புதன், 30 அக்டோபர், 2013

ஒருவர் சுய ஜாதக ரீதியாக, ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெறவும்? பங்கு வர்த்தக தொழில் மூலம் நல்ல வருமானம் பெறவும், யோகம் தரும் பாவகங்கள் எது என்று சொல்ல இயலுமா ?



நிச்சயமாக சொல்ல இயலும் அன்பரே !

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் அபரிவிதமான வருமானம் பெற களத்திர ஸ்தானம் மிகுந்த வலிமை பெற்று இருப்பது அவசியம், அதாவது களத்திர ஸ்தானம் வெளிவட்டார தொடர்புகளையும், பொதுமக்களையும், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானத்தையும், வேற்று இன மக்கள் மூலம் வரும் லாபத்தையும் குறிக்கும் எனவே சுய ஜாதகத்தில், சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் சர ராசிகளுடன் தொடர்பு பெறுவது சிறப்பு .

களத்திர ஸ்தானம் சர ராசியுடன் தொடர்பு பெற்று 100 சதவிகித நன்மை தரும் அமைப்பில் இருந்தால் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய தன சேர்க்கையை வாரி வழங்கிவிடும், மேலும் ஜாதகர் செய்யும் தொழிலானது விரைவில் மிக பிரபலாமாக மக்கள் மத்தில் சென்றடையும் , ஜாதகர் விளம்பரம் எதுவும் செய்யாமலேயே தனது வியாபரத்தை பன்மடங்கு வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லும் திறமை கொண்டவராக இருப்பார், இவருடன் தொழில் தொழில் செய்யும் அன்பர்கள் யாவரும் நேர்மை மிகுந்தவர்களாகவும் உண்மையாக இவர்களுக்கு உழைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

களத்திர ஸ்தானம் ஸ்திர ராசியுடன் தொடர்பு பெற்று 100 சதவிகித நன்மை தரும் அமைப்பில் இருந்தால் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில், படிப்படியான நிலையான வளர்ச்சியை தரும், தனது தொழிலை ஜாதகர் பல தலைமுறைக்கு நடத்தும் தன்மையுடன், சரியான திட்டமிடுதலுடன் செம்மையாக தொழில் நிர்வாகம் செய்வார் , இவர்களின் முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது, தான் செய்யும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் வாழையடி வாழையாக செழித்தோங்கும் தன்மையுடன், சிறப்பான தொழில் முன்னேற்றத்தை பெறுவார்கள், இவர்களின் சிந்தனையெல்லாம் பல தலைமுறைக்கு தனது தொழில் சீரும் சிறப்புமாக நடைபெறும் அளவிற்கும் சரியான திட்டமிடுதலுடன், தொலை நோக்கு பாரவையுடன் இருக்கும்.

களத்திர ஸ்தானம் உபய ராசியுடன் தொடர்பு பெற்று 100 சதவிகித நன்மை தரும் அமைப்பில் இருந்தால் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் தொய்வில்லாத சீரான வருமானத்தை பெரும் அமைப்பிலான வியாபாரங்களை  செய்வார், அதிக ரிஸ்க் இல்லாத தொழில்களாகவும், நிர்ணயக்கபட்ட வருமானம் உள்ள தொழில்களை தேர்ந்தெடுத்து செய்யும் தன்மை கொண்டவர்கள், இந்த அமைப்பை பெற்றவர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் இழப்பு மற்றும் நஷ்டம் என்பதே இருக்காது, சீரான  நிலையான வருமானத்தை ஜாதகரின் வாழ்நாள் முழுவதும் பெற்றுகொண்டே இருக்கும் விதத்தில் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில் அமையும்.

மேற்கண்ட அமைப்பில் களத்திர ஸ்தானம் அமைந்த போதிலும், களத்திர ஸ்தானம் சுய ஜாதக அமைப்பின் படி பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று விட்டல் ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது , மேற்கண்ட பலன்களுக்கு  எதிர்மறையான பலன்களை வழங்கிவிடும், தீய பலன்கள் 200 மடங்கு  நடை பெரும்.

மேலும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகமும், சுக ஸ்தானமான  4ம் பாவகமும் நல்ல நிலையில் இருப்பது ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் மிகுந்த வற்றி வாய்ப்பை வாரி வழங்கும் .

பங்கு வர்த்தக தொழில்களில் ஜாதகர் நிறைவான வருமானத்த பெற , சுய ஜாதகத்தில் மற்றவர் பணத்தை குறிக்கும் 6ம் பாவகமும், திடீர் அதிர்ஷ்டம் மற்றும் வர்த்தகத்தால் வரும் வருமானத்தை தரும் 8ம் பாவகமும், முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தை குறிக்கும் 12ம் பாவகமும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் மேற்கண்ட அமைப்பில் 6,8,12ம் பாவகங்கள் ஒருவர் ஜாதகத்தில் நல்ல வலிமையுடன் 100 சதவிகிதம் சிறப்பாக இருந்தால், பங்குவர்த்தக தொழில்களில் கொடிகட்டி பறக்கலாம், அபரிவிதமான வருமானத்தை பெறலாம்.

மாறாக மேற்கண்ட 6,8,12ம் பாவகங்கள் வலிமை இழந்தோ, தனது பாவகத்துடன் சம்பந்தம் பெற்றோ, விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருந்தாலோ , பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று இருந்தாலோ, ஜாதகர் பங்கு வர்த்தக தொழில் பக்கம் தலை வைத்து படுப்பது கூட ஆகாது, மீறி செய்தால்  ஜாதகரின் "கெளனபீடம்"
(கோவணம்) வரை உருவி விடும் .

எனவே எந்த ஒரு ஜாதகரும் சுய ஜாதக ரீதியாக தனக்கு ஏற்ற ஜீவனம் எதுவென்பதை நல்ல ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று செய்வது சிறப்பு, அதிலும் தற்பொழுது நடை பெரும் திசை மற்றும் புத்திகள் நல்ல யோக பலன்களை  வழங்குவது நல்லது, சுய ஜாதகம் மட்டும் வலிமை பெற்று தற்பொழுது  நடைபெறும் திசை மற்றும் புத்தி  சிறப்பாக இல்லையெனில் ஜாதகர் செய்யும் தொழில் மிகப்பெரிய வெற்றியை தர வாய்ப்பில்லை என்பது மட்டும் உண்மை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
9842421435

லக்கினம் முதல் களத்திர ஸ்தானம் வரை கிரகங்கள் அமர்ந்து, கால சர்ப்ப தோஷம் ஏற்ப்பட்டாலும், லக்கினத்தில் அமர்ந்த ராகு அல்லது கேது நன்மையை செய்யுமா ?



கேள்வி : 

லக்கினம் முதல் களத்திர ஸ்தானம் வரை கிரகங்கள் அமர்ந்து, கால சர்ப்ப தோஷம் ஏற்ப்பட்டாலும், லக்கினத்தில் அமர்ந்த ராகு அல்லது கேது நன்மையை செய்யுமா ?

பதில் : 

சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு உற்பட்ட பாகைக்குள் அமரும் ராகுவோ அல்லது கேதுவோ , லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மையை செய்வார்கள், இதில் எவ்வித சந்தேகமும் இல்லை, இதில் கால சர்ப்ப தோஷத்திற்கு இடமில்லை, இங்கே லக்கினத்தில் அமரும் ராகு கேது லக்கினத்தை 100 சதவிகித வலிமையை தந்துவிடுவார்கள், ஜாதகரின் லக்கினம் சரமாக அமைந்தால் செயல்பாடுகளில் வேகத்தையும், ஸ்திரமாக அமைந்தால் நிலையான வாழ்க்கையையும், உபயமாக அமைந்தால் தனது வாழ்க்கையை பிறருக்கு உபயோகப்படும் விதத்திலும் , ஜாதகரின் வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடும்.

மேலும் லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்து, லக்கினம் நெருப்பு தத்துவ ராசி என்றால் ஜாதகர் மிகுந்த உடல் வலிமையுடன் சுறு சுறுப்பாக செயல்படும் தன்மையையும், நீண்ட ஆயுளையும், எவ்வித உடல் துன்பத்தையும் ஏற்கும் மன வலிமையை தரும், உடல் மற்றும் மனம் சிறப்பாக செயல்பட்டு நினைத்ததை அடையும் தன்மையை தரும், குறிப்பாக லட்சிய புருஷராக ஜாதகர் திகழ்வார், நெருப்பு தத்துவ ராசியில் நன்மை தரும் அமைப்பில் அமரும் ராகு கேது சிறந்த நிர்வாக திறமையை தரும்.

லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்து, லக்கினம் நில தத்துவ ராசிஎன்றால், ஜாதகரின் உடல் நிலை எப்பொழுது சீராக இருக்கும் தன்மையை பெற்று விடும், ஜாதகரின் குணம் மிகவும் பண்பாடு உடையதாகவும், பொறுமையின் சின்னமாகவும் அமைந்து விடும், தனது தெளிவான சிந்தனையாலும், திட்டமிடுதாலும் வாழ்க்கையில் மிக பெரிய சொத்து சுகங்களை நிர்வகிக்கும் யோகத்தை தரும், நில தத்துவ ராசியில் நன்மை தரும் அமைப்பில் அமரும் ராகு கேது சிறந்த உடல் நிலையையும் பொருள் ஆதாயத்தையும் தரும்.

லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்து, லக்கினம் காற்று தத்துவ ராசியாக அமைந்தால், ஜாதகரின் அறிவாற்றலே மிகுந்து நிற்கும் , தனது அறிவாற்றலால் சாதிக்க இயலாத காரியத்தை கூட எவரும் எதிர்பார்க்காத விதத்தில் சாதிக்கும் தன்மையை தரும் , சாய கிரகங்கள் காற்று தத்துவ ராசியில் சிறப்ப செயல்படும் தன்மை உண்டாகும் , எவ்வித பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வை சொல்லும் சிறந்த அறிவு ஆற்றலை தரும் அமைப்பாக இதை கருதலாம், எந்த ஒரு ஜாதகத்திலும் ராகு அல்லது கேது காற்று தத்துவ ராசியில் நல்ல நிலையில், எந்த ஒரு பாவகத்திலும்  அமர்ந்து இருப்பது, ஜாதகருக்கு வெற்றி மேல் வெற்றியை தரும் அமைப்பாகும்.

லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்து, லக்கினம் நீர் தத்துவ ராசியாக அமைந்தால் மனித வாழ்க்கையின் பரிபூரண நிலையை அனுபவிக்க வைக்கும், பூ உலக வாழ்க்கையில் சகல யோகங்களையும் வாரி வழங்கும் தன்மையை தரும் , ரத கஜ துரகதிபதிகளுடன் மேன்மைதரும் அரசியல் வெற்றியையும் தரும், சகல யோகங்களையும் தவிர்த்து , ஆன்மீக வாழ்க்கையில் எளிமையான முறையில் இறை நிலையை அடையும் யோக வாழ்க்கையை தரும் , ஆக நீர் ராசியில் ராகு கேது நல்ல நிலையில் அமர்வது மேற்கண்ட யோக பலன்களை தரும் , ஒரு வேலை நீர் ராசியில் ராகு கேது பாதிப்பான பலனை தரும் நிலையில் அமர்ந்துவிட்டால் ஜாதகர் போதை பொருட்களுக்கு அடிமையாகும் தன்மையை தரும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ராகு கேது லக்கினத்தில் ( அதாவது லக்கினம் ஆரபிக்கும் பாகையில் இருந்து, லக்கினம் முடிவடையும் பாகைக்குள் ராகு கேது  இருக்க வேண்டும் ) அமர்ந்திருக்கிறது என்றால் நிச்சயம் லக்கினத்திற்கு, 100 சதவிகித வெற்றியை தரும் , லக்கினத்திற்கு எதிர்பாவகமாக  வரும் களத்திர ஸ்தானத்தில் அமரும் ராகுவோ அல்லது கேதுவோ சிறப்பான நன்மைகளை தருவார்கள் என்று எதிர்பார்க்க இயலாது , களத்திர  பாவக அதிபதியின் தன்மையை வைத்தே களத்திர ஸ்தானம் நன்மையை தருமா ? தீமையை தருமா ? என்று நிர்ணயம் செய்ய இயலும்.

 எடுத்து  காட்டாக களத்திர ஸ்தான அதிபதி வளர் பிறை சந்திரன், குரு, சுக்கிரன், சூரியனுடன் சேராத புதன் என்றால் களத்திர ஸ்தானத்தை 100 சதவிகிதம் கெடுத்து அவயோக பலன்களை வாரி வழங்கிவிடும், மாறாக களத்திர ஸ்தானாதிபதி செவ்வாய்,சூரியன்,சனி, தேய்பிறை சந்திரன், சூரியனுடன் சேராத புதன் என்றால் களத்திர ஸ்தானம் 100 சதவீதம் வலிமை பெற்று களத்திர ஸ்தான அமைப்பில் இருந்து 100 சதவிகித யோக வாழ்க்கையை தந்துவிடும் . 

முதலில் ராகு கேது என்ற கிரகம் சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு உற்பட்ட பாகைக்குள்தான், அமர்ந்திருக்கிறார்களா ? என்று தெளிவாக தெரிந்து கொண்ட பிறகே மேற்கண்ட முறையில் பாவக வலிமையை நிர்ணயம் செய்ய வேண்டும், ராகு கேதுவுக்குள் அனைத்து கிரகம் அடங்கி இருக்கிறது என்பதற்காக ராகு கேது சர்ப்ப தோஷத்தை தரும் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது , எது எப்படியோ லக்கினத்தில் அமரும் ராகு கேது லக்கினத்தை  100 சதவிகிதம் வலிமை பெற செய்வார்கள் என்பது மட்டும் உறுதியானது  உண்மையானது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

10 பொருத்தம் அமைந்தும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாததிர்க்கு காரணம் என்ன ?



கேள்வி :

திருமணம் செய்வதற்க்கு ஆலோசனை கேட்ட போது ....இரண்டு ஜாதகத்துக்கும் 10 பொருத்தம் உள்ளது.வசிய பொருத்தம் உள்ளது..அருமை பெருமை என்று சொன்னார்கள் ஜோதிடர்கள். அது மட்டும் இல்லாமல் ஆண் ஜாத்கத்தில் 7 வது இடத்தில் சனி உள்ளது பெண் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சனி உள்ளது..செம பொருத்தம் என்று சொன்னார்கள்.

கல்யாணம் முடிந்து ஒரு வருடம் ஆகி விட்டது...வசிய பொருத்தம் எல்லாம் ஒரு 60 நாள் தான் வேலை செய்தது. ஏக பட்ட முரண் பாடுகள். வாழ்க்கையே வெறுத்து விட்டது...இத்தனைக்கும் என் சித்தப்பா 5,6 இடங்களில் ஜோதிடம் பார்த்தார், உண்மையில் இரு ஜாதகத்தில் யாரிடம் தான் பிரச்சினை உள்ளது.? தயவு செய்து விளக்கவும்

பதில் :

 பொதுவாக நட்சத்திர பொருத்தம் என்பது இல்லற வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ண நலன்களையும் வாரி வழங்குவதில்லை, குறிப்பாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை பெற்று அமையாத பொழுது, வரன் வதுவின் ஜாதகத்தில்  நட்சத்திர பொருத்தம் 10க்கு 10 அமைந்தாலும் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய சிறிதும் வாய்ப்பில்லை, தம்பதியரின் ஜாதக அமைப்பில் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய அடிப்படையில் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடும், களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் வீடும் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெற்று மிகவும் நல்ல வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, ( குறிப்பாக திருமணம் நடைபெறும் தருணத்தில் சுய ஜாதகத்திலும் சரி, கோட்சார அமைப்பிலும் சரி ) அது மட்டுமல்ல இல்லற வாழ்க்கையில் இணைந்த பிறகு தம்பதியருக்கு நடைமுறையில் வரும் நவகிரகங்களின்  திசை மற்றும் புத்திகள், இருவருக்கும் சுய ஜாதக அமைப்பில் வலிமை பெற்ற பாவக பலனை  ஏற்று நடத்துவது நடத்துவது தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றியையும் மிகுந்த யோகத்தை தரும் .

இன்றைய பதிவில் தங்களது ஜாதகத்தையும், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தையும் இந்த ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் :

தங்களது ஜாதக நிலை 

தங்களது ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :

2,5,8,11ம் வீடுகள் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், தங்களது ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் ஆகும்.

தங்களது ஜாதக அமைப்பில் பதிக்க பட்ட நிலையில் இருக்கும் பாவகங்கள் :

1,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் அதிக தீய பலன்களை வழங்கும் அமைப்பாக கருதலாம்.

தங்களது ஜாதகத்தில் தற்பொழுது நடக்கும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் :

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலனையே செய்துகொண்டு இருக்கிறது.



தங்களது வாழ்க்கை துணையின் ஜாதக நிலை 

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :

1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 2,3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகத்தில் சிறந்த அமைப்பு.

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதக அமைப்பில் பதிக்க பட்ட நிலையில் இருக்கும் பாவகங்கள் :

6ம் வீடு எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 5,8,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் கடுமையான பாதிப்பை தரும் அமைப்பாக கருதலாம்.

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் தற்பொழுது நடக்கும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் :

3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது சிறப்பான அம்சம், ஆனால் தற்பொழுது நடந்துகொண்டு இருக்கும் கோட்சார பலன்கள் சிறப்பாக இல்லை.



மேற்கண்ட இரண்டு ஜாதக அமைப்பில் தங்களது ஜாதக அமைப்பில் லக்கினம் என்ற பாவகம் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களது வாழ்க்கையில்  மன நிம்மதியை குலைக்கும் விதமான பலன்களை வழங்கும், 6ம் வீடு விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தேவையில்லாத விஷயங்கள் தங்களுக்கு எதிராக உருவெடுத்து தங்களது மன நிம்மதியை பதம் பார்க்கும், 10ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜீவன வழியில் இருந்து வரும் இன்னல்களை அதிகரிக்கும், 12ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது இல்லற வாழ்க்கையையும் அதனால் வரும் பிரச்சனைகளால், மன நிம்மதியை குறைக்கும்.

3,9ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது 200 மடங்கு தீமையை தரும் அமைப்பாக கருதலாம் எடுத்துகாட்டாக, 9ம் பாவக வழியில் இருந்து தேவையில்லாமல் மற்றவர்களிடம் அவ பெயரை பெற்று தரும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகள் யாவும் தோல்வியை தரும் .

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதக அமைப்பில் 5ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது குல தேவதை சாபத்தையும், திருமண வாழ்க்கையில் நிம்மதி அற்ற நிலையை தரும்.

8ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தனது வாழ்க்கை துணையின் அமைப்பில் இருந்து வரும் இன்னல்களையும், இழப்புகளையும் தரும்.

11ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தனது வாழ்க்கையில் வரும் அதிர்ஷ்டங்களை, நல்ல வாய்ப்புகளை தவிர்க்கும் தன்மையை தரும்.

6ம் வீடு எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது உடல் ரீதியான பிரச்சனைகளையும், வயிறு சம்பந்தபட்ட தொந்தரவுகளையும் தரும் ( தனது வாழ்க்கை துணையை சிறப்பாக வைத்திருக்க உதவுவது 6ம் பாவகமே, இந்த 6ம் பாவகம் பாதிப்பது நல்லதல்ல )

12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மன நிம்மதியையும், திருமண வாழ்க்கையில் அதிக இன்னல்களையும் தரும் .

தற்பொழுது தங்களது வாழ்க்கை துணையின் ஜாதக அமைப்பில் தற்பொழுது நடக்கும் திசையில், கோட்சார பலன்கள் மிகவும் தீய பலன்களை தந்து கொண்டு இருப்பது நல்லதல்ல இது எதிர் வரும் 06/11/2014 வரையில் நடை முறையில் உள்ளது .

தங்களது இருவரது ஜாதக அமைப்பிலும் முக்கியமான பாவகங்கள் பாதிக்க பட்டு இருப்பது மிகுந்த பாதிப்பை தரும் அமைப்பாக கருதலாம், குறிப்பாக எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தான பலனை தருவது 200 மடங்கு தீமையை செய்யும்.

சனியை வைத்தெல்லாம் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்ய இயலாது, உண்மையில் தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் துலாம் ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் சனி பகவன் அமர்ந்திருக்கிறார்.

மேற்கண்ட ஜாதகங்களின் முழு பலன்களையும் தெளிவாக தெரிந்து கொள்ளவும், ஜாதக ரீதியான சரியான தீர்வை பெறவும், அலைபேசியில் முன் அனுமதி பெற்று ஜோதிட ஆலோசனை பெற்று கொள்ளுங்கள் .

ஒருவருடைய திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து வைப்பது 10 பொருத்தம் அல்ல, நல்ல நிலையில் அமைந்திருக்கும் பாவக வலிமையே என்றால் அது மிகையில்லை, நட்சத்திர பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் பொழுது இது மாதிரியான பாதிப்புகள் வருவது இயற்கையே, ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு திருமணம் செய்தால் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
 jothidadeepam@gmail.com

வெள்ளி, 25 அக்டோபர், 2013

ஒரு கிரகம் தனது திசையில் சுய புத்தியில் நன்மையை செய்தால்,மற்ற புத்திகளில் தீமையை மட்டுமே செய்யுமா?



கேள்வி :

" ராகு சுயபுத்தியில் நல்ல பலனை வழங்கினால் பின்பு வரும் மற்ற புத்திகளில் தீய பலன்களை தருமா ? அல்லது ஒரு தசா சுயபுத்தியில் அதிகமான நன்மையை வழங்குகிறது என்றால் பிறகு வரும் புத்திகள் மிகப்பெரிய கெடுதலை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டியதில்லை "

என்பது உண்மையா? இந்த ஜாதகத்தை உங்களது பாணியில் விளக்கி தெளிவை கொடுக்க முடியுமா?   ஆள் ஆளுக்கு ஒன்னா சொன்னா மனுசன் எதை நம்புறது ?

பதில் :

பொதுவாகவே பாரம்பரிய ஜோதிடத்தில் இந்த குழப்பங்கள் அதிகம் வருவது உண்டு, எடுத்துகாட்டாக ஒரு கிரகம் தனது திசையில் தனது புத்தியில் யோக பலன்களையும் நன்மையையும் வழங்கினால் மற்ற புத்திகளில் தீமையை செய்யும் என்று தானும் குழம்பி ஜோதிடம் பார்க்க வந்தவரையும் கிறுக்கு பிடிக்க வைப்பதில் போலி ஜோதிடர்களுக்கு நிகர் அவர்களே !

தாங்கள் கேட்ட கேள்வியில் ராகு என்ற கிரகம் " சுய புத்தியில் அதிக நல்ல பலன்களை செய்தால், பிறகு வரும் புத்தியில் மிகப்பெரிய கெடுதலை தரும் இதில் எவ்வித சந்தேகம் வேண்டியதில்லை" என்று சொல்வதாக குறிப்பிட்டு இருந்தீர்கள், ஒரு வேலை நவ கிரகங்கள் போலி ஜோதிடரிடம் நேரில் வந்து      " நான் எனது புத்தியில் நன்மை செய்துவிட்டேன் எனவே இனி வரும் புத்திகளில் மிகப்பெரிய கெடுதலையே செய்வேன்" என்று கையில் அடித்து சந்தியம் செய்திருக்குமோ ? என்ற சந்தேகம் தோன்றுகிறது  நண்பரே !

இதை போன்ற மூட நம்பிக்கைகளை நம்பி தனது வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய பலவிஷயங்களை தவிர்த்து, ஜாதகத்தை காரணம் கட்டிக்கொண்டு வீண் கதை பேசிக்கொண்டு  இருப்பவர்களை விடுத்து, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வே ஜோதிடதீபம் பரிந்துரை செய்கிறது, இந்தமாதிரியான ஜோதிட பலன்கள் எப்படி சொல்கிறார்கள் என்பதே தெரியவில்லை நண்பரே !

இந்த இடத்தில் நான் ஒரு உதாரண ஜாதகம் கொண்டு தங்களுக்கு விளக்க கடமை பட்டுள்ளேன், அதாவது ஒருவரின் சுய ஜாதகத்தில் ஒரு திசை பலனை நடத்தும் பொழுது அந்த கிரகம், அவரது ஜாதகத்தில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது  என்ற விஷயம் தெரியாத பொழுது, போலி ஜோதிடர்களுக்கு வாயில் வந்ததை பலனாக சொல்லி, ஜாதகம் காண வந்தவரை மண்டை காய வைப்பதுண்டு, கொஞ்சம் தங்களுக்கு விழிப்புணர்வு இல்லை எனில் , நவகிரகங்களுக்கு தான் தான் அதிபதி, நான் சொல்வதைத்தான் நவகிரகங்கள் தங்களுக்கு பலனாக தரும் என்று தங்களுக்கு கிலியை ஏற்படுத்தவும் செய்வார்கள் , இதற்க்கு ஒரு படி மேலே சென்று சிலர், கிரகங்களை அக்டிவேசன், டிஅக்டிவேசன் செய்பவர்களும் உண்டு. 

 தாங்கள் வினவிய வினாவில் சிறிதும் உண்மை இல்லை அன்பரே! எடுத்துகாட்டு ஜாதகத்தை இனி பார்ப்போம்.



மேற்கண்ட துலாம் இலக்கின ஜாதகருக்கு தற்பொழுது கேது திசையில் கேது புத்தி  நடை பெற்று கொண்டு இருக்கிறது ( 25/05/2013 முதல் 21/10/2013 வரை ) தற்பொழுது நடை பெற்று கொண்டு இருக்கும் கேது திசையானது 7,11ம் வீடுகள் முறையே  ஜீவன ஸ்தானமான 10 ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவது, ஜாதகருக்கு ஜீவன ரீதியாக அபரிவிதமான முன்னேற்றத்தை  தரும் அமைப்பு .

 மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் என்பது சர நீர் தத்துவ ராசியாக இருப்பதும், அது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் பாவகமாக வருவது சிறந்த விஷயமே, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் பாவகம் ஜாதகருக்கு ஜீவன ஸ்தானமாக வருவதால் இந்த கேது திசை  காலத்தில் ஜாதகருக்கு வீடு,மண்,மனை, வண்டி,வாகனம், என்ற அமைப்பில் மிகுந்த  யோக பலன்களையும் அதன் வழியில் தொழில் முன்னேற்றத்தையும்  தரும் இங்கே கேது திசை கேது புத்தி ஜாதகருக்கு, ஜீவன ஸ்தான அமைப்பில் நன்மையை செய்கிறது .

கேது திசையில் அடுத்து வரும் சுக்கிரன் புத்தி 1,3வீடுகள் சகோதர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றும், 2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையையும் ,

கேது திசையில் சுக்கிரனுக்கு அடுத்து வரும் சூரியன் புத்தி 06,09வீடுகள் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும்.

கேது திசையில் சூரியனுக்கு அடுத்து வரும் சந்திரன் புத்தி 05ம் வீடு பூர்வ புண்ணியமான புத்திர  ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும்.

கேது திசையில் சந்திரனுக்கு அடுத்து வரும் செவ்வாய் புத்தி 12ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும்.

கேது திசையில் செவ்வாய்க்கு அடுத்து வரும் ராகு புத்தி 1,3வீடுகள் சகோதர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும்.

கேது திசையில் ராகுக்கு அடுத்து வரும் குரு புத்தி  05ம் வீடு பூர்வ புண்ணியமான புத்திர  ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும்.

கேது திசையில் குருவுக்கு அடுத்து வரும் சனி புத்தி 2,4,7,8,10,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும்.

கேது திசையில் சனிக்கு அடுத்து வரும் புதன் புத்தி 7,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையையும் செய்கின்றது.

மேற்கண்ட ஜாதக அமைப்பை பார்க்கும் பொழுது ஜாதகருக்கு கேது திசையில் செவ்வாய் புத்தி  ஒன்று மட்டுமே தீமையை செய்கிறது, மற்ற அனைத்து புத்திகளும் நன்மையையே வாரி வழங்குகிறது, தான் ஏற்றுகொண்ட பாவகத்தின் தன்மைக்கு ஏற்ப்பவே ஒரு கிரகம் தனது திசையிலோ புத்தியிலோ நன்மை தீமை பலனை நடத்துகிறது, ஆக ஒரு திசையான தனது சுய புத்தியில் நன்மையை செய்தால் மற்ற புத்த்திகளில் தீமையை செய்யும் என்பது முற்றிலும் தவறான கருத்து , எனவே ஒரு கிரகம் தான் ஏற்று கொண்ட பாவகத்தின் தன்மையை பலனாக நடத்துகிறது என்பது உறுதியாகிறது , மேலும் மற்ற புத்திகளும் தான் ஏற்றுகொண்ட பாவகத்தின் தன்மையையே பலனாக தருகிறது என்பதே முற்றிலும் உண்மை .

தாங்கள் கேட்ட கேள்விக்கு இது தக்க பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன், மேலும் தனது சுய புத்தியில் ஒரு கிரகம்  நன்மையை செய்தால் அதன் பிறகு வரும் அனைத்து புத்திகளிலும் தீமையை செய்யும் என்று சொல்வது ஜோதிட அறிவு சிறிதும் இல்லாத மடையர்கள் சொல்லும் வெறும் வாய் ஜாலமே , இதனை நம்பிக்கொண்டு தங்களது இனிமையான எதிர்காலத்தை சூன்ய நிலைக்கு எடுத்து சென்று விடாதீர்கள் அன்பர்களே !...

ஒரு திசையோ அல்லது புத்தியோ எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்ற கணிதம் தெரியாத நிலையிலும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களின் நிலையை பற்றியே அதன் வலிமையை பற்றியோ, தெளிந்த ஜோதிட அறிவு அற்ற நபர்களால் மட்டுமே மேற்க்கண்ட குழப்பம் விளைகிறது, எனவே சிறந்த ஜோதிடரை நாடி நலம் பெறுங்கள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com

ராகுகேது ஏன் எப்போதும் ரிவர்ஸ்கியர்ல் வண்டி ஓட்டுகிறார்கள் ?



கேள்வி :

ராகு கேது என்பது உண்மையில் என்ன? இவர்கள் ஏன் எப்போதும் ரிவர்ஸ் கியர்ல் வண்டி ஓட்டுகிறார்கள் ? அறிவியல் ரீதியாக விளக்கம் தர முடியுமா?

பதில் :

ஒரு  நான்கு சக்கர வாகனத்தை முன்னால் இயக்க எப்படி 5 கியர் இருக்கிறதோ, அதே போல் பின்னல் இயக்க ரிவேர்ஸ் கியர் ஒன்று உண்டு, இவை அனைத்தும் சரியாக இயங்கினால் மட்டுமே வாகனம் முன்னும் பின்னும் இயக்க முடியும், ரிவேர்ஸ் கியர் இல்லை எனில் வாகனத்தை முனால் மட்டுமே இயக்க முடியும் அது மிகவும் கடினம் மேலும் பல இடையூறுகள் ஏற்ப்படும், மேற்கண்ட அமைப்பில் ஒரு வாகனத்திர்க்கே ரிவேர்ஸ் கியர் தேவை படும் பொழுது 6 அறிவு கொண்ட மனிதனுக்கு ராகு கேது எனும் இரண்டு சாயா கிரகங்களும் எதிர் வட்ட பாதையில் சஞ்சாரம் செய்யும் பொழுதே நான்கு சக்கர வாகனத்தை போன்று , மனித வாழ்க்கை முழுமை பெறுகிறது.

பொதுவாக ராகு கேது கிரகங்கள் என்பது சாய கிரகம் ஆகும் ( உருவம் அற்ற தன்மை ) சூரியனை சுற்றி எதிர் வட்ட பாதையில் எப்பொழுதும் நிலையாக சுற்றி வந்துகொண்டு இருக்கும் காந்த அலை பாதைகள், எனவே நமது ஜாதகங்களை எதிர் திசையில் சஞ்சாரம் செய்து நன்மை தீமை பலன்களை எவ்வித பாகுபாடுகள் இன்றி வாரி வழங்கி கொண்டு இருக்கிறது, மேலும் ராகு கேது எனும் சாயா கிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் பலன்களை வழங்குவதில், மற்ற கிரகங்களின் தன்மையை போல் அன்றி தனிப்பட்ட சிறப்பை பெற்று இருப்பதை எவராலும் மறுக்க இயலாது .

குறிப்பாக ராகுவோ அல்லது கேதுவோ ஒருவரின் சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்கிறதோ அந்த பாவகத்தின் தன்மையை முழுமையாக தானே ஏற்று நடத்தும் வலிமையை இயற்கையாக பெற்று விடும் , இதனுடன் சேர்ந்த கிரகத்தின் தன்மையினையும், பார்த்த கிரகத்தின் தன்மையையும் தானே ஏற்று நடத்தும் என்பதனையும் இங்கே குறிப்பிட வேண்டியது அவசியம், ஆக மற்ற கிரகத்திற்கு இல்லாத  தனி தன்மை இந்த சாய கிரகங்களுக்கு உண்டு மேலும் தான் தரும் நன்மை தீமை பலன்களில் எவ்வித குறையும் இன்றி சிறப்பாக செய்யும் என்பதனையும் இங்கே கவனிக்க வேண்டியது அவசியம் .

ஆக ராகு கேது கிரகங்கள் எதிர் திசையில் சஞ்சாரம் செய்யும் பொழுதே இவை சாத்தியமாகின்றது , இந்த இயற்க்கை அமைப்பை இறை நிலை சாயாகிரகங்களுக்கு  வழங்கி இருப்பதில் ஆச்சர்யம் இல்லை, ஒருவரின் ஆன்மீக வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், பூலோக வாழ்க்கையில் தன்னிறைவான தன்மையையும் முறையே கேதுவும் , ராகுவும் வழங்குகிறது , ஒருவரின் கருமைய்யம் தெளிவு பெற உதவுபவர் ராகு, ஒருவரின் துரிய நிலையை விழிப்பிற்கு கொண்டு வரும் தன்மையை கேது வழங்குகிறார், எனவே ராகு கேது கிரகங்களின் எதிர் வட்ட பாதை சஞ்சாரம் ஒரு ஜாதகத்தில் மிக மிக அவசியமான ஒன்று என்பதை கருத்தில் கொண்டே இறை நிலை இந்த இயக்கத்தை சாயா கிரகங்களுக்கு வழங்கி இருக்க கூடும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திசாசந்திப்பும் திருமண வாழ்க்கையும் ?!

திசாசந்திப்பு என்றால் என்ன ?  இதானால் திருமண வாழ்க்கையில் சாதக பாதம் உண்டா ? 




மேற்கண்ட கேள்வியை தம் பிள்ளைகளுக்கு வாழ்க்கை துணை தேடும் அன்பர்களும், பொருத்தம் காண வரும் பெற்றவர்கள் பலர் கேட்பதுண்டு, சிலகாலமாகவே இந்த திசாசந்திப்பு என்பது பரவலாக பேசபட்டு வருகிறது, அதிலும் சில ஜோதிட அன்பர்கள் வரன், வது  இருவருக்கு சமகாலத்தில் ஏக திசை நடந்தால் திருமணம் செய்ய கூடாது! என்று அறிவுருத்துவதும், மீறி திருமணம் செய்தால் தம்பதியர் வாழ்க்கை மிகுந்த பாதிப்பை தரும் என்று பயமுறுத்துவதும் கூட,  தற்பொழுது நடந்துகொண்டு இருப்பது, எம்மை ஜோதிட ஆலோசனைக்காக காண வரும் அன்பர்கள் பேச்சில் இருந்து உணர முடிகிறது . 

எடுத்து காட்டாக கிழ்கண்ட ஜாதகம் இரண்டை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே, இந்த இரண்டு ஜாதகத்தை பொருத்தம் பார்த்த பல ஜோதிடர்கள் ஜாதக பொருத்தம் என்பது முற்றிலும் இல்லை என்ற கருத்தை கூறியிருக்கின்றனர் , இந்த இரண்டு ஜாதகமும் திருமண வாழ்க்கைக்கு ஏற்ற அமைப்பை பெறுகிறதா? இல்லையா ? என்பதை இறுதியில் தெரிந்து கொள்வோம் .

ஆண் ஜாதகம் :



மேற்கண்ட ஆணின் ஜாதகத்தில் தற்பொழுது சூரியன் திசை நடந்து வருகிறது (16/12/2015) வரை, தற்பொழுது நடைபெற்று வரும் சூரியன் திசையானது ஜாதகருக்கு 3,9ம் வீடுகள் முறையே பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிகுந்த யோக பலன்களையே தந்து கொண்டு இருக்கிறது, மேலும் ஜாதகரின் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மட்டும் 12ம் பவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகரின் திருமண வாழ்க்கை 32 வயதுக்கு மேல் அமையும் என்பதை தெரிவிக்கிறது, இதை தவிர ஜாதகத்தில் வேறு எந்த பாவகமும் பாதிப்படையவில்லை என்பது ஜாதகருக்கு மிகுந்த யோகமே.

பெண்ணின் ஜாதகம் :



மேற்கண்ட பெண்ணின் ஜாதகத்தில் தற்பொழுது சூரியன் திசை நடந்து வருகிறது (19/03/2014 ) வரை, தற்பொழுது நடைபெற்று வரும் சூரியன் திசையானது ஜாதகிக்கு 2,5,11ம் வீடுகள் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிகுந்த யோக பலன்களையே தந்துகொண்டு இருப்பது சிறப்பான ஒரு விஷயமே , ஆக மேற்க்கண்ட இரண்டு ஜாதகத்திலும் நடை பெற்று கொண்டு இருக்கும் சூரியன் திசையானது மிகுந்த நன்மையான பலன்களையே தருகிறது என்பது உறுதியாகிறது.

ஆனால் மேற்கண்ட இரண்டு ஜாதகத்திற்கும் , இதற்க்கு முன் பொருத்தம் பார்த்த ஜோதிடர்கள் அனைவரும் ஜாதகம் பொருந்தாது என்றும் இருவருக்கும் ஒரே திசை நடப்பதால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது என்று அச்சுருத்தியதாகவே தெரிகிறது , இதை போன்றே நன்றாக பொருந்தி வரும் பல ஜாதகங்களை பல ஜோதிடர்கள் திசா சந்திப்பை காரணம் காட்டி பல திருமணங்களை நடைபெறாமல் கால தாமதம் ஏற்ப்படுவதிர்க்கும், தடுப்பதிர்க்கும்  ஜோதிடர்களே காரணமாக இருப்பது வருத்தத்திற்கு உரிய ஒன்றாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, இந்த குழப்பங்கள் ஏன் ? ஏற்படுகிறது .

பொதுவாக பாரம்பரிய ஜோதிடத்தில் திசைகளின் பலன்கள் என்ற தலைப்பில் பல ஜோதிட நூல்களில் எழுதியிருக்கும் விஷயங்களை கருத்தில் வைத்துகொண்டு பொருத்தம் காணும் பொழுது இதை போன்ற பல தவறுகள் ஏற்ப்பட வாய்ப்புகள் உண்டு, மேலும் திசா புத்தி பலன்கள் என்ற தலைப்பில் பல ஜோதிட நூல்களில் எழுதியிருக்கும் விஷயங்கள் அனைத்தும் பொது பலன்களே அன்றி, அவை சுய ஜாதகத்தை கட்டுபடுத்த வாய்ப்பில்லை என்பதே முற்றிலும் உண்மை .

ஒருவரின் ஜாதகத்தில் நடைபெறும் திசை மற்றும் புத்தி அவரின் ஜாதகத்தில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்று அறியாத பொழுதும், குறிப்பிட்ட ஜாதகத்தில் ஒவ்வொரு பாவகத்தின் தன்மை எப்படிபட்ட நிலையில் இருக்கிறது  என்ற உண்மை நிலை அறியாத பொழுதுமே மேற்கண்ட திசா சந்திப்பு என்ற குழப்பம் ஏற்ப்பட்டு , பொருத்தம் காண வந்தவர்களுக்கு சரியான பதிலை தெரிவிக்காத நிலையை தருகிறது, ஆக ஒருவரின் ஜாதகத்தில் எவ்வித தவறும் இல்லை, அரை குறை ஜோதிடர்களிடம் ஆலோசனை கேற்கும் பொழுது வரும் வினையே இது என்றால், அது மிகையில்லை .

ஒருவரின் ஜாதகத்தில் நடைமுறையில் நடந்துகொண்டு இருக்கும் திசையானது எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்று தெரியாத ஜோதிடனிடம் தனது ஜாதகத்தை தந்து பொருத்தம் பார்க்கும் அன்பர்களின் நிலையை பற்றியே ஜோதிடதீபம் அதிக கவலை கொள்கிறது, பலரது திருமணத்திற்கு தடையாக மேற்கண்ட திசாசந்திப்பு மட்டுமா காரணமாக அமைகிறது, மக்களை பயமுறுத்த மேலும் பல விஷயங்கள் அரைகுறை மற்றும் ஜோதிட கணிதத்தில் தேர்ச்சி அற்ற போலி ஜோதிடர்களிடம் நிறைய உண்டு அவையாவன, 1 ராகு கேது தோஷம், 2 செவ்வாய் தோஷம், 3 சர்ப்ப தோஷம், 4 நாக தோஷம், 5 ஏழரை சனி, 6 களத்திர தோஷம் என வகைக்கு 5,6 தோஷங்களை சொல்லி பொதுமக்களை குழப்பம் ஏற்ப்படுத்தி அதில் குளிர் காயும் போலி ஜோதிடர்களே கலிகாலத்தில் அதிகம் .

ஒருவரின் ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை பற்றியும், அவர்களுக்குள் இருக்கும் பொருத்தங்கள் பற்றியும் பாவக வலிமையின் நிலையை கருத்தில்  கொண்டு பலன் காணும் பொழுதே சிறப்பான திருமண வாழ்க்கை அமையும், இதில்  தச வித பொருத்தமான நட்சத்திர பொருத்தம் 10ம் கூட தேவையில்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து .

இதை அடிப்படையாக வைத்து பார்க்கும் பொழுது, பல ஜோதிடர்களால்  திசா சந்திப்பு ஏற்ப்படுவதால் பொருத்தம் அற்ற ஜாதகம் என்று ஒதுக்கிய மேற்கண்ட இரண்டு ஜாதகத்திற்கும்  திருமண பொருத்தம் என்பது பாவக வலிமை  கொண்டு காணும் பொழுது மிக சிறப்பாக இருக்கிறது, மேலும் இவர்கள் திருமணம் செய்து கொள்வதால் திசா சந்திப்பு என்ற ஒரு விஷயம், இவர்களை எந்த விதத்திலும் சிறு பாதிப்பையும் கூட, தர வாய்ப்பில்லை என்பதே உண்மை என்ற விஷயத்தை உணர வைத்து இருவருக்கும் சிறப்பாக திருமணம் நடக்க ஜோதிடதீபம் ஆலோசனை வழங்கியதை நினைத்து ஜோதிடதீபம் பெருமை கொள்கிறது. 

குறிப்பு :

ஆண் பெண் இருவரின் ஜாதகத்தில் திசாசந்திப்பு என்பது இல்லாத நிலையிலும் கூட அவர்களின் சுய ஜாதகத்தில் குடும்பம் எனும் 2ம் பாவகம் பாதிக்கபட்டு இருந்தாலோ, களத்திரம் எனும் 7ம் பாவகம் பாதிக்கபட்டு இருந்தாலோ, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பொழுதுதான் திருமண வாழ்க்கை என்பது மன முறிவு வரை  எடுத்து செல்கிறது என்ற உண்மையை பொதுமக்கள் உணருவது அவசியம் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 17 அக்டோபர், 2013

ஆட்சி பெற்ற சனி திசை யோக பலன்களையும் நன்மைகளையும் வாரி வழங்குமா ?


ஆட்சி பெற்ற சனி திசை யோக பலன்களையும் நன்மைகளையும் வாரி வழங்குமா ? என்ற கேள்விக்கு கிழ்க்கண்ட அன்பரின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம்.

லக்கினம் : மிதுனம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 2 ம் பாதம் 


நடப்பு திசை சனி திசை ( 01/09/2013 முதல் 01/09/2013 வரை )
நடப்பு புத்தி  சனி புத்தி ( 01/09/2013 முதல் 04/09/2016 வரை )

பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் சில கிரகங்கள் ஆட்சி,உச்சம் பெற்று அமர்ந்திருந்தால் சிறப்பு என்றும், அப்படி அமர்ந்த கிரகத்தின் திசை வரும் பொழுது ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றமும் தன்னிறைவான பொருளாதார சேர்க்கையும், எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும் வாரி வழங்கும் என்பது பல ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது, உண்மையில் சுய ஜாதகத்தில் ஒருகிரகம் ஆட்சி உச்ச நிலையில் அமர்ந்து, அந்த கிரகத்தின் திசை வரும்பொழுது ஜாதகனுக்கு முன்னேற்றத்தை வழங்குமா என்பதை பற்றி இன்றைய ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் .

மேற்கண்ட ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும் சனி திசை ஆனது சுய ஜாதகத்தில் சனி கும்பத்தில் ஆட்சி நிலை பெற்று அமர்ந்திருக்கு நிலையில் தனது திசை நடத்துகிறது இருப்பினும் இந்த ஜாதகருக்கு நடைபெறும் சனிதிசையால் அதிக இன்னல்களையும் இழப்புகளையுமே பலனாக தருகிறது, மேலும் தொழில் ரீதியாக ஜாதகருக்கு கடுமையான பின்னடைவும், மன நிம்மதி இழப்புமே மிஞ்சி இருக்கிறது  இதற்க்கு காரணம் என்ன ?

சுய ஜாதகத்தில் சனி ஆட்சி நிலையில் அமர்ந்த பொழுதிலும், ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும் சனி திசை 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் ( உபய லக்கினத்திற்கு 7ம் பாவகம் பாதக ஸ்தானம் )சம்பந்தம் பெற்று பலனை தருவதே மேற்கண்ட இன்னல்களும், துன்பங்களும் ஏற்ப்பட காரணம் , ஒருவருக்கு நடக்கும் திசை ஆனது பாதக ஸ்தானம் பலனை தரும் பொழுது ஜாதகரின் நிலை சற்றே கவலைப்படும் விதத்தில் தான் இருக்கும், அந்த கிரகம் சுய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று அமர்ந்திருந்தாலும் சரி வேறு சிறப்பு வாய்ந்த நிலையில் இருந்தாலும் சரி , இவரது ஜாதகத்தில் சனி ஆட்சி பலம் பெற்றிருப்பது நன்மை என்றாலும் கூட, தான் ஏற்று நடத்தும் பாவக பலன் என்று பார்க்கும் பொழுது பாதக ஸ்தான பலனை ஏற்ப்பது சிறப்பான விஷயம் அல்ல , எனவே இந்த ஜாதகர் சனி திசை, சனி புத்தி, சனி அந்தரம் நடை பெரும் காலங்களில் பாதக ஸ்தான பலனையே அனுபவிக்க வேண்டி வரும் என்பதே உண்மை .

மேலும் இந்த ஜாதகருக்கு பாதக ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் வீடாக வருவதும், அது உபய ராசியாக இருப்பதும் ஜாதகர் தனது முன்னோர்களின் வினை பதிவினை தான் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலையை தரும் என்பது உறுதியாகிறது , எனவே தனது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கடமைகளை முறையாக செய்யும் பொழுது ஜாதகருக்கு தீமையான பலன்கள் குறைந்து நன்மைகள் நிச்சயம் கிடைக்கும், மேலும் நல்ல ஆன்மீக பெரியவர்களிடம் தீட்சை பெறுவதும் , வயது முதிர்ந்த பெரியவர்களின் ஆலோசனை படி நடப்பதும் ஜாதகருக்கு சனி திசை தரும் பாதக ஸ்தான பலன்களில் இருந்து மீண்டு நன்மைகள் உண்டாகும்.

இதற்க்கு முன் நடந்த குரு திசையும் ஜாதகுக்கு 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவக அமைப்புடன் தொடர்பு பெற்று தீமையான பலனை தந்தது வருந்த தக்க விஷயமே , எனவே ஜாதகர் குரு திசையிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறவில்லை என்பது உறுதியாகிறது , இனி வரும் காலங்களில் ஜாதகர் சனி திசை சனி புத்தி வரை புதிய முயற்சிகளில் இறங்காமல் , அதிக முதலீடுகளை செய்யாமல் இருப்பதே நல்லது மேலும் பாதக ஸ்தானம் என்பது ஒரு வகையில் களத்திர ஸ்தானமாக வருவதால் ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் சிறு சிறு இன்னல்களை அனுசரித்தும், நண்பர்கள் மற்றும் பொது மக்கள் வழியில் இருந்து வரும் இனல்களை அனுசரித்தும் செல்லும் பொழுது , பாதக ஸ்தான பலன்கள் குறைந்து அந்த பாவக வழியில் இருந்து நன்மைகள் நடைபெறும்.  

பொதுவாக ஒரு கிரகம் சுய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருக்கிறது என்ற ஒரு விஷயத்தை மட்டும் வைத்துகொண்டு அந்த கிரகத்தின் திசை மிகப்பெரிய நன்மையை செய்து விடும் என்று கணிதம் செய்வது ஜோதிடத்தின் அடிப்படை கூட தெரியாத நபர்கள் செய்யும் ஒரு வேலை என்பதை உணர்வது அவசியம், இதை போன்றே ஒரு கிரகம் நீச்சம் பகை பெற்று இருக்கிறது என்றால் அந்த கிரகத்தின் திசை தீமை செய்யும் என்று முடிவு செய்வதும் தவறான அணுகு முறையே என்றால் அது மிகையில்லை.

ஒரு கிரகத்தின் திசை எவ்வித பலன்களை தருகிறது என்று அறிய மூன்று விதிகளை உணர்வது அவசியம் அவையாவன :

1 ) நடப்பு திசை எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது?
2 ) அந்த பாவகம் சுய ஜாதகத்தில் நன்மையை தருகிறதா? தீமையான பலன்களை தருகிறதா ?
3 ) அந்த பாவகத்திர்க்கு தற்பொழுது உள்ள கோட்சார கிரகங்கள் நன்மையை தருகிறதா? தீமையை தருகிறதா? 

என்ற விஷயங்களை நிர்ணயம் செய்து விட்டால் ஒருவருக்கு நடக்கும் திசை, புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகின எவ்வித பலன்களை வழங்குகிறது என்பதை பற்றிய தெளிவான மிக மிக துல்லியமான பலன்களை நிர்ணயம் செய்துவிட முடியும், இதை ஜாதகர் பின் பற்றி நடந்தால் ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் யோக காலமே.

வாழ்க வளமுடன்  
ஜோதிடன் வர்ஷன் 
9443355696