வியாழன், 28 பிப்ரவரி, 2013

சந்திரன் அமர்ந்த ராசியும் ஜாதகரின் மன இயல்பும் - பகுதி 3



ஒருவரின் மன ஆற்றலை நிர்ணயம் செய்யும் சந்திரன் , மேஷம் முதற்கொண்டு மீனம் வரை அமரும் பொழுது , ஜாதகரின் மன நிலையையும், என்ன ஆற்றல்களையும் , எவ்விதம் செயல்படுத்துகிறார் என்பதை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் .

தனுசு :

இங்கு அமரும் சந்திரன் நல்ல நிலையில் இருப்பின் , ஜாதகர் அடிப்படையில் இருந்தே உயர்ந்த குணங்களை பெற்று இருப்பார் , கவிதை , கதை , கட்டுரை இயற்றுவதில் வல்லமை உண்டாகும் , ஜாதகரின் மன உறுதி மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் , ஜாதகரின் சிந்தனை ஆற்றல் மற்றவர்களின் வாழ்க்கையில் பல நன்மைகளை ஏற்ப்படுத்தும் , வருமுன் உணரும் சக்தி ஜாதகரின் மனதிற்கு இலகுவாக கிடைக்கும் , தனது அபரிவிதமான போதிக்கும் தன்மையால் பொது மக்கள் அனைவராலும் போற்றுதலுக்கு உரியவராக ஜாதகர் காணப்படுவார் , ஜாதகரின் வாழ்க்கை மற்றவருக்கு முன் உதாரணமாகவும் போற்றுதலுக்கு உரியதாகவும் அமைந்துவிடும் .

சந்திரன் இங்கு ஜாதகருக்கு சிறந்த குருவிற்கு உண்டான மனநிலையை தந்துவிடுகிறது , ஒருவரின் சுய திறமைகளை கண்டுணர்ந்து அவர்களின் திறமைகளை வெளி உலகிற்கு தெரியும் படி ஆக்கமும் , ஊக்கமும் தரும் சிறந்த குருவாக விளங்குவார்கள் , மேலும் கண்டிப்பான மனநிலையும் , ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் தன்மையையும் தரும் , தனக்கு சரியென்பதை செய்யாமல் , உலகிற்கும் , தர்மத்திற்கும் சரியென்பதை செய்யும் மன பக்குவத்தை வாரி வழங்கும் , ஆன்மீக வாழ்க்கையிலும் , ஜோதிட கலையிலும் சிறந்து விளங்கும் ஆற்றலை இங்கு அமரும் சந்திரன் நிச்சயம் தருகிறார் சந்திரன் இங்கு நல்ல நிலையில் அமர்வது கோவிலில் ஏற்றும் அகல் விளக்கினை போன்றது .

மகரம் :

சந்திரன் இங்கு அமர்வது ஜாதகர் நேர்மையில் சிறந்து விளங்கும் தன்மையை  தரும் , தான் பணிசெய்யும் இடங்களில் எல்லாம் நேர்மையை  ஜாதகர் கடைபிடிப்பதால் , ஜாதகர் அனைவராலும் கவரபடுவார்  , பொதுமக்கள் சார்ந்த உணர்சிகரமான போராட்டங்களை நடத்தி  வெற்றி பெற செய்யும் , இங்கு அமரும் சந்திரன் பொதுவாழ்க்கையில் அப்பளுக்கற்ற தன்மையை தரும் , நேர்மையின் பிறப்பிடமாக  ஜாதகர் விளங்குவார் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை , சற்றே நாத்திக போக்கை தரும் , இருப்பினும் மனித நேயம் கொண்ட  மனிதராக ஜாதகர் காணப்படுவார் , மண் தத்துவம் சார்ந்த தொழில்களில்  ஜாதகர் 100 சதவிகித வெற்றியை பெறுவார் , விவசாயம் , மண்  மனை , வண்டி வாகன செல்வாக்கை தந்து , ஜாதகரை சிறப்பான இடத்திற்கு  எடுத்து செல்லும் ஆற்றல் பெற்றது இங்கு அமரும் சந்திரன்.

மகர சந்திரன் அரசு துறையில் பல பெரிய பதவிகளை அலங்கரிக்க செய்யும்  , குறிப்பாக நிர்வாக துறையில் எவரும் எதிர்பாராத முன்னேற்றங்களை  வாரி வழங்கும் , தான் செய்ய வேண்டிய கடமைகளை  ஜாதகர் எவ்வித குறையும் இன்றி செய்யும் மன நிலையை தரும் , எனவே ஜாதகர் செய்யும் தொழில்கள் யாவும் வெற்றிமேல் , வெற்றி  தரும் , ஜாதகரின் நேர்மையான நன்னடத்தை வாழ்க்கையில் மிகப்பெரிய  முன்னேற்றங்களை வாரி வழங்கும் என்பதில் எவ்வித ஐயமும்  கொள்ள தேவையில்லை , பூமிக்கு அடியில் உள்ளவற்றை தனது மன  ஆற்றல் கொண்டு சரியாக உணர்ந்து சொல்லும் தனி திறமை  ஜாதகருக்கு  இயற்கையாகவே அமைந்து விடும் .

கும்பம் :

சந்திரன் இங்கு அமர்வது ஜாதகருக்கு , தனது எண்ண ஆற்றல் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்பினை  பெரும் யோகத்தை வாரி வழங்கும் , ஜாதகர் தீட்டும்  திட்டங்கள் யாவும் பலிதம் ஆகும் , இதற்க்கு ஜாதகரின் அறிவாற்றல்  உறுதுணை புரியும் , கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கும்பம்  11 ம் வீடாக வருவது மிகசிறப்பான விஷயம் , இங்கு சந்திரன் அமர்வது  மிகுந்த நன்மைகளை  வாரி வழங்கும் , குறிப்பாக வியாபார அமைப்பை சார்ந்த  வெற்றிகளை  ஜாதகருக்கு நிச்சயம் வாரி வழங்கும் , ஜாதகரின்  ஸ்திரமான மன நிலைக்கு இங்கு அமரும் சந்திரனே முழு காரணம் .

மேலும் இந்த ராசிக்கு அதிபதியான சனி பகவான் நீதி நேர்மை , சுய கட்டுப்பாடு , வியாபாரத்தில் ஸ்திரமான வெற்றி தரும் அமைப்பு ,  தன்னம்பிக்கை  , எவருக்கும் அஞ்சாத மனநிலை , நேர்மை தவறாத குணம்  என ஜாதகரை குறுகிய காலத்தில் மிகுந்த அனுபவசாலியாக மாற்றும் வல்லமையை சந்திரன் தருவார் என்பதில் சந்தேகமே இல்லை , மேலும்  ஜாதகரின் மன நிலையம் , எண்ண ஆற்றலும் ஒரே நேர்கோட்டில்   அமைகின்ற காரணத்தால் , ஜாதகரின் வெற்றியை எவராலும்  தவிர்க்க இயலாது , ஜாதக அமைப்பிலேயே லக்கினம் எதுவென்றாலும் இந்த கும்ப ராசி  சிறப்பாக  அமைவது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்  .

மீனம் :

சந்திரன் இங்கு அமர்வது ஜாதகருக்கு போதும் என்ற மன நிலையை தரும்  , மற்றவருக்கு உதவும் மனப்பான்மையை அதிக அளவில் நடைமுறை  படுத்தும் , அதிக முதலீடுகள் செய்யும் தொழில்களில் எல்லாம்  மிகுந்த வெற்றியை  தரும் , இதை போன்றே ஜாதகரின் உயர்ந்த  எண்ணங்கள்  யாவும் நிறைவேறும் , குறிப்பாக ஆன்மீக வாழ்க்கையில் மிகுந்த அதிர்ஷ்டத்தை  பெற்றுத்தரும் , இறை அருளின் முழு நிலை  பரிபூரணமாக  உணரவைக்கும் தன்மையை தரும் , ஜாதகரின் ஆன்மீக வாழ்க்கை  மிகுந்த உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் வல்லமை பெற்றது மீன சந்திரனனின் தன்மை .

மேலும் ஜாதகர் பரந்த மனப்பான்மையும் , நல்ல எண்ணங்களை கொண்ட மன  நிலையினாலும் , ஜாதகர் நினைக்கும் எண்ணங்கள் யாவும் வெற்றி பெரும், சந்திரன் இங்கு நல்ல நிலையில்  அமரும் பொழுது ஜாதகருக்கு  ஆறாம் அறிவுக்கு அப்பாற்ப்பட்ட சிறப்பு தகுதிகள் இயற்கையாக கிடைக்க பெரும் யோகம்  உண்டு , மேலும் சிறந்த நிர்வாக திறமையை வாரி வழங்கும் , பெரிய நிறுவனங்கள் , வெளிநாட்டு நிறுவனங்கள் , அரசு துறையில்  நிர்வாகம் சம்பந்தபட்ட துறைகளில் நேர்மை மற்றும் கடமையில் சிறந்து விளங்கும் பல அன்பர்கள்  மேற்கண்ட மீன ராசி நல்ல நிலையில்  அமர பெற்றவர்களே , தங்க நகை வியாபாரத்தில் மிகப்பெரிய வெற்றியை  பெற்று தரும் இங்கு அமரும் சந்திரன் என்றால் அது வியப்பில்லை .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

சனி, 16 பிப்ரவரி, 2013

கேந்திர அதிபதி , கோண அதிபதி உண்மை விளக்கம் !



அண்ணன் அவர்களே,
                
  ஜோதிடத்தின் மேலான தன்மையை மிகவும் சிறப்பாக ஜோதிடதீபத்தின் மூலம் விளக்குகிறீர்கள். அதற்கு நன்றிகள் பல.சில ஐயங்களையும் தங்களிடமிருந்து தெளிவு பெறும் நோக்கில் வினவுகிறேன்.
 

கேள்வி :

 
1.கேந்திராதிபதியாக சுபக்கிரகம் வருவதற்கும்,பாவகிரகம் வருவதற்கும் என்ன வித்தியாசம்.திரிகோணாதிபதியாக சுபக்கிரகம் வருவதற்கும்,பாவகிரகம் வருவதற்கும் என்ன வித்தியாசம்?.(உதாரணம் 1.செவ்வாயனவர் கடக லக்கினத்திற்கு 5,10க்கு அதிபதி என்ற அடிப்படையில் 10ம் வீட்டிற்கும் கேந்திரமேறினால் 10ம் பாவத்தின் பலனை நன்மையாகவும்,5ம் வீட்டிற்கு திரிகோணமாக அமர்ந்தால் 5ம் பாவத்தின் பலனை கெடுத்தும் விடுவாரா?.2.குருவானாவர் மிதுன லக்கினத்திற்கு 7,10 அதிபதி என்ற அடிப்படையில் தனது வீடுகளுக்கும்,லக்கினத்துக்கும் மறைவு பெறும் போதுதான் நன்மை கிடைக்கிறது இல்லையெனில் டவுசரைக் கிழித்துவிடுகிறார்).


பதில் :

ஒருவருடைய சுய ஜாதகத்தில் கேந்திர வீடுகளுக்கு அதிபதியாக சூரியன் , தேய்பிறை சந்திரன் , செவ்வாய் , சனி , சூரியனுடன் சேர்ந்த புதன் ஆகியோர் அதிபதியாக வருவது சிறப்பு , அப்படி வரும் பொழுது அவர்கள் தனது வீட்டிற்கு வாங்கும் பலம் கேந்திர பலமாகவும் , சம பலமாகவும் இருப்பது மிகுந்த நன்மையை தரும் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் கோண  வீடுகளுக்கு அதிபதியாக சுக்கிரன் , சூரியனுடன் சேராத புதன் , வளர் பிறை சந்திரன் அதிபதியாக வருவது சிறப்பு அப்படி வரும்பொழுது அவர்கள் தனது வீட்டிற்கு சம பலமும் , கோண பலமும் பெறுவது  மிகுந்த நன்மையை வாரி வழங்கும் .

கேந்திர அதிபதியாக இருந்தாலும் சரி , கோண அதிபதியாக இருந்தாலும் சரி தனது வீட்டிற்கு சம பலம் பெரும் பொழுது 100 சதவிகித நன்மையை மட்டுமே செய்வார்கள் என்பது குறிப்பிட தக்கது .

கேள்வி :

 2.சுப‌க்கிர‌க‌ம் ஒன்று ஒரு திரிகோணத்திற்கும்,ஒரு ம‌றைவுக்கும் அதிப‌தியாக‌ வ‌ரும் போது ம‌றைவுக்கு ம‌றைவும்,திரிகோண‌த்திற்கு கோண‌மாக‌வும் அம‌ர்ந்தால் தான் த‌ன‌து பாவ‌ங்க‌ளுக்கு ந‌ன்மை செய்யுமா?.(உதார‌ண‌ம் சிம்ம‌ ல‌க்கின‌த்திற்கு குரு 5,8 அதிப‌தி என்ற‌ அடிப்ப‌டையில் துலாமில் அம‌ர்ந்துள்ளார் எனில் 8 க்கு 8 க‌வும்,5க்கு 11 க‌வும் அம‌ர்ந்தால் ந‌ன்மை செய்யும் என‌க்கொள்ள‌லாமா?.).

பதில் :

சுப கிரகம் ( அதாவது கோண அதிபதி ) தனது வீட்டிற்கு கோண பலம் பெறுவது சிறப்பான நன்மையை செய்யும் , சம பலம் பெரும் பொழுதும் அதிக நன்மையை செய்யும் , ஆனால் மறைவு பலம் பெரும் பொழுது நன்மையை செய்து , ஒரு வேலை கேந்திர வீட்டிற்கு அதிபதியாக வரும் கோண அதிபதி மட்டும் மறைவு பலம் பெரும் பொழுது நன்மையை செய்வார் .

சிம்ம லக்கினத்திற்கு 5,8 க்கு அதிபதியான குருபகவான் துலாம் ராசியில் அமரும் பொழுது ( குருபகவான இயற்கையில் கோண அதிபதி ) கோண வீடான தனுசுவிற்கு 11 ல் சம பலத்துடன் அமர்ந்து 5 ம் பாவகத்திர்க்கு 100 சதவிகித நன்மையையும் , கேந்திர வீடான மீனத்திர்க்கு கோண அதிபதியாக வரும் குருபகவான் மீனத்திர்க்கு 8 ல் மறைவு பலம் பெறுவது 8 ம் பாவகத்திர்க்கு 100 சதவிகித நன்மையை தரும் , இந்த சிம்ம லக்கினத்திற்கு குருபகவான் கேந்திர , கோண வீட்டிற்கும் அதிபதியாக வந்தாலும் , இரண்டு பாவகத்திர்க்கும் நன்மையே செய்கிறார் தான் அமர்ந்த இடத்தில் இருந்து , துலாம் ராசியில் அமரும் குருபகவான் சிம்மலக்கினத்திர்க்கு 100 சதவிகித நன்மையே செய்கிறார் தனது வீடுகளுக்கு என்பது இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் .

கேள்வி :

3.பாவ‌க்கிர‌க‌ம் ஒன்று ஒரு திரிகோணத்திற்கும்,ஒரு ம‌றைவுக்கும் அதிப‌தியாக‌ வ‌ரும் போது ம‌றைவுக்கு கேந்திரமாகவும்,திரிகோண‌த்திற்கு  கோண‌மாக‌வும் அம‌ர்ந்தால் த‌ன‌து பாவ‌ங்க‌ளுக்கு தீமை தான் செய்யுமா?.ஏனெனில் ம‌றைவுக்கு அதிப‌தியாக‌ பாவ‌க்கிர‌க‌ம் வ‌ந்து அது கேந்திர‌த்தில் அம‌ரும் போது வ‌லிமை பெற்று ஜாத‌க‌ரை ப‌டுத்தி எடுத்துவிடும‌ல்ல‌வா?.(உதார‌ண‌ம் விருச்சிக‌ ல‌க்கின‌த்துக்கு செவ்வாய‌ன‌வ‌ர் 1,6க்கு அதிப‌தி என்ற‌ அடிப்ப‌டையில் 7ல் அம‌ர்ந்தால் ல‌க்கின‌த்துக்கு ந‌ன்மை செய்யும் ,இயற்கைப்பாவிக‌ள் கேந்திர‌மேறினால் ந‌ன்மை என்ற‌ அடிப்ப‌டையில்.ஆனால் 6க்கு அதிப‌தியாக‌வும் ,இய‌ற்கைப் பாவியாகவும் இருந்து கேந்திர‌மேறியதால் ஜாத‌க‌ருக்கும்,6க்கும் தீமை தான் செய்யும் என‌க்கொள்ள‌லாமா?).

பதில் : 

விருச்சக லக்கினத்திற்கு செவ்வாய் 7 ம் வீடான ரிஷபத்தில் அமர்வது , லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மைகளையும் , 6ம் வீடான மேஷத்திற்கு 2ல் ரிஷப ராசியில் அமர்வது 100 சதவிகித தீமையையும் தரும் என்பதில் சந்தேகமே இல்லை தம்பி .

கேள்வி :

  4.ச‌மீப‌த்திய‌ ப‌திப்பில் ராகு,கேதுப் பெய‌ர்ச்சியை ப‌ல‌ன் சொல்ல‌ எப்ப‌டிப் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து என்ப‌தில் ரிஷப லக்கினத்துக்கு 12,6 ம் வீடுக‌ளை கேந்திர‌மாக‌ப் பாவிக்க‌ச் சொல்லியிருந்தீர்க‌ள். கேந்திர‌ம் என்ப‌து 1,4,7,10ம் வீடுக‌ள் தானே?.இது கொஞ்ச‌ம் புதிதாக‌ இருந்த‌து.(செவ்வாய‌ன‌வ‌ர் 7க்கு அதிப‌தி என்ப‌தாலா?.இல்லை கால‌ புருஷ‌ த‌த்துவ‌ப்ப‌டியா? 12ம் வீட்டை கேந்திரமாக்கியது கூட செவ்வாய‌ன‌வ‌ர் 7க்கு அதிப‌தியாக வருவதால் எனக்கொண்டாலும்.6ம் வீட்டை கேந்திர‌மாக‌ ஏன் பாவிக்க‌ வேண்டும்).

பதில் :

எந்த ஒரு லக்கினம் என்றாலும் சரி , லக்கினம் , மூன்றாம் பாவகம் , பதினொன்றாம் பாவகம் இவை மூன்றும் சம வீடாக எடுத்துகொள்ளுங்கள் , ஐந்து , ஒன்பதாம் பாவகத்தை கோண வீடாக எடுத்துகொள்ளுங்கள் , இரண்டு , நான்கு , ஆறு , ஏழு ,எட்டு ,பத்து ,பனிரெண்டாம் வீடுகளை கேந்திர பாவகமாவும்  எடுத்துகொண்டு ஜாதக பலன் கண்டால் மட்டுமே ஜோதிட ரீதியான  பலன்களை தெளிவாக சொல்ல இயலும் , மேலும் விளக்கம் பெற தாங்கள் ஜோதிடத்தை எங்களது முறைப்படி கற்றுகொள்வது தங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் ஜோதிடத்தில் சரியான விளக்கம் கிடைக்கும் .

கேள்வி :

 5.ச‌ர‌,ஸ்திர‌,உப‌ய‌ ராசிக‌ளில் ந‌வ‌க்கிர‌க‌ங்க‌ள் த‌ரும் ப‌ல‌ன் என்ப‌து நெருப்பு,ம‌ண்,காற்று, நீர் த‌த்துவ‌த்தில் எவ்வாறு வித்தியாச‌ப்ப‌டுகிற‌து?.

பதில் :

தம்பி ஜோதிடத்தில் உள்ள சூட்சமமே இதுதான் , இதை தெரிந்து கொண்டால் நீயே  ஒரு சிறந்த ஜோதிடன் ஆகிவிடுவாய் , அதற்க்கு பிறகு எங்களுக்கு என்ன வேலை . இருந்தாலும் நீ நிச்சயம் ஒரு சிறந்த  ஜோதிட கலைஞனாக வருவாய் என்பதில் சந்தேகம் இல்லை , காரணம் உனது ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் வலிமை பெற்று இருக்கிறது .

கேள்வி :

  6. ம‌றைவு ஸ்தான‌ ராசிக‌ள் எவையெவை.ஒரு இட‌த்தில் 2ம் பாவ‌த்தை ம‌றைவு என‌க்குறிப்பிட்டிருந்தீர்க‌ள்.அது ப‌ண‌ப‌ர‌ம் இல்லையா?

பதில் :

ஒவ்வொரு பாவகத்திர்க்கும் , அந்த பாவகத்தில் இருந்து 2,6,8,12 ம் வீடுகள் மறைவு  ஸ்தானம் என்பதே உண்மை , பொதுவாக ஜாதகம் பார்க்கும் ஜோதிடர்கள் அனைவரும் லக்கினத்திற்கு  மறைவு ஸ்தானமான 6, 8,12 வீடுகளுக்கு  மட்டுமே முக்கியத்துவம் தருவார்கள் , உண்மையில் ஒவ்வொரு பாவகத்திர்க்கு  2,6,8,12 ம் வீடுகள் மறைவு ஸ்தானம் என்பதை உணராத காரணத்தாலேயே ஜோதிடபலன்கள் சொல்லும் பொழுது , பலன்கள் வேறுபடுகிறது அல்லது தெளிவான ஜோதிட பலன்களை சொல்ல முடியாமல் போகிறது  .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


உச்ச சுக்கிரன் குருவின் ஆட்சி வீட்டில் அமர்ந்து உடன் நீச புதன் இருக்கும் துலா லக்ன ஜாதகருக்கு நன்மை விளையும அல்லது தீமையா?




கேள்வி :

உச்ச சுக்கிரன் குருவின் ஆட்சி வீட்டில் அமர்ந்து உடன் நீச புதன் இருக்கும் துல லக்ன ஜாதகருக்கு நன்மை விளையும அல்லது தீமையா? ஏனென்றால் அது அவருக்கு 6 இடம் மற்றும் 12 , 6, 8 வீடுகளின் சம்பந்தம் உண்டாகிறது .இது என் நெடு நாள் ஐயம் .விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் .

பதில் :

ஒருவருடைய சுய ஜாதகத்தை பற்றி பலன் சொல்லும் பொழுது அந்த ஜாதகரின் பிறந்த தேதி , நேரம் , இடம் ஆகியவை தெளிவாக தெரிந்து கொண்டு , அதனை அடிப்படையாக வைத்து , ஜாதக கணிதம் செய்து , பிறந்த நேரத்தின் படி ஜாதகருக்கு லக்கினம் எதுவென்று தெளிவாக தெரிந்து கொண்டு , லக்கினம் ஆரம்பிக்கும் பாகை வைத்து , பனிரெண்டு வீடுகளின் நிலையை அறிந்து பலன் சொல்லும் பொழுதே , ஜாதகருக்கு தெளிவான பதிலை சொல்ல இயலும் , தாங்கள் கேள்வியில் இருந்து நான் அறிந்துகொள்ள இயலுவது ஒன்று மட்டுமே , அது ஜாதகருக்கு துலா லக்கினம் , லக்கினதிபதியான சுக்கிரன் குருவின் வீடான மீனத்தில் உச்சம் பெற்று அமர்ந்து இருக்கிறார் , இவருடன் புதன் நீச்சம் பெற்று அமர்ந்து இருக்கிறார் இதனால் துலா இலக்கின ஜாதகருக்கு நன்மை விளையுமா ? தீமை விளையுமா ?  என்பது தங்களின் கேள்வி.

 இதற்க்கு உண்டான பதில் சொல்ல வேண்டும் எனில் முதலில் துலா லக்கினத்திற்கு அதிபதியான சுக்கிரன் ஆறாம் பாவகத்தில் தான் அமர்ந்திருக்கிறார் என்றால் நிச்சயம் , ஜாதகருக்கு தீமைதான் செய்வார் , அவர் உச்சம் பெற்று அமர்ந்திருந்தாலும் எவ்வித நன்மையையும் ஜாதகருக்கு இல்லை , ஒருவேளை சுய ஜாதகத்தில் பாவக அமைப்பின் படி மீனத்தில் உள்ள ஐந்தாம் பாவகத்தில் ( இதை லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை வைத்து நிர்ணயம் செய்ய வேண்டும் ) உச்சம் பெற்று அமர்ந்து இருக்கின்றார் என்று வைத்து கொள்ளுங்கள் , ஜாதகர் லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மையை செய்வார் .

எப்படி எனில் பாவக அமைப்பின் படி சுக்கிரன் ஆறில் அமர்ந்தால் , ஜாதகர் தனது மன நிம்மதியை தானே கெடுத்து கொள்வார் , ஜாதகர் எதிரிகளின் சூழ்சி வலையில் தானே சென்று மாட்டிக்கொள்ளும் மன நிலையை தரும் , மேலும் ஜாதகர் ஒரு மன நிம்மதியற்ற சூழ்நிலையிலேயே ஜீவித்து இருக்க வேண்டி வரும் , ஜாதகர் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அனைவரிடமும் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பும் , ஜாதகரால் அதை சமாளிக்க  இயலாமல் மனதை கெடுத்து கொண்டு லாகிரி வஷ்துகளுக்கு அடிமையாகும் சூழ்நிலையை தரும் , இதானால் ஜாதகரின் உடல் நிலை கடுமையாக பாதிக்க படும் .

 பாவக அமைப்பின் படி சுக்கிரன் ஐந்தில் அமர்ந்தால் , ஜாதகர் தனது மனதில் நினைக்கும் காரியங்களை சாதிக்கும் வல்லமையை தரும் , பரந்த மனம் , நன்மை தீமையை ஒன்றாகவே கருதும் மனநிலை , குலதேவதையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் தன்மை , பெண் தெய்வங்களின் அருளாசி விரைவில் கிடைக்கும் யோகம் , எப்பொழுதும் சந்தோசமான மனநிலையுடன்  ஜாதகர் வாழும் தன்மை , மன நிலையை சிறப்பாக இருப்பதால் ஜாதகரின் உடல் நிலையில் எவ்வித  பாதிப்பையும் சந்திக்காத தன்மை என சுக்கிரனால் ஜாதகர் அதிக நன்மைகளை  பெறுவார் , குறிப்பாக சிறந்த சிந்தனை ஆற்றலும் , தன்னம்பிக்கையும் , உறுதியான  மனநிலையையும் ஜாதகர் எப்பொழுதும் கொண்டு இருப்பார் .

மேற்கண்ட பலன்கள் யாவும் ஜாதகருக்கு நடை பெற வேண்டும் எனில் தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்தி  எதுவென்றாலும் , லக்கினத்துடன் தொடர்பு பெற்று பலனை தரவேண்டும் அப்பொழுதுதான்  ஜாதகருக்கு மேற்கண்ட நன்மையோ ! தீமையோ ! நடை முறையில் வரும் , ஒரு வேலை  மேற்கண்ட அமைப்பில் ஜாதகம் அமைந்து நடை பெரும் திசை மற்றும் புத்திகள் வேறு வீடுகளின் ( பாவகத்தின் ) பலனை நடத்தினால் லக்கினத்திற்கு உண்டான பலனை ( நன்மையோ தீமையோ ) ஜாதகர் சிறிதும் அனுபவிக்க மாட்டார் .

அடுத்த கேள்வி நீச்சம் பெற்ற புதன் என்ன செய்வார் என்பதை பார்ப்போம் , மீனத்தில் நீச்சம் பெரும் புதன் துலா லக்கினத்திர்க்கு 12 ம் வீட்டிற்கு அதிபதியாக வருகிறார் , இவர் சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து அமர்ந்திருந்தால் மீனத்தில் தனது வீட்டிற்கு ஏழில் அமர்ந்து,  நீச்சம் பெற்றிருந்தாலும் ஜாதகர் 12 ம் பாவக அமைப்பில் இருந்து அதிக நன்மைகளை பெறுவார் எடுத்துகாட்டாக , நல்ல மனநிம்மதி , எதிரிகளை பந்தாடும் வல்லமை , நல்ல நிம்மதியான தூக்கம் , அதிக முதலீடு செய்வதால் லாபம் , திருமண வாழ்க்கையில் நல்ல இல்லற சுகம் , தம்பதியர் ஒற்றுமை , பிறவி  பயனை முழுவதுமாக அடையும் யோகம் என அதிக நன்மைகளை பெறுவார் .

 ஒருவேளை சுய ஜாதகத்தில் பாவக அமைப்பின் படி மீனத்தில் ( புதன் தனது பாவகத்திர்க்கு ) உள்ள ஆறாம்  பாவகத்தில்  ( இதை லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை வைத்து நிர்ணயம் செய்ய வேண்டும் ) நீச்சம் பெற்று அமர்ந்து இருக்கின்றார் என்று வைத்து கொள்ளுங்கள் , ஜாதகர்  12 ம் பாவக அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் , மேற்சொன்ன  நன்மையான பலன்களுக்கு எதிர்மறையான பலன்கள் நடைபெறும் .


மேலும் துலா லக்கினத்திர்க்கு 12 ம் வீட்டிற்கு அதிபதியாக வரும் புதன் ஒரு வேலை சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் இருப்பின் ஜாதகருக்கு மீனத்தில் நீச்சம் பெற்று தனது வீட்டிற்கு  7 ல் அமர்வது மேற்க்கண்டவாறு தீமையான பலன்களையும் , 6 ல் அமருவது மேற்க்கண்டவாறு  நன்மையான பலன்களையும் வாரி வழங்கும் , இங்கே புதன் என்ற கிரகம் தனது  பாவகத்திர்க்கு இரண்டு விதமான தன்மையும் , நான்கு விதமான பலனையும் தரும் என்பதனை சிறந்த  ஜோதிட அறிவு கொண்டவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள இயலும் .

ஜோதிட தீபம் மேற்சொன்ன அனைத்து பலன்களும் சுய ஜாதகத்தை அடிப்படையாக கொண்டே நிர்ணயம்  செய்ய இயலும் , மேலும் தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்திகள் மேற்கண்ட பாவகத்தின் பலனை தொடர்பு படுத்தி நடத்தினால் மட்டுமே இது நடைமுறைக்கு வரும் , இல்லை  எனில் இவையாவும் சுய ஜாதகத்தில் நீறு பூத்த நெருப்பாக இருக்குமே அன்றி , எவ்வித  நன்மை தீமையும் தர வாய்ப்பில்லை என்பதை உணர வேண்டும் .

ஆகவேதான் ஜோதிட தீபம் தங்களது சுய ஜாதகத்தை பற்றி தெளிவு பெற , ஜாதகத்தின் உண்மை  நிலையை உணர்ந்து , அதன் வழியில் வாழ்க்கையை செம்மையாக அமைத்துக்கொள்ள  தனிப்பட்ட முறையில் ஜோதிட ஆலோசனை பெற்று கொள்ளுங்கள் என்று  அறிவுறுத்துகிறது , இப்படி பொதுவாக கேள்விகள் கேட்டால் , சரியான பதில் சொல்ல இயலாது என்பதை அன்பர்கள் அனைவரும் உணரவேண்டு என்று  பணிவுடன் வேண்டுகிறது .

எந்த ஒரு நல்ல விஷயங்களையும் முறைப்படி தெரிந்து கொள்வது , அதன் படி நடப்பதும் சம்பந்தபட்ட நபர்களுக்கு முழுமையாக  பலன்தரும் .

இதைதான் பெரியவர்கள் " மூத்தோர் சொல்லும் , முதிர்ந்த நெல்லிக்கனியும் , முன்னால் கசக்கும் பின்னல் இனிக்கும் " என்றனர் .

அதாவது பெரியவர்கள் கூறும் அறிவுரை முதலில் கேட்க்கும் பொழுதும் , முதிர்ந்த நெல்லிக்கனியும்  உண்ணும் பொழுதும் கசப்பாக தெரியும் , அதை அனுபவத்தில் உணரும் பொழுது இனிமையாக இருக்கும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

குரு பகவானின் ஆட்சி வீடான மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெரும் பொழுது ஜாதகர் பெறும் நன்மைகள் !



சுய ஜாதகத்தில்  ஒருவருக்கு சுக்கிரன் உச்சம் பெற்று நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகளை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் , பொதுவாகவே ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று அமர்ந்திருந்தால் ஜோதிடர்களின் கணிப்பு ஜாதகர் சுக போக வாழ்க்கையையும் , பொருளாதார அமைப்பில் தன்னிறைவையும் , மனிதன் பூமியில் வாழ்வதற்கு தேவையான வசதி வாய்ப்புகளை பெற்று நல்ல ராஜயோக பலன்களை பெறுவார் என்றும் , ஜாதகர் பெண் வசியம் கொண்டுள்ளவராக திகழ்வார் என்று சிலாகித்து சொல்லும் ஜோதிடர்களும் உண்டு .

இதில் எந்த அளவிற்கு உண்மை என்பதை பற்றி இனி பார்ப்போம் , சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகனுக்கு  பெண்களால் விரும்பபடுபவராகவும் , கவர்சிகரமான தோற்றம் கொண்டவராகவும் , தனது இனிமையான பேச்சு திறமையால் பெண்களை கவரும் தன்மை கொண்டவராகவும் , பெண்கள் ஆதரவு வாழ்நாள் முழுவதும் பெறுபவர் என்பது நிச்சயம், இதில் எவ்வித சந்தேகமும் இல்லை , ஆனால் ஜாதகனுக்கு இங்கு அமரும் சுக்கிரன் பேரின்பம் எனும் ஞானத்தை தருவாரே தவிர சிற்றின்பத்தில் ஈடுபாடு கொண்டவராக ஜாதகர் ஜீவித்து இருக்க வாய்ப்பு இல்லை.

மேலும் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் , ஆடை ஆபரணம் , அலங்கார பொருட்கள் , பெண்கள் விரும்பி பயன்படுத்து பொருட்கள் சார்ந்த தொழில்களில் சிறப்பான முன்னேற்றத்தை தரும் , சுய ஜாதகத்தில் இந்த மீனம் ஜாதகருக்கு எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு விருத்தியையும் , முன்னேற்றத்தையும் திடீர் அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும் .

இதற்க்கு காரணம் மீனம் ராசி கால புருஷ தத்துவ அமைப்பின் படி பனிரெண்டாம்  பாவகமாக இருப்பதும் , உபய நீர் ராசியாக அமைவதுமே இதற்க்கு முக்கிய  காரணம் ,  மேலும் சுக்கிரன் நீர் ராசியில் அமரும் பொழுது ஜாதகரின் எண்ணம் , மற்றும் மனநிலை பரிசுத்தமானதாக இருக்குமே அன்றி தீய எண்ணங்களை கொண்டவராக இருக்க சிறிதும் வாய்ப்பு இல்லை , ஒரு மனிதனின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஜாதகரின் மன நிலை முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகை ஆகாது , சுக்கிரன் ஆட்சி பெற்று நல்ல நிலையில் அமரும் பொழுது , ஜாதகர் முற்போக்கு சிந்தனை கொண்டவராகவும் , புதுமையான விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டவரகாவும் , மாற்று சிந்தனை உள்ள சிறந்த மனிதராக காணப்படுவார்.

எனவே ஜாதகர் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் பல புதிய பரிணாமங்களை  காணமுடியும் , புதிய கண்டுபிடிப்புகள் , பிரச்சனைகளுக்கு வித்தியாசமான  நல்ல தீர்வுகளை தரும் அறிவாற்றலை பெற்றிருப்பார் , ஜாதகர்  செய்யும் காரியங்கள் யாவும் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெரும் , ஜாதகரை நாடி வருபவர்களுக்கு  நிச்சயம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை  தரும் ஆலோசனைகளை வழங்கும் ஆற்றல் நிச்சயம் ஜாதகருக்கு உண்டு , மீனம் என்பது உபய ராசியாக வருவதால் இங்கு உச்சம் பெற்று  அமரும் சுக்கிரன் ஜாதகர் மற்றும் ஜாதகரை சார்ந்தவர்களுக்கு அதிகபட்ச  நன்மைகளையே தருவார் என்பது ஒரு சிறப்பான விஷயமாக கருதலாம் . 

கால புருஷ தத்துவ அமைப்பின் படி பனிரெண்டாம் வீடான மீனத்தில்  உச்சம் பெரும் சுக்கிரன், ஜாதகருக்கு நேர்மையான நிறைவான சுகபோக வாழ்க்கையுடன், நல்ல ஞானத்தையும் தருவார், எனவே ஜாதகர் தனக்கு கிடைத்ததை  வைத்து திருப்தியுடன் வாழும் மன நிலையை பெற்று இருப்பார் , இந்த மன நிலையை பெற்ற நபர்களுக்கு இறை அருள் பரிபூரணமான சகல செல்வத்தையும் வாரி வழங்குகிறது, என்பதை மறுக்க இயலாது .

மனிதன் இந்த திருப்தியான மனநிலை பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதே உண்மை , அப்படி பட்ட திருப்தியான மன நிலையை வழங்குவதில் நீர ராசியான மீனத்தில் சுக்கிரன்  நல்ல நிலையில் அமரும் பொழுது நிச்சயம் வழங்குகிறார், ஆக சுக போகியான சுக்கிரனும் நல்ல நிலையில் அமர்ந்தால் ஜாதகருக்கு நல்ல ஞானத்தை வாரி வழங்குவதில் தவறுவதில்லை என்பதை இங்கு பதிவு செய்ய ஜோதிடதீபம் கடமை பட்டுள்ளது .

    
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696