சனி, 26 ஏப்ரல், 2014

திருமணம் தாமதம் ஆக ராகு கேது, செவ்வாய் தோஷம் காரணமா?

  



பொதுவாக ஒருவருக்கு திருமணம் தாமதமானால், திருமண தாமதத்திற்கு முதல் காரணமாக ராகு கேது தோஷம் என்பதாக இருக்கிறது, இரண்டாவது காரணம் செவ்வாய் தோஷம் என்பதாகவும், மூன்றாவதாக களத்திர தோஷம் என்பதாகவும், நான்காவதாக குரு பலன் இல்லை என்பதாகவும் ஜோதிடர்களால் அறிவுறுத்த படுகிறது, இதில் முதன்மை வகிப்பது ராகு கேது தோஷமும், செவ்வாய் தோஷமும் என்றால் அது மிகையில்லை, இதன் அடிப்படையில் மக்கள் பலர் ராகு கேது சிறப்பு வாய்ந்த கோவில்களுக்கு படையெடுப்பதும், இதற்க்கு ஒருபடி மேலே சென்று பரிகாரம் என்ற பெயரில் மக்கள் பெருள் இழப்பை அடைவதும் வாடிக்கை ஆகிவிட்டது எனலாம்.

 சுய ஜாதகத்தில் ஒருவருக்கு 1,2,5,7,8,12ம் பாவகங்களில் ராகு கேது அமர்ந்திருந்தாலோ, 2,4,7,8,12ம் பாவகங்களில் செவ்வாய் அமர்ந்திருந்தாலோ தோஷம் என்று நிர்ணயம் செய்து, திருமண தாமதத்திற்கு காரணமாக மேற்க்கண்ட விஷயத்தை பல ஜோதிடர்கள் முன்னிறுத்துகின்றனர், பொதுவாக ஒருவருக்கு திருமணம் தாமதம் ஆவதிர்க்கு சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் கடுமையாக பாதிக்க பட்டு இருந்தாலோ, களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் கடுமையாக பாதிக்கபட்டு இருந்தாலோ ஜாதகருக்கு திருமணம் வாழ்க்கை அமைவதற்கு தடை ஏற்படும் அல்லது காலதாமதம் ஏற்ப்படும், ஒருவருக்கு திருமணம் தாமதம் ஆகிறது என்றவுடனே அதற்க்கு காரணம், ராகு கேது அல்லது செவ்வாய்தான் என்று முடிவு செய்வது முற்றிலும் தவறான ஒரு விஷயம்.

 ஒருவேளை ஜாதகருக்கு திருமண வயது வரும் பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் திருமணம் தாமதம் ஆக வாய்ப்பு உண்டு, இந்த இரண்டு காரணத்தை தவிர சுய ஜாதகம் நல்ல நிலையில் இருக்கும் ஜாதகருக்கு திருமணம் தாமதம் ஆக மேற்கண்ட இரண்டு காரணத்தை தவிர வேறு காரணங்கள் ஜாதகருக்கு திருமண தாமதத்தை ஏற்ப்படுத்த வாய்ப்பில்லை எனலாம், இதற்க்கு காரணமாக ராகு கேது 1,2,5,7,8,12ம் பாவகங்களில் அமர்வதாலோ, செவ்வாய் 2,4,7,8,12ம் பாவகங்களில் அமர்வதாலோ, குருபலன் என்று சொல்லும் ஜாதகரின் ஜென்ம ராசிக்கு கோட்சாரத்தில் குருபகவான் 2,5,7,9,11ம் சஞ்சாரம் செய்யாத காரணத்தாலோ திருமணம் தாமதம் அடைய வாய்ப்பில்லை.

உதாரணமாக : 



 மேற்கண்ட  சிம்ம இலக்கின  ஜாதகருக்கு திருமணம் தாமதம் ஆக காரணமாக பல ஜோதிடர்கள் கணித்தது, ஜாதகத்தில் ராகு கேது முறையே லக்கினம் மற்றும் களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால் சர்ப்ப தோஷம் என்று காரணம் காட்டி உள்ளனர் ( உண்மையில் இந்த ஜாதகருக்கு ராகு கேது முறையே லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை வைத்து கணிதம் செய்யும் பொழுது லக்கினத்திற்கு 12ல் (சிம்மத்தில்) ராகுவும், 6ல் (கும்பத்தில்) கேதுவும் அமர்திருப்பது புலனாகும் ) ஆனால் இந்த ஜாதகத்தில் ராகு கேது மிகவும் வலிமையுடன் தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து 100 சதவிகித நன்மையை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே முற்றிலும் உண்மை.

 ஜாதகருக்கு திருமணம் தாமதம் ஆவதிர்க்கு சுய ஜாதகத்தில் உண்மையான காரணம் என்ன என்று ஆய்வு செய்யும் பொழுது, ஜாதகருக்கு களத்திர பாவகம்  நல்ல நிலையில் இருப்பதும், குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதே , ஆக இந்த ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் கடுமையான பாதிப்புக்கு உள்ளவதே இதற்க்கு முக்கிய காரணமாக  கருதலாம், ஜாதகரின் திருமணம் தாமதம் ஆக ராகு கேது எந்த விதத்திலும் காரணம் அல்ல என்பதை இந்த இடத்தில் உணர்ந்துகொள்வது அவசியம், ஜாதகத்தில் 7ம் பாவாகம் நல்ல நிலையிலும், 2ம் பாவகம்  பாதிப்பான நிலையில் இருப்பதாலும் ஜாதகருக்கு திருமணம் தாமதம் ஆகிறது என்பதே உண்மை, சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பதால் ஜாதகர் கவலை கொள்ள அவசியம் இல்லை, ஏனெனில் ஜாதகருக்கு 32 வயதுக்கு மேல் நிச்சயம் திருமணம் நடைபெறும்.

 சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் ராகு கேதுவுக்கு ஜாதகர் பரிகாரம் செய்வதால் எவ்வித நன்மையையும் இல்லை என்பதே உண்மை, இதற்க்கு பதிலாக திருமணம் தாமதமாக நடைபெற ஜாதகருக்கு 2ம் பாவகம் எனும் குடும்ப ஸ்தானம் வலிமை அற்று இருப்பதே இதற்க்கு காரணம், மேலும் திருமணம் நல்ல முறையில் ஜாதகருக்கு நடைபெற 2ம் பாவகத்திர்க்கு அதிபதி யார் என்பதை கருத்தில் கொண்டு, சம்பந்த பட்ட கிரகத்திற்கு பிரிதி பரிகாரம் செய்வதும், 2ம் பாவக அமைப்பில் இருந்து வரும் பாதிப்பை ஏற்றுக்கொண்டு  அதன் வழியில் ஜாதகர் மற்றவர்க்கு நன்மையை செய்யும் பொழுது ஜாதகருக்கு இல்லற வாழ்க்கை வெகு விரைவில் கூடி வரும்.

 இதை தவிர்த்துவிட்டு ஜாதகர் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வதால் திருமண வாழ்க்கை எவ்விதத்திலும் கை கூடி வர வாய்ப்பில்லை, மாறாக ராகு கேது கிரக அமைப்பில் இருந்தும், 6,12ம் பாவக வழியில் இருந்தும் மிகுந்த நன்மையை ஜாதகர் அனுபவிக்கலாம், 6ம் பாவக வழியில் இருந்து நோய் நொடி இல்லாமலும், கடன் சிக்கல்கள் இல்லாமலும், நீண்ட ஆரோக்கியத்துடன் இயங்க முடியும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல தூக்கமும், முன் ஜென்ம நினைவுகள் பற்றியும், ஆன்மீக வாழ்க்கையில் வெற்றியும் மோட்ச வாழ்க்கையும், முதலீடு செய்வதால் அபரிவிதமான முன்னேற்றத்தையும்  வாரி வழங்கும்.

 ஒருவருக்கு திருமணம் தாமதம் ஆக உண்மையான காரணம் என்ன என்பதை சரியாக தெரிந்துகொண்டு, அதற்க்கு உண்டான பிரிதி பரிகாரங்களை செய்யும் பொழுது ஜாதகருக்கு திருமணம் விரைவாக சரியான நேரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறும், மேற்கண்ட ஜாதகருக்கு 2ம் பாவக அதிபதியான செவ்வாய் பகவனே திருமண தாமதத்திற்கு காரணம், எனவே செவ்வாய் பகவானை முறையாக வழிபாடு செய்வதும், தனது உடன் பிறப்புகளுக்கு நன்மை செய்வதும் , செவ்வாய் பகவான் ஆதிக்கம் உள்ள பொருட்களை தானம் செய்வதும் ஜாதகருக்கு விரைந்து திருமண வாழ்க்கையை அமைத்துத்தரும், சுய ஜாதகத்தில் திருமணம் தாமதம் ஆக உண்மையான காரணம் என்ன? என்பதை மிக துல்லியமாக உணர்ந்து அதற்க்கு உண்டான தீர்வை சொலும் பொழுது ஜாதகருக்கு திருமணம் எவ்வித தங்கு தடையின்றி நடைபெறும் என்பதே ஜோதிட உண்மை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 24 ஏப்ரல், 2014

ராகு கேது சுய ஜாதகத்தில் வலிமை பெற்று அமரும்பொழுது ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை !


 நவ கிரகங்களில் சாய கிரகம் என்று அலைக்கபெரும் ராகு கேது ஒருவரின் சுய ஜாதகத்தில் நல்ல வலிமையுடன் அமரும் பொழுது ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை என்பது, கற்பனையிலும் எவராலும் நினைத்து பார்க்க இயலாத வகையில் அமர்ந்து விடும், குறிப்பாக ஒருவரின் சுய ஜாதகத்தில் ராகு கேது லக்கினம் மற்றும் களத்திர பாவகத்தில் அமர்ந்து 100% நன்மையை தரும் அமைப்பை பெரும் பொழுது, ஜாதகரின் வாழ்க்கை எதிர்பாராத அதிர்ஷ்ட அமைப்பை பெற்று குறுகிய காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், பொருளாதார தன்னிறைவையும் வாரி வழங்கும் என்பதில் சிறிதும் வியப்பில்லை, அதிலும் தற்பொழுது நடைமுறையில் திசை மற்றும் புத்திகள் லக்கினம் மற்றும் களத்திர பாவக பலன்களை வாரி வழங்கினால், ஜாதகரின் முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது.

எடுத்துகாட்டாக :

 மேற்கண்ட கன்னி இலக்கின ஜாதகருக்கு மேலோட்டமாக காணும் பொழுது ராகு கேது எனும் சாய கிரகங்கள் 2ம் பாவகத்திலும், 8ம் பாவகத்திலும் அமர்ந்து இருப்பதை போன்ற தோற்றத்தை தந்தாலும், துலாம் ராசியில் லக்கினத்திற்கு உற்பட்ட பாகைக்குள் கேது அமர்ந்தும் ( 194.08.13 ) மேஷ ராசியில் களத்திர பாவகத்திர்க்கு உற்பட்ட பாகைக்குள் ராகு  அமர்ந்தும் ( 014.08.13 ) ஜாதகருக்கு 100 சதவிகித நன்மைகளை வாரி வழங்கி கொண்டு இருப்பது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாகவே கருதலாம்.

 கேது ஜாதகருக்கு லக்கினத்தில் அமர்வது ஜாதகருக்கு முதல் பாவக வழியில் இருந்து 100 சதவிகித நன்மையை வாரி வழங்கும் மேலும் கேது அமர்ந்திருப்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு, 7ம் வீடான சர காற்று தத்துவ துலாம் ராசியில், எனவே ஜாதகருக்கு வாழ்க்கையில் பெயரும் புகழும், பொருளாதார ரீதியான முன்னேற்றம் எல்லாம், வாழ்க்கை துணை வழியில் இருந்தும், நண்பர்கள் வழியில் இருந்தும், பொதுமக்கள் வழியில் இருந்தும் கிடைக்கும், குறிப்பாக ஜாதகர் செய்யும் தொழில் அனைத்தும் பொது மக்களை சார்ந்த அமைப்பில் இருக்கும், தனது சுய அறிவாற்றலை கொண்டு செய்யும் தொழில்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தரும்.

 குறிப்பாக ஜாதகர் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்வது மிகப்பெரிய முன்னேற்றத்தை வாரி வழங்கும், இயற்கையாகவே ஜாதகர் நல்ல அறிவாற்றலும், புதுமையான சிந்தனை திறனும் கொண்டவர் என்பதால் எவ்வித சிரமும் இல்லாத தொழில்களை தேர்ந்தெடுத்து, அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே பல தொழில்களை நிர்வகிக்கும் யோக அமைப்பை தரும், வெளிநாடுகளில் இருந்து ஜாதகருக்கு மிகப்பெரிய எதிர்பாராத வருமான வாய்ப்புகளை வாரி வழங்கும்.

மேலும் லக்கினத்தில் அமர்ந்த கேது பகவான் ஆன்மீகத்தில் தெளிந்த நல்லறிவையும், தனது பிறப்பின் ரகசியத்தை உணரும் ஆற்றலையும் ஜாதகருக்கு இயற்கையாகவே தந்துவிடுவார், பின்னல் நடக்க இருக்கின்ற விஷயங்களை முன்னாலே உணரும் அறிவு, ஜாதகருக்கு சிறு வயது முதலே அமைந்து இருப்பது இறைவன் கொடுத்த வரம் எனலாம், நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மன ஆற்றலையும், கேது பகவான் சற்று அதிகமாகேவே ஜாதகருக்கு தந்திருப்பது விசேஷமான ஒன்றாக கருதலாம், பொது மக்களிடம் நன்மதிப்பும், பொதுமக்களின் ஆதரவில் அலங்கரிக்கும் அரசியல் பதவிகளும் ஜாதகருக்கு மிக எளிதாக தேடி வரும் என்பது குறிப்பிட தக்க ஒரு விஷயம், கேது பகவான் இந்த ஜாதகருக்கு லக்கினத்தில் அமர்ந்து பாவக அமைப்பிற்கு உற்பட்ட யோக பலனை வாரி வழங்குவது, ஜாதகர் முன் ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பலனே என்றால் அது மிகையில்லை.

 அடுத்ததாக லக்கினத்திற்கு களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகு கிரகத்தை பற்றி சற்றே சிந்திப்போம், பொதுவாக சாய கிரகங்களான ராகுவோ அல்லது கேதுவோ ஏதாவது ஒன்று நல்ல நிலையில் இருந்தாலே, ஜாதகர் மிகுந்த நன்மைகளை பெறுவார், மேற்கண்ட ஜாதகருக்கு ராகு கேது என்ற இரு கிரகமும் நல்ல நிலையில் இருப்பது ஜாதகர் செய்த புண்ணிய பதிவின் காரணமே என்றால் அது மிகையில்லை, சர நெருப்பு தத்துவ ராசியான மேஷத்தில் அமரும் ராகு பகவான் களத்திர ஸ்தானத்தை 100% வலிமை பெற செய்வது ஜாதகருக்கு வெளி வட்டார பழக்க வழங்கங்கள் அனைத்தும் மிகப்பெரிய இடத்தில் இருந்தே அமையும், வாழ்க்கை துணையும் நண்பர்களும் ஜாதகருக்கு மிக உயர்ந்த வசதி மிக்க இடத்தில் இருந்தே கிடைப்பார்கள், பொதுமக்களின் ஆதரவு ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

இங்கு அமரும் ராகு பகவான் ஜாதகருக்கு கண்ணியாமான வியாபாரியாகவும், நேர்மையான தொழில் செய்யும் நபராகவும், செய்யும் தொழில் மற்றும் பொதுமக்களிடம் நர்ப்பெயர் எடுக்கும் திறமை பெற்றவராகவும், காணப்படுவார், மேஷம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் வீடாக வருவதால் ஜாதகருக்கு முன்னேற்றமும், செல்வாக்கும் மிகவும் அபரிவிதமாக இருக்கும்.

 நெருப்ப தத்துவ ராசியில் நல்ல நிலையில் அமரும் ராகு பகவான் ஜாதகருக்கு சுய கட்டுப்பாடு, தன்னம்பிக்கையான மன நிலை, எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் புத்திசாலித்தனம், தனது கூட்டாளிகளுக்கு யோகத்தை தருபவராகவும், நண்பர்களுக்கு சிறந்த அறிவுரை கூறும் மதி மந்திரியாகவும், மற்றவர் வாழ்க்கையில் வெளிச்சத்தை தரும் அகல் விளக்கவும், தன்னிலை பாரமால் தன்னை நம்பியவரையும், தன்னை நம்பி வாழ்பவரை காப்பாற்றும் வல்லமை பெற்றவராகவும் ஜாதகர் விளங்குவார், ராகு பகவான் சர நெருப்பு ராசியான மேஷத்தில் வலிமையுடன் அமர்ந்திருப்பது, ஜாதகரை எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்க செய்யும், உடல் வலிமை மிக அதிகமாக காணப்படும், எவ்வித துன்பத்தையும் எதிர்கொள்ளும் உடல் அமைப்பை ஜாதகர் பெற்றிருப்பது ஒரு சிறப்பான விஷயமே.

 ஜாதகருக்கு சாய கிரகமான ராகு கேது இரண்டும் மிக வலிமையுடன் முறையே சர ராசிகளான மேஷம் மற்றும் துலாம் ராசிகளில் மிகவும் சிறப்பாக லக்கினம் மற்றும் களத்திர பாவகங்களில் அமர்திருப்பது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பே, அதிலும் குறிப்பாக தற்பொழுது நடைபெறும் சந்திரன் திசை, லக்கினம் மற்றும் களத்திர பாவக பலனை ஏற்று நடத்துவது சந்திரன் திசை முழுவதிற்கு உண்டான, இலக்கின களத்திர பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை வாரி வழங்கும், எனவே ஜாதகர் தற்பொழுது சந்திரன் திசையில் மிகுந்த யோக பலன்களை சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து அனுபவித்துக்கொண்டு இருக்கிறார் என்பதே மகிழ்ச்சியான ஒரு விஷயம்.

ஆக சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமையுடன் அமரும் பொழுது ஜாதகர் மிகுந்த பாக்கியசாலியாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் அவருடன் நட்பில், உறவில் இருப்போர் அனைவரும் யோக பலன்களை பெறுவார் என்பதிலும் சந்தேகம் இல்லை, சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை பெரும் பொழுது புலனுக்கு எட்டாத அறிவாற்றலையும், இறையருளின் கருணையை பூரணமாக பெரும் யோகத்தையும் பெற்றிருப்பது சிறப்பான ஒரு விஷயம், இவர்களின் கைகள் பட்டால் உடல்நலம் பெரும், பார்வை பட்டால் வாழ்க்கையில் சகல செல்வங்களும் வந்து சேரும்.

 ராகு கேது சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் எந்த ஒரு பாவகத்தில் இருந்தாலும் மிகுந்த யோக பலன்களையே வாரி வழங்கும் என்பது உறுதி, இதனை உணராமல் ராகு கேது ஜாதகத்தில் 1,2,5,7,8,12ல் அமர்ந்திருந்தால் ஜாதகருக்கு தோஷம் என்று கணிப்பதும், அவயோக பலன்களையே தரும் என்று கணிப்பதும் ஜோதிட அறிவு சிறிதும் அற்றவர்களின் கருத்தாகவே நாம் எடுத்துகொள்ள வேண்டி வருகிறது, சுய ஜாதகத்தில் ராகு கேது அமர்ந்திருக்கும் பாவகம் மற்றும் ராசி அதன் தன்மை ஆகியவற்றை துல்லியமாக கணிதம் செய்து பலன் அறிவது, ஜோதிட துறைக்கு நாம் ஆற்றும் கடமையே என்றால் அது மிகையில்லை.
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

ராகு கேது சுய ஜாதகத்தில் வலிமை அற்ற நிலையில்( தோஷம் பெற்று ) அமரும் பொழுது ஜாதகர் படும் அவஸ்த்தை !




 சுய ஜாதகத்தில் பொதுவாக ராகு  கேது எனும் சாய கிரகம் இரண்டும் மிக வலிமையுடன் அமர்வது, ஜாதகரின் வாழ்க்கையில் அடிப்படியில் இருந்து மிகப்பெரிய முன்னேற்றத்தை வாரி வழங்கும், அதாவது சிறுவயதில் நல்ல அடிப்படை கல்வி, சரியான வயதில் தடையற்ற உயர்கல்வி, கற்ற  கல்விக்கேற்ற சரியான தொழில் வாய்ப்புகள் அல்லது வேலை வாய்ப்புகள், இளம் வயதில் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும் யோகம், சிறப்பான புத்திர சந்தானம், நல்ல வசதி மிக்க வீடு,வண்டி,வாகன யோகம், நல்ல நண்பர்கள் சேர்க்கை, நல்ல கூட்டாளிகள் என ஜாதகருக்கு அடிப்படையில் இருந்து இறுதி வரை நல்ல சுக போகமான வாழ்க்கை அனுபவிக்கும் தன்மையை தரும், ராகு கேது இதற்க்கு மாறாக வலிமை அற்று அமரும் பொழுது ஜாதகர் படும் துன்பத்திற்கு ஒரு அளவில்லாமல் தீய பலன்களை தர ஆரம்பித்து விடும்.

எடுத்துகாட்டாக :


 மேற்க்கண்ட ரிஷப இலக்கின ஜாதகருக்கு மேலோட்டமாக பார்க்கும் பொழுது லக்கினத்தில் இருந்து 5ல் ராகுவும், 11ல் கேதுவும் இருப்பதை போன்ற தோற்றத்தை தந்தாலும், லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை, அடிப்படையாக கொண்டு காணும்பொழுது ஜாதகருக்கு 4ல் ராகுவும், 10ல் கேதுவும் அமர்ந்திருப்பது தெரியவரும், மேலும் சாயா கிரகமான ராகு கேது மேற்கண்ட பாவகத்தில் அமர்ந்து ஜாதகருக்கு எவ்வித பலாபலன்களை வாரி வழங்குகிறார்கள் என்பதை, இன்றைய ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

 ராகு ஜாதகருக்கு உபய மண் தத்துவ ராசியான கன்னியில் 4ம் பாவகத்திர்க்கு உற்பட்ட பாகைக்குள் அமர்ந்து 4ம் பாவகத்தை 100 சதவிகிதம் பதிப்புக்கு உள்ளக்குவதர்க்கு காரண கர்த்தாகவாக விளங்குகிறார், இங்கே ஜாதகருக்கு இலக்கின அமைப்பில் இருந்து காணும் பொழுது நான்காம் பாவகமாகவும், கால புருஷ தத்துவ அமைப்பின் அடிப்படையில் 6ம் பாவகமாக விளங்குவதாலும், ஜாதகர் தனது சுக போக வாழ்க்கையில் தானே துன்பத்தை வரவழைத்து கொள்ளும் தன்மையை தரும், குறிப்பாக ஜாதகரின் நோக்கமும் செயல்களும் ஒரு நேர்கோட்டில் அமைவதற்கு உண்டான வாய்ப்பை வழங்காது, மேலும் ஜாதகர் பண விஷயத்தில் அதிக கவனமின்மையை தரும், ஜாதகர் வாங்கும் கடனும், கொடுக்கும் கடனும் அதிக இன்னல்களை ஏற்ப்படுத்தும்.

 மேலும் உடல் ரீதியான தொந்தரவுகளை ஜாதகரே வலுகட்டாயமாக வரவளைத்துகொள்ளும் தன்மையை தரும், உதாரணமாக லகிரி வஸ்த்துகளை பயன்படுத்துவதால் உடல் நிலையில் அதிக தொந்தரவுகளை பெரும் நிலை தரும், குறிப்பாக வயிறு சம்பந்த பட்ட பிரச்சனைகளையும், இதயம் சம்பந்தபட்ட பிரச்சனைகளையும் அதிகமாக தரக்கூடும், ஜாதகருக்கு லக்கினம் வலிமை பெற்று இருப்பதால் தனக்கு வரும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் ஆற்றலை தரும், இருப்பினும் ஜாதகர் உடல் தொந்தரவுகளை தவிர்க்க இயலாது, குறிப்பாக சுய ஜாதகத்தில் ராகு வலிமை குறைவாக அமரும்பொழுது ஜாதகர் அதிக கவனமாக தீய பழக்க வழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பது மிகுந்த நன்மையை தரும், இல்லை எனில் ஜாதகருக்கு வரும் உடல் தொந்தரவுகளின் அளவு மிக கடினமானதாக இருக்கும்.

  ராகுவால் பாதிப்புக்கு உள்ளாகும் , ஜாதகரின் நான்காம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் பாவகமாக விளங்குவதால் சிறு வயது  முதல் தாயின் அரவணைப்பில் வளரும் சூழ்நிலையை தருவதற்கு வாய்ப்பு இல்லை எனாலாம், மேலும் ராகு பகவானுக்கு நேரெதிராக அமரும் கேது பகவானும் 10ம் பாவகமான ஜீவன ஸ்தானத்தை பாதிப்புக்கு உள்ளாக்குவதால், தகப்பனாரின் அரவணைப்பிலும் வளரும் சூழ்நிலையை தராது, ஆக ராகு கேது  இரண்டும் ஜாதகரை பெற்றோரின் அரவணைப்பில் இருந்து பிரித்தெடுத்து தனிமையில்  வளரும் சூழ்நிலையை தந்துவிடும்.

 கேது ஜாதகருக்கு உபய நீர் தத்துவ ராசியான மீனத்தில்  10ம் பாவகத்திர்க்கு உற்பட்ட பாகைக்குள் அமர்ந்து 10ம் பாவகத்தை 100 சதவிகிதம் பதிப்புக்கு உள்ளக்குவதர்க்கு காரண கர்த்தாகவாக விளங்குகிறார், இங்கே அமரும் கேது பகவான் ஜாதகருக்கு முதலில் தகப்பனார் வழியில் இருந்து வரும் நன்மைகளை அனைத்தையும் தடை செய்துவிடுவார், குறிப்பாக தகப்பனார் அமைப்பில் இருந்து ஜாதகர் எந்த ஒரு விஷயத்தையும் எதிர்பாராமல் இருப்பது ஏமாற்றத்தை தவிர்க்கும், மேலும் தகப்பனார் வழியில் இருந்து வரும் உதவிகள் ஆதரவு ஜாதகருக்கு நிலையாக நிலைத்திருக்கும் தன்மையை தர சிறிதும் வாய்ப்பில்லை, எனவே ஜாதகர் தனது தகப்பனாருக்கு  தன்னால் இயன்ற நன்மையை செய்யும் பொழுது, சுய கௌரவம் மற்றும் தொழில்  முன்னேற்றம் பெற இயலும் என்பதே உண்மை.

கேது பகவான் லக்கினத்திற்கு ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்தாலும் இந்த மீன ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் பாவகமாக வருவதால் ஜாதகரின் மன நிம்மதி கடுமையாக பாதிக்க படும் தொழில் அமைப்பில் இருந்து ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலை தரும், உதாரணமாக் நல்ல வேலையாட்கள் ஜாதகருக்கு அமைய வாய்ப்பு குறைவு, ஜாதகரின் தொழில் முன்னேற்றம் என்பது ஆமை வேகத்தில் செல்லும் தன்மையை தரும், ஜாதகரின் களத்திர ஸ்தானம் வலிமையாக இருப்பதால், தனது வாழ்க்கை துணையின் பெயரில் செய்யும் தொழில் யாவும் வெற்றிமேல் வெற்றி தரும் என்பதை நினைத்து ஆறுதல் பெறலாம்.

 ஜீவன ஸ்தானத்தில் அமரும் கேது பகவான் ஜாதகருக்கு தனது சுய கௌரவத்திற்கு பாதிப்பை தரும் என்பதால் ஜாதகர் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும், சுய கௌரவத்திற்கு பாதிப்பை தராமல் ஜாதகருக்கு நர்ப்பெயரும் நன்மையையும் உண்டாகும், இதற்க்கு மாறாக ஜாதகர் மற்றவர் விஷயத்தில் தலையீடு செய்தால் ஜாதகரின் வாழ்க்கை கேள்விக்குரியதாக மாறிவிடும், ஜீவன வாழ்க்கையில் முன்னேற்றம் இன்மை அல்லது எதிர்பாராத இழப்பு என்ற சூழ்நிலையை தரும், ஆக சுய ஜாதகத்தில் ராகு கேது பாதிப்புக்கு உள்ளாவது சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து கடுமையான பாதிப்பை தருகிறது, ஒருவேளை நடைமுறையில் இருக்கும் திசை மற்றும் புத்தி சம்பந்தபட்ட பாவக  பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் பாதிப்பின் அளவு மிக அதிகமாக  இருக்கும் ஜாதகரால் இதன் பாதிப்பில் இருந்து வெளிவர இயலாத சூழ்நிலையையே தரும்.

சாயா  கிரகமான ராகு கேது சுய ஜாதகத்தில் வலிமை இழக்கும் பொழுது ஜாதகர் மேற்கண்ட இன்னல்களை அனுபவிக்க வேண்டி வருகிறது, குறிப்பாக ராகு கேது எந்த பாவகத்தை ஆக்கிரமிப்பு செய்கிறார்களோ அதன் வழியில் இருந்து அளவற்ற துன்பங்களை ஜாதகர் எதிர்கொள்ள வேண்டி வருகிறது, குறிப்பாக 4,10 ம் பாவகம் ராகு கேதுவுடன் சம்பந்தம் பெற்று வலிமை இழக்கும்  பொழுது ஜாதகர் தனது பெற்றோரை விட்டு பிரிந்து வாழும் சூழ்நிலையை தருகிறது, மேற்கண்ட ஜாதகத்தில் 4,10ம் பாவகம் உபய ராசியாக இருப்பதால், ஜாதகர் தனது பெற்றோரை பிரிந்து வாழும் சூழ்நிலையை தந்தது , இதுவே சர ராசியாக இருந்தால் ஜாதகர் பெற்றோரை இழந்து வாழும் சூழ்நிலையை தந்துவிடும் என்பதை நினைத்து ஆறுதல் பெறலாம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 16 ஏப்ரல், 2014

ஆயுள் பாவக நிர்ணயம், பூர்ண ஆயுள் அற்ப ஆயுள் விளக்கம் !



கேள்வி :

 அய்யா வணக்கம் எனது ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள், எனது பெற்றோரிடம் இந்த ஜாதகருக்கு ஆயுள் பாவகம் வலிமையில்லாமல் இருப்பதால், ஆயுளுக்கு பங்கம் ஏற்ப்படலாம் என்று கூறியுள்ளனர், இதனால் எனது பெற்றோர்கள் அதிக மன உளைச்சலுடன் இருக்கின்றனர், என்னையும் மனதளவில் கவலையுற செய்கின்றனர், எனது ஜாதகத்தை சரியாக கணிதம் செய்து ஆயுள் பாவக பலனை நிர்ணயம் செய்து ஜாதக பலன் கூறுமாறு பணிவுடன் வேண்டுகிறேன் .

பதில் :

 அன்பு தம்பிக்கு தங்களது ஜாதகத்தை நன்றாக ஆய்வு செய்த வகையில் ஒன்றை மட்டும் தெளிவாக சொல்கிறேன் தங்களுக்கு பூரண ஆயுள், இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை ஏனெனில், தங்களின் சுய ஜாதகத்தில் ஆயுள் வலிமையை குறிக்கும் 8ம் வீடும், உயிர் உடல் அமைப்பை குறிக்கும் லக்கினமும் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருப்பதே அதற்க்கு காரணம், குறிப்பாக 8ம் வீடு ஆயுள் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகருக்கு பூரண ஆயுளை தந்துவிடும், இலக்கின பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கு எவ்வித சிரமும் வர வாய்ப்பில்லை என்பதால், தாங்கள் எவ்வித கவலையும் அடைய தேவையில்லை.

தங்களது பெற்றோருக்கும் தெளிவாக சொல்லிவிடுங்கள் தங்கள் உயிருக்கும், உடலுக்கும் எவ்வித பாதிப்பும் வர வாய்ப்பில்லை என்று, எனவே தாங்கள் எவ்வித மன கவலையும் கொள்ளாமல் தைரியமாக இருக்கலாம், இதற்க்கு மேலும் உங்களுக்கு ஆயுள் பாவகம் பற்றிய கவலை வருமெனில், நேராக வளர்பிறை திங்கள் அன்று திருமலை திருப்பதி சென்று ஏழு மலையானுக்கு முடி காணிக்கை செய்துவிட்டு, ஸ்ரீ வாரி தீர்த்தத்தில் குளித்து ஸ்ரீ வாரி பெருமாளை தரிசனம் செய்து வரவும், தங்களுக்கு 100 சதவித நன்மையை ஆயுள் என்ற அமைப்பில் இருந்து தருவார், மேலும்  தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்ற அமைப்பில் இருக்கட்டும்.

 மேலும் எக்காரணத்தை கொண்டும் எந்த ஒரு ஜோதிடராலும் ஒருவரின் ஆயுள் பாவகத்தின் தன்மையை நிர்ணயம் செய்து விட முடியாது, இறை அருளின் தன்மைக்கு மட்டுமே இந்த விஷயம் புலப்படும், எனவே தங்களின் ஜாதக அமைப்பில் ஆயுள் என்ற அமைப்பு நல்ல நிலையில் இருப்பது மட்டும் உறுதி  என்பதால் பெரிய அளவில் தாங்கள் மன கவலை கொள்ளாமல் வாழ்க்கையை இனிமையாக வழ கற்று கொள்ளுங்கள், தங்களின் பெற்றோருக்கும் தைரியம் சொல்லுங்கள். வாழ்த்துகள் 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

காலசர்ப்ப தோஷமா? காலசர்ப்ப யோகமா? ராகு கேது ஜாதகத்தில் தரும் பலன்கள் என்ன ?




 பொதுவாக சுய ஜாதகத்தில் ராகு கேதுவின் பிடியில் ( அதாவது ராகு கேது கிரகங்களுக்கு இடையில் அனைத்து கிரகங்களும் அடைபடுவது காலசர்ப்ப தோஷமாக பாரம்பரிய ஜோதிடத்தில் குறிப்பிட படுகிறது, மேற்கண்ட அமைப்பை பெற்ற ஜாதகத்தை சார்ந்த நபர்களின் வாழ்க்கை குறிப்பிட்ட வயது வரை ( 32  வயது ) பல இன்னல்களுக்கும், துன்பத்திற்கும் ஆர்ப்பட்டு பிறகு வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெரும் யோக நிலையை தரும் என்று செல்வதும் உண்டு.

 மேலும் சர்ப்ப தோஷ அமைப்பை பெற்ற ஜாதகருக்கு, இதை போன்றே சர்ப்ப தோஷ அமைப்பை பெற்ற ஜாதகத்தை வாழ்க்கை துணையாக அமைக்க வேண்டும் என்ற கருத்தும் பாரம்பரிய ஜோதிடத்தில் உண்டு. 
( அது எப்படி தோஷமுள்ள இரு ஜாதகத்தை இணைக்கும் பொழுது வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று தெரியவில்லை? ) 

 நமது ஜோதிட முறையில் ராகு கேது என்ற இரு கிரகங்களுக்கும் தனிப்பட்ட வலிமை உண்டு என்பதை கடந்த பதிவில் பதிவு செய்து இருக்கிறோம், குறிப்பாக ராகு கேது எந்த பாவகத்தில் அமருகின்றதோ அந்த பாவகத்தின் பலனை 100 சதவிகிதம் தானே ஏற்று நடத்தும், குறிப்பிட்ட பாவகத்தில் ராகு கேதுவுடன் சேரும் எந்த கிரகமானாலும் அவற்றின் பலனையும் தானே ஏற்று நடத்தும் என்பதே அது.

 மேலும் ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகத்தில் அமரும் ராகு அல்லது கேது லக்கினத்தை 100 சதவிகிதம் வலிமை பெற செய்து, ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து கிடைக்க வேண்டிய நன்மைகளை 100 சதவிகிதம் பெற செய்யும், மேலும் ராகு கேது தோஷம் என்று பாரம்பரிய ஜோதிடத்தில் கணிப்பு செய்த பல ஜாதகங்களில் ராகு கேது இரண்டு கிரகங்களும் ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்கி கொண்டு இருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம்.

உதாரணமாக:



 மேற்கண்ட ஜாதகத்தில் 5ல் கேதுவும், 11ல் ராகுவும் அமர்ந்து ஜாதக ரீதியாக மிகப்பெரிய யோக பலன்களை வாரி வழங்கி கொண்டு இருப்பது கவனிக்கத்தக்க விஷயம், கேது 5ம் பாவக வழியில் இருந்தும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியில் அமர்ந்து ஜாதகருக்கு சிறந்த வாழ்க்கை துணையையும், சிறந்த புத்திர சந்தான அமைப்பையும் பெற்று தந்திருப்பது குறிப்பிட தக்கது, மேலும் துலாம் ராசி ஜாதகருக்கு சர காற்று தத்துவ ராசியாக இருப்பதால் ஜாதகரின் அறிவாற்றல் மிகவும் சிறப்பாக  விளங்குவது புலனாகிறது.

 மேலும் தான் காற்ற கல்வியையை கொண்டும் அறிவாற்றலை கொண்டும் ஜாதகர் மிகப்பெரிய வெற்றியை குறுகிய காலத்தில் பெரும் யோகத்தை தரும் என்பது முக்கியமான விஷயம், இங்கே அமர்ந்திருக்கும் கேது பகவான் ஜாதகருக்கு குல தெய்வ நல்லாசியையும், இறை நிலையின் அருள் ஆற்றலையும் மிக எளிதாக பெற்று தரும் என்பது உறுதி, மேலும் ஜாதகருக்கு உதவி செய்ய பலர் காத்திருப்பார்கள் என்பதும், நல்ல நண்பர்கள் அமைந்து அவர்களின் மூலம் வாழ்க்கையில் பல சாதனைகளை செய்வார் என்பதும் உறுதியாகிறது.

 11ல் அமர்ந்திருக்கும் ராகு பகவான் ஜாதகருக்கு லாப ஸ்தான வழியில் இருந்தும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசி அமைப்பில் இருந்து மிகுந்த லாபத்தை வாரி வழங்குவார், குறிப்பாக எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றி, முற்போக்கு சிந்தனை, சிறந்த செயல் திறன், எவ்வித சூழ்நிலையையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெரும் யோக அமைப்பு, உடல் மனம் என்ற அமைப்பில் இருந்து ஜாதகர் 100 சதவிகித நன்மையை பெரும் யோகத்தை தரும், ஜாதகரின் எண்ணம் யாவும் நிறைவேறும் சக்தியை தரும், குறிப்பாக தான் எடுத்துக்கொண்ட காரியங்களில் உறுதியாக நின்று வாழ்க்கையில் வெற்றி பெரும் யோக அமைப்பை ஜாதகர் பெறுவார்.

 மேலும் ஜாதகர் துவங்கும் தொழில்கள் யாவும் குறுகிய காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும், குறைவான முதலீட்டில் மிகப்பெரிய தொழில் விருத்தியை தரும், ஜாதகருடன் கூட்டு சேர்ந்து செய்யும் நபர்கள் யாவரும் மிகுந்த லாபத்தை பெறுவார்கள், பல தொழில் செய்யும் யோகத்தையும், லாட்டரி மற்றும் புதையல் போன்ற விஷயங்களில் ஜாதகருக்கு 100 சதவிகித வெற்றியை தரும், லட்சிய நோக்கில் செயல்படும் காரியங்கள் யாவும் வெற்றிமேல் வெற்றி தரும்.

ராகு கேது மேற்கண்ட ஜாதக அமைப்பில் ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து 100 சதவிகித யோக வாழ்க்கையை தந்துகொண்டு இருப்பது ஒரு சிறப்பான விஷயமாக கருதலாம், மேலும் மேற்க்கண்ட ஜாதகத்தில் பாரம்பரிய ஜோதிட வழியில் சொல்வதென்றால் சம்பந்தபட்ட ஜாதகருக்கு, காலசர்ப்ப யோகத்தை பிறவி முதற்கொண்டு வாழ்நாள் முழுவதும் தந்துகொண்டு இருக்கிறது என்பதே முற்றிலும் உண்மை.

மேலும் சர்ப்ப யோகம், தோஷம் இரண்டையும் நாம் ராகு கேது எவ்வித நிலையில் சுய ஜாதகத்தில் அமர்ந்திருக்கிறது என்ற அமைப்பை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும், ராகு கேது என்றவுடன் அவை தீமையான பலனையே தரும் என்று முடிவு செய்வது முற்றிலும் தவறான விஷயம் இலக்கின அமைப்பில் ராகு கேது அமர்ந்திருக்கும் பாவகத்தின் வலிமை உணர்ந்து பலன் நிர்ணயம் செய்வதே சால சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

ஒருவரது சுய ஜாதகத்தில் 4,10 ம் வீடுகள் பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்கள் என்ன ?



 பொதுவாக சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல, அதிலும் குறிப்பாக 1,4,7,10 வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த இன்னல்களை ஜாதகருக்கும், ஜாதகரை சார்ந்தவர்களுக்கும் வாரி வழங்கும், ஒரு வேலை மேற்கண்ட 1,4,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றாலும், நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஆகியவை  பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாமல் இருப்பது சால சிறந்தது.

 கேள்வியில் ஜாதகர் 4 மற்றும் 10 ம் வீடுகள் பாதக ஸ்தான அமைப்புடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் எவ்வித பலனை அனுபவிப்பர் என்பதனை இனி ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே! 

 4ம் வீடு பாதக ஸ்தான அமைப்புடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் ஆண் எனில் தனது தாயர் அமைப்பில் இருந்து பெரும் யோக பலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும்,  பெண் எனில் தகப்பனார் அமைப்பில் இருந்து பெரும் யோக பலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும் , உதாரணமாக தாயாரின் அரவணைப்பில் வளரும் சூழ்நிலை தராது, தாயின் அன்பினை பரிபூரணமான அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும், வளரும் காலத்தில் பெரிய அளவில் சுகமான வாழ்க்கையை அனுபவிக்க இயலாத தன்மையை தரும்.

  நல்ல வீடு, வண்டி வாகனம், சொத்து சுக அமைப்பை பரிபூரணமாக பெற இயலாத தன்மையை தரும், வளரும் காலத்தில் ஜாதகர் அதிக இன்னல்களையும், கல்வியில் தடை மற்றும் முன்னேற்றம் அற்ற தன்மையையும் தரும், ஜாதகர் தனது பெயரில் வைத்திருக்கும் சொத்து சுகங்களை திடீர் என இழக்கும் அமைப்பை தரும், திருமண வாழ்க்கையில் நிம்மதி அற்ற நிலையும், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி அற்ற தன்மையையும் கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்ப்பட அதிக சந்தர்ப்பங்களை உருவாக்கும்.

 சுருக்கமாக ஜாதகரின் சுக வாழ்க்கை கேள்விக்கு உரியதாக மாறிவிட வாய்ப்பு உண்டு, மேற்கண்ட ஜாதக அமைப்பை பெற்றவர்கள் தனது தாயாரை
 ( பெண்கள் எனில் தகப்பனாரை )  மிகவும் சிறப்பு கவனம் எடுத்து பார்த்துகொள்வது மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும் .

 10 ம் வீடு பாதக ஸ்தான அமைப்புடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் ஆண் எனில் தகப்பனார் வழியில் இருந்தும், பெண் எனில் தாயர் வழியில் இருந்தும் அதிக இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், மேலும் ஜாதகரின் அடிப்படை விஷயமாக கருதும் தொழில் அல்லது வேலை சரியாக அமையாமல், ஜாதகரை ஜீவன வாழ்க்கைக்காக போராடும் சூழ்நிலையை தொடர்ந்து தந்துகொண்டே இருக்கும், ஜாதகர் ஒரு இடத்தில் ஜீவன வாழ்க்கை மேற்கொள்ளுவது என்பது குதிரை கொம்பாகவே இருக்கும், பரதேச ஜீவனம் அமைவதற்கு வழிவகுத்துவிடும்.

சிறு வயதிலேயே தனது தகப்பனாரை விட்டு பிரிந்து வாழும் அல்லது இழந்து வளரும் சூழ்நிலையை தரும் ஜாதக அமைப்பில் இந்த 10ம் வீடு பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெற்று இருக்கும் என்பது கவனிக்க தக்கது, மேலும் ஜாதகரின் கௌரவமான வாழ்க்கை கடுமையாக பாதிக்க படுவதிர்க்கு மேற்கண்ட அமைப்பே காரணம், தேவையில்லா விஷயங்களில் தலையிடுவதாலும், மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையீடு செய்வதாலும், ஜாதகரின் கௌரவம் ஆதால பாதாளத்திற்கு செல்லும் என்பது மட்டும் 100%ம்  உறுதி, எனவே ஜாதகர் மற்றவர் விசயத்தில் தலையீடு செய்யாமல் இருப்பது, சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும்.

மேற்கண்ட அமைப்பை பெற்ற எந்த ஒரு ஜாதகரும் சுயமாக முதலீடு செய்து தொழில் துவங்குவதை கனவில் கூட நினைத்து பார்க்காமல் இருப்பது மிக்க நல்லது ஏனெனில் ஜாதகர் துவங்கும் தொழில் எதுவென்றாலும், அந்த தொழில் பாதியிலே முடங்கும் அல்லது பெருத்த நஷ்டம் ஏற்ப்பட வாய்ப்பளிக்கும், அல்லது பணியாற்றும் வேலையாட்களால் அதிக இன்னல்களுக்கும், துன்பத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தந்துவிடும்.

மேற்கண்ட அமைப்பை பெற்ற ஜாதகர் தனது தகப்பனாரை சிறப்பு கவனம் எடுத்து கவனித்துகொள்வது  ஜீவன அமைப்பில் இருந்து ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை வாரி வழங்கும், கௌரவமான வாழ்க்கையையும், அந்தஸ்து மிகுந்த மக்கள் செல்வாக்கினையும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 

9443355696
9842421435