திங்கள், 30 செப்டம்பர், 2013

அளவற்ற நன்மைகள் வாரி வழங்கும் புரட்டாசி அமாவாசை வழிபாடு !



புத்திர பாக்கியம் உண்டாக :

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பது போல், குடும்பத்தில் குழந்தை செல்வம் இருப்பின் வீட்டில் மகிழ்ச்சிக்கு குறை என்பதே இருக்காது, பல காலங்கள் அல்லது வருடங்கள் குழந்தை பாக்கியம் அற்ற தம்பதியர்கள் எதிர்வரும் புரட்டாசி அமாவாசை தினத்தில் தங்களது குல தேவதை எங்கு உள்ளதோ அங்கு சென்று , தங்களது வழக்கமான குல தேவதை வழிபாட்டினை செய்யும் பொழுதும் , தங்களது பிதுருக்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யும் பொழுது 54 வருடங்களாக இருந்துவரும் குல தெய்வ சாபமும், பித்ரு சாபமும் நீங்கி எதிர்வரும் ஒருவருட காலகட்டத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சியும், புத்திர சந்தானமும் உண்டாகும்.

கல்வியில் தடை நீங்க :

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற பழமொழிக்கு ஏற்ற போல் தங்களது குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் , கல்வியில் ஏற்ப்படும் தடைகளை தகர்த்தெறிந்து கல்வியில் வெற்றிவாகை சூட , எதிர்வரும் புரட்டாசி அமாவாசை தினத்தில் குலதேவதைக்கு வஸ்திர தானம் செய்து வழிபடும்பொழுது சம்பந்த பட்ட குழந்தைகள் கல்வியில் மிகப்பெரிய வெற்றியையும் , சிறந்த மதிப்பெண்களையும் பெறுவார்கள்.

 மேலும் தான் கற்ற கல்வியின் மூலம் தனது அறிவாற்றலை வளர்த்துகொண்டு, தனக்கும் தன்னை சார்ந்த உறவுகளுக்கும் பெற்றோருக்கும், வாழ்க்கையை கற்றுத்தரும் இந்த சமுதயத்திற்கும் பயனுள்ள வகையில் தனது வாழ்க்கையை தானாகவே சுயமாக அமைத்துகொள்ளும் தன்மையை பெறுவார்கள், எவருடைய உதவியும் நாடாமல் தனது சொந்த காலில் நிற்கும் தனி திறமையை தரும் மேற்கண்ட குல தேவதை வழிபாடு.

உடல் நலம் மேலோங்கவும், விபத்தினை தவிர்க்கவும் :

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு இணங்க ஒருவரின் வாழ்க்கையில் உடல் ஆரோக்கியம் என்பது இன்றியமையாத விஷயமாக கருதலாம், பல இடங்களுக்கு சென்று வரும் நமக்கு எந்த நேரத்தில் என்ன ? நேரும் என்று சொல்ல இயலாது, ஒரு விபத்தில் உயிர் பிழைக்கும் பொழுது அந்த இடத்தில் உள்ள பெரியவர்கள் சொல்லும் முதல் வாக்கியம் "என்ன புண்ணியம் செய்தார்களோ இவரது பெற்றோர்கள்" பெரிய பாதிப்பில்லாமல் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துவிட்டார் என்பதாக இருக்கும் , இந்த புண்ணிய பதிவினை ஜாதகனுக்கு சரியான நேரத்தில் கொடுத்து உயிர் காக்கும் தன்மையை தருவது பித்ரு வழிபாடு என்றால் அது மிகையில்லை.

 ஒருவர் அல்லது அவரை சார்ந்த முன்னோர்கள் பல புண்ணிய காரியங்களை செய்திருந்தாலும் அதை பெறுவதற்கு, சம்பந்த பட்ட ஜாதகர் வருடம் தவறாமல் பித்ரு கடமையை செய்து வந்தால் மட்டுமே, ஜாதகர் தாம், தமது முன்னோர்கள் செய்த புண்ணிய பதிவின் பலன்களை அனுபவிக்க இயலும், எனவே எதிர்வரும் புரட்டாசி அமாவாசை தினத்தில் பித்ரு கடமைகளை முறையாக பிண்டம் வைத்து செய்யும் பொழுது , சம்பந்தபட்ட ஜாதகரின் குடும்பத்தில் உடல் நலம் இன்றி இருந்தவர்களின் ஆரோக்கியம் மேம்படும், திடீர் என நிகழும் விபத்துகளில் இருந்து ஜாதகரும், ஜாதகரின் குடும்பமும் காப்பாற்ற படும் .

செய்யும் தொழில் சிறக்கவும், திடீர் பொருள் இழப்பை தவிர்க்கவும் :

சில அன்பர்கள் செய்யும் தொழில் திடீர் என முடங்கிவிடும், அல்லது பணியாற்றும் இடத்தில் இருந்து வேலை பறிபோய்விடும், இதனால் ஜாதகர் செய்வது அறியாமல் திகைக்கும் சூழ்நிலையை தரும் , சில நேரங்களில் கூட்டு  தொழில் செய்யும் அன்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு தொழில் பிரிவினை ஏற்படும் , இதனால் சம்பந்தபட்ட இருவரும் கடுமையான பொருளாதார சிக்கல்களை சந்திக்கும் நிலையை தரும், மேலும் செய்யும் தொழில் முன்னேற்றம் இல்லாமல் வெகுவான தொழில் சிக்கல்களை தர கூடும் இதனால் ஜாதகரும், ஜாதகரை சார்ந்தவர்களும் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

 இந்த நிலையில் இருந்து மீண்டு வரவும் செய்யும் தொழில் அபரிவிதமான முன்னேற்றம் பெறவும், திடீர் பண பொருள் இழப்பில் இருந்து மீண்டு செய்யும் தொழில் முன்னேற்ற பாதையிலே செல்லவும் பொருளாதார ரீதியான தன்னிறைவை பெறவும், ஜாதகர் எதிர்வரும் புரட்டாசி அமாவாசை தினத்தில் தனது குல தேவதைக்கு பால்,தேன்,இளநீர்,மஞ்சள்,குங்கும அபிஷேகம் செய்து , கனி வகைகளை தானம் செய்து தொழில் முன்னேற்றத்தை பெறலாம், இதை தொடர்ந்து வருடம் தவறாமல் செய்யும் பொழுது ஜாதகருக்கு படிப்படியான தொழில் முன்னேற்றத்தை மட்டுமே இறைஅருள் தந்துகொண்டு இருக்கும் .

திருமண தடை நீங்கவும் தம்பதியர் ஒற்றுமை ஓங்கவும் :

சரியான பருவ வயதில் திருமணம் நடை பெறாமல், திருமணம் வாழ்க்கை தள்ளி போவதற்கும், திருமணம் ஆன தம்பதியர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு திருமண வாழ்க்கையில் மன முறிவு ஏற்படுவதற்கும் அதி முக்கிய காரணமாக அவர்களது ஜாதகத்தில் பித்ரு தோஷமும், குலதெய்வ சாபமுமே காரணமாக அமைகிறது, குறிப்பாக பெண்களின் ஜாதகத்தில் இந்த நிலை ஏற்ப்படும் பொழுது அவர்களின் வாழ்க்கை நிலை பெரிய கேள்வி குறியாக மாறிவிடுகிறது, பெற்றோர் அதரவின்றியும், வாழ்க்கை துணையின் ஆதரவின்றியும், சமுதாயத்தின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தந்து, கடுமையான மன போராட்டத்திற்கு தள்ளிவிடும் தன்மையை தரும்.

 மேலும் வாழ்க்கையை நேர்கோட்டில் வழ தவறிவிட்டால் அவர்களின் நிலை இதைவிட மோசமான சூழ்நிலையையும், தற்கொலை செய்துகொள்ளும் மன நிலையை தந்துவிடும் , இந்த நிலையில் இருந்து சம்பந்தபட்டவர்கள் வாழ்க்கை நிலை மாறவும், தம்பதியர் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கவும், திருமணம் ஆகாத பெண்களுக்கும் ஆண்களுக்கும் சிறப்பான திருமண வாழ்க்கை அமையவும் எதிர்வரும் புரட்டாசி அமாவாசை தினத்தில், அவரவர் குல தெய்வ கோவிலுக்கு சென்று தனது பெற்றோர்களுக்கு புத்தாடை தானம் செய்து ( அல்லது பிராமணர்களுக்கு வஸ்திர தானம் செய்யலாம் ) அவர்கள் கையால் அட்சதை ஆசிர்வாதம் பெற்றால், சம்பந்த பட்ட அன்பர்களின் வாழ்க்கையில் திருமணம் சிறப்பான முறையில் அமையும், திருமணம் செய்துகொண்ட தம்பதியர் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் தாம்பத்தியம் சிறக்கும், மன வாழ்க்கை இனிக்கும் .

மேற்கண்ட பெருமைகள் பெற்ற புரட்டாசி அமாவாசை தினத்தில் தனது குல தெய்வ கடமையையும், பித்ரு கடமையையும், பிராமண தர்மத்தையும் சிரத்தையுடன் செய்து தங்களது வாழ்க்கையில் இறையருளின் கருணையினால் சகல நலன்களையும் 16 வகை செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ இறை அருள் துணை நிற்கட்டும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696



 

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

பன்முக தொழில் திறமை கொண்ட ஒரு ஜாதகர்,செய்யும் தொழிலிலும், பொருளாதார ரீதியாகவும் வெற்றி பெறாமல் போவதற்கு என்ன காரணம் ?



 பொதுவாக ஒருவருடைய சுய ஜாதகத்தில் கர்ம ஸ்தானம் எனும் 10ம் பாவகம் ஜாதகர் செய்யும் தொழில் அமைப்பை பற்றியும் , அதில் ஜாதகரின் தனி திறமையை பற்றியும் தெளிவாக தெரிவிக்கும் , ஜாதகர் எவ்வகையான தொழில் செய்தால், செய்யும் தொழிலில் வெற்றி கிடைக்கும் என்பதனையும் அறிவுறுத்தும், ஆக ஒருவருக்கு ஏற்ற தொழில் நிலையை உணர்ந்துகொள்ள ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தை வைத்து நிர்ணயம் செய்துவிட முடியும் அவர் செய்யும் தொழில் அமைப்பில் ஜாதகரின் திறமையை பற்றியும் தெளிவாக தெரிந்துகொள்ள இயலும், ஆனால் ஜாதகரின் தொழில் திறமை ஜாதகருக்கும் ஜாதகரை சார்ந்தவர்களுக்கும் பயன்படுமா ? என்பத்தை பற்றி வேறு சில பாவக நிலையை வைத்தே நிர்ணயம் செய்ய இயலும் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் 100 சதவிகிதம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தான் செய்யும் தொழில் அமைப்பில் பன்முக திறமையும், தனது உழைப்பை, கடமையை 100 சதவிகதம் செய்பவராக இருப்பார் , ஜாதகரின் உழைப்பும் பன்முக திறமையும் , ஜாதகருக்கு பயனளிக்க வேண்டும் எனில் அவரது ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் நல்ல நிலையில் இருப்பது அவசியம் , லக்கினம் 2,6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் , பாதக ஸ்தான அமைப்புடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகரின் உழைப்பும், தொழில் திறமையும் ஜாதகருக்கு பயன்படாமல் வீணடிக்கப்படும், அல்லது வேற்று நபர்களுக்கு ஜாதகரின் தொழில் திறமையும், உழைப்பும் பலன் தரும், எனவே ஜாதகரை பணிக்கு அமர்த்தும் முதலாளிக்கு மிகுந்த நன்மைகள் கிடைக்கும் .

சுய தொழில் செய்யும் அன்பர்கள் தொழில் துவங்கிய  நான்கு வருடங்களுக்குள் பொருளாதார ரீதியான தன்னிறைவு பெற இயலவில்லை எனில் ஜாதகர் தனது சுய ஜாதகத்தை பரிசோதித்து கொள்வது சால சிறந்தது , ஏனெனில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற போதிலும், ஜீவன ஸ்தான வழியில் இருந்து கிடைக்க வேண்டிய நன்மைகளை ஜாதகருக்கு தருவது லக்கினமும், களத்திர பாவகமுமே இவை இரண்டும் பாதிக்கும் பொழுது ஜாதகர் தனது தொழில் திறமையின் மூலம் அடையவேண்டிய நன்மைகளை அனுபவிக்க இயலாது , மேலும் நான்காம் பாவகம் வலிமை பெறவில்லை எனும் பொழுது ஜாதகர் தான் ஈட்டிய வருமானத்தை, அழியா சொத்தாக மாற்ற இயலாது அனைத்து வருமானத்தையும் வீண் செலவுகளிலும் , கேளிக்கைகளிலும் இழக்கும் சூழ்நிலையை தரும் .

 எந்த ஒரு ஜாதகத்திலும் 1,4,7,10ம் பாவகங்கள், 2,6,8,12ம் வீட்டுடனோ , பாதக ஸ்தான அமைப்புடனோ தொடர்பு கொள்ளும் பொழுது , ஜாதகரின் தொழில் அமைப்பும், வாழ்க்கை முறையும் கேள்விக்குறியாக மாறிவிடும் , சுயமாக ஜாதகர் செயல்பட முடியாத சூழ்நிலையை தரும் , ஜாதகரின் முன்னேற்றம் வெகுவாக பாதிக்க படும் , பொருளாதார ரீதியான சிக்கல்களை அதிகம் சந்திக்க வேண்டிய சூழ்நிலையை தரும், மேலும் ஜீவன ஸ்தானம் மட்டும் வலிமை பெற்று மேற்கண்ட பாவகங்கள் வலிமை இழக்கும் பொழுது , ஜாதகரின் உழைப்பும் திறமையும் ஜாதகருக்கு பயன்படாமல் வீண் விரையத்தை தரும் .

குறிப்பாக ஒருவருடைய சுய ஜாதகத்தில் லக்கினம், சுக ஸ்தானமான நான்காம் பாவகம், பொதுமக்கள் நண்பர்கள் ஆதரவை தரும் களத்திர பாவகம், மற்றும்  ஜாதகரின் ஜீவனத்தை தரும் கர்ம ஸ்தானமான 10ம் பாவகம் ஆகியன உபய ராசியுடன் தொடர்பு பெற்று ( தொடர்பு பெரும் உபய ராசி பாதக ஸ்தானமாக அமையாத நிலையில் ) லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகம் சர ராசிகளான மேஷம்,கடகம்,துலாம்,மகரம் தொடர்பு பெரும் பொழுது ஜாதகரின் வாழ்க்கை பொருளாதார ரீதியாகவும், ஜீவன அமைப்பின் வழியில் இருந்தும் மிகப்பெரிய முன்னேற்றத்தை எவ்வித தங்கு தடையின்றி வாரி வழங்கும், திடீரென வாழ்க்கையிலும் ஜீவன நிலையிலும் முன்னேற்றம் பெற மேற்கண்ட  அமைப்பை சுய ஜாதகத்தில் பெற்றிருப்பது அவசியம் , ஜாதகரின்  உழைப்பு 33 சதவிகிதமாகவும் , ஜாதகரின் வருமானம் 100 சதவிகிதமாகவும் அமையும் யோக நிலையை தரும் .

ஒரு ஜாதகருக்கு தொழில் திறமை இருந்தாலும் கூட சுய ஜாதகத்தில் 1,4,7,11ம் பாவகங்கள் வலிமை பெரும் பொழுதே அந்த ஜாதகர் அதற்க்கு உண்டான முழு நன்மைகளையும் பலன்களையும் 100 சதவிகிதம் அனுபவிக்க இயலும் இல்லை எனில் ஜாதகர் உழைப்பு வீணடிக்க படும் அல்லது ஜாதகர் திட்டம் மட்டும் வகுத்துக்கொண்டு இருக்கும் சூழ்நிலையை தரும் , நடைமுறையில் எவ்வித செயல்பாட்டிற்கும் கொண்டு வர இயலாத சூழ்நிலையை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, எனவே சுய ஜாதக நிலையை நன்கு உணர்ந்து ஜாதகர் செய்யும் தொழில் 100 சதவிகித வெற்றியை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 18 செப்டம்பர், 2013

தனது மகன் அல்லது மகள் என்றாலும் கூட, சுபகாரியங்களில் கணவனை இழந்த பெண்களை கலந்துகொள்ள அனுமதிப்பதில்லையே இதற்க்கு என்ன காரணம்? சாஸ்திரம் தான் இப்படி அறிவுறுத்துகிறது என்கிறார்களே இது உண்மையா ?



எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எந்த சாஸ்திரமும் கணவனை இழந்த பெண்களை சுபகாரிங்களில் கலந்துகொள்ளகூடாது என்று அறிவுறுத்தியதாக தெரியவில்லை சகோதரி அவர்களே ! 

மேலும் பெரியோர்கள் கணவனை இழந்த பெண்கள் சுபகாரியங்களுக்கு தவிர்த்ததிர்க்கு உண்டான உண்மை காரணம், கணவனை இழந்த பெண்கள் சுப காரியங்களில் கலந்துகொள்ளும் பொழுது மனோ ரீதியான சிக்கல்களை சந்திக்கவேண்டி வரும் என்பதாலும், தனது நிலையை பற்றிய நினைத்து  தாழ்வு மனப்பான்மை ஏற்பட கூடும் என்பதாலும், மற்றவர்கள் சந்தோஷமாக தம்பதியாக கலந்துகொள்ளும் பொழுது தன்னால் இயலவில்லை என்ற மனக்கவலை ஏற்படக்கூடும் என்ற எண்ணத்தாலும், சுப காரியங்களில் கணவனை இழந்த பெண்களை கலந்துகொள்ள வேண்டாம் என்று அறிவுருத்தியிருக்க கூடும் .

இதுவே நாளடைவில் பிற்போக்கு தனமான செய்கையாக மாறியிருக்க கூடும், ஆக கணவனை இழந்த பெண்களின் நலன் கருதியே பெரியவர்கள் சுப காரியங்களில் தவிர்த்திருக்க வாய்ப்பு உண்டு, மற்றபடி சாஸ்திரம் சொல்கிறது என்பது முற்றிலும் உண்மைக்கு மாறானது என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து , இறை அருளுக்கு தெரியாத? உயிர்கள் அனைத்தும் ஒன்று என்று , மனிதனுக்குள் தானே, இத்தனை பிரிவினைகள், வேறுபாடுகள்  இறை நிலைக்கு ஏது வேறுபாடு, தற்பொழுது நடந்துகொண்டு இருக்கும் 21ம் நூற்றாண்டில் இப்படி பட்ட அவலங்கள் இருப்பதை நினைத்து, நாம் அனைவரும் வருந்த வேண்டும் என்பதே உண்மை.

ஆகவே சகோதரி அவர்களே ! தாங்கள் தங்களின் குழந்தைகளின் சுபகாரியங்களில் கலந்துகொள்ள எந்த சாஸ்திரமும் தடை சொல்லவில்லை என்ற உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள் , மற்றவர்களை விட நல்ல மனதுடன் தாங்கள் வாழ்த்தும் வாழ்த்துகள் அனைத்தும் தங்களின் குழந்தைகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும் , நல்லாசியையும் வாரி வழங்கும் என்பதே உண்மை, ஆக தாங்கள் எவ்விதத்திலும் மனவருத்தம் கொள்ளாமல் தங்களின் குழந்தைகளை ஆசிர்வாதம் செய்யுங்கள் , அவர்கள் வாழையடி வாழையாக செழித்து, 16வகை செல்வமும் பெற்று நீண்ட ஆயுளும், நிறைசெல்வமும், உயர்புகழும்,
மெய்ஞானத்தையும் பெற்று வளமுடன் வாழட்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696
jothidadeepam@gmail.com 

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

ஒருவர் திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள, சரியான காலநேரம் எதுவென்பதை எப்படி ஜாதக ரீதியாக தெரிந்துகொள்வது ?



நல்ல கேள்வி இதற்க்கு பொதுவாக பதில் சொல்வது சரியாக இருக்காது , இருந்தாலும் அவரவர் சுய ஜாதகத்தை அடிப்படையாக வைத்து துல்லியமாக கணிதம் செய்து தெளிவாக தெரிந்துகொள்ள உதவும் , இதில் சில விஷயங்களை ஜாதக கணிதம் செய்யும் பொழுது கவனித்தாலே போதும் ஒருவரின் வாழ்க்கையில் திருமணத்திற்கு ஏற்ற சரியான கால நேரத்தை அறிந்துகொள்ள இயலும் .

திருமணத்திற்கு ஏற்ற காலநேரத்தை தெரிந்துகொள்ள ஒருவரின் சுய ஜாதகத்தில் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம், சம்பந்தபட்ட  நபரின் சுய ஜாதகத்தில் குடும்பம் எனும் 2ம் பாவகமும் , களத்திரம் எனும் 7ம் பாவகமும் வலிமை பெற்று இருக்கிறதா ? தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் குடும்பம் களத்திர பாவகத்துடன் எவிததிலாவது சம்பந்தம் பெறுகிறத? கேட்சர ரீதியாக கிரக நிலைகள் குடும்ப களத்திர ஸ்தானத்திற்கு நன்மையான பலனை வழங்குகிறதா? போன்ற விஷயங்களை கவனத்தில் எடுத்துகொள்வது அவசியம் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் எனும் இரண்டு பாவகங்களும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு சரியான வயதில் முறைப்படி எவ்வித தொந்தரவும் இன்றி சிறப்பாக திருமண வாழ்க்கை அமையும், மேற்கண்ட இரண்டு பாவகங்களில் ஏதாவது ஒன்று பாதிக்க பட்டாலோ, அல்லது இரண்டும் பாவகமும் பாதிக்க பட்டாலோ ஜாதகருக்கு திருமணம் என்பது மிகவும் தாமதமாகவே நடைபெறும், அல்லது ஜாதகர் தனது வாழ்க்கை துணையினை தானே தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் சந்தர்ப்பம் வரக்கூடும் .

எனவே ஒரு ஜாதகர் தனது திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள சரியான வயது வந்தவுடன் தனது சுய ஜாதகத்தில் களத்திர பாவகமும் குடும்ப ஸ்தானமும் வலிமை பெற்றிருக்கும் காலத்தை சரியாக தெரிந்துகொண்டு வாழ்க்கை துணை தேடுதலில் இறங்கினால் தாமதம் இல்லாமல் தடையில்லாமல் திருமணம் கைகூடும் , இதை தவிர்த்து களத்திர பாவகமும், குடும்ப ஸ்தானமும் வலிமை அற்ற பொழுது ஜாதகர் வழக்கை துணை தேடுதலில் இறங்கினால் ஏமாற்றமே மிஞ்சும் என்பதே முற்றிலும் உண்மை.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமும், களத்திர ஸ்தானமும் இயற்கையில் நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் திருமண வாழ்க்கையை பற்றி எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை, சரியான வயதில் நிச்சயம் தாமதம் இன்றி திருமணம் சிறப்பாக நடைபெறும், ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணையும் சரி, குடும்ப வாழ்க்கையும் சரி மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமைந்துவிடும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும் ஜாதக அமைப்பை பெற்ற அன்பர்கள் கோட்சார ரீதியாக குடும்ப ஸ்தானம் களத்திர ஸ்தானம் வலிமை பெரும் நிலையை அறிந்துகொண்டு அந்த குறிப்பிட்ட கால நேரத்தை சரியாக பயன்படுத்தி கொண்டு திருமண வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெறலாம் .

காலம் கடந்தும் திருமணம் நடைபெறாமல் தடையும் தாமதமும் பெரும் அன்பர்கள், தனது சுய ஜாதகத்தை நன்றாக ஒருமுறை ஆய்வுக்கு எடுத்துகொள்வது நல்லது எனில் ஒருவருக்கு திருமணம் தாமதம் ஆக இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும் அதில் ஒன்று ஜாதக ரீதியாக குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் பாதிக்க படும்பொழுது திருமணம் தாமதப்படும் , அல்லது ஜாதகர் திருமணம் வேண்டாம் என்று மறுப்பதால் திருமணம் தாமதப்படும் .

இதில் ஜாதக ரீதியாக பாதிக்கப்படும் அன்பர்களுக்கு களத்திர ஸ்தானமும் குடும்ப ஸ்தானமும் வலிமை பெரும் நல்ல நேரத்தை சரியாக கணிதம் செய்து குறிப்பிட்ட ஜாதகருக்கு திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தந்துவிட முடியும் , இரண்டாவது அமைப்பை சார்ந்தவர்களுக்கு இறைவன் விட்ட வழி  என்று இருந்துவிடுவதே நல்லது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com