வெள்ளி, 21 அக்டோபர், 2016

மறைவு ஸ்தானங்களில் அமர்ந்த கிரகங்கள் தனது திசா காலங்களில் இன்னல்களை தருமா ?


கேள்வி :

இயற்க்கை மற்றும் சுய ஜாதக அமைப்பிற்கு சுப கிரகங்கள் தனது திசைகளில் யோகங்களையும், அசுப கிரகங்கள் தனது திசைகளில் அவயோகங்களையும் தருமா? மறைவு ஸ்தானங்களில் அமர்ந்த கிரகங்கள் தனது திசா காலங்களில் இன்னல்களை தருமா ? 

பதில் :

பொதுவாக இயற்க்கை சுபகிரகங்களாக கருதப்படும், குரு,சுக்கிரன்,சந்திரன்,புதன் ஆகிய கிரகங்களின் திசாபுத்திகள் ஒருவருக்கு நன்மைகளையும், இயற்க்கை அசுபகிரகங்களாக கருதப்படும், சனி,செவ்வாய்,சூரியன்,ராகு,கேது ஆகிய கிரகங்களின் திசாபுத்திகள் ஒருவருக்கு இன்னல்களையும் தரும் என்று கருதுவது முற்றிலும் தவறான கருத்தே அன்றி சிறிதும் உண்மை அல்ல, மேலும் சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு சுப கிரகங்கள் நன்மையையும், பாவ கிரகங்கள் தீமையும் செய்யும் என்று கருதுவதும், பாதக ஸ்தான அதிபதி முற்றிலும் இன்னல்களை மட்டுமே தரும் என்று கருதுவதும், சுய ஜாதக பலன்களுக்கு முரண்பட்டவையாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, மேலும் இதை பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

ஒருவரது ஜாதகத்தில் நவ கிரகங்களின் திசாபுத்திகள் அந்த நபருக்கு தனிப்பட்ட வித அமைப்பில் பலாபலன்களையும், யோகங்களையும் வழங்க வாய்ப்பு என்பது சிறிதும் இல்லை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையையே தனது திசாபுத்திக்காலங்களில் ஏற்று நடத்த உரிமை பெற்றவை என்பதை அடிப்படையில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும், சுப கிரகத்தின் திசை நன்மைகளையும், அசுப கிரகத்தின் திசை இன்னல்களையும் தரும் என்பதில் சிறிதும் உண்மையில்லை அன்பர்களே, தங்களது ஜாதக வலிமை எப்படி அமைகிறதோ அதன் அடிப்படையிலேயே பலாபலன்கள், நவகிரகங்களின் திசாபுத்தி காலங்களில் நடைமுறைக்கு வரும், உதாரணமாக ஒருவருக்கு நடைமுறையில் குரு திசை இருப்பின் அந்த திசை ஜாதகருக்கு யோகங்களை நல்கும் என்று கருதுவதும், சனி திசை நடைமுறையில் இருப்பின் அந்த திசை ஜாதகருக்கு இன்னல்களை தரும் என்று கருதுவதும் முற்றிலும் சுய ஜாதக பாவக வலிமையை உணராமல் சொல்லப்படும் கருத்தாகவே கருத வேண்டியுள்ளது.

மேலும் நவ கிரகங்கள் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் திரிகோணம்,கேந்திரம் ஆகியவற்றில் அமர்ந்து இருப்பின் நன்மைகளையும், மறைவு ஸ்தானம் மற்றும் பாதக ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பின் தனது திசாபுத்தி காலங்களில் இன்னல்களை தரும் என்று கருதுவதும், சுய ஜாதகத்தில் அமர்ந்த கிரகங்கள் ஆட்சி,உச்சம்,நட்பு மற்றும் சம நிலையில் இருப்பின் யோகத்தையும், நீசம்,பகை நிலையில் இருப்பின் அவயோகத்தையும் தனது திசாபுத்தி காலங்களில் தரும் என்று கருதுவதும் முற்றிலும் தவறான கருத்தே அன்றி, சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை கருத்தில் கொண்டு கூறப்பட்ட பலன்கள் அல்ல என்பதே உண்மை அன்பர்களே, இதை தெளிவுற தெரிந்துகொள்ள கீழ்கண்ட உதாரண ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : கன்னி 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 1ம் பாதம் 

ஜாதகருக்கு எதிர்வரும் சந்திரன் திசை தரும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், ஜாதகருக்கு சந்திரன் 11ம் பாவகத்திற்கு அதிபதி, ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தில் மறைவு பெற்று அமர்ந்து இருக்கின்றார் ( பாரம்பரிய முறைப்படி ) எனவே தனது திசா புத்தி காலங்களில் ஜாதகருக்கு நன்மைகளை தர வாய்ப்பு இல்லை என்கின்ற பலனை ஜாதகருக்கு பரிந்துரை செய்து இருக்கின்றனர், இது உண்மையா என்பதை ஆய்வில் தெளிவு பெறுவோம் அன்பர்களே, மேற்கண்ட ஜாதகருக்கு சந்திரன் என்ன ஆதிபத்தியம் பெறுகிறார், எங்கு அமர்ந்து இருக்கின்றார், என்பது முக்கியம் அல்ல தனது திசைகளில் எவ்வித பலாபலன்களை தருகிறார், எந்த வீடுகளுடன் தொடர்பு பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறார் என்பதே முக்கியம், இதை அடிப்படையாக கொண்டு பார்க்கும் பொழுது ஜாதகருக்கு சந்திரன் 8ல் மறைவு பெற்று அமர்ந்து இருப்பினும், தனது திசாபுத்தி காலங்களில் 9ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் மிகுந்த யோக பலன்களையே நடைமுறைப்படுத்துவது, ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும்.

இதனால் ஜாதகர் சந்திரன் தசை காலங்களில் பாக்கிய ஸ்தான அமைப்பில் இருந்து எடுக்கும் காரியங்களில் வெற்றிகளையும், எதிர்பாராத முன்னேற்றங்களையும், சிறந்த அறிவு திறன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகத்தையும், உயர்கல்வி அல்லது ஆராய்சசி கல்வி மூலம் தமது சுய முன்னேற்றத்தை நிர்ணயம் செய்யும் சக்தியாகவும் திகழ்வார், ஜாதகரின் அறிவு திறன் சிறப்பான பொருளாதார முன்னேற்றத்தையும், தடையில்லாத வெற்றிகளையும் வாரி வழங்கும், அடுத்து 6ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு குறுகிய கால வெற்றிகளை வாரி வழங்கும், உடல் நலம் மேம்படும், போட்டி பந்தயங்களில் வெற்றியும், எதிரிகளால் நன்மையையும் முன்னேற்றமும் உண்டாகும், ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் அனைத்தும் சிறப்பான ஜீவன முன்னேற்றத்தை வாரி வழங்கும், ஜாதகரை வெற்றி பெற எவராலும் இயலாது என்பது கவனிக்க தக்கது, 10ம் பாவக வழியில் இருந்து சுய தொழில் செய்யும் யோகம் அல்லது நல்ல வேலை வாய்ப்பு தன்னிறைவான பண வசதி, சுய மரியாதை, கவுரவம் மற்றும் அந்தஸ்து  தேடி வரும் யோகம், தீர்க்கமான வாத திறமை, செய்யும் தொழிலில் சிறப்பான நன்மைகளையும், வெற்றிகளையும் வாரி வழங்கும், எனவே சந்திரன் 8ல் மறைந்தாலும், தனது திசாபுத்தி காலங்களில் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவதால் ஜாதகருக்கு யோக பலன்களே நடைமுறைக்கு வரும் என்பதே உண்மை நிலை, இதை கருத்தில் கொண்டு ஜாதகர் தமது வாழ்க்கை முன்னேற்றங்களை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

ஆனால் தற்போழுது நடைபெறும் சூரியன் திசை ஜாதகருக்கு 12ல் மறைவு பெற்று பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் 200% சதவிகித இன்னல்களை வாரி வழங்கும் என்பதால் சூரியன் திசை ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வழங்க வாய்ப்பு சிறிதும் இல்லை என்பதே உண்மை, இந்த ஜாதகத்தில் சூரியன் சந்திரன் இரண்டு கிரகங்களும் முறையே 12,8ம் பாவகங்களில் மறைவு பெற்று இருப்பினும், சூரியன் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தி இன்னல்களையும், சந்திரன் வீரியம் மற்றும் ஜீவன ஸ்தான பலன்களை ஏற்று நடத்தி நன்மைகளையும் வழங்குவது கவனிக்க தக்கது, எனவே நவ கிரகங்கள் தனது திசாபுத்தி காலங்களில் சுய ஜாதகத்தில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெற்றால் மட்டுமே, அவர்கள் தரும் பலன்கள் பற்றி தெளிவு பெற இயலும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 20 அக்டோபர், 2016

சூரியன் திசை தரும் பாதக ஸ்தான பலன்களும், சுய ஜாதக யோக நிலையும் !


ஜாதக பொது பலன்கள் 

லக்கினம் : கன்னி 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 1ம் பாதம் 


சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,3,7ம் வீடுகள் அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின வழியில் இருந்து அதிக லாபங்களை, செல்வசெழிப்பையும் வாரி வழங்கும், பரஸ்பர உதவிகள் ஜாதகருக்கு வந்து குவியும், உடலில் உள்ள நோய் தொந்தரவுகள் விரைவில் குணம் அடையும், வருமுன் காக்கும் அறிவு திறன் உண்டாகும், நினைத்த நல்ல எண்ணங்கள் ஈடேறும், பெரியோர் ஆசியுடன் திருமணம் சிறப்பாக நடைபெறும், ஜாதகரின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் , தனது ஆசைகள் மற்றும் விருப்பங்கள் ஏதாவது ஒரு வழியில் சிறப்பாக நடைமுறைக்கு வரும், புதிய சிந்தனைகள், புதிய யுக்திகள் மற்றும் புதுபுது இடங்கள் ஜாதகருக்கு வெற்றிகரமான யோக வாழ்க்கையை நல்கும், செல்லும் இடங்களில் எல்லாம் ஜாதகர் அறிய பல விஷயங்களை சாதிக்கும் வல்லமையை பெறுவார், அதிர்ஷ்டம் ஜாதகரை தேடி வரும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நினைத்த எண்ணங்கள் யாவும் சாதிக்கும் யோகம் உண்டாகும், வியாபாரம் செய்வதால் வாழ்க்கையில் சகல முன்னேற்றங்களும் உண்டாகும், அதிக வாகன யோகம், விவசாயம் சார்ந்த பண்ணை தொழில்களில் மிதமிஞ்சிய வருமானம், கமிஷன் வியாபாரம் மூலம் அளப்பரிய சொத்து சுக சேர்க்கை, நிறைய சொத்துக்கள், ஜோதிடம் மற்றும் கணிதத்தில் தேர்சசி, கலைகளில் ஆர்வம் மற்றும் தேர்சசி, வாத்திய கருவிகளை கையாளும் வல்லமை, எண்ணத்தின் வலிமையை சுய வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம், தன்னம்பிக்கை குறையாத மன நிலை எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகருக்கு சாதகமாக மாறும் வாய்ப்பு, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் அபரிவிதமான சொத்து சுக சேர்க்கை, மக்கள் செல்வாக்கு, வியாபாரம் மற்றும் சுய தொழில் விருத்தி பெரும் யோகம், வியாதியில் இருந்து விரைவில் குணம்பெறும் யோகம், திருமணத்திற்கு பிறகு வரும் அதிர்ஷ்டகரமான யோக வழக்கை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பெரும் சொத்துக்கள் என்ற வகையில் சுப பலன்கள் நடைமுறைக்கு வரும்.

7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் மற்றும் தொழில் முறை கூட்டாளிகள் அமைவர், தெளிவான சிந்தனை உண்டாகும், தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் யோகங்கள் மற்றும் ஆதரவு, புதிய வாய்ப்புகள், பொதுமக்கள் ஆதரவு மற்றும் அரசியல் பதவிகள் மூலம் முன்னேற்றம் பெரும் யோகம், வெளியூரில் பிரபல்ய யோகம், மக்கள் ஆதரவு மூலம் தொழில் விருத்தி உண்டாகும் யோகம், வாழ்க்கை துணையின் பூர்ண ஒத்துழைப்பு, சுய கவுரவம் பாதிக்கப்படாமல் முன்னேற்றம் உண்டாகும், தனது வாழ்க்கை துணை ஜாதகருக்கு மிகுந்த யோகங்களையும் மன மகிழ்ச்சியையும் வாரி வழங்குவார், குடும்ப வாழ்க்கை மற்றும் தாம்பத்திய உறவு மேம்படும், எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து சுபயோக அதிர்ஷ்டங்களை தம்பதியர் இருவரும் பெறுவார்.

2,4,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு  2ம் பாவக வழியில் இருந்து கை நிறைவான வருமானம், இனிமையான குடும்பம், இனிமையான பேச்சு திறன், சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம், எழுதுபொருள் மற்றும் நூல்கள் மூலம் லாபம், நீண்ட பயணங்கள் மூலம் லாபம், வெளிநாடு மற்றும் அந்நிய தேசத்தை சார்ந்தவர்கள் மூலம் அதிர்ஷ்டம், புதிய சிந்தனை மூலம் வாழ்க்கையில் திடீர் முன்னேற்றம் பெறுதல், அறிவு பூர்வமான செயல்கள் மூலம் யோக பலன்களை ஜாதகர் நடைமுறைக்கு கொண்டுவரும் வாய்ப்பை பெறுதல், ஆன்மீக வாழ்க்கையில் வெற்றியும், கடவுள் அனுக்கிரகம் மூலம் தமக்கு வரும் அனைத்து சிரமங்களையும் கடந்து வாழ்க்கையில் வெற்றி பெரும் அமைப்பும் உண்டாகும்.

4ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் உயர் கல்வி மற்றும் மேற்படிப்பிற்கு வெளிநாடு செல்லும் யோகம், ஆராய்ச்சி மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பு, உணவு பொருட்கள், நீர்ம பொருட்கள் மூலம் லாபம் பெரும் யோகம், சுயமாக சொத்து சுக சேர்க்கையை பெரும் அமைப்பு, தன்னிறைவான பொருளாதர வசதி வாய்ப்புகளை பெரும் யோகம், மண்ணில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மூலம் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், வீடு வண்டி வாகனம் மூலம் சிறப்பான வருமானம் உண்டாகும், புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், கடவுள் அனுக்கிரகத்தால் சகல யோகங்களையும் தன்னிறைவாக பெரும் அமைப்பு, புதிய நபர்கள் மூலம் வெற்றி உண்டாகும் வாய்ப்பு, தனது தாய் வழியில் இருந்து வரும் ஆதரவு, சொத்து சுக சேர்க்கை, ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் பிரபல்யம் பெறுதல், சுக போகங்களுக்கு குறைவில்லாத நிலை என்றவகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

12ம் பாவக வழியில் இருந்து வெளிநாடுகளில் சகல யோகங்களையும் பெரும் அமைப்பு, பயணங்கள் மூலம் பெரிய சொத்து சுக சேர்க்கை, முதலீடுகள் மூலம் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் அமைப்பு, உல்லாச யோக வாழ்க்கையை பரிபூர்ணமாக பெறுதல், தொழில் மற்றும் இருப்பிடமும் மூலம் சுபயோகங்கள் உண்டாகும் அமைப்பு, ஆன்மீகத்தில் வெற்றி, சுக போக தாம்பத்திய வாழ்க்கை, வாழ்க்கை துணையுடன் இணக்கமான பாசத்தை கையாளும் தன்மை, தாம்பத்திய இன்பம், திருப்தியான மன நிலை, நல்ல உறக்கம், நிம்மதியை ஜாதகரே ஏற்படுத்தி கொள்ளும் யோகம், தன்னிறைவான பொருளாதர வசதியை குறுகிய காலத்தில் பெரும் யோகம், தனிப்பட்ட விருப்பங்களை ஜாதகர் நிறைவேற்றி கொள்ளும் அமைப்பு என மிகுந்த யோகங்களை, விரைய ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் பெறுவார்.

 6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து பதவியில் வெற்றி, திடீர் பதவி உயர்வு, நல்ல வேலைவாய்ப்பை ஜாதகர் பெறுதல், பணியாற்றும் இடத்தில் இருந்து வரும் இன்னல்களை மிக சுலபமாக வெற்றிகொள்ளுதல், உத்தியோகத்தில் ஆர்வம் மற்றும் ஈடுபாடு, அதிகாரிகளின் அரவணைப்பு,  சொந்த முயற்சியில் முன்னேற்றம் பெறுதல், எதிர்ப்பவர்களுக்கு சிம்ம சொப்பனம், எதிரிகளை நண்பர்களாக மாற்றும் கலை அறிந்தவர், தனது உரிமைகளை போராடி பெரும் யோகம் உண்டாகும், நல்ல பணியாளர்கள் மற்றும்  சிறந்த வேலையாட்கள் அமையும் யோகம் அவர்களின் ஆதரவு மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெரும் அமைப்பு என ஜாதகருக்கு சத்ரு ஸ்தான வழியில் இருந்து மிகுந்த லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், குறுகிய கால இடைவெளியில் வெற்றிகள் வந்துகொண்டே இருக்கும்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறப்பான ஜீவன முன்னேற்றம் உண்டாகும், இந்த ஜாதகத்தை பெற்றவர்கள் சுய தொழில் செய்வதே சாலச்சிறந்தது, ஏனெனில் குறுகிய முதலீட்டில் அபரிவிதமான லாபங்களை தங்கு தடையின்றி பெறுவார்கள், மேலும் சுய தொழில் செய்வதற்கு ஏற்ற ஜாதக வலிமையை பெற்று இருப்பது வரவேற்க தக்கது, தனிப்பட்ட முயற்சிகள் யாவும் திடீர் வெற்றியை தரும், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்பை ஜாதகர் தங்கு தடையின்றி பெறுவார், ஜாதகரின் ஜீவன  ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் வீடாக அமைவது ஜாதகரை வியாபாரத்தில் பெரிய நிபுணராக மாற்றும், தனது அறிவு திறன் கொண்டு ஜீவன முன்னேற்றத்தை ஜாதகர் தங்கு தடையின்றி பெறுவார், எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஜாதகருக்கு நிறைவேறும், அரசு கவுரவம், மரியாதை, சமூக அந்தஸ்து, என வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார், திறமை மிக்க பேச்சு, தீர்க்கமான முடிவுகள் மூலம் ஜாதகருக்கு யோகங்கள் உண்டாகும்.

9ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு வெளிநாடுகளில் வியாபர யோகத்தை தரும், பயணங்கள் மூலம் வெற்றியும் செல்லும் இடங்களில் இருந்து சிறப்பு உண்டாகும், புதிய ஆய்வுகள் மூலம் ஜாதகருக்கு மிகுந்த லாபங்கள் உண்டாகும், எஜென்ஜி துறையில் வெற்றியும் அளவில்லா அதிர்ஷ்டமும் உண்டாகும், வருமுன் உணர்ந்து செயல்படும்  தன்மையும், சகோதர வழி ஆதரவும் பரிபூர்ணமாக கிடைக்கும், தெளிவான சிந்தனை, நுண்ணறிவு, உயர் கல்வி மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பு என வெற்றிகள் ஜாதகருக்கு பரிபூர்ணமாக கிடைக்கும்.

சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

5,11ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 5ம் பாவக வழியில் இருந்து தனது பூர்வீகத்தில் ஜீவனம் செய்வதால் முன்னேற்றம் அற்ற நிலையை தரும், தனது சுய வாழ்க்கையில் அளவுக்கு அதிகமான இன்னல்களை சந்திக்கும் நிலையையும், தமது முயற்சிகளில் மிகுந்த தோல்விகளையும் தரும், குல தெய்வத்தின் சாபம் மூலம் வாழ்க்கையில் அளவில்லா துன்பங்களை சந்திக்கும் நிலையை தரும்,  எதிர்பால் அமைப்பினர் மூலம் துன்பத்திற்கும், சிரமங்களுக்கு  ஆளாக்கும், உதவி செய்ய யாரும் அற்ற நிலையையும், ஜாதகரின் அறிவு திறன் அனைத்தும் பலன்தாராமால் விரைய நிலையை சந்திக்கும் தன்மையை தரும், ஜாதகர் கற்ற கல்வி அதன் மூலம் பெற்ற அறிவு யாவும் பலனின்றி போகும், நன்மைகள் யாவும் ஜாதகருக்கு நடைபெறாமல், துன்ப கடலில் மூழ்கும் சூழ்நிலையை தரும், சமயோசித அறிவு திறனும், புத்திசாலித்தனமும் ஜாதகருக்கு முழுவதும் மழுங்கிவிட வாய்ப்பு உண்டு, ஜாதகத்தில் உள்ள மற்ற யோகங்கள் வலிமை பெற்ற பாவக பலன்கள் யாவும் ஜாதகருக்கு நடைமுறைக்கு வாராது, ஜாதகர் பூர்வீகத்தில்  ஜீவனம் செய்யும் வரை யாதொரு நன்மையையும் பெற இயலாமல், சூழ்நிலை கைதியாக ஜீவனம் செய்ய வேண்டி வரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் தன்னம்பிக்கை வெகுவாக குறையும், வீண் கற்பனையும், மூட நம்பிக்கைகளும் ஜாதகரின் வாழ்க்கையை கேள்வி குறியாகும், காதல் தோல்வி மூலம் வாழ்க்கை மிகப்பெரிய பாதிப்பை பெற்று நிம்மதி அற்ற தன்மையை தரும், அதிர்ஷ்டம் யாவும் ஜாதகருக்கு பின்தங்கி நிற்கும், எதிர்ப்புகள் வீண் கற்பனை, மன பயம் ஆகியவைகள் ஜாதகரை  கடுமையாக பாதிக்கும், சந்தேகமும் விழிப்புணர்வு அற்ற எண்ணங்களும் ஜாதகரை வெகுவாக பாதிக்கும், இதனால் உடல் நலம் கெடும், வயிறு சார்ந்த தொந்தரவுகள் அதிகரிக்கும், நம்பிக்கை இன்மையால் ஜாதகர் வெகுவான பாதிப்புகளை தனது வாழ்க்கையில் சந்திக்கும் சூழ்நிலையை தரும், அனைத்தும் இருந்த போதிலும் திருப்தி இன்றி வாழும் சூழ்நிலையைத்தரும், வாழ்க்கையில்  பலவற்றை  இழந்து வாடுவதாக கற்பனை செய்துகொண்டு, தனது வாழ்க்கையே தானே கெடுத்து கொண்டு இன்னலுறும் தன்மையை தரும், ஜாதகர் சில விஷயங்களில் மன மாற்றத்தை பின்பற்றுவதே சால சிறந்தது, இல்லை எனில் சுய ஜாதக யோகங்கள் பலன் இன்றி, இன்னல்களில்யே காலம் கடத்தும் சூழ்நிலையை தரும்.

8ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகத்திலேயே மிகவும் மோசமான பாதிப்பை தரும் அமைப்பாகும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, தற்கொலை மன நிலை, யாரும் அற்று தனிமையில் வாடும் நிலை, எதிர்பால் அமைப்பினர் மூலம் வாழ்க்கையில் அளவில்லா துன்பங்களை சந்திக்கும் நிலை, தனது உடல் மற்றும் மன நிலையை தானே பாதிக்க செய்துகொண்டு இன்னல்களை சந்திக்கும் நிலை, உடல் நிலை கோளாறுகள், மருத்துவ செலவினங்கள், வீண் விரையங்கள், விபத்து என ஜாதகர் மிகுந்த துன்பங்களை சந்திக்கும் நிலையை தரும், மேற்கண்ட பாதக ஸ்தான பலன்களை ஏற்று நடத்தும் திசா புத்தி காலங்களில் ஜாதகர் மிகுந்த விழிப்புணர்வுடன் தனது வாழ்க்கையை நடத்த வேண்டும், மேலும் ஜாதகரின் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் வீடக அமைவது, மிகுந்த மன அழுத்தம் மன போராட்டத்தை தரும், மேலும் எதிர்பால் அமைப்பினரிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது சகல நலன்களையும் தரும், அவயோகம் பெற்ற எதிர்பால் அமைப்பினரை ஜாதகருடன் தொடர்பு படுத்தும் என்பதால், மிகுந்த கவனமுடன் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான யோகங்களை நல்கும்.

சூரியன் திசை தரும் பலன்கள் ( 06/07/2012 முதல் 06/07/2018 வரை )

தற்போழுது நடைபெறும் சூரியன் திசை 8ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது தங்களுக்கு உகந்தது அல்ல, வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனைகளை தங்களுக்கு இந்த சூரியன் திசை வாரி வழங்கும் எனலாம், தங்களின் வாழ்க்கையில் மிக மிக  மோசமான பலன்களை தங்கள் கடந்து சொல்லும் நிலையை தரும், குறிப்பாக கல்வி பாதிக்கும், கவனம் சிதறும், மன நிலையை மேம்படுத்துவது சிரமமான காரியமாக அமையும், பெண்கள் வழியில் இருந்து வரும் மன உளைசல் தங்களின் உடல் மற்றும் மனம் ஆகியவற்றை கடுமையாக பாதிக்கும், உறக்கமின்மை, நிம்மதி இன்மை தங்களை வெகுவாக பாதிக்க வாய்ப்பு உண்டு, தங்கள் நினைக்கும் எந்த ஒரு காரியமும் நடைமுறைக்கு வாராது, சுய மரியாதை கெடும், வீண் மன  பயமும் மன கிலேசமும் தங்களின் நிம்மதியை கெடுக்கும், சுய ஜாதகத்தில் சிறப்பான யோகங்கள் இருந்த போதிலும் தங்களுக்கு அதனால் யாதொரு நன்மைகளையும் சூரியன் திசையில் தங்கள் பெற இயலாது, எனவே தங்கள் சூரியன் திசை முடியும் வரை அனைத்து விஷயங்களிலும் பொறுமையை கடைபிடிப்பது நன்மைகளை வாரி வழங்கும், மேலும் தங்கள் எடுக்கும்  தவறான முடிவுகளை தவிர்க்க, பெரியோர் மற்றும் பெற்றோர் ஆலோசனையை  பெற்று நடைமுறைப்படுத்துவது சகல நன்மைகளையும் தரும், மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு நன்மைகளை மட்டும் தேடி பெறவேண்டிய கட்டாயத்தில் தாங்கள் இருப்பது கவனிக்கத்தக்கது.


சூரியன் திசை புதன் புத்தி தரும் பலன்கள் ( 24/04/2016 முதல் 28/02/2017 வரை )

தற்போழுது நடைபெறும் சூரியன் திசையில் புதன் புத்தி தங்களுக்கு மேலும் இன்னல்களை தரும் அமைப்பில் உள்ளது கவனிக்க தக்கது, 5,11ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான  8ம் பாவக தொடர்பை பெற்று பலனை தருவது தங்களின் அவசர முடிவுகள் யாவும் மிகுந்த துன்பத்தை தரும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையையும், தன்னம்பிக்கையில்லாத மன நிலையையும் தரும், சுய அறிவு வேலை செய்யாது, அதிர்ஷ்டம் இன்மையால் தங்களால் சுய  கட்டுபாடுடன் நடக்க இயலாது, வீண் கற்பனையும், சிந்தனையும் தங்களுக்கு மன நிம்மதி வழங்கும், ஆனால் அடுத்தது வரும் கேது புத்தியும், சுக்கிரன் புத்தியும் வலிமை பெற்ற பாக்கிய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது தங்களின் வழக்கியில் சகல யோகங்களையும் நல்கும், மனதிற்கு இசைந்த வாழ்க்கை துணை, நண்பர்கள் வழியில் ஆதரவு, செய்யும் தொழில் வழியில் இருந்து அபரிவித முன்னேற்றம், இந்நாள் கவலைகள் எல்லாம் சூரியனை கண்ட பனி போல் விலகும் சூழ்நிலை, சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் தன்மை என தங்களின் வாழ்க்கையையே புத்துணர்வு மிக்க ராஜயோகங்களை வாரி வழங்கும், தங்கள் தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் புத்தியை மட்டும் சற்று கவனமாக கடந்து விட்டால், எதிர்கால வாழ்க்கை தங்கள் எதிர்பார்க்காத யோக பலன்களை வழங்க காத்துகொண்டு இருக்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 19 அக்டோபர், 2016

காலசர்ப்ப தோஷம் மற்றும் ராகு கேது தோஷ பரிகாரம் !


சாய கிரகங்களான ராகுகேது ஒருவரது சுய ஜாதகத்தில் பாதிக்கப்படுவது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சிறு வயது முதல், வாழ்வின் இறுதிவரையிலான காலகட்டம் வரை அதிக அளவில் இன்னல்களை தரும் அமைப்பாகும், குறிப்பாக ஒரு ஜாதகரின் வாழ்க்கையில் யோகப்பலன்களையும், அவயோகபலன்களையும் நடைமுறைக்கு கொண்டுவரும் அன்பர்களின் சந்திப்பை நிகழ்த்துவது சாய கிரகங்களான ராகுகேது என்றால் அது மிகையில், சுய ஜாதகத்தில் சாய கிரகங்கள் வலிமையுடன் இருப்பின் அவருடன்  சேர்க்கை பெரும் நண்பர்கள், கூட்டாளிகள், அறிமுகம் இல்லாத புதிய நபர்கள், வாழ்க்கை துணை, பொதுமக்கள், வேலையாட்கள், வெளியூர் அல்லது வெளிநாடு சார்ந்த அன்பர்கள் அனைவரும் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளையும் வாழ்க்கையில் சிறப்பான நல்ல திருப்பத்தையும் வாரி வழங்கும் நபர்களாக திகழ்வார்கள், சுய ஜாதகத்தில் சாய கிரகங்கள் வலிமை அற்று இருப்பின் மேற்கண்ட பலாபலன்களுக்கு நேர் எதிராக அமைந்துவிடும்.

ஜாதகர் தமது வாழ்க்கையில் சந்திக்கும் அன்பர்கள் அனைவராலும் இன்னல்களையும் துன்பங்களையும் சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாக்கும், உறவுகளுடனும் சுமூக போக்கை ஜாதகர் கையாள முடியாது, நல்ல நண்பர்கள் ஜாதகருக்கு கிடைப்பது அரிது, ஜாதகருக்கு அறிமுகமாகும் அன்பர்கள் அனைவரின் வழியில் இருந்தும் துன்பங்களையும் இன்னல்களையும் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவர், இதனால் ஜாதகரின் முன்னேற்றம் வெகுவாக பாதிக்கப்படும், குறிப்பாக ராகு கேது வலிமை அற்று குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்களில் இருப்பின் ஜாதகரின் வாழ்க்கையில் இல்லற துணை ஜாதகரை வெகுவான பாதிப்புகளுக்கு ஆளாக்கும் சூழ்நிலையை தரும், குடும்ப ஸ்தானம் சாய கிரங்கங்களால் பாதிக்கப்படும் பொழுது ஜாதகரின் வாழ்க்கை துணை, ஜாதகருக்கு தனது வாக்கு மற்றும் குடும்ப வாழ்க்கையில் இருந்து இன்னல்களை தரகூடும், வருமானம் வெகுவாக பாதிக்கும், களத்திர ஸ்தானம் சாய கிரங்கங்களால் பாதிக்கப்படும் பொழுது ஜாதகரின் வாழ்க்கை துணை ஜாதகருக்கு பொருத்தமற்று அமைவதால், அவர் வழியில் இருந்து ஜாதகர் வெகுவான இன்னல்களை சந்திக்கும் நிலைக்கு ஆளாக்கும், மேலும் களத்திர ஸ்தானம் ஜாதகருடன் சேரும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை குறிப்பதால், நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் அமைவது சிரமம், மேலும் மேற்கண்ட நபர்களால் ஜாதகர் பெரும் இன்னல்களுக்கு ஓர் அளவு என்பதே இருக்காது, ஜாதகரின் முன்னேற்றம் வெகுவாக பாதிக்கப்படும்.

எனவே எந்த ஒரு ஜாதகத்திலும் சாயகிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது வலிமை அற்று இருப்பது ஜாதகருக்கு உகந்தது அல்ல, மேலும் 2,5,7 ம் பாவகங்களின் அமர்ந்து வலிமை அற்று ஜாதகருக்கு இன்னல்கள் தரும் அமைப்பில் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்புகளை வாரி வழங்கிவிடும், மேலும் அந்த பாதிப்பில் இருந்து ஜாதகர் விடுபடுவது சற்று கடினமான விஷயமாகும், 2,5,7ம் வீடுகள் வழியில் இருந்து ஜாதகர் தனது வாழ்க்கையில் நல்ல வருமானம், குடும்பம், இனிமையான பேச்சு திறன், சேமிப்பு மற்றும் இல்லற வாழ்க்கையில் இன்பம் என்ற அமைப்பிலும், தான் கற்ற கல்வி, கல்வி வழியில் இருந்து ஜாதகர் பெற்ற அறிவு, நல்ல பூர்வீகம், நிறைந்த அறிவு திறன், மற்றவர்களின் உதவி, நல்ல குழந்தைகள், தமக்கு வரும் இன்னல்களில் இருந்து விடுதலை பெரும் யோகம், அனைத்தையும் சாதிக்கும் வல்லமை என்ற அமைப்பிலும், நல்ல நண்பர்கள், பொருத்தமான  வாழ்க்கை துணை, சிறந்த கூட்டாளிகள் என்ற அமைப்பில் யோக பலன்களை வாரி வழங்கும் எனவே மேற்கண்ட பாவகங்கள் மிக வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு மிகுந்த யோகங்களை வழங்கும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் இன்னல்களையும், மேற்கண்ட  பாவகங்கள் ராகுகேது எனும் சாயகிரகங்களால் பாதிக்கப்படும் பொழுது கடுமையான பாதிப்புகளையும் இன்னல்களையும் சந்திக்கும் சூழ்நிலையை ஜாதகருக்கு வழங்கும்.

மேற்கண்ட சாயகிரகங்களின் பாதிப்புகளில் இருந்து விடுபட ஜாதகர் தனது பெற்றோர்களின் பெற்றோர்களுக்கு ( தாய் வழி தாய்தந்தையர், தகப்பன் வழி தாய் தந்தையர் ) தம்மால் இயன்ற உதவிகளை செய்வதே ( வஸ்த்திர தானம், பொருள் தானம், அவர்களின் ஆசிர்வாதம் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை ஜாதகரே முன் வந்து ஏற்று கொண்டு செயல்படுதல்) சாலச்சிறந்தது, மேலும் அவர்களுக்கு உண்டான  உணவு,ஆடை,இருப்பிடம் ஆகியவற்றை சிறப்பாக செய்து கொடுப்பது பாதிக்கப்பட்ட சாயாகிரகங்களின் தாக்கத்தில் இருந்து ஜாதகரை மீட்டு எடுக்கும், மேற்கண்ட வாய்ப்பை இழந்தவர்கள், தம்மால் இயன்ற அளவு முதியோர் ஆதரவற்ற  அன்பர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை பிரதிபலன்  பார்க்காமல் செய்யலாம், சாய கிரகங்களின் ஜீவகாந்த அலைகள் அதிக அளவில் வெளிப்படும் திருத்தலங்களான, திரு காலகஸ்த்தி, திருநாகேஷ்வரம், கீழப்பெரும்பள்ளம், தம்பிக்கலை அய்யன் கோவில் போன்ற இடங்களுக்கு சென்று பச்சை கற்ப்பூர அபிஷேகம் செய்து  வழிபடலாம், மேற்கண்ட கோவில் வழிபாடு செய்வதே தனது பாட்டன் பாட்டி, அப்பிச்சி அம்மாயி ஆகியோருடன் ஜாதகர் நெருக்கமான பாசத்தை பகிர்ந்து  கொண்டு, சாய கிரகங்களின் வழியில் இருந்து வரும் இன்னல்களில் இருந்து விடுபடவே அன்றி,  பரிகாரம் மட்டுமே ஜாதகருக்கு நன்மையை வழங்கி விடும் என்ற தவறான கருத்தை விதைக்க அல்ல என்பதை அனைவரும் கருத்தில்  கொள்ளவும் அன்பர்களே!

மேலும் சுய ஜாதகத்தில் சாயகிரகங்கள் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான உறவுகளுக்கு உதவிகளை செய்து ஜாதகர், சாய கிரகங்களின் பாதிப்பில் இருந்து விடுபடலாம், உதாரணமாக சாயாகிரகங்கள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை பாதிக்க செய்யும் பொழுது பெற்ற தாய்க்கு சேவைகளை செய்து சுப யோகங்களை பெறலாம், ஜீவன ஸ்தானமான 10ம் பாவத்தை பாதிக்க செய்யும் பொழுது பெற்ற தந்தைக்கு சேவைகளை செய்து சுபயோகங்களை பெறலாம், பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவத்தை பாதிக்க செய்யும் பொழுது தனது குழந்தைகளுக்கும், குல தேவதைக்கும் சேவைகள் செய்து நன்மைகளையும் யோகங்களையும் பெறலாம், ஒருவர் சுய ஜாதகத்தில் சாய கிரகங்கள் பாதிக்கப்படும் பொழுது, பாதிக்கப்பட்ட பாவக வழியிலான உறவுகள் வழியில் துண்டிப்பையும், தொடர்பு இனிமையையும் தரும், இதை தெளிவாக உணர்ந்து ஜாதகர் மேற்கண்ட கோவில்களுக்கு ஜாதகர் சென்று சர்ப்பசாந்தி பரிகாரம் மேற்கொள்ளும் பொழுது  பாதிக்கப்பட்ட பாவக வழியிலான உறவுகள் தொடர்பையும், அவர்களின் மூலம் நன்மையையும் பெரும் நிலையை தரும், எனவே சுய ஜாதகத்தில் சாய கிரகங்களின் வலிமையை தெளிவாக உணர்ந்து நலம் பெறுவது அவசியமாகிறது.

சுய ஜாதகத்தில் சாய கிரகங்கள் வலிமையுடன் இருப்பின், தான் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு யோகங்களையும் நன்மைகளையும் வாரி வழங்கும், இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் யாதொரு பரிகாரமும் செய்ய தேவையில்லை, அதாவது சாய கிரகங்கள் 1,2.5,6,7,8,12ம் பாவகங்களில் அமர்ந்து இருப்பினும், அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் இருப்பின் மேற்கண்ட பாவக வழியில் இருந்து நன்மைகளும் யோகங்களுமே நடைமுறைக்கு வரும் என்பதை கருத்தில் கொள்க, சாய கிரகங்கள் 1,2.5,6,7,8,12ம் பாவகங்களில் அமர்ந்து அந்த பாவகத்தை பாதிக்க செய்யும் பொழுதே மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு  இன்னல்களும் அவயோகங்களும் நடைமுறைக்கு வரும், அப்படி பட்ட ஜாதக அமைப்பை பெற்றவர்கள் மட்டுமே மேற்கண்ட பரிகாரங்களை மேற்கொண்டு வாழ்க்கையில் சகல நலன்களும் பெறுக.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 15 அக்டோபர், 2016

லக்கினாதிபதி அஸ்தமனம், சுக்கிரன் கேந்திராதிபத்திய தோஷம், நான் துரதிர்ஷ்டசாலி என்கின்றனர், நிகழ்காலம் சரியில்லை, எதிர்காலம் உண்டா?


ஜாதக ஆய்வு 

ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே அடிப்படையாக அமைகிறது என்றால் அது மிகையில்லை, சில ஜாதகங்களில் லக்கினம் முதல் அனைத்து பாவகங்களும் வலிமையாக இருக்கும், அப்படிப்பட்ட சுய ஜாதக அமைப்பை பெற்றவர்கள் யோகதாரிகள் எனலாம், சில ஜாதகங்களில் சில பாவகங்கள் மட்டும் வலிமை இழந்து காணப்படும், அப்படி பட்ட ஜாதகத்தை பெற்றவர்கள் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களை எதிர்கொள்ளும் நிலையை தரும், சில ஜாதகங்களில் லக்கினம் முதல் அனைத்து பாவகங்களும் பாதிக்கப்பட்டு இருக்கும் அல்லது பாதக ஸ்தானங்களுடன் சம்பந்தம் பெற்று இருக்கும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களை அவயோகதாரிகள் எனலாம், பெரும்பாலும் எந்த ஒரு ஜாதகருக்கும் இறையருள் தனது விதி பயன் தரும் பலாபலன்களில் இருந்து விடுபட நிச்சயம் ஏதாவது ஓர் நல்வழியை அமைத்து வைத்து இருக்கும், அதை பற்றி சுய ஜாதக வலிமை கொண்டு தெளிவு பெற்று, தமது வாழ்க்கையை சிறப்பாக ஒவ்வொருவரும் அமைத்துக்கொள்ள இயலும், இதன் அடிப்படையில் ஜாதகருக்கு தேடுதல் இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யோக வாழ்க்கை நிச்சயம் உண்டு.


தங்களது சுய ஜாதக ரீதியாக தாங்கள் முன்வைத்த கேள்விகளுக்கு சரியான ஜாதகரீதியான விளக்கங்களை "ஜோதிடதீபம்" வழங்க இருக்கின்றது.

1) லக்கினாதிபதி அஸ்தமனம் என்ன செய்யும் ?

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கிரகங்கள் அஸ்தமனம், நீசம், பகை, தீய ஆதிபத்தியம் போன்ற நிலைகளில் இருப்பது மட்டுமே ஒரு ஜாதகருக்கு இன்னலகளை தந்துவிடும் என்று கருதுவது முற்றிலும் தவறான கருத்தாகும், ஏனெனில் சுய ஜாதகத்தில் ஒருவருக்கு நவகிரகங்கள் எவ்வித நிலையில் இருந்தாலும், பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டே பலன்களை ஆய்வு செய்ய வேண்டும், ஒரு பாவக அதிபதி அஸ்தமனம், நீச்சம், பகை, தீய ஆதிபத்தியம் அடைவதால் இன்னல்கள் வரும் என்பது முற்றிலும் தவறான கருத்து, ஏனெனில் சம்பந்தப்பட்ட பாவகம் மிகவும் வலிமையுடன் இருப்பின் மேற்கண்ட  அமைப்பில் அஸ்தமனம், நீச்சம், பகை, தீய ஆதிபத்தியம் அடைவதால் எவ்வித இன்னல்களும் ஜாதகருக்கு பாதிப்பை தாராது என்பதே உண்மை, உதாரணமாக தங்களது ஜாதகத்தில் லக்கினாதிபதி அஸ்தமன நிலையில் இருந்தாலும், தனது பாவகத்திர்க்கு 10 ல் அமர்ந்து வலிமையை தருகிறார், மேலும் தனது பாவகத்தை தானே வசீகரிப்பது அதற்க்கு வலிமை சேர்க்கும் அமைப்பாகும், எனவே தங்களது லக்கினம் 100% சதவிகித வலிமையுடன் இருப்பது உறுதியாகிறது, மேலும் லக்கினம் எனும் முதல் வீடு தங்களுக்கு தொடர்பு பெறுவது வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் என்பது வரவேற்க தக்க விஷயமாகும், இதனால் தங்களின் வாழ்க்கையில் தாங்கள் எடுக்கும் முயற்ச்சிகள் மிகப்பெரிய வெற்றிகளை இலக்கின பாவக வழியில் இருந்து பெறலாம், நல்ல புகழ் உண்டாகும், வியாபர விருத்தி, செல்வ செழிப்பு, சகோதர வழி ஆதரவு, புகழ் மிக்க பொறுப்புகள் என்ற விதத்தில் சிறப்பான முன்னேற்றத்தை தரும், ஆகையால் தங்களது லக்கினாதிபதி அஸ்தமன நிலையில் இருந்தாலும் தங்களது இலக்கின பாவகம் மிகவும் வலிமையுடன் இருப்பது தங்களுக்கு சிறப்பான நன்மைகளை தரும் என்பதில்  சந்தேகம் இல்லை அன்பரே !

2) சுக்கிரன் கேந்திராதிபத்திய தோஷம் பெறுவது என்ன செய்யும் ?

சுக்கிரன் தங்களது ஜாதகத்தில் 3வீடுகளுக்கு அதிபதியாக விளக்குகிறார், அவையாவன 1,7,12ம் வீடுகளாகும், இருப்பினும் அவர் தனது வீடுகளை வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு படுத்துவது தங்களுக்கு சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், மேலும் 3ம் பாவக அதிபதி குரு பகவானாக அமைவது தங்களுக்கு மேலும் சிறப்பான நன்மைகளை தேடி தரும், மேற்கண்ட விஷயங்கள் யாவும் தங்களின் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் மிக துல்லியமாக கணிக்கப்பட்டது என்பதை கவனத்தில் கொள்க, சுக்கிரன் கேந்திர ஆதிபத்திய தோஷம் அடைவதால் தங்களுக்கு யாதொரு துன்பமும் இல்லை ஏன்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள்.

3) துரதிர்ஷ்டசாலியா நான் ?

எந்த ஒரு ஜாதகருக்கும் அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை வாரி வழங்கும் 11ம் பாவகம் வலிமையுடன் இருப்பின் அவரை துரதிர்ஷ்டம் நெருங்குவதில்லை, ஒருவேளை அப்படி இன்னல்கள் ஏற்ப்பட்டால் அதுவே அந்த ஜாதகருக்கு சிறப்பான நல்வாழ்க்கையை வழங்கும் விதமாக அமைந்துவிடும் என்பதை கருத்தில் கொள்க, தங்களது ஜாதகத்தில் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த நமைகளை தரும் அமைப்பாகும், எனவே நிச்சயம் சொல்லலாம் தங்களது ஜாதகம் ஓர் அவயோக ஜாதகம் அல்ல, தாங்களும் துரதிர்ஷ்டசாலி அல்ல என்று, எனவே இதுபோன்ற மூட நம்பிக்கைகளை களைந்து வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ளுங்கள்.

4 ) நிகழ்காலம் சரியில்லை,  இதுவரை இன்னல்களை மட்டுமே சந்தித்துக்கொண்டு இருக்கின்றேன் இது ஏன் ?

தங்களுக்கு தற்பொழுது தான் வயது 20 முடிவடைகிறது, அதற்குள் 50 வயது கடந்த பெரிய மனிதர்களின் கருத்தை முன் வைப்பது  வேடிக்கையாக இருக்கின்றது, இருப்பினும் தங்களுக்கு இதுவரை நடந்த இன்னல்களுக்கு உண்மையான காரணம் என்பதை பற்றி சிந்திப்போம், தங்களுக்கு பிறப்பில் கேது திசை சிறிது காலமும், அதன் பிறகு தற்பொழுது சுக்கிரன் திசை ( 08/07/2017 வரை ) நடைமுறையில் உள்ளது, தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை தங்களுக்கு எவ்வித பலனை தருகிறது என்று ஜாதக ரீதியாக ஆய்வு செய்தால், சுக்கிரன் தங்களுக்கு 4,7ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, முழு வீச்சில் விறைய ஸ்தான பலனை தந்து கொண்டு இருக்கின்றது, இதனால் தாங்கள் சுக ஸ்தான அமைப்பில் இருந்து, சுக போகங்கள் அற்ற நிலையையும், தாய் வழியில் இருந்து இன்னல்களையும், வீடு,வண்டி வாகனம் அற்ற நிலையிலும், வாழ்க்கையில் போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது, சுய ஜாதகத்தில் சுக்கிரன் வீரிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற போதிலும், தனது திசா காலங்களான 20 வருடங்களிலும் விறைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது தங்களுக்கு அதிக அளவில், வீண் விரையங்களையும், மன அழுத்தம் மற்றும் மன போராட்டங்களையும் தருகிறது.

மேலும் களத்திர ஸ்தான வழியில் இருந்து தங்களுக்கு நல்ல நண்பர்கள் சேர்க்கை அற்ற நிலையையும், சேரும் நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் எதிர்பால் அமைப்பினரிடம் இருந்து அதிக அளவில் இன்னல்களையும் துன்பங்களையும் தருகிறது, இதானால் தங்களின் மன நிம்மதி வெகுவாக பாதிக்க படுகிறது என்பதே உண்மை, எனவே சுக்கிரன் திசையில் தாங்கள் எவ்வித யோக பலன்களையும் எதிர்பார்க்க வேண்டாம் என்பது எமது வேண்டுகோள், மேலும் நடைபெறுவது விறைய ஸ்தான பலன் என்பதால் தங்களின் மனம் ஒரு நிலைப்பட்ட வாய்ப்பு இல்லை, மன சஞ்சலம் தாங்கள் செய்யும் காரியங்களில் தோல்விகளை வழங்கும், நினைத்தது எதுவும் நடைபெறாது, அனைவராலும் தொல்லைகள் மற்றும் இழப்புகளை தரும் என்பது விதி, இதை தாங்கள் உணர்ந்து, விழிப்புணர்வுடன் செயல்பட்டால் நிச்சயம் தங்களுக்கு நன்மை உண்டாகும்.

5) எதிர்காலம் சிறப்பாக அமையுமா ? வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகுமா ?

எதிர்வரும் சூரியன் திசையும், அதற்க்கு அடுத்து வரும் சந்திரன் திசையும் தங்களுக்கு  ஜீவன ஸ்தானமான 10 ம் வீடு களத்திர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த யோக பலனை வாரி வழங்குகிறது, எனவே தங்களது எதிர்கால வாழ்க்கை மிகவும் சிறப்பாக உள்ளது என்பது வரவேற்க தக்க அம்சமாகும், மேலும் தங்களது ஜீவன ஸ்தானம் சர ராசியான மகரத்தில் அமைவதும், அது தொடர்பு பெரும் 7ம் பாவகம் சர காற்று ராசியான துலாம் ராசியில் அமைவதும் தங்களின் வாழ்க்கையில் அபரிவிதமான பொருளாதார முன்னேற்றங்களையும், செல்வ செழிப்பையும் வாரி வழங்கும் என்பதை கவனத்தில் கொள்க, சூரியன் சந்திரன் திசைகள் இரண்டும் தங்களுக்கு சிறப்பான யோக வாழ்க்கையை தர காத்துகொண்டு இருக்கிறது என்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்க, மேற்கண்ட திசைகள் தங்களுக்கு நடைமுறையில் வரும்பொழுது, சுபயோக பலன்கள் அனைத்தும் குறுகிய காலத்தில் நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்க தக்க அமசமாகும்.

தங்களது சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தங்களுக்கு உகந்தது அல்ல, எனவே தாங்கள் தங்களது பூர்வீகத்தில் இருந்து வெளியேறி, வெளியூரில் ஜீவனம் தேடுவதே சிறந்தது, தங்களது சுய ஜாதகத்தில் உள்ள அனைத்து சுபயோகங்களையும் பரிபூர்ணமாக பெற அதுவே தங்களுக்கு உகந்தது, இல்லை எனில் தங்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது குதிரைகொம்பாக மாறிவிடும் என்பதை கவனத்தில் கொள்க.

வாழ்த்துகள்

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 13 அக்டோபர், 2016

புதன் திசை குரு புக்தியில் உறுதியாக திருமணம் நடைபெறும் என்றனர் ? திருமணம் தாமதமாக காரணம் என்ன ?


முழு முதற் சுப கிரகம் என்று வர்ணிக்கப்படும் குரு பகவானின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் நடைபெறும் பொழுது ஒருவருக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது பொது கருத்து, மேலும் சந்திரன் நின்ற ராசிக்கு 2,5,7,9,11 ராசிகளில் குரு சஞ்சாரம் செய்யும் காலம் குரு பலம் பொருந்திய நேரமாக கருதி அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும் என்பதும் பொது கருத்தாகும், மேற்கண்ட விஷயங்கள் யாவும் கிராமத்து செலவடையான "காகம் அமர பனம்பழம் விழுந்த கதைக்கு " பொருத்தமானத அமையுமோ அன்றி சுய ஜாதக பாவக வலிமையையும், நடைபெறும் திசா புத்திகள் தரும் பலாபலன்களை கருத்தில் கொண்டு கூறப்பட்டதாக அமையாது என்பதை "ஜோதிடதீபம்" பதிவு செய்ய விரும்புகிறது, ஒருவரின் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையும், நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையின் தன்மையும் நிர்ணயம் செய்கிறது என்பதே முற்றிலும் உண்மை, இதை தங்களின் சுய ஜாதகம் கொண்டே விளக்கம் தர விரும்புகிறோம் அன்பரே!

தங்களது கேள்வி, புதன் திசை குரு புக்தியில் நிச்சயம் தங்களுக்கு திருமணம் நடைபெறும் என்று உறுதியாக அனைத்து ஜோதிடர்களும் கூறினார், ஆனால் புதன் திசை குரு புத்தியில் திருமணம் நடைபெறவில்லை, அதற்க்கு காரணம் என்ன? என்பதே.


முதல் காரணம் 

தங்களது ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் புதன் திசை தங்களுக்கு வழங்கும் பலன்களை கருத்தில் கொள்வோம், புதன் திசை தங்களுக்கு 4,6ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் விறைய ஸ்தான பலன்களை வாரி வழங்குகிறது, மேலும் தங்களின் ஜாதகத்தில் விறைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கும் 11ம் வீடாகவும், ஸ்திர காற்று ராசியான குமபத்தில் அமைவதும் தங்களுக்கு உகந்த நன்மைகளை தரும் அமைப்பு அல்ல, புதன் திசை தங்களுக்கு சுக ஸ்தான அமைப்பில் இருந்து இன்னல்களையும், சத்ரு ஸ்தான அமைப்பில் இருந்து அதிக அளவில் இன்னல்களையும் வழங்குவது கவனிக்க தக்கது, இதனால் தங்களின் சுக போக வாழ்க்கையில் நிம்மதி இழப்பையும், சத்ரு ஸ்தான அமைப்பில் இருந்து காரிய தடைகள் எடுக்கும் முயற்ச்சிகள் தோல்வியை தரும் அமைப்பு, திட்டமிட்டு செயல்படுத்த இயலாத சூழ்நிலை என்ற வகையில் பலன்களை தருகிறது, மேலும் புதன் திசை தங்களுக்கு எவ்விதத்திலும் களத்திர ஸ்தான பலனையோ, குடும்ப ஸ்தான பலனையோ ஏற்று நடத்தவில்லை ( இருப்பினும் தங்களது ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் மிகவும் வலிமையுடனே உள்ளது வரவேற்க தக்கது ) இதானால் தாங்கள் திருமணம் செய்வதற்கு உண்டான வாய்ப்புகளை புதன் திசை தரவில்லை என்பதே உண்மையாகிறது.

இரண்டாவது காரணம் 

தங்களது ஜாதகத்தில் புதன் திசையில் குரு புத்தி ( 27/02/2012  முதல் 04/06/2014  வரை ) நடைபெற்று உள்ளது, நடைபெற்ற குரு புத்தி தங்களுக்கு 4ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, குரு புத்தி முழுவதும் விறைய ஸ்தான பலனையே நடத்தி இருப்பது தங்களின் வாழ்க்கையில், திருமணத்திற்கு உண்டான முயற்ச்சிகள் அனைத்தையும் தோல்வி அடைய செய்து இருக்கின்றது, மேலும் குரு புத்தி காலங்களில் எவ்விதத்திலும் வலிமை பெற்ற குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான பலன்கள் நடைமுறைக்கு வரவில்லை என்பது கவனிக்க தக்கது, ஒருவருக்கு திருமணம் சரியான பருவ வயதில் ( 18 முதல் 23 வயதுக்குள் ) நடைபெற வேண்டும் எனில் அவரது சுய ஜாதகத்தில் 2,7,12 வீடுகள் வலிமையாக இருக்க வேண்டும் சரியான பருவ வயதில் நடைபெறும் திசையோ அல்லது புத்தியோ வலிமை பெற்ற 2,7,12ம் பாவக பலனையோ, அல்லது ஜாதகத்தில் வலிமை பெற்ற மற்ற பாவக பலனையோ ஏற்று நடத்தினால் எந்த ஒரு தடையும் இன்றி, திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக நடைபெறும்.

மாறாக சரியான பருவ வயதில் நடைபெறும் திசா புத்திகள் சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக பலனையோ, அல்லது பாதக ஸ்தான பலனையோ ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு நிச்சயம் திருமண தடைகளை வழங்கும் என்பதை கருத்தில் கொள்க, தங்களது ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் புதன் திசையும் தங்களுக்கு உகந்த நன்மைகளை தரவில்லை ( 4,6ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விறைய ஸ்தான பலனை தருகிறது ) புதன் திசையில் நடந்து முடிந்த குரு புத்தியும் தங்களுக்கு உகந்த நன்மைகளை தரவில்லை ( 4ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விறைய ஸ்தான பலனை தந்து இருக்கின்றது ) மேலும் தற்பொழுது நடைமுறையில் உள்ள புதன் திசை சனி புத்தியும் தங்களுக்கு சாதகமாக இல்லை ( 4ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விறைய ஸ்தான பலனை தந்து இருக்கின்றது ) எனவே தங்களுக்கு புதன் திசை சனி புத்தி வரை திருமணம் நடைபெற சிறிதும் வாய்ப்பு இல்லை என்பதை "ஜோதிடதீபம்" தெளிவு பட கூற விரும்புகிறது.

சரியான வயதில் திருமணம்  தடையின்றி நடைபெற சுய ஜாதக அமைப்பில் உள்ள வலுமையான காரணிகள் :

1) ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,7,12 ம் வீடுகள் வலிமையாக இருப்பது அவசியமாகிறது.
2) ஜாதகருக்கு திருமண வயதில் நடைபெறும் திசாபுத்திகள் (சனி,ராகு,கேது செவ்வாய் போன்ற பாவக கிரகத்தின் திசா புத்தி என்றாலும் கூட ) வலிமை பெற்ற 2,7,12ம் பாவக பலனையோ, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற மற்ற பாவக பலனையோ ஏற்று நடத்த வேண்டும்.
3) வலிமை பெற்ற பாவகத்திற்கு கோட்சார கிரகங்கள் மேலும் வலிமையை தமது கோட்சார சஞ்சார நிலையில் இருந்து தர வேண்டும்.

மேற்கண்ட அமைப்பு ஒருவரது ஜாதகத்தில் இருப்பின் நிச்சயம் அவர் ஆண் என்றாலும் சரி பெண் என்றாலும் சரி திருமண வாழ்க்கையில் எவ்வித தடைகளும் இன்றி சிறப்பான தமக்கு உகந்த வாழ்க்கை துணையை பெறுவார் என்பது உறுதி.

தங்களது ஜாதகத்திற்கு திருமண வாழ்க்கை எப்பொழுது அமையும் என்பதை ஆய்வு செய்வோம் அன்பரே !

புதன் திசைக்கு பிறகு வரும் கேது திசை தங்களுக்கு சிறப்பான யோக பலன்களை ஏற்று நடத்துவது கவனிக்க தக்கது ( எதிர்வரும் கேது தசை 5,8,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் என்று வர்ணிக்க படும் 11 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது தங்களுக்கு வெற்றி மேல் வெற்றியை தரும் அமைப்பாகும் ) எனவே கேது திசை, கேது புத்தியில் நிச்சயம் திருமணத்திற்கு உண்டான முயற்ச்சிகள் நல்ல வெற்றிகளை தரும், மேலும் கேது திசை சுக்கிரன் புத்தி வலிமை பெற்ற 1,7 ம் பாவக பலனை ஏற்று நடத்துவதால் திருமண வாழ்க்கை தாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடைபெறும் என்பதை உறுதியாக ஜோதிடதீபம் பதிவு செய்ய விரும்புகிறது, நல்வழத்துகள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
 9443355696

சர்ப்ப தோஷ ஜாதகம் என்பதால், எதிர் வரும் கேது திசை எனக்கு இன்னல்களை வழங்குமா ?



 நவ கிரகங்கள் தனது திசா புத்திகளில் வழங்கும் பலாபலன்கள் பற்றி தெளிவு பெற, லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகளின் வலிமை நிலையை தொடர்பு பெற்ற பாவக வழியில் இன்றது உணர்ந்து, திசா புத்திகள் வழங்கும் பலாபலன்களை துல்லியமாக கூறுவது ஒரு ஜோதிடனின் கடமையாகும், அதன் அடிப்படையில் தங்களின் சுய ஜாதக வீடுகளின் வலிமையின் அடிப்படையிலும், தற்பொழுது நடைபெறும் புதன் திசை வழங்கி கொண்டு இருக்கும் பலாபலன்கள் பற்றியும், எதிர்வர இருக்கும் கேது மற்றும் சுக்கிரன் திசைகள் வழங்கும் பலாபலன்கள் பற்றியும் துல்லியமாக கூற " ஜோதிடதீபம் " கடமைப்பட்டுள்ளது, குறிப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் புதன் திசை வழங்கும் பலன்கள் பற்றியும், புதன் திசையில் நடைபெறும் சனி புத்தி வழங்கும் பலன்கள் பற்றியும் தங்களுக்கு விளக்கம் தர விரும்புகிறோம்,


தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் புதன் மற்றும் புதன் திசையில் சனி புத்தி 11/02/2017 தேதி வரை நடைமுறையில் உள்ளது, தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் புதன் திசையும் தங்களுக்கு உகந்த நன்மைகளை பெரிய அளவில் தரவில்லை, புதன் திசையில் சனி புத்தியும் தங்களுக்கு சிறப்பான யோக பலன்களை தரவில்லை என்பதே உண்மை, ஏனெனில் புதன் திசை தங்களுக்கு 4,6ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம்  பாவகத்துடன்  தொடர்பை பெற்று, அதன் பலாபலனை ஏற்று நடத்துவது தங்களின் வாழ்க்கையில், சுக ஸ்தான வழியில் இருந்து வண்டி வாகனம், சொத்து சுகம், வீடு நிலம் மற்றும் தாய் வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களையும், சத்ரு ஸ்தான அமைப்பில் இருந்து அனைவராலும் இன்னல்கள், துன்பம் மற்றும் மன நிம்மதி இழப்பு, வீண் பொருட்செலவுகள், சம்பாத்தியம் விறையம் ஆகும் தன்மை, அதனால் வரும் மன உளைச்சல், நினைத்தது நடைபெறாமல் தாமதம் ஆகும் சூழ்நிலை என்ற வகையில் இன்னல்களை தரும், மேலும் தங்களின் மன நிம்மதியும் மன சஞ்சலமும் தங்களின் முன்னேற்றத்திற்கு கடுமையாக பாதிப்புகளை வழங்கி இருக்கும், அதிக அளவிலான போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு தங்களின் ஜீவன வாழ்க்கையை நடத்தும் சூழ்நிலைக்கு ஆளாக்கி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 மேலும் தற்பொழுது நடைபெறும் சனி புத்தி தங்களுக்கு 4ம் வீடு விறைய ஸ்தானமான  12ம் பாவகத்துடன் தொடர்பை பெற்று, அதன் பலாபலனை ஏற்று நடத்துவது தங்களுக்கு சுக ஸ்தான அமைப்பில் இருந்து வீடு வண்டி வாகன வழியில் இருந்து வீண் இழப்புகள், தாய் வழியில் இருந்து வரும் இன்னகளை, மற்றும் அவர்களது உடல் நிலை பாதிப்பு, மற்றும் மருத்துவ செலவினங்கள், எதிர்பாராத பொருள் இழப்புகள், எடுக்கும் முயற்ச்சிகள் தோல்வி, தன்னம்பிக்கை குறைதல், வெற்றி வாய்ப்பை கடைசி நேரத்தில் இழக்கும் சூழ்நிலை, பல விதங்களில் இருந்து வரும் நிம்மதி இழப்பு, உறக்கமின்மை, அதனால் வரும் உடல் நல பாதிப்பு, சுபகாரியங்களில் வரும் தடைகள், தனிப்பட்ட முயர்ச்சியும் பலன் தாராமல் தோல்வியை தழுவும் சூழ்நிலை என தங்களின் வாழ்க்கையை வெகுவாக பதம் பார்த்து இருக்க வாய்ப்பு உண்டு, இந்த நிலை தங்களுக்கு எதிர் வரும் 11/02/2017 தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்பதால், தாங்கள் 4ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுகொள்ளவேண்டும், அல்லது விழிப்புணர்வுடன் இருந்து வரும் இன்னல்களில் இருந்து தங்களை நீங்களே தற்காத்து கொள்ள வேண்டும், மேலும் இந்த காலகட்டங்களில் தங்களின் குண நலன்களும், மற்றவர்களுடன் தாங்கள் பழகும் விதமும் வெகுவாக பாதிக்கப்படும், எனவே தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் புதன் திசையும் விறைய ஸ்தான பலனை தருகிறது, புதன் திசையில் நடைபெறும் சனி புத்தியும் விறைய ஸ்தான பலனை தருகிறது என்பதால் தாங்கள் விறைய ஸ்தான வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களை சந்தித்து கொண்டு இருகின்றீர்கள் என்பது சொல்லி தெரிவதில்லை.

ஆனால் எதிர்வரும் கேது திசையும், அதற்க்கு அடுத்து வரும் சுக்கிரன் திசையும் தங்களுக்கு மிகுந்த யோக பலாபலன்களை வாரி வழங்குவது வரவேற்க தக்கது, தங்களுக்கு எதிர்வரும் கேது தசை 5,8,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் என்று வர்ணிக்க படும் 11 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை வாரி வழங்குவது வரவேற்க தக்கது, தங்களின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசியுடன் சம்பந்தம் பெற்று 100% விகித யோக பலன்களை வாரி வழங்குவது சிறப்பான நன்மைகளையும் யோகங்களையும் தங்களுக்கு தொழில் மற்றும் ஜீவன வழியில் இருந்து வாரி வழங்கும், கேது திசை தங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு விலாசத்தை தங்களது வீட்டு வாயிற்படி கதவை தட்டி தங்களுக்கு வாரி வழங்கும், தங்களுக்கு கேது திசை ( 11/02/2017 முதல் 12/02/2024 வரை ) நடைமுறைக்கு வர இருக்கிறது என்பது தங்களுக்கு புத்துணர்ச்சியை வழங்கும் செய்தியாகும், இந்த கேது திசை 7 வருட காலகட்டத்தில் தங்களுக்கு 5ம் பாவக வழியில் இருந்து மிதமிஞ்சிய அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் அதிகரிக்கும், இதனால் தங்களின் ஜீவன முன்னேற்றம் அபரிவிதமாக வெற்றிகளை வாரி வழங்கும், செய்யும் தொழில் வழியில் தங்களின் அறிவு பூர்வமான செய்கையினால் வெற்றிகளை வாரி குவிக்கும் யோகத்தை நல்கும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டமும், புதையலுக்கு நிரகரான சொத்து சுக சேர்க்கையையும் வாரி வழங்கும், பெரும் செல்வமும் சொத்து சுக சேர்க்கையும் தங்களின் வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் யோகத்தை தரக்கூடும், முதலீடுகள் மூலம் அதிர்ஷ்டம் மற்றும் லாட்டரி யோகத்தை வாரி வழங்கும், நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் வாழ்க்கை துணையின் சொத்து மற்றும் பொருளாதார உதவிகளை பெறுவதற்கு உண்டான யோகத்தை தரும், 11 ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், புதுமையான திட்டமிடுதல்கள், புதிய முயற்ச்சிகள் மற்றும் சிந்தனைக்கள் மூலம் வாழ்க்கையில் மிகுந்த நன்மைகளை தாங்கள் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும், எனவே எதிர்வரும் திசை சர்ப்ப கிரகமான கேது திசை என்றாலும் அவர் ஏற்று நடத்தும் பாவக பலன் ஆனது லாபஸ்தானம் என்பதால் மிகுந்த நன்மையையும் யோகமும் உண்டாகும், சர்ப்ப தோஷம் தங்களுக்கு யாதொரு தீமையும் தாராது என்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்தியாகும்.

கேது திசைக்கு பிறகு சுக்கிரன் தனது திசையை 20 வருட காலம் நடத்த இருக்கின்றது, இந்த சுக்கிரன் திசை தங்களுக்கு வழங்கும் பலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம், சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்த சுக்கிரன் தங்களுக்கு 1,5,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, இதனால் தங்களுக்கு சுக்கிரன் திசை மிகுந்த யோக பலன்களை தான் தொடர்பு பெற்று ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், குறிப்பாக இலக்கின வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டம், தன்னம்பிக்கை மற்றும் முற்போக்கு சிந்தனையுடன் செயல்படும் தன்மை, எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு யோகத்தை தரும் அமைப்பு, புதுமையான முயற்ச்சிகள் யாவும் வெற்றி பெரும், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள் தங்களை தேடி வரும், 5 பாவக வழியில் இருந்து தங்களின் குழந்தைகளின் வழியில் இருந்து யோகமும், தங்களின் புத்திசாலித்தனம், சமயோசித அறிவு திறன் மூலம் வெற்றி வாய்ப்புகளை பெரும் யோகம், கற்ற கல்வி வழியில் இருந்து பெரும் அபரிவிதமான முன்னேற்றம், தெய்வீகத்தால் வரும் யோக வாழ்க்கை, குல தெய்வ ஆசியினால் பெரும் சகல சௌபாக்கியங்கள் என தங்களின் முன்னேற்றத்தை உறுதி படுத்தும், 7 பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணையின் ஆதரவு, நண்பர்கள் ஆதரவு, கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு மூலம் மிகப்பெரிய முன்னேற்றங்களை பெரும் யோகத்தை தரும், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள் வந்து சேரும், வெளிநாடு மற்றும் வெளியூர் அமைப்பில் இருந்து வரும் அபரிவிதமான முன்னேற்றம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும்.

8ம் பாவக வழியில் இருந்து தங்களுக்கு வரும் திடீர் அதிர்ஷ்டம் மற்றும் வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார வசதி வாய்ப்புகள் தங்களின் யோக வாழ்க்கையை உறுதி செய்யும், தங்களின் சிந்தனையும் செயல்பாடும் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை வாரி வழங்கும், அந்நிய நபர்கள் மூலம் எதிர்பாராத வருமான வாய்ப்புகளையும் முதலீடுகள் மூலம் திடீர் அதிர்ஷ்டமும் உண்டாகும், தங்களின் அறிவு திறனும், அதிபுத்திசாலித்தனமும் பிரகாசிக்கும் யோகம் உண்டாகும், செய்யும் காரியங்கள் யாவும் வெற்றி மேல் வெற்றியை வாரி வழங்கும், நினைத்த அனைத்து காரியங்களும் தங்களுக்கு தடையின்றி நிறைவேறும், 11ம் பாவக வழியில் இருந்து தங்களின் தன்னபிக்கையும், சுய மரியாதையும் அதிகரிக்கும், அரசு கௌரவமும் மற்றும் பிரபலதன்மையும் அதிகரிக்கும், சுய தொழில் செய்யும் யோகமும் அதன் மூலம் பொருளாதார தன்னிறைவையும் வாரி வழங்கும், தங்களின் லட்சியங்கள் அனைத்தும் பரிபூர்ணமாக நிறைவேறும், பல தொழில் செய்யும் யோகமும், தொழில் நிமித்தமாக பல இடங்களுக்கு சென்று வரும் யோகமும் உண்டாகும், தங்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தின் முழு பலனையும் அணிபவிக்கும் யோக காலமாக எதிர்வரும் சுக்கிரன் திசை அமையும் என்பதில் சந்தேகம் இல்லை, தங்களது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனையே இனிவரும் கேது திசையும், அதற்க்கு அடுத்து வரும் சுக்கிரன் திசையும் ஏற்று நடத்துவதால் மிகப்பெரிய யோக வாழ்க்கை தர எதிர்காலம் காத்து கொண்டு இருக்கிறது, " வாழ்த்துகள் "

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 12 அக்டோபர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - மிதுன லக்கினம் !



திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "மிதுன" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                  

மிதுன லக்கினம் :

4ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மிதுன லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் வழங்கு பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, சுக ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் குரு தங்களின் வாழ்க்கையில் சுக போகங்களில் நாட்டத்தை குறைக்கும், வண்டி வாகனம், வீடு இடம் நிலம் ஆகிய அமைப்புகளில் இருந்து இன்னல்களை தரும், தாய்வழியில் இருந்து சிறு சிறு இன்னல்களும், காரிய தடைகளும் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, மற்றும் நிலம்,வீடு,வண்டி,வாகனம் போன்றவற்றை வாங்குவதற்காக, கடன் பெறுவது தங்களின் வாழ்க்கையில் சிரமங்களை மேலும் அதிகரிக்கும், மேற்கண்ட விஷயங்களில் முதலீடு செய்வதும் தங்களின் பொருளாதார சுமையை வெகுவாக அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்க, தங்களின் குண நலன்கள் வெகுவாக பாதிக்கப்படும் என்பதால் அனைவரிடமும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் செயல்படுவது தங்களின் முன்னேற்றத்திற்கு வெகுவான நன்மைகளை வாரி வழங்கும், தங்களின் சிந்தனை திறன் குறையும் என்பதால் சரியான திட்டமிடுதல்கள் தங்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும், தனிப்பட்ட விஷயங்களில் யாரிடமும் ஆலோசனை பெறுவதை தாங்கள் தவிர்ப்பதே நல்லது, மேலும் ரகசியம் என்று கருதும் விஷயங்களை எக்காரணத்தை கொண்டும் வெளிபடுத்த வேண்டாம், இதனால் தங்களுக்கு அதிக சிக்கல்களும் சிரமங்களும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் கேளிக்கைகளில் கவனம் செலுத்தாமல், பொறுப்புணர்வுடன் இந்த குரு பெயர்ச்சியை கடந்து செல்வது தங்களுக்கு மிகுந்த யோகத்தை தரும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையை ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகத்தை வசீகரிப்பது, மிதுன லக்கின அன்பர்களுக்கு, உடல் சார்ந்த தொந்தரவுகளை அதிகரிக்க கூடும், உடல் நலம் மனநலம் இரண்டும் தங்களுக்கு வெகுவாக பாதிக்க வாய்ப்பு உண்டு, மேலும் சுய தொழில் செய்யும் அன்பர்களுக்கு இது சரியான நல்ல நேரம் அல்ல என்பதை கருத்தில் கொண்டு ஜீவனத்தை மேற்கொள்வது உகந்தது ஆகும், புதிய முயற்ச்சிகள் மற்றும் முதலீடுகள் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பின்னடைவை தரக்கூடும், மாற்றும் மதம் மற்றும் இனம் சார்ந்த அன்பர்களால் தாங்கள் வெகுவான பதிப்பை சந்திக்கும் சூழ்நிலையை தரும், திடீர் இழப்புகளையும், வீண் விரையங்களையும் தவிர்க்க சரியான திட்டமிடுதல்கள் தேவை, பாதுகாப்பான பயணம் தங்களின் உடமைக்கும், உயிருக்கும் காவலாக அமையும், திடீர் முடிவுகளால் தாங்கள் எதிர்பாராத இழப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும், கௌரவ குறைவான காரியங்களில் தாங்கள் ஈடுபடாமல் இருப்பது நல்லது, மேலும் தங்கள் துறை சார்ந்த விஷயங்களில் நல்ல நிர்வாக திறமையை செயல்படுத்தும் காலமாக இந்த குரு பெயர்ச்சி அமையும், பொதுநலம் சார்ந்த உதவிகள் மற்றும் செயல்பாடுகள் தங்களின் சிரமங்களை வெகுவாக குறைக்கும், செய்யும் தொழிலில் மிகுந்த கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது தங்களுக்கு பேரிழப்புகளை தவிர்க்க உதவும், மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகள் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை வாரி வழங்கும் என்பதை கவனத்தில் கொள்க, மிகுந்த விழிப்புணர்வுடன் காரியமாற்ற வேண்டிய சூழ்நிலையில் தாங்கள் இருக்கின்றீர்கள்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்தை வசீகரிப்பது, மிதுன லக்கின அன்பர்களுக்கு, செய்யும் தொழில் மற்றும் பணியில் எதிர்பாராத மன நிம்மதி இழப்பை தரும், தொழில் முடக்கம், ஜீவன முன்னேற்றம் இன்மை, அதிக வேலை பளு, தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தி சுய மரியாதையை இழத்தல், மற்றவர்கள் விஷயங்களில் தலியீடு செய்வதால் வரும் அவமரியாதை, சுய சிந்தனை வெகுவாக பாதிக்கப்படும் தன்மை, அனைவராலும் தொல்லை மற்றும் மன நிம்மதி இழப்பு, குறிக்கோள் அற்ற வாழ்க்கை முறை, எதிர்பாராத நிகழ்வுகளால் மனசோர்வு, தன்னம்பிக்கை இழத்தல், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் நெருக்கடிகள், பொருள் இழப்பு, எதிராளிகள் மூலம் வரும் தொல்லைகள் மற்றும் காரிய தடைகள், இல்லற வாழ்க்கையில் எதிர்பாராமல் நடைபெறும் சிக்கல்கள், உறவுகள் வழியில் இருந்து வரும் சிரமங்கள், வேலை செய்யும் இடத்தில் இருந்து வரும் எதிர்ப்புகள் மற்றும் பதவி இழப்பு, வருமானத்திற்கு மீறிய செலவினங்கள், சுயமாக எடுக்கும் முடிவுகளால் வரும் மன நிம்மதி இழப்பு, தெய்வீக பலம் அற்று போகுதல், பெரியோர் ஆதரவு இன்மை, அதனால் வரும் துன்பங்கள், முற்றிலும் முடங்கும் ஜீவன வழக்கை, சுய வாழ்க்கையில் வரும் அவமானங்கள், வம்பு வழக்குகள், குடும்பத்தை விட்டு பிரிவு நிலை, வேறு தேசத்திற்கு அல்லது ஊருக்கு சென்று பரதேச ஜீவனம் மேற்கொள்ளும் தன்மை, பொது வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் என இந்த குரு பெயர்ச்சி தங்களின் வாழ்க்கையில் மிகுந்த இன்னல்களையே ஜீவன ஸ்தான அமைப்பில் இருந்து வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை விறைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிப்பது, மிதுன லக்கின அன்பர்களுக்கு, உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்க கூடும், எதிர்பார்ப்புகள் அனைத்து இடங்களில் இருந்தும் வரும், மன நிம்மதி இழப்பின் மூலம் உடல் நலம் வெகுவாக பாதிக்கும், மன பயமும் பதட்டமும் தங்களின் செயல்திறனை வெகுவாக பாதிக்கும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும், வருமான தடைகள், இழப்புகள், நிம்மதியின்மை, எதிர்பாராத மருத்துவ செலவுகள், மன உளைச்சல் இவற்றால் தீய பழக்க வழக்கங்களுக்கு தாங்கள் ஆர்படும் சூழ்நிலையை தர கூடும், குடும்ப வாழ்க்கையில் தங்களின் பேச்சுக்கு மதிப்பு வெகுவாக குறையும், வீண் வாக்குவாதமும், பிடிவாத குணமும் தங்களின் இல்லற வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும், அனைவரிடமும் பகைமை பாராட்டும் சூழ்நிலைக்கு தள்ளபடுவீர்கள், இறை வழிபாட்டில் கவனம் குறையும், எதிர்ப்புகள் அதிகாரிக்கும், சேமிப்பு அனைத்தும் வீண் விறையம் ஆக வாய்ப்பு உண்டு, பொருளாதர சிக்கல்கள் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்ப்படுத்தும், தனிப்பட்ட ஆசைகள் மற்றும் லட்சியங்கள் நிறைவேற அதிக அளவில் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும், யாரிடமும் வீண் வாக்குவாதத்தை கையாள வேண்டாம், ஏனெனில் அது தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும், மனம் சார்ந்த இன்னல்களை அதிகரிக்கும், மேலும் பொருளாதார சிக்கல்களையும் பெரிய அளவில் தர கூடும், குடும்பத்தில் மிகுந்த அனுசரணையாக செல்வது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை தரும், குறிப்பாக வாழ்க்கை துணையுடன் அன்பு பாராட்டுவது தங்களுக்கு மிகுந்த நமைகளை வாரி வழங்கும்.

குறிப்பு :

மிதுன லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 4,8,10,12ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 7 அக்டோபர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - ரிஷப லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "ரிஷப" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                  

ரிஷப லக்கினம் :

5ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் ரிஷப லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் வழங்கு பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியினால் ராஜயோக பலன்களை பெறுவதில் ரிஷப இலக்கின அன்பர்களுக்கு அதிக பங்கு உண்டு எனலாம், லக்கினத்திற்கு பூர்வ புண்ணியத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் தங்களுக்கு நிறைவான அறிவுத்திறனை வாரி வழங்குகிறார், சமயோசித புத்திசாலித்தனம், தெளிவான சிந்தனை மற்றும் நல்லறிவு மூலம் தங்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை தங்கு தடையின்றி பெறுவீர்கள், எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கும், சந்தோசம் நிறைந்த வாழ்க்கை தங்களை தேடிவரும், அனைவரும் தங்களுக்கு மிகுந்த உதவிகளை வாரி வழங்குவார்கள், நினைக்கும் காரியங்கள் யாவும் வெற்றியை தரும், தடைபட்ட நற்காரியங்கள் யாவும் தொய்வின்றி நடைபெறும், எதிர்பாராத அதிர்ஷ்டம் தங்களின் வாழ்க்கையில், மிகப்பெரிய திருப்பு முனையை அமைத்து தரும், நல்லோர் சேர்க்கையும், நல்ல நண்பர்கள் உதவியும் தங்களின் எதிர்காலத்தை மிகுந்த பிரகாசமாக மாற்றும், குல தெய்வத்தின் அருளும், கடவுள் அனுகிரகமும் தங்களின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் வாரி வழங்கும், சிரமங்கள் யாவும் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும், குலம் காக்க நல்ல வாரிசு அமையும், குழந்தைகள் வழியில் இருந்து மகிழ்ச்சியும் முன்னேற்றமும் அபரிவிதமாக வந்து சேரும், உறவுகளின் உதவி ஆதரவு தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், சகலமும் வெற்றியை தரும்.

 குரு பகவான் தனது 5ம் பார்வையை பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்தை வசீகரிப்பது, ரிஷப லக்கின அன்பர்களுக்கு, ஆன்மீக வெற்றியை உறுதி செய்யும், சிறப்பான அறிவு திறன், ஆன்மீக பெரியோர் ஆசிர்வாதம், புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், சமூகத்தில் அந்தஸ்து மற்றும் மரியாதை, தனது சொல்லுக்கு நல்ல மதிப்பு, சிறந்த மனிதர்களின் அறிமுகம், அதன் வழியில் இருந்து வரும் லாபங்கள், புதிய கௌரவ பதவிகள், என சிறப்பான நன்மைகளை வாரி வழங்குவார், மேலும் சுய தொழில் செய்பவர்களுக்கு இது ஒரு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும் காலமாக கருதலாம், இதுவரை ஜீவனம் இன்றி சிரமபட்ட அனைவருக்கும் நல்லதொரு வாய்ப்புகள் வந்து சேரும், தெய்வீகத்தால் நன்மையையும் முன்னேற்றமும் உண்டாகும், ஆசிரிய பணியில் உள்ள அன்பர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் உண்டாகும், சுய தொழில் செய்யும் அன்பர்களுக்கு நல்லதொரு முன்னேற்றமும் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளும் வந்து சேரும், பொதுநலம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடும் அன்பர்களுக்கு யோகமிகுந்த காலமாக கருதலாம், பொது வாழ்க்கை மற்றும் அரசியலில் உள்ளவர்களுக்கு வெற்றிகள் மற்றும் பதவி தேடி வரும், பொதுமக்கள் ஆதரவு தங்களுக்கு அபரிவிதமாக வந்து சேரும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்தை வசீகரிப்பது, ரிஷப லக்கின அன்பர்களுக்கு, அளவில்லா அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், மேலும் தாம்பத்திய வாழ்க்கை சிறக்கும், திருமணம் ஆகாத அன்பர்களுக்கு திருமணம் தடையின்றி சிறப்பாக நடைபெறும், எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து வெற்றி நடை போடும் காலநேரம் இதுவாகும், சுய முயர்ச்சியும், தன்னம்பிக்கையும் தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை சிறப்பாக நிர்ணயம் செய்யும், மன நிம்மதியும், திருப்திகரமான மன நிறைவும் தங்களின் வாழ்க்கையில் மகிழ்சியை அதிகரிக்கும், தாங்கள் நினைக்கும் அனைத்து நற்காரியங்களும் எவ்வித தடையும் இன்றி நிறைவேறும், முதலீடுகளில் இருந்து நல்ல லாபமும், பெருந்தொகையும் வந்து சேரும், உறவுகள் வழியில் இருந்து உதவிகள் வந்து சேரும், மாற்று மதத்தினர் வழியில் இருந்து அதிர்ஷ்டங்கள் வந்து சேரும், புதிய சொத்துகள் மற்றும் வண்டி வாகனங்கள் வாங்க இதுவே சிறப்பான நேரமாக கருதலாம், மேலும் வெளிநாடுகளில் வேலை மற்றும் கல்வி சார்ந்த முயற்ச்சிகளுக்கு சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும், இந்த குரு பெயர்ச்சி மன நிறைவையும், சந்தோசத்தையும் வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை லக்கினம் எனும் 1ம் பாவகத்தை வசீகரிப்பது, ரிஷப லக்கின அன்பர்களுக்கு, உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியத்தை நல்குவார், எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும், நல்லறிவும், தெளிவான சிந்தனையும் தங்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும், புதிய திட்டமிடுதல்கள், முயற்ச்சிகள் யாவும் வெற்றியை வாரி வழங்கும், பேச்சு திறமை அதிகரிக்கும், தீர்கமான வாத திறமையும், சிறப்பான நிர்வாகத்திறனும் தங்களின் வருமான வாய்ப்பை உறுதி செய்யும், தன்னம்பிக்கை அதிகரிக்கும் விதமாக பல சுப நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும், அனைவரின் ஆதரவும் தங்களுக்கு அறிய பல நிகழ்வுகளை சிறப்பாக சாதிக்க வல்லமையை தரும், குறிப்பாக தன சேர்க்கை அபரிவிதமாக வரும் வாய்ப்பு உண்டாகும், மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் நீங்கும், வீண் மன பயம் தங்களை விட்டு அகலும், புதிய தைரியம் பிறக்கும், எதிர்பவர்கள் மூலமே தங்களுக்கு நன்மைகள் வந்து சேரும், மண் மனை வண்டி வாகன யோகம் உண்டாகும்  தங்களின் வாழ்க்கையில் சிறப்பான வெற்றிகளை தற்பொழுது 5ல் சஞ்சாரம் செய்யும் குருபகவான் வாரி வழங்குவார் என்பது மட்டும் நிச்சயம் வாழ்த்துகள்.

குறிப்பு :

ரிஷப லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 5,9,11,1ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

குட்டி சுக்கிரன் என் வாழ்க்கையை குட்டி சுவாராக்கி விட்டது என்கின்றனர் இது உண்மையா ?


ஐயா வணக்கம்

எனது வாழ்கை ஒரு போர்க்கலமாகி விட்டது , கேட்டால் குட்டி சுக்கிரன் என்கிறார்கள் வாழ்கையில் நான் எல்லா வித துன்பம், ஏக்கம் மற்றும் ஏமாற்றங்களை சந்தித்து விட்டேன், அடுத்த மாதம் காசி சென்று செட்டில் ஆகபோகிறேன், 10 வகுப்பில் சிறப்பான மானவன் ஆனால் தேர்வு முடிவில் வந்த மதிப்பெண் 240 என்ன செய்வதென்ரே தெரியவில்லை, எதிர்காலம் எப்படி அமையும் ?


குட்டி சாத்தான் கேள்வி பட்டு இருக்கின்றேன், அது என்ன குட்டி சுக்கிரன், சகோதரரே தங்களின் ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை ஒரு வகையில் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை நடத்துவது நல்லதே, இருப்பினும் தங்களது ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் அனைத்தும் ( 11 வீடுகள் ) பாதிப்பிற்கு ஆளாகி உள்ளது, மேலும் லாப மற்றும் அதிர்ஷ்டத்தை தரும் 11ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றுள்ளது கவனிக்க தக்கது, இதனால் தங்களின் தன்னம்பிக்கை குறையும், எடுக்கும் செயல்களில் அதிர்ஷ்டமின்மையால் வெற்றிகளை பெற பல தடைகள் உருவாகும், சுய அறிவு திறன் கடுமையாக பாதிக்கும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு அதிர்ஷ்டத்தை குறிக்கும் கும்பம் தங்களுக்கு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது உகந்தது அல்லவே, மேலும் தங்களது சுய ஜாதகத்தில் 1,6,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது இலக்கின வழியில் இருந்து அதிக மன உளைச்சல், மன நிம்மதி இழப்பு, சத்ரு ஸ்தான வழியில் இருந்து உடல் தொந்தரவு, எதிரிகள் தொந்தரவு மூலம் நிம்மதி இன்மை, விறைய ஸ்தான வழியில் இருந்து வீண் விரையங்கள், மன உறுதி இன்மை, குழப்பங்கள், அனைவராலும் தொந்தரவுகள் என்ற வகையில் இன்னல்களை வாரி வழங்கும்.

2,4,5,7,8,10ம் வீடுகள் அனைத்தும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, இரண்டாம் பாவக வழியில் இருந்து வருமானம் இன்மை, பேசும் பேச்சுகளால் இன்னல்கள், கல்வியில் தடை, என்ற வகையிலும், 4ம் பாவக வழியில் இருந்து சுக போக வாழ்க்கைக்கு தடைகளையும், வண்டி வாகன யோகமின்மை, ஜீவிப்பதர்க்கு சரியான வீடு இல்லாமல் இன்னலுறும் தன்மை, 5ம் பாவக வழியில் இருந்து பூர்வீகத்தில் சிறப்பான முன்னேற்றம் இன்மை, கற்ற கல்வி வழியில் இருந்து சிறப்பு இன்மை, சுய புத்திசாலித்தனம் ஜாதகருக்கு பயன்படாத நிலை, உதவி செய்ய யாரும் முன்வராத சூழ்நிலை என்ற வகையிலும், 7ம் பாவக வழியில் இருந்து வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் துன்பங்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து இழப்புகள், வீண் அவ பெயர்கள், பொதுமக்கள் ஆதரவு இன்மை, 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்புகள், மன நோய், விபத்து, பொருள் இழப்பு என்ற வகையிலும், 10ம் பாவக வழியில் இருந்து ஜீவன முன்னேற்றம் இன்மையும், நல்ல வேலை வாய்ப்பு அமையாதது, கௌரவம் சார்ந்த தொந்தரவுகள் என்ற வகையில் இன்னல்களை தரும்.

பள்ளி தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கததிர்க்கும் பட்ட படிப்பில் தோல்வியை சந்தித்ததிர்க்கும், அந்த நேரத்தில் நடைபெற்ற சனி புத்தி தங்களுக்கு 1,12,ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்தியதே காரணமாக அமைந்தது.

தங்களது சுய ஜாதகத்தில் பெரும்பாலான வீடுகள் பாதக ஸ்தானம், விறைய ஸ்தானம் மற்றும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாதிக்க பட்ட பாவக பலனையே ஏற்று நடத்துவதும் தங்களின் இன்னல்களுக்கு அதி முக்கிய காரணமாக அமைகிறது என்பதை கருத்தில் கொள்க, மேலும் இது சார்ந்த இன்னல்களில் இருந்து விடுபட, முறையான ஜாதக ஆலோசனை பெற்று நலம் பெருக.

குறிப்பு :

எவர் ஒருவருக்கும் சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே ஏற்றே நவகிரகங்கள் பலாபலன்களை வழங்குகிறது, தனிப்பட்ட நன்மை தீமையை தர  நவகிரகங்களுக்கு வல்லமை இல்லை என்பதை உணருவது அவசியமாகிறது, ஒரு ஜாதகர் யோக பலன்களை அனுபவிப்பதும், அவயோக பலன்களை அனுபவிப்பதும் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையின் அடிப்படையிலேயே என்பதை கருத்தில் கொள்வது நல்லது, ஒருவரின் பிறந்த நேரத்தின் அடிப்படையில் சுய ஜாதக பாவக வலிமை நிர்ணயம் செய்யபடுகிறது, பனிரெண்டு பாவகங்களுக்கு நவகிரகங்கள் வழங்கும் ஜீவா காந்த அலைகளின் அடிப்படையில் பலாபலன்கள் நடைமுறைக்கு வருகிறது என்பதே உண்மை, மேலும் நன்மையையும் தீமையும் அவரவர் செய்த வினைபதிவின் தாக்கத்தின் அடிப்படியில் நவகிரகங்கள் யோக அவயோக பலாபலன்களை நிகழ்த்துகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 6 அக்டோபர், 2016

பாதக ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் படும் அவஸ்தைகள் !


கேள்வி :

பாதக ஸ்தானம், பாதக ஸ்தான அதிபதி, பாதக ஸ்தான அதிபதி நின்ற பாவகம், பாதக ஸ்தான அதிபதியின் திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஒரு ஜாதகருக்கு அதிக அளவில் இன்னல்களை மட்டுமே வழங்குமா?

பதில் :

இது ஒரு சிறந்த கேள்வியாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, பாதக ஸ்தானம், பாதக ஸ்தான அதிபதி, பாதக ஸ்தான அதிபதி நின்ற பாவகம், பாதக ஸ்தான அதிபதியின் திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஒரு ஜாதகருக்கு அதிக அளவில் இன்னல்களை மட்டுமே தரும் என்பது முற்றிலும் சுய ஜாதக பாவக வலிமையை கருத்தில் கொள்ளாமல் கூறப்படும் வாதமாகவே கருதலாம், இதை பற்றி சற்று விளக்கமாக இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!

பாதக ஸ்தானம் :

சர லக்கினத்திற்கு 11ம் வீடும், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் வீடும், உபய லக்கினத்திற்கு 7ம் வீடும் பாதக ஸ்தானங்களாக அமையும், ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள், அந்த லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்துடன் எவ்விதத்திலும் சம்பந்தம் பெறவில்லை எனில் சம்பந்த பட்ட ஜாதகருக்கு பாதக ஸ்தானத்தால் எவ்வித இன்னல்களும் நடைமுறைக்கு வாராது, லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள், அந்த லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்துடன் ஏதாவது ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்ப்பட்ட வீடுகளோ தொடர்பு பெறுமாயின், தொடர்பு பெரும் வீடுகள் அமைப்பில் இருந்து பாதக ஸ்தான பலன்கள் நடைமுறைக்கு வரும்.

பாதக ஸ்தான அதிபதி :

ஒரு ஜாதகத்தில் பாதக ஸ்தான அதிபதியை நிர்ணயம் செய்ய சில விதி முறைகள் உண்டு, மேலும் பாதக ஸ்தான அதிபதி என்றாலே அவர் இன்னல்களை மட்டும் தருவார் என்று கருதுவது, சுய ஜாதக உண்மைக்கு முற்றிலும் புறம்பானதாக அமையும் என்பதை கருத்தில் கொள்க, சுய ஜாதகத்தில் பாதக ஸ்தான அதிபதி சுப தொடர்பு பெற்றால் அவரும் நன்மையை தரும் அருகதை உள்ளவராகிறார்.

பாதக ஸ்தான அதிபதி நின்ற வீடு :

பாதக ஸ்தான அதிபதி நின்ற பாவகம் அல்லது வீடு ஒருவருக்கு இன்னல்களை தரும் என்று கருதுவதும், ஜாதக உண்மைக்கு புறம்பானதாகவே கருத வேண்டி உள்ளது, பாதக ஸ்தான அதிபதி நின்ற வீடு சுப பாவக தொடர்பை பெற்றால் நிச்சயம் மிகுந்த நன்மைகளையே செய்யும் என்பதை கருத்தில் கொள்க.

பாதக ஸ்தான அதிபதியின் திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் :

பாதக ஸ்தான அதிபதியின் திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை இன்னல்களை தரும் என்று கருதுவதும் முற்றிலும் தவறான கருத்தே, ஏனெனில் பாதக ஸ்தான அதிபதியின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெற்று பலனை தந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பாதக ஸ்தானம் மற்றும்  வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து மிகுந்த யோக பலன்களே நடைமுறைக்கு வரும்.

மேற்கண்ட விஷயங்களை உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !


பாதக ஸ்தானம் :

மேற்கண்ட ஜாதகருக்கு பாதக ஸ்தானம் 11ம்  பாவகம் ஆகும், இந்த பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது 5,11 ம் வீடுகள் ஆகும், எனவே ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம், இதனால் ஜாதகர் 5,11ம் பாவக வழியில் இருந்து 2௦௦ சதவிகித இன்னல்களை சந்திக்கும் நிலையை தரும்.

பாதக ஸ்தான அதிபதி :

மேற்கண்ட ஜாதகருக்கு பாதக ஸ்தான அதிபதியாக பொறுப்பு வகிப்பவர் கேது பகவன் ஆவார், இவர் தனது திசையில் வலிமை பெற்ற லக்கினம் மற்றும் களத்திர பாவக பலனை ஏற்று நடத்துவது சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும் அமைப்பாகும்.

பாதக ஸ்தான அதிபதி நின்ற வீடு :

பாதக ஸ்தான அதிபதி நின்ற வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகமாகும், சுய ஜாதகத்தில் நான்காம் வீடு மாத்ரு ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த நன்மையை தரும் அமைப்பாகும், எனவே பாதக ஸ்தான அதிபதி நின்ற வீடும் ஜாதகருக்கு மிகவும் வலிமையான சுக போகங்களை வாரி வழங்குகிறது.

பாதக ஸ்தான அதிபதியின் திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் :

பாதக ஸ்தான அதிபதியான கேது பகவானின் திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் அனைத்தும் 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது வரவேற்க தக்க அம்சமாகும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது, ஆனால் இந்த ஜாதகத்தில் முழு சுபர் என்று ஜோதிடர்களால் வருணிக்கப்படும் குரு பகவான் 5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது குரு  திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் அனைத்திலும் பாதக ஸ்தான பலனை முழு வீச்சில் வழங்கும் என்பதை கவனிக்கவும், பாரம்பரிய முறைபடி எடுத்து கொண்டாலும் பாதக ஸ்தான அதிபதியாக கருதும் சுக்கிரன் தனது  திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் காலத்தில் விறைய ஸ்தானமான 12ம் பாவக பலனையே நடத்துகிறார், அதுவும் 3௦ சதவிகித இன்னல்களை மட்டுமே தருகிறார் என்பது கவனிக்க தக்கது, எந்த விதத்திலும் பாதக ஸ்தான பலனை தரவில்லை என்பதை சற்று ஆய்வு செய்தால் தெளிவாக தெரிய வரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - மேஷ லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "மேஷ" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                    

மேஷ லக்கினம் :

6ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷ லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் வழங்கு பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, மேஷ இலக்கின அன்பர்களுக்கு சத்ரு ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் எதிர்பாராத உடல் நல குறைவை தர வாய்ப்பு அதிகம் உண்டு, குறிப்பாக உள் உறுப்புகள், வயிறு சார்ந்த தொந்தரவுகள் அதிக அளவில் ஏற்பட கூடும், உணவு கட்டுபாடும், உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறையும் தங்களின் வாழ்க்கையில் வீண் விரையங்களை தவிர்க்க உதவும், கடன் சார்ந்த தொந்தரவுகள் அதிகம் சந்திக்கும் சூழ்நிலையை தரும், எதிரிகளினால் சிறு சிறு இன்னல்களும், காரிய தடைகளும் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, பயணங்கள் மூலம் எதிர்பாராத இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு, புதிய முயற்ச்சிகளை தவிர்ப்பது தங்களுக்கு உகந்த நன்மைகளை தரும், புதிய அறிமுகம் இல்லாத நபர்கள் மூலம் தங்களுக்கு மிகப்பெரிய இன்னல்கள் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளதால், எச்சரிக்கை உணர்வுடன் நடந்துகொள்வது தங்களுக்கு உகந்தது, கடன் வாங்குவது கொடுப்பது இரண்டும் தங்களுக்கு இனிவரும் ஒரு வருட காலம் இழப்புகளை தரலாம், புதிய சொத்துகள், வண்டி வாகனங்கள் வாங்கும் பொழுது, ஆவணங்களை சரி பார்த்து வாங்குவது சிறப்பு, உடல் நலம், கடன், எதிரி வகையில் இருந்து வரும் இன்னல்களை எதிர்கொள்ள ஆயத்தமாக இருப்பது தங்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும்.

 குரு பகவான் தனது 5ம் பார்வையை ஜீவன் ஸ்தானம் எனும் 10ம் பாவகத்தை வசீகரிப்பது, மேஷ லக்கின அன்பர்களுக்கு, ஜீவன ஸ்தான ரீதியான முன்னேற்றங்களை தந்த போதிலும், பொருளாதார ரீதியான சிக்கல்களையும், வருமான சிக்கல்களையும் வெகுவாக அதிகரிக்கும், புதிய சொத்துகள் மற்றும் வில்லங்கங்கள் தங்களின் மன நிம்மதி இழப்பையும், ஜீவன தடைகளையும் தர வாய்ப்பு உண்டு, எதிர்பார்த்த பதவிகள் கிடைக்க வாய்ப்பு குறைவு, அசையும் அசைய சொத்துகளை நிர்வகிப்பது தங்களுக்கு சற்று சிரமங்களை தர கூடும் என்பதால், சிறந்த நிர்வாகிகளை நியமிப்பது தங்களின் வேலை பளுவை வெகுவாக குறைக்கும், கௌரவ குறைவான செயல்களை தாங்கள் தவிர்ப்பதே நல்லது இல்லை எனில் வீண் அவமானங்கள் வந்து சேர வாய்ப்பு உண்டு, தொழில் ரீதியான மாற்று சிந்தனை தங்களின் வாழ்க்கையில் சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தரும், மேலும் நிதி நிர்வாகத்தில் தனிகவனம் செலுத்துவது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும், வேலை ஆட்கள்  பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் கூட்டாளிகளிடம் சுமுக போக்கை கடைபிடிப்பது தங்களின் இன்னல்களை வெகுவாக குறைக்கும், தெளிவான சிந்தனையும், சரியான திட்டமிடுதல்களும் இந்த ஒருவருட குரு பெயர்ச்சியில் அதிக அளவு தேவை படும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை விறைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிப்பது, மேஷ லக்கின அன்பர்களுக்கு, மிகுந்த மன உளைச்சல்களை வாரி வழங்கும். கவனமின்மையினால் சில எதிர்பாராத இழப்புகளையும் வீண் விரையங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், இல்லற வாழ்க்கையில் மனஸ்தாபங்களும் பிரிவு நிலையையும் தரக்கூடும், எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைமுறைக்கு வர அதிக தாமதமாகும், மன தைரியத்தை அதிக அளவில் தாங்கள் வளர்த்து கொள்வது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை பெற உதவும், ஆன்மீக வாழ்க்கை மற்றும் கோவில் வழிபடு மூலம் மிகுந்த நன்மைகளை பெற தங்களுக்கு அதிகாரம் உண்டு என்பதை நினைவில் கொள்க, மேலும் ஆன்மீக பெரியோர், மஹான்கள் சந்திப்பின் மூலம் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகள் தங்களுக்கு வந்து சேரும், பெரிய அளவிலான முதலீடுகளை தாங்கள் தவிர்ப்பது நல்லது, இல்லை எனில் தங்களுக்கு வரும் பேரிழப்பை தவிர்க்க இயலாது.

குரு பகவான் தனது 9ம் பார்வையை குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது,மேஷ லக்கின அன்பர்களுக்கு, வருமான வாய்ப்பை குறைக்கும், வரும் வருமானம் தங்களின் செலவுகளை கட்டுபடுத்த இயலாமல், கடன் பெற்று ஜீவனம் மேற்கொள்ளும் சூழ்நிலையை தரும், குடும்ப வாழ்க்கையில் அதிக அளவு சிக்கல்களையும் சிரமங்களையும் மேற்கொள்ளும் சூழ்நிலையை தரும், பேச்சு, வாக்கு ஆகியவை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் முடிந்த அளவிற்கு அனைவரிடமும் இனிமையாக பேசி காரிய சாதனை செய்து நலம் பெறுவதே தங்களுக்கு உகந்தது ஆகும், மேலும் திருமணம் மற்றும் சுப காரியங்களுக்காக சுப விறைய செலவுகளை தாங்கள் எதிர்கொள்ள வேண்டி வரும், உறவுகள் வழியில் இருந்து எதிர்பாராத செலவுகளும், இன்னல்களும் வர வாய்ப்பு உள்ளது, செய்வதை திருந்த செய்யுங்கள், மற்றவர்களின் அதரவு தங்களுக்கு இனிவரும் காலங்களில் அதிக அளவு தேவை படுவதால், அனைவரிடமும் அனுசரணையாக அனுசரித்து ஒற்றுமையாக வாழக்கையில் வரும் இன்னல்களை தவிர்த்து சிறப்பாக வாழுங்கள், வருமானம் பற்றிய சரியான திட்டமிடுதல்கள் மூலம்  இனிவரும்  எதிர்காலத்தை சிறப்பாக எதிர்கொள்ளுங்கள்.

குறிப்பு :

மேஷ லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 6,10,12,2ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696