வியாழன், 30 ஜனவரி, 2014

சகல ஐஸ்வர்யங்களும் வாரி வழங்கும் தை அமாவாசை வழிபாடு!


ஒருவரின் சுய ஜாதகத்தில் பாதிக்க பட கூடாத பாவகங்களில் முதன்மை வகிப்பது உடல் உயிராகிய  லக்கினம், பூர்வ புண்ணியம் என்று சொல்லப்படும் 5ம் பாவகம், பாக்கிய ஸ்தானம் என்று வர்ணிக்கப்படும் 9ம் பாவகம், மேற்கண்ட மூன்று பாவகங்கள் சுய ஜாதகத்தில் பாதிக்கப்படும் பொழுது, ஜாதகரின் கருமையம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி, ஜாதகரின் உடல் நலம், கல்வி அறிவு, தொழில் மற்றும் வேலை வாய்ப்பு, திருமண தடை மற்றும் திருமண வாழ்க்கையில் வரும் இன்னல்கள், குழந்தை பாக்கியம் இன்மை, பொருளாதார பாதிப்புகள், ஜாதகருக்கு உதவி செய்ய யாரும் இல்லாத நிலை, தீய பழக்க வழக்கங்களுக்கு உட்ப்பட்டு தனது வாழ்க்கையை தானே சீரழித்து கொள்ளும் தன்மை, என்ற அமைப்பில் கடுமையான தீய பலன்களை வழங்க ஆரம்பித்து விடும்.

மேலும் மேற்கண்ட பாவகங்களின் பலனை நடப்பு திசை தர ஆரம்பித்து விட்டால் ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக மாறிவிடும், மேலும் தனது நல வாழ்விற்கு உண்டான வழிகாட்டுதலும் ஜாதகருக்கு கிடைக்காது, தனித்து போராட வேண்டிய சூழ்நிலைக்கு ஜாதகர் தள்ளப்படுவார், மேற்கண்ட பாதிப்பில் இருந்து ஜாதகர் விடுபடவும், பாதிக்கபட்ட பாவகங்களில் இருந்து ஜாதகர் யோகம் பெறவும் இந்த தை அமாவாசை வழிபாடு உறுதுணை புரியும் என்றால் அது மிகையில்லை.

இலக்கின பாதிப்பு :

 ஜாதகர் இந்த தை அமாவசை தினத்தில் தனது பெற்றோரிடம் அட்சதை பெற்று ஆசி பெறுவதும், அவர்களுக்கு விருப்பமானதை வாங்கி தருவதும், சிறந்த நற்பலனை ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து பெற்று தரும், நல்ல ஆன்மீக குருவிடம் முறையான தீட்சை பெறுவது ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து வரும் துன்பங்களும், அக இருளும் நீங்கி அறிவில் தெளிவு பெற்று தனது பிறவி துன்பம் நீங்கி யோக வாழ்க்கையை பெற, ஜாதகருக்கு உறுதுணை புரியும், இந்த தை அமாவாசை தினத்தில் மேற்கண்ட வழிமுறைய கடை பிடித்து நலம் பெருக.

பூர்வ புண்ணிய பாதிப்பு :

 மாயை எனும் உலக வாழ்க்கையில் இருந்தும், இறை நிலையுடன் உயிர் கலப்பு பெறவும் முன்னோர்கள் காலம் காலமாக, முறையாக குல தேவதை வழிபாடு  என்ற முறையினை நமக்காக விட்டு சென்றுள்ளனர், குல தேவதை வழிபாடு என்பது ஜாதகரின் அறிவில் தெளிவையும், சிறப்பான சிந்தனை ஆற்றலையும், தனது துன்பங்களில் இருந்து விடுபட்டு யோக வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கும், வழிவகுக்கம் என்றால் அது மிகையில்லை, நமது குல தெய்வ வழிபாடே நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைகளையும், வாழ்க்கையை சிறப்பாக  வாழும் வாழ்க்கை நெறியினையும் நமக்கு உணர்த்தும் என்றால் அது மிகையில்லை, எந்த ஒரு சூழ்நிலையில் இருந்தும் நம்மை காப்பது குல தெய்வ வழிபாடே, சரியான நேரத்தில் நமக்கும் தனது அருள் கரங்களால் காத்து அருளும் தன்மை மற்றும் சக்தி, நமது குல தேவதைக்கே உண்டு.

எனவே இந்த தை அமாவசை தினத்தில் தனது குல தேவதையை நாடி சென்று தன்னால் இயன்ற அளவு அண்ணதானம் பிறருக்கு செய்து குல தெய்வத்தை முறையாக, அவரவர் முறை படி குடும்பத்துடன் சென்று சிறப்பாக வழிபாடு செய்து வருவது ஐந்தாம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை நீக்கி, பூர்வீகத்தில் யோக வாழ்வு, குழந்தை பாக்கியம், எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய் தொழில் முன்னேற்றம், கல்வியில் வெற்றி, மன நிம்மதி, சிறந்த அறிவாற்றல், கலை ஆர்வம், கற்பனை திறன் ஆகியவற்றை தங்கு தடையின்றி பெற்று தரும் என்றால் அது மிகையில்லை.

பாக்கிய ஸ்தான பாதிப்பு :

 ஜாதகர் மேற்கொள்ளும் காரியங்களில் எல்லாம் தொடர் தோல்வியும், காரிய தடையும், முன்னேற்றம் அற்ற நிலையும், கௌரவம் நற்பெயருக்கு ஏற்ப்படும் கலங்கத்திர்க்கும் , அடிப்படை காரணமாக அமைவது பாக்கிய ஸ்தான பாதிப்பே, மேலும் ஜாதகர் சமுதாயத்தில் நல்ல மனிதராக மதிப்பு மரியாதையுடன் சிறப்பாக வாழும் யோகத்தை தருவது இந்த பாக்கிய ஸ்தானமே என்றால் அது மிகையில்லை, மேலும் ஆன்மீக வாழ்க்கையில் ஜாதகருக்கு நல்ல முன்னேற்றம் தருவதும், கற்ற கல்வியை சரியான முறையில் பயன்படுத்தும் நுண் அறிவாற்றலை தருவதும் பாக்கிய ஸ்தானமே என்றால் அது மிகையில்லை.

மேற்கண்ட பாக்கிய ஸ்தான அமைப்பில் இருந்து ஜாதகர் 100 சதவிகித நன்மையை பெற, இந்த தை அமாவாசை தினத்தில் தனது பித்துருக்களுக்கு முறையான வழிபாட்டினையும், தர்ப்பணத்தையும் தருவது முக்கியமாகும், மேலும் இந்துவாக பிறந்த ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய கடமைகள் மூன்று 1 குல தெய்வ வழிபாடு 2 பித்ரு வழிபாடு 3 பிராமண தர்மம் ஆகியவற்றை இந்த தை அமாவசை அன்று கடை பிடித்து, 16 வகை செல்வமும், சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வழைஅடிவாழையாக செழித்து ஓங்கி சிறப்பாக வாழ இறை அருள் துணை நிற்கட்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
9842421435

புதன், 22 ஜனவரி, 2014

பூர்வபுண்ணியம் பாதிக்கபடும் பொழுது ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்கள் !


ஒருவருடைய சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்கள் என்பது கொஞ்சம் அதிகமே, குறிப்பாக ஜாதகரின் அறிவு திறன் கடுமையாக பாதிக்கப்படும், சிந்தனை ஆற்றல் மட்டுப்படும், ஜாதகரின் திட்டங்கள் யாவும் கனவாகவே இருக்கும், நடைமுறை படுத்துவதற்கு உண்டான வாய்ப்பை வெகுவாக குறைக்கும், ஆக ஜாதகரின் வெற்றி என்பாது குதிரை கொம்பாகவே இருக்கும்.

 சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டிய பாவகங்களில் முதன்மை வகிப்பது பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் என்றால் அது மிகையில்லை, ஒருவர் எவ்வளவு கல்வி அறிவு பெற்று இருந்தாலும் சரி, உலக அனுபவம் பெற்று இருந்தாலும் சரி, பெரிய திறமைசாலியாக இருந்தாலும் சரி, சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் வலிமையற்று இருந்தால், ஜாதகரின் திறமைகள் யாவும் பயனற்று போகும், ஜாதகரால் வீணடிக்க படும், அல்லது எதிர்மறையான விளைவுகளை ஏற்ப்படுத்தும்.

பூர்வ புண்ணியம் பாதிக்கபடுவதை மூன்று வகையாக பிரிக்கலாம், 1 ஐந்தாம் பாவகம் உபய,ஸ்திர ராசிகளால் பாதிக்க படுவது, 2 ஐந்தாம் பாவகம் சர ராசியினால் பாதிக்க படுவது, 3 ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தான அமைப்பின்னால் பாதிக்கபடுவது, என்ற வகையில் பாதிப்பான பலன்களை ஐந்தாம்  பாவகம் வழங்கும், இதில் முதல் வகை பாதிப்பு என்பதின் வீரியம் 33% ஆகவும், இரண்டாம் வகை பாதிப்பு என்பதின் வீரியம் 80% ஆகவும், மூன்றாம் வகை பாதிப்பின் வீரியம் 200% மாகவும் அமையும், எனவே எந்த ஒரு  ஜாதகருக்கும் ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தாம் பெற  கூடவே கூடாது.

எடுத்துகாட்டாக பின் வரும் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!



  இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானமான 9ம் வீட்டுடன் தொடர்பு பெற்று 9ம் வீடு காலபுருஷ  தத்துவ அமைப்பிற்கு முதல் வீடாக அமைவதும், ஐந்தாம் பாவகம் என்பது காலபுருஷ தத்துவத்திற்கு 9ம் வீடாக வருவதும் ஜாதகருக்கு தீமைகளை செய்யும் அமைப்பாக கருதலாம், இதனால் ஜாதகர் அடையும் இன்னல்கள் என்ன ? அனுபவித்த துன்பங்கள் என்ன ? என்பத்தை பற்றி சற்றே ஆய்வு செய்வோம் அன்பர்களே !

1 ஜாதகர் பிறந்த ஐந்து வருடங்களுக்குள்ளேயே, ஜாதகரின் தகப்பனார் தனது பெயரில் தனது முன்னோர்களின் பெயர்களில் உள்ள சொத்து நிலம் வீடு ஆகியவற்றை விற்றுவிட்டு வேறு இடத்தில் குடி பெயரும் சூழ்நிலையை தந்தது, ஜாதகருக்கு அடிப்படையில் வளரும் சூழ்நிலையை மாற்றி அமைத்தது, ஜாதகர் தனது உறவுகளை விட்டு விட்டு மற்று மனிதர்கள் வாழும் ஒரு  புதிய இடத்தில் வளரும் சூழ்நிலையை தந்தது, இதனால் ஜாதகரின் குழந்தை  பருவம் பாதிப்படைந்தது, நல்ல ஆரோக்கியமான வளரும் சூழ்நிலையை  தரவில்லை.

2 ஜாதகரின் கல்வி காலம் பல போராட்டங்கள் நிறைந்ததாக அமைந்தது, பல தடைகளை  தாண்டி ஜாதகர் தனது பள்ளி கல்வியை நிறைவு செய்யும் தன்மையை தந்தது, மேலும் பள்ளியில் படிக்கும் காலங்களில் ஜாதகர் பல அவ பெயரையும் சந்திக்கும் தன்மை தந்தது, உயர் கல்விக்காக ஜாதகர் முயற்ச்சி செய்த பொழுது பல தடைகளை சந்த்தித்து ஒரு வழியாக கல்லூரியில் சேர்ந்தார் ஆனால் முழுமையாக முடிக்க இயலாமல் பாதியில்  கல்லுரி படிப்பு முடிந்தது.

3 பல போராட்டங்களை சந்தித்து கல்லுரி படிப்பு பாதியில் நின்ற பிறகு, வேலைக்காக ஜாதகர் குறைந்த ஊதியத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார், பணியாற்றும் காலத்தில் ஜாதகர் தனது விருப்பத்தின் பெயரில்  காதல் திருமணம் செய்துகொண்டார் ( ஜாதகருக்கு 2 மற்றும் 7ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பதால் இளமையில் திருமணம்   நடைபெற்றது திருமணம் செய்து கொண்ட பெண்ணின் ஜாதகத்தில் 10 வீடுகள் பாதிப்பில் இருந்தது குறிப்பிட தக்கதது ) திருமணம் செய்து ஒரு வருடத்தில் ஜாதகருக்கு பெண் குழந்தை பிறந்தது, ஜாதகரின்  வருமான பற்றா குறையின் காரணமாக திருமண வாழ்க்கை கசந்தது, ஜாதகரின் தீய நண்பர்களின் சேர்க்கையினால் குடி பழக்கத்திற்கு  ஆளாகும் தன்மையை தந்தது, இதில் இருந்து மீள முடியாத நிலையில் ஜாதகர்  இன்னும் இருக்கின்றார்.

4 இவை மட்டுமல்ல இன்னும் பல சொல்ல இயலாத தீமைகளை ஜாதகருக்கு தந்துகொண்டே இருக்கின்றது, குறிப்பாக பாதக ஸ்தான பலனை எந்த எந்த திசை புத்திகள் தருகின்றதோ அப்பொழுதெல்லாம் ஜாதகர் தாங்க இயலாத துன்பங்களை அனுபவிக்க நேருகிறது, ஆக பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பூர்வ புண்ணியம்  ஜாதகருக்கு  கடுமையான பாதிப்பை தருகிறது என்பது  உறுதியாகிறது .

மேற்கண்ட தீய பலன்கள் நடைபெற முழுமுதற் காரணம் ஜாதகருக்கு பூர்வ புண்ணியம்  பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றதும், ஜாதகர் தனது பூர்வீகத்திற்கு உற்பட்ட 100 கிலோமீட்டரில் ஜீவனம் செய்ததுமே என்றால் அது மிகையாகாது, ஏனெனில் ஜாதகரின் மற்ற பாவகங்கள் மிக வலிமையாக அமைந்து  இருப்பது ஜாதகரின் யோக வாழ்க்கைக்கு கட்டியம்  கூறுகிறது,  இவரின் ஜாதகத்தில் 4,6,10 ம் வீடுகளின் வலிமை 80% யோகத்தையும், 1,2,3,7,11ம் வீடுகளின் வலிமை 50% யோகத்தையும் வாரி வழங்கி கொண்டு இருப்பது  சிறப்பான அமைப்பாக கருதலாம்.

ஆக ஜாதகரின் துன்பத்திற்கு முக்கிய காரணம் பூர்வீகம் பாதிக்க பட்டு தனது பூர்வீகத்திற்கு உற்பட்ட பகுதியில் ஜீவனம் செய்வதே, மேலும் ஜாதகரின் சிந்ந்தனை மட்டுப்படவும், திட்டங்கள் யாவும் நடைமுறைக்கு வராமல்,  காரியதடை ஏற்ப்படுவதிர்க்கும் மேற்கண்ட விஷயமே காரணமாக  அமைகிறது  என்றால் அது மிகையில்லை.

குறிப்பு : ஜாதகருக்கு ஜோதிட தீபம் பரிந்துரை செய்த ஆலோசனை ஜாதகரை  எல்லை தாண்டி ஜீவனம் செய்ய சொன்னதே, இதற்க்கு ஜாதகர் சொன்ன  பதில் ஜோதிட தீபத்தினை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது, " அய்யா நான் வெளியில் சென்று ஜீவனம் செய்தால் எனக்கு வரும் வருவாய் போதியதாக அமையாது " இதை நினைத்து நாம் அழுவாத சிரிப்பதா ? என்றே தெரியவில்லை, ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்றாலே ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமையின் காரணமாக கை நிறைவான வருமானத்தை பெரும் யோகம் உண்டாகும் , இந்த விஷயத்தை ஜாதகருக்கு புரிய வைக்க நமக்கு போதும் போதும் என்றாகிவிட்டது .

ஆக ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகரின் அறிவாற்றலின் தன்மை வெகுவாக பாதிக்க படுகிறது, சிந்தனை திறனும் குறைகிறது , ஒட்டுண்ணி போல் மற்றவரை   சார்ந்து வாழும் தன்மையை தருகிறது, தன்னம்பிக்கை குறைகிறது, தன்முனைப்பு என்பது இல்லாமல் உயிரற்ற மீன் போல் ஆற்றில் அடித்து செல்லும் நிலையை தருகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

ராகு வலிமை பெற்று ஜாதகத்தில் அமர்ந்தால் ஜாதகர் பெரும் ராஜயோக வாழ்க்கை!



 சாயா கிரகமான ராகு பகவான் ஒருவருடைய சுய ஜாதகத்தில் வலிமையுடன் அமரும்பொழுது, தான் அமர்ந்த பாவகத்தின் தன்மையை, முழுவதும் ஏற்று நடத்த ஆரம்பிப்பார், குறிப்பாக ராகு நல்ல நிலையில் அமர்ந்த பாவகத்தின் பலன் நடைமுறைக்கு வரும்பொழுது ஜாதகர் பெரும் யோக வாழ்க்கைக்கு நிகராக எதுவும் இல்லை என்றே கூறலாம், ஏனெனில் கிரகங்களில் அதிவலிமை படைத்தவர் ராகு பகவானே என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, மேலும் ராகுவின் ஆளுமைக்கு அனைத்து கிரகங்களும் உள்ளடங்கி பலன்தரும் என்பதனை ராகு வலிமை பெற்ற ஜாதகங்களை ஆய்வு செய்யும் பொழுது நிச்சயம் உணர முடியும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ராகு பகவான் அமரும் பாவகம் எதுவோ அந்த பாவகத்தின் தன்மையை முழுவதும் தானே ஆளுமை செய்யும் தன்மையை பெறுவார், குறிப்பாக லக்கனத்தில் அமரும் ராகு பகவான் ஜாதகரின் உடல்,மனம்,வளரும் சூழ்நிலை,ஜாதகரின் புகழ், ஜாதகர் பெரும் கீர்த்தி என்ற வகையில், சர,ஸ்திர.உபய ராசியின் தன்மைக்கு ஏற்றார் போலவும், நெருப்பு,நிலம்,காற்று,நீர் தத்துவ அமைப்பிற்கு ஏற்றார் போலவும் பலன்களை தங்கு தடையின்றி தர ஆரம்பிப்பார், மேலும் தன்னுடன் சேர்க்கை பெற்ற கிரகங்களின் தன்மையையும் தானே ஏற்றுக்கொண்டு, அவர்கள் செய்யும் யோக, அவயோக பலன்களையும் வாரி வழங்குவார்.

பொதுவாக ராகு அமர்ந்த பாவகங்களில் இருக்கும் கிரகங்கள் தனித்து செயல் புரிய இயலாது, ராகு பகவானே அனைத்திற்கும் பொறுப்பேற்று தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் பலனையும் செய்வார், எனவே ராகுவுடன் சேர்ந்த கிரகங்கள் தனித்து பலன் வழங்கும் என்று எதிர்பார்ப்பதும், யோக அவயோக பலனை தரும் என்று எதிர்பார்ப்பதும் தேவையற்றது என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து ( ராகுவுடன் சேர்ந்த கிரகம் சுப கிரகம் என்று வர்ணிக்கும் குரு,சுக்கிரன்,சந்திரன்,புதனாகவே இருந்தாலும் கூட ராகுவின் பலமே மேலோங்கி நிற்கும் ) .

எடுத்துகாட்டாக :

கிழ்கண்ட ஜாதகத்தில் ராகு பகவான் லக்கனத்தில் அமர்ந்து எவ்விதமான யோக, அவயோக பலன்களை தருகிறார் என்று சிந்திப்போம்.



இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு லக்கினத்தில் அமர்ந்திருக்கும் ராகு பகவான், ஜாதகருக்கு பிறந்தது முதல் மிகுந்த யோக பலன்களையே தந்துகொண்டு இருக்கிறார், ராகு அமர்ந்த வீடு சிம்ம ராசியாக இருப்பதாலும், இது ஸ்திர நெருப்பு தத்துவ ராசியாக இருப்பதாலும் ஜாதகருக்கு பித்த சம்பந்த பட்ட உடல் அமைப்பை பெற்று இருக்கிறார், மேலும் ஜாதகரின் வளரும் சூழ்நிலை என்பது சிறந்த உடல் நிலையுடன், சீரான கல்வி அறிவுடன், நல்லவர்களின் அன்பிலும் நட்பிலும், உறவுகளின் ஆதரவுடன் பெற்றோருடன் வளரும் வாய்ப்பை வழங்கியது.

 ஜாதகரின் இயக்கம் நெருப்பு ராசி என்பதால் ஜாதகர் சுய கட்டுப்பாடுடன், வீரம் தைரியம் துணிவு நிறைந்தவராகவும், எதற்கும் அஞ்சாத குணத்தை கொண்டவராகவும் காணப்படுகிறார், ஸ்திர நெருப்பு என்றாலே நாம் உதாரணமாக அகல் விளக்கு அல்லது சூரியனை எடுத்துகொள்ளலாம், ஆக ஜாதகரின் செயல்பாடுகள் மற்றவர்களுக்கும், தனக்கும் உலக இருளை நீக்கும் தன்மையுடன் இருப்பதாக அமைந்தது, இங்கே அமர்ந்த குரு மற்றும் செவ்வாயின் தன்மையை ராகு செய்வதால், ஜாதகர் நேர்மை நிறைந்த குணத்தையும், எவ்வித பிரச்சனைகளையும் சரியான ஆளுமை திறனுடன் கையாளும் வல்லமையையும் தந்தது, ஜாதகரின் சிம்ம லக்கினம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் பாவகமாக வருவதால், ஜாதகருக்கு தனது பூர்வ புண்ணிய அமைப்பில் இருந்து வரும் யோக பலன்களையும் அனுபவிக்கும் யோகத்தை தந்தது.

இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டும் எனில் ஜாதகர் தனது முன்னோர்கள் வழியில் இருந்து வரும் அறிவாற்றலையும் சிறப்பாக பெற்று, பகுத்தறிந்து செயலாற்றும் தன்மையினையும், அதி புத்திசாலித்தனத்தையும் பெற்று, அவர்கள் வழியிலேயே தனது வாழ்க்கை முன்னேற்றத்தை அடைந்துகொண்டு இருப்பதுதான் என்றால் அது மிகையாகாது , இதை போன்றே ஒவ்வொரு ஜாதகத்திலும் ராகு பகவான் தான் அமர்ந்த பாவகத்தில் நல்ல நிலையில் வலிமையுடன் இருந்தால், ஜாதகர் ராகுபகவானின் கருணையினால் மிகுந்த யோக வாழ்க்கையை பெறுவார் என்பது உறுதி.

குறிப்பாக ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு உற்பட்ட பாகைக்குள் ராகு அமர்ந்தால் நிச்சயம் ஜாதகர் இலக்கின அமைப்பில் இருந்து 100% யோக பலன்களையே தருவார் என்பது உறுதி, இது ராகு பகவானுக்கு மட்டுமல்ல கேது பகவானுக்கும் பொருந்தும், ஒருவருக்கு லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால் ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து யோக பலன்களே நடை பெரும் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து, மேலும் ராகு பகவான் எந்த பாவகத்தில் அமர்ந்தாலும், குறிப்பிட்ட பாவகத்திர்க்கு நன்மை தரும் அமைப்பில் ( வலிமையாக ) இருந்தால் குறிப்பிட்ட ராசி,தத்துவம் மற்றும் பாவக தன்மைக்கு ஏற்றார் போல் யோக பலன்களை தங்குதடையின்றி செய்வார் என்பது உறுதி. 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9842421435
9443355696




வெள்ளி, 10 ஜனவரி, 2014

சனிபகவான் ஜாதகத்தில் வலிமை பெற்று அமரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் !




"ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி" என்பதற்கு இணங்க சனிபகவானை பற்றி தெரியாமல், பல தவறான கருத்துகள் மக்களிடையே பரப்ப படுகிறது, குறிப்பாக ஒருவருக்கு விபத்து, இழப்பு, கஷ்டம், நோய், துன்பம் போன்ற சிரமங்கள் அனைத்தும் வருவதற்கு காரணம் சனிபகவானே என்றும், இதற்க்கு உதாரணமாக ஏழரை சனி, அஷ்டமசனி, வாக்கு சனி, பாதசனி என்று தனது மனதிற்கு உகந்த அமைப்பில் சனிபகவான் மீது பழிபோடுவது தவறான அணுகுமுறையாகும், சனி பகவான் தான் அமர்ந்த பாவக அமைப்பிற்கும், வசீகரம் செய்யும் பாவகங்களுக்கும் வலிமை சேர்க்கும் விதத்தில் இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சுய முன்னேற்றம் என்பதும், யோக வாழ்க்கை என்பதும் மிகவும் அபரிவிதமானதா அமையும் என்பதில் சந்தேகமில்லை

என்ன செய்ய சனிபகவானின் குணமே மற்றவர்களுக்காக எதையும் தாங்கும் தன்மையையும், சமுதாயத்திற்காக தனது வாழ்க்கையே அற்பணிக்கும் தன்மை பெற்றவர்தானே சனி பகவான், இதை நாம் பல பெரிய தலைவர்களின் ஜாதகத்தை காணும் பொழுது அதில் உள்ள சனிபகவானின் வலிமை அமைப்பில் இருந்து உணர இயலும். 

பொதுவாக கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான 10ம் வீட்டிற்கும் (  மகரம் ) , லாப ஸ்தானமான 11ம் வீட்டிற்கும் ( கும்பம் ) வீட்டிற்கும் அதிபதியாக  பொறுப்பேற்கும் சனிபகவான், எப்படி அனைத்து தீமைகளுக்கும் மொத்த உருவமாக வர்ணிக்க படுகிறார் என்பது ஜோதிடதீபத்திற்கு விளங்காத புதிராகவே உள்ளது , மேலும் வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ? என்று எழுதுவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் என்றும் தெரியவில்லை, சுய ஜாதகத்தில் மகரமும் கும்பமும் பாதிக்கப்படும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர் ஜீவன ரீதியாகவும், அதிர்ஷ்டம் என்ற அமைப்பிலும் யாதொரு நன்மையையும் பெற தா இயலாத சூழ்நிலையை தரக்கூடும் இது அவரவரவர் சுய ஜாதக வலிமை இன்மையை காட்டுகிறது, இதற்க்கு சனிபகவானை காரணகர்த்தாவாக பாவிப்பது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

சனிபகவானை பற்றி  முரண் பட்ட , தவறான கருத்துக்களை பரப்ப இவர்களால் எப்படி இயலுகிறது என்றும் தெரியவில்லை, சனிபகவான் என்பவர் ஒருவருடைய ஜாதகத்தில் வலிமை பெற்று அமரும்பொழுது சிறந்த ஜீவனத்தை தருகிறார், அதன் வழியில் இருந்து வரும் லாபத்தை பன்மடங்கு பெருக வைக்கிறார், மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீட்டிற்கு அதிபதியான சனிபகவான் நல்ல நிலையில் இருக்கும் பொழுதே ஜாதகருக்கு சிறந்த கெளரவம் கிடைக்கிறது, மக்களால் போற்றப்படும் பதவிகளை அலங்கரிக்கும் பதவிகளில் சிறப்பாக செயல்பட வைக்கிறார், பெரிய பெரிய தலைவர்களின் ஜாதகங்களில் சனிபகவான் சிறப்பாக அமர்ந்திருக்கும் நிலையை காணும் பொழுது இது புரியும்.

தனது சுக துக்கங்களை பெரிதாக எடுத்துகொள்ளாமல் தீண்டாமை எனும் மாசுபட்ட சமுதாயத்தை மாற்றி அமைத்த ஈரோடு வே. ராமசாமி ஜாதகத்தில் சனிபகவான் லக்கினம், எதிரி ஸ்தானம், களத்திரம், ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று, இலக்கின வழியில் இருந்து முற்போக்கு சிந்தனையையும், எதிரி ஸ்தான அமைப்பில் இருந்து சமுதாயத்தில் மக்களின் மனதில் பகுத்தறிவு சிந்தனையையும், களத்திர ஸ்தான அமைப்பில் இருந்து உலக புகழ் பெரும் யோகத்தையும், ஜீவன ஸ்தானத்தில் இருந்து சுய மரியாதை மற்றும் சுய கௌரவத்தையும் பெற்று தந்த சனி பகவான், எப்படி அவயோகதாரியாக வர்ணிக்க படுகிறார் என்பது புரியவில்லை?

உதாரணமாக கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


(சனி எந்த பாவகங்களுக்கு அதிபதி என்று ஊதா வண்ணத்தில் குறிப்பிடபட்டு உள்ளது )

இந்த ஜாதகத்தில் 6,7,10ம் பாவகங்களுக்கு அதிபதியாக வரும் சனிபகவான் ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து ஜீவன ஸ்தானத்திற்கு படிப்படியான முன்னேற்றத்தையும், 7ம் பாவக வழியில் இருந்து உலகம் முழுவதும் ஜாதகர்  சென்று ஜீவனம் செய்யும் யோகத்தையும், 10ம் பாவக வழியில் இருந்து ஜீவனத்திற்கு நிலையாக நிலைத்து நிற்கும் தன்மையையும், கௌரவமான தொழில் செய்யும் யோகத்தையும் சனிபகவான் வாரி வழங்குவது சற்றே கவனித்தல், நிச்சயம் புலனாகும் .

மேலும் 6ம் பாவகம் ஜாதகருக்கு ஸ்திர ரிஷப ராசியாக அமைவதாலும், அது மண் தத்துவ ராசியாக இருப்பதாலும் ஜாதகர் எதிரிகள் மூலமாகவும் வருவாயினை பெறுவார் என்பதும், ஜாதகரின் வாழ்நாள் முழுவதும், வருமானம் என்பது தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் என்பதும் சனிபகவானால் வரும் அருளாசியே என்றால் அது மிகையில்லை.

7ம் பாவகம் ஜாதகருக்கு உபய மிதுன ராசியாக அமைவதாலும், காற்று தத்துவ ராசியாக இருப்பதாலும், ஜாதகரின் செயல்கள் மற்றும் அறிவாற்றல் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு வகையில் உபயோக படும் விதத்தில் அமைவது சனிபகவான் வழங்கும் அருளசியே, மேலும் மிதுனம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் வீடாக வருவது ஜாதகரின் தைரியத்தையும், தன்னுள் கொண்டுள்ள வீரத்தையும், வீரியத்தையும் சரியான நேரத்தில் எடுத்து காட்டும், அதுமட்டுமல்ல இங்கே ஜாதகருக்கு சனிபகவான் தேடினாலும் கிடைக்காத பெருந்தன்மையான குணத்தை தருகிறார் என்பது கவனிக்க பட வேண்டிய விஷயம்.

10ம் பாவகம் ஜாதகருக்கு உபய கன்னி ராசியாக அமைவதாலும், மண் தத்துவ ராசியாக இருப்பதாலும் ஜாதகரின் ஜீவனம் என்பது மண் தத்துவம் சார்ந்த தொழிலை சரியான வயதில் தந்து அதன் வழியில் இருந்து வருமானத்தையும், சமுதாயத்தில் ஒரு கௌரவமான தொழில் அதிபர் என்ற மதிப்பையும், சிறந்த வியாபாரி என்ற அந்தஸ்தையும் தந்திருப்பது சனிபகவானே என்றால் அது மிகையில்லை, ஆக சனி என்பவர் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் அமரும் பொழுது சிறந்த ஜீவனம், கௌரவமான வாழ்க்கை, சுய மரியாதை, சிறந்த உடல் நலம் மற்றும் உடல் பலம், அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கை முறை, வண்டி வாகன யோகம், நல்ல சிறந்த வேலையாட்கள் என்ற அமைப்பில் வாரி வழங்குவார் என்பது உறுதியாகிறது .

பொதுவாக பல ஜோதிடர்களிடம் "சனி ஈஸ்வரன்" என்று தவறான புரிதல் இருக்கிறது, உண்மை அதுவல்ல "சனி சரண்" என்பதே சரியான உச்சரிப்பு, அதாவது மெதுவாக  நகரும் தன்மை பெற்றவர் என்பதே, எனவேதான் ஒவ்வொரு ராசியிலும் சனிபகவான் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்கிறார்.

நன்மை தீமை பலன்கள் என்பது ஒவ்வொருவரின் சுய ஜாதக அமைப்பின் அடிப்படையிலும், 12 பாவகங்களின் வலிமையை பொருத்தும் நடைபெறுகின்றது, இதில் நவகிரகங்கள் ஜாதகரின் விதிபயனின் பலனை  ஏற்று அதற்க்கு தகுந்தார் போல் யோக, அவயோக பலன்களை தருகிறது, இதில் சனி,ராகுகேது, செவ்வாய், சூரியன், தேய்பிறை சந்திரன், சூரியனுடன் சேர்ந்த புதன் எனும் பாவ கிரகங்கள் கெடுதல் செய்யும் என்றும், குரு,சுக்கிரன்,வளர்பிறை சந்திரன், சூரியனுடன் சேராத புதன் எனும் சுப கிரகங்கள் நன்மை செய்யும் என்று ஜோதிடம் சொல்வது, ஜோதிடத்தை பற்றிய அடிப்படை அறிவு அற்றவர்கள் சொல்லும் வார்த்தையாக எண்ணி தவிர்த்து விடுவது நல்லது. ( இல்லை எனில் அவர்களும் குழம்பி நம்மையும் குழப்பி விடுவார்கள் ) 

 கிரகங்களின் உண்மை நிலையினை பற்றிய தெளிவும், சுய ஜாதகங்களில் 12 பாவகங்களுக்கு  அவர்கள் வழங்கும் பலன்களை பற்றிய கணித அறிவும்  பெற்று பலன் சொல்லுவது, ஜோதிட கலைக்கு நாம் ஆற்றும் கடமை என்றால் அது மிகையில்லை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
9842421435

புதன், 8 ஜனவரி, 2014

அதிர்ஷ்டத்தையும் லாபத்தையும் பரிபூர்ணமாக வாரி வழங்கும் 11ம் பாவகம் !


   அதிர்ஷ்டம் மற்றும் லாபம் எனும் 11ம் பாவகம் சுய ஜாதகத்தில், வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும்  நற்பலன்கள் என்பது சற்று மிதமிஞ்சிய அளவிலேயே இருக்கும், குறிப்பாக ஜாதகரின் முற்போக்கு சிந்தனையும், பகுத்தறியும் தன்மையும் எப்பொழுதும் ஜாதகரை விழிப்புணர்வுடன் வைத்திருக்கும், சுய ஜாதகத்தில் மற்ற பாவகங்கள் வலிமைபெறுவது ஜாதகருக்கான தனித்திறமையை வெளிப்படுத்தும், இருப்பினும் சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமை பெறுவதே மற்ற பாவக வழியில் இருந்துவரும் சுபயோகங்களை சுவீகரிக்கும் தன்மையை தரும், திறமை இருப்பது ஒரு வகையில் சிறப்பு என்ற போதிலும் அதனால் வரும் முழு பலன்களையும் அனுபவிக்க ஜாதகத்தில் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, இது பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

 பொதுவாக ஒரு மனிதனின் பிறப்பின் சாராம்சம் என்ன? தனது வாழ்க்கை எப்படி பட்ட அமைப்பில் வாழும் தன்மையை பெறுவார்,  என்ற விஷயத்தை தெளிவாக தெரிந்து கொள்ள லாப ஸ்தானம் எனும் 11ம் பாவக வலிமையை அடிப்படையாக கொண்டு  சிறப்பாக கூறிவிட முடியும் என்றால் அது மிகையில்லை, மனிதனின் பிறவி பலனை நிறைவு செய்யும் தன்மையை (கடனை) 12ம் பாவகம் தெளிவுபடுத்தும், ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையை பற்றி தெளிவாக  கூறும் தன்மை 11ம் பாவக வலிமையே நிர்ணயம் செய்கிறது, எனவே சுய ஜாதகத்தில் 11ம் பாவக வலிமை பற்றிய தெளிவு பெறுவது தனது எதிர்காலத்தை பற்றிய ஒரு திட்டமிடுதல் மற்றும் தனது வாழ்க்கையில்  பெரும் லாபம் மற்றும் அதிர்ஷ்டம், நன்மை மற்றும் யோக அமைப்புகள் பற்றிய விபரங்களை மிக தெளிவாக அறிந்துகொள்ள இயலும்.

லாப ஸ்தானம் பற்றி சிலாகித்து கூறாத ஜோதிடர்களே இல்லை எனாலாம், குறிப்பாக கோட்சார கிரகங்கள் ராசிக்கு ( லக்கினம் ) 11ல் சஞ்சாரம் செய்யும் பொழுது, ஜாதகருக்கு மிகுந்த யோககங்களையும், அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் வாரி வழங்கும் என்பது பொதுவான கருத்தாகவே இருக்கிறது, ஆக ஒரு ராசிக்கு  கோட்சாரத்தில் 11ல் சஞ்சாரம் செய்யும் கிரகம் மிகுந்த யோகத்தை தரும் என்று என்னும் பொழுது ( ராசிக்கு 11ல் சஞ்சாரம் செய்யும் கிரகம் யோகத்தை தருகிறதா? அவயோகத்தை தருகிறதா? என்பது வேறு விஷயம்), லக்கினத்திற்கு 11ம் பாவகம் வலிமை பெறுவது எவ்விதமான நன்மைகளை தரும் என்பதனை கருத்தில்கொள்வது அவசியமாகிறது.


உதாரணமாக கிழ்கண்ட ஜாதகத்தில் 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பெரும் சுபயோகங்கள், அதிர்ஷ்டம் மற்றும் லாபங்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !




இந்த மிதுன இலக்கின ஜாதகருக்கு 1,3,5,6,7,11 வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த யோகத்தை தரும் என்றால் அது மிகையில்லை, இருப்பினும் ஜாதகர் எந்த எந்த வழிகளில் இருந்து அதிர்ஷ்டங்களையும், லாபங்களையும் பெறுவார் என்பதை தெளிவாக தெரிந்து கொள்வது  அவசியம்.

 லக்கினம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது அடிப்படையில் சிறப்பாக  வளரும் சூழ்நிலையை தரும், நீண்ட ஆரோக்கியமான உடல் அமைப்பினையும், தெளிவான முற்போக்கு சிந்தனையையும், நிறைந்த அறிவாற்றலையும் வாரி வழங்கும், எனவே ஜாதகர் தனது நிலையில் இருந்து அதிர்ஷ்டசாலி என்பது உறுதியாகிறது.

3ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் நல்ல வெற்றியினை தரும், போட்டி, தேர்வு, பந்தயங்களில் வெற்றியை தரும், தனது சகோதர அமைப்புகளில் இருந்து மிகுந்த நன்மையை தரும், வீரியம் மிக்க மன தைரியத்தையும், பிடிவாத மன நிலையை தரும், தனது வெற்றிக்காக இரவு பகல் பாராமல் அயராது பாடுபடும் தன்மையை தரும், ஜாதகர் எடுக்கும் காரியங்கள் யாவும் நிச்சய வெற்றியை தரும் என்பது உறுதியாகிறது.

5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தனது முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து சுகங்களையும், அவர்கள் செய்த புண்ணியத்தையும் அனுபவிக்க பிறந்தவர் என்றால் அது மிகையில்லை, தனது  பெயர் சொல்ல நல்ல புத்திர சந்தானத்தையும், அவர்கள் வழியில் இருந்து வரும் அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்க இயலும், மேலும் தனது முன்னோர்கள் வழியில் இருந்து வரும் அறிவாற்றலையும், புத்திசாலித்தனத்தையும் பெற்றிருப்பார் என்பது உறுதியாகிறது.

6ம்வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தான் நினைக்கும் எண்ணங்களை நடைமுறைக்கு கொண்டு வரும் திறமை அமையும், அதிர்ஷ்ட வாய்ப்புகள் அடிக்கடி வந்துகொண்டே இருக்கும், குறிப்பாக பங்கு சந்தையில் நல்ல லாபம் பார்க்க இயலும், வெகு விரைவில் சுலபமாக வெற்றிக்கனியை பறிக்கும் தன்மையை தரும், லாட்டரியில் அதிர்ஷ்டம், புதையல் யோகத்தை தரும், வேலையாட்கள் மற்றும் எதிரிகளாலும் லாபம் பெரும் தன்மையை தரும், எவ்வித பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் புத்திகூர்மையை தரும் என்பது உறுதியாகிறது.

7ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, நண்பர்கள் வழியில் இருந்து அதிர்ஷ்டங்களை வாழ்நாள் முழுவதும் பெரும் யோகதாரிகள் என்றால் அது மிகையில்லை, மேலும் வாழ்க்கை துணை வழியில் இருந்தும், பொது மக்கள் வழியில் இருந்தும் அதிர்ஷ்டம் வந்துகொண்டே இருக்கும், நல்ல அரசியல்வாதி, பொதுமக்களுக்கு சேவை செய்யும் தொழில்கள் புரிவோர், சிறப்பான வியாபர திறமை, அனைவராலும் அதிர்ஷ்டம் பெரும் அமைப்பை பெற்றவர் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு மிகசிறந்த நல்ல குணத்தை வாரி வழங்கிவிடும், எவரும் போற்றும் தன்மையை தரும் பாராட்டு மலையில் நனையும் யோகம் பெற்றவர் , தனது சிந்தனையும் செயலும் முற்போக்கு தன்மையுடன் இருப்பதை ஜாதகரே உணர்ந்துகொள்ள முடியும், தனக்கென்று ஒரு பாணியை வகுத்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெரும் அமைப்பை தரும், இது மட்டுமல்ல அனைத்திலும் லாபம் பெறுபவர், மிக அதிர்ஷ்டசாலி என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

ஜாதகரின் லாப ஸ்தானம் சர (மேஷம்) ராசியாக அமைவதால் ஜாதகருக்கு லாப ஸ்தான வழியில் இருந்து 100 சதவிகித நன்மைகளை வாரி வழங்கும் என்பது கூடுதல் தகவல்.

11ம் பாவக வழியில் இருந்து ஒரு ஜாதகர் எவ்வித நன்மையை பெறுகிறார் என்பதை நமது ஜோதிட முறையில் தெள்ள தெளிவாக தெரிந்துகொள்ள இயலும் என்றால், அதற்க்கு காரணம் எமது குருவும், இறைஅருளின் கருணையுமே ! 11ம் பாவக வலிமையை உணருங்கள், வாழ்க்கையில் வெற்றியை தடையில்லாது பெறுங்கள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9842421435
9443355696
jothidadeepam@gmail.com