வியாழன், 29 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - சிம்மம் )


 சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : சிம்மம்

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியாகவும், ஸ்திர நெருப்பு தத்துவ தன்மையை பெற்றதுமான சிம்ம ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் நல்லதொரு மாற்றங்களை தனது சஞ்சார நிலையில் இருந்தும், பார்வை செய்யும் பாவக வழியில் இருந்தும் வாரி வழங்குவது வரவேற்க்கதக்கது, சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு நல்ல சுகபோக யோக வாழ்க்கையை நல்குவதில் யாதொரு தடையும் தர வாய்ப்பில்லை, புதிய நல்ல வண்டி வாகன யோகம், சொகுசு மிக்க வீடு வசதி வாய்ப்புகள், சொத்து சுக சேர்க்கை, வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம், பொருளாதார உதவிகள், தெய்வீக அனுகிரகம் மூலம் வாழ்க்கையில் ஏற்பாடும் முன்னேற்றம், வாழ்க்கை துணை வழியிலான பொருளாதார ஆதரவு, தாய் வழி சொத்துக்கள் கிடைத்தல், வண்டி வாகன தொழில் மூலம் கிடைக்கும் எதிர்பாராத வருமான வாய்ப்புகள், இறக்குமதி பொருட்கள் வழியிலான ஜீவன மேன்மை, புதிய வாய்ப்புகள் மற்றும் சந்தர்ப்பங்களை முறையாக பயன்படுத்தி முன்னேற்றம் பெரும் வல்லமை, அரசு உதவி, மருத்துவ துறையில் உள்ளோருக்கு கிடைக்கும் அசுர வளர்ச்சி, பொருளாதார நன்மைகள், இன்சூரன்ஜ் மற்றும் கமிஷன் தொழில் செய்யும் அன்பர்களின் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றம் மற்றும் நன்மைகள், தெளிவான சிந்தனை கொண்டு பெரும் புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை என சிம்ம லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளே நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது, வாழ்த்துக்கள்.

 குரு பகவான் தனது 5ம் பார்வையால் சிம்ம  லக்கின அன்பர்களுக்கு ஆயுள்  ஸ்தானமான 8ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, 100% விகித இன்னல்களையே வாரி வழங்கும், மரணத்திற்கு இணையான பேரிழப்பையும், மனம் சார்ந்த அழுத்தம் மற்றும் போராட்டங்களையும் தரும் என்பதுடன், இவை அனைத்தும் வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வரும் என்பது கவனிக்கத்தக்கது, மீனம் உபய நீர் தத்துவ ராசி என்பதால் சிம்ம லக்கின அன்பர்கள் மனதை செம்மையாக வைத்துக்கொள்வது  நல்லது ஏனெனில், ஒருநிலையில் இல்லாத மனம் தவறான செயல்பாடுகளையும், பின்விளைவு அறியா துன்பங்களையும் வாரி வழங்கிவிடும், பெரியோர்களின் ஆசியின்றி செய்யும் காரியங்கள் யாவும் பேரிழப்பையும், பெரும் துன்பத்தையும் வாரி வழங்கிவிடும், ஆயுளுக்கு பங்கம் தரும் காரியங்களை செய்வதை தவிர்ப்பதே சகல நன்மைகளையும் தரும், குறிப்பாக வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணம் அவசியமாகிறது, தாங்கள் எடுக்கும் திடீர் முடிவுகள் யாவும் மிக மிக தவறானதாக அமைந்துவிட வாய்ப்பு உண்டு, வாழ்க்கை துணையுடனான இணக்கமான சூழ்நிலையை கடைபிடிப்பதே இல்லற வாழ்க்கையில் சகல நலன்களையும் தரும், முடிந்த அளவிற்கு தாங்கள் பணிந்து செல்வதே இல்லற வாழ்க்கையில் இன்பத்தை வாரி வழங்கும், மனதில் தெளிவு பெறுவது மிக மிக அவசியமானதாக " ஜோதிடதீபம் " கருதுகிறது.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் சிம்ம லக்கின அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்தை வசீகரிப்பது, தொழில் விருத்தியை மிக பெரிய அளவில் வழங்கிய போதிலும், பொருளாதார சிக்கல்களை தரும், வருமானம் சார்ந்த திட்டமிடுதல்கள் சிறப்பாக அமையவில்லை எனில் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பொருளாதார சீர்குலைவை சந்திக்கும் சூழ்நிலையை தரும், அதே போன்று குடும்ப வாழ்க்கையில் மிகவும் சீரான வார்த்தை பிரயோகம் தங்களின் மனநிம்மதிக்கு குந்தகம் விளைவிக்காது, செலவுகள் எவ்வளவு செய்தாலும் விரையம் செய்வதை தவிர்ப்பது தங்களின் வாழ்க்கையில் இனிவரும் காலங்களில் நன்மையை தரும், மிகுந்த பொறுப்புடன் இல்லற வாழ்க்கையை கையாள்வது மிக மிக அவசியமானதாக அமைகிறது, கொடுக்கல் வாங்கல்களில் தாங்கள் ஒரு நேர்த்தியை இனி கடைப்பிடிப்பதும், கடன் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட முயற்சிப்பதும் தங்களின் வாழ்க்கையில் நிறைவான நன்மைகளை தரும், எதிப்புகளை மிக எளிதாக கையாண்டு வெற்றி பெறுங்கள், புதுவித முயற்சிகளை மேற்கொள்ளும் முன் பலமுறை ஆலோசனை செய்து காரியத்தில் இறங்குவதே சிறப்பான நன்மைகளை தரும், பேச்சில் நிதானம் தேவை என்பதையும் நாவடக்கம் சிம்ம இலக்கின அன்பர்களுக்கு சகல நன்மைகளையும் தரும் என்பதையும் கவனத்தில்கொண்டு செயல்படுங்கள் வாழ்த்துகள்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் சிம்ம லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ராஜ யோக பலன்களை தரும், முதலீடுகள் வழியிலான நன்மைகள் தேய்பிறை காலங்களில் சிறப்பாக வந்து சேரும், தெய்வீக ஈடுபாடு, தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம், மனரீதியான போராட்டங்களில் இருந்து விடுபடும் தன்மை என மிகுந்த நன்மைகளை தரும், இருப்பினும் புதிய முதலீடுகளை செய்யும் முன் ஆழ்ந்து சிந்தனை செய்து செயல்படுங்கள், தேவையற்ற எதிர்பாலின சேர்க்கை ஏற்ப்பட அதிக வாய்ப்பு உள்ளதால் ஸ்திரமான மன நிலையுடன் தவிர்த்துவிடுவதே தங்களுக்கான முன்னேற்றத்தை சிறப்பாக வாரி வழங்கும், முற்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் எதிர்கொள்ளுங்கள், பிற்போக்கு தனமான செயல்பாடுகள், மூடநம்பிக்கைகளில் அதீத ஈடுபாடுகள் கொண்டு இருப்பின் தங்களின் வாழ்க்கையில் தாங்களே இன்னல்களை தேடிகொள்வீர்கள், எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு நலம் பெறுவது அவசியமானதாகும், நிறைய எதிர்ப்புகள் வர அதிக வாய்ப்பு உண்டு என்பதால், இனிமையான பேச்சு திறமை கொண்டு எதிர்ப்பை  வெற்றி கொள்ளுங்கள்.

குறிப்பு :

சிம்ம  லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 4,8,10,12ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 4,8,10,12ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 16 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - கடகம் )



( குரு பெயர்ச்சியின் வழியில் 100% விகித பரிபூர்ண சுபயோக பலனை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள்  என்கிற முறையில் 3ம் இடத்தை பெறுபவர்கள் கடக லக்கின அன்பர்களே என்றால் அது மிகையில் ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : கடகம்

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியாகவும், சர  நீர் தத்துவ தன்மையை பெற்றதுமான கடக ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் நல்லதொரு மாற்றங்களை தனது சஞ்சார நிலையில் இருந்தும், பார்வை செய்யும் பாவக வழியில் இருந்தும் வாரி வழங்குவது வரவேற்க்கதக்கது, கடக இலக்கின அன்பர்கள் இனிவரும் ஒவ்வொரு நாட்களும் முன்னேற்ற பாதையில் வெற்றிகரமாக நடைபோடும் வாய்ப்பை நல்கும், குறிப்பாக லக்கினத்தில் இருந்து 5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் தனது வர்க்க கிரகம் என்பதால், ஜாதகரின் சிந்தனை திறனும் செயல் திறனும் ஒரே நேர்கோட்டில் இயங்கி வெற்றிகளை பெற்று தரும், புதிய சிந்தனை புதிய செயல்பாடுகள் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தனது நுண்ணறிவு திறன் மற்றும் ஆராய்ச்சி அறிவு இதுவரை இல்லாத புதிய மாற்றங்களையும், நிறைவான வருமான வாய்ப்பையும் வாரி வழங்கும், நல்ல ஆண் வாரிசு அமையும், தனது குழந்தைகள் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கையை வெகு சிறப்பாக கொண்டாடும் வல்லமையை தரும், லாட்டரியில் யோகம் பங்கு சந்தை லாபம், குல தெய்வ ஆசி, ஆன்மீக பெரியோர் மற்றும் ஆன்மீக குரு வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமை கொண்டவர்களாக கடக இலக்கின அன்பர்கள் திகழ்வார்கள், " மனமது செம்மையானால் " மந்திரம் செபிக்க தேவையில்லை என்பதற்கு இணங்க கடக இலக்கின அன்பர்களின் மனம் தெளிந்த நீரோடை போன்று ஓர் சீரான கட்டுபாடுடன் இயங்கும் என்பதால், இவர்களின் ஆசை மற்றும் லட்சியங்கள் மிக விரைவில் நடைமுறைக்கும் வந்து வெற்றியை வாரி வழங்கும், இதுவரை மனதில் இருந்த நிறைவேறாத ஆசைகள் யாவும் நிறைவேறும் என்பதுடன், மங்களகரமான நிகழ்வுகளில் வழியில் கடக இலக்கின அன்பர்களுக்கு மனமகிழ்வு அதிகரிக்கும், திருமணம், குழந்தை பாக்கியம், நல்லோதோர் வேலை அல்லது தொழில், புதிய சொத்துகள் வண்டி வாகனம், வீடு நிலம் போன்றவை அமைய அதிக வாய்ப்பு உண்டு என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் கடக லக்கின அன்பர்களுக்கு பாக்கிய  ஸ்தானமான 9ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, 100% விகித யோக வாழ்க்கையை வாரி வழங்கும், இதுவரை உதவி செய்யாதவர்கள் கூட தேடி வந்து உதவி செய்வார்கள், இறை அருளின் கருணையினால் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு, தங்களின் அறிவு திறன் தங்களுக்கு வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், மதிநுட்பம் கொண்டு வாழ்க்கையில் சுபயோகங்களை மிக எளிதில் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், அறிவார்ந்த செயல்கள் மூலம் பொது மக்களிடமும், மேல் அதிகாரிகளிடமும் நற்ப்பெயர் உண்டாகும், அரசியல், ஆசிரிய பணியில் உள்ளோருக்கு இனிவரும் காலம் சிறந்த மாற்றங்களை வாரி வழங்கும்.தெய்வீக அனுபவம் தங்களின் வாழ்க்கையை புத்துணர்வு மிக்கதாக மாற்றும் என்பதுடன், புதுவித அறிமுகங்களை வழங்கும், காதல் வெற்றி பெரும், திருமண வாழ்க்கை கைகூடிவரும், தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவார்கள், வாழ்க்கையில் புதுவித மாற்றங்களை சந்திக்கும் யோகம் உண்டு என்பதுடன், முதலீடுகளில் இருந்து வரும் லாபம் தங்களின் பொருளாதர சிக்கலுக்கு நல்ல தீர்வை தரும், வெளியூர் வெளிநாடு செல்ல விரும்பும் அன்பர்கள் தனது முழு முயற்சியின் வழியில் இருந்து வெற்றி காண்பார்கள், சமூக மதிப்பும், அந்தஸ்துடன் கூடிய பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும்  என்பது கவனிக்கத்தக்கது.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் கடக லக்கின அன்பர்களுக்கு லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்தை வசீகரிப்பது, அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை முழு அளவில் வாரி வழங்கும், தனது வருமானம் என்பது கடக லக்கின அன்பர்களுக்கு கை நிறைவாகவும், மிதம்மிஞ்சியதாகவும் அமையும் என்பது வரவேற்கத்தக்கது, தன்னம்பிக்கையும், மனோ தைரியமும் செயற்கரிய காரியங்களை சாதிக்கும் வல்லமையை தரும், பொது காரியங்களில் நன்மதிப்பும், புதிய உத்வேகமும் உண்டாகும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், எதிர்ப்புகள் யாவும் தங்களுக்கு சாதகமாக மாறும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வீர்கள், அதிர்ஷ்ட தேவதையின் அருள் கடாட்சம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளையும், பொருளாதர தன்னிறைவையும் வாரி வழங்கும், உடல் நலம் மனநலம் மேலோங்கும், தங்களின் வாக்கு வன்மை சிறக்கும் என்பதனால் அனைவரும் தங்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு செயலாற்றுவார்கள், எல்லையில்லா சந்தோஷமும், சுபயோகத்தின் தாக்கமும் தங்களின் வாழ்க்கையில் ராஜ யோக பலன்களை அனுபவிக்க வைக்கும் என்பதுடன், திருமணம் மற்றும் வாழ்க்கை துணை வழியில் இருந்து நன்மைகளை சுவீகரிக்கும் யோகத்தை தரும், எதையும் துணிந்து சாதிக்கும் வல்லமையை தரும் என்பதுடன், புதுவித யுக்தி மற்றும் புதுவித தொழில் நுட்பம் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது தங்களுக்கே சற்று வியப்பை தரும், வாழ்க்கை துணை, பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் சகல நலன்களையும் தன்னிறைவாக பெறுவீர்கள் என்பதுமட்டும் உறுதி வாழ்த்துக்கள்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் கடக லக்கின அன்பர்களுக்கு லக்கினம் எனும் 1ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ராஜ யோக பலன்களை தரும் உடல் நலம், மன நலம் மேலோங்கும், சுகபோக யோக வாழ்க்கைக்கான அடித்தளத்தை இனிவரும் காலம் சிறப்பாக அமைத்து தரும், புதிய சொகுசு வண்டி வாகனம், வீடு, சொத்து சுக சேர்க்கை மூலம் வாழ்க்கையில் அந்தஸ்தும் கவுரவமும் அதிகரிக்கும், புதிய மாற்றங்களும், புதிய சந்தர்ப்பங்களும் கடக லக்கின அன்பர்களுக்கு சந்தோஷம் மிக்க யோக வாழ்க்கையை தரும், புதிய தொழில்  முயற்சிகள் வாழ்க்கையில் நல்ல வெற்றிகளையும், வருமான வாய்ப்பையும் தரும், நீர் தத்துவ சார்ந்த தொழில்களில் உள்ளோருக்கு இனிவரும் காலம் யோக காலமாக அமையும், மருத்துவ துறையில் உள்ளோருக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு, ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிவோர், வண்டி வாகன தொழில் புரிவோர், கட்டடம் மற்றும் கட்டுமான தொழில் செய்வோர் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டமும், பொருளாதர முன்னேற்றமும் பரிபூர்ணமாக அமையும், பண்ணை தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த துறையில் உள்ளோருக்கு ஏற்றமிகு யோக காலமாக அமையும், பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் சார்ந்த வியாபாரம் விருத்தி அடையும் என்பதுடன் அதிர்ஷ்டகரமான நன்மைகளையும் சுவீகரிக்கும் வல்லமை உண்டாகும், மனதளவில் நல்ல மாற்றங்களும், செயல்பாட்டில் நல்ல முன்னேற்றத்தையும் தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் என்பதுடன் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.

குறிப்பு :

கடக லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 5,9,11,1ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 5,9,11,1ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696


புதன், 14 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - மிதுனம் )


( குரு பெயர்ச்சியின் வழியில் சற்று இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாகும் லக்கினமாக மிதுன லக்கின அன்பர்கள் உள்ளனர் என்பது கவனிக்க தக்கது ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : மிதுனம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியாகவும், உபய காற்று தத்துவ தன்மையை பெற்றதுமான மிதுன ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் மிதுன லக்கினத்திற்க்கு, களத்திர ஸ்தானம் மற்றும் ஜீவன ஸ்தானம் என்ற இரு அமைப்பிலும் கேந்திர ஆதிபத்திய தோஷ நிலையில் நிற்பது மிதுன லக்கின அன்பர்களுக்கு இன்னல்களை தரும் அமைப்பாகும், தனது சத்ரு ஸ்தான சஞ்சார நிலையில் மிதுன லக்கின அன்பர்களுக்கு எதிரிகளை வெல்லும் வல்லமையை தந்த போதிலும், தானாகவே எதிர்ப்புகளை சம்பாதித்து கொள்ளும் நிலைக்கு ஆளாக்குவார், தனது உடல் நிலையில் அக்கறை இன்மை வெகுவான பிரச்சனைகளை தரும், கடன் தொந்தரவுகள் எதிர்பாராத பிரச்சனைகள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்ற தடையாக விளங்கும், இருப்பினும் போட்டி பந்தயம், சூது போன்றவற்றில் வெற்றி உண்டு, நிதானமான சிந்தனை வாழ்க்கையில் நன்மைகளை தரும், பொது வாழ்க்கையில் உள்ளோர் சிறிது ஏற்றம் காணும் நல்ல நேரம் என்ற போதிலும் கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மனம் போன போக்கில் செயல்படுவது வாழ்க்கையில் கடுமையான இன்னல்களையும் துன்பங்களையும் தரும் என்பதால் தெளிவான சிந்தனையுடன் ஒவ்வொரு முடிவுகளையும் மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் மிதுன லக்கின அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, மிதுன லக்கின அன்பர்களுக்கு ஜீவன ரீதியான இன்னல்களை வெகுவாக தரக்கூடும், தொழில் வழியிலான தடைகள், முன்னேற்ற பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படக்கூடும் என்பதுடன் பெற்றோர் உடல் நலனிலும் அதிக அக்கறை கொள்ள வேண்டி வரும், கவுரவ குறைவான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதே சகல நன்மைகளையும் தரும், பொதுவாக தனது முடிவையே மற்றவர்கள் மேல் திணிக்கும் வழக்கம் மிதுன இலக்கின அன்பர்களுக்கு கைவந்த கலை என்பது எதார்த்தமான உண்மை என்ற போதிலும் தற்போதைய சூழ்நிலையில் இது பலன் தாராது, தங்களுக்கே எதிர்ப்பாக கிளம்பி நிற்கும் என்பதால், மற்றவர்கள் ஆலோசனைக்கும் மதிப்பளித்து நடந்துகொள்வதே ஜீவன ரீதியான நன்மைகளை தரும், சுய விருப்பு வெறுப்பு இன்றி நடந்தால் மட்டுமே வாழ்க்கை சற்று நிம்மதியுடன் இயங்கும், வாழ்க்கை துணை நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் மிகுந்த இணக்கமாக இருப்பது தங்களுக்கு வரும் தொழில் ரீதியான இன்னல்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்ப்படுத்தும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் மிதுன லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிப்பது, தேவையற்ற மன உளைச்சலை தரும், மன போராட்டம் மன அழுத்தம் இரண்டும் தங்களின் எதிர்காலத்தை வெகுவாக பாதிக்கும், தாம்பத்திய வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், தம்பதியரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி வெகுவாக பாதிக்கும், வருமானம் சார்ந்த இழப்புகள் தங்களின் பொருளாதார வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் என்பதால், சேமிப்பை தங்களது வசமாக்குவது அவசியமானதாக உள்ளது, புது வித உடல் தொந்தரவுகள் தங்களுக்கு வெகுவான மருத்துவ செலவினங்களை அதிகரிக்க கூடும், எதிர்பாராத விபத்து அல்லது உடல்நல குறைவு தங்களுக்கு கடுமையான பாதிப்பை தரக்கூடும் என்பதால், வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணம் அவசியமாகிறது, முதலீடுகளில் இருந்து வரும் வருமானம் மட்டும் தங்களுக்கு சற்று ஆறுதலை தரும், உறக்கம் பாதிக்கும், எனவே நல்ல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வருவது தங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும் என்பதுடன், விரைய ஸ்தான பாதிப்பை வெகுவாக குறைக்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் மிதுன லக்கின அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ஒருவகையில் நன்மையை தந்த போதிலும் குடும்பத்தில் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இருக்காது என்பதானால் மிதுன இலக்கின அன்பர்கள் தனது நாவை அடக்கி ஆள்வது அவசியமாகிறது, தேவையற்ற  வீண் வாதங்களில் ஆர்வம் செலுத்தினால் மன நிம்மதி பறிபோவதுடன், செலவினங்களும் கட்டுக்கடங்காமல் வீண் விரையமாகும், மேலும் நீர் தத்துவம் சார்ந்த விஷயங்கள் மூலம் வாழ்க்கையில் எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்ப்பட அதிக வாய்ப்பு உண்டு, வாழ்க்கை துணை உடனான இணக்கமான சூழ்நிலையை மிதுன இலக்கின அன்பர்கள் பேணி பாதுகாப்பது அவசியமாகிறது, இருப்பினும் ஏதாவது ஒரு வழியில் இருந்து வருமானம் வந்துகொண்டே இருக்கும் என்பதுடன், பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வுகளும் உண்டாகும், இனிமையான பேச்சு திறன் கொண்டு வாழ்க்கையில் நலம் பெறவேண்டிய நேரமிது என்பதால், மிகுந்த கவனமுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள் " வாழ்த்துகள் "

குறிப்பு :

மிதுன லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 6,10,12,2ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 6,10,12,2ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 13 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - ரிஷபம் )


( இந்த குரு பெயர்ச்சியின் மூலம் லாப ஸ்தானம் மற்றும் வீரிய ஸ்தான வழியில் இருந்து 100% விகித நன்மைகளை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள் ரிஷப லக்கின அன்பர்கள் என்றால் அது மிகையில்லை ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : ரிஷபம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியாகவும், ஸ்திர மண் தத்துவ தன்மையை பெற்றதுமான ரிஷப ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் ரிஷப லக்கினத்திற்க்கு, சத்ரு ஸ்தான அதிபதி என்ற நிலையில் கேந்திர ஆதிபத்திய தோஷம் தரும் அமைப்பிலும், லாப ஸ்தான அதிபதி என்ற நிலையில் சகல சௌபாக்கியங்களையும் தன்னிறைவாக வாரி வழங்கும் வல்லமை பெற்றவர் ஆகிறார், தனது களத்திர ஸ்தான சஞ்சார நிலையில் இருந்து ரிஷப லக்கின அன்பர்களுக்கு சற்று சிரமங்களை வாரி வழங்க தவறமாட்டார் என்பதுடன், எதிர்பாலின சேர்க்கை மூலம் தேவையற்ற இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாக்குவார் என்பது கவனிக்க தக்கது, உயர்பதவிகளில் உள்ளோர் சற்று கவனமுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டிய நேரமிது, வெளிநாடு அல்லது வெளியூரில் ஜீவனம் தேடும் அன்பர்களுக்கு சில நல்ல வாய்ப்புகள் தேடிவரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், மன நிலையில் நல்ல மாற்றங்களும், தெய்வீக அனுக்கிரகமும் தங்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை வாரி வழங்கும், கூட்டு முயற்சிகள் மட்டும் தங்களுக்கு பேரிழப்பையும், தடை தாமதங்களையும் வழங்க கூடும், வண்டி வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் இருப்பது மிக மிக அவசியமாகிறது.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு லாப ஸ்தானமான 11ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, மிகுந்த லாபத்தையும் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையையும் வாரி வழங்கும், முதலீடுகளில் இருந்து வரும் வருமானம் மற்றும் லாபம் தங்களின் வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்பை அதிகரிக்கும், நல்ல நிம்மதியும், தெளிவான மனநிலையும் தங்களின் வாழ்க்கையில் அபரிவிதமான  யோக வாழ்க்கையை வாரி வழங்கும், புதிய முயற்சிகள் வழியிலான லாபங்கள் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத சுபயோகங்களை வாரி வழங்கும், தன்னம்பிக்கை மிக்க செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் அபரிவிதமான நன்மைகளையும் சுபயோகங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் இனிவரும் ஒருவருட காலத்தில் தேடிவரும், தங்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் யாவும் நீங்கி, புதிய யோக வாழ்க்கையை நல்கும் என்பதுடன், அதிர்ஷ்டத்தின் தாக்கம் தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது, போதிய விழிப்புணர்வுடன் செயல்பட்டு வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளையும், சுகபோக யோக வாழ்க்கையையும் சுவீகரியுங்கள், குறிப்பாக முதலீடுகளில் அதிக கவனம் செலுத்தலாம்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு லக்கினம் எனும் முதல் பாவகத்தை வசீகரிப்பது, உடல் நிலை சார்ந்த இன்னல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு, வரும் வருமானத்தை சரியான மேலாண்மை செய்ய இயலவில்லை எனில் அதீத பொருளாதர சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பேசும் வார்த்தைகளில் அதீத கவனம் தேவை, வாக்கு தவறினால் வாழ்க்கையில் நிறைய இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மனம் கவலைகொள்ளவும், அதீத போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும், மன பயம் தங்களின் வாழ்க்கையில்  அதிகப்படியான துன்பங்களை சந்திக்கும் நிலைக்கு தள்ளும் என்பதால், தைரியமான  முடிவுகளை மேற்கொண்டு நலம் பெறுங்கள், அரை குறை மனதுடன் செய்யும் காரியங்கள் யாவும் தங்களுக்கு மீள இயலா இன்னல்களை தரும் என்பதை கவனத்தில் கொள்க, மேலும் பொது காரியங்கள், பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது, குறிப்பாக குடும்பத்தில் பகைமை பாராட்டாமல் அனைவருடன் இணக்கமாக நடந்துகொள்வது சகல விதங்களில் இருந்தும் நன்மைகளை  தரும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு வீரிய ஸ்தானம் எனும் 3ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றி மேல் வெற்றியை தரும், வீரியமிக்க செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் சுவீகரிக்கும் நேரமிது, தரகு, கமிஷன், ஒப்பந்த சார்ந்த வியாபரங்கள் மூலம் அபரிவிதமான யோக வாழ்க்கையை சந்திக்கும் நேரமிது, புதிய தொழில் வாய்ப்புகள் தங்களின் வாழ்க்கையில் சிறப்புமிக்க முன்னேற்றங்களை வாரி வழங்கும், காண்ட்ராக்ட் தொழில் செய்வோருக்கும், கட்டுமான துறை மற்றும் வண்டி வாகன துறையில் இருப்போருக்கும் அபரிவிதமான நன்மைகளும் முன்னேற்றங்களும் வந்து சேரும், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும், உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள், மருத்துவ துறை போன்றவற்றில் பணியாற்றும் அன்பர்களுக்கு இது ஒரு யோக காலமாக கருதலாம், கலைத்துறை மற்றும் விளையாட்டு துறையில் உள்ள அன்பர்களும்  மிகப்பெரிய சாதனைகளை சாதிக்கும் வாய்ப்பை வாரி வழங்கும், புதிய வீடு வண்டி வாகனம் சொத்து சுக சேர்க்கை என  வாழ்க்கையில் தன்னிறைவான சுகபோகங்களை பரிபூர்ணமாக சுவீகரிக்கும் யோகத்தை இந்த குரு பெயர்ச்சி ரிஷப இலக்கின அன்பர்களுக்கு வாரி வழங்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை " வாழ்த்துகள் "

குறிப்பு :

ரிஷப  லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 7,11,1,3ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,11,1,3ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 9 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - மேஷம்)


 சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : மேஷம்

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 1ம் ராசியாகவும், சர நெருப்பு தத்துவ தன்மையை பெற்றதுமான மேஷ ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் மேஷ லக்கினத்திற்க்கு, அஷ்டமாதிபதி மற்றும் விரைய ஸ்தான அதிபதி என்ற நிலையை பெறுவது கவனிக்கத்தக்கது, மேலும் குருபகவான் அஷ்டம ஸ்தானமான 8ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது மேஷ லக்கின அன்பர்களுக்கு சிறப்பை தரும் விஷயமல்ல, மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகளில் அதீத எச்சரிக்கை தேவை, பயணங்களில் மிகுந்த பாதுகாப்பும், உடல் நலனில் அதிக அக்கறையும் கொள்வது நல்லது, தெய்வீக வழிபாடுகளில் ஈடுபாடு காட்டுவது சிறப்பை தரும், திடீரென எடுக்கும் முடிவுகள் யாவும் தங்களுக்கு மிகப்பெரிய தோல்வியை தரக்கூடும், தன்னம்பிக்கை குறையும், இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் மற்றும் இறக்குமதி பொருள் சார்ந்த விஷயங்களில் நல்ல லாபம் உண்டு, தனது வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு அதிகம் என்பதால் வரும் இன்னல்களை மிக சிறப்பாக கையாண்டு வெற்றிகொள்ளும் வாய்ப்பை நல்கும், வண்டி வாகனங்களில் மட்டும் மிகுந்த பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்வது அவசியமாகிறது, மேலும் முதலீடு செய்யுமுன் மிகுந்த கவனமுடன் இருப்பதும் மேஷ லக்கின அன்பர்களுக்கு நன்மை பயக்கும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் மேஷ லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தை வசீகரிப்பது, நிம்மதியின்மையை உருவாக்கும், மனம் ஒரு நிலைப்படுவது என்பது சற்று கடினமான காரியமாக அமையும், தெளிவில்லாத நிலை, எடுக்கும் காரியங்களில் தொய்வு, மன உறுதியின்மை, துவங்கும் காரியங்களில் திருப்தி இன்மை, பொழுதுபோக்கு விஷயங்களில் அதீத ஆர்வம், தன்னம்பிக்கை வெகுவாக குறையும் தன்மை, எந்த ஓர் காரியத்தையும் ஆர்வத்துடன் செய்ய இயலாமை, கடமைக்கு செய்து இன்னலுறும் தன்மை, பணியில் நிம்மதியின்மை, தொழில் வழியில் பாதிப்பு, மனதிருப்திக்காக செய்யும் காரியங்கள் யாவும் கடும் தோல்வியை சந்திக்கும் நிலை, வீண் விரையங்கள், முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் வழியில்  இருந்து வரும் தொந்தரவுகள், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வதால் வரும் பாதிப்பு என்ற வகையில் கடுமையான இன்னல்களை தரும், சிறிது கவனமின்றி செயல்பட்டால் கூட வாழ்க்கையில் வெகுவான பாதிப்புகளை சந்திக்கும் நிலையை தரும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் மேஷ லக்கின அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகத்தை வசீகரிப்பது, குடும்ப வாழ்க்கையில் சற்று இன்னல்களை தரக்கூடும், குறிப்பாக வருமானம் சார்ந்த இன்னல்கள் என்பது அதிக அளவில் இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது, வீண் வாக்குவாதம் குடும்பத்தில் நிம்மதியிழப்பை தரும், செலவினங்களை கட்டுப்படுத்துவது இயலாத காரியமாக அமையும், தனம் சார்ந்த விஷயங்களிலேயே அதீத இன்னல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு, திட்டமிட்டு செயல்படுவதும், நிதி சார்ந்த விஷயங்களில் முறையான மேலாண்மையை கடைபிடிப்பது மட்டுமே சற்று நிம்மதியை தரக்கூடும், போதிய நிதி இன்மை காரணமாக மற்றவர்களிடம் கடன் பெரும் சூழ்நிலை உருவாகலாம், வக்கிரக காலங்களில் மட்டும் தங்களுக்கு எதிர்பாராத சுபயோகங்கள் தேடி வரக்கூடும், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேற வாய்ப்பு உண்டு என்பதால் சரியான நேரமறிந்து செயல்பட்டு வெற்றிகாணலாம்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் மேஷ லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தானம் எனும் 4ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் தேய்பிறை காலங்களில் நன்மையை தரும், திடீர் வண்டிவாகன யோகம், வீடு நிலம் சொத்து சுக சேர்க்கை உருவாக கூடும், மற்றவர்கள் தனம் தனது கையிருப்பாக உயரும், மனதில் உள்ள ஆசைகள் யாவும் நிறைவேறும் நேரமிது, எதிர்பாராத அதிர்ஷ்ட வாழ்க்கையை சுவீகரிக்கும் யோகத்தை தரும், வண்டி வாகன தொழில் அல்லது கட்டுமான துறை சார்ந்த அன்பர்களுக்கு புதிய வாய்ப்புகளும், புதிய தொழில் முன்னேற்றமும் உண்டாகும், வீட்டு உபயோக பொருட்கள் வியாபாரம் செய்யும் அன்பர்களின் வாழ்க்கையில் புதுவித தொழில் விருத்தி உண்டாகும், கலைத்துறையில் உள்ள அன்பர்களுக்கு திடீரென முன்னேற்றமும், நிறைவான வாய்ப்புகளும், பிரபல்ய யோகமும் உண்டாகும், தங்களின் முயற்சிகளில் எதிர்பாராத வெற்றியை சுக ஸ்தான அமைப்பில் இருந்து இந்த  குரு பகவானின் வசீகர பார்வை வாரி வழங்கும்.

குறிப்பு :

மேஷ  லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 8,12,2,4ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 8,12,2,4ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696