செவ்வாய், 31 ஜூலை, 2012

ஜாதகத்தில் புதன் வழங்கும் ராஜ யோக பலன்கள் !



 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு புதனின் வீடுகளாக மிதுனமும் , கன்னியும் அமைகிறது , இதில் புதன் ஒருவருக்கு இரண்டு விதமான பலனை தருகிறார் , ஒன்று சூரியனுடன் 14 பாகைக்குள் சேரும்பொழுது பாவியாகவும் , சூரியனுடன் சேராமல் 14 பாகைக்கு மேல் இருப்பின் சுபராகவும் இருக்கிறார் என்றும் பாரம்பரிய முறையில் பலன் காணுவார்கள் , நமது  ஜோதிட முறை படி , சூரியனுடன் 14 பாகைக்குள் சேரும்பொழுது கேந்திர அதிபதியாகவும் , சூரியனுடன் சேராமல் 14 பாகைக்கு மேல் இருப்பின் கோண அதிபதியாகவும் எடுத்து கொள்வோம் , இந்த முறை படி பார்க்கும் பொழுது, கால புருஷ தத்துவ அமைப்பில் மூன்றாம் வீட்டுக்கு அதிபதியாகவும் , ஆறாம் வீட்டுக்கு அதிபதியாகவும் வரும் புதன் ஒருவருடைய  ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு கிடைக்கும் யோக பலன்களை பற்றி இந்த பதிவில் காண்போம் .

 

 புதன் மிதுனத்தில் தரும் யோகம் :

 

கால புருஷ தத்துவ அமைப்பில் மூன்றாம் வீட்டுக்கு புதன்  அதிபதியாக அமர்ந்து  மிதுனத்தில் , உபய ராசி , காற்று தத்துவ அமைப்பை பெறுகிறார் , உபயம் என்றால் மற்றவர்கள் வாழ்க்கையில் பயன்படும் விதத்தில் செயல் படுவது , காற்று என்றால் ஜாதகரின் அறிவாற்றலை குறிக்கும் , எனவே ஜாதகரின் அறிவாற்றல் எந்த வகையிலாவது மக்களுக்கு நிச்சயம் பயன்படும் என்பதையே இந்த மிதுன ராசி குறிப்பிடுகிறது.

 

பொதுவாக நவ கிரகங்களால் ஏற்ப்படும் பாதிப்பான பலன்களை தடுத்து , ஜாதகருக்கு நன்மை தரும் அமைப்பு புதனுக்கு உண்டு என்று பல ஜோதிட நூல்களில் நாம் படித்திருக்க கூடும் , அதற்க்கு காரணம் என்ன என்று இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் , ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் மூன்றாம் வீட்டை வைத்து நாம் மனம் , எண்ணம் , ஜாதகரின் நண்பர்களால் வரும் நன்மை , சுய அறிவு , எழுத்தாற்றல் , பயணங்களால் வரும் நன்மை , தொலை தொடர்புகளால் ஜாதகருக்கு வரும் நன்மை, புலனுக்கு அப்பாற்ப்பட்ட அறிவு , வருமுன் உணரும் தெய்வீக ஆற்றல் , நல்லவர்கள் தொடர்பு , எழுத்தாற்றல்  மூலம் மக்களிடம் ஏற்ப்படும் ஆதரவு, முயற்ச்சியால் கிடைக்கும் வெற்றி  ஆகியவற்றை குறிக்கும் .

 

இதன் படி பார்க்கும் பொழுது மனம் மற்றும் எண்ணம் ஆகியவற்றை முழுமையாக ஆளுமை செய்கின்ற பாவகம் மூன்றாம் வீடு என்றால் அது மிகையாகாது , ஒரு ஜாதகர் மன நிலை சிறப்பாக செயல் பட சுய ஜாதகத்தில் எந்த லக்கினம் என்றாலும் மூன்றாம் பாவகம் நல்ல நிலையில் இருப்பது அவசியமாகிறது , மேலும் இந்த மூன்றாம் பாவகத்தை வைத்து ஜாதகரின் மன நிலையையும் , எண்ணத்தின் நிலையையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் , கிராமத்தில் ஒரு செலவாடை ஒன்று உண்டு அது " தம்பி உடையான் படைக்கு அஞ்சான் " என்பது , தைரியம் என்ற சொல்லுக்கும் , உடன் பிறப்பு என்ற அமைப்பிற்கும் இந்த மூன்றாம் பாவகம் முழுமையாக பொருந்துவதை நாம் இங்கே சற்றே கவனிக்க வேண்டுகிறோம் , தனது உடன் பிறப்பு இருப்பின்,  ஒருவருக்கு இயற்கையாகவே தன்னம்பிக்கை மற்றும் மன தைரியம்  நிச்சயம் வந்துவிடும் , எந்த ஒரு பிரச்சனைகளையும் தனது உடன் பிறப்பு உதவியுடன், மன உறுதியுடன் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்பதையே இந்த பாவக வழி நமக்கு உணர்த்துகிறது , பொதுவாகவே நமக்கு ஒரு உடன் பிறப்பு உள்ளது என்றாலே மனதில் ஒரு வித தைரியம் வரும் என்பதை எவராலும் மறுக்க இயலாது , எனவே ஒருவருடைய ஜாதக அமைப்பில் மூன்றாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் தனது உடன் பிறப்பு வழியில் இருந்து 100 சதவிகித நன்மை , ஆதரவு , தைரியம் , வெற்றி ஆகியவை கிடைக்க பெரும் என்பது நிச்சயம் .

 

ஒருவருடைய வாழ்க்கையில் இறுதிவரையிலும் , சிறு சிரமங்கள் வந்தாலும் அதற்காக வருத்தமும் , ஆதரவும் , ஓடிவந்து உதவி செய்யும் குணமும் தனது உடன் பிறப்பை தவிர வேறு யாரும் அல்ல என்பதே முற்றிலும் உண்மை , அப்படி பட்ட உடன் பிறப்பை பெற்ற அனைவரின் ஜாதக அமைப்பிலும் இந்த மூன்றாம் வீடு மிகவும் வலுமையாக அமைந்திருக்கும் , என்பதே உண்மை . எத்தனை அண்ணன் தம்பிகள் , அக்கா தங்கைகள் பாசமிகு வாழ்க்கை நாம் பார்த்திரிக்கிறோம் , தனது உடன் பிறப்புக்கு ஒன்று என்றால் துடித்து போகும் எத்தனையோ  சகோதர அமைப்புகள் நமது மண்ணில் இன்னும் உள்ளனர் , இதுவே ரத்த பாசத்திற்கு அடையாளம் . கால புருஷ தத்துவ அமைப்பிற்கு புதன் இந்த வீட்டிற்கு அதிபதியாக வந்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை , ஏனெனில் அதி புத்திசாலித்தனத்தால் மற்றவரை நல்ல நிலைக்கு எடுத்து செல்லும் ஆற்றல் கொண்டவராக புதன் விளங்குவதே இதற்க்கு காரணம் . இந்த புதன் மாதிரி உடன் பிறப்புகளும் நல்ல ஆலோசனைகளை நமக்கு தந்து, நல்வழி படுத்தும் பண்பு கொண்டவர்கள் என்பது சரியாக பொருந்தும் .

 

ஒருவருக்கு நல்ல எண்ணங்களும் , மன தைரியமும் , செய்யும் காரியங்களில் வெற்றிகளை பெற வேண்டும் எனில் நிச்சயம் இந்த மூன்றாம் பாவகமும் , மிதுன ராசியும் , புதனும் சிறப்பான நிலையில் சுய ஜாதகத்தில் அமைந்து இருக்க வேண்டும் .

 


புதன் கன்னியில் தரும் யோகம் :

 

கால புருஷ தத்துவத்திற்கு ஆறாம் வீட்டிற்கு புதன்  அதிபதியாக அமர்ந்து , உபய ராசியாகவும் , மண் தத்துவ அமைப்பை பெறுகிறார் , உபயம் என்றால் மற்றவர்கள் வாழ்க்கையில் பயன்படும் விதத்தில் செயல் படுவது ,மண் தத்துவம் எனும்பொழுது இந்த இடத்தில் , ஜாதகரின் உடல் , பொருள் , சொத்து , வண்டி வாகன , அமைப்பு , வியாபாரம் , ஆகிய வற்றை குறிப்பிடுகிறது .

 

மிதுன அமைப்பை சார்ந்தவர்கள் மக்களுக்கு தனது அறிவு வழியில் உதவும் அமைப்பை  பெறுவார்கள், கன்னி அமைப்பில் ஜாதகர் உடல் வழியில் மக்களுக்கு உதவும் அமைப்பை பெறுவார்கள் , தனது உடல் நிலையை பற்றி எவ்வித கவலையும் கொள்ளாமல் மக்கள் பணியாற்றும், அமைப்பை பெற்றவர்கள் யாவரும் இந்த கன்னி ராசி மற்றும் புதன் நல்ல நிலையில் அமைய பெற்றவர்களே , குறிப்பாக மக்களை பாதுகாப்பாக ஒரு இடத்துக்கு அழைத்து செல்லும் வாகன ஓட்டுனர்கள் , மக்களை இரவு பகல் பாராமல் காவல் காக்கும் , காவல் துறையினர் , ராணுவ வீரர்கள் , தனது தேசத்திற்கு புகழையும் , வெற்றியையும் பெற்று தரும் விளையாட்டு வீரார்கள் , மக்கள் நலனுக்காக பாடு படும் அரசியல் தலைவர்கள் , மக்கள் நல சேவகர்கள் போன்றோர்கள் இதற்க்கு உதராணமாக நாம் எடுத்து கொள்ளலாம்.

 

மேலும் நாட்டிற்கு வரும் தீமைகளை கண்டறிந்து , அவற்றை தடுத்து நிறுத்தும் பேராற்றல் கொண்டவர்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பு ( கன்னி புதன் ) மிகவும் சிறப்பாக செயல் பட்டு கொண்டு இருக்கும் , ரகசிய போலீஸ் , துப்பறியும் இலாகா , துதுவர்கள்  போன்ற பணிகளில் சிறப்பாக செயல்படும் அனைவர்க்கும் இந்த கன்னி புதன் சிறப்பாக அமைய பெற்றிருப்பார் , பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ள பன்முக திறமை, மற்றும்  வருமுன் தெரிந்து கொள்ளும் அதீத சக்தியுள்ள திறமையை பெற்றிருப்பது புதன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே முடியும் . மேலும் இவர்கள் எதிரிக்கு  சிம்ம சொப்பனமாக இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை இதற்க்கு காராணம் கன்னி புதனே , ஒருவருடைய ஜாதகத்தில் கன்னி புதன் நல்ல நிலையில் இருந்தால் எதிரியின் சொத்து ஜாதகருக்கு கிடைக்கும் , எதிரி செய்யும் அனைத்து காரியங்களும் ஜாதகருக்கு உபகாரமாகவே அமைந்து விடும் , மேலும் ஜாதகரை விழ்த்த எதிரிகள் செய்யும் அணைத்து வேலைகளும் ஜாதகருக்கு சாதகமாகவே அமைந்துவிடும் , அதனால் ஜாதகர் நன்மையே பெறுவார் , இவர்களிடம் நேரடியாக எதிர்த்து நிச்சயம் ஜெயிக்க முடியவே முடியாது .

 

கன்னி புதன் நல்ல நிலையில் உள்ள ஜாதக அமைப்பை பெற்றவர்கள் அதிகம் வழக்கறிஞர் தொழில் கொடிகட்டி பறக்கிறார்கள், என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை, மேலும் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை பெரும் அமைப்பை பெற்றவர்கள் அனைவருக்கும் சுய ஜாதகத்தில் கன்னி புதன் நிச்சயம் சிறப்பாக அமைய பெற்றிருக்கும், சட்டத்துறையில்  இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களுக்கு சிறப்பான இடம் நிச்சயம் உண்டு . மேலும் ஜாதகரின் உடல் நிலை பாதிப்புகள் எவ்விதத்திலும் கெடுதல் செய்யாது , விபத்துகளில்  ஜாதகருக்கு எவ்வித பாதிப்பையும் நிச்சயம் தராது , மனம் உடல் இரண்டும் எப்பொழுதும் ஜாதகருக்கு ஒத்துழைக்கும் , கடன் கொடுக்கல் வாங்கல்களில் ,  சூதாட்டத்தில் அபரிவிதமான சொத்துகளை பெற இந்த கன்னி புதன் நல்ல நிலையில் இருக்க வேண்டும் , முக்கியமாக பங்கு வர்த்தகம் , யூக வணிகத்தில் சிறப்பான வெற்றிகளை  பெற வேண்டும் எனில் நிச்சயம் சுய ஜாதகத்தில் ஆறாம் பாவகம் , கன்னி ராசி , புதன் ஆகிய அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தால் மட்டுமே முடியும் .   

 

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 30 ஜூலை, 2012

ஜோதிட ஆலோசனை : எனக்கு திருமணம் செய்யும் யோகம் உண்டா ?



 

கேள்வி :

அய்யா கடந்த ஐந்து வருடமாக எனக்கு வீட்டில் பெண் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் , ஆனால் ஏதாவது ஒருவகையில் தடை ஏற்ப்பட்டு கொண்டே இருக்கிறது , மேலும் எனக்கு திருமணம் செய்து கொள்ளும் யோகம் உண்டா ? அது விருப்ப திருமணமா ? பெற்றோர்களால் நிச்சயக்க பட்ட திருமணமா ? அல்லது திருமணமே நடக்காதா வயது வேறு 33 தாண்டி விட்டது, இதற்க்கு காரணம் என்ன ? என்ன பரிகாரம் செய்தால் எனது திருமண  வாழ்க்கை தடையின்றி நடை பெரும் என்பதை தயவு செய்து கூறுங்கள்.

பதில் :

தங்களுடைய ஜாதக அமைப்பில் களத்திரம் எனும் ஏழாம் பாவகம் 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் , குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் , பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் எனவே தாங்களுக்கு திருமண வாழ்க்கை அமைவது அவ்வளவு எளிதான விஷயமல்ல, காரணம் ஒருவருக்கு அமையும் திருமண வாழ்க்கையை பற்றி குறிப்பிடும் 2 ,7 ம் பாவகங்கள் இரண்டும் கடுமையான பாதிப்பில் உள்ளது , மேலும் தங்களுக்கு 7 ம் பாவகம் சிம்ம வீட்டுடன் தொடர்பு பெற்று  கடுமையாக பாதிக்க பட்டு இருப்பது , திருமணத்திற்கு முன் தீய பெண்கள் தொடர்பை ஏற்ப்படுத்தி அதனால் பொருள் இழப்பு மற்றும்  திருமண தாமதத்தை ஏற்ப்படுத்தும் என்பதே உண்மை .

மேலும் தங்களது நண்பர்கள் வழியில் இருந்தும் உங்களுக்கு அதிக தொல்லை ஏற்ப்படலாம் , களத்திர பாவக அமைப்பில் இருந்தும் தீமையான பலன்களே நடை பெரும் , தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் ராகு திசை சுக்கிர புத்தியில் நிச்சயம் திருமணம் நடை பெற வாய்ப்பு இல்லை , ஆனால் அடுத்து வரும் சூரிய புத்தியில் திருமணம் நடை பெற நிச்சயம் வாய்ப்பு உண்டு , அப்படி அமைய பெரும் வாழ்க்கை துணை நிச்சயம் தங்களது ஜாதி அமைப்பை சேர்ந்தவராக இருக்க 100 சதவிகிதம் வாய்ப்பு இல்லை , கலப்பு திருமணம் செய்து கொள்ளவே  அதிக வாய்ப்பு  இருக்கிறது , அதற்க்குண்டான அறிகுறிகள் தங்களுக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம் , மேலும் அவர் கணவனால் கைவிடப்பட்டவராக இருக்க அதிக வாய்ப்பு உண்டு , இந்த அமைப்பை பெற்ற ஜாதகியை தங்கள் திருமணம் செய்துகொள்ளும் பொழுது வாழ்க்கை மிகவும் , நன்றாக இருக்கும் அதிக துன்பங்கள் இருக்க வாய்ப்பு குறைவு.

எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்களின் விருப்பபடி வாழ்விழந்த  பெண்ணுக்கு தாங்கள் வாழ்க்கை தரும் பொழுது உங்களின் ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட பாவகமான 2 ,7 ம் பாவகங்கள் வலிமை பெரும் அதன் வழி நன்மைகளை தாங்கள் நிச்சயம் பெறுவீர்கள் என்பது தங்களின் ஜாதக அமைப்பிற்கான பலன் , தங்களின் ஜாதக அமைப்பில் கன்னி பெண்ணிற்கு வாழ்வளிக்கும் யோகம் இல்லை என்பதே உண்மை . எனவே ஜாதக பலனை முழுவதுமாக மனம் உவந்து ஏற்றுக்கொண்டு, வாழ்விழந்த ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை தந்து உங்களின் கர்ம வினை பதினை கழித்துக்கொண்டு , நலமான வளமான வாழ்க்கையை பெறுங்கள் , இதை தவிர்த்து உங்களது வீட்டில் உள்ளவர்கள் தங்களுக்கு பெண் பார்த்து கொண்டு இருப்பார்களே ஆயின் எவ்வளவு காலம் ஆனாலும் தங்களுக்கு திருமணம் நடை பெற வாய்ப்பு இல்லை , இது உறுதி . உங்களின் விருப்ப படியே திருமணம் அமையும் .

பரிகாரம் :

வளர் பிறை வியாழன் அன்று பிராமண ஆசி பெறுவது தங்களுக்கு திருமண வாழ்க்கை விரைவில் நடை பெற வழி வகுக்கும் , திருவெண்காடு சென்று முக்குண நீராடி நலம் பெறுவது அவசியமாகிறது , தங்களின் குல தெய்வ வழிபாட்டினை தொடர்ந்து செய்வதும் , பித்ரு கர்மங்களை முறைப்படி செய்வதும் திருமண வாழ்க்கையை மிகவும் சிறப்பாக அமைத்து தரும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
944335596


ஞாயிறு, 29 ஜூலை, 2012

ஜோதிட ஆலோசனை: !



இது ஒரு போலி ஆன்மீகவாதியின்  ஜாதகம் :

1 ) இந்த ஜாதக அமைப்பில் லக்கினம் , தைரியம் , களத்திரம் ,கூட்டாளி , பெயரும் புகழையும் குறிக்கும் பாக்கியம் எனும் ஒன்பதாம் பாவகம் , ஆகியன விரைய ஸ்தானம் எனும் 12 ம் பாவகத்துடன் சம்பந்தம்.

2 )  மேலும் சொத்து சுகம் , நல்ல குணம் , ஆகியவை குறிக்கும் 4 ம் பாவகம் , எதிரி நோய் , கடன் சிறு இழப்பு ஆகியவைகளை குறிக்கும் 6 ம் பாவகம் , திடீர் இழப்பு , விபத்து , மற்றும் சட்டத்தின் பிடியில் சிக்கி கொள்ளும் துர்பாக்கியம் ,ஆகியவை குறிக்கும் 8 ம் பாவகம் , தகப்பானார் ,மற்றும் ஜீவனம் , தொழில் முடக்கம் ஆகியவற்றறை குறிக்கும் 10 ம் பாவகம் , மன நிம்மதி , ஆழ்ந்த உறக்கம் , நிறைய முதலீடு செய்வதால்  வரும் முன்னேற்றம் , வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வம் , ஆகியவற்றை குறிக்கும் 12 ம் பாவகம் ஆகியவை அனைத்தும் ஜாதகத்தில் 12 ம் வீடு எனும் விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம்.

என இந்த ஜாதக அமைப்பில் 1 ,3 ,4 ,6 ,7 ,8 , 9 ,10 ,12 எனும் வீடுகள் அனைத்தும் 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் , மேலும் இந்த வீடுகளின் பலன்களை ஜாதகருக்கு 24 /10 /2006 முதல் நடைமுறைக்கு வந்து இருக்கிறது ஜாதகருக்கு இந்த காலகட்டங்களில் இருந்து அடிமேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது , ஜாதகரும் எந்த வகையிலாவது தீர்வு கிடைக்காதா என்று அங்கும் இங்கும் அலைந்து  திரிந்து கொண்டு இருக்கிறார் , ஆனால் தீர்வு என்பது மட்டும் ஜாதகருக்கு இன்னும் கிடைக்க வில்லை , இதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் , உண்மையில் கடைசியில் ஜாதகருக்கு என்னதான் நடக்கும் என்பதை பார்ப்போம் .

முதலில் ஜாதகருக்கு இந்த அபரிவிதமான யோகம் எதனால் வந்தது என்று பார்ப்போம் , இதற்க்கு முதல் காரணம் ஜாதகருக்கு லக்கினம் கன்னியாக வந்து லாப ஸ்தானம்  கடகத்தில் அமர்ந்து 100 சதவிகிதம் நன்மையை செய்ததே இதற்க்கு காரணம் , மேலும் கடகம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் வீடாக அமைவது அளவில்லா சொத்து சுகத்தை குறுகிய கால அமைப்பில் வாரி வழங்கியது , இது சர ராசி என்பதால் வேகமான வளர்ச்சியை தந்தது, ஒரு சுக போகியாக வாழ்க்கையை அனுபவிக்கும் யோகம் ஜாதகருக்கு கிடைத்தது , உலகமெல்லாம் சென்று வரும் யோகத்தை கொடுத்தது , செம்மறி ஆட்டு மந்தையை போன்ற மக்கள் ஆதரவை பெற்று தந்தது , மக்களின் மூட நம்பிக்கையை மூல தனமாக கொண்டு உலகில்  உள்ள சுக வாழ்க்கையை எல்லாம் அனுபவிக்கும் சூழ் நிலையை தந்தது , தனது மனம் போல் எல்லாமே நடை பெற கடக ராசி அமைப்பு வழி வகுத்து, பலனை அனுபவிக்க வைத்தது , மேலும் கடகம் ஒருவருக்கு நல்ல நிலையில் இருந்தால் மற்றவரை வசிகரிக்கும் பேச்சு திறன் ஏற்ப்படும்  இதுவும் ஜாதகருக்கு அமைந்தது , ஜாதாகருக்கு யோக பலன்கள் எல்லாம் நடை பெறுவதற்கு காரணம்  கடகராசி அமைப்பு மட்டுமே.

மேலும் வருமானம் , வாக்கு , செல்வ வளம் ஆகியவை குறிக்கும் 2 ம் வீடும் சர துலாம் ராசியாக அமைந்து மிகவும் நல்ல நிலையை பெற்றதால் ஜாதகருக்கு அபரிவிதமான பேச்சாற்றல் ஏற்ப்பட்டது , மக்களை பேச்சால் அடிமை நிலைக்கு ஆளாக்கி தனது கை பாவையாக வைத்திருந்ததிற்கு காரணம் இந்த துலாம் ராசி அமைப்பே காரணம் , மேலும் இந்த வீட்டு அதிபதி சுக்கிரன் சொல்லவும் வேண்டுமா என்ன ? ஆண் பெண் என அனைவரையும் ( அதாவது சுக்கிரனின் வலுமை குறைந்த ஜாதக அமைப்பை பெற்ற நபர்களை ) தன் வச படுத்த இந்த துலாம் ராசி அமைப்பு மிகவும் ஜாதகருக்கு உதவி செய்தது .

  ஒருவருடைய ஜாதக அமைப்பில் எந்த கிரகத்தின் சக்தி குறைந்து காணப்படுகிறதோ அவர்கள் அனைவரும் ,  அந்த கிரகசக்தி பரிபூர்ணமாக அமைய பெற்றவர்களின் பேச்சுக்கு , செயலுக்கு அடிமை ஆவது ஒன்றும் ஆச்சர்யமான விஷயம் இல்லை , அப்படி பார்க்கும் பொழுது ஜாதகருக்கு சுக்கிரன் மற்றும் சந்திரன் சனி ஆகிய கிரகங்கள் மிகவும் வலிமையாக அமைந்தது , அதன் பிரகாரம் சந்திரன் வலுகுறைந்தவர்கள் அனைவரும் , தொளிவில்லாத சிந்தனையுடன் யார் எதை சொன்னாலும் உண்மை என நம்பு தன்மையும் , மனதளவில் வலிமை இல்லாதவர்களாகவும் இருப்பார்கள் , சுக்கிரன் வலுகுறைந்தவர்கள் அனைவரும் , திருமணம் , இல்லற வாழ்க்கை , தனது வாழ்க்கை துணையுடன் ஒற்றுமை இல்லாத நிலையில் இருப்பார்கள் , களத்திர வழியில் அதிக துன்பத்தை அனுபவித்து அதனால் ஒரு வடிகாலை தேடிக்கொண்டு இருப்பார்கள் , சனி வலுகுறைந்தவர்கள் அனைவரும், தொழில் வழியில் அதிக பாதிப்புகளை சந்தித்து , கடன் பொருளாதார சிக்கல் என போராட்ட வாழ்க்கையில் சிக்கி தவித்து கொண்டு , தனக்கு ஏதாவது நல்ல வழி கிடைக்காதா என்று மன நிம்மதி இன்றி விளித்து கொண்டு இருப்பார்கள்.

சந்திரன் , சுக்கிரன் , சனி ஆகிய கிரகங்களால் பாதிப்படைந்த நபர்கள் , ஜாதகரின் வலுவான  சந்திரன் , சுக்கிரன் , சனி கிரகங்களால் ஜாதகரிடம்  முதல் பார்வை , பேச்சு , செயல் பாடுகளால்  ஈர்க்க பட்டு தனக்கு  நல்ல வழி கிடைக்கும் என்று நம்பி மனதளவில் சரணடைந்து விடுவார்கள் , இதன் பிறகு ஜாதகர் அவர்களை தனது சுய நலத்திற்க்காக மிகவும் எளிதாக பயன் படுத்தி கொள்ள ஆரம்பித்து விடுவார் , மேலும் ஜாதகர் என்ன சொல்கிறாரோ அதையே வேத வாக்காக எடுத்து கொண்டு இவர்களும் செயல் பட ஆரம்பித்து விடுவார்கள் , ஆனால் உண்மையில் இந்த நபர்களுக்கு ஜாதகரால் எவ்வித நன்மையையும் செய்ய இலாது  காரணம்.

 ஒருவர் சிறந்த ஆன்மீக வாதியாக இருக்க வேண்டும் எனில் , சுய ஜாதக அமைப்பில் லக்கினம் , மூன்றாம் பாவகம் , ஐந்தாம் பாவகம் , ஏழாம் பாவகம் , ஒன்பதாம் பாவகம் , பத்தாம் பாவகம் ,முக்கியமாக பனிரெண்டாம் பாவகம் அனைத்தும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் அப்படி அமைய பெற்ற ஜாதகரே மிகசிறந்த ஆன்மீக வாதியாகவும் , இறை அருள் பரிபூரணமாக அமைய பெற்று காணப்படுவார்.  அப்படி பட்ட ஜாதக அமைப்பை பெற்றவரே  தனது சொல்லாலும் , செயலாலும்  , எண்ணத்தாலும் , மக்கள் அனைவருக்கும் உண்மை ஆன்மீகத்தை போதிக்க மட்டும் செய்வார்கள் .

ஆனால் இவருடைய ஜாதக அமைப்பில் மேற்ச்சொன்ன பாவகங்கள் அனைத்தும் கடுமையான பாதிப்பை பெற்றிருப்பது , இவருக்கும் ஆன்மீக வாழ்க்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை பறை சாற்றுகிறது , மேலும் 12 ம் வீடு 12 ம் வீட்டுடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரை மிகப்பெரிய உயர்ந்த எண்ணம் கொண்ட மன நிலைக்கு தள்ளிவிடும் , ( இப்படி பட்ட நபர்கள் அனைவரும் நானே கடவுள் , எல்லாம் என்னால் தான் இயங்குகிறது என்று தானும் நம்பி , மற்றவரையும் நம்ப வைத்து விடுவார் ) எந்த ஒரு ஆன்மீக வாதியும் நான் தான் கடவுள் என்னை வணங்கி நன்மை பெறுங்கள் என்று சொன்னதாக சரித்திரமும் இல்லை பூலோகமும் இல்லை , உண்மையில் இறைநிலையை உணர்ந்தவர்கள் யாரும் அதை மற்றவருக்கு காட்டியதாக வரலாறும் இல்லை , எனவே இந்த ஜாதகரின் 12 ம் வீடு 12 ம் வீட்டுடன் சம்பந்தம் பெறுவதால் ஒருவித மன நோயால் பாதிக்க பட்டு ( அதாவது நான்தான் கடவுள் என்னை வணங்கு என்று சொல்லும் அமைப்பு இதை மன நல மருத்துவர்கள் வேறு மாதிரி சொல்வார்கள் ) மற்றவரையும் அதற்க்கு அடிமை படுத்தி மிகப்பெரிய சக்தி தன்னிடம் உள்ளதாக தனது பேச்சாற்றலால் விளம்பரம் செய்து , மற்றவர்களின் வாழ்க்கையில் பல வகையில் புகுந்து விளையாடி விட்டார் , இதற்க்கு அவர்களின் சீடர்களும் தூபம் போட போட , ஜாதகர் பேயாட்டம் ஆடி இவரை நம்பிய மக்களுக்கு தண்ணீர் தெளிக்காமல் தலையில் மிளகாய் அரைத்து விட்டார் .

24 /10 /2006 முதல் வந்த ராகு திசை சனிபுத்தி , தனது பலனை தர ஆரம்பித்தது, நேர்மைக்கு பெயர் போன சனி தனது காட்டமான பலனை தரும் பொழுது ஜாதகரால் அதை தாக்கு பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை. இதில் சுய ஜாதகத்தில் சனி பகவான் வக்கராக கதி வேறு , ஜாதகரை இன்னும் வடை சட்டியில் போட்டு வறுத்து எடுத்து கொண்டு இருக்கிறது என்பதே உண்மை , இதை விட கொடுமை என்னவென்றால் 06 /04 /2013 வரை உள்ள காலகட்டம் வரை மன நிம்மதி இல்லாமல் அலையும் சூழ்நிலை ஏற்ப்படும் , இந்த கால கட்டத்தில் ஒருவேளை ஜாதகர் வெளிநாடு சென்றால் அங்கேயே ஜாதகருக்கு மிகப்பெரிய ஆபத்து வரும் வாய்ப்பு உண்டு .  இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் ஜாதகருக்கு இருந்த ஆதரவும் வெகுவாக குறைய ஆரம்பிக்கும் , இதனால் அதிக மன உளைச்சல் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் உண்டு . இதனால் ஜாதகரின் உடல் நிலை வெகுவாக பாதிக்க படும் , நம்பியவர்கள் எல்லாரும் கைவிடுவார்கள் , அரச கோபத்திற்கு ஆளாகி தண்டனைக்கு ஆடப்படும் சூழ்நிலை வரலாம் .

12 ம் வீடு 12 ம் வீட்டுடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் தகப்பனார் இறந்து கிடக்கும் பொழுது , அதற்காக வருந்தாமல் தனது பாத அடிகளை அவரின் தலை மீது வைத்து நடனம் ஆட விட்டது தான் மிக பெரிய சோகம் இதை பார்த்தாவது மக்கள் திருந்தியிருக்க வேண்டாமா ? இதுவே மன நோயின் உச்சகட்டம் எனலாம் , அதற்க்கு அடுத்த சோகம் தனது தவ வலிமையால் அனைவரையும் ஆகாயத்தில் பறக்க விடுவேன் என்று சொல்லி தானும் மண்டை காய்ந்து , மற்றவர்களையும் மண்டை காய விட்டது , இதில் இருந்தே 12 ம் பாவகத்தின் வலிமையை அனைவரும் உணர முடியும் . மக்களுக்கு தவறான வழியை கட்டும் தன்மைக்கு இந்த பனிரெண்டாம் பாவகமே காரணம் , 12 ம் பாவகம் நல்ல நிலையில் இருக்கும் அனைவரும் நிச்சயம் மற்றவர்களுக்கு சரியான வழியை காட்டுவார்கள், இல்லை எனில் தனது வேலை எதுவோ அதை மட்டுமே பார்ப்பார்கள் .


மேற்கண்ட ஜாதகருக்கு 2 ,5 ,11 , ஆகிய வீடுகள் , சர ராசியாக அமைந்து இதற்க்கு அதிபதி என்ற முறையில் சுக்கிரன் , சனி , சந்திரன் கிரகங்கள் 100 சதவிகிதம் நன்றாக இருந்ததால் , ஜாதகருக்கு அபரிவிதமான யோக வாழ்க்கையை அனுபவிக்க முடிந்தது , நடந்து கொண்டு இருக்கும் ராகு திசை முதல் 9 வருடங்கள் அபரிவிதமான முன்னேற்றத்தை தந்தாலும் , அதன் பிறகு வரும் இரண்டாவது 9 வருடங்கள் நேர்மாறான பலனை தரும் என்பதே உண்மை , இது எதிர்காற்றில் எச்சில் துப்புவதற்கு சமமான பலனை தரும் என்பதே உண்மை .
 
எனவே இனி வரும் காலங்கள் இன்னும் 13 வருடங்கள் ஜாதகரை தப்பி எடுத்து காய வைத்து விடும் என்பது மட்டும் ஜாதக ரீதியாக உள்ள உண்மை .

சனி, 28 ஜூலை, 2012

சுய ஜாதக அமைப்பில் நல வாழ்வினை நிர்ணயம் செய்யும் பாவகங்கள் !



ஒருவர் ஜாதக ரீதியாக வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கும் வீழ்ச்சி அடைவதற்கும் நிச்சயம் அவருடைய ஜாதக அமைப்பே காரணமாக அமைகிறது , மேலும் சில அன்பர்களின் ஜாதக அமைப்பில் யோக நிலைகள் இருந்தாலும் , அந்த ஸ்தான பலன்கள் சரியான வயதில் நடை பெற்றால் மட்டுமே யோக வாழ்க்கையினை தருகிறது , காலம் கடந்து நடக்கும் யோக நிலையை , ஜாதகர் அனுபவிக்க இயலாது , ஜாதகரை சார்ந்தவர்கள் மட்டுமே அனுபவிக்க இயலும் , உதராணமாக சக்கரை வியாதி வந்தவருக்கு பக்கத்தில் ஜிலேபி இருப்பது போல் , அதை பார்க்க மட்டுமே முடியும், சாப்பிட இயலாது . இதையே பெரியோர் " கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் " என்றனர் , எனவே ஒருவருடைய ஜாதக அமைப்பில் யோக நிலைகள் இருந்தாலும் அதை அனுபவிக்க இயாலாததிர்க்கு மூன்று காரணங்கள் மட்டுமே உண்டு , அவற்றை பற்றி சற்றே இந்த பதிவில் சிந்திப்போம் .

 

முதலில் லக்கினம் :

ஒருவருடை ஜாதக அமைப்பில் எவ்வித ராஜ யோகங்கள் இருந்தாலும் ,அதன் முழு பலனையும் ஜாதகர் அனுபவிக்க வேண்டும் எனில் நிச்சயம் லக்கினம் எனும் முதல் பாவகம் மிகவும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் , ஏனெனில் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் , அதாவது ஒருவருடைய லக்கினம் எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தானம் , 2 ம் வீடு , 6 ம் வீடு , 8 ம் வீடு , 12 ம் வீடு ஆகிய பாவகங்களுடன் தொடர்பு பெறுவது , ஜாதகருக்கு நன்மையை நிச்சயம் தருவதில்லை , குறிப்பாக லக்கினம்  பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரை மிகப்பெரிய இன்னலுக்கு ஆளாக்கி விடும் , மேலும்  ஜாதகத்தில் ராஜ யோக அமைப்புகள் சரியான வயதில்  நடைமுறைக்கு வந்தாலும் அதை அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஜாதகருக்கு ஏற்ப்படும் , தன்னை சார்ந்தவர்கள் அனுபவிக்க கூடும் , அல்லது தொழில் கூட்டாளிகள் , வாழ்க்கை துணைக்கு அந்த யோக பலன்களை அனுபவிக்க வைத்து விடும், ஜாதகருக்கு எந்தபாவாக வழி சிறப்பாக அமைகிறதோ அந்த உறவு வகையை சார்ந்தவர்கள் நன்மை பெறுவார்கள் , ஜாதகர் தனக்கு வரும் யோக பலன்களை எனக்கு தேவையில்லை என்று உதறும் சூழ்நிலைக்கு சென்று விடுவார் .

மேலும் ஜாதகத்தில் லக்கினம் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே தனக்கு வரும் வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவார் , எவ்வித தீய பழக்க வழக்கங்களும் இல்லாமல் , தெளிவான சிந்தனையுடன் எப்பொழுதும் இருப்பார் , வருமுன் அறியும் அறிவாற்றல் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்திருக்கும் , நல்ல நடத்தை கொண்டவராக இருப்பார் , ஜாதகத்தில் உள்ள யோகம் முழுவதையும் அனுபவிக்கும் புத்தி சாலித்தனம் உள்ளவராக எப்பொழுதும் விழிப்புணர்வுடன் எப்பொழுதும் காணப்படுவார், ஆக யோக பலனை அனுபவிக்க லக்கினம் எனும் சுவர் நல்ல நிலையில் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் சிறப்பான சித்தரங்களை வரைய முடியும் .

 

இரண்டாவது நான்காம் பாவகம் :

தாய் , சுகம் , வீடு , வண்டி வாகனம், சொத்து ஆகியவற்றை குறிக்கும் நான்காம் பாவகம் ஒருவருடைய ஜாதகத்தில் மிகவும் நல்ல நிலையில் இருப்பது அவசியமாகிறது , ஜாதகத்தில் உள்ள யோக அமைப்புகளால் வரும் அனைத்து பொருள், தனம் , சொத்து , ஆகியவற்றை காப்பாற்றி வைக்க ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பில் இந்த நான்காம் பாவகம் வலுத்து நிற்பது அவசியமாகிறது , தனது பெயரில் சொத்து சுகங்களை வைத்திருக்க யோகம் உண்டா? இல்லையா ? என தெரிவிப்பது இந்த நான்காம் பாவகமே , இந்த பாவகம் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகரின் பெயரில் உள்ள சொத்து ,வண்டி ,வாகனம் ,வீடு ,பணம் , சுகம் ஆகியவைகள் நிலைத்து நிற்கும் இல்லை எனில் ஜாதகருக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையை தரும் என்பதில் ஆச்சரியம் இல்லை .

மேலும் ஒருவருக்கு சுய ஜாதக அமைப்பின் படி குடியிருக்கும்  வீடு நல்ல சிறப்பான முன்னேற்றத்தை தர வேண்டும் எனில் சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் 100  சதவிகிதம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் , அப்படி அமைய பெற்ற ஜாதக அமைப்பை கொண்டவர்களுக்கு , நிச்சயம் வெற்றிமேல் வெற்றியே கிட்டும் , குறிப்பாக நான்காம் பாவகம் தொடர்பு பெரும் வீட்டின் திசை அமைப்பில் ஜாதகர் குடியிருந்தால் நிச்சயம் ஜாதகத்தில் உள்ள யோக அமைப்புகள் முழுமையாக கிடைக்க பெரும் , அதன் முலம் ஜாதகருக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டு , குறிப்பாக ஜாதக அமைப்பில் யோக நிலை இல்லாதவர்கள் கூட தனக்கு உகந்த திசை அமைப்பை சார்ந்த வாயிர்ப்படி உள்ள வீடுகளில் குடியிருந்தால் , நிச்சயம் மிக சிறப்பான முன்னேற்றகரமான வாழ்க்கையை பெறுவார் என்பதில் சந்தேகமே இல்லை , இது கண்கூடாக கண்ட உண்மை .

 

மூன்றாவது பூர்வ புண்ணியம் :

ஒருவர் ஜாதக ரீதியாக யோக பலன்களை அனுபவிக்கிறார? இல்லையா ? என்பதை இந்த பாவக அமைப்பை வைத்து தெளிவாக சொல்லிவிட முடியும் , மேலும் ராஜ யோக பலன்களை நடைமுறைக்கு கொண்டுவந்து அதை அனுபவிக்க வைக்கும் ஆற்றல் இந்த பாவகத்திர்க்கே நிச்சயம் உண்டு ,
1 ) அதாவது ஒருவருடைய ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் சம்பந்த பட்ட ஜாதகர் தனது பூர்விகம் எதுவோ அந்த இடத்தில் இருந்து 100 km தொலைவிற்கு அப்பால் சென்று விட்டால் ஜாதகத்தில் உள்ள ராஜ யோகங்கள் எதுவும்  நடைமுறைக்கு பலன் நிச்சயம் தராது.
2 )  ஒருவருடைய ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பாதிப்படைந்த  நிலையில் இருந்தால் சம்பந்த பட்ட ஜாதகர் தனது பூர்விகம் எதுவோ அந்த இடத்தில் இருந்து 100 km க்கு உட்ப்பட்ட பகுதியில் குடியிருந்தால்  ஜாதகருக்கு ஜாதகத்தில் உள்ள ராஜ யோகங்கள் எதுவும்  நடைமுறைக்கு பலன் நிச்சயம் தராது.
எனவே ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும்பாவகம் ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் பெற  மிகப்பெரிய பங்களிப்பை செய்கிறது என்பதே உண்மை .

இந்த பூர்வ புண்ணியம் சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து , சுய ஜாதக அமைப்பில் யோக நிலைகள் இருப்பின், ஜாதகர் தனது பூர்விகத்தில் அமர்ந்து கொண்டே அனைத்து நன்மைகளையும் நிச்சயம் பெறுவார் , சில அரசியல் தலைவர்கள் வீட்டில் படுத்து கொண்டே ஜெயிப்பதற்கு காரணம் இந்த பாவகமே , மேலும் தனக்கு வரும் சொத்து சுகங்களை தனது வாரிசுகளுக்கும் பல தலை முறைகளுக்கு சேர்த்து வைத்துவிட்டு செல்லும் யோக அமைப்பை பெற்றவர்கள், மேலும் தான தர்மம் செய்யும் குணமும் , மற்றவருக்கு உதவும் மனப்பான்மையும் இயற்கையாக அமைய பெற்றவர்கள் , எந்த ஒரு சிக்கல்களையும் தனது அறிவாற்றலால் தீர்த்து வைக்கும் சிறப்பு தகுதியை பெற்றவர்கள் .

எனவே ஒருவர் ஜாதகரீதியாக யோக அமைப்பை  பெற்றிருந்தாலும் ,யோக அமைப்பை பெற்று இருக்கா விடினும்   வாழ்க்கையில் சிறப்பாக அமைத்து கொள்ள இந்த மூன்று பாவகங்கள் நமக்கு நிச்சயம் உதவி புரிகிறது , சுய ஜாதக ரீதியாக யோக நிலை அற்றவர்களும் , பூர்வ புண்ணிய நிலைக்கு ஏற்ப , தனக்கு உகந்த திக்கு வாயிர்ப்படி கொண்ட வீடுகளில் குடியிருந்தும் , இலக்கின அமைப்பில் நன்மையை தேடியும் வாழ்க்கையில் நலம் பெறலாம் .

 

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696


வியாழன், 26 ஜூலை, 2012

சூரிய பகவான் வழங்கும் சுபயோக பலன்கள் !



கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சிம்மம் ஐந்தாம் வீடாகவும் , ஸ்திர நெருப்பு ராசியாகவும் அமைகிறது , இந்த ராசிக்கு அதிபதியாக சூரியன் பொறுப்பேற்கிறார் , மேலும் ஒருவருடைய ஜாதக அமைப்பில் சூரியன் மற்றும் , சிம்ம ராசி ஆகியன நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் அனுபவிக்கும் நன்மைகள் என்னவென்பதை இந்த பதிவில் நாம் காணலாம் , நவகிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருத படும் கிரகம் சூரிய பகவானே , கரணம் அனைத்து கிரகங்களையும் ஆளுமை செய்யும் தன்மை இந்த சூரியனுக்கே உண்டு மேலும் , மற்ற கிரகங்களை வக்கரகம் செய்யும் சக்தியும் அஸ்தமனம் பெற செய்யும் சக்தியும் சூரிய பகவானுக்கு உள்ள சிறப்பு அம்சங்கள் அப்படிபட்ட சூரிய பகவான் , ஒருவருடைய ஜாதக அமைப்பில் எந்த நிலையிலும் பாதிப்பு அடையாமல் இருப்பது, ஜாதகருக்கு அதிக நன்மையான பலன்களை வாரிவழங்க எதுவாக அமையும் .

 

மேலும் கால புருஷ தத்துவத்திற்கு ஐந்தாம் இடத்திற்கு அதிபதியாக வரும் காரணத்தால் , ஒருவருக்கு குல தெய்வம் எதுவென்று தெரியாத சூழ்நிலை ஏற்ப்படும் பொழுது அவருக்கு உண்டான குல தேவதை எதுவென்று உணர்த்தும் தன்மை இந்த சூரிய பகவானுக்கு உண்டு , அதாவது தொடர்ந்து ஒரு ஜாதகார் அதிகாலையில் முறைப்படி சூரிய நமஸ்காரம் செய்துவருவாரே ஆயின் , சூரிய பகவானின் அருளால் அவருடைய குல தேவதை ஒரு மண்டல காலத்தில் நிச்சயம் தெரிய  வரும் , மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் ராஜாங்கத்தில் பரிபாலனம் செய்ய வேண்டுமெனில்  சூரிய பகவானின் அருளாசியில்லாமல் நிச்சயம் நடக்க வாய்ப்பு என்பது சிறிதும் இல்லை , குறிப்பாக மக்கள் ஆதரவு பெறவேண்டும் எனில் சுய ஜாதகத்தில் சிம்ம வீடும் , சூரிய பகவானும் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் , அரசியலில் உயர்பதவிகளை வகிக்க நிச்சயம் சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக இருந்தால் மட்டுமே  தொடர்ந்து பல வெற்றிகளை பெற்று மிகசிறந்த அரசியல் வாதியாக திகழ முடியும் .

 

சிம்ம ராசி கால புருஷ தத்துவத்திற்கு பூர்வ புண்ணிய அமைப்பை பெறுகிறது , மிகசிறந்த ஆன்மீக வாதிகளின் சுய ஜாதக அமைப்பில் இந்த சிம்ம வீடு 100 சதவிகிதம் நல்ல நிலையில் , இருப்பதை பார்க்கலாம், மிகசிறந்த அரசியல்வாதி , தனி திறன் பொருந்திய மருத்துவர்கள் , மக்களை காக்கும் பொறுப்பில் உள்ள நேர்மை மாறாத காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் , சட்ட நிபுணர்கள் , கல்வியாளர்கள், பொது நல மக்கள் சேவகர்கள் , நாட்டின் மிகப்பெரிய பதவிகளில் சிறப்பாக செயல்படும் ஆட்சியாளர்கள் என இவர்களின் பட்டியல் மிகவும் அதிகமே , பிறப்பில் அதிக வசதி வாய்ப்பு அற்ற நிலையில் இருந்தாலும் ஜாதகரின் வயது கூட கூட அதிக யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை பெற்றவர்களின் ஜாதகங்களில் எல்லாம்  சிம்ம வீடும் , சூரிய பகவானும் மிக சிறப்பான நிலைகளில் நிச்சயம் அமைந்து இருக்கும் .

 

சில குழந்தைகள் கல்விகாலங்களில் படிப்பு மற்றும் சிறப்பு திறன் போன்றவற்றில் சிறந்து விளங்குவதற்கு சூரிய பகவானும் , சிம்ம வீடுமே காரணமாக அமைகிறது , அதிலும் மிகமுக்கியமாக மருத்துவ துறைசார்ந்த படிப்புகளில் சிறந்து விளங்க மேற்கண்ட அமைப்பு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே முடியும் , இல்லையெனில் யாரும் மருத்துவ துறைக்குள்  அடியெடுத்து வைக்க கூட இயலாது , ஒரு குழந்தை சிறு வயது முதல் சிறப்பான திறமை , கல்வி , புதுமையான சிந்தனை , படைப்பாற்றல் ஆகியவை அமைய வேண்டும் எனில் தினமும் அதிகாலையில் எழுந்து சூரியன் வருமுன் சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நிச்சயம் வாழ்க்கையில் சகல நலன்களும் கிடைக்க பெறுவார் இது கண்கூடாக கண்ட உண்மை , கல்வி கேள்விகளிலும் , கலைகளிலும் சிறந்து விளங்க சூரியனின் அருள் இருந்தால் மட்டுமே சிறப்பான எதிர்காலத்தை தரும் .

 

எனவே தனது குழந்தை சிறப்பான திறமைகளுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அனைத்து பெற்றோர்களும் , குழந்தைகளுக்கு சிறு வயது முதல் சூரிய வழிபாட்டினை கற்றுகொடுக்க வேண்டியது அவசியமாகிறது , இதை பின்பற்றும் குழந்தைகள் அனைத்தும் எந்த சூழ்நிலையையும் சமாளித்து , தனது லட்ச்சியம் மற்றும் குறிக்கோள்களை நிச்சயம் அடைவார்கள் , இதில் ஒரு சிறப்பான ஒரு விஷயம் என்னவென்றால் அடிப்படையில் இருந்து சூரிய வழிபாடு செய்து வரும் அனைவரும் , நல்ல குணங்களும் , சிறந்த ஒழுக்கமான நடவடிக்கையும் , அனைவரிடமும் அன்பு செலுத்தும் குணமும் , பெருந்தன்மையான குண அமைப்பையும் பெறுகின்றனர் .

 

சூரியன் உலகத்திர்க்கெல்லாம் ஒளி தரும் தன்மை போல் சுய ஜாதகத்தில் சூரியன் மற்றும் சிம்ம வீடு நன்றாக அமைய பெற்றவர்கள் , 100 சதவிகித வெற்றிகரமான வாழ்க்கையை பெற்று மற்றவருக்கு உபயோகமான வாழ்க்கையை வாழ்ந்து விட்டு செல்லும் யோகம் பெற்றவர்களாகவே இருப்பது ஒரு சிறப்பான விஷயம் . நவகிரகங்களில் சூரியனுக்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு மற்ற கிரகங்களால் ஏற்ப்படும் துன்பங்களில் இருந்து ஒரு ஜாதகர் விடுபட சூரிய நமஸ்காரம் தினமும் செய்து வந்தால்  நிச்சயம் நன்மை கிடைக்கும் , இந்த நன்மையை வழங்கும் அதிகாரம் சூரியனுக்கு மட்டுமே உண்டு . மேலும் பல சிவ ஸ்தலங்களுக்கு சென்று வழிபடும் யோகம், ஒருவருக்கு சுய ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே கிடைக்கிறது , மேலும் பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக செய்பவர்கள் அனைவருக்கு சுய ஜாதகத்தில் சூரியன் மற்றும் சிம்ம வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே கிடக்கிறது , பஞ்சபூதங்கள் பற்றிய ஆய்விற்கு சூரியன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே விளக்கம் பெற முடியும் .

 

எனவே ஒவ்வொருவருடை வாழ்க்கையிலும் சூரிய பகவான் மிகப்பெரிய மாற்றங்களை தர வேண்டும் எனில் , சூரிய வழிபாடு அல்லது பிரதோஷ வழிபாடு செய்வது மிகசிறந்த நன்மைகளை தரும் , முடியாதவர்கள் வருடத்தில் இரண்டு முறை வரும் சனி பிரதோஷ வழிபாட்டினையாவது மேற்கொள்ளுவது மிக பெரிய நன்மைகளை வாரி வழங்கும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 23 ஜூலை, 2012

திருமண தாமதம் ஏன் ?


குடும்பம் ஸ்தானம் எனும் 2 ம் பாவகம் : 

ஒருவருடைய ஜாதக அமைப்பில் குடும்பம் ஸ்தானம் எனும் 2 ம் பாவகமும், களத்திர பாவகம் எனும் 7 ம் பாவகமும் ஜாதகருக்கு அமையும் இல்லற துணையை நிர்ணயம் செய்கிறது, சுய ஜாதக அமைப்பில் ஒருவருக்கு குடும்பம் ஸ்தானம் எனும் 2 ம் பாவகம் ஜாதகருக்கு நல்ல நிலையில் அமர்ந்தால், ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கை மிகவும் சிறப்பாக சரியான வயதில் ( பருவத்தில் ) பெரியோர்கள் முன்னின்று அவர்களின் ஆசியுடன் நடத்தி வைப்பார்கள். மேலும் ஜாதகருக்கு அமையும் குடும்ப துணை சிறப்பான நல்ல குணங்களை பெற்றவராகவும், ஜாதகரின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவும், ஜாதகரின் வெற்றிக்கு காரணமாகவும் இருப்பார், திருமணத்திற்கு பிறகு ஜாதகர் வாழ்க்கையில் தொழில், வருமானம்,மன மகிழ்ச்சி என சந்தோஷமான அமைப்பை பெறுவார்.

 

ஒரு வகையில் குடும்பம் ஸ்தானம் எனும் 2 ம் பாவகம், வாக்கு என்ற அமைப்பை பெறுவதால் ஜாதகரின் வாக்கிற்கு மக்களிடம் நல்ல மதிப்பு மரியாதை கிடைப்பதற்கும் காரணமாக அமைகிறது, மேலும் வாழ்க்கை துணையின் வார்த்தைகள் ஜாதகருக்கு ஆருதலாகவும், ஆதரவாகவும், மன தெளிவை தரும் விதத்திலும் இருக்கும் , இதனால் ஜாதகர் எப்பொழுதும் மன மகிழ்ச்சியாக இருப்பார் இதன் காரணமாக ஜாதகர் செய்யும் வேலைகள் யாவும் வெற்றி பெரும் நிறைந்த வருவாய் கிடைக்கும் , பொருளாதாரத்தில் நிச்சயம் தன்னிறைவான வாழ்க்கை அமைய பெறுவார், பொருளாதாரத்தில் சிக்கல் என்பது வாழ்நாள் முழுவதும் நிச்சயம் வர வாய்ப்பே இல்லை, எனவே ஜாதகருக்கு சகல செல்வ வளங்களும்  நிறைந்து நிற்கும்.

 

ஒருவருடைய ஜாதக அமைப்பில் குடும்பம் ஸ்தானம் எனும் 2 ம் பாவகமும், ரிஷப ராசியும் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்தால் மேற்கண்ட பலன்கள் ஜாதகருக்கு நிச்சயம் சரியான வயதில் நடக்கும் , குடும்பம் ஸ்தானம் எனும் 2 ம் பாவகமும், ரிஷப ராசியும் ஒருவருடைய ஜாதக அமைப்பில் பாதிப்பான நிலையில் உள்ள ஜாதகருக்கே திருமண தாமதம் , காதல் திருமணம் , கலப்பு திருமணம் , வாழ்க்கை துணை இருக்க மறுமணம் செய்துகொள்ளும் நிலை, குடும்ப வாழ்க்கையில் சிரமங்கள் , வருமான இழப்பு , வாழ்க்கை துணையினால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் நிலை, சண்டை சச்சரவு , குடும்ப வாழ்க்கையில் மற்றவர் தலையீடு , அவர்களால் மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலை, மன நிம்மதி இழப்பு , சேமித்து வைத்திருக்கும் அனைத்தையும் இழக்கும் சூழ்நிலை என ஜாதகரை படாத பாடு படுத்தி எடுத்து விடும், எனவே இந்த அமைப்பை சார்ந்தவருக்கே நிச்சயம் திருமணம் தாமதமாக நடக்கிறது மேலும் இவர்களாகவே தனது வாழ்க்கையும் கெடுத்து கொள்கின்றனர் , இதைப்பற்றி விரிவாக சொல்ல எங்களுக்கு மனம் இல்லை .

 களத்திரம் ஸ்தானம் எனும் 7 ம் பாவகம்: 

சுய ஜாதக அமைப்பில் ஒருவருக்கு களத்திரம் ஸ்தானம் எனும் 7 ம் பாவகம் ஜாதகருக்கு நல்ல நிலையில் அமர்ந்தால், ஜாதகருக்கு பொருத்தமான வாழ்க்கை துணை தனது உறவினர் முறையில் இருந்தோ அல்லது நண்பர்கள் வழியில் இருந்தோ நிச்சயம் கிடைக்கும் , அப்படி கிடைக்கும் வாழ்க்கை துணை ஜாதகருக்கு 100 சதவிகிதம் பொருத்தமாக இருப்பார், ஜாதகரின் வாழ்க்கையில் தொழில் அமைப்புகளில் சிறந்து விளங்க உறுதுணையாகவும் , அறிவு அல்லது செல்வ வழியில் உதவி செய்யும் ஆற்றல் கொண்டவராகவும் நிச்சயம் இருப்பார் , திருமணத்திற்கு பிறகு ஜாதகரின் வாழ்க்கை நல்லதொரு திருப்பு முனையாக அமையும், அதாவது நல்ல நண்பர்கள், பெரிய மனிதர்கள்  சேர்க்கை , தனது வாழ்க்கை துணையின் வழியில் இருந்த உறவினர்களின் ஆதரவு , அவர்களால் நல வாழ்க்கை மற்றும் முன்னேற்றம். கூட்டு தொழில் மூலம் அபரிவிதமான தொழில் வளர்ச்சி பொருளாதாரத்தில் தன்னிறைவு என ஜாதகர் மிக சிறப்பான பலன்களையே அனுபவிப்பார் .

 

மேலும் பொது மக்கள் செல்வாக்கு மிக சிறப்பாக அமைய வேண்டுமெனில் இந்த களத்திர பாவகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் , திருமணத்திற்கு பிறகு இந்த அமைப்பு மிகவும் சிறப்பாக செயல் படும், மக்கள் ஆதரவு அதிகம் உள்ள தொழில்களில் ஜாதகருக்கு நிச்சயம் நல்ல வரவேற்ப்பும் முன்னேற்றமும் ஏற்ப்படும், அதன் மூலம் ஜாதகர் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றிகளை பெரும் யோகம் ஏற்ப்படும் .

 

ஒருவருடைய ஜாதக அமைப்பில் களத்திரம் ஸ்தானம் எனும் 7 ம் பாவகமும், துலாம் ராசியும் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்தால் மேற்கண்ட பலன்கள் ஜாதகருக்கு நிச்சயம் சரியான வயதில் நடக்கும் , இதற்க்கு மாறாக பாதிக்க படுமாயின் , ஜாதகர் இளம் வயதிலேயே அவ யோகம் பெற்ற பெண்களுடன் சேர்க்கை பெரும் சூழ்நிலைக்கு தள்ள படுவார், இதனால் ஜாதகருக்கு நடக்க வேண்டிய திருமணம் தாமதப்படும், மேலும் திருமணத்தில் ஜாதகருக்கு அதிக ஆர்வம் இருக்காது , மேலும் திருமாணம் ஆகாமலே குடும்பம் நடத்தும் சூழ்நிலை  ஏற்படவும் வாய்ப்பு உண்டு, தனது இணையின் வாயிலாக அதிக பொருள் இழப்புக்கு ஆளாக வேண்டி வரும் , இருந்தும் மன நிம்மதியின்றி, ஆதரவு இன்றி  வாழ்க்கையின் இறுதி காலங்களை கழிக்க வேண்டி வரும், இதனால் பாதிக்க படுவது என்னவோ அவர்களின் பெற்றோர்கள் மட்டுமே.

 

எனவே இந்த அமைப்பை சார்ந்தவருக்கே நிச்சயம் திருமணம் தாமதமாக நடக்கிறது அல்லது திருமணமே நடக்காமல் போய் விடுகிறது , இந்த அமைப்பை பெற்றவர்களுக்கு உடலில் தெம்பும், கையில் பணமும் இருக்கும் வரை பிரச்சனை வருவதில்லை , அந்திம காலங்களில் முடியாத சூழ்நிலையில் மற்றவர் ஆதரவில் வாழ்நாளை கடத்தும் பொழுதுதான் உணருவார்கள் " தனக்கும் திருமணம் நடந்து ஒரு வாரிசு " அமைந்திருந்தால் நிம்மதியான வாழ்வு, அவர்களின் ஆதரவு  கிடைத்திருக்கும் என்று.

 எனவே சுய ஜாதகத்தில் களத்திர பாவகம் பாதிக்க பட்ட நபர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் வாழ்க்கை நடத்த வேண்டும் இல்லை என்றால் வாழ்க்கையின் இறுதி முடிவு மிகவும் பரிதாப கரமானதாக அமைந்துவிடும் .குடும்பம் ஸ்தானம் எனும் 2 ம் பாவகமும் , களத்திரம் ஸ்தானம் எனும் 7 ம் பாவகமும் நன்றாக அமைய பெற்றவர்கள் கொடுத்து வைத்த அன்பர்கள் , இறையருள் இவர்களின் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்குகிறார் .

 

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

குரு பகவான் வழங்கும் குபேர சம்பத்து ! குரு பார்க்க கோடி நன்மை !




குருபகவன் கால புருஷ தத்துவத்திற்கு பாக்கியம் எனும்  ஒன்பதாம் வீட்டிற்கும் மோட்சம் எனும் பனிரெண்டாம் வீட்டிற்கும் அதிபதியாகிறார் , இதில் கால புருஷ தத்துவத்திற்கு பாக்கியம் எனும் ஒன்பதாம் வீடு உபய நெருப்பு தனுசு ராசியாக வருகிறது , மோட்சம் எனும் பனிரெண்டாம் வீடு உபய நீர் மீன ராசியாக வருகிறது , இது  ஜாதக அமைப்பில் எவ்வாறு செயல் படுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் இன்று சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் .

குரு
என்ற சொல்லுக்கு  ஒருவரின் அஞ்ஞானம் எனும்  இருள் விலக, அறிவு எனும் தீபம் ஏற்றுபவர் என்று பொருள் . இந்த தனுசு ராசியை நாம் நன்றாக கவனித்தோம் என்றால் இது தெளிவாக நமக்கு புலப்படும் , ஒருவருக்கு வாழ்க்கையில் நல்ல குரு அமைய வேண்டும் எனில் நிச்சயம் அவர் முற்பிறவிகளில் "பாக்கியம்"  செய்து இருக்க வேண்டும் , அப்படி செய்தவர்களுக்கே இந்த பிறவியில் நல்ல குரு கிடைக்க பெறுவார் , அப்படி அமைய பெற்ற ஒரு குரு சுயநலம் அற்றவராகவும் உபய தத்துவத்திற்கு ஏற்றார் போல் உள்ளவராகவும் இருப்பது, இந்த தனசு ராசிக்கு உள்ள தனி சிறப்பு .

ராசி
அமைப்பில் சர நெருப்பு , ஸ்திர நெருப்பு , உபய நெருப்பு என  மூன்று வகையாக இறை நிலை பகிர்ந்து தந்து இருக்கிறது , இதில் சர நெருப்பு ஒரு காட்டு தீ போல் எல்லையில்லாமல் கட்டுப்பாடு இல்லாத தன்மையை குறிக்கும், இங்கே ஒருவரின் செயல் பாடுகளை நிர்ணயம் செய்யும் அமைப்பை மேஷ சர நெருப்பு பெறுகிறது , ஸ்திர நெருப்பு என்பது ஒரே நிலையில் எரிந்து கொண்டு இருக்கும் தன்மையை தரும் இங்கே ஒருவரின் உடலின் வெப்பத்தையும் , பூமியின் சீதோஷ்ண நிலையையும் ஸ்திர சிம்ம நெருப்பு நிர்ணயம் செய்கிறது . மற்றவருக்கு உபயோக படும் விதத்தில் உள்ள உபய நெருப்பு , விளக்கு தீபம் , எரிபொருள் சார்ந்த உபயோகம் என்ற அமைப்பில் என்றாலும் இங்கு ஒருவரின் அஞ்ஞானம்  எனும்  இருள் விலக, அறிவு எனும் தீபம் ஏற்றும் தன்மையையே குறிக்கும் .

தனுசு
ராசிக்கு அதிபதியான குருவின் தன்மை மேற்கண்ட அமைப்பிலேயே செயல் படுகிறது அதாவது ஒருவரின் அஞ்ஞானம் எனும்  இருள் விலக, அறிவு எனும் தீபம் ஏற்றும் அதி முக்கியமான பொறுப்பை இந்த குருபகவான் ஆளுமை செய்கிறார் , ஒரு ஜாதகருக்கு லக்கினம் எதுவென்றாலும் இந்த தனுசு ராசி அமைப்பு நன்றாக அமைய பெற்றவர்களுக்கு நிச்சயம் நல்ல குரு அமைவார், அவரின் வழிகாட்டுதலில் ஜாதகர் குருவை மிஞ்சிய சீடனாக சிறந்து விளங்கும் யோகம் பெற்றவர்கள் .

  
அறிவாற்றல் கொண்டு அனைத்தையும் சாதிக்கும் திறன் வாய்ந்தவர்கள் , பேராசிரியர் மற்றும் ஆசிரிய பணியில் சிறப்பாக செயல் படும்  தன்மை பெற்றவர்கள் , பல தலை முறைகளுக்கு பலன் தரும் அறிய படைப்புகளை உலகத்திற்கு எவ்வித பிரதி பலனும் பாராமல் தரும் உன்னதமான குணம் பெற்றவர்கள், உலக மக்களுக்கு ஏற்ப்படும் சந்தேகங்களுக்கு உண்மை விளக்கத்தை தரும் பேரறிவாளர்கள் , பொதுவாக தனுசுவில் அமரும் குருவும் , மேஷம் மற்றும்  சிம்ம ராசியில் அமரும் குரு 100 சதவிகித நன்மையை தனது பார்வையின் மூலம் வாரி வழங்குவார் , ஆனால் மிதுனத்தில் அமரும் குருவின் பார்வை பெரும் தனுசுவிற்கு 100 சதவிகிதம் பாதிப்பான பலனையே தரும் .
   

மீன ராசிக்கு அதிபதியான குருவின் ஆற்றல் ஆச்சரியமான ஒரு விஷயம், காரணம் அயன சயன மோட்ச அமைப்பிற்கு அதிபதியாவதால் , ஒருவரின் முற்பிறவியின் பதிவுகளை மனதில் பசுமை மாறாமல் பாதுகாத்து , " வினை பதிவின் " நிலையை அறிவுக்கு உணர்த்தும் அமைப்பாகும் , உபய நீர், மீன ராசிக்கு அதிபதியாகும்  குருபகவான் தனுசு மட்டும் அல்ல  மீனத்திலும்  மக்களின் வாழ்க்கையில் உபயோகம் பெரும் நிலையையே பெறுகிறார், இறை நிலையின் தன்மையை உணர நமக்கு ஒரு நல்ல குரு தேவை , அந்த தேவையை மீன குரு நமக்கு தகுந்த நேரத்தில் அறிமுகப்படுத்துகிறார் , அந்த குருவின் மூலம் நான் யார் என்ற கேள்விக்கு, தெளிவான பதில் நமக்கு நிச்சயம் கிடைக்கின்றது , இதனால் இறை நிலை உணர்தலும் அதன் விளைவாக "கருமைய  துய்மை" பெரும் யோகம் நமக்கு கிடைக்கின்றது .

நல்ல
நிம்மதியான உறக்கம்  ஒருவருக்கு நல்ல ஆரோக்கியமான உடல் நிலையும், சிறப்பான மன நிலையும் தரும் , இந்த அமைப்பை பெற்ற  ஜாதகரின் எண்ணங்கள் யாவும் நிச்சயம் செயல் வடிவம்  பெரும் , அப்படி செயல் வடிவம் பெரும் எண்ணங்கள் அனைத்தும் ஜாதகருக்கும் , ஜாதகரை சார்ந்தவருக்கும் மற்றும் சமுதாயத்திற்கும் மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும் , ஜாதகரின் மன ஆற்றல் அவரின் தன்னம்பிக்கை , எதிர்பார்ப்பு , லட்சியம்  ஆகியவற்றை நிறைவேற இந்த அமைப்பு நல்ல நிலையில் இருப்பது  அவசியம் , மேலும் திடீர் என நிகழும் யோக நிகழ்வுக்கும் இந்த அமைப்பே காரணம் , கலைகளில் ஜாதகருக்கு அபரிவிதமான அறிவாற்றல் நிச்சயம் உண்டு , ஒருவரின் எதிர்மறை எண்ணங்களையும் மாற்றும் சக்தி படைத்தவர்கள் , ஒருவரின் மனதை முழுவதுமாக ஆளும் தன்மை பெற்ற ராசி இதுவாகும் .

மீன
ராசி உபய நீர் தத்துவ அமைப்பிற்கு பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து நல்ல நீர் நிலைகளையும் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம், அவரவர் சக்திக்கு ஏற்றார் போல் தமக்கு தேவையான அளவு அவரவரே எடுத்துகொள்ளலாம் , மீன ராசிக்கு கடகத்தில் அமர்ந்த குருவின் பார்வையும், விருச்சகத்தில் அமர்ந்த குருவின் பார்வையும் 100 சதவிகித நன்மைகளை வாரி வழங்கும் . ஆனால் கன்னியில் அமர்ந்த குரு மீனத்தை 100 சதவிகிதம் கெடுத்து விடும். இந்த பாவக வழியில் இருந்து ஜாதகர் எவ்வித நன்மையையும் அனுபவிக்க இயலாது , மக்களுக்காக செய்யும் காரியங்கள் ( பொது சேவை ) அனைத்தும் வெற்றி பெரும்.

 தனக்கென்று வரும் பொழுது ஜாதகர் அதிக தோல்விகளை சந்திக்க வேண்டிவருகிறது .எளிமையாக சொல்ல வேண்டும் எனில் " ஏணி படிகள் " போல் மற்றவரை உயரத்திற்கு ஏற்றிவிட்டு தான் அங்கேயே இருக்கும் சூழ்நிலை வரும் இருப்பினும் மன நிம்மதியுடன் இருப்பார்கள்.
ஒருவருடை சுய ஜாதகத்தில் மீன ராசியும் , சுய லக்கினத்திற்கு 12 ம் பாவகமும் பாதிக்கபட்டால் ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது இவர்களின் வாழ்க்கை ஒரு கேள்வி குறியாக மாறிவிட வாய்ப்பு அதிகம் உண்டு, இவர்கள் சரியான ஜோதிட ஆலோசனை பெற்று வாழ்க்கையில் நலம் பெற இறை நிலை அருள் புரியட்டும் .


வாழ்க வளமுடன்  
ஜோதிடன் வர்ஷன்  
9443355696