சனி, 12 ஜனவரி, 2013

சந்திரன் அமர்ந்த ராசியும் ஜாதகரின் மன இயல்பும் - பகுதி 2



ஒருவரின் மன ஆற்றலை நிர்ணயம் செய்யும் சந்திரன் , மேஷம் முதற்கொண்டு மீனம் வரை அமரும் பொழுது , ஜாதகரின் மன நிலையையும், என்ன ஆற்றல்களையும் , எவ்விதம் செயல்படுத்துகிறார் என்பதை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் .

சிம்மம் :

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகரின் மனம் மிகவும் பரிசுத்தமான கள்ளம் கபடம் அற்று ஒரு குழந்தையின் மன நிலையை ஒத்து இருக்கும், சந்திரன் சூரியன் சேர்க்கை நிலையில் இருந்து தரும் யோக பலன்களை நடைமுறை படுத்தும், முற்ப்போக்கு சிந்தனையும் ஆராய்ச்சி மனநிலையும் தரும், நான் யார் என்ற உண்மையின் விளக்கத்தை பெற மனம் எப்பொழுதும் ஒரு தேடுதல் உடனே இருக்கும், தன்னம்பிக்கை, சுய கட்டுபாடு, ஸ்திரமான மனநிலை , முடிவு செய்த பின் மாறாத தன்மை, தர்மம் நியாயம் போன்ற உண்மை விஷயங்களுக்கு கட்டுப்படும் தன்மை, சூரியனை போன்று அக இருளை அகற்றி, மற்றவருக்கும் தெளிவை தரும் யோக வாழ்க்கையில் வெற்றியை தரும் . 

 தனக்கு எவ்வித துன்பம் வந்த போதிலும் தன்னை நம்பியவர்களை காப்பாற்றும் தயாள குணத்தை தரும் தனக்கு சாதகமானதை செய்யாமல் மற்றவருக்கும்  சரியென்பதை செய்யும் உயர்ந்த குணத்தை தரும் , இதன் காரணமாகவே பல நேரங்களில் பல எதிர்ப்புகளை ஜாதகர் சந்திக்க வேண்டி வரும் , இருப்பினும் எதற்க்கும் அஞ்சாத நேர்மையில் இருந்து மாறாத குணத்தை தரும் , இவர்கள் அனைவரும் சிறு வயது முதற்கொண்டே ஏதாவது நிறைவேறாத ஆசைகளுடனே வாழ்க்கையை எதிர்கொள்ளும் அமைப்பை தருகிறது , நிறைய திறமைகள் இருந்தும் வெளி உலகிற்கு தெரியாமல் தன்னடக்கத்துடன்  வாழும் தன்மை பெற்றவர்கள் , இங்கு அமரும் சந்திரன் சுய ஜாதக ரீதியாக சிறப்பாக இருந்தால் ஜாதகரின் வாழ்க்கையில் சாதிக்க இயலாதது ஒன்றும்  இல்லை எனலாம் .

கன்னி :

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் தன்னை எதிர்பவர்க்கும் நன்மை செய்யும் மன பக்குவத்தை தரும் , எதற்க்ககவும்  எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது சுய உரிமையையும் , சுய மரியாதையையும் விட்டுகொடுக்க ஜாதகருக்கு  மனம் வராது , எதிர்ப்புகளை  ஜாதகர் தனக்கு சாதகமாக மாற்றி கொள்ளும் தனி திறமை இயற்கையாக  அமைந்திருக்கும் , பூமிக்கு அடியில் உள்ள நீர் மற்றும்  புதையல்கள் விஷயங்களை தனது மன ஆற்றல் கொண்டு சரியாக  கண்டுபிடிக்கு தன்மை ஜாதகருக்கு ஏற்ப்படும் மேலும் வரலாற்று விஷயங்களை சரியாக கணிக்கும் பேராற்றல் இயற்க்கை இவர்களுக்கு கொடுத்த கொடை எனலாம்,  இந்த குறிப்பிட்ட திறமையை  ஜாதகர் வளர்த்து கொள்வது அவசியம் .

சிறந்த மனோ தத்துவ நிபுணராக ஜாதகர் ஜொலிக்க இங்கு அமரும் சந்திரன் 100 சதவிகிதம் உதவி செய்வார் , மேலும் மற்று மருத்துவ முறைகளில் சிறந்து விளங்கும் தன்மையை தரும் , ஜாதகரின் மன ஆற்றல்  மூலமாகவும் , எண்ணத்தின் மூலமாகவும் மக்களுக்கு ஏதாவது ஒரு  வகையில் உதவி செய்து கொண்டு இருக்கும் தன்மையில் தனது தொழில் மற்றும் பணியை  அமைத்துகொள்ளும் வாய்ப்பை தரும் , இதை தவிர  மற்றவர்களின் மனதில் உள்ள விஷயத்தை உணர்ந்து கொள்ளும் ஆற்றல்  உண்டாகும் , இங்கு அமரும் சந்திரன் பிரபஞ்சத்தை உணர்ந்து கொள்ளும் விழிப்பு நிலையை தரும் .

துலாம் :

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் கலகலப்பாக  அனைவருடன் பழகும் தன்மையை தரும் , ஜாதகருக்கு பொது மக்களின்  ஆதரவு எப்பொழுதும் நிறைந்திருக்கும் , கலைகளில் சிறந்து  விளங்கும் பேராற்றலை வாரி வழங்கி விடும் , கலை துறையில் நல்ல பெயரும்  புகழும், சாதனை செய்யும் யோகம் உண்டு, குறிப்பாக இசையில்  சிறந்து விளங்கும் தன்மையும்  நல்ல ஞானத்தை தரும், ஒரு சிறந்த  சமுகத்தை உருவாக்கும் தன்மையும் உண்டாகும் , தனது சிறப்பான  சிந்தனை ஆற்றல் மூலம் தன்னை சார்ந்த மக்களுக்கு   முன்னேற்றமான எதிர்காலத்தை அமைத்து தரும் சக்தியினை தரும்.

இங்கே அமரும் சந்திரன் ஜாதகருக்கு சிறந்த நுணுக்கமான அறிவாற்றலை  தந்துவிடும் , எந்த ஒரு சூழ்நிலையையும் தனது அறிவாற்றல்  மூலம் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றியை பெரும் யோகம் உண்டு , செய்யும் தொழில் நேரம் காலம் பார்க்காமல் அயராது பாடு படும் குணத்தை தரும் , ஜாதகரை நம்பியவர்கள் நிச்சயம் நன்மையடைவார்கள் , தானும் முன்னேற்றம் கண்டு தன்னை நம்பியவர்களின் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தை  தரும் தன்மை கொண்டவர்களாக காணப்படுவார்கள் சந்திரன்  இங்கு அமர்வது அழியா உலக புகழ் பெரும் யோகத்தை தரும் .

விருச்சிகம் :

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் அதிக அளவில் மன  போராட்டத்தை எதிர்கொள்ளும் தன்மை பெற்றவராக இருப்பார் , மக்கள் நலனுக்காக போராடும் தன்மை பெற்றவர்கள் , எதிர்பாராத  நிகழ்சிகளால் சமுதயாத்தில் முக்கிய பதவிகளை ஏற்றுகொள்ளு  சூழ்நிலை ஏற்படும் , பெரிய மனிதர்களின் ஆதரவு , அவர்களின் மனதை  எளிதில் கவரும் தன்மை , அரசு வழிகளில் இருந்து வரும்  ஆதரவு , வேற்று இனத்தவர்களின் ஆதரவு மூலம் வாழ்க்கையில் மிக பெரிய பதவியை  பெற்றுத்தரும் , அந்த பதவிகளை நீடித்து சிறப்பாக செய்யும் யோகம்  உண்டாகும் , தனது சிறப்பன நடவடிக்கையின் மூலம் மக்கள் அனைவரிடமும் நல்ல பெயரும் புகழும் உண்டாகும் .

தனிபட்ட முறையில் ஜாதகரின் குணாதிசியத்தை எவராலும் கணிக்க இயலாது , இவரின் மனதில் உதிக்கும் எண்ணங்கள் யாவும் ஜாதகருக்கும், ஜாதகரை  சார்ந்தவர்களுக்கும் மிகப்பெரிய நன்மைகளை தொடர்ந்து வழங்கி கொண்டே இருக்கும் , குறிப்பாக ஜாதகர் பொது வாழ்க்கையில் வெற்றி பெரும் அளவிற்கு குடும்ப வாழ்க்கையில் நன்மை மற்றும் வெற்றி பெற இயலுவதில்லை , இருப்பினும் எதையும் தங்கும் இதயமாக ஜாதகர் இருப்பது  இறைவன் கொடுத்த வரமே , இங்கும் அமரும் சந்திரன் ஜாதகருக்கு  வாழ்க்கையின் உண்மை நிலையை உணர வைத்தது , பக்தி நிலைக்கு  எடுத்து செல்லும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


புதன் கேது சேர்க்கை தரும் யோக பலன்கள் !



ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகம் என்றாலும் சரி புதன் கேது சேர்க்கை பெற்று நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகருக்கு தரும் யோக பலன்களை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் , 

புதன் கேது சேர்க்கை ஒருவருடைய சுய ஜாதகத்தில், ஒரே வர்க்கம் சார்ந்த மண் தத்துவ ராசிகளான ரிஷபம் , கன்னி , மகரத்தில் நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகர் பொருளாதரா ரீதியாக நல்ல முன்னேற்றமும் , சிறந்த உடல் ஆரோக்கியத்தையும் , நிறைவான சொத்து சுக சேர்க்கையையும் வாரி வழங்கி விடுகிறது புதன் கேது சேர்க்கை , இதற்க்கு காரணம் புதனுடன் சேர்ந்த கேதுவின் ஆற்றலே என்றால் அது மிகை ஆகாது , ஏனெனில் புதனுடன் சேரும் கேது, புதன் வழங்கும் நல்ல பலன்களையும் , அமர்ந்த இடத்திற்கு உண்டான முழு பலன்களையும் தானே ஏற்று கொண்டு நடை முறை படுத்துவதே இதற்க்கு காரணம்.

 கால புருஷ தத்துவ அமைப்பின் படி இரண்டாம் வீடான ரிஷபத்தில் அமரும் புதன் கேது சேர்க்கை நல்ல குடும்ப வாழ்க்கையினையும் ,   முதலீடு அற்ற கை நிறைவான வருமானத்தையும் , சிறப்பான பேச்சு திறமையின் மூலம் பொருளாதார முன்னேற்றத்தையும் தரும் . மேலும் ஜாதகரின் உடல் நிலை ஆயுள் வரை பெரிய பாதிப்புகளை சந்திக்காது ,  ஜாதகருக்கு சொத்து சுக சேர்க்கை என்பது மிக எளிதாக அமையும் , அடிப்படை கல்வி ஜாதகருக்கு எவ்வித தடையும் இன்றி மிகவும் சிறப்பாக அமையும் , 

ஜாதகருக்கு விட்டு கொடுத்து செல்லும் மனபக்குவம் சிறு வயது முதலே அமைந்து விடும் , இதனால் ஜாதகருக்கு வேண்டியாது நிச்சயம் கிடைக்கும் , ஜாதகரின் பொறுமையான குணம் அனைவராலும் விரும்பப்படும் , ரிஷபத்தில் அமரும் புதன் கேது சேர்க்கை ஜாதகருக்கு அளவற்ற வருமானத்தை நிச்சயம் தரும் , குறிப்பாக மருத்துவம் , பைனான்ஸ் , வட்டி தொழில் , கலை துறை , தனது பேச்சு திறனால் ஈட்டும் வருவாய் என்ற அமைப்பில் .

கால புருஷ தத்துவ அமைப்பின் படி ஆறாம் வீடான கன்னியில் அமரும் புதன் கேது சேர்க்கை ஜாதகரை திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம்  மிக பெரிய செல்வந்தனாக மற்றும் தன்மை கொண்டது , மேலும் சூது , லாட்டரி , சட்டத்துக்கு புறம்பான தொழில்கள் மூலம் மிகப்பெரிய தன சேர்க்கை உண்டாகும் , புதனுடன் சேரும் கேது  ஜாதகருக்கு அடிக்கடி அதிர்ஷ்ட வாய்ப்புகளை வழங்கி கொண்டே இருப்பார் , மேலும் ஜாதகரை பகைத்து கொள்ளும் அன்பர்களின் நிலை மிகவும்  பரிதாபத்திற்கு உரிய நிலைக்கு கொண்டு சென்று விடும் .

 இவர்களின் வாக்கு  பலிதம் பெரும் என்பதால் , இவரால் சபிக்க பட்டவர்களுக்கு சுய ஜாதகம் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கும் , இவரால் வாழ்த்து பெற்றவர்களின்  ஜாதக அமைப்பு மிகுந்த யோக பலன்களை  நடை முறையில் நடத்தி கொண்டு இருக்கும், தனது எண்ணத்தாலும் செயலாலும் காரிய வெற்றி பெரும்  தனி திறமை, ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து இருக்கும் , தன்னை எதிர்பவர்களை கண்டு சிறிதும் அஞ்சாத மன நிலையை இங்கு அமரும்  புதன் கேது சேர்க்கை சிறப்பாக தந்து விடும் .

கால புருஷ தத்துவ அமைப்பின் படி பத்தாம் வீடான மகரத்தில் அமரும் புதன் கேது சேர்க்கை , மேற்கண்ட இரண்டு சேர்க்கை நிலையை விட அதிக யோக பலன்களை தரும் புதன் கேது சேர்க்கை எனலாம் , சர ராசியான மகரத்தில் அமரும் இந்த சேர்க்கை நிலையில் கேதுவின் ஆதிக்கமே 100 சதவிகிதம் மேலோங்கி  நிற்கும், ஜாதகருக்கு தொழில் ரீதியான முன்னேற்றத்தை குறுகிய காலத்தில் வாரி வழங்கும் , எதையும் சாதிக்கும் ஆற்றலை ஜாதகருக்கு தடையில்லாமல் வாழ்நாள் முழுவதும் வாரி வழங்கி கொண்டே இருக்கும் .

குறிப்பாக கனரக வண்டி வாகன போக்குவரத்து தொழில்கள் , கட்டிடம் மற்றும் கட்டுமான தொழில்களில் , விவசாயம் சார்ந்த தொழில்கள் , பண்ணை தொழில்கள் மூலம் ஜாதகரின் வாழ்க்கை குறுகிய காலத்தில் முன்னேற்றம் பெரும் , இதற்க்கு மூல காரணமாக இங்கு அமரும் கேது பகவானின் ஆற்றலே  என்றால்  அது மிகையாகாது , புதன் ஜாதகருக்கு சரியான திட்டமிடுதலை தருவார் , கேது அதனை நடைமுறைக்கு கொண்டுவருவார் , மேலும் ஜாதகர் வெற்றி பெறுவதற்கு உண்டான நல்ல மனிதர்களின் தொடர்புகளை ஏற்ப்படுத்துவதும் கேது பகவானே . 

மேற்கண்ட அமைப்பில் சுய ஜாதகத்தில் புதன் கேது சேர்க்கை இருந்து லக்கினத்திற்கு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே மேற்கண்ட நன்மையான பலன்கள்  நடை முறைக்கு வரும் , இல்லை எனில் இதற்க்கு நேர் எதிரான  பலன்களை ஜாதகர் அனுபவிக்க வேண்டி வரும் , இவை யாவும் நடப்பு திசையில் சம்பந்த பட்ட பாவகத்தின் பலன் நடைமுறையில் வந்தால் மட்டுமே  என்பதை கவனத்தில் கொள்வது அவசியம் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


புதன், 9 ஜனவரி, 2013

சந்திரன் அமர்ந்த ராசியும் ஜாதகரின் மன இயல்பும் - பகுதி 1




ஒருவரின் மன ஆற்றலை நிர்ணயம் செய்யும் சந்திரன் , மேஷம் முதற்கொண்டு மீனம் வரை அமரும் பொழுது , ஜாதகரின் மன நிலையையும், என்ன ஆற்றல்களையும் , எவ்விதம் செயல்படுத்துகிறார் என்பதை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் .

மேஷம் : 

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகரின் மனம் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டே இருக்கும் , அதிரடியான பல முடிவுகளை சரியான நேரத்தில் சரியான விதத்தில் எடுக்கும் தன்மை பெற்றவர்கள் , தனது மன நிலையை எப்பொழுதும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆற்றல் பெற்றவர்கள் , சுய கட்டுபாடு , செயல்களில் வேகம் , நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் நினைத்ததை அடையும் யோகம் , சிறந்த நிர்வாக திறன் , அதிகாரம் செய்யும் மனோ நிலை , தனது கட்டுப்பாட்டில் அனைவரையும் வைத்திருக்கும் ஆற்றல், சமுகத்தில் சிறப்பான பதவி மற்றும் உயர்ந்த அந்தஸ்து , ஊர் மரியாதை நியாய தர்மங்களை எடுத்து உரைக்கும் பெரிய மனித தன்மை , பொது மக்களுக்கு காவல் செய்யும் யோகம் , அதிக மன வலிமை தேவை படுகிற காவல் துறை , ராணுவம் , தீயணைப்பு துறை , மக்களை பாதுகாப்பாக எடுத்து செல்லும் ஓட்டுனர் பணி போன்ற அமைப்புகளில் சிறந்து விளங்க செய்யும் , மேலும் ஸ்திரமான மன நிலை, அபரிவிதமான மன  ஆற்றலை இங்கு அமரும் சந்திரன் வாரி வழங்கி விடுவார் .

ரிஷபம் : 

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் நிலையான முடிவுகளை தெளிவாக எடுக்கும் ஆற்றல் பெற்றவர்கள் , கொஞ்சம் பயந்த சுபாவம் இருந்த போதிலும் , அதுவே ஜாதகருக்கு பாதுகாப்பாக அமையும் , தான் எடுத்த முடிவுகளை மறு பரிசிலனை செய்யாதவர்கள் , இறைவன் இவர்களுக்கு அதிக அதிர்ஷ்டங்களை வாழ்நாள் முழுவதும் தந்து கொண்டே இருப்பார் , எளிதில் மனம் கனியும் தன்மை பெற்றவர்கள் , ஏழை எளியவர்களுக்கு ஓடி வந்து உதவி செய்யும் மனம் கொண்டவர்கள் , தனது அன்பால் அனைவரையும் ஆதரிக்கும் தன்மை பெற்றவர்கள் , இவர்களை வீணாக சீண்டினால் கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிடுவார்கள் , மனித உணர்வுக்கு மதிப்பு தரும் மென்மையானவர்கள் , இவர்களால் அதிகம் எவரும் பாதிக்க படுவதில் மற்றவர்களால் அதிகம் இவர்களே பாதிக்க படுகிறார்கள் , இருப்பினும் அனைத்தையும் பொறுமையாக ஏற்றுகொள்ளும் தன்மை பெற்றவர்கள் , நிலையான சொத்து சுக சேர்க்கையையும் சிறப்பான வாழ்க்கையையும் இங்கு அமரும் சந்திரன் வாரி வழங்கிவிடுவார்  .

மிதுனம் : 

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் சுதந்திரமே வாழ்க்கையில் சகல நன்மைகளையும் பெற்று தரும் என்ற மனபக்குவத்தை கொண்டவர்கள் , தனது பேச்சுக்கு அங்கீகாரம் எப்பொழுதும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் தன்மை பெற்றவர்கள் , இவர்களின் பொது நலத்திலும் ஒரு சுய நலம் கலந்தே நிற்கும் , பரந்த மனப்பான்மை பெற்று இருந்த  போதிலும் அதில் சுய லாபம் பார்க்கும் தன்மை இயற்கையாக ஜாதகருக்கு அமைந்துவிடும் , தனது மன ஆற்றல் மூலம் சகல கலைகளிலும் பல புதுமைகளை படைக்கும் தன்மை பெற்றவர்கள் , வாழ்க்கையில் எவ்வித சூழ்நிலையையும் சமாளிக்கும் மன நிலையை பெற்றவர்கள் , எதற்கும் கலங்காமல் எதிர்நீச்சல் போடும் மன நிலையை பெற்றவர்கள் , குறிப்பாக கல்வியில் சிறந்து விளங்கும் ஆற்றலை மிக அதிகமாக இங்கு அமரும் சந்திரன் வழங்குவார் , இவர்களின் செயல்களும் எண்ணங்களும் மற்றவர்களுக்கு எவ்விதத்திலாவது உதவிகரமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை , தனது அறிவாற்றலை முழுவதுமாக மன நிலையின் உதவி கொண்டு காரியம் சாதிப்பவர்கள் என்றால் அது மிகை ஆகாது , சிறப்பான புத்திசாலித்தனத்தையும் நுணுக்கமான அறிவாற்றலையும் இங்கு அமரும் சந்திரன் வாரி வழங்கிவிடுவார்  .

கடகம் :

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் பரிபூரண அதிர்ஷ்டத்தை முழுவதும் அனுபவிக்கும் யோகத்தை தரும் , ஜாதகரின் மன நிலையானது எப்பொழுதும் நேர்மறையான எண்ணங்களால் நிரம்ப பெற்று இருக்கும் , அந்த எண்ணங்கள் யாவும் ஜாதகருக்கு வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் விரைவான முன்னேற்றத்தை வாரி வழங்கும் , குறிப்பாக வண்டி வாகனம் , சொத்து சுக சேர்க்கை , நிலபுலன் சேர்க்கை , மக்கள் செல்வாக்கு , அரசியல் ஆதாயம் , பெரிய சொத்து சுக சேர்க்கை , உலகம் முழுவதும் சுற்றி வரும் யோகம் , பெண்கள் வழியில் இருந்து வரும் பேராதரவு , மக்கள் விரும்பும் பொருட்களின் வியாபாரம் மூலம் ஜாதகர் விரைவான முன்னேற்றத்தை பெரும் யோகம் , தன்னம்பிக்கை , நிலையான நிறைவான மன நிலை , தன்னால் இயன்ற அளவிற்கு பொது மக்களுக்கும்  உறவினர்களுக்கும் உதவி செய்யும் குணம் , இங்கு அமரும் சந்திரன் ஜாதகருக்கு விரைவான வளர்ச்சியையும் , உறுதியான மன நிலையையும் , நீடித்த அதிர்ஷ்ட வாழ்க்கையையும் 100 சதவிகிதம் நிச்சயம் பெற்று தருவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696



நீர் தத்துவ ராசிகளின் தன்மையும் , சுய ஜாதகத்தில் வலிமை பெரும் பொழுது தரும் நன்மையும் !



பொதுவாக கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கடகம் சர நீர் தத்துவ ராசியாகவும், விருச்சிகம் ஸ்திர நீர் தத்துவ ராசியாகவும் , மீனம் உபய நீர் தத்துவ ராசியாகவும் , இயற்கையால் வகை படுத்த படுகிறது , ஒருவருடை சுய ஜாதகத்தில் மேற்கண்ட நீர் தத்துவ ராசிகள் நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் .

சுய ஜாதக  ரீதியாக ஒருவருக்கு நீர் ராசிகளான கடகம் , விருச்சிகம், மீன ராசிகள் நல்ல நிலையில் இருந்தால் , ஜாதகர் நல்ல மனம் கொண்டவராகவும், பரந்த மனப்பான்மை உள்ளவராகவும் , தனது எண்ணத்தால் அனைத்ததையும் சாதிக்கும் பேராற்றல் கொண்டவராகவும் இருப்பார் , குறிப்பாக ஜாதகரின் மன நிலையை பற்றி தெளிவாக தெறிந்து கொள்ள இந்த பாவகங்கள் மிகுந்த உதவி புரியும் , சிறந்த ஆன்மீகவாதிகள் , தன்னம்பிக்கையாளர்கள் , மனோ தத்துவ நிபுணர்கள் , சிறந்த பேராசிரியார்கள் , கல்வியாளர்கள் , மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசு அதிகாரிகள் , அரசியல்வாதிகள் , சிறந்த தலைமை பொறுப்பை வகிக்கும் தலைவர்கள் போன்ற அமைப்பில் பெரிய பதவிகளை மேற்க்கண்ட ராசிகள் சுய ஜாதகத்தில் வலிமை பெறும் பொழுது , மிக எளிமையாக பெற்று தந்துவிடுகிறது .

கடகம் சர நீர் ராசி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் யோக பலன்கள் :

ஜாதகர் மிகுந்த யோகசாலி , பெருந்தன்மையான குணம் ஜாதகருக்கு சிறு வயது முதற்கொண்டே அமைந்து விடும் , தனது நடத்தையாலும் , செய்கையாலும் அனைவராலும் விரும்ப படும் குணத்தை பெற்று இருப்பார் , மேலும் ஜாதகர் மனதில் நினைக்கும் எண்ணங்கள் யாவும் எவ்வித தடையும் இல்லாமல் வெற்றி பெறும் , குறிப்பாக ஆய கலைகள் 64 லும் சிறந்து விளங்கும் ஆற்றல் இயற்கையாக அமைந்து விடும் .

 பூலோகத்தில் வாழ்வதற்கு உண்டான சொகுசு வீடு , வண்டி வாகனம் , நல்ல உணவு , மன மகிழ்விற்கு உண்டான வசதிகள் , நான்குகால் ஜீவன்கள் பெருக்கம் , குதிரை , செல்ல பிராணிகள் வாங்கும் யோகம் , மன திருப்தியுடன் செய்யும் காரியங்கள் , பொன் பொருள் சேர்க்கை , ஆடம்பர பொருட்களின் சேர்க்கை , போதும் என்ற மன நிலை , பொது மக்கள் நீடித்த ஆதரவு என சகல வழிகளிலும் , சகல வசதி வாய்ப்புகளையும் அள்ளித்தரும் ராசியாக கடகம் அமைகிறது , ஒருவருடைய சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டிய ராசிகளில் முதன்மை வகிப்பது இந்த கடக ராசியே என்றால் அது மிகையாகாது , ஆனால் சர லக்கினத்திற்கு இது பொருந்தாது .

விருச்சகம் ஸ்திர  நீர் ராசி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் யோக பலன்கள் :

 குடும்ப வாழ்க்கையில் ஜாதகர் நல்ல நிலையில் இருக்கவும் , இல்லறவாழ்க்கையில் இருந்து கொண்டே ஆன்மீகத்தில் சிறந்து விளங்கும் அமைப்பை  தரும் , திருமண வாழ்க்கையில் நிறைவான மகிழ்ச்சியையும் , திருமணத்தின் மூலம் யோக வாழ்க்கையையும் தரும் ராசி இந்த விருச்சக ராசியாக கருதலாம் , விருச்சககத்தில் நீர் தத்துவம் நல்ல நிலையில் இருப்பின் , ஒன்று நல்ல இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும் அல்லது ஆன்மீக வாழ்க்கையில் மிக பெரிய வெற்றியை தரும் , மனித வாழ்க்கையின் சூட்சம விஷயங்களை புரிய வைக்கும் ராசி. 

மனதில் தெளிவையும் , மன உறுதியையும் , தார்மீக சிந்தனையும் , இறை நிலையின் புரிதலையும் தரும் , ஜாதகருக்கு இவை அனைத்தும் திடீர் எனவே நிகழும் , வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை ஜாதகருக்கு திடீர் திடீர் எனவே நிகழ்த்தும் , நேற்றுவரை சாமான்யவராக இருந்த நபர் , இன்று உலகம் போற்றும்  நபராக வளம் வரும் யோகம் உண்டாகும் , பொதுமக்கள் ஆதரவை அளவில்லாமல் பெற்று தரும் , இவரின் பேச்சுக்கு மக்கள் அனைவரும் கட்டுப்படும் தன்மை உண்டாகும் , வெளிநாடுகளில் இருந்து வெளி ஊர்களில் இருந்தும் ஜாதகருக்கு பெயரும் புகழும் உண்டாகும்  ஆனால் ஸ்திர லக்கினத்திற்கு இது பொருந்தாது .

மீனம் உபய நீர் ராசி  சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் யோக பலன்கள் :

வாழ்க்கையை வாழ பிறந்தவர்கள் , இவர்களின் மன நிலை எதையும் தாங்கும் தன்மை கொண்டது , சாதாரண மனிதனாக இருந்து வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகளை படைக்கும் பேராற்றல் கொண்டவர்கள் , மேலும் தனது மன ஆற்றல் மூலம் புதிய பல கண்டுபிடிப்பை உலகிற்கு தரும் தன்மை கொண்டவர்கள் , இவர்களின் கண்டு பிடிப்பு , மக்களுக்கு அன்றாட தேவைகளை சிறப்பாக நிறைவேற்றி கொண்டு இருக்கிறது , எதற்கும் அஞ்சாதவர்கள் , தைரியம் , துணிவு , தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் , சுயநலம் பாராமல் பொது சேவையில் சிறந்து விளங்கும் தன்மை பெற்றவர்கள் .

ஆசிரிய பணிகளில் சிறந்து விளங்கும் யோகம் பெற்றவர்கள் , சமுதயத்தில் பல மாற்றங்களுக்கு அடிகோலும் நபர்கள் , மக்களின் சிந்தனையும் , நோக்கத்தையும்  எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் , இவர்களின் பேச்சும் , செயல்களும் அனைவருக்கும் நன்மையே வாரி வழங்கும் , குறிப்பாக பெண்களின் ஜாதகத்தில் இந்த ராசி நல்ல நிலையில் இருப்பது அவசியம் , இல்லை எனில் குடும்பத்தில் மன நிம்மதி என்பதே இருக்காது , போற்றுவார் போற்றட்டும் , தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் எல்லாம் கண்ணனுக்கே  என்ற எண்ணம் கொண்டவர்கள் , இருப்பதை வைத்து  நிறைவாக வாழும் தன்மை பெற்றவர்கள் ஆனால் உபய லக்கினத்திற்கு இது பொருந்தாது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969