சனி, 10 மே, 2014

திருமணதிற்கு பிறகு முன்னேற்றம் பெரும் யோக அமைப்பு !





சுய ஜாதக அமைப்பில் களத்திர ஸ்தானம் என்று வர்ணிக்கப்படும் 7ம் பாவகம் ஒருவருக்கு நல்ல நிலையில் வலிமை பெற்று இருக்குமெனில், அந்த ஜாதகரின் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றமும், கௌரவம், சமுதாய அந்தஸ்து, தன்னிறைவான வாழ்க்கை என்ற விஷயங்கள் அனைத்தும் திருமணத்திற்கு பிறகே நடைமுறைக்கு வரும், மேலும் களத்திர பாவகம் எனும் 7ம் வீடு தொடர்பு பெரும் பாவகம் சர ராசியாக இருப்பின் ஜாதகரின் யோக வாழ்க்கை, திருமணதிற்கு பிறகு விரைவாக குறுகிய காலத்தில் மிக பெரிய யோக வாழ்க்கையை தந்துவிடும்.

உதாரணமாக :


மேற்கண்ட ஜாதகருக்கு மிதுன லக்கினம்,  களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம்  சர ராசி மற்றும் லாபஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாக கருதலாம், ஜாதகரின் வாழ்க்கையில் பொருளாதார ரீதியான தன்னிறைவு வாழ்க்கை, சமுதாய அந்தஸ்து, செய்யும் தொழில் வெற்றி என்ற வகையில் அனைத்து நன்மையையும் திருமண வாழ்க்கைக்கு பிறகே என்பது தெளிவாகிறது, மேலும் ஜாதகரின் இலக்கின மிகுந்த வலிமையுடன் இருப்பதால் ஜாதகர் களத்திர பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை 100 சதவிகிதம் தங்கு தடையின்றி அனுபவிக்கும் யோகத்தை தரும்.

பொதுவாக சுய ஜாதகத்தில் களத்திர பாவகம் வலிமை பெரும் பொழுது குறிப்பாக லாப ஸ்தானதுடன் தொடர்பு பெரும் பொழுது, ஜாதகர் காலத்திற பாவக வழியில் இருந்து யோக வாழ்க்கையை அனுபவிக்க பிறந்தவர் என்பது உறுதி, எனவே ஜாதகர் களத்திர பாவகம் குறிப்பிடும் நபர்கள் வழியில் இருந்து யோக வாழ்க்கையை பெறுவார், களத்திர பாவகம் தொடர்பு படுத்தும் முதல் நபர் ஜாதகரின் வாழ்க்கை துணை, ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சொத்து சுகம், தொழில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், சமுதாயத்தில் கௌரவம் மற்றும் அந்தஸ்து என்ற வகையில் நன்மைகளை பெறுவார்.

களத்திர பாவகம் தொடர்பு படுத்தும் இரண்டாவது நபர் ஜாதகரின் நண்பர்கள், மேற்கண்ட ஜாதக அமைப்பில் வாழ்க்கை துணைக்கு அடுத்ததாக ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்காக பாடுபடும் நபர்கள் ஜாதகரின் நண்பர்கள் என்றால் அது மிகையில், ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அவரின் நண்பர்கள் துணை நின்று ஜாதகரை சிறப்பாக வழிநடத்தி செல்வார்கள், ஜாதகரின் வெற்றிக்கு அவரின் நண்பர்கள் உறுதுணையாகவும், பக்க பலமாகவும் நிற்பார்கள், எவ்வித சூழ்நிலையிலும் ஜாதகரை விட்டு பிரியாமல் துணை நிற்பது ஜாதகர் செய்த புண்ணியமே.

 களத்திர பாவகம் தொடர்பு படுத்தும் மூன்றாவது  நபர் ஜாதகரின் தொழில் முறை கூட்டாளிகள், ஜாதகருடன் தொழில் முறையில் கூட்டு சேரும் நபர்கள் யாவரும் மிகவும் நல்ல குணம் கொண்டவர்களாகவும், நேர்மையான நன்னடத்தை உள்ளவர்களாகவும் காணப்படுவார்கள், தன்னுடன் கூட்டு தொழில் புரியும் ஜாதகரின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டவர்களாக காணப்படுவார்கள், ஜாதகரின் தொழில் முன்னேற்றத்தில் தானும் பலன் பெற்று ஜாதகரையும் மிக பெரிய இடத்திற்கு எடுத்து செல்லும் தன்மை பெற்றவர்களாக இருப்பர்கள்.

களத்திர பாவகம் தொடர்பு படுத்தும் நான்காவது நபர், பொது மக்கள் ஜாதகர் எடுத்து வைக்கும் முன்னேற்ற பாதையின் ஒவ்வொரு படிக்கட்டுகளாக அமைவது பொதுமக்களே என்றால் அது மிகையில்லை, ஒரு ஊருக்கு, ஒரு நகரத்திற்கு, ஒரு மாநிலத்திற்கு, ஒரு நாட்டிற்கு தலைமை பொறுப்பேற்கும் நபர்களின் ஜாதகத்தில் நிச்சயம் மேற்கண்ட களத்திர பாவகம் வலிமை பெற்று இருக்கும், சுய மரியாதை, கௌரவம், ஏகோபித்த மக்கள் ஆதரவு என்ற வகையில் காலத்திற பாவகம் ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்கும் என்றால் அது மிகையில்ல, மேற்கண்ட நன்மைகள் யாவும் ஜாதகருக்கு நடைபெற வேண்டும் எனில் ஜாதகர் காலத்திற பாவகதிர்க்கு உண்டான திருமண வாழ்க்கை அமைந்தால் மட்டுமே சாத்தியம்.

மாறாக சுய ஜாதகத்தில் களத்திர பாவகம் வலிமை பெற்று, ஜாதகார் ஏதாவது ஒரு காரணதிற்காக திருமண வாய்ப்பை தட்டிகழிக்கும் பொழுது மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் ஒரு நற்பலன்களையும் அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தந்துவிடும், ஒரு வேலை தனக்கு அமைந்த வாழ்க்கை துணையின் (திருமணம் அல்லாத )  ஜாதகத்தில் களத்திர பாவகம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருப்பின் ஜாதகரின் யோக நிலைகள் யாவும், பங்கபட்டு ஜாதகருக்கு எவ்வித யோக வாழ்க்கையையும் அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696