திங்கள், 29 பிப்ரவரி, 2016

சுப கிரகமான குருபகவான் தனது திசாபுத்தி காலங்களில் அவயோகத்தை தருவது ஏன் ?


இயற்க்கை சுபகிரகங்கள் தனது திசா புத்தி காலங்களில் யோக பலன்களை தரும் என்று கணிப்பது முற்றிலும், சுய ஜாதக கணிதத்திற்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, சுப கிரகமோ, பாவ கிரகமே தனிப்பட்ட பலாபலன்களை ஜாதகருக்கு தருவதில்லை, சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமைக்கு ஏற்ப, தனது திசையில் குறிப்பிட்ட ஒரு பாவகத்தின் பலனையோ அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்ட பாவகங்களின் பலனையோ ஏற்று நடத்துகிறது என்பதே உண்மை, சுப கிரகங்களின் திசா புத்திகள் ஜாதகருக்கு நன்மையை தரும், பாவக கிரகங்களின் திசா புத்திகள் ஜாதகருக்கு தீமையை தரும் என்று கணிப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான கற்பனையே அன்றி வேறு எதுவும் இல்லை, சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் பலாபலன்களையே நவகிரகங்கள் தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் ஏற்று நடத்துகிறது என்பதே 100% விகித உண்மையாகும், எனவே சுய ஜாதகங்களில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமையாக இருப்பின், நடைபெறும் பாவக கிரகத்தின் திசா புத்திகளும், தாம் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நன்மையையும் யோகத்தையும் வாரி வழங்கும், மாறாக லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை அற்று இருப்பின், சுப கிரகங்களின் திசாபுத்திகள் நடைபெற்றாலும், தாம் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு அவயோக பலன்களே நடைமுறைக்கு வரும்.

இதற்க்கு சரியான உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் பெறுவோம் அன்பர்களே !

ஜாதகருக்கு லக்கினம் : துலாம் 
ஜாதகருக்கு ராசி : மகரம் 
ஜாதகருக்கு நட்சத்திரம் : உத்திராடம் 4ம் பாதம் 


சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு  தற்பொழுது குரு திசை நடைமுறையில் உள்ளது, இதற்க்கு முன் நடந்த ராகு திசையில் செவ்வாய் புத்தி காலத்தில் இருந்து ஜாதகரின் வாழ்க்கையில் அதிக அளவு இன்னல்களையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆளானார், குறிப்பாக ஜாதகரின் வேலை பறிபோனது, வருமான வாய்ப்புகளை இழந்தார், கடன் சார்ந்த தொந்தரவுகள், திடீர் இழப்புகளை ஜாதகர் தவிர்க்க இயலாத சூழ்நிலைகளை சந்திக்கும் தன்மையை தந்தது, ராகு திசை முடிந்து, குரு திசை ( 11ல் குரு ) ஜாதகருக்கு யோகத்தை தரும் என்ற எண்ணத்தில் மிகப்பெரிய இடியே விழுந்தது, குரு திசை குரு புத்தியும் ஜாதகருக்கு மிகுந்த துன்பங்களையே வழங்கி கொண்டு இருப்பது, ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது, ஜாதகர் மேற்கண்ட இன்னல்களை சந்திக்க காரணம் என்ன ? சுப கிரகமான குரு தனது திசையில் ஏன் நன்மையை செய்யவில்லை என்பதை இனி "ஜாதக ரீதியாக" ஆய்வு செய்வோம் அன்பர்களே!

சம்பந்த பட்ட ஜாதகருக்கு கடந்த ராகு திசை 1ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தந்த போதிலும், ராகு திசை செவ்வாய் புத்தி நடைமுறைக்கு வந்த உடன் செவ்வாய் புத்தி ஜாதகருக்கு 4ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக்த்துடன் சம்பந்தம் பெற்று, ஜாதகரின் வருமானத்திற்கும் சுக போக வாழ்க்கைக்கும்  தடைகளை வழங்கியது ( 8ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்பம் மற்றும் தன ஸ்தானமாக  அமைகின்றது ) மேலும் ஜாதகருக்கு தற்பொழுது  (12/07/2015 முதல் 29/08/2017 வரை) நடைபெறும் குரு திசை குரு புத்தியும் 12ம் வீடு  விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை தருவது ஜாதகரின் மன நிம்மதி இழப்பு, வீண் விரையங்கள், மன அழுத்தம் மற்றும் மன போராட்டம் என்ற வகையில் அதிக இன்னல்களையே வாரி வழங்குவது ஜாதகருக்கு சாதகமற்ற சூழ்நிலையே நீடிப்பது உறுதியாக தெரிகிறது, சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் குரு பகவான் ஜாதகருக்கு வலிமை அற்ற 12ம் பாவக பலனை தனது திசை மற்றும் புத்தியில் ஏற்று நடத்துவது ஜாதகருக்கு விரைய ஸ்தான வழியில் இருந்து அதிக  அளவு இன்னல்களையே தரும் என்பது கவனிக்க தக்க விஷயமாகும்.

ஜாதகரின் கேள்வி :

திருமணம் தாமதம் ஆக காரணம் என்ன?

சுய ஜாதகத்தில் 2ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று வலிமை இழப்பதும், 8ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  குடும்ப ஸ்தானமாக அமைந்து பாதிக்க படுவதும் ஜாதகரின் திருமண வாழ்க்கையில் தாமதத்தையும் தடைகளையும் தருகிறது.

வேலை தொழில் எப்பொழுது அமையும் ?

நிச்சயம் சுய தொழில் அமைய வாய்ப்பில்லை சுய ஜாதகத்தில் 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது சுய தொழில்  வாய்ப்பை கனவாக்கும், 7ம் பாவகம் வலிமை பெறுவதால் கூட்டு தொழில் அல்லது திருமணதிற்கு பிறகு கூட்டு தொழில் துவங்குவதால் நல்ல  வெற்றிகளை பெற இயலும், மேலும் வெளிநாடுகளில் நல்ல ஜீவன முன்னேற்றத்தை தரும், லக்கினம் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகர் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவது அல்லது  அடிமை தொழில் மேற்கொள்வதே ஜாதகரின் வாழ்க்கையில் சகல  நலன்களையும் தரும்.

தற்பொழுது நடைபெறும் குரு திசையில், குரு புத்தி, சனி புத்தி மற்றும் புதன் புத்திகள் சிறப்பான ஜீவன முன்னேற்றத்தை வழங்க வாய்ப்பில்லை என்பதால், ஜாதகர் ஏதாவது வேலையை தேடிக்கொள்வது சால சிறந்தது, மேலும் வெளியூரில் சென்று வலை பார்ப்பது சகல நன்மைகளையும், திருமண யோகத்தையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

தொழில் வெற்றிகளை வழங்கும் ஜீவன ஸ்தான வலிமையையும், அபரிவிதமான லாபங்களை வழங்கும் 11ம் பாவக வலிமையையும் !




தொழில் ஸ்தானம் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, சிறப்பான ஜீவனத்தை தருவது என்பது இயற்கையானதே, ஜாதகரின் உழைப்பும், ஆர்வமும் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றங்களை தரும் என்பதில் சந்தேகம் இல்லை, இருப்பினும் சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமை பெரும் பொழுதே ஜாதகரின் உழைப்பிற்கு ஏற்ற பலன்களை ஜாதகரால் அனுபவிக்க இயலும், ஒருவேளை சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று, லாப ஸ்தானம் ஏதாவது ஒரு வகையில் வலிமை இழப்பின் ஜாதகரின் உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் எதுவும் கிடைக்காது, மற்றவர்களுக்காக உழைக்கும் சூழ்நிலையும், தமது உழைப்பிற்கு ஏற்ற பலாபலன்களை மற்றவர்கள் சுவிகரிக்கும் நிலையையும் தரும், ஜாதகருக்கு எவ்வித லாபமும், உழைப்பிற்கு ஏற்ற பலனும் கிடைக்காது, எனவே சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு தொழில் ரீத்யான திறமைகளையும், செய்யும் தொழில் வழியில் வல்லமையை தந்த போதிலும், லாப ஸ்தானம் வலிமை பெற்றால் மட்டுமே ஜாதகர் உழைப்பிற்கு உண்டான பலன்களை தான் பரிபூரணமாக அனுபவிக்க இயலும்.

ஜீவன ஸ்தான வலிமையையும், லாப ஸ்தான வலிமையையும், ஜாதகருக்கு வழங்கும் பலன்களை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே!


லக்கினம் : தனுசு 
ராசி : கும்பம் 
நட்சத்திரம் : சதயம் 4ம் பாதம்

ஜாதகருக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகரின் ஜீவன மேன்மையை உறுதி செய்கிறது, மேலும் ஜாதகர் தான் செய்யும் தொழிலில் சிறப்பான திறமைகளையும், சிறந்த அனுபவங்களையும் பெற்றவராக திகழ்வது ஜீவன ஸ்தான வலிமையே காரணம், ஜீவன ஸ்தானம் ஜாதகருக்கு உபய ராசியில் ஆரம்பிப்பது, ஜாதகர் தான் செய்யும் தொழிலில் செய்யும் முதலீட்டின் தன்மையை தெளிவு படுத்துகிறது, ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கன்னி ராசியில், உபய மண் தத்துவத்தில் இயக்கம் பெறுவதும் ஜீவன ஸ்தான அதிபதியாக சனி பகவான் அமர்வதும், மண் தத்துவம் சார்ந்த மண்ணில் விளையும் பொருட்கள் மற்றும் மண்ணில் இருந்து கிடைக்கும் உலோகம்  போன்ற பொருட்கள் வழியில் இருந்து ஜீவனத்தை நடத்தும் யோகத்தை தந்தது, ஜீவன ஸ்தானம் உபய கன்னி ராசியாக அமைவதால் ஜாதகரின் முதலீடு என்பது வெறும் 30% விகிதத்தில்  அமைந்தது.

ஜாதகருக்கு 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் பெறும் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தின் தன்மையை தெளிவு படுத்துகிறது, லாப ஸ்தானம் ஜாதகருக்கு சர காற்று தத்துவ  ராசியான துலாம் ராசியில் அமைவது, தனது உழைப்பின் பலனை தனது அறிவு திறனின் மூலம் பன்மடங்காக அபிவிருத்தி செய்யும் யோகத்தை பெறுகிறார், ஜீவன ஸ்தானம் உபய ராசியிலும், லாப ஸ்தானம் சர ராசியிலும் அமைந்து வலிமை பெறுவது, ஜாதகர் குறைவான முதலீட்டில் பலமடங்கு லாபத்தை தன்னிறைவாக பெறுவதை காட்டுகிறது, மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது ஜாதகர் தாம் பெரும் லாபத்தின் பலனை அனுபவிக்கும் தன்மையையும், 2ம் பாவகம் வலிமை பெறுவது  நிறைவான நிலையான வருமானத்தை பெரும் யோகத்தையும், 3ம் பாவகம் வலிமை பெறுவது வியாபரம் மற்றும் கமிஷன் மூலம் அபரிவிதமான  வெற்றிகளையும், 5ம் பாவகம் வலிமை பெறுவது நுணுக்கமான அறிவு மற்றும் புத்திசாலிதனத்தையும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளும் தன்மையையும், 7ம் பாவகம் வலிமை பெறுவது தொடர்ந்து மக்கள் ஆதரவையும், வியாபர வெற்றிகளையும், ஏற்றுமதி இறக்குமதி  தொழில் வெற்றிகளையும், வாழ்க்கை துணை மற்றும் கூட்டாளிகள், நண்பர்கள் வழியில் இருந்து அதிர்ஷ்டத்தையும்,  நன்மைகளையும் ஜாதகர் பரிபூரணமாக அனுபவிக்கும் தன்மையை தருவது  ஜாதகர் மற்றும் ஜாதகரின் முன்னோர்கள் செய்த பாக்கியமே.

மேலும் ( 30/10/1996 முதல் 31/10/2013 வரை நடைபெற்ற ) புதன் திசை 17 வருடம் ஜாதகருக்கு லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தியது செய்யும் தொழில் 100% விகித லாபத்தை தங்கு தடையின்றி வாரி வழங்கியது, மேற்கண்ட புதன் திசை காலத்தில் ஜாதகரின் வளர்ச்சி என்பது சமூகத்திலும்  சரி உலகளவிலும் சரி மிகப்பெரிய அந்தஸ்தையும், கௌரவ  பதவிகளையும் வாரி வழங்கியது, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமை பெற்றதும் அல்லாமல், சரியான வயதில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தியது மிகப்பெரிய யோக வாழ்க்கை வாரி வழங்கியது.

தற்பொழுது நடைபெறும் கேது திசை ( 31/10/2013 முதல் 30/10/2020 வரை ) ஜாதகருக்கு 3ம் பாவக பலனை ஏற்று நடத்துவது வீரியமிக்க வெற்றிகளையும், வியாபர லாபங்களையும், நிறைவான சொத்து சுக சேர்க்கைகளையும் தங்கு தடையின்றி வாரி வழங்குகிறது. எனவே ஜாதகருக்கு கேது திசையும் மிகுந்த யோகத்தையே தருகிறது.

அடுத்து வரும் சுக்கிரன் திசையும் ஜாதகருக்கு பாக்கிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது தனது வாழ்க்கையின் பரிபூர்ணத்துவத்தை அடைய செய்யும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை, மேலும் சுய ஜாதகத்தில் அனைத்து பாவகங்களும் வலிமை பெறுவதும், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்துவதும், ஜாதகரின் வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார முன்னேற்றங்களை வாரி வழங்கும் என்பது  கண்கூடான உண்மை, ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது தொழில் வெற்றியையும், லாப ஸ்தானம் வலிமை பெறுவது பெற்ற வெற்றியை ஜாதகர் அனுபவிக்கும் யோகத்தையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

சனி பகவான் கொடுப்பின் எவர் தடுப்பார் ?


ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் வாரி வழங்கும் வல்லமை லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்திர்க்கு உண்டு, சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமை பெறுவது ( சர இலக்கின அன்பர்களை தவிர ) சம்பந்த பட்ட ஜாதகருக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தையும், நிறைவான லாபத்தையும் நிச்சயம் தரும், மேலும் ஜாதகர் தனது பிறவி பலனை முழுவதும் பெரும் யோகமும் உண்டாகும், ஜாதகரின் எண்ணங்கள் யாவும் பலிதம், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும், காலபுருஷ தத்துவத்திற்கு 10,11க்கு அதிபதியான சனி பகவான், சுய ஜாதகத்தில் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக அமர்ந்தால், ஜாதகரின் யோக வாழ்க்கைக்கும், அதிர்ஷ்டங்களுக்கும் குறைவேதும் இருக்காது, தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம், எண்ணிய காரியங்கள் வெற்றி, செய்யும் தொழிலில் எதிர்பாராத லாபங்கள் ஜாதகரை வந்து சேரும், சனி பகவான் இன்னல்களையே தருவார் என்ற கூற்றை இங்கே உடைத்தெறிந்து ஜாதகரின் யோக வாழ்க்கைக்கு தாமே காரணம் என்று நிருபித்து " சனி கொடுப்பின் எவர் தடுப்பார்" என்ற வாக்கினை 100% விகிதம் உறுதி செய்வார்.

சனிபகவான் தரும் யோகம் பற்றி இந்த பதிவில் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே!


ஜாதகருக்கு லக்கினம் : சிம்மம் 
ஜாதகருக்கு ராசி : துலாம் 
ஜாதகருக்கு நட்சத்திரம் : சித்திரை 4ம் பாதம் 

ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை :

1,3,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு  பெறுவது ஜாதகருக்கு  11ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோகத்தை தரும்.

4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 10ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோகத்தை தரும்.

5,9ம் வீடுகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெறுவது பாதக ஸ்தான வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும்.

2,6ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை தரும்.

8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக்த்துடன் சம்பந்தம் பெறுவது, 12ம் பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை தரும்.

மேற்க்கண்டவையே ஜாதகரின் பாவக வலிமைக்கு உண்டான பொது பலன்கள், இதில் 1,3,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாக கருதலாம், கால புருஷ தத்துவத்திற்கு 10,11க்கு உடைய சனிபகவான் ஜாதகருக்கு எந்த எந்த பாவகத்திர்க்கு அதிபதியாக வருகிறார், என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே, இந்த ஜாதகருக்கு 1,3,7 மற்றும் 11ம் பாவகங்களுக்கு அதிபதியாக சனிபகவானே வருவது கவனிக்க தக்க  அம்சமாகும், மேலும் 1,3,7,11ம் பாவகங்கள் தொடர்பு பெறுவது லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே என்பதும், 11ம் பாவகத்திர்க்கு அதிபதியாக சனி பகவானே வருவதும், ஜாதகரின் வாழ்க்கையில் சனிபகவான் லாப ஸ்தான வழியில் இருந்து யோகங்களை வாரி கொடுக்கும் நிலையில்  இருப்பது தெளிவாகிறது.

எனவே ஜாதகர் இலக்கின வழியில் இருந்து சிறப்பாக வளரும் சூழ்நிலையையும், நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும், சிறந்த கல்வி யோகத்தையும், தன்னம்பிக்கை மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்ட மனதினையும், எந்த சூழ்நிலையையும் சிறப்பாக எதிர்கொள்ளும் வல்லமையும்  பெற்று இருப்பதும் , 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும்  முயற்ச்சியில் வெற்றியையும், சிறந்த அறிவு திறனையும், வீரியமிக்க செயல்களால்  வெற்றிகளையும், சாஸ்திர ஞானத்தையும், மிதமிஞ்சிய மனோ தைரியத்தையும், எதிலும் துணிவுடன் செயல்படும் வல்லமை கொண்டவராகவும், 7ம் பாவக வழியில் பொது வாழ்க்கையில்  அதிர்ஷ்டத்தையும், வாழ்க்கை துணை  வழியில் இருந்து ஒத்துழைப்பையும், நண்பர்கள்  மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து முன்னேற்றத்தையும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்து வரும் யோகத்தை பெறுபவராகவும், 11ம் பாவக  வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டத்தையும், நிலையான யோக வாழ்க்கையையும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் யோகம் பெற்றவராகவும் , தன்னம்பிக்கையும் மனோ தைரியத்தையும் நிறைவாக பெற்றவராகவும் காணப்படுகிறார், மேற்கண்ட 1,3,7,11ம் பாவகங்களுக்கு அதிபதியாக சனி பகவான் அமர்வது ஜாதகரின் அதிர்ஷ்டம் மற்றும் யோக வாழ்க்கையை தங்கு தடையின்றி தாம் அதிபதியாக உள்ள பாவகங்கள் வழியில் இருந்து ஜாதகருக்கு யோகங்களை வாரி வழங்கி கொண்டு இருக்கிறார்.

ஜாதகருக்கு 1,3,7,11ம் பாவகங்களுக்கு அதிபதியாக சனிபகவான் அமர்ந்தது மட்டுமே ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்கவில்லை,  இதற்க்கு முன் ( 14/12/1998 முதல் 14/12/2014 வரை) நடைபெற்ற குரு திசையும், தற்பொழுது ( 14/12/2014 முதல் 14/12/2033 வரை ) நடைபெறும் சனி திசையும் ஜாதகருக்கு  1,3,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்ற லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தியதே ஜாதகரின் யோக வாழ்க்கைக்கு காரணமாக அமைந்தது, எனவே சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது மட்டும் யோகத்தை தாராது, நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு யோக பலன்கள் நடைமுறைக்கு வரும், மேலும் ஜாதகருக்கு லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான் தனது காரக துவத்தில் இருந்து யோகங்களை வாரி வழங்குவது கண்கூடான உண்மை.

ஜாதகரின் அதிர்ஷ்ட நிறம் சாம்பல், 
ஜாதகரின் அதிர்ஷ்ட எண்  எட்டு.
ஜாதகரின் அதிர்ஷ்ட நாள் சனி,

என தனது காரக துவத்தில் இருந்து சனி பகவான் ஜாதகருக்கு தொடர்ந்து யோகங்களை வழங்கி கொண்டு இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், எனவே சனி பகவான் ஒரு ஜாதகருக்கு யோகங்களை வாரி வழங்க ஆரம்பித்துவிட்டால் அதை தடுக்க எவராலும் இயலாது என்ற கூற்று முற்றிலும் உண்மையே.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 24 பிப்ரவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - மிதுன லக்கினம்


சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியான மிதுன ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 3ல் ராகு பகவானும், 9ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

மிதுன இலக்கின சிறப்பு இயல்புகள் :

மிதுன  ராசியை  லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு லக்கினம் வலிமை பெரும் பொழுது, ஜாதகரின் அறிவு திறன் மேம்படும், சிந்தனையும் செயல்திறனும் ஜாதகரின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும், தனது அறிவுக்கு உகந்த செயல்களில் மட்டும் ஆர்வத்தை காட்டும் அன்பர்களாக திகழ்வார்கள், எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது லட்சியம் மற்றும் முடிவில் இருந்து மாறாமல் செயல்பட்டு முன்னேற்றம் காண்பவர்கள், "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற குறளுக்கு பொருத்தமான அன்பர்கள் எனலாம், மிதமிஞ்சிய அறிவுத்திறனும், புத்திசாலித்தனமும் இருந்த போதிலும், பொருளாதார ரீதியான இன்னல்களை சந்தித்த வண்ணமே இருப்பார்கள், சாஷ்திரத்தில் நல்ல ஞானமும் பண்டித்தியமும் உண்டாகும், நல்ல உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இயற்கையாகவே அமையும், சரியான வாய்ப்புகள் அமைந்தால் சிறந்த சாதனைகளை படைக்கும் யோகம் பெற்றவர்கள், தன்னம்பிக்கை குறையாது வாழ்க்கையில் தொடர் வெற்றிகளை சரியான திட்டமிடுதல்களுடன் பெரும் யோகதாரிகள், சிறந்த நிர்வாக திறமைகளை தமக்கு அமையும் வாய்ப்புகளில் பிரகாசிக்க செய்யும் வல்லமை பெற்றவர்கள், தமக்கு வரும் சவால்களை சிறப்பாக எதிர்கொண்டு வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகளை செய்யும் யோகத்தை தரும், எதிர்பாராத அதிர்ஷ்டம் மிதுன இலக்கின அன்பர்களுக்கு கிடைத்த போதிலும், அதை பொது நலனுக்காக பயன்படுத்தும் தன்மை கொண்டவர்கள், இயற்கையாகவே மிதுன இலக்கின அன்பர்களுக்கு புலனுக்கு அப்பாற்ப்பட்ட அறிவு திறன் சிறப்பாக செயல்படும் என்பதால், ஜாதகர் யூகிக்கும் விஷயங்கள் மிகவும் சரியாக நடைபெறும், இதனால் எதிர்காலத்தில் நடைபெறுவதை துல்லியமாக உணரும் சக்தியை சிறப்பாக பெற்று இருப்பார்கள், மிதுன இலக்கின அன்பர்களின் முன்னேற்றம் என்பது சீரிய இடைவெளியில் ஏறுமுகமாக ஜாதகரின் எண்ணத்தின் படி மிகவும் துல்லியமாக அமையும், தாம் திட்டமிட்டபடி வாழ்க்கையில் சகல யோகங்களையும் அனுபவிக்கும் தன்மையை தரும்.

கடந்த ராகு கேது பெயர்ச்சி மிதுன  இலக்கின அன்பர்களுக்கு 10ல் கேதுவின் சஞ்சாரமும், 4ல் ராகுவின் சஞ்சாரமும், 10ம் பாவக வழியில் இருந்து சிறு சிறு நன்மையையும், 4ம் பாவக வழியில் இருந்து அதிக இன்னல்களையும் வாரி வழங்கியது, தற்பொழுது பெயர்ச்சி பெற்றுள்ள  சாய கிரகங்கள், ராகு பகவானின் 3ம் பாவக சஞ்சார அமைப்பில் இருந்து மிதுன இலக்கின அன்பர்களுக்கு சகல காரியங்களிலும் வெற்றியை தரும், எடுக்கும் முயற்ச்சிகள் யாவிலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும், தன்னிறைவான வளர்ச்சி என்பது மிகவும் அபரிவிதமானதாக அமையும், பயணங்களில் நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், எதிர்பாராத வாய்ப்புகள் தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தகு மாற்றங்களை வாரி வழங்கும், கல்வியில் சிறப்பான வெற்றிகளும், அதிர்ஷ்டங்களும் உண்டாகும், ஆராய்ச்சி கல்வி சார்ந்த முயற்சிகளில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத வெற்றியும், சமூக கௌரவமும் கிடைக்கும், செல்லும் காரியங்கள் பலிதமாகும், பெரிய மனிதர்களின் உதவியும், மக்கள் செல்வாக்கும் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பத்தையும், பொருளாதார ரீதியான தன்னிறைவையும் வாரி வழங்கும், இதுவரை தடைகளை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்கள் அனைவரும்  சிறந்த வெற்றிவாய்ப்புகளை பெரும் யோகத்தை தரும், குறிப்பாக விளையாட்டு துறையில் உள்ள அன்பர்களுக்கும், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கும், பொதுவாழ்க்கையில் உள்ள அரசியல் நபர்களுக்கும் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும், கமிஷன் தொழில் அல்லது  தரகு சார்ந்த வியாபாரங்களை செய்து வரும் அன்பர்களின் வாழ்க்கையில் இனிவரும் காலம், வருமான வாய்ப்புகளை வாரி குவிக்கும், செய்யும் தொழில் அபரிவிதமான லாபங்களை வாரி வழங்கும், ஜீவன ரீதியான வளர்ச்சி என்பது மிதுன இலக்கின அன்பர்களுக்கு மிகவும் அபரிவிதமானதாக அமையும், அரசு துறை வேலை வாய்ப்புகளும், அரசு சார்ந்த கடன் உதவிகளும் மிதுன இலக்கின அன்பர்களை தேடி வரும், தனது வாழ்க்கைக்கான  அடிப்படை முன்னேற்றங்களை பெரும் யோககாலமாக  இந்த ராகுவின் சஞ்சாரம் மிதுன இலக்கின அன்பர்களுக்கு அமையும்.

மிதுன இலக்கின அன்பர்களுக்கு 9ல் கேதுவின் சஞ்சாரம், பெரிய அளவில் நன்மையை தர வாய்ப்பில்லை, குறிப்பாக தனது அறிவு திறனுக்கும், திறமைக்கும் உகந்த வரவேற்ப்பு என்பது மிகவும் அரிதாகவே அமையும், தனது திறமையை நிருபிக்க ஜாதகர் பல தோல்விகளை எதிர்கொள்ள வேண்டி வரும், மற்றவர் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் தான் உண்டு தன வேலை உண்டு என்று இருப்பது, மன நிம்மதியையும் வீண் விரையத்தையும் தவிர்க்கும், தமக்கு வரும் நல்ல வாய்ப்புகளை ஜாதகர் வீணடிக்கும் சந்தர்ப்பம் உண்டு என்பதால் , மிகுந்த விழிப்புணர்வுடன் நடந்துகொள்வதும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதும் ஜாதகரின் கடமையாகும், எதிர்பால் இன அமைப்பினருடன் அதிக கவனமாக பழகுவது மிகுந்த நன்மையை தரும், சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் தங்களுக்கு மிகப்பெரிய சவால்களை முன்னிறுத்தும் என்பதால், அனைத்தையும் கவனமாக கையாள்வது மிகுந்த நன்மையை தரும், மற்றவர்களுக்கு  உதவும் முன்  அதிக கவனம் தேவை, பொருளாதார ரீதியான சிக்கல்கள் அதிக அளவில்  வரும் என்பதால் திட்டமிட்ட பொருளாதார நடவடிக்கைகள் தங்களின் ஜீவன வாழ்க்கையை காப்பற்றும், கை பொருள் இழப்பை தவிர்க்கலாம்.

 மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி மிதுன இலக்கின அன்பர்களுக்கு 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சிகளில் வெற்றியையும், 9ம் பாவக வழியில் இருந்து நற்ப்பெயருக்கு களங்கத்தையும், இல்லற வாழ்க்கையில் இன்னல்களையும்  வழங்கும், மிதுன இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால்3ம் பாவக வழியில் இருந்து வெற்றிகளையும் , 9ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும் பெறுகின்றனர்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் மிதுன இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 03 மற்றும் 09 ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே யோக அவயோக  பலன்கள் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே மிதுன இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 03,09ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

பாதக ஸ்தானம் என்ன செய்யும்? பாதக ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் பெரும் அவயோக பலன்கள் என்ன?


சுய ஜாதகத்தில் தீமையான பலன்களை ஏற்று நடத்துவதில் துர் ஸ்தானம் மற்றும் மறைவு ஸ்தானம் என்று அழைக்கப்படும் 6,8,12ம் வீடுகளே அதிக பங்கு வகிப்பதாக பொதுவான கருத்து உண்டு, 6,8,12ம் வீடுகள் என்றாலே ஜாதகருக்கு இன்னல்களைதான் தரும் என்பதும், மேற்கண்ட பாவகங்களில் அமரும் கிரகங்களும் ஜாதகருக்கு மிகுந்த துன்பத்தையே தரும் என்ற உண்மைக்கு மாறான கருத்தும் பொதுவில் உள்ளது, சுய ஜாதகத்தில் அவயோக பலன்களை வாரி வழங்குவதில் முதன்மை வகிப்பது சம்பந்த பட்ட ஜாதகரின், பாதக ஸ்தான தொடர்புகளே, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 வீடுகளும் தொடர்பு பெற கூடாத பாவகம் ஒன்று உண்டு எனில் அது "பாதக " ஸ்தானமே என்றால் அது மிகையில்லை, ஒரு ஜாதகர் மறைவு ஸ்தானம் என்று வர்ணிக்கப்படும் 6,8,12ம் வீடுகளின் தொடர்பை பெரும் பாவகங்கள் வழியில் இருந்து பரிகாரங்கள் தேடுவதற்கு வாய்ப்புகள் உண்டு, ஆனால் பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க சிறுதும் வாய்ப்பில்லை என்ற உண்மையை உணர்வது அவசியமாகிறது, அதாவது ஜாதகர் கர்ம வினை பதிவை பாதக ஸ்தான வழியில் இருந்து அனுபவித்தே ஆகவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபடுவார் என்பது உறுதி, மேலும் பாதக ஸ்தான வழியில் இருந்து சிலர் அனுபவிக்கும் இன்னல்களுக்கு பல ஜோதிடர்கள் சனிபகவானை 
காரணகர்த்தாவாக கைகாட்டி விடுவது " ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் பூசாரி" என்ற பழமொழிக்கு ஒப்பானதாக அமைந்து விடுகிறது, ஒரு ஜாதகர் அதிக அளவில் இன்னல்களை சந்திப்பதற்கு காரணமாக சனிபகவான் இருக்கின்றார் என்ற கருத்தே அபத்தமான கருத்தாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

ஒரு ஜாதகர் எந்த பாவக வழியில் இருந்து இன்னல்களை தருகிறார் என்று அறியாமல், ஜாதகரின் துன்பத்திற்கும், இன்னல்களுக்கும், அவயோக பலன்களுக்கும், சனிபகவானே காரணம் என்று குற்றம் சாட்டுவது எவ்விதத்தில் தர்மம் என்று தெரியவில்லை, இதற்க்கு உச்சகட்ட வர்ணனையாக, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தஷ்டாம சனி, களத்திர சனி, குடும்ப சனி, புத்திர சனி என்று, வகைக்கு ஒரு நாமம் இட்டு சனிபகவானை வசைபாடுவது பொழுது போக்காகவே வைத்துள்ளனர் அன்பர்களே!

கிழ்கண்ட ஜாதகர் அனுபவித்த இன்னல்கள் அனைத்திற்கும் காரணம் சனிபகவானே என்ற கூற்றை சம்பந்தபட்ட ஜாதகருக்கு, அனைத்து ஜோதிடர்களும் தெரிவித்துள்ளனர், இந்த பதிவில் ஜாதகர் அனுபவித்த, அனுபவித்து கொண்டு இருக்கின்ற, அனுபவிக்க போகின்ற இன்னல்கள் அனைத்திற்கும் காரணம் என்ன என்பதை சற்று விரிவாகவே சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!


ஜாதகருக்கு லக்கினம் : மிதுனம் 
ஜாதகருக்கு ராசி : ரிஷபம் 
ஜாதகருக்கு நட்சத்திரம் : மிருகஷீரிடம் 1ம் பாதம் 

சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு பாவக தொடர்புகள் விபரம் :

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள்:

1,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும் ஜீவன ஸ்தான வழியில் இருந்து நன்மையையும் யோகத்தையும் தரும்.

3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பாக்கிய ஸ்தான வழியில் இருந்து நன்மையையும் யோகத்தையும் வழங்கும்.

5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து மிகுந்த யோகத்தை 100% விகிதம் வாரி வழங்கும்.

ஜாதகத்தில் வலிமை அற்று இருக்கும் பாவக தொடர்புகள்:

2,4,7,8ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை ஜாதகருக்கு வாரி வழங்கும், ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களில் இருந்து தப்புவது மிக கடினமே.

6,12ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் தொர்பு பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

11ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 70% விகித இன்னல்களை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு அடிப்படையில் கல்வி காலம் முதல் பருவ வயது வரை நடைபெற்ற திசை ராகு திசையாகும், இந்த ராகு திசை ( 30/03/1996 முதல் 30/03/2014 வரை ) ஜாதகருக்கு 8ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று தனது திசை முழுவதும் 200% விகித இன்னல்களையே வாரி வழங்கி உள்ளது , சுய ஜாதகத்தில் லக்கினம் நல்ல நிலையில் இருப்பதால், ஜாதகர் நல்லவராக இருந்த போதிலும், ஜாதகருடன் சேர்ந்த நண்பர்கள் அனைவரும் ஜாதகரை மிக  மோசமான பழக்க வழக்கங்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அதற்க்கு அடிமை ஆகும் தன்மைக்கு ஆளாக்கி விட்டனர், ஜாதகர் வளரும் இளம்பருவத்திலேயே உலகத்தில் உள்ள அனைத்து தீய விஷயங்களுக்கும் பரிச்சயம் ஆனவராக மாறினார், கல்வியில் தடை, உடல் நல பாதிப்பு, எதிர்பாலின சேர்க்கை மூலம் மிகுந்த பொருள் இழப்பு, தீய நண்பர்கள் சகவாசம் மூலம் பெற்றோருக்கு எதிராக செயல்படும் தன்மை, என ஜாதகரின் வாழ்க்கையின் போக்கே ஆதால பாதாளத்துக்கு சென்றது.

 இடைப்பட்ட காலத்தில் ஜாதகரின் தாயாரின் திடீர் இழப்பிற்கு ஜாதகரே காரணமாக அமைந்தார் ( 4ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு ) 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் செல்வத்தின் அருமை தெரியாமலும், உழைப்பின் உண்மை புரியாமலும் வீண் விரையம் செய்தார், தனது பெற்றோரை மிரட்டி தனது பண தேவைகளை பூர்த்தி செய்துகொண்டார், 4ம் பாவக வழியில் இருந்து சுக போக வாழ்க்கைக்கு அடிமையாகி அனைத்தையும் இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார், 7ம் பாவக வழியில் கூட சேரும் அனைத்து நண்பர்களும் ஜாதகரின் செல்வத்தை குறிவைத்தே செயல்பட்டது ஜாதகருக்கு சிறிதும் புரியவில்லை ( 7ம்வீடு  பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு ) முரண்பட்ட தன்மையில் தானாக சேர்த்துகொண்ட வாழ்க்கை துணை வழியில் இருந்தும் ஜாதகர் பல இழப்புகளை சந்திக்க வேண்டி வந்தது, வெளிவட்டார பழக்க வழக்கங்களில் ஜாதகர் எதற்கும் உபயோகமற்றவர் என்பதை அடிக்கடி உறுதி படுத்திகொண்டு  இருந்தார், ஜாதகர் செய்யும் செலவுகளும், வீண் விரையங்களும் தனது தகுதிக்கு மிகுந்ததாக இருந்தது, ஜாதகரால் வரும் பொருள் இழப்புகள் என்பது பெரிய அளவில், அவரது பெற்றோர்களால் ஏற்றுகொள்ள இயலாத வகையில் அமைந்தது ( 8ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு ) மேலும் ஜாதகர் தனது உடல் ஆரோக்கியத்தை தாமே கெடுத்துகொள்ளும் தன்மையை தந்தது.

தற்பொழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு ( 30/03/2014 முதல் 30/03/2030 வரை ) பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று பலனை தருவது, ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்களை தந்த போதிலும், ஜாதகரின் கடந்த கால வாழ்க்கை முறை ஜாதகரை முழுமையாக இன்னும் மீட்டு எடுக்க இயலவில்லை என்பதே உண்மையாக உள்ளது, ஜாதகரின் அறிவும், சிந்தனையும் தற்பொழுது சற்று தெளிவு நிலையை பெற்று இருப்பது வரவேற்க தக்க அம்சமாக கருதலாம், தான் செய்த தவறுகளை ஜாதகர் தற்பொழுது உணர ஆரம்பித்து இருப்பது, ஜாதகரின் வாழ்க்கை சரியான பாதையில் போவதை உறுதி செய்துள்ளது, தீய நண்பர்களின் சேர்க்கை ஜாதகரின் செல்வ நிலை பாதிப்பிற்கு பிறகு சற்று விலகி நிற்பது ஜாதகருக்கு நன்மையை தரும் அமைப்பாக கருதாலாம்.

ராகு திசையில் ஜாதகருக்கு நடைபெற்ற அனைத்து அவயோக பலன்களுக்கு ஏக மனதாக சனி பகவான் மீது குற்றம் சாற்றிய ஜோதிடர்களுக்கு சிறு விளக்கம், ஜாதகர் ராகு திசையில் அனுபவித்த இன்னல்களுக்கு காரணம், ராகு திசை ஜாதகருக்கு திடீர் இழப்புகளை தரும் 8ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தந்தததே காரணமாக அமைந்தது, மேலும் 2,4,7,8ம் பாவகங்களுக்கு அதிபதியாக ராகு பகவானே அமைந்து 200% பாதிப்பான பலனை வழங்கியது ஜாதகரை மேற்கண்ட பாவக வழியில் இருந்து அதிக துன்பத்திற்கு ஆளாக்கியது, எனவே ஜாதகரின் அவயோக பலன்கள் அனைத்திற்கும் ராகு பகவானே பொறுப்பேற்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

மேலும் சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவக வழியில், நடைபெறும் திசா புத்திகள் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால், ஏற்று நடத்தும் பாதக ஸ்தான வழியில் இருந்து  ஜாதகர் நிச்சயம் 200% விகித அவயோக பலன்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், இதில் சந்தேகமே இல்லை, பாதக ஸ்தான வழியில் இருந்து ஒருவர் அனுபவிக்கும் இன்னல்களுக்கு சனிபகவான் காரணம் என்று நிர்ணயம் செய்வது சுய ஜாதக கணித முறைக்கு புறம்பான கருத்தாகவே அமையும் அன்பர்களே, மிக பெரிய வெற்றிகளை வாரி வழங்கும் வல்லமை சனிபகவானுக்கும் உண்டு என்பதை வேறு ஒரு பதிவில் விபரமாக காண்போம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 18 பிப்ரவரி, 2016

தொழில் ஸ்தான வலிமையின் அடிப்படையில், ஜாதகருக்கு உகந்த தொழில் அல்லது வேலையை தேர்வு செய்வது எப்படி ?


" உத்தியோகம் புருஷ லட்சனம் " இந்த முதுமொழிக்கு சரியான பாதையை வகுத்து தருவது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் என்று அழைக்கப்படும் பத்தாம் பாவக வலிமையே, ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் கல்வி காலம் இனிதே நிறைவடைந்ததும், உடனடியாக அனைவரும் தேடுவது நல்ல வேலை வாய்ப்பினையே,  சிறந்த கல்வியை கற்று இருந்த போதிலும், தனிப்பட்ட திறமைகள் இருந்த போதிலும், அனைவருக்கும் சரியான வேலை அமைந்து விடுவதில்லை, சரியான தொழில் அமைந்து விடுவதில்லை, ஜாதகருக்கு தனிப்பட திறமைகளும், கல்வியில் நல்ல ஞானமும் இருந்த போதிலும் வேலை தொழில் என்று வரும் பொழுது சுய ஜாதகத்தில் உள்ள ஜீவன ஸ்தான வலிமையே ஜாதகரை இயக்குகிறது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது ஒவ்வொருவருக்கும் மிகுந்த நன்மைகளை வேலை மற்றும் தொழில் அமைப்புகளில் இருந்து நிச்சயம் தரும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையிலான கல்வியை ஜாதகர் பெரும் பொழுது சம்பந்தபட்ட துறைகளில், அல்லது தொழிலில் பெரிய அளவில் பிரகாசிக்க செய்கிறது, தனக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத கல்வியை தேர்வு செய்து, அதன் பிறகு சரியான வேலை அமையவில்லை, தொழில் அமையவில்லை என்று அல்லலுறும் அன்பர்களின் எண்ணிக்கையே அதிகம்.

 மேலும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் எவ்வித கல்வி அறிவு இல்லாத போதிலும் தொழில் ரீதியாக சகல வெற்றிகளையும் பெறுவது எதார்த்தமான உண்மை நிலையாகும், எனவே சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது சம்பந்தபட்ட ஜாதகருக்கு தொழில் மற்றும் வேலை  வாய்ப்பில் சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும், தன்னிறைவான ஜீவன மேன்மையை தரும், பல்வேறு தொழில்களில் பொருளாதார மேன்மை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும், ஜீவன ஸ்தான வலிமையை பற்றி உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே!


ஜாதகருக்கு கும்ப லக்கினம், தனுசு ராசி, மூல நட்சத்திரம், ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் 200% விகிதம் பாதிப்படைவதால், சிறு வயதிலேயே தனது பூர்வீகத்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் ஜீவிக்கும் சூழ்நிலையை தந்தது, 5ம் பாவகம் பாதிப்பது ஜாதகருக்கு அடிப்படை கல்வியிலேயே பாதிப்பை தந்து தொடர்ந்து கல்வி பெற இயலாத சூழ்நிலையை தந்தது, ஜாதகர் தனது  இளம் வயதிலேயே வேலைக்கு செல்லும் சூழ்நிலை உருவானது, ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் திறமையை அதிகரித்தது, குறுகிய காலத்தில் தொழில் அனுபவங்களை பெற்ற ஜாதகர் சுயமாக தனது 21வது வயதிலேயே சூரியன் திசையில் புதிய தொழில் துவங்கி தனித்து  செயல்பட ஆரம்பித்தார், சூரியன் ஜாதகருக்கு 1,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக்த்துடன் சம்பந்தம் பெற்று தொழில் வெற்றிகளை ஸ்திரமாக வாரி வழங்கியது, மேலும் 11ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் லாபங்களை அபரிவிதமாக அதிர்ஷ்டத்துடன் வழங்கியது.

சூரியனுக்கு அடுத்ததாக தற்பொழுது நடைமுறையில் உள்ள சந்திரன் திசையும் ஜாதகருக்கு 11ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் லாபங்களை அபரிவிதமாக அதிர்ஷ்டத்துடன் வாரி வழங்கி கொண்டு இருப்பது, ஜாதகரின் தொழில் விருத்தியை எவ்விதத்திலும் பாதிப்பில்லாமல் இயங்க செய்து கொண்டு இருப்பதுடன், திடீர் அதிர்ஷ்டத்துடன் புதிய தொழில்களையும் அறிமுகம் செய்து கொண்டு இருக்கிறது, ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமை பெறுவது, அவருக்கு உண்டான தொழில் வாய்ப்புகளை சரியான வயதில், சரியான நேரத்தில் தகுந்த நபர்கள் வழியில் இருந்து அறிமுகம் செய்து ஜாதகரை தொழில் ரீதியான வெற்றிகளை எவ்வித சிரமும் இல்லாமல் பெற செய்கிறது, ஜாதகருக்கு 5ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது செய்தொழிலில் நுண்ணறிவும், புத்திசாலித்தனமும் இல்லாவிட்டலும், 11ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது குருட்டு அதிர்ஷ்டத்தை தங்கு தடையின்றி, சூரியன் திசையிலும், சந்திரன் திசையிலும் வாரி வழங்கி கொண்டு இருக்கின்றது என்பது ஜாதகருக்கு, சாதகமான விஷயமாக அமைகிறது.

 சந்திரன் திசைக்கு அடுத்து வரும் செவ்வாய் திசையும் ஜாதகருக்கு 3,9ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவது, வரவேற்க தக்க அம்சமாகும், ஆக ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று, நடைபெறும் திசை வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் தொழில் அல்லது வேலை வாய்ப்பில் தன்னிறைவு பெறுவார் என்பது உறுதியாகிறது.


ஜாதகிக்கு விருச்சிக லக்கினம், ரிஷப ராசி, ரோஹிணி நட்சத்திரம்1ம் பாதம், சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெறுவது, நல்ல கல்வியையும், சிறந்த மதிநுட்பத்தையும், வாரி வழங்கியது, அளவுக்கு மிஞ்சிய கல்வி அறிவையும் சுய புத்திசாலிதனத்தையும் ஜாதகிக்கு வாரி வழங்கியது, இருப்பினும் சுய ஜாதகத்தில் 10ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் கல்வி அறிவும் மதி நுட்பமும் சிறிதும் பயன்படவில்லை, பயன்படுத்த இயலவில்லை, எந்த ஒரு வேலை வாய்ப்பும் ஜாதகிக்கு அமைய வில்லை, இதற்க்கு தகுந்தாற்போல், தற்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசையும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தி "எரியும் நெருப்பிற்கு எண்ணையை வார்க்கிறது" மேலும் நடைபெறும் ராகு திசை, புதன் புத்தியாவது ஜாதகிக்கு நன்மையை செய்கிறதா என்றால் ? அதுவும் (புதன்  புத்தியும்) 10,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது ஜாதகியின் வேதனையை அதிகமாக்கி இன்னலுற செய்கிறது.

எனவே சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது எவ்வளவு முக்கியம் என்பது இந்த பதிவில் உணரமுடியும் அன்பர்களே! ஒருவர் தொழில் ரீதியான வெற்றிகளை பெறுவதற்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது அவசியம், அந்த தொழிலில் ஜாதகர் அபரிவிதமான தொடர் வெற்றிகளை பெற மதி நுட்பத்தை வழங்கும் பூர்வபுண்ணியம் வலிமை பெறுவது அவசியம், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமும், பூர்வ புண்ணியமும் வலிமை பெற்று, நடைமுறையில் உள்ள திசாபுத்திகள் ஜாதகருக்கு மேற்கண்ட 10,5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் குறுகிய காலத்தில், தொழில் ரீதியான விருத்திகளை பெறுவார், ஒரு வேலை ஜீவன  ஸ்தானம் மட்டும் வலிமை பெறுவது ஜாதகரை "செக்கு மாட்டுக்கு " ஒப்பான பலனை வழங்கி விடும், கடமைக்கு தொழில் செய்து வெற்றிகளை பெறுவார், தனது தொழிலில் புதிய யுக்திகளையும், புதுமைகளையும்  பயன்படுத்தி ஜீவன விருத்தியை பெறுவதற்கு உண்டான அறிவு திறனையும், மதி நுட்பத்தையும் வழங்காது என்பது கவனிக்க தக்க விஷயமாகும்.

 முதல் ஜாதகத்தில் ஜாதகருக்கு ஜீவன ஸ்தான அதிபதியாக சுக்கிரன் வருவதால், ஆடை ஆபரண தொழிலில் மிகப்பெரிய வெற்றிகளை வழங்கியது, வழங்கிக்கொண்டு இருக்கிறது, இரண்டாவது ஜாதகத்தில் ஜாதகிக்கு ஜீவன ஸ்தான அதிபதியாக சுக்கிரன் வருவது, ஆடை ஆபரண தொழில்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது, மேலும் சுக்கிரன் அம்சம் பெற்ற தொழிலில் ஈடுபடாமல், வலிமை பெற்ற ராகு அம்சம் பெற்ற  கூட்டு தொழில்களில் ஜாதகி ஈடுபடுவது அபரிவிதமான தொழில் வெற்றிகளை வாரி  வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 17 பிப்ரவரி, 2016

திருமண பொருத்தம் சுய ஜாதகத்தில் பாவக வழியிலான நிர்ணயம் !


திருமண பொருத்தம் காண்பதில், சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையை அடிப்படையாக கொண்டு வதுவுக்கும்,வரணுக்கும் பொருத்தம் நிர்ணயம் செய்வது தாம்பதியர் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களையும், மகிழ்ச்சி நிறைந்த யோக வாழ்க்கைக்கும் சிறந்த அடித்தளத்தை அமைத்து தரும், மேலும் தம்பதியர் ஒற்றுமை, பொருளாதார முன்னேற்றம், சமுதாய அந்தஸ்து, சிறந்த புத்திர பாக்கிய யோகம், மன வாழ்க்கையில் பிரிவு இல்லாத நிலை, மனமொத்த தாம்பத்திய வாழ்க்கை என சகல விதங்களில் இருந்து சிறப்பான நற்பலன்களை வாரி வழங்கும், எனவே திருமண பொருத்தம் பாவக வலிமையை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்வது எப்படி என்பதை, உதாரண ஜாதகங்கள் கொண்டு இந்த பதிவில் ஆய்வு செய்வோம் அன்பர்களே!

வரன் ஜாதகம் 


வது ஜாதகம் 



பாவக வழியிலான திருமண பொருத்தம் :

தம்பதியரின் இல்லற வாழ்க்கையை நிர்ணயம்  செய்யும்  குடும்பம் ஸ்தானம் எனும் 2ம் பாவக பொருத்தம் :

ஜாதகருக்கு 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெறுவது சிறப்பு, எனவே ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கை என்பது மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமையும்.

ஜாதகிக்கு 2ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவக்த்துடன் சம்பந்த்தம் பெறுவது, ஜாதகி தனக்கு அமையும் இல்லற வாழ்க்கையில் இருந்து  அதிக இன்னல்களையும் துன்பங்களையும், எதிர்கொள்வதை காட்டுகிறது, ஜாதகிக்கு குடும்பம் எனப்படும் 2ம் பாவகம் 200% விகித பாதிப்பில் இருப்பது இல்லற வாழ்க்கையில் துன்பத்தையும் துயரத்தையும் வாரி வழங்கும்.

தம்பதியரின் ஒற்றுமையையும், இனிமையான தாம்பத்திய வாழ்க்கையையும் நிர்ணயம் செய்யும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவக பொருத்தம் :

ஜாதகருக்கு 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் தனது மனைவியுடனான ஒற்றுமையையும், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் மன நிலையையும், தாம்பத்திய வெற்றியையும் உறுதி செய்கிறது, ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் மிகவும் வலிமையாக காணப்படுவது ஜாதகருக்கு களத்திர ஸ்தான வழியில் இருந்து மிகுந்த யோகங்களை வாரி வழங்கும்.

ஜாதகிக்கு 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தாம்பத்த்திய வாழ்க்கையை கேள்விகுரியாக்குவதுடன், ஜாதகியை மணந்துகொள்ளும் அன்பரின் வாழ்க்கையை 200% விகித இன்னல் அடைவதை  உறுதி படுத்துகிறது, ஜாதகியின் வாழ்க்கை துணைக்கு மிகுந்த இன்னல்களையும், மன நிம்மதி இழப்பையும் அதிக அளவில் தரும், ஜாதகியின் கணவருக்கு சுய ஜாதகத்தில் எவ்வித யோகங்கள் இருந்தாலும் பலனின்றி போகும், ஜீவன வாழ்க்கைக்கே போராடும் சூழ்நிலையை தரும்.

தம்பதியர் ஒருவர் வழியில் இருந்து ஒருவர் பெரும் யோகம், ஆயுள் போன்றவற்றை நிர்ணயம் செய்யும் 8ம் பாவக பொருத்தம்:

ஜாதகருக்கு 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சுலப வழியில் ஜீவன வெற்றியை தரும், செய்யும் தொழிலில் புதையலுக்கு நிகரான யோக வாழ்க்கையை பெரும் யோகத்தை தரும், தனது  வாழ்க்கை துணைக்கு தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை அனுபவிக்கும் யோகத்தை ஏற்படுத்தி தருவார், ஜாதகருக்கு பூர்ண ஆயுள் விருத்தியை தரும்.

ஜாதகிக்கு 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சுலப வழியில் ஜீவன வெற்றியை தரும், செய்யும் தொழிலில் புதையலுக்கு நிகரான யோக வாழ்க்கையை பெரும் யோகத்தை தரும், தனது வாழ்க்கை துணைக்கு யோகத்தை தந்த போதிலும், பெரிய அளவிலான நன்மைகளை செய்வதற்கு இயலாமல் 2,7ம் பாவகங்கள் தடுக்கும், தாம்பத்திய வாழ்க்கையில் இருந்து பிரிவு ஏற்படுவதால் தனது கணவனுக்கு யோகத்தை தரும்.

தம்பதியர் தமது குலம் விருத்தி பெற சிறப்பான வாரிசுகளை வழங்கும் 5ம் பாவக பொருத்தம்:

ஜாதகருக்கு 5ம் வீடு பாதக பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஆண் வாரி அமைவதில் தடைகளை ஏற்ப்படுத்தும், சமயோசித அறிவு திறன் ஜாதகருக்கு சரியான நேரத்தில் பயன்பட வாய்ப்பு இல்லாமல் போகும் , கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம் என்பது சற்று குறைவானதாகவே அமையும், பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவிக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

ஜாதகிக்கு 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது நல்ல வாரிசை வாரி வழங்கும் ( வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெறுவது அவசியம் ) தான் கற்ற கல்வி இறுதி வரை ஜாதகிக்கு முழு பலனை வாரி வழங்கும், குழந்தைகள் வழியில் இருந்தும், குல தெய்வத்தின் வழியில் இருந்தும் மிகுந்த நன்மைகளை பெறுவார், எந்த ஒரு சூழ்நிலையிலும் இறை அருள் ஜாதகிக்கு பாதுகாப்பாக விளங்கும்.

நடைபெறும் திசாபுத்திகள் தரும் பலன்கள் மற்றும் பொருத்தம் :

ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் குரு திசை ( 30/07/2012 முதல் 30/07/2028 வரை ) 2,6,8,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது, ஜீவன முன்னேற்றத்தை ஜாதகருக்கு அபரிவிதமாக வாரி வழங்கும் என்பதால் குரு திசை முழுவதும் ஜாதகருக்கு யோக காலமே, குரு திசையில் தற்பொழுது நடைபெறும் சனி புத்தி ( 17/09/2014 முதல் 30/03/2017 வரை ) 6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தொழில் ரீதியான வெற்றிகளை தங்கு தடையின்றி வாரி வழங்கும் என்பதால் சனி புத்தியும் ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து யோக பலன்களை வாரி வழங்குகிறது.

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை ( 16/07/1997 முதல் 16/07/2017 வரை ) 3,6,9ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித அவயோக பலன்களையும், 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும் தருவது மிகுந்த இன்னல்களை தரும், சுக்கிரன் திசையில் புதன் புத்தி ( 16/07/2013 முதல் 16/05/2016 வரை ) 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை தருவது, குடும்பம் மற்றும் களத்திரம் என்ற அமைப்பில் இருந்து 200% விகித இன்னல்களை வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும், மேலும் ஜாதகிக்கு திருமணத்திற்கு உகந்த காலமும் இதுவல்ல என்பது உறுதியாகிறது.

எனவே எந்த விதத்திலும் மணமகனுக்கு ஏற்ற பொருத்தமான மணப்பெண் இதுவல்ல என்பது "ஜோதிடதீபத்தின்" கருத்து.

ஆனால் மணமகளுக்கு சிறந்த நன்மைகளை தரும், பொருத்தமான மணமகன் என்பது கவனிக்க தக்கது, ஜாதகி இந்த மணமகனை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்வது, ஜாதகிக்கு மிகுந்த யோகத்தை தரும், ஆனால் அதற்க்கு தற்பொழுது நடைபெறும் திசாபுத்தியும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானமும்  வழிவிடுமா என்பது கேள்விக்குறியே.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - ரிஷப லக்கினம்




சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷப ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 4ல் ராகு பகவானும், 10ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

ரிஷப இலக்கின சிறப்பு இயல்புகள் :

ரிஷப ராசியை  ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது, ஜாதகரின் பொறுமை அதிகரிக்கும், செய்யும் செயல்களில் பொறுப்பும் கடமை உணர்வும் அதிகமாக காணப்படும், பரோபகார மன நிலையும், பிரதி உபகாரம் எதிர்பாராத நல்ல நோக்கமும் ஜாதகருக்கு மிகப்பெரிய சாதனைகளை மிக எளிதாக நிறைவேற்றும் யோகத்தை தரும், மனதில் இனம்புரியா பயம் இருந்த போதிலும், எச்சரிக்கை உணர்வு ஜாதகரின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், தனிப்பட்ட வாழ்க்கையில் சுதந்திரத்தை போற்றும் அன்பர்கள், மற்றவர்களின் சுதந்திரத்தை தட்டி பறிக்கும் எண்ணம் ரிஷப லக்கினத்தருக்கு வரவே வராது, அதே போல் தனது சுதந்திரத்தை மற்றவர்களுக்காக எந்த சூழ்நிலையிலும் விட்டுகொடுக்க மாட்டார்கள், ஸ்திரமான எண்ணங்களும், தெளிவான சிந்தனைகளும் ஜாதகருக்கு தொடர் வெற்றிகளை தங்கு தடையின்றி வாரி வழங்கி கொண்டே இருக்கும், பூ உலக வாழ்க்கையில் சகல யோகங்களையும் அனுபவிக்கும் தன்மையை தரும், புதிய பரிமாணங்களை நோக்கியும், புதிய அணுகு முறையை நோக்கியும் ஜாதகரின் அறிவு திறன் செயல்படும், புதுமை விரும்பிகளாகவும், தன்னம்பிக்க அதிக அளவில் கொண்டவர்களாகவும் காணப்படுவார்கள், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை இளம் வயதிலேயே சுயமாக பெரும் யோகத்தை பெறுவார்கள் என்பது, ரிஷப லக்கினத்தரின் சிறப்பு தன்மையாக கருதலாம்.

கடந்த ராகு கேது பெயர்ச்சி ரிஷப இலக்கின அன்பர்களுக்கு 11ல் கேதுவின் சஞ்சாரமும், 5ல் ராகுவின் சஞ்சாரமும், 11ம் பாவக வழியில் இருந்து நன்மையையும், 5ம் பாவக வழியில் இருந்து சிறு சிறு  இன்னல்களையும் வாரி வழங்கியது, ஆனால் தற்பொழுது நடைபெற்று ராகுகேது பெயர்ச்சி ரிஷப இலக்கின அன்பர்களுக்கு 4ம் பாவகத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான் சுக போக வாழ்க்கைக்கு சாதகமான சூழ்நிலைகளை ஸ்திரமாக அதிகரிக்கும், புதிய சொத்துகள், வண்டி வாகனங்கள், இடம், நிலம் வாங்குவதற்கு உண்டான வாய்ப்பு, புதிய வீடு கட்டுவதற்கு உண்டான யோகம், பரம்பரை சொத்துகள் ஜாதகரை தேடிவரும் யோகம், கல்வியில் வெற்றி, மனதில் உள்ள எண்ணங்கள் நிறைவேறும் யோகம், திருமண தடைகள் நீங்குதல், சிறந்த குணநலன்கள் மூலம் மக்கள் செல்வாக்கினை பெறுதல், நல்ல புத்திர பாக்கியம், எதிர்பாராத சொத்துகள் ஜாதகருக்கு கிடைத்தல், தமக்கு சாதகமான யோக வாழ்க்கை அமைத்துகொள்ளும் வாய்ப்பு,  குழந்தைகள் வழியில் இருந்தும், குல தெய்வத்தின் வாழியில் இருந்து யோகங்களை அனுபவிக்கும் தன்மை, புதிய நண்பர்கள், வேற்று மதத்தினர் வழியில் இருந்து யோகம், தாய் வழி சொந்தங்கள் ஜாதகருக்கு ஆதரவையும் உதவிகளையும் வழங்கும் யோகம், பொது காரியங்களில் ஜாதகரின் ஈடுபாடு மற்றும் வெற்றி என ஜாதகரின் வாழ்க்கையில் சுகபோகத்திற்கு  குறைவில்லா நிலையை தரும்.

10ம் பாவகத்தில் சஞ்சரிக்கும் கேது ரிஷப இலக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத, தொழில் வெற்றிகளை அதிர்ஷ்டகரமாக வாரி வழங்கும், இதுவரை ஜீவன வழியில் சிரமங்களை அனுபவித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு புதிய வாய்ப்புகளும், அளவில்லா அதிர்ஷ்டங்களும் வந்து சேரும், சமுதாயத்தில் அந்தஸ்தும் கௌரவமும் அதிகரிக்கும், அரசியல் பதவிகள் ஜாதகரை தேடிவரும், அதிகாரம் செய்யும் யோகமும், பொது வாழ்க்கையில் வெற்றியையும் வாரி வழங்கும், ஜாதகரின் நோக்கமும் செய்லபடுகளும் நிலையான வெற்றிகளையும், சிறந்த ஜீவன முன்னேற்றத்தையும் தரும், இதுவரை தொழில் ரீதியாக இருந்த தடைகள் அனைத்தும் நீங்கி, தொழில் வெற்றி பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும், நல்ல வேலையாட்கள், சிறந்த பணியாளர்கள் மூலம் ஜாதகருக்கு தொழில் விருத்தி என்பது அபரிவிதமாக அமையும், எந்த ஒரு சூழ்நிலையையும் ஜாதகர் சிறப்பாக கையாளும் வல்லமையை தரும், அரசு சார்ந்த உதவிகள் ஜாதகரின் தொழில் முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமையும், தொழில் ரீதியான முதலீடுகள் அதிகரிக்கும், ஜாதகரின் எண்ணங்கள் யாவும் பலிதம் பெறும், நீண்ட நாட்களாக ஜாதகரின் மனதில் உள்ள குறைகளுக்கு தீர்வு கிடைக்கும், லட்சியங்களை மிக எளிதாக ஜாதகர் பெறுவதற்கு உண்டான சந்தர்ப்பங்கள் அமையும், ஜாதகரின் தொழில் அல்லது ஜீவனம் எதிர்பாராத அதிர்ஷ்டத்தின் மூலம் தன்னிறைவான முன்னேற்றத்தை  தங்கு தடையின்றி பெரும் என்பது, கவனிக்க தக்க அம்சமாகும், கௌரவ பதவிகள், சமூக அந்தஸ்துகள் ஜாதகரின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும், மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வெற்றிகளை வாரி குவிக்கும் யோகமான காலமாக, இந்த ராகு கேது பெயர்ச்சி ரிஷப இலக்கின அன்பர்களுக்கு அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

 மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி ரிஷப இலக்கின அன்பர்களுக்கு 4ம் பாவக வழியில் இருந்து புதிய சொத்து சுக சேர்க்கையையும், 10ம் பாவக வழியில் இருந்து தொழில் ரீதியான அளவில்லா அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும், ரிஷப இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால்4ம் பாவக வழியில் இருந்து சுக  போகங்களையும், 10ம் பாவக வழியில் இருந்து தொழில் முன்னேற்றங்களையும் பெறுகின்றனர்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் ரிஷப இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 04 மற்றும் 10ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே யோக பலன்கள் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே ரிஷப இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 04,10ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

சுய ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள கிரகங்கள் தனது திசாபுத்தி காலங்களில் அவயோக பலன்களை வழங்குவதேன் ?




ஜாதகத்தில் ஒரு கிரகம் வலிமை பெறுவதை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குழப்பங்கள் நடைமுறையில் உள்ளது, பொதுவாக ஜெனன ஜாதகத்தில் ராசியிலோ, அமசத்திலோ ஒரு கிரகம் அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்ட கிரகங்ககள், ஆட்சி,உச்சம் பெற்று இருப்பது, ஆட்சி,உச்சம் பெற்ற கிரகங்களின் பார்வையை பெரும் பாவகம் மற்றும் கிரகங்கள் சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்றதாக கருதப்படுகிறது, மேலும் வலிமை பெற்ற கிரகங்கள் தனது திசா புத்தி காலங்களில் யோக பலன்களை, ஜாதகருக்கு நிச்சயம் வழங்கும் என்ற கருத்தும் உள்ளது, இது பெரும்பாலும் அனைவருக்கும் பொருந்துவதில்லை, ஏனெனில் சுய ஜாதகத்தில் ஆட்சி,உச்சம் பெற்ற கிரகத்தின் திசாபுத்திகள் பல ஜாதகர்களுக்கு அவயோக பலன்களை வழங்கி இருக்கிறது, பகை,நீச்சம் பெற்ற கிரகத்தின் திசாபுத்திகள் நிறைய அன்பர்களுக்கு யோக பலன்களை தங்கு தடையின்றி வழங்கி இருக்கின்றது, இந்த முரண்பாடுகள் ஏன் ? என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!

சுய ஜாதகத்தில் ஒரு கிரகம் வலிமை பெறுவதை வைத்தோ, அல்லது வலிமை இழப்பதை வைத்தோ அந்த கிரகத்தின் திசாபுத்திகள் நன்மை தீமையை வழங்கும் என்று கருதுவது முற்றிலும் சுய ஜாதக கணிதத்திற்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஒரு குறிப்பிட்ட கிரகம் ஆட்சி உச்சம் பெறுவது அந்த நாளில் பிறந்த பல அன்பர்களுக்கு சுய ஜாதகத்தில் பொருந்தி வரும், ஆனால் குறிப்பிட்ட சில நபர்களே யோக பலன்களை அனுபவிக்கின்றனர், பல அன்பர்கள் அவயோக பலன்களை ( கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலும் கூட ) அனுபவிக்கின்றனர், எனவே ஒருவரது சுய ஜாதகத்தில் நடைபெறும் நன்மை தீமை பலாபலன்களுக்கு காரணமாக அமைவது, நவகிரகங்களின் ஜீவ சக்தியை பெற்று சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே, சுய ஜாதகத்தில் பாவக வலிமையை நிர்ணயம் செய்வது சம்பந்தபட்ட ஜாதகரின் பிறந்த நேரமும்,இடமும் மிக முக்கியமாக அமைகிறது, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெரும் அல்லது வலிமை இழக்கும் பாவகங்களின் பலனையே நடைபெறும் நவகிரகங்களின் திசாபுத்திகள் ஏற்று நடத்துகிறது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் கிரகத்தின் திசாபுத்திகள் யோக பலன்களையும், சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் கிரகத்தின் திசாபுத்திகள் அவயோக பலன்களையும், ஜாதகருக்கு தங்கு தடையின்றி வழங்குகிறது, இதில் கோட்சார கிரகங்களின் சஞ்சாரம் சம்பந்தபட்ட பாவகங்களுக்கு தமது கோட்சார பலன்களையும் சேர்த்து வழங்குகிறது, எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெறுவது ஜாதகருக்கு வாழ்நாளில் யோக பலன்களையும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை இழப்பது அவயோக பலன்களையும் தருகின்றது.

இனி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு, பாவக வலிமை, வலிமை அற்ற நிலையை பற்றியும், நவகிரகங்கள் தனது திசாபுத்தி காலங்களில் ஜாதகருக்கு தரும் பலாபலன்கள் பற்றியும் சிந்திப்போம் அன்பர்களே!


ஜாதகிக்கு லக்கினம் : தனுசு 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஷ்வினி 3ம் பாதம் 

சுய ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவகங்கள் :

2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 100% யோகத்தை 11ம் பாவக வழியில் இருந்து தரும்.

3,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான யோக பலன்களை 4ம் பாவக வழியில் இருந்து தரும்.

9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த நன்மைகளை 9ம் பாவக வழியில் இருந்து தரும்.

6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜீவன வழியில் சிறப்பான நன்மைகளை தரும்.

சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகங்கள் :

1,7,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 12ம் பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களை தரும்.

8ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவக்த்துடன் சம்பந்தம் பெறுவது 6ம் பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களை தரும்.

மேற்கண்ட விஷயங்கள் ஜெனன ஜாதகத்தில், ஜாதகிக்கு 12 பாவகங்களின் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலையாகும், இனி ஜாதகிக்கு நவ கிரகங்கள் தனது திசாபுத்தி காலங்களில் எந்த பாவகங்களின் தொடர்பை பெற்று பலன்களை தருகிறது என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

ஜாதகிக்கு ஜெனன காலத்தில் கேது திசை 2வருடம், 7மாதம், 2நாள் நடைமுறையில் இருந்துள்ளது ( 21/03/1969 முதல் 24/10/1971 வரை ) இந்த கேது திசை ஜாதகிக்கு வலிமை பெற்ற 4,9,10 பாவக பலனை தந்து தனது பெற்றோரும், தானும் நன்மைகளையும் யோகத்தையும் பெற்றனர்.

( 24/10/1971 முதல் 24/10/1991 வரை ) நடைபெற்ற சுக்கிரன் திசை வலிமை பெற்ற 10,11ம் பாவக பலனை ஏற்று நடத்தி ஜாதகியின் கல்வி காலங்கள், வளரும் சூழ்நிலைகள், ஜீவன வெற்றிகள், அதிர்ஷ்டம் நிறைந்த யோக வாழ்க்கை, இனிமையான திருமண வாழ்க்கை என சகல அமைப்புகளில் இருந்தும் நன்மைகளை தங்கு தடையின்றி 100% விகிதம் பெற்றார்.

( 24/10/1991 முதல் 24/10/1997 வரை ) நடைபெற்ற சூரியன் திசையும் வலிமை பெற்ற 10,11ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஜாதகியின் யோக வாழ்க்கையை உறுதி செய்தது.

( 24/10/1997 முதல் 24/10/2007 வரை ) நடைபெற்ற சந்திரன் திசை ஜாதகிக்கு வலிமை பெற்ற 11ம் பாவக  வழியில் இருந்து யோகத்தையும், வலிமை அற்ற 12ம்  பாவக வழியில் இருந்து மன நிம்மதி இழப்பு, மன அழுத்தம், மன போராட்டம், வாழ்க்கை துணை வழியில் இருந்து மன உளைச்சல்களையும் வாரி வழங்க ஆரம்பித்தது.

(24/10/2007 முதல் 23/10/2014 வரை) நடைபெற்ற செவ்வாய் திசை ( ஜாதகிக்கு ராசியில் செவ்வாய் 11ம் பாவகத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கின்றது ) வலிமை அற்ற 12ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஜாதகி சுயமாகவும், தனது வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் வழியில் இருந்து வீண் விரையங்களையும், மன போராட்டத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தந்து மிகுந்த துயரத்திற்கும் துன்பத்திற்கும் ஆளாக்கியது.

( 23/10/2014 முதல் 23/10/2032 வரை ) தற்பொழுது நடைபெறும் ராகு திசை வலிமை அற்ற 12ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது ஜாதகியின் வாழ்க்கையில் அளவில்லா துன்பங்களையும், வீண் விரையங்களையும், மன நிம்மதி இழப்பையும் தொடர்ந்து வழங்கி வருவது வருத்தத்திற்கு  உரிய விஷயம் மேலும், இதன் தாக்கம் ஜாதகியின் குடும்பத்தாருக்கும் அதிக அளவில் பாதிப்புகளை வாரி வழங்குவது சற்று சிரமமே.

எனவே சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது முக்கியமல்ல, வலிமை பெற்ற பாவகத்தின் பலனை நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தினால் மட்டுமே  ஜாதகருக்கு யோக பலன்கள் நடைமுறைக்கு வரும், மாறாக வலிமை அற்ற பாவக பலனை மட்டுமே திசாபுத்திகள் ஏற்று நடத்தினால், சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்தாலும் " குடத்தில் இட்ட விளக்கு போல் " ஜாதகருக்கு பலனற்று போகும்.

மேலும் சுய ஜாதகத்தில் நவ கிரகங்கள் ராசி,அம்சத்தில் ஆட்சி,உச்சம் பெறுவதால் ஜாதகருக்கு மிகப்பெரிய யோக பலன்கள்  நடைபெறுவதும் இல்லை, பகை, நீசம் பெறுவதால் அவயோக பலன்கள் நடைபெறுவதும் இல்லை, அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள பாவகத்தின் வலிமைக்கு உண்டான பலாபலன்களையே நடைபெறும் நவகிரகத்தின் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் என்ற உண்மையை உணர்வது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 11 பிப்ரவரி, 2016

திருமணம் நடைபெறும் கால நேரம் எப்பொழுது? திருமணம் தாமதமாக காரணம் என்ன ?


சுய ஜாதக அமைப்பின்படி ஒருவருக்கு திருமணம் நடைபெறும் கால நேரத்தை துல்லியமாக அறிவது எப்படி என்பதை இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! பொதுவாக திருமணம் வாழ்க்கை ஒருவருக்கு அமைவதை பற்றி சுய ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை வைத்து மிக எளிதாக உணர்ந்துகொள்ள முடியும், சுய ஜாதகங்களில் குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்களும் வலிமையாக இருப்பின், சம்பந்தபட்ட ஜாதகருக்கு இளம் வயதில்  சரியான நேரத்தில் திருமண வாழ்க்கை அமைந்துவிடும், குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்களில் ஏதாவது ஒன்று பாதிக்க படும் பொழுது , ஜாதகருக்கு திருமண வாழ்க்கை என்பது சற்று கால தாமதமாக தேடுதல்களுக்கு பிறகு  அமையும், குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாதிக்க படும் பொழுது ஜாதகரின் திருமணம் தடை பெற்ற திருமணமாக அமையும் அல்லது வெகுகால தாமதத்திற்கு  பிறகு அமையும்.

திருமண வாழ்க்கை அமைவதை நிர்ணயம் செய்வது சம்பந்த பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்களின் வலிமையே, பொதுவாக திருமண வாழ்க்கை அமைவது ( குரு பலம் ) எனப்படும் சந்திர ராசிக்கு கோட்சார ரீதியாக குரு சிறப்பன இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் என்பதில் "ஜோதிடதீபம்" மாற்று கருத்தை முன்வைக்கிறது, அதாவது குரு பலம் அற்ற நேரங்களிலும், சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்கள் வலிமை பெற்று, வலிமை பெற்ற குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான பலனை நடைபெறும் பெரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தினால், அந்த திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஜாதகருக்கு திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும் என்பதை உறுதியாக பதிவு செய்கிறது.

உதரணமாக :


ஜாதகருக்கு லக்கினம் : மகரம் 
ராசி : தனுசு 
நட்சத்திரம் : மூலம் 2ம் பாதம் 

சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்க பட்டு இருக்கிறது, ஆனால் 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையாக இருக்கிறது, எனவே ஜாதகருக்கு 2ம் பாவக வலிமை அற்ற தன்மையினால் திருமணம் தாமதமாகும் ( ஜாதகருக்கு வயது 32 ) 7ம்  பாவக வலிமை ஜாதகருக்கு திருமணம் தாமதமாக நடைபெற்றாலும் யோகம் மிகுந்த வாழ்க்கை துணையை பெற்று தரும்.

இனி ஜாதகருக்கு திருமணம் நடைபெறும் கால நேரம் எப்பொழுது என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே, ஜாதகருக்கு திருமணம் நடை பெரும் கால நேரத்தை துல்லியமாக உணர, சுய ஜாதகத்தில் எந்த திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 7ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை ஆய்வு செய்வது  அவசியமாகிறது, ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறுவது சந்திரன் திசை எனவே சந்திரன் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார் என்பதை காண்போம், ஜாதகருக்கு சந்திரன் தனது திசையில் 8ம் வீடு ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்துவது உகந்ததல்ல, சந்திரன் திசையில் தற்பொழுது நடைபெறும் ராகு புத்தி 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு  பெற்று யோக பலனை தருவது வரவேற்க தக்கது, சந்திரன் திசை, ராகு புத்தியில் எதிர் வரும் கேது அந்தரமே ( 21/10/2016 முதல் 26/11/2016 வரை ) ஜாதகருக்கு களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது என்பதால், சந்திரன் திசை, எதிர்வரும் ராகு புத்தியில், கேது அந்தரத்தில் ஜாதகருக்கு திருமணம் நிச்சயம் அமையும், அந்த காலத்தில் அமையும் வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகர் சகல யோகங்களையும் அனுபவிக்கும் நல்ல வாய்ப்பு உண்டாகும் என்பதை கவனத்தில் வைத்து ஜாதகர் சரியான முடிவுகளை எடுப்பது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

எனவே திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தருவது சுய ஜாதகத்தில் உள்ள  2,7ம் பாவக வலிமையும் சரியான வயதில் வலிமை பெற்ற 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் அன்றி வேறு எதுவும் இல்லை அன்பர்களே! அதே போன்று திருமணம் தாமதம் அல்லது தடை ஏற்ப்படுவதர்க்கும் சுய ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை அற்ற நிலையே காரணமாக அமையும், உதாரணமாக திருமணமே நடைபெறாமல் இருக்கும் அன்பர்களின் சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெற்றோ அல்லது பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றோ இருக்கும் என்பதை அவர்களது சுய ஜாதக ஆய்வில் அறியலாம், 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 6 பிப்ரவரி, 2016

திருமண பொருத்தம் : திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள, பாவக வலிமையின் அடிப்படையில் ஜாதக பொருத்தம் காணும் வழி முறைகள்.



  திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள, தம்பதியரின் ஜாதகங்களில் 12பாவகங்களின், வலிமையின் அடிப்படையில் திருமண பொருத்தம் கண்டு இல்லற வாழ்க்கையில் இணைவதே, தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றியை நிர்ணயம் செய்யும், பொதுவாக திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வது தம்பதியர் இருவரின் சுய ஜாதக வலிமையே அன்றி, நட்சத்திர பொருத்தமோ ( ரஜ்ஜு பொருத்தம் ), செவ்வாய் தோஷமோ, ராகுகேது தோஷமோ அல்லது தம்பதியர் இருவருக்கும் நடக்கும் ஏக திசை பொருத்தமோ அல்ல என்பதை அனைவரும் உணர்வது அவசியமாகிறது, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தபட்ட ஜாதகருக்கு நிச்சயம் யோக வாழ்க்கையை வாரி வழங்கும், மேலும் ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம்,குடும்பம்,பூர்வ புண்ணியம்,களத்திரம் மற்றும் ஆயுள் ஸ்தானம் போன்ற பாவகங்கள் வலிமை பெற்றால், சம்பந்த பட்ட ஜாதகருக்கு  இல்லற வாழ்க்கை இனிதே அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை, எனவே திருமண பொருத்தம் காணும் பொழுது சுய ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு பொருத்தம் காண்பதே தம்பதியரின் இல்லற வாழ்க்கையில் சகல யோகங்களையும் வாரி வழங்கும்.

"ஜோதிடதீபம்" மூலம் பொருத்தம் கண்டு விரைவில் திருமணம் நடைபெறவுள்ள வரன்,வதுவின் சுய ஜாதகத்தை உதாரணமாக எடுத்துகொண்டு, அவர்களின் சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் அடிப்படையில் திருமண பொருத்தம் நிர்ணயம் செய்யும் முறையை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே !

மணமகன் ஜாதகம் :



லக்கினம் : துலாம் 
ராசி : விருச்சிகம் 
நட்சத்திரம் : அனுஷம் 3ம் பாதம் 

மணமகள் ஜாதகம் :



லக்கினம் : விருச்சிகம் 
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : கிருத்திகை 3ம் பாதம் 

வரன் வதுவின் சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையிலான திருமண பொருத்தம் :

வரனின் ஜாதகத்தில் பாவக வலிமை நிலை :

1,3,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கினம், சகோதர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தான வழிகளில் இருந்து ஸ்திரமான யோக பலன்களை தரும்.

6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சத்ரு ஸ்தானம், பாக்கிய ஸ்தான வழியில் இருந்து யோக பலன்களை தரும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜீவன ஸ்தான வழியில் இருந்து யோக பலன்களை 100% விகிதம் வாரி வழங்கும்.

4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சுக ஸ்தான வழியில் இருந்து இன்னல்களையும், 8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுளை வழங்கிய போதும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது.

2,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்பம் மற்றும் விறைய ஸ்தான வழியில் இருந்து அவயோக பலன்களை வழங்கும்.

7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது களத்திர ஸ்தான வழியில் இருந்தும், லாப ஸ்தான வழியில் இருந்தும் 200% விகித இன்னல்களை வாரி வழங்கும்.

தற்பொழுது நடைபெறும் கேது திசை ஜாதகருக்கு 7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருவது வரவேற்க தக்க அம்சம் அல்ல என்பதே உண்மை, எனவே ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் கேது திசை நன்மையான பலன்களை ஏற்று நடத்தவில்லை என்பதே உண்மை, ஆனால் கேது திசையில் தற்பொழுது நடைபெறும் குரு புத்தி ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது 100% விகித யோக பலனை தருவது வரவேற்க தக்க அம்சமாகும், எனவே திருமணத்திற்கு உகந்த காலமாக, தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு புத்தியை கருதலாம், கேது திசை குரு புத்தியில் திருமணம் ஜாதகருக்கு நடைபெற்றால் யோகமான இல்லற வாழ்க்கை அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

வதுவின் ஜாதகத்தில் பாவக வலிமை நிலை :

1,3,6,7,9,10,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஜாதகியின் வெற்றிகரமான யோக வாழ்க்கையை பெறுவார் என்பதை பற்றி கட்டியம் கூறுகிறது.

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகியின் குணநலன்கள் பற்றியும், ஜாதகி பெரும் சுக போக யோக வாழ்க்கை பற்றி எடுத்துரைக்கிறது.

5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் நுட்பமான அறிவுத்திறன் பற்றியும், யோகமிக்க குழந்தைகளையும் சிறந்த வாரிசுகளையும் பெற்று எடுக்கும் தன்மையை பற்றியும் தெளிவு படுத்துகிறது.

2,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான குடும்ப வாழ்க்கையையும், கணவனுக்கு திடீர் அதிர்ஷ்டத்தையும், நீடித்த அதிர்ஷ்டத்துடன் கூடிய சுபயோக சுக வாழ்க்கையை ஜாதகி தங்கு தடையின்றி பெறுவார் என்பதை உறுதிபடுத்துகிறது.

தற்பொழுது நடைபெறும் ராகு திசை ஜாதகிக்கு 7ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து கௌரவம் மிக்க யோக வாழ்க்கையை பெறுவதை உறுதி படுத்துகிறது, ராகு திசையில் தற்பொழுது நடைபெறும் சனி புத்தி ஜாதகிக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அதிபோக சுக வாழ்க்கையை பெரும் தன்மையை காட்டுகிறது, எனவே ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் திசைபுத்தி திருமண வாழ்க்கையின் மூலம் அளவில்லா யோகங்களையும், அதிர்ஷ்டங்களையும் வாரி வழங்குவது கவனிக்க தக்க அம்சமாகும்.

"ஜோதிடதீபம்" இதுவரை பார்த்ததில், மேற்கண்ட ஜாதகியின் ஜாதகம் சகலயோகமும் பெற்ற ஓர் "ராஜயோக" ஜாதகமாக கருதுகிறது, லட்சம் ஜாதகங்களில் இதுபோன்று ஒரு "ராஜயோக" ஜாதகம் அமைவதாக ஒரு கருத்து உண்டு என்பது முற்றிலும் உண்மையே.

ஆக மேற்கண்ட வது வரனின் ஜாதகத்தை இல்லற வாழ்க்கையில் இணைக்கும் பொழுது இறை அருளின் கருணையினால் சகல யோகங்களையும் வரனும், வதுவின் ஜாதக வழியில் இருந்து அனுபவிப்பர் என்பது கவனிக்க தக்க அமசமாகும், மேலும் திருமண வாழ்க்கையில் மிக பெரிய வெற்றியையும், 16 வகை செல்வங்களையும் பெற்று வாழையடி வாழையாக செழிப்புடன் வாழ்வாங்கு வாழ்வார்கள் தம்பதியர் ஜாதகங்களின் உன்னத நிலையாகும்.

எனவே திருமண பொருத்தம் காணும் பொழுது வரன் வது இருவரின் ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் நிலையை உணர்ந்து, திருமண பொருத்தம் கண்டு இல்லற வாழ்க்கையில் இணைத்தால் நிச்சயம் 100% விகித யோக வாழ்க்கையை தம்பதியருக்கு வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, தவிர்த்து இல்லாத  நட்சத்திரபொருத்தம், தோஷபொருத்தம், ஏக திசை சந்திப்பு, செவ்வாய் தோஷம், ராகுகேது தோஷம் போன்றவைகள் சமுதாயத்தில் மூட நம்பிக்கைகளை விதைப்பதாகவே அமையுமே அன்றி, உண்மையான ஜாதக பலன்களை கண்டு திருமணம் அமைப்பதற்கு உண்டான வழிமுறைகளை காண்பதற்கு வழிவகுக்காது.

சுய ஜாதகத்தில் பாவக வலிமையை ஆய்வு செய்து திருமணம் அமைத்து தருவோம், தம்பதியரின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் பெற்று வாழ்வதற்கு வழிவகை செய்வோம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷ லக்கினம்




சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 1ம் ராசியான மேஷ ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 5ல் ராகு பகவானும், 11ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

மேஷ இலக்கின சிறப்பு இயல்புகள் :

மேஷ ராசியை  ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது, ஜாதகரின் செயல்பாடுகளில் வேகமும் சுய கட்டுபாடும் அதிகரிக்கும், எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பாக கையாளும் திறமை பிறவியிலேயே அமைந்திருக்கும், சிறந்த நிர்வாக திறமையின் மூலம் வாழ்க்கையில் தனது லட்சியங்களில் வெற்றி பெரும் யோகத்தை தரும், அரசு சார்ந்த நிர்வாக துறையில் பணியாற்றும் யோகமும், பொதுமக்களின் பாதுகாப்பில் ஈடுபடும் காவல்துறை, ராணுவம், தீயணைப்பு துறை போன்ற பாதுகாப்பு  துறைகளில் சிறந்து விளங்கும் வல்லமையை தரும், மேஷ இலக்கின அன்பர்களின் இலக்கு என்பது எப்பொழுதும் வெற்றியை தவறாமல் தரும், குறுகிய காலங்களில் தான் செய்யும் தொழில் எதுவாயினும் அதில் சிறப்பான வெற்றிகளை பெரும் யோகம் உண்டாகும், சக தொழில் செய்பவர்களுக்கு இவர்களின் முன்னேற்றமும் வெற்றியும் மிகப்பெரிய ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்ப்படுத்தும், தனது வாழ்க்கையின் வெற்றி தோல்விகளை தானே நிர்ணயம் செய்யும் வல்லமை மேஷ இலக்கின அன்பர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும், மேஷ இலக்கின அன்பர்களின் எதிரிகளே அவர்களது முன்னேற்றத்திற்கு காரணமாக அமைத்துவிடுவார்கள் என்பது கவனிக்க தக்க அம்சமாகும், எப்பொழுதும் தர்மத்தின் வழியில் நடக்கும் பேராண்மை கொண்டவர்கள், சில நேரங்களில் இவர்களது வேகமான செயல்பாடுகள் பலரது விமர்சனங்களுக்கு ஆளாகும் தன்மையை தரும், சுதந்திர பிரியர்கள், தனிப்பட்ட முன்னேற்றத்தில் எப்பொழுதும் ஆர்வம் கொண்டு இருப்பார்கள், வியக்கத்தகு அறிய சாதனைகளை படைக்கும் வல்லமை பெற்றவர்கள், விளையாட்டு மற்றும் சாகச நிகழ்வுகளில் வெற்றியை மிக எளிதாக பெரும் யோகம் பெற்றவர்கள், தான் மேற்கொண்டுள்ள லட்சியங்களில் பின்வாங்காமல் முழு முயற்சியுடன் வெற்றியை ஈட்டும் யோகம் பெற்றவர்கள்.

கடந்த ராகு கேது பெயர்ச்சி மேஷ இலக்கின அன்பர்களுக்கு 12ல் கேதுவின் சஞ்சாரமும், 6ல் ராகுவின் சஞ்சாரமும், 12ம் பாவக வழியில் இருந்து மன நிம்மதி இழப்பையும், வீண் விறையங்களையும், எதிர்பாராத திடீர் இழப்பையும் மிகவும் பலமாகவே தந்தது, 6ம் பாவக வழியில் இருந்து கடன் தொந்தரவுகள், உடல் நல பாதிப்பு, சூழ்நிலைக்கு கட்டுபட்டு செய்லபடவேண்டிய சந்தர்ப்பங்களையும், எதிரிகளின் சதிக்கு ஆளாகும் சந்தர்ப்பங்களையும் தந்தது,  தற்பொழுது 5ல் சஞ்சாரம் செய்யும் ராகுவினால் பெரிய யோக பலன்கள் இல்லை என்றே கூற வேண்டும், குறிப்பாக ஜாதகரின் வாரிசுகள் வழியில் இருந்து சிறு சிறு இன்னல்கள், மற்றவர்களின் உதவி இல்லாமல் தாமாகவே தனித்து போராடும் சூழ்நிலை, குல தெய்வ வழிபாட்டில் குறைகள், மிதமாக போராடி வெற்றி பெரும் யோகம், அந்நிய நபர்களால் தொல்லைகள், பித்தம் சார்ந்த உடல் தொந்தரவுகள், நம்பிக்கை குறையும் விதமாக நடைபெறும் நிகழ்வுகள், எதிர்பாராத சிக்கல்கள், எடுக்கும் முயற்ச்சிகளில் வரும் தொய்வு, கவன சிதறல்கள், நோக்கம் நிறைவேற அதிகமாக உழைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள், பூர்வீக சிக்கல்கள் அதிகரிக்கும் தன்மை, பூர்வீக ஜீவனத்தால் அதிக இன்னல்கள் மற்றும் நஷ்டம், வெளியில் சென்று ஜீவனம் தேடும் நிலை அதிக  மன உளைச்சல்கள் என மேஷ இலக்கின அன்பர்களுக்கு தற்பொழுது 5ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் கடுமையான சோதனைகளை தருவார், எனவே குல தெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாட்டை காட்டுவது தங்களின் இன்னல்களை வெகுவாக குறைக்கும்.

11ல் கேதுவின் சஞ்சாரம் மேஷ இலக்கின அன்பர்களுக்கு அளவில்லா அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் வாரி வழங்கும், செய்யும் தொழிலில் எதிர்பாராத லாபங்களை பெரும் யோகம் உண்டாகும், பயணங்களினால் அதிர்ஷ்டமும் லாபமும் கிட்டும், லாட்டரி, பங்கு வர்த்தகம், யுக வணிகம் மூலம் அளவில்லா அதிர்ஷ்டங்களை பெரும் தன்மையை தரும், தன்னை விட வயதில்  அதிகமுள்ள பெரியவர்கள் வழியில் இருந்து  மிகுந்த அதிர்ஷ்டத்தையும் லாபத்தையும் பெற இயலும், புதிய சொத்துகள் வாங்கும் யோகமும், சூழ்நிலை மாற்றத்தில் விருப்பமும் உண்டாகும், பல சுற்றுல ஸ்தலங்களுக்கு சென்றுவரும் சந்தர்பங்கள் தேடிவரும், திருமண வயதில் உள்ள அன்பர்களுக்கு சிறப்பான இல்லற வாழ்க்கை அமையும், பல காலமாக திட்டமிட்டு கிடப்பில் போடபட்ட விஷயங்களில் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும், செய்யும் தொழில் மற்றும் வியாபரத்தில் அளவில்லா லாபமும், புதிய தொழில் வாய்ப்புகளும் உருவாகும், அறிமுகம் இல்ல புதிய நபர்கள் தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தகு மாற்றங்களை நிகழ்த்துவார்கள், ஆன்மீக தேடுதல்களுக்கு வெற்றி கிட்டும், வெளிநாட்டினர் அந்நிய மதத்தினர் மூலம் லாபம் மற்றும் ஜீவன முன்னேற்றம் உண்டாகும்,  வெளிநாடு வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ள அன்பர்களுக்கு, எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் வந்து சேரும், மேஷ இலக்கின அன்பர்களின் அறிவு திறனும் தன்னம்பிக்கையும் ஒன்று சேர்ந்து வெற்றி வாய்ப்புகளை வாரி குவிக்கும் யோக காலமாக, கேதுவின் 11ம் பாவக சஞ்சாரம் அமையும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி மேஷ இலக்கின அன்பர்களுக்கு 5ம் பாவக வழியில் அதிக அளவில் இன்னல்களும், 11ம் பாவக வழியில் அளவில்லா அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும், மேஷ இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் 5ம் பாவக வழியில் இருந்து தடைகளையும், 11ம் பாவக வழியில் இருந்து மிகுந்த நன்மைகளை பெறுகின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் மேஷ இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 05 மற்றும் 11ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே 100% சதவிகிதம் நடைபெறும், எனவே மேஷ  இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 05,11ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696