செவ்வாய், 31 ஜனவரி, 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் சிம்மம்!


சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும் இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

சிம்மம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஐந்தாம் ராசியான சிம்ம ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், சிம்ம லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், இறை அருளின் பரிபூர்ண கருணையையும், மிதம்மிஞ்சிய புத்திக்கூர்மையையும் ஒருங்கே அமைய பெற்று, இந்த பூவுலகில் அறிய பல சாதனைகளை புரியும் சிம்ம இலக்கின அன்பர்களுக்கு இதுவரை சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சரித்த சனி பகவானால், சுகபோகங்களை துறந்து, ஒருவிதமான மனசஞ்சலத்துடன் வாழ்க்கையை எதிர்கொண்டு வந்த தங்களுக்கு, புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கு சனிபகவானால் சிறு சிறு இன்னல்கள் வந்த போதிலும், பெரும்பாலான நன்மைகளும் நடைமுறைக்கு வரும்.

5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு, கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் சிறு தாமதங்களை தர கூடும், தங்களின் வெகுநாள் திட்டமிடுதல்கள் மிக மெதுவாக வெற்றிபாதையை நோக்கி நகர ஆரம்பிக்கும், வாரிசுகள் வழியில் இருந்து சிறு சிறு இன்னல்கள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு என்பதால் அவர்களது வாழ்க்கையில் சிறிது அக்கறை கொள்வது நலம் தரும், ஆன்மீகத்தில் நல்ல வெற்றி உண்டாகும், சுயமுன்னேற்றம் பெறுவதற்கு உண்டான நல்ல வாய்ப்புகள் வந்து சேரும், தனிப்பட்ட வாழ்க்கையில் சில ரகசியங்களை காப்பது தங்களுக்கும், தங்களது முன்னேற்றத்திற்கும் பேருதவிகளை தரும், மேலும் புகழ் அந்தஸ்து அதிகரிக்கும், மற்றவர்கள் விஷயங்களில் தாமாக முன்வந்து தலையீடு செய்வது தங்களுக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதால், தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பதே சாலச்சிறந்தது, தன்னம்பிக்கையை  அதிக அளவில் வளர்த்துக்கொள்வதும், எதையும் சமாளிக்கும் மனதைரியத்துடன் அனைத்தையும் எதிர்கொள்வது, தங்களுக்கு உகந்த நன்மைகளை வாரி வழங்கும், மேலும் தங்களது குல தேவதை வழிபாடு சகல நிலைகளில் இருந்து வெற்றி வாய்ப்பை வாரி வழங்கும், சனி மாற்றத்தால் வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும், தங்களது பெற்றோர் மற்றும் உறவுகளின் ஆலோசனையை பரிசீலனை செய்வது தங்களது வாழ்க்கையில் முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

10ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு, புதிய தொழில் வாய்ப்புகளையும், கைநிறைவான வருமான வாய்ப்புகளையும் வாரி வழங்குவார், மேலும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், இதுவரை திருமண தடைகளை சந்தித்து வந்த வரனுக்கும், வதுவுக்கும் பொருத்தமான துணை வந்து சேரும், இல்லற வாழ்க்கை இனிதே அமையும், உடல் ரீதியாக கடினமான இன்னல்களை சந்தித்து வந்த அன்பர்களுக்கு, சரியான மருத்துவரிடம் சென்று தனது உடல் தொந்தரவுகளுக்கு சரியான மருத்துவ சிகிசிச்சையை பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையும், உடல் சார்ந்த இன்னல்களில் இருந்து விடுபடும் யோகமும் உண்டாகும், வட்டி தொழில், நிதி நிறுவனம் சார்ந்த தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு, இனிவரும் காலம் மிகுந்த யோகத்தை தரும், பொருளாதார முன்னேற்றங்களை எதிர்பாராத அளவிற்கு வாரி வழங்கும், தொழில் ரீதியாக மிகப்பெரிய வெற்றிகளை சந்திக்கும் நேரமாக இந்த சனிபெயர்ச்சி விளங்கும் என்பதில் மாறு கருத்து இல்லை, எனவே சிம்ம லக்கின அன்பர்களுக்கு ஜீவன ரீதியான வெற்றி உறுதி என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

11ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு, அளவில்லா அதிர்ஷ்டங்களை தனது அறிவு திறன் மூலம் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்குவார், எதிர்ப்புகள் அனைத்தையும் கடந்து, வெற்றிகரமான வாழ்க்கையை பெறுவதற்கு உண்டான சந்தர்ப்பத்தை இனிவரும் காலங்களில் சனி பகவான்  தனது திருஷ்ட்டி மூலம் வழங்குகிறார், இனிவரும் காலங்களில் சிம்ம லக்கின  அன்பர்களுக்கு தன்னம்பிக்கை மிதமிஞ்சிய அளவில் பிரகாசிக்கும், தான்  நினைத்ததை சாதிக்கும் வல்லமை உண்டாகும், எதிர்கால திட்டமிடுதல்களுக்கு உண்டான வெற்றி வாய்ப்புகள் தேடிவரும், தனது சமயோசித அறிவு திறன்  மற்றும் புத்திசாலித்தனம் சிம்மலக்கின அன்பர்களுக்கு  சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், பொதுக்காரியங்களில் நல்ல மதிப்பு மரியாதையும், சமூக அந்தஸ்தும் அதிகரிக்கும், கமிஷன்,தரகு மற்றும் பங்கு வர்த்தக துறையில்  உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத லாபங்கள் வந்து சேரும், தனது அறிவு திறன் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகளை செய்வதற்கு உண்டான  சந்தர்ப்பங்கள் இயற்கையாக இவர்களுக்கு தேடிவரும், அதிகார பதவி,  மக்கள் ஆதரவு, எதிர்பாராத அதிர்ஷ்டம், உலக புகழ், பிரபல்ய யோகம் என சிம்ம லக்கின அன்பர்களுக்கு வாழ்க்கை முன்னேற்றத்தில் பல படிக்கட்டுகளை மிக எளிதாக கடக்கவும், அதன் வழியில் யோக வாழ்க்கையை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளையும் சனி பகவான்  சம சப்த 7ம் பார்வை வாரி வழங்கும், உண்மையில் சனி பகவானின் பார்வையின் மூலம் சகல யோகத்தையும் பெரும் அன்பர்கள் சிம்ம லக்கினத்தை, தனது ஜென்ம லக்கினமாக பெற்றவர்கள் என்றால் அது மிகையில்லை.

2ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் சிம்ம  லக்கின அன்பர்களுக்கு, அளவில்லா வருமான வாய்ப்புகளை தொடர்ந்து வாரி வழங்குவார், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையான தாம்பத்திய வாழ்க்கையை தரும், ஜாதகரின் வார்த்தைகளுக்கு சகல மரியாதையும் கிடைக்கும், மக்களை வசீகரிக்கும் யோகம் உண்டாகும், தனது வாக்கை தொழிலாக கொண்டவர்களுக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும் காலம் இது, தன்னிறைவான பண வசதி, குறுகிய காலங்களில் நல்ல தன சேர்க்கையை பெரும் யோகம், எதிர்ப்புகளை களைந்து வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை பெரும் யோகம், சகல விதங்களில் இருந்தும் மிகப்பெரிய நன்மைகளை பெரும் யோகம், தனது பரோபகார செயல்களால், சமூக மதிப்பு கூடும், ஜாதகர் ஈடுபடும் போட்டி பந்தயம், தேர்வு, தேர்தல் என அனைத்திலும் வெற்றிவாய்ப்பினை வாரி வழங்கும், பொதுநலம் சார்ந்து செயல்படும் காரியங்கள் யாவும் சிம்ம லக்கின  அன்பர்களுக்கு சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்து மற்றும் அரசியல் பதவிகளை வாரி வழங்கும், தெளிவான சிந்தனை, திட்டமிட்ட செயல்பாடுகள், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாத மன நிலை சிம்ம லக்கின அன்பர்களுக்கு இறை அருள் தந்த " நன்கொடை " என்றால் அது மிகை அல்ல, மேலும் தற்போழுது தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான், சிம்மலக்கின அன்பர்களுக்கு சகல விதங்களில் இருந்தும், 2ம் பாவக வழியில் இருந்தும் மிகுந்த யோக பலன்களையே வாரி வழங்குகின்றார் " வாழ்த்துக்கள் "

குறிப்பு :

 சிம்ம லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 5,10,11,2ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  5,10,11,2ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் சிம்ம லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


திங்கள், 30 ஜனவரி, 2017

திருமண வாழ்க்கையில் பரிபூர்ண யோகங்களை வாரி வழங்கும், பொருத்தமான வாழ்க்கை துணை தேர்வு !


" மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் " என்ற வார்த்தை உண்மையாக்க, சரியான வாழ்க்கை துணையை தேர்வு செய்வது இன்றைய இளைஞர்களுக்கு அவசியமாகிறது, இயற்கையாக சில அன்பர்களுக்கு இந்த வாய்ப்பு இறை அருளின் கருணையினால் வழங்கப்பட்டு விடுகிறது ( அதற்க்கு சம்பந்தப்பட்டவரின் சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருக்கும் என்பது வேறு விஷயம் ) இல்லற வாழ்க்கையை சிறப்பிக்க யோகம் நிறைந்த வாழ்க்கை துணையை தேர்வு செய்தவர்களுக்கு யாதொரு கவலையும் இல்லை, ஏனெனில் பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்ப்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும், கடவுளின் கருணையினால் தேடிவரும், பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்த அன்பர்கள், எதிர்கால வாழ்க்கையை பற்றி யாதொரு பயமும் இன்றி மிக சிறப்பாகவும், முழு யோகத்துடன் எதிர்கொள்ள இயலும், இன்றை சூழ்நிலையில் தனக்கு உகந்த வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் தவறிவிடும் தற்கால இளைஞர்கள் தமது வாழ்க்கையையே பணயம் வைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பது, மறுக்க இயலாத உண்மையாக உள்ளது.

இதுபோன்ற தவறான, பொருத்தமற்ற தேர்வுகளை தவிர்க்க " ஜோதிட சாஸ்த்திரம் " இன்றைய சந்ததியருக்கு 100% விகிதம் உதவுகிறது என்றால் அது மிகையில்லை, ஆனால் இன்றைய சந்ததியினர் " ஜோதிட சாஸ்த்திரம் " எந்த அளவிற்கு நம்புகின்றனர் என்பது கேள்விக்குறியே !, முழு மனதாக " ஜோதிட சாஸ்த்திரம் " எனும் கலையை நம்பும் அன்பர்களுக்கு நிச்சயம் சரியான தீர்வுகளையும், யோகம் நிறைந்த நல்வாழ்க்கையையும் வாரி  வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !

இன்றைய சிந்தனைக்கு தனது ஜாதக வலிமையின் மூலம், தனது கணவனுக்கு மிகுந்த சுபயோகங்களை நல்கும் ஓர் ஜாதகத்தை  சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! 


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : துலாம் 
நட்ஷத்திரம் : விசாகம் 3ம் பாதம் 

ஜாதகிக்கு பாவக தொடர்பு :

1,3,5ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு லக்கின வழியில் இருந்து நல்ல உடல் நலம் மற்றும் சிறந்த மனவலிமையை  தரும், அனைவருடன் சுமுக போக்கு, பெருந்தன்மையான குணம், மற்றும் கண்டிப்பு என்ற வகையிலும், 3ம் பாவக வழியில் இருந்து மிகுந்த செல்வ செழிப்பு , எதிரிகளை வெல்லும் ஆற்றல், நல்ல மனநிலை, சிறப்பான சிந்தனை, சத்தியத்தை மதித்தல், கல்வி வழியில் யோக வாழ்க்கை, சிறந்த வியாபார வல்லமை, கமிஷன் தொழில் மூலம் சிறப்பான முன்னேற்றம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் எதிர்பாராத வெற்றி மற்றும் லாபங்கள் வந்து சேரும் அமைப்பு, 5ம் பாவக வழியில் இருந்து குலதெய்வ அனுக்கிரகம், ஆய கலைகளில் தேர்ச்சி, குழந்தைகளிடம் அன்பு, எதிர்ப்புகளை மிக எளிதாக கையாளும் தன்மை, புதிய சூழ்நிலையில் ஆர்வம், எஜென்ஜி துறையில் நல்ல லாபம் என்ற வகையில் நன்மைகளை தரும்.

2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து சிறந்த குடும்ப வாழ்க்கையை, இனிமையான பேச்சு திறன், கைநிறைவான வருமான வாய்ப்பு, கணவருடன் பாசம் மற்றும் சகல வசதி வாய்ப்புகளையும் பெரும் யோகம் என்ற வகையிலும், 4ம் பாவக வழியில் இருந்து நிறைவான சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், பொருளாதார முன்னேற்றம், சகல வசதிகளும் கொண்ட வீடு, பண்ணை தோட்டம் என்ற வகையிலும், 8ம் பாவக வழியில் கணவருக்கு திடீர் அதிர்ஷ்டத்தையும், கணவரால் தனது வாழ்க்கையில் சிறப்பான யோகங்களையும், நீண்ட ஆயுளுடன் சுமங்கலியாக திகழும் சுப யோகத்தையும் ஜாதகி பெறுவார், 10ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு கவுரவம், தாய் வழியிலான யோக வாழ்க்கை, பாரம்பரியம் மிக்க விஷயங்களை கடைபிடிக்கும் யோகம், கவுரவ பதவி, கணவருக்கு தொழில் வழியிலான நன்மைகளை தரும் அமைப்பு என்ற வகையில் நன்மைகளை ஸ்திரமாக வாரி வழங்கும்.

7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 7ம் பாவக வழியில் இருந்து தனது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து சகல அதிர்ஷ்டங்களை பெரும் யோகம், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி, தனது  கணவருக்கு தேவையான விஷயங்களை சிறப்பாக செய்து கொடுக்கும் வல்லமை, தனது கணவருக்கு எந்த சூழ்நிலையிலும் நன்மையை தரும் யோகம், தாம்பத்திய வாழ்க்கையில் யாதொரு இன்னல்களும் இன்றி சுமுகமாக, சந்தோஷத்துடன் வாழும் யோகம், கூட்டு முயற்சியின் மூலம் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெரும் யோகம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் கொடிகட்டி பறக்கும் யோகம் என்றவகையில் நன்மைகளை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகி  பரிபூர்ண மஹாலக்ஷ்மி யோகம் நிறைந்தவர் என்பது உறுதியாகிறது, தனது கணவருக்கு சகல நிலைகளில் இருந்தும் அதிர்ஷ்டங்களை வாரி  வழங்குபவர் என்பது 100% விகிதம் உறுதி மேலும் தன்னம்பிக்கையும், முற்போக்கு சிந்தனையும் தன்னகத்தே கொண்டவர், மெய்பொருள் காண்பது அறிவு என்பதற்கு இணங்க, தனது அறிவு திறனால் சகல விஷயங்களையும் சீர்துக்கி பார்க்கும், சமயோசித அறிவாற்றல் பெற்றவர் என்பதுடன், அதிர்ஷ்டம் நிறைந்தவர் என்பது ஜாதகத்தில் உள்ள சிறப்பு அம்சம் ஆகும்.

6,9ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு, ரண சிகிச்சையும், மற்றவர்கள் விஷயத்தில் தலையீடு செய்தால் வீண் இன்னல்களையும் சந்திக்கும் நிலையை தரும்.

12ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, மனஅழுத்தம் மற்றும் மனப்போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

நடைபெறும் புதன் திசை ( 05/05/2012 முதல் 05/05/2029 வரை ) 

தற்போழுது நடைபெறும் புதன் திசை, ஜாதகிக்கு 7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, புதன் திசை முழுவதும் தனது  கணவருக்கு முழு வீச்சில் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கி கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது, மேலும் களத்திர ஸ்தான வழியில் இருந்தும், லாப ஸ்தான வழியில் இருந்தும் தன்னிறைவான யோக வாழ்க்கையை பெறுபவர்  என்பதும் உறுதியாகிறது, புதன் திசைக்கு பிறகு வரும் கேது மற்றும் சுக்கிரன் முறையே 11ம் பாவக பலன் மற்றும் 3ம் பாவாக பலனையே தனது திசைகளில்  ஏற்று நடத்துவது வரவேற்க தக்க அம்சமாகும், எனவே ஜாதகியும், ஜாதகியின் கணவரும் முழு அளவிலான யோக வாழ்க்கையை சிறப்பாக வாழும் தன்மையை தரும் என்பது மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள சுபயோக  அமைப்பாகும்.

குறிப்பு :

 பெண்களின் ஜாதகத்தில் இல்லற வாழ்க்கைக்கு சுபயோகங்களை நல்கும் 2,5,7ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று இருப்பதும், நடைபெறும் திசை மற்றும் எதிர்வரும் தசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும், மிகசிறந்த யோக வாழ்க்கையை தம்பதியருக்கு வாரி வழங்கும் என்பதில் ஐயம் இல்லை, மேலும் தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது அவரது ஜாதகத்தில் 2,5,7ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது என்பதை கருத்தில் கொண்டு தேர்வு செய்தால், காதல்  திருமணமோ, நிச்சயிக்க பட்ட திருமணமோ 100% வெற்றியை பெரும், இல்லற வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களும் வந்து சேரும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 28 ஜனவரி, 2017

இரசமணி அணிவதால் நாம் பெரும் நன்மைகள் மற்றும் யோக வாழ்க்கை !


ரசமணி உருவாகும் விதம் :

பல வருடங்களுக்கு முன் மலை உச்சியில் காணப்படும் கடும் பாறைகளுக்கு இடையே விழும் மழை துளியாகப்பட்டது , பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றார்ப்போல், வெப்பத்தில் சூடாகியும் , குளிரில் உறைந்தும் பாறை இடுக்குகளில் படர்ந்து இருக்கும் , இதனை முறைப்படி வைத்தியர்கள் அல்லது ரசம் சேகரிப்பவர்கள் சேகரித்து , முறையாக ஸ்புடம் இட்டு, மூலிகையால் பதப்படுத்தி சுத்தி செய்து மணியாக தயாரித்து, மனிதர்களுக்கு பயன்படும் விதமாக வழங்குகின்றனர் .

 இதில் ஸ்புடம் இடும் வகையில் 108 , 1008 , 10008 , 100008 , முறையில் வகை படுத்துகின்றனர் , அதற்க்கு ஏற்றார் போல் மணிகளின் தன்மை சக்தி வேறுபடும் , இதில் அவரவர் ஜாதக அமைப்பு , நாடி அமைப்பை பொறுத்து ரசமணிகளை முறைப்படி சுத்தி செய்து அணிந்து கொள்பவர்களுக்கு , கிழ்கண்ட  நன்மையான பலன்கள் நடைபெறும் .

ரசமணியை அணிந்துகொண்டால் சம்பந்தப்பட்டவரின் தேசஸ் அதிகப்படுகிறது  , மேலும் உடல்நிலையை சரிசமமாக பாதுக்ககிறது . உடல் வெப்பத்தை குறைத்து , உடலை சரியான நிலையில் சீராக வைத்து
  இருக்கிறது .

உடலில் ஓடும் ரத்த ஓட்டத்தை ஒரே சீராகவும், ரத்தத்தை சுத்தி செய்தும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பாகவும் வைத்திருக்கிறது , முக்கியமாக ரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயற்கையான வாழ்க்கைக்கு திரும்ப முடியும் .

உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு ரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக  இருக்கின்றன , உணவு உட்கொள்ளும் சக்தியும் நல்ல பசியெடுக்கும் தன்மையும் இதை அணிவதால் ஏற்ப்படும் .

  குண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த ரசமணிக்கு உண்டு . இதானால் சம்பந்தப்பட்டவர் நினைக்கும் அனைத்து நன்மைகளும் நடக்கும் , மேலும் விந்து சக்தியை கெட்டி படுத்தும்  தன்மை ரசமணிக்கு உண்டு , இதானால் சிந்தனை , புத்திசாலித்தனம் மிளிரும் .

எந்த நோயும் உடலை அவ்வளவு சீக்கிரம் பாதிக்காது , உடல்நிலை கெட்டு போக வாய்ப்பே இல்லை , தனது உடல் நோய்க்காக மருத்துவ செலவுகள் அதிகம் செய்பவர்கள் அனைவருக்கும் இந்த ரசமணி ஒரு வர பிரசாதம் .

வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி  இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு , மேலும் தோற்ற பொலிவுடன் அணிந்துகொல்பவரை வைத்திருக்கும் .

பேய் பிசாசு , காத்து , கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்க்கு உண்டு , மேலும் செய்வினை கருப்பு , பில்லி , சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின்   பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் ரசமணியை அணிவது நல்ல பலன்களை தரும்.

மேலும் வண்டி வாகனங்களில் செல்லும்பொழுது விபத்துகளை தடுக்கும் தன்மை ரசமணிக்கு நிச்சயம் உண்டு . மேலும் வருமுன் காட்கும் விழிப்புணர்வு மேலோங்கி நிற்கும் .

ஞாபக  சக்தியை மேலோங்கி நிற்கும் , தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியை தரும் , கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் .
சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பு தருவதில் ரசமணி மிகவும் பயன்படும் , இவர்களுக்கு அடிக்கடி  ஏற்ப்படும் நோய் நொடிகளில் இருந்து காப்பாற்றும்.

குறிப்பு :

ரசமணி சார்ந்த அனைத்து விபரங்களுக்கும், அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 
   

வியாழன், 26 ஜனவரி, 2017

திருமண வாழ்க்கையில் சிறிதும் நிம்மதியில்லை, எதிர்காலம் எப்படி இருக்கும்?


கேள்வி :
காதல் திருமண வாழ்க்கையில் சிறிதும் நிம்மதியில்லை, கணவருடன் நித்தம் சண்டை சஞ்சாரவு, எங்களது எதிர்காலம்  எப்படி இருக்கும், மணவாழ்க்கையில் பிரிவு நேருமோ ? ஆண் குழந்தை ஒன்று உள்ளது, 
எங்களது மூவரின் ஜாதகம் எப்படி உள்ளது?

பதில் : 

சுய ஜாதக பாவக வலிமை உணராமல், விருப்பத்தின் அடிப்படையில் காதல் திருமணம் செய்வது, இன்னல்களை தருவதில் வியப்பில்லை, பெரும்பாலும் சுய ஜாதகம் வலிமையாக இருக்கும் பொழுது காதல் வாழ்க்கை கசப்பதில்லை, சுய ஜாதகம் வலிமை அற்று காணப்படும் பொழுது தாம்பத்திய வாழ்க்கையில் மிகுந்த இன்னல்களை தருகின்றது, சுய ஜாதகம் கடுமையாக பாதிக்கப்படும் பொழுது, காதல் திருமண வாழ்க்கை கடந்து, இல்லற வாழ்க்கையில் பிரிவை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது, மேற்கண்ட தம்பதியர் விருப்பமனம் முடித்தவர்கள், இவர்களது சுய ஜாதக வலிமையையும், இனிவரும் எதிர்கால வாழ்க்கையை பற்றியும், இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

ஜாதகி 

லக்கினம் : கடகம் 
ராசி : சிம்மம் 
நட்ஷத்திரம் : மகம் 2ம் பாதம் 

ஜாதகிக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

3ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்,
6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையாகும்.

ஜாதகிக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :
1,7,10,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும்.
2,4,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களையும்.
9,12ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, மேற்கண்ட பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும் தரும்.

தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை தரும் பலன்கள் ( 11/11/2016 முதல் 11/11/2026 வரை ) 

ஜாதகிக்கு கடந்த சூரியன் திசை 9,12ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தந்துள்ளது, ஆனால் தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை 3ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவது வரவேற்கத்தக்க விஷயமாகும், மேலும் ஜாதகிக்கு சந்திரன் திசை சிறப்பான நன்மைகளை தரும், இனிவரும் சந்திரன் திசை 10 வருட காலமும் மிகுந்த யோகங்களை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.


ஜாதகர் 

லக்கினம் : கன்னி 
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 3ம் பாதம் 

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்,
4,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்,
5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் ஆகும்.

ஜாதகருக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்,
12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் மேற்கண்ட பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும்.

தற்போழுது நடைபெறும் சுக்கிரனை திசை தரும் பலன்களை : ( 07/11/2012 முதல்  07/11/2032 வரை )
தற்போழுது நடைபெறும் சுக்கிரனை திசை ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாகருக்கு மேற்கண்ட பாவக வழியிலான நன்மைகளை, 100% சதவிகிதம் வாரி வழங்குகிறது.

தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் மிகவும் வலிமையான ஜாதகம் கணவரின் ஜாதகமே, இதில் மனைவியின் ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு உகந்தது அல்ல, மேலும் ஜாதகி தனது ஜாதக வலிமையை உணர்ந்து, தனக்கு வாய்த்த கணவர் யோகமானவர் என்பதை கருத்தில் கொண்டு, சிறப்பாக இல்லற வாழ்க்கையை எதிர்கொள்வதே நல்லது, ஏனெனில் கணவரினால் ஜாதகிக்கு யாதொரு பாதிப்பும் இல்லை, ஜாதகி மட்டும் தனது நாவை அடக்கி குடும்ப வாழ்க்கையை சிறப்பாக மேற்கொள்வதே ஜாதகிக்கு சிறந்தது, இல்லை எனில் ஜாதகியின் சுய ஜாதக வலிமை இன்மை, இல்லற வாழ்க்கையில் துன்பத்தை தந்து, பிரிவை நோக்கி நகர்த்தி செல்லும், இருவரது ஜாதகத்திலும் 2ம் வீடான குடும்ப  ஸ்தானம் வலிமை இழப்பது, தேவையற்ற வாக்குவாதத்தை வளர்க்கும் என்பதால், தனது காதலுக்கு மரியாதை செய்து இருவரும் நாவடக்கத்துடன் இல்லற வாழ்க்கையை இனிமையாக நடத்துவதே சாலச்சிறந்தது, மேலும் தற்போழுது இருவருக்கும் நடைபெறும் திசைகளான, சந்திரன் மற்றும் சுக்கிரன் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவது, தாம்பத்திய வாழ்க்கையில் சகல யோகங்களையும் தரும்.

 மேலும் இருவரது சுயஜாதகத்திலும் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது, தனது ஆண் குழந்தை வழியில் இருந்து மிதமிஞ்சிய யோக பலன்களை வாரி வழங்கும், இதனால் குழந்தையின் பொருட்டாவது தங்களுக்கு இல்லற வாழ்க்கையில் பிரிவு வர வாய்ப்பு இல்லை என்பதை கருத்தில் கொண்டு, வாழும் வாழ்க்கையை சிறப்பு மிக்கதாக மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு :

மேற்கண்ட தம்பதியரின் ஜாதகத்தில் மனைவியின் ஜாதகம் வலிமை இன்றி இருந்த போதிலும், கணவரின் ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பது இல்லற வாழ்க்கையில் பிரிவை தாராது, மேலும் கணவர் எந்த சூழ்நிலையிலும் தனது வாழ்க்கை துணையை கைவிடமாட்டார் என்பது அவரது ஜாதக வலிமையில் இருந்து தெரிய வருகிறது, எனவே வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் ஒவ்வொருவரும், குறிப்பாக காதல் திருமணம் செய்துகொள்ள நினைக்கும் அனைவரும், தனது ஜாதக வலிமையை விட, தனக்கு வாழ்க்கை துணையாக வர இருக்கும் வரன் அல்லது வதுவின் சுய ஜாதகம் மிக மிக வலிமை மிக்கதாக தேர்வு செய்துவிட்டால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு யாதொரு குறையும் இருக்காது என்பதனை " ஜோதிடதீபம் " இங்கே அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறது.

வாழ்க வையகம், வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 25 ஜனவரி, 2017

திருமணபொருத்தம் : சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையில் திருமண பொருத்தம் காணும் முறை !


திருமண பொருத்தம் காண்பதில் சுய  ஜாதகத்தில் பாவக வலிமையின் அடிப்படையில் காண்பது, தாம்பத்திய வாழ்க்கையில் சகல நலன்களையும் தரும், குறிப்பாக தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும், 2ம் பாவகம் வலிமை பெறுவது இனிமையான குடும்ப வாழ்க்கை மற்றும் பொருளாதார முன்னேற்றத்தையும், 5ம் பாவகம் வலிமை பெறுவது சிறந்த புத்திகூர்மை மற்றும் நல்ல புத்திர பாக்கியத்தையும், 7ம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியர் இருவருக்கும் நல்ல தாம்பத்தியம் மற்றும் சமூக அந்தஸ்த்தையும், 8ம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியருக்கு நீண்ட ஆயுள் மற்றும் ஒருவர் வழியில் ஒருவர் பெரும் பொருளாதார முன்னேற்றத்தையும், 12ம் பாவகம் வலிமை பெறுவது இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் திருப்திகரமான தாம்பத்திய வாழ்க்கையையும் தரும், எனவே தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும் மேற்கண்ட 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது, வெற்றிகரமான இல்லற வாழ்க்கையை நல்கும்.

கீழ்கண்ட வரனுக்கும், வதுவுக்கும் சுய ஜாதக ரீதியாக பாவக வழியிலான பொருத்தம் எத்தனை சதவிகிதம் உள்ளது என்பதனை, இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

வரன் ஜாதகம் 


லக்கினம் : துலாம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 2ம் பாதம்

பாவக தொடர்புகள் :

 2,5ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் உள்ளது.
7ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தரும் அமைப்பில் உள்ளது.
8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது.

மேலும் தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது, ராகு திசையில் எதிர்வரும் சுக்கிரன் புத்தி ( 21/02/2017 முதல் 21/02/2020 வரை ) 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது சிறப்பான அம்சமாகும். எனவே ஜாதகர் சுக்கிரன் புத்தியில் திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை எடுப்பது சால சிறந்தது, விரைவாக இல்லற வாழ்க்கையை அமைத்து தரும்.

வது ஜாதகம் 


லக்கினம் : சிம்மம் 
ராசி : சிம்மம் 
நட்ஷத்திரம் : பூரம் 2ம் பாதம் 

2,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது.
5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் இருப்பது சிறப்பான யோகங்களை தரும்.
7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் இருப்பது தாம்பத்திய வாழ்க்கையில் சிறப்பை தரும்.

மேலும் தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி  ஜாதகிக்கு 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை வழங்கி கொண்டு இருக்கின்றது, அடுத்து வரும் ராகு புத்தி ( 28/05/2017 முதல் 16/06/2018 வரை ) ஜாதகிக்கு வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாகும்.

வரனின் ஜாதகத்தில் 6,7,8,12ம் வீடுகள் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது, வதுவின் ஜாதகத்தில் 2,4,6,8,10,12ம் வீடுகள் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒருவர் ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவகம்  மற்றோருவர் ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்று இருப்பது பரஸ்பர தாம்பத்திய வாழ்க்கையில் நன்மைதரும் அமைப்பாகும், மேலும் வரனுக்கு எதிர்வரும் சுக்கிரன் புத்தியும், வதுவுக்கு எதிர்வரும் ராகு புத்தியும் சிறப்பான நன்மைகளையே வழங்குவது, மிகுந்த யோகத்தை தாம்பத்திய வாழ்க்கையில் வாரி வழங்கும்.

தற்போழுது வரனுக்கு நடைபெறும் ராகு திசை வலிமையற்ற 12ம் பாவக பலனையும், எதிர்வரும் ராகு திசை வதுவுக்கு வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது, தாம்பத்திய வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், ஏக நேரத்தில் இருவருக்கும் நடைபெறும் திசை அவயோக பலனை வழங்கினால் மட்டுமே, தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்களை தரும்.

வரனுக்கும், வதுவுக்கும் எதிர்வரும் திசைகளான குரு மற்றும் ராகு திசைகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது, சிறப்பான தாம்பத்திய வாழ்க்கையை நல்கும் என்பதினால், அவர்களின் விருப்பப்படி திருமணம் நடத்தி வைக்கலாம், பொருத்தமான ஜாதக அமைப்பே " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

மனைவியின் ஜாதகம் வலிமை பெற்று இருப்பது கணவனுக்கு யோகத்தை தருமா ?



 வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமை பெற்று இருப்பது தாம்பத்திய வாழ்க்கையில் நன்மை சேர்க்கும் அமைப்பாகும், தனக்கு அமைந்த மனைவியின் ஜாதகம் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யோகங்களை தருவதில் தவறுவதில்லை, அதே சமயம் மனைவியின் ஜாதகம் வலிமை அற்று இருப்பின் அது சார்ந்த இன்னல்களையும் கணவனுக்கு தரும் என்பதை கவனத்தில் கொள்வது நலம், எனவே தனக்கு அமையும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வதற்கு முன்பு, அவரது ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசை,புத்திகள், எதிர்வரும் திசாபுத்திகள் தரும் பலாபலன்களை கருத்தில் கொண்டும் தேர்வு செய்வதே சாலச்சிறந்தது, கீழ்கண்ட ஜாதகம் தனக்கு வாழ்க்கை துணையாக அமைந்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமா? என்ற கேள்விக்கு உண்டான பதிலை சம்பந்தப்பட்ட ஜாதக வழி ஆய்வு மூலம், சிந்தனைக்கு எடுத்த்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : சிம்மம் 
ராசி : சிம்மம் 
நட்ஷத்திரம் : பூரம் 2ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியிலான நன்மைகளை ஜாதகியின் வாழ்க்கையில் வாரி வழங்கும்.

3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியிலான நன்மைகளை ஜாதகியின் வாழ்க்கையில் 
ஸ்திரமாக, அதிர்ஷ்டத்துடன் வழங்கும்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள்.

2,4,6,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியிலான இன்னல்களை ஜாதகியின் வாழ்க்கையில் ஸ்திரமாக தரக்கூடும், குறிப்பாக திருமண வாழ்க்கையில் தடை தாமதங்களை தரும்.

தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை தரும் பலன்கள் :

தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி  ஜாதகிக்கு 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை தருவது ஜாதகிக்கு உகந்தது அல்ல, மேலும் அடுத்து வரும் ராகு புத்தி வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாகும், எனவே ஜாதகிக்கு 28/05/2017 தேதிக்கு மேல் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும். 

எதிர்வரும் ராகு திசை தரும் பலன்கள் :

எதிர்வரும் ராகு திசை முழுவதும் ஜாதகிக்கு 3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, முழு வீச்சில் களத்திர ஸ்தான பலனை தருவது, ஜாதகிக்கும் ஜாதகியின் வாழ்க்கை துணைக்கும் அபரிவிதமான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், மேலும் ஜாதகியின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை குறிக்கும் 11ம் வீடாக அமைவது, தம்பதியருக்கு அறிவார்ந்த செய்கையினாலும், புத்திகூர்மையினாலும் ஸ்திரமான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், செவ்வாய் திசையில் தம்பதியர் சிறிது இன்னல்களை சந்தித்த போதிலும், ராகு திசை பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும்.

திருமண வாழ்க்கை :

ஜாதகிக்கு 2,12ம் வீடுகள் பாதிக்கப்படுவது இல்லற வாழ்க்கையில் தடை தாமதத்தை தந்த போதிலும், 1,5,7,9,11ம் பாவகங்கள் மிகவும் வலிமையாக இருப்பது சிறப்பான இல்லற வாழ்க்கையை தரும், ஜாதகி வருமானம், தனது வார்த்தைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும், களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது தனது கணவனுக்கு யோகத்தை தரும் அமைப்பாகும், எனவே ஜாதகியை மணந்து கொள்ளும் வரனுக்கு யோக வாழ்க்கையே கிட்டும், மேலும் தனது வாழ்க்கை துணையுடனான இணக்கம், ஜாதகிக்கு வாழ்க்கையில் இறுதிவரை வரும் என்பதால், ஜாதகியின் கணவனுக்கு நன்மையே, மேலும் எதிர்வரும் ராகு திசை ஜாதகிக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது யோகம் மிகுந்த இல்லற வாழ்க்கையை தரும். 

குறிப்பு :

ஜாதகிக்கு எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறாமல் இருப்பதே ஓர் யோகம்தான், மேலும் சுய ஜாதகத்தில் 1,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், ஜாதகிக்கு வரும் கணவனுக்கு 100% விகித யோக பலன்களை வாரி வழங்கும், என்பதால் இது ஒரு வலிமை பெற்ற யோக ஜாதகமே, இதனால் ஜாதகியின் கணவரும் சுபயோக பலாபலன்களை நிச்சயம் பெறுவார்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 24 ஜனவரி, 2017

வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் பெரும் சுபயோக வாழ்க்கை !


சுயஜாதக பொதுபலன்கள்

தனது குழந்தையின் எதிர்காலத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுகோள் வைத்த தகப்பனாருக்கு, இறை அருள் கொடுத்த அதிர்ஷ்டமிகு வாரிசு என்று சொல்வதில் "ஜோதிடதீபம்" பெருமை கொள்கிறது, மேலும் குழந்தையின் ஜாதகத்தை பற்றியும், அதில் உள்ள சுபயோக பலன்கள் பற்றியும், இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! தோன்றின் புகழோடு தோன்றுக என்ற குறளுக்கு ஏற்ப யோக வாழ்க்கையை பெரும் சிறந்த ஜாதகம் என்பதை சொல்வதற்கு " ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.

லக்கினம் : தனுசு
ராசி : மகரம்
நட்சத்திரம் : திருவோணம் 3ம் பாதம்



ஜாதகத்தில் மிக மிக வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,5,6,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, இலக்கின பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிக லாபம், செல்வ செழிப்பு, பரஸ்பர உதவி, நோய்குணமடைதல், வருமுன் காப்பது, எண்ணம் ஈடேறுதல், திருமணத்தால் யோகம், நல்ல புத்திர பாக்கியம் என்ற வகையில் நன்மைகளை தரும், ஜாதகரின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், நல்ல உடல் ஆரோக்கியம், சிறந்த மன நலம், தெளிவான புத்திகூர்மை, அனைத்தையும் முற்போக்கு சிந்தனையுடன் கையாளும் வல்லமை, எதிர்ப்புகளை சிறப்பாக கையாளும் வல்லமை, நல்ல வளரும் சூழ்நிலை, நல்லவர் சேர்க்கை மூலம் வாழ்க்கையில் சகல நலன்களையும் பெரும் யோகம், எந்த சூழ்நிலையிலும், தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை கைவிடாத மன நிலை என வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை தங்குதடையின்றி பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை பெரிய அளவில் உணரும் வாய்ப்பை தரும் குறிப்பாக குல தேவதையின் அருள் பரிபூர்ணமாக கிடைக்க பெறுவார், லாட்டரி, பங்கு சந்தையில் நல்ல லாபமும் திடீர் அதிர்ஷ்டமும் உண்டாகும், தனது புத்திசாலி தனத்தால் தனக்கு வரும் யோகங்களை தக்கவைத்துகொள்ளும் வலிமையை ஜாதகர் இயற்கையாகவே பெற்று இருப்பார், மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது, தனது குடும்பம் குழந்தைகள், வாழ்க்கை துணை என அனைவரிடத்திலும் அன்பு பாராட்டும் யோகம் உண்டாகும், இனிமையான வாழ்க்கைக்கு உண்டான அனைத்து திட்டமிடுதல்களும் ஜாதகரிடம் எப்பொழுதும் கைவசம் இருக்கும், மிதம் மிஞ்சிய அறிவு திறன் ஜாதகரின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் பெற்று தரும்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர், அனைத்திலும் சுலப வெற்றிகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும், லாட்டரி பங்கு சந்தையில் அடிகடி லாபம் பெரும் யோகத்தை நல்கும், நல்ல வேலையாட்கள் அமைவார்கள், உடல் நலனில் மிகுந்த அக்கறை எடுத்துகொள்வார்கள், குருகியகால வெற்றிகள் இவர்களுக்கு அதிக புத்துணர்ச்சியை வாரி வழங்கும், மற்றவர்கள் தோல்வியுறும் துறையில் இவர்களின் வெற்றி சிறப்பாக பேசப்படும், எதிர்கால வாழ்க்கைக்கு உண்டான சேமிப்புடன் மிக சிறப்பான யோக வாழ்க்கையை பெறுவார்கள்.

7ம் பாவக வழியில் இருந்து சிறப்பான நண்பர்கள் சேர்க்கை, வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கை, பொதுமக்கள் ஆதரவு, வாழ்க்கை துணையின் உதவிகளை பரிபூர்ணமாக பெரும் யோகம், கூட்டு தொழில் வழியில் இருந்து வரும் நிறைவான லாபம், தனிப்பட்ட ஆசைகளை பரிபூர்ணமாக பெரும் யோகம், வேற்று மதத்தினர், வேற்று இனத்தினர் ஆதரவை பெறுதல், மக்கள் செல்வாக்கின் மூலம் அரசியல் பாதவிகளையும், கௌரவ பதவிகளையும் அலங்கரிக்கும் யோகம், தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம், வாழ்க்கை துணைக்கு நல்ல யோகம், என ஜாதகர் களத்திர ஸ்தான வழியில் இருந்து சகல யோகங்களையும் பெறுவார்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர், மனதில் நினைத்த எண்ணங்கள் யாவும் நிறைவேறும் வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பெரும் அதிர்ஷ்டத்தை குறிக்கும், தனது சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கைக்கு குறைவிருக்காது, மேலும் புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை உண்டாகும், வழக்குகள் மூலம் சொத்து சேர்க்கை, எதிர்ப்பவர்கள் வழியில் இருந்து வரும் லாபம், தன்னிறைவான பொருளாதார வசதி, எதிர்பாராத அதிர்ஷ்டம் மற்றும் சொத்து சேர்க்கை, பொதுமக்கள் ஆதரவு வழியில் இருந்து வரும் வருமானம், அரசியலில் புகழ், அந்தஸ்து மற்றும் பதவிகள் தேடி வருதல் என ஒரு முழுமையான யோக வாழ்க்கை உண்டாகும், ஜாதகருக்கு குறை ஒன்றும் இல்லை என்ற நிலையை தரும், முதலீடுகளில் அதிக லாபம் கிடைக்கும், நீண்ட ஆயுள் உண்டு நல்ல ஆரோக்கியம் உண்டு , மேலும் ஜாதகர் ஆயுள் பாவக வழியிலான அதிர்ஷ்டங்களை தங்கு தடையின்றி பெறுவார்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நிறைவான அதிர்ஷ்டசாலியாக திகழ்வார், அனைத்திலும் லாபமும், நல்ல குணமும் ஜாதகருக்கு தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை வாரி வழங்கும், எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை குறையாத யோக வாழ்க்கையை தரும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையும், லட்சியங்களில் வெற்றியும் உண்டாகும், எதிர்ப்புகள் அனைத்தும் இவர்களுக்கு சாதகமாக மாறும், தனது சரியான திட்டமிடுதல்கள் மூலம் சகல நன்மைகளையும் தங்கு தடையின்றி பெறுவார்கள், எதிர்கால வாழ்க்கையை வெற்றிகரமாக எதிர்கொள்வார்கள், எந்த சூழ்நிலையிலும் வாக்கு தவறாத நேர்மையானவர்களாக திகழ்வார்கள்.

2,3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு  பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு கூட்டாளிகள் மூலம் அதிக லாபம், அதிர்ஷ்டம் உண்டாகும், கான்ராக்ட் தொழில் வழியில் அதிக லாபமும், ஏஜென்சி மூலம் கை நிறைவான வருமானமும் உண்டாகும், வழக்குகள் மூலம் பெரும் சொத்து சுகம் சேரும், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வருமான வாய்ப்புகளை தந்துகொண்டே இருக்கும், நிலையான தொழில் நல்ல வருமானம் ஆகியவை சிறப்பாக அமையும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், வாக்கு வன்மையும், இனிமையான பேச்சு திறனும் தங்களுக்கு சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் தரும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் ஆசைகள் மற்றும் லட்சியங்கள் நிறைவேறும், சிறந்த வியாபர ஆளுமையை தரும், நிறைவான வாகன வசதி, பண்ணை மற்றும் விவசாயத்தில் நல்ல லாபம் உண்டாகும், கை நிறைவான வருமானம் மூலம் அதிக சொத்து சுக சேர்க்கை உண்டாகும், உண்மை சத்தியத்தில் ஈடுபாடும், ஜோதிடத்தில் புலமையும், கலை துறையில் தேர்ச்சியும், கணிதத்தில் தனி திறமையும் உண்டாகும், ஜாதகருக்கு திருமணத்திற்கு பிறகு யோக வாழ்க்கை உண்டாகும், மதிப்புக்கு உரிய செயல்களால் உலக புகழ் பெரும் வாய்ப்பு ஏற்படும், விளையாட்டில் அதித ஆர்வம் உண்டாகும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சிறந்த அறிவாளி என்பதும், பயணங்களில் அதீத ஆர்வம் கொண்டவர் என்பதும் தெளிவாகிறது, இறை அருளின் கருணை ஜாதகர்  எங்கு சென்றாலும் காத்து நிற்கும், பல ஆன்மீக பெரியோர்களின் ஆசியும், பல திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகமும் ஜாதகருக்கு இயற்கையாகவே ஏற்படும், ஆராய்ச்சி மனப்பான்மையும், உயர் கல்வி, பட்டைய படிப்பில் சிறந்து விளங்கும் யோகத்தை தரும், புலனுக்கு அப்பாற்பட்ட அறிவு திறனும், மறைபொருள் உணரும் சக்தியும், ஜாதகருக்கு இயற்கையாகவே அமைந்து இருக்கும்.

4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 4ம் பாவக வழியில் இருந்து நிறைவான சொத்து சுக சேர்க்கையும், அதிக அளவிலான வண்டி வாகன யோகமும் உண்டாகும், மேலும் தொழில் ரீதியான சிறப்பான முன்னேற்றம் உண்டாகும், தாய் வழியிலான ஆதரவு, பொருட் சேர்க்கை உண்டாகும், நற்பெயரும் புகழும் தேடிவரும், சகல நிலைகளிலும் ஆள் வசதி, மக்கள் ஆதரவு, பெரிய சொத்துக்களை நிர்வகிக்கும் யோகம், அரசு வழியிலான ஆதாயம் மட்டும் கவுரவம் உண்டாகும், அரசியலில் சிறப்பான வெற்றி, சமூக அந்தஸ்து ஜாதகரை தேடி வரும், பரிபூர்ண சுகபோக வாழ்க்கை ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும் தரும்.

1௦ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நல்ல அந்தஸ்தை பரிபூர்ணமாக பெறுவார், நண்பர்கள் உதவி மூலம் தொழில் துறையில் வெற்றி, கூட்டு முயற்சி மூலம் அதிக லாபம், நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம், தன்னிறைவான பொருளாதர வசதி வாய்ப்புகள், அதிக அளவிலான சொத்து சுக சேர்க்கை, அனைத்து தரப்பினரிடமும் அன்பாக பழகும் வாய்ப்பு, எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றி வாய்ப்பு, எதிர்ப்புகளை களைந்து வெற்றிநடை போடும் யோகம், சுய தொழில் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை பெறுவதற்கு உண்டான சந்தர்ப்பங்கள் ஜாதகரை தேடிவரும் யோகம் என்ற வகையில் ஜீவன ரீதியான நன்மைகளை வாரி வழங்கும்.

12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், நிறைய செலவு, திடீர் இழப்பு, அனைவராலும் தொல்லை, தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்கள், நல்ல உறக்கம் இன்மை, அயன சயன சுகம் இன்மை, எதிர்பாராத விபத்து என கடுமையான இன்னல்களை தரும்.



தற்பொழுது நடைபெறும் சந்திரன் திசை ஜாதகருக்கு 2,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவது வரவேற்க தக்க அம்சமாகும், மேலும் அடுத்து வரும் செவ்வாய் திசையும் ஜாதகருக்கு 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவதும் யோக பலன்களையே தரும், மேலும் இந்த காலகட்டத்தில் ஜாதகர் பால்ய வயதில் இருப்பதால், சிறப்பாக வளரும் சூழ்நிலை, ஆன்மீகத்தில் ஈடுபாடு, கல்வியில் சிறந்த தேர்ச்சி, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, சிறந்த உடல் ஆரோக்கியம், பெற்றோர் உடன் ஜீவித்திற்கும் யோகம் என மிகுந்த நன்மைகளை தரும்.

செவ்வாய் திசைக்கு பிறகு வரும் ராகு திசைதான் ஜாதகருக்கு மிதமிஞ்சிய ராஜ யோக பலன்களை வாரி வழங்குகிறது, ஏனெனில் ராகு திசை ஜாதகருக்கு 1,5,6,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது, எனவே ராகு திசை காலத்தில் ஜாதகர் 1,5,6,7,8,11ம் பாவக வழியில் இருந்து சகல யோகங்களையும் அனுபவிப்பர். ராகு திசையினை தொடர்ந்து குரு திசையும் ஜாதகருக்கு 1,5,6,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று லாப ஸ்தான பலனை தருவது தொடர் அதிர்ஷ்டங்களை ராகு மற்றும் குரு திசை காலங்களில் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

குறிப்பு :

குழந்தையின் ஜாதகத்தில் 12ம் பாவகத்தை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், எனவே குழந்தைக்கும், குழந்தையின் பெற்றோருக்கும் மிக சிறப்பான நன்மைகளும் யோக பலன்களுமே நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது, இதுவே சுய ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு துல்லியமாக காணும் ஜாதக பலாபலன்கள் . "வாழ்த்துக்கள்"

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 21 ஜனவரி, 2017

தொழில் ரீதியாக பெரிய இழப்புகளையும் திடீர் நஷ்டங்களையும் சந்திப்பது ஏன் ?



கேள்வி :

தொழில் ரீதியாக பெரிய இழப்புகளையும் திடீர் நஷ்டங்களையும் சந்திப்பது ஏன் ? கடந்த சில வருடங்களில் பெருத்த  நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது தவிர்க்க என்ன வழி ? நான் செய்யும் தொழில் எனக்கு ஏற்றதா ?

பதில் :

சுய ஜாதக பாவக வலிமை உணராமல் தொழில் செய்வதும், தனக்கு உகந்த தொழிலை தேர்வு செய்யாததும், நடைபெறும் திசையும் எதிர்வரும் திசையும் ஜாதகருக்கு வலிமை அற்ற அல்லது பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதுமே ஒருவருக்கு தொழில் ரீதியான பெரிய இழப்புகளையும், திடீர் நஷ்டங்களையும் சந்திக்கும் நிலையை தரும், தங்களது சுய ஜாதகத்தில் 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்.

 தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை தங்களுக்கு 1,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், முறையே பாதக ஸ்தான பலனையும், விரைய ஸ்தான பலனையும் ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், தங்களுக்கு தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை பாதக ஸ்தான வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும், விரைய ஸ்தான வழியில் இருந்து 100% விகித இன்னல்களையும் ஒரு சேர வழங்கி கொண்டு இருப்பது வருத்தத்திற்கு உரிய ஒன்றாகும், தங்களது சுய ஜாதகத்தில் அடிப்படையிலேயே தொழில் ஸ்தானம் எனும் 10ம் வீடு கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது என்பதினால் தங்கள்  சுய தொழில் செய்வதே சரியான தேர்வு அல்ல, மேலும் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தங்கள் முடிவெடுக்கும் விஷயங்கள் யாவும் தங்களுக்கு எதிராக திரும்பும் என்பதை கவனத்தில் கொள்க.

மேலும் தங்களது சுய ஜாதகத்தில் 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெற்று வலிமை இழந்து காணப்படுகிறது, மேலும் தங்களின் விரைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாகவும், சர நீர் தத்துவ ராசியாகவும் அமைகிறது, எனவே தங்களது சுய ஜாதகத்தின் படி நீர் தத்துவ ராசியான கடகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, தாங்கள் தேர்வு செய்த தொழிலான பால் பண்ணை என்பது நீர் தத்துவத்துடன் சம்பந்தம் பெற்ற தினமும் அழிவை சந்திக்கும் பொருளான பால்  பொருட்களை அடிப்படையாக வைத்து செய்யப்படும் தொழிலாகும், தங்களது ஜாதகத்தில் நீர்த்துவ ராசி பாதிக்கப்பட்டு ( அதுவும் தொழிலை குறிக்கும் 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் நேரடி நேரடி தொடர்பு பெற்று முற்றிலும் வலிமை அற்று காணப்படுகிறது ) தாங்கள் நீர் தத்துவம் சார்ந்த பால் பண்ணை தொழிலை தேர்வு செய்து நடத்தியதால் தவிர்க்க முடியாத பெரிய இழப்புகளையும், திடீர் நஷ்டங்களையும் தந்து கொண்டு இருக்கின்றது.

எனவே தாங்கள் அடிப்படையிலேயே  சரியான தொழிலை தேர்வு செய்யவில்லை என்பது முதல் தவறு, இரண்டாவது தங்களுக்கு தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை வலிமை அற்ற பாவக தொடர்பை பெற்று முறையே பாதக ஸ்தான பலனையும், விரைய ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது மிக வருந்தத்தக்கது, ஆக நடைபெறும் செவ்வாய் திசையும் தங்களுக்கு தொழில் சார்ந்த நன்மைகளை தரவில்லை, பாக்கிய ஸ்தான வலிமை இன்மை தங்களுக்கு, மேற்கண்ட இன்னல்களில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகளையும் தரவில்லை, தங்களின் அறிவு திறனும் இழப்பை தவிர்ப்பதற்கு உண்டான சந்தர்ப்பங்களை வழங்கவில்லை, எனவே தாங்கள்  மேற்கண்ட தொழிலில் கடுமையான நெருக்கடிகளையும், இழப்பு  மற்றும் நஷ்டங்களையும் சந்தித்து வருகிண்றீர்கள்.

மேற்கண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண தாங்கள் முறையாக நேரில் வந்து  ஜாதக ஆலோசனை பெற்று கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவதே சால சிறந்தது, ஒன்று மட்டும் உறுதி தாங்கள் தேர்வு செய்த பால் பண்ணை தொழில் தங்களுக்கு சிறிதும் பொருந்தாதது, மேலும் நீர் தத்துவம் சார்ந்த எந்த தொழிலும் தங்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தையே தரும்.

எதிர் வரும் ராகு திசை தங்களுக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதால், முறையாக ஜாதக ஆலோசனை பெற்று தங்களுக்கு உகந்த தொழிலை தேர்வு செய்து வாழ்க்கையில் சகல நலன்களையும் பெறுக.

குறிப்பு :

சுய ஜாதக ரீதியாக ஜீவன ஸ்தான வலிமையை  கருத்தில் கொண்டும் , தற்போழுது நடைபெறும், எதிர்வரும் திசை தரும் பலாபலன்களை கருத்தில் கொண்டும் சரியான தொழிலை தேர்வு செய்வது என்பது சம்பந்த பட்ட ஜாதகருக்கு ஜீவன ரீதியான வெற்றிகளை தங்கு தடையின்றி வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வாஸ்து சாஸ்த்திரமும் சுய ஜாதக பாவக வலிமையும் !


" எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் " என்பதற்கு இணங்க சுய ஜாதகத்தில் லக்கினமே அடிப்படையாக விளங்குகிறது, மேலும் பனிரெண்டு பாவகங்களின் வலிமை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யோக வாழ்க்கையை நல்கிறது, இதில் ஒருவர் வசிக்கும் வீடு வாஸ்து சாஸ்த்திர முறைப்படி இருப்பின், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யாதொரு இன்னல்களும் வர வாய்ப்பில்லை என்பதும், ஜாதகர் சுய ஜாதக ரீதியாக வரும் இன்னல்களில் இருந்து விடுபடுவார் என்பதும் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, " அவனின்றி ஓர் அணுவும் அசையாது " என்ற இறைஅருளின் கருணைக்கு இணங்க ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் சகல நிகழ்வுகளையும் சுய ஜாதக வலிமையே நிர்ணயம் செய்கின்றது, சுய ஜாதகத்தில் ஒருவருக்கு சுக ஸ்தானம் எனும் 4ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியான கடகமும் மிகவும் வலிமையுடன் இருப்பின், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு குடியிருப்பதற்கு, நிறைவான வசதி மற்றும் சரியான வாஸ்து  கொண்ட வீடு இயற்கையாகவே அமைந்துவிடும்.

 எனவே ஒருவருக்கு நல்ல வாஸ்து அமைந்த வீடு கிடைப்பதற்கு, சுய ஜாதக பாவக வலிமையே அடிப்படையாக விளங்குகிறது, சுய ஜாதகத்தில் இல்லாத ஓர் விஷயத்தை வாஸ்து முறைப்படி அமைந்த வீடு கொடுத்துவிட வாய்ப்பு இல்லை, அனைத்திற்கும் மூலஆதரமாக அமைவது சுய ஜாதக வலிமையே என்றால் அது மிகையில்லை, மேலும் சுய ஜாதகத்தில் 4ம் பாவகம் பெரும் வலிமையின் அடிப்படையிலும், 4ம் வீடு தொடர்பு பெரும்  பாவகம் குறிப்பிடும் திசை சார்ந்த வாயிற்படி கொண்ட வீடுகளில் குடியிருப்பது, சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வாரி வழங்கும், தனக்கு உகந்த திசை அற்ற வாயிற்படி கொண்ட வீடுகளில் குடியிருக்கும் அன்பர்களுக்கு ( சம்பந்தப்பட்ட வீடு வாஸ்து பிரகாரம் அமைந்து இருப்பினும் ) கடுமையான நெருக்கடிகளையும் அதிக அளவிலான இன்னல்களையும் வாரி வழங்கி விடும், ஜாதகர் தமது வாழ்க்கையில் சுய ஜாதகப்படி அனுபவிக்க வேண்டிய இன்னல்களில் இருந்து வாஸ்து நன்றாக அமைந்த வீடு நிச்சயம் காப்பாற்ற வழியில்லை, ஏனெனில் சுய ஜாதக வலிமையின் அடிப்படையிலேயே நாம் குடியிருக்கும் வீடுகளையும், நாம் புதிதாக கட்டும் வீடுகளையும் நிர்ணயம் செய்வது சாலச்சிறந்தது, இதை கருத்தில் கொண்டே நமது முன்னோர்கள் 2 தலைமுறைக்கு பிறகு வீடுகளை மாற்றி அமைத்துக்கொண்டு இருந்தனர் அல்லது புதிய வீடுகளை தமது சந்ததிகளுக்கு அவர் அவர்களுக்கு உகந்தபடி புதிதாக கட்டி கொடுத்தனர், இதனால் யாதொரு இன்னல்களும் இன்றி அவர்களது சந்ததிகளும், அவர்களும் சுகபோக வாழ்க்கையில் யாதொரு நெருக்கடியும் இன்றி சிறப்பாக வாழ்ந்தனர்.

 தகப்பனாருக்கு உகந்த கிழக்கு திசை வாயிற்படி மகனுக்கு ஏற்றதாக இல்லை எனில் சம்பந்தப்பட்ட குடும்பத்தில் மகனின் ஆதிக்கமும் வெற்றியும் தட்டி பறிக்கப்படும், மகனின் உழைப்பு திறமை யாவும் குடத்தில் இட்ட விளக்குபோல் பயனற்றதாக மாறிவிட அதிக வாய்ப்பு உண்டு, எனவே சுய ஜாதகத்தில் 4ம் பாவக வலிமையை அடிப்படையாக கொண்டு, அவரவருக்கு உகந்த திசை கொண்ட வீடுகளில் குடியிருப்பதே சகல நன்மைகளையும் தரும், ஜாதகரின் உழைப்பும் வீணாகாது, சகல விதங்களில் இருந்தும் நன்மைகளை பெறலாம், தனக்கு பொருத்தம் இல்லாத வீடுகளில் ( அது அரண்மனையாக இருந்தாலும் கூட ) குடியிருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் 100% சதவிகித இன்னல்களையே வாரி வழங்கும், வாஸ்து சாஸ்த்திரத்தை தனக்கு உகந்த வகையில் ( சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப )  பயன்படுத்திக்கொண்ட அன்பர்களே, வாழ்க்கையில் சகல யோகங்களையும் மிகசிறந்த  முன்னேற்றங்களையும் பெற்று உள்ளனர்.

உதாரணமாக ஒருவரது சுய ஜாதத்தில் லக்கினம் மற்றும் நான்காம் பாவகம் களத்திர  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் மேற்கு திசை சார்ந்த வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருப்பது சகல யோகங்களையும் வாரி வழங்கும், மேலும் தனது ஜீவனம் சார்ந்த விஷயங்களை மேற்கு திசை சார்ந்த வாயிற்படி கொண்ட அலுவலகமாக பார்த்துகொள்வது சிறப்பு மிக்க ஜீவன முன்னேற்றத்தை தரும், மேற்கண்ட விஷயம் சர லக்கினத்தாருக்கும், ஸ்திர லக்கினத்தாருக்கும் பொருந்தும் ஆனால் உபய லக்கினத்தாருக்கு முற்றிலும் பொருந்தாது, ஏனெனில் உபய லக்கினத்தாருக்கு 7ம் பாவகம் பாதக ஸ்தானமாக அமையும் என்பதால், சுய ஜாதகத்தில் உபய லக்கினம் பெற்றவர்களுக்கு 1,4ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின் அவர்கள் மேற்கு திசை சாந்த வீடுகளில் குடியிருப்பது உகந்தது அல்ல ஏனெனில் 200% சதவிகித இன்னல்களையும் துன்பங்களையும் தரும்.

சுய ஜாதகத்தில் 4ம் பாவகம் தொடர்பு படுத்தும் திசை சார்ந்த வீடு மற்றும் அலுவலகங்களை பயன்படுத்தும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல நன்மைகளும் தேடிவரும், இதில் யாதொரு மாற்றமும் இல்லை ஆனால் தொடர்பு பெரும் வீடு பாதக ஸ்தானமாக அமைந்து, பாதக ஸ்தானம் குறிக்கும் திசையில் குடியிருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையை கடுமையாக பாதிப்பிற்கு ஆளாக்கும்.

பொதுவாக சுய ஜாதகத்தில் சுக ஸ்தானம் என்கின்ற 4ம் பாவகமும், காலபுருஷ தத்துவத்திற்கு  4ம் ராசியான கடகமும் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் வாஸ்து சார்ந்த கவலைகளை விட்டுவிடலாம், ஏனெனில் இயற்கையாகவே அவர்களுக்கு வசிப்பதற்கு சரியான வாஸ்து அமைந்துள்ள வீடு கிடைத்துவிடும், சுய ஜாதகத்தில் 4ம் பாவகம் பாதிக்கப்பட்டும் காலபுருஷ தத்துவத்திற்கு 4ம் ராசியான கடகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் மட்டுமே மிகுந்த எச்சரிக்கையாக தான் குடியிருக்கும் வீட்டினை தேர்வு செய்ய வேண்டி வரும், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகம் குறிப்பிடும் திசை சார்ந்த வீடுகளை தேர்வு செய்து வசிப்பது, பாதிக்கப்பட்ட 4ம் பாவாக கெடுதல்களை வெகுவாக குறைக்கும், யோக வாழ்க்கைக்கு சரியான வழிகாட்டும்.

குறிப்பு :

ஒருவருக்கு சரியான வாஸ்து அமைந்த வீடு கிடைப்பதும் சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே, எனவே சுய ஜாதக வலிமையை அடிப்படையாக கொண்டு தமக்கு உகந்த வீட்டை தேர்வு செய்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 11 ஜனவரி, 2017

காதல் கைகூடுமா ? எனது காதலர் மூலம் நல்ல இல்லற வாழ்க்கை அமையுமா?



கேள்வி :

 கடந்த ஒரு வருடமாக நான் ஒருவரை காதலித்துக்கொண்டு இருக்கின்றேன், அவரை திருமணம் செய்துகொள்ள இயலுமா? எனது  அவரை திருமணம் செய்துகொண்டால்  எனது எதிர்காலம் எப்படி இருக்கும்? தற்போழுது படித்துக்கொண்டு இருக்கின்றேன் நல்ல வேலை கிடைக்குமா?



லக்கினம் : கன்னி 
ராசி : விருச்சிகம் 
நட்ஷத்திரம் : விசாகம் 4ம் பாதம் 

 கடந்த ஒரு வருடமாக நான் ஒருவரை காதலித்துக்கொண்டு இருக்கின்றேன், அவரை திருமணம் செய்துகொள்ள இயலுமா?

பதில் : 

சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களின் காதல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும், தாங்கள் விரும்பும் நபர் தங்களுக்கு மிகுந்த இன்னல்களையும் திடீர் இழப்புகளையும் ஏற்படுத்துவார், தாங்கள் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளால், பிராண ஆபத்துகள் கூட ஏற்படலாம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது, தங்களது ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் வலிமை குன்றி காணப்படுகிறது என்பதால், சற்று எச்சரிக்கையுடன் இருப்பதே தங்களுக்கு நன்மையை தரும், இல்லை எனில் தற்போழுது கற்றுக்கொண்டு இருக்கும் கல்வியில் தடை ஏற்படும், சம்பந்தப்பட்ட நபரால், தாங்கள் பலவித துன்பத்திற்க்கு ஆளாவீர்கள் என்பது மட்டும் உண்மை, மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை இன்றி இருப்பதும் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், தங்களுக்கு பெருவாரியான இன்னல்களை தாங்களே தேடிக்கொள்ளும் சூழ்நிலையை தரும், தங்களின் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை பெரியோர்களின் அறிவுரைப்படியும், தாங்களே நன்கு ஆலோசித்து முடிவு செய்வது நலம் இல்லை எனில் தங்களின் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படும்.

பெற்றோர் இதற்க்கு சம்மதம் தெரிவிப்பார்களா?

நிச்சயம் சம்மதிக்க வாய்ப்பில்லை, ஏனெனில் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தை விட, பெற்றோரை குறிக்கும் 4,10ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று இருக்கின்றது, 4ம் பாவகம் தந்தை வழியிலும், 10ம் பாவகம் தாய் வழியிலும் தடைகளை ஏற்படுத்துவார்கள், தாங்களது ஜாதகத்திலும் லக்கினம் வலிமை இல்லை என்பதால் தாங்கள் துணிந்து ஓர் முடிவை எடுக்க இயலாது , களத்திர ஸ்தானமும் வலிமை இல்லை என்பதால் தங்களது காதலரும் விட்டால் போதும் என்று ஓடிவிடும் நிலையில் இருப்பார்.

அவரை திருமணம் செய்துகொண்டால்  எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?

தங்களது காதலரை திருமணம் செய்துகொள்ள தங்களுக்கு சிறிதும் வாய்ப்பு இல்லை, ஒரு வேலை வறட்டு பிடிவாதமாக திருமணம் செய்துகொண்டால், மண் குதிரையை நம்பி நடு ஆற்றில் இறங்கியதற்கு ஒப்பான பலன்களை தாங்கள் எதிர்கொள்ள வேண்டி வரும், மறுமணம் அல்லது பிராண ஆபத்து உண்டாகும்.

தற்போழுது படித்துக்கொண்டு இருக்கின்றேன் நல்ல வேலை கிடைக்குமா?

இது ஞாயமான கேள்வி தங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், ஒரு பட்டய படிப்பிற்கு பிறகு நல்ல வேலை அமையும், இதன் மூலம் தங்களது வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும், தற்போழுது உள்ள இனக்கவர்ச்சியை காதல் என்று நம்பி தங்களது வாழ்க்கையை தாங்களே கெடுத்துக்கொள்ள வேண்டாம், சுய ஜாதகத்தில் ஜீவனம் மற்றும் லாபஸ்தானங்கள் மிகவும் வலிமை பெற்று இருப்பதும், தற்போழுது நடைபெறும் புதன் திசை தங்களுக்கு 5,11ம் வீடுங்கள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்த பெற்று முழு வீச்சில் 100% விகித நன்மைகளை செய்வதால் அதற்குண்டான நன்மைகளை தேடி பெறுங்கள், நல்ல சிந்தனை தெளிவான அறிவாற்றல் தங்களின் வாழ்க்கைக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், மனம் சொன்னபடி நடப்பதை விட்டு விட்டு, அறிவு சொல்லும் நல்ல விஷயங்களை ஏற்று சகல அதிர்ஷ்டங்களையும் பெறுக  வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 10 ஜனவரி, 2017

கேது திசை தரும் கெடுதல்களும், சுய ஜாதகத்தில் கேது பகவான் பெரும் வலிமையும் !


 சாயா கிரகங்களான ராகு கேது ஒருவரது சுய ஜாதகத்தில் வலிமை பெற்று அமர்வது மிதமிஞ்சிய யோக பலன்களை வாரி வழங்கும், என்பதில் மாற்று கருத்து இல்லை, மேலும் தாம் அமரும் பாவகத்தை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வல்லமை சாயா கிரகங்களுக்கு உண்டு, கீழ்க்கண்ட ஜாதகருக்கு எதிர்வரும் கேது திசை தரும் பலன்கள் என்ன? கேது திசையில் ஜாதகர் அனுபவிக்கும் யோக அவயோகங்கள் பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! 

பொதுவாக சுய ஜாதக வலிமை என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து தரும், சுய ஜாதகம் வலிமை அற்ற நிலையில் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை தரும், சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பானது அல்ல, ஏனெனில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் 200% விகித இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், இதனை தவிர்க்கவும் இயலாது என்பது வருந்தத்தக்க விஷயமாகும், இதை கீழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : மகரம் 
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 3ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1ம் வீடு களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான யோக வாழ்க்கையை ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து நல்கும்.

2,6,7ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து நல்ல வருமானம், சிறந்த குடும்பம், வாக்கு வன்மை, பொருளாதர ரீதியான தன்னிறைவு என்ற வகையிலும், சத்ரு ஸ்தான வழியில் இருந்து பதவியில் வெற்றி, அதிகாரிகள் அன்பு, உத்தியோக ஆர்வம், சொந்த முயற்ச்சியில் முன்னேற்றம் ஜீவன ரீதியான முன்னேற்றங்கள் என்ற வகையிலும், களத்திர ஸ்தான வழியில் இருந்து தாமத திருமணம், நல்ல வாழ்க்கை துணை, அரசியல் வெற்றிகள், வியாபாரத்தில் வெற்றி, சமூக அந்தஸ்த்து என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

4,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு கடுமையான இன்னல்களையும், 4ம் பாவக வழியில் இருந்து சுக போகங்களில் தடைகளையும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்புகளையும், 10ம் பாவக வழியில் இருந்து நிலையான ஜீவனம் அற்ற தன்மையையும் வாரி வழங்கும்.

ஜாதகத்தில் கடுமையான பாதிப்பை தரும் பாவக தொடர்புகள் :

3,5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 3ம் பாவக வழியில் எடுக்கும் முயற்சிகளில் தோல்விகளையும், 5ம் பாவக வழியில் இருந்து பூர்வீக ஜீவனம் அற்ற நிலையையும், சமயோசித அறிவுத்திறன் அற்ற நிலையையும், 9ம் பாவக வழியில் இருந்து யாருடைய உதவியையும் பெற இயலாத நிலை, 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமற்ற தன்மையையும் தரும், ஜாதகத்திலே மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகங்கள் மேற்கண்ட 3,5,9,11 என்றால் அது மிகையில்லை, எனவே ஜாதகருக்கு 4 பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, மேலும் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகரை வெகுவாக பாதிக்கும்.

தற்போழுது நடைபெறும் புதன் திசை ( 28/02/2000 முதல் 28/02/2017 வரை ) ஜாதகருக்கு 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான இன்னல்களை தந்துகொண்டு இருக்கின்றது, திடீர் இழப்புகள், மனஅழுத்தம், மன நிம்மதியின்மை, கடும் குழப்பம், மனப்போராட்டம் என புதன் திசை ஜாதகருக்கு யோகம் அற்ற நிலையினையே தருகின்றது.

எதிர் வரும் கேது திசை ( 28/02/2017 முதல் 28/02/2024 வரை ) தரும் பலன்களை ஜாதகர் எதிர்கொள்வதுதான், அவருக்கு இருக்கும் சவால், ஏனெனில் 3,5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை மட்டும் ஏற்று நடத்துகிறது, இதனால் ஜாதகர் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர்  எடுக்கும் முயற்சிகள் அனைத்த்தும் வெற்றியை தாராது, 5ம் பாவக வழியில் கற்ற கல்வியில் சுய அறிவு திறனும் பலன் தாராது, பூர்வீக ஜீவனம் அற்ற நிலையை தரும், 9ம் பாவக வழியில் இருந்து பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்காமல் துன்பப்படும் நிலையை தரும், 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பிற்போக்கு தனமான செயகைகளினால் தனது வாழ்விற்கு தானே துன்பத்தை தேடிக்கொள்வார், அதிர்ஷ்டம் ஜாதகருக்கு வெகு தொலைவிலேயே நின்றுகொள்ளும், கேது திசை முழுவதும் நடைபெறும் பாதக ஸ்தான பலனை ஜாதகர் எதிர்கொள்வது என்பது சற்று சிரமமான காரியமாகவே அமையும், மேலும் இந்த கேது திசை ஜாதகருக்கு இளமை  பருவத்தில் நடைபெற்று, பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும், ஆனால் சுய ஜாதகத்தில் கேது பகவான் 5ல் அமர்வதும் வலிமை பெற்று இருப்பதும் கவனிக்கத்தக்க அம்சமாகும்.

குறிப்பு :

ஜாதகரை முறையான ப்ரீதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெற முயற்சிக்கலாம், மேலும் 3,5,9,11ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை அனுபவித்து கழித்துக்கொள்வதே சாலச்சிறந்தது, சுக்கிர வழிபாடு செய்வது ஜாதகருக்கு மென்மையான யோக பலன்களை வாரி வழங்கும்.


திங்கள், 9 ஜனவரி, 2017

ஏழரை சனியின் பாதிப்பு கடுமையாக இருக்கும் விபத்து, இழப்பு, விரையம் என இன்னல்களை தரும் என்கின்றனர், இதற்க்கு பரிகாரம் என்ன?


 கேள்வி :

எதிர்வரும்  ஏழரை சனியின் பாதிப்பு கடுமையாக இருக்கும் விபத்து, இழப்பு, விரையம் என இன்னல்களை தரும் என்கின்றனர், இதற்க்கு பரிகாரம் என்ன? எனது ஜாதகப்படி எதிர்காலம் எப்படி இருக்கும்? சற்று மனபயமும் குழப்பமாகவும் உள்ளது, இதற்க்கு சரியான தீர்வு வேண்டுகின்றேன்.

பதில் :

கடந்த தலைமுறையினரை சார்ந்த அன்பர்களின் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவை சரியாக தெரியாத நிலையில், சம்பந்தப்பட்ட நபரின் பெயர் முதல் எழுத்தை கருத்தில் கொண்டும், நாம நட்ஷத்திரம் கண்டறிந்து அதன் மூலம் ராசியை அடிப்படையாக கொண்டு சம்பந்தபட்ட நபருக்கு ராசி பலன் கண்டு, எதிர்கால வாழ்க்கைக்கு உண்டான அறிவுரைகளை ஜோதிடர்கள் வழங்கினார், இது கடந்த தலைமுறையினருக்கு ஓரளவு மன ஆறுதல்களையும், வாழ்க்கையில் தன்னம்பிக்கையையும் ஏற்பட்ட செய்தது, தற்போழுது உள்ள தலைமுறையை சார்ந்த அன்பர்களுக்கு இந்த பிரச்சனை 100% விகிதம் இல்லை எனலாம், ஏனெனில் ஒவ்வொருவரின் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவை அனைவருக்கும் சரியாக தெரிந்து இருக்கின்றது,( இன்னும் ஒருபடி மேலே சென்று மக்கள் தமக்கு பிறக்கும் குழந்தையை நல்ல நேரத்தில் அறுவை சிகிசிச்சையின் மூலம் பெற்றுக்கொள்கின்றனர், இது எந்தளவுக்கு சரி என்பது ஆய்வுக்கு உற்ப்பட்டது ) இவற்றின் துணை கொண்டு ஒருவருக்கு மிக துல்லியமாக சுய ஜாதகத்தை கணிதம் செய்து விடலாம், இதை ஓர் கணினி சில நொடிகளில் செய்து விடுகிறது, கால மாற்றத்தில் தற்போழுது உள்ள தலைமுறையை சார்ந்த அன்பர்களுக்கு சுய ஜாதகம் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை எனலாம், எனவே நாம நட்ஷத்திரம் கொண்டு ராசிபலன் காணவேண்டிய கட்டாயம் இந்த தலைமுறையினருக்கு இல்லை, மேலும் சுய ஜாதகத்தில் ஒருவரது லக்கினம் தெரியும் பொழுது, ராசியை அடிப்படையாக கொண்டு பலன்காண வேண்டிய கட்டாயமும் இல்லை, எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் எனும் முது மொழிக்கு ஏற்ப, சுய ஜாதகத்தில் சகல விஷயங்களையும் கட்டுப்படுத்துவதும், யோக அவயோக, நன்மை தீமை பலன்களை வழங்குவது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலையே என்றால் அது மிகையாகாது, மேலும் ஒருவரது சுய ஜாதகத்தை கொண்டு பலன் காண முற்படும் பொழுது சந்திரன் அமர்ந்த ராசியை கொண்டு பலன் காண வேண்டிய அவசியமில்லை என்பதை இந்த பதிவில் தெளிவாக விளக்கம் தர "ஜோதிடதீபம்" கடமை பட்டுள்ளது.

சுய ஜாதகம் கொண்டு பலன் காணும் பொழுது நமக்கு கிடைக்கும் நன்மைகள் :

1) சுய ஜாதகம் கொண்டு பலன் காணும் பொழுது ஜாதகர் பிறந்த லக்கினத்தை கொண்டே பலன் காணலாம் எனும் பொழுது, சந்திரன் நின்ற ராசிக்கு உண்டான பலாபலன் பற்றி நாம் கருத்தில் கொள்ள தேவையில்லை, நமக்கு சுய ஜாதகம் இல்லாதா நிலையிலே நாம நட்ஷத்திரம் கொண்டு ராசிபலன் காணலாம்.

2) லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை பற்றி தெளிவாக அறிந்துகொள்ளும் பொழுது, ஜாதகருக்கு உள்ள யோகம் மற்றும் அவயோகம் பற்றிய ஒரு தெளிவும், இதனால் ஜாதகர் அனுபவிக்கும் நன்மை தீமை பற்றி தெளிவாகவும், துல்லியமாகவும் தெரிந்துகொள்ள இயலும்.

3) நவ கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஜாதகர் நவ கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் தரும் யோக அவயோகம் மற்றும் ஜாதகர் பெரும் நன்மை தீமையை பற்றி மிக மிக துல்லியமாகவும் உண்மையாகவும் தெரிந்துகொள்ள இயலும்.

4) தற்போழுது நடைமுறையில் உள்ள நவ கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு, கோட்சார கிரகங்கள் தரும் தரும் நன்மை தீமை பற்றி தெளிவு பெரும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற, நடைபெற கூடிய யோக அவயோக நிகழ்வுகள் மிக துல்லியமாக அறிந்துணர்ந்து, அவரின் வாழ்க்கையில் வரும் யோகங்களை ஏற்று கொள்ளவும், அவயோகங்களை கிரகித்து கொள்ளவும் அறிவுரைகளை நிச்சயம் வழங்க முடியும்.

5)  மேற்கண்ட முறையில் லக்கினத்தை கொண்டு ஒருவருக்கு துல்லியமான சுய ஜாதக பலன் காண்பது போல், சந்திரன் நின்ற ராசியை அடிப்படையாக கொண்டும், நாம நட்ஷத்திர ராசியை கொண்டும் ஒருவருக்கு  நிச்சயம் துல்லியமான பலன் காண இயலாது என்பதை உறுதி படுத்துகிறோம், ஒருவேளை ராசியை வைத்து பலன் கண்டு அது சரியாக இருப்பின் "காகம் அமர பனம்பழம் விழுந்த" கதையாகவே அமையும்.

இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

கீழ்கண்ட ஜாதகருக்கு  ஜோதிடர்கள் அறிவுறுத்திய விஷயம், ஜாதகர் மகர ராசி என்பதனால் எதிர்வரும் சனி பெயர்ச்சி ஏழரை சனியாக அமைவதால், ஏழரை சனியின் பாதிப்பு கடுமையாக இருக்கும், இதனால் விபத்து, இழப்பு, விரையம் என இன்னல்களை தரும், தங்களுக்கு தொழில் நஷ்டம் ஏற்படும், குடும்பத்தில் நிம்மதி இருக்காது, கடன் தொந்தரவு அதிகரிக்கும், திடீர் விபத்து மூலம் வீண் மருத்துவ செலவுகள் வரும், சண்டை சச்சரவு, வம்பு வழக்கு, உடல் நல பாதிப்பு , உறவுகள் மனகசப்பு, குழந்தைகள் வழியில் இன்னல்கள் என கடுமையான இன்னல்களை எதிர் வரும் ஏழரை சனி தரும், என்று சந்திரன் நின்ற ராசியை அடிப்படையாக கொண்டு, ஜாதக ஆலோசணை வழங்கப்பட்டு இருக்கின்றது, இனி அவரது சுய ஜாதகத்தை கொண்டு அவரது சுய ஜாதக வலிமை, நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவக பலன்கள் தரும் நன்மை தீமை, அதற்க்கு கோட்சார கிரகங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : கன்னி 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : உத்திராடம் 4ம் பாதம் 

ஜாதகருக்கு மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,3,5,7,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்திலே மிகவும் வலிமை பெற்ற அமைப்பாகும், இதனால் ஜாதகர் 1,3,5,7,11ம் பாவக வழியில் இருந்து 100% விகித சுபயோக பலன்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் ஆகிறார்.

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

2ம் வீடு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, இனிமையான குடும்ப வாழ்க்கையையும், கைநிறைவான வருமான வாய்ப்புகளையும், இனிமையான பேச்சு திறமையையும் தரும், தனம் சார்ந்த சிக்கல்கள் ஏதும் ஜாதகருக்கு வாராது.
6,8,9,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6,8,9,10ம் பாவக வழியில் இருந்து 70% விகித சுபயோகங்களை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

4,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 4,12ம் பாவக வழியில் இருந்து ஸ்த்திரமான 70% விகித இன்னல்களை தரும், குறிப்பாக மேற்கண்ட பாவக வழியிலான பாதிப்பை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் மட்டும் ஜாதகர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

எனவே மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் வலிமையுடன் இருப்பதால் ஜாதகருக்கு சுய ஜாதகம் 95% விகித மிக மிக வலிமையுடன் உள்ளது என்பதால், முழு அளவிலான யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை கொண்டவர் என்பது உறுதியாகிறது.

ஜாதகருக்கு தற்போழுது குரு மஹா திசை ( 23/03/2013 முதல்  23/03/2029 வரை ) நடைபெறுகின்றது, தனது திசையில் குரு பகவான் ஜாதகருக்கு 6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக பலனை ஏற்று நடத்துகின்றார், இதானால் ஜாதகர் ஜீவன வழியில் நல்ல முன்னேற்றமும், கவுரவம் மற்றும் அந்தஸ்த்து குறையாத யோக வாழ்க்கையையும் பெறுவார் மேலும் குறுகிய கால லாபங்களை ஜாதகர் தனது தொழில் ரீதியாக பரிபூர்ணமாக அனுபவிக்கும் தன்மையை தரும், எனவே குரு திசை முழுவதும் ஜாதகருக்கு ஜீவன வழியிலான நன்மைகளே நடைபெறும், தற்போழுது நடைபெறும் குரு திசையில் சனி புத்தி ( 12/05/2015 முதல் 22/11/2017 வரை ) நடைமுறையில் உள்ளது, சனி புத்தியும் ஜாதகருக்கு  6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக பலனையே ஏற்று நடத்துகின்றார், எனவே ஜாதகருக்கு நடைபெறும் குரு திசையும், சனி புத்தியும் வலிமை பெற்ற 6,10ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது ஜாதகருக்கு ஜீவன ரீதியான நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும்.

குரு திசையில் அடுத்து வரும் புதன் புத்தி ( 22/11/2017 முதல் 28/02/2020 வரை ) தனது புத்தியில் 1,3,5,7,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ராஜயோக பலன்களை வாரி வழங்குவது, ஜாதகருக்கு 1,3,5,7,11ம் பாவக வழியில் இருந்து மிகுந்த நன்மைகளை தன்னிறைவாக வாரி வழங்கும், குரு திசையில் கேது புத்தி ஜாதகருக்கு 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் ரீதியான திடீர் அதிர்ஷ்டங்களையும், குரு திசையில் சுக்கிரன் புத்தி  8,9ம் வீடுகள்  ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 8ம் பாவக வழியில் தொழில் ரீதியாக திடீர் அதிர்ஷ்டத்தையும், 9ம் பாவக வழியில் சமூக அந்தஸ்து மற்றும் பெயரும் புகழையும் ஜீவன ரீதியாக வழங்கும். எனவே ஏழரை சனி நடைபெறும் நேரமான ஏழரை வருடமும் ஜாதகருக்கு ஜீவனம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து 100% விகித நன்மைகளே சுய ஜாதக ரீதியாக நடைபெறுகின்றது என்பது உறுதியாகிறது அன்பர்களே, மேலும் தற்போழுது நடைபெற இருக்கின்ற சனி பெயர்ச்சி மேற்கண்ட திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு சம சப்த்த பார்வையாக சனி பகவான், தனது வர்க்க கிரகமான புதனுக்கு உரிய மிதுன ராசியை வசீகரித்து, ஜாதகருக்கு மென்மேலும் ஜீவன ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும், ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் மிகுந்த லாபத்தை தரும், வியாபார விருத்தி, செல்வச்செழிப்பு என்ற வகையில் ஜீவன ஸ்தானத்தை வசீகரிக்கும் கோட்சார சனி ஜாதகருக்கு நன்மையே செய்கின்றார் என்பதும் உறுதியாகிறது.

எனவே எதிர்வர இருக்கும் சனி பெயர்ச்சியால் ( மகர ராசிக்கு ஏழரை சனி என்ற வாதம் சுய ஜாதகம் வலிமை பெறுவதாலும், நடைபெறும் திசாபுத்தி ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவதாலும் எடுபடாது ) மேற்கண்ட ஜாதகருக்கு எவ்வித துன்பமும் சிறிதும் இல்லை என்பதே சுய ஜாதக ரீதியான உண்மை நிலை என்பதை "ஜோதிடதீபம்" இந்த பதிவில் தெளிவு படுத்துகிறது.

குறிப்பு :

 ஒருவரது சுய ஜாதகம் மிகவும் வலிமை பெற்று இருந்தாலோ, தற்போழுது நடைமுறையில் உள்ள திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருந்தாலோ, கோட்சார கிரகங்களினால் யாதொரு பாதிப்பு இருக்காது என்பதே உண்மை நிலை, மேலும் சந்திரன் நின்ற ராசியை வைத்து பலன்காண முற்படுவது சம்பந்தப்பட்ட நபரின் மனம் சார்ந்த விஷயங்களை மட்டுமே பாதிக்கும், சுய ஜாதக வலிமையை சிறிதும் பாதிக்காது என்பது 100% விகித உண்மை என்பதை இங்கே "ஜோதிடதீபம்" பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 7 ஜனவரி, 2017

தொழில் நிர்ணயம் : சுய தொழில் செய்வதற்கு ( பால் பண்ணை ) ஏற்ற ஜாதகமா ?


கேள்வி :

புதியதாக சுய தொழில் துவங்கலாம் என்று இருக்கின்றேன், எனது ஜாதகம் சுய தொழில் செய்வதற்கு ஏற்றதா? குறிப்பாக பால் பண்ணை வைத்து வியாபரம் செய்யலாம் என்று இருக்கின்றேன், இந்த தொழில் எனக்கு லாபகரமாக அமையுமா? தொழில் முன்னேற்றம் எப்படி அமையும்? தொழில் துவங்க இது உகந்த நேரமா? சற்று விரிவான விளக்கம் தரவும்.


லக்கினம் : கன்னி 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : புனர்பூசம் 4ம் பாதம் 

பதில் :

" உத்தியோகம் புருஷ லட்சணம் " என்ற முதுமொழிக்கு ஏற்ப ஒருவர் செய்யும் தொழில், அவருக்கு சமூகத்திலும், உறவுகள் வழியிலும் மிகுந்த மதிப்பு மரியாதை மற்றும் கௌரவத்தை பெற்று தரும் என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, தாம் பெற்ற தொடர்புகளுக்கு ஏற்ற நன்மை தீமை பலன்களை பாரபட்சம் இன்றி வாரி வழங்கும், இதில் ஒருவரது ஜீவன ( சுய தொழில் ) வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் ஜாதகத்தில் கர்ம ஸ்தானம் எனும் 10ம் பாவக வலிமை மட்டும் அல்ல, மற்ற பாவகங்களின் வலிமையையும் கருத்தில் கொண்டு சரியான தொழிலை தேர்வு செய்வதே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு 100% விகித தொழில் வெற்றிகளை வாரி வழங்கும், மேற்கண்ட ஜாதகருக்கு பொருத்தமான வெற்றியை நல்கும் தொழில் எது? என்பதனையும், அவரது கேள்விகளுக்கு உண்டான பதில் என்ன? என்பதனையும் இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

சுய தொழில் மூலம் வெற்றிவாகை சூட சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் :

1) நான்கு கேந்திரங்களான ( 1,4,7,10 ம் ) பாவகங்கள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருப்பது தொழில் முன்னேற்றங்களை வாரி வழங்க அவசியமாகிறது, லக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகரின் சுய உழைப்பு, தொழில் மீது ஜாதகர் காட்டும் ஆர்வம், தொழில் நுணுக்கம் ஆகியவற்றை ஜாதகர் கிரகித்துக்கொள்ளும் பேராற்றல் என ஜீவன ஸ்தான வெற்றியை நிர்ணயம் செய்ய லக்கினம் வலிமை பெறுவது மிக முக்கியமாகிறது, சுக ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தொழில் வழியில் பயன்படுத்திடும் உபகரணங்கள் சார்ந்த அறிவு, அதன் வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகள், தொழிலார்களிடம் காட்டும் இணக்கம் மற்றும் நல்ல குணம், வண்டி,வாகனம், இடம் மற்றும் தொழில் ஸ்தாபனம் மூலம் ஜாதகர் பெரும் யோகங்கள் பற்றி சுக ஸ்தானமே நிர்ணயம் செய்யும்.

 களத்திர ஸ்தானம் வலிமை ஜாதகர் செய்யும் தொழிலில் கூட்டு முயற்ச்சி, கூட்டாளிகள் மூலம் ஜாதகர் பெரும் யோகம், வியாபார விருத்தி, பொதுமக்களுடனான அறிமுகம், ஏற்றுமதி இறக்குமதி மூலம் ஜாதகர் பெரும் யோகம், பிரபல்ய யோகம் என ஜாதகர் செய்யும் தொழில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற களத்திர ஸ்தான வலிமை அவசியமாகிறது, ஜீவன ஸ்தான வலிமை ஜாதகர் தான் செய்யும் தொழில் மீதான ஈடுபாடு மற்றும் அக்கறையை காட்டும், மேலும் சுய தொழில் செய்வதற்கு ஏற்றவர்தானா? என்பதை நிர்ணயம் செய்வதே ஜீவன ஸ்தான வலிமைதான், மேலும் ஜாதகர் செய்யும் தொழில் வெற்றியினை 100% விகிதம் நிர்ணயம் செய்வது ஜீவன ஸ்தான வலிமையே என்றால் அது மிகையில்லை, தொழில் வழியில் ஜாதகர் எடுக்கும் முடிவுகள், சரியான தனக்கு உகந்த தொழில் தேர்வு, ஸ்திர தன்மையிலான விருத்தி, எந்த சூழ்நிலையிலும் தனது தொழிலை திறம்பட நடத்தும் நிர்வாக திறமை, தனது கட்டளைக்கு அனைவரையும் அடிபணிய செய்யும் வல்லமை, தனது செயல்கள் மூலம் சிறப்பாக தொழிலை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் யோகம், சரியான முடிவுகளை சரியான நேரத்தில் மேற்கொள்ளும் தனித்திறமை என, ஒருவரது ஜீவன வாழ்க்கையில் பெரும்பாலான திட்டமிடுதல்களை நடைமுறைக்கு கொண்டுவர சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமை அவசியமாகிறது.

2) கோண ஸ்தானங்களான ( 5,9 ம்  ) பாவகங்கள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு தொழில் ரீதியாக அறிவு பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைக்கும், சரியான தொழில் தேர்வை செய்வதற்கு அடிப்படையாக விளங்குவது  மேற்கண்ட பாவகங்களின் வலிமையே என்றால் அது மிகையில்லை, எந்த ஒரு சூழ்நிலையிலும் தவறான தொழிலை தேர்வு செய்து அதில் மிகுந்த நஷ்டத்தை அனுபவிக்கும் நிலையை தாராது, சரியான நபர்கள், சரியான தொழில் எது என்பதனை மிக துல்லியமாக ஜாதகருக்கு உள்ளுணர்வாக உணர்த்துவது மேற்கண்ட பாவகங்களின் வலிமையே, பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் அறிவு திறனையும் சமயோசித புத்திசாலித்தனத்தையும், காலநேரம் அறிந்து செயல்படும் நேர்த்தியான ( smart work ) வேலைபாட்டினை வாரி வழங்கும் வல்லமை கொண்டது, பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் ரீதியான அனுபவத்தையும், வருமுன் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்தும், தனது தொழில் வளர்ச்சிக்கான சரியான நபர்களை தன்னுடன் இணைத்து வைக்கும் வல்லமை பாக்கிய ஸ்தானத்திற்கு அதிகம் உண்டு, மேலும் தனது தொழில் ரீதியான நற்ப்பெயரை பொதுமக்கள் மனதில் வேரூன்ற செய்யும் வல்லமையும் இந்த பாக்கிய ஸ்தானத்திற்கு உண்டு, எனவே சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகங்கள் வலிமைபெறுவது சம்பந்தபட்ட ஜாதகரின் அறிவார்ந்த செயல்பாடுகளை மேன்மைப்படுத்தும்.

3) சுய ஜாதகத்தில் ( 2,6,8,12 ம் ) பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பெரும் வருமான வாய்ப்பு, பேச்சு திறன், வாக்கு வன்மையையும், 6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பெரும் குறுகிய கால லாபங்களை, சத்ரு வழியில் வரும் வெற்றிகளையும், 8ம் பாவக வழியில் இருந்து செய்தொழிலில் கிடைக்கும் புதையலுக்கு நிகரான வருமானத்தையும், 12ம் பாவக வழியில் செய்த முதலீடுகள் வழியில் இருந்து பெரும் மிதமிஞ்சிய லாபங்களை குறிக்கும், தானம் சார்ந்த முன்னேற்றம் மற்றும் பொருளாதார தன்னிறைவை மேற்கண்ட பாவக வலிமையே நிர்ணயம் செய்யும்.

4) சுய ஜாதகத்தில் ( 3,11 ம் ) பாவகங்கள்  வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு, 3ம் பாவக வலிமையே ஜாதகர் எடுக்கும் முயற்சிகளில் பெரும் வெற்றிகளையும், செல்வ செழிப்பையும் தரும், சுய தொழில் மூலம் வெற்றிவாகை சூட 3ம் பாவகம் மிக மிக வலிமையாக இருப்பது அவசியமாகிறது, 11ம் பாவக வலிமை செய்தொழில் ஜாதகர் பெரும் அதிர்ஷ்டம் மற்றும் தன்னம்பிக்கை, முற்போக்கு சிந்தனை, புதிய முயற்சிகள் மூலம் லாபங்களை குவிக்கும் யோகம், நீடித்த அதிர்ஷ்டம், திட்டமிடுதல்கள் அனைத்தையும் நடைமுறைக்கு கொண்டுவரும் யோகம் என சகல யோகங்களையும் ஜாதகருக்கு ஜீவன ரீதியாக வாரி வழங்கும்.

5) மேற்கண்ட பாவக வலிமையுடன், தற்போழுது நடைமுறையில் உள்ள திசையும், எதிர்வரும் திசைகளும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், சம்பந்தப்பட்ட ஜாதகர் வெற்றிகரமான தொழில் அதிபராக திகழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை, ஒருவேளை சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின், நடைபெறும் திசை மற்றும் எதிர்வரும் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை மட்டும் ஏற்று நடத்தினால், சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதானால் யாதொரு இன்னல்களும் ஏற்படாது, நடைபெறும் திசை தரும் நன்மையான பலாபலன்களை ஜாதகர் ஜீவன ரீதியான வெற்றிகளை அனுபவிக்க செய்யும் என்பது கண்கூடான உண்மை.

ஜாதகரின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் :

1) எனது ஜாதகம் சுய தொழில் செய்வதற்கு ஏற்றதா?

நிச்சயமாக ஏற்றது, ஏனெனில் சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் மிகவும் வலிமை பெற்று இருப்பதால் 100% விகித தொழில் வெற்றிகளை வாரி வழங்கும்.

2) பால் பண்ணை வைத்து வியாபரம் செய்யலாம் என்று இருக்கின்றேன், இந்த தொழில் எனக்கு லாபகரமாக அமையுமா?

சுய ஜாதகத்தில் சர நீர் தத்துவ ராசியான கடகம் 100% விகிதம் வலிமை பெற்று லாப ஸ்தானமாக அமைவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம்  ராசியாகவும் அமைவதால் பால் பண்ணை வியாபாரம் தங்களுக்கு மிக பொருத்தமான தொழிலாக அமையும், மேலும் ஸ்திர நீர் ராசியான விருச்சிகம் மற்றும்  உபய நீர் ராசியான மீனமும் வலிமை பெற்று இருப்பது தங்களை இந்த தொழிலில் கொடிகட்டி பறக்க வைக்கும், சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று இருப்பதால் தங்களுக்கு இந்த தொழில் மிக மிக லாபகரமாக அமையும்.

3) தொழில் முன்னேற்றம் எப்படி அமையும்? தொழில் துவங்க இது உகந்த நேரமா?

சுய ஜாதகத்தில் அனைத்து பாவகங்களும் நல்ல வலிமையுடன் இருப்பது தங்களுக்கு சிறப்பான தொழில் முன்னேற்றங்களை வாரி வழங்கும், அதில் சிறிதளவும் மாற்றம் இல்லை, மேலும் உதாரணம் சொல்ல வேண்டும் எனில் Amul நிறுவனம் பெற்ற வெற்றிக்கு ஒப்பான தொழில் முன்னேற்றத்தை தங்களுக்கு வாரி வழங்கும். தொழில் துவங்க இதுவே காலதாமதம் என்று சொல்லவே "ஜோதிடதீபம்" கடமைபட்டுள்ளது.

தற்போழுது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் புதன் திசை ( 09/12/2001 முதல் 09/12/2018 வரை ) 1,3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பெரிய அளவிலான வெற்றிகளை தரவில்லை என்ற போதிலும், எதிர்வரும் கேது திசை ( 09/12/2018 முதல் 09/12/2025 வரை ) தங்களுக்கு 2,6,10,12ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 4ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் யோக பலன்களை தருவதாலும், இதுவே தங்கள் சுய தொழில் துவங்க சரியான நேரம், மேலும் தற்போழுது நடைபெறும் புதன் திசை சனி புத்தியும்  2,6,10,12ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவது சுய தொழில் துவங்குவதற்கு உண்டான நல்ல வாய்ப்பை வாரி வழங்கும், மேலும் கேது திசைக்கு பிறகு வரும் சுக்கிரன் திசை ( 09/12/2025 முதல் 09/12/2045 வரை )  4ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் 100% விகித யோக பலனையே தருவது தங்களுக்கு செய்யும் தொழில் வழியில் இருந்து ராஜயோக பலன்களையும், அபரிவிதமான தொழில் வளர்ச்சியையும் வாரி வழங்கும், எனவே காலதாமதம் இன்றி உடனடியாக சுய தொழில் செய்வதற்கு உண்டான ஆயத்த பணிகளை மேற்கொள்ளுங்கள், இறைஅருள் தங்களுக்கு துணை நிற்கும் "வாழ்த்துக்கள்"

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696