சனி, 30 ஜூன், 2018

வாழ்க்கை துணையை ( மனைவி ) தேர்வு செய்வதில் தவறு இழைத்தால், வாழ்க்கை என்னவாகும்?


வாழ்க்கை துணையை ( மனைவி ) தேர்வு செய்வதில் தவறு இழைத்தால், வாழ்க்கை என்னவாகும்?

நிச்சயம் பேரிழப்பும், தாங்க இயலாத துன்பமுமே மிஞ்சும், " மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் " என்பது முற்றிலும் உண்மையானதே, ஓர் உடல் ஈருயிர் என்ற தத்துவத்தின் படி கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் சுபயோகங்களையும், அவயோகங்களையும் பெரும் நிலை இருவரது சுய ஜாதகத்திலும் உண்டாகும், தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமையுடன் இருப்பதும், நடைமுறையில் உள்ள திசாபுத்தியும், எதிர்வரும் திசா புத்தியும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது, தாம்பத்திய வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் நல்கும், மாறாக வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமை அற்றும், நடைமுறையில் உள்ள திசாபுத்தியும், எதிர்வரும் திசாபுத்தியும் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்துவது, தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்களையும், பாதிப்பு கடுமையாக இருப்பின் மணவாழ்க்கையில் பிரிவும், நிம்மதியற்ற சூழ்நிலையையும் உருவாக்கிவிடும், இதை கீழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம்
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 1ம் பாதம்.

ஜாதகிக்கு பெரும்பாலா வீடுகள் சத்ரு,ஆயுள் மற்றும் விரைய ஸ்தானத்துடனும், 5ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகிக்கு சிறப்பான நன்மைகளை  தரும் அமைப்பல்ல, குறிப்பாக  2,4,6,10ம் வீடுகளை தவிர மற்ற பாவகங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது ஜாதகுக்கு மிகுந்த இன்னல்களை தரும் அமைப்பாகும், ஜாதகி தனது விருப்பப்படி இல்லற வாழ்க்கையை புதன் திசை கேது  புத்தியில் தேர்வு செய்கிறார், புதன் தனது திசையில் ஜாதகிக்கு 5ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை தருவது, ஜாதகி சிந்திக்கும் திறனற்று செய்யும் காரியங்கள் வழியிலான இன்னல்களை புதன் திசையில் எதிர்கொள்ள தயார் நிலையில் நின்றிருப்பதை உறுதி செய்கிறது, கேது புத்தி ஜாதகிக்கு 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று திடீர் இழப்புகளையும், வாழ்க்கை துணை வழியிலான திடீர் பொருள் இழப்புகளையும், வாழ்க்கை துணைக்கு எதிர்பாராமல் வரும் பொருளாதர நெருக்கடிகளையும் பாரபட்சம் இன்றி வழங்குவதுடன், 12ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கும் ஜாதகரின் கணவரின் பேரில் இருந்த பூர்வீக சொத்துக்களை அனைத்தையும் மொத்தமாக இழந்து, பரதேச ஜீவனம் மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்குகிறது.

இவையெல்லாம் திருமணம் ஆனா 5 வருடங்களுக்குள் நடைமுறைக்கு வருகின்றது, தனது பூர்வீகத்தை விட்டு வெளியே வெகு தொலைவு சென்று ஜீவனம் மேற்கொள்ளும் சூழ்நிலையை, ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 200% விகிதம் பாதிக்கப்பட்ட 5ம் பாவக வழியில் இருந்தும், ஜாதகியின் கணவருக்கு சுய ஜாதகத்தில் 100% விகிதம் பாதிக்கப்பட்ட 5ம் பாவக வழியில் இருந்தும் பலாபலனாக நடைமுறைக்கு வருகின்றது, மேலும் ஜாதகிக்கு நடைபெறும் புதன் திசை 12ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை தருவது, ஜாதகியின் அறிவற்ற செயல்பாடுகளினால் அனைத்தையும் இழந்து தவிக்கும் சூழ்நிலையை தருகின்றது, அடிப்படையிலேயே ஜாதகிக்கு நிறைவான அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் 5ம் பாவக பாதிப்பினால் வலுவிழந்து நிற்பதால், ஆற்றில் அடித்து செல்லும் ஆலிலை போல் வாழ்க்கையில் தன்வசமும், கணவர் வசமும் இருந்த சொத்துக்கள், இடம், நிலம் போன்றவற்றை இழந்து தவிக்கும் சூழ்நிலையை தந்தது. அடிப்படையில் ஜாதகிக்கும், ஜாதகியின் கணவருக்கும் நடைபெற்ற திசாபுத்திகள் சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக பலனை ஏக காலத்தில் ஏற்று நடத்தியது ஜாதகிக்கும், ஜாதகியின் கணவருக்கும் குறுகிய காலத்தில் இல்லற வாழ்க்கையில் மனக்கசப்பையும், கடும் துன்பத்தையும் வாரி வழங்க ஆரம்பித்தது, தம்பதியர் இருவரும் எதிர்பாராத விஷயமாகும்.

பொருளாதார  சீர்குலைவு ஏற்பட்டால் இல்லற  வாழ்க்கையில் மகிழ்ச்சி எது ? அதுவே இவர்களது வாழ்க்கையிலும் நடைமுறைக்கு வந்தது, புதன் திசையில் சந்திரன் புத்தியில் இருவரும் ஆளுக்கொரு இடமாக பிரிந்து சென்றனர், ஜாதகி 5மாத கர்ப்பிணி என்ற சூழ்நிலையிலும் பிரிவை தவிர்க்க இயலவில்லை, இது  குழந்தை பிறப்பிற்கு பிறகும் 5 வருடங்கள் நீடித்தது என்பது கவனிக்கத்தக்கது, பிறந்த குழந்தையின் ஜாதகமும், பெற்றோருக்கு சாதகமான நன்மைகளை  தரவில்லை, பொருத்தமற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்யும்  பொழுது பிறக்கும் குழந்தையும் யோகமற்றதாக பிறக்க கூடும் என்பதற்கு மேற்கண்ட ஜாதகியே நல்ல உதாரணம், ஜாதகியின் குழந்தையின் ஜாதகத்திலும் பெற்றோரை குறிக்கும் 4,10ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெற்று இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

ஜாதகிக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள கேது திசை 12ம் வீடு பூர்வ புண்ணிய  ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 8ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 12,8ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை தருவது ஜாதகியின் இல்லற வாழ்க்கையை வெகுவாக பாதித்து இருக்கிறது என்பது வருத்தத்திற்கு உரியது, இருப்பினும் எதிர்வரும் சுக்கிரன் திசை ஜாதகிக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 4ம் பாவகம் விருச்சிக ராசியில் முழுவதும் வியாபித்து நிற்பது திடீர் அதிர்ஷ்டம் என்ற வகையில் சுபயோக சுக வாழ்க்கையை வாரி வழங்கும், எனவே ஜாதகி சுக்கிரன் திசை தரும் சுபயோக பலன்களை தனது வாழ்க்கை துணையுடன் சேர்ந்து பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு நலம் பெறுக, " வாழ்த்துகள் "

குறிப்பு :

எந்த காரணத்தை கொண்டும் சுய ஜாதகம் வலிமையற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்வது என்பது, இல்லற வாழ்க்கையில் சிறப்பை தாராது, பெரும்பாலும் விருப்ப திருமணங்கள் சுய ஜாதக வலிமையற்று அமைவதாலே பிரிவு என்ற நிலைக்கு ஆர்ப்படுகின்றனர், மேலும் தனது சந்ததிகளுக்கும் பெரும் துன்பத்தை தருகின்றனர், நமது வாழ்க்கை எப்படி இருப்பினும், நமது சந்ததியின் வாழ்க்கை சிறப்பாக அமைவது அவசியமாகிறது இதை கருத்தில் கொண்டாவது, விருப்ப திருணம் செய்வோர் சரியான தீர்வுகளை தேடுவது நன்மையை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 28 ஜூன், 2018

ராகுகேது தோஷம் என்ன செய்யும் ? திருமணம் தாமதமாக ராகுகேது தோஷம் காரணமாக இருக்கின்றதா ?


 கேள்வி :

 ஐயா வணக்கம்.என் மகனின் ஜாதகம் அனுப்பி உள்ளேன். 6 வருடமாக பெண் பார்த்து வருகிறேன் எதுவும் அமையவில்லை. 2ல் கேதுவும், 8ல் ராகுவும் இருப்பதல் திருமணம் நடக்க வாய்ப்பு குறைவு என்று கூறுகிறார்கள். அவர்கள் சொன்ன எல்லா பரிகாரங்களும் செய்து விட்டேன். தங்கள் என்ன காரணம் என்று பார்த்து கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பதில் :

2ல் கேதுவும், 8ல் ராகுவும் இருப்பதல் திருமணம் நடக்க வாய்ப்பு குறைவு என்பது தவறான கருத்தாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஏனெனில் தங்களது மகனின் ஜாதகத்தில் பாவக அமைப்பின் படி லக்கினம் எனும் முதல் பாவகம் கன்னி ராசியில் 167:04:58 பாகையில் ஆரம்பித்து, துலாம் ராசியில் 197:29:04 பாகைவரை வியாபித்து நிற்கிறது, கேது பகவான் லக்கினத்திற்கு உற்ப்பட்ட 195:14:48 பாகையில் அமர்ந்து இருப்பதே சரியானது, மேலும் ராகு பகவானும் களத்திர ஸ்தானத்திற்கு உற்ப்பட்ட 15:14:48 பாகையில் அமர்ந்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது, மேலும் சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவாக அமைப்பிற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் இருப்பது வரவேற்கத்தக்கது, எனவே ஜாதகருக்கு ராகு கேது யாதொரு இன்னல்களும்  தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து தரவில்லை என்பதை கருத்தில் கொள்க, மேலும் சுய ஜாதகத்தில் லக்கினத்தில் கேது, களத்திர ஸ்தானத்தில் ராகு என்பதே சரியான நிலை, அடுத்து தங்களது மகனுக்கு திருமணம் தாமதமாக காரணம் என்ன ? என்பதை இன்றைய சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பரே !



லக்கினம் : கன்னி
ராசி : மிதுனம்
நட்ஷத்திரம் : புனர்பூசம் 2ம் பாதம்

தங்களது மகனின் ஜாதகத்தில் 7ல் அமர்ந்த ராகு சம்பந்தப்பட்ட பாவகத்திற்கு வலிமை சேர்க்கும் அமைப்பில் இருந்தாலும், பாவக தொடர்பு வழியில் கடுமையாக பாதிக்கப்படுவது ஜாதகருக்கு உகந்ததல்ல, சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு 3,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் வரும் தடை தாமதத்திற்கு அடிப்படை காரணமாக விளங்குகிறது, ஒருவரது சுய ஜாதகத்தில் எந்த காரணத்தை கொண்டும் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12ம் வீடுகள் பாதிக்கப்படுவது நல்லதல்ல, அதுவும் தங்களது ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், 8ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், தங்களுக்கு கடுமையான நெருக்கடிகளை தரும் அமைப்பாகும்.

கடந்த சனி திசை தங்களது மகனுக்கு 3,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை வாரி வழங்கியது திருமண வாழ்க்கை சார்ந்த முயற்சிகள் யாவிலும் பெரும் தோல்வியை தந்து இருக்க கூடும், தற்போழுது நடைமுறையில் உள்ள கேது புதன்  திசை 12ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முதலீடு செய்வதால் வரும் அதிர்ஷ்டத்தை மட்டுமே வழங்குகிறது, புதன் திசை கேது புத்தி 6.10ம் வீடுகள் ஆயுள் ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும், 1,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் வழங்கி இருக்கின்றது, தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது தாங்கள் எடுக்கும் திருமண முயற்சிகளை வெகுவாக பாதிப்பதுடன், ஜாதகருக்கு எதிர்பாலின அமைப்பினரிடம் இருந்து இன்னல்களையும் தரும்.

தங்களது மகனுக்கு திருமண முயற்சிகளை மேற்கொள்ளும் முன் முறையாக ஜாதக ஆலோசனை பெற்று, அதன் பிறகு முயற்சி செய்து நலம் பெறுங்கள்.

குறிப்பு :

 ஜாதகருக்கு களத்திர ஸ்தான பாதிப்பு என்பது மிகுந்த இன்னல்களை ( 200% விகிதம் ) தரும் அமைப்பில் உள்ளதால், சரியான தீர்வை தேடுவதே தங்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும், மேலும் ஜாதகருக்கு 6 பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதும், எதிர்வரும் சந்திரன் செவ்வாய் புத்திகள் வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது மிகுந்த இன்னல்களை தரும் என்பதால், முறையாக  ஜாதக ஆலோசணை பெற்று நலம் பெறுக.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 26 ஜூன், 2018

" தத்து பரிகாரம் " செய்வது எங்களது குழந்தைக்கும், எங்களுக்கும் சுபயோகங்களை வழங்குமா ?


கேள்வி :

 எங்களது குழந்தையின் ஜாதகத்தில் கிரகங்கள் பாதிப்பில் உள்ளதாலும், பெற்றோரை குறிக்கும் 4,9ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாலும் எங்களது குழந்தைக்கும், எங்களுக்கும் கடுமையான இன்னல்களை தரும் என்றும், குழந்தைக்கு தற்பொழுது நடைபெறும் சனி திசை பெற்றோரான எங்களிடம் இருந்து பிரிவினையை தரும், எனவே எங்களது பெற்றோரிடம் குழந்தை வளர்வதே தங்களுக்கு நல்லது என்கின்றனர், மேலும் குழந்தையை "தத்து" பரிகாரம் செய்து கொடுப்பதே அனைத்திற்க்கும் தீர்வாக அமையும் என்கின்றனர், இது உண்மையா? எங்களது குழந்தையை தத்து பரிகாரம் செய்து கொடுக்கலாமா ? தத்து பரிகாரம் முறையாக செய்வது எப்படி ? தெளிவான விளக்கம் தர வேண்டுகின்றேன்.


பதில் :

 மேற்கண்ட உதாரண ஜாதகமே "தத்து" பரிகாரம் செய்வதற்க்கான அனைத்து தகுதியும் உள்ள ஜாதகம் அன்பரே.

 தங்களது குழந்தையின் ஜாதகத்தில் தத்து பரிகாரம் செய்வதற்கான சிறு பாதிப்பு கூட இல்லை, அதற்க்கான அவசியமும் இல்லை என்பதே உண்மை நிலை, எனவே  தங்களது குழந்தையை தத்து பரிகாரம் செய்துதரவேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை என்பதை உணருங்கள், மேலும் தங்களது குழந்தையின் ஜாதகத்தில் 1,4,5,7,9,10 ம் வீடுகள் அனைத்தும் லாப ஸ்தானமான 11ம்  பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதுடன் 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  சுக ஸ்தானமான கடக ராசியில் வியாபித்து நிற்பது தங்களுக்கும், தங்களது குழந்தைக்கும் சுபயோக பலாபலன்களையே வாரி வழங்கும், மேலும் நடைபெறும் சனி திசை குழந்தைக்கு 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் நன்மைகளை தருவது சிறப்பு மிக்க கல்வி காலத்தையும், கல்வியில் தேர்ச்சியையும், ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, தெளிவான சிந்தனை, தெளிந்த நல்லறிவு என்றவகையில் நன்மைகளை வாரி வழங்கும் என்பதால் தாங்கள்  யாதொரு மனவேதனையும் கொள்ளாமல், தங்களது குழந்தையை தாங்களே பாசமுடன் வளர்ப்பது நல்லது என்பதை கருத்தில் கொள்ளுங்கள், குழந்தையின் ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கும்  4,10ம் வீடுகள்  மிகுந்த வலிமையுடன் இருப்பது தங்களுக்கே சிறப்பான அதிர்ஷ்டத்தை தரும் என்பதை நினைவில் கொண்டு நலம் பெறுங்கள்.

மேற்கண்ட உதாரண ஜாதகரை ஏன்? தத்து பரிகாரம் செய்யவேண்டும் என்பதை சற்று விரிவாக இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! 

லக்கினம் : துலாம் 
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : ரேவதி 3ம் பாதம் 

பொதுவாக சுய ஜாதகத்தில் தாய்,தந்தையை குறிக்கும் பாவகங்களான 4,10ம் வீடுகள் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே அவரை  தத்து பரிகாரம் செய்து தரவேண்டும், குறிப்பாக 4,10ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது,  சத்ரு ஸ்தானமான 6ம் பாவக தொடர்பை பெறுவது, திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக தொடர்பை பெறுவது, விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது, போன்றவை மட்டுமே குழந்தை மற்றும் பெற்றோருக்கு இடையிலான உறவில் பிரிவு, மிகுந்த இன்னல்கள், போராட்ட வாழ்க்கை, ஆயுள் பங்கம் என்றவகையில் சிரமங்களை தரக்கூடும், அதுவும் குழந்தைக்கு நடைமுறையில் உள்ள திசாபுத்திகள், மேற்கண்ட பாதிப்பை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே தீய பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், என்பதை கருத்தில் கொள்க. 

உதாரண ஜாதகத்தில்  4,10ம் வீடுகள்  பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது அடிப்படையிலேயே பெற்றோருக்கு கடுமையான இன்னல்களை தரும் அமைப்பாகும், இது ஜாதகருக்கும் ஜாதகரின் பெற்றோருக்கும் 200% விகித இன்னல்களை வாரி வழங்கும், பெற்றோருடன் சேர்ந்து ஜீவிக்க இயலாத நிலை, பெற்றோருக்கு வரும் பொருளாதர இன்னல்கள், நிலையற்ற தன்மையிலான வாழ்க்கை,  ஜாதகருக்கு வரும் உடல் மன நலம் சார்ந்த பாதிப்பு, போராட்ட வாழ்க்கை, ஒவ்வொரு விஷயத்தையும் போராடி பெறவேண்டிய நிலை, என்ற வகையில் பாதிப்பை தரும், மேலும் லக்கினம் விரைய ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகருக்கு  வளரும் சூழ்நிலையில் எதிர்பாராத பாதிப்புகளை சந்திக்கும் நிலையினை தரும், எடுக்கும் முயற்சிகள் தடைபெறும், அதிர்ஷ்டமின்மை ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், மேலும் நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது, ஜாதகரே விருப்பப்பட்டாலும், தனது பெற்றோருடன் ஜீவிக்க இயலாது என்பது கவனிக்கத்தக்கது.

இதுபோன்ற நிலையை கொண்ட ஜாதகரை அவர்களது பெற்றோர், தமது குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திற்கு தத்து பரிகாரம் செய்து தருவது, சிறப்பான நன்மைகளை ஜாதகருக்கும், ஜாதகரின் பெற்றோருக்கும் வாரி வழங்கும், ( என்ன செய்வது ஜாதகருக்கு கொஞ்சம் வயது அதிகம் ) எனவே தத்து பரிகாரம் செய்யுமுன் சுய ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கும் பாவகங்கள், லக்கினம், பூர்வ புண்ணியம், பாக்கிய ஸ்தான வலிமையை கருத்தில் கொண்டு தத்து பரிகாரம் செய்வது சிறப்பை தரும்.

குறிப்பு :

கன்னி லக்கினம், மிதுன ராசி, திருவாதிரை நட்ஷத்திரம் கொண்ட  தங்களது குழந்தையின் ஜாதகத்தில், பெரும்பாலான பாவக தொடர்புகள் மிகவும் வலிமையுடன்  உள்ளது, மேலும் பெற்றோரை குறிக்கும் 4,10ம் வீடுகள் மிக வலிமையுடனும், லக்கினம், பூர்வ புண்ணியம், பாக்கிய ஸ்தானம் போன்றவை மிகுந்த வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது, தவறான அறிவுரையின் பேரில் தங்களது குழந்தையை தத்து பரிகாரம் செய்துவிடாதீர்கள், ஏனெனில் குழந்தை வழியிலாக வரும் சுபயோகங்கள் தங்களுக்கு கிடைக்காமல் விரையமாகிவிட அதிக வாய்ப்பு உள்ளது, எனேவ தங்களது குழந்தையுடன் சேர்ந்து வாழ்ந்து சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ணமாக பெறுங்கள் என்பதே " ஜோதிடதீபம்" வழங்கும் துல்லியமான ஆலோசனை வாழ்த்துகள்

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

திங்கள், 25 ஜூன், 2018

சனி மகாதிசை தரும் அவயோக பலன்களும் ! பூர்வபுண்ணியம் கெட்டதால் வரும் பாதிப்புகளும் ( 5ல் கேது ) !

   

  சனி திசை நடைபெறுவதால், கடுமையான இன்னல்களை கடந்த பல வருடங்களாக சந்தித்து வருகின்றேன், சனி திசை ஆரம்பத்தில் புதிதாக வண்டிவாகன தொழிலில் ஈடுபட்டு, பெருத்த நஷ்டமே உண்டானது  5ல் கேது நின்று பூர்வீகம் கெட்டதால் பூர்வீகத்தில் குடியிருக்க வேண்டாம், இதுவே தங்களது தொழில் நஷ்டத்திற்கு காரணம் என்ற ஜோதிடரின் அறிவுரையின் படி,  எனது பெற்றோரின் நிலபுலன்கள் யாவையும் விற்றுவிட்டு தொழில் வழியிலான கடனை நிவர்த்தி செய்துவிட்டு, வெளியூர் சென்று குடியேறினோம்,  பூர்வீக இடமும் இல்லமால், துவங்கிய தொழில் வழியிலும் நஷ்டம் அடைந்து, பெரும் கடனாளியானது மட்டுமே மிச்சம், இவையெல்லாம் பூர்வீகம் கெட்டதால் வந்த இன்னல்களா? அல்லது சனிதிசை தரும் கெடு பலன்களா? பூர்வீகத்தை விட்டு வெளியில் வந்தும் யாதொரு முன்னேற்றமும் இதுவரை இல்லை, எனது ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை என்ன ? தற்போழுது வயது 43 இதுவரை பொருளாதார வசதிகளை எதுவும் பெற இயலவில்லை, இறுதிவரை இப்படியே இருக்குமா ? புதன் திசையாவது நன்மைகளை தருமா ? 


 ஜோதிட  ஆலோசணை, நமது வாழ்க்கையில் வரும் இன்னல்களை களைந்து, சுபயோக சுக வாழ்க்கையை நல்கும் அட்ஷய பாத்திரமாகும், துல்லியமான ஜாதக கணிதம் நிச்சயம் நம் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை, நமது அறிவுரையை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, தமது வாழ்க்கையை சிறப்பாக துவங்க இருக்கும் அன்பர்களுக்கு முரண்பட்ட பலாபலன்களை கூறி அவர்களை இன்னலுற செய்வது என்பது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும், தங்களது வாழ்க்கையிலும் இதுபோன்ற நிகழ்வே நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கின்றது, அடிப்படையில் தங்களது ஜாதக வலிமையை பற்றி ஏதும் அறியாமல் கூறிய ஜாதக ஆலோசணையின் பெயரில் தாங்கள் அனைத்தையும் இழந்து நிற்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்பதை அறிவுறுத்த "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது, மேலும் இதற்க்கு முன் தங்களுக்கு வழங்கிய ஜாதக ஆலோசணை முற்றிலும் தவறானது என்பதை சிறு விளக்கங்களுடன் இன்றைய பதிவில் நாம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !

5ல் கேது  :


தங்களது ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5ம் வீடு மேஷ ராசியில் 027:58:59 பாகையில் ஆரம்பித்து ரிஷப ராசியில் 054:33:30 பாகைவரை வியாபித்து நிற்கிறது, கேது பகவான் மேஷ ராசியில் உள்ள நான்காம் பாவகத்திற்க்கு உற்ப்பட்ட  020:37:30 பாகையில் 100% விகித வலிமையுடன் அமர்ந்திருக்கிறது, எனவே அடிப்படையில் 5ல் கேது என்பதே தவறான ஜாதக கணிதமாகும், சுக ஸ்தானமான நான்காம் பாவகத்தில் கேது அமர்ந்து இருப்பதே உண்மை நிலை, தங்களது சுய ஜாதகத்தில் 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது, குறிப்பாக தங்களின் 5ம் பாவகம் மேஷ ராசியில் 2 பாகைகளும், ரிஷப ராசியில் 24 பாகைகளையும் கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது, பெரும்பாலும் 5ம் பாவகம் ரிஷப ராசியிலே வியாபித்து நிற்கிறது, ரிஷபம் கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு 2ம் ராசியாகவும், குடும்பம் தனம் என்ற அமைப்பில் இயங்குவதாலும், தங்களின் அறிவும், அறிவார்ந்த செயற்பாடுகளும் தங்களின் பூர்வீகத்தில் ஜீவிக்கும் பொழுதே பரிபூர்ணமாக கிடைக்கும், பூர்வீகத்தை விடுத்து வெளியில் சென்று தொழில் மேன்மை பெறுவதுஎன்பது சிறிதும் இயலாத காரியமாகும்.

  ஏனெனில் தங்களது பூர்வீகத்தை விட்டு வெளியில் செல்வது தங்களின் அறிவு திறன் சமயோசித புத்திசாலித்தனம் இரண்டையும் கடுமையாக பாதிக்கும், ஒருவருக்கு சுய அறிவும், புத்திசாலித்தனமும் மங்கும் பொழுது பெரியளவிலான வெற்றிகளை பெற இயலாது, என்பது கவனிக்க தக்கது, தங்களது சுய ஜாதகத்திலே மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்பாக இதை கருதலாம் என்பதால், பூர்வீகத்தில் தங்களது ஜீவன வாழ்க்கையை இனிவரும் காலங்களிலாவது துவங்குவது சிறப்பான வெற்றிகளை தரும், அதற்க்கான வாய்ப்புகளை நடைபெறும் சனி திசையில் ராகு புத்தி 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களை தருவது விழிப்புணர்வுடன் தாங்கள் கவனிக்கவேண்டிய சிறப்பு அம்சமாகும் அன்பரே ! தங்களது ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் 100% விகித வலிமையுடன் இருப்பது பூர்வீக ஜீவனத்தில் சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும்.

சனி திசையால் பாதிப்பா ?

 தங்களது ஜாதகத்தில் சனி திசை ( 17/05/2003 முதல் 17/05/2022 வரை ) நடைமுறையில் உள்ளது , நடைபெறும் சனி மஹா திசை தங்களுக்கு 2,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களை நல்குவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் கன்னி ராசியில் 2 பாகைகளையும், துலாம் ராசியில் 28 பாகைகளையும் கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இது தங்களுக்கு வியாபாரம், ஏற்றுமதி இறக்குமதி தொழில், கமிஷன் தொழில், தானிய வியாபாரம், உலோக வியாபாரம், கனிம பொருட்கள் சார்ந்த வியாபாரம் என வியாபாரம் மற்றும் பொதுமக்கள் சார்ந்த வழியிலான தொழில் விருத்தியை வாரி வழங்கும், எனவே தங்களது பிறப்பின் சாராம்சம் தாங்கள் ஓர் வியாபாரியாக பரிணமிக்க வைக்கும் என்பதால் அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு, மேன்மை அடைய ஜோதிடதீபம் அறிவுரை வழங்குகிறது, சனி திசை சனி புத்தி காலத்தில் தங்களது முன்னேற்றம் என்பது 2,11ம் வீடுகள் வழியில் இருந்து 10ம் பாவக பலனை விருத்தியுடன் வழங்க ஆரம்பித்து இருக்கின்றது, சனி புத்திக்கு அடுத்து வந்த புதன் புத்தி தங்களுக்கு 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று திடீர் இழப்புகளை பெரிய அளவில் வாரி வழங்கியது தங்களது வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களை தந்து விட்டது என்ற போதிலும், 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடன் கொடுத்தவருக்கு  பூர்வீக இடத்தை விற்று கடனை அடைத்தது தங்களது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது ஓர் நன்மை தரும் அமைப்பாகும்.

சனி திசை தங்களுக்கு 2,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களையே வாரி வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது, இருப்பினும் தங்களது சுய ஜாதகத்தில் 1,4,6,7,10,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் இருந்து ( 1,4,6,7,10,12 ) 200% விகித இன்னல்களை தந்தது தங்களுக்கு மீள இயலாத துன்பத்தை தந்திருக்கிறது, அதாவது லக்கினம் பாதிப்பது உடல் மனம் சார்ந்த இன்னல்களையும், சரியான திட்டமிடுதல்கள் இல்லாத தன்மையையும், வருமுன் காக்கும் வல்லமை அற்ற தன்மையையும் தருகின்றது, 4ம் பாவக வழியில் இருந்து வண்டி வாகன இழப்பு, சொத்து வீடு  நிலம் போன்றவை திடீர் இழப்பு அல்லது தாமாகவே இழந்து நிற்கும் தன்மை, யாதொரு சுகபோகமும் அனுபவிக்க இயலாத நிலை, குணம் சார்ந்த பாதிப்பு என்ற வகையிலும், 6ம் பாவக வழியில் இருந்து கடன், நோய் பாதிப்பு, தேவையற்ற விஷயங்களை செய்து கடனாளியாக மாறும் தன்மை, மற்றவர் சொல்வதை செய்து கடனாளியாக மாறும் நிலை, சுய அறிவு திறன்  பாதிப்பு, எதிரி தொல்லை, போராட்டமே வாழ்க்கை, மற்றவருக்கு ஜாமீன் கொடுப்பதால் வரும் இன்னல்கள் என்ற வகையிலும்.

 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை வழியிலான பாதிப்பு, முரண்பட்ட எதிர்பாலின சேர்க்கையின் மூலம் வரும் பொருளாதர இழப்புகள், கூட்டு முயற்சியினால் வரும் பெரும் நஷ்டம், கூட்டாளியால் பாதிப்பு, அவர்கள் வழியிலான தீய பழக்க வழக்கங்களை மேற்கொண்டு இன்னலுறும் தன்மை, போதிய தெளிவில்லாத செயல்பாடுகள் என்ற வகையிலும், 10ம் பாவக வழியில் இருந்து சுய தொழில் செய்வதற்கான அருகதையை இழத்தல், கவுரவம் அந்தஸ்து பாதிப்பு, முன்னேற்ற தடை, செய்யும் தொழில் வழியிலான கடுமையான பாதிப்பு, தொழில் முடக்கம், முதலீடு செய்த அனைத்தையும் இழந்து நிற்கும் சூழ்நிலை, சுய தொழில் வழியிலான முன்னேற்ற தடைகள் என்ற வகையிலும், 12ம் பாவக வழியில் இருந்து பெருத்த நஷ்டம், பேரிழப்பு, சொத்து சுகம் அனைத்தையும் இழந்து தவிக்கும் நிலை, போராட்ட வாழ்க்கை, தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகுதல், தெளிவில்லாத மனநிலை, மனஉளைச்சல், போராட்டம், எதிர்ப்புகளை சமாளிக்க வலிமை அற்ற தன்மை, தற்கொலை மனநிலை என்றவகையில் இன்னல்களை தரும்.

தங்களது ஜாதகத்தில் கிட்டத்தட்ட 6 பாவகங்கள் பாதக ஸ்தானத்துடனும், 1பாவகம் ஆயுள் ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த இன்னல்களை தரும் அமைப்பாகும், சனி திசை தங்களுக்கு வலிமை பெற்ற பாவக பனை வழங்கிய போதிலும், புதன்,கேது,சுக்கிரன்,செவ்வாய் மற்றும் குரு புத்திகள் பாதக ஸ்தான பலனையும் பாதிக்கப்பட்ட 8ம் பாவக பலனையும் ஏற்று நடத்தியது தங்களது வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களை வாரி வழங்கி விட்டது, எனவே பாதிக்கப்பட்ட பாவக பலன்கள் நடைமுறைக்கு வரும் பொழுது விழிப்புணர்வுடன் செயல்பட்டு இன்னல்களில் இருந்து தப்பிப்பதே தங்களுக்கான சிறந்த வழியாகும், மேலும் எதிர்வரும் புதன் திசை 8ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை தந்த போதிலும், 3,9ம் பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை தருவது வரவேற்கத்தக்கது, எனவே சிறு வியாபாரம் அல்லது வியாபாரம் போன்றவற்றை செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் பெற " ஜோதிடதீபம் " வாழ்த்துகிறது.

தற்போழுது நடைபெறும் ராகு புத்தி தங்களுக்கு 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையை தருவது தங்களுக்கு மேன்மையான சிறப்புகளை தரும் என்பதால் தங்களது பூர்வீகத்திற்க்கு அருகில் வந்து சுபயோக சுக வாழ்க்கையை பெறுங்கள், மேலும் தங்களது ராகு புத்தி 5ம் பாவக வழியில் இருந்து ஓர் நிலையான வருமான வாய்ப்பை வாரி வழங்கும் என்பதால் அது சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டு பொருளாதர முன்னேற்றத்தை பெற " ஜோதிடதீபம் " அறிவுரை வழங்குகிறது, சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பின் பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்றால் கடுமையான பாதிப்பை தந்து விடும், அதேபோன்று சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் பாதிக்கப்பட்டு இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் பூர்வீகத்தில் இருந்தால் கடுமையான பாதிப்பை சந்திப்பார், தங்களது ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமையுடன் இருப்பதால் பூர்வீகத்தில் குடியேறி நலம் பெறுங்கள்.

குறிப்பு :

 மேற்க்கண்ட ஜாதகருக்கு கேது 5ல் அமர்ந்து இருப்பதால் பூர்வீகம் பாதிக்கப்பட்டு உள்ளது என்பது முற்றிலும் தவறானது, சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் வலிமையுடன் அமர்ந்து இருப்பது கவனிக்கத்தக்கது, இருப்பினும் பாவக கணிதம் சார்ந்த அமைப்பில் 4ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 200% இன்னல்களை தரும், 4ல் அமர்ந்த கேது ஜாதகருக்கு பரிபூர்ண சொத்து சுக சேர்க்கையை வழங்கிய போதிலும், 4ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால் அதில் ஒரு சிறு துரும்பை கூட ஜாதகரால் அனுபவிக்க இயலாத தன்மையை  தந்திருப்பது கண்கூடான உண்மையாகும், மேலும் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் ஸ்திர தன்மை அற்றவர் என்பதை கட்டியம் கூறுகிறது, ஜாதகர் விழிப்புணர்வுடன் செயல்படவில்லை எனில் உடுத்த உடைகூட இல்லமால் போய்விடும், அதற்க்கு ஜாதகரே காரணமாக இருப்பர் என்பது கூர்ந்து கவனிக்கவேண்டிய அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 23 ஜூன், 2018

2ல் அமர்ந்த ராகு மஹா திசை தரும் பலாபலன்கள் என்ன ? எதிர்காலம் எப்படி இருக்கும் ?

 

 சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்வது என்பது ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும், அதே சமையம் தான் அமர்ந்த பாவகத்தை வலிமை இழக்க செய்வது, மிகுந்த துன்பத்தையும் இன்னல்களையும் தரும், இது சாயா கிரகங்கள் தனது திசா புத்தி அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் நடைமுறைக்கு கொண்டு வரும் என்று கருதுவது முற்றிலும் தவறான கருத்தாகும், சுய ஜாதகத்தில் ராகுகேது தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்க்கும் அமைப்பில் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, தனது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது. இது பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : தனுசு
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : பூரம் 4ம் பாதம்

ஜாதகரின் கேள்வியே தவறானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, 2ல் அமர்ந்த ராகு என்பது முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானது, ஏனெனில் ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் தனுசு ராசியில் 265:42:51 பாகையில் ஆரம்பித்து, மகர ராசியில் 297:15:08 பாகை வரை வியாபித்து நிற்கிறது, ராகு பகவான் இந்த லக்கினத்திற்கு உற்ப்பட்ட 295:26:18 பாகையிலும், கேது களத்திர ஸ்தானத்திற்கு உற்ப்பட்ட 115:26:18 பாக்கையிலும் அமர்ந்து இருப்பதால் தங்களது சுய ஜாதகத்தில் ராகு கேது முறையே லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதே உண்மை நிலை, எனவே ராகு கேது அமர்வு என்பது 1,7ம் வீடுகளில் என்பதால் 1ல் அமர்ந்த ராகு மஹா திசை தரும் பலாபலன்கள் என்ன ? எதிர்காலம் எப்படி இருக்கும் ? என்று வினவுவதே மிகச்சரியானதாக அமையும்.

 தங்களது ஜாதகத்தில் ராகு பகவான் உயிர் உடலாகி லக்கினம் எனும் முதல் பாவகத்தில் 100% விகித வலிமை பெற்று அமர்ந்து இருப்பதால் , தங்கள் லக்கின பாவக வழியில் இருந்து நல்ல ஆரோக்கியம், மனவலிமை, பொறுமை, சகிப்புத்தன்மை, சிறந்த செயல்திறன், நீண்ட ஆயுள், புகழ் வெற்றி கீர்த்தி போன்ற நன்மைகளை பரிபூர்ணமாக  சுவீகரிக்கும் வல்லமை உடையவராக திகழ்வீர்கள், மேலும் லக்கினத்தில் அமர்ந்த ராகு சம்பந்தப்பட்ட பாவகத்தை 100% விகித வலிமையை தருவதால், ஆராய்ச்சி மனப்பக்குவம், நினைத்ததை சாதிக்கும் யோகம், வருமுன் காக்கும் வல்லமை, விரைவான செயல்பாடுகள் மூலம் வெற்றியை பறிக்கும் யோகம், மனதிற்கும் புலனிற்கும் எட்டாத விஷயங்களை ஆய்வு செய்து, அதன் வழியிலான நன்மைகளை பெரும் யோகம் என்றவகையில் சிறப்புகளை தரும், தங்களின் திட்டமிடுதல்கள் யாவும் நல்ல வெற்றியையும் லாபத்தையும் தரும். ஆக சுய ஜாதகத்தில் லக்கின பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான் தங்களுக்கு தான் அமர்ந்த அமைப்பில் இருந்து சிறப்பான நன்மைகளையே வாரி வழங்குகின்றார், இனி ராகு தனது திசையில் தரும் பலன்கள் என்ன ? என்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !

ராகு திசை தரும் பலன்கள் (  22/08/2017 முதல் 23/08/2035 வரை )

தங்களது ஜாதகத்தில் ராகு லக்கின பாவகத்தில் அமர்ந்து 100% விகித வலிமையுடன் இருந்த போதிலும், தனது திசையில் 2,5,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ராகு தசை 2,5,8 பாவக பலாபலன்களை  ஏற்று நடத்துவது தங்களுக்கு உகந்ததல்ல, 2ம் பாவக வழியில் இருந்து தங்களுக்கு தனவரவு அதிகரித்த போதிலும், வீண் விரையம், அதிக செலவினங்கள், வாக்கு குடும்பம் சார்ந்த அமைப்பில் இருந்து இன்னல்களையும் துன்பங்களையும் தரும், குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை தரும், 5ம் பாவக வழியில் இருந்து துயரம், தடங்கல், எதிர்த்து போராடும் வல்லமை குறைவு, குலதெய்வ சாபம், எதிர்பாரத அவமானம் மற்றும் புகழுக்கு களங்கம், சோர்வு, மனஉளைச்சல், வீண்கவலை, விபத்து, மனம் ஒரு நிலையில் இல்லாமல், முடிவுகளை தவறாக மேற்கொள்ளும் தன்மை, உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலை, நம்பிக்கை குறைவு, தனது முயற்சி வீணாகும் தன்மை என்றவையில் இன்னல்களை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுளை தந்த போதிலும், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது தங்களுக்கு உகந்த நன்மைகளை தரும், தேவையற்ற மருத்துவ செலவுகள், அவசியமற்ற வாக்குவாதம், உறுதியற்ற மனநிலை, எதிர்பாலின சேர்க்கை மூலம் வரும் இன்னல்கள், முரண்பாடான கருத்துக்களால் ஏற்படும் பேரிழப்பு, உடல் மற்றும் மனநலம் கடுமையாக பாதித்தல் என்ற வகையில் இன்னல்களை தரும், வண்டி வாகனங்களில் மிகுந்த பொறுமையுடன், அதிக பாதுகாப்புடன் இயக்குவது சகல நலன்களையும் தரும், பெரிய அளவிலான முதலீடுகள் கடும் பாதிப்பை தரக்கூடும், சுய ஜாதகம் வலிமை பெற்ற ஜாதகியை வாழ்க்கை துணையாக தேர்வு செய்வது அவசியமாகிறது.

எதிர்காலம் தங்களுக்கு ராகு திசை ராகு புத்திக்கு பிறகு மிகவும் சிறப்பாகவே இருக்கும், ராகு திசையில் ராகு புத்தி மற்றும் சனி புத்தி காலங்கள் மட்டும் சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட ஆயுள் மற்றும் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது என்பதால், இந்த காலகட்டங்கள் மட்டுமே தங்களுக்கு மிகுந்த நெருக்கடிகளை தரக்கூடும், வலிமையற்ற 2,3,5,8ம் பாவக வழியிலான இன்னல்களை தாங்கள் சுவீகரிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது மிகுந்த சிறப்பை தருவதுடன், முன்னேற்றகரமான நன்மைகளை தரும்.

குறிப்பு :

 ஜாதகத்தில் நவகிரகங்கள் காலபுருஷ தத்துவ அமைப்பிற்க்கு பெரும் வலிமை  ( ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் ) போன்றவை சுய ஜாதகத்திற்கு யாதொரு நன்மை தீமையும் நல்காது, லக்கினத்திற்கு நவகிரகங்கள் தனது பாவக வழியில் இருந்து பெரும் வலிமை, லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள்  பெரும் தொடர்பு நிலையே சுய ஜாதகத்தை ஆளுமை செய்யும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது, மேலும் தங்களது ஜாதகத்தில் லக்கினத்தில் வலிமை பெற்று அமர்ந்த ராகு, தனது திசையில் வலிமையற்ற பாவக தொடர்பை ஏற்று பலாபலன்களாக வாரி வழங்குவது நன்மை தரும் அமைப்பல்ல, என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 22 ஜூன், 2018

பொருத்தமற்ற கணவரை தேர்வு செய்துவிட்டேனா ? மணமுறிவுக்கு காரணம் என்ன ?



 திருமணம் நடைபெற்று 1 வருடம் கூட நிறைவு பெறவில்லை, இல்லற வாழ்க்கையில் மனக்கசப்பு, எங்களது விருப்பப்படி காதல் திருமணம் செய்துகொண்டோம், இருப்பினும் விவாகரத்து கேட்கிறார், என்னிடம் தவறு உள்ளதா? அல்லது எனது கணவரிடம் தவறு உள்ளதா? நிறைய ஜோதிடர்களை கண்டும் தெளிவான ஜாதக பலனையே இதுவரை அறிய இயலவில்லை, பொருத்தமற்ற கணவரை தேர்வு செய்துவிட்டேனா ? மணமுறிவுக்கு உண்மையான காரணம் என்ன ? தயவு செய்து சரியான விளக்கங்களை தர வேண்டுகின்றேன், ஏதாவது பரிகாரம் மேற்கொண்டால் சேர்ந்து வாழ்வதற்கு வழியுண்டா? தயவு செய்து கூறவும்.


லக்கினம் : மீனம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : பரணி 1ம் பாதம்

வணக்கத்திற்கு உரிய சகோதரி அவர்களுக்கு, இன்றைய எந்திரவியல் வாழ்க்கையில் இல்லறம் நல்லறமாக அமைவதற்கு அடிப்படை தகுதியே பெண்களின் விட்டுக்கொடுக்கும் தன்மை, சகிப்பு தன்மை, தாய்மை உள்ளம், பொறுமை, அனைவரையும் அனுசரித்து செல்லும் குணம், பெருந்தன்மையான நடவடிக்கைகள், கணவர், குழந்தைகள் மற்றும் புகுந்த வீட்டில் உள்ள அனைவரிடமும் அன்பு காட்டுதல் போன்றவையே என்றால் அது மிகையில்லை, தங்களது இல்லற வாழ்க்கை மணமுறிவை நோக்கி செல்வதற்கு காரணம் என்ன ? என்பதை பற்றி தாங்களே ஓர் சுய மதிப்பீடு செய்துகொள்வது நல்லது, உதாரணமாக தங்களது செயல்பாடுகள் பற்றிய மதிப்பீடுகள் தங்களுக்கு உண்மையை உணரவைக்கும், இருப்பினும் தங்களது சுய ஜாதகத்தில் உள்ள பாவக தொடர்புகள் வழியிலான பலாபலன்களை மணமுறிவுக்கு காரணம் என்ன? என்பது பற்றியும் விளக்கம் தர "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது, தங்களது ஜாதக வலிமையை பற்றியும், தங்களது வாழ்ககை துணையின் ஜாதக வலிமை பற்றியும் மேலோட்டமாக இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

தங்களது சுய ஜாதகத்தில் பாவக தொடர்புகளின் வலிமை நிலை :

1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு மேற்கண்ட பாவாக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும். ( அடிப்படையே சறுக்குகிறது )

2,5,8,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து 100% விகித நன்மைகளை தரும். ( 11ம் பாவகம் சர ராசியான மகரத்தில் 22 பாகைகளையும், ஸ்திர ராசியான கும்பத்தில் 9 பாகைகளையும் கொண்டிருப்பது அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை பரிபூர்ணமாக தரும் )

3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களை மிக கடுமையாக வாரி வழங்கும்.

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு சிறப்பான யோக பலன்களை சுக ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், மேலும் தங்களது நல்ல குணம் மற்றவர்கள் வழியில் இருந்து நன்மைகளை சுவீகரிக்கும் வல்லமையை தரும்.

அடிப்படையில் தங்களது கணவரது ஜாதகத்தை விட தங்களது ஜாதகம் சற்று வலு குறைவாகவே காணப்படுகிறது, குறிப்பாக 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு இல்லற வாழ்க்கையில் மனக்கசப்பையும், பிரிவு நிலையையும் ஏற்படுத்த காரணமாக அமைகிறது, தாங்கள் தேர்வு செய்த இல்லற வாழ்க்கைக்கான துணை சரியானது என்ற போதிலும், தங்களது சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான வலிமை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது, தங்களுக்கு இனிமையான இல்லற வாழ்க்கையை நல்காது என்பதுடன், வரும் பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாக தாங்களே இருப்பீர்கள் என்பதே உண்மை நிலை, மேலும் 3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து கடுமையான மன உளைச்சலையும், மன போராட்டத்தையும் தரும், 3ம் பாவக வழியில் இருந்து ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மையை குறைக்கும், 6ம் பாவக வழியில் இருந்து உடல் நலம் மனநலம் கெடும், 9ம் பாவக வழியில் இருந்து பெரியவர்கள் அறிவுரை வீணாகும், அவப்பெயர் உண்டாகும், 12ம் பாவக வழியில் இருந்து தாம்பத்தியம், மனப்போராட்டம், நிம்மதியின்மை அதிகரிக்கும்.

எனவே அடிப்படையில் தங்களது ஜாதகமே இல்லற வாழ்க்கையில் மணமுறிவுக்கு காரணமாக அமைகிறது என்பதை தாங்கள் உணர்வது அவசியமாகிறது, தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவகத்தை தவிர மற்ற பாவகங்கள் மிக மிக வலிமையுடன் இருப்பது கவனிக்கத்தக்கது, இது தங்களுக்கு கிடைத்த ஓர் வரப்பிரசாதம் ஆகும், தங்களது ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட களத்திர ஸ்தானம் தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் மிகவும் சிறப்பாக இருப்பது கவனிக்கத்தக்கது எனவே, பாதக ஸ்தான தொடர்பு வழியில் இருந்து வரும் சந்தேகம், தவறான புரிதல், பிடிவாதம், வீண்வாதம் போன்ற வற்றை களைந்து, தங்களது வாழ்க்கை துணையுடன் பல்லாண்டு கால வாழ "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.

தங்களது சுய ஜாதகத்தில் அதிர்ஷ்டம் என்று அழைக்கப்படும் லாப ஸ்தானம் மிகவும் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, இதை அறியாமல் தங்களது லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானம் தரும் பாதக ஸ்தான பலனை முன்னிறுத்தி உங்களது யோக வாழ்க்கைக்கு தாங்களே மூடுவிழா நடத்திவிடாதீர்கள், தங்களின் சகிப்பு தன்மையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் தங்களது இல்லற வாழ்க்கையை மீண்டும் சிறப்பாக அமைத்து தரும் என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள், தற்போழுது நடைமுறையில் உள்ள 3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 12ம் பாவக பலனை முழுவீச்சில் நடத்துவதே, தங்களது இல்லற வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைகிறது, எனவே மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தங்களது அறிவுத்திறன் கொண்டும், பெரியோர்கள் அறிவுரை கொண்டும் வெற்றிபெறுங்கள்.

தற்போழுது நடைபெறும் சூரியன் திசையில் சனி புத்தி 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளை தருவது மீண்டு இல்லற வாழ்க்கையில் சிறந்த துவக்கத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் தாங்கள் குடியிருக்கும் வீடு வடக்குதிசை வாயிற்படி கொண்டதாக அமைவது சகல சௌபாக்கியங்களையும் தரும், சுகபோக யோக வாழ்க்கைக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து தரும்.

பரிகாரம் :

 தங்களின் மனமாற்றமே சிறந்த பரிகாரமாகும், இருப்பினும் சர்ப்ப சாந்தி பரிகாரமும், பிராமண ஆசிர்வாதமும் தங்களது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், இல்லற வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கும், சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் துன்பங்களுக்கும் சரியான தீர்வை தரும், சனி வக்கிரக நிவர்த்தி திருவக்கரை சென்று செய்து வருவது சகல நிலைகளில் இருந்தும் சுபயோகங்ளை வாரி வழங்கும், வாழ்த்துகள்

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696 

வியாழன், 21 ஜூன், 2018

ஜாதக பலாபலன்களை துல்லியமாக அறிவது எப்படி ? சுக்கிரன் திசை என்ன செய்யும் ? எனது ஜாதகத்திற்கு பலன் கூற இயலுமா ?


 ஒருவரது சுய ஜாதகத்திற்கு துல்லியமான பலாபலன்கள் காண நமக்கு தேவையான அடிப்படை குறிப்புகள் 1) சரியான பிறந்த தேதி 2) சரியான பிறந்த நேரம் 3) சரியான பிறந்த இடம் ஆகிவை ஆகும், இதன் அடிப்படையில் கணிதம் செய்யும் ஜாதகத்தை கொண்டே நாம் துல்லியமான பலாபலன்கள் காண இயலும், மேலும் மேற்கண்ட குறிப்புகளை கொண்டு கணிதம் செய்யப்படும் ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை தெளிவாக அறிந்துகொள்ள முடியும், தற்போழுது நடைமுறையில் உள்ள திசா புத்திகள் சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் பற்றி அறிந்துகொள்ள முடியும், கோட்சார கிரகங்கள் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு தரும் நன்மை தீமை பற்றி துல்லியமாக அறிந்துகொண்டு, சுய ஜாதகத்திற்க்கான சரியான பலாபலன்களை மிக துல்லியமாக எடுத்துரைக்க இயலும்.

சுய ஜாதக பலாபலன்கள் பற்றி  தெரிந்துகொள்ள நாம் சம்பந்தப்பட்ட ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை பற்றி தெளிவாக கணிதம் செய்து அறிந்துகொள்வது நல்லது, அதன் பிறகு நடைபெறும் திசா புத்திகள் அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் எந்த எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகளுக்கு கோட்சார கிரகங்கள் தரும் வலிமை வலிமை அற்ற தன்மையை பற்றி தெளிவாக உணர்ந்து, சம்பந்தப்பட்ட நபருக்கு ஜாதக பலன்களை கூறுவதே அவரது வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், உதாரணமாக தங்களது ஜாதகத்தையே இன்று சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !


லக்கினம் : மீனம் 
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : ரேவதி 2ம் பாதம்.

தங்களது ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,2,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்திலே மிகுந்த வலிமையுள்ள பாவக தொடர்புகள் ஆகும், அது தரும் யோக பலன்களை பிறகு ஆய்வு செய்வோம்.

3,9ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வரவேற்கத்தக்கது.

4ம் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுகபோக வாழ்க்கையை 4ம் பாவக வழியில் இருந்து தரும் .

5,7ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான யோகங்களை தரும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜீவன ரீதியான மேன்மையை பரிபூர்ணமாக தரும்.

தங்களது ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது விரைய ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும்.

தங்களது ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் 6,12ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் வலிமையுடன் காணப்படுகிறது, குறிப்பாக 1,2,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாக எடுத்துக்கொள்ளலாம், மேலும் தங்களின் ஜாதகத்தில் 11ம்  பாவகம் மீன ராசியில் 259:51:54 பாகையில் ஆரம்பித்து மகர ராசியில் 298:57:55 பாகையில் நிறைவு பெறுவதும் லாப ஸ்தானம் பெரும் பகுதி சர ராசியான மகரத்திலே வியாபித்து நிற்பது தொடர்பு பெரும் வீடுகள் வழியில் இருந்து 100% விகித சுபயோகங்களை தன்னிறைவாக வாரி வழங்கும்.

மேற்கண்ட விஷயங்கள் தற்போழுது முக்கியமல்ல, தற்போழுது நடைபெறும் திசா புத்திகள், எதிர் வரும் திசா புத்திகள் தங்களுக்கு சுய ஜாதகத்தில் எந்த எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது, அந்த பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும்  பலாபலன்கள் என்ன ? என்பதே தங்களின் நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை பற்றி தெளிவாக உணர்ந்து, சரியான திட்டமிடுதல்களுடன் வாழ்க்கையை மிக இலகுவாக முன்னேற்ற பாதையில் எடுத்து செல்ல இயலும்.

தற்போழுது தங்களுக்கு சுக்கிரன் திசை( 13/02/2017 முதல் 13/02/2037 வரை )  நடைபெறுகிறது, நடைபெறும் சுக்கிரன் திசையில் சுய புத்தி ( 13/02/2017 முதல் 15/06/2020 வரை ) நடைமுறையில் உள்ளது இது தங்களுக்கு ஏக காலத்தில்  1,2,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 4ம் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் சுபயோக சுப வாழ்க்கையை சுக ஸ்தானம், ஜீவன ஸ்தானம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ணமாக வாரி வழங்குவது மிகுந்த யோகத்தை நல்கும் அமைப்பாகும், எனவே சரியான பருவ வயதில் சுக்கிரன் திசை அமைப்பில் இருந்து முழு யோகங்களையும் சுவீகரிக்கும் வல்லமை கொண்டவராக திகழ்வது தங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும்  வாரி வழங்கும் அமைப்பாகும்.

சுய ஜாதகத்தில் யோகங்கள் இருப்பது முக்கியமல்ல ( பாவக வலிமை ) நடைமுறையில் எதிர்காலத்தில் உள்ள திசா புத்திகள் யோகம் பெற்ற பாவக தொடர்பை ஏற்று நடத்துவதே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யோகம் பெற்ற பாவக வழியிலான நன்மைகளை நடைமுறைக்கு கொண்டு வரும் என்பதற்கு இணங்க தங்களது ஜாதகத்தில் தற்போழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசைசுக்கிரன் புத்தி வலிமை பெற்ற 4,10,11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது தங்களுக்கு அளவிலா நன்மைகளை வாரி வழங்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, எனவே சுக்கிரன் திசை தரும் யோக பலாபலன்களை 4,10,11ம் பாவக வழியில் இருந்து சுவீகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வாழ்க்கையை சிறப்பாக வாழ " ஜோதிடதீபம் " வாழ்த்துகிறது.

குறிப்பு :

 தங்களது சுய ஜாதகத்தில் 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 12ம் வீடு சர ராசியான மகரத்தில் 1பாகையையும், மீனத்தில் 3பாகைகளையும் கொண்டிருப்பது, தங்களது வாழ்க்கையில் வரும் அதிர்ஷ்டங்களை வீணடிக்கும் தன்மை பெற்றவர் என்பதை அறிவுறுத்துகிறது, மேலும் தங்களது உடல் மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவில்லை எனில் வரும் பேரிழப்புகளை தவிர்க்க இயலாது, குறிப்பாக தாங்கள் எதாவது தீய பழக்க வழக்கத்திற்கு ஆர்பட்டவராக இருப்பின் சுய ஜாதகத்தில் உள்ள சுபயோகங்கள் யாவும் யோக பங்கமாகி, வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை சுவீகரிக்க இயலாத சூழ்நிலையை உருவாக்கும் என்பதை கருத்தில் கொள்க என்று "ஜோதிடதீபம்" முன் எச்சரிக்கை செய்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 20 ஜூன், 2018

சுய தொழில் அல்லது கூட்டு தொழில் செய்யலாமா ? திருமணம் அமைவது எப்பொழுது ?


கேள்வி : 

எனது ஜாதகப்படி நான் சுய தொழில் செய்யலாமா ? அல்லது கூட்டு தொழில் செய்யலாமா ? திருமணம் அமைவது எப்பொழுது? இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்குமா ? 5ல் கேது புத்திர தோஷத்தை தருமா ? நடை பெரும் சூரியன் திசை, எதிர்வரும் சந்திரன் திசை தரும் பலாபலன்கள் என்ன ? எதிர்காலம் யோகமிக்கதாக அமையுமா ?

பதில் :

தங்களது ஜாதக வலிமை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளும் முன் நாம் சில விஷயங்களை கருத்தில் எடுத்துக்கொள்வது நல்லது, ஒருவரது சுய ஜாதக வலிமை என்பது லக்கினம் உற்பட பனிரெண்டு பாவகங்களின் வலிமையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது, மேலும் சுய ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பது வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், நடைபெறும் எதிர்வரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமங்கள் ஏற்று நடத்தும் பாவக வலிமையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஜாதகர் யோக அவயோக பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவராகிறார், இனி தங்களது ஜாதக வலிமை பற்றியும், தங்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் பற்றியும் சற்று விரிவாக பார்ப்போம்.


லக்கினம் : மகரம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஷ்வினி 3ம் பாதம்

எனது ஜாதகப்படி நான் சுய தொழில் செய்யலாமா ? அல்லது கூட்டு தொழில் செய்யலாமா ?

பொதுவாக சுய தொழில் செய்வது அல்லது கூட்டு தொழில் செய்வது இரண்டும் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் அமைவதே சகல நிலைகளில் இருந்தும் சிறப்புகளையும் லாபங்களையும் வாரி வழங்கும், தொழில் நிர்ணயம் என்பது ஜீவன ஸ்தானம் எனும் ஒரு பாவகத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு இயங்குவதல்ல, லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் அடிப்படையிலேயே தொழில் மற்றும் அதுசார்ந்த வெற்றிகள்   ஒருவருக்கு சிறப்பாக அமையும், கேந்திர பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகருக்கான கவுரவம் அந்தஸ்து சுயமரியாதையை உறுதிப்படுத்தும், கோண பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகருக்கான அறிவார்ந்த செயல்கள், புத்திசாலித்தனம், தொழில் நுணுக்கம் மற்றும் இறை அருளின் கருணையை உறுதிப்படுத்தும், மறைவு ஸ்தானங்கள் ஜாதகருக்கான அளவில்லா பொருளாதர வெற்றியையும், நிம்மதி மற்றும் நிதான செயற்பாடுகளை உறுதிப்படுத்தும், தொழில் வெற்றிகளை 100% விகிதம் பெற ஓர் ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையும் அதி அவசியமானதாக உள்ளது, இந்த அமைப்பை பெரும் ஜாதகரே மிகசிறந்த தொழில் அதிபராக பிரகாசிக்கும் வல்லமையை பெறுகின்றார்.

 தங்களது ஜாதகத்தில் அப்படிப்பட்ட  ஓர் வலிமையான நிலை இருப்பது வரவேற்கத்தக்கது, தாங்களும் ஓர் தலைசிறந்த தொழில் அதிபராக விளங்குவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பரே ! மேலும் தங்களது சுய ஜாதகத்தில் பாவக வலிமை என்பது மிகவும் அபரிவிதமானதாக அமைந்து இருப்பது வரவேற்கத்தக்கது, அதுபற்றி இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

சுய ஜாதகத்தில் வலிமையான பாவக தொடர்புகள் :

 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து ஆரோக்கியமான உடல், தெளிவான மனம், கூட்டாளியால் யோகம், நன்பர்கள் வழியிலான நன்மைகள், வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் அதிர்ஷ்டம் மற்றும் லாபம், எதிர்பாலின சேர்க்கை பொதுமக்கள் ஆதரவு, அரசு பதவி, சிறந்த நிர்வாக திறமை, விரோதிகள் மறைந்து நன்மை உண்டாகுதல் என்ற வகையிலும், 7ம் பாவக  வழியில் இருந்து சக்தி நிறைந்த கூட்டு தொழில் அல்லது கூட்டாளி, யோகம் நிறைந்த வாழ்க்கை துணை, பொதுமக்கள் ஆதரவு, செய்தொழில் வழியில் பிரபல்ய யோகம், வியாபாரத்தில் அபரிவித வளர்ச்சி என்ற அமைப்பில் நன்மைகளை வாரி வழங்கும்.

2,3,8,12ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து மண் மனை வண்டி வாகன யோகம், கனிம பொருள் சார்ந்த வியாபாரத்தில் வெற்றி, தாய் வழியிலான சொத்துக்களை நிர்வகிக்கும் யோகம், இனிமையான பேச்சு திறன், வாக்கு வன்மை, உறுதிமிக்க செயல்பாடுகள் என்ற வகையிலும், 3ம் பாவக வழியில் இருந்து மண் மனை வண்டி வாகன யோகம், முதுமையில் செல்வாக்கு, பெண்கள் ஆதரவு, போட்டி பந்தயங்களில் வெற்றி, போக்குவரத்து தொழில் வழியில் லாபம், முயற்சி செய்யும் காரியங்கள் வெற்றி பெரும் தன்மை, விவசாயம் மூலம் வருமானம், அரசியல்வாதிகள் மூலம் லாபம் பெரும் தன்மை, தைரியம், தன்னம்பிக்கை, சுய ஆளுமை திறன், வெற்றி பெரும் வல்லமை என்ற வகையிலும், 8ம் பாவக வழியில் இருந்து விபத்து, எதிர்பாராத திடீர்இழப்பு, மருத்துவ செலவினங்கள், குழப்பம், வியாதி, மனஇறுக்கம் எல்லாவகையிலும், 12ம் பாவக வழியில் இருந்து மண் மனை வண்டி வாகனம் சார்ந்த விஷயங்களில்  முதலீடு செய்யும் யோகமும், அதன் வழியிலான முன்னேற்றங்களும், விவசாயம் அல்லது விவசாய உபகரணம் சார்ந்த பொருட்கள் வழியிலான அதிர்ஷ்டம் மற்றும்  லாபம் உண்டாகும்.

10,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 10ம் பாவக வழியில் இருந்து உத்தியோக வெற்றி, சுய தொழில் விருத்தி, வியாபாரம் மற்றும் தொழில் முதலியவற்றில் அபரிவித அதிர்ஷ்டம் மற்றும் வெற்றி, கம்பீரம் தீர்க்கமான வாத திறமை, சுய தொழில் செய்வதால் செல்வச்செழிப்பு என்றவகையிலும், 11ம் பாவக வழியில் இருந்து மிகப்பெரிய பதவிகளை அலங்கரிக்கும் யோகம், அரசு மற்றும் தனியார் துறை வழியிலான அதிஷ்டம், தகப்பனாருக்கு சொத்து சுக சேர்க்கை, சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் சாதனை படைக்கும் வல்லமை, முற்போக்கு சிந்தனை, நேர்மறை எண்ணம் மூலம் வாழ்க்கையில் சகல யோகங்களையும் பெரும் தன்மை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

5,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு ஆரோக்கியமான உடல் நிலை, தெளிவான மனநிலை, சிறந்த மனவலிமை, அதிபுத்திசாலித்தனம், பல்துறை ஆய்வுத்திறன், அமைதியான சூழ்நிலையை விரும்புதல், எப்பொழுதும் மகிழ்ச்சி, சமாதான விருப்பம், சுய ஒழுக்கம் மற்றும் நற்பண்புகள் என்ற வகையிலும், 6ம் பாவக வழியில் இருந்து பயணம் மூலம் லாபம், சமாதான முறையில் வெற்றி, மதசம்பதமான யோக வாழ்க்கை, பட்டய கல்வியில் தேர்ச்சியை தரும், 9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறந்த பண்புகள் அடிப்படையிலே அமைந்து இருக்கும், ஒழுக்கம் மற்றும் பண்பு நிறைந்த மனம், அனைவரையும் தம்மைப்போல் கருதும் சமதர்மத்தை போற்றும் தன்மையை பெற்றவராக திகழ்வார்.

4ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு விபத்து, மருத்துவ செலவினங்களை தரும், தனது பெயரில் உள்ள சொத்துக்களை இழக்கும் தன்மை, இளமையில் போராட்டம், நஷ்டம், வறுமை, துரதிர்ஷ்டம், மனக்குழப்பம், அதிக வேலைப்பளு என்றவகையில் இன்னல்களை தரும்.

தங்களது சுய ஜாதகத்தில் 4,8ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது, மேலும் பெரும்பாலான வீடுகள் தொடர்பு பெரும் 4,7,10ம் பாவகங்கள் அனைத்தும் சர இயக்க ராசிகளான மேஷம் கடகம் மற்றும் துலாம் ராசியில் வியாபித்து நிற்பது பரிபூர்ண நன்மைகளை தங்களுக்கு வாரி வழங்கும், மேலும் ஜீவன ஸ்தானம் கால  புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியாக அமைவது தங்களை மிகசிறந்த வியாபாரியாக பிரகாசிக்க செய்யும், துலாம் சர காற்று ராசி என்பதால் தங்களின் தொழில் சார்ந்த அறிவு திறன் மற்றும் நுண்ணறிவு மிகசிறந்த எதிர்காலத்தை வாரி வழங்கும்.

 சுய ஜாதகத்தில் பெரும்பாலான வீடுகள் வலிமையாக  உள்ளதால் சுய தொழில்  செய்வதே சிறப்பான நன்மைகளை தரும், பரிபூர்ண வெற்றியும் உண்டாகும், கூட்டு தொழில் வழியிலான வெற்றி மேலும் சிறப்பானதாகவே அமையும் என்பது கவனிக்கத்தக்கது, தங்களின் விருப்பம் சார்ந்த முடிவுகளை மேற்கொண்டு நலம் பெறுங்கள்.

திருமணம் தங்களுக்கு சூரியன் திசை புதன் புத்தி காலத்தில் நடைபெறும், சூரியன் திசையும், புதன் புத்தியும் ஏக காலத்தில் 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்துத்தரும், திருமணத்திற்க்கு பிறகான வாழ்க்கை யோகமிக்கதாக அமையும்.

5ல் அமர்ந்த கேது தாம் அமர்ந்த பாவகத்திற்க்கு வலிமை சேர்ப்பதால், 5ம் பாவகம் 100% விகித வலிமையுடன் இருக்கின்றது, எனவே தங்களுக்கு நல்ல புத்திர பாக்கியமும், ஆண் வாரிசும் அமையும்.

சூரியன் திசை தங்களுக்கு  1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலாபலன்களையே வாரி வழங்குவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

எதிர்வரும் சந்திரன் திசை 11ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் ரீதியான சுபயோகங்களை வாரி வழங்குவது வரவேற்கத்தக்கது.

குறிப்பு :

தங்களது சுய ஜாதக வலிமை மிகவும் அபரிவிதமானது, அதை கருத்தில் கொண்டு தங்களது வாழ்க்கையை வெகு சிறப்பாக அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுங்கள், மிகசிறந்த தொழில் அதிபராக பிரகாசிக்க " ஜோதிடதீபம் " தங்களுக்கு தனது சார்ப்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 18 ஜூன், 2018

வெளிநாடுகளில் யோக வாழ்க்கையை பெரும் ஜாதக நிலையும் ! புதன் திசை தரும் பொருளாதார தன்னிறைவும் !


  சுய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 7ம் வீடாகிய களத்திர ஸ்தானமும், 10ம் வீடாகிய ஜீவன ஸ்தானமும், 11ம் வீடாகிய லாப ஸ்தானமும் வலிமை பெறுவது ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வெளியூர், வெளிநாடு மற்றும் வியாபாரம் சார்ந்த வெற்றிகளை வாரி வழங்கும், குறிப்பாக சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் மிகவும் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு வெளிநாடு யோகம், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் என்ற வகையில் சிறப்புகளை தரும், தன்னிறைவான சுபயோகங்களை ஜாதகர் தங்கு தடையின்றி அனுபவிக்கும் வல்லமை உண்டாகும், மேலும் லக்கினம் வலிமை பெற்று இருப்பது ஜாதகர் வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கையை சுயமாக சுவீகரிக்கும் தன்மையை தரும், பிரபல்ய யோகம், சமூக அந்தஸ்து, மதிப்பு மரியாதை, வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் ஜாதகருக்கு கிடைக்கும் சுபயோக வாழ்க்கை என்ற வகையில் பரிபூர்ண நன்மைகளை தரும்.

 மேலும் சுய ஜாதகத்தில்  5,12ம் வீடுகள் வலிமை பெறுவது , 5ம் பாவக வழியில் இருந்து தனது அறிவு திறன் சமயோசித புத்திசாலித்தனம் மூலம் வெளிநாடுகளில் சிறப்பான யோக வாழ்க்கை பெறுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி தரும், ஜாதகரின் அறிவார்ந்த முயற்சிகள் மூலம் பொருளாதார ரீதியான வெற்றிகளை மிக எளிதாக பெறுவதற்கும், குடியுரிமை சார்ந்த நன்மைகளை பெறுவதற்கும் ஜாதகருக்கு ஓர் அங்கீகாரத்தை நல்கும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வெளிநாடுகளில் பெரும் பொருளாதர தன்னிறைவை குறிப்பதுடன், திருப்தியுடன் கூடிய நிம்மதிகாரமான யோக வாழ்க்கையை நல்கும், தெளிவான சிந்தனை நல்ல உறக்கம், மற்ற நாடுகளில் உள்ள சீதோஷன நிலையை ஏற்றுக்கொள்ளும் திரேகம், வேற்று மதத்தினர், வேற்று இனத்தினருடன் இணக்கமான உறவை கையாளும் வல்லமையை தருவதும் அயன சயன ஸ்தானத்தின் வலிமையே என்றால் அது மிகையில்லை. 


லக்கினம் : விருச்சிகம்
ராசி : கும்பம்
நட்ஷத்திரம் : பூரட்டாதி 2 பாதம்

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள், சிறந்த உடல் மற்றும் மனநலம், வளரும் சூழ்நிலையில் சிறப்பு, கல்வியில் மேன்மை, பொதுமக்கள் தொடர்பில் யோகம், சிறந்த நிர்வாக திறமை, தனித்தன்மையான ஆளுமை திறன், எதிர்ப்புகளை சந்தித்து வெற்றிகொள்ளும் யோகம், அனைவரின் ஆதரவையும் பெரும் யோகம், வசீகரிக்கும் செயல்பாடுகள், எதிர்பாலின அமைப்பினரிடம் இருந்து பெரும் நன்மைகள் என்ற வகையில் ஜாதகருக்கு சிறப்பை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் முன்னேற்றத்தை ஜாதகர் பரிபூர்ணமாக சுவீகரிக்கும் யோகம், பிரபல்ய யோகம், நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், வலிமை மிக்க கூட்டுத்தொழில், அதன் வழியிலான ஜீவன மேன்மை என்ற வகையில் சிறப்புகளை  தரும், ஜாதகருக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் ரிஷப ராசியில் 5 பாகைகளையும், மிதுன ராசியில் 23 பாகைகளையும் கொண்டு இருப்பது சிறப்பானது, ஜாதகரின் அறிவு திறன் வெளிநாடுகளில் சிறப்பான வரவேற்பை கொண்டுள்ளதாக அமைவதும், ஜாதகரின் சிறந்த மேலாண்மை திறன் வெளிநாடுகளிலேயே மிகவும் பிரகாசமாக அமைவதையும், ஜாதகர் தெளிவாக உணர்ந்துகொண்டு, அதன் வழியிலான வெற்றிநடை போடுவது வரவேற்கத்தக்கது,  ஜாதகரின் உழைப்பு மிக குறைவாக அமைந்த போதிலும் பெரும் நன்மைகள் அபரிவிதமானதாக இருப்பதற்கு காரணம் என்ன ? என்பதை அடுத்த வரிகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

ஜாதகரின் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் சிம்ம ராசியில் 3 பாகைகளையும், கன்னி ராசியில் 28 பாகைகளையும் கொண்டு இருப்பது சிறப்பான ஓர் விஷயமாக கருதலாம், இது ஜாதகருக்கு தொழில் நுட்பம் மற்றும் கைதேர்ந்த தொழில் மேலாண்மை திறனை வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது, பெரும்பாலும் கைதேர்ந்த, திறமை வாய்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த அறிவுத்திறன் மிக்க அனைவரும் பெரிய அளவிலான வெற்றிகளை பெற்று விடுகின்றனரா ? என்றால் இல்லை என்பதே பதில், ஆனால் இவர் அபரிவிதமான வெற்றிகளை குவிக்க மேற்கண்ட விஷயங்கள் மட்டுமே கைகொடுக்கவில்லை, ஆம் அதிர்ஷ்டம் என்பதே ஜாதகருக்கு மிதந்தமிஞ்சிய யோக வாழ்க்கையை வாரி வழங்கிக்கொண்ட இருக்கின்றது என்பதே உண்மை, திறமை மட்டும் இருப்பது ஜாதகருக்கு வெற்றிகளை தருவதில்லை, அதிர்ஷ்டம் எனும் 11ம் பாவக வலிமையே திறமைக்கான அங்கீகாரத்தை உலகிற்கு எடுத்துரைத்து, திறைமைக்கான அதிர்ஷ்ட வாழ்க்கையை நிலைநிறுத்துகிறது என்பதை அடுத்த வரிகளில் தெளிவாக காண்போம்.

ஜாதகருக்கு மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்றது, 30 % விகித நன்மைகளை தந்த போதிலும் 2,4,5,8,11,12ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் 100% விகித நன்மைகளை தருவதே ஜாதகரின் வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைகிறது, சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்துடன் 1,7ம் வீடுகள் சம்பந்தம் பெறுவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசி வலிமை பெறுவதும் ஜாதகரின் வெளிநாடு சார்ந்த அமைப்பில் இருந்து அதிர்ஷ்டத்துடன் கூடிய யோக வாழ்க்கையை வாரி வழங்குகிறது, 2,4,5,8,11,12ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 11ம் பாவகம் ஜாதகருக்கு கன்னி ராசியில் 1 பாகையில் ஆரம்பித்து 28 பாகைகள் துலாம் ராசியில் வியாபித்து நிற்பது கவனிக்கத்தக்கது, மேலும் லாப ஸ்தானத்துடன் பொருளாதர மேன்மை மற்றும் சுகபோகத்தை குறிக்கும் வீடுகள் யாவும் ( 2,4,5,8,11,12ம் வீடுகள் ) சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை மிக பெரிய அளவில் வாரி வழங்குவது கவனிக்கத்தக்கது.

ஒரு ஜாதகருக்கு மிதம் மிஞ்சிய செல்வவளத்தை தாறுமாறாக வாரி  வழங்கும் வல்லமை பெற்றது மறைவு ஸ்தானம் என்று உணரப்பட்ட 6,8,12ம் வீடுகளே, ஜாதகருக்கு வரும் பொருளாதார வளர்ச்சி எப்படி வந்தது என்று மற்றவர்கள் கண்டுஅறிய இயலாவண்ணம், ஜாதகருக்கு தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தை வாரி வழங்கும் வல்லமை பெற்றது மேற்கண்ட 6,8,12ம் வீடுகள், அப்படிப்பட்ட வீடுகள் எல்லாம் ஜாதகருக்கு அதிர்ஷ்ட ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கான பொருளாதார வெற்றியை எதிர்பாரா அளவில் நிர்ணயம் செய்துள்ளது என்பதே உண்மை, இதற்குஎல்லாம் சிகரம் வைத்தார் போல் அமைவதுதான் அடுத்து வரும் பத்திகளில் நமக்கு ஆச்சரியங்களை வழங்க இருக்கின்றது.

ஆம் ஜாதகருக்கு கடந்த சனி திசை 19 வருடமும், 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான  7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் , 4,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக சுப பலனை வாரி வழங்கியது இளமையில் சகல யோகத்தையும், திறமைக்கான வெற்றிகளையும் அங்கீகாரம் செய்தது, தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் திசை ஒருபடி மேலே சென்று 2,5,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அதிர்ஷ்டங்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது ஜாதகருக்கு நன்மையை தருகின்றது என்ற போதிலும், 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது, செல்வம், சுகபோகம் உண்டு ஆனால் வாரிசு இல்லை என்ற நிலையை தந்துள்ளது, 9ம் பாவகம் ஜாதகருக்கு கடக ராசியில் ஆரம்பித்த போதிலும் அதில் 5 பாகைகளையே கொண்டுள்ளது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணியமான சிம்மராசியில் 27 பாகைகளை கொண்டு 9ம் பாவகம் பாதக ஸ்தானமாக அமைவது ஜாதகருக்கு புத்திர பாக்கிய தடைக்கு அடிப்படை காரணமாக அமைகிறது என்பது இது தெளிவுபடுத்துகிறது.


குறிப்பு :

 சுய ஜாதகத்தில் அயல் தேச யோக வாழ்க்கையை குறிக்கும், 1,7,10,12ம் பாவகங்களுடன் அதிர்ஷ்டத்தை தரும் 11ம் பாவகமும் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு துலாம் ராசி  மற்றும் மீன ராசி வலிமையையும் நாம் கருத்தில் கொண்டு " திரைகடல் ஓடி திரவியம் தேடுவது " சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 17 ஜூன், 2018

ராகு மஹா திசை தரும் இன்னல்களும், திருமணம் தொழில் சார்ந்த தடைகளும் !


சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுபயோகங்களை நல்கும் அமைப்பாகும், மேலும் சாயா கிரகங்கள் தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது மிகுந்த சுபயோகங்களை வாரி வழங்கும், மாறாக சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமையற்று அமர்வதும், வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் கடுமையான இன்னல்களை ஜாதகருக்கு பாரபட்சம் பார்க்காமல் வாரி வழங்கிவிடும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மேஷம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : கிருத்திகை 2ம் பாதம் 

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 4ல் அமர்ந்த ராகு வளர்பிறை சந்திரன் என்பதால் தான் அமர்ந்த பாவகத்தை கடுமையான பாதிப்பிற்கு ஆளாக்குகிறார், பாவக தொடர்பு வழியில் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற போதிலும், தனது வீட்டிற்கு சத்ரு ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை தரும் அமைப்பாகும், சுக ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் யாதொரு நன்மையையும் பெற இயலாத சூழ்நிலையை தற்போழுது வரை பலாபலனாக வழங்கிக்கொண்டு இருக்கின்றது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியான கடகத்திலேயே, ஜாதகருக்கு சுக ஸ்தானம் முழுவதும் வியாபித்து நிற்பது சிறப்பானது என்ற போதிலும், ராகு பகவானால் 100% விகித பாதிப்பிற்கு உள்ளாவது ஜாதகருக்கான சுபயோகங்களை 4ம் பாவக வழியில் இருந்து வெகுவாக தட்டிப்பறிக்கும்.

ஜாதகர் மேற்கொண்ட வண்டிவாகனம் சார்ந்த தொழில்கள் யாவும் கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியது சுக ஸ்தானமான 4ம் பாவக பாதிப்பே அன்றி வேறுஎதுவும் இல்லை, பொதுவாக சுய ஜாதகத்தில் 4ம் பாவகம் அல்லது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியான கடகம்  கடுமையாக பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் தனது பெயரில் சொத்து சுகம், வண்டிவாகனம் மற்றும் வீடு நிலம் போன்றவற்றை வைத்திருப்பது நல்லதல்ல, மீறி வைத்திற்குக்கும் பொழுது ஜாதகருக்கு அது சார்ந்த நஷ்டங்களை தவிர்க்க இயலாது என்பது கவனிக்கத்தக்கது, இதை உணராமலும், நடைபெறும் ராகு திசை ஏற்று நடத்தும் பாவக வலிமையை பற்றி அறியாமலும், ஜாதகர் செய்த முதலீடுகள், ஆரம்பித்த தொழில், புதிதாக துவங்கிய காரியங்கள் யாவும் மிகுந்த நஷ்டத்தையே வழங்கியது, மேலும் ஜாதகருக்கு 37 வயது நிறைவடைந்ததும் திருமணம்  கைகூடி வரவில்லை என்பது வருந்தத்தக்கது.

ஜாதகருக்கு ராகு அமர்ந்த நிலையிலும் வலிமை பெறவில்லை, தனது திசையிலும் 2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, சம்பாதிக்கும் வருமானம், வரும் பொருள் வரவுகள் அனைத்தும் திடீர் இழப்பை தந்தது, ஜாதகரின் நிதி நிலைமை மிகவும் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தியது, ஜாதகருக்கு திடீர் மருத்துவ செலவினங்கள், எதிர்பாராத விபத்து , பொருளாதார சிக்கல்கள் யாவும் வாட்டி வதைத்தது, நிதி நிலையை சீர் செய்ய ஜாதகர் எடுத்த முடிவுகள், ஜாதகரின் பெற்றோர் சொத்துக்களுக்கும் இறையாயின , வீடு நிலம், தோட்டம் போன்றவை ஜாதகரின் கடன் பிரசனைகளுக்கு  ஈடாக அடமானம் வைக்கப்பட்டது, இவையெல்லாம் ராகு மகா திசை ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தியதே காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை சந்திரன் புத்தி 5,11ம் வீடுகள் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளை செய்வது, மேற்கண்ட பிரச்சனைகளில் இருந்து ஓர் பெரிய மனிதரின் ஆதரவில் மீண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்கிக்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது, சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து குல தெய்வ அருளாலும், பித்ருக்கள்  ஆசியாலும் மீண்டு வருவதற்கான சந்தர்ப்பங்களை நல்கிக்கொண்டு இருப்பது ஜாதகருக்கு கிடைத்த வரப்பிரசாதம், சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகரை ஏதாவது ஒரு வகையில் கஷ்டங்களில் இருந்து மீட்டுஎடுக்கும் என்பதற்கு மேற்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம், எதிர் வரும் செவ்வாய் புத்தி ஜாதகருக்கு 1,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மகர ராசியில் வியாபித்து நிற்பது ஜாதகருக்கான ஜீவன யோகத்தை பரிபூர்ணமாக தர தயார் நிலையில் இருப்பது கவனிக்கத்தக்கது, ஜாதகர் சர மண் தத்துவம் சார்ந்த தொழில்களை தேர்வு செய்து சிறப்பான நன்மைகளை பெற "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.

குறிப்பு :

 மேற்கண்ட ஜாதகருக்கு சாயா கிரகங்களில் ராகு மட்டும் பாதிப்பை அமர்ந்த நிலையிலும், தனது தசையிலும் கடுமையாக தரும் அமைப்பில் உள்ளது ஆனால் கேது அமர்ந்த நிலையில் மிகுந்த வலிமையுடனும், தனது திசையில்  6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  சர இயக்கத்தில் மகர ராசியில் இருந்து 100% விகித யோக பலன்களை வாரி வழங்குவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், எனவே ஜாதகருக்கு ராகு பாதிப்பை தந்த போதிலும், கேது அதற்க்கு நிகரான சுபயோகங்களை நல்குவது வரவேற்கத்தக்க விஷயமாகும், ஜாதகரின் முன்னேற்றம் கேது வின் மூலம் மிக  அபரிவிதமானதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்  
9443355696

சனி, 16 ஜூன், 2018

கூட்டு திசை பாதிப்பை தருமா ? நட்சத்திர பொருத்தம் மட்டுமே திருமண வாழ்க்கையில் வெற்றியை தருமா ?



கேள்வி :

கிழ்கண்ட குறிப்பு திருமண பொருத்தம் பார்த்த பொழுது வழங்கியது, நட்சத்திர பொருத்தம் சிறப்பாக உள்ளதாலும், தோஷ நிர்ணயம் சிறப்பாக உள்ளதாலும் திருமணம் செய்யலாம் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று கூறினார், இதைமட்டும் கருத்தில் கொண்டு திருமணம் செய்யலாமா, தம்பதியர் திருமணத்திற்கு பிறகு சிறப்பான இல்லற வாழ்க்கையை பெறுவார்களா ?  கூட்டு திசை பாதிப்பை தருமா ?  நட்சத்திர பொருத்தம் மட்டுமே திருமண வாழ்க்கையில் வெற்றியை தருமா ? சரியான பதில் எதிர்பார்க்கிறேன் .


பதில் :

 மேற்கண்ட திருமண பொறுத்த குறிப்பை வைத்துகொண்டு, திருமணம் செய்வதுதென்பது கல்லை கட்டிக்கொண்டு கடலில் குதிப்பதற்கு நிகரான பலாபலன்களை தந்துவிடும், மேலும் நட்சத்திர பொருத்தம் என்பது திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தருவதுதென்பது " காகம் அமர பனம்பழம் விழுந்த கதைதான் " திருமண வாழ்க்கையின் வெற்றியை நட்சத்திர பொருத்தமோ, கூட்டு திசையோ, கிரக தோஷ நிலையோ நிர்ணயம் செய்வதில்லை சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே நிர்ணயம் செய்கிறது என்பதனை உணருவது அவசியமாகிறது, தாங்கள் வழங்கியுள்ள பிறந்த குறிப்பை கொண்டு நமது உயர் கணித ஜோதிட முறைபடி பாவக வழிமையிலான பொருத்தத்தை தெளிவாக இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பரே !

பெண் ஜாதகம்

லக்கினம் : தனுசு
ராசி : விருச்சிகம்
நட்சத்திரம் : கேட்டை 2ம் பாதம்


ஆண் ஜாதகம்

லக்கினம் : தனசு
ராசி : கடகம்
நட்சத்திரம் : பூசம் 4ம் பாதம்


திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் பாவகங்கள் 2,5,7,8,12ம் வீடுகளாகும், மேற்கண்ட வது வரன் இருவரின் ஜாதகத்திலும் 2,5,7,8,12ம் வீடுகள் பெரும் தொடர்பு அது தரும் நன்மை தீமையை பற்றி சிந்திப்போம் அன்பர்களே !

பெண் ஜாதகத்தில்

2,5,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது, இது ஜாதகிக்கு 2ம் பாவக வழியில் திருமண தாமதம், குடும்ப வாழ்க்கையில் இன்னல்கள், போதிய வருமானம் இன்மை, ஸ்திர தன்மையற்ற வார்த்தைகள் என்ற விதத்திலும், 5ம் பாவக வழியில் இருந்து புத்திர பாக்கிய தடை, சமயோசித அறிவு திறனில் பாதிப்பு, கற்ற கல்வி வழியிலான யோக பலனை அனுபவிக்க இயலாத தன்மை, குலதெய்வ சாபம் என்ற வகையிலும், 8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள் என்ற போதிலும், திடீர் இழப்புகள், விபத்து, மருத்துவ செலவினங்கள், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார இன்னல்கள் என்ற வகையில் பாதிப்பை தரும்.

 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது இது ஜாதகிக்கு 12ம் பாவக வழியில் இருந்து கடுமையான மனஅழுத்தம், மன போராட்டம், அனைவராலும் தொல்லை, தாம்பத்திய வாழ்க்கையில் பாதிப்பு என்ற வகையில் இன்னல்களை தரும்

7ம் வீடு மட்டும் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் காணப்படுகிறது. இது ஜாதகிக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தரும், வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு மற்றும் யோக வாழ்க்கையை பெற்று தரும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்து சிறப்பான நன்மைகளை ஜாதகிக்கு பரிபூர்ணமாக வாரி வழங்கும்.


ஆண் ஜாதகத்தில் 

2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் காணப்படுகிறது. இது ஜாதகருக்கு நன்மையை தரும் அமைப்பாகும், 2ம் பாவக வழியில் இருந்து சிறந்த குடும்ப வாழ்க்கை, நிறைவான வருமானம், இனிமையான பேச்சு திறன், பொருளாதார தன்னிறைவு என்ற வகையில் சிறப்புகளை தரும், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறந்த புத்திர பாக்கியம், சமயோசித அறிவு திறன், தெய்வீக அனுக்கிரகம், கல்வி வழியிலான முன்னேற்றம் மற்றும் புத்திசாலித்தனத்தால் ஆதாயம் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும்.

8ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் காணப்படுகிறது, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார உதவிகள், வாழ்க்கை துணையின் சொத்துக்கள் கிடைத்தால், நீண்ட ஆயுள், திடீர் அதிர்ஷ்டம் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை சுவீகரிக்கும் வல்லமையை தரும்.

 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது. இது ஜாதகருக்கு 12ம் பாவக வழியில் இருந்து கடுமையான மனஅழுத்தம், மன போராட்டம், அனைவராலும் தொல்லை, தாம்பத்திய வாழ்க்கையில் பாதிப்பு என்ற வகையில் இன்னல்களை தரும், மேலும் இல்லற வாழ்க்கையில் அதிக அளவிலான மன உளைச்சலை தரும்.

7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகிதம் வலிமை அற்று காணப்படுகிறது, நல்ல வாழ்க்கை துணை அமைவது என்பது ஜாதகருக்கு குதிரை கொம்பாக அமையும், கூட்டாளிகள், நண்பர்கள், கூட்டு முயற்சி யாவும் ஜாதகருக்கு கடுமையான இழப்புகளையே ஏற்படுத்தும், வெளியூர் அல்லது வெளிவட்டார பழக்க வழக்கங்கள் ஜாதகருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை தரும், வலிமை அற்ற ஜாதகியை வாழ்க்கை துணையாக ஜாதகர் தேர்வு செய்தால், ஜாதகரின் இல்லற வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறிவிடும் என்பது கவனிக்கத்தக்கது.

கூட்டு திசை தரும் பலன்கள் :

 ஜாதகிக்கு நடக்கும் சுக்கிரன் திசை 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்த பெற்று யோக பலனையும், 2ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனையும் தருகின்றது.

 ஜாதகருக்கு நடக்கும் சுக்கிரன் திசை 5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களை தருவது சிறப்பான நன்மைகளை தரும்.

கூட்டு திசை தோஷம் என்பது நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவக பலன் பற்றி தெரியாத நிலையில் குத்துமதிப்பாக சொல்லப்படுவதாகும், கூட்டு திசை தோஷம் என்பது முற்றிலும் தவறான கருத்து, இதுபோன்ற அமைப்பு எந்த ஓர் ஜோதிட மூல நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை என்பதே உண்மை.

குறிப்பு :

ஜாதகருக்கு வயது 32, ஜாதகிக்கு வயது 26 இருவருக்கும் திருமணம் தாமதமாக அடிப்படை காரணமே சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் ( ஆண் ) குடும்ப ஸ்தானம் ( பெண் ) வலிமை அற்று இருப்பதே, மேலும் இருவரது ஜாதகமும் பாவக வழியில் பொருத்தம் இன்றி  முற்றிலும் முரண் பட்ட தன்மையில் இருப்பதால், இல்லற வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து, மன வாழ்க்கை முறிவு என்ற இறுதி நிலைக்கு கொண்டு செல்லும் எனவே திருமணத்தை தவிர்த்து, இருவரும் வலிமை பெற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்வதே சரியான தீர்வாக அமையும், தாங்கள் அனுப்பிய திருமண பொருத்தம் சார்ந்த குறிப்பை வைத்துகொண்டு திருமண வாழ்க்கையில் நுழைவது தம்பதியருக்கு இல்லற வாழ்க்கையில் பிரிவு என்ற நிலைக்கே அழைத்து செல்லும் என்பதை கருத்தில் கொண்டு முடிவெடுக்கவும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 15 ஜூன், 2018

தொழிலில் ஏற்படும் பேரிழப்பை உணர்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுவது எப்படி? இதை ஜாதக ரீதியாக அறிந்துகொள்ள இயலுமா ?



  இன்னும் நமது கிராமங்களில் " வல்லவனையும் தட்டுமாம் வழுக்குப்பாறை " என்று சிலேடையாக சொல்வதுடன், மிகுந்த தொழில் நுணுக்கம் கொண்டுள்ள ஒருவரை கூட மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி ஆரம்பித்த இடத்துக்கே கொண்டுவந்துவிடும் தன்மை பெற்றது "விதி" இதை மதியறிவு கொண்டு வெல்வது என்பது அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள 1,5,9ம் பாவகங்களின் வலிமை நிலையே என்றால் அது மிகையில்லை, ஒருவருக்கு வரும் யோக அவயோக நிலையை பற்றி வருமுன் தெளிவாக கட்டியம் கூற சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,5,9ம் பாவகங்களின் வலிமை நிலை அவசியமாகிறது, மேற்கண்ட பாவகங்களின் வலிமை, ஜாதகருக்கு எதிர்வர இருக்கின்ற நன்மை தீமையை பற்றி சுய அறிவுபூர்வமாகவோ, குல தெய்வ ஆசியின் மூலமாகவோ, ஆன்மீக பெரியவர்களின் அறிவுறுத்தல் மூலமாகவோ தெள்ள தெளிவாக எடுத்துரைத்து காக்கும், ஜாதகருக்கு வரும் இழப்பில் இருந்து பாதுகாப்பும், யோக அமைப்பில் இருந்து விழிப்புணர்வும் தந்து அருள் புரியும், ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : துலாம் 
ராசி : கடகம் 
நட்ஷத்திரம் : ஆயில்யம் 

 மேற்கண்ட துலா லக்கின ஜாதகருக்கு லக்கினாதிபதி மற்றும் ஆயுள் ஸ்தான அதிபதியான சுக்கிரன் திசை 20/05/1998 முதல் 20/05/2018 தற்போழுது நடைமுறையில் உள்ளது, இந்த சுக்கிரன் திசை ஜாதகருக்கு 3,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான யோக பலனை பாக்கிய ஸ்தான வழியில் இருந்து தந்து கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க தக்க நன்மைகளை தருவதாகும், குறிப்பாக சுக்கிரன் திசையில் சனி புத்தி 20/03/2011 முதல் 20/05/2014 வரை ஜாதகருக்கு 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சிறப்பான ராஜ யோக பலனை 2,4,10 பாவக வழியில் இருந்து வாரி வழங்கி இருக்கிறது சுக்கிரன் திசை ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து எதிலும் வெற்றி, புத்தி கூர்மை மூலம் ஆதாயம், சகல சௌபாக்கியம், போக்குவரத்து, ஏஜென்சி துறை லாபம், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான நன்மைகள், வியாபார விருத்தி, நல்ல  சிந்தனைகள் தரும் வெற்றி, கனிம சுரங்க பொருட்கள் மூலம் லாபம், நுண்ணறிவு திறன்  மூலம் பெரும் அதிர்ஷ்டங்கள் என்ற வகையிலும், 5ம் பாவக வழியில் இருந்து மிகுந்த மனவலிமை, விரைவாக சிறந்த முடிவுகளை மேற்கொள்ளும் வல்லமை அதன் வழியிலான முன்னேற்றங்கள், சமயோசித புத்தி சாலித்தனம், ஆய்வு திறன், நல்ல பழக்கங்கள் மூலம் நன்மைகளை பெறுதல் என்ற வகையிலும், 9ம் பாவக வழியில் இருந்து நிறைவான அறிவு திறன், பயணங்கள் மூலம் லாபம், இடமாற்றம் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பம் மற்றும் சிறப்பான வளர்ச்சி பித்ருக்களின் ஆசி மூலம் வாழ்க்கையில் சுபயோகங்களை பெறுதல் என்ற வகையில் யோக பலனை வாரி வழங்கியது.

சுக்கிரன் திசையில் கடந்த சனி புத்தி சனி புத்தி 20/03/2011 முதல் 20/05/2014 வரை ஜாதகருக்கு 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2ம் பாவக வழியில் இருந்து தொழில் வழியிலான அபரிவித வருமானம், பேச்சு திறன் மூலம் வரும் வியாபர விருத்தி, லட்சியங்களை அடையும் வல்லமை, அதீத தனசேர்க்கையை சொந்த உழைப்பில் பெரும் வல்லமை, கவுரவம், அந்தஸ்து, புகழ், பரிசு அனைத்திலும் வெற்றி என்ற வகையிலும், 4ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றம், பெயரும் புகழும் உண்டாகும் தன்மை, மண் மணை வண்டி வாகன யோகம், ஆள் வசதி, பெரிய சொத்து சுக சேர்க்கை, அரசு மரியாதை மற்றும் கவுரவம், சமூக வாழ்க்கையில் வெற்றி, அரசியலில் ஆதாயம் என்ற வகையில் சிற்பபுகளை தரும், 10ம் பாவக வழியில் இருந்து தொழில் வழியிலான அபரிவித முன்னேற்றம், கம்பீரமான செயல்பாடுகள், தீர்க்கமான முடிவுகள் வழியில் பெரும் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி, செய்தொழில் வழியிலான ராஜ யோகம் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கி இருக்கிறது.

சுக்கிரன் திசையில் சனி புத்திக்கு அடுத்து வந்த புதன் புத்தி ( 20/05/2014 முதல் 20/03/2017 வரை ) ஜாதகருக்கு மிகுந்த சோதனை காலமாக மாறியது விதி செய்த கொடுமையாகவே கருதலாம், புதன் புத்தி ஜாதகருக்கு 6,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் ஜாதகரை படு குழியில் தள்ளியது, 6ம் பாவக வழியில் இருந்து வரம்பு மீறிய கடன், மிதமிஞ்சிய செலவுகள், வேலையாட்கள் வழியிலான இழப்புகள், பொருளாதர பின்னடைவு, எதிரிகள் தொந்தரவு, அனைத்து இடங்களில் இருந்து வரும் எதிர்ப்புகள், எதிர்பாராத கடன்கள், ஜாமீன் கொடுப்பதால் வரும் இன்னல்கள், வாங்கும் கடன் அனைத்தும் திடீர் இழப்பை சந்திக்கும் நிலை, நிலையற்ற பொருளாதரம், எதிர்பார்ப்புகள் யாவும் பொய்த்து போகும் தன்மை, எதிர்பாலின சேர்க்கையின் மூலம் திடீர் இன்னல்கள், நிம்மதி இன்மை, அனைத்திலும் தோல்வி, வழக்குகளில் சிக்கல்கள், சட்ட சிக்கல்கள், பொருள் இழப்பு என்ற வகையில் ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை தர ஆரம்பித்தது.

8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுளை நல்கிய போதிலும், பேரிழப்பு, விபத்து, துயரம், மற்றவர்களால் வரும் துன்பங்கள், தீயநண்பர்கள் சகவாச தோஷம், திட்டமிட்டு செயல்பட முடியாத நிலை, எதிர்த்து போராட வலிமையற்ற சூழல், உதவி செய்ய யாருமற்ற தன்மை, வாழ்க்கை துணை வழியிலான இழப்புகள் மற்றும் துன்பங்கள், தெய்வீக அனுகிரகம் இன்மை, முரண்பட்ட செயல்பாடுகள், தாங்க இயலாத துன்பம், சொத்துக்களை இழக்கும் சூழ்நிலை, சொத்துக்கள் அனைத்தும் வீண் விரயமாகும் தன்மை, திருப்தி இல்லாத மனநிலை, ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபத்தில் அமைவதால், ஜாதகருக்கு வரும் வருமானம் மற்றும் கடன் யாவும் திடீர் இழப்பை சந்திக்கும் சூழ்நிலை, எதிரியின் பிடியில் இழப்பை சந்திக்கும் சூழல், அனைத்தையும் இழந்து தவிக்கும் நிலைக்கு ஆளாகுதல் என்ற வகையில் ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை பாக்கியம் மற்றும் விரைய ஸ்தான அதிபதியான புதன் புத்தி தர ஆரம்பித்தது, மேலும் ஆயுள் பாவகம் ஸ்திர ராசி என்பதால் ஜாதகருக்கு வந்த இன்னல்கள் யாவும் வெகு காலம் ஆறாத ரணம், மறையாத சுவடை ஏற்படுத்தி ஜாதகருக்கு "நித்ய கண்டம் பூர்ண ஆயுசு" என்பதற்கு இணையான சூழலை உருவாக்கியது.

சுக்கிரன் திசை முடிவில் நடைபெற்ற கேது புத்தி ஜாதகருக்கு 3,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளை தந்தது, ஏற்பட்ட பாதிப்பில் இருந்து சிறிய அளவில் மீண்டு வரும் வாய்ப்பை நல்கியது, சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாதிப்பை ஜாதகர் 5,9ம் பாவக வழியில் இருந்து உணர்ந்த போதிலும் லக்கினம் எனும் முதல் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது போதிய நிதி மேலாண்மை திறன் அற்றவர் என்பதனையும், திட்டமிட்டு செயல்படும் தன்மை அற்றவர் என்பதனையும் தெளிவுபடுத்துகிறது, மேலும் நண்பர்கள் கூட்டாளிகள், வாழ்க்கை துணை வழியிலான பேரிழப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்க்கு ஆர்ப்பட்டவர் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை ஜாதகருக்கு 3,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது ஜாதகருக்கான புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும் வல்லமை கொண்டது, இருப்பினும் சூரியன் திசையில் எதிர் வரும் சந்திரன் புத்தி 1,7,11ம் பாவக வழியில் இருந்து கடும் நெருக்கடிகளை தரும், மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டதை போன்ற உணர்வை ஜாதகர் பெறுவார், சுக்கிரன் திசையில் நடைபெற்ற சுபயோக பலன்கள் சூரியன் திசையில் நடைமுறைக்கு வந்த போதிலும், யோக காலம் என்பது மிகவும் குறைவாகவே இருக்கும், ஜாதகர் சூரியன் திசையில் சந்திரன் புத்தியை எதிர்கொள்வது என்பது சற்று சவாலான விஷயமாகவே படுகிறது.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் யோக பலன்கள் பாவக வழியில் இருந்து வழங்கிய போதிலும், லக்கினம் வலிமையுடன் இருந்தால் மட்டுமே ஜாதகர் அதை முழுவதுமாக சுவீகரிக்க இயலும், லக்கினம் வலிமை இழப்பது அல்லது 6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது அல்லது பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது அனைத்தும் ஜாதகருக்கு மற்ற பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை, கிரகிக்கும் வல்லமையை தாராது என்பதுடன் ஜாதகராலே அது விரயமாகும், மேற்கண்ட ஜாதகருக்கு 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிதமிஞ்சிய யோக பலனை தரும் என்ற போதிலும், 1,7,11ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர், அவரது வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் ஜாதகரின் அதிர்ஷ்டமின்மை ஆகியவை ஜாதகருக்கு வரும் யோக பலனை கபளீகரம் செய்யும் என்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 14 ஜூன், 2018

" களத்திர தோஷமும் " " சனி திசை நடப்பும் " திருமண தடைக்கு காரணமா? திருமணம் கைகூடி வருமா ?


கேள்வி :

 திருமணத்திற்க்கான முயற்சிகள் யாவும் இதுவரை பெரும் பின்னடைவையே தந்து இருக்கின்றது, கடந்த இருபது வருடங்களாக திருமணம் கைகூடி வரவில்லை, சுய ஜாதகத்தில் களத்திர தோஷம் என்கின்றனர், சனி திசை திருமண தடையை தருகிறது என்கின்றனர், உண்மை நிலை என்ன ? திருமண தடை நீங்கி, திருமணம் கைகூடி வருவதற்க்கு பரிகாரம் உண்டா ? எனது ஜாதகத்தில் உள்ள குறைகள் மற்றும் தோஷம் பற்றி விளக்கம் தர வேண்டுகின்றேன்.

பதில் :

ஒருவருக்கு திருமணம் தாமதமாக அடிப்படை காரணம் சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் ( 2,5,7,8,12ம் ) வீடுகள் வலிமை அற்று காணப்படுவதும், பருவ வயதில் நடைபெறும் திசா புத்திகள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும், பாதக ஸ்தான தொடர்பை பெற்ற பாவாக பலனை ஏற்று நடத்துவதும் காரணமாக அமையும், குறிப்பாக சுய ஜாதகத்தில் பருவ வயதில் நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகருக்கு இல்லற வாழ்க்கை அமைவதில் யாதொரு தடைகளும் தாமதமும் ஏற்படுவதில்லை, சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகள், திருமணத்தை நடத்தி வைக்கும் பருவ வயதில் நடைமுறைக்கு வரும் பொழுதே மேற்கண்ட தங்களின் கேள்விக்கு உரித்தான விதத்தில், அதிக அளவிலான தடைகளும், திருமணத்தில் வெகு தாமதத்தையும் தருகின்றது, தங்களின் ஜாதகத்தில் உள்ள நிலையை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !


லக்கினம் : மிதுனம்
ராசி : மிதுனம்
நட்ஷத்திரம் : திருவாதிரை 2ம் பதம்

திருமணம் தாமதமாக காரணம் : 1

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் அடிப்படை வீடுகளான 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது முழு முதற்காரணமாக அமைகிறது, சுய ஜாதகத்தில் எந்த ஓர் வீடும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்லதல்ல, மேற்கண்ட தங்களின் ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 7ம் வீடு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு தனுசு ராசியில் அமைவதும் தங்களுக்கு, பித்ரு தோஷ வழியில் திருமணம் அமையாமல் வெகு தாமதங்களை வழங்கிய கொண்டு இருக்கின்றது, 2ம் பாவகம் தங்களுக்கு மிதுனத்திலேயே ஆரம்பித்த போதிலும் அதிக  அளவில் கடக ராசியிலே வியாபித்து நிற்பது குடும்ப வாழ்க்கையில் இன்பத்தை தராமல் தடை செய்கிறது, மேலும் இல்லற வாழ்க்கையில் ஜாதகர் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தருகின்றது.

7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு, வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் கூட்டு முயற்சி வழியிலான இன்னல்களை வெகுவாக தருகின்றது, திருமணம் வெகு தாமதமாக சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் 200% விகித பாதிப்பை பெறுவதும், அது சார்ந்த இன்னல்களை ஏக காலத்தில் அனுபவிப்பதும் காரணமாக அமைகிறது, குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவக வழியில் 200% விகித இன்னல்களை சந்திப்பதால் தங்களின் திருமண வாழ்விற்க்கான முயற்சிகள் யாவும் கடும் தோல்வியை சந்திக்கிறது, இதற்கான தீர்வை பதிவின் இறுதியில் காண்போம்.

திருமணம் தாமதமாக காரணம் : 2

 தங்களுக்கு 19/04/2002 முதல் 19/04/2021 வரை நடைபெறுகின்ற சனி மஹா திசையானது தங்களுக்கு 3,9,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 3,9,12ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கி கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சம் என்ற போதிலும், 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2,7ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தருவது தங்களுக்கு சனி மகா திசையில் சிறப்புகளை தரும் அம்சமல்ல, மேலும் 2ம் பாவக வழியில் இருந்து போதிய வருமானம் இன்மை, வாக்கு வழியிலான இன்னல்கள், குடும்பத்தில் சிரமம், தனம் சார்ந்த சிக்கல்கள், பொருளாதார முன்னேற்ற தடைகள், வரும் வருமானம் வீண் விரையமாகுதல் என்ற வகையில் சிரமங்களை தரும், 7ம் பாவாக வழியில் இருந்து திருமண தடை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியிலான தொந்தரவுகள், வியாபாரம் கடுமையாக பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலை, எதிர்ப்புகள் அனைத்து இடங்களில் இருந்தும் வரும், சட்ட சிக்கல்கள், பொது வாழ்க்கை பாதிப்பு, எதிர்பாலின அமைப்பினரிடம் இருந்து வரும் தொல்லைகள் என்ற வகையில் மிகுந்த சிரமங்களை தரும், சனி மகா திசை லாப ஸ்தான வழியில் அதிர்ஷ்டத்தை வழங்கிய போதிலும், பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்கள் தங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

சனி மஹா திசையில் தற்போழுது நடைபெறும் ராகு புத்தியும் தங்களுக்கு கடுமையான திடீர் இழப்புகளை ஆயுள் பாவக வழியில் இருந்து வாரி வழங்கி கொண்டு இருப்பது சிறப்பானது அல்ல, இது மேலும் மேலும் கடுமையான இன்னல்களையே தரும், ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாக அமைவது தொழில் ரீதியான திடீர் இழப்புகளை குறிக்கிறது என்பதால் ராகு புத்தியில் தொழில் ரீதியாக மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய தருணமாகும்.

சனி மகா திசையில் எதிர்வரும் குரு புத்தி தங்களுக்கு 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 5,11ம் பாவக வழியில் இருந்து சுபயோக பலன்களை தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சனி திசை குரு புத்தி காலத்தில் தங்களின் திருமண முயற்சி நல்ல வெற்றியை தரும், சிறந்த புத்திர பாக்கியம் அமையும், இவையெல்லாம் மிகுந்த அதிர்ஷ்டத்துடன் அமையும் என்பது கவனிக்கத்தக்கது, குரு புத்தி காலத்தை தாங்கள் பயனுள்ள வகையில் அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது அவசியமாகிறது.

குறிப்பு :

1) திருவக்கரை சென்று புதனுக்கு வக்கிரக நிவர்த்தியும், சர்ப்ப சாந்தி பரிகாரமும் செய்து யோக வாழ்க்கையை பெறுவது ஜாதகருக்கு சிறப்புகளை தரும்.
2) திருவெண்காடு சென்று முக்குண நீராடுவது களத்திர தோஷ நிவர்த்தியை தரும், திருமண வாழ்க்கையிலான தடைகளை தகர்க்கும்.
3) திருப்பதி வருடம் ஒரு முறை சென்று வருவதும், ஸ்ரீ வாரி தீர்த்தத்தில் நீராடுவதும் தங்களின் வாழ்க்கையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

எதிர் வரும் புதன் திசை தங்களுக்கு ஜீவன ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கும் என்பது வரவேற்கத்தக்கது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696