புதன், 20 மே, 2015

ஜாதகத்தில் பாவக வலிமையையும்! நடைபெறும் திசை மற்றும் புத்திகள் வழங்கும் பலன்களும்!



சுய ஜாதகத்தில் பாவக வலிமையை பொறுத்தே நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஜாதகருக்கு யோக அவயோக பலன்களை வாரி வழங்குகிறது என்பது மறுக்க இயலாத உண்மை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெற்று அமரும் பொழுது ஜாதகருக்கு யோக பலன்கள் நடைமுறைக்கு வருகின்றது, மாறாக லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை அற்று அமரும் பொழுது ஜாதகருக்கு அவயோக பலன்கள் நடைமுறைக்கு வருகின்றது, உதாரணமாக கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கன்னி
ராசி : சிம்மம் 
நட்சத்திரம் : மகம் 1ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்கள் :

1,3ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 
2ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 
5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
6,9,10,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 
11ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் இலாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடனே தொடர்பு பெறுவதும், ஜாதகத்தில்  வலிமை மற்றும் யோக நிலையாகும்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகங்கள் :

4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
7ம் வீடு பாதக  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், ஜாதகத்தில் வலிமை அற்ற மற்றும் அவயோக நிலையாகும்.

இதில் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதக அமைப்பிலேயே மிகுந்த இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக்கும் தன்மையில் உள்ளது கவனிக்க தக்கது.

இனி ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்திகள் தரும் பலன்களை பற்றி  சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்.

ஜாதகருக்கு நடைபெறும் திசை : 

செவ்வாய் ( 04/11/2008 முதல் 04/11/2015 வரை ) செவ்வாய் திசை ஜாதகருக்கு  5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 11ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் இலாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடனே தொடர்பு பெற்றும் யோக பலன்களை தருவது மிகுந்த சிறப்பான நன்மைகளை செய்யும், குறிப்பாக ஜாதகர் 5,11ம் பாவக வழியில் இருந்து சிறந்த நன்மைகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு செவ்வாய் திசையில் நடைபெறும் புத்தி :

சந்திரன் ( 05/04/2015 முதல் 04/11/2015 வரை ) செவ்வாய் திசையில் சந்திரன் புத்தி ஜாதகருக்கு 7ம் வீடு பாதக  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு  பெற்று பலனை தருவதும், இதற்க்கு முன் நடந்த சூரியன் புத்தியும் 7ம் வீடு பாதக  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை நடத்தியதும், ஜாதகரின் வாழ்க்கையை மிகப்பெரிய வீழ்ச்சிக்கு வழிவகுத்து இருக்கும், ஜாதகர் 7ம் பாவக வழியில் இருந்து சொல்ல இயலாத துன்பங்களையும் இன்னல்களையும் அனுபவித்து, வாழ்க்கையில் பல போராட்டங்களை                எதிர்கொண்டு சமூகத்தில் எதிர்நீச்சல் அடிக்கும் சூழ்நிலைக்கு ஆளாகியிருக்க கூடும், பாதக ஸ்தானத்தின் பலனை ஜாதகர் எதிர்கொள்வது என்பது நித்தியகண்டம் பூரண ஆயுசுக்கு சமாமான ஒன்றாகவே ஜோதிடதீபம் கருதுகிறது.

மேலும் தற்பொழுது நடைமுறையில் உள்ள சந்திரனும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரை வெகுவாகவே பாதிக்கும் என்பதில்  மாற்றுகருத்து இல்லை, குறிப்பாக ஜாதகர் வாழ்க்கை துணை வழியில் இருந்தும், நண்பர்கள், உறவினர்கள், வெளிவட்டார பழக்க வழக்கங்கள், பெரியமனிதர்கள், என்ற அமைப்புகளில் இருந்து தேவையில்லாத இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளாக்கும், மேலும் கோட்சார கிரகங்களின் சஞ்சாரமும் 7ம் பாவகத்திர்க்கு சாதகமாக இல்லாத காரணத்தால் இன்னல்களின் சதவிகிதம் அதிகரிக்கும், எனவே ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் பிரச்சனைகளை கவனமாக எதிர்கொள்வது, ஜாதகருக்கு சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும்.

குறிப்பாக ஜாதகருக்கு நடைமுறையில் உள்ள செவ்வாய் திசை அமைப்பில் இருந்து 5,11ம் பாவக வழியில் சிறந்த நன்மைகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கிய போதிலும், தற்பொழுது நடைமுறையில் உள்ள புத்திகள் பாதக ஸ்தான பலனை ஏற்று  நடத்துவதால் ஜாதகர் 5,11ம் பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாது 

ஜாதகருக்கு எதிர்வரும் திசை : 

ராகு ( 04/11/2015 முதல் 04/11/2033 வரை ) ராகு திசை ஜாதகருக்கு 2ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களை வாரி வழங்குவதும், ஜாதகரின் 3ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியாக வருவதாலும் திடீர் அதிர்ஷ்டங்களை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை ராகு திசை வழங்கும், குறிப்பாக ஜாதகர் ஏஜென்சி துறையில் புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை பெறுவார், 3ம் பாவகம் நீர் தத்துவ ராசியில் செயல்படுவதால் ஜாதகரின் மனம் தெளிவடையும், ஜாதகருக்கு உணவு சார்ந்த தொழில்களில் அளவில்லா வருமான  வாய்ப்பையும், திடீர் அதிர்ஷ்டங்களையும் வாரி வழங்கும், ராகு திசையில் உணவு சார்ந்த தொழில்களில் ஏஜென்சி எடுத்து நடத்துவதால் அளவில்லா யோகமும் முன்னேற்றமும் உண்டாகும்.

ராகு திசை ஜாதகருக்கு மிகுந்த நற்பலன்களை ஸ்திரமாக வாரி வழங்க காத்து   இருக்கிறது என்பதை  நினைத்து ஜாதகர் மகிழ்ச்சி உடன் எதிர்கால வாழ்க்கையை எதிர்கொண்டு வெற்றி பெறலாம், வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 12 மே, 2015

திருமண வாழ்க்கை எனக்கு சிறப்பாக அமையுமா ? வாழ்க்கை துணை வழியில் இருந்து யோகம் உண்டா ?



 கேள்வி :

எனது முதல் திருமணம் கருத்து வேறுபாடு காரணமாக மணமுறிவை சந்தித்து பலவருடங்கள் ஓடிவிட்டது, பெற்றோரின் நிர்பந்தம் காரணமாக இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன், இரண்டாவதாக அமையும் திருமண வாழ்க்கை எனக்கு வெற்றியை தருமா? இரண்டாவதாக வரும் வாழ்க்கை துணை வழியில் இருந்து யோகம் உண்டா ?

பதில் :

 பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை குறிக்கும் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகமும், களத்திர ஸ்தானமான 7ம் பாவகமும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு இருப்பின், அந்த ஜாதகருக்கு திருமண பொருத்தம் காணும் பொழுது மிகவும் சிறப்பு கவனம் எடுத்து வாழ்க்கை துணைவரை அமைத்து தருவது, சம்பந்தபட்ட ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும், பாதிக்க பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களில் இருந்து ஜாதகரை கரையேற்றும், மேலும் திருமண வாழ்க்கை பிரிவை தாராமல், தாம்பத்தியத்தில் ஒற்றுமையும், நல்ல இணக்கமும் கருத்து வேறுபாடற்ற இல்லற வாழ்க்கையை உறுதிபடுத்தும்.

சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை குறிக்கும் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகமும், களத்திர ஸ்தானமான 7ம் பாவகமும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு இருப்பின், ஜாதகரின் திருமண வயது வந்தவுடன் ஜாதகருக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட பாதிக்க பட்ட பாவகங்கலான 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதை கவனத்தில் கொள்வது அவசியம், ஒருவேளை நடைமுறையில் பாதிக்க பட்ட பாவகங்கலான 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு திருமணம் தடை ஏற்ப்படும் அல்லது பொருத்தம் அற்ற வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து திருமண வாழ்க்கை கசந்து, ஜாதகரை மணமுறிவை நோக்கி விரைவில் அழைத்து செல்லும், எனவே ஜாதகர் திருமணம் செய்யும் முன் தனது ஜாதக வலிமையை பற்றிய தெளிவும், தனக்கு வர இருக்கும் வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை பற்றிய தெளிவும் சிறந்த ஜோதிடரின் வழிகாட்டுதலின் பெயரில் பெறுவது அவசியம்.

இனி பதிவின் ஆரம்பத்தில் வினவபட்ட கேள்விக்கு உண்டான பதிலை பற்றி சிந்திப்போம் அன்பர்களே !



லக்கினம் : தனுசு 
ராசி : துலாம் 
நடசத்திரம் : சித்திரை 3ம் பாதம் 

ஜாதகிக்கு தனுசு லக்கினம், சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான 2ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம், களத்திர ஸ்தானமான 7ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம், சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தும் திசாபுத்தியில் ஜாதகிக்கு திருமணம் நடைபெற்றது, திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து, விகாரத்து பெற்றனர், ஜாதகியின் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் மேற்கண்ட 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றது விதியின் வலிமையை ஜாதகிக்கு தெள்ள  தெளிவாக உணர்த்தியது.

இனி அடுத்து நடப்பதை பற்றி சிந்திப்போம், ஜாதகியின் கேள்வி இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்குமா? 

நிச்சயம் வெகு சிறப்பாக அமையும் ஏனெனில் ஜாதகின் சுய ஜாதக அமைப்பின் படி, இரண்டாவது திருமண வாழ்க்கையை பற்றி தெரிவிக்கும் 9ம் பாவகம் மிகவும் வலிமையுடன் இருப்பது சிறப்பான அமைப்பாக கருதலாம், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு இரண்டாவது திருமண வாழ்க்கையின் மூலம் சிறப்பான கணவனை பெறுவதற்கு உண்டான வாய்ப்பை நிச்சயம் பெறுவார், தற்பொழுது நடைமுறையில் உள்ள சனி திசை புதன் புத்தி ஜாதகிக்கு 11ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று 100% விகித யோக பலனை தருவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் பாவகமான துலாம் ராசியாக 11ம் பாவகம் அமைவதும், சர காற்று தத்துவ நிலையில் செயல்படும் தன்மையை பெற்ற துலாம் ராசி, 11ம் பாவகமாக ஜாதகிக்கு நின்று யோக பலனை வாரி வழங்குவதும் சிறப்பனாதாக கருதலாம்.

எனவே ஜாதகி தாமதம் செய்யாமல் சிறந்த வாழ்க்கை துணையை தேடி ( இயற்கையாகவே நல்ல மணமகன் அமைவார் ) இரண்டாவது திருமணம் மூலம் 100% விகித யோக வாழ்க்கையை பெறலாம், இதில் எவ்வித தடைகளும் இல்லை, மேலும் ஜாதகி இரண்டாவது திருமணத்தின் மூலம் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் பெறுவார், குறிப்பாக தொழில் மற்றும் ஜீவன மேன்மை ஜாதகிக்கு நிச்சயம் உண்டாகும்.

வாழ்த்துகள் 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 8 மே, 2015

ஆயுள் பாவகமான 8ம் வீடு சுய ஜாதகத்தில் பாதிக்க படும் பொழுது ஜாதகர் எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய விஷயங்கள்!



ஒருவரின் ஜாதகத்தில் மறைவு ஸ்தானமாக கருதப்படும் 6,8,12ம் வீடுகளில், 8ம் வீடு ஆயுள் பாவகமாக வருகின்றது, பாரம்பரிய ஜோதிடத்தில் 6,8,12ம் வீடுகள் பாதிப்படைவதும்,வலிமை பெறுவதும் மிகுந்த இன்னல்களையே வழங்கும் என்பது பொதுவான கருத்து, இது முற்றிலும் தவறானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஒருவரின் சுய ஜாதகத்தில் 12 பாவகங்களுக்கும் நன்மை தீமை பலன்களை வழங்கும் தன்மை உண்டு, ஒவ்வொரு பாவகமும் வலிமை பெரும் பொழுது ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து யோக பலன்களையும், ஒவ்வொரு பாவகமும் வலிமை இழக்கும் பொழுது ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து மிகுந்த அவயோக பலன்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

குறிப்பாக, ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையை தானே பாதிப்பிற்கு ஆளாக்குவார், தனது உடலையும் மனதையும் பாதுகாக்க இயலாமல் தானே கெடுத்து கொண்டு, தன்னை சார்ந்தவர்களுக்கும் இன்னல்களை தருவார், இதை போன்றே 12 பாவக வழியில் இருந்து ஒவ்வொருவரும் யோக அவயோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை பெறுகின்றனர்.

நாம் இந்த பதிவில் சுய ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் வீடு சுய ஜாதகத்தில் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் 8ம் பாவக வழியில் இருந்து எவ்வித இன்னல்களை எதிர்கொள்ள நேரும் என்பதை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

அடிப்படையில் 8ம் பாவகம் சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடனோ, அல்லது தொடர்பு பெற கூடாத வீடுகளுடனோ தொடர்பை  பெற்றால், ஜாதகர் ஆயுள் பாவகமான 8ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், நடைமுறையிலோ அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் பாதிக்கபட்ட 8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரின் பாடு படு திண்டாட்டம் தான், குறிப்பாக பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று திசாபுத்திகள் 8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் நெருப்பில் இட்ட புழுபோல தவிக்கும் சூழ்நிலையை தரும்.

பொதுவாக ஆயுள் பாவகம் என்றவுடன் அனைவருக்கும் நியாபகம் வருவது, ஜாதகரின் ஆயுளுக்கு பங்கம் அல்லது கண்டம் ஏற்ப்படும் என்றுதான், பெரும்பாலும் இது நடைமுறையில் ஒத்து வருவதில்லை, ஜாதகரின் ஆயுள் பாவகம் எந்த தத்துவத்தில் இயங்குகிறது என்பதை கவனத்தில் கொண்டு பலன் காண்பதே சிறப்பு, மாறாக 8ம் பாவக வழியில் இருந்து வேறு சில இன்னல்களும் வரக்கூடும், அதாவது தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் வருமான இழப்பை முதலாவதாக சொல்லாம், ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிக அளவு இன்னல்களையும், கருத்து வேறுபாடு காரணமாக மன வாழ்க்கையில் பிரிவும், கணவன் மனை வழியில் இருந்து, தாங்க இயலாத வண்ணம் வரும் துன்பங்களையும் ஆயுள் பாவகமே நிர்ணயம் செய்கிறது, மேலும் எதிர்பாராத திடீர் செலவுகள், விபத்துகளை தவிர்க்க இயலாது, மற்றவர்களை நம்பி செய்யும் பணம் மற்றும் பொருள் முதலீடுகள் திடீர் இழப்பை சந்திக்கும், ஜாதகர் வெளிநாடுகளிலோ அல்லது வெளியூரிலோ இருப்பின் எதிர்பாராத திடீர் இழப்புகளை சந்திக்கும் தன்மையை தரும், ஜாதகர் முன்னேற்றம் கடுமையாக பாதிக்க படும், கூட்டு தொழில் செய்பவர்களுக்கு தனது கூட்டாளி வழியில் இருந்து எதிர்பாராத திடீர் இழப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

ஜாதகரின் சிந்தனை திறனும், செயல்பாடுகளும் கடுமையாக பாதிக்க படும், இதனால் உடல் நிலையும் மன நிலையம் வெகுவாக பதிக்கப்படும், உடல் ரீதியாக ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை தரக்கூடும், உடல் நிலை வெகுவாக பாதித்து உருமாற்றம் பெரும் சூழ்நிலைக்கும் ஜாதகர் தள்ளபடுவார், மேலும் மற்றவர்களுக்காக ஜாமீன் மற்றும் ஒப்பந்த கையெழுத்து செய்து கொடுத்திருந்தால் அதன் வழியில் ஜாதகர் கடுமையான இன்னல்களையும், பொருள் இழப்பையும் சந்திக்கும் சூழ்நிலையை பெற கூடும், தனது நண்பர்களுடனும் உறவுகளுடனும் சுமுகமான போக்கை கடைபிடிக்காமல், கருத்து வேறுபாடு காரணமாக பல இன்னல்களை ஜாதகர் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கும்.

சுய ஜாதகத்தில் ஒருவருக்கு ஆயுள் பாவகமான 8ம் பாவகம் பாதிக்க பட்டு இருப்பின் ஜாதகர் தனது வாழ்க்கை துணையை தேர்ந்து எடுக்கும் பொழுது அதிக கவனமாக இருப்பது நலம், அதாவது தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகர் பெரும் வருமானம் மற்றும் வருமான இழப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் மற்றும் முன்னேற்றம் அற்ற நிலை ஆகியவற்றை மிக தெளிவாக குறிப்பிடுவது ஆயுள் பாவகமே, மேலும் வாழ்க்கை துணையின் பேச்சு மற்றும் ஆதரவு போன்ற விஷயங்களையும் ஒருவரது சுய ஜாதகத்தில் உள்ள ஆயுள் பாவகமே நிர்ணயம் செய்வதால், ஜாதகர் தனது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை கருத்தில் கொண்டே தேர்ந்தெடுக்க வேண்டும், மாறாக அவசர கதியில் வாழ்க்கை துணையை தேர்ந்து எடுப்பின் ஜாதகரின் திருமணத்திற்கு பிறகு வரும் வாழ்க்கையில் பல இன்னல்களையும் துன்பங்களையும் தவிர்க்க இயலாது.

மேலும் மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகள் அனைத்தும் ஜாதகருக்கு இழப்பை தரக்கூடும் என்பதால், முதலீடு செய்யும் முன் அதிக கவனத்துடன் இருப்பது நலம், தனது முடிவில் உறுதியாக மற்றும் பிடிவாதமாக நில்லாமல் பெரியோரின் பேச்சை மதித்து நடந்துகொள்ளும் பொழுது ஜாதகருக்கு ஆயுள் பாவக வழியில் இருந்து வரும் திடீர் இழப்புகளையும், எதிர்பாராத விபத்துகளையும் தவிர்க்க இயலும், விபத்தின் மூலம் வரும் துன்பங்களையும், வீண் விரையங்களையும் தவிர்க்க ஜாதகர் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் அனைத்து விஷயங்களிலும் நடந்துகொள்வதும், அதிக கவனமுடனும் பொறுமையுடனும், அறிவில் விழிப்பு நிலையுடன் இருப்பது நலம் தரும்.

ஆயுள் பாவகமான 8ம் வீடு சுய ஜாதகத்தில் தனது பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தரும் என்ற போதிலும், உடல் நிலையில் சிறு சிறு தொந்தரவுகளை தர தவறுவதில்லை, மேலும் காய தழும்புகள் உடலில் நிச்சயம் உண்டாகும், சிலருக்கு அறுவை சிகிச்சை மற்றும் ரண சிகிச்சை மேற்கொள்ளும் தன்மையை தருகிறது, மேற்கண்ட அமைப்பு சுய ஜாதகத்தில் உள்ளவர்களுக்கு, பெரிய அளவில் வாழ்க்கை துணை வழியில் இருந்து வீண் செலவுகளை தர தவறுவது இல்லை, வாழ்க்கை துணைக்கு இது நல்ல நிலை என்ற போதிலும், ஜாதகரின் வங்கி கணக்கில் வறட்ச்சி என்ற நிலையே  எப்பொழுதும் நிலைத்திருக்கும்.

சுய ஜாதகத்தில் அனைத்து பாவகங்களும் வலிமை பெற்று இருந்த போதும் ஆயுள் பாவகம் ஒன்று மட்டும் பாதிக்க பட்டதால் ஜாதகர் வாழ்க்கை துணை வழியில் இருந்து பெறும் இன்னல்கள் பற்றி அடுத்த பதிவில் விளக்கமாக காண்போம் அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


வெள்ளி, 1 மே, 2015

திருமணத்திற்கு பிறகு அவயோக பலன்களை அனுபவிக்கும் ஜாதக நிலை !


தனது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முன் ஓவ்வொருவரும் தனது ஜாதக நிலையை கருத்தில் கொண்டு தேர்வு செய்வது, ஜாதகரின் வாழ்க்கையில் ஏற்ப்படும் இன்னல்களில் இருந்து வெகுவாக காப்பாற்றும், ஒருவரின் சுய ஜாதகத்தில் உள்ள பலன் தான் நடைமுறைக்கு வரும் என்றாலும் கூட, தன்னுடன் சேர்ந்து இல்லற வாழ்க்கையை மேற்கொள்ளும் ஜாதகத்தை பொருத்தும் சிலரது வாழ்க்கை நிர்ணயம் செய்யபடுகிறது, உதாரணமாக பொருத்தம் காணும் பொழுது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திரம் எனும் 7ம் பாவகமும், ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகமும் , வலிமையுடன் இருப்பது திருமண வாழ்க்கையில் சீரும் சிறப்பையும் வாரி வழங்கும்.

இதில் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7,8ம் பாவகங்கள் 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெற்று இருப்பது ஜாதகருக்கு 2,7,8ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை தந்த போதிலும் அது பெரிய அளவில் ஜாதகரை பாதிப்பதில்லை, மாறாக ஒருவரது ஜாதகத்தில் 2,7,8ம் பாவகங்கள் பாதக ஸ்தானம் எனும் 11,9,7 ( சரம் 11, ஸ்திரம் 9, உபயம் 7 ) பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கு பிறகு வரும் காலங்களை சோதனைக்கு ஆளாக்கும், தம்பதியரின் ஒற்றுமை குறைவு, விபத்து, பொருள் இழப்பு, மனோரீதியான போராட்டம் மற்றும் மன அழுத்தம், நிம்மதியின்மை, உடல் மனம் இரண்டும் வெகுவாக பாதிக்கும் தன்மை, தனது ஜாதகத்தில் யோக நிலை இருந்த போதிலும், அதை அனுபவிக்க இயலாத தன்மை, முரண்பட்ட கருத்து வேறுபாடு, மன வாழ்க்கையில் பிரிவு, தவறான உறவுகள், அதன் வழியில் இருந்து வரும் தொல்லைகள் துன்பங்கள், உறவுகள் மற்றும் சமூக அமைப்பில் இருந்து வரும் எதிர்ப்புகள், தனது குழந்தைகளின் எதிர்காலமும் கடுமையாக பாதிக்கும் தன்மை, சுமுகமாக தீர்வு காணும் பிரச்சனைகளை பெரிதாக்கி அதன் வழியில் துன்பம் காணும் மன நிலை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் சுமைகள், மற்றும் துன்புறுத்தல், உதவி செய்பவரின் மூலம் பெரும் அவயோக நிலை என ஜாதகரை வாட்டி வதைத்து விடும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவடைவது சிறப்பானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

  
ஜாதகி லக்கினம் : மிதுனம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 3ம் பாதம் 

அடிப்படையில் இந்த ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானத்தை குறிக்கும் 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுய ஜாதக ரீதியாக ஜாதகி திருமணத்திற்கும் குடும்ப வாழ்க்கைக்கும் யோகம் அற்றவர் என்பது 200% விகிதம் உறுதியாகிறது, ஆனால் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமான துலாம் நல்ல வலிமை பெறுவது, ஜாதகிக்கு திருமணம் செய்யும் வாய்ப்பை வழங்கியது, ஆயுள்  பாவகமான 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்று இருப்பது, ஜாதகிக்கு தன் கணவர் வழியில் இருந்து வரும் நல்ல யோக வாழ்க்கையையும், பெருளாதார வசதியும், நல்ல வருமான வாய்ப்பையும் வாரி வழங்கியது, இருப்பினும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தானம் ஆனா ரிஷபம் ஜாதகிக்கு 12ம் வீடாக அமைந்து விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று இருப்பது குடும்ப வாழ்க்கையில் ஜாதகி பெரும் மன நிம்மதி இழப்பையும், வீண் விரையங்களையும், உடல் மற்றும் மன நலமின்மையையும்,  அனைவராலும் தொல்லைக்கு ஆளாகும் சூழ்நிலையை  உறுதி செய்தது.

ஆக ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமான துலாம் வலிமை பெற்றது திருமண வாழ்க்கையை சர காற்று தத்துவ அமைப்பில் நின்று 100% யோகமுள்ள கணவனை ( ஜாதகியின் கணவர் அரசு துறை பணியாளர் ) திருமணம் செய்யும் வாய்ப்பை வழங்கிய போதும், சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட 2,7ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தானமான ரிஷபமும், ஜாதகியின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது, மேலும் பாதக ஸ்தான பலனை நடத்தும் ராகு திசையில் ஜாதகிக்கு திருமணம் நடந்தது மிகுந்த துன்பத்தை அனுபவிக்கும் சூழ்நிலையை தந்தது, 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்தும் குரு திசையில் குரு புத்தியில் ஜாதகியின் கணவருக்கு விபத்து ஏற்ப்பட்டு, கணவருக்கு வைத்தியம் செய்யும் சூழ்நிலையை தந்தது, வைத்தியம் பலன் தாராமல், 2,7ம் வீடுகள் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் குரு திசை கேது புத்தியில் ஜாதகி கணவனை இழக்கும் சூழ்நிலையை தந்தது, அவரது மறைவுக்கு பிறகு ஜாதகியின் ஜீவன ஸ்தானம்  நல்ல நிலையில் இருப்பதால் அவரது அரசுப்பணி ஜாதகிக்கு கிடைத்தது.

இந்த சூழ்நிலையில் ஜாதகிக்கு வேறு தொடர்புகள் ஏற்ப்பட ( 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு  ) தேவையில்லாத அவ பெயர்களை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, இதனால் உறவுகளுடன் இணக்கமில்லாத சூழ்நிலை, மன நிம்மதி இழப்பு, பொருள் இழப்பு உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டது, ஜாதகிக்கு எத்தனை சிரமங்கள் வந்த போதிலும், சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பதால் ஜாதகியின் குழந்தைகள் ஜாதகிக்கு அதரவாக நின்றது, இறை அருளின் கருணையும், சமயோசித புத்திசாலித்தனமும் பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களை களையும் வாய்ப்பினை ஜாதகிக்கு வாரி வழங்கியது.

ஜாதகிக்கு 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை வழங்கிய போதும், தன் கணவன் மூலம் பெரும் வருமானம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை குறிக்கும் ஆயுள் பாவகமான 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, தனது கணவனின் மறைவுக்கு பிறகும் வசதி வாய்ப்புடன் வாழும் யோகத்தை தந்தது, மேலும் தற்பொழுது நடைபெறும் குரு தசை ஜாதகிக்கு 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஸ்திரமான மன கவலை, குடும்ப வாழ்க்கையில் இன்னல்களை தந்த போதிலும், எதிர் வரும் சனி திசை 11ம் வீடு பாக்கிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவதும், பாக்கய ஸ்தானம் ஜாதகிக்கு மகரம் மற்றும் கும்ப ராசிகளுடன் சம்பந்தம் பெறுவது சிறந்த யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதும், 5ம் பாவக வழியில் இருந்து தான் பெற்ற குழந்தைகள் ஜாதகிக்கு முழு ஆதரவாக நிற்பார்கள் என்பது வரவேற்க தக்கதே, மேலும் இந்த ஜாதகி களத்திர வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் யோகம் அற்றவர் என்பது உறுதியாகிறது.

இந்த ஜாதகியின் வாழ்க்கை துணைவரின் ஜாதகத்திலும், 2,7ம் வீடுகள் கடுமையாக பாதிக்கபட்டு இருப்பதும், 8ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும் கவனிக்க தக்கது, லக்கினம் அல்லது ஆயுள் பாவகம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்ற ஜாதகத்தை பெற்றவர்கள், எவ்வித தீய பழக்கத்திற்கும் ஆற்ப்படாமல் இருப்பது நல்லது ( ஜாதகர் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை சந்தித்தார் ) ஏனெனில் இவர்களது வாழ்க்கை முடிவிற்கு இவர்களது செய்கையே காரணமாக அமைந்துவிடும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696