வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

கேது திசை தரும் யோக அவயோக பலன்கள் !




ஞானகாரகனாகிய கேது பகவான் ஒருவருடைய சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் அமர்ந்து தனது திசையில் இலக்கண ரீதியாக வலுமையுடன் இருக்கும் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தரும் பொழுது ஜாதகருக்கு கேது திசையில் எவ்வித தீய பலன்களும் நடை பெறுவதில்லை, மாறாக வலிமை இழந்த பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தனது திசையில் பலனை நடத்தும் பொழுது கேது தொடர்பு பெற்ற பாவகத்தின் வழியில் இருந்து அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வருகிறது, எடுத்துகாட்டாக கிழ்கண்ட ஜாதகத்தை கவனியுங்கள் அன்பர்களே !

உதாரண ஜாதகம் : 1

லக்கினம் : மீனம்
ராசி : மீனம்
நட்சத்திரம் : ரேவதி 1ம் பாதம்

ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும் திசை கேது திசை : ( 25/01/2010 முதல் 25/01/2017 வரை)

ஜாதகருக்கு நடக்கும் கேது திசை லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் பாதக ஸ்தானமான 7ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை தந்துகொண்டு இருக்கிறது , இதன் பலன்கள் என்ன என்பதை பற்றிய சற்றே இனி ஆய்வு செய்வோம் அன்பர்களே  !

1) லக்கினம் பாதக ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல காரணம் பாதக ஸ்தானம் என்பது 200 சதவிகிதம் தீமை தரும் அமைப்பு, எனவே இந்த கேது திசை நடக்கும் காலத்தில் ஜாதகர் உடல் மற்றும் மனோ ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலையை தரும், மேலும் ஜாதகருடையை பாதக ஸ்தானமானது காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் வீடாக வருவதும், உபய மண் தத்துவ ராசியாக அமைவதாலும், ஜாதகரின் உடல் நிலை  பாதிக்க படும் , பொருள் இழப்பு உண்டாகும் , ஜாதகரின் பெயரில் இருக்கும் சொத்துகள் மற்றும் வண்டி வாகனங்களை திடீரென இழக்கும் தன்மையை தரும் .

2) ஜாதகரின் செயல்களும், எண்ணங்களும் ஜாதகருக்கு எதிராக செயல்படும் , தனது  திட்டங்கள் யாவும் தோல்வியையே தரும் , குறிப்பாக ஜாதகர் தீய பழக்க  வழக்கங்களுக்கு ஆளாகி தனது உடல் நிலையையும் மன நிலையையும் தானே கெடுத்து கொள்வார்  இதற்க்கு காரணமாக எதிர்பாலினர் மற்றும்  அவரது நண்பர்களே அமைந்துவிடுவார்கள் .

3) ஜாதகர் பெரும் கடன் மற்றும் ஏற்றுகொள்ளும் ஜாமீன் போன்றவற்றால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், இதனால் ஜாதகர் வெகுவாக சமுகத்தில் அவ பெயரை சந்திக்கும் தன்மையை தரும், கடன் பெற்று செய்யும் எந்த காரியமும் ஜாதகருக்கு கடும் நெருக்கடியை தரும் , முன்னேற்றம் என்பது ஜாதகருக்கு குதிரை கொம்பாக தெரியும் .

4) கேது திசை ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை செய்வது ஜாதகரின் சிந்தனை மற்றும் அறிவாற்றலை வெகுவாக பாதிக்கும் , ஜாதகர் பின்னல் வரும் இன்னல்களை உணர்ந்து செயல்படும் தன்மை இல்லாமல் செயல்படுவார் , இன்றைய காரியம் முடிந்ததா நாளைய விஷயத்தை நாளை பார்க்கலாம்  என்ற எண்ணத்தையே தரும் , சோம்பல் ஆர்வமின்மை , தனம்பிக்கை இன்மை என்ற விஷயங்களால் ஜாதகரின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்க கூடும் .

5) மேற்கண்ட அமைப்பில் ஜாதகருக்கு தீமையான பலன்கள் நடைபெறும் பொழுது ஜாதகர் செய்யவேண்டிய பரிகாரம் என்ன ? முதலில் ஜாதகர் தனது நடவடிக்கையில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் , ஆண்கள் என்றால் பெண்களிடமும், பெண்கள் என்றால் ஆண்களிடமும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் , தனது உடல்நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் , அதிக முதலீடுகளை தவிர்க்க வேண்டும் , ஒரு முறைக்கு பல முறை ஜாதகர் நன்கு யோசனை செய்து ஒரு காரியத்தை செய்வது நலம் தரும், பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்று சொன்னாலும், சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்வது, ஜாதகரை படு குழியில் தள்ளிவிடும் , மேலும் கேது திசை முடியும் வரை ஆன்மீகத்தில் மனதை செலுத்தலாம் , அல்லது நல்ல ஆன்மீக பெரியோர்களிடம் ஆசி பெற்று மனதை  ஒருநிலை படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் பெற தனது சிந்தனை ஆற்றலை பயன்படுத்துவது சிறந்த பரிகாரமாகும் .


இதே ஞானகாரனாகிய கேது பகவான் மேற்கண்ட ஜாதகர் பிறந்த ஊரில் ஜாதகர் பிறந்த நேரத்தில் இருந்து, 2 நிமிடம் தாமதமாக பிறந்த வேறு ஒருவருக்கு தனது பலனை எவ்விதம் நடத்துகிறார் என்பதை பற்றி தற்பொழுது காண்போம் அன்பர்களே !

உதாரண ஜாதகம் : 2

லக்கினம் : மீனம்
ராசி : மீனம்
நட்சத்திரம் : ரேவதி 1ம் பாதம்


ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும் திசை கேது திசை : ( 13/02/2010 முதல் 13/02/2017 வரை)

இந்த ஜாதகருக்கு நடக்கும் கேது 1,2,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை தருவது ஜாதகருக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை தரும்  அமைப்பாக கருதலாம் , மேலும் ஜாதகருக்கு 11ம் வீடு என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஒன்பதாம் பாவகமாக அமைவது , ஜாதகரின் முன்னோர்கள் செய்த நல்வினை பதிவினையும் , தான் செய்த நல்வினை  பதிவினையும் யோக வாழ்க்கையாக இந்த கேது அனுபவிக்க வைக்கும் என்பது முற்றிலும் உண்மை .

1) லக்கினம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில்  கேது திசை முடிய நீடித்த  அதிர்ஷ்டத்தை , மேலும் ஜாதகரின் உடல் நிலை மன நிலை  மிகவும் சிறப்பாக இயங்கும் , ஜாதகர் நல்ல அறிவாளியாக இருப்பார் , தன்னம்பிக்கை மிகும் , முற்போக்கு சிந்தனைகளால்  வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் ஜாதகருக்கு நல்ல முன்னேற்றம்  உண்டாகும் .

2) 2ம் பாவகம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் வாழ்க்கையில்  நல்ல வருமானத்தை தரும் , இனிமையான பேச்சு திறனையும், நல்ல மக்கள் செல்வாக்கினை பெற்று தரும் , பொதுமக்களை நம்பி செய்யும் தொழில்கள்  யாவும் வெற்றி மேல் வெற்றி தரும் காரணம் ஜாதகரின் 2ம் பாவகம் மேஷமாக சர நெருப்பு ராசியாக அமைவதே .

3) 8ம் பாவகம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரின் வாழ்க்கையில்  சரியான வயதில் இளம் வயது திருமண வாழ்க்கையையும் , அருமையான குடும்ப  வாழ்க்கையையும் தரும் , ஜாதகர் திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம்  வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார் , தன்னம்பிக்கை மேலோங்கி நிற்கும் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் கிட்டும் , தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து 100 சதவிகித யோக வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மையை தரும் .

4) 11ம் பாவகம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரின்  வழ்க்கை அதிர்ஷ்டம் என்பது நீடித்து நிற்கும் ,குறிப்பாக செய்யும் தொழில்களிலும் நிலம் , வண்டி , வாகனம் , வீடு போன்றவறில் இருந்தும் அதிக வருமானம் கிடைக்கும் அல்லது  மேற்கண்ட சொத்து சுகங்களை ஜாதகர் தனது சுய உழைப்பாலும் , அறிவாற்றலாலும் பெரும் யோகத்தை தந்துகொண்டே இருக்கும் , ஜாதகரின் முன்னேற்றம் என்பதனை எவராலும் கணிக்க இயலாத அளவில்  இருக்கும் .

5) மேற்கண்ட பாவகங்களுடன் தொடர்பு பெற்று நன்மையான பலனை தரும் கேது  திசை ஜாதகருக்கு நல்ல ஒழுக்கத்தையும் , பண்பாட்டினையும் , போதும் என்ற  மனத்தினையும் , சிறந்த ஆன்மீக வாழ்க்கையினையும் இயற்கையாகவே  தந்துவிடும் , மேலும் ஜாதகரின் செயல்பாடுகளும் , மக்கள் மற்றும் நண்பர்கள் வழியில் இருந்து நன்கு புரிந்துகொள்ளப்படும் , எனவே இவர்களின்  ஆதரவுடன் ஜாதகர் குறுகிய காலத்தில் பிரபலம் அடையும்  யோகத்தை இந்த கேது திசையே அருளும் .


மேற்கண்ட இரண்டு ஜாதக அமைப்பில் இருந்தும் நாம் புரிந்துகொள்வது என்னவென்றால் பொதுவாக ஒரு திசை கெடுதல் செய்கிறது என்று கணிப்பது  மிகப்பெரிய தவறு , மேலும் ஒவ்வொரு கிரகத்தின் திசையும் அவரவர்களின் சுய  ஜாதகத்திற்கு உட்பட்டு , பாவக வலிமைக்கு ஏற்ற அமைப்பில் தொடர்பு பெற்று  நன்மை தீமை பலன்களை செய்கிறது , எனவே ஒருவரின் சுய ஜாதகத்தில் 12 பாவகங்களும் நல்ல வலிமையுடன் இருந்தால் , நடை பெரும் அனைத்து திசை மற்றும் புத்திகளும் நன்மையே செய்யும் , இதற்க்கு மாறாக பாவகங்கள்  பாதிக்கப்படும் பொழுதே அது எந்த திசை என்றாலும் ஜாதகர் இன்னல்களை அனுபவிக்க வேண்டி வருகிறது .

இறுதியாக :

சுய ஜாதகத்தில் அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப்பவே பாவக வலிமை, இறை அருளால்  நிர்ணயம் செய்யபடுகிறது என்பதே உண்மை, ஒருவருடைய சுய ஜாதகத்தில்  பாவகங்களின் வலிமையை தெளிவாக தெரிந்துகொண்டால் மட்டுமே அந்த ஜாதகருக்கு நற்பலன் நடைபெறுமா ? தீய பலன் நடைபெறுமா? என்று நிர்ணயம் செய்ய இயலும் , இல்லை எனில் ஜாதகம் பலன் அறிய வந்தவருக்கு ஜோதிடரால் எவ்வித வழிகாட்டுதலையும் எடுத்துரைக்க இயலாது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


சனி, 24 ஆகஸ்ட், 2013

ஜீவன ஸ்தான அடிப்படையில் ஒரு ஜாதகருக்கு சரியான தொழில் நிர்ணயம் செய்வது எப்படி ?




சுய ஜாதகத்தில் வலிமையுடன் இருக்க வேண்டிய பாவகத்தில் முதன்மையாக கருதவேண்டிய பாவகம் ஜீவன ஸ்தானமே என்றால் அது மிகையில்லை, குறிப்பாக ஆண்களின் ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது அவசியம், மாறாக வலிமை இழக்கும் பொழுது ஜாதகரின் வேலை அல்லது தொழில் சிறப்பாக அமையாமல் ஜாதகரின் வாழ்க்கையில் நடை பெற வேண்டிய  சில நல்ல விஷயங்கள் கூட நடை பெறாமல் தாமதம் அல்லது தடையை ஏற்படுத்துகிறது , குறிப்பாக சொல்லவேண்டும் எனில் ஜாதகருக்கு நல்ல வேலை அல்லது தொழில் அமைந்தால் மட்டுமே நல்ல திருமண வாழ்க்கை சரியான வயதில் அமைகிறது, மேலும் தனது குடும்பத்தை சார்ந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்ற இயலும்.

முக்கியமாக  தனது பெற்றோர்களின் மனதை கஷ்டப்படுத்தாமல், அவர்களின் வயதான காலத்தில் ஜாதகரால் சந்தோஷமாக வைத்துகொள்ள முடிகிறது, ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் நல்ல நிலையில் அமைந்தால் மட்டுமே ஜாதகர் சமுதாயத்தில் பொறுப்புள்ள மனிதராக இயங்க முடியும், இல்லை எனில் குடும்பம் மற்றும் சமுதாயத்தில் நல்ல பெயர் எடுப்பது என்பது குதிரை கொம்புதான், மேலும் தனது தேவைகளை நிறைவேற்றி கொள்ளவே ஜாதகர் மற்றவர்களின் கரங்களை எதிர்நோக்கியிருக்க வேண்டிய சூழ்நிலை தந்துவிடுகிறது .

ஜீவனம் நல்ல நிலையில் அமையாத பொழுதே ஜாதகர் தவறான வழியில் தனது வாழ்க்கை வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார் , தான் சுயமாக சிந்தித்து செயலாற்றும் தன்மையை தரும் ஜீவன ஸ்தானம் வலிமை இழக்கும் பொழுது ஜாதகரால் தனிப்பட்டு செயல்பட  இயலாமல் ஜீவன வழியில் இருந்து அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வருகிறது, ஒருவேளை சுய ஜாதகத்தில் ஒருவருக்கு ஜீவன ஸ்தானம் பாதிக்கபட்டு இருந்தால் 10க்கு 10ம் பாவகமான களத்திர பாவகம் வலிமையுடன் இருப்பது அவசியம்.

10க்கு 10ம் பாவகமான களத்திர பாவகம் வலிமையுடன் இருக்கும் பொழுது ஜாதகரின் வாழ்க்கையில் திருமணம் நடை பெரும் காலம் வரையில் ஜாதகருக்கு நல்ல ஜீவனம் அமையாது , திருமணம் நடைபெற்ற குறுகிய காலத்திலேயே ஜாதகர் நல்ல ஜீவன முன்னேற்றத்தை பெரும் யோகத்தை தந்துவிடும், சில அன்பர்களின் வாழ்க்கையில் திருமணத்திற்கு பிறகு நல்ல முன்னேற்றம் காண்பது இதன் அடிப்படியிலேயே என்பது மட்டுமே முற்றிலும் உண்மை , இந்த அமைப்பை பெற்ற அன்பர்கள் திருமணத்திற்கு பிறகு தனது வாழ்க்கை துணையை மிகவும் அன்பாக நடத்துவது அவசியம் காரணம் ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல ஜீவன முன்னேற்றத்தை தந்ததும், சமுதாயத்தில் சிறந்த கௌரவத்தையும் தந்தது ஜாதகரின் வாழ்க்கை துணைதானே .

மேற்கண்ட  ஜீவனம் மற்றும் களத்திரம் இரண்டும் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர்  களத்திர ஸ்தானத்திற்கு 10ம் வீடான 4ம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால், ஜாதகருக்கு மாத்ரு ஸ்தானமான 4ம் பாவக வழியில் இருந்தும்  ஜீவனத்தை தரும் , ஜாதகர் 4ம் பாவக வழியில் இருந்து ஜீவன வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறலாம் .

ஆக ஒரு ஜாதகர் வாழ்க்கையில் ஜீவன வழியில் இருந்து நல்ல முன்னேற்றம் பெற வேண்டும் எனில் அவரது சுய ஜாதகத்தில் தகப்பனாரை குறிக்கும் 10ம் பாவகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் அல்லது தாயாரை குறிக்கும் 4ம் பாவகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும், இந்த இரண்டும் ஒருவேளை பாதிக்க படும் பொழுது  ஜாதகருக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் மேற்கண்ட 3பாவகமும் பாதிக்க படும் பொழுதே ஜாதகர் ஜீவன வழியில் இருந்து அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வருகிறது.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் சார ராசிகளான மேஷம்,கடகம்,துலாம்,மகரம் என்ற ராசிகளுடன் தொடர்பு பெற்று இந்த ராசிகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமையாமல் இருந்தால், ஜாதகர் தனது சுய முயற்ற்சியால் தனித்து செயல்பட்டு தொழில் அல்லது வேலை வாய்ப்பில் எளிமையான வெற்றிகளையும் , மிகப்பெரிய ஜீவன முன்னேற்றத்தை பெரும் தன்மையை தந்துவிடும். குறிப்பாக ஜாதகருக்கு அமையும் தொழில் அல்லது வேலை குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கி விடும் , வருமானம் என்பது மிக அதிக அளவில் கிடைக்கும், ஜாதகருக்கு பொருளாதார ரீதியான வளர்ச்சி என்பது எவராலும் நினைத்து பார்க்காத அளவில் இருக்கும்.

 ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் ஸ்திர  ராசிகளான ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம்  என்ற ராசிகளுடன் தொடர்பு பெற்று இந்த ராசிகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமையாமல் இருந்தால், ஜாதகரின் தொழில் அல்லது வேலை வாய்ப்பில் ஸ்திரமான நிலையுடன் நிரந்தர  ஜீவனம் மேற்கொள்ளும் தன்மையை தரும் , மேலும் ஜாதகர் பல தொழில் செய்யும் யோகத்தையும், தொடர்ந்து நிலையான நல்ல வருமானத்தை பெரும் தன்மையையும் தந்துவிடும், ஜாதகர் ஆரம்பிக்கும் தொழில்கள் பல தலைமுறைக்கு தொடர்ந்து நிலையாக நடந்துகொண்டே இருக்கும் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் உபய  ராசிகளான மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்  என்ற ராசிகளுடன் தொடர்பு பெற்று இந்த ராசிகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமையாமல் இருந்தால், ஜாதகர் கூட்டு தொழில் மூலம் சிறப்பான முன்னேற்றங்களை பெறுபவராக இருப்பார், பல பெரிய மனிதர்கள் செய்யும் தொழில்களில் ஜாதகருக்கும் கணிசமான பங்கு நிச்சயம் இருக்கும், ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் என்பது மற்றவர்களை சார்ந்தே இருக்கும் என்பது கவனிக்க தக்கது, இவர்கள் செய்யும் சிறு தொழில்கள் அல்லது கூட்டு தொழில்கள் நல்ல வெற்றியை தரும், ஆனால் ஜாதகர் பெரிய தொழில்களில் தனித்து இறங்குவது அவ்வளவு நல்லதல்ல, பெரிய வளர்சியையும் தருவதில்லை.

ஒருவருடைய சுய ஜாதகத்தின் அடிப்படையில் செய்யும் எந்த ஒரு தொழிலும் ஜாதகருக்கு நிச்சயம் தோல்வியை தருவதில்லை, இதை ஒரு சிறந்த  ஜோதிடரை கொண்டு தனது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் களத்திரம்,சுக ஸ்தானத்தின் வலிமை உணர்ந்து , செய்யும் தொழில் அல்லது வேலையை தேர்ந்தெடுத்து செய்து வாழ்க்கையில் வெற்றி காணுங்கள் அன்பர்களே !

அப்படி தாங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் நிச்சயம் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, தாங்கள் செய்யும் தொழில் 3 அல்லது 4 வருடங்களில் நல்ல பொருளாதார முன்னேற்றத்தையும் தன்னிறைவான வாழ்க்கையையும் தரும் , இதை தவிர்த்து 4 வருடங்களுக்கு மேலும் தங்களுக்கு முன்னேற்றம் இல்லாமல் அரைத்த மாவையே அரைத்துகொண்டு இருக்கின்றீர்கள் என்றால்,  தங்களுக்கு பொருந்தாத தொழிலை அல்லது வேலையை செய்து கொண்டு இருக்கின்றீர்கள் என்பதே முற்றிலும் உண்மை .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

திடீர் தன சேர்க்கை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் யோக ஜாதக நிலை !



பொதுவாக பாரம்பரிய ஜோதிட கணிப்பில் 6,8,12ம் வீடுகளை ( பாவகம் ) துர் ஸ்தானம் என்றும் . தீமை செய்யும் பாவகம் என்றும் சொல்வதுண்டு, குறிப்பாக மேற்க்கண்ட பாவகங்கள் எக்காரணத்தை கொண்டும் வலிமை பெறுவது சம்பந்தபட்ட ஜாதகருக்கு அதிக இன்னல்களை வாரி வழங்கும், ஜாதகர் அதன் பாதிப்பில் இருந்து மீள்வது மிக கடினம் என்று கூட சொல்வதுண்டு.

6ம் வீடு அல்லது 6ம் பாவக அதிபதி வலிமை பெரும் பொழுது உடல் நல குறையும், கடன் தொந்தரவுகளையும் வழங்கும் என்றும் , 8ம் வீடு அல்லது 8ம் பாவக அதிபதி வலிமை பெரும் பொழுது ஜாதகர் திடீர் இழப்பு அல்லது திடீர் விபத்துகளை சந்திக்க வேண்டும் என்றும், 12ம் வீடு அல்லது 12ம் அதிபதி வலிமை பெற்றால் ஜாதகர் மன நிம்மதி இழப்பினையும், வீண் விரையங்களையும் சந்திக்க வேண்டி வரும் என்பது பாரம்பரிய ஜோதிடத்தின் கருத்தாக இருக்கிறது , இது முற்றிலும் உண்மையா ? அல்லது இதற்க்கு மாற்று கருத்து இருக்கின்றதா என்பதை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் அன்பர்களே !

ஜோதிட தீபத்தில் இதற்க்கு முன் எழுதிய பதிவுகளில்  ஒரு ஜாதகருக்கு நன்மை தீமை பலன்களை வழங்கும் அதிகாரம் 12 பாவகத்திர்க்கும் உண்டு என்ற கருத்தை முன் மொழிந்திருப்போம், ஆக ஒருவருடைய சுய ஜாதக அமைப்பின் படி தீமையான பலன்களை மட்டுமே 6,8,12ம் வீடுகள் (பாவகங்கள்)  வழங்கும் என்பது முற்றிலும் ஜோதிட கணிதத்திற்கு புறம்பானது மேற்கண்ட பாவகங்கள் நல்ல நிலையில் ஒரு ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் அமரும்பொழுது ஜாதகருக்கு வழங்கும் நன்மையான பலன்களை பற்றிய ஒரு சிறு விளக்கம் கிழ்கண்டவாறு அமையும் .

6ம் வீடு (பாவகம்) வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் :

1) ஜாதகர் எதிரிக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார், ஜாதகரை எதிர்க்கும் அனைவரும் தோல்வியை தழுவ வேண்டி வரும் மேலும் , எதிரிகள் செய்யும் சூழ்சி ஜாதகருக்கு சாதகமாக அமைந்து ஜாதகரை உலக புகழ் பெற வைக்கும்.

2) அரசியலில் திடீர் என முன்னேற்றம் பெறவும், பொதுமக்களின் நீண்ட ஆதரவினை பெரும் யோகத்தை பெறவும், அதிகார பதவிகளை நீண்ட நெடுங்காலம் அனுபவிக்கும் யோகத்தை தருவதும் இந்த சத்துரு ஸ்தானத்தின்  வலிமையே என்றால் அது மிகையாகாது .

3) ஜாதகருக்கு வரும் உடல் ரீதியான தொந்தரவுகள் விரைவில் குணம் பெற வைப்பதும், தனக்கு வரும் உடல் ரீதியான தொந்தரவுகளை தாங்கும் மன வலிமையை  தருவதும், தனது உடல் நிலையில் அதிக கவனமும், உடல் மன நலம் பேணுவதில் சிறந்து விளங்கும் தன்மையினையும், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் எதிர்த்து போராடும் குணத்தை தருவதும் இந்த சத்ரு ஸ்தானத்தின் வலிமையே .

4) வட்டிதொழில், நிதி நிறுவனம் நடத்தும் யோகம், தன்னை சார்ந்தவர்களை அரவணைத்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணச்செய்யும் தன்மையை ஜாதகருக்கு தருவது சத்ரு ஸ்தானமே, 6ம் பாவகம் வலிமை பெரும்  பொழுது ஜாதகர் நிதி சார்ந்த தொழில்களை துணிந்து செய்யலாம், ஜாதகரை குறுகிய காலத்தில் மிக பெரிய செல்வ சேர்க்கையை தந்துவிடும்.

5) புதிய உயிர்காக்கும் மருந்துகளை கண்டறிந்து மக்களின் உயிரை காக்கும் வல்லமையை இந்த பாவகமே வழங்குகிறது, ஜாதகரின் பொருளாதார முன்னேற்றமும் இதன் மூலம்  மிகப்பெரிய அளவில் உயரும் என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் . 

6) ஒருவருக்கு சுய ஜாதகத்தில் 6ம் வீடு வலிமை பெற்று, நடக்கும் திசை 6ம் பாவக பலனை தரும் பொழுது ஜாதகருக்கு தொடர்ந்து சிறு சிறு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும், மேலும் ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம் படி படியாக உயர்ந்த வண்ணமே இருக்கும் . 

8ம் வீடு (பாவகம்) வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் :  

1) முதலில் ஜாதகருக்கு பூரண நீண்ட ஆயுளை தந்துவிடும் , மேலும் நூலிலையில் உயிர்தப்பிக்கும் புண்ணியவான்கள் அனைவரின் ஜாதகத்திலும் ஆயுள் பாவகம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.

2) இன்சுரன்ஸ் துறையில் கொடிகட்டி பறக்கும் அன்பர்கள் ஜாதக அமைப்பில் இந்த 8ம் பாவகம் மிகுந்து வலிமை பெற்றிருக்கும், தனது மூதாதையர்களின் சொத்து சுகங்களை உயில் மூலம் பெரும் அமைப்பை தரும், ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து மிகப்பெரிய சொத்து சேர்க்கை உண்டாகும் .

3) ஜாதகரிடம் மற்றவர்களின் பணமே அதிகம் இருக்கும் , குறிப்பாக பெண்கள் மூலம் அதிக லாபம் உண்டாகும், கட்டுமான துறையில் பயன்படுத்த படும் உபகரணங்களினால் ஜாதகருக்கு தொடர்ந்து வருமானம் வந்துகொண்டே இருக்கும், திருமணத்தால் யோக வாழ்க்கை ஜாதகருக்கு நிச்சயம் அமையும்.

4) ஜாதகருக்கு தனது பூர்விக நிலத்தில் இருந்து புதையல் கிடைப்பதும், அதன் மூலம் ஜாதகர் திடீர் தன பிராப்தி யோகம் உண்டாகுவதும், அல்லது புதையலுக்கு நிகரான செல்வ சேர்க்கையை ஜாதகருக்கு திடீர் என தருவதும்  ஆயுள் பாவகத்தின் வலிமையே.

5) யூக வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் ஜாம்பவான்களின் ஜாதக அமைப்பில்  ஆயுள் பாவகம் மிகுந்த வலிமையுடன் இருக்கும் , பங்குவர்த்தக தொழில் துறையில்  அபரிவிதமான செல்வ சேர்க்கையை தருவது ஆயுள் பாவகமே, ஜாதகர் செய்யும் கூட்டு தொழில் மிகப்பெரிய வளர்சியை பெரும் மேலும் கூட்டு தொழிலால் அதிக லாபம் பெறுவது ஆயுள் பாவகம் வலிமை பெற்றவருக்கே என்றால் அது மிகையில்லை .

6) தான் செய்யும் தொழில், வியாபாரம், ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த துறைகளில் இருந்தும் , அரசு மானியம் மற்றும் அரசு சலுகைகள் மிக எளிதில் கிடைக்க வேண்டும் எனில் குறிப்பிட்ட ஜாதகருக்கு ஆயுள் பாவகம் வலிமை பெற்றிருக்க வேண்டும் , மேலும் மருத்துவ துறையில் பயன்படுத்த படும் மருத்துவ உபகரணங்களினால் ஜாதகருக்கு மிகப்பெரிய தன சேர்க்கை உண்டாகும் கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் ஜாதகத்திலும் பெரிய தனவந்தர்களின் ஜாதகத்திலும் ஆயுள் பாவகம் மிகவும் வலிமையுடன் இருக்கும்.

12ம் வீடு (பாவகம்) வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் :

1) மற்றவர்கள் மனதில், மன நிம்மதி மற்றும் மன மாற்றத்தை தரும் அறிய கலைகளில் ஜாதகருக்கு மிகப்பெரிய ஆற்றல் மற்றும் புலமை இயற்கையாக  அமைந்திருக்கும், இதனால் ஜாதகரை சந்திப்பவர்களின் வாழ்க்கையில் மிகசிறந்த எதிர்காலம்  உருவாகும்.

2) யோகசானம் , தியானம், உடற்பயிற்ச்சி, தற்காப்பு கலைகளில் ஜாதகருக்கு அதிக  ஆர்வமும், தேர்ச்சியும் உண்டாகும், தனிப்பட்ட முறையில் எவருடைய உதவியும் இன்றி வாழ்க்கையில் மிக பெரிய வெற்றி பெரும் யோகம் ஜாதகருக்கு உண்டு, தொலைதூர பயணங்களினால் ஜாதகர் மிகப்பெரிய தன சேர்க்கை பெரும் யோக அமைப்பு ஜாதகருக்கு மத்திம வயதில் உண்டாகும்.

3) பொழுதுபோக்கு மற்றும் வீட்டு உபகரண பொருட்கள் மூலம் ஜாதகருக்கு மிகுந்த லாபம் உண்டாகும், இசை மற்றும் கலை துறை சார்ந்த அமைப்புகளில் அதிக வருமானத்தை பெரும் தன்மையை தரும் , கலை துறையில் குறிப்பாக சிறந்த  திரைப்பட இயக்குனர்களின் சுய ஜாதகத்தில் 12ம் வீடு மிகுந்த வலிமையுடன் இருக்கும் .

4) ஜாதகர் செய்யும் முதலீடுகள் 3மடங்கு லாபத்தை தரும், குறிப்பாக 12ம் வீடு வலிமை பெற்ற ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் முதலீடு செய்யும் தொழில்களை  தேர்ந்தெடுத்து செய்யும் பொழுது மிகுந்த லாபமும் குறுகிய காலத்தில்  தான் முதலீடு செய்த தொகையை எவ்வித நஷ்டமும் இன்றி எடுத்து விட முடியும் .

5) 12ம் வீடு வலிமை பெறுவது ஜாதகருக்கு நல்ல மன வலிமையை தரும், எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மன ஆற்றலை பெற்றிருப்பார் , எடுத்த காரியத்தில் வெற்றி பெரும் வரை உறக்கம் இல்லாமல் ஓயாமல் உழைத்துக்கொண்டு இருக்கும் மன வலிமையை தரும் , மேலும் ஒரு இரவில் தனவந்தனாகும் யோகம் 12ம் வீடு வலிமை பெரும் பொழுதே நடைமுறைக்கு வருகிறது .

6) இறுதியில் ஆன்மீக வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், தனது ஆன்மாவை இறை நிலையுடன் கலந்து மோட்ச வாழ்வினை பெறுவதற்கு 12ம் வீடு மிகுந்த வலிமையுடன் இருப்பது அவசியம், தான் யார் என்ற கேள்விக்கு விடை தேடும் அன்பர்களின் ஜாதக அமைப்பில் 12ம் வீடு வலிமை பெற்றிருப்பதை காண முடிகிறது .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் மேற்கண்ட 6,8,12ம் விடுகள் வலிமையுடன் இருக்கும்  பொழுது நோயற்ற வாழ்க்கையும் , குறைவற்ற செல்வமும் , மன நிம்மதியான குடும்ப வாழ்க்கையும் நிச்சயம் அமைந்திருக்கும் என்பதில் எவ்வித  சந்தேகமும் இல்லை அன்பர்களே ! துர் ஸ்தானம் என்று சொல்லபடுகிற 6,8,12ம் வீடுகள் வலிமை பெரும் பொழுது மேற்கண்ட யோக பலன்களும் , வலிமை இழக்கும் பொழுது இதற்க்கு நேர்மறையான அவயோக பலன்களையும் தரும் , மேலும் அப்படி வலுவிழந்து தீய பலன்களை தரும் பொழுது அந்த பலன்களை ஜாதகரால் எதிர்கொள்ள முடிவதில்லை எனவே தான் 6,8,12ம் வீடுகள் துர் ஸ்தானம் என்று வர்ணிக்கபட்டு இருக்க கூடும் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com