வியாழன், 30 மார்ச், 2017

சத்ரு ( 6ம் வீட்டில் ) ஸ்தானத்தில் அமரும் லக்கினாதிபதி ஜாதகருக்கு மிகுந்த பாதிப்பை தருவாரா ?


சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள யோக பலாபலன்களை முழுவதும் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை சிறப்பாக அமைத்துத்தரும், குறிப்பாக சுபயோகங்களை ஜாதகர் பெறுவதற்கு யாதொரு தடைகளும் இருக்காது, சரியான நேரம் காலம் கூடி வரும்பொழுது யாருடைய உதவியும் இன்றி ஜாதகரே தன்னிறைவாக பெறுவார், எதிர்ப்புகள் இல்லாமல் சுப நிகழ்வுகள் யாவும் ஜாதகருக்கு தொய்வின்றி நடைபெறும், ஜாதகரின் நடவடிக்கையும் செயல்பாடுகளும் அனைவரும் மெச்சும்வண்ணம் இருக்கும், ஜாதகரும் வாழ்க்கையில் ஒழுக்கம், நேர்மை, சுய கட்டுப்பாடு மற்றும் பண்பாடு கொண்டவராக திகழ்வார், வாழ்வியல் நெறிமுறைகளை கடைபிடித்து வெற்றிகரமான யோக வாழ்க்கையை பெறுவார்.

சுய ஜாதகத்தில் லக்கினம் அல்லது லக்கினாதிபதி பாதிக்கப்படுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், குறிப்பாக ஜாதகரே தனது  வாழ்க்கை முன்னேற்றமின்மைக்கு காரணகர்த்தாவாக விளங்குவார், ஜாதகரின் மனம் எப்பொழுதும் எதிர்மறை எண்ணங்களால் நிரப்பப்பட்டு இருக்கும், சிந்தனையும் செயல்திறனும் அற்று வீண் கற்பனையும் மனபயமும் கொண்டவராக காணப்படுவார், வரும் எதிர்ப்புகளை சந்திக்க திறன் இன்றி மற்றவர் ஆளுமையின் கீழ் வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்மையை தரும், பொறுப்புகளை தட்டிக்கழிப்பதும், மற்றவர்கள் மீது காரணம் காட்டி தப்பித்துக்கொள்வதும், ஜாதகரின் வாழ்க்கையில் பல தோல்விகளை பெறுவதற்கு காரணமாக அமைந்துவிடும், வாழ்க்கையில் நேர் வழியை கடைபிடிக்காமல், மாற்றுவழியில் சென்று தனது வாழ்க்கைக்கு பொருத்தமில்லா செயல்களை செய்து இன்னலுறும் தன்மையை தரும், சுய ஜாதகத்தில் மற்ற பாவக வழியில் இருந்து வரும் யோகங்களையும் ஜாதகர் பெற இயலாமல் வீண் விரயங்களை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவார் என்பதில் இருந்தே லக்கினம் என்ற முதல் பாவகத்தின் வலிமை மற்றும் லக்கினாதிபதி பெரும் வலிமையின் அவசியம் நமக்கு  புரிய வரும்.

லக்கினம் என்பது மனிதனின் இதயம் போன்றது, இதயம் செயல் இழந்தால் எப்படி உயிர் இயக்கம் பெறாதோ ? அதைப்போன்றே லக்கினம் வலிமை குறைவது ஜாதகரின் இயக்கத்தை பாதிக்கும், சுய ஜாதகத்தில் பலவித யோகங்கள் இருப்பினும் அதனால் யாதொரு பயனும் ஜாதகருக்கு கிடைக்காது, யோகங்கள் தரும் பாவக வழியிலான உறவுகள் ஜாதகரை பயன்படுத்திக்கொண்டு நன்மைகளை பெறுவார்கள், ஜாதகரின் ஆசைகள் யாவும் நிராசையாக மாற அதிக வாய்ப்புகள் உண்டு, கீழ்கண்ட ஜாதகத்தை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : மீனம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 4ம் பாதம்

ஜாதகருக்கு லக்கினாதிபதி குரு, கன்னி ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் உள்ளார், லக்கினாதிபதி 6ல் மறைவு, லக்கினம் தொடர்பு பெறுவது விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் எனவே ஜாதகருக்கு லக்கினாதிபதியும் பாதிக்கப்பட்டு, லக்கினமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது, ஜாதகர் மனதளவில் எப்பொழுதும் கவலையும் போராட்டத்தையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையில் ஜீவித்துக்கொண்டு இருக்கின்றார், சிந்தனையும் செயல்பாடுகளும் நம்பிக்கை அற்ற தன்மையுடன் இருப்பதால் ஜாதகர் செய்யும் காரியங்கள் யாவும் தோல்வியை தருகின்றது, மற்றவர்களின் கடுமையான விமர்சனத்திற்கும் ஆளாகிறது, ஜாதகரின் வளரும் சூழ்நிலை சிறப்பாக அமையவில்லை, கல்வியில் தடை, வேலை வாய்ப்பில் தடங்கல், தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை தவிர்த்து, இன்னல்களை தரும் காரியங்களில் ஆர்வம் செலுத்தியதால், இன்று வரை ஜாதகர் ஓர் தன்னிறைவான பொருளாதார மேம்பாட்டை பெற இயலவில்லை, திருமண வாழ்க்கையிலும் தடை, ஜாதகருக்கு லக்கினாதிபதி குரு என்றாலும் அவர் சத்ரு ஸ்தானத்தில் வலிமை அற்று அமர்வதால் நல்ல ஞானத்தை வழங்கவில்லை, சாஸ்திர ஞானம் அற்ற நிலையையும், தனது உடல் நிலையில் அக்கறை கொள்ளாத தன்மையையும் தருவது வருத்தத்திற்கு உரிய விஷயமாகும்.

மேலும் தற்போழுது நடைமுறையில் உள்ள ராகு திசை ஜாதகருக்கு வலிமை அற்ற  5,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 5,8ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தருவதும், ராகு திசை ஜாதகருக்கு பருவ வயதில் வருவதும் ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதித்துகொண்டு இருக்கின்றது, குல தேவதையின் அருளாசி இன்மையும், ஜாதகருக்கு ஏற்படும் திடீர் இழப்புகளும் ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தருவது கவனிக்கத்தக்கது, மேலும் ஜாதகரின் 8ம்  பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியாக அமைவது ஜாதகரின் கூட்டாளி, நண்பர்கள் மற்றும் எதிர்பால் இன அமைப்பினரால் பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டு இருக்கின்றார், தேவையற்ற தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி உடல் நிலையும் கடுமையாக பாதித்துக்கொண்டு இருக்கின்றது, இந்த நிலை இப்படியே நீடித்தால் ஜாதகர் ராகு திசை இறுதியில் கடுமையான நெருக்கடிகளை  சந்திக்க வேண்டி வரும்.

ஜாதகருக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்பட ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது, அதாவது ஜாதகரை திருமணம் செய்துகொள்ளும் ஜாதகியின் சுய ஜாதகத்தில் அனைத்து பாவகங்களும் வலிமை பெற்று இருந்தால், ஜாதகரின் வாழ்க்கையிலும் சுபயோகங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது, அதற்க்கான சாத்தியக்கூறுகள் சிறிது உள்ளது என்று சொல்லலாம் ஏனெனில் சுய ஜாதகத்தில் ஜாதகர் 2ம் பாவக வழியில் ( குடும்பம் ) இருந்து மட்டும் நன்மைகளை பெரிய அளவில் பெற இயலும், இறுதி வரை குடும்ப வாழ்க்கையை ஜாதகர் சிதைக்காமல் வாழ்வது அவர் முன் உள்ள சவாலாக இருக்கும், மேற்கண்ட ஜாதகத்தில் லக்கினாதிபதி சத்ரு ஸ்தானத்தில் அமர்வது ஜாதகருக்கு பாதிப்படைந்து, ஜாதகருடன் சேர்பவரையும் பாதிப்படைய செய்யும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக