திங்கள், 30 நவம்பர், 2015

ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருக்கிறது என கூறுகிறார்கள் . அது தோசமா அல்லது யோகமா ஐயா விளக்கம் தேவை ?


கேள்வி : 

ஐயா வணக்கம் ,

எனது பெயர் பெருமாள்,
எனது பிறந்த தேதி :26/12/1986
நேரம் :00:30 ( 25/12/1986 இரவு 12.30மனி) 
பிறந்த இடம் :சேலம் மாவட்டம், 

எனது ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருக்கிறது என கூறுகிறார்கள் . அது தோசமா அல்லது யோகமா ஐயா விளக்கம் தேவை .
தங்களின் பதிலை எதிர்நோக்கி இருக்கிறேன் 
நன்றி.


பதில் :

கால சர்ப்ப தோஷம் அல்லது யோகம் என்று ஜோதிடர்களால் பெருவாரியாக வர்ணிக்கப்படும் நிலை தங்களது ஜாதகத்தில் அமைந்துள்ளது கவனிக்க தக்க அம்சமே, சாயா கிரகங்களான ராகு கேது ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் 7ம் பாவகங்களில் அமரும் பொழுதும், ராகு கேது க்கு மத்தியில் மற்ற அனைத்து கிரகங்களும் அடைபடும் நிலைக்கு கால சர்ப்ப தோஷம் என்று வர்ணிக்க படுகிறது, இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விஷயமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, காரணம் மேற்கண்ட நிலையை வைத்து தோஷம் அல்லது யோகம் என்று நிர்ணயம் செய்வது சுய ஜாதகத்தில் உண்மையான பலாபலன்களை தெளிவாக கூறுவதற்கு நிச்சயம் உதவாது என்பதே உண்மை அன்பரே!

இதற்க்கு ஒரு படி மேலே சென்று கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகருக்கு கால சர்ப்ப தோஷம் உள்ள வாழ்க்கை துணையையே மணம்முடிப்பது சரியானதாக அமையும் என்று நிர்ணயம் செய்பவர்களும் உண்டு, இதை காரணமாக வைத்து  கொண்டு பல திருமணங்கள் நடைபெறாமல் உள்ளதும்  வருந்தத்தக்க விஷயமே, சுய ஜாதகத்தில் நவ கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததும், தான் அமர்ந்த பாவகத்தின் தன்மையையும், தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் தன்மையையும் தானே பொறுப்பேற்று யோக அவயோக பலன்களை வாரி வழங்கும் தன்மை சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேதுவுக்கு உள்ள  தனித்தன்மை, எனவே சுய ஜாதகத்தில் ராகு கேது தான் அமர்ந்த பாவகத்தின் தன்மையையும், வலிமை நிலையையும் உணர்ந்து சுய ஜாதகத்தில் பலன் காண முற்படுவதே சுய ஜாதகத்தில் துல்லியமான பலன்களை  கூறுவதற்கு வழிவகுக்கும்.

உதாரணமாக தங்களது ஜாதகத்தில் சாயா கிரகங்கள் முறையே ராகு 7ம் பாவகத்திலும், கேது லக்கினத்திலும் அமர்ந்துள்ளனர், ஆனால் ராகு கேதுவுக்கு  இடையிலே எந்த ஒரு கிரகமும் அகப்படவில்லை எனவே இது கால சர்ப்ப தோஷ ஜாதக நிலை அல்ல ( மற்ற ஜோதிடர்களின் கூற்றுப்படி ) மேலும் தங்களது சுய ஜாதக அமைப்பின் படி இலக்கின பாவகத்தை கேது பகவானும், களத்திர பாவகத்தை ராகு பகவானும் முழுமையாக ஆளுமை செய்கின்றனர் என்பது மட்டும் உண்மை நிலை.

தங்களது ஜாதகத்தில் லக்கினத்தில் அமர்ந்த கேது பகவான் தங்களுக்கு சம வீடு என்ற அமைப்பில் 100% விகித நன்மைகளை தங்கு தடையின்றி வாரி வழங்குகிறார், லக்கினத்தில் அமர்ந்துள்ள மற்றொரு கிரகமான சந்திரனின் தன்மையையும் தானே பெற்று, தங்களுக்கு லக்கினத்தை 100% வலிமையையும், இலக்கின வழியில் இருந்து பல நன்மைகளையும் யோகங்களையும் பெறுவதற்கு காரணமாக அமைகிறார், இதனால் தாங்கள் நல்ல உடல் அமைப்பு, சிறந்த மன நலம், சிறந்த ஞானம், ஆரோக்கியம், புகழ் மற்றும் கீர்த்திகளை பெறுவதற்கு உண்டான சந்தர்பங்கள் கூடி வரும் தன்மை என யோக பலன்களை கேது பகவான 100% வழங்குகின்றார்.

தங்களது ஜாதகத்தில் களத்திர பாவகத்தில் அமர்ந்துள்ள ராகு பகவான், கேந்திர பாவகத்திற்க்கு அதிபதியாக கோண அதிபதி வருவதால், 100% சதவிகித அவயோக பலன்களை களத்திர பாவக வழியில் இருந்து வாரி வழங்குகின்றார், எனவே தாங்கள் வாழ்க்கை துணை வழியில் இருந்தும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் அமைப்பில் இருந்தும் மிகுந்த இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது ராகு பகவான் என்பதாலும், உபய நீர் தத்துவம் கொண்ட பெண் ராசி என்பதாலும், தாங்கள் அதிக அளவில் எதிபால் இன அமைப்பில் இருந்து மன போராட்டங்களையும், மன கவலைகளையும் எதிர்கொள்ளும் தன்மையை தரும், குறிப்பாக வீண் விரையன்களை தவிர்க்க இயலாது என்பது கவனிக்க தக்கது.

தங்களது சுய ஜாதக அமைப்பின் படி லக்கினத்தில் அமர்ந்த கேது 100% சதவிகித நன்மை மற்றும் யோகத்தையும், 7ம் பாவகத்தில் அமர்ந்த ராகு 100% சதவிகித  தீமை மற்றும் அவயோகத்தையும் வாரி வழங்குகின்றனர் என்பது தெள்ள தெளிவாக உறுதியாகிறது, இனி 1ம் பாவக பலனை எந்த எந்த கிரகங்களின் திசை புத்தி ஏற்று நடத்துகிறது, 7ம் பாவக பலனை எந்த எந்த கிரகங்களின் திசை புத்தி ஏற்று நடத்துகிறது, என்ற விஷயம் தெரிந்தால் போதும் தங்களின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைத்துக்கொண்டு மிகப்பெரிய முன்னேற்றங்களை பெறலாம், மேலும் 1,7ம் பாவக வலிமையை தெரிந்து கொண்டது போலவே, மற்ற பாவகங்களின் நிலையையும் தெரிந்துகொண்டால் வாழ்க்கையில் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள இயலும், மேலும் விபரங்களுக்கு நேரில் அணுகவும் அல்லது மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 29 நவம்பர், 2015

ஜாதக ஆலோசனை : சனி மஹா திசை நரக வாழ்க்கையை தருமா ?

கேள்வி : 

என் பெயர் கார்த்திக்
நான் நேற்று முன்தினம் ஒரு ஜோதிடரை பார்த்தேன் அவர் என்னுடைய ஜாதகத்தை கணித்து உங்களுக்கு இபொழுது நடக்கும் திசை குரு திசை சுகர புத்தி அதனால் உங்களுக்கு இந்த குருதிசை ஓரளவு நல்ல பலன் தருவார்,
அடுத்து வரும் சனி மகா திசை 19 ஆண்டு காலம் அதில் நீங்கள் பல பிரச்னையை மற்றும் துன்பங்களை  நீங்கள் சந்திக்க கூடும் அது மற்றும் இன்றி நீங்கள் ஒரு சன்யாசி வாழ்க்கை  வாழ நேரிடும் (திருமணம் ஆகாது) என்று சொன்னார்

நான் சொந்த தொழில் செய்யலாமா என்று கேட்டேன் அதற்க்கு நீங்கள் சொந்த தொழில் செய்ய கூடாது செய்தால் அது உங்களுக்கு மிக பெரிய இளப்பை தரும், மற்றும் நீங்கள் கூட்டு சேர கூடாது .... யாருக்கும் ஜாமீன் கையப்போம் போடகூடாது என்று  சொன்னார், கடைசியாக உங்களுக்கு குரு திசை முடிந்தவுடன் உங்கள் வாழ்க்கை ஒரு நரகம் ஆகிவிடும் என்று  சொல்லி ஜாதகத்தை மூடிவிட்டார்,அதில் இருந்து தூக்கம் வரவில்லை, தயவு செய்து ஒரே வரியில் பதிலை முடித்து விடுங்கள்

நன்றி.


பதில் : 

தங்களது ஜாதகத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு திசை மற்றும் எதிர்வரும் சனி திசை தங்களுக்கு ஏற்று நடத்தும் பாவக பலன்களை ஆய்வு செய்வோம் அன்பரே !

குரு திசை தங்களுக்கு ஜீவன ஸ்தானமான 10ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது தங்களுக்கு குரு திசையில் சரியான உத்தியோகம் இல்லாத சூழ்நிலையை தந்தாலும், வியாபாரம் அல்லது விபாரம் சார்ந்த ஆலோசனை வழங்கும் துறையில் சிறந்த ஜீவனத்தை தரும், மற்றும் மற்றவருக்கு உதவி செய்வதின் மூலம் லாபம் பெரும் யோகத்தை தரும் என்பதால், தரகு சார்ந்த தொழில்களை தேர்வு செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம்.

குரு திசையில் சுக்கிரன் புத்தியும் ஜீவன ஸ்தானமான 10ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது வரவேற்க தக்க அம்சமாகவே கருதலாம், திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் 2,7ம் வீடுகளில் 2ம் வீடு மட்டும் சிறு பாதிப்பை பெற்று இருப்பது திருமணத்தை தாமதம் செய்யும், ஆனால் நிச்சயம் திருமண வாழ்க்கை அமையும், 7ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது கூட்டு தொழில் அல்லது கூட்டு முயற்ச்சியின் மூலம் நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், சிறந்த வாழ்க்கை துணை அமையும், நண்பர்கள் மற்றும் வாழ்க்கை துணை வழியில் இருந்து சிறந்த முன்னேற்றங்களை பெரும் யோகம் உண்டாகும், வெளிநாடுகளிலும் வியாபரத்திலும் தாங்கள் மிகப்பெரிய வெற்றிகளை பெறுவதற்கு சந்தர்ப்பங்களை வாரி வழங்கும்.

பொதுவாக சனி திசை என்றாலே தீமையை மட்டுமே செய்யும் என்ற கணிப்பின் படியே தங்களுக்கு மேற்கண்ட பலன்களை அந்த ஜோதிடர் கூறியிருக்க வேண்டும், தங்களது ஜாதகத்தில் சனி மஹா திசை எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்ற விஷயம் தெரியாமல், அந்த ஜோதிடரும் குத்து மதிப்பாக தங்களுக்கு பலன்களை சொல்லியிருக்க கூடும், உண்மையில் தங்களுக்கு எதிர் வர இருக்கும் சனி மஹா திசை உயிர் உடலாகி 1ம் வீடு இலக்கின பாவகமான 1ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது சனி திசை நடைமுறையில் உள்ள 19 வருடங்களுக்கும் மிகுந்த யோக பலன்களையே நடைமுறை படுத்துவார் என்பது 100% மறுக்க இயலாத உண்மை, மேலும் தங்களது லக்கினம் சர நெருப்பு தத்துவத்தில் 3 பாகைகளும், ஸ்திர மண் தத்துவத்தில் 25 பகைகளும் வியாபித்து இருப்பது, சனி திசை முழுவதும் ஸ்திரமான நன்மைகளை விரைவாக வாரி வழங்கும், தங்களின் லக்கினம் பெரும்பாலும் ரிஷப ராசியிலேயே அதிகம் வியாபித்து இருப்பது மிகுந்த நன்மைகளையும், சிறந்த வருமான வாய்ப்புகளையும், வாக்கு அல்லது பேச்சு திறமையின் மூலம் அபரிவிதமான வெற்றிகளை வாரி வழங்கும்.

தங்களது சுய ஜாதக அமைப்பின் படி எதிர்வரும் சனி திசை இலக்கின பாவக பலனையே ஏற்று நடத்துவதால் சிறந்த உடல் மற்றும் மன நிலையை தரும், எடுக்கும் காரியங்களின் வெற்றியையும், கீர்த்தியையும் தரும், நோய் எதிர்ப்பு சக்தி கூடும், எனவே சனி திசை தங்களுக்கு தீமையை செய்யும் என்ற பொய்யான ஜாதக பலன்களை நம்பி, சிறந்த எதிர்கால வாழ்க்கையை தாங்களே கெடுத்து கொள்ள வேண்டாம், வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றங்களை பெறுவதற்கு உண்டான ஆயத்த வேளைகளில் ஸ்திரமாக பணியாற்றி நன்மையை பெறுங்கள்.

தங்களது ஜாதக ரீதியான மேற்கண்ட பலன்களுக்கு முறையான ஜோதிட ஆலோசனை, நேரிலோ அல்லது மின் அஞ்சல் வழியாகவோ முறையாக பெற்று கொள்ளவும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696