சனி, 25 ஜூன், 2016

திருமண தடையை தரும் ராகுகேது ! சர்ப்ப தோஷம் உள்ள ஜாதக அமைப்பு !




சாயா கிரகங்களான ராகுகேது தாம் அமர்ந்த பாவகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் சுவீகரிக்கும் தன்மை கொண்டது என்பதை, நாம் இதற்கு முன் பதிவு செய்த கட்டுரைகளில் இருந்து அறிந்திருப்போம், இயற்கையில் ஒரு பாவகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வல்லமை பெற்ற சாயா கிரகங்கள் தாம் அமர்ந்த பாவகத்திற்கு நன்மையை தரும் அமைப்பில் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும் யோகத்தையும் பெறுவதில் எவ்வித குறையும் இருக்காது, மாறாக சாயா கிரகங்கள் தாம் அமர்ந்த பாவகத்திற்கு தீமையை தரும் அமைப்பில் வலிமை அற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது, சாயா கிரகங்கள் தரும் அவயோகங்களை அனுபவித்தே ஆகவேண்டிய சூழ்நிலையை ஜாதகருக்கு நிச்சயமாக தரும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் சாயா கிரகங்களால் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்கள் உறுதியாக வரும், அதன் தாக்கத்தை ஜாதகர் அனுபவிக்கும் தன்மையை தரும். 

கீழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு விளக்க பெறுவோம் 


லக்கினம்  : ரிஷபம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : அஷ்வினி 1ம் பாதம் 

ஜாதகிக்கு ரிஷப லக்கினம், சாயா கிரகங்களான ராகுகேது பாவக அமைப்பில், ஆயுள் ஸ்தானத்தில் ராகுவும், குடும்ப ஸ்தானத்தில் கேதுவும், அமர்ந்திருக்கின்றது, தாம் அமர்ந்த பாவக அமைப்பிற்கு இருவரும் வலிமை அற்று தீமையை செய்யும் நிலையில் உள்ளனர், ஜாதகிக்கு வயது 25 திருமணத்திற்க்காக எடுத்த முயற்ச்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்வியையே சந்தித்து கொண்டு இருக்கின்றது, குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்தில் வலிமை அற்று ஆளுமை செய்யும் கேதுபகவானே இதற்கு காரணகர்த்தாவாக விளங்குகிறார், ஒருவரது சுய ஜாதகத்தில் 2ம் வீடான குடும்ப ஸ்தானமோ, 7ம் வீடான களத்திர ஸ்தானமோ வலிமை குறைவாகவோ, பாதிக்கப்பட்டோ இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு திருமண வாழ்க்கை தாமதப்படும் என்பது விதி, இந்த ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்தில் அமர்ந்துள்ள கேது பகவான் தனது கட்டுப்பாட்டில் 2ம் பாவகத்தை முழுவதும் சுவீகரித்து, கடுமையான பாதிப்பையும், சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களையும், ஜாதகிக்கு வழங்கிக்கொண்டு இருக்கின்றார், மேலும் ஜாதகத்தை பார்க்கும் அனைத்து ஜோதிடர்களும் ராகுகேது தோஷம் என்றும், சர்ப்பதோஷ ஜாதகம் என்றும், இதனால் திருமணம் தாமத படுவதாகவும், இதை போன்றே ராகுகேது, சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகத்தை தேர்வு செய்து திருமணம் செய்து வைக்கவேண்டும் என்றும் பரிந்துரை செய்கின்றனர்.

மேற்கண்ட ஜோதிடர்களின் கருத்திற்கு "ஜோதிடதீபம்" மாற்று கருத்தையே முன்மொழிகிறது, ஏனெனில் ஒருவரது சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு, திருமண தடை, குடும்ப  வாழ்க்கையில் சிக்கல்கள், போதிய வருமானம் இன்மை, எந்த விஷயத்திலும் வாக்குவாதம், குடும்பத்தில் நிம்மதி இன்மை, பேசும் பேச்சல் வம்பு வழக்கு, வீண் தகராறு,  இடம் பொருள் ஏவல் தெரியாமல் செயல்படும் தன்மை, வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம், போன்ற இன்னல்களுக்கு ஆளாக்கும், மேலும் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் ராகுகேது தோஷம், சர்ப்பதோஷம் இருப்பின் ஜாதகரின் இல்லற வாழ்க்கை குறுகிய காலத்தில் மனக்கசப்பையும், மன வாழ்க்கையில் பிரிவையும் நிச்சயம் தரும், எனவே சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமோ களத்திர ஸ்தானமோ வலிமை அற்று இருப்பின், அவருக்கு அமையும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் குடும்பஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானம் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, அப்படி வலிமையுடன் அமைந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட ஜாதகருக்கு தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து நன்மை நடைபெறும்.

 தனது வாழ்க்கை துணையின் வலிமை பெற்ற குடும்ப ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தான பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை சுவீகரிக்க இயலும், இதுவே 2,7ம் பாவகங்கள் பாதிக்கப்பட்ட ஜாதகருக்கு இல்லற வாழ்க்கைக்கு உகந்தது, இல்லறவாழ்க்கையில் நிறைவான மகிழ்ச்சியையும், பிரிவற்ற நிலையையும் தரும், மாறாக ஜாதகருக்கு ராகுகேது தோஷம், சர்ப்பதோஷம் உள்ளது எனவே இவருக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் இந்த தோஷம் இருக்க வேண்டும் என்று குத்துமதிப்பாக முடிவு செய்து, வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் 2,7ம் வீடுகள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள ஜாதகத்தை தேர்வு செய்து திருமணம் செய்து வைத்தல், இல்லறவாழ்க்கை குறுகிய காலத்தில் மனக்கசப்பை தந்து, பிரிவை நோக்கி வெகு வேகமாக அழைத்துச்செல்லும், மேலும் திருமணம் செய்த பிறகு நம்மால் ஏதும் செய்ய இயலாது, இதனால் பெற்றோருக்கும் மன உளைச்சல், திருமணம் செய்துகொண்ட தம்பதியருக்கு மன உளைச்சல், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் நிலையோ அந்தோ பரிதாபம், இன்றைய சூழ்நிலையில் ஆண் பெண் இருபாலர் அமைப்பில் இருந்தும் சுதந்திரம் மிக்க தனிப்பட்ட சுய நல போக்கே அதிகம் உள்ளது, இதற்கு சுய ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை அற்ற நிலை காரணமாக உள்ளது, எனவே வாழ்க்கை துணையின் கருத்துக்கும், அவர்களது விருப்பத்திற்கும் மதிப்பளிக்கும் ஒரு பொருத்தமான வரனோ அல்லது வதுவோ அமைய வேண்டும் எனில், தமது ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், தமக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும் இல்லற வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு சிறந்த பரிகாரமாகவும் அது அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

மேற்கண்ட ஜாதகிக்கு 2ல் வலிமை அற்று அமர்ந்த கேது பகவான், வீண் வாக்குவாதத்தையும், குடும்ப வாழ்க்கையில் இன்னல்களையும், போதிய வருமானம் அற்ற சூழ்நிலையையும் வழங்குகின்றார், மேலும் தனது பேச்சில் அறிவு பூர்வமான விஷயங்கள் அற்ற தன்மையையும், பேச்சின் மூலம் முயற்ச்சியை தடுக்கும் பிற்போக்கு வாதங்களையும் கையாள்கிறார், இது இவருக்கு வரும் வாழ்க்கை துணையின் முயற்ச்சிகளுக்கும், முன்னேற்றத்திற்கும் மிகப்பெரிய தடைகளை வாரி வழங்கும், மேலும் வாழ்க்கை துணையின் நிம்மதியை கேள்விக்குறியாக்கும், வரும் வருமானத்தை கொண்டு சிறப்பாக குடும்பம் நடத்தும் வல்லமையும் ஜாதகிக்கு இல்லை, வீண் செலவுகளால் தமது வாழ்க்கை  துணைக்கு கடும்  நிதி நெருக்கடியை தருவார், இல்லையெனில் வாழ்க்கை துணையை தனது வீண் வாக்குவாதத்தால் செயல் இழக்க செய்வார், ஜாதகியின் குடும்ப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமாக அமைவது, ஜாதகியின் பேச்சு குடும்ப வாழ்க்கையில் மிகப்பெரிய நெருக்கடிகளை தரும், குறிப்பாக தனக்கு வரும் வாழ்க்கை துணை மேற்கண்ட இன்னல்களை எதிர்கொள்ளும் அமைப்பை தரும், இதனால் ஜாதகிக்கு கடுமையான இன்னல்கள் வந்து சேரும், எனவே தனக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே  அவரால் ஜாதகியை அனுசரித்து செல்ல இயலும் என்பதை ஜாதகியும், ஜாதகியின் பெற்றோரும், கருத்தில் கொள்வது நன்மை தரும்.

ஆயுள் ஸ்தானத்தில் அமர்ந்த ராகு பகவான் ஆயுள் பாவகத்தை கடுமையான பாதிப்பிற்கு ஆளாக்குகிறார், ஆயுள் பாவகம் என்பது ஜாதகியின் ஆயுள், தனக்கு வரும் திடீர் விபத்து , திடீர் இழப்பு, வீண் மருத்துவ செலவுகள், ரண சிகிசிச்சை, உடல் நல கோளாறு, தனது உடல் ஆரோக்கியத்தை தாமே பாதிக்க செய்யும் நிலை, என்ற வகையில் இன்னல்களை தரும், குறிப்பாக தமது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருள் மற்றும் வருமானம் ஆகியவற்றை நிர்ணயம் செய்வது ஆயுள் பாவகமே, எனவே ஜாதகிக்கு வரும் வாழ்க்கை துணை வழியில் இருந்து பொருள் மற்றும் வருமான இழப்பை தவிர்க்க இயலாது என்பது உறுதியாகிறது, மேலும் கணவன் வழியில் இருந்து ஜாதகி பெரிய அளவினாலான நன்மைகளையும், திடீர் அதிர்ஷ்டங்களை பெற இயலாது என்பதும் உறுதியாகிறது, சுய ஜாதகத்தில் ஆயுள் பாவகம் வலிமை பெறுவது தமது வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டங்களை, சுலப பொருள் வரவையும் குறிக்கும், இந்த ஜாதகத்தில் 8ம் பாவகத்தில் வலிமையின்றி அமர்ந்த ராகு பகவான் தனது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து, வீண் பேச்சு, அவமானம், திடீர் இழப்பு, மனம் மற்றும் உடல் வழியில் இருந்து இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தருவார், மேலும் ஜாதகியின் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக அமைவது, ஜாதகியின் பித்ருக்கள் செய்த வினை பதிவையும், தான் செய்த கர்ம வினை பதிவையும் ஏக காலத்தில் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து அனுபவிக்கும் நிலையை தரும் என்பதை கவனத்தில் கொள்வது நலம் தரும்.

 மேற்கண்ட ஜாதகமே ராகுகேது பாதிப்பிற்கு உதாரணமாக விளங்குகிறது, ஜாதகிக்கு 2ல் அமர்ந்த கேதுவும், 8ல் அமர்ந்த ராகுவும் முழு வீச்சில் இன்னல்களை வாரி வழங்குகின்றனர், நல்ல வேலை தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை ராகு கேதுவால் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை, 3,5,9,11,12ம் வீடுகள் களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தியது, 3ம் பாவக வழியில் இருந்து சுய முயற்ச்சியில் வெற்றியையும், 5ம் பாவக வழியில் இருந்து கல்வியில் நல்ல முன்னேற்றத்தையும், 9ம் பாவக வழியில் உயர்கல்வி மாற்றும் ஆராய்ச்சி படிப்பில் சிறப்பான இடத்தையும், வெளியில் சென்று பணியாற்றுவதால் நல்ல வருமானத்தையும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து இன்னல்களையும் தந்து கொண்டு இருக்கிறது, திருமண தாமதத்திற்கு இதுவும் காரணமாக அமைகின்றது.

ஆனால் அடுத்து வரும் சூரியன், சந்திரன் திசை இரண்டும் ராகு பகவானால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகிக்கு, ஜாதகிக்கு அமையும் திருமண வாழ்க்கை மற்றும் இல்லற வாழ்க்கைக்கும் உகந்தது அல்ல, எனவே திருமணம் செய்து கொள்ளும் முன், மிகுந்த எச்சரிக்கையுடன் 2,7ம் பாவகங்கள் வலிமை பெற்ற ஒரு வரனை தேர்வு செய்து மணம்முடிப்பது ஜாதகிக்கு நன்மையை தரும், இதில் ஏதாவது குளறுபடி நடந்தால் ஜாதகியின் இல்லற வாழ்க்கையை, சூரியன் திசையிலேயே ஆயுள் பாவகத்தில் வலிமை அற்று அமர்ந்திருக்கும் ராகு பகவான் எவ்வித தயக்கமும் பிரிவை தந்து, இல்லற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்.

குறிப்பு :

ராகு கேது சுய ஜாதகத்தில் நல்ல வலிமையுடன் அமர்ந்து இருப்பின் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் நிச்சயம் 100% விகித நன்மைகளை அனுபவிக்கும் நிலையை தரும், ராகு கேது சுய ஜாதகத்தில் வலிமை அற்று அமர்ந்து இருப்பின் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் நிச்சயம் 100% விகித தீமைகளை அனுபவிக்கும் நிலையை தரும், சுய ஜாதகத்தில் ராகுகேது கிரகங்களால் பாதிக்கப்பட்ட பாவக பலனை, நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தவில்லை எனில் ராகுகேது பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களால் ஜாதகருக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன்வர்ஷன் 
9443355696

வெள்ளி, 24 ஜூன், 2016

ராகு கேது தோஷம் மற்றும் திருமண தோஷம் எனது ஜாதகத்தில் உள்ளதாக கூறுகின்றனர் இது உண்மைய ? எனக்கு திருமணம் நடக்குமா? எந்த வருடத்தில் திருமணம்?


கேள்வி :

ராகு கேது தோஷம் மற்றும் திருமண தோஷம் எனது ஜாதகத்தில் உள்ளதாக  கூறுகின்றனர் இது உண்மைய ? 
எனக்கு திருமணம் நடக்குமா? 
எந்த வருடத்தில் திருமணம்?


சாயாகிரகங்களான ராகு கேது சுய ஜாதகத்தில் யோகத்தை தரும் நிலையை பற்றியும், அவயோகத்தை தரும் நிலையை பற்றியும் இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! மேலும் மேற்கண்ட கேள்விகளுக்கு உண்டான உண்மையான பதில் பற்றி ஆய்வு செய்வோம்.


லக்கினம் : மகரம் 
ராசி : சிம்மம் 
நட்சத்திரம் : பூரம்2ம் பாதம்

ஜாதகத்தில் 2,8ல் ராகு கேது இருப்பது சர்ப்ப தோஷமாக கருதப்படுகிறது, உண்மையில் கீழ்கண்ட ஜாதகத்தில் 2,8ல் அமர்ந்த ராகு கேது மிகவும் வலிமையுடன் இருப்பதும், தாம் அமர்ந்த பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்வதும் தோஷத்தை தர வாய்ப்பில்லை, தாம் அமர்ந்த பாவகத்தை தமது  கட்டுப்பாட்டில் முழுவதுமாக எடுத்துக்கொள்ளும் வல்லமை பெற்ற கிரகங்களான ராகுகேது இந்த ஜாதகத்திலும் தனது பணியை சிறப்பாகவே செய்துகொண்டு இருப்பது கவனிக்க தக்கது, மகர லக்கினத்திற்கு 2ல் அமர்ந்த ராகு, ஸ்திர காற்று தத்துவ ராசியான கும்பத்தை மிகுந்த வலிமை பெற செய்கிறார், மேலும் கும்ப ராசி என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமாக அமைவது, ஜாதகரின் குடும்ப வாழ்க்கையில் வரும் அதிர்ஷ்டத்தின் தன்மையை காட்டுகிறது, ஜாதகரின் அறிவு திறனும், அதிர்ஷ்டமும் ஒன்று இணைந்து  ராகு பகவான் தரும் வலிமையால் யோகங்களை வாரி வழங்குவது கவனிக்கத்தக்க அம்சமாகும், மேலும் ஜாதகரின் வருமானம் என்பது ஸ்திர தன்மையுடன், ஜாதகரின் அறிவு திறன் கொண்டும், பேச்சு திறன்கொண்டும் ஈட்டப்படுவதாக அமையும், இதற்கு குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்த ராகு பகவானின் ஆளுமையே காரணமாக அமைகிறது.

சிம்மத்தில் அமர்ந்த கேது ஸ்திர நெருப்பு தத்துவ ராசியினை ஆயுள் பாவகமாக கொண்ட மகர லக்கின அன்பருக்கு, நீண்ட ஆயுளை வாரி வழங்கி உள்ளதும், ஆயுள் பாவகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் கவனிக்க தக்கது, மேலும் தாம் அமர்ந்த பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்வது ஜாதகரின், வாழ்க்கையில் திறம்பட செயல்படும் நிர்வாக திறமையின் காரணமாக புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை வழங்கும் என்பது வரவேற்க தக்கது, மேலும் ஜாதகரின் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வபுண்ணிய ஸ்தானமாக அமைவது, ஜாதகரின் அறிவு திறனையும், சுறு சுறுப்பு மிக்க  செயல்பாடுகளையும் கட்டியம் கூறும், ஜாதகர் மருத்துவம் சார்ந்த விஷயங்கள், காப்பீடு சார்ந்த விஷயங்கள் மூலம், மிகப்பெரிய  பொருளாதார சேர்க்கையை பெறுவதற்கு உண்டான ஞானத்தை வழங்குவார் என்பது தெளிவாகிறது, இன்ஷுரன்ஸ் துறையில் கொடிகட்டி பறக்கும் யோகத்தையும் வாய்ப்பையும்  கேது பகவானே வழங்குகிறார் என்றால் அது மிகையில்லை, ஆயுள் பாவகம் ஜாதகரின் திடீர் அதிர்ஷ்டம் மற்றும் புலனுக்கு அப்பாற்பட்ட நுண்ணறிவை வழங்கும் என்பதால், புவியில் மற்றவர்கள் மனதில் உள்ள எண்ணத்தை அறியும் யோகத்தை தரும், மேலும் முக்காலங்களையும் கண்டு உணர்ந்து செயலாற்றும் யோகத்தை தரும். பிரபஞ்ச ரகசியங்களை உள்ளுணர்வாக சுவீகரிக்கும் ஆற்றலும், எண்ணிய எண்ணத்தை செயல்வடிவமாக காணும் பேராற்றலையும் வாரி வழங்கும், முன்னில் கும்பத்தில் அமர்ந்த ராகு ஜாதகருக்கு சகல அதிகாரம் சுகபோகத்துடன்  கூடிய அதிர்ஷ்டத்தை வழங்குகின்றார், சிம்மத்தில் அமர்ந்த கேது அறிவு திறன் மற்றும் சுய கட்டுப்பாட்டுடன் கூடிய ஞானத்தை வாரி வழங்குகிறார், எனவே ஜாதகர் தனது பிறவி பயனை முழுவதும் தங்குதடையின்றி பெறுவதற்கு சாயா கிரகங்கள் 100% விகித யோகங்களை வாரி வழங்குகின்றது என்பதால் இந்த ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இல்லை என்பதே மறுக்க இயலாத உண்மையாகிறது 

எனவே மேற்கண்ட ஜாதகம் சாயாகிரகங்கள் வலிமை பெற்ற யோக ஜாதகமாக கருதுவதே உண்மையாகிறது, மேலும் 2,8ல் சாயா கிரகங்கள் பெற்ற வலிமையை கருத்தில் கொண்டே, ஜாதக பலன் காண முற்படுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சரியான பலாபலன் காண உதவி புரியும்.

திருமணம் நடக்குமா என்ற கேள்விக்கு, ஜாதகருக்கு "ஜோதிடதீபம்"  வழங்கும் பதில் 100% விகிதம் நடைபெறும் என்பதை, சுய ஜாதக பாவக வலிமை கொண்டு வழங்குகிறது.

திருமணம் எப்பொழுது நடைபெறும் என்ற கேள்விக்கு, ஜாதகருக்கு         "ஜோதிடதீபம்" நடைபெறும் திசாபுத்திகள் வழங்கும் பலன்கள் அடிப்படையில் நடைபெறும் "செவ்வாய் திசையில்" எதிர்வரும் "சனி புத்தியில்" நடைபெறும் என்று தெளிவு படுத்துகிறது.

மேலும் மேற்கண்ட ஜாதகம் எப்படி சாயாகிரகங்களின் வலிமையை பறைசாற்றுகின்றதோ, அதேபோல் சாயா கிரகங்கள் வலிமை அற்ற நிலையில் சுய ஜாதகத்தில் அமரும் பொழுது ஜாதகர் பெரும் இன்னல்கள் பற்றியும் துன்பங்கள் பற்றியும் விளக்கம் "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது, சாயா கிரகங்களான ராகுகேது சுய ஜாதகத்தில் வலிமை அற்ற நிலையில் உள்ள ஜாதகத்தை பற்றி அடுத்த பதிவில் சிந்திப்போம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 22 ஜூன், 2016

சுக்கிரன் திசை எனது ஜாதகத்தில் நடைமுறையில் உள்ளது, இதனால் எனக்கு சுகபோகங்களும் நன்மையும் பெருகுமா ?


கேள்வி :

அய்யா எனக்கு யோகாதிபதி சுக்கிரன் திசை நடைபெறுவதாகவும், இந்த சுக்கிரன் திசை அனைத்து நன்மைகளையும் தரும் என்கின்றனர், சுக்கிரன் திசையில் நான் பெரும் யோகங்கள் மற்றும் நன்மைகளை பற்றி தெளிவுபடுத்தவும்.

பதில் :

தங்களின் ஜாதக நிலை


லக்கினம் : மகரம்
ராசி : விருச்சிகம்
நட்சத்திரம் : அனுஷம் 3ம் பாதம்

 தங்களுக்கு  தற்போழுது சுக்கிரன் திசை 08/03/2013 முதல் 08/03/2033 வரை நடைபெறுகின்றது, நடைபெறும் சுக்கிரன் திசை தங்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விளக்கமாக காண்போம் அன்பரே! அதற்க்கு முன்  தங்களின் சுய ஜாதக பாவக வலிமையை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே!

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம்.
1,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.

சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடனே சம்பந்தம்.
2,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.

தங்களது சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் மிகவும் வலிமையுடன் உள்ளது, 2,6,8,9,12ம் வீடுகள் பாதிப்பையும், 3,5,11ம் வீடுகள் கடுமையான பாதிப்பையும்  பெற்று இருக்கின்றது, மேலும் தங்களுக்கு நடைபெறும் சுக்கிரன் திசை 7ம் பாவகத்தில் அமர்ந்து, திடீர் இழப்பை தரும் 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று, 8ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, சுய ஜாதகத்தில் 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது தங்களுக்கு நீண்ட ஆயுளை தரும், இருப்பினும் தேவையற்ற மருத்துவ செலவினங்கள், திடீர் விபத்து, எதிர்பாராத பொருள் இழப்பு, மற்றும் அவசரப்பட்டு செய்யும் காரியங்களில் இன்னல்கள், மன கவலைகள், வீண் சிரமங்கள், மற்றவர்களாலும் வாழ்க்கை துணையினாலும் இழப்புகள், விரையங்கள் என சற்று சிரமத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும், தங்களுக்கு நடைபெறும் சுக்கிரன் திசை வலிமை பெற்ற  பாவக பலனை ஏற்று நடத்தாத காரணத்தால் பெரிய அளவில் யோக பலன்களை அனுபவிக்க வாய்ப்பில்லை என்பது மட்டுமே உண்மை.

சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது, சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும் யோகங்களையும் தரும், ஆனால் நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே இது சாத்தியம், லக்கினாதிபதி மற்றும் யோகாதிபதி திசா புத்தி என்றாலும் சரி இது விதிவிலக்கல்ல, நடைபெறும் திசா புத்தி எதுவென்றாலும் சரி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே  சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து நன்மைகளும் யோகங்களும் நடைபெறும், மாறாக பாதிக்க பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து இன்னல்களும் துன்பங்களுமே நடைமுறைக்கு வரும், எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெறுவது அவசியமாகிறது.

தங்களுக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை, யோகாதிபதி திசை என்ற போதிலும் அவர் ஏற்று நடத்தும் பாவக தொடர்பானது, 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நடைபெறுவது தங்களுக்கு நன்மையை தரும் அமைப்பல்ல, மேலும் ஆயுள் பாவகம் தங்களுக்கு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஸ்திர நெருப்பு தத்துவ ராசியில் அமைவது தங்களின் அறிவு திறனை பாதிக்கும், மேலும் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் தங்களுக்கு எதிர்பாராத இன்னல்களை வழங்க கூடும், மேலும் சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் 5ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் பாவகமான சிம்மமும் பாதிக்கப்படுவதும், நடைபெறும் சுக்கிரன் திசை பாதிக்கப்பட்ட 8ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, தங்கள் தங்களது பூர்வீகத்தில் சிறப்பான ஜீவனத்தை தாராது, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியிலான யோகங்களையும் பெற இயலாத நிலையை தரும்,  குறிப்பாக ஜாதகரின் அறிவு திறனும், ஜீவன முன்னேற்றமும் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் தனது பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவு சென்று வாழ்க்கை நடத்துவது சகல யோகங்களையும் தரும், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து நன்மைகளையும் யோகங்களையும் பெற வழிவகுக்கும்.

மேலும் தங்களது சுய ஜாதகத்தில் நன்மையையும் யோகத்தையும் தரும் திசா புத்திகள்  பற்றியும், தீமையையும் அவயோகத்தையும் தரும் திசாபுத்திகள் பற்றியும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

ஜெனன காலத்தில் அமைந்த சனி திசை ( புத்தி ) தங்களுக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களையும்,

2வதாக நடைபெற்ற புதன் திசை  ( புத்தி ) தங்களுக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களையும்,

3வதாக நடைபெற்ற கேது  திசை  ( புத்தி ) தங்களுக்கு சுக ஸ்தானமான 4,10ம் பாவக பலனை ஏற்று நடத்தி யோக பலன்களையும்,

4வதாக தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை ( புத்தி ) தங்களுக்கு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களை தந்துகொண்டு இருக்கின்றது.

5வதாக நடைபெற இருக்கின்ற சூரியன் திசையும் ( புத்தி ) தங்களுக்கு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களை தர இருக்கின்றது.

6வதாக நடைபெற இருக்கின்ற சந்திரன் திசை ( புத்தி ) தங்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களை தர இருக்கின்றது.

7வதாக நடைபெற இருக்கின்ற செவ்வாய் திசை ( புத்தி ) தங்களுக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களை தர இருக்கின்றது.

8வதாக நடைபெற இருக்கின்ற ராகு திசை ( புத்தி ) தங்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களை தர இருக்கின்றது.

9வதாக நடைபெற இருக்கின்ற குரு திசை ( புத்தி ) தங்களுக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களை தர இருக்கின்றது.

பெரும்பாலான திசா புத்திகள் பாதிப்பான பலனை தருவதால் தங்கள் வாழ்க்கையை மிக சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும் அல்லது வலிமை பெற்ற ஜாதகத்தை சார்ந்தவர்களின் நட்பு மற்றும் வலிமை மிக்க கூட்டாளிகள் தொடர்பை பெறுவது மிகுந்த நன்மையை தரும், மேலும் சுய ஜாதகத்தில் அனைத்து பாவகங்களும் வலிமை பெற்ற ஒருவரை வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்வது சகல யோகங்களையும் தரும், தங்களுக்கு பிறக்கும்  குழந்தைகள் ( பூர்வீகத்தை விட்டு வெளியேறினால் ) வழியில் இருந்து யோகங்களை அனுபவிக்க இயலும் என்பதை கருத்தில் கொள்க, சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் வலிமை பெறுவது தங்களின் வாழ்க்கையில் இன்னல்கள் வந்த போதிலும், கவுரவம் குறையாத யோக வாழ்க்கையை வழங்கும், 1ம் பாவக வழியில் இருந்து நல்ல உடல் நிலை, சிறப்பான மன நிலை, 4ம் பாவக வழியில் இருந்து வசதிமிக்க வீடு வண்டி வாகனம், சொத்துசுக சேர்க்கை, 7ம் பாவக வழியில் இருந்து நல்ல வாழ்க்கை துணை, நல்ல நண்பர்கள், சிறப்பான கூட்டாளிகள், 10ம் பாவக வழியில் இருந்து சிறந்த தொழில் முன்னேற்றம், செய்யும் தொழில் வழியில் இருந்து அபரிவிதமான பொருளாதார சேர்க்கை என தங்களின் வாழ்க்கையில்  நன்மைகளுக்கு குறைவு இருக்காது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 20 ஜூன், 2016

தொழில் மற்றும் லாப ஸ்தான வலிமையையும், அபரிவிதமான பொருளாதார முன்னேற்றமும் !


"ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்."

"ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்."

மிக பெரிய தொழில் வெற்றிகளையும், ஜீவன முன்னேறங்களையும் பெறுவதற்கு மேற்கண்ட திருக்குறள் படிப்பினையாக அமையும், சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப, தமக்கு பொருத்தமான தொழில் வாய்ப்பை தேர்வு செய்துவிட்டால், ஜீவன வழியில் தன்னிறைவான முன்னேற்றம் பெறுவது என்பது இயல்பாகவே நடைபெற ஆரம்பித்துவிடும், பொருளாதார வசதி வாய்ப்புகளும், வண்டிவாகன யோகமும், சொத்து சுக சேர்க்கையும் சம்பந்த பட்ட ஜாதகரை தேடிவரும், ஜாதகரால் இயலாத காரியம் ஒன்று இல்லை என்ற நிலையை தரும், இதற்க்கு சுய ஜாதகத்தில் பாவக வலிமை சிறப்பாக அமைவது அவசியமாகிறது, கிழ்காணும் உதாரண ஜாதகத்தில் ஜீவனம் மற்றும் லாப ஸ்தான வலிமையை பற்றி, இந்த பதிவில் சற்று சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : கன்னி
ராசி : கடகம்
நட்சத்திரம் : பூசம் 3ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,3,4,5,7,8,9,11,12ம் வீடுகள் அனைத்தும் அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருக்கின்றது.

2,6,10ம் வீடுகள் ஜீவனம் மற்றும் தொழில் ஸ்தானம் எனும் 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருக்கின்றது.

மேற்கண்ட ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வாரி வழங்கும், மேலும் நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கையில் யோகங்களுக்கு குறைவிருக்காது, ஜாதகரின் முன்னேற்றத்திற்கு தடையிருக்காது.

பொதுவாக ஜீவன ஸ்தான வலிமை  என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் தனிப்பட்ட தொழில் முன்னேற்றத்தையும், தன்னிறைவான பொருளாதார நன்மைகளையும் வாரி வழங்கும், ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் ஞானத்தையும், லாபஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் அதிர்ஷ்டத்தையும், தான் அனுபவிக்க இருக்கும் யோக பலன்களின் தன்மையையும் அறிவுறுத்தும், மேற்கண்ட ஜாதகருக்கு கற்ற கல்வி வழியில் இருந்து வாக்கு வன்மையும், மிகசிறந்த பேச்சு திறனையும், 2ம் பாவக வழியில் இருந்து கிடைக்க பெறுவார், மேலும் வாக்கு வழியில் இருந்து பொதுமக்கள் ஆதரவையும், மக்கள் செல்வாக்கையும், பேச்சை ஆதராமாக கொண்ட வருமான வாய்ப்பையும் பெறுவார், 6ம் பாவக வழியில் இருந்து திடீர் தொழில் வெற்றிகளையும் தொடர் வருமான வாய்ப்புகளையும் தரும், தன்னிறைவான வருமானம் எதிர்பாரமால் கிடைக்க பெறுவார், ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் அனைத்தும் சாதகமாக மாறும், தான் செய்யும் தொழிலில் நுண்ணறிவு திறனையும், சிறந்து விளங்கும் தன்மையையும் தரும், 10ம் பாவக வழியில் இருந்து செய்யும் தொழிலில் வெற்றியையும், தன்னிறைவான தொழில் முன்னேற்றத்தையும் தரும், சமூகத்தில் நல்ல அந்தஸ்தையும், கௌரவம் குறைவில்லா வாழ்க்கையயும், அரசு  ஆதரவும் உண்டாகும், அடிப்படையிலேயே வியாபர நுணுக்கமும், அறிவு திறனும் பெற்று இருப்பார், வாழ்க்கையில் ஜீவன வழியில் எவ்வித தடைகளும் வர வாய்ப்பில்லை, வந்த போதிலும் அதை சிறப்பாக கையாண்டு வெற்றி பெரும் வல்லமையை தரும்.

ஜீவன ஸ்தான அதிபதியாக சுக்கிரன் அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல சுக போகங்களை வாரி வழங்கும், ஆடை ஆபரணம், வண்டி வாகனம், பொதுமக்கள் மக்கள் விரும்பு உயர் மதிப்பு கொண்ட ஆடம்பர பொருட்கள், கலை துறை போன்ற தொழில்களில் நல்ல வெற்றி வாய்ப்பும், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வியாபரத்தில் அபரிவிதமான ஜீவன முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், சொல்வ செழிப்பு தேடிவந்து குவியும், இந்த ஜாதகம் குறைந்த முதலீட்டில் அபரிவிதமான லாபங்களை குறுகிய காலத்தில் குவிக்கும் ஜாதக அமைப்பாகும், மேலும் சொந்த முயற்ச்சியில் சகல முன்னேற்றங்களையும் பெரும் யோக அமைப்பை தரும், பல தொழில் செய்யும் அறிவு திறனையும், பல வழிகளில் இருந்து வருமானங்களையும் வாரி வழங்கும், தனது முடிவில் இருந்து மாறாத மன நிலையையும், உறுதியான செயல்பாடுகள் மூலம் வெற்றியை பெரும் யோகத்தை தரும், ஜாதகரின் சிந்தனை மற்றும் அறிவு திறனே சகல நிலைகளில் இருந்தும் ஜீவன முன்னேற்றத்தை வாரி வழங்கும், தனக்கென்று ஒரு வழிமுறையை கையாண்டு வெற்றி பெரும் யோகத்தை தரும், திட்டமிடுதல்களும் செயல்பாடுகளும் ஜாதகருக்கு தொடர் வெற்றிகளை வாரி வழங்கும்.

1,3,4,5,7,8,9,11,12ம் வீடுகள் அனைத்தும் அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் இலக்கின வழியில் இருந்து சிறப்பாக வளரும் சூழ்நிலை, நல்ல உடல் மனம் நலம், முற்போக்கு சிந்தனை, அனைத்திலும் அதிர்ஷ்டத்தை பெரும் யோகத்தை தரும், தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றியை பெரும் யோகம் உண்டாகும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சியில் வெற்றி, வியாபரத்தின் மூலம் சகல யோகங்களையும் பெரும் தன்மை, பயணங்களில் லாபம், சமயோசித புத்திசாலித்தனம், தன்னம்பிக்கை மற்றும் வீரியமிக்க செயல்பாடுகள், மனதில் நினைத்ததை சாதிக்கும் வல்லமை, அதிகார யோகம், கட்டளையிடும் இடத்தில் நிற்கும்  யோகம், சகல சௌபாக்கியம் என்ற வகையில் யோகங்களை வாரி வழங்கும்.

4ம் பாவக வழியில் சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், சகல வசதிமிக்க வீடு, மற்றும் நிறுவனம், செய்யும் தொழில் வழங்கும் லாபங்களை சொத்துகளாக மாற்றும் யோகம், சுக போகங்களை அனுபவிக்கும் தன்மை, செல்லும் இடங்களில் நல்ல வரவேற்ப்பு, நல்ல குணநலம், பெருந்தன்மையான மனம், சகலருக்கும் உதவும் தன்மை,  தன்னை சார்ந்தவர்களை ஆதரிக்கும் குணம், உதவி செய்வதன் மூலம் நற்ப்பெயர், பெற்றோர் வழி ஆதரவு, மிதமிஞ்சிய சொத்து சுக சேர்க்கை, வாழ்க்கையில் வரும் செல்வ சேர்க்கையை கண்டு கர்வம் கொள்ளாத மன நிலை, எப்போதும் எளிமையை கடைபிடிக்கும் மன நிலையை தரும். 5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வி வழியில் இருந்து பலன்பெறுதல், சமயோசித புத்திசாலித்தனம், எந்த ஒரு சூழ்நிலையையும் தனது அறிவு திறன் கொண்டு வெல்லும் யோகம், மனம் தளர்வடையா தன்மை, அனைவரின் ஆதரவையும் பெரும் யோகம், எந்த சூழ்நிலையிலும் உதவி செய்யும் உறவுகள் மற்றும் நண்பர்கள், மாற்று இனம் மாற்றும் மதத்தினரும் ஆதரவு தரும் நன்னடத்தை, தர்மத்தையும் உண்மையையும் போற்றும் குணம், பொதுவாழ்க்கையில் நேர்மை, போதும் என்ற மன நிலை, குல தேவதையின் பரிபூரண நல்லாசிகள் எந்த சூழ்நிலையிலும் ஜாதகரை காக்கும் வல்லமை, புதுமை விரும்பி, ஆராய்ச்சி மன நிலை, புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உலகிற்க்கு சகல நன்மைகளையும் தரும் யோகம் என ஜாதகர்
 பூர்வபுண்ணிய ஸ்தான வழியில் இருந்து சகல யோகங்களையும் தரும், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகர் முறியடித்து நன்மையை பெறுவார்.

7ம் பாவக வழியில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம், கலைதுறையில் செல்வாக்கு, அதிக லாபம், கூட்டு முயற்ச்சியின் மூலம் லாபம், பொதுமக்கள் ஆதரவு மற்றும் செல்வாக்கு, தன்னிறைவான வியாபர விருத்தி, உலக புகழ், பல தொழில்களை நிர்வகிக்கும் வல்லமை, நல்ல வலிமை மிக்க கூட்டாளி, செல்லும் இடங்களில் நல்ல பெயரும் புகழும் உண்டாகும் யோகம், குறுகிய காலத்தில் சகல செல்வாக்கையும் பெரும் யோகம், வியாபாரத்தின் மூலம் சொத்து சுக சேர்க்கை, வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் என களத்திர வழியில் இருந்து சிறப்பான நன்மைகள் உண்டாகும், 8ம் பாவக  வழியில் இருந்து புதையல் யோகம், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் வருமானம் மற்றும் சொத்துகள், கூட்டாளியின் மூலம் லாபம் பெரும் யோகம், நீண்ட ஆயுள், மிகப்பெரிய லட்சியங்கள் மற்றும் திட்டமிடுதல்களை சுவீகரிக்கும் வல்லமை, திடீர் பொருள் வரவு என ஆயுள் பாவக நன்மைகளை தங்கு தடையின்றி பெரும் யோகத்தை தரும்.

9ம் பாவக வழியில் இருந்து நல்லறிவு, ஆன்மீக ஞானம், பெரியோர் ஆசிர்வாதம், புண்ணியம் மிக்க செயல்பாடுகள், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம், பல்துறை அறிவு திறன், நல்ல கல்வி அறிவு, ஆராய்ச்சி மூலம் புதுமையான கண்டுபிடிப்புகள், எதிர்பார்ப்புகள் நிறைவேறும் யோகம், அனைவரிடமும் நற்ப்பெயர் பெரும் யோகம், சமூகத்தில் நன்மதிப்பு, பெயரும் புகழும் தேடிவரும் தன்மை, பெருதன்மை மிக்க நற்குண நலன்கள் மூலம் அனைவரின் ஆதரவையும் பெறுதல், புகழ் மிக்க பொறுப்புகளை நிர்வகிக்கும் வல்லமை, அனைவரையும் ஆதரிக்கும் யோகம், பித்ருக்கள் ஆசிர்வாதம் என ஜாதகர் பாக்கிய ஸ்தான பலன்களை பரிபூரணமாக அனுபவிக்கும் யோகத்தை தரும், 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிர்ஷ்டசாலி, முற்போக்கு சிந்தனை, நினைத்ததை பெரும் யோகம், நல்ல குணம், எதிர்ப்புகளை வெற்றியாக்கும் தனித்தன்மை, செல்வ நிலையில் திருப்தி, தேடி வரும் வெற்றி வாய்ப்புகள், அபரிவிதமான செல்வசெழிப்பு, அனைத்திலும் லாபம், லாபநோக்க சிந்தனை, வெற்றிக்கான சரியான திட்டமிடுதல்கள், வருமுன் உணரும் மனநிலை என லாப ஸ்தான வழியில் இருந்து மிகுந்த நன்மைகளை தரும்.

12ம் பாவக வழியில் இருந்து முதலீடுகளில் நல்ல லாபம், நல்ல உறக்கம், ஆன்மீக வெற்றி, நிறைய சொத்துகள், திருப்தியான மன நிலை தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றி, நல்ல மன நிம்மதி, எதிர்காலத்திர்க்கான சேமிப்பு, அசையும் அசையா சொத்துகள், பொது வாழ்க்கையில் நேர்மை, தொழில் முதலீடுகள் நல்ல லாபம் தரும் யோகம் என அயன சயன சுக போகங்களை வாரி வழங்கும்.

மேற்கண்ட ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையை விட, லாப ஸ்தான வலிமை மேலோங்கி நிற்பது, சிறப்பான தொழில் வெற்றிகளையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், எனவே சுய தொழில் மூலம் குறுகிய கால வெற்றிகளை வாரி வழங்கும், மேலும் எதிர்வரும் சுக்கிரன் திசையில் நல்ல தொழில் வளர்ச்சியையும், அதற்க்கு பிறகு வரும் சூரியன், சந்திரன், செவ்வாய் திசைகளில் அபரிவிதமான லாபங்களையும் தரும் என்பதால் ஜாதகர் பின்யோக ஜாதகர் என்பது உறுதியாகிறது, 45 வருடங்களுக்கு மேல் ராஜ யோகங்களை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 16 ஜூன், 2016

சுய ஜாதகத்தில் வலிமைபெற்ற கிரகம், தனது திசாபுத்தி காலங்களில் யோகங்களை வாரி வழங்குமா ?

 

 நவகிரகங்கள் சுய ஜாதகங்களில் வலிமை பெறுவது, தனது திசா புத்தி காலங்களில் நன்மைகளையும் யோகங்களையும் தரும் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, சுய ஜாதகத்தில் ஒரு கிரகமோ அல்லது ஒன்றிற்க்கு மேற்ப்பட்ட கிரகமோ ராசியிலோ அல்லது நவாம்சத்திலோ  ஆட்சி,உச்சம் பெறுவது ஜாதகருக்கு யோகங்களையும் நன்மைகளையும் தமது திசா புத்திகாலங்களில் வாரி வழங்கும் என்பது பொதுவான கருத்து, இந்த பதிவில் நாம் கிரகங்கள் இலக்கின வழியில் இருந்து, பாவகங்களுக்கு தரும் வலிமையை அடிப்படையாக கொண்டு காண்போம் அன்பர்களே!

ராசி சக்கிரத்தில்  கிரகங்களின் ஆட்சி உச்சம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  உண்டானது, இந்த வலிமை சுய ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு 12 பாவகங்களுக்கு எவ்வித  வலிமையை தருகிறது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, மேலும் ராசியிலோ அம்சத்திலோ நவகிரகங்கள் ஆட்சி உச்சம் பெறுவது, தமது திசா புத்தியிலும் நன்மையை தரும் என்று உறுதியாக சொல்ல இயலாது, சுய ஜாதகங்களில் பாவக வலிமையே, திசா புத்திகளில் பலாபலன்கலாக பிரதிபலிக்கிறது, உதாரணமாக கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : சிம்மம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 4ம் பாதம் 

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ராகு கேது முறையே 12,6ம் பாவகங்களில் அமர்ந்து 12ம் பாவகத்தையும், 6ம் பாவகத்தையும் 100% விகித வலிமை பெற செய்கின்றனர், ( இங்கே கிரக வலிமை என்பது ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நிச்சம்  என்பதை வைத்து நிர்ணயம் செய்யவில்லை, சுய ஜாதகத்திற்கு லக்கினத்திற்கு பாவக வழியில் தரும் வலிமையை வைத்து நிர்ணயம் செய்யபடுகிறது மேலும் ராகுகேது லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானங்களில் அமரவில்லை 12,6ம் பாவகங்களில் அமர்ந்து இருப்பது லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை வைத்து கணிதம் செய்தால் தெளிவாகும் ) 12ல் அமர்ந்த ராகு ஜாதகருக்கு நல்ல அயன சயன சுகத்தையும், 6ல் அமர்ந்த கேது ஜாதகருக்கு எதிர்ப்பற்ற யோக வாழ்க்கையையும், சத்ரு வழியில் யோகங்களையும் தருவது புலனாகும், எனவே சுய ஜாதகத்தில் ராகுவும், கேதுவும் தாம் அமர்ந்த பாவகங்களுக்கு 100% விகித நன்மையை தரும் அமைப்பில் உள்ளனர், எனவே ஜாதகருக்கு ராகு திசையும், கேது திசையும் யோகங்களை வாரி வழங்குமா ?

இந்த கேள்விக்கு பதில் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற ராகுவும், கேதுவும் தமது திசா புத்தி காலங்களில் லக்கினம் முதல் 12 பாவகங்களில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகின்றார் என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, எனவே நடைபெற்ற ராகு திசை ஏற்று நடத்திய பாவக பலனை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

சுய ஜாதகத்தில் 12ம் பாவகத்தில் வலிமை பெற்ற ராகு தனது திசையில் 1.3,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 200% விகித அவயோக பலன்களையும், 6ல் வலிமை பெற்ற கேது எதிர்வரும் தனது திசையில் 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% விகித யோக பலன்களையும் வாரி வழங்கும் என்பது தெளிவாகிறது, எனவே ராகு திசாபுத்தி காலங்கள் ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனையும், கேது திசாபுத்தி காலங்கள் ஜாதகருக்கு ஜீவன ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது ஜாதகருக்கு ராகு திசாபுத்தி காலங்கள் கடுமையான அவயோக பலன்களையும், கேது திசாபுத்தி காலங்கள் மிகுந்த யோக பலன்களையும் தரும் என்பது உறுதியாகிறது.

எனவே சுய ஜாதகத்தில் வலிமை ( பாவக வழியில் ) பெற்ற கிரகங்கள் தமது திசாபுத்தி காலங்களில் யோக வாழ்க்கையை தரும் என்று கருதுவதும், சுய ஜாதகத்தில்  வலிமை அற்ற கிரகங்கள் தமது திசாபுத்தி காலங்களில் அவ யோகங்களை தரும் என்று கருதுவதும் ஜாதக கணித உண்மைக்கு புறம்பானதே, நவகிரகங்கள் தமது திசாபுத்தி காலங்களில் லக்கினம் முதல் 12 வீடுகள் தொடர்பு பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, வலிமை பெற்ற பாவாக பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகருக்கு யோக பலன்களையும், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகருக்கு அவயோக பலனையும் நவகிரங்கள் தமது திசாபுத்தி காலங்களில் வழங்குகிறது என்பதே உண்மை, மேலும் சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கு ஏற்ப்பவே ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அமைகிறது, நவகிரகங்களின் திசாபுத்திகள் சுய ஜாதகத்தில் வலிமைபெற்ற வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் ஒரு கருவியே அன்றி, தனிப்பட்ட யோக அவயோக பலனை வழங்க தகுதி அற்றவை என்பதை மறுக்க இயலாது, சுய ஜாதக பாவக வலிமைக்கு ஏற்ப்பவே நன்மை தீமை பலன்கள் நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது.

குறிப்பு : 

சுய ஜாதகங்களில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகத்தின் திசாபுத்திகள் ஜாதகருக்கு யோகத்தை தரும் என்பதும், பகை நீச்சம் பெற்ற கிரகத்தின் திசாபுத்திகள் அவ யோகத்தை தரும் என்பதும், உண்மைக்கு புறம்பானதே அவரவர் சுய ஜாதக பாவக வலிமையையே நவ கிரகங்களின் திசாபுத்திகள்  ஏற்று நடத்தும் என்பதே உண்மை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திருமணத்திற்கு முன் வரன் மற்றும் வதுவின் ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் !


" திருமணம் ஆயிரம் காலத்து பயிர் " என்ற பெரியோர்களின் முதுமொழிக்கு  ஏற்ற இல்லற வாழ்க்கை அமைய வேண்டும் எனில் அவரவர் சுய ஜாதகங்களில் சில முக்கியமான பாவகங்கள் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, இதற்க்கு மாறாக அமையும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் பொருத்தமில்லா வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார், இல்லற வாழ்க்கையும் இனிமை தருவதில்லை, சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்யும், 2,5,7,8,12 ம் பாவகங்கள் ஒருவருக்கு வலிமையுடன் அமைந்தால் நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும், தமக்கு பொருத்தமான இல்லற வாழ்க்கை சரியான வயதில் அமைந்துவிடும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்படும்பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பொருத்தமான வாழ்க்கை துணை அமைவது என்பது குதிரை கொம்பாக மாறிவிடும், தமது சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க பட்டு இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர், தமக்கு வரும் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது மிகுந்த கவனமுடன் இருப்பது நலம் தரும்.


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : அவிட்டம் 1ம் பாதம் 

ஜாதகிக்கு வயது 26 இதுவரை திருமணம் செய்வதற்கு எடுத்த 100க்கு மேற்ப்பட முயற்ச்சிகள் யாவும்  தோல்வியில் முடிந்தது, சுய ஜாதகத்தில் பாவக வலிமையை ஆய்வு செய்வோம் அன்பர்களே!

1,3,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,5,6,8,10,11ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகிக்கு பெரும்பாலான பாவக தொடர்புகள் வலிமை அற்ற நிலையில் காணப்படுவது வரவேற்க தக்கது அல்ல, இதில் பாதக ஸ்தான தொடர்பு என்பது ஜாதகிக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை தரும், இலக்கின வழியில் இருந்து ஜாதகி எடுக்கும் முடிவுகள் யாவும் மிகப்பெரிய பின்னடைவை தரும், நல்ல உடல் நலம் மற்றும் மன நலம் அமைவதும், வளரும் சூழ்நிலை சிறப்பாக அமைவதும் கேள்விக்குறியே, ஜாதகியின் எண்ணமும் நடவடிக்கையும் மற்றவர்கள் விமர்சனத்திற்கு வழிவகுக்கும், ஜாதகியின் ஆசைகள் நிராசைகளாக மாறிவிடும், நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்வியை தரும், தன்னம்பிக்கை குறையும், வீரியமற்ற தன்மையும், அசட்டு துணிச்சலும் ஜாதகியின் வாழ்க்கையை திசைமாறி  செல்லும் தன்மையை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகியின் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் ஜாதகியை வெகுவாக தமது சுயலாபத்திற்காக பயன்படுத்திகொல்வார்கள், எதிர்பால் அமைப்பினரிடம் இருந்து ஜாதகி சொல்ல இயலா துன்பத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், வாழ்க்கை துணையை சரியாக தேர்வு செய்யவில்லை எனில் வாழ்க்கை  நரகத்திற்கு ஒப்பான நிலையை தரும், 9ம் பாவக வழியில் இருந்து தமது அறிவார்ந்த செயல் என்று நினைத்துகொண்டு செய்யும் சில முட்டாள்தனமான நடவடிக்கைகள் ஜாதகியை படுகுழியில் தள்ளும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை தரும், பெரியோரை மதிக்கமால் செய்யும் ஒவ்வொரு காரியமும் ஜாதகியின்  நற்ப்பெயருக்கும் புகழுக்கும் மறையாத களங்கத்தை ஏற்ப்படுத்தும், தனது வாழ்க்கைய தானே பாதிப்பிற்க்கு உள்ளாக்கும் சூழ்நிலையை தரும்.

1,3,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகியின் வாழ்க்கையில் 200% விகித இன்னல்களை வாரி வழங்கும், மேலும் பெரும்பாலான பாவக தொடர்புகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சம்பந்தம் பெற்ற பாவக வழியில் இருந்து எதிர்ப்பையும், வீண் விரோதங்களையும், பகைமையையும் வளர்க்கும், இதனால் ஜாதகிக்கு பெரிய அளவில் மன நிம்மதி இழப்பையும், துன்பத்தையும் வாரி வழங்கும், சுக ஸ்தானமான 4ம் வீடும், அயன சயன சுகம் தரும் 12ம் வீடும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு சுகபோகங்களையும், இல்லறவாழ்க்கையில் இன்பத்தையும் தடை செய்யும், மேலும் ஜாதகியின் விரைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாக அமைவது, வாழ்க்கை துணை வழியில் இருந்து சுகமற்ற தன்மையையும், வீண் மன கவலைகளையும், அதிக மன உளைச்சல் மற்றும் மன போராட்டத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், எனவே ஜாதகி மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது  சாலசிறந்தது, சுய ஜாதகத்தில் வெகுவான பாவக தொடர்புகள் பாதிப்பை தரும் அமைப்பில் உள்ளது ஜாதகியின் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல என்பது கவனிக்க தக்க விஷயமாகும்.

ஜாதகியின் களத்திர ஸ்தானம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தானமாகவும், ஜாதகியின் குடும்ப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாகவும் அமைவது, ஜாதகியின் பேச்சு வாக்கின் வழியில் இருந்து மிகப்பெரிய துன்பமும், அவபெயரும் உண்டாகும், ஜாதகியின் வாக்கு வன்மை பெரிய அளவில் ஜாதகிக்கும், ஜாதகியை சார்ந்தோருக்கும் பாதிப்புகளை வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள்  கடுமையாக பாதிக்கபடுவதும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு  குடும்பம் மற்றும் களத்திர பாவகங்கள் பாதிப்பிற்கு உள்ளகுவதும், நல்ல இல்லற வாழ்க்கையை அமைத்து தர வாய்ப்பில்லை, மேலும் ஜாதகியாக தேர்வு செய்வது மிகப்பெரிய இன்னலுக்கும், மனமுறிவுக்கும் வழிவகுக்கும், எனவே  ஜாதகி வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது, வாழ்க்கை துணையையின் ஜாதகத்தில் மேற்கண்ட ( 1,2,5,7,8,12 ) பாவகங்கள் வலிமையுடன் இருப்பதை கவனத்தில் கொண்டு தேர்வு செய்வது நலம் தரும், மேலும் தமது நலம் விரும்பும் பெரியோர்களின் வாக்கை மதித்து நடந்து கொள்வதும், தமக்கு வரும் வாழ்க்கை துணையின் வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுக்கொண்டு, திருமண வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு தயாராக இருப்பதும் சகல நலன்களையும் தரும்.

தற்பொழுது ஜாதகிக்கு நடக்கும் குரு திசை ஆயுள் பாவகமான 8ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று சில நன்மைகளை தந்த போதிலும், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் எதிர்ப்புகளை தவிர்க்க இயலாது, தமக்கு வர இருக்கும் வாழ்க்கை துணையின் ஜாதகமே தமக்கு இல்லற வாழ்க்கையில் நன்மையை தரும் என்பதால், ஜாதகி தமக்கு வரும் வாழ்க்கை துணையின்  ஜாதகத்தை வலிமை மிக்கதாக தேர்வு செய்வது சகல நலன்களையும் தரும்.

குறிப்பு :

தமது சுய ஜாதகம் வலிமை அற்று இருக்கும் பொழுது, தமது கூட்டாளிகள் மற்றும் வாழ்க்கை துணையின் ஜாதக வலிமை, தமக்கு நன்மைகளை தரும் என்பதில்  மாற்று கருத்து இல்லை, மேலும் திருமண வாழ்க்கையில் சுய ஜாதக வலிமையை விட, தமது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையே மிகுந்த நன்மையை தரும் என்பதில் அனைவரும் கவனம் கொள்வது நலம் தரும், வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் பாவக வலிமை அற்ற தன்மை தம்மையும் பெரிய பாதிப்பிற்கு ஆளாக்கும் என்பதில் எச்சரிக்கையுடன் இருப்பது நலம் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 7 ஜூன், 2016

திருமண வாழ்க்கையில் தடைகளும் தாமதமும் ஏற்ப்பட காரணம் என்ன ?

 

சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெரும்பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, தமது பாவக நிலைகளில் இருந்து தமது வலிமைக்கேற்ப நன்மைகளை வாரி வழங்கும், மாறாக சில பாவகங்கள் பாதிக்கப்படும் பொழுதோ, லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை இழக்கும் பொழுதோ ஜாதகர் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவிக்கும் நிலைக்கு ஆளாக்கபடுகிறார், ஜாதகர் பாதிக்க பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களில் இருந்து விடுபட பரிகாரங்களையும், வழிமுறைகளையும் நாடவேண்டி உள்ளது, 40 வருடங்கள் கடந்தும் திருமண வாழ்க்கை அமையாமல், பல போராட்டங்களை சந்தித்து கொண்டு இருக்கும் ஓர் ஜாதகத்தை இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! சம்பந்தப்பட்ட ஜாதகத்தின் பாவக வலிமை, ஜெனனம் முதல் நவகிரக திசா புத்திகள் ஜாதகருக்கு ஏற்று நடத்திய பலாபலன்கள் பற்றியும் சிந்திப்போம்.


லக்கினம் : ரிஷபம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஷ்வினி 4ம் பாதம் 

இது ஒரு பெண்ணின் ஜாதகம், ஜாதகிக்கு தற்பொழுது அகவை 41, இதுவரை  திருமணம் செய்வதற்காக எடுத்த முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியையே சந்தித்தது, இதற்க்கு முன் ஜாதகிக்கு தேடிவந்த நல்ல வரன் வாய்ப்புகளை ஜாதகியும், ஜாதகியின் பெற்றோரும் குறைகூறி தவிர்த்தனர், இவ்வளவு நெடுங்காலம் திருமண தாமதத்திற்கு காரணம் என்ன? என்பதை ஜாதக  ரீதியாக ஆய்வு செய்வோம், இந்த ஜாதகத்தில் பாவக வலிமை பற்றி சிந்திப்போம் .

வலிமை மிக்க பாவக தொடர்புகள் :

1ம் வீடு ஜாதகிக்கு தனது பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது மிக சிறப்பான அமைப்பு லக்கினம் மிகவும் வலிமை பெறுகின்றது.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு ஒரு நல்ல ஸ்திரமான வேலை வாய்ப்பை வழங்கி உள்ளது.

வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,4,7,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 2ம் பாவக வழியில் இருந்து குடும்ப அமைப்பில் இருந்தும், வருமானம்  மற்றும் வாக்கு அமைப்பில் இருந்தும் இன்னல்களை வழங்கும், 4ம் பாவக வழியில் இருந்து வீடு சொத்து சுகம் மற்றும் தனது தந்தை வழியில் இருந்து யோகம் அற்ற தன்மையை தரும், 7ம் பாவக வழியில் இருந்து எதிர்பால் அமைப்பினர், களத்திர வாழ்க்கையில் இன்னல்கள், கூட்டாளிகள் மூலம் துன்பங்கள், வெளிவட்டார பழக்க  வழக்கங்களில் திருப்தியற்ற சூழ்நிலையை உருவாக்கும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்பு, வீண் மருத்துவ செலவுகள், பொருளாதார நெருக்கடிகள், மற்றவர்களால் இன்னல்களுக்கு ஆளாகும் தன்மை என மிகுந்த சிரமங்களை தந்த போதிலும், பூர்ண ஆயுளை தரும்.

3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் தோல்வியையும், வீரியமற்ற தன்மையையும், சகோதர வழியில் இருந்து ஆதரவற்ற தன்மையையும், லட்சியமற்ற பொறுப்பற்ற வாழ்க்கையையும் தரும், 6ம் பாவக வழியில் இருந்து கடுமையான உடல் நல குறைவையும், வீண் செலவினங்களையும் தரும், 9ம் பாவக வழியில் இருந்து சுய அறிவுத்திறன் அற்ற நிலையையும், அறிவார்ந்த செயல்திறன் இல்லாத நிலையையும், முன்னோர்கள் ஆசியும், கடவுள் அனுகிரகம் அற்ற நிலையையும்  தரும், 12ம் பாவக வழியில் இருந்து அனைவராலும் தொல்லை, மனநிம்மதி அற்ற சூழ்நிலைகள், இல்லறவாழ்க்கை சுகமற்ற தன்மை, நல்ல உறக்கம் இன்மை, அதிக மனபோராட்டங்கள், வீண் மன பயம், பிற்போக்குத்தனமான செய்கைகள் மூலம் தமது சுய வாழ்க்கையை தாமே பாதிக்க செய்துகொள்ளும் தன்மை என மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்கும்.

5,11ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 5ம் பாவக வழியில் இருந்து குல தெய்வ ஆசி அற்ற தன்மையும், சமயோசித புத்திசாலித்தனம் இல்லாத நிலையையும், மற்றவர்களின் உதவியை பெற இயலாத தன்மையையும் தரும், எடுக்கும் செயல்கள் யாவும் ஜாதகிக்கு முழு பலன்களை தாராமல் தடைகளையும், இன்னல்களையும் வாரி வழங்கும், யாருடைய உதவியும் இல்லாமல் ஜாதகி மட்டும் தனிமையில் போராடும் சூழ்நிலையை உருவாக்கும், பூர்வீகத்தில் குடியிருப்பது என்பது ஜாதகிக்கு அனைத்து வித தடைகளையும் வாரி வழங்கும், 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமற்ற தன்மையையும், ஒவ்வொரு விஷயத்திற்கும் அதிக போராட்டங்களை சந்திக்கும் தன்மையை தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்து போகும், மூடநம்பிக்கையும் பிற்போக்கு தனமான எண்ணங்களும் ஜாதகியை வெகுவாக பாதித்து, செயல்பட முடியாமல் முடக்கி வைக்கும், நன்மைகள் இருந்த போதிலும் அதை நாடாமல், தீமையை நோக்கியே ஜாதகியை பயணிக்க வைக்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும்.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்கினம் மற்றும் ஜீவன ஸ்தானத்தை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, குறிப்பாக 6,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெரும் வீடுகள் வழியில் இருந்து ஜாதகி 100% விகித இன்னல்களையும், 8ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் வழியில் இருந்து ஜாதகி 50% விகித இன்னல்களையும், சந்திக்கவேண்டியுள்ளது, மேலும் 6,8,12ம் பாவக பலனை ஏற்று நடத்தும் திசாபுத்திகள் அனைத்தும், தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை ஜாதகிக்கு தங்கு தடையின்றி தருகின்றது.

திருமண தாமதத்திற்கு காரணம் என்ன ?

சுய ஜாதகங்களில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும், வலிமை பெறுவது ஒரு ஜாதகருக்கு தடையில்லாத, திருமண வாழ்க்கையை அமைத்து தரும், மேற்கண்ட ஜாதகிக்கு, குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதிக்க பெற்று இருப்பதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமான துலாம் ராசி கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதும், ஜாதகியின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது, மேலும் திருமண பருவ வயதில் சுக்கிரன் திசை ஜாதகிக்கு விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்தியதும், அதன் பிறகு வந்த சூரியன் திசை ஜாதகிக்கு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தியதும், ஜாதகியின் திருமண வாழ்க்கை எனும் எண்ணத்திற்கு தடைகளை வாரி வழங்கியது, அதற்க்கு பிறகு நடைபெற்ற சந்திரன் திசை ஜாதகிக்கு இலக்கின பாவக தொடர்பை பெற்று ஜாதகிக்கு நல்ல வேலையை மட்டுமே வழங்கியது, திருமண வாழ்க்கைக்கு தடையாக ஜாதகியின் பெற்றோர்கள் காரணமாக அமைந்தனர், குறிப்பாக ஜாதகியின் தாந்தையார் ( தந்தையை  குறிக்கும் 4ம் வீடு ஜாதகிக்கு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் ) தலையீட்டின் காரணமாக ஜாதகிக்கு சந்திரன் திசையில் அமையவிருந்த நல்ல திருமண வாழ்க்கை நடைபெறாமல் பாதியில் நின்றுபோனது.

தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசையும் ஜாதகிக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வருத்தத்திற்கு உரியதாகவே கருத வேண்டியுள்ளது, மேலும் தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசையில் மற்ற புத்திகளும் ஜாதகிக்கு சாதகமாக இல்லை என்பதால், திருமண வாழ்க்கையில் தொடர்ந்து தடைகளை வழங்கும் என்பதுமட்டும் தெளிவாகிறது, எனவே ஜாதகியும், ஜாதகியின் பெற்றோரும் தனது கருத்துகளை சுய பரிசீலனைகள் செய்துகொள்வது, ஜாதகிக்கு மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

ஜாதகிக்கு உள்ள சிரமங்கள் மாற, ஜாதகிக்கு அமையவிருக்கும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,12ம் வீடுகள் வலிமை பெற்று இருக்கும் வரன் அமைந்தால் மட்டுமே ஜாதகியின் இல்லற வாழ்க்கை இனிக்கும், இதற்க்கு  வாய்ப்பு மிகவும் குறைவு, ஜாதகியின் சுய ஜாதக வலிமை இதற்க்கு வழிகாட்ட வாய்ப்பில்லை, இறையருள் கருணை செய்யட்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

ராகுகேது எனும் சாயா கிரகங்கள் தரும் ராஜயோகங்கள் !


 நவகிரகங்களில் சாயா கிரகங்கள் என்று போற்றபடும் " ராகு கேது " ஒருவரின் சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தனது அமைப்பில் இருந்து நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்குவதில் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை, அதே போன்று பாதிக்க பட்டு இருப்பின் ஜாதகரின் வாழ்க்கையில் தனது அமைப்பில் இருந்து இன்னல்களை வாரி வழங்குவதில் எவ்வித குறையும் வைப்பதில்லை, சுய ஜாதகத்தில் சாயாகிரகங்கள் என்று அலைக்கபெரும் ராகு கேது, லக்கினம் மற்றும் களத்திர பாவகங்களில் அமர்ந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சர்ப்ப தோஷத்தை தரும் என்ற தவறான கருத்தும் உள்ளது, சுய ஜாதகத்தில் ராகு கேது லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானங்களில் அமர்ந்தாலும், லக்கினத்திற்கும் களத்திர பாவகத்திர்க்கும் நன்மையை தருகின்ற அமைப்பில் உள்ளனரா? தீமையை தரும் அமைப்பில் உள்ளனரா ? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது.

இயற்கையில் சாயா கிரகங்களான ராகு கேதுவிற்கு மற்ற கிரகங்களுக்கு இல்லாத தனி சிறப்பு இயல்புகள் அதிகம் உண்டு, அவையாவன :

1) தான் அமர்ந்த இடத்தின் பலனை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வல்லமை, 

2) தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் சக்தியை தாமே வீகரித்துகொண்டு அவர்கள் தரும் பலாபலனையும் தமது பலனாக தானே ஏற்று நடத்தும் வல்லமை. 

3) தான் அமர்ந்த பாவகங்களை பார்வை செய்யும் கிரகங்களின் சக்தியை தானே சுவீகரித்துகொண்டு அவர்கள் தரும் பலாபலனையும் தமது பலனாக தானே ஏற்று நடத்தும் வல்லமை.

4) தன்னுடன் சேர்ந்த, பார்த்த கிரகங்களின் வலிமையை முழுவதும் தமது கட்டுப்பாட்டில் எடுத்துகொள்ளும் வல்லமை.

5) தாம் அமர்ந்த பாவகத்திர்க்கு நன்மை தரும் அமைப்பை பெற்றால் 100% சதவிகித நன்மைகளையும், தாம் அமர்ந்த பாவகத்திர்க்கு தீமை தரும் அமைப்பை பெற்றால் 100%  சதவிகித தீமையையும், தங்குதடையின்றி ஜாதகருக்கு வழங்கும் வல்லமை.

6) தாம் தரும் நன்மை தீமை பலாபலன்களை எந்த ஒரு கிரகத்தின் பார்வையும், சேர்க்கையும் குறுக்கீடு செய்ய இயலாத வல்லமையும், சாயா கிரகங்களான ராகு கேதுவிற்கு உண்டான சிறப்பு இயல்புகள் ஆகும்.

 சுய ஜாதகங்களில் ராகு கேது (1,7) (2,8) (5,11) (6,12)  பாவகங்களில் அமர்ந்தால் ஜாதகருக்கு ராகு கேது தோஷம், சர்ப்ப தோஷம், புத்திர தோஷம் என்று முடிவு செய்வது ஜோதிட சாஸ்திர உண்மைக்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஏனெனில் தான் அமர்ந்த பாவகத்திர்க்கு சாயா கிரகங்கள் நன்மையை தருகின்றனரா ? தீமையை தருகின்றனரா ? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, பெரும்பாலும் சுய ஜாதகங்களில் ஒருவருக்கு 1,3,11ம் பாவகங்களில் அமரும் ராகு அல்லது கேது 100% விகித நன்மையே தருகின்றனர் இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 லக்கினத்தில் அமர்ந்த ராகு கேது ஜாதகருக்கு சிறப்பான வளரும் சூழ்நிலை, நல்ல உடல் நிலை, சிறந்த மன நிலை, புலனுக்கு அப்பாற்ப்பட்ட அறிவு திறன், மிதமிஞ்சிய உடல் மற்றும் மனோ சக்தி, எந்த சூழ்நிலையையும் சிறப்பாக கையாளும் வல்லமை, நினைத்ததை சாதிக்கும் யோகம், மற்றவர்களை தமது ஆளுமைக்கு கீழ் கொண்டுவரும் சிறப்பு தகுதி, அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டு அனைத்தையும் சாதிக்கும் யோகம், அபார சக்திகளை கையாளும் வல்லமை, புதிய சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள், உலகத்தை தன்பக்கம் கவர்ந்து இழுக்கும் சக்தி, குறுகிய காலத்தில் பிரபலம் அடையும் வழிமுறைகள், எதிர்பாலின கவர்ச்சி, தமது லட்சியங்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிடாமல் வெற்றியை பெரும் யோகம், பின்னல் வருவதை முன்னால் உணரும் சக்தி, முக்காலங்களையும் உணர்ந்து  செயல்படும் யோகம், மற்றவர்களின் மன ஓட்டம், இயக்கங்களை தெளிவாக உணரும் தன்மை, சாஸ்திர ஞானம், கலைகளில் தேர்ச்சி, தமது எண்ணங்களை மற்றவர்கள் மீது பிரகாசிக்க செய்யும் வல்லமை, கர்ம  வினை பதிவில் இருந்து தாமும் மீண்டு, மற்றவர்களையும் மீட்டு எடுக்கும் யோகம், சிறந்த ஞானத்தை அனைவருக்கும் பாரபட்சம் இன்றி போதிக்கும் வல்லமை என லக்கினத்தில் அமரும் ராகு அல்லது கேது ஜாதகருக்கு 100% விகித யோகங்கலையே வாரி வழங்கும்.

வீரிய ஸ்தானத்தில் அமர்ந்த ராகு கேது ஜாதகருக்கு சகல விதங்களில் இருந்தும்  வெற்றிகளை வாரி குவிக்கும், சிறந்த விளையாட்டு வீரர்கள், வியாபாரிகள், வெகு ஜன அபிமானிகள், திரை நட்சத்திரங்கள், மக்கள் செல்வாக்குள்ள அரசியல்வாதிகள், சிறந்த நிர்வாகிகள், மற்றும் வியப்பில் ஆழ்த்தும் வெற்றியாளர்கள் சுய ஜாதகங்களில் 3ம் பாவக ராகு கேதுவின் பங்களிப்பு மிக அபரிவிதமானதாக அமைந்திருக்கும், திடீர் செல்வவளம், திடீர் பதவி உயர்வு, அரசு அங்கீகாரம், திடீர் ராஜ உபச்சாரம் என ஜாதகரை திக்குமுக்காட வைப்பதில் அதிக பங்குவகிப்பது 3ம் பாவக சாயா கிரகங்களின் பங்களிப்பே என்றால் அது மிகையில்லை, வீரியமிக்க செயல்திறன்களையும் தனிப்பட்ட தகுதி மற்றும் சிறப்பு மிக்க மாற்றங்களை  வழங்கும் யோகம் பெற்றவர்களாக திகழ செய்வதில் சாயாகிரகங்களின் பங்களிப்பு வியப்பை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

லாப ஸ்தானத்தில் அமர்ந்த ராகு கேது ஜாதகருக்கு அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவதில்  எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை, திடீர் அதிர்ஷ்டசாலிகள், நல்ல குணம், நினைத்ததை அடையும் வல்லமை, திறன்மிக்க செயல்பாடுகள், தன்னம்பிக்கை முற்போக்கு சிந்தனை மூலம் யோக வாழ்க்கையை  தங்குதடையின்றி அனுபவிக்கும் தன்மையை தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஜாதகருக்கு நிறைவேற்றி வைப்பதில் சாயாகிரகங்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை என்பதே உண்மை, லாப ஸ்தானத்தில் சாயா கிரகங்களின் செயல்பாடுகள் மிகவும் அபரிவிதமாக இருக்கும், ஜாதகரின் மன எண்ணங்களையும், திட்டமிடுதல்களையும் எவ்வித தடையும் இல்லாமல் நிறைவேற்றி வைக்கும், தனது முன்னோர்கள் மற்றும் பெற்றோரின் லட்சியங்கள் அனைத்தையும் ஜாதகரே பரிபூரணமாக அனுபவிப்பார் என்பதில் மாற்று கருத்து இல்லை, இவர்களின் பொருளாதார வளர்ச்சி என்பது மற்றவர்களுக்கு புரியாத புதிராகவே இறுதிவரை இருக்கும், ஜாதகரின் முன்னேற்றம் குறுகிய கால வெற்றிகளாக அமைந்திருக்கும், அனைத்து  விஷயங்களிலும் லாபங்களை பெறுவதில் லாப ஸ்தான சாயாகிரகங்களின் பங்களிப்பு என்பது ஜாதகருக்கு தொடர்ந்து கொடுத்தவண்ணம் இருக்கும் என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமரும் சாயகிரகங்கள் ஒரு ஜாதகத்தில் தனது பங்களிப்பையும் தான் அமர்ந்த பாவகத்திர்க்கு வழங்கும் பலாபலன்களையும்  பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !

 
லக்கினம் : கடகம் 
நட்சத்திரம் : பூராடம் 4ம் பாதம் 
ராசி : தனுசு 

ஜாதகிக்கு லக்கினத்தில் கேதுவும், களத்திர ஸ்தானத்தில் ராகுவும் அமர்ந்துள்ளனர், தாம் அமர்ந்த பாவகங்கள் முறையே நன்மையான பலனை 100% வீதம் வலிமை பெற்று வழங்குகின்றனர், லக்கினத்தில் அமர்ந்த கேது ஜாதகிக்கு கல்வி கேள்விகளில் நல்ல ஞானத்தை வாரி வழங்குகிறார் என்பதால் ஜாதகி பட்டைய படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்கிறார், வளரும்  சூழ்நிலையும் ஜாதகிக்கு மிக சிறப்பாக அமைந்திருக்கின்றது, நல்ல உடல் ஆரோக்கியம், பரந்த விசாலமான மனம், அனைவருக்கும் நன்மையை நினைக்கும் நல்ல குணம், சுகபோகமான யோக வாழ்க்கை ( கடகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானம் என்பதால் ஜாதகிக்கு அடிப்படையில் இருந்தே சுகபோகங்களுக்கு குறைவில்லை ) மேலும் லக்கினத்தில் அமர்ந்த குரு பகவானின் வலிமையையும் கேது பகவானே ஏற்று நடத்துவதால் ஜாதகிக்கு கற்ற கல்வியில் நல்ல ஞானத்தையும், சிறப்பு மிக்க தேர்ச்சியையும், சிறந்த நிர்வாக திறமையும் ஒருங்கே அமையபெற்று இருப்பது கவனிக்க தக்கது, ஜாதகிக்கு சிறு வயது முதலே கேட்பது கிடைத்தது, நினைத்தது நடந்தது, இதற்க்கு காரணமாக சுய ஜாதகத்தில் லக்கினத்தில் கேதுபகவான் மிகவும் வலிமையாக அமர்ந்தது, என்றால் அது  மிகையில்லை .

களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்ந்தது களத்திர ஸ்தானம் வலிமை பெற்றது, ஜாதகியின் நண்பர்கள் வட்டாரத்தை  மிகசிறப்பாக அமைத்து தந்தது, பிரியமான நேசமிக்க நல்ல நண்பர்கள் மற்றும்  தோழிகள் ஜாதகிக்கு அமைந்தனர், சிறந்த புகழ் மிக்க மேல்நாட்டு நிறுவனத்தில்  கை நிறைவான வருமானத்தில் நல்ல வேலை கிடைத்தது,  ( ஜாதகியின் களத்திர பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாக அமைந்ததும், களத்திர ஸ்தானம் 100% விகிதம் வலிமை பெற்றதும், வெளிநாட்டு நிறுவனத்தில் நல்ல வேலை வாய்ப்பை நல்கியது ) பதவி உயர்வும் குறுகிய காலத்தில் அமைந்தது, உடன் பணிபுரியும் அன்பர்களுடன் நல்ல இணக்கத்தையும், சிறந்த நிர்வாக திறமையையும் வாரி வழங்கியது, பணிநிமித்தமாக அடிக்கடி வெளிநாடுகள் சென்றுவரும் யோகத்தை வாரி வழங்கியது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறாத காரணத்தால் ஜாதகி அடிமை தொழில் செய்யும் சூழ்நிலையை தந்தது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறாத நிலையில் சம்பந்தப்பட்ட ஜாதகர் அடிமை தொழிலை மேற்கொள்வதே சால சிறந்தது, இந்த ஜாதகிக்கு ஜீவன ஸ்தானம் வலிமை இழந்த போதிலும், ராகுவின் தயவாலும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தான வலிமையின் தயவாலும் நல்ல தொழில் அமைந்து, அதில் ராஜ யோகங்களை அனுபவிக்கும் நிலையை தந்துகொண்டு இருக்கின்றது, என்பதை காணும் பொழுது சுய ஜாதகத்தில் சாயகிரகங்களின் வலிமை  பற்றியும், அதனால் ஜாதகர் பெரும் யோகங்கள் பற்றியும் நாம் தெளிவு பெற இயலும்.

இருப்பினும் ஜாதகிக்கு 26 வயது கடந்த போதிலும் திருமணம் நடைபெறவில்லை, இதற்க்கு காரணமாக சுய ஜாதகத்தில் லக்கினத்தில் கேதுவும், களத்திர ஸ்தானத்தில் ராகுவும் அமர்ந்ததே காரணம் என்றும், ஜாதகிக்கு களத்திர தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளது என்றும் மற்ற ஜோதிடர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர், இதன் உண்மை தன்மை பற்றியும் நாம் இந்த பதிவில் ஆய்வு செய்வோம் அன்பர்களே! 

ஜாதகிக்கு லக்கினத்தில் அமர்ந்த கேதுவும் நன்மையை செய்கின்றார், களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகுவும் நன்மையை செய்கின்றார், பிறகு ஏன் திருமணம் தாமதமாகிறது ? மற்றவர்கள் சொல்வது போல் ஜாதகிக்கு சர்ப்ப தோஷம் உண்டோ என்ற சந்தேகம் வருவது இயற்கையானதே, இதற்க்கு சரியான விளக்கம் தர "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது, ஒருவருக்கு எவ்வித தடையும் இல்லாமல் திருமணம் நடைபெற வேண்டும் எனில் சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும், இந்த ஜாதகிக்கு  களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் ராகு பகவானால் 100% சதவிகிதம் வலிமை பெற்று அமைந்த போதிலும், குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம், விரைய ஸ்தான தொடர்பை பெற்று மிகவும் வலிமை இழக்கின்றது, எனவே இந்த ஜாதகிக்கு திருமணம் தாமதம் ஆக உண்மையான காரணம் 2ம் பாவகம் கடுமையாக பாதிக்க படுவதே அன்றி, சாயா கிரகங்களான ராகு கேது அல்ல என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது.

மேற்கண்ட ஜாதகத்தில் திருமண தாமதத்திற்கு 2ம் பாவக வலிமை அற்ற நிலையே 100% விகிதம் காரணமாக அமைகிறது, லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த சாயா கிரகங்கள் அல்ல என்பதும், ஜாதகிக்கு சர்ப்ப தோஷம் இல்லை என்பதனையும் இந்த பதிவில் "ஜோதிடதீபம்" மிக துல்லியமாக தெளிவுபடுத்துகிறது, மேலும் ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் ராகு திசையும் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக பலனை ஏற்று நடத்துவது சிறப்பான யோகங்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது, ராகு தசை ராகு புத்தியிலே ஜாதகிக்கு நல்ல வாழ்க்கை  துணை நிச்சயம் அமையும், அதற்க்கு களத்திர ஸ்தானத்தில் வலிமை பெற்ற ராகு பகவான் காரணமாக அமைவார் என்பது மறுக்க இயலாத உண்மை, சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நல்ல சிறப்பான வாழ்க்கை துணையை அமைத்து தரும், இந்த ஜாதகிக்கு 2ம் பாவக வலிமை அற்ற நிலை திருமணத்தை தாமதம் செய்த போதிலும் ( 27 வயதுக்கு மேல் ) 7ம் பாவக வலிமை சிறப்பான வாழ்க்கை துணையை நிச்சயம் அமைத்து தரும்.

குறிப்பு : 

சுய ஜாதகத்தில் ராகு கேது (1,7) (2,8) (5,11) (6,12)  பாவகங்களில் அமர்ந்தால் ஜாதகருக்கு ராகு கேது தோஷம், சர்ப்ப தோஷம், புத்திர தோஷம் என்று தவறாக முடிவு செய்வதை விட்டுவிட்டு, திருமண தாமதம் மற்றும் தடைகளுக்கு உண்மையான காரணம் என்னவென்பதை சம்பந்தப்பட்ட ஜாதகத்தில் பாவக வழியில் ஆய்வு செய்து, சரியான தீர்வை காண்பதே ஜோதிடர்களை தேடிவரும் அன்பர்களுக்கு நன்மைபயப்பதாக அமையும், உண்மைக்கு புறம்பான பாலாபலன்களை ஜாதகர்களுக்கு சொல்லும்பொழுது, இதனால் உண்டான வினைபதிவு ஜோதிடர்களையே நிச்சயம் சென்றடையும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696