சனி, 15 ஜூன், 2013

குருபெயர்ச்சி பலன் நிர்ணயம் , சுய ஜாதகத்தில் குரு தரும் யோக அவயோக பலன்களும் !



குருபெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது, ராசியை வைத்து நிர்ணயம் செய்வது சுய ஜாதக ரீதியான பலன்களை தெளிவாக துல்லியமாக நிர்ணயம் செய்ய இயலாது என்பதே உண்மை , ஒருவருடைய சுய ஜாதக அமைப்பின் படி லக்கினம் எதுவாக அமைகிறதோ அதை அடிப்படையாக வைத்தும் , தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்தி எந்த பாவகத்தின் பலனை நடத்துகிறதோ, அந்த பாவகத்துடன் தற்பொழுது பெயர்ச்சி அடைந்திருக்கும் குருபகவான் எவ்வித தொடர்பை பெறுகிறார் ( 1,5,7,9 ) என்பதை வைத்தே குருபெயர்ச்சியை பலனை நிர்ணயம் செய்வது சரியான முறையாக இருக்கும், மேலும் சுய ஜாதக ரீதியான துல்லியமான பலனை நிர்ணயம் செய்யமுடியும்.

எடுத்துகாட்டாக :




 மேற்கண்ட சிம்மலக்கின ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும், குரு திசை மற்றும் புத்தி எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்பதை தெளிவாக தெரிந்தால் மட்டுமே இந்த ஜாதகருக்கு தற்பொழுது நடை பெற்று இருக்கின்ற குருபெயர்ச்சி ஜாதகருக்கு எந்த மாதிரியான நன்மை தீமை பலன்களை தருகிறது என்பதை நிர்ணயம் செய்ய முடியும்.

தற்பொழுது நடக்கும் குருதிசை ஜாதகருக்கு 7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலனை தந்துகொண்டு இருக்கிறது , இந்த குருதிசையில் தற்பொழுது நடக்கும் ராகு புத்தி 1,3,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200 சதவிகித தீமையான பலனை தந்துகொண்டு இருக்கிறது, மேற்கண்ட பாவகங்களுடன் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள குருபகவான் 11ம் பாவகத்தில் அமர்ந்து நன்மையான பலன்களையும்,3ம் பாவகத்தை பார்வை செய்யும் அமைப்பில் நன்மையான பலன்களையும் , 5ம் பாவகத்தை பார்வை செய்யும் அமைப்பில் தீமையான பலன்களையும், 7ம் பாவகத்தை பார்வை செய்யும் அமைப்பில் தீமையான பலன்களையும் வழங்குகிறார் .

ஆக இந்த குருபெயர்ச்சி  ஜாதகருக்கு 3,11ம் பாவகங்களுக்கு நன்மையான பலன்களையும். 5,7ம் பாவகங்களுக்கு தீமையான பலன்களையும் தருகிறார் என்பது உறுதியாகிறது மிதுனத்தில் குருபகவான் அமர்ந்து 5ம் பார்வையாக  துலாம்  ராசியை பார்வை செய்வதாலும், 3ம் பாவகம் சர காற்று தத்துவம் என்பதாலும் ஜாதகர் தனது அறிவார்ந்த செயல்களாலும் , எடுக்கும் முயர்ச்சிகளாலும் வெற்றிமேல் வெற்றி பெறுவார் அந்த வெற்றிகள் ஜாதகருக்கு சிறந்த மக்கள் செல்வாக்கினை வாரி வழங்கும் 3ம் பாவக வழியில் இருந்து .

மிதுனத்தில் குருபகவான் அமர்ந்து, 11ம் பாவகம் உபய காற்று தத்துவம் என்பதால் ஜாதகரின் அறிவாற்றல் பொதுமக்களுக்கும் ஜாதகருக்கும் பல நன்மைகளை வாரி வழங்கும் , தன்னம்பிக்கை  அதிகரிக்கும் , தரகு அமைப்பில் செய்யும் தொழில்கள் யாவும் மிகப்பெரிய ஆதாயத்தை வாரி வழங்கும் .

மிதுனத்தில் குருபகவான் அமர்ந்து 7ம் பார்வையாக தனுசு ராசியை பார்வை செய்வதாலும், 5ம் பாவகம் உபய நெருப்பு தத்துவம் என்பதாலும் ஜாதகர் அவசர கதியில் செய்யும் சில செயல்பாடுகள் ஜாதகருக்கும் ஜாதகரை சார்ந்தவருக்கும் சில அவ பெயரை ஏற்ப்படுத்த கூடும் எனவே சற்றே சிந்தனை செய்து பொறுமையாக ஒவ்வொரு முடிவையும் எடுப்பது நலம் . ( ஐந்தாம் பாவகத்திர்க்கு குருவின் 7ம் பார்வை நன்மை தர வாய்ப்பில்லை )

மிதுனத்தில் குருபகவான் அமர்ந்து 9ம் பார்வையாக கும்ப  ராசியை பார்வை செய்வதாலும்,7ம் பாவகம் ஸ்திர காற்று தத்துவம் என்பதாலும் தனக்கு வரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை கவனமாக கையாள வேண்டும் , மேலும் வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்களை அனுசரித்து செல்வது பெரிய துன்பங்களை ஏற்ப்படுத்தாது. ( கேந்திர பாவகமான 7ம் பாவகத்தை குருபகவான் ஒன்பதாம் பார்வையாக காண்பது தீமையான பலன்களையே தரும்.)

மேற்கண்ட அமைப்பில் இந்த சிம்மலக்கின ஜாதகருக்கு குருபெயர்ச்சி நான்கு பாவகங்களுடன் தொடர்பு பெற்று இரண்டிற்கு நன்மையையும் , இரண்டிற்கு தீமையான பலனை தருகிறது என்பதே துல்லியமான குருபெயர்ச்சி பலன்கள்.

எனவே குருபெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சுய ஜாதகத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயம் செய்வதே சரியானதாக இருக்கும் , சந்திரன் நின்ற ராசியை வைத்து வைத்து குருபெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்வது எந்த விதத்திலும் சுய ஜாதகத்தை கட்டுப்படுத்தாது , மேலும் அதனால் ஜாதகருக்கு எவ்வித நன்மையையும் தீமையும் ஏற்ப்பட வாய்ப்பில்லை என்பதே முற்றிலும் உண்மை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969