வியாழன், 18 டிசம்பர், 2014

யோகம், அவயோகம் ஒருவரின் சுய ஜாதகத்தில் பலன் தரும் கால நேரம் எப்பொழுது ?


 ஒருவரின் சுய ஜாதக நிலையை வைத்து பலன் காண முற்படும் ஜோதிடர்கள் அனைவரும், கிரக சேர்க்கையை வைத்தும், கிரகங்கள் அமர்ந்திருக்கும் நிலையை வைத்தும், கிரகங்களின் தன்மையை வைத்தும், பாவகங்களின் வலிமையை வைத்தும், யோக அவயோக நிலைகளை நிர்ணயம் செய்வதுண்டு, பொதுவாக பலரது ஜாதகங்களில் யோக அமைப்புகளும் உண்டு, அவயோக அமைப்புகளும் உண்டு, இந்த யோக/அவயோக நிலைகள் ஜாதகருக்கு எப்பொழுது தனது பலாபலன்களை வழங்குகிறது என்பதை காண்பதே, சரியான ஜோதிடருக்கு முன்னாள் இருக்கும் சவால், சிலரது ஜாதகங்களில் யோக அமைப்புகளும், அவயோக அமைப்புகளும் இருந்த போதிலும், நடை பெரும் திசா புத்திகள் யோக/அவயோக பலன்களை ஏற்று நடத்தாமல் போய்விடின், ஜாதகருக்கு யோகம் இருந்தும் பலன் இல்லை என்பதே வருத்தத்திற்கு உரியது, இது யோக/அவயோக நிலை இரண்டிற்கும் பொருந்தும் அன்பர்களே !

நமது ஜோதிட முறையில் யோக அவயோகத்தின் தன்மைகளை பாவக வலிமை மூலம் நிர்ணயம் செய்வதால், ஒருவருக்கு நடைபெறும் திசை மற்றும் புத்திகளிலேயே ஜாதகத்தில் உள்ள யோக/அவயோக பலன்கள் நடைமுறையில் வருகின்றதா என்பதை மிக எளிதில் அறிந்துகொள்ள இயலும், ஒரு ஜாதகருக்கு வலிமை பெற்ற அல்லது யோகங்களை வழங்க கூடிய பாவகங்களின் பலன்களை, நடைபெறும் திசை மற்றும் புத்திகள் ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு குறிப்பிட்ட பாவகத்தின் நன்மைகளும், யோகத்தின் பலன்களும் நடைமுறைக்கு வரும், மாறாக நடைபெறும் திசை புத்திகள் யோகங்களை தரும் பாவக பலன்களை ஏற்று நடத்த வில்லை எனில், ஜாதகருக்கு இதனால் எவ்வித நன்மையையும் நடைபெற வாய்ப்ப்பில்லை என்பதே முற்றிலும் உண்மை, ஆக சுய ஜாதகத்தில் யோக அமைப்புகள் இருந்த போதிலும், நடைமுறையில் ஜாதகருக்கு பலன்களை தருகிறத என்பதை தெளிவு பட தெரிந்துகொண்டு ஜாதகருக்கு பலன் சொல்ல முற்படுவதே சரியான ஜோதிட கணித முறை அன்பர்களே!

கிழ்கண்ட உதாரண ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !



ஜாதகியின் லக்கினம் : ரிஷபம்
ஜாதகியின் ராசி : கடகம்
ஜாதகியின் நட்சத்திரம் : ஆயில்யம் 1ம் பாதம்.

ஜாதகிக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை சுய ஜாதக அமைப்பின் படி 6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கி கொண்டு இருக்கிறது, பொதுவாக பெண்கள் ஜாதகத்தில் 12ம் பாவகம் பாதிக்க படுவது அவ்வளவு சிறப்பான விஷயமாக கருத இயலாது ஏனெனில், அயன சயன அமைப்பில் இருந்தும், மன நிம்மதி என்ற அமைப்பில் இருந்தும் ஜாதகிக்கு எவ்வித நன்மையையும் தாராது, குறிப்பாக மன நிம்மதி என்ன விலை என்று கேட்க்கும் சூழ்நிலைக்கு ஆளாக்கும், மேலும் ஜாதகியின் 12ம் பாவகம் அமைவது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் வீடான  ( கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லக்கினம் ) சர மேஷ ராசியாக இருப்பதால் ஜாதகி 12ம் பாவக வழியில் இருந்து அனுபவிக்க வேண்டிய இன்னல்களை 100% விகிதம் அனுபவிக்கும் தன்மையை தந்தது, சர நெருப்பு தத்துவ அமைப்பில் அமர்ந்த 12ம் பாவகம், காட்டு தீயின் தன்மையுடன் ஜாதகிக்கு தரவேண்டிய இன்னல்களை எவ்வித குறைபாடும் இன்றி வாரி வழங்கியது.

 பொதுவாக சுக்கிரன் திசை ஜாதகருக்கு அதிக நன்மையை தரும் என்பர், ஜாதகிக்கு இது நேர்மாறாக அமைந்துவிட்டது, சுக்கிரன் திசை சுய ஜாதகத்தில் விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஜாதகியின் வாழ்க்கையை பெரிய புயலுக்கு ஒப்பாக கலங்கடித்தது, 12ம் பாவகம் சர ராசியான மேஷத்தில் 26 பாகையில் ஆரம்பித்து ஸ்திர ராசியான ரிஷபத்தில் 26 பாகை வரை வியாபித்து இருந்தது சர ஸ்திர ராசிகள் அமைப்பில் இருந்து விரைவான நீடித்த  அவயோக பலன்களை அனுபவிக்க வைத்தது, 12ம் பாவகம் மேஷத்தில் ஆரம்பித்த போதிலும், ரிஷபத்திலேயே அதிக பாகைகளை கொண்டு இருப்பதும், ரிஷபம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தான அமைப்பில் வருவதும், ஜாதகியின் குடும்ப வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றியது, நடைபெறும் சுக்கிரன் திசையும் 12ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஜாதகிக்கு குடும்ப வாழ்க்கையில்  நிம்மதி என்பதே இல்லை என்ற சூழ்நிலை உருவானது, வருமானம் என்ற விஷயத்தையும் பதம் பார்த்தது, ஜாதகியின் பேச்சுக்கு சிறிதும் மதிப்பில்லாமல் போனது, ஆக மொத்தத்தில் ஜாதகிக்கு 12ம் பாவகம் தான் தரவேண்டிய அவயோக பலன்களை தங்குதடையின்றி சுக்கிர திசையில் ( சிலர் லக்கினாதிபதி திசை தீமை தாரது என்பர் ) வாரி வழங்கியது.

ஜாதகிக்கு நடைபெறும் சுக்கிரன் திசை 6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன்  தொடர்பை பெற்று பலனை தருவது 6ம் பாவக வழியில் இருந்து மறை முக எதிர்ப்பு, மற்றும் உடல்  சார்ந்த தொந்தரவுகள், எதிரிகளால் மன நிம்மதி இழப்பு, எதிர்பார்ப்புகள் யாவும் நடைபெறாமல்  போகும் தன்மை, முன்னேற்றத்திற்க்காக பல வகையில் போராடும் தன்மை, எதிர்பாராத சில இழப்புகள், கடன் கொடுப்பது பெறுவதால் இன்னல்கள், வாழ்க்கை துணையே எதிரியாக மாறும் சூழ்நிலை, தேவையில்லா பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தன்மை, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் போராடவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகும் தன்மையை தருகிறது, யாரையும் நம்பி எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபட இயலாத சூழல், நம்பியவர்களால் ஏமாற்றப்படும் தன்மை, எதிர்பார்க்கும் சில  விஷயங்கள் ஏமாற்றப்படும் தன்மையும், விரக்தி மனபான்மையையும் தரும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகியின் உறவினர்கள் அல்லது பெரியவர்களின் ஆதரவை பெற இயலாத சூழ்நிலையை தந்தது, இறை அருளின் கருணையை பெற இயலாமல் வாழ்க்கையில் போராடும் சூழ்நிலையை தந்தது, எவ்வளவு நல்லவராக இருந்த போதிலும் ஜாதகிக்கு நற்பெயர் கிடைப்பது அரிதானது, தன்னை சார்ந்தவர்களின் உதவிகளையும் பெற முடியாத தன்மையை தந்தது, எந்த ஒரு பிரச்சனைகளையும் ஜாதகி ஒருவராகவே தனித்து நின்று எதிர்கொள்ளும் சூழ்நிலையை தந்தது, தன்னம்பிக்கையை வெகுவாக குறைத்தது, தனது முன்வினை பதிவின் பலன்களை முழுவதும் அனுபவிக்கும் தன்மையை இந்த பிறவியிலேயே அனுபவிக்க நேர்ந்தது.

12 ம் பாவக வழியில் இருந்து ஜாதகி குடும்ப வாழ்க்கையில் நிம்மதியின்மை, எதிர்பாராத இழப்புகள், வீண் விரையம், அதிக மன போராட்டம், எதிர்பாராத சூழ்நிலையை சமாளிக்கத தெரியாத தன்மை, விபத்து, உடல் தொந்தரவுகள், பண விரையம், எதிர்பார்க்கும் விஷயங்கள் நடைபெறாமல் ஜாதகியை அலைகழிக்கும் தன்மை, சாதரணமாக கிடைக்கும் விஷயங்களுக்கு கூட ஜாதகி அதிகம் போராடும் தன்மையை தரும், திருப்தி இல்லாத வாழ்க்கை, உதவி செய்ய யாரும் இல்லாத சூழ்நிலை, சூழ்நிலையில் கட்டுண்டு வாழவேண்டிய சந்தர்ப்பத்தை தரும்.

இதுவெல்லாம் ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும்  சுக்கிரன் திசை வரையில்தான் அதாவது 07/12/2015 வரையில் மட்டுமே, இதற்க்கு பிறகு வரும் சூரியன் திசை ஜாதகிக்கு பூர்வ புண்ணியமான 5ம் வீடு, 5ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று வெகுவான யோக பலன்களை வாரி வழங்குகிறது, தனது குழந்தைகள் மூலமும் தனது சுய அறிவு திறன் மூலமும் ஜாதகி மிகப்பெரிய அளவில் யோக பலன்களை அனுபவிக்க இயலும், அதற்க்கு பிறகு வரும் சந்திரன் திசையும் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையே தருவதால் இனி வரும் எதிர்காலம் ஜாதகிக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று ஜோதிடடீபம் கருதுகிறது, வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

செவ்வாய், 16 டிசம்பர், 2014

திருமண பொருத்தம் காணும் பொழுது பெண்களின் ஜாதகத்தில் 8ம் பாவகத்திற்க்கு முக்கியத்துவம் தருவது எதனால் ?


 திருமண பொருத்தம் காணும் பொழுது பெண்களின் ஜாதகத்தில், லக்கினத்தில் இருந்து 8ம் பாவகமான ஆயுள் ஸ்தான அமைப்பிற்கு முக்கியத்துவம் தந்து ஜோதிடர்கள் பொருத்தம் காண்பது உண்டு, பொதுவாக இது குறிப்பிட்ட பெண்ணுக்கு ஆயுள் பாவகமாக வந்த போதிலும், தனது வாழ்க்கை துணையை குறிக்கும் 7ம் பாவகத்திற்க்கு 2ம் பாவகமாக வருவது, ஜாதகியின் கணவனுக்கு குடும்ப ஸ்தான அமைப்பை தெளிவாக தெரிந்துகொள்ள உதவும், அதாவது பெண்ணின் ஜாதகத்தில் 8ம் பாவக வலிமை வைத்து, ஜாதகி தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து (7க்கு 2ம் வீடான 8ம் பாவகத்தை ) குடும்ப வாழ்க்கையை எவ்வாறு வாழும் யோகத்தை தரும் என்பதை, ஜாதகியின் ஜாதக அமைப்பில் இருந்தே துல்லியமாக அறிந்துகொள்ள இயலும் என்பதால் பெண்ணின் ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்திற்க்கு முக்கியத்துவம் தந்து பலன் காண்கின்றனர்.

உதாரணமாக ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 8ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று இருப்பின், ஜாதகி தனது திருமணதிற்கு பிறகு தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சிறப்பான குடும்ப வாழ்க்கையை பெரும் யோகத்தை தரும், தனது கணவன் அமைப்பில் இருந்து முழு ஆதரவும், அவரின் இனிமையான பேச்சும் ஜாதகிக்கு மன மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் வாரி வழங்கும், தனது கணவனுக்கு அதிகபடியான வருமான வாய்ப்பையும், திடீர் அதிர்ஷ்ட யோகங்களையும் ஜாதகியின் 8ம் பாவகம் வாரி வழங்கும், ஜாதகியை திருமணம் செய்ததால் ஜாதகியின் கணவர் சிறந்த யோக வாழ்க்கையை பெறுவார், சில ஆண்கள் திருமணதிற்கு பிறகு அபரிவிதமான வளர்ச்சியை பெறுவதற்கு அவர்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் திடீர் அதிர்ஷ்டத்தை தரும் 8ம் பாவகம் வலிமை பெற்று அமைவதே காரணம் அன்பர்களே.

பெண்களின் ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் பாவகம் வலிமை பெறுவது, ஜாதகிக்கு மட்டுமல்ல, ஜாதகியின் குடும்ப வாழ்க்கைக்கே சிறந்த யோக பலன்களை வாரி வழங்கும், ஜாதகி திருமணம் நடைபெற்று புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த அந்த கணத்தில் இருந்து ஜாதகியின் யோக வாழ்க்கை ஆரம்பமாகிவிடும், தனது கணவன் இதுவரை சாதாரண தொழில் அல்லது பணியை மேற்கொண்டு இருந்தால், இவரது வருகைக்கு பிறகு அபரிவிதமான வருமான வாய்ப்பை தனது கணவன் பெறுவதும், தொழில் முன்னேற்றங்களை அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறுவதும் கண்முன்னே தெளிவாக தெரியும், இதுவரை சமுதாயத்தில் சாதாரண மனிதராக இருந்தவருக்கு பல பெரிய மனிதர்களின் அறிமுகமும், பிரபல்யமும் உண்டாகும், ஜாதகரின் வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அதிகரிக்கும், பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவின் மூலம் ஜாதகர் 100% விகித வெற்றி வாய்ப்பை பெறுவார் என்பது உறுதி.

தனது கணவன் ஜாதகியை எப்படி நடத்துவார் என்பதும், எப்படி வைத்திருப்பார் என்பதும் ஜாதகியின் ஆயுள் பாவகமான 8ம் பாவகமே நிர்ணயம் செய்யும், உதாரணமாக சில தம்பதியரின் வாழ்க்கையில் பேச்சு என்பது பல விளைவுகளை ஏற்ப்படுத்தும், சிலரது பேச்சை அவர்களது வாழ்க்கை துணை கேட்காமல் நடந்துகொண்டு ஜாதகியின் மனைதை நோகடிப்பது உண்டு, பெண்களின் சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை பெரும் பொழுது இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ வாய்ப்பு என்பதே இல்லை, ஜாதகியின் வாழ்க்கை துணை தனது பேச்சின் மூலம் ஜாதகியின் மனம் எப்பொழுதும்  சந்தோஷமாக வைத்திருக்கு தன்மையுடன் காணப்படுவார், பரஸ்பர அன்புடன் ஜாதகியின் வாழ்க்கை துணை விளங்குவார், ஜாதகியின் எண்ணம் மற்றும் மன நிலை அறிந்து நடந்துகொள்ளும் பேராண்மையை தரும், தனது கணவன் தனது வார்த்தைக்கு கட்டுப்படும் தன்மையையும், தனக்கு தரவேண்டிய மதிப்பு மரியாதையை சிறிதும் குறைவின்றி தரும் யோகத்தை தரும், முரண்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கும்,மனம் நோகும் வண்ணம் தேவையற்ற ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடமளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக பெண்களின் ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் பாவகம் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறுவதும், பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெறுவதும் ஜாதகியின் குடும்ப வாழ்க்கையை வெகுவாக பதம்பார்க்கும், குறிப்பாக பாதக ஸ்தானத்துடன் ( சர லக்கினத்திற்கு 11ம் வீடு, ஸ்திர லக்கினத்திற்கு 9ம் வீடு, உபய லக்கினத்திற்கு 7ம் வீடு ) சம்பந்தம் பெறுவது 200% விகித இன்னல்களை தனது கணவன் மற்றும் குடும்ப அமைப்பில் இருந்து அனுபவிக்க வைக்கும், திருமணம் நடைபெற்று ஜாதகி காலடி எடுத்து வைத்த அந்த கணத்தில் இருந்து, தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து எவ்வளவு இன்னல்களை அனுபவிக்க இயலுமோ அவ்வளவு துன்பங்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், இது ஆண் பெண் இருவரின் ஜாதகதிர்க்கும் பொருந்தும் அன்பர்களே! எனவே  ஜாதக பொருத்தம் காணும் பொழுது வரன், வது இருவரின் ஜாதகத்திலும் ஆயுள் பாவகமான 8ம் பாவகதிர்க்கு அதி முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதே முற்றிலும் உண்மை.

8ம் பாவகம் அதிர்ஷ்டத்தை தந்தாலும் திடீரெனவே தரும், துரதிர்ஷ்டத்தை தந்தாலும் திடீரெனவே தரும் என்பதாலேயே, திருமணதிற்கு பிறகு சிலரின் முன்னேற்றம் அபரிவிதமாக இருப்பதும், ஆதாலபாதலத்துக்கு செல்வதற்கு முக்கிய காரணமாக அமைகிறது அன்பர்களே, சுய ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் வீடு வலிமை பெறுவது திருமணதிற்கு பிறகு தம்பதியர் வாழும் யோக வாழ்க்கையை குறிப்பிடும், சிலரது ஜாதகத்தில் 7ம் பாவகம் வலிமை பெற்று அமையும் பொழுது காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும், அவர்களே திருமணதிற்கு பிறகு தோல்வியை சந்திப்பதற்கு அவர்களது ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் பாவகம் வலிமை பெறாத அமைப்பே காரணமாக இருக்கும், மேலும் பல தம்பதியர் விவாகரத்து பெறுவதற்கும் இந்த ஆயுள் பாவகமே காரணமாக அமைந்து விடுகிறது, இந்த பதிவை காணும் அன்பர்கள் திருமணம் செய்யும் முன் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் பாவகம் எப்படிபட்ட நிலையில் உள்ளது, தனது ஜாதகத்தில் ஆயுள் பாவகம் எப்படி பட்ட நிலையில் உள்ளது என்பதை சிறந்த ஜோதிடரை கொண்டு தெளிவு பெற்ற பிறகு, தங்களது திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்துகொள்ளுங்கள், வாழ்த்துகள்.
  
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 


சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - விருச்சிகம்



சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   


ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.


அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது . 


விருச்சிக லக்கினம் : 


லக்கினத்தில் அமர்ந்த சனி பகவான் தங்களுக்கு மனோ ரீதியான போராட்டங்களை தந்த போதிலும், வெளிநாடுகளில் இருந்து நல்ல வருமானத்தை தரும் வாய்ப்பை தருகிறார், குடும்பத்தில் வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல ஆதரவு கிடைக்கும், தன்னம்பிக்கை மேலோங்கும், எதிர்பாராத திருப்பங்கள் மூலம் வாழ்க்கை பிரகாசிக்கும், எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தரும், ஜாதகர் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் யோகத்தை தரும், ஜாதகர் பல திருத்தலங்களுக்கு திடீரென சென்றுவரும் யோகத்தை தரும், எதிர்பாராத உதவிகள் திடீரென கிடைக்க வாய்ப்பு உண்டாகும், தனது சிந்தனையும் மனதையும் இனி வரும் காலங்களில் ஜாதகர் ஒருமுகபடுத்துவது சால சிறந்தது, தெளிவான சிந்தனையும் செயல்பாடுகளுமே ஜாதகருக்கு வெற்றியை தரும் என்பதால் தனது சுய முன்னேற்றத்தில் ஜாதகர் அதிக அக்கறை கொள்வது நல்லது, நல்ல வேலையாட்கள் கிடைக்கும் யோக காலம் இதுவென்பதால், ஜாதகர் தான் செய்துவரும் தொழில்களில் விருத்தியை பெறுவதற்கு உண்டான சகல முயற்ச்சிகளையும் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

6ம் பார்வையாக எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிக்கும் சனி பகவான் ஜாதகருக்கு எதிராக செயல்படும் அன்பர்கள் மூலமாகவே நன்மையை பெறுவார், மேலும்  ஜாதகருக்கு சில நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து வருமான வாய்ப்பை தந்த வண்ணமே இருப்பார் என்பதை கவனத்தில் கொள்வது சால சிறந்தது, சனி பகவான் தரும் வருமான வாய்ப்புகள் யாவும் சனி பெருக்கம் போல் பெருகிக்கொண்டே இருக்கும் என்பதை மனதில் வைத்து ஜாதகர் தனது செயல்பாடுகளை அமைத்துகொல்வது சிறந்த நன்மைகளையும், யோக வாழ்க்கையையும் வாரி வழங்கும், கடன் வாங்குவது, கடன் கொடுப்பது போன்ற விஷயங்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும், ஜாதகரை தேடி பண உதவிகள் வந்த வண்ணமே இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவது மிகுந்த நன்மையை தரும், புதிய பொருட்கள் இயந்திர பொருட்கள், தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு 100% விகித வெற்றியை தரும், உடல் நிலையில் ஜாதகர் அதிக அக்கறை கொள்வது சால சிறந்தது, ஏனெனில் வயிறு சார்ந்த தொந்தரவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டாகும், மருத்துவ சிகிச்சை தவிர்க்க இயலாது, சரியான உணவு பழக்க வழக்கங்களை மேற்கொள்வது பெரிய தொந்தரவுகளில் இருந்து காப்பாற்றும்.

7ம் பார்வையாக களத்திர பாவகத்தை வசீகரிக்கும் சனி பகவான் ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து 100% விகித ஆதரவை வாரி வழங்குகிறார், குடும்ப வாழ்க்கையில் எவ்வித தொந்தரவும் இன்றி சுமுகமான உறவுகள் நீடிக்கும், பிரிவு வரை சென்ற தம்பதியரை சேர்த்து வைக்கும் வல்லமையை சனிபகவான் தனது பார்வையின் மூலம் தருகிறார், வருமான வாய்ப்புகள் என்பது ஸ்திரமான தன்மையுடன் தொடர்ந்து வந்தவண்ணமே இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை, கை நிறைவான வருமானம் மூலம் ஜாதகரின் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், புதிய வீட்டிற்கு தேவையான உபகரணங்களையும், வழக்கை துணைக்கு தேவையான ஆடை ஆபரணங்களையும் வாங்கும் யோகம் உண்டாகும், கல்வியில் ஏற்ப்பட்ட தடைகள் நீங்கி, கல்வியில் வெற்றியும் உயர் கல்விக்கு உண்டான வாய்ப்பும் உண்டாகும், ஜாதகருக்கு குடும்பம், வாழ்க்கை துணை, வருமானம் என்ற அமைப்பில் இருந்து 100% விகித வெற்றி நிச்சயம் உண்டு என்பதால், இனிவரும் காலங்களை விரிச்சிக லக்கினம் கொண்டவர்கள் சிறப்பாக கையாண்டு நன்மை பெற ஜோதிடதீபம் வாழ்த்துகிறது.

10ம் பார்வையாக ஜீவன ஸ்தான அமைப்பை வசீகரிக்கும் சனிபகவான் ஜாதகருக்கு இனிவரும் காலங்களில் ஜீவன மேன்மையை எதிர்பாராத வண்ணம் ஸ்திர தன்மையுடன் வாரி வழங்குவது கவனிக்க தக்கது, ஜாதகரின் குல தெய்வ அருளால் புதிய தொழில் துவக்கம், புதிய தொழில் வாய்ப்புகள், சிறந்த வேலைவாய்ப்பை பெரும் யோகம் தன்னுடைய சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் வெகு விரைவில் முன்னேற்றம் பெரும் அமைப்பு, ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் மூலம் லாபம், தனது அறிவார்ந்த செயல்திறனால் சமுகத்தில் நல்ல அந்தஸ்து மற்றும் கௌரவத்தை பெரும் யோகத்தை வாரி வழங்கும், தன்னிறைவான பெருளாதார முன்னேற்றம் பெறுவதற்கு உண்டான சரியான நேரம் இதுவே என்று ஜாதகர் செயலாற்றும் தருணம் என்பதால், வாய்ப்புகளை தவற விடாமல் பயன்படுத்தி நிலையான வெற்றி காண்பது இவர்களது கடமை, "கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற வாக்கியத்திற்கு ஏற்றவாறு செயல்படுங்கள், நிச்சயம் தாங்கள் ஆற்றிய கடமைக்கு 100% விகித பலன்கள் உறுதியாக கிடைக்கும்.

விரிச்சிக இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட 1,6,7,10ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 1,6,7,10ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

குழந்தை பாக்கியமும், பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் பாவக வலிமையையும் !


தனது குலம் செழிக்கவும், தனக்கு பின் தனது பெயர் சொல்லவும் ஒரு நல்ல வாரிசு வேண்டும் என்று தேடுதல் இல்லாத தம்பதியரை இப்புவியில் காண்பது அரிது, எவ்வளவோ மருத்துவ முன்னேற்றம் வந்த போதிலும் திருமணம் நடைபெற்று பல வருடங்கள் ஆகியும்,  ஒரு வாரிசுக்காக ஏங்கும் தம்பதியர் நிறைய உண்டு, பல மருத்துவர்களை பார்த்தும் புத்திர பாக்கியம் அமையாத தம்பதியரும், பல திருத்தலங்களுக்கு சென்றும் குழந்தை பாக்கியம் கிட்டாமல் வாடும் தம்பதியரும் உள்ளனர், இந்த பதிவில் புத்திர பாக்கியம் அமையாமல் தனது குலம் தழைக்க ஒரு நல்ல வாரிசு அமையாத நிலைக்கு காரணம் என்னவென்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே.

குழந்தை பாக்கியம் இல்லை என்று ஜாதகம் காண வரும் அன்பர்களுக்கு, ஜோதிடர்கள் சொல்லும் முதல் பரிகாரம் அவர்களது குல தெய்வம் எதுவோ அதற்க்கு முறையான வழிபாட்டையும், தான தர்மங்களையும் செய்யுமாறு அறிவுரை கூறுவது உண்டு, பொதுவாக குழந்தை பாக்கியம் அமையாத நிலைக்கு அடிப்படை காரணமாக குல தெய்வ சாபம் மற்றும் முறையான குல தெய்வ வழிபாடு செய்யாதது என்று அறிவுறுத்த படுகிறது.

 குல தெய்வ சாபம் என்றால் என்ன ?

1 சம்பந்தபட்ட தம்பதியரோ அல்லது அவர்களது முன்னோர்களோ வெகு காலமாகவோ, தலை முறை தலை முறையாக தனது குல தேவதைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் இருந்து தவறி நடப்பதால் வரும் சாபம் என்று வைத்து கொள்ளலாம்.
2 சம்பந்தபட்ட தம்பதியரின் முன்னோர்கள் தனக்கு பிறந்த குழந்தை பெண் என்பதால், அதன் உயிருக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது ( அதாவது சிசு கொலை )
3 சம்பந்தபட்ட தம்பதியரின் முன்னோர்கள் தனக்கு இறை அருளால் அமைந்த கருவை, தனது சௌகர்யத்திற்காக கருசிதைவு செய்து கொள்ளுதல். ( இது தம்பதியருக்கும் பொருந்தும்.)
4 கருவுற்ற பெண் வந்து யாசிக்கும் பொழுது அவர்களுக்கு இல்லை என்று சொல்வதும், அவர்களை உதாசீனபடுத்துவதும் குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
5 பசு அதன் கன்று குட்டியை பிறந்தவுடன் பிரிப்பதும், பசுவிற்கு துன்பம் இளைப்பதும், பசு தந்த பாலில் நீர் கலந்து விற்பதும், பச்சிளம் குழந்தைக்கு கொடுப்பதும் குல தெய்வ சாபத்திற்கு அடிகோலும்.
6 கற்று கொடுத்த குருவுக்கு இன்னல் தருவதும், துரோகம் செய்வதும், சாஸ்திரம் அறிந்த பெரியோர்களை அவமதிப்பதும், இறைபணியில் அர்ப்பணித்து கொண்டவர்களின் வாழ்க்கையில் இன்னல்களை ஏற்ப்படுத்துவதும், குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
7 பெற்றோர்களை நிந்தனை செய்வதும், இயலாமல் இருக்கும் பெரியோரின் சொத்துகளை  அபகரிப்பதும் குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
8 தன்னை நாடிவரும் பெண்களுக்கு தீங்கு  விளைவிப்பதாலும், கட்டிய மனைவியை நிந்தனை செய்வதாலும் குல தெய்வ சாபத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்.
9 சிறு வயதிற்கு உற்பட்ட குழந்தைகள் அனைவரும் குல தேவதையின் அம்சம் என்பதால், அவர்களுக்கு உணவு தர மறுப்பதாலும் குல தெய்வ சாபம் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு.
10 ஆன்மீக பெரியவர்களை நிந்தனை செய்வதும், அவர்களுக்கு எண்ணத்தாலும் செயலாலும் துன்பம் விளைவிப்பதும் குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்கும்.
11 சர்ப்பங்களை கொள்வதும் ஒருவகையில் குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்கும், புத்திர பாக்கியத்தில் தடை செய்யும்.
12 சேர்ந்து வாழும் தம்பதியரை பிரிப்பதும் குல தெய்வ சாபத்தை பெற வழிவகுக்கும்.

மேற்கண்ட காரணங்கள் குல தெய்வ சாபத்திற்கும், புத்திர பாக்கியத்தில் தடை உண்டாகவும் வாய்ப்புகளை ஏற்ப்படுத்தும், மேலும் சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான 5ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகருக்கு உதவி செய்ய எவரும் முன்வரமாட்டார்கள் என்பது கவனிக்க தக்கது அன்பர்களே.

மேற்கண்ட விஷயங்கள் குல தெய்வ சாபத்திற்கு காரணமாக அமைந்த போதிலும், இதில் அதிக இன்னல்களை தருவது உடனடியாக குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்குவது " சிசு கொலை, கருகலைப்பு "  ஆகிய இரண்டு மட்டுமே மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கும், பிறக்கும் பெண் சிசு யாவும் அவர்களது குல  தேவதையை குறிக்கும், கருவில் உள்ள குழந்தைகள் யாவும் அவர்களது குலதெய்வமாகவே விளங்கும் என்பதால், இவற்றிற்கு விளைவிக்கும் துன்பங்கள் யாவும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும், இதற்க்கு தீர்வு காண்பது என்பதும் அவ்வளவு எளிதல்ல என்பதை நாம் அனைவரும் உணர்வது அவசியம், ஏனெனில் நமக்கு பின் வரும் சந்ததிக்கு புண்ணி பதிவை சேர்த்து வைக்காவிட்டாலும் சரி பாவ பதிவை சேர்த்து வைக்காமல் போவது நல்லது, நாம் செய்யும் தவறு நமக்கு பின் வருபவர்களுக்கு இன்னல்களை தர கூடாது அல்லவா ?

இனி தனது சுய ஜாதக அடிப்படையில் புத்திர பாக்கியம் உண்டா ? அதற்க்கு தடைகள் உள்ளனவா ? என்பதை சுய ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவது அவசியமாகிறது, பொதுவாக சுய ஜாதகத்தில் புத்திர பாக்கியத்தை குறிக்கும் ஐந்தாம் பாவகம் எக்காரணத்தை கொண்டும் பாதிப்பை பெறாமல் இருப்பது நல்லது, இது தம்பதியர் இருவருக்கும் பொருந்தும், குறிப்பாக ஐந்தாம் பாவகம் அவர்களது  லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ( சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 11ம் வீடு, ஸ்திர லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 9ம் வீடு, உபய லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 7ம் வீடு ) புத்திர பாக்கியத்தை கேள்விக்குறியாக்கும், ஐந்தாம் பாவகம் 6,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெறுவதும் மிகுந்த இன்னல்களையே தரும், இதை போன்றே கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் 5ம் பாவகமான சிம்மம் பாதிப்பை பெறுவதும் குழந்தை பாக்கியத்தை கடுமையாக பாதிக்கும், மேற்கண்ட விஷயங்கள் யாவும் தம்பதியர் இருவரின் சுய ஜாதக அமைப்பிற்கும் பொருந்தும்.

ஒருவரது சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான 5ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் தனது பூர்வீகத்தில் வசிப்பதற்கு தடைகளை தொடர்ந்து தந்த வண்ணமே இருக்கும், ஜாதகரின் அறிவு சார்ந்த முயற்ச்சிகள் யாவும் வெறும் திட்டத்துடனே முடியும், நடைமுறைக்கு வருவதற்கு உண்டான வாய்ப்பை தாராது, ஜாதகரின் எண்ணங்கள் யாவும் வெறும் கற்பனையாகவோ கனவாகவோ மாறிவிட வாய்ப்பு உண்டு, இதை தவிர குழந்தை பாக்கியத்திற்கு எடுக்கும் அனைத்து முயற்ச்சிகளும் பலன் தாராமால் ஜாதகர்  மற்றும் ஜாதகரை சார்ந்தவர்கள் வெகுவாக மனபோரட்டத்திர்க்கு ஆளாகும் சூழ்நிலையை தர  கூடும், இவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யும் அன்பர்களும் இருக்கமாட்டார்கள் என்பது கவனிக்க தக்கது, தனிமையில் போராட்ட வாழ்க்கையை வாழும் சூழ்நிலைக்கு ஆளாக்கும், மேற்க்கண்ட விஷயங்கள்  5ம் பாவகத்தின்  வலிமை அற்ற தன்மையால் நடைபெறும் என்பதை இவர்களது சுய ஜாதகத்தை ஆய்வு செய்தால் நமக்கு நிச்சயம் புலப்படும்.

இன்றைய நவநாகரீக உலகத்தில் இளம் தம்பதியர் தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு குழந்தை பெற்றுகொள்ள, கருக்கலைப்பு என்ற ஒரு விஷயத்தை சர்வ சாதரணமாக செய்கின்றனர், இதன் விளைவு அவர்களுக்கு தெரிவதில்லை இதனால் ஏற்ப்படும் விளைவுகளின் தன்மை மிகவும் கடுமையானதாக இருக்கும், உதாரணமாக வீட்டில் செல்வ வளம் குறைந்து தரித்திர நிலை உருவாகும், குல தெய்வ சாபத்தால் ஜாதகருக்கு மிக எளிதில் கிடைக்கும் விஷயங்களுக்கு கூட போராடி பெரும் சூழ்நிலையை தரும், சுய முன்னேறம் வெகுவாக பாதிக்கும், தனது சந்ததிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும், உடல் நல குறைபாட்டை தரும், மருத்துவ செலவினங்களை அதிகரிக்கும், ஒற்றுமையாக இருந்த தம்பதியர் திடீரென பிரியும் சூழ்நிலையை தரும், எதிர்பாராத விபத்துகள் மூலம் உடல் நல குறைவு, பொருள் இழப்பு போன்றவை ஏற்ப்பட வாய்ப்பு உண்டாகும், இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு யாரும் உதவி செய்ய முன்வரமாட்டார்கள் என்பதே  வருத்தத்திற்கு உரியது அன்பர்களே, எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களை நீங்களே உருவாக்கி கொண்டு பின்னலில் வருத்தம் கொள்வதனால் எவ்வித பயனும் இல்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து.

அடுத்த பதிவில் 5ம் பாவக வலிமையை சுய ஜாதக ரீதியாக நிர்ணயம் செய்வது பற்றி சிந்திப்போம் அன்பர்களே ........

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

சனி, 13 டிசம்பர், 2014

விரைய ஸ்தானம் எனும் பனிரெண்டாம் பாவகம் வழங்கும் யோக வாழ்க்கை !




விரைய ஸ்தானம் எனும் பனிரெண்டாம் பாவகம் வழங்கும் யோக வாழ்க்கை ! எனும் தலைப்பை காணும் வாசக அன்பர்களுக்கு வியப்பு மேலோங்க வாய்ப்பு உண்டாகலாம், விரைய ஸ்தான அமைப்பில் இருந்து ஒரு ஜாதகர் என்ன யோக பலன்களை அனுபவிக்க இயலும், இந்த பாவக ஜாதகருக்கு அப்படியென்ன யோக வாழ்க்கையை தந்துவிடும் என்ற எண்ணம் வருவது இயற்கையே, பொதுவாக பாரம்பரிய ஜோதிடமுறையில் 6,8,12ம்  வீடுகள் தீய ஸ்தனமாகவே பாவிக்க பட்டு இருக்கிறது, குறிப்பாக 6,8,12ம் பாவக வழியில் இருந்து ஒரு ஜாதகர் நிச்சயம் தீய பலன்களே அனுபவிக்க நேரும் என்பதாகவே இருக்கின்றது, ஜாதகர் மேற்கண்ட 6,8,12ம் பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாதா ? என்ற கேள்விக்கு உண்டான சிந்தனையே இந்த பதிவு அன்பர்களே ! இனி 12ம் பாவகத்தை பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்.

வாழ்க்கையில் மனிதனின் செயல்கள் எல்லாம் மனதிருப்தி என்ற இலக்கை நோக்கியே செல்கிறது, இந்த மன திருப்தியை தருவது 12ம் பாவக வலிமையே, மன திருப்திக்காக ஒரு மனிதனை இந்த பனிரெண்டாம் பாவகம் எவ்விதம் ஆட்டி படைக்கிறது என்பதை சற்றே சிந்திப்போம் அன்பர்களே ! பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை இழக்கும் பொழுது, ஜாதகர் தனது மனதிற்கு திருப்தியை தருவது எதுவென்று அறியாமல் கடுமையான குழப்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தருகிறது, உதாரணமாக ஜாதகர் மது பழக்கத்திற்கு அடிமையாகும் முன்பு, தனக்கு மன திருப்தியை தருவதாக மற்றவர்கள் சொல்ல கேட்டு, மது பழக்கத்திற்கு அறிமுகமாகிறார், இறுதியில் ஜாதகரின் மனம் திருப்தியை பெறுகிறதா ? என்றால் நிச்சயம் இல்லை, மது பழக்கத்தால் ஜாதகரின் மனம் திருப்தியை பெற்று இருந்தால் உண்மையில் ஜாதகர் அந்த பழக்கத்தில் இருந்து 100% சதவிகிதம் விடுபட்டு அல்லவா இருக்க வேண்டும், ஆனால் நடப்பது என்ன ? ஜாதகர் மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்து மன திருப்தியை தேடுகிறார்.

இதை போன்றே அனைத்து தீய பழக்கத்திற்கும் காரணமாக ஜாதகரின், வலிமை அற்ற 12ம் பாவக நிலை அடிகோலுகிறது, இந்த 12ம் பாவகம் வலிமை அற்று போகும் அன்பர்களின் மனதை, மற்றவர்கள் மிக எளிதில் தங்கள் வசப்படுத்தி கொண்டு தங்களுக்கு சாதகமான விஷயங்களை நிறைவேற்றி கொள்கின்றனர், ஒரு அரசியல்வாதி தனது தொண்டனை அடிமையாக வைத்திருக்கவும், ஒரு திரைப்பட நடிகர் தனது ரசிகர்களை தனது கைக்குள் வைத்திருக்கவும், ஒரு தீவிரவாத தலைவன் தனக்கு கிழ் சிலரை மூளை சலவை செய்து அடிமைகளாக வைத்திருக்கவும், போலி ஆன்மீகவாதி தனது சீடர்களை தனக்கு கிழ்படிந்து நடக்கும் சீடனாக சில நபர்களை பேச்சில் மயக்கி வைத்திருக்கவும், அவர்களின் 12ம் பாவக வலிமையற்ற தன்மையே காரணமாக அமைகிறது, மனிதர்களை மன ரீதியாகவும் உணர்ச்சிகள் ரீதியாகவும் மிக எளிதில் அணுகி அவர்களுக்கு ஒரு மாய தோற்றத்தை ஏற்ப்படுத்தி அவர்களை தன்வசபடுத்த அவர்களின் ஜாதகத்தில் 12ம் பாவக நிலை வலிமை அற்ற தன்மையில் இருப்பதே காரணம் என்றால் அது மிகையில்லை அன்பர்களே !

12ம் பாவகம் வலிமையற்று போகும் பொழுது அந்த ஜாதகர் தனது மனதிற்கு திருப்தி தருவது எதுவென்று அறியாமல் குழப்பத்தின் நடுவிலேயே வாழ்க்கையை நகர்த்தும் சூழ்நிலையை தருகிறது , குழப்பம் என்பது ஒருவருக்கு வந்துவிட்டால் அவர் சரியான முடிவு எடுப்பது என்பது குதிரை  கொம்பாகிவிடும், இவருக்கு சரியான முடிவை தருவது போல் ஒரு மாய தோற்றத்தை ஏற்ப்படுத்தி, அவர்களது தேவைகளை பூர்த்தி சொய்துகொள்ளும் ஆட்களும் உண்டு, ஒருவர் தான் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் விளைவு அறிந்து செயல்பட அவரது சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியம் ஆகிறது, மேலும் தனது மனதில் ஏற்ப்படும் குழப்பங்களுக்கு தானே தீர்வை தேடும் வல்லமை பெற 12ம் பாவக வலிமை 100% விகிதம் உதவி புரியும் என்பதில் மற்று கருத்து இல்லை அன்பர்களே, வாழ்க்கையில் சிலர் திடீர் என முடிவெடுத்து தற்கொலை செய்துகொள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்குவது இந்த  12ம்  பாவக வலிமை அற்ற தன்மையே என்றால் அது மிகையில்லை, அற்ப காரணங்களுக்காக வாழ்க்கையை முடித்துகொள்ளும் எண்ணத்தை ஜாதகருக்கு தருவது இந்த 12ம்  பாவகத்தின் வலிமை அற்ற தன்மையே  காரணமாக அமைகிறது அன்பர்களே !

வாழ்க்கையில் ஒரு ஜாதகர் தான் எடுக்கும் முடிவுகள் சரியானதா ? அல்லது தவறானதா என்பதை தனது அறிவுக்கு உற்படுத்தி மன ரீதியான தெளிவை பெற சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, ஒருவரது மனதில் குழப்பம் வரும் பொழுது உயிர் சக்தி விரையபடுத்த  படுகிறது, தேவையற்ற சந்தேகம், பயம் மற்றும் மன தைரியம் யாவும், ஜாதகரை ஒரே இடத்தில் முடக்கி வைக்கிறது, அயன சயன சுகம் எனும் நிம்மதியான தூக்கம் வராமல் ஜாதார் மனோ ரீதியாக கடுமையான பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலை உருவாகிறது, நல்ல தூக்கமே ஒருவரை மன ரீதியாகவும் , உடல் ரீதியாகவும் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும், சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது இது கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.

பொதுவாக சுய ஜாதகத்தில் 12ம் பாவகத்தை தீய ஸ்தானமாகவே பாவித்து பலன் காண்பது 
முற்றிலும் தவறான அணுகுமுறையாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, ஏனெனில் 12ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தனது இயல்பு மாறாத தன்மையுடன் விளங்க செய்கிறது, எவ்வித சூழ்நிலையையும் தாங்கும் மன வலிமையை தருகிறது, தனது எண்ணங்களின் வலிமையின் மூலம் அனைத்தையும் சாதிக்கும் யோக வாழ்க்கையை ஜாதகர் பெற முடிகிறது, ஆன்மீகத்தில் சிறந்து விளங்க ஒருவரின் ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை பெறுவது அவ்ச்சியமாகிறது மேலும் 12ம் பாவகம் நீர் தத்துவ ராசியில் அமைவது மோட்ச வாழ்க்கையை 100 சதவிகிதம் வழங்கும் என்பதும், சர நீர் தத்துவத்தில் 12ம் பாவகம் அமைவதும் வலிமை பெறுவதும் ஜாதகர் ஆன்மீகத்தின் மூலம்  முக்தி பெரும் யோகத்தை தரும், திருப்தி அடைவது என்பது 12ம் பாவகத்தின் தன்மை எனும் பொழுது, ஆன்மா முக்தி பெற்று திருப்தியான பூர்ணத்துவத்தை பெறுவது மேற்கண்ட பாவகத்திலே என்றால் அது மிகையில்லை அன்பர்களே.

பொதுவாக காதலில் 100% விகிதம் வெற்றி பெற்று காதல் திருமணத்தின் மூலம் பரிபூரணத்தை அடைவதற்கு 12ம் பாவக வலிமை மிக மிக அவசியம் தேவை, காதலில் தோல்வி அடைவதும், காதல் தோல்வியின் மூலம் வாழ்க்கையில் விரக்தியின் உச்சிக்கே கொண்டு செல்வது 12ம் பாவகத்தி தன்மையே, இதன் விளைவுகளாக தற்கொலைக்கு முயற்ச்சி செய்வதும், ஸ்திர தன்மையில்லாத காதல் வாழ்க்கையை மேற்கொள்ள வைப்பதும் 12ம் பாவகமே, போதும் என்ற மன நிலையை தாராமல், தொடர்ந்து அடுத்து அடுத்து என்று அலைபாயும் மன நிலையை தருவதும் 12ம் பாவகமே, எதுவும் இல்லை என்றாலும் இருப்பதை வைத்து சிறப்பாக வாழும் வல்லமையை தருவது 12ம் பாவக வலிமையே, ஒருவரின் தேடுதலுக்கு எல்லாம் ஒரு முற்று புள்ளியை வைப்பது 12ம் பாவக வலிமையே, அது பொருள் சார்ந்தது என்றாலும் சரி அறிவு,மனம் மற்றும் இயக்கம் சார்ந்தது என்றாலும் சரி நிச்சயம் இறுதியில் திருப்தி என்ற மன நிலைக்கு ஜாதகரை அழைத்து செல்லும் வல்லமையை தருவது மேற்கண்ட அயன சயன ஸ்தானமே.

இதை தெளிவாக வேதாத்திரி மகரிஷி அய்யா அவர்கள் " தேடுவதை விட்டுவிட்டால் அனைத்தும் அங்கேயே இருப்பது புலனாகும் " எனும் வேதவாக்கின் மூலம் நமக்கு தெளிவு பட நம் அனைவருக்கு சிந்தனையில் உரைக்கும் வண்ணம் அருளியிருக்கிறார், புலனுக்கு எட்டாத அறிவு ஆற்றலை நமக்கு தருவது 12ம் பாவக வலிமையே என்றால் அது மிகையில்லை, 12ம் பாவகம் வலிமை பெறவில்லை எனில் ஒரு ஜாதகரால் தனது அலைபாயும் மன ஆற்றலை ஒருமுகமாக கட்டுபடுத்த இயலாது, ஒன்று படுத்தபட்ட சக்தியை எவ்விதத்திலும் பிரயோகிக்கவும் இயலாது, அருங்குண நலன்களை சீரமைக்கவும்  இயலாது, ஐம்புலன்களையும் கட்டுக்குள் கொண்டு வரவும் இயலாது, மிக துல்லியமாக சொல்ல வேண்டும் எனில் ஜாதகர் தன்னை சுய கட்டுப்பாட்டின் கிழ் கொண்டு வரவும், ஒரு இலக்கை நோக்கி பயணம் செய்ய வைக்கவும் 12ம் பாவக உதவி நிச்சயம் தேவை அன்பர்களே.

 ஒருவருக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் சிறப்பாக இயங்க வேண்டும் எனில் லக்கினத்திற்கு மேல் இருக்கும் 12ம் பாவகம் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, ஜாதகரின் இயக்கத்தை ஆளுமை செய்யும் தன்மையும் 12ம் பாவகத்திற்கு 100% சதவிகிதம் உண்டு, லக்கினம் சிறப்பு பெறுவது ஒரு வகையில் நன்மை என்ற போதிலும் 12ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகரை 100% விகிதம் சிறப்பாக செயல்பட வைக்கும், ஒருவரின் மன திருப்தியே பூரணத்துவத்தை தருகிறது என்றால், அவரது ஜாதகத்தில் அயன சயன ஸ்தானம் வலிமையுடன் இருப்பது முக்கியம் என்பதை கருத்தில் கொள்வது நலம் அன்பர்களே, அயன சயன ஸ்தானம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தன்னிலை உணர்வதும், சுய திருப்தி பெறுவதும் இயற்கையாக நடைபெறும், ஒரு ஆன்மீக வாதியையோ, ஒரு நடிகரையோ, ஒரு அரசியல் தலைவரையோ நாடி செல்லும் சூழ்நிலையை தராது, மேற்க்கண்டவர்கள் உண்மையானவர்களாக இருந்து விடில் ஜாதகருக்கு பிரச்சனை இல்லை, அதற்க்கு நேர் மாறாக இருப்பின் ஜாதகர் நிச்சயம் மூளை சலவை செய்து நம்ப வைக்கபடுவார், இதற்க்கு காரணமாக விரைய ஸ்தானம் வலிமை அற்ற நிலை காரணமாக அமைந்துவிடும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 11 டிசம்பர், 2014

ஜீவன ஸ்தான வலிமையையும், தகப்பனார் வழியில் இருந்து ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையும் !




"தாயின் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை "

மேற்கண்ட முதுமொழிக்கு ஏற்ப ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 4ம் பாவகம் தாயாரையும், 10ம் பாவகம் தகப்பனாரையும் குறிக்கும், சுய ஜாதகத்தில் 4,10ம் பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் 4ம் பாவக அமைப்பில் இருந்து நல்ல சுகபோக வாழ்க்கையையும், 10ம் பாவக வழியில் இருந்து சிறந்த ஜீவன ( தொழில் ) வாழ்க்கையையும் வாரி வழங்கும், பொதுவாக சுய ஜாதக ரீதியாக ஆண்களின் ஜாதகத்தில் ஜீவனம் எனும் 10ம் பாவகம் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது ஏனெனில் உத்தியோகம் "புருஷ லட்சனம் " என்று பழமொழிக்கு ஏற்ப ஆண்கள் ஏதாவது ஒரு வகையில் ஜீவனத்தை தேடி குடும்பத்தை காப்பாற்றும் கடமை ஆண்களுக்கே அதிகம் உண்டு, தற்காலத்தில் "உத்தியோகம் பெண் ஆட்சி லட்சனம் " ஆகிவிட்டது வேறு கதையாக இருந்தாலும், உத்தியோகம் அல்லது வேலை இல்லாத ஆண் மகனை சமுதாயமும், அவரது உறவுகளும் மிக ஏளனமாகவே பார்க்கின்றனர், வேலை இல்ல இளைஞனை பார்த்து, அதிக அளவு கவலை படுபவர்கள் அவர்களது பெற்றோர்களே, குறிப்பாக ஜாதகரின் தந்தையே இதை பற்றி அதிக அளவில் கவலை கொள்பவராக காணப்படுகின்றார்கள்.

ஒரு ஆண்மகனுக்கு சரியான வயதில் நல்ல ஜீவனம் அமைவது அவரது சுய ஜாதகத்தில் உள்ள ஜீவன ஸ்தானமான 10ம் பாவக வலிமையை பொறுத்தே, ஜீவன ஸ்தானம் ஒருவரது சுய ஜாதகத்தில் மறைவு ஸ்தானமான 6,8,12ம் பாவகத்துடனும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறாமல் இருப்பது ஜாதகருக்கு சிறந்த ஜீவன அமைப்பை தொழில் அல்லது வேலைவாய்ப்பில் சரியான வயதில் வழங்கிவிடுகிறது, மேலும் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் ஏதாவது ஒரு தொழில் வாய்ப்பையோ, வேலை வாய்ப்பையோ பெரும் யோகத்தை தங்குதடையின்றி கொடுத்து  விடுகிறது, ஜாதகர் குறிப்பிட்ட பாவக அமைப்பில் இருந்து கௌரவம் அந்தஸ்து மற்றும் வருமான வாய்ப்பை பெறுவதில் தடையேதும் இருப்பதில்லை. மேலும் நடைபெறும் திசை மற்றும் புத்திகள் சாதகமாக இருப்பின் ஜாதகரின் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் ஜாதகரை தேடிவருவதும், ஜாதகர் ஜீவன வழியில் இருந்து யோக வாழ்க்கையை பெறுவதும் இயற்கையாக நடந்துவிடுகிறது.

இதற்க்கு மாறாக ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுதே ஜாதகர் ஜீவனம் சார்ந்த இன்னல்களையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் அமைப்பை தருகிறது, மேலும் ஜீவன ஸ்தானம் கௌரவம் மற்றும் அந்தஸ்தை குறிப்பதால், ஜாதகர்  ஜீவன வழியில் இருந்து அதிக இன்னல்களையும் வேலை வாய்ப்பின்மையும் ஜாதகரை கடுமையாக பாதிக்கிறது, சுய கௌரவமும் அந்தஸ்தும் இழந்து மற்றவரை எதிர்பார்த்து வாழ்க்கையை நகர்த்தும் சூழ்நிலைக்கு ஜாதகர் தள்ளபடுகிறார், பொதுவாக ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுது  ஜாதகர் அதிக அளவில்  தனது தகப்பனாருடன் கருத்து வேறுபாடு வருவது எதார்த்தமான விஷயம், ஏனெனில் ஜீவன ஸ்தானம்  ஒரு வகையில்  தனது  தகப்பனாரையும் குறிப்பதால் ஜாதகர் அவரது வழியில் இருந்து ஆதரவினமையும், கருத்துவேறுபாடு காரணமாக வீண் சச்சரவையும் தருகிறது, இதன் விளைவாக பல இளைஞர்களின் முதல் எதிரியாக தனது தகப்பனாரை நினைப்பது உண்டு, மேலும் அவர் சொல்லும் விஷயங்களை ஏற்றுகொள்ளாமல் அவருக்கு எதிராக முரண்பட்ட காரியங்களை செய்வது சம்பந்தபட்ட ஜாதகருக்கு மேலும் ஜீவன வழியில் இருந்து அதிக இன்னல்களை எதிர்கொள்ளும் தன்மையையே தருகிறது.

பொதுவாக ஜீவன ஸ்தானம் பாதிக்க பட்ட ஜாதக அமைப்பை சார்ந்த அன்பர்கள் ! தனது  தகப்பனார்  வழியில் இருந்து வரும் துன்பங்களை அல்லது சிரமங்களை ஏற்றுகொள்ளும் பொழுது அந்த ஜாதகருக்கு  ஜீவன வழியில் இருந்து வரும் இன்னல்கள் நீங்கி தொழில் ரீதியாகவும் வேலை அமைப்பிலும் மிகப்பெரிய சாதனையை செய்கின்றார்கள் என்பது கவனிக்க தக்கது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் பாதிக்கபட்ட அன்பர்கள் எந்த காரணத்தை கொண்டும் தனது தகப்பனாரை எதிர்த்து செயல்படாமல் இருப்பது நல்லது, மேலும் அவரது வார்த்தைகளை மதித்து  அவர் சொல்லும் வழியில் நடப்பது ஜாதகருக்கு சில காலங்கள் சிரமம் தந்த போதிலும், அதன் பிறகு வரும் காலங்கள் ஜீவன  வழியில் இருந்து 100% விகித யோகத்தை வாரி வழங்கும், ஜாதகர் எதிர்பாராத வெற்றி வாய்ப்புகளை வேலை மற்றும் தொழில் அமைப்பின் மூலம் அபரிவிதமாக பெரும் யோகத்தை தரும் என்பதை மறுக்க இயலாது, தான் செய்யும் தொழில் மற்றும் வேலைவாய்ப்பின் மூலம் ஜாதகர் அபரிவிதமான வருமான வாய்ப்பை பெரும்  தன்மையை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் நெருப்பு தத்துவ ராசியில் அமைந்து பாதிக்க பட்டு இருப்பின் ஜாதகர் தனது  செய்கையின் மூலம் தகப்பனாருக்கு பிடித்த அமைப்பில் நடந்துகொள்வதும், எந்த ஒரு காரியத்திலும் அவசர கதியில் செய்யாமல் பொறுமையை கடைபிடிப்பது சிறந்தது, ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் நில தத்துவ அமைப்பில் இருப்பின், ஜாதகர் தனது தகப்பனாரின் சொத்துக்களை அல்லது செல்வத்தை பயன்படுத்தாமல் இருப்பது நலம் தரும், ஜாதகர் தனது தகப்பனாரின் உடல் நிலையை அதிக  அக்கறை எடுத்துகொள்வது சிறந்தது, அவரது பணத்தை செல்வத்தை விரையம் செய்யாமல் இருப்பது ஜாதகருக்கு உடனடி ஜீவன மேன்மையை தரும், ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் காற்று தத்துவ அமைப்பில் இருப்பின் அவரது அறிவுரையை ஏற்று நடப்பதும், சுயமாக தனது சிந்தனை மூலம் ஜீவன வாழ்க்கையை மேற்கொள்வது சிறந்தது தகப்பனாருக்காக அனைத்தையும் ஏற்றுகொள்ளும் மனபக்குவத்தை வளர்த்துகொள்வது நல்லது, ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் நீர் தத்துவ அமைப்பில் இருப்பின்  ஜாதகர் தனது தகப்பனார் மனம் நோகாமல் நடந்துகொள்வது சிறந்தது, மனதளவில் அவருக்கு சிறு துன்பமும் தராமல் இருப்பதே ஜாதகருக்கு அபரிவிதமான ஜீவன வாழ்க்கையை வாரி வழங்கிவிடும், அதே போல் ஜாதகர் தனது மனதளவில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பது சகல நிலைகளில்  இருந்து வெற்றியை வாரி வழங்கும்.

பொதுவாக ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படும் ஜாதக அமைப்பை பெற்ற அன்பர்கள் அனைவரும் தனது தகப்பனாருக்கு  சிறிதேனும் துன்பம் தராமல் நடந்துகொல்வதே, ஜாதகரின் ஜீவன வாழ்க்கையை மேம்படுத்தும் மேலும் ஜாதகர் பார்ர்க்கும் பணியில் அல்லது செய்யும் தொழிலில் அபரிவிதமான முன்னேற்றங்களை  வாரி வழங்கும் என்பது மட்டும் 100% விகிதம் உறுதி.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

செவ்வாய், 9 டிசம்பர், 2014

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - துலாம்


சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   


ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.


அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது .


துலாம் லக்கினம் 

2ல் அமர்ந்த சனிபகவான் துலாம் லக்கினத்தி சார்ந்தவர்களுக்கு பேச்சு மற்றும் குடும்பம் போன்ற அமைப்புகளில் சிறு சிறு இன்னல்களை தந்தபோதிலும், திடீர் வருமான வாய்ப்புகளை ஏற்ப்படுத்தி கொடுக்கிறார், இனிவரும் இரண்டரை வருடமும் துலாம் இலக்கின அன்பர்களுக்கு நல்ல வருமானம் தொய்வின்றி கிடைக்கும், எதிர்பார்த்த பணவரவுகள் நிச்சயம் கிடைக்கும், ஜாதகரின் மன நிலையில் மட்டும் சிறிது பாதிப்புகள் வந்துபோக வாய்ப்பு உண்டு , தனக்கு வரும் மன கவலைகளை ஜாதகர் அனைவரிடமும் பகிர்ந்து ஆறுதல் தேடிக்கொள்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும்.

 மேலும் ஜாதகர் பௌர்ணமி அல்லது அமாவசை தினங்களில் கோவில் வழிபாடு மேற்கொள்வது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிறந்த நன்மைகளை வாரி வழங்கும், தனது கையில் உள்ள நிதியை மற்றவர்களை  நம்பிக்கையின் பேரில் கொடுப்பது நிச்சயம் பல இன்னல்களை தரும், ஜாதகருக்கு இதனால் குடும்பத்திலும் உறவுகள் சார்ந்த அமைப்பில் இருந்தும் அதிக மனகசப்பை தருவதற்கு வாய்ப்பு உண்டாகும், எனவே பணம் சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருப்பது நலம் தரும், இதனால் வரும் பிரச்சனைகளை வெகுவாக தவிர்க்கலாம், வெளிநாடுகள் இருக்கும் அன்பர்கள் மிகுந்த கவனமுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை இனிவரும் காலங்களில் தங்களுக்கு ஏற்ப்படாலம்.

6ம் பார்வையாக துலாம் லக்கினத்திற்கு 7ம் பாவகத்தை பார்க்கும் சனிபகவான், இதுவரை திருமணம் ஆகாமல் தாமாத நிலையில் இருந்த அன்பர்களுக்கு திருமணம் சார்ந்த விஷயங்களில் எடுக்கும் முயற்ச்சிகள் உடனடி வெற்றியை தரும், வெளிநாடு வேலை வாய்ப்பை எதிர்பாத்து காத்துகொண்டு இருந்த அன்பர்களுக்கு எதிர்பாராத வகையில் திடீர் வேலைவாய்ப்பை பெரும் யோகம் உண்டாகும், பொதுமக்கள் மற்றும் நண்பர்களின் உதவி கேட்டவுடன் கிடைக்கும், சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டாகும், அரசு துறையில் பணியாற்றி கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் காலங்கள் மிகுந்த முன்னேற்றத்தை வாரி வழங்கும், குறிப்பாக காவல் துறை, நிர்வாக துறை, பொதுபணி துறை சார்ந்த அன்பர்களுக்கு மிகுந்த யோக காலம் என்றே சொல்லலாம், எதிர்பாராத பதவி உயர்வு, அதிக வருமான வாய்ப்பு என்ற வகையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், உடல் நிலை மிகவும் சிறப்பாக விளங்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், தங்களின் எண்ணங்கள் யாவும் பலிதம் பெரும் யோக காலமாக இந்த சனிபெயர்ச்சியை தாங்கள் கருதலாம்.

7ம் பார்வையாக துலாம் லக்கினத்திற்கு 8ம் பாவகத்தை பார்வை செய்யும் சனிபவான், ஜாதகருக்கு கை நிறைவான வருமான வாய்ப்புகளை வாரி வழங்குகிறார், தனது சுய உழைப்பின் மூலம் சொத்து சுகம், வண்டி வாகனம் வாங்கும் யோகத்தை வாரி வழங்குகிறார், தன்னிறைவான பேச்சு திறனால் ஜாதகர்  தனது வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை பெரும் யோக காலமாக இதை கருதலாம், ஜாதகர் குடும்பம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த சொத்துகளை திடீரென பெரும் யோகத்தை தரும், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரவேண்டிய அதிர்ஷ்டங்களையும் வருமானம் மற்றும் சொத்துகள் போன்ற விஷயங்களை ஜாதகர் அபரிவிதமான பெரும் யோகத்தை தரும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், எதிர்பாராத அதிர்ஷ்ட வருமான வாய்ப்புகள் ஜாதகருக்கு இனிவரும் காலங்களில் தொடர்ந்து வந்தவண்ணமே இருக்கும் என்பது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம்.

10ம் பார்வையாக துலாம் லக்கினத்திற்கு 11ம் பாவகத்தை பார்வை செய்யும் சனிபகவான், துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு நீடித்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்குகிறார், ஜாதகருக்கு வழங்கும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் என்பது ஸ்திர தன்மையுடன் நீண்டகால அமைப்புடன் தொடர்ந்து நன்மைகளை வாரி வழங்கி கொண்டு இருக்கும் என்பதை மறுக்க இயலாது , ஜாதகருக்கு தனது குல தெய்வத்தின் அருளாசி பரிபூர்ணமாக பலன்தரும், இறை அருளின் கருணையினால் ஜாதகரின் முயற்சிகள் யாவும் வெற்றி பெரும், தனது சுய சிந்தனையும் அறிவாற்றலும் நீடித்த நன்மைகளை வாரி வழங்கும் விதமாக அமையும், ஜாதகரின் அறிவு திறன் பிரகாசிக்கும் யோக காலமாக இதை கருதலாம், ஜாதகருக்கு தற்பொழுது கல்வி சார்ந்த விஷயங்களில் நல்ல ஈடுபாடும், கல்வியில் நல்ல முன்னேற்றமும் உண்டாகும், தங்கு தடையின்றி எடுக்கும் நல்ல காரியங்கள் யாவும் வெற்றி பெரும், மருத்துவ துறையில் இருக்கும் அன்பர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் யோக காலமாக இதை கருதலாம், மருத்துவம்,விவசாயம்,நிலம் சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கு, இது ஒரு ஏற்றமிகு அதிர்ஷ்ட காலமாக கருதலாம், அதிர்ஷ்டத்தின் முழு பயனையும் துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்கள் அனுபவிக்கும் தன்மையை இனிவரும் காலங்களில் நிச்சயம் உணர்வார்கள் வாழ்த்துகள்.

துலா இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட2,7,8,11ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 2,7,8,11ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 


வெள்ளி, 5 டிசம்பர், 2014

1 நிமிடம் வித்தியாசத்தில் பிறந்த இரட்டையர்கள் ஜாதகத்தில் வேறுபாடும் பாவக பலன்கள் !


சுய ஜாதகத்தில் பாவகத்தின் தன்மை என்பது தனிப்பட்ட வகையில் அமையும் என்பதற்கு கிழ்கண்ட உதாரண ஜாதகத்தை ஆய்வு செய்தாலே நிச்சயம் புலப்படும், பொதுவாக இரட்டையர்கள் ஜாதகத்தில் பலன் காண முற்படும் பொழுது, இருவருக்கும் ஒரே ராசி, ஒரே லக்கினம், ஒரே நட்சத்திரமாக இருந்த போதிலும் பாவகம் என்பது ஒருவரின் சுய ஜாதகத்தை எவ்வாறு ஆளுமை செய்கிறது, பாவகத்தின் வலிமை எவ்வாறு இரட்டை குழந்த்தைகளுக்கு அமைகிறது, அதன் அடிப்படையில் சுய ஜாதக ரீதியாக இரட்டையர்கள் இருவரும் மாறுபட்ட பலாபலன்களை அனுபவிக்கின்றனர், என்பதை இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

பொதுவாக சில வினாடிகளோ, சில நிமிடங்களோ வித்தியாசம் பெற்று பிறக்கும் இரட்டை குழந்தைகள் என்றால் பாரம்பரிய முறையில் ஜாதக பலன் காண முற்படும் பொழுது, ஜோதிடர்கள் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க நேருகிறது, குறிப்பாக இரட்டையர்களின் சுய ஜாதகத்தின் அடிப்படையில் இருவருக்கும் ஒரே லக்கினம், ஒரே ராசி, ஒரே நட்சத்திரம், நடப்பு திசை மற்றும் புத்திகள் ஒன்றாக இருந்த போதிலும், இருவரின் குணாதிசயங்கள் வெகுவாக மாறுபடும், இருவருக்கும் ஜாதக பலாபலன்களும் வெகுவாக வித்தியாசம் இருக்கும், இந்த இருவருக்கும் ஒரே மாதிரியான ஜாதக பலன்களை சொல்வது முற்றிலும் தவறான அணுகுமுறையாக ஜோதிடதீபம் கருதுகிறது, பொதுவாக பாரம்பரிய முறையில் இரட்டையர்களின் ஜாதகத்தை ஆய்வு செய்து பலன் காணும் ஜோதிடர்கள், ஒரே மாதிரியான பலன்களையே கூறும் சூழ்நிலைக்கு தள்ளபடுகின்றனர், மேலும் வித்தியாசமான பலன்களை அவர்களுக்கு ஜோதிடர்களால் சொல்ல இயலவில்லை என்பதே 100% உண்மை, ஆக இவர்களுக்கு எந்த அமைப்பில் ஜாதக பலன்கள் கணிதம் செய்வது என்ற கேள்வி வருவது இயற்கையே.

மேற்கண்ட கேள்விக்கு சரியான பதில் அவர்களது ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை தெரிந்தால் மட்டுமே சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ( பொதுவாக எவர் ஜாதகம் என்றாலும் அந்த ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் தன்மை மற்றும் வலிமையை உணர்ந்தால் மட்டுமே, அந்த ஜாதகருக்கு சரியான ஜாதக பலன்கள் சொல்ல இயலும், இல்லை எனில் குத்து மதிப்பாக அந்த ஜாதகருக்கு ஜாதகத்தில் கிரகங்களின் ஆட்சி,உச்சம்,நட்பு,பகை,சமம் போன்ற அமைப்பை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசைக்கு புத்திக்கு உண்டான கிரகம் எங்கு அமர்ந்து இருக்கிறது என்ற அடிப்படையிலும், சந்திரனுக்கு சனி,குரு,ராகுகேது ஆகிய கிரகங்களின் கோட்சார பலன்களை அடிப்படையாக கொண்டும், தனது கற்பனை வளத்திற்கு ஏற்றார் போலவும் ஜாதக பலன் சொல்லும் சூழ்நிலையே ஏற்ப்படும் ) ஆக ஒருவரின் சுய ஜாதக பலன்களை காண முற்படும் முன் அந்த ஜாதகருக்கு லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பாவக வலிமை சரியாக நிர்ணயம் செய்து, நடைபெறும் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை உணர்ந்தும், அந்த பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும் யோக அவயோக பலன்களை கருத்தில் கொண்டும் ஜாதக பலன் காணுவதே சரியான முறையாக இருக்கும், ஏனெனில் பாவக வலிமை என்பது நிச்சயம் மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் 100% வித்தியாசம் பெற்றே அமைந்திருக்கும், ஒருவருக்கு இருப்பது போல் மற்றொருவருக்கு இருக்காது என்பதை முதலில் ஜோதிடர்கள் உணர்வது அவசியம்.

உதாரண ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் என்பர்களே !

கிழ்கண்ட இரட்டையர்கள் 1 நிமிட வித்தியாச அமைப்பில் பிறந்தவர்களே! 

அதாவது முதலில் பிறந்தது பெண்:

ஜாதகியின் பிறந்த தேதி : 17/08/1999
ஜாதகியின் பிறந்த நேரம் : 10:55 காலை 
ஜாதகியின் பிறந்த இடம் : பவானி 
ஜாதகியின் லக்கினம் : துலாம் 
ஜாதகியின் ராசி : துலாம் 
ஜாதகியின் நட்சத்திரம் : சுவாதி 1ம் பாதம் 


இரண்டாவது பிறந்தது ஆண் :

ஜாதகரின் பிறந்த தேதி : 17/08/1999
ஜாதகரின் பிறந்த நேரம் : 10:56 காலை 
ஜாதகரின் பிறந்த இடம் : பவானி 
ஜாதகரின் லக்கினம் : துலாம் 
ஜாதகரின் ராசி : துலாம் 
ஜாதகரின் நட்சத்திரம் : சுவாதி 1ம் பாதம் 


மேற்கண்ட அமைப்பில் இருவரது ஜாதகமும் ஒரே மாதிரியான இலக்கினம்,ராசி,நட்சத்திரம் பெற்று இருக்கின்றது ஆனால் இருவரின் ஜாதகத்திலும் பாவகங்களின் தன்மையும், வலிமையையும் முற்றிலும் வேறுவிதமாக அமைந்திருப்பது, இருவருக்கும் நடை முறையில் ஜாதக பலாபலன்களும், நடைபெறும் திசை தரும் பலாபலன்களும் நிறைய வித்தியாசமான பலன்களை தருவது கவனிக்க தக்கது.

இருவரின் ஜாதக அமைப்பில் பாவகங்களின் தொடர்பு மற்றும் தன்மை :

ஜாதகிக்கு 

1,2,3,4,5,8,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% விகித யோக பலன்களையும்.
9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 30% விகித யோக பலன்களையும்.
6ம் வீடு எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 30% விகித அவயோக பலன்களையும்.
7ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 60% விகித அவயோக பலன்களையும்.
10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 30% விகித அவயோக பலன்களையும் தருகிறது.

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் குரு திசை ( 07/09/2013 முதல் 07/09/2029 வரை ) 1,3,5,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% விகித யோக பலன்களையே வாரி வழங்குகிறது.

ஜாதகருக்கு 

1,3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித அவயோக பலன்களையும்.
2,4,7,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% விகித யோக பலன்களையும்.
9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 30% விகித யோக பலன்களையும்.
6ம் வீடு எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 30% விகித அவயோக பலன்களையும் தருகிறது .

ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் குரு திசை ( 03/09/2013 முதல் 03/09/2029 வரை ) 1,3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித அவயோக பலன்களையே வாரி வழங்குகிறது.

எனவே இந்த ஜாதகி தனது ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் அடிப்படையில் குரு திசை ஜீவன பாவக வழியில் இருந்து யோக பலன்களை அனுபவிக்கும் பொழுது, இவரது சகோதரரான ஜாதகர் தனது ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் அடிப்படையில் குரு திசை பாதக ஸ்தான வழியில் இருந்து அவயோக பலன்களை அனுபவிக்கும் நிலையை தருகிறது, 

இவர்களுக்கு லக்கினம்,ராசி,நட்சத்திரம் ஆகியவை ஒன்றாக அமைந்த போதிலும் பாவக வலிமையின் தன்மைக்கு ஏற்ப யோக அவயோக பலன்களை அனுபவிக்கும் சூழ்நிலை உருவாகிறது, பொதுவாக பாரம்பரிய முறையில் ஜாதக பலன் காணும் பொழுது இந்த விஷயம் நிச்சயம் தெரிய வாய்ப்பில்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து, ஏனெனில் பாரம்பரியத்தில் கிரகங்களுக்கு முக்கியத்துவம் தருவார்களே அன்றி, 12 பாவகங்களின் நிலையை பற்றி சிறிதேனும் அக்கறை கொள்ள மாட்டார்கள் என்பதால், ஜாதகத்திற்கு உண்டான துல்லியமான பலன்களை எடுக்க வாய்ப்பு சிறிதும் இல்லை, நவகிரகங்கள் அனைவருக்கும் பொதுவான அமைப்பிலேயே ஜீவ காந்த அலைகளை தருகிறது, ஒவ்வொருவரின் பாவகத்தின் தன்மையே நவகிரகங்கள் தரும் ஜீவ காந்த அலைகளை பெற்று, ஜாதகருக்கு வினை பதிவிற்கு ஏற்றார் போல் யோக அவயோக பலன்களை வழங்குகிறது என்பது ஆணித்தரமான கருத்து.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696