ராகு கேது 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருப்பது அவசியம்( ராகு கேது எந்த வீடுகளில் இருந்தாலும் சரி ) .

ஜாதகரின்
உடல் நிலையை ஆளுமை செய்வதில் இந்த சாயா கிரகங்களுக்கு முக்கிய பங்கு நிச்சயம் உண்டு , மிகசிறந்த யோக கலையில் சிறந்து விளங்கவும் , தற்காப்பு கலைகளில் சிறந்து விளங்கவும் , சிறந்த விளையாட்டு வீரராக திகழவும் , சுய ஜாதகத்தில் ராகு கேது 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே முடியும் .ஜாதகருடைய நண்பர்களை நிர்ணயம் செய்வது இந்த ராகு கேது கிரகங்களே , சாயகிரகங்களின் அருள் இல்லை எனில் நிச்சயம் நமக்கு நல்ல நட்புறவு கொண்ட நண்பர்கள் இல்லை என்பது மறுக்க முடியாத
உண்மை
.

சாயா
கிரகங்கள் நல்ல நிலையில் அமர்ந்த ஜாதகருக்கு இயற்கையாகவே கருமைய்யம் மிகவும் பரிசுத்தமாக காணப்படும் , இதனால் ஜாதகருக்கு விளைவு அறிந்து செயல் படும் தன்மை  சிறிய வயதில் இருந்தே துவங்கி விடும்  என்பதில் ஆச்சரியம் இல்லை , ஜாதகருக்கு தன்னிலை விளக்கம் சரியான பருவம் வந்தவுடன் கிடைத்து விடும் , இதன்காரணமாக  சுய கட்டுப்பாடு , ஒழுக்கம் , பரந்த மனப்பான்மை , பொது நலம் , சேவை செய்யும் குணம் , எந்த சூழ்நிலையிலும் கடமை தவறாத குணம் , தம்மை சார்ந்தவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கு ஆற்றல் என  எல்லா பிறப்பிலே அமைந்து விடுகிறது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை .

எனவே
சாயா கிரகங்கள் நல்ல நிலையில் அமர்ந்தால் ஜாதகருக்கு வாழ்க்கையில் பல நன்மைகளை நிச்சயம்  வாரி வழங்கும் .


ஒருவரது
ஜாதக அமைப்பில் சாயா கிரகங்கள் தீமை செய்யும் அமைப்பில் அமர்ந்தால்  தரும் பலன்கள் :

ஜாதகருக்கு
சுயமாக வாழ்க்கை வாழ முடியாமல் மற்றவரை சார்ந்து வாழ வேண்டி வரும் , தன்னம்பிக்கை குறையும் , சுய முயற்சிகளில் அதிக தடைகளை சந்திக்க வேண்டி வரும் , ஆண்  மற்றும் பெண் நண்பர்களால் அதிக துன்பம் ஏற்ப்படும் , நண்பர்கள் வழியே நன்மையான பலனை ஜாதகர் எந்த காலத்திலும் எதிர்பார்க்க இயலாது , நண்பர்கள் காட்டும் வழியில் ஜாதகர் சென்றால் நிச்சயம் வாழ்க்கையில் மனநிம்மதி என்பதே இருக்காது , உதவி செய்ய யாரும் முன் வர மாட்டார்கள், ஜாதகரிடம் இருந்து எல்லா வற்றையும் அகபறிக்கவே சுற்றி உள்ளவர்கள் திட்டம் திட்டுவார்கள் , இறை நிலையும் ஜாதகருக்கு உதவி செய்யாது , குறிப்பாக வாழ்க்கையில் நல்ல வழிகாட்டி கிடைப்பது அரிது .

அடிப்படை
கல்வியை தாண்டுவதே ஜாதகருக்கு பெரும் பாடாக இருக்கும், இளம் வயதிலேயே உலகில் உள்ள அனைத்து தீய பழக்க வழக்கங்களும் ஜாதாகருக்கு அறிமுகமாகி விடும் , சற்றே கவனமாக இல்லை எனில் இந்த பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகும் சூழ்நிலை ஏற்ப்படும் , ஜாதகர் என்னும் எண்ணங்கள் அனைத்தும் எதிர்மறை எண்ணங்களாகவே இருக்கும் , குறுக்கு வழியில் புத்தி செயல் பட துவங்கி விடும் . ஜாதகர் தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை எல்லாம் உதறி தள்ளும் நிலை ஏற்ப்படும் , அனைவரிடமும் பகைமை பாராட்டும் நிலைக்கு தள்ளபடுவார் .

இவர்களை
எளிதாக மற்றவர்கள் தமது சுய லாபத்திற்காக பயன் படுத்தி கொள்ளவார்கள் , அதனால் ஜாதகருக்கு எவ்வித பயனும் இருக்காது மற்றவர்கள் சொல்வதை ஆராய்ந்து பார்க்காமல் அவர்களுக்கு அடிமை ஆகும் சூழ்நிலை ஏற்ப்படும் , தனக்கு தேவை எனில் சட்டத்துக்கு புறம்பாகவும் செயல்பட தயங்க மாட்டார்கள் மேலும் இவர்களின் செயல்கள் அனைத்தும்  செய்து முடித்த பிறகு வருத்த படும் அளவிலேயே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை , இந்த அமைப்பை பெற்ற ஜாதகத்தை கொண்ட ஆண் பெண் குழந்தைகளை பெற்றோர்கள் சிறப்பு கவனம் எடுத்து வளர்த்துவது முக்கிய கடமையாகும் .

மேலும்  மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ளும் இல்லற வாழ்க்கை  ஜாதகருக்கு அமைந்து விடும். மனைவி மற்றும் உறவினர் ,நண்பர்கள் என்ற வகையில் ஜாதகர் அதிக துன்பங்களையே எதிர்கொள்ள வேண்டி வரும் , இப்படிபட்ட அமைப்பை கொண்ட ஜாதகர்கள் ஒரு விஷயத்தை செய்யுமுன் பலமுறை சிந்தனை செய்து செயலாற்றுவது சிறிது நன்மையான பலனைத்தரும்  .

இந்த
தீமையான பலன்களில் இருந்து ஜாதகர் விடுபட வேண்டும் எனில் அவர் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் , ஒரு சிறந்த ஆன்மீக ஆசானை குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடம் முறையாக தீட்சை பெறுவது மட்டுமே நல்ல வாழ்க்கையை அமைத்து தரும் . மேலும் கருமையம் தூய்மை பெற்று சாயா கிரகங்களின் பாதிப்பிலிருந்து நிச்சயம் 100 சதவிகிதம் ஜாதகர் விடு பட வழி வகுக்கும் ஆனால் இது எளிதில் நடக்கும் விஷயம் அல்ல ஜாதகர் பல சோதனைகளை கடந்து வர  வேண்டி இருக்கும் .

இந்த
அமைப்பை பெற்ற ஜாதகர்கள் ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தால் நிச்சயம் இவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் அது " தேடுதல் " இதனால் ஜாதகருக்கு நல்ல வழி கிடைக்கும் என்பது உறுதி .

வாழ்க வளமுடன்
ஜோதிடன்
வர்ஷன்
9443355696


வியாழன், 21 ஜூன், 2012

சொந்த வீடு, சுய தொழில் அமைய என்ன செய்ய வேண்டும் ?



 கேள்வி :

அய்யா எனக்கு தற்பொழுது குடியிருக்க சொந்த வீடு இல்லை , மேலும் சுயமாக தொழில் பல  செய்தேன் ஆனாலும் அனைத்திலும் நஷ்டம் , நான் தற்பொழுது எனது மனைவியுடன் மாமனார் வீட்டில் வசித்து வருகிறேன்,  இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் , எதிர்காலம் எப்படி இருக்கும் முன்னேற்றம் உண்ட என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ? தயவு செய்து வழிகாட்டுங்கள் .

 அன்புள்ள நண்பருக்கு ..

தங்களுடை ஜாதக அமைப்பில், சொத்து, சுகம், சொந்த வீடு , வண்டி வாகன அமைப்பு மற்றும் தாயாரின் நிலை ஆகியவற்றை குறிக்கும் 4 ம் வீடு  மற்றும் தொழில் , வசதி , தொழில் மூலம் வரும் வருமானம் தங்களது தகப்பனார் ஆகிய அமைப்பை குறிக்கும் 10 ம் வீடுகளின் பலன்களை  தற்பொழுது நடக்கு திசை ராகு திசை தங்களுக்கு நடத்தி கொண்டு இருக்கிறது , மேலும் இந்த பாவகங்கள் கோட்சார ரீதியாக மிகவும் பாதிக்க பட்டுள்ளது .

ஒருவருடைய ஜாதக அமைப்பில் இந்த இரு வீடுகள் கோட்சார ரீதியாக பாதிக்க படும்பொழுது , ஜாதகர் அவசரபட்டு எடுக்கும் சில முடிவுகளால் அதிகம் பாதிக்க பட வேண்டி வரும் என்பது கவனிக்க பட வேண்டிய முக்கிய அம்சம் , ஒருவருக்கு குடியிருக்க அனைத்து வசதியுடன் கூடிய ஒரு நல்ல வீடு , வண்டி , வாகனம் , சொத்து சுகம் , ஆகிய அமைப்புகள் பெற வேண்டுமெனில் அவரது ஜாதக அமைப்பில் இந்த நான்காம் வீடு மிகவும் நன்றாக இருப்பது அவசியம் . மேலும் சுய தொழில் நல்ல முன்னேற்றம் பெறவும் , நல்ல வேலை வாய்ப்பினை பெறவும் , செய்யும் தொழில்களில் நல்ல முன்னேற்றம் பெறவும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீடு , மிகவும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் .

இந்த இரண்டு வீடுகள் ஒரு ஜாதகத்தில் பிறப்பிலே பாதிக்க பட்டாலும் , கோட்சார ரீதியாக பாதிக்க பட்டாலும் ஜாதகர் இந்த வகையில் நன்மையான பலன்களை பெற முடியாது , தங்களது சுய ஜாதகத்தில் இந்த இரண்டு வீடுகள் மிகவும் நல்ல நிலையில் இருக்கின்றது , கோட்சார ரீதியாக மட்டும் பாதிக்க பட்டுள்ளது கடந்த 7 வருடமாக மட்டுமே  , இந்த காலங்களில் தாங்கள் தங்களின் பெற்றோரை விட்டு விட்டு மனைவி பேச்சை கேட்டுக்கொண்டு மாமனார் வீட்டில் வந்து அமர்ந்து விட்டால் , செய்யும் தொழிலும் , மற்ற விஷயங்களிலும் தோல்வி தான் கிடைக்கும் .

பொதுவாக அம்மாவை குறிக்கும் 4 ம் பாவகம்  குடியிருக்க நல்ல வீடு, வண்டி , வாகனம் , சொத்து சுகம் , ஆகிய அமைப்புகள் இந்த பாவக வழியில் இருந்தே நடக்கும் , செய்யும் சுய தொழில் அதன் வழி முன்னேற்றம், நல்ல மதிப்பு மரியாதை , செல்வாக்கு  ஆகியன தந்தையை குறிக்கும் 10 ம் பாவக வழியில் இருந்து நடக்கும் , அப்படியெனில் நமது பெற்றோரை நாம் எவ்வளவு நன்றாக கவனித்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு , நமது வாழ்க்கையில் நல்ல வீடு, வண்டி , வாகனம் , சொத்து சுகம் , சுய தொழில் நல்ல முன்னேற்றம் , வேலை வாய்ப்பில்  நல்ல முன்னேற்றம் என நமக்கு ஜாதக ரீதியாக நன்மையை கொடுக்க ஆரம்பித்து விடும் .

தங்களது சுய ஜாதக அமைப்பில் கோட்சார ரீதியாக 4 ம் பாவகம் மற்றும் 10 ம் பாவகம் ஆகியன பாதிக்கும் பொழுது பெற்றோரை அம்போ என்று விட்டு விட்டு வந்தது மிக பெரிய தப்பு , இதை தாங்கள் நன்கு உணர்ந்து கொண்டு மீண்டும் அவர்களுடன் போய் சேர்ந்து வாழ்வது தங்களின் ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட 4 ம் பாவகம் மற்றும் 10 ம் பாவகம் பலனை நன்கு விருத்தி செய்து கொடுக்கும் , மேலும் அவர்களால் தங்களுக்கு சில சிரமங்கள் நேரலாம் ஆனால் அவற்றை எல்லாம் தங்கள் மனம் உவந்து ஏற்றுக்கொண்டு வாழ்க்கை நடத்துங்கள் , சில மாதங்களிலேயே தங்களுக்கு தொழில் ரீதியாகவும் , பொருளாதார ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள் , புதிதாக அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு கட்டும் யோகம் நிச்சயம் கிடைக்கும் , நல்ல வண்டி வாகனம் , சொத்து சுக சேர்க்கை நிச்சயம் ஏற்ப்படும் . இதை மறுத்து தாங்கள் எந்த கோவிலுக்கு சென்று என்ன பரிகாரம் செய்தாலும் தங்களுக்கு ஒன்றும் நல்ல பலன் நடந்து விட போவதில்லை .

பரிகாரம் :

தங்களின் பெற்றோருக்கு தேவையான வற்றை செய்து கொடுங்கள் , அவர்களது ஆசைகளை நிறைவேற்றி வையுங்கள் ( இந்த வயதில் அவர்கள் என்ன கேட்டு விட போகிறார்கள் தங்களது பேரபிள்ளைகள் உடன் கொஞ்சி மகிழ்வதை விட ?   உலகம் அன்பு மயமானது நீங்கள் அதை மற்றவருக்கு கொடுங்கள் அது நிச்சயம் தங்களுக்கு திரும்ப கிடைக்கும் ) அவர்களை இறுதி வரை உங்களது கண்காணிப்பிலேயே வைத்திருங்கள் , இதுவே உடனடி பலன் தரும் பரிகாரம் .

தாயின் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை .

நாம் செய்யும் நன்மை தீமை பொறுத்தே , நமக்கு நல்ல கெட்ட பலன்கள் நடக்கிறது , ஒரு பாவக வழியில் இருந்து நமக்கு அதிக தீமையான பலன்கள் நடை பெற்றால் அந்த பாவக சம்பந்த பட்ட நபரை மனமார  நாம் ஏற்று கொண்டு அவருக்கு  நன்மையை மட்டும் செய்தோம் என்றால் , அந்த பாவக வழி கர்ம வினை பதிவை தீர்த்துக்கொள்ள முடியும் , இதன் மூலம் அந்த பாவகம் விருத்தி பெரும் நமக்கு நன்மையான பலன் நடக்க ஆரம்பிக்கும் , உதாரணமாக ஒருவரது ஜாதக அமைப்பில் மூன்றாம் வீடு பாதிக்க பட்டு இருந்தால் , அவர் தனது மூத்த அண்ணன் அல்லது அக்கா ஆகியோரால் ஏற்ப்பாடு துன்பங்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்மையை மட்டும் செய்தால் , சிறிது காலத்திற்கு பிறகு அந்த பாவக வழியில் கர்ம வினை பதிவு கழிந்து , நன்மையான பலன்கள் விருத்தி பெரும் .

இதுவே இறை நிலை நமக்கு வழங்கி இருக்கும் வாய்ப்பு, இதை நாம் உணர்ந்தால் நமது வாழ்க்கையில் வரும் செழிப்பு.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
jothidadeepam@gmail.com