திங்கள், 14 செப்டம்பர், 2015

ஜாதக ஆலோசனை : சுய ஜாதக வலிமையும், நடைபெறும் திசை தரும் பலன்களும் !




ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கு ஏற்ப்பவே யோக அவயோக பலன்கள் சம்பந்தபட்ட ஜாதகருக்கு வழங்குகிறது, சுய ஜாதகத்தில் ஒருவருக்கு உள்ள யோக அவயோக பலன்கள் நடைபெறும் காலம் எதுவென்று துல்லியமாக அறிந்துகொள்வதும், அதன் அடிப்படையில் தமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள திட்டமிடுவதும், குறிப்பிட்ட ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும், இதற்க்கு சுய ஜாதகத்தில் யோக அவயோக பலன்கள் நடைபெறும் காலநேரம் எதுவென்று அறிந்துகொள்வது மிக மிக அவசியமானது, நமது நண்பரின் ஜாதகத்தை இதற்காக ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம் 
ராசி : கன்னி 
நட்சத்திரம் : சித்திரை 2ம் பாதம் 

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவகங்கள் :

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
4,10ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
ஜாதகத்தில் உள்ள வலிமை பெற்ற பாவகங்கள்.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகங்கள் :

2,8ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
ஜாதகத்தில் உள்ள வலிமை அற்ற பாவகங்கள்.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை அற்ற பாவகங்கள் :

5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்தில் மிகவும் வலிமை அற்ற கடுமையான இன்னல்களை தரும் பாவகங்கள் ஆகும்.

ஜாதக பொது பலன்கள் :

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நல்ல குணமும், சிறந்த அறிவு திறனையும் ஒருங்கே அமைய பெற்றவர், ஜாதகரின் மனம் மிகவும் பெருந்தன்மையானது, இயற்கையாக ஜாதகருக்கு நல்ல ஆரோக்கியமும், நிறைவான கல்வி அறிவும் கிடைக்க பெற்றவர், சிறந்த நிர்வாக திறமைகளை தன்னகத்தே கொண்டவர், தனது உறவுகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றமும், நன்மையையும் பெரும் யோகம் கொண்டவர், 3ம் பாவக வழியில் இருந்து தான் மனதில் நினைத்த லட்சியங்களை அடைய விடா முயற்சியுடன் போராடும் குணமும், இடைவிடாத உழைப்பையும் வெளிபடுத்தும் ஆற்றல் பெற்றவர், புதிய மனிதர்கள், வெளிநாட்டவர், நண்பர்கள் வழியில் இருந்து ஆதரவையும் வாய்ப்புகளையும் பெரும் யோகம் கொண்டவர், ஆராய்ச்சி மனபாண்மையும், சிறந்த புத்திசாலித்தனமும் கொண்டவர், சிறந்த திட்டமிடுதல்களுடன் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை பெரும் யோகம் பெற்றவர், சிறந்த வாதத்திறமை ஜாதகரின் வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும், தரகு அல்லது ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் மிகுந்த லாபத்தை பெரும் யோகம் உண்டாகும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வாழ்க்கை துணையுடன் சிறப்பான இல்லற வாழ்க்கையை பெரும் யோகத்தை தரும், தனது நண்பர்களுக்கு யோகத்தையும் லாபத்தையும் தரும் வல்லமை பெற்றவர், புனித திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகமும், மிகசிறந்த ஆன்மீகவாதிகளின் அருளாசியும் பெரும் யோகம் பெற்றவர், தான் செய்யும் தொழிலில் நல்ல நுண்ணறிவும், சிறந்த நிர்வாகத்தை கையாளும் வல்லமை பெற்றவர், பொதுமக்கள் மற்றும் பெரியமனிதர்களின் ஆதரவை ஒருங்கே பெரும் யோகம் கொண்டவர், சமூகத்தில் நல்ல மனிதர் என்ற அங்கீகாரத்தை மிக விரைவில் பெற்று வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றங்களை அடையும் யோகம் உண்டாகும், 9ம் பாவக வழியில் இருந்து சிறந்த அறிவு திறனும், நிர்வாக திறனும் ஜாதகருக்கு வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை வாரி வழங்கும், செய்த புண்ணியத்தின் பலன்களை ஜாதகர் பரிபூர்ணமாக அனுபவிக்கும் யோகம்  உண்டாகும், அனைவரிடத்திலும் நல்ல பெயர் கிடைக்கும், இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பம் கொண்டவர், சந்தர்பங்களையும் சூழ்நிலைகளையும் தனக்கு சாதகமாக மாற்றி கொள்ளும் அதிபுத்திசாலித்தனம் ஜாதகருக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும்.

4,10ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து மிதமிஞ்சிய சுகபோக வாழ்க்கையை வாழும் யோகம் உண்டாகும், கற்பனையிலும் நினைத்திராத யோகங்களும் சுக போகங்களும் ஜாதகரை தேடி வரும், மிகப்பெரிய சொத்து சுக சேர்க்கைகள் மிக எளிதில் ஜாதகருக்கு கிடக்க பெரும், ஜாதகரின் நல்ல குணம் எங்கு சென்றாலும் வரவேற்ப்பும் சிறப்பான ஆதரவையும் பெற்று தரும், சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் சகல வசதிகளையும் அனுபவிக்கும் தன்மையையும், மிகப்பெரிய சொத்துகளை வாங்கும் யோகத்தையும் தரும், கல்வியில் வெற்றி, சொந்த ஊரில் ஜீவிக்க விருப்பமும் கொண்டவர், மண் மனை வண்டி வாகன யோகம் இயற்கையாகவே அமைய பெற்றவர், கல்வி துறையில் மிகப்பெரிய வெற்றிகளை ஜாதகருக்கு வாரி வழங்கும், 10ம் பாவக வழியில் இருந்து தனது சொத்துகளை மிக எளிதாக விருத்தி செய்தல், வண்டி வாகன தொழில்களில் எதிர்பாராத லாபம், ஆயுள் காப்பீடு மற்றும் வண்டி வாகனத்திற்கு காப்பீடு செய்யும் தொழில் மூலம் அபரிவிதமான முன்னேற்றம், நிரந்தரமான தொழில் மூலம் கை நிறைவான வருமானம் பெரும் யோகம், தனது சொத்துகள் வழியில் இருந்து மிகுந்த லாபத்தையும் அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கும் தன்மையை தரும், மேற்கண்ட யோக பலன்கள் யாவும் ஜாதகருக்கு நடைபெற ஜாதகர் வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருந்தால் மட்டுமே சாத்தியப்படும், குடியிருக்கும் வீடு வேறு திசையில் வாயிற்படி அமைந்து இருப்பின் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த போராட்டங்களையே சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

2,8ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் வருமானம் அனைத்தும் திடீர் இழப்பை சந்திக்க கூடும், குடும்பத்தில் அதிக இன்னல்களும், வாக்குவாதமும் ஜாதகரின் வருமானத்தை வெகுவாக பாதிக்கும், உயில் மூலம் லாபமும், இன்சுரன்ஸ் மூலம் திடீர் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், வணிக துறையில் ஜாதகருக்கு நல்ல வருமானம் கிடைக்கும், சில நேரங்களில் ஜாதகரின் பேச்சு மிகப்பெரிய இன்னல்களை வாரி வழங்கிவிடும், பண விஷயத்தில் மிகவும் கவனமாக  இருப்பது ஜாதகருக்கு மிகுந்த நன்மையை தரும், 8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுளையும், வாழ்க்கையில் சில எதிர்பாராத ஏமாற்றங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், எதிர்பாராத விபத்து, மருத்துவ செலவினங்களை தவிர்க்க இயலாது, மற்றவருக்கு பண உதவி செய்வது ஜாமீன் போடுவது போன்ற விஷயங்களை தவிர்த்துவிடுவது நல்லது, ஜாதகருக்கு செல்வத்தை முறையாக கையாளும் தன்மையை கற்று வைத்துகொள்வது மிகுந்த நன்மையை தரும்.

6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, 6ம் பாவக வழியில் இருந்து கடன் வாங்குவது கொடுப்பது இரண்டும் ஜாதகரை வெகுவாக பாதிக்கும், தனக்கு கிழ் பணியாற்றும் வேலை ஆட்களுடன் சமாதன போக்கை கடைபிடிப்பது நல்லது, தேவையற்ற வீண் செலவுகளை தவிர்ப்பதும், மருத்துவ செலவினங்களை தவிர்ப்பதும் ஜாதகருக்கு நல்லது, 12ம் பாவக வழியில் இருந்து அதிக மன உளைச்சல்களையும், மனபோரட்டங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், வீண் மன கவலை ஜாதகரை தீய பழக்க வழக்கங்களுக்கு ஆர்படுத்தும் எனவே ஜாதகர் மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது, எந்த ஒரு தீய பழக்கமும் இல்லாமல் இருப்பது ஜாதகரின் உடல் மற்றும் மனம் இரண்டையும் காப்பற்றும், நல்ல ஆன்மீகவாதிகளின் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்க்கையில் சுபிட்சத்தை வழங்கும்.

5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்தில் மிகவும் இன்னல்களை தரும் அமைப்பாக கருதலாம், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் தேடும் சூழ்நிலையை உருவாக்கும், குல தெய்வத்தின் நிந்தனை ஜாதகரை வெகுவாக பாதிக்கும், புத்திர பாக்கியத்தில் ( ஆண்வாரிசு ) இன்னல்களை தரும், ஜாதகரின் கல்வி மற்றும் அறிவு திறன் சரியான நேரத்தில் பலன் தாராது, சிறு முன்னேற்றத்திற்கு ஜாதகர் மிகப்பெரிய உழைப்பை தரும் சூழ்நிலையை வரக்கூடும், மன அமைதி கெடும், திட்டமிட்ட செயல்கள் சில நேரங்களில் பெரிய தோல்விகளை தரக்கூடும், சுதந்திரமாக செயலாற்ற இயலாமல் மற்றவர்களுக்கு கட்டுபட்டு இயங்கும் சூழ்நிலையை தரும், பூர்வீகத்தில் ஜீவனதிர்க்கு மிகுந்த இன்னல்களை அனுபவிக்கும் நிலை உருவாகும், தெளிவில்லாத மன நிலையுடன் ஜாதகர் பல போராட்டங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம் ஜாதகருக்கு பயன்படாமல், ஜாதகரை சார்ந்தவர்களுக்கு பலன் தரும், ஜாதகரின் திட்டமிடுதல்களை மிக எளிதாக முடக்கி வைக்கும், எதை எடுத்தாலும் தடை, தொந்தரவு, போராட்டம் என ஜாதகரை முழு வீச்சில் எதிர்ப்புகளை வழங்கும், தன்னம்பிக்கையை இழக்கும் சூழ்நிலையும், மன நிம்மதி இழப்பையும் வெகுவாக தரும், அதிர்ஷ்டமில்லா போராட்ட வாழ்க்கையை ஜாதகருக்கு தரக்கூடும், திறமை இருந்தும் வெற்றி வாய்ப்புகள் ஜாதகருக்கு எட்டாக்கனியாகவே அமைந்துவிடும்.

மேற்கண்ட யோக அவயோக பலன்கள் ஜாதகருக்கு நடைமுறையில் வரும் கால நேரங்கள் :

ஜெனனத்தில் செவ்வாய் திசை ஜாதகருக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும்,

செவ்வாய் திசைக்கு அடுத்து வந்த ராகு திசை ஜாதகருக்கு 10ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும்,

ராகு திசைக்கு அடுத்து தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு திசை ஜாதகருக்கு 3ம் வீடு பாக்கய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும்,

குரு திசைக்கு அடுத்து வரும் சனி திசை ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் அவயோக பலன்களையும்,

சனி திசைக்கு அடுத்து வரும் புதன் திசை ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று அவயோக பலன்களையும்,

புதன் திசைக்கு அடுத்து வரும் கேது திசை ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று அவயோக பலன்களையும்,

கேது  திசைக்கு அடுத்து வரும் சுக்கிரன்  திசை ஜாதகருக்கு 10ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும்,

சுக்கிரன் திசைக்கு அடுத்து வரும் சூரியன் திசை ஜாதகருக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும்,

சூரியன் திசைக்கு அடுத்து வரும் சந்திரன் திசை ஜாதகருக்கு 3ம் வீடு பாக்கய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும், வாரி வழங்குகின்றது.

ஜாதகருக்கு சூரியன்,சந்திரன்,செவ்வாய்,ராகு,குரு,சுக்கிரன் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம் யோக பலன்களையும்,

சனி,புதன்,கேது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம் அவயோக பலன்களையும், வாரி வழங்குவது தெளிவாகிறது.

எனவே ஜாதகர் யோக பலன்கள் நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் சிறப்பான முன்னேற்றம் மற்றும் நன்மைகளையும், அவயோக பலன்கள் நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் அதிக அளவில் இன்னல்களையும்,போராட்டங்களையும் சந்திக்க வேண்டி வரும் என்பதால், தனது வாழ்க்கை முன்னேற்றங்களை சிறப்பான கால நேரத்தில் திட்டமிட்டும், சிறப்பற்ற கால நேரத்தில் தவிர்த்தும் நன்மை அடையலாம்.

குறிப்பு :

மேற்கண்ட பாவக தொடர்புகள் தரும் பலன்களுடன் கோட்சார கிரக பலன்களையும் கருத்தில் கொள்வது இன்னும் சிறப்பை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696



சனி, 12 செப்டம்பர், 2015

தொழில் வெற்றிகளை நிர்ணயம் செய்யும்களத்திர பாவகமும் லாப ஸ்தானமும் !


ஒருவரின் தொழில் வெற்றியை நிர்ணயம் செய்வது ஜீவன ஸ்தானம் தானே, எப்படிகளத்திர பாவகமும் லாப ஸ்தானமும் நிர்ணயம் செய்யும் என்ற கேள்வி அன்பர்களுக்கு ஏற்படுவது இயற்கையே! சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது சம்பந்தபட்ட ஜாதகரை தொழில் ரீதியான தனிப்பட்ட திறமைகளுடன் இயங்க செய்யும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆனால் ஜாதகரின் திறமைகளை அனைத்தையும் வெளி உலகிற்கு கொண்டு வருவது களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமே, 7ம் பாவகம் வலிமை பெற்று அமர்ந்தால் மட்டுமே ஜாதகரின் தனி தொழில் திறமைகள் வெளி உலகிற்கு தெரிய வரும், சிறந்த மக்கள் தொடர்பு கிட்டும் இதன் மூலம் வாழ்க்கையில் ஜாதகரின் வியாபாரம் விருத்தி பெரும், வியாபரம் விருத்தி செய்தால் மட்டும் போதுமா ?  ஜாதகருக்கு கிடைத்த வியாபர விருத்தியின் மூலம் நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் 11ம் பாவக வழியில் இருந்தே கிடைக்க பெறுவார்.

எந்த ஒரு தொழிலும் திடீர் முன்னேற்றத்தையும் நிரந்தரமான இடத்தையும் பெறுவதற்கு மக்கள் தொடர்பும், குறிப்பிட்ட தொழிலை செய்துவரும் தொழிலாளர்களின் உறவு நிலையையும் களத்திர பாவகமே நிர்ணயம் செய்யும், தொழிலாளர்களின் ஒருமித்த ஒத்துழைப்பும் சரியான உழைப்பும் ஜாதகருக்கு பரிபூர்ணமாக கிடைக்க வேண்டுமெனில் சுய ஜாதகத்தில் களத்திர பாவகம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே சாத்தியம், களத்திர பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகரின் தொழில் விளம்பரமும், அறிமுகமும் வெகு விரைவில் பொதுமக்களிடம் சென்றடையும், இதன் மூலம் ஜாதகரின் வியாபாரம் என்பது பலமடங்கு உயரும், ஜாதகருக்கு தொழில் முன்னேற்றம் என்பது மிகவும் ஸ்திரமாக தங்குதடையின்றி அமையும், எந்த ஒரு தொழிலும் மக்கள் தொடர்பு இன்றி மிகப்பெரிய வெற்றிகளை பெறுவதில்லை என்பதை கவனத்தில் கொள்வது நல்லது, தமது வியாபரம் செழிப்படைய விளம்பர யுக்தியை சரியாக கடைபிடிக்கும் அன்பர்களின் சுய ஜாதகங்களில் அனைத்திலும் களத்திர பாவகம் மிக வலிமையுடன் இயங்கும் என்பது மறுக்க இயலாத உண்மை.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது நல்ல தொழில் வல்லமையையும், களத்திர பாவகம் வலிமை பெறுவது தொழில் விளம்பரம் மற்றும் விருத்தியையும் தந்த போதிலும், தான் செய்யும் தொழில் நிச்சயம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையையும், முற்போக்கு சிந்தனையும் தருவது லாப ஸ்தானமான 11ம் பாவக வலிமையே, ஜாதகரின் திட்டமிடுதல்களும், செயல்பாடுகளும் நடைமுறைக்கு வருவதும், மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறுவது லாப ஸ்தான வலிமையின் அடிப்படையிலேயே, மேலும் தொழில் ரீதியாகவும் வியாபர ரீதியாகவும் ஜாதகருக்கு வரும் லாபங்களையும், அதிர்ஷ்டங்களையும் பரிபூர்ணமாக அனுபவிக்க வைப்பதில் முக்கிய பங்காற்றுவது லாப ஸ்தானமே என்றால் அது மிகையில்லை.

11ம் பாவகம் ஜாதகர் தனது வாழ்க்கையில் என்ன நிலையை அடைய விரும்புகிறாரோ? அந்த நிலைக்கு எடுத்து செல்லும் தன்மை உடையது, எனவே சுய ஜாதகத்தில் 11ம் பாவகம் மிகவும் வலிமையுடன் இருப்பது சிறந்த முன்னேற்றங்களையும் அதிர்ஷ்டங்களையும் ஜாதகருக்கு வாரி வழங்கும், திட்டமிடுதல்கள் அனைத்தையும் நடைமுறைக்கு கொண்டுவரும் வல்லமையை ஒவ்வொருவருக்கும் தருவது சுய ஜாதகத்தில் லாப ஸ்தான வலிமையே, எண்ணங்களின் வேகத்தையும் மனதின் சக்தியையும் நிர்ணயம் செய்வது 11ம் பாவகமே, சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமை பெற்ற அன்பர்கள் ஏதாவது ஒரு வழியில் தனது லட்சியங்களை நிச்சயம் அடைந்துவிடுவார்கள் என்பது உறுதி.

சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் வலிமை பெறுவது பொதுமக்கள் ஆதரவையும், தொழிலாளர்களின் ஆதரவையும், விளம்பரங்கள் மூலம் விருத்தியையும் வாரி வழங்கும், வியாபர வெற்றியை நிர்ணயம் செய்வது 7ம் பாவக வலிமையே, ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் திறமையையும் சிறந்த நிர்வாக திறமையையும் வாரி வழங்கும், தான் செய்ய வேண்டிய தொழிலை சரியான வயதில் சரியான நேரத்தில் சரியாக தேர்ந்தெடுக்கும் தன்மையை ஜாதகருக்கு இயற்கையாக வாரி வழங்கும், லாப ஸ்தான வலிமை என்பது ஜாதகர் அடைய வேண்டிய லட்சியங்களையும், லாபங்களையும் அதிர்ஷ்டத்துடன் யோகமாக வாரி வழங்கும், ஜாதகரின் எண்ணங்கள் யாவும் பலிதம் பெற செய்யும் தன்மை 11ம் பாவகத்திர்க்கே 100% உண்டு, எனவே சுய ஜாதகத்தில் 7,10,11ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் தொழில் ரீதியான வெற்றிகளையும் யோகங்களையும் தங்குதடையின்றி வாரி வழங்கும்.

குறிப்பு :

சில அன்பர்கள் திருமணதிற்கு பிறகு தாம் செய்யும் தொழிலில் அபரிவிதமான வெற்றிகளை குவிப்பது களத்திர பாவக வலிமையே, திருமண வாழ்க்கை அமையும் பொழுது சுய ஜாதகத்தில் களத்திர பாவக வலிமை சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கும், அதிரடியான வியாபர வெற்றிகளை குவிக்க வைக்கும், இதுவரை சராசரி மனிதராக இருந்த அன்பர்களை, புகழ் பெற்ற மனிதர்களாக மாற்றும் வல்லமை களத்திர பாவகத்திர்க்கு 100% உண்டு.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


திருமண தடைகளை சந்திக்கும் பெண்ணின் ஜாதக அமைப்பு !

  

சுய ஜாதகங்களில் குறிப்பாக பெண்களின் ஜாதகங்களில் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும் பாதிக்க படுவது சம்பந்த பட்ட ஜாதகியின் திருமண வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும், திருமணம் செய்துகொள்வதற்கு எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் தடைபடும், தாமதமாக செய்யும் திருமண வாழ்க்கையும் சோபிப்பது இல்லை, மேலும் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் பாதிக்கபட்டு இருப்பின் ஜாதகியின் கதி அதோ கதிதான், கிழ்கண்ட ஜாதகிக்கு திருமண வாழ்க்கை அமையாமல் இதுவரை தடை தாமதங்களை சந்தித்து கொண்டு இருப்பதின் காரணத்தையும், ஜாதகி இனி கருத்தில் கொள்ளவேண்டிய விஷயங்களையும் ஆய்வு செய்வோம் அன்பர்களே !



லக்கினம் : கடகம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : பரணி 2ம் பாதம் 

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான கடக ராசியை லக்கினமாகவும், சர நெருப்பு தத்துவ ராசியான மேஷத்தை ஜென்ம ராசியாகவும், சுக்கிரனின் நட்சத்திரமான பரணியை ஜென்ம நட்சத்திரமாகவும் அமைய பெற்ற இந்த ஜாதகியின் சுய ஜாதகத்தில் பாவக வலிமையை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

1,5,7,8,11ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் தொடர்பு,
2,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு,
3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு,
4,6ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு,
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு,

 மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகிக்கு 3,9,10ம் பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் பெருவாரியான பாதிப்பில் உள்ளது மிக  தெளிவாக புலனாகிறது, அடிப்படையில் ஒருவரின் சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை பற்றி நாம் தெரிந்துகொள்ள கவனிக்க வேண்டிய பாவகங்கள் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவக வலிமையையும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவக வலிமையையுமே, மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு தொடர்பு பெறுவது பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன், களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு தொடர்பு பெறுவது சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன்.

 ஆக  ஜாதகிக்கு திருமண வாழ்க்கை அமைவதற்கு பல தடைகளையும், இன்னல்களையும் தரும் என்பதை 2,7ம் பாவக வலிமை நமக்கு தெளிவாக உணர்த்திவிடுகிறது, மேற்கொண்டு ஜாதகியின் லக்கினம் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது தனது வாழ்க்கையை தானே கேடுத்துகொள்ளும் சூழ்நிலையை உருவாக்கும், ஜாதகிக்கு நல்ல வரன்கள் வந்த போதிலும் அனைத்தையும் தனக்கு பொருத்தமில்லை என்று உதறும் தன்மையை தரும், 12ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகியின் எல்லை இல்லா கற்பனை வளத்தை காட்டுவதால், தனது வாழ்க்கை துணை பற்றிய அதிதீவிரமான கற்பனை தேடுதல் மூலம் தனக்கு வரும் வரன்களின் ஜாதகங்கள் அனைத்தையும் தவிர்த்து வருகிறார்.

இதை பார்க்கும் பொழுது கிராமங்களில் பெரியோர் சொன்ன பலமொழிதான்  நமக்கு  ஞாபகம் வருகிறது "ஆசை இருக்கு தாசில் செய்ய அம்சம் இருக்கு கழுதை மேய்க்க" என்பதற்கு இணங்க ஜாதகியின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது, வயது 30க்கு மேல் முடிந்து விட்டது ஜாதகியின் லக்கினம்,குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் திருமண வாழ்க்கையை அமைத்து தாராமல், ஜாதகியை முதிர்கன்னியாக மாற்றிவிட ஆயத்த நிலையில் இருப்பது மறுக்க இயலாத உண்மை அன்பர்களே !

ஜாதகி தனது கற்பனை கணவனை மண்ணில் போட்டு புதைத்து விட்டு, தனக்கு வரும் 2,7ம் பாவகங்கள் வலிமை பெற்ற ஜாதகத்தை தேர்வு செய்து நல்ல இல்லறத்தை நடத்துவதே நல்லது, திருமணத்திற்கு பிறகு இன்னல்கள் வந்த போதிலும் அதை தனது கர்ம வினை பதிவின் விளைவு என உணர்ந்து, தனது இல்லற வாழ்க்கையை செம்மையாக நடத்துவதே சால சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696