வெள்ளி, 29 மார்ச், 2013

லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் நிலை என்ன ?





அன்பரே இது ஒரு சிறந்த கேள்வியாக ஜோதிடதீபம் கருதுகிறது .


கால புருஷ தத்துவ விதிப்படி ராசிகளை சரம் ஸ்திரம் உபயம் என்று மூன்று பிரிவுகளாக இயற்க்கை பகுத்து வைத்திருக்கிறது , இதில் சர ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு 11ம் பாவகம் பாதக ஸ்தானமாகவும், ஸ்திர ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு 9ம் பாவகம் பாதக ஸ்தானமாகவும், உபய ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு 7ம் பாவகம் பாதக ஸ்தானமாக இயற்கையால் நிர்ணயம் செய்யப்படுகிறது .

ஒருவருடைய லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையில் எவ்வித இன்னல்களை சந்திக்க வேண்டி வரும், என்பதை இந்த பதிவில் சிந்திப்போம் , பொதுவாக ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது அவ்வளவு நன்மையை தருவதில்லை என்பதே முற்றிலும் உண்மை , எனவே ஒருவருடைய ஜாதகத்தில் உடலாக , உயிராக , மனதாக  மதிக்கப்படும் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் இலக்கின வழியில் இருந்து அனுபவிக்க வேண்டிய பலன்களை பற்றி இனி பார்ப்போம் .

சர ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது , ஜாதகருக்கு தரவேண்டிய பதிப்புகளை நிலைத்து நின்று செய்யும் , மேலும் ஜாதகரின் உடல் நிலை , மன நிலை , அறிவாற்றல் , செயல்பாடுகளின் மூலம் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் அதிக இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையை தாமே உருவாக்கி கொண்டு தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்வார் , மேலும் தனக்கு வரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பை ஜாதகர் தவறவிடும் தன்மையை தரும் .

முன் பின் சிந்திக்காமல் செய்யும் காரியங்களால் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் , ஜாதகருக்கு சிறப்பான வளரும் சூழ்நிலையை தராது , கல்வியில் தடையை தரும் , திருமண தாமதத்தை தரும் , தொழில் முடக்கம் அல்லது வேலைவாய்ப்பற்ற நிலை தரும் , ஆக சர லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர்  இலக்கின வழியில் இருந்து நிலையான இன்னல்களை சந்திக்க வேண்டி வரும்  .

ஸ்திர ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது , ஜாதகருக்கு தர வேண்டிய பாதிப்புகளை  விரைந்து செய்யும் அதுவும் ஜாதகர் எதிர்பாராத நேரத்தில் வாழ்க்கையில்  மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தி சென்றுவிடும் , இதில் இருந்து  ஜாதகர் மீண்டு எழுந்து வர அதிக கால நேரத்தை எடுத்துகொள்ள வேண்டி வரும் , இந்த தீமையான பலன்கள் யாவும் ஜாதகரின் வாழ்க்கையில் அதிக மாற்றங்களை தரும் நேற்றுவரை நன்றாக இருந்தவர் ஒரு இரவில் அனைத்தையும்  இழந்து , ஒன்றும் இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார் , இருப்பினும்  ஜாதகர் இவற்றில் இருந்து மீண்டு வரும் வாய்ப்பை நிச்சயம் தரும் .

மேலும் ஜாதகரின் உடல் நிலை , மன நிலை , அறிவாற்றல் , செயல்பாடுகளின் மூலம் தனக்கு நடக்கும் இன்னல்களை ஏற்படுத்தி கொள்ளும் தன்மையை தரும் , குறிப்பாக தனது கல்வி , தொழில் , குடும்ப வாழ்க்கை என்ற அமைப்புகளில் வெகுவாக பாதிக்கும் சூழ்நிலையை தரும் , ஸ்திர ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும்  பொழுது, விரைவான கெடு பலன்களை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டி வரும் , இருப்பினும் இவை அனைத்தும் ஜாதகரின் நன்மைக்கே என்பதை இறுதியில் ஜாதகர் உணரக்கூடும் .

உபய ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ,  ஜாதகருக்கு தர வேண்டிய பாதிப்புகளை ஜாதகருடைய அமைப்பில் இருந்து குறைந்த இன்னல்களை அனுபவித்த  போதிலும் , ஜாதகரின் நண்பர்கள் , வாழ்க்கை துணை , கூட்டாளிகள்  மூலமாகவே அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் , எனவே  ஜாதகர் தனது நண்பர்கள் , வாழ்க்கை துணை , கூட்டாளிகளை தேர்ந்தெடுக்கும்  பொழுது அதிக கவனமுடன் இருப்பது நலம் ஏனெனில் ஜாதகர்  அவர்கள் வழியில் இருந்தே அதிகபடியான பாதக ஸ்தான பலன்களை அனுபவிக்க வேண்டி வரும் .

மேலும் ஜாதகரின் உடல் நிலை , மன நிலை , அறிவாற்றல் , செயல்பாடுகளின் தன்மையை ஜாதகரின் நண்பர்கள் , கூடாளிகள் , வாழ்க்கை துணையே நிர்ணயம்  செய்து ஜாதகரை மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்குவார்கள் , குறிப்பாக மற்றவர் செய்யும் காரியங்களுக்கு ஜாதகர் வீண் பலி பாவங்களை அனுபவிக்க  வேண்டி வரும் , குறிப்பாக ஜாதகரின் பொது வாழ்க்கை , தொழில் மற்றும்  திருமண வாழ்க்கை கேள்வி குறியாக மாறிவிட அதிக வாய்ப்புகள் ஏற்ப்படுத்தும் , தனது நண்பர்கள் , கூட்டாளிகள் , வாழ்க்கை துணையின் செயல்பாடுகள்  மூலம் ஜாதகர் 100 சதவிகித தீமையான பலனையே அதிகம் அனுபவிக்க  வேண்டி வரும் என்பதே வருத்தம் அளிக்கும் விஷயம் , இவரின் தொடர்  தோல்விகளுக்கு காரணமாக மேற்க்கண்டவர்களின் தொடர்பே காரணமாக அமைந்துவிடும்  என்பதே உண்மை .

சர லக்கினத்தை சார்ந்தவர்கள் தனது அதிர்ஷ்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல்  இருப்பதாலும் , ஸ்திர லக்கினத்தை சார்ந்தவர்கள் தனது செய்கையினாலும் சிந்தனையினாலும் தனக்கு இன்னல்களை தானே தேடி கொள்வதாலும் , உபய லக்கினத்தை சார்ந்தவர்கள் மற்றவர்களாலும் பாதக ஸ்தான  பலனை அனுபவிக்க வேண்டி வரும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


திங்கள், 25 மார்ச், 2013

2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா ? இது சர்ப்ப தோஷத்தை தருமா ?



பொதுவாக 

( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , 
( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது,
( 3 ) 5ம் மற்றும் 11ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , 
( 4 ) 6ம் மற்றும் 12ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, 

சர்ப்ப தோஷம் என்றும் , இந்த நிலையை பெற்றுள்ள ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் அனைவரும் திருமண தாமதம் , மற்றும் குடும்ப வாழ்க்கையில் அதிக இன்னல்களையும் அனுபவிக்க வேண்டி வரும்என்றும்.

இதனால்  ஜாதகர் வாழ்க்கையில் அதிக துன்பங்களை ஜீவன வழியிலும் பொருளாதார ரீதியாகவும் அனுபவிக்க வேண்டிவரும் என்றும் பாரம்பரிய ஜோதிட முறையில் பலனாக பல ஜோதிடர்கள் சொல்வது உண்டு , இவை அனைத்தும் பொதுவாக சொல்லப்படும் கருத்தே அன்றி ஜாதகத்தை தெளிவாக ஆராய்ந்து கணிதம் செய்து சொல்லப்படும் பதில்கள் அல்ல என்பதே உண்மை .

 லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை வைத்து மேற்க்கண்ட பாவகங்களில்தான் ராகு கேது அமர்ந்திருக்கின்றனர என்று நிர்ணயம் செய்வது மிக முக்கியம் , ஏனெனில் சில ஜாதகங்களில் ராகு கேது கட்டங்களில் அமர்ந்திருக்கும் நிலையை வைத்து ராகு கேது கிரகங்களின் நிலையினை நிர்ணயம் செய்வது என்பது தவறான பலனை சொல்வதற்கு வழிகாட்டிவிடும் , ஆக லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை ஆதாரமாக வைத்து உண்மையில் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை சரியாக நிர்ணயம் செய்வது ஒரு தலை சிறந்த ஜோதிடனின் கடமை.

 எடுத்துகாட்டாக :

கிழ்க்கண்ட சிம்ம இலக்கின ஜாதக அமைப்பில் மேலோட்டமாக பார்க்கும் பொழுது 6 ல் கேதுவும் 12 ல் ராகுவும் அமர்ந்திருப்பதை போன்ற தோற்றத்தை தரும் ஆனால் உண்மையில் பாவக அமைப்பின் படி கணிதம் செய்து பார்க்கும் பொழுது 5ல் கேதுவும் , 11ல் ராகுவும் அமர்ந்திருக்கிறார்கள் என்ற உண்மை புரியும் , பொதுவாக ஜோதிடத்தை பற்றிய அடிப்படை விஷயம் தெரியாதவர்கள் ஜாதக கட்டத்தை பார்த்த உடனே கேது 6லும் ராகு 12லும் அமர்திருப்பதாக கணித்து குத்து மதிப்பாக பலனை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் , ஆனால் உண்மையில் ஜோதிட கணிதம் தெரிந்த ஜோதிடர்கள் கிரகங்களின் சரியான அமரும் நிலையை வைத்து பலன் காணுவார்கள் .



குறிப்பு : 

( 1 ) லக்கினம் என்பது சிம்மத்தில் 148.04.24 பாகை முதல் கன்னியில் 178.35.45 பாகை வரை வியாபித்து இருக்கிறது ,

( 2 ) ஜாதகரின் 5ம் பாவகம் தனுசுவில் 267.52.60 பாகை முதல் மகரத்தில் 297.40.34 பாகை வரை வியாபித்து இருக்கிறது , 

( 3 )ஜாதகரின் 11ம் பாவகம் மிதுனத்தில் 87.52.60 பாகை முதல் கடகத்தில் 117.40.34 வரை வியாபித்து இருக்கின்றது எனும் பொழுது,

( 4 ) மகரத்தில் 273.11.52 பாகையில் அமர்ந்திருக்கும் கேதுவும் கடகத்தில் 93.11.52 பாகையில் அமர்ந்திருக்கும் ராகுவும் எப்படி 6 மற்றும் 12 ம் பாவகத்தில் அமர்வதாக எடுத்துகொள்ள இயலும்.

 ( எனவேதான் இங்கு சரியான ஜோதிட கணிதத்தை பயன்படுத்தி பலன் காணவேண்டும் என்ற அவசியம் ஏற்ப்படுகிறது .) 

கணிப்பு என்பது எவரும் எளிதில் செய்துவிட முடியும் , கணிதம் என்பது முறையாக  ஜோதிட கணிதத்தை அறிந்தவர்களால் மட்டுமே செய்யகூடிய ஒரு விஷயம்  , எனவே இங்கே பலகாலமாக ஜாதகத்தில் ராகு கேது 6ல் மற்றும் 12ல் என்று நினைத்து கொண்டு பலன் சொல்லும் பொழுது , ஜாதகனுக்கு அந்த  பலன்கள் எப்படி பொருந்தும் மேலும் அது சரியான கணிதமும்  இல்லை என்பதே அடிப்படை விஷயமாக மாறிவிடுகிறது , இங்கே   ஏமாற்றம் பெறுவது  பலன் சொன்ன ஜோதிடனும் , பலன் காண வந்த ஜாதகனும்  என்பதை ஒரு சரியான கணித ஜோதிடன் மூலமாக மட்டுமே தெரிய  வரும் அதுவும் அந்த ஜாதகனுக்கு பிராப்தம் இருந்தால் .

எனவே முதலில் ஒரு கிரகம் எந்த பாவகத்தில் அமர்திருக்கிறார் என்ற அடிப்படை  விஷயம் கூட தெரியாத ஜோதிடனிடம் ஆலோசனை பெற்று ஒருஜாதகர்  தனது வாழ்க்கையை சரியான வழியில் நடத்தி செல்வது என்பது எப்படி ? என்ற  கேள்வி இங்கு தோன்றுகிறது .

நிறை ஜாதகங்களில் இதை போன்ற  குழப்பங்களை  காணமுடிகிறது , இதை பயன்படுத்திக்கொண்டு  சில ஜோதிடர்கள் ராகு கேது தோஷம் , சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் , களத்திர தோஷம் என்று  மற்றவர்கள் வாழ்க்கையில் புகுந்து விளையாடி விடுகின்றனர் , இதை  உணராத  மக்கள் அனைவரும் தனக்கு எதோ பெரிய தோஷம் இருப்பதாக நினைத்துகொண்டு  தனது வாழ்க்கையை சரியாக நிர்ணயம் செய்ய இயலாமல்  தடுமாறுகின்றனர் என்பதே உண்மை .

அடுத்து மேற்கண்ட அமைப்பில் அமர்ந்த ராகு கேது கிரகங்கள் ஜாதகனுக்கு நன்மையை  செய்கிறனவா ? தீமையை செய்கிறனவா ? என்பதை நிரண்யம்  செய்யவேண்டும் . இதற்க்கு முறையான ஜோதிட கணிதம் பயின்றவர்கள் உடனடியாக பதில் சொல்விட முடியும் , ஆனால் ஜோதிடத்தை பற்றிய அடிப்படை விஷயம் அறியாதவர்களால் ஜாதகனை குழப்பம் பெற செய்ய முடியுமே  தவிர சரியான பலனை சொல்ல இயலாது. 

மகரத்தில் 5ல் அமர்ந்த கேது பகவான் 100 சதவிகித தீமையையும் , கடகத்தில் 11ல் அமர்ந்த ராகு பகவான் 100 சதவிகித நன்மையையும் செய்வார் என்பதே உண்மை , இந்த பலன்கள் எப்பொழுது நடை முறைக்கு வரும் என்பது அடுத்த கேள்வி ? 

 5 மற்றும் 11 ம் பாவகத்தின் பலனை ஏற்று நடக்கும் திசை எதுவென்று அறிந்து அதன்  பலனை சொல்ல வேண்டும் . ஒருவேளை ஜாதகத்தில் நடை பெரும் அனைத்து திசைகளும் இந்த பாவகத்தின் பலனை தரவில்லை ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகன் மேற்கண்ட பாவகத்தின் நன்மை தீமை பலனை சிறிதும் அனுபவிக்க மாட்டார் என்பது குறிப்பிட தக்கது .

2ல் அல்லது 8ல் நல்ல நிலையில் அமரும் ராகு கேது கிரகத்தால் ஒருவருடைய வாழ்க்கை சிறிதும் பாதிக்க வாய்ப்பில்லை என்ற உண்மையை உணருவது அவசியம் , ஒருவேளை 2ல் அல்லது 8ல் பாதிப்பை தரும் நிலையில் அமரும் ராகு கேது கிரகத்தால் ஜாதகர் கடுமையாக மேற்கண்ட பாவக  வழியில் இருந்து இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் என்பதையும்  மறுப்பதற்கு இல்லை எனவே ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கேது கிரகங்கள் எங்கு அமர்ந்து இருக்கிறார்கள் , அவர்கள் ஜாதகருக்கு நன்மையை செய்துகொண்டு இருக்கிறார்களா இல்லையா ? என்பதை நிர்ணயம்  செய்து , நடப்பு திசையில் அதன் பலன்கள் நடை பெறுகிறத என்பதை  ஜோதிட கணிதம் செய்து தெளிவாக தெரிந்துகொண்டு பலன் சொல்வதே நம்மை நாடி வரும் அன்பர்களுக்கு நன்மை தரும் .

பொதுவாக 2ல் மற்றும் 8ல் அமரும் ராகு கேது நன்மை செய்யுமா ? தீமை செய்யுமா ? என்பதை பற்றிய ஒரு சிறு விளக்கம் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் 2ம் பாவகம் மற்றும் 8ம் பாவகம் ரிஷபம் , மிதுனம், கன்னி  ( சூரியனுடன் 14 பாகைக்குள் சேராத புதன் ), கடகம் ( வளர்பிறை சந்திரன் ) துலாம் , தனுசு , மீனம் ராசிகளாக வந்து இங்கு அமரும் ராகு கேது 100 சதவிகித தீமையை செய்யும் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் 2ம் பாவகம் மற்றும் 8ம் பாவகம் மேஷம் , மிதுனம்,கன்னி ( சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்த புதன் ) , கடகம் ( தேய் பிறை சந்திரன் ), சிம்மம் , விருச்சகம் , மகரம் , கும்பம் ராசிகளாக வந்து இங்கு அமரும் ராகு கேது 100 சதவிகித நன்மையை செய்யும் , என்பதே உண்மை எனவே சுய ஜாதகத்தில் ராகு கேது 2ல் 8ல் அமர்ந்திருக்கும் ஜாதக அமைப்பை பெற்றவர்கள் இதை வைத்து ராகு கேது நன்மை செய்கிறதா ? தீமை செய்கிறதா என்பதை  நிர்ணயம் செய்து கொள்ளலாம் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


ஞாயிறு, 24 மார்ச், 2013

ஜோதிட ஆலோசனை : ஜாதக பொது பலன்கள்



லக்கினம் : ரிஷபம்  
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : மிருகசீரிடம் 1 ம் பாதம்  

ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :

1,7 ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது இலக்கின வழியில் இருந்து நீண்ட ஆயுள் , நல்ல ஆரோக்கியம் , சிறப்பாக வளரும் சூழ்நிலை , தன்னம்பிக்கை சுய கட்டுப்பாடுடன் வாழும் தன்மை , நினைத்ததை சாதிக்கும் யோகம் , நல்ல நண்பர்கள் , சிறந்த கூட்டாளிகள், பொதுமக்கள் ஆதரவு , எங்கு சென்றாலும் யோக வாழ்க்கை , வெளிநாடுகளில் இருந்து வரும் திடீர் செல்வ சேர்க்கை , கூட்டு முயற்ச்சியில் கிடைக்கும் வெற்றி , வாழ்க்கை துணையின் வழியில் இருந்து அபரிவிதமான யோகம் , எதிர்பாலினரின் ஆதரவு அவர்கள் வழியில் இருந்து வரும் முன்னேற்றம் என இலக்கின வழியில் இருந்து ஜாதகரை மிகசிறந்த நன்மைகளை வாரி வழங்கும் .

7ம் பாவக வழியில் இருந்து நண்பர்கள் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் மேன்மை பெரும் அமைப்பு , மிகசிறந்த தொழில் அதிபர்களின் சேர்க்கை நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை துணை , சிறந்த கல்வி அறிவு , குறிப்பாக வியாபாரம் சம்பந்தபட்ட விஷயங்களில் ஜாதகரின் தகப்பனாருக்கு மிகுந்த முன்னேற்றத்தை வாரி வழங்கும் . தனது தகப்பனாருக்கு தொழில் ரீதியாகவும் , பொருளாதார ரீதியாகவும் மிகுந்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் .

2,3,6,8,10,11 ம் வீடுகள் திடீர் அதிர்ஷ்டத்தை தரும் , 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 2ம் பாவக வழியில் இருந்து வட்டி  வரவு , கடன் கொடுப்பதால் பெறுவதால் லாபம் , ஓவர் டிராப்ட்  வசதி , தேர்வில் வெற்றி , வீட்டு செல்ல பிராணிகள் மூலம் லாபம்  பண்ணை தொழில்கள் , விவசாயம் கால்நடைகள் வளர்ப்பு மருந்து மருத்துவ உபகரணம் மூலம்  லாபம் என்ற வகையிலும் 

3ம் பாவாக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம் , பதவி உயர்வு , புத்திசாலித்தனம் , தைரியம் , எதிரிகளை வெற்றி கொள்ளும் யோகம் , விரைவான வளர்ச்சி , வங்கிகள் மூலம் லாபம் , வழக்குகளில் தனலாபம் , வெற்றி , உடல் ரீதியான பிரச்சனைகளை தாங்கும் தன்மை , சுலபமான திடீர் தன பிராப்தி என மிகுந்த நன்மைகளை தரும் .

6 ம் பாவக வழியில் இருந்து உடல் ரீதியான சிறு சிறு தொந்தரவுகள் , வயிறு சம்பந்தபட்ட இன்னல்கள் , தேர்வில் பரிச்சையில் வெற்றி , வழக்குகளில் வெற்றி , திடீர் உடல் நல பாதிப்பு , பிறரால் ஜாதகருக்கு அதிக  தொந்தரவுகள் , தனது தகப்பனாருக்கு திடீர் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் தன்மை என மிகுந்த நன்மையை தரும் .

 8 ம் பாவக அமைப்பில் இருந்து எவ்வித தடையும் இன்றி அனைத்திலும் வெற்றி பெரும் அமைப்பு , ஜாதகரின் அமைப்பால் குடும்பத்தில் முன்னேற்றம் , சுப நிகழ்சிகள் மூலம் லாபம் , நீண்ட ஆயுள் , நிறைவான செல்வாக்கு திடீர் தனவந்தனாகும் யோகம் , வண்டி வாகனம் மூலம் எதிர்பாராத  முன்னேற்றம் , மண் , நிலம் சம்பந்தபட்ட அமைப்பில் திடீர் அதிர்ஷ்டம் , புதையல் யோகம் என மிகுந்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் .

10ம் பாவக வழியில் இருந்து தனது வேலையை தானே செய்யும் தன்மை , செய்யும் பணியில் அதிக ஈடுபாடு , எதிலும் முழு முயற்சியுடன் வெற்றி பெரும் அமைப்பு ,  தனது தகப்பனாருக்கு பொருளாதார முன்னேற்றம் மற்றும் திடீர் செல்வ சேர்க்கையை தரும் யோகம் , தனது தகப்பனாருடன் அதிக கருத்து வேறுபாடு கொள்ளும் மன நிலை எனற வகையில் பலன்களை தரும் .

11 ம் பாவக அமைப்பில் இருந்து ஜாதகர் நீடித்த அதிர்ஷ்டம் தனது பெற்றோருக்கு யோக வாழ்க்கையும் , திடீர் முன்னேற்றத்தையும் தரும் தன்மை , அவர்கள் வழி சொத்து சுக சேர்க்கை , செய்யும் செயல்களில் வெற்றி மேல் வெற்றி , தான் கற்ற கல்வி மூலம் வாழ்க்கையில் மிகசிறந்த இடத்தை பெரும் யோகம் , வெளிநாடுகளில் இருந்து மிகுந்த பண வரவு , லாட்டரியில் யோகம் என ஜாதகருக்கு நீடித்த அதிர்ஷ்டத்தை வாழ்நாள் முழுவதும்  தந்துகொண்டே இருக்கும் .

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , மண் மனை வண்டி வாகன யோகத்தையும் , சொந்த ஊரில் சிறப்பான முன்னேற்றங்களையும் , உயர்கல்வியில் முதல் நிலையில் தேர்ச்சி பெரும் அமைப்பையும் , சிறந்த தொழில் வாய்ப்புகளையும் வாரி வழங்கும் , குறிப்பாக தனது தாயாருக்கு சிறந்த வாழ்க்கையை தரும் , அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெரும் யோகத்தை ஜாதகர் நிச்சயம் பெறுவார் .

5,9 ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது நல்ல உடல் ஆரோக்கியம் , மன வலிமை , விரைவாக முடிவெடுக்கும் தன்மை , பல்துறையில் ஆராய்ச்சி , அதி புத்திசாலித்தனம் , கல்வியில் வெற்றி , படிப்பில் முதல் நிலை , நல்ல ஒழுக்கம் , பண்பாடு , பெரியவர்களை மதித்து நடத்தல் , அவர்களின் ஆசியை பெரும் யோகம் , குல தேவதையின் அருள் கிடைத்தல் , நல்ல பழக்க வழக்கங்கள் நல்ல நினைவாற்றல் என ஜாதகரை மிக சிறந்த இடத்திற்கு எடுத்து செல்லும் .

9 ம் பாவக அமைப்பில் இருந்து சிறந்த அறிவாளி , சிறப்பு மிக்க சிந்தனை திறன் , புதிய கட்டுபிடிப்புகள் , பயணங்களில் விருப்பம் , தெய்வத்தின் அருள் ஜாதகருக்கு பரிபூரணமாக கிடைக்கும் தன்மை , இட மற்றம் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பம் , அனைவரிடமும் நல்ல பெயரை எடுக்கும் தன்மை , கல்வியில் சிறந்து விளங்கும் ஆற்றல் , தனது குல பெருமையை காக்கும் ஆற்றல் என வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றத்தை வாரி வழங்கும் .


ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட பாவகங்கள் :

12ம் வீடு எதிரி ஸ்தானமான 6 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , சில எதிர்பாரத தோல்விகளால் அதிக மன கவலைக்கு ஆளாகும் சூழ்நிலை , அப்படி ஏற்ப்பாடு தோல்விகள் அனைத்து சில காலங்களுக்கு பிறகு தனக்கு சாதகமாக வெற்றியாக மாறும் யோகமும் , முன்யோசனை அற்ற வாழ்க்கையால் அதிக மன போராட்டங்களையும் , அனைவரையும் வெறுக்கும் சூழ்நிலை சந்தர்பங்களையும் தரும் , மற்றவரிடம் அதிக குற்றம் குறைகளை கண்டுபிடிக்கும் மன நிலையை தரும் .

நடக்கும் செவ்வாய் திசை தரும் பலன்கள் : ( 18/10/2008 முதல் 12/10/2015 வரை)

தற்பொழுது நடக்கும் செவ்வாய் திசை 2,6 ம் வீடுகள் திடீர் அதிர்ஷ்டத்தை தரும் 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது , ஜாதகரின் குடும்பத்திற்கு வெற்றி மேல் வெற்றியை தரும் , மேலும் மற்றவர் பணம் ஜாதகருக்கு வந்து சேரும் , எடுக்கும் காரியங்களில் வெற்றியை தரும் , தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும் சகல சௌபாக்கியம் உண்டாகும் , திடீர் தன பிராப்தி உண்டாகும் , பெற்றோருக்கு மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும் , குறிப்பாக  தகப்பனாரின் தொழில் முன்னேற்றம் வெகு சிறப்பாக அமையும் ஜீவனம் மேன்மையடையும் , இது ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாக இருந்தாலும் உடல் ரீதியான பிரச்சனைகள் அடிக்கடி ஏற்ப்படும் .

அடுத்து வரும் ராகு திசை தரும் பலன்கள் : ( 12/10/2015 முதல் 11/10/2033 வரை )

அடுத்து நடக்கும் செவ்வாய் திசை 2,6 ,10 ம் வீடுகள் திடீர் அதிர்ஷ்டத்தை தரும் 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது , ஜாதகரின் தகப்பனாருக்கு மிகுந்த யோகத்தை தரும் , ஜாதகர் கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையையும் , படிப்பில் வெற்றியும் , விளையாட்டில் ஆர்வத்தையும் , முற்ப்போக்கு சிந்தனையையும் , வெற்றி மேல் வெறியையும் தரும் , தொழில் ரீதியாகவும் , பொருளாதரா ரீதியாகவும் மிகுந்த அதிர்ஷ்டத்தை தரும் காலம் இந்த ராகு திசை என்றால் அது மிகையில்லை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com

வெள்ளி, 22 மார்ச், 2013

பிரம்மஹத்தி தோஷத்தால் ஜாதகர் பெரும் இன்னல்கள் !



கேள்வி :

ஐயா வணக்கம்,


ஒருவரது ஜாதகத்தில் ராசிச்சக்கரத்தில் (லக்ன பாகை அடிப்படையில் பாவகசக்கரப்படியும்) குருவிற்கும் சனிக்கும் தொடர்பு ஏற்பட்டால் அதாவது பரஸ்பர பார்வை, ஒரே பாவகத்தில் இருத்தல்,ஒரே சாரத்தில், பரிவர்தனை இப்படி ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு ஏற்பட்டால் அது பிரம்மஹத்தி தோஷம் என ஏதோஒரு புத்தகத்தில் படித்தேன். இது சரியா? சரி எனில் இதனால் ஜாதகர் அடையும் தீமைகள் என்ன?

இதில் ஏதேனும் விதிவிலக்குகள் உண்டா?அதாவது சனி நீசமாகி பார்ப்பது அல்லது சனி மறைந்து பார்ப்பது சனியோடு சாயாகிரக அமர்வு இப்படி ஏதேனும் காரணத்தால் இந்த தோஷம் இல்லாமல் போகுமா? மேலும் சனி நல்ல ஆதிபத்யம் பெற்றிருந்தாலும் இந்த தோஷம் உண்டா?



பதில் : 

சனிபகவனுக்கும் , குருபகவானுக்கும் எதாவது ஒருவகையில் ( சேர்க்கை , பார்வை , சார தொடர்பு ) தொடர்பு பெறுவதால் அது பிரம்மஹத்தி தோஷத்தை தந்துவிட வாய்ப்பு இல்லை என்பதே ஜோதிட தீபத்தின் கருத்து , பொதுவாக காலபுருஷ தத்துவ அமைப்பின் படி 9,12 க்கு உடைய குருபகவானும் , 10, 11 க்கு உடைய சனிபகவானும் ஒரே பாவகத்தில் சேர்க்கை பெறுவதும் , சமசப்த பார்வை பெறுவது நன்மையே தரும் .

பாக்கிய விரைய ஸ்தான அதிபதியும் , ஜீவன லாப ஸ்தான அதிபதியும் சேர்க்கை பெறுவது ஜாதகத்திற்கு நன்மையை தானே தரும் , பாக்கிய அமைப்பில் இருந்து சிறந்த வெற்றிகளையும் , ஜீவன அமைப்பில் இருந்து சிறந்த தொழில் அமைப்பையும் , லாப ஸ்தான அமைப்பில் இருந்து தொடர் வெற்றி மற்றும் லாபங்களையும் தந்துகொண்டேதான் இருக்கும் , விரைய பாவக அமைப்பில் இருந்து ஜாதகர் செய்யும் பெரிய முதலீடுகளில் இருந்து மிகுந்த நன்மைகளையும் , அதிக லாபத்தையும் வாரி வழங்கும் என்பதே உண்மை .

ஒரு வேலை ஜாதகர் சுயஜாதாக அமைப்பின் படி 12ம் பாவக அமைப்பில் இருந்து தீமையான பலனை பெறுகிறார் என்று வைத்து கொண்டாலும் அது வெறும் 33 சதவிகித தீமையை மட்டுமே தரும் என்பதே உண்மை .

மேற்சொன்னவை அனைத்தும் பொது பலன்களே , சுய ஜாதகத்தை வைத்தே குரு சனி  சேர்க்கை , பார்வை  , சார தொடர்பு போன்றவற்றின் துல்லியமான பலன்களை  நிர்ணயம் செய்ய இயலும் , மேலும் இந்த இருகிரகங்களுடன் வேறு  ஏதாவது கிரகங்கள் தொடர்பு பெறுகிறத என்பதை சரியாக கவனித்து பலன் காணுவது அவசியம் .

பிரம்மஹத்தி தோஷத்தால் ஜாதகர் அடையும் தீமைகள் முதன்மையானது  நல்ல  பெற்றோர்களை ஜாதகர் பெற வாய்ப்பு இல்லாமல் போய்விடும் , இரண்டாவதாக  சிறப்பாக வளரும் சூழ்நிலையை தராது , கல்வியில் தடையை  தரும் , நல்ல நண்பர்கள் சேர்க்கையை தராது , தனது உடல்நிலையை  தானே தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஜாதகர் இறங்கிவிடுவார் , நல்ல வாழ்க்கை துணை அமையாது , குழந்தை பாக்கியத்தில்  தடையும் , புத்திர சோகத்தையும் தந்துவிடும் .

பிரம்மஹத்தி தோஷம் என்பது , லக்கினம் மற்றும் களத்திர பாவகம் பாதக ஸ்தனத்துடன் சம்பந்தம்  பெறுவதற்கு நிகரானது என்பதே உண்மை , இந்த நிலை  100000 ஜாதகங்களில் ஒரு ஜாதகத்தில் மற்றுமே இருக்கும் என்பது கவனிக்கப்பட வேண்டிய  விஷயம் .

இதில் விதிவிலக்கு என்று பார்த்தால் மேற்கண்ட பாவகத்துடன் சாய கிரகமான  ராகு கேது சம்பந்தம் பெற்று , குறிப்பிட்ட பாவகத்திர்க்கு 100 சதவிகித  நன்மையை செய்தால் மட்டுமே ஜாதகருக்கு அவயோக பலன்கள் குறைந்து  யோக பலன்கள் நடைமுறையில் அனுபவிக்க முடியும் , அதுவும் சம்பந்த பட்ட  ராசி என்ன தத்துவ அமைப்பில் வருகிறதோ அதை பொறுத்தே யோக பலன்களின் தன்மை இருக்கும் .

மேற்சொன்ன அனைத்தும் சுய ஜாதகத்தை வைத்தே நிர்ணயம் செய்ய இயலும்  , பொதுவாக பலன் சொல்வது என்பது தெளிவான ஜோதிட பலன்களை  உணர வாய்ப்பளிக்காது என்பதே உண்மை அன்பரே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


சனி, 9 மார்ச், 2013

7 ம் வீட்டில் அமரும் சனிபகவானால் திருமணம் தாமதமாக நடை பெறுமா ?




பொதுவாக களத்திர பாவகத்தில் அமரும் சனிபகவான் திருமண வாழ்க்கையில் தாமதத்தையும் , குடும்ப வாழ்க்கையில் அதிக இன்னல்களையும் தருவார் என்பது பல ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது, இது முற்றிலும் தவறான கண்ணோட்டம் என்பதே தீபத்தின் கருத்து ,  உண்மையில் கடகம் சிம்மம் எனும் இரண்டு லக்கினத்திற்கு மேற்சொன்ன விதி பொருந்தும் .

 உதரணமாக கடக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு மகரத்தில் ( களத்திர பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகையில் ) அமரும் சனிபகவான் ( சனி இங்கு ஆட்சி பெற்று அமர்ந்தாலும் கூட ) களத்திர பாவகத்தை 100 சதவிகிதம் கெடுத்து விடுவார் .

மேற்கண்ட அமைப்பை பெற்ற கடக இலக்கின ஜாதகருக்கு ஆண் என்றால் திருமண வாழ்க்கை 34 வயதுக்குக் மேல்தான் அமையும் , பெண் என்றால் 28 வயதுக்கு மேல்தான் அமையும் ,  அதுவும் சிறப்பாக இருப்பதற்கு ஜாதகரின் குடும்ப ஸ்தானம் நல்ல நிலையில் இருக்க வேண்டும், மாறாக குடும்ப ஸ்தானமும் பாதிக்க படும் என்றால் ஜாதகரின் திருமண குடும்ப வாழ்க்கை கேள்விக்கு உரியதாக மாறி விடும் , ஆக கடக லக்கினத்திற்கு மகரத்தில் அமரும் சனிபகவான் களத்திர பாவகத்தை வெகுவாக பாதிக்க செய்வார் என்பது உறுதியாகிறது .

அடுத்து சிம்மலக்கின அமைப்பை சார்ந்த அன்பர்களுக்கு கும்பத்தில்                ( களத்திர பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகையில் ) அமரும் சனிபகவான்          ( சனி இங்கு ஆட்சி பெற்று அமர்ந்தாலும் கூட ) களத்திர பாவகத்தை 100 சதவிகிதம் கெடுத்து விடுவார், மேற்கண்ட அமைப்பை பெற்ற சிம்ம  இலக்கின ஜாதகருக்கு ஆண் என்றால் திருமண வாழ்க்கை 34 வயதுக்குக் மேல்தான் அமையும் , பெண் என்றால் 28 வயதுக்கு மேல்தான் அமையும் .

  அதுவும் சிறப்பாக இருப்பதற்கு ஜாதகரின் குடும்ப ஸ்தானம் நல்ல நிலையில் இருக்க வேண்டும், மாறாக குடும்ப ஸ்தானமும் பாதிக்க படும் என்றால் ஜாதகரின் திருமண குடும்ப வாழ்க்கை கேள்விக்கு உரியதாக மாறி விடும் , மேற்சொன்ன அமைப்பின் படி கடக சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு லக்கினத்திற்கு 7ம் பாவகத்தில் அமரும் சனி மட்டுமே திருமண வாழ்க்கையில் அதிக இன்னல்களை தரும் என்பதே உண்மை .

இதிலும் ஒரு விதி விளக்கு உண்டு மேற்சொன்ன கடக சிம்ம லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு களத்திர ஸ்தானமான மகரம் மற்றும் கும்பத்தில் , சாய  கிரகமான  ராகுவோ கேதுவோ அமர்ந்தால் களத்திர பாவகம் 100 சதவிகித வலிமை  பெற்று சிறப்பான நன்மைகளை தந்துகொண்டு இருக்கும் , இந்த நிலையை பெற்றவர்கள் சனி களத்திர பாவகத்தில் அமர்ந்ததை பற்றி எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை .

இங்கே சாயா கிரகமான ராகு கேது கிரகங்களுக்கு மட்டுமே முழு வலிமை உண்டு களத்திர பாவகத்தில் அமர்ந்த சனி பகவானால் எவ்வித நன்மை தீமை பலனையும் தர நிலைக்கு தள்ளி விடும் இந்த சாயா கிரகங்கள் , மேலும் களத்திர  பாவக வழியில் இருந்து 100 சதவிகித யோக பலன்களை ஜாதகர் அனுபவிப்பார்  என்பது சாயா கிரகங்களினால் உண்டாகும் கூடுதல் யோக பலன்கள் என்றால் அது மிகையாகாது .

கடக இலக்கின ஜாதகருக்கு களத்திர பாவக அதிபதியான சனிபகவான் லக்கினமான  கடகத்தில் அமர்ந்தால் ஜாதகருக்கு 19 வயதில் இருந்து 23 வயதிற்குள்  திருமணம் நடந்துவிடும் என்பதும் , அந்த திருமணத்தின் மூலம் ஜாதகர்  வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என்பதும் , ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை  துணை மிகுந்த யோகதாரியாகவும் , பொருளாதார ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தை தருபவராகும் இருப்பார் என்பது  கூடுதல் சந்தோஷமான தகவல் .

இதே சிம்ம இலக்கின ஜாதகருக்கு களத்திர பாவக அதிபதியான சனிபகவான் லக்கினமான  சிம்மத்தில் அமர்ந்தால் மிகவும் இளம் வயதிலேயே திருமண வாழ்க்கை  மிகவும் சிறப்பாகவோ அல்லது தனது விருப்பபடியோ நடந்துவிடும் என்பதும் , திருமண வாழ்க்கையின் மூலம் ஜாதகர் அதிக படிப்பினையும் , உலக வாழ்க்கையின் புரிதல்களையும் , அறிவில் தெளிவையும்  பெறுவார் என்பதும் , ஜாதகருக்கு அமைந்த வாழ்க்கை துணை மிகுந்த புத்திசாலியாகவும் , அறிவாற்றல் நிரம்பியவராகவும் , எந்த ஒரு சூழ்நிலையிலும்  தனது வாழ்க்கை துணையை கைவிடாமல் காப்பற்றும் குணம் கொண்டவராகவும் இருப்பார் என்பது சிம்மலக்கின அமைப்பை சார்ந்தவர்களுக்கு  ஒரு சிறந்த வர பிரசாதமாக கருதலாம் .

இந்த கடக சிம்ம லக்கினத்தை தவிர்த்து வேறு எந்த லக்கினம் என்றாலும் லக்கினத்திற்கு 7ம் வீடான களத்திர பாவகத்தில் அமரும் சனிபகவானால் எவ்வித தொந்தரவும் தடையும் இருக்காது என்பதே உண்மை , அப்படி இருந்து ஜாதகருக்கு  திருமணம் தமத நிலையை தருமாயின் , அந்த ஜாதகரின் களத்திர ஸ்தான  அதிபதி எப்படி இருக்கிறார் என்பதை சரியாக கவனிக்க வேண்டும் என்பதும் , களத்திர ஸ்தானத்தின் நிலை எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும் என்பதே  சம்பந்தபட்ட பாவகத்திர்க்கு உண்டான சரியான பதில் சொல்ல உதவும் என்பதே உண்மை அன்பர்களே !

இதை விட்டுவிட்டு 7ல் சனி அமர்ந்தாலே தீமை என்று முடிவு செய்வது முற்றிலும்  தவறானது என்று ஜோதிட தீபம் கருதுகிறது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

ரிஷப ராசி லக்கினமும், பிரதோஷ வழிபாடும் சம்பந்தம் உண்டா ?



ஜோதிட கலை என்பது மிகுந்த புனிதமான கலை என்றால் அது மிகையாகாது , இந்த ஜோதிட கலை என்பது இருபக்கம் கூர்முனை கொண்ட கத்தியை போன்றது , முறையாக இதை பயன்படுத்தவில்லை என்றால் இது ஜோதிடம் காண வந்தவரையும் பாதிக்கும் , ஜோதிடம் சொல்பவரையும் கடுமையாக பாதிக்கும் .

இன்று தொலைகாட்சியில் நான் பார்த்த ஒரு விஷயம் , ஜோதிடர்கள் அறியாமல் செய்யும் விஷயம் மக்களை வெகுவாக பதிப்பதை தெளிவாக உணர முடிந்தது , அவர் சொன்ன விஷயம் தன்னிடம் ஜோதிட ஆலோசனை கேட்க வந்த ஒரு பெண்ணிற்கு 28 வயது என்றும் , அந்த பெண் ரிஷப ராசி ரிஷப லக்கினம் என்றும் இதுவரை அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகவில்லை என்பதாகவும் , தான் பிரதோஷ வழிபாடு செய்ய சொன்னதால் திருமணம் ஆனதாகவும் , இதற்க்கு காரணம் அந்த பெண்ணின் ரிஷப ராசி ரிஷப லக்கினம் என்பதால் பிரதோஷ நந்தி வழிபாடு செய்ய சொல்லி பரிந்துரை செய்ததாகவும் ஜோதிடத்தின் உண்மை நிலையை உணராமல் கதை விட்டு கொண்டு இருந்தார் .

ஒருவர் ரிஷப ராசி அல்லது ரிஷப லக்கினத்தை கொண்டு இருந்தால் , ஜாதகரின் எண்ணமும் செயலும் ஒரு பசுவின் குனாதிசையத்துடன் ஒருமித்து இருக்கும் , இதற்கும் நந்திபகவானுக்கும் பிரதோஷ வழிபாட்டிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை உணராமலேயே , மேலும் ரிஷபம் கால புருஷ தத்துவத்திற்கு இரண்டாவது இடத்திலும், ஸ்திர  மண் தத்துவ ராசியாகவும் , வருகிறது எனவே ஜாதகி பூமியை போன்று ( மண் தத்துவம் என்பதால் ) பொறுமையான குணத்தை பெற்றவராகவும் , சிறந்த உடல் நிலையை கொண்டவராகவும் , சிறப்பான வளரும் சூழ்நிலையை பெற்றவராகவும் இருப்பார் என்பது ரிஷப ராசி லக்கினத்திற்கு உண்டான சூட்சம உண்மை , ஜோதிடர் இதை உணருவது அவசியம் .

மேலும் ஜாதகிக்கு திருமணம் 28 வயது வரை நடைபெறவில்லை என்பதிற்கு உண்டான காரணம் பெண்ணின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகம் மிதுனம் பாதிப்பு அடைந்திருந்தாலோ , அல்லது களத்திர ஸ்தானமான 7ம் பாவகம்  விருச்சகம்  பாதிப்பு அடைந்திருந்தால் மட்டுமே திருமணம் தாமத படும் , உதாரணமாக மிதுனம் உபய காற்று ராசியாக வருவதால் 2ம் பாவகம் பாதிக்கப்படும்பொழுது , ஜாதகி தனக்கு அமைய வேண்டிய நல்ல வாழ்க்கையை தனது வாயினாலேயே கெடுத்து கொள்வார்  அல்லது ஜாதகியுடன் பிறந்த சகோதர அமைப்பை சார்ந்தவர்கள் இவரது  திருமணத்திற்கு பெரும் தடையாக இருப்பார்கள் .

ஒருவேளை 7ம் பாவகம் பாதிக்க பட்டு இருந்தால் , இது ஸ்திர நீர் தத்துவ ராசியாக இருப்பதால் ஜாதகியின் எண்ணம் மற்றும்  கற்பனைக்கு ஒத்துவராத வரன் வருவதால் ஜாதகி இதை தவிர்த்து கொண்டே இருப்பார் அல்லது அக்கம் பக்கம் உள்ளவர்களின் துர் போதனையால் , திருமணம் தடை பெற்றுகொண்டே இருக்கும் , இதுவே ஜாதக ரீதியான  உண்மை காரணம், பிரதோஷ நந்தி வழிபாட்டிற்கும் ரிஷப ராசி லக்கினத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை .

இறை வழிபாடு என்பது தனது ஆன்மாவை உணரும் தன்மையாகவும் , அறிவில் விழிப்புணர்வு பெறுவதற்கும் வழிபட்டு ஸ்தலங்கள் வழியாக நமக்கு  கிடைக்கும் ஒரு சூட்சம தொடர்பு நிலையே என்பதை உணருவது அவசியம் , இவர் சொல்வதை பார்க்கும் பொழுது ரிஷப ராசி ,லக்கினத்தை பெற்றவர்கள் அனைவரும் நந்தி வழிபாடு செய்தால் போதும் திருமணம் உடனடியாக  நடந்துவிடும் என்பதாக இருக்கிறதே ? இறை வழிபாட்டின் தன்மையை  உணராது செய்யும் வழிபாடுகள் அனைத்தும் கடலில் பயன்படாமல் கலக்கும் நல்ல குடிநீரை போன்றதே .

 வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

செவ்வாய், 5 மார்ச், 2013

லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்கள்! பகுதி 1



சர லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் பெரும் இன்னல்கள் :

மேஷம் : 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷ ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு பாதக ஸ்தானமாக வருவது 11 ம் வீடான கும்பம் , இந்த வீட்டுடன் ஜாதகரின் லக்கினம் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர் சிந்தனை என்பது மற்றவர்களுக்கும் தனக்கும் மிகுந்த துன்பத்தை தரும் விதத்தில் அமைந்துவிடும் , ஜாதகர் செய்யும் அறிவுபூர்வம் அற்ற செயல்களினால் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது வெகுவாக பாதிக்க படும் , தனக்கு கிடைக்க வேண்டிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஜாதகர் தனது வீண் பிடிவாதத்தாலும் , வறட்டு கௌரவத்தாலும் இழக்கும் சூழ்நிலையை தரும் .

மேலும் அவசர கதியில் செய்யும் செயல்கள் ஜாதகரை படுகுழியில் தள்ளிவிடும் , அல்லது மற்றவர்களின் பேச்சை கேட்டு வாழ்க்கையில் பல நன்மைகளை இழந்து, தனது சுய அறிவின்மையின் காரணமாக மது போதை பழக்கத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும் , அல்லது மற்றவர்களின் கட்டுபாட்டில் வாழ்நாள் முழுவது துன்பத்தை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும் , குறிப்பாக இவை அனைத்தும் ஜாதகரின் வாழ்க்கையில் விரைவாகவும் , எதிர்பாராத சூழ்நிலைகளிலும் நடந்துவிடும் , இதன் பலனோ மிகவும் கடுமையானதாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை .

மேஷம் லக்கினத்தை பெற்ற அன்பர்களின் ஜாதகத்தில் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் அறிவில் விழிப்புணர்வுடன் இருப்பது சகல நலன்களையும் தரும் , தனக்கு வரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை எக்காரணத்தை கொண்டும் தவறவிடாமல் இருப்பது வாழ்க்கையில் மிகுந்த நன்மைகளை தரும் , மற்றவர்கள் அறிவுரையை கேட்காமல் தனது பெற்றோர் அல்லது வாழ்க்கை துணையின் ஆலோசனை படி நடப்பது ஜாதகரின் பாதக ஸ்தான பலனை வெகுவாக குறைக்கும் .

 கடகம் :

காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியான கடக ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு பாதக ஸ்தானமாக வருவது 11 ம் வீடான ரிஷபம் , இந்த வீட்டுடன் ஜாதகரின் லக்கினம் தொடர்பு பெரும் பொழுது ஜாதகரின்  நிலையான சொத்துகள் அல்லது அசையும் அசையா சொத்துகள்  வெகுவாக பாதிக்க படும் , தனது பெயரில் உள்ள நிலையான சொத்துகளை ஜாதகர்  வலுகட்டாயமாக விரையம் செய்வார் , யாருடைய ஆலோசனையும் ஜாதகரின்  செயலை தடுத்து நிறுத்தாது , ஒரு கட்டத்தில் அனைத்தையும் இழந்து  வறுமையில் வாடும் சூழ்நிலையை தரும் .

சில நபர்களுக்கு தனது வாயினாலேயே தனது வாழ்க்கையை கெடுத்து  கொள்வார்கள் , பெண்கள் என்றால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையாது , ஆண்கள்  என்றால் தனது வருமானத்தை அனைத்தையும் வீண் செலவு செய்யும்  சூழ்நிலையை தரும் , அல்லது மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு பிறகு  துன்பப்படும் சூழ்நிலையை தரும் , இவர்களின் வாழ்க்கை துணையின் நிலைதான்  மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக இருக்கும் , தேவையில்லாமல் இவர்களின்  ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும் , இவர்களால்  குடும்ப வாழ்க்கையில் எவ்வித நிம்மதியும் பெற முடியாமல் வாழ்க்கையை  வாழும் தன்மையை தரும் .

கடக லக்கினத்தை பெற்ற அன்பர்களின் ஜாதகத்தில் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கை துணைக்கு  அதிக முக்கியதுவம் தருவது நல்லது , அவர்களுக்கு எவ்வித துன்பமும் வாக்கினாலும் , செயலாலும் செய்யாமல் இருப்பது பாதக ஸ்தான பலனை  குறைக்கும் , குறிப்பாக ஜாதகர் தனது பெயரில் உள்ள சொத்துகளை கவனமாக  பாதுகாப்பது அவசியம் , மேலும் உடல் நிலையில் சிறு வயது முதற்கொண்டே  அதிக கவனம் செலுத்துவது அவசியம் , நல்ல உணவு , உடற்பயிற்ச்சி , வண்டி வாகனங்களில் அதிக பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது  அவசியம் .

துலாம் :

காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஏழாம் ராசியான துலாம்  ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு பாதக ஸ்தானமாக வருவது 11 ம் வீடான சிம்மம் , இந்த வீட்டுடன் ஜாதகரின் லக்கினம் தொடர்பு பெரும் பொழுது ஜாதகரின் செயல்கள் அதிகம் நாத்திக அமைப்பில் இருக்கும் , தனது குலதேவதையை  நிந்தனை செய்யும் தன்மையும் , பெண்களுக்கு துரோகம் செய்யும்  தன்மையும் , இறை வழிபாட்டினை கேலி செய்யும் மன நிலையை தரும் , குறிப்பாக  ஜாதகருக்கு நன்மை செய்பவர்களை கூட பகைத்து கொள்ளும்  மன நிலையை தரும் , தனது ஜாதகத்தில் உள்ள புண்ணிய பதிவுகளை  தானே கெடுத்து கொள்ளும் தன்மையை தரும் . 

ஜாதகர் பெற்றோர் மற்றும் வயதில் பெரியவர்களின் மனதை அதிகம் பாதிக்க செய்வார்கள்  , அவர்களின் சாபம் ஜாதகரை வெகுவாக பாதிக்கும் , பெரியவர்கள்  கூறும் அறிவுரைகளை கேட்காமல் ஜாதகர் தான்தோன்றி தனமாக  நடந்து தனது வாழ்க்கையில் பல நன்மைகளை பெற இயலாமல் துன்பப்படும்  நிலையை தரும் , முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும் , மற்றவர்களின்  சொத்து சுகங்களுக்கு ஆசை கொண்டு பாவ காரியங்களை எவ்வித  தயக்கமும் இன்றி செய்யும் சூழ்நிலையை தரும் , இவை அனைத்தும் ஜாதகரை மனதளவில் கூட சிறு பாதிப்பையோ பயத்தையோ தராது என்பதே வேதனைக்கு  உரிய விஷயம் .

துலாம் லக்கினத்தை பெற்ற அன்பர்களின் ஜாதகத்தில் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் பெற்றோர் மற்றும்  பெரியவர்களை மதித்து அவர்களின் சொற்படி வாழ்க்கையில் நடப்பது சகல நிலைகளிலும் பாதக ஸ்தான பலனை குறைக்கும் , தெய்வீக காரியங்களுக் தன்னால்  இயன்ற உதவிகளையும் , பிராமண தர்மங்களையும் வாழ்நாள் முழுவதும்  செய்து வருவது அவசியம் , குறிப்பாக தனது இல்லங்களில்  சுப  ஹோமங்களை வருடம் தவறாமல் செய்து வருவது அவசியம் அல்லது பசு தானம் செய்து வருவது பாதக ஸ்தான பலனை வெகுவாக குறைக்கும் .

மகரம் :

காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு பத்தாம்  ராசியான மகர ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு பாதக ஸ்தானமாக வருவது 11 ம் வீடான விருச்சகம், இந்த வீட்டுடன் ஜாதகரின் லக்கினம் தொடர்பு பெரும் பொழுது ஜாதகரின் எண்ணம் மற்றும் மன நிலை திடீர் பாதிப்பிற்கு உள்ளாகும் , மன நோய் , மன குழப்பம் , எண்ண சிதறல்கள் என மனோ ரீதியான பல இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும் அல்லது மற்றவர்களிடம் சூழ்நிலை கைதியாக மாட்டி கொண்டு அவதியுற நேரும் , எப்பொழுதும் தெளிவற்ற மன  நிலையுடனே ஜாதகர் துன்பப்பட கூடும் , இவர்கள் என்ன  மனநிலையுடன் இருக்கிறார்கள் என்பதை எந்த மனோதத்துவ நிபுணரும் கண்டுபிடிக்க இயலாது , அவ்வளவு மன குழப்ப முடிச்சுகளுடன் ஜாதகர் இருப்பார் , இவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என்பது அவ்வளவு எளிதான  காரியம் அல்ல என்பதே உண்மை .

சிலர் மீள முடியாத குடிபழக்கத்திற்கு அடிமையாகி தனது உடல்நிலையையும், மன  நிலையையும் வெகுவாக கெடுத்து கொள்வார்கள் , தன்னம்பிக்கை இல்லாத மன நிலையும், பயந்த சுபாவத்தையும் தரும் , இதனால் எவ்வித சுய முயற்சியும்  செய்யாமல் , மற்றவரை சார்ந்து வாழும் சூழ்நிலையை தரும் , இதனால்  மற்றவர்களுக்கு அதிக சிரமங்களை ஏற்ப்படுத்தும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை  அதிகம் உருவாக்கும் , ஜாதகர் விளைவு அறியாமல் செய்யும் சில காரியங்கள் வாழ்நாள் முழுவதும் ஜாதகருக்கும் , ஜாதகரை சார்ந்தவர்களுக்கும்  ஆறாத மன காயத்தையும் , வடுவையும் ஏற்ப்படுத்தும் .

மகர  லக்கினத்தை பெற்ற அன்பர்களின் ஜாதகத்தில் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் முடிந்த அளவிற்கு தன்னம்பிக்கையை  வளர்த்துகொள்வது அவசியம் , அல்லது சொந்த பந்தங்கள் , உறவுகளுடன் கூடி வாழும சூழ்நிலையை உருவாக்கி கொள்வது அவசியம் அல்லது அனைவரிடமும் மனம்விட்டு பேசி பழகி , சிரித்து சந்தோசமாக  இருப்பது நிச்சயம் ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல  முன்னேற்றங்களை  தரும் , இந்த லக்கினத்தை சார்ந்தவர்கள் பாதக ஸ்தான  அமைப்புடன் தொடர்பு பெற்று பாதிக்க பட்டு இருப்பின் , இவர்களது பெற்றோர்கள்  அல்லது வாழ்க்கை துணை ஜாதகருக்கு ஆதரவாக இருப்பது அவசியம் , இந்த ஒத்துழைப்பு மட்டும் இருப்பின் ஜாதகரின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைந்து விடும் , இவர்களின் குறைகளை மறந்து நன்மை  செய்வது இவர்களை சார்ந்தவர்களின் கடமை, ஜாதக ரீதியாக சர இலக்கின அமைப்பில் கடுமையாக பாதிக்க படும் அன்பர்கள் இவர்களே என்பது குறிப்பிட தக்கது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


ஞாயிறு, 3 மார்ச், 2013

மனோகாரகன் சந்திரன் ஜாதகத்தில் செய்யும் அற்புதங்கள் !




ஒரு ஜாதக அமைப்பில் சந்திரன் நல்ல நிலையில் அமரும்பொழுது , ஜாதகரின் மன நிலை மிகவும் சிறப்பாக அமைந்து விடுகிறது , சந்திரன் சர ராசியில் அமரும்பொழுது , ஜாதகரின் மன ஆற்றல் மிகுந்த வேகத்துடனும் , ஸ்திர ராசியில் அமரும்பொழுது ஸ்திரமான எண்ணங்களுடனும் , உபய ராசியில் அமரும் பொழுது அனைவருக்கும் பயன்தரும் காரியங்களை ஆற்றும் தன்மை பெற்றவராகவும் ஜாதகரை பண்படுத்தும் .

கிராமங்களில் ஒரு செலவாடை ஒன்று உண்டு அது " எண்ணம் போல் வாழ்க்கை " என்று பெரியவர்கள் சொல்லி கேட்பது உண்டு , இதற்க்கு உதாரணமாக ஒரு சிறு கதை ஒன்று சொல்வது உண்டு , சிவ பெருமான் கோவிலுக்கு , விசேஷ காலங்களில் வழிபாடுகளில் பயன்படுத்த ஒரு சிறிய குட்டி யானையை , வாங்கி வருகின்றனர் , அதை கட்டுபடுத்த ஒரு பாகனும் , யானையின் காலில் கட்டிபோட ஒரு சிறு சங்கிலியும் பயன்படுத்துகின்றனர் .

சிறு சங்கிலியால் யானையை கட்டி போட்ட உடன் யானை அந்த சங்கிலியை இழுத்து பார்கிறது , அதனால் அந்த சங்கிலியை அறுக்க இயலவில்லை , மீண்டும் முயற்ச்சிக்கிறது ஆனால் அந்த முயர்ச்சியும் வெற்றி பெறவில்லை , தொடர்ந்து ஒரு மாத காலம் முயற்ச்சிக்கிறது , யானையின் செயல் வெற்றி பெறவில்லை , எனவே குட்டி யானை ஒரு முடிவுக்கு வருகிறது, தன்னால் இந்த சங்கிலியை அறுக்க இயலாது என்று , அதன் பிறகு அந்த குட்டியானை சங்கிலியை அறுப்பதற்கு உண்டான எந்த ஒரு முயர்ச்சியும் செய்வதில்லை , காலங்கள் செல்கிறது .

 குட்டியானை பெரிய யானையாக வளர்கிறது , இருப்பினும் சங்கிலியை அறுப்பதற்கு உண்டான எந்த ஒரு முயர்ச்சியும் இந்த யானை செய்வதில்லை , காரணம் யானையின் மனதில் சிறு வயதில் தனது முயற்ச்சி தோல்வி அடைந்ததை நினைத்தே எவ்வித முயர்ச்சியும் எடுப்பதில்லை , இப்பொழுது அந்த யானை முயற்ச்சித்தால் எவ்வளவு பெரிய சங்கிலியையும் அறுத்து எரியும் தன்மை உண்டு , எதையும் உடைக்கும் பலம் யானைக்கு உண்டு , ஆனால் யானை எவ்வித முயற்சியும் செய்வதில்லை , காரணம் யானையின் மனதில் சிறு வயதில் விழுந்த அந்த எண்ணம் யானையை செயல்பட மறுக்க வைக்கிறது , தற்பொழுது அந்த யானையின் காலில் இருப்பது , யானையின் சிறுவயதில் கட்டிய அந்த சிறு சங்கிலியே என்பதை உணராமலேயே அதன் வாழ்க்கை நகர்கிறது .

மேற்கண்ட கதையை போன்றதே நமது நிலையும் , சில விஷயங்கள் சில காலங்களில்  தோல்வி அடைந்த காரணத்தால் , எவ்வித முயற்சியும் செய்யாமல்  தன்னுள் உள்ள மிகப்பெரிய மனோ ஆற்றலை பயன்படுத்தாமலேயே  உள்ள மனிதர்கள் 70 சதவிகிதம் பேர் என்பது ஆராய்ச்சி முடிவு  , கன்றை ஈன்ற பசுமாடு தனது கன்றை சில மணி துளிகள் மட்டுமே தனது  நாவால் வருடி கொடுக்கிறது , அதன் பிறகு அந்த பசு கன்றுகுட்டி தானாகவே  சுயமாக எழுந்து நிற்கிறது , நடக்கிறது , துள்ளி குதிக்கிறது , பிறகு  ஓடுகிறது , ஆனால் நமது பெற்றோர்கள் நம்மை எப்பொழுதுமே பிறந்த கன்றாகவே  நினைத்து வருடி கொடுத்துகொண்டே இருக்க வேண்டு என்று நினைக்கின்றனர்  , சுயமாக நாம் சிந்தித்தாலும் அதை செயல் படுத்த முடியாத சிறு வயது  சங்கிலியாக மாறிவிடுகின்றனர் .

நமது குழந்தைகள் செய்யும் செயல்களை பெற்றோர்கள் நன்றாக கவனிக்க வேண்டு , அவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தால் கண்டிப்பதுடன் , சரியான  வழியை காட்டுவது அவர்களின் கடமை , இதில் இருந்து பெற்றோர்கள்  விலகி நிற்கும் பொழுது , அதன் விளைவுகளை தனது வயதானகாலங்களில்  அனுபவிக்க நேர்கிறது என்பதே உண்மை , இதனால் தனது  சந்ததியும் பாதிக்கிறது , இவர்களும் பாதிக்க படுகின்றனர் என்பதே உண்மை .

தனது குழந்தையின் நிலை என்ன ? என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள அவர்களின்  ஜாதகம் பெற்றோர்களுக்கு மிகுந்த உதவி செய்கிறது , குறிப்பாக ஜாதகத்தில் லக்கினம் இருக்கும் நிலையை வைத்து ஜாதகரின் உடல் , மனம் , வளரும்  சூழ்நிலையை தெளிவாக நாம் தெரிந்துகொள்ள முடியும் , சந்திரனின் நிலையை  வைத்து லக்கினத்தின் வழியில் ஜாதகன் செய்யும் செயல்பாடுகளின்  தன்மையை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் , இதன் அடிப்படையில்  தனது குழந்தையை நிச்சயம் விழிப்புணர்வுடன் வளர்த்து , சமுதாயத்தில்  ஒரு தனி திறன் வாய்ந்த மனிதனாக சிறப்பாக வாழ்க்கையை அமைத்து  கொள்ள வைக்க இயலும் , இது பெற்றோர்களால் மட்டுமே முடியும், இதை  ஒவ்வொரு பெற்றோரும் உணருவது அவசியம் .

தனது குழந்தைகளை கட்டுபாடுடன் கூடிய சுதந்திரத்தை சரியான வயது வரும் வரை தருவது அவசியம் , அதன் பிறகு அவர்களின் வாழ்க்கையை நிச்சயம்  சிறப்பாக அவர்களே அமைத்து கொள்வார்கள் , கண்டிக்கிறேன் என்ற பெயரில் குழந்தைகளை அடக்கி ஆள்வதும் , சுதந்திரம் தருகிறேன் என்ற பெயரில் அவர்களின் பெயரில் அலட்சியமாகவும் இருப்பது மிகுந்த பாதிப்பையே  தரும் .

குறிப்பாக சர ராசி லக்கினத்தை பெற்ற குழந்தைகளின் வாழ்க்கையில் அதிக கவனம்  பெற்றோர்கள் செலுத்த வேண்டி வரும் , அடுத்ததாக உபய ராசி லக்கினத்தை பெற்ற குழந்தைகளின் வாழ்க்கையில் சிறு அக்கறை பெற்றோர்கள்  எடுத்துகொள்வது அவசியம் , ஸ்திர ராசி இலக்கின அமைப்பை பெற்ற குழந்தைகளின் வாழ்க்கையில் சரியான வழியை காட்டினால் போதும் அவர்களே தனது சிறப்பான வாழ்க்கையை அமைத்துகொள்வார்கள் , இதில் மேற்கண்ட லக்கினம் ராசி நிலைகள்  நல்ல நிலையில் இருப்பது அவசியம் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969