புதன், 26 மார்ச், 2014

உச்சம் பெற்ற சனி திசை ஜாதகருக்கு நன்மை வழங்க இயலாததிர்க்கு காரணம் என்ன ?





 பொதுவாக துலாம் ராசியில் உச்சம் பெரும் சனி பகவான், தனது திசை மற்றும் புத்தி காலங்களில் ஜாதகருக்கு மிகுந்த யோக பலன்களை வாரி வழங்கும் என்பது பாரம்பரிய ஜோதிடத்தின் கணிப்பு கிழ்கண்ட ஜாதகத்தில் சனி உச்சம் பெற்று வக்கிரக நிலையில் இருப்பதால் நன்மை தர இயலாது என்பதும் பாரம்பரிய ஜோதிடத்தின் கணிப்பு, ஆனால் உண்மை நிலை என்ன என்பதை பற்றி இந்த பதிவில் சற்று ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!




நமது ஜோதிட முறை படி ஒரு கிரகம் சுய ஜாதகத்தில் எப்படி பட்ட நிலையில் இருந்தாலும் லக்கினத்திற்கு எவ்விதமான பலன்களை தருகிறார் என்பதை முதன்மையாக எடுத்துகொள்ள வேண்டும் என்பதே அடிப்படி விதி, பொதுவாக ஜாதகத்தில் கிரகங்கள் ஆட்சி,உச்சம்,சமம்,நட்பு,பகை,நீச்சம் போன்ற நிலைகளில் அமர்வது காலபுருஷ தத்துவ அமைப்பிற்கே, இந்த நிலை சுய ஜாதகத்தில் லக்கினத்தை எவ்விதத்திலும் கட்டுபடுத்தாது என்பதே உண்மை, குறிப்பாக சில ஜாதகத்தில் சுப கிரகங்கள் ஆட்சி உட்சம் பெற்று இருக்கும், ஆனால் தனது திசை மற்றும் புத்திகளில் எவ்வித யோக பலன்களையும் தராமல் அவயோக பலன்களையே தரும்.

மேற்கண்ட ஜாதகத்தில் சனி ஆட்சி உச்ச நிலையில் இருந்தாலும் ஜாதகருக்கு தனது திசை மற்றும் புத்தி காலங்களில் நன்மையை தராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம், சுய ஜாதகத்தில் சனி உச்ச நிலையில் இருந்தாலும் தனது திசையில் 1,7ம் வீடுகள் பதாக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்த பெற்று பலனை நடத்துவதே இதற்க்கு காரணம், பொதுவாக சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது 200 மடங்கு இன்னல்களை தரும், தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து.  

 இந்த ஜாதகத்தில் லக்கினம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகமும் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து 200 சதவிகித இன்னல்களை தரும் மேற்கண்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் திசை மற்றும் புத்தி காலங்களில், இந்த ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை சனி மற்றும் செவ்வாய் திசை,புத்தி காலங்களில் பாதக ஸ்தான பலனை நடத்துவதால் இங்கே உச்சம் பெற்ற சனி பகவானாலும் தனது திசையில் நன்மை செய்ய இயலாது, சமம் என்ற நிலையில் இருக்கும் செவ்வாய் பகவனாலும் தனது திசை,புத்தி காலங்களில் நன்மை செய்ய இயலாது என்பது உறுதியாகிறது.

 மேலும் ஜாதகருக்கு எவ்வித அமைப்பில் இருந்து தீமை நடை பெரும் என்பதை ஆய்வு செய்யும் பொழுது, ஜாதகரின் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் வீடாகவும், உபய நெருப்பு ராசியாகவும் வருவதால், ஜாதகர் தனது அவசர செய்கையினாலும், சுய கட்டுப்பாடு அற்ற தன்மையினாலும், பெரியவர்களின் சொல் பேச்சு கேளாமல் நடப்பதாலும், பெயருக்கும் புகழுக்கும் தனது ஆண் பெண் நண்பர்களால் அவ பெயர் உண்டாகும், இதனால் ஜாதகரின் முன்னேற்றம் வெகுவாக பாதிக்க படும், எனவே இந்த காலகட்டங்களில் ஜாதகர் பெரியோர் சொல் பேச்சு கேட்டு நடப்பது மிகுந்த நன்மை தரும், மேலும் தனது பித்ருகளுக்கு முறையான தர்ப்பன வழிபாட்டினை மேற்கொள்ளுவது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

மேற்கண்ட சனி திசை ஜாதகருக்கு சரியான பருவ வயதில் வருவதால், களத்திர பாவகம் வலிமை பெற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்வதும், நல்ல நண்பர்களின் சேர்க்கையை வைத்துகொள்வதும், முடிந்த அளவிற்கு நண்பர்களின் தயவினை எதிர்பாராமல் வாழ்க்கை நடத்துவது நல்லது, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுக்கொண்டு அனுசரித்தது செல்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மையை  தரும்.

குறிப்பாக மேற்கண்ட சனி திசை காலங்களில் கூட்டு முயற்ச்சியினை தவிர்ப்பது சால சிறந்து, கூட்டு தொழில் செய்வதால் ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை வாரி வழங்கும், நண்பர்கள் வழியில் இருந்து அதிக இன்னல்களையும், துன்பத்தையும் தரும், மேலும் ஜாதகரின் லக்கினமும் பாதிக்க படுவதால் ஜாதகர் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் தோல்வியையே தரும், தன்னம்பிக்கை குறையும் சகோதர வழியில் இருந்து செலவுகள் வர கூடும்.

ஆக மேற்க்கண்ட சனிதிசை உச்சம் பெற்று வக்கிரகம் பெற்றதால் நன்மையை தரவில்லை என்று கணிப்பது முற்றிலும் தவறானது, சனி திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதாலேயே தீய பலன்கள் நடை பெரும் என்பதே முற்றிலும் உண்மை.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


புதன், 12 மார்ச், 2014

1,7,10ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜீவன வழியில் இருந்து ஜாதகர் பெரும் வெற்றி வாய்ப்புகள் !



 சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது, சம்பந்தபட்ட ஜாதகரின் வாழ்க்கையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் மிகுந்த முன்னேற்றத்தை வாரி வழங்கும், தங்கு தடையின்றி ஜீவன முன்னேற்றத்தை தரும், ஜாதகர் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி காணும் யோக வாழ்க்கையை பெற்று தரும்.

 கிழ்கண்ட மகர இலக்கின ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !




லக்கினம் : மகரம் 
ராசி : மீனம் 
நடசத்திரம் : ரேவதி 4ம் பாதம் 

 ஜாதகருக்கு 1,7,10ம் பாவகங்கள் ஜீவன ஸ்தானமான 10 ம் வீட்டுடனே தொடர்பு பெறுவது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாக கருதலாம் , இதில் ஜீவன ஸ்தனத்துடன் தொடர்பு  பெரும் 1,7,10 ம் பாவகங்கள் ஜாதகருக்கு எவ்வித யோக பலன்களை வாரி வழங்கும் என்பதனை சற்று ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

 உடல், உயிராகிய லக்கினம் ஜீவன ஸ்தானமான 10 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான ஒரு விஷயமே, ஜீவன ஸ்தானம் ஜாதகருக்கு துலாம் ராசியில் அமைவதும், அந்த துலாம் ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் பாவகமாக வருவதும், சர காற்று தத்துவ அமைப்பை ஏற்று நிற்பதும் ஜாதகருக்கு பரிபூரண யோகத்தை வழங்கும , பொதுவாக சர காற்று தத்துவ ராசி நல்ல நிலையில் இருப்பது ஜாதகருக்கு தன்னிறைவான அறிவாற்றலை வாரி வழங்கும் , அடிப்படையில் இந்த ஜாதகருக்கு லக்கினம் ஜீவன ஸ்தனத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் சிறு வயது முதல் தந்தையின் அரவணைப்பில் கட்டுப்பாட்டில் வளரும் சூழ்நிலையை தரும், மேலும் கௌரவமான வாழ்க்கை மேற்கொள்ளும் யோகத்தை தரும், தனது சுய அறிவாற்றல் கொண்டும், சுய உழைப்பை கொண்டும் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற்றவராக இருப்பார்.

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  7ம் வீடான துலாம் ராசியுடன் ஜாதகரின் லக்கினம் தொடர்பு பெறுவதால், ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணை மிகுந்த யோகம் கொண்டவராக காணப்படுவார், ஜாதகரின் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே திருமண வாழ்க்கைக்கு பிறகுதான் என்றால் அது மிகையில், மேலும்  ஜாதகரின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பவர்கள் மனைவி, நண்பர்கள், பொது மக்கள் என்ற அமைப்பில் ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து பலன் தரும்.

 களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகர் மனைவி வழியில் இருந்து யோக வாழ்க்கையை பெறுபவர் என்ற அமைப்பையும் தரும், மேலும் ஜாதகரின் வெளி வட்டார பழக்க வழக்கங்கள் மற்றும் தொடர்புகள் அனைத்தும் மிக பெரிய அந்தஸ்து கொண்ட நபர்களுடன் இருக்கும் என்பதே குறிப்பிடத்தக்கது, மேலும் அரசியல்வாதிகளின் அதாரவும் ஜாதகருக்கு பரிபூரணமாக கிடைக்கும், அரசு சார்ந்த அமைப்புகளில் இருந்து லாபம் பெரும் யோகத்தை தரும், குறிப்பாக ஜாதகர் வியாபாரம் செய்தால் பொதுமக்கள் ஆதரவும், அரசு ஆதரவும் தடையின்றி கிடைக்கும், மேலும் வாழ்க்கை துணை, நண்பர்களின் ஆதரவும் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

 ஜாதகருக்கு வெளிநாடுகளில் இருந்து நிறைவான பொருள் வரவு உண்டாகும், வெளிநாடுகள் பலவற்றிற்கு சென்று வரும் யோகத்தை தரும், ஜீவன வாழ்க்கை வெளிநாடுகளில் அமைந்தால் ஜாதகர் பொருளாதார ரீதியான தன்னிறைவை குறுகிய காலத்தில் பெரும் யோகம் உண்டாகும், அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை வாங்கி விற்பனை செய்தாலோ, ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்களை மேற்க்கொண்டாலோ கை நிறைவான வருமானம் தடையின்றி 100 சதவிகிதம் கிடைக்கும், ஜாதகரின் வாழ்க்கை குறுகிய காலத்தில் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும்

 ஜீவன ஸ்தானம் 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் சுய தொழில் செய்வதே வெற்றி மிகுந்த வாழ்க்கை பெற்றுத்தரும் என்பது உறுதியாகிறது, மேலும் ஜாதகர் வேறு ஒரு இடத்தில் பணியாற்றுகிறார் என்றால் ஜாதகரின் வெற்றி வாய்ப்புகள் யாவும், அவர் வேலை செய்யும் தொழில் நிறுவனத்திற்கு சென்று விடும், குறிப்பிட்ட நிறுவனத்திற்கு  மிக பெரிய முன்னேற்றத்தை பெற்று தந்து விடும், மாறாக ஜாதகர் சுயமாக தொழில் செய்தால் ஜாதகருக்கே பரிபூரண வெற்றிகளை வாரி வழங்கிவிடும், இந்த கருத்தை இங்கே பதிவு செய்ய காரணம் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் சர ராசியாக அமைவதாலும், துலாம் காற்று தத்துவ ராசியா இருப்பதாலுமே இதை குறிப்பிடுகிறோம், சர ராசி ஜாதகருக்கு 100 சதவிகித வெற்றியை தரும், காற்று தத்துவம் ஜாதகருக்கு செலவில்லா மக்கள் விளம்பரத்தையும், தொழில் நேர்மையையும் உலகுக்கு எடுத்து சொல்லும், துலாம் ராசி உலக புகழ் பெற வைக்கும்.

மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாக வருவது ஜாதகர் தனித்தும் தொழில் செய்து வெற்றி பெற முடியும், கூட்டு முயற்ச்சி, அல்லது கூட்டு தொழில் மூலமாகவும் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற இயலும், ஜாதகர் சுய தொழில் ஆரம்பிக்க சரியான நேரம் எதுவென்றால் மேற்கண்ட 1,7,10ம் பாவகங்கள் ஜீவன ஸ்தானமான  10ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை நடத்தும், திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் இவைகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து தொழில் துவங்கினால் ஜாதகருக்கு நிச்சயம் 100 சதவிகித தொழில் வெற்றியை வாரி வழங்கும் என்பது நிச்சயம்.

ஜோதிடன் வர்ஷன் 
வாழ்க வளமுடன் 
9443355696,9842421435