செவ்வாய், 30 ஜூன், 2015

திருமணம் மூலம் யோக வாழ்க்கையும், களத்திர பாவக வலிமையையும் !


 சில ஜாதகங்களில் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும், அளவில்லா சொத்து சுக சேர்க்கையும், சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும், உயர்தரமான யோக வாழ்க்கையும் அமைவதுண்டு, நேற்றுவரை சாதாரண மனிதராக இருந்த நபர்கள்கூட, திடீரென அந்தஸ்த்து மற்றும் புகழ் பெறுவது, வாழ்க்கை துணை அமைந்தால் வந்த யோகமகவே  கருதலாம், இந்தநிலை முரண்பட்டதாகவும் அமைவதுண்டு நேற்று வரை சுகவாசியாக இருந்தவர் திருமணதிற்கு பிறகு ஆதாலபாதலத்திர்க்கு செல்வதும் உண்டு, இவை அனைத்தையும் நிர்ணயம் செய்வது ஒருவரது ஜாதகத்தில் உள்ள வலிமை மற்றும் வலிமை அற்ற களத்திர ஸ்தான பலனே, பொதுவாக சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை தரும்.

 குறிப்பாக களத்திர ஸ்தானம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று, லாப ஸ்தானம் சர ராசியாக அமைவது ஜாதகருக்கு அபரிவிதமான யோகத்தை 100% விகிதம் வாரி வழங்கும், மேலும் லாப ஸ்தானம் கடகமாக அமைந்தால் ஜாதகரின் யோக போக சுக  வாழ்க்கையின் தரத்தை யாராலும் நிர்ணயம் செய்ய இயலாது இந்த வாய்ப்பு இரண்டு லக்கினத்திற்கு மட்டுமே பொருந்தும் 1) சிம்மம் 2) கன்னி இந்த இரண்டு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே லாப ஸ்தானம் கடகத்தில் அமையும். ( கன்னி லக்கினத்திற்கு கடகம் 11ம் பாவகமாக வருவது இயற்க்கை, சிம்ம லக்கினத்திற்கு கடகத்தில் 11ம் பாவகம் அமைவது பற்றி பின்பு விளக்கப்படும் ) 

பொதுவாக இன்றைய சூழ்நிலையில் திருமண வயதில் உள்ள ஆண் பெண் இருபாலரின் எண்ணமும் நல்ல வேலை நல்ல சம்பாத்தியம், அதன் பிறகே திருமணம் என்ற சிந்தனையிலேயே உள்ளது, இது வரவேற்க தக்கதல்ல, மேலும் சுய ஜாதகத்தில் ஒருவருக்கு நல்ல தொழில் அமைவதற்கும் சமூகத்தில் நல்ல  மதிப்பு மரியாதை கிடைப்பதற்கும், களத்திர ஸ்தானம் வழிவகுக்கும் என்ற உண்மை வெகுவாக எவருக்கும் புரிவதில்லை, திருமணம் என்பது  " பருவத்தே பயிர் " என்ற முதுமொழிக்கு ஏற்ப சரியான வயதில் அமைந்தால் ஜாதகருக்கோ ஜாதகிக்கோ 100% விகித தொழில் வாய்ப்புகள் மிக சிறப்பாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை, மேலும் களத்திர பாவக வழியில் இருந்து ஜாதகர் அனுபவிக்க வேண்டிய யோகங்களை திருமணத்திற்கு பிறகே அனுபவிக்க இயலும், களத்திர பாவக வழியில் இருந்து யோகங்கள் திருமணத்திற்கு பிறகே செயல்படும்.

ஒருவரது ஜாதகத்தில் ( ஆண் அல்லது பெண் ) களத்திர பாவகம் நல்ல வலிமையுடன் இருப்பின் ஜாதகர், திருமணத்தை தள்ளி போட போட, ஜாதகர் களத்திர பாவக வழியில் இருந்து வரும் யோகங்களை அனுபவிக்க இயலாமல் போக நேரலாம், தொழிலை காரணம் காட்டி மறுக்கப்படும் திருமணங்கள்  மூலம் வதுவும், வரணும் மிகப்பெரிய யோக வாழ்க்கையை இழக்கின்றனர் என்பது கண்கூடான உண்மை, மேலும் சாதரணமாக ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய விஷயங்கள் கூட கிடைக்க பெறாமல், வாழ்க்கையில் அதிக அளவில் போராட்டங்களை கடுமையாக சந்தித்து கொண்டு இருக்கு பல ஜாதகங்களை ஜோதிடதீபம் கண்டுள்ளதால், சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருப்பின் சம்பந்த பட்ட ஜாதகரோ, ஜாதகியோ எந்த காரணத்தை கொண்டும், திருமணத்தை தள்ளிபோடாமல் மணவாழ்க்கையை அமைத்து கொண்டு வாழ்க்கையில் மிக பெரிய அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் பெறுவதே சாலசிறந்தது.

களத்திர வழியில் அவயோக ஜாதக நிலை :

கிழ்கண்ட ஜாதகருக்கு குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது, ஜாதகர் திருமணத்திற்கு பிறகு எதிர்கொள்ளும் இன்னல்களை கட்டியம் கூறுகிறது.


ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணையின் மூலமாக மிகப்பெரிய இன்னங்களையும் துன்பங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், தந்துகொண்டு இருப்பது கண்கூடான உண்மை, இருப்பினும் ஜாதகரால் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர இயலவில்லை என்பது கவனிக்கத்தக்கது, சரியான வாழ்க்கை துணை அமையாத காரணத்தால், ஜாதகர் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது வருந்ததக்கது.

களத்திர வழியில் யோக ஜாதக நிலை :

கிழ்கண்ட கன்னி இலக்கின ஜாதகருக்கு களத்திர பாவகம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம், இருப்பினும் ஜாதகர் தனக்கு வரும் நல்ல திருமண வாய்ப்புகளை தவிர்த்து கொண்டு இருப்பது, ஜாதகருக்கு களத்திர பாவக  வழியில் இருந்து வரும் நல்ல வாய்ப்புகள் அனைத்தும் வீணாவது தனது சுய ஜாதக வலிமையை உணராத தன்மையே அன்றி வேறு இல்லை.



 இதனால் ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் யோகமும் கிடைக்கவில்லை, நண்பர்கள்,கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து கிடைக்கும் யோகமும் தவிர்க்கபடுவது ஜாதகராலேயே என்றால் அது மிகையில்லை, எனவே சுய ஜாதகத்தில் உள்ள வலிமையின் நிலையை சிறந்த ஜோதிடர் மூலம் உணர்ந்து வாழ்க்கையை சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைத்துகொல்வதே சிறந்தது என்று ஜோதிடதீபம் இன்றைய இளைஞர் இளைஞிகளுக்கு வலியுறுத்துகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 22 ஜூன், 2015

சுய ஜாதகத்தில் திருமண யோக நிலையும், குருபலமும், நடைபெறும் திசை வழங்கும் பலன்களும்!


 திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில், சுய ஜாதகத்தில் குருபலம் பெறுவது அவசியமானதாக பெரும்பாலான ஜோதிடர்கள் கருதுகின்றனர், அதாவது சுய ஜாதகத்தில் ராசிக்கு குருபகவான் 2,5,7,9,11ம் ராசிகளில் சஞ்சாரம் செய்யும் பொழுது, ஜாதகருக்கு திருமண வாழ்க்கை கைகூடிவரும், இதுவரை திருமண வாழ்க்கை அமையாத அன்பர்களுக்கு, குருபகவான் ராசிக்கு 2,5,7,9,11ம் ராசிகளில் சஞ்சாரம் செய்யும் பொழுது நிச்சயம் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெறும் என்பதும், சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை புத்திகள் வழங்கும் பலன்களை கருத்தில் கொள்ள தேவையில்லை என்பது போன்ற மாய தோற்றம் உள்ளது, இதை பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்ர்களே !




லக்கினம் : சிம்மம் 
ராசி : கன்னி 
நட்சத்திரம் : உத்திரம் 3ம் பாதம் 

 மேற்கண்ட சிம்ம இலக்கின ஜாதகருக்கு  ( 21/03/2001 முதல் 22/03/2019 வரை ) ராகு திசை நடைமுறையில் உள்ளது, நடைபெறும் ராகு திசை 2,4,8,10,12 ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 12ம் பாவகம் சர ராசி என்றமுறையில் 100% அவயோக பலன்களை வாரி வழங்கிக்கொண்டு இருக்கிறது, மேலும் இந்த ஜாதகருக்கு ராகு திசையில் கடந்த 15 வருடங்களில் குருபகவான் சந்திரன் நின்ற ராசிக்கு 2,5,7,9,11ம் ராசிகளில் 1முறைக்கு மேல் கோட்சார சஞ்சாரம் செய்துவிட்டார், அதாவது குரு பலம் பெற்று சஞ்சாரம் செய்துவிட்டார், ஜாதகருக்கும் வயது 35 ஆகிவிட்டது, ஆனால் திருமணம் மட்டும் கைகூடி வரவில்லை, மேலும் சிம்ம லக்கினத்திற்கு குருபகவான் யோகத்தை செய்பவர் என்ற நிலைவேறு உள்ளது, ஆக இந்த ஜாதகருக்கு குரு பலம் பலன் தர இயலாமைக்கு காரணம் ஏன் ? என்பதை இனி ஆய்வு செய்வோம் அன்பர்களே.

பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமை, நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மை, திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் தொடர்பு பெரும் கோட்சார கிரகங்கள் வழங்கும்  பலாபலன்கள் என்ற விஷயங்களை கருத்தில் கொண்டால் மட்டுமே ஒருவருடைய சுய ஜாதகத்தில் நடைபெறும் நடைமுறை பலன்களை துல்லியமாக கூற இயலும் அன்பர்களே! மாறாக சந்திரனை அடிப்படையாக கொண்டு கோட்சார கிரக நிலைகளின் பலன்களை காண முற்படும் பொழுது, சுய  ஜாதகத்திற்கு உண்டான பலன்களை நிச்சயம் தெளிவாக கூற இயலாது என்பது மட்டும் உறதி, மேலும் முரண்பட்ட பலன்களையே ஜாதகருக்கு சொல்லவேண்டி வரும், உதாரணமாக மேற்கண்ட ஜாதக பலன்களை ஆய்வு செய்வோம்.

ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசை எவ்வித யோக பலன்களையும் வழங்கவில்லை 2,4,8,10,12 ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 12ம் பாவக பலனை ராகு திசை ஏற்று நடத்துகிறது, ராகு திசையில் குரு புத்தியை தவிர நடைபெற்ற அனைத்து புத்திகளும் ஜாதகருக்கு 12ம் பாவக பலனையே ஏற்று நடத்தியிருக்கிறது.

 மேலும் தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் புத்தியும் ( 08/10/2012 முதல் 09/10/2015 வரை ) 12ம் பாவக வழியில் இருந்து மிகுந்த அவயோக பலன்களையே வாரி வழங்குவது கவலைக்கு உரிய விஷயமாகவே படுகிறது, மேலும் சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% அவயோக பலன்களை தருவது ஜாதகரின் குடும்ப வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றுகிறது, களத்திர ஸ்தானம் எனப்படும் 7ம் பாவகம் மட்டும் 30% வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு திருமணம் நடக்கும் என்பதை உறுதி செய்கிறது, திருமண வாழ்க்கை அமையும் காலம் எது ? என்ற கேள்விக்கு அடுத்து வரும் சூரியன் புத்தி திருமண வாழ்க்கையை அமைத்து தரும் என்பது பதில், ஏனெனில் அடுத்து வரும் சூரியன் புத்தி சுய  ஜாதக   ரீதியாக 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவதால் இந்த வாய்ப்பை நிச்சயம் வழங்கும், ஜாதகர்  விழிப்புணர்வுடன் செயல்பட்டு திருமண வாழ்க்கையை அமைத்து கொள்வது சால சிறந்தது.

இந்த ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பின் படி குரு பகவான், தற்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசையில் கடந்த 15 வருடங்களில் ஒன்னே கால் சுற்று வந்து விட்டார், இந்த கால கட்டங்களில் ராசிக்கு குரு பகவான் 6 முறைக்கு மேல் குரு பலம் பெற்று சஞ்சாரம் செய்த போதிலும், சுய ஜாதகத்தில் பாவகம் வலிமை அற்ற காரணத்தினாலும், நடைபெறும் ராகு திசை விரைய ஸ்தான பலனை தந்தாலும், ஜாதகருக்கு திருமணம் நடைபெறவில்லை, ராகு திசையில் ஜாதகருக்கு வந்த சில திருமண வாய்ப்புகளை ஜாதகரே தவிர்த்தது ஜாதகரின் குடும்ப ஸ்தானம் வலிமை அற்ற தன்மையை தெள்ள தெளிவாக காட்டுகிறது.

எனவே சுய ஜாதகத்தில் 2,7 ம் பாவகங்கள் வலிமை அற்று இருந்தாலும், நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினாலும், ஜாதகருக்கு எவ்வித குரு பலமும் வாழ்க்கையில் திருமணத்தை அமைத்து தந்துவிடாது, சுய ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் வலிமை பெற்று, நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், குரு பலம் இல்லாவிட்டாலும் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்பதில் எவ்வித மாற்று கருத்துக்கும் இடமில்லை அன்பர்களே!

ஆக திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வது கோட்சார கிரகங்களின் பலன்கள் அல்ல சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது என்பது உறுதி, மேலும் சந்திரனை ( ராசியை ) அடிப்படையாக கொண்டு ஜாதக பலன் காண முற்படுவது கணிப்பாகவே அமையுமோ அன்றி சுய ஜாதக கணிதமாக அமைய வாய்ப்பில்லை என்பது நிதர்சனமான உண்மை,  ஜாதக கணிதம் மூலம் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காணும் பொழுது ஜாதக ரீதியான தெளிவான பலன்களை 100% துல்லியமாக காண இயலும் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 21 ஜூன், 2015

திசை மற்றும் புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினாலும் ஜாதகர் தீமையான பலன்களையே அனுபவிப்பது ஏன் ?

 
 ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்று, நடைபெறும் திசை,புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை நடத்திய போதும் ஜாதகரால் யோக பலன்களை அனுபவிக்க இயலாத நிலை ஏன் ஏற்ப்படுகிறது? என்பதை இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! மேலும் கிழ்கண்ட உதாரண ஜாதகம் மூலம் மேற்கண்ட கேள்விகளுக்கு தெளிவான பதிலை பெற இயலும்.


லக்கினம் : மகரம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஸ்வினி 1ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்கள் :

1,2,3,6,7,12ம் வீடுகள் களத்திர பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம்.
9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகங்கள் :

5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசை ( 02/12/2014 முதல் 02/12/2021 வரை )ஏற்றுநடத்தும் பாவக பலன்கள் 
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் ஜீவன ரீதியான யோக பலனை தந்துகொண்டு இருப்பது மிகவும் சிறப்பான நிலையாக கருதலாம், மேலும் ஜாதகருக்கு ஜீவன ஸ்தனமானது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியாகவும், ஸ்திர நீர் தத்துவ அமைப்பிலும் அமைவதாலும், ஜாதகருக்கு நிலையான தனது மனதில் நினைத்த எண்ணங்களுக்கு ஏற்ப, புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையையும், எண்ணத்தின் வலிமைக்கு ஏற்ற வகையில் பொருளாதார முன்னேற்றத்தையும், தங்கு தடையின்றி வாரி வழங்கும், ஆனால் ஜாதகருக்கு நடப்பது முற்றிலும் முரண்பட்ட  வாழ்க்கையாக இருப்பது கவனிக்க தக்கது, நிறைய கடன் சுமை, வாழ்க்கை துணை வழியில்  இருந்து இன்னல்கள் மற்றும் பிறிவு என நடைபெறும் திசைக்கு ஏற்ற யோக பலன்கள் நடைபெறாமல், மிகுந்த இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் ஆளாகும் சூழ்நிலை தந்துள்ளது, சுய ஜாதகத்திற்கு ஒத்து வாராத முரண்பட்ட பலன்களாக இருப்பது கவனிக்கத்தக்கது.

பொதுவாக இதை போன்ற ஜாதக அமைப்பில் ஜாதகத்தில் பலன்கான முற்படும் பொழுது, ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் என்று அழைக்க பெரும் 5ம் பாவக நிலையை கருத்தில் கொண்டு பலன் காணுவதே  ஜாதகருக்கு  தெளிவான பலன்களை 100% சொல்ல இயலும், இவரது ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் வலிமை பெற்று அமர்ந்த போதிலும், பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 200% இன்னல்களை தரும், மேலும் ஜாதகருக்கு தற்ப்பொழுது நடைபெறும் திசை மிகவும் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்திய போதும் , ஜாதகரால் ஜீவன ஸ்தான அமைப்பில் இருந்து எவ்வித யோக பலனை அனுபவிக்க இயலாத சூழ்நிலைக்கு காரணமாக அமைவது, பூர்வ புண்ணியம் பாதக ஸ்தனத்துடன் சம்பந்தம் பெறுவதும், ஜாதகர்  தனது பூவீகத்தில் குடியிருந்து கொண்டு தனது ஜீவன வாழ்க்கையை மேற்கொள்வதுமே என்றால் அது மிகையில்லை.

ஒரு ஜாதகர் தனது ஜாதகத்தில் உள்ள வலிமைக்கு ஏற்ப யோக பலன்களை அனுபவிப்பது எப்படி ? என்பதை ஜாதகரின் லக்கினமும், பூர்வ புண்ணியமான 5ம் பாவகம் நிர்ணயம் செய்கிறது என்றால் அது மிகையில்லை அன்பர்களே! சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் 5ம் பாவகம் வலிமை இழக்கும் பொழுது ஜாதகர் தனது பூர்வீகத்தில் குடியிருப்பது, ஜாதகத்தில் உள்ள யோக நிலைகளை பரிபூரணமாக அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும், மேலும் லக்கினமும், பூர்வ புண்ணியமும் ஜாதகரின் புத்திசாலிதனத்தையும், சமயோசித அறிவுத்திறனையும் வெளிபடுத்தும் பாவகம் என்பதால், இந்த பாவக நலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும்,  ஜாதகர் தனக்கு வரும் நல்ல நல்ல வாய்ப்புகளையும், அதிர்ஷ்டத்தையும் வேண்டாம் என உதறும் சூழ்நிலையை தரும் , எனவே சுய ஜாதகத்தில் யோக பலன்கள் தரும் திசா புத்திகள் நடைபெற்றாலும், அதானால் ஜாதகருக்கு யாதொரு நன்மையும் விளையாது, துன்பமே மிச்சும்.

மேற்கண்ட ஜாதகர் தனது பூர்வீகத்தில் இருந்து வெளியேறி வேறு இடத்தில் தனது ஜீவனத்தை மேற்கொண்டால் ஜாதகர் தனது ஜீவன ஸ்தான பாவக வழியில் இருந்து 100% யோக பலன்களை வாரி வழங்கும், ஜாதகரின் சிந்தனை திறனும், அறிவு ஆற்றலும் பன்மடங்கு விருத்தியை வாரி வழங்கி, ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை பரிபூரணமாக அனுபவிக்கும் தன்மையை தரும், பெரும்பாலும் 5ம் பாவகம் வலிமை குன்றிய ஜாதகர்கள், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாமல் போவதற்கு இதுவே காரணம் என்பது ஜோதிடதீபத்தின் ஆணித்தரமான கருத்து.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

லக்கினதிபதியின் திசை ஜாதகருக்கு நன்மையை மட்டுமே தருமா ?



சுய ஜாதகத்தில் லக்கினாதிபதி எந்த நிலையில் இருந்தாலும் சரி, அவர் தனது திசையில் நன்மையை மட்டுமே தருவார் என்ற கருத்து முற்றிலும் முரண்பட்டதாகவே
" ஜோதிடதீபம் " கருதுகிறது, பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் எந்த பாவகத்திர்க்கு அதிபதி என்றாலும் சரி தனது திசையில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறாரோ, அந்த பாவக பலனை தங்கு தடையின்றி 100 % செய்வார் இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை, இதில் லக்கினாதிபதி,கேந்திராதிபதி, கோனாதிபதி என்ற விதி விளக்கு கிடையாது, இதை சரியான உதாரண ஜாதகம் கொண்டு காண்பது, தெளிவை தரும்.


லக்கினம் : மகரம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 3ம் பாதம்
 
ஜாதகருக்கு அடுத்து வரும் திசை சனி திசை ( 04/08/2016 முதல் 04/08/2035 வரை ) இந்த ஜாதகருக்கு லக்கினம் மற்றும் இரண்டாம் பாவகத்திர்க்கு அதிபதியாக சனி பகவான் வருவாதல், சனிபகவானின் திசை ஜாதகருக்கு மிகுந்த யோகத்தையும் தான வரவையும் ஏற்ப்படுத்தும் என்பதாக பலன் சொல்லபட்டு இருக்கிறது, பொதுவாக பாரம்பரிய ஜோதிடத்தில் ஒரு பாவகத்திர்க்கு அதிபதியை நிர்ணயம் செய்யும் பொழுது, அந்த ராசிக்கு அதிபதியை பாவக அதிபதியாக நிர்ணயம் செய்வது வழக்கத்தில் உள்ள ஒரு முறையாகும், மேலும் இது சரியான பலனை நிர்ணயம் செய்ய உதவாது, இந்த ஜாதகருக்கு  லக்கினத்திற்கு அதிபதி சனி அல்ல குரு என்பதே ஜாதக கணிதம் அறிந்த  அனைவருக்கும் தெளிவாக புரியும்.

மேலும் ஜாதகருக்கு சனி திசை வழங்கும் பலன்களை இனி ஆய்வுக்கு எடுத்து கொள்வோம், சனிபகவான் ஜாதகருக்கு 6,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தர எதுவாக உள்ளது, பாதக ஸ்தானம் என்பது ஜாதகருக்கு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஸ்திர  நீர்ராசியாக அமைவதும், கால புருஷ அமைப்பிற்கு 8ம் ராசியாக   அமைவதும் ஜாதகர் சனி திசையில் எதிர்கொள்ள இருக்கும், வீண் விரையங்களையும், திடீர் இழப்புகளையும் காட்டுகிறது, மேலும் ஜாதகர் மனதளவில்  அதிக போராட்டங்களையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, எனவே ஜாதகர் எதிர்வர இருக்கும் சனி  திசையை மிகவும் கவனமாக எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பது மட்டும்   உறுதி, லக்கினாதிபதி திசை தனக்கு நன்மை தரும் என்று ஜாதகர் கவனம் இன்றி இருப்பின் ஜாதகருக்கு வரும் இழப்புகள் மிக மிக அதிகமாகவே இருக்கும்  என்பது மட்டும் நிச்சயம்.

பொதுவாக சுய ஜாதகத்தில்  நடைபெறும் திசை புத்திகள், எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற விஷயம் தெரிந்தால் எதிர்காலத்தை ஜாதகர் மிக தெளிவாக மிக எளிதாக எதிர்கொள்ள இயலூம், மாறாக நடைபெறும் திசை புத்தி எந்த பாவக பலனை வழங்குகிறது என்ற விஷயம் தெரியாத பொழுது , ஜாதகர் உண்மைக்கு புறம்பான ஆலோசனைகளின் பேரில் மிக பெரிய  பாதிப்புகளை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட கூடும், மேற்கண்ட ஜாதகத்தில் எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு லக்கினாதிபதி என்ற முறையிலும், 2ம் பாவக அதிபதி என்ற முறையிலும், லக்கினத்திற்கு 8ல்  மறைவு நிலையில் அமர்ந்த போதிலும், ஜாதகருக்கு லக்கினத்திற்கு அதிபதியாக வருவதால் மிகுந்த நன்மையை செய்வார் என்று  கணிப்பது மிக மிக தவறு, மேலும் சனி பாகாவன் திசை ஜாதகருக்கு 6,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது நிச்சயம் நன்மையை தர  வாய்ப்பில்லை.

 எனவே ஜாதகர் 6,9,11ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பது மட்டும் ஊறுதி, ஆக மேற்கண்ட வீடுகள்  அமைப்பில் இருந்து வரும் இன்னல்களில் இருந்து ஜாதகர் தன்னை தற்காத்து கொள்வது மிகுந்த  நலன்களை தரும், 6ம் பாவக வழியில் இருந்து கடன்,நோய் மற்றும்  எதிரிகள் தொந்தரவு, 9ம் பாவக வழியில் இருந்து தனது நர்ப்பெயருக்கு களங்கம், மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது, அறிவு திறன் மங்குதல், 11ம் பாவக வழியில் இருந்து தன்னம்பிக்கை குறைதல், பிற்போக்கு எண்ணங்கள், நம்பிக்கை இல்லாமல் செயல்படுதல் என்ற வகையில் பலன்களை தரக்கூடும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696