புதன், 28 ஜனவரி, 2015

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - கும்பம்



சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   

ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே ( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது . 

கும்ப லக்கினம் :
கும்ப லக்கினத்தை  சார்ந்த அன்பர்களுக்கு 10ல் அமர்ந்த சனி  அமர்ந்த சனி பகவான் ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து மேன்மையும், எதிர்பாராத தொழில் முன்னேற்றத்தையும், அபரிவிதமான மக்கள் செல்வாக்கினையும், சமுதாயத்தில் கௌரவம் அந்தஸ்த்து மற்றும் சிறப்பு  மிக்க அதிகார பதவி மற்றும் பொறுப்புகளை அலங்கரிக்கும்  யோகத்தை தருகிறார்,  ஜாதகரின் திடீர் முன்னேற்றம் என்பது தவிர்க்க இயலாத வண்ணமே  அமையும் என்பது குறிப்பிட தக்கது, ஜாதகர் தனது வாழ்கை துணை வழியில் இருந்து 100% விகித யோகத்தை பெரும் நல்ல நேரமாக இதை கருதலாம், மேலும் செய்யும் தொழில் அமைப்புகளில் இருந்து புதையலுக்கு ஈடான சொத்து வரவுகளை பெரும் யோக காலமாக இனிவரும் 5வருடங்கள் அமையும்  என்பதை கருத்தில் கொண்டு  ஜாதகர் தனது உழைப்பை தொழில் துறையில் பயன்படுத்தினால், தனது வாழ்நாள் முழுவதிற்கும் உண்டான பொருளாதார தன்னிறைவை ஜாதகர் பெற இயலும் என்பது சனிபகவான் கும்ப லக்கினத்தாருக்கு தரும் ஒரு சிறந்த வாய்ப்பாக கருதலாம் அன்பர்களே !
6ம் பார்வையாக 3ம் பாவகத்தை வசீகரிக்கும் சனிபகவானால் கும்பலக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சிறந்த வெற்றிகள் உண்டாகும், தான் எடுக்கும் எந்த ஒரு காரியங்களும் வெற்றி மேல் வெற்றி தரும் போட்டி பந்தையங்களில் சிறந்த வெற்றிகள், அரசியலில் வெற்றி, தேர்வில் வெற்றி, தேர்தலில் வெற்றி என ஜாதகரின் வாழ்க்கை வெற்றி  படிகட்டுகளில் ஏறுவதற்கு உண்டான யோக காலமாக இதை கருதலாம், தன்னம்பிக்கை அதிகரிக்கும் , உலக பிரபல்யம் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் வந்து குவியும், ஜாதகரின் தனி  திறமையான செயல்பாடுகள் யாவரும் பாராட்டும் வண்ணம் அமையும், ஜாதகர் விளையாட்டு மற்றும் காவல் துறை, பாதுகாப்பு துறையில் இருப்பின் சம்பந்தபட்ட துறைகளில் திடீரென உயர்பதவி அல்லது அதற்க்கு நிகரான முன்னேற்றத்தை வாரி வழங்கும், ரியல் எஸ்டேட் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத குறுகியகால வளர்ச்சியை வாரி வழங்கும், இரும்பு மற்றும் கட்டுமான துறையில்  ஏஜென்சி அமைப்பில் செயல்படும் தொழில்கள் அபரிவிதமான வளர்ச்சியை பெரும், எதிர்பாராத  முன்னேற்றம் சம்பந்தபட்ட தொழில்  துறையில் உள்ளவர்களுக்கு ஏற்ப்படும், குறிப்பாக ஏஜென்சி மற்றும் கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு அபரிவிதமான வெற்றிகளை வாரி வழங்கும் யோக காலமாக இது அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

7ம் பார்வையாக 4ம் பாவகத்தை வசீகரிக்கும் சனிபகவான் கும்ப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சொத்து சுகம், வண்டி வாகனம், வீடு நிலம் சார்ந்த அமைப்புகளில் இருந்து 100% விகித யோக வாழ்க்கையை வாரி வழங்குகிறார், இதுவரை சொந்தமாக வீடு,வண்டி,வாகனம்,நிலம் இல்லாத அன்பர்களுக்கு ஸ்திரமான சொத்துகள் அமையும், வண்டி வாகன யோகம் உண்டாகும், புதிய  வீடு  வாங்கும் யோகம்  அல்லது புதிதாய் கட்டி குடிபோகும் யோகத்தை தரும், குடும்ப வாழ்க்கையில் செல்வசெழிப்பு உண்டாகும், எதிர்பாராத வருமானம் கும்ப லக்கினத்தாருக்கு  வந்து சேரும், முற்ப்போக்கு சிந்தனை உடன் வாழ்க்கையில் சகல பொருளாதார வெற்றிகளையும்  இனிவரும் காலங்களில் பெறுவார்கள், தாய் வழியில் இருந்து அல்லது குடும்ப அமைப்பில் இருந்து தங்களுக்கு  வரவேண்டிய சொத்து பணம் அல்லது நகை  அனைத்தும் வந்து சேரும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் யாரும் எதிர்பாராத  வண்ணம் வருமான  வாய்ப்புகள் தங்களை தேடிவரும், பேச்சை தொழிலாக கொண்டு செயல்படும் அன்பர்களுக்கு அபரிவிதமான வளர்ச்சி மற்றும் வருமானம் கிடைக்க பெறுவார்கள்.

10ம் பார்வையாக 7ம் பாவகத்தை வசீகரிக்கும் சனிபகவான் கும்பலக்கின அன்பர்களுக்கு, இதுவரை  திருமண தடைகளை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு சிறப்பான இல்லற வாழ்க்கையை அமைத்து தருவார், திருமண வாழ்க்கையில் பிரிவை நோக்கி சென்று கொண்டு இருந்த அன்பர்களுக்கு திடீர் திருப்பு முனையாக சேர்ந்து வாழும் யோகத்தை தருவார், திருமண  வாழ்க்கையில் அதிக சிரமங்களை எதிர்கொண்டு இருந்த அன்பர்களுக்கு இனிவரும் காலங்கள்  வசந்த காலமாக மாறி மன மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தும்,   தம்பதியரின் ஒற்றுமை மேலோங்கும், செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பான வரவேற்ப்பு கிடைக்கும், பொதுமக்கள் ஆதரவு மூலம் குடும்ப வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்கும், வேற்று மதத்தினர், வேற்று இனத்தினர் மூலம் நல்ல முன்னேற்றமும் பொருளாதார வளர்ச்சியும் உண்டாகும், இதுவரை திருமணம் ஆகாத கும்ப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு திடீரென திருமண வாழ்க்கை சீரும் சிறப்புமாக நடைபெறும், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் உறவுகளின் ஆதரவின் மூலம் பல நன்மைகளும், தொழில் அபிவிருத்தியும் உண்டாகும்,  கூட்டு தொழில் செய்யும் அன்பர்களுக்கு இனிவரும் காலங்கள் அபரிவிதமான லாபங்கள் 100% விகிதம் வந்து சேரும்  என்பது கவனிக்க தக்கது.

கும்ப இலக்கின அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும், திசை மற்றும் புத்தி மேற்கண்ட 
10,3,4,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, மேற்கண்ட சனிபகவானின் கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும் ஒருவேளை நடைபெறும் திசை 10,3,4,7ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் . 


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

வியாழன், 22 ஜனவரி, 2015

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - மகரம்



சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   

ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது . 

மகர லக்கினம் :

மகர லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 11ல் அமரும் சனி பகவான் மகர லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளை வழங்குகிறார், எண்ணம் போல் வாழ்க்கை என்பதற்கு இணங்க ஜாதகர் நினைக்கும் நல்ல காரியங்கள் யாவும் தங்கு தடையின்றி நடைபெறும், இதுவரை இல்லாத செல்வாக்கு மக்கள் ஆதரவு ஜாதகருக்கு திடீரென தேடிவரும், மனதில் நினைத்த எண்ணங்கள் யாவும் நடைபெறும் லட்சியங்கள் கைகூடும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை உண்டாகும், ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து 100% விகித யோக வாழ்க்கையை பெரும் நல்ல நேரமாக இதை கருதலாம், ஜாதகர் தான் செய்யும் தொழில் வழியில் இருந்து மிகுந்த முன்னேற்றத்தை இனிவரும் காலங்களில் பெறுவார் குறிப்பாக உணவு சார்ந்த தொழில்கள் அல்லது விவாசாய உற்பத்தி பொருட்கள், நீர் தத்துவம் சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டமும் லாபமும் உண்டாகும்.

4ம் பாவகத்தை பார்வை செய்யும் சனி பகவான் ஜாதகருக்கு திடீர் சொத்து சுகத்தை வாரி வழங்குகிறார், தனது பெயரில் உள்ள சொத்து அல்லது வண்டி வாகன விருத்தி பெரும் யோகத்தை தருகிறார், இருப்பினும் இது சார்ந்த தொந்தரவுகளும் ஏற்ப்படும் வண்டி வாகனத்தில் பழுது, சொத்து அல்லது வீடு போன்றவற்றில் பழுது ஏற்ப்பட்டு சரி செய்யும் தன்மையை தருகிறார், விரையத்தின் பேரில் லாபம் உண்டாகும் , ஜாதகர் பயணங்களில் அதிக கவனமாக இருப்பது நலம் தரும், வண்டி வாகன அமைப்புகளில் பயணிக்கும் பொழுது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்துகொள்வதும், எதிரில் வரும் வாகனங்களை கருத்தில் கொண்டு இயக்குவதும் அவசியம், கவனக் குறைவுடனும் தூக்க கலக்கத்துடன் வாகங்களை இயக்குவது பெரிய ஆபத்தில் சிக்க வைக்கும், இது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் பாதிப்பை தரக்கூடும், வண்டி வாகனங்களுக்கு சேதாரத்தை தர கூடும், தனது பெயரில் உள்ள சொத்துகளை கவனமாக பாதுக்கக்க வேண்டி வரும்.

5ம் பாவகத்தை பார்வை செய்யும் சனி பகவான் தங்களுக்கு அறிவு சார்ந்த விஷயங்களில் சிறு சிறு தொந்தரவுகளை தந்த போதிலும், நிறைவான வருமான வாய்ப்பை தங்கு தடையின்றி செய்வார், கல்வி காலங்களில் உள்ள அன்பர்கள் மிக கவனமுடன் தேர்வுகளை எதிர்கொள்வது நலம் தரும், சிந்தனை ஆற்றல் சில நேரங்களில் பாதிப்பை பெறுவதற்கு உண்டான சூழ்நிலைகள் உருவாகும் என்பதால் நன்கு ஆலோசனை செய்து எந்த ஒரு முடிவையும் எடுப்பது நலம் தரும், குடும்ப வாழ்க்கையில் உள்ள நபர்கள் தேவையற்ற விஷயங்களை விவாதிப்பதை தவிர்ப்பது நலம் தரும், சிறு சிறு பிரச்சனைகளை உடனடியாக பேசி தீர்வு காண்பது  நலம் தரும் அலட்சியமாக இருந்தால், பின்னாளில் பெரிய பாதிப்பை தரும், வருமானம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளை சரியாக கையாள்வது சால சிறந்தது, சரியான திட்டமிடுதல் தங்களுக்கு மிகுந்த நன்மையை வாரி வழங்கும், குடும்ப உறவுகளுடன் ஒற்றுமை காண்பது அவசியம், விட்டுகொடுத்து செல்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும்.

8ம் பாவகத்தை வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு எதிர்பாராத சோதனைகளை தரக்கூடும், முன் பின் யோசிக்காமல் எடுக்கும் அத்தனை முடிவுகளும் தங்களுக்கு எதிராக திரும்பும், மேலும் சிந்தித்து செயல்படும் தன்மையை வெகுவாக குறைக்கும், தங்களுது உழைப்பிற்கு உண்டான ஊதியம் கிடைப்பது சற்றே கடினம், தங்களது குல தெய்வத்தை முறையாக வழிபடுவது சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும், எடுத்த காரியங்கள் செவ்வனே நடைபெற இறை அருளின் கருணையை நாடுவது நலம், கோவில் வழிபாடுகளில் அதிக கவனம் செலுத்துவதும், சிறந்த ஆன்மீக குருவை நாடி சரியான வழிகாட்டுதல்களை பெறுவதும் தங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை பெற்று தரும், சிந்திக்கும் திறனை கடுமையாக பாதிப்பதால் தாங்கள் அதிகாலையில் எழுந்து சூர்ய நமஸ்காரம் தொடர்ந்து அனுதினமும் செய்துவருவது சகல நன்மைகளையும் தரும், மனதை ஒரு நிலை படுத்தி சுய கட்டுபாடுடன் நடந்து கொள்வது தங்களின் கடமை.

மகர இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட 11,4,5,8ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 11,4,5,8ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் . 

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

புதன், 14 ஜனவரி, 2015

ராகு கேது 5ம் பாவகத்தில் அமர்ந்து தரும் புத்திரபாக்கிய யோகம் ( ஆண் வாரிசு ) !


பாரம்பரிய முறையில் ஜாதக பலன் காணும் அன்பர்கள் 5ம் பாவகத்தில் சாய கிரகங்களான ராகு கேது அமர்ந்தாலே 5ம் பாவகம் கடுமையாக பாதிக்க படும் என்று சொல்வது உண்டு, இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஜாதக கணிதமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, சுய ஜாதக ரீதியாக ஒருவரின் ஜாதகத்தில் 5ம் பாவகத்தில் அமரும் சாய கிரகங்களான ராகு கேது 5ம் பாவகத்தை 100% விகித பாதிப்பிற்க்கு ஆளாக்கி, ஜாதகரை 5ம் பாவக ரீதியான தீய பலாபலன்களை வழங்குவது எவ்வித சூழ்நிலைகளில், என்பதை இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளை  லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு சாய கிரகங்களான ராகு கேது 5ம் பாவகத்தில் அமர்ந்தால் ஜாதகருக்கு பாதிப்பை தரும் நிலை என்ன ? பாதிப்பை தாராமல் 5ம் பாவக வழியில் இருந்து யோகத்தை தரும் நிலை என்ன? என்பதை சற்றே சிந்தனைக்கு எடுத்துகொள்வோம், கால புருஷ தத்துவத்திற்கு முதல் ராசியான மேஷம் ஒரு ஜாதகருக்கு 5ம் பாவகமாக அமைந்து அதில் அமரும் ராகு கேது ஜாதகருக்கு எவ்வித பலன்களை வழங்கும் என்பதை கிழ்கண்ட முறையில் வரிசை அமைப்பில் காணலாம் அன்பர்களே !

மேஷம் 5ம் பாவகமாக அமைந்து சாயா கிரகமான ராகு கேது அமர்ந்தால் :

இங்கு அமரும் ராகு கேது ஜாதகரின் பூர்வ புண்ணியத்தையும், சுய சிந்தனையையும் கடுமையாக பாதிப்பார், ஜாதகரின் அறிவு திறனும், செயல்பாடுகளும் சிறப்பாக அமைய வாய்ப்பே இல்லை எனலாம், குழந்தை பக்கியத்திலும் தடைகளை தரக்கூடும்,ராகு கேது இந்த பாவகத்தை 100% விகிதம் பாதிப்பை வாரி வழங்குவார்கள்.

ரிஷபம் 5ம் பாவகமாக அமைந்து சாயா கிரகமான ராகு கேது அமர்ந்தால் :

இங்கு அமரும் ராகு கேது ஜாதகரின் பூர்வீக வழியில் இருந்து கை நிறைவான வருமான வாய்ப்பை அள்ளி வழங்குவார், ஜாதகரின் சிந்தனையும் செயல்பாடுகளும் மிகவும் சிறப்பாக அமையும், குடும்பம் வருமானம், பேச்சு திறன் இறை அருளின் கருணையால் பரிபூரணமாக கிடைக்க பெறுவார், ராகு கேது இந்த பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்துவிடுவார்கள்.

மிதுனம்  5ம் பாவகமாக அமைந்து சாயா கிரகமான ராகு கேது அமர்ந்தால் :

இங்கு அமரும் ராகு கேது இதன் அதிபதியான புதன் சூரியனுடன் இணைந்த நிலையில் ( சூரியனும் புதனும் 14 பாகைக்குள் சேர்ந்து இருப்பின் ) அவயோக பலன்களை தருவார், ஜாதகரின் முயற்ச்சி வீரியம் அனைத்தும் வெகுவாக பாதிக்கும், இதன் அதிபதி சூரியனுடன் இணையாமல் இருப்பின் ( சூரியனும் புதனும் 14 பாகைக்குமேல் சேராமல் இருப்பின் ) ஜாதகர் சகல நிலைகளில் இருந்தும் வெற்றி வாய்ப்பை அனுபவிப்பர், முன்னேற்றம் என்பது அபரிவிதமானதாக அமையும், 5ம் பாவகம் பூர்ண வலிமையை பெற்றுவிடும்.

கடகம் 5ம் பாவகமாக அமைந்து சாயா கிரகமான ராகு கேது அமர்ந்தால் :

இங்கு அமரும் ராகு கேது வளர்பிறை சந்திரன் என்ற நிலையில் இருப்பின் ஜாதகரின் பூர்வ புண்ணியம் மிக வலிமை பெற்று விடும், ஜாதகரின் அதிர்ஷ்ட வாய்ப்புகளும், குழந்தை பாக்கியமும் தங்கு தடையின்றி அமையும், ஒரு வேலை தெய் பிறை சந்திரன் என்ற நிலையில் இருப்பின் ஜாதகரின் பூர்வ புண்ணியம் கடுமையாக பாதிக்கும், புத்திர சந்தானம் கிடைப்பதும் அரிதாக நிகழும், ஜாதகரின் அதிர்ஷ்டம் வெகுவாக பாதிக்கும்.

சிம்மம் 5ம் பாவகமாக அமைந்து சாயா கிரகமான ராகு கேது அமர்ந்தால் :

இங்கு அமரும் ராகு கேது ஜாதகரை 100% விகித பாதிப்பிற்கு ஆளாக்கும் தன்மைய தரும், பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் செய்யும்  நிலையை தரும், அறிவு திறனும் செயல்திறனும் கடுமையாக பாதிக்கும், சாயா கிரகங்கள் இங்கு அமர்வது அவ்வளவு நல்லதல்ல.

மிதுனம் 5ம் பாவகமாக அமைந்து சாயா கிரகமான ராகு கேது அமர்ந்தால் :

இங்கு அமரும் ராகு கேது இதன் அதிபதியான புதன் சூரியனுடன் இணைந்த நிலையில் ( சூரியனும் புதனும் 14 பாகைக்குள் சேர்ந்து இருப்பின் ) அவயோக பலன்களை தருவார், ஜாதகரின் உடல் நிலை, செல்வாக்கு அனைத்தும் வெகுவாக பாதிக்கும், இதன் அதிபதி சூரியனுடன் இணையாமல் இருப்பின் ( சூரியனும் புதனும் 14 பாகைக்குமேல் சேராமல் இருப்பின் ) ஜாதகர் சகல நிலைகளில் இருந்தும் வெற்றி வாய்ப்பை அனுபவிப்பர், முன்னேற்றம் என்பது அபரிவிதமானதாக அமையும், 5ம் பாவகம் பூர்ண வலிமையை பெற்றுவிடும்.

துலாம் 5ம் பாவகமாக அமைந்து சாயா கிரகமான ராகு கேது அமர்ந்தால் :

இங்கு அமரும் ராகு கேது ஜாதகரை மிகப்பெரிய அந்தஸ்துள்ள மனிதராக மாற்றிவிடும், அபரிவிதமான சொத்து சுக சேர்க்கையும், உலகில் தனக்கு நிகரான ஆளே இல்லை என்ற அமைப்பை தந்துவிடும், அறிவும் செயல்பாடுகளும் மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும், குழந்தை   பாக்கியத்தில் குறைவை தாராது, நிறைவான குழந்தை செல்வத்தை தங்குதடையின்றி வாரி வழங்கும்.

விருச்சிகம் 5ம் பாவகமாக அமைந்து சாயா கிரகமான ராகு கேது அமர்ந்தால் :

இங்கு அமரும் ராகு கேது ஜாதகரை கடுமையாக பாதிக்க செயார்கள், ஜாதகரின் மன நிலை வெகுவாக கெடும், எனவே சிந்தனை திறனும் கடுமையாக பாதிக்கும், பிற்போக்கு தனமான செய்கையில் ஜாதகர் ஈடுபட ஆரம்பித்துவிடுவார், தனது மனம் போன போக்கில் சென்று  அனைத்தையும் அழித்துவிடும் தன்மையை தரும், குழந்தை பாக்கியத்திலும் குறையை தரக்கூடும்.

தனுசு 5ம் பாவகமாக அமைந்து சாயா கிரகமான ராகு கேது அமர்ந்தால் :

இங்கு அமரும் ராகு கேது 5ம் பாவகத்தை அளவுக்கு அதிகமாக வலிமையை பெற செய்து யோக வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தந்துவிடும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் யோகத்தை தரும் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உலகத்தை திரும்பி பார்க்க வைக்கும் வல்லமை உண்டாகும், தெய்வீக குழந்தை பாக்கியம் உண்டாகும், ராகு கேது 5ம் பாவகத்திர்க்கு உண்டான 100% விகித வலிமையை பெறுவது தனசு ராசியில் என்றால் அது மிகையில்லை .

மகரம் 5ம் பாவகமாக அமைந்து சாயா கிரகமான ராகு கேது அமர்ந்தால் :

இங்கு அமரும் ராகு கேது ஜாதகரின் கல்வி மற்றும் தொழில் கௌரவம் அந்தஸ்து ஆகியைவை வெகுவாக பாதிக்கும், தனது பெயரில் இருக்கும் சொத்து வண்டி வாகனம் ஆகியைவை திடீர் இழப்பை தரும் தன்மையை தரக்கூடும், முன்னேற்றம் என்பது கடுமையாக பாதிக்க படும், எதிர்பார்க்கும் உதவிகள் ஜாதகருக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை, ஜாதகரே தனது வாழ்க்கையில் போராடி வெற்றி பெரும் சூழ்நிலையை தரும், உதவி செய்ய யாரும் வர வாய்ப்பில்லை என்பதால், ஜாதகர் தனது சுய முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவது நல்லது.

கும்பம் 5ம் பாவகமாக அமைந்து சாயா கிரகமான ராகு கேது அமர்ந்தால் :

இங்கு அமரும் ராகு கேது ஜாதகரின் ஜீவனத்தையும், பூர்வீக  சொத்துகளையும் பதம் பார்க்கும், சற்று எச்சரிக்கையாக இல்லை எனில், ஜாதகரின் பொருளாதார வாழ்க்கை வெகு விரைவில் விழ்ச்சியை சந்திக்கும், அதற்க்கு காரணமாக ஜாதகரே இருப்பார் என்பது கவனிக்க தக்கது, தான் கற்ற கல்வியும் அறிவு திறனும் ஜாதகருக்கு பயன்படாது, குழந்தை பாக்கிய அமைப்பில்  சிறு சிறு தடைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலையை தரக்கூடும்.

மீனம் 5ம் பாவகமாக அமைந்து சாயா கிரகமான ராகு கேது அமர்ந்தால் :

இங்கு அமரும் ராகு கேது ஜாதகரை திடீர் அதிர்ஷ்டத்திற்கு உரிமை உள்ளவராக மாற்றிவிடும், எதிர்பாராத சொத்து சுகங்கள் ஜாதகருக்கு திடீரென வந்து சேரும், தனது கல்வி மற்றும் அறிவு திறனால் ஜாதகர் புதையலுக்கு நிகரான சொத்து சுகத்தை பெறுவதற்கு உண்டான வாய்ப்பை வாரி வழங்கும், ஆன்மீகத்தில் வெற்றி, சிறந்த புத்திரபாக்கியம், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் அமர்ந்த இடத்தில் இருந்து சகலமும் பெரும் யோகம் என்ற வகையில் ராஜ யோக பலன்களை வாரி வழங்கும்.

மேற்கண்ட ராசிகளில் நல்ல நிலையில் யோகத்தை தரும் அமைப்பை பெரும் அன்பர்களுக்கு புத்திர பாக்கியத்தில் எவ்வித தடையையும் தராது, பாதிப்பான ராசிகளில் ராகு கேது அமரும் பொழுது புத்திர பாக்கியத்தை தடை செய்யும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் 5ம் பாவகத்திர்க்கு 100% விகித வலிமையை தரும் ராகு கேது கிரகங்கள் சம்பந்த பட்ட ஜாதகருக்கு நிச்சயம் ஆண்  வாரிசை தரும், 5ம் பாவகத்தை பாதிக்கும் ராகு கேது ஜாதகருக்கு ஆண் வாரிசு அமைப்பில் தடைகளை தருகிறது, ஆனால் பெண் குழந்தைகளுக்கு உண்டான வாய்ப்பை தருவதில் எவ்வித தடைகளையும் தருவதில்லை, ஆக ராகு கேது கிரகங்களால் 5ம் பாவகம் பாதிக்க படும் பொழுது ஜாதகர் பெண்குழந்தை பேரு  கிடைப்பதில் தடையில்லை, ஆண் வாரிசு அமைவதில் தடையை தருகிறது, எனவே 5ல் ராகு கேது அமர்ந்தால் குழந்தையே கிடைக்காது என்று முடிவு  செய்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஜாதக கணிதமாகவே இருக்கும் என்பது ஜோதிடதீபத்தின் ஆணித்தரமான கருத்து.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - தனுசு




சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   

ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது . 

தனுசு லக்கினம் :

தனுசு லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 12ல் அமர்ந்த சனிபகவான் சற்றே மன ரீதியான போராட்டத்தை அதிகமாக வழங்குகிறார், ஜாதகரின் மன ரீதியான போராட்டங்கள் அதிகரிக்கும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை, ஸ்திர நீர் ராசியான விருச்சிக ராசியில் அமரும் சனி பகவான் தனுசு லக்கினத்தாருக்கு முதலீடுகள் செய்யவதில் தடைகளையும், வாழ்க்கை துணை வழியில் இருந்து எதிர்பாராமல் வரும் சிறு சிறு வீண் விரையங்களையும் தரக்கூடும், மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்களை வெகுவாக குறைத்து கொள்வது சால சிறந்தது, மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகள் எதிர்பாராத இழப்புகளை தர கூடும், சிந்தனை சிதறல்களால் சிறு சிறு விபத்துகளையும் சந்திக்கும் தன்மையை தரக்கூடும், எனவே பயணங்களில் அதிக கவனம் தேவை, பல முறை யோசனை செய்து சரியான முடிவுகளை எடுப்பது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் மிகுந்த நன்மைகளையும் சிறப்பான முன்னேற்றங்களையும் தரும்.

6ம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிக்கும் சனி பகவான், ஜாதகரின் அறிவுத்திறனின் வீச்சை கடுமையாக கட்டுபடுத்துவார், தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் தேடும் சூல்நிலைகளைகூட தரக்கூடும், உதவி செய்ய யாரும் அற்ற நிலையை உருவாக்கும், தங்களின் திட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு உண்டான வாய்ப்பை வெகுவாக குறைக்கும், பல போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்படும், கல்வியில் திடீர் திருப்பங்களும், தடைகளையும் தர கூடும், இதுவரை நன்றாக கல்வியில் தேறியவர்கள் கூட இனி வரும் காலங்களில் சில தடுமாற்றங்களை சந்திக்கும் தன்மை ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, முடிந்தவரை தங்களின் குல தெய்வ வழிபாட்டினை முறையாக மேற்கொள்வது சால சிறந்தது.

7ம் பார்வையாக எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு அதிரடியான வெற்றிகளை குவிக்க வைப்பார், சிறு சிறு அதிர்ஷ்டங்கள் தொடந்து வந்தவண்ணமே இருக்கும், எந்த ஒரு முயர்ச்சியும் எதிர்பாராத வெற்றியை தரக்கூடும், போட்டி பந்தையங்களில் சிறந்த வெற்றி வாய்ப்பு, கேட்க்கும் இடத்தில் இருந்து வரும் பொருளாதார உதவிகள், கை நிறைவான வருமானம், தனது பேச்சு திறனால் வாழ்க்கையில் எதிர்பாராது வரும் முன்னேற்றங்கள், அரசியலில் சிறந்த எதிர்காலம், தலைமை அல்லது தலைவர் பதவிகள் தேடிவரும் வாய்ப்பு, பயணங்களில் இருந்து வரும் லாபங்கள் மற்றும் அதிர்ஷ்டங்கள், புதிய வீடு, வண்டி, வாகன யோகம், அதன் வழிகளில் இருந்து வரும் வருமானம், என மிகசிறந்த நிலையான யோக பலன்களை தனுசு லக்கினத்திற்கு வாரி வழங்குகிறார்.

10ம் பார்வையாக பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தை வசீகரிக்கும் சனிபகவான், ஜாதகரை மற்றவர்கள் பிரச்சனைகளில் மூக்கை நுழைக்க வைத்து வீண் அவபெயர்களை உருவாக்கும் தன்மையை தரக்கூடும்,  குறிப்பாக தனுசு லக்கினத்தார் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பது சகல நலன்களையும் தரும், பஞ்சாயத்து தீர்ப்பு சொல்ல போனால் இவர்களின் எதிர்காலமும், முன்னேற்றமும் வெகுவாக பாதிக்க படும், தன்னுள் உள்ள ஆன்மீக சக்தியின் வீச்சு வெகுவாக பாதிக்க படும், சமுதாயத்தில் தேவையில்ல தொந்தரவுகளுக்கு எல்லாம் ஆளாகி இருப்பதும் போய்விடும் சந்தர்ப்பங்கள் உருவாக வாய்ப்பு உண்டு, அவசர கதியில் செய்யும் காரியங்கள் பின்னாளில் மிகப்பெரிய முன்னேற்ற தடைகளை உருவாக்கும், தன்னை விட வயதில் அதிகம் உள்ளவர்களின் பேச்சை கேட்டு நடந்துகொள்வது நல்லது, குறிப்பாக பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டங்கள் இது எனலாம், எந்த ஒரு காரணத்தை கொண்டும் பெரியவர்களின் பேச்சை மீறி செயல்படுவது, பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும்.

தனுசு  இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட 12,5,6,9ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 12,5,6,9ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

புதன், 7 ஜனவரி, 2015

சாய கிரகமான ராகு கேது சுய ஜாதகத்தில் வழங்கும் தனிப்பட்ட பலாபலன்கள்!




ராகு கேதுவாக கிரக அந்தஸ்து பெற்ற சுவர்ணபானு பிறப்பில் அரக்க  குலத்தை சார்ந்தவராக இருந்த போதிலும், தனது அறிவு திறனாலும், மாறுபட்ட சிந்தனையாலும் தேவர்களுக்கு மட்டும் கிடைக்க இருந்த அமுதத்தை அருந்தி, தெய்வ நிந்தனைக்கு ஆளாகி, விடா முயற்ச்சியாக இறை அருளின் கருணையை பெற்று, எவருடனும் ஒப்பிட முடியாத வல்லமையை பெற்று "ராகு கேது" கிரகமாக அந்தஸ்த்து பெரும் அமைப்பை பெற்றனர், மேலும் ஜாதக அமைப்பில் சாயகிரகங்கள் என்று வழங்கப்பட்டும், மற்ற கிரகங்களுக்கு இல்லாத தனிப்பட்ட செயல்பாடுகளையும், வலிமையையும் பெரும் தன்மையை பெறுகின்றனர் இந்த நிழல் கிரகங்கள் என்றால் அது மிகையில்லை.

சுய ஜாதகத்தில் வலிமை அல்லது வலிமை அற்ற தன்மையில் இருந்தாலும் , சம்பந்தபட்ட ஜாதகருக்கு வாழ்க்கையில் சிறப்பாக வாழ்வதற்கு உண்டான வழிகாட்டுதலை சிறப்பாக எடுத்து சொல்லும் ஆற்றல் ராகுகேதுவுக்கு நிச்சயம் உண்டு, நல்ல நிலையில் உள்ள ஜாதகர் எவ்வளவு விரைவில் யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தருகிறார்களே, அதே அமைப்பை பாதிக்க பட்ட ஜாதகத்துக்கும் தங்கு தடையின்றி ராகு கேது வாரி வழங்கும், இருப்பினும் ஜாதகர் குறிப்பிட்ட பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு உண்டான சரியான வாய்ப்பை நிச்சயம் தருகின்றனர்.

ராகு கேது கிரகங்களால் பாதிக்க படும் அன்பர்கள்! நிச்சயம் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு உண்டான வழிமுறையை இறை அருளின் கருணையினால் நிச்சயம் பெறுவார்கள், சில அன்பர்களின் விடா முயர்ச்சியும், மாறுப்பட்ட அறிவு திறனும் சிறப்பாக செயல்பட இந்த அமைப்பே காரணம், எவ்வித துன்பத்தையும் எதிர்கொள்ளும் வல்லமையை சாயகிரகங்கள் வாரி வழங்கிவிடுவார்கள், உடல் ரீதியாக வரும் இன்னல்களை ராகுவும், மன ரீதியாக வரும் இன்னல்களை கேதுவும் சிறப்பாக எதிர்கொண்டு ஜாதகரை வாழ்க்கையில் சிறப்பான யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை 100% விகிதம் வழங்கிவிடுவது கவனிக்க தக்க விஷயமாக ஜோதிடதீபம் கருதுகிறது.

உடல் ரீதியாக வரும் பொழுது ராகு பகவான் ஜாதகரை மிகுந்த அளவில் உடல் பலத்தையும், வலிதாங்கும் உடல் அமைப்பையும், எந்த ஒரு சூழ்நிலையையும், சீதோஷ்ண நிலையையும் தாங்கும் வலிமையை தருகிறார், இறுதி வரை போராடும் உடல் வலிமையையும், எளிதில் வெற்றிகொள்ளும் சூட்சம விஷயங்களையும், உடனுக்கு உடன் பரிசோதனை செய்துகொள்ளும் வாய்ப்பையும், சந்தர்ப்பத்தையும் அமைத்து கொடுப்பது ராகு பகவானின் தன்மையே, மேலும் ஜாதகர் ஆய்வு நோக்கத்திலோ, புதிய கண்டுபிடிப்பு  நோக்கத்திலோ செய்யும் விஷயங்கள் 100% விகித வெற்றி வாய்ப்பை தருவதற்கு உண்டான சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்துவதும், ராகு பகவானே என்றால், அது மிகையில்லை, ஒரு ஜாதகர் போராடி வாழ்க்கையில் வெற்றி பெறுவது ராகுவின் கருணையினாலே.

மன ரீதியாக வரும் பொழுது கேது பகவான் ஜாதகருக்கு புலனுக்கு எட்டாத அறிவு சார்ந்த விஷயங்களை மிக எளிதாக உணரும் வண்ணம் வழிவகை செய்கிறார், சூட்சம அறிவு திறன் பிரபஞ்ச ரகசியம், தன்னிலை உணரும் ஆற்றல், தவ வலிமையின் மூலம் பல அறிய சாதனைகளை செய்யும் தன்மை, பின் வருவதை முன் உணரும் ஆற்றல், எடுத்த காரியத்தை சரியான திட்டமிடுதலுடன் சிறப்பாக நடத்தும் தன்மையை தருவது கேது பகவானே, பல மனிதர்களின் திட்டங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வாராமல், வெறும் திட்டத்துடனும் கற்பனையாகவும் நின்று விடுவதற்கு காரணகர்த்த கேது பகவானே என்றால் அது மிகையில்லை, அறிவு திறனையும் அது சார்ந்த மன ஆற்றலையும் பன்மடங்கு வலிமை சேர்க்கும் தன்மை பெற்றவர் கேது பகவான் என்றால் அது மிகையில்லை, ஜாதகரை மிக எளிமையாக வாழ்க்கையில் வெற்றி பெற செய்யும் தனித்துவமான ஆற்றல் கேது பகவானுக்கே நிச்சயம் உண்டு.

பொதுவாக ராகுகேது ஜாதகம், சர்ப்பதோஷம், நாக தோஷம், காலசர்ப்ப தோஷம் என்ற வார்த்தை விளையாடல்களை நம்பி, தங்களின் சுய ஜாதகத்தில் ராகு கேதுவின் வலிமையை உணராமல் வாழ்க்கையின் சிறப்பு முன்னேற்றங்களை தவறவிடாதீர்கள் அன்பர்களே! தாங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒருவகையில் நன்மையை தர சாயாகிரகங்கள் தயார் நிலையிலேயே உள்ளனர் என்பதை மறவாதீர்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 6 ஜனவரி, 2015

ராகு கேது வலிமை அற்ற ஜாதக நிலை ( உதாரண ஜாதகம் )




சாய கிரகமான ராகு கேது சுய ஜாதகத்தில் வலிமை அற்ற நிலையில் அமரும் பொழுது ஜாதகர் எவ்வித அவயோக பலன்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தருகிறார் என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!


 இந்த கன்னி இலக்கின ஜாதகருக்கு மேலோட்டமாக ஜாதகத்தை பார்வை செய்யும் ஜோதிடர்கள் அனைவரும் ஜாதகருக்கு லக்கினத்தில் கேது, 7ம் வீட்டில் ராகு என்று கணித்துவிடுவார்கள், இந்த ஜாதகத்தை பார்க்கும் அனைவரும், லக்கினத்தில் கேது 7ல் ராகு என்றும், இது சர்ப்ப தோஷ ஜாதகம் என்று உடனடியாக சொல்வது இயற்கையே, ஜாதகத்தை துல்லியமாக ஆய்வு செய்யும் சிறந்த கணித ஜோதிடர்களுக்கு மட்டுமே தெரியும், ராகு கேது முறையே 7,1ல் இல்லை என்று, ஏனெனில் ஜாதகரின் லக்கினம் ஆரம்பிக்கும் பாகை என்பது கன்னி ராசியில் 173.12.16 பாகையில், களத்திர பாவகம் ஆரம்பிப்பது மீனத்தில் 353.12.16 பாகையில் ஆதாவது லக்கினம் கன்னி ராசியில் 23.12.16 பாகையிலும், களத்திர பாவகம் 23.12.16 பாகையிலும் ஆரம்பிக்கிறது ராகு இருப்பது மீனத்தில் 338.20.05 ( 08.20.05) பாகையிலும், கேது கன்னியில் 158.20.05 ( 08.20.05) பாகையிலும் இருப்பதால் ஜாதகருக்கு கன்னி ராசியில் உள்ள 12ம் பாவகத்திலும் ( கேது ) , மீனத்தில் உள்ள 6ம் பாவகத்திலும் ( ராகு ) ராகு கேது அமர்ந்திருப்பது புலனாகும்.

எனவே இவரது ஜாதகத்தில் முதலில் ராகு கேது லக்கினம் மற்றும் களத்திர  ஸ்தானத்தில் இல்லை என்பது உறுதியானது, இனி தாங்கள் அமர்ந்த இடத்திற்கு சாய கிரகமான ராகு கேது எவ்வித பலன்களை வழங்குகின்றனர் என்பதை கருத்தில் கொள்வோம் அன்பர்களே!

6ல் அமர்ந்த ராகு ஜாதகனுக்கு மனோரீதியான போராட்டங்களையும், தனக்கு எதிரான மனநிலையை கொண்டுள்ளவராகவும், தேவையில்ல விஷயங்களில் தானே போய் சிக்கிக்கொள்ளும் தன்மையை தருகிறார், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகப்பெரிய சிக்கல்களை வரவைத்துகொண்டு, துன்பப்படும் அமைப்பை தருகிறார், நல்ல நிறைவான நிம்மதியான தூக்கம் இன்றி உடல் நல சீர்கேட்டை பெரும் அமைப்பை தருகிறது, ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் முன்னுக்கு புறம்பான தன்மையில் இருக்கும் என்பதும், எதிர்பாராத தோல்விகளையும், கடன் சுமைகளையும் தானே தனது தலையில் ஏற்றி வைத்துகொள்வார் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

12ல் அமர்ந்த கேது ஜாதகனுக்கு பூலோக வாழ்க்கையில் ஒரு மனிதன் அடையும் துன்பத்தின் அனைத்து அத்தியாயத்தையும் பக்கம் பக்கமாக காட்டும் என்பது உறுதி, புலன் அடக்கம் இல்லாத தன்மையினால், ஜாதகர் நெருப்பில் இட்ட புழு போல தவிக்கும் தன்மையை தரும், தீய பழக்கவழக்கத்திற்கு ஜாதகர் அடிமையாகும் பட்சத்தில், ஜாதகரால் நிச்சயம் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது என்பது இயலாத காரியம், மேலும் ஜாதகருக்கு வயிறு சார்ந்த இன்னல்கள் அதிக தொந்தரவை தரும், மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகள் அனைத்தும் வீண் விரையத்தை தரும், வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிக இன்னல்களையும், மீள கடன் சுமையையும் தரும், ஜாதகர் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது அதிக கவனமுடன் இருப்பது நலம்.

மேற்கண்ட பலன்கள் யாவும் ஜாதகருக்கு சுய ஜாதக ரீதியாக நடைபெறும் பலன்கள் என்பது உண்மை என்ற போதிலும், இந்த பலாபலன்கள் ஜாதகருக்கு எப்பொழுது நடைமுறைக்கு வரும் என்று கணிதம் செய்வதே ஜோதிடரின் தனி திறமை, மேற்கண்ட 6,12ம் பாவகங்களின் பலன்கள் எப்பொழுது நடைபெறும், எந்த திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமத்தில் நடைமுறைக்கு வரும்? அல்லது  6,12ம் பாவகங்களின் பலன்கள்நடைபெறும் திசை ,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமத்தில் நடைமுறைக்கு வாராமலே போய்விடுமா ? என்ற விஷயங்களை தெளிவாக ஜாதகனுக்கு எடுத்து கூறி, அதற்க்கு உண்டான தீர்வுகளை பரிந்துரை செய்வது சிறந்த ஜோதிடனின் கணித திறமை என்றால் அது மிகையில்லை.
  வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 5 ஜனவரி, 2015

ராகு கேது வலிமை பெற்ற ஜாதக நிலை ( உதாரண ஜாதகம் )



ராகு கேது வலிமை பெரும் பொழுது ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களை பெறுகிறார் என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !



லக்கினம் : கும்பம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஸ்வினி 3ம் பாதம் 

ஜாதகருக்கு லக்கினத்தில் அமர்ந்த ராகு, இலக்கின அமைப்பில் இருந்து சிறந்த சிந்தனை திறன் அறிவுபூர்வமான செயல்பாடுகள், தனம்பிக்கையான மன நிலை, முற்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் அணுகும் மன இயல்பு , எடுத்த  காரியத்தில் வெற்றிபெறும் யோகம், நிலைதன்மையான செயல்கள், நம்பிக்கைக்குரிய வெளிப்படையான நடைமுறைகள், மற்றவர்களாலும் உறவுகளாலும் மெச்சும்படியான செய்கைகள், சுய கட்டுபாடு, ஒழுக்கம், மெய் பொருள் காணும் அறிவு திறன், எந்த ஒரு விஷயத்தையும் நேர்மறையாக அணுகும் ஆளுமை திறன், உடல் மற்றும் மன வலிமை, நல்ல பரந்த மனபக்குவம், எங்கு சென்றாலும் வரவேற்ப்பை பெரும் யோகம், எவரையும் எதிர்பாராமல்  சுயமாக வாழ்க்கையில் முன்னுக்கு வரும் தன்மை, விட்டுகொடுக்கும் மனப்பான்மை, பரோபகரமான செயல்பாடுகள், ஒளிமறைவின்றி செயல்படும் போக்கு, நீண்ட ஆயுள் , நிறைவான செல்வ வளம்  என ஜாதகரை, இலக்கின வழியில் இருந்து 100% விகித யோக பலன்களை ராகு பகவான் தருகிறார்.

லக்கினத்திற்கு கேந்திர பாகமான 7ம் பாவகத்தில் அமர்ந்த கேது பகவான், ஜாதகருக்கு சிறந்த வாழ்க்கை துணையை பெற்று தருகிறார், பொதுமக்கள் மற்றும் அரசியலில் மிகப்பெரிய செல்வாக்கையும், புகழ் மிக்க பொறுப்புகளையும் வாரி வழங்குகிறார், பல திருத்தலங்களுக்கும், தனது குல தேவதைக்கு உண்டான கடமைகளையும் செவ்வன செய்யும் யோகத்தையும், உலக புகழ் பெரும் அளவிற்க்கான ஏற்றுமதி இறக்குமதி தொழில் வெற்றி வாய்ப்பை வாரி வழங்குகிறார், திருமணதிற்கு பிறகான முன்னேற்றத்தை அபரிவிதமாக வழங்குவது கவனிக்க தக்கது, ஸ்திர நெருப்பு தத்துவத்தில் செயல்படும் கேது ஜாதகருக்கு சுய கட்டுப்பாட்டையும், பொதுமக்கள் வழியில் இருந்து நிரந்தரமான ஆதரவையும், அரசியலில் அபரிவிதமான பொறுப்புகளை ஏற்று நடத்தும் யோகத்தையும் வழங்குவது ஜாதக அமைப்பிலேயே மிகவும் சிறப்பான யோக பலன்களாக கருதலாம், வெளிவட்டார பழக்க வழக்கத்தையும், சிறந்த வாழ்க்கை துணையையும், தன்னலம் கருத நண்பர்களையும், அபரிவிதமான வியாபர விருத்தியையும், புகழ் மிக்க மக்கள் செல்வாக்கையும் ஜாதகருக்கு வாரி வழங்குவதே கேது பகவான் தான் என்றால் அது மிகையில்லை.

இந்த ஜாதகத்தை பல ஜோதிடர்கள் சர்ப்ப தோஷம், நாக தோஷம் என்று குழப்பி உள்ளனர், உண்மையில் லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு கேது ஜாதகருக்கு தடையில்லா யோக வாழ்க்கையையே 100% சதவிகிதம் வாரி வழங்குகின்றனர் என்பதை எவராலும் மறுக்க இயலாது .

மேற்கண்ட ஜாதக அமைப்பை போல் உள்ள ஜாதகங்களை நிறைய ஜோதிடர்கள் சர்ப்ப தோஷம் உள்ளதாக நிர்ணயம் செய்கின்றனர், ஜாதகத்தில் ராகு கேது எவ்வித பலன்களை தருகிறது என்பதை நிர்ணயம் செய்த பிறகே ஜாதகருக்கு உண்டான பலன்களை சொல்வது சால சிறந்தது.

லக்கினத்தில் அல்லது களத்திர ஸ்தானத்தில் ராகு கேது அமர்ந்தாலே அது சர்ப்ப தோஷ ஜாதகம் என்று முடிவு செய்வது ஜோதிடத்தின் அடிப்படையே தெரியாத நபர்கள் சொல்லும் வாக்காகவே"ஜோதிடதீபம் " கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

அபார சக்தி வாய்ந்த சாய கிரகமான ராகு கேதுவின் வலிமை!



 ராகு கேது சரித்திரம் பற்றியும், சுய ஜாதகத்தில் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலையில் அமரும் பொழுது ஜாதகருக்கு தரும் பலாபலன்களை பற்றி இன்று நாம் இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

சாய கிரகமான ராகு கேது கிரகங்களின் சரித்திர கதையை நாம் சிந்தனைக்கு எடுத்துகொள்ளும் பொழுது, பாற்கடலை கடைந்து அதில் வரும் அமிர்தத்தை, தேவர்களும் அசுரர்களும் சமமாக பங்கிட்டு அருத்துவதாக ஒப்பந்தம் செய்துகொண்டனர் , இதன் அடிப்படையில் பாற்கடலை கடைந்து அமிர்தம் கிடைத்தவுடன் விஷ்ணு மோகினி அவதாரம் கொண்டு அமிர்த கலசத்தை பெற்று, தேவர்கள் அசுரர்களுக்கு பரிமாருவதாக நிர்ணயம் செய்யப்பட்டது,  அசுரர்கள் தமக்கு வழங்குவது அமிர்தமல்ல என்பதை உணராமல் மோகினியின் அழகில் மயங்கிய நின்றனர், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொண்ட மோகினி முதலில் தேவர்களுக்கு மட்டும் அமிர்தத்தை பரிமாறினாள்.

 இந்த சதியை உணர்ந்த கஷ்யப மகரிஷியின் மகனான சுவர்ணபானு, தனக்கு அமிர்தம் கிடைக்காமல் போய்விடுமோ என்று அஞ்சி தேவர்களின் வடிவம் எடுத்து, தேவர்களின் வரிசையில் அமர்ந்தார், இதை உணர்ந்த சூரியனும் சந்திரனும் மோகினியை தடுக்கும் முன் சுவர்ணபனுக்கு அமிர்தத்தை அருந்த கொடுத்து விட்டாள், சூரியனும் சந்திரனும் நடந்த உண்மையை மோகினியிடம் எடுத்து கூறினர், கடுங்கோபம் கொண்ட மோகினி அமுதம் வழங்கிய அகப்பையால் சுவர்ணபானுவின் தலையில் ஓங்கி அடிக்க, சுவர்ண பானுவின் தலை வேறாகவும் உடல் வேறாகவும் பிரிந்தது.

 அமிர்தம் அருந்தியதால் சுவர்ணபானுவின் உயிர் பிரியாமல் தலையும் உடலும் தனித்தனியாக கிடந்தது, இதை அறிந்த அசுரர்கள் மோகினியின் கையில் இருந்த அமுத கலசத்தை பிடுங்க முயற்ச்சி செய்ய, சுவர்ணபானு செய்த தவறுக்கு அசுரர்களுக்கு அமிர்தம் இல்லை என்று சொன்ன மோகினி, அமிர்தம் முழுவதையும் தேவர்களுக்கு மட்டும் வேகமாக வழங்கிவிட்டு சென்று விட்டாள், சுவர்ணபானுவால்தான் தங்களுக்கு அமிர்தம் கிடைக்கவில்லை என்று எண்ணிய அசுரர்கள் சுவர்ணபானுவை தம் அசுர குலத்தில் இருந்து ஒதுக்கி வைத்தனர்.

தனக்கு உயிர் இருந்த போதிலும் உடல் வேறாக தலை வேறாக இருப்பதை எண்ணிய சுவர்ணபானு, பிரம்மனிடம் முறையிட பிரம்மாவோ இதற்க்கு தீர்வு பரம்பொருளான மஹாவிஷ்ணு மட்டுமே வழங்கமுடியும் என்று சொல்ல, சுவர்ணபானு மஹாவிஷ்ணுவை வணங்கி பிராயசித்தம் வேண்டும் பொழுது எம்பெருமான் அருள் கூர்ந்து சுவர்ணபானுவின் தலைக்கு பாம்பு உடலையும், உடலுக்கு பாம்பு தலையையும் வழங்கி, சுவர்ணபனுவின் தலைக்கு ராகு எனவும், உடலுக்கு கேது எனவும் பெயர் வழங்கி கிரக அந்தஸ்தை வழங்குகிறார், மேலும் கிரகங்களின் அமைப்பில் இருந்து வித்தியாசத்தை பெற வானவெளியில் அப்ரதட்சனமாக சஞ்சாரம் செய்ய இறைவன் கட்டளை இடுகிறார், இதை ஏற்று ராகு கேது இருவரும் அப்ரதட்சனமாக சஞ்சாரம் செய்கின்றனர்.

தங்களின் இந்த நிலைக்கு காரணமான சூரிய சந்திரர்களை பழிவாங்க தவம் இருந்து பிரம்மாவிடம் வரம் கோருகின்றனர், சாய கிரகங்கள் பெற்ற வரத்தின் படி ஒரு ஆண்டில் நான்கு முறை சூரிய சந்திரர்களின் பார்வை பூமியில் விழாது  தடுக்கும் வல்லமையை பெறுகின்றனர், இந்த நிகழ்வை சூரிய கிரகணம் என்றும், சந்திர கிரகணம் என்றும் வழங்கபடுகிறது, இந்த கிரகண நேரத்தில் அதிசக்தி வாய்ந்ததாக கருதப்படும் சூரியனையும் சந்திரனையும் மறைக்கும் தன்மையை சாய கிரகங்களான ராகு கேது பெறுகின்றனர்.

ஒருவரது சுய ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் வலிமை பெற்று அமரும் பொழுது அந்த ஜாதகர் தனது வாழ்க்கையில் பெரும் வெற்றிகளுக்கும், அதிர்ஷ்ட வாழ்க்கைக்கும் தங்கு தடை என்பதே கிடையாது எனலாம், இந்த சிறப்புகளை பெற்ற சூரியனையும் சந்திரனையும் மறைக்கும் வல்லமை பெற்ற சாயகிரகமான ராகு கேதுவின் வல்லமையை பற்றி சொல்லவும் வேண்டுமோ? ஆக கிரகங்களின் அதிக வலிமை பெற்றதாக ராகு கேதுவை வர்ணனை செய்தது துளியும் தவறில்லை என்றே ஜோதிடதீபம் 100% விகிதம் கருதுகிறது.

எமது குருவின் கருத்துப்படி, சாய கிரகங்கள் ஆன ராகு கேது ஒருவரது சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் சரி குறிப்பிட்ட பாவகத்தை தனது  ஆளுமைக்கு கிழ் 100% விகிதம் கொண்டு வந்துவிடுவார்கள் என்ற உண்மை மிக சரியாக பொருந்துகிறது, தான் அமர்ந்த பாவகத்தின் தன்மையையும், தன்னுடன் சேர்ந்த கிரகத்தின் வலிமையையும் தானே ஏற்று நடத்துவார்கள் என்பது எவராலும் மறுக்க இயலாத உண்மை, மேலும் தான் அமர்ந்த பாவகத்திர்க்கு நன்மையையோ அல்லது தீமையையோ 100% விகிதம் எவ்வித குறையும் இன்றி செய்வார்கள் என்பதும் முற்றிலும் உண்மை.

சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை பெற்ற ஜாதகர் நிச்சயம் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகிதம் நன்மை மற்றும் யோகத்தை அனுபவிப்பர், சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை அற்ற ஜாதகர் நிச்சயம் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகிதம் தீமை மற்றும் அவயோகத்தை அனுபவிப்பர், இதை மாற்ற எவராலும் இயலாது, சாய கிரகங்களால் வரும் இன்னல்களை கலைய  எந்த ஒரு பரிகாரமும் பலன் தாரது, ஏனெனில் இதுவே ராகு கேதுவின் தனித்தன்மை, 

மேற்கண்ட ராகு கேதுவின் சரித்திர கதையில் இருந்தே இதை நாம் உணராலாம், முப்பத்து முக்கோடி தேவர்களையும் அமிர்தம் வழங்கிய எம்பெருமான் மகாவிஷ்ணுவையும் ஏமாற்றி அசுரனான சுவர்ணபானு தனது தனி திறமையால் அமிர்தத்தை அருந்த முடிகிறது என்றால், நவக்கிரக அந்தஸ்து பெற்ற சாய கிரகமான ராகு கேது ஏன் ? தனிப்பட்ட வல்லமையுடன் திகழ முடியாது, ஆக நவகிரகங்களிலேயே அதி சக்தி கொண்டதாக சாய கிரகமான ராகு கேதுவை வர்ண்ணனை செய்வதில் எவ்வித தவறும் இல்லை என்றே ஜோதிடதீபம் கருதுகிறது.

ராகு வலிமை பெரும் ஜாதகம் :

தனிப்பட்ட தன்மைகளை தன்னகத்தே கொண்ட  ஜாதகராக கருதலாம், ஜாதகருக்கு தான் அமர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் இருந்து 100% விகித நன்மைகளை தங்குதடையின்றி செய்வார், அசுர பலம் கொண்ட அமைப்பை பெறுவார்கள், பெரிய அறிவியல் வல்லுனர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள், உடல் மனம்  இரண்டிலும் நிகரில்லா வலிமையை பெற்றவர்கள், அதிகாரம் செய்யும் யோகம் கொண்டவர்கள், தனது கட்டளைக்கு அனைவரையும் கட்டுபட்டு நடக்க வைக்கும் தன்மை பெற்றவர்கள், தான் சொல்வதை வேதவாக்காக எடுத்துக்கொண்ட மக்களை தன் கண் அசைவில் கட்டுபடுத்தும் வல்லமையாலர்களாக திகழ்வார்கள்.

பொதுவாக அதிகாரம் செய்வதில் செவ்வாய் சூரியன் சிறந்து விளங்குபவர்களாக ஜோதிடர்களால் வர்ணிக்க படுவார்கள், ஆனால் ராகுவின் முன்னால் இவர்களின் திறன் வெறும் 10% விகிதம் மட்டுமே என்பதை நினைவில் நிறுத்தினால் ராகுவின் ஆளுமை மிக எளிதாக நமக்கு புரியும், உலகின் வல்லரசான நாடுகள் அனைத்தும் ராகுவின் கருணை இன்றி செயல்பட முடியாது என்பதை கருத்தில் கொள்வது நலம், வீர்யமிக்க செயல்பாடுகள், தான் நினைக்கும் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை, தனது தேடுதலுக்கு உண்டான சரியான பதில் அல்லது பயன்கள் அனைத்தையும் குறுகிய காலத்தில் தருவது ராகு பகவானே என்றால் அது மிகையில்லை, ராகு வலிமை பெற்ற ஜாதக அமைப்பை பெற்ற அன்பர்கள் புலன் அடக்கம் பற்றிய தெளிவில் இருப்பார்கள், வாழ்க்கையை இயல்பாக வாழும் தன்மையை பெற்று இருப்பார்கள் என்பது கவனிக்க தக்கது.

கேது வலிமை பெரும் ஜாதகம் :

தனிப்பட்ட அமைப்புடன் குழுவாக செயல்படும் தன்மையை பெற்று இருப்பார்கள், ஜாதகருக்கு தான் அமர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் இருந்து 100% விகித நன்மைகளை தங்குதடையின்றி செய்வார், ஆத்மா பலம் கொண்டவர்களாக திகழ்வார்கள், ஆன்மீக வெற்றியை பெரும் யோகம் பெற்றவர்கள், புலன்களை அடக்கி ஆளும் வல்லமை ஜாதகருக்கு இயல்பாகவே அமைந்திருக்கும், குறிப்பாக செயல்திறன் மற்றும் அறிவில் தெளிவு பெற்றவர்களாகவும், பலரது கேள்விகளுக்கு சரியான பதில்தரும் ஞானம்  பெற்றவர்களாகவும், சமுதாயத்தை அன்பின் வழியிலும் அறவழியிலும் இயக்கும் தன்மை பெற்றவர்கள், தனது அறிவு திறனால் சாதிக்க இயலாத விஷயம் ஒன்றும் இல்லை என்ற நிலையை தரும்.

ஜோதிட ரீதியாக குரு,புதனுக்கு நிகரான 3 மடங்கு அறிவு திறனையும், இயக்க சக்தியையும் வாரி வழங்கும் தன்மையை பெற்றவர் கேது பகவான், சிறந்த ஆன்மீகவாதிகள், இறை நிலை சிந்தனையாளர்கள், வருமுன் உணரும் சக்தி படைத்தவர்கள், கல்வி கேள்விகளில் புகழ் பெரும் விற்பனர்கள், ஜோதிட கணித  மேதைகள், பல சாம்ராஜ்யங்களை கட்டியாளும் தனி திறமைகளை கொண்டவர்கள், சாஷ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் வகுக்கும் வல்லமை பெற்றவர்கள், பிரபஞ்ச ரகசியங்களை அறிந்தவர்கள், இறை நிலையுடன் ஜீவகலப்பு பெரும் யோகம் பெற்றவர்கள் அனைவரின் ஜாதகத்திலும் கேது பகவான் மிகவும் சிறப்பாக பஞ்சபூத தத்துவ அமைப்பில் அமர்ந்திருப்பார் என்பது கவனிக்க தக்கது.

எனவே சுய ஜாதகத்தில் சாய கிரகமான ராகு கேது வலிமை பெறுவது குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகித யோக வாழ்க்கையையே பெற்று தரும் என்பதை மறுக்கவும் இயலாது, மாற்றவும் முடியாது.

வாழ்க வளமுடன்  
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 1 ஜனவரி, 2015

அதிர்ஷ்டங்களையும் வெற்றி வாய்ப்புகளையும் வாரி வழங்கும் - 2015

வணக்கம் அன்பர்களே !



இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் 

இந்த 2015 ஆண்டு 100% அதிர்ஷ்டங்களையும் வெற்றி வாய்ப்புகளையும் வாரி வழங்கும் விதமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, தொழில் துறையில் வங்கி மற்றும் நிதி நிறுவனம் போன்ற அமைப்புகளில் எதிர்பாராத வளர்ச்சி நிச்சயம் அமையும், நிதி தன்னிறைவாக அனைவருக்கும் கிடைக்கும் விதமான சூழ்நிலைகள் ஏற்ப்படும், பொருளாதார ரீதியான வெற்றிகள் மிகவும் சிறப்பாக அமையும் என்பதால் பணம் மற்றும் நிதி வட்டி வரவு செலவுகள் மிகவும் சிறப்பாக நடைபெறும், நிதி சார்ந்த தொழில்களில் இருப்பவர்கள் எதிர்பாராத வரவையும், இதுவரை வாராத நிலுவை தொகையெல்லாம் வசூல் ஆகும், வாக்கு பலப்படும் வாக்கை தொழிலாக கொண்டு செயல்படும் அன்பர்களுக்கு அபரிவிதமான தொழில் வெற்றி கிட்டும், குறிப்பாக வழக்கறிஞர், ஜோதிடர், அரசியல் போன்ற அமைப்பில் இருப்புவர்கள் எதிர்பாராத நன்மைகளை பெறுவார்கள்.

வண்டி வாகன தொழில்கள், மற்றும் சொகுசு வாகன துறைகளில் அதிரடியான வளர்ச்சியை பெரும், வண்டி வாகன துறை சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கு இந்த வருடம் மிக மிக சிறப்பாக இருக்கும், மேலும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை எதிர்பாராத வளர்ச்சியை பெரும், வீடு மற்றும் நிறுவன  கட்டுமான துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து கதவை தட்டும், போக்குவரத்து துறையில் இருப்பவர்கள் அபரிவிதமான வளர்ச்சியை பெறுவார்கள்.

சிறிய முதலீடு மற்றும் விவாசாயம் சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கு இந்த வருடம் மிகவும் சிறப்பாக அமையும், ஏஜென்சி துறையில் இருக்கும் அனைவருக்கும் அபரிவிதமான லாபம் வந்து சேரும், பொதுமக்கள் ஆதரவை பெற்று மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறுவார்கள், சிறு வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றமும் புதிய வாய்ப்புகளும் அதிக அளவில் வந்து சேரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும் விதமாக பல நிகழ்வுகள் உண்டாகும் முன்னேற்றம் என்பது அபரிவிதமாக இருக்கும் என்பதில் மாற்றம் இல்லை அன்பர்களே !

தொழில் வாய்ப்புகள் அனைவருக்கும் எதிர்பார்த்த வண்ணம் கை கொடுக்கும், குறைந்த முதலீட்டில் பல மடங்கு லாபம் பெரும் தொழில்கள் அனைத்தும் மிக சிறப்பாக நன்மைகளை தரும், நெருப்பு தத்துவம் சார்ந்த தொழில்களில் இருப்பவர்களும், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களும் அபரிவிதமான வெற்றி வாய்ப்புகளை பெறுவார்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் அதிகரிக்கும், அனைத்து தொழில்களும் 100% விகித வெற்றியை பெரும் யோக காலமாக இந்த ஆண்டை கருதலாம்.

லாப ஸ்தானம் மிகவும் வலிமை பெற்று இருப்பது இந்த 2015ம் வருடம் அனைவருக்கும் யோகம் நிறைந்த அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, குறிப்பாக குழந்தைகள், பெண்களின் முன்னேற்றம் அபரிவிதமானதாக இருக்கும், பல சாதனைகளுக்கு உரிமை கொண்டாடும் வருடமாக இந்த 2015 அமையும், நீதி நேர்மை மற்றும் உண்மையின் பரிபாலனம் உலகெங்கும் கொடிகட்டி பறக்கும், உலக தலைவர்களுக்கு இந்த வருடம் சோதனை காலமாக அமையும், அரசியலில் யாரும் எதிர்பாராத திருப்பங்கள் நடைபெறும் குறிப்பாக உலக அரசியலில் சாத்தியம் இல்லாத விஷயங்கள் நடைமுறைக்கு வரும், மக்களின் வாழ்க்கை தரம் மிகவும் சிறப்பாக மேலோங்கும்.

எதிர்பாராமல் நிகழும் நிகழ்வுகள் :

1) அரசியலில் கட்சி தலைவர்களின் இழப்பு, ஈடுகட்ட இயலாத தன்மையில் அமையும்.
2) நெருப்பின் மூலம் பெரிய சேதாரங்கள் நிகழ வாய்ப்பு உண்டு.
3) மருத்துவ துறை எதிர்பாராத சிக்கல்களை எதிர்கொள்ளும்.
4) வெளிநாடுகளில் ஜீவனம் செய்பவர்களின்  நிலை சற்றே கவலை தரும் விதத்தில் அமையும்.
5) ஆன்மீகம் மிகப்பெரிய வெற்றியை சந்திக்கும், அனைவருக்குள்ளும் ஆன்மீக தேடல் நன்மைகளை வாரி வழங்கும்.
6) திரைதுறையில் உள்ளவர்களுக்கு இந்த வருடம் சோதனைகள் நிறைந்த காலமாகவே அமையும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696