ஞாயிறு, 26 நவம்பர், 2017

திருமண தடை மற்றும் இல்லற வாழ்க்கையில் இன்னல்களை தரும் நவகிரக திசாபுத்திகள் !



 சுய ஜாதகத்தில் சிறப்பான யோகங்கள் இருப்பினும், நடைபெறும் திசாபுத்தி அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் யோகங்களை தரும் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் சுபயோகங்கள் இருந்தும் பயனற்ற நிலையையே தரும், குறிப்பாக ஜாதகர் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய் க்கு அலைந்த நிலையை தந்துவிடும், கீழ்கண்ட ஜாதகருக்கு வயது 41 கடந்தும் திருமணம் எனும் பந்தத்தில் இணையாத சூழ்நிலையை தந்து, ஜாதகரையும் ஜாதகரின் பெற்றோரையும் மிகுந்த மனவேதனைக்கு ஆளாக்கிக்கொண்டு இருக்கின்றது, சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு 6,12ம் வீடுகள் 9ம் வீடு என மூன்று வீடுகள் மட்டுமே கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, மற்ற 9 வீடுகளும் மிகவும் வலிமையுடன் இருந்தும் ஜாதகர் வலிமை பெற்ற பாவக வழியிலான யோக பலன்களை சிறிதும் அனுபவிக்க இயலாத சூழ்நிலையில் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றார், சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் வீடுகளில் 12ம் வீடுமட்டும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது ஒரு வகையில் இன்னல்களை தந்த போதிலும் 2,5,7,8ம் பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையை ஏன் ஏற்படுகிறது என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கும்பம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஸ்வினி 2ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
9ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகருக்கு பெரும்பாலான பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், குறிப்பாக சுய ஜாதகத்தில் 1,2,3,4,5,7,8,10,11 எனும் ஒன்பது பாவகங்களும் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை மேற்கண்ட பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், 6,9,12ம் எனும் மூன்று பாவகங்கள் மட்டுமே சுய ஜாதகத்தில் வலிமை அற்று காணப்படுகிறது இதில் 6,12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடுமையான பாதிப்புகளையும், 9ம் பாவக வழியில் அளவில்லா கடுமையான பாதிப்புகளையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மேற்கண்ட பாவக வழியிலான நன்மை தீமைகளை ஜாதகர் எந்த காலகட்டத்தில் அனுபவிப்பார் என்பதில் இருக்கிறது ஜாதகரின் முன்னேற்றம் என்பது, ஜெனன காலம் முதல் தற்போழுது  வரை நடைபெற்ற நவகிரக திசை ஜாதகருக்கு தந்த பலாபலன்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

ஜெனன கால கேது திசை 4வருடம் 2மாதம் ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை தடையின்றி வாரி வழங்கியது ஜாதகருக்கு வளரும் சூழ்நிலையில் சிறப்பான யோக பலன்களை  வாரி வழங்கியிருக்கின்றது, ஜாதகர்  மாற்றும் ஜாதகரின் பெற்றோர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து சிறப்பான யோக பலன்களை பெற்று இருக்கின்றனர்.

சுக்கிரன் திசை 20 வருடம் ஜாதகருக்கு 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவில் ஜாதகருக்கும் ஜாதகரின் தகப்பனாருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கி இருப்பது சிறப்பான யோக பலன்களை தந்து இருக்கின்றது, ஜாதகரின் அடிப்படை கல்வி, உயர்கல்வி மற்றும் பட்டயபடிப்பு பரிபூர்ண சுபயோகங்களை வழங்கி இருக்கின்றது, கல்வி காலம் சிறப்பாக நிறைவு பெற்ற உடன் ஜாதகருக்கு நல்லதோர் தொழில் வாய்ப்பும் அமைந்து நிறைவான வருமானத்தை பெற ஆரம்பித்தார் என்பது ஜாதகருக்கு சுக்கிரன் திசை வழங்கிய சிறப்பு பலன்களாகும்.

சூரியன் திசை 6 வருடம் ஜாதகருக்கு 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான நன்மைகளை 5ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கியது ஜாதகர் தான் கற்ற கல்வி வழியில் இருந்து ராஜயோக பலன்களை பெற்றார் என்பது ஜாதகருக்கு சூரியன்  திசையால் கிடைத்த அதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.

சந்திரன் திசை 10 வருடங்கள் ஜாதகருக்கு 2,4ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான யோக பலன்களை வழங்கியது, ஜாதகருக்கு தொழில் ரீதியான சுபயோகங்களை வழங்க ஆரம்பித்தது, அதன் வழியில் ஜாதகர் பெற்ற தன்னிறைவான பொருளாதார வளர்ச்சி ஜாதகரின் வாழ்க்கை பாதையை வெகுவாக சீர்குலைக்க ஆரம்பித்தது, குறிப்பாக சந்திரன் திசையில் செவ்வாய் மற்றும் ராகு புத்திகள் ஜாதகருக்கு தவறான எதிர்பாலின சேர்க்கையையும், தீய பழக்க வழக்கங்களை கொண்ட நண்பர்களின் சேர்க்கை ஜாதகரின் வாழ்க்கையை புரட்டிப்போட ஆரம்பித்தது, செவ்வாய் புத்தியில் ஜாதகருக்கு ஏற்பட்ட அவப்பெயர் மற்றும் தவறான பழக்க வழக்கங்கள் ஜாதகரின்  வாழ்க்கையில் திருமணம் எனும் முயற்சிகளில் பிரதிபலித்தது, ஜாதகரின் திருமண முயற்சிகள் அனைத்திற்கும்  வெகுவான தடை தாமதத்தை வழங்க ஆரம்பித்தது தற்போழுது வரை நிறைவடையவில்லை, திருமணத்திற்க்கான பகிர்தன முயற்சிகள் யாவும் ஜாதகருக்கு கடுமையான தோல்வியை மட்டுமே வழங்கிக்கொண்டு இருக்கின்றது.

தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை ( 05/05/2016 முதல் 05/05/2023 வரை ) ஜாதகருக்கு 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 9ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் பாதகம் மற்றும் விரைய ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது, ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கான முயற்சிகள் அனைத்திற்கும் நல்லதோர் திண்டுக்கல் பூட்டை பலமாக பூட்டி சாவியை தன்வசம் வைத்துக்கொண்டது என்பதுடன் அடுத்துவரும் ராகு திசையிடம் தன்வசம் உள்ள சாவியை பொறுப்பாக தந்துவிடும் என்பதை நினைக்கும் பொழுது ஜாதகரின் இல்லற வாழ்க்கையை பற்றிய கேள்விக்குறி மிக பெரியதாக நம்முன் நிற்கின்றது.

மேற்கண்ட ஜாதகருக்கு 1,2,3,4,5,7,8,10,11 எனும் ஒன்பது பாவகங்கள் வழியில் இருந்து சுபயோக அமைப்புகள் இருப்பினும், நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாமல் வலிமையற்ற பாதகம் மற்றும் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு அதிர்ஷ்டம் இருந்தும்  துரதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது, பெரும்பாலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் இருப்பினும், நடைமுறையில், எதிர்காலத்தில் வலிமை பெற்ற பாவக பலனை நவக்கிரக திசாபுத்திகள் ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகரின் பாடு பெரும் தர்மசங்கட நிலைக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், அதற்க்கு மேற்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம்.

ஜாதகருக்கு திருமணம் தாமதமாக காரணம் என்ன ?

1) சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாதக ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாகவும் களத்திர ஸ்தானமாகவும் அமைகிறது, சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடு கடுமையாக பாதிக்கப்பட்டாலும் ஜாதகருக்கு திருமணம் தாமதம் ஆக அதிக வாய்ப்பு உள்ளது.

2) கடந்த சந்திரன் திசையில், செவ்வாய் புத்தியில் ஜாதகருக்கு ஏற்பட்ட எதிர்பாலின தவறான தொடர்பு ஓர் அவயோக ஜாதகமாகும் ( தரித்திர யோகம் ) இதன் தாக்கத்தை ஜாதகர் தற்போழுது வரை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார் என்பதுடன், செவ்வாய் புத்திக்கு அடுத்து வந்த ராகு புத்தி ஜாதகரின் திருமண முயற்சிக்கான வாய்ப்பை தட்டிப்பறிக்கும் களங்கத்தை ஏற்ப்படுத்தியது.

3) தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசையும் ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட பாதகம் மற்றும் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையை ஜீவனம் மற்றும் களத்திர வழியில் கடுமையான இன்னல்களை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, இதுவே ஜாதகரின் திருமண தாமதத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசை எதுவென்றாலும் சரி சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை
எனில் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்தாலும் பலனேதும் இருக்காது, சுய ஜாதகத்தில் அவயோகங்கள் இருந்தாலும் நடைபெறும் அல்லது எதிர்வரும் திசை சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை மட்டும் ஏற்று நடத்தினால் சுய ஜாதகத்தில் உள்ள அவயோகங்கள் யாவும் ஜாதகருக்கு நடைமுறைக்கு வாராமல், ஏற்று நடத்தும் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் சுபயோக பலன்களையே அனுபவிப்பார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 25 நவம்பர், 2017

லக்கினாதிபதி சூரியன் திசை, விரையாதிபதி சந்திரன் திசை தரும் பலன்கள் என்ன ?



கேள்வி :

 வணக்கம் எனது சுய ஜாதகத்தில் தற்போழுது சூரியன் திசை நடைமுறையில் உள்ளது, சூரியன் லக்கினாதிபதி என்பதால் எனக்கு நன்மையே செய்வார் என்றார்கள் ஆனால் இதுவரை எந்தவித நன்மையையும் சூரியன் திசை தரவில்லை, கடன் மட்டுமே அதிகரித்துள்ளது, எதிர்வரும் சந்திரன் திசை விரையாதிபதி திசை என்பதால், வீண் விரையமே ஏற்படும் என்கின்றனர், எதிர்காலத்தை நினைத்து மிகவும் கவலையாக உள்ளது, தயவு செய்து சந்திரன் திசை எனக்கு இன்னல்களை அதிகம் தருமா ? ஓரளவு நன்மையாவது செய்யுமா தெளிவுபடுத்த வேண்டுகிறேன், " நன்றி "

பதில் :

  பொதுவாக சுப ஸ்தானங்களுக்கு அதிபதியான கிரகங்கள் மற்றும் கிரகங்களின் திசாபுத்திகள் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுபயோக பலன்களை தரும் என்பதும், அசுப ஸ்தானங்களுக்கு அதிபதியான கிரகங்கள் மற்றும் கிரகங்களின் திசாபுத்திகள் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு அவயோக பலன்களை தரும் என்பதும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை பற்றிய யாதொரு தெளிவும் இன்றி, பொதுப்படையாக சொல்லப்படும் கருத்துக்களே, ஒருவரின் சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் தனிப்பட்ட முறையில் சுபயோக பலன்களையே, அவயோக பலன்களையே தனது திசாபுத்திகளில் ஏற்று நடத்தும் என்பது, சிறிதும் சுயஜாதக கணித அறிவு இல்லாமல் கற்பனையில் கூறப்படும் கருத்துக்களே, இதற்க்கு முக்கியத்துவம் தருவது என்பது நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நாமே தடைக்கற்களை உருவாக்கிக்கொள்வதற்கு இணையானது.

 மேலும் கால புருஷ தத்துவ அமைப்ப்பிற்கு நமது சுய ஜாதகத்தில் நவ கிரகங்கள் பெரும் வலிமை நிலையை ( ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் ) கருத்தில் கொண்டு, நமக்கு அவை நன்மை தீமை பலன்களை தரும் என்று கருதுவதும் சுய ஜாதக பாவக வலிமை பற்றிய கணித அறிவு இல்லாமல் கூறப்படும் தவறான கருத்துக்களே, சுய ஜாதக கணிதம் என்பது மூன்று விஷயங்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது அவையாவன :

1) ஓர் ஜாதகர் தனது பிறந்த குறிப்பை அடிப்படையாக கொண்டு ( பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ) பெறப்படும் சுய ஜாதகத்தில் லக்கினம் என்பதே முக்கியத்துவம் பெறுகிறது, சுய ஜாதகத்தை இயக்குவதில் லக்கினமே முதன்மை வகிக்கிறது, இந்த லக்கினத்தை மூலாதாராமாக கொண்டு மற்ற பதினோரு பாவகங்களும் வலிமை அல்லது வலிமை அற்ற தன்மையை பெறுகின்றது ( லக்கினம் உற்பட ) இதில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் நன்மை மற்றும் சுபயோக பலன்களையும், வலிமை அற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் தீமை மற்றும் அவயோக பலன்களை ஜாதகர் தனது வாழ்நாளில் அனுபவிக்கும் தன்மையை பெறுகிறார்.

2) ஓர் ஜாதகர் தனது பிறந்த குறிப்பை அடிப்படையாக கொண்டு ( பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ) பெறப்படும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் பலாபலன்களையே, சுய ஜாதகத்தில் நவகிரகங்களின் திசாபுத்திகள் சுவீகரித்து தனது திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் வழங்குகிறது, நவகிரகங்கள் தான் அமர்ந்த இடத்தின் பலனையே, பார்த்த இடத்தின் பலனையே தனது திசாபுத்திகளில் தரும் என்று கருதுவதும், தான் பெற்ற ஆதிபத்யத்தின் பலனை தனது திசாபுத்திகளில் தரும் என்று கருதுவதும் உண்மைக்கு புறம்பானது, சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை அல்லது புத்தி ஏற்று நடத்தும் பாவக வலிமை என்ன ? அது தரும் பலாபலன்கள் என்ன ? என்ற அடிப்படை விஷயம் அறியாமல் கற்பனையில் கூறப்படும் கருத்துக்களே என்றால் அது மிகையில்லை.

3) கோட்சார கிரகங்களின் பலன்கள் என்பது தற்போழுது பெரும்பாலும் சந்திரன் நின்ற இடத்தை ( ராசியை ) அடிப்படையாக கொண்டு பலன் கூறப்படுவதும் தவறான அணுகு முறையே, நமக்கு சுய ஜாதகம் உள்ளது என்றால் கோட்சார பலாபலன்களை நமது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் சம்பந்த படுத்தி கோட்சார பலன்களை அறிந்துகொள்வதே சரியானது, இதுவே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு துல்லியமான பலாபலன்களை கூறுவதற்கு ஏதுவானதாக அமையும், மேற்கூறிய விஷயங்களை, கேள்விகள் வினவிய அன்பரின் சுய ஜாதகத்துடன் பரீட்சித்து பார்த்து ( உதாரண ஜாதகமாக கொண்டு ) தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : சிம்மம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : மகம் 2ம் பாதம்

சூரியன் லக்கினாதிபதி, லக்கினாதிபதி திசை ஏன் நன்மையை தரவில்லை ?

பொதுவாக லக்கினாதிபதி என்ற முறையில் ஓர் ஜாதகருக்கு, லக்கினாதிபதி திசை நன்மையை தரும் என்பது தவறான கருத்து, லக்கினாதிபதி திசை என்றாலும் சரி, யோகாதிபதி திசை என்றாலும் சரி நமது ஜாதகத்தில் எந்த பாவக  பலனை ஏற்று நடத்துகிறது என்பதை பொறுத்தே, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுபயோக பலன்களோ, அவயோக பலன்களோ நடைமுறைக்கு வரும், லக்கினாதிபதி என்ற ஓர் தகுதியை வைத்து, அவரது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் நன்மையை மட்டுமே வழங்கும் என்பது தவறான கருத்து, மேற்கண்ட ஜாதகத்தில் தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை ஜாதகருக்கு லக்கினாதிபதி திசை என்றாலும், அவரது ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 2,6,8,12ம் வீடுகளின் பலனை தனது திசையில் ஏற்றுநடத்துவதால் ஜாதகருக்கு லக்கினாதிபதி திசை நன்மைகளை தரவில்லை, சூரியன் திசை ஜாதகருக்கு ( 20/04/2012 முதல் 20/04/2018 வரை ) சுய ஜாதகத்தில் 2,6,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் விரைய ஸ்தான பலனை வழங்கிக்கொண்டு இருப்பது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து குடும்பத்தில் இன்னல்கள், வருமான  பாதிப்பு, வரும் வருமானம் மற்றும் தனம் விரையமாகும் தன்மை, வாக்கு வன்மை அற்ற நிலை என்றவகையில் இன்னல்களையும், 6ம் பாவக வழியில் இருந்து உடல் தொந்தரவுகள், எதிரி தொல்லை, கடன் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலை, வீண் அவப்பெயர், எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் இன்னல்கள் என்றவகையிலும், 8ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை வழியிலான வீண் செலவுகள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் வீண் விரையம், மற்றவர்களை நம்பி தரும் பணம் மற்றும் பொருட்கள் வழியில் இருந்து வரும் திடீர் இழப்புகள் என்ற வகையில் இன்னல்களை தரும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் மன நிம்மதி கேள்விக்குறியாக மாறும், நிம்மதியின்றி அதிக மனஉளைச்சலை ஜாதகர் எதிர்கொள்ளும் நிலையை தரும், முதலீடுகளில் எதிர்பாராத பேரிழப்புகளை தரும், இதன் தாக்கம் ஜாதகரின் மனநிம்மதியை சீர்குலைக்கும், சரியான முடிவுகளை மேற்கொள்ள இயலாமல் போராட்ட வாழ்க்கையை ஜாதகர் எதிர்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகவேண்டிய சூழ்நிலையை தரும், ஜாதகர் லக்கினாதிபதி திசை நன்மையை தரும் என்ற ஆலோசனையின் பெயரில் செய்த முதலீடுகள் அனைத்தும் வீண் விரையம் என்ற நிலையை அடைந்ததற்கு அடிப்படை காரணமே, சுய ஜாதகத்தில் சூரியன் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்தியது  என்று தெரியாமல் வழங்கிய தவறான ஜாதக ஆலோசனையே என்றால் அது மிகையில்லை, நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தியிருந்தால் ஜாதகருக்கும் இது போன்ற தவறான ஜோதிட  ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருக்காது, சிறந்த ஜோதிடர் கிடைத்திருப்பர், ஜாதகருக்கும் சரியான ஆலோசனை கிட்டியிருக்கும், விதியின்  பயனை வெல்ல ஜாதகரின் குல தெய்வமும், பித்ருக்களின் ஆசியையும் பெற தவறிவிட்டார் என்பதுடன் உதாசீனம் செய்தார் என்பது வருந்தத்தக்க விஷயமாகும், மேலும் ஜாதகரின் விரைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாகவும், சர நீர் ராசியாகவும் அமைவது ஜாதகரின் மனநிலையை வெகுவாக படுத்தியெடுத்துவிட்டது என்று சொல்லி தெரியவேண்டியதில்லை,

விரையாதிபதி சந்திரன் திசை விரையத்தை தரும், வீழ்ந்து கிடக்கும் ஜாதகரை விழிப்புணர்வுடன் வெற்றிகொள்ள செய்யுமா ?

 எதிர்வரும் விரையாதிபதி சந்திரன் திசை தரும் பலன் என்ன? என்பதை காணுமுன் கிராமங்களில் உள்ள பெரியோர்கள் ஓர் " செலவேந்தரம் " ஒன்று சொல்வதுண்டு அதாவது " கப்பல் வியாபாரத்தில் விட்ட காசை, கட்டில் கயிறு திரித்து பெற முடியாது " என்று சொல்வதுண்டு இதற்க்கு அர்த்தம் நாம் எங்கு விட்டோமோ அங்கு இருந்துதான் அதை பெற முடியும் என்பதாக அமையும், எனவே ஜாதகர் லக்கினாதிபதி திசையில் வெகு விரயங்களை சந்தித்து விட்டார், ஆனால் விரைய ஸ்தான அதிபதியான சந்திரன் திசையோ ஜாதகருக்கு வலிமை பெற்ற  3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவக பலனை ஏற்று நடத்தி, ஜாதகருக்கு அபரிவிதாமான யோக வாழ்க்கையை வாரி வழங்க தயார் நிலையில் உள்ளது என்பது ஜாதகருக்கு தற்போழுது " ஜோதிடதீபம் " வழங்கும் சிறப்பான நல்ல செய்தியாகும், மேலும் சந்திரன் திசை முழுவதும் வலிமை பெற்ற வீரிய ஸ்தான பலன்கள் நடைபெறுவது ஜாதகரின் வெற்றி வாய்ப்புகளை தன்னிறைவாக வாரி வழங்கும், ஜாதகரின் வீரிய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாகவும், சர காற்று ராசியாகவும் அமைவது  வெளிநாடுகளில் இருந்து வரும் சரளமான பொருளாதார முன்னேற்றத்தை குறிப்பதுடன், ஜாதகர் இவையனைத்தையும் தனது அறிவு சார்ந்த முயற்சிகளில் இருந்து பரிபூர்ணமாக பெறுவார் என்பதை தெளிவுபடுத்துகிறது, ஜாதகரின் சமயோசித அறிவு புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் சகல விதங்களில் இருந்து தன்னிறைவான பொருளாதார வளர்ச்சியை வாரி வழங்கும், ஜாதகரின் அறிவின் வீச்சு மிகவும் பிரமாண்டமானதாகவும், ஜாதகரின் அறிவு சார்ந்த கண்டுபிடிப்புகள் உலக மக்களின் அவசிய தேவையை நிறைவு செய்வதாகவும் அமையும் என்பதை நினைத்து " ஜோதிடதீபம் " வியப்படைகிறது.

3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மிகுந்த செல்வசெழிப்பு, எதிரிகளை வெல்லுதல், நல்ல மனநிலை, சிறந்த சிந்தனை ஆற்றல், சத்தியத்தை மதித்தது நடப்பது, கல்வி கேள்விகளில் வெற்றி, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை, புதிய சிந்தனை மற்றும் புதிய  வாய்ப்புகள், ஏஜென்ஜி துறை வழியிலான அபரிவித வளர்ச்சி என்ற எமது  ஆசான் அருள்வேல் அய்யாவின் வாக்கிற்க்கு இணங்க, மேற்கண்ட சிம்ம லக்கின ஜாதகர் விரைய ஸ்தான அதிபதியான "சந்திரன்" திசையில் சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ணமாக பெறுவார் என்பதை உறுதிபட தெரிவித்து, மேற்கண்ட ஜாதகருக்கு எதிர்வரும் விரைய ஸ்தான அதிபதி சந்திரன் திசை விரையத்தை தாராது என்ற மனஉறுதியை வழங்குவதுடன், சந்திரன் திசைக்கு பிறகு வரும் செவ்வாய் திசையும் 4,10ம் வீடுகள் வழியில் இருந்து  சுபயோக பலன்களையும், செவ்வாய் திசைக்கு பிறகு வரும் ராகு திசை  5ம் வீடு வழியில் இருந்து சகல சௌபாக்கியத்துடன் கூடிய சுபயோக பலன்களையும் வாரி வழங்கும் என்ற திடமான ஜாதக உண்மையை கூற கடமைப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் வரும் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனையே தருவதால் ஜாதகருக்கு " வானமே எல்லை " என்பதை அறிவுறுத்துவதில் மகிழ்ச்சியும் மிதமிஞ்சிய இறை அருளின் கருணையை நினைத்து உவகை கொள்கிறது, எல்லாம் இறைஅருள் " வாழ்த்துக்கள் " அன்பரே !

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 23 நவம்பர், 2017

சாயா கிரகங்களான ராகுகேது சுய ஜாதகத்தில் தனது திசையில் தரும் பலாபலன்கள் !



 ராகுகேது சுய ஜாதகத்தில் தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களையும் வழங்கும், கீழ்கண்ட உதாரண ஜாதகத்தில் ஜாதகருக்கு தற்ப்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசை ஏற்று நடத்தும் பாவக வலிமை மற்றும் அது தரும் பலன்கள் என்ன ? என்பதனை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : சிம்மம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 4ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகிக்கு தற்போழுது ராகு திசை நடைமுறையில் உள்ளது ராகு திசை ஜாதகிக்கு 6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களையும், 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும் வழங்கிக்கொண்டு இருப்பது  ஜாதகிக்கு 6ம் பாவக வழியில் இருந்து  நன்மைகளையும், 2,8ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும் தரும் அமைப்பாகும், ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 2ம் பாவக வழியில் இருந்து தன ஆதாயத்தை வழங்கிய போதிலும், குடும்பம் சார்ந்த வழியில் இருந்து இன்னல்களை தரும், ஜாதகிக்கு குடும்ப வாழ்க்கையில் அதிக சிக்கல்களை சிரமங்களை அதிகரிக்கும், குறிப்பாக  ஜாதகியின் வார்த்தைகள் இல்லற துணையின் பொறுமையை வெகுவாக சோதிக்கும், பொறுப்பற்ற செயல்பாடுகள் குடும்ப வாழ்க்கையில் மிகுந்த சிரமங்களை  அதிகரிக்கும் என்பதனால் ஜாதகி மிகவும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது, வாழ்க்கை துணையுடன் வரும் கருத்து வேறுபாடுகளை களைந்து இனிமையான இல்லற வாழ்க்கையை வாழ்வதற்கான நடவடிக்கைகளில் ஜாதகி இறங்குவது  மிகுந்த சிறப்புகளை தரும் ஏனெனில் சுய ஜாதகத்தில் ஜாதகிக்கே 2ம் பாவகம் வலிமை அற்று காணப்படுகிறது, 

 மேலும் 8ம் பாவகம் வலிமை இழந்து இருப்பதும், 8ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியாக அமைவதும், ஜாதகியின் மனநிம்மதியை வெகுவாக பாதிக்கும், இல்லற வாழ்க்கையில் அதிக அளவிலான மனஅழுத்தம் மற்றும் மனப்போராட்டங்களை வழங்கும், மணவாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் தம்பதியரின் இல்லற வாழ்க்கையில் சில சிரமங்களை தரக்கூடும், இவையெல்லாம் ஜாதகியின் சுய ஜாதகத்தில் உள்ள 2,8ம் பாவகங்களின் வலிமை அற்ற தன்மையாலே ஏற்படுகிறது என்பதை ஜாதகி  உணர்ந்து அதன் வழியில் கர்மவினை பதிவினை கழித்துக்கொள்வதே நல்லது, தனது வாழ்க்கை துணையுடனான இணக்கத்தை அதிகரித்துக்கொண்டு  இனிமையான இல்லற வாழ்க்கையை சிறப்பாக வாழ கற்றுக்கொள்வதே சரியான தீர்வாக அமையும்.

ராகு திசை ராகு புத்திவரை ஜாதகி 2,8ம் பாவக வழியிலான இன்னல்கள் நடைமுறையில் இருக்கும் என்பதால் அவசப்பட்டு ஜாதகி எடுக்கும் முடிவுகள் கடுமையான நெருக்கடிகளை உருவாக்கிவிடும் என்பதால், ஜாதகி பொறுமையை கையாண்டு இல்லற வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை  பெறுவதே புத்திசாலித்தனம்.

சுய ஜாதகத்தில் நமக்கு நடைபெறும் திசா புத்திகள் பாதிப்பான பாவக தொடர்பை பெற்ற வீடுகளின் பலனை தரும் பொழுது பொறுமையை கையாள்வதே சிறந்த நன்மைகளை தரும், தனக்குவரும் பெரிய சிக்கல்களில் இருந்து விடுபட நல்லநேரம் வரும் வரை பொறுமை காப்பதே சாலச்சிறந்தது, மேற்கண்ட ஜாதகிக்கு தற்போழுது  நடைபெறும் ராகு திசை ராகு புத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்றுநடத்தது ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையில் பின்னடைவை தரும், 6ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு ராகு திசை நன்மையை தருவதால் , ஜாதகிக்கு வரும் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு சுப யோக பலன்களை தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெறுவார் என்பதை ஜாதகியின் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 1,5,7,11ம் வீடுகள் உறுதிப்படுத்துகிறது.

லக்கின பாவக வழியில் ஜாதகிக்கு உடல் நலம், மனவலிமையையும், 5ம்  பாவக வழியில் இருந்து சிறந்த இறை ஆசிர்வாதைத்தையும், சரியான முடிவுகளை மேற்கொள்ளும் வல்லமையையும், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல வாழ்க்கை துணையின் ஆதரவையும், அவருடனான தாம்பத்திய யோக வாழ்க்கையும், 11ம் பாவக வழியிலான நீடித்த அதிர்ஷ்டம் மற்றும் நல்ல குணத்தையும் தருவது ஜாதகியின் ராகு திசையின் வழியில் வரும் இன்னல்களை ஜாதகி வெற்றிகொள்ளும் வாய்ப்பை தரும், சுய ஜாதகம் நல்ல வலிமையுடன் இருந்தாலும் 2ம் வீடு பாதிக்கப்படுவது ஜாதகியின் வார்த்தைகள் இல்லற வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தரும் என்பதை கருத்தில் கொண்டு தனது இல்லற வாழ்க்கையை சிறப்பாக நடத்தி செல்வதே ஜாதகிக்கு முன் நிற்கும் சவால்கள் என்பதை கருத்தில் கொண்டு இனிமையான இல்லற வாழ்க்கை வாழ "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 21 நவம்பர், 2017

ராகுகேது தோஷம் தரும் பாதிப்புகள் என்ன ? 1ல் அமர்ந்த கேதுவும், 7ல் அமர்ந்த ராகுவும் ஜாதகருக்கு தரும் பலாபலன்கள் என்ன ?


 ராகுகேது எனும் சாயா கிரகங்கள் சுய ஜாதகத்தில் 1,2,5,6,7,8,12 வீடுகளில் ஜெனன ஜாதகத்தில் அமர்ந்து இருப்பது  ராகுகேது தோஷமாகவும், சர்ப்ப தோஷமாகவும் நிர்ணயம் செய்யப்படுகிறது, இந்த நிலையை சுய ஜாதகத்தில் பெற்ற அன்பர்கள் சாயாகிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது கிரகங்களால் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகும் தன்மையை தரும் என்றும், கல்வி,தொழில்,திருமணம் மற்றும் குழந்தை பாக்கியத்தில் தடைகளையும், தாமதங்களையும் ஏற்படுத்தும் என்றும், இதனால் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகும் என்ற கருத்து ஸ்திரமாக இருக்கின்றது, சுய ஜாதகத்தில் சாயாகிரகங்கள் மேற்கண்ட வீடுகளில் அமர்ந்திருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தோஷத்தை தரும் என்று கருதுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்தாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, மேற்கண்ட வீடுகளில் அமர்ந்திருக்கும் ராகு கேது இன்னல்களை மட்டுமே சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை மட்டுமே தரும் என்று கருதுவதும் தவறான கருத்தே என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் எந்த ஓர் பாவகத்தில் ராகுகேது அமர்ந்தாலும், தான் அமர்ந்த பாவகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் வல்லமை, சாயா கிரகங்களான ராகு கேதுவுக்கு நிச்சயம் உண்டு, தான் அமர்ந்த பாவகத்தில் சேர்ந்த மற்ற கிரகங்களின் பலாபலன்களை தானே சுவீகரித்து ஜாதகருக்கு நன்மை தீமை பலன்களை வழங்கும் வல்லமையும் சாயாகிரகங்களுக்கு பரிபூர்ணமாக உண்டு, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : கும்பம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : ஸ்வாதி 4ம் பாதம்

மேற்கண்ட ஜாதகருக்கு ஜெனன ஜாதகத்தில் லக்கினத்தில் கேதுவும், ஏழாம் பாவகத்தில் ராகுவும் அமர்ந்து இருப்பதை கருத்தில் கொண்டு ஜாதகருக்கு சர்ப்பதோஷம் என்று முடிவு செய்வது மிகவும் தவறான அணுகுமுறையாகும், ராகு கேது உண்மையில் அமர்ந்த பாவகம் எது ? என்பதில் முதலில் தெளிவு வேண்டும், ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் கும்ப ராசியில் 325:47:55 பாகையில் ஆரம்பித்து, மேஷ ராசியில் 000:32:21 பாகையில் முடிவடைகிறது, கேது அமர்ந்திருப்பது கும்ப ராசியில் உள்ள 316:55:40 பாகையில் என்பதனால் ஜாதகருக்கு கேது கும்ப ராசியில் உள்ள 12ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார் என்பதே சரியானது, அதை போன்றே நேரெதிராக சிம்மத்தில் அமர்ந்திருக்கும் ராகுவும் சிம்மத்தில் உள்ள 6ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார் என்பதே சரியான ஜாதக கணிதமாகும், எனவே மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினம் மற்றும் 7ல் கேது ராகு அமர்ந்த தோற்றத்தை தந்தாலும் பாவக கணித முறைப்படி 12ம் பாவகம் மற்றும் 6ம் பாவகத்தில் அமர்ந்து இருப்பதே முற்றிலும் சரியானதாகும்.

பாவங்கள் முறையே 6,12ல் அமர்ந்த சாயா கிரகங்களான ராகுகேது ஜாதகருக்கு வழங்கும் பலாபலன்கள் என்ன ? என்பதே அடுத்த கேள்வி சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு முறையே 6,12ல் அமர்ந்த ராகுகேது முழு வலிமை பெற்று சுபத்துவத்தை பெற்று இருப்பதால் ஜாதகர் 6,12ம் பாவக வழியில் இருந்து 100% சதவிகித நன்மைகளை பரிபூர்ணமாக பெறுவார் என்பதே மிக சரியான ஜோதிட கணிதமாகும்.

ஜாதகருக்கு 6ல் வலிமை பெற்ற ராகு அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும், எதிரிகள் வழியில் இருந்து நன்மைகளையும், மருத்துவ உபகரணம் மருந்துகள் மூலம் அபரிவிதமான லாபங்களை பெற்று தருவார், ஜாதகரின் உடல் வலிமை மற்றும் மனவலிமை அதிகரிக்கும், சிம்மத்தில் உள்ள 6ல் அமர்ந்த ராகு ஜாதகரின் ஆன்மீக வெற்றியை மிகவும் சிறப்பாக முன்னெடுத்து செல்லும், யோக கலையிலும் சாஸ்த்திரம் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கும் தன்மையை தருவது ஜாதகருக்கு கிடைத்த ஆசிர்வாதம் ஆகும், தெய்வீக அனுக்கிரகம் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்து இருப்பது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற ராகுவின் சிறப்பு அம்சத்தாலே என்றால் அது மிகையில்லை, ஜாதகரின் வாக்கு வன்மையும், அதிகார வல்லமையும் சிறப்பான நிர்வாக திறமையும் பெருவாரியான வெற்றிகளை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், 6ல் அமர்ந்த ராகு ஜாதகருக்கு குறுகிய கால வெற்றி வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கிக்கொண்டு இருப்பதும், ஸ்திர நெருப்பு தத்துவ அமைப்பில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகளும் மிகவும் அபரிவிதமானதாக இருப்பதை ஜாதகர் தனது சிறு வயதில் இருந்தே பரிபூர்ணமாக உணர்ந்துகொண்டு இருக்கின்றார், மேலும் ஜாதகரின் வெற்றிகொள்ளும் திறன் அதிகரித்து இருப்பதற்கும் அடிப்படை காரணமாக அமைவது ஜெனன காலத்தில் 6ம் பாவகத்தில் நின்ற ராகு பகவானே என்றால் அது மிகையில்லை.

ஜாதகருக்கு 12ல் வலிமை பெற்ற கேது பகவான், நல்ல மனநிம்மதியை தனது அறிவார்ந்த செயல்கள் மூலம் பரிபூர்ணமாக பெறுவதை உறுதிப்படுத்துகிறது, அயனசயன ஸ்தானத்தில் அமர்ந்த கேது ஜாதகருக்கு நல்ல ஆன்மீகவாதிகளின் ஆசீர்வாதத்தையும், தெய்வீகம் நிறைந்த பல திருத்தல தரிசனங்களையும் சிறப்பாக வழங்கியுள்ளது, நல்ல உறக்கம் ஜாதகரின் உடல் நலத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது, தெளிவான சிந்தனையுடன் ஜாதகர் எடுக்கும் முடிவுகள் பரிபூர்ண வெற்றிகளை வாரி வழங்குகிறது, யோக வாழ்க்கையில் நல்ல ஞானத்தை பெற ஜாதகருக்கு கும்பத்தில் அமர்ந்த கேது வாரி வழங்குகிறார், ஜாதகரின் எண்ணம் மற்றும் லட்சியம் நிறைவேற முழுவீச்சில் உதவி புரிவது ஜாதகத்தில் 12ல் அமர்ந்த கேது பகவானே என்றால் அது மிகையில்லை, ராகுகேது இரண்டு சாயா கிரகங்களும் ஸ்திர ராசியான சிம்மம் மற்றும் கும்ப ராசியில் அமர்ந்திருப்பது, ஸ்திரமான பலாபலன்களை ஜாதகருக்கு வழங்க தவறுவதில்லை, அயன சயன ஸ்தானம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமான 11ம் வீடாக அமைவது ஜாதகரின் அதிர்ஷ்டத்தை 12ம் பாவக வழியில் இருந்து அபரிவிதமாக வாரி வழங்கிக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், முதலீடுகளில் இருந்து ஜாதகருக்கு வரும் வருமானம் ஜாதகரின் பொருளாதார தேவைகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவு செய்கிறது, ஜாதகரின் மனநிம்மதி, தெளிவான சிந்தனை, போதும் என்ற மனது திருப்திகரமான யோக வாழ்க்கையை வாரி வழங்குகிறது.

மேற்கண்ட ஜாதகரின் வெற்றிகரமான யோக வாழ்க்கைக்கு அடிப்படை காரணகர்த்தாவாக விளங்குவதே சுய ஜாதகத்தில் வலிமை பெற்று அமர்ந்திருக்கும் சாயா கிரகங்களான ராகு கேது பகவானே என்றால் அது மிகையில்லை அன்பர்களே, சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் ராகு கேது அமர்ந்தாலும் தான் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்யும் நிலையில் ராகுகேது இருப்பின் நிச்சயம் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை பரிபூர்ணமாக பெறுவார், மாறாக சுய ஜாதகத்தில் வலிமை அற்று அமர்ந்து இருக்கும் ( எந்த பாவகம் என்றாலும் சரி ) ராகு கேது ஜாதகருக்கு அவயோக பலாபலன்களை வாரி வழங்க தவறுவதில்லை என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகிறது.

குறிப்பு :

சுய ஜாதகத்தில்  1,2,5,6,7,8,12 வீடுகளில் ஜெனன ஜாதகத்தில் அமர்ந்து இருப்பது மட்டுமே தோஷத்தை தாராது, லக்கினம் முதல் 12 பாவகத்தில் அமர்ந்து இருக்கும் ராகுகேது தான் அமர்ந்த பாவக வழியில் வலிமை பெற்று இருப்பின் சுபயோக பலாபலன்களையும், வலிமை அற்று இருப்பின் தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து அவயோக பலாபலன்களை தரும் என்பதை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வதே சரியான ஜோதிட கணித முறையாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 20 நவம்பர், 2017

சுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் ஜாதகருக்கு சுபயோக பலன்களை தர மறுப்பதேன் ?



 ஜாதகத்தில் உள்ள சுபயோகங்கள் ஓர் ஜாதகருக்கு யோக பலன்களை நடைமுறையில் எடுத்து நடத்ததிற்கு மூன்று காரணங்கள் உண்டு 1) ஜாதகருக்கு சரியான நேரத்தில் நிகழ்காலத்தில் அல்லது எதிர்காலத்தில் நடைபெறும் திசா புத்திகள் யோக பலன்களை தரும் பாவக பலனை ஏற்று நடத்தாமல் போனால் ஜாதகர் சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்து அதனால் ஒரு பயனும் ஏற்படாது, 2) தனது ஜாதகத்திற்கு சற்றும் பொருந்தாத அல்லது நேரெதிரான அவயோகங்களை பெற்றுள்ள எதிர்பாலின அமைப்பினரிடம் சேர்க்கை பெறுவதினால், சுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் பங்கம் பெற்று சுபயோக பலாபலன்களை நடைமுறைக்கு வாராது. 3) ஓர் ஜாதகத்தில் சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வருவது ஜாதகரின் சுய அறிவு நிலை மற்றும் சமயோசித புத்திசாலித்தனத்தை அடிப்படையாக கொண்டே அமையும் என்பதால், ஜாதகர் எந்த ஓர் சூழ்நிலையிலும் தனது சுய அறிவு மற்றும் புத்திசாலித்தனம் மழுங்கும் விஷயங்களில் ஈடுபட கூடாது, குறிப்பாக ஜாதகரின் அறிவை மழுங்கடிக்கும் போதை வஸ்துக்களை பயன்படுத்துபவர் என்றால் சுய ஜாதகத்தில் யோக பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகிறது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : தனுசு 
ராசி : கன்னி 
நட்ஷத்திரம் : அஸ்தம் 3ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகருக்கு இறை அருள் கொடுத்துள்ள சுய ஜாதக வலிமை என்பது மிகவும் அரிதானது, அபரிவிதமான செல்வாக்கினை வாரி வழங்கும் தன்மையை பெற்றது, சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் ஒன்றை தவிர மற்ற பாவகங்கள் அனைத்தும் மிகவும் வலிமையுடன் இருப்பதை வைத்தே இதை உறுதிசெய்யலாம், மேலும் ஜாதகருக்கு நடைபெறும் குரு திசை தரும் பலாபலன்கள் என்பது அதிர்ஷ்டத்தின் தன்மையை பரிபூர்ணமாக உணரவைக்கும் அமைப்பாகும், நடைபெறும் குரு திசையை ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை தரும் சுபயோக பலன்களில் உச்ச நிலையாகும்.

சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், இது ஜாதகரை எந்த சூழிநிலையிலும் சிறப்பான வெற்றிகளை பெறுவதற்கான  நல்ல வாய்ப்புகளை தொடர்ந்து பெற்றுத்தந்துகொண்டே இருக்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேற்கண்ட ஜாதகருக்கு அத்துணை சிறப்புகள் இருந்து யாதொரு நன்மையையும் அனுபவிக்க இயலாமல், இன்னல்களை இந்நாள்வரையிலும் அனுபவித்துக்கொண்டு இருப்பதற்கு அதிமுக்கிய காரணம், ஜாதகரின் சகவாச தோஷம் என்றால் அது மிகையாகாது, ஜாதகருக்கு பணியிடத்தில் ஏற்பட்ட தவறான எதிர்பாலின சேர்க்கை ஜாதகரின் சுய ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை கபளீகரம் செய்துகொண்டு இருப்பது, ஜாதகரின் பேச்சின் வழியிலும், அந்த எதிர்பாலின சேர்க்கையாளரின் எதிர்காலம் பற்றி தெரிந்துகொள்வதில் காட்டிய ஆர்வத்தின் வழியிலும் மிக தெளிவாக நாம் உணர முடிந்தது, ஜாதகரின் சுய ஜாதகத்தில் உள்ள சுபயோகங்கள் அனைத்தும் பங்கம் பெற்று நிற்பதற்கு அடிப்படை காரணமே அந்த எதிர்பாலின சேர்க்கைதான் என்பதை ஜாதகர் உணராமல் பிதற்றி கொண்டு இருப்பது, ஜாதகரின் ஆயுள் பாவகம் தரும் பலாபலன்களின் திருவிளையாடல் என்பதை  எப்படி? ஜாதகருக்கு புரியவைப்பது.

சம்பத்தப்பட்ட எதிர்பாலின சேர்க்கையாளரின் சுய ஜாதகத்தில் கிட்டத்தட்ட லக்கினம் முதல் மிக முக்கியமான 8 பாவகங்கள் பாதக ஸ்தான தொடர்பை பெற்றிருப்பதை ஜாதகர் எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை  என்பதை அவரின் வார்த்தைகளில் இருந்து மிக தெளிவாக நாம் உணர்ந்துகொள்ள முடிந்தது, குறிப்பாக எதிர்பாலின சேர்க்கையாளரின் சுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நடைபெறும் திசாபுத்தியும் பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையை சூன்ய நிலைக்கு ஆற்படுத்திக்கொண்டிருப்பதை, ஜாதகர் புரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் சிறிதும் இல்லை என்பதை வெகு நேர ஆலோசணைக்கு பிறகு நாம் தெளிவாக உணர்ந்துகொண்டோம்.

மேலும் இந்த எதிர்பாலின சேர்க்கையாளரின் தொடர்புக்கு பிறகு ஜாதகர் தேவையற்ற தீய பழக்க வழக்கங்களில் சிக்குண்டு சீரழிந்துகொண்டிருப்பது தெளிவாக நமக்கு தெரிந்தும், ஜாதகரின் சுய ஜாதக வலிமையை பற்றி சிறிதும் புரியவைக்க முடியவில்லை, எல்லாம் ஜாதகரின் இறைநம்பிக்கை அற்ற தன்மைக்கு பரிசாக கிடைத்ததாக நமக்கு தோன்றுகிறது, ஜாதகரின் வாழ்க்கையில் சுபயோகங்களை பெறுவதற்கான இறுதி வாய்ப்பையும் ஜாதகர் இழந்ததாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, ஜாதகருக்கு குரு திசையில் எதிர்வரும் சுக்கிரன் புத்தி நல்லதோர் ஆன்மீக குருவின் தொடர்பை பெற்று சுய ஜாதகத்தில் உள்ள யோக பலாபலன்களை முழுவதும் சுவீகரிக்க ஓர் நல்ல வாய்ப்பை இறையருள் வழங்கும் என்ற நம்பிக்கையுடன் இன்றைய பதிவை நிறைவு செய்கிறோம்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்கள் பெரும்பாலும் முறையற்ற எதிர்பாலின சேர்க்கை, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆட்படும் தன்மை, தனது  சுய ஜாதக வலிமை பற்றிய தெளிவின்மை போன்ற காரணங்களாலேயே, யோகபங்க நிலையை பெறுகின்றது என்பதால், சுய ஜாதக வலிமை பற்றிய விழிப்புணர்வு மிக மிக அவசியமாகிறது, என்பதை  " ஜோதிடதீபம் " இந்தநேரத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 18 நவம்பர், 2017

தொழில் ரீதியாக தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் தரும் திசாபுத்தி எது ?


கேள்வி :

தற்போழுது நடைபெறும் ராகு திசை தரும் பலாபலன்கள் என்ன ? அடுத்து வரும் குரு திசை தரும் பலன்கள் என்ன ? எனது ஜாதகத்திற்கு தொழில் ரீதியாக தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் தரும் கிரகங்களின் திசாபுத்தி எவை என்பதை தெளிவுபடுத்த இயலுமா ?


லக்கினம் : மிதுனம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : பூராடம் 3ம் பாதம்

பதில் :

தங்களது சுய ஜாதக வலிமை என்பது மிகவும் அபரிவிதமானது என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஏனெனில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் ஒரு பாவகம் கூட வலிமை இழந்து காணப்படவில்லை என்பது தங்களுக்கு இறைஅருள் வழங்கி உள்ள ஆசிர்வாதம் என்பதை தெளிவுபடுத்த " ஜோதிடதீபம் " கடமைப்பட்டுள்ளது, மேலும் தங்களின் ஜாதகத்தில் உள்ள பாவக தொடர்புகள் மிகவும் நேர்த்தியாகவும், சுபயோகங்கள் நிறைந்தததாகவும் உள்ளது, இனி தங்களின் கேள்விகளுக்கான பதில்களை தங்களின் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு தெளிவுபடுத்துகிறோம்.

தற்போழுது நடைபெறும் ராகு திசை தரும் பலாபலன்கள் என்ன ?

நடைமுறையில் உள்ள திசா தரும் பலாபலன்கள் பற்றி நமக்கு தெளிவாக தெரிய வருவது நமது வாழ்க்கைக்கான திட்டமிடுதல்களையும், அதன் வழியிலான நன்மைகளையும் பெறுவதற்கு பேருதவியாக அமையும், எதிர்வரும் திசை தரும் பலாபலன்கள் பற்றிய தெளிவு நமது எதிர்கால வாழ்க்கைக்கான திட்டமிடுதல்களை மிக சிறப்பாக எடுத்துச்செல்ல உதவி புரியும், நமது ஜாதகத்தில் நடைமுறையில் உள்ள திசை சுய ஜாதகத்தில் எந்த பாவக பலன்களை ஏற்று நடத்துகிறது அந்த பாவக வழியில் இருந்து நன்மை தீமை பலன்களை சிறிதும் மாற்றம் இன்றி தரும், இதை அடிப்படையாக கொண்டு பார்க்கும் பொழுது தங்களின் ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் ராகு திசை ( 05/04/2002 முதல் 05/04/2020 வரை ) தங்களுக்கு 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்ற பூர்வபுண்ணிய ஸ்தான பலனை முழு அளவில் வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, இது தங்களுக்கு சமயோசித அறிவு திறன், கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம், குலதெய்வத்தின் அருளாசி மூலம் சகல வித சம்பத்துக்களையும் பெரும் யோகம், தெய்வீக அனுக்கிரகம், நல்ல குழந்தை  பாக்கியம் மற்றும் சிறந்த வாரிசு யோகம், குழந்தைகள் வழியிலான சுபயோகங்கள், முன் பின் அறிமுகம் இல்லாத அன்பர்கள் வழியிலான உதவிகள், தொழில் துறையில் நல்ல ஞானம், அதன் வழியில் இருந்து பெரும் பொருளாதார வளர்ச்சி, புதிய சிந்தனை மற்றும் புதிய திட்டமிடுதல்கள், மனதில் நினைத்த விஷயங்களை சுவீகரிக்கும் யோகம் என்றவகையில் சிறப்பான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், மேலும் தங்களின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியாகவும் சர காற்று தத்துவ அமைப்பிலும் வலிமை பெற்று இருப்பது, தங்களின் வெளிவட்டார பழக்க வழக்கத்தை சிறப்பாக அமைத்து தரும், நல்ல மக்கள் செல்வாக்கு, நல்ல நண்பர்கள் சேர்க்கை, பிரபல்ய யோகம், வெளிநாடுகளில் தங்களின் அறிவு திறன் கொண்டு ஜீவனம் பெரும் அமைப்பு, வாழ்க்கை துணை வழியிலான அறிவார்ந்த உதவிகள், அரசியல் செல்வாக்கு , கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது என்பது தங்களுக்கு மிகவும் சாதகமான அம்சமாகும்.

ராகு திசை வலிமை பெற்ற 5ம் பாவக பலனை ஏற்று நடத்துவதும், 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு துலாம் ராசியில் அமைவதும் தங்களின் வாழ்க்கையில் சகல விதமான செல்வாக்கினையும் தங்களின் அறிவு சார்ந்த அமைப்பிலும், வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் வெளியூர் வெளிநாட்டில் இருந்து அபரிவிதமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ராகு திசை தங்களுக்கு சிறப்பான யோக பலன்களை வழங்கி கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ராகு திசையில் தற்போழுது நடைபெறும் சந்திரன் புத்தி 8ம் பாவக வழியில் இருந்து மிகுந்த அதிர்ஷ்டங்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது தங்களுக்கு மேலும் நன்மைகளை தரும் அமைப்பாகும், 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 1ம் ராசியாக அமைவது தங்களின் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை உறுதி செய்யும், திடீர் அதிர்ஷ்டம் தங்களின் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றங்களை வாரி வழங்கும்.

அடுத்து வரும் குரு திசை தரும் பலன்கள் என்ன ?

எதிர்வரும் குரு திசை தங்களுக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமை மிக்க சுபயோக பலாபலன்களை ஜீவன ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்குவது தங்களுக்கு சிறப்பான அம்சமாகும், குறிப்பாக தங்களின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்பத்தில் 1பாகையில் ஆரம்பித்து மேஷ ராசியில் 2பாகை வரை வியாபித்து நிற்பது, முதலீடுகளில் வரும் அதிக லாபத்தை குறிக்கின்றது, தங்களின் தொழில் ரீதியான முதலீடுகள் மிகுந்த லாபத்தை தரும், தொழில் ரீதியாக மனநிம்மதியும், திருப்திகரமான யோக வாழ்க்கையையும் ஜீவன வழியில் இருந்து பரிபூர்ணமாக வாரி வழங்கும் என்பதால் தாங்கள் தொழில் ரீதியான சிறப்புக்களை எதிர்வரும் குரு திசையில் பரிபூர்ணமாக பெறுவீர்கள் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், வாழ்த்துக்கள்.

தங்களின் ஜாதகத்திற்கு தொழில் ரீதியாக தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் தரும் கிரகங்களின் திசாபுத்திகள்.

சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற ஸ்தானம் 5,11ம் பாவகம் ஆகும், 5,11ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் வழியில் இருந்து தாங்கள் 100% விகித நன்மைகளை பரிபூர்ணமாக அனுபவிக்கலாம் என்பதால் 5,11ம் பாவக தொடர்பை ஏற்று நடத்தும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் தங்களுக்கு தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சுபயோகங்களை வாரி வழங்கும் இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது தங்களுக்கு, சுக்கிரன்,சந்திரன்,ராகு,சனி,புதன் மற்றும் கேது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் தங்களுக்கு பரிபூர்ண சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும், மேற்கண்ட கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் நடைபெறும் பொழுது தங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வெற்றிகளை 100% விகிதம் பெற இயலும் என்பதை " ஜோதிடதீபம் " தெளிவாக பதிவு செய்கிறது.

குறிப்பு :

  பெரும்பாலும் மேற்கண்ட ஜாதகம் போன்று ஓர் வலிமையான ஜாதகம் அமைவது அரிதிலும் அரிதானது, ஜாதகர் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் சிறப்பான சுபயோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் என்பதை உறுதிபட சொல்ல முடியும், வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் பலாபலன்களை அனுபவிக்க முடியவில்லை எனில் ஜாதகர் தனது பழக்க வழக்கங்களிலும், எதிர்பால் இணைசேர்க்கை வழிகளிலும் சுய பரிசோதனை செய்துகொள்வது, யோக பலன்களில் ஏற்பட்ட தடைகளுக்கான மூல காரணத்தை தெரிந்துகொள்ள இயலும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 17 நவம்பர், 2017

சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் என்ன ? கூட்டு தொழில் செய்வது எனது ஜாதகத்திற்கு பொருத்தமானதா ?

  

  சுய ஜாதகத்தில் நவகிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் தனிப்பட்ட முறையில் பலாபலன்களை வாரி வழங்கும் வல்லமை பெற்றவை அல்ல, மேலும் சுய ஜாதகத்தில் ஓர் கிரகம் அமர்ந்த இடத்தின் பலாபலனை தரும் என்று கருதுவதும் தவறானது, உதாரணமாக சுய ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், நட்பு, சமம் என்ற  நிலையில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் திசாபுத்திகள் சுபயோக பலனை தரும் என்று கருதுவதும் தவறானது, அதைப்போன்றே நீசம்,பகை என்ற நிலையில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் திசாபுத்திகள் அவயோக பலனை தரும் என்று கருதுவதும் முற்றிலும் தவறானது, நவகிரகங்களின் திசாபுத்திகள் சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையை அடிப்படையாக கொண்டே யோக அவயோகங்களை வழங்குகிறது, குறிப்பாக ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நடைபெறும் திசாபுத்திகள் எதுவென்றாலும் சுபயோக பலாபலன்களையே வாரி வழங்கும், அது பாவ கிரகத்தின் ( சூரியன்,செவ்வாய்,சனி,ராகுகேது, தேய்பிறைசந்திரன், சூரியனுடன் சேர்ந்த புதன் ) திசாபுத்திகள் என்றாலும் சுபயோக பலாபலன்களையே நடைமுறைக்கு கொண்டுவரும், இவர்களை ஏழரை சனி அஷ்டமசனி, குரு சஞ்சாரம் போன்ற விஷயங்கள் யாதொரு இன்னல்களையும் ஏற்படுத்தாது, சுய ஜாதக வலிமையே மேலோங்கி நிற்கும் என்பதால் ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் நன்மைகளே நடைமுறைக்கு வரும்.

சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பாதிக்கப்பட்டோ, அல்லது 6,8,12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றோ அல்லது பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றோ இருப்பின், ஜாதகருக்கு சுபக்கிரகங்களின் ( குரு,சுக்கிரனை,வளர் சந்திரன், புதன் ) திசா புத்திகள் நடைமுறையில் இருப்பினும், ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான பலாபலன்களே நடைமுறைக்கு வரும், என்பதனை கருத்தில் கொள்வது நலம் தரும் அன்பர்களே !

கீழ்கண்ட ஜாதகர் வினவிய கேள்விகளுக்கான பதில்களுடன், மேற்கண்ட கருத்துக்களை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !



லக்கினம் : துலாம்
ராசி : விருச்சிகம்
நட்ஷத்திரம் : அனுஷம் 1ம் பாதம்

6ல் உச்சம் பெற்ற சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் என்ன ?

ஜாதகர் தனது ஜாதகத்தில் சுக்கிரன் 6ல் உச்சம் பெற்று அமர்ந்து இருப்பதாக கூறியிருக்கிறார், அடிப்படையில் அதுவே தவறானது ஏனெனில் சுய ஜாதகத்தில் சத்ரு ஸ்தானம் எனும் 6ம் பாவகம் ஜாதகருக்கு மீன ராசியில் 347:45:08 பாகையில் ஆரம்பித்து மேஷ ராசியில் 017:03:59 பாகையில் நிறைவு பெறுகிறது அதாவது ஜாதகரின் சத்ரு ஸ்தானம் எனும் 6ம் பாவகம் மீனத்தில் 13பாகைகளும், மேஷத்தில் 17 பாகைகளும் கொண்டிருக்கின்றது, சுக்கிர பகவான்  346:42:15 பாகையில் மீன ராசியில் உள்ள 5ம் பாவகத்தில் அமர்ந்திருப்பதே  உண்மை நிலை என்பதால், ஜாதகருக்கு சுக்கிரன் 5ம் பாவகத்தில் உச்சம் பெற்று அமர்ந்து இருக்கிறார் என்பதே சரியானது, அடுத்து ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் என்னவென்பதை ஆய்வு செய்வோம், ஜாதகருக்கு சுக்கிரன் திசை 6ம் வீடு பாதக ஸ்தானமான  11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை ஜாதகருக்கு வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றார், சுக்கிரன் ஜாதகத்தில் மீனத்தில் உள்ள 5ம் பாவகத்தில் உச்சம் பெற்று அமர்ந்து இருந்தாலும் தனது திசையில் ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை  சந்தித்துக்கொண்டு இருக்கின்றார் என்பதே உண்மை நிலை, பாரம்பரிய முறையில் லக்கினாதிபதி திசை ஜாதகருக்கு நன்மையை தரும் என்று கூறும் விஷயம் எல்லாம் இங்கே எடுபடாது என்பதை கருத்தில் கொள்வது நலம், நவகிரகங்கள் தான் ஏற்று நடத்தும் பாவக வழியிலான பலாபலன்களில் யாதொரு சமரசமும் செய்துகொள்வது கிடையாது, தரவேண்டிய பலன்களை தங்குதடையின்றி வாரி வழங்கும், அது நன்மையென்றாலும் சரி தீமையென்றாலும் சரி, மேற்கண்ட ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரை 6ம் பாவக வழியில் இருந்து படுத்தி எடுத்துவிடும், 6ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12 மற்றும் 1ம் வீடுகளில் வியாபித்து நிற்பது ஜாதகருக்கு உடல் நலம் சார்ந்த இன்னல்களை கடுமையாக தரும்,  ஜாதகருக்கு தனது உடல் நலனை தானே இன்னலுக்கு ஆளாக்கிக்கொள்வார், இதனால் ஜாதகருக்கு மனஅழுத்தமும், மனப்போராட்டமும் அதிகரிக்கும், இதன் தாக்கம் ஜாதகருக்கு 200% விகிதம் இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது மேலும் கடன் சார்ந்த தொந்தரவுகள், எதிரிகள் வழியிலான இன்னல்களும் ஜாதகரை படுத்தி எடுக்கும்.

கூட்டு தொழில் செய்வது எனது ஜாதகத்திற்கு பொருத்தமானதா ?

கூட்டு தொழில் செய்ய சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7ம் வீடான களத்திர ஸ்தானமும், கால புருஷ தத்துவத்திற்கு 7ம் ராசியான துலாம் ராசியும் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகத்தில் துலாம் ராசி நல்ல வலிமை பெற்று இருந்த போதிலும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் ஜாதகருக்கு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது கூட்டு தொழில் செய்வதற்கு ஜாதகருக்கு யோகம் இல்லை என்பதை  தெளிவாக காட்டுகிறது, மேலும் ஜாதகரின் விரைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் ராசியிலும் வியாபித்து நிற்பது ஜாதகரின் கூட்டு தொழில் அம்சத்திற்கு வேட்டு வைக்கும் அமைப்பாகும், ஜாதகருடன் கூட்டு வைப்பவரும் சேர்ந்து நஷ்டமடைவார் என்பதையே இது தெளிவாக காட்டுகிறது.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,2,3,5,4,9,10ம் வீடுகள் மிகவும் வலிமையுடன் இருப்பதால் துணிந்து சுய தொழில் செய்வதே நல்லது, ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது ஜாதகரின் தொழில் வல்லமையை தெளிவாக காட்டுகிறது , மேலும் திறன் மிகுந்த நிர்வாக வல்லமை பெற்றவர் என்பதுடன் பல தொழில்களை நிர்வகிக்கும் வல்லமையை பெற்றவர் என்பதை மேற்கண்ட பாவகங்களின் வலிமை நிலை உறுதிப்படுத்துகிறது, எனவே  ஜாதகர் சுய தொழில் செய்து நலம் பெறுவதே நல்லது ஆனால் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை அதற்க்கு சாதகமாக இல்லை என்பது கவலை அளிக்கும் விஷயமாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

இருப்பினும் சுக்கிரன் திசையில் சூரியன்,செவ்வாய்,குரு,புதன் மற்றும் கேது புத்திகள்  வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதால் அந்த காலகட்டங்களில் ஜாதகர் தனது முயற்சிகளை விருத்தி செய்து சிறப்பான முன்னேற்றங்களை  பரிபூர்ணமாக பெறலாம், எனவே சுய ஜாதகத்தில் பாவக வலிமையின்  தன்மையை தெளிவாக உணர்ந்து செயல்பட்டால் வாழ்க்கையில்  நிச்சயம் நாம் மிகப்பெரிய வெற்றிகளை நமக்கு சொந்தமாக்கிக்கொள்ள முடியும் என்பதற்கு மேற்கண்ட ஜாதகம் ஓர் உதாரணம் அன்பர்களே வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திருமண பொருத்தம் : களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஏற்படும் இன்னல்கள் !

  

 திருமண பொருத்தம் காண்பதில் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொள்ளாமல், நட்ச்சத்திர பொருத்தத்தையோ, செவ்வாய் தோஷம், ராகுகேது தோஷம் போன்றவற்றையோ பொருத்தமாக எடுத்துக்கொண்டு திருமணம் செய்வது என்பது கண்ணை கட்டிக்கொண்டு நீர் இல்லா கிணற்றில் விழுவதற்கு பொருத்தமானதாக கருதலாம், குறிப்பாக வரனோ, வதுவோ தனக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் களத்திர பாவகம் எனும் 7ம் வீடு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்துகொண்டு இல்வாழ்க்கையை அமைத்துக்கொள்வது நல்லது, ஏனெனில் அடிப்படையில் மிகவும் வலிமையுடன் இருக்க வேண்டிய அம்சமே களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம்தான், இதுவே தாம்பத்திய வாழ்க்கையில் பிரிவில்லா தன்மையை தரும், ஒருவரை ஒருவர் நான்குபுரிந்துகொண்டு இல்லற வாழ்க்கையை சிறப்பாக எடுத்துச்செல்ல வழிவகுக்கும், மற்ற பாவகங்கள் பாதிக்கப்பட்டாலும் அதன் வழியிலான தாக்கம் சற்று குறைவாகவே அமையும், ஆனால் களத்திர ஸ்தானம் பாதிக்கப்படுவது, இல்லற வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிவிடும்.

 தனக்கு வரும் வரனின் ஜாதகத்திலோ, வதுவின் ஜாதகத்திலோ களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின் கண்ணியமாக அந்த வரணையோ, வதுவையோ தவிர்த்துவிடுவதே சாலச்சிறந்தது, ஏனெனில் எந்த விதத்திலும் இல்லற வாழ்க்கையை அது சிறப்பாக அமைத்துத்தாராது, தம்பதியர் இருவரின் இல்லற வாழ்க்கையை குறுகிய காலத்தில் பிரிவு, விவாகரத்து என்ற நிலைக்கு எடுத்துசென்றுவிடும், நட்ச்சத்திர பொருத்தம் 10க்கு 10 அமையலாம், செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் எனும் ( உண்மைக்கு புறம்பான  ) பொருத்தங்கள் அமைந்து இருக்கலாம், சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமை பெறவில்லை எனில் தாம்பத்திய வாழ்க்கை நிச்சயம் சிறப்பாக அமையாது என்பதை கருத்தில் கொள்வது நல்லது.

திருமண பொருத்தம் காணும் பொழுது நட்ச்சத்திர பொருத்தம் காண்பதை தவிர்த்து  சுய ஜாதக பாவக வலிமையை கருத்தில் கொண்டு பொருத்தம் காண்பதே சிறப்பான இல்லற வாழ்க்கையை அமைத்து தரும், கீழ்கண்ட இரண்டு உதாரண ஜாதகங்கள் பாவக வழியிலான பொருத்தம் உண்டா என்பதை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !

பெண் ஜாதகம் :
 

லக்கினம் : துலாம் 
ராசி : துலாம் 
நட்ஷத்திரம் : ஸ்வாதி 2ம் பாதம்

ஆண் ஜாதகம் :


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : கும்பம் 
நட்ஷத்திரம் : அவிட்டம் 4ம் பாதம் 

மேற்கண்ட இரண்டு ஜாதகங்களுக்கு திருமண பொருத்தம் 3 விஷயங்களை வைத்து நிர்ணயம் செய்யலாம்.

1) ஜாதகத்தில் இருவருக்கும் இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கக்கூடிய 2,5,7,8,12ம் பாவகங்களின் வலிமை நிலை.

2) ஜாதகத்தில் இருவருக்கும் தற்போழுது நடைபெறும், எதிர்வரும் 
திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பலாபலன்கள்.

3) தற்போழுது நடைபெறும் எதிர்வரும், திசாபுத்திகள் தாம்பத்திய வாழ்க்கையில் சுபயோகங்களை நல்குமா ? என்ற விஷயங்களில் தெளிவு பெற்ற பிறகே திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பது சகல நலன்களையும் வாரி வழங்கும், மேற்கண்ட ஜாதகங்களை இந்த ஆய்வு எடுத்துக்கொள்வோம் .

ஜாதகியின் அமைப்பு :

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம், 8ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  இரண்டாம் வீடாக அமைவது ஜாதகிக்கு குடும்ப வாழ்க்கையில் கடுமையான சிக்கல்களை தரும் அம்சத்தை காட்டுகிறது, சுய ஜாதகத்தில் 2ம் வீடும் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாம் வீடும் கடுமையாக பாதிக்கப்படுவது ஜாதகியின் இல்லற வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தரும், மேலும் ஜாதகிக்கு திருமண வாழ்க்கையில் தாமதத்தை தரும்.

5ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின்  வாழ்க்கையில் பூர்வீகம் சார்ந்த ஜீவனத்தில் இன்னல்களையும், சமயோசித அறிவுத்திறன் அற்ற நிலையையும் தரும், குறிப்பாக குலதெய்வ வழியில் காரிய தடைகளையும், குழந்தை பாக்கியத்தில் கடும் சிக்கல்களையும் தரும், யாருடைய உதவியையும் பெற இயலாத சூழ்நிலையை உருவாக்கும்.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகி வாழ்க்கை துணையுடன் நல்ல தாம்பத்தியத்தை பெறுவார் என்பதுடன், கணவருடன் இணைபிரியா நிலையை தரும், ஜாதகியின் கணவர் மிகவும் நல்லவர் என்பதை உறுதிப்படுத்தும்.

12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த மனஉளைச்சல், உடல் நலம் சார்ந்த தொந்தரவுகள், அனைவராலும் தொல்லை, விபத்து வீண் செலவுகள், தாம்பத்திய வாழ்க்கையில் நிம்மதியின்மை, குழப்பம் மற்றும் சந்தேக எண்ணத்தை அதிகரிக்கும்.

நடைபெறும் குரு திசை ஜாதகிக்கு 1,3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும், 6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளையும், 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான யோக பலாபலன்களையும் வாரி வழங்குகிறது, குரு திசை ஜாதகிக்கு 11ம் பாவக வழியில் இன்னல்களையும், 7,9ம் பாவக வழியில் சுபயோகங்களையும் தருவது கவனிக்கத்தக்கது.

எதிர்வரும் சனி திசை ஜாதகிக்கு 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் விரைய ஸ்தான பலனையே தருவது ஜாதகிக்கு நன்மையை தரும் அமைப்பல்ல, ஏனெனில் அயன சயன ஸ்தானம் வலிமை இழந்து சனி திசை 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகிக்கு கணவன் மனைவி இடையிலான அந்தரங்க வாழ்க்கையில் இன்னல்களை ஏற்படுத்தும், சந்தேகம் அதிகரிக்கும் என்பது கவனிக்க தக்கது, எனவே ஜாதகிக்கு வாழ்க்கை துணையாக வரும் அன்பரின் ஜாதகத்தில் நடைபெறும் எதிர் வரும் திசை புத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது அவசியமாகிறது.

ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை 7ம் பாவக வழியில் நன்மையை தந்த போதிலும், எதிர்வரும் சனி திசை ஜாதகிக்கு கடுமையான இன்னல்களை தரும் என்பதால், ஜாதகிக்கு மிக பொருத்தமான வாழ்க்கை துணையை தேடி தருவது அவசியமாகிறது.


ஜாதகரின் அமைப்பு :

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,5ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான விஷயமாகும், ஜாதகர் 2ம் பாவக வழியில் இருந்து நல்ல குடும்ப வாழ்க்கையையும், கைநிறைவான வருமானம் மற்றும் இனிமையான பேச்சு திறனையும் கொண்டவர், 5ம் பாவக வழியில் இருந்து நல்ல புத்திர பாக்கியம் கொண்டவர் , தெய்வீக அனுக்கிரகமும் உண்டு, இறுதி நேரத்தில் ஜாதகரின் துன்பங்கள் மறையும், நல்ல சமயோசித புத்திசாலித்தனத்தை கொண்டவர், 7ம் வீடு  பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் தடை தாமதத்தையும், பொருத்தமற்ற வாழ்க்கை துணையையும் தேர்வு செய்யும் நிலைக்கு ஆளாக்கும், மேலும் ஜாதகரின் லக்கினமும் பாதிக்கப்படுவது ஸ்திர தன்மையற்ற முடிவுகளால், எதிர்பாலின சேர்க்கை மூலம் இன்னல்களை அனுபவிக்கும் நிலையை தரும், இதனால் ஜாதகருக்கு நீங்க இயலாத அவப்பெயர் ஏற்பட்ட அதிக வாய்ப்பு உள்ளது, நல்ல நண்பர்கள் சேர்க்கை இல்லை, வெளிவட்டார பழக்க வழக்கமும் சிறப்பில்லை என்ற  சூழ்நிலையை உருவாக்கும், தாம்பத்திய வாழ்க்கையில் மிகுதியான இன்னல்களை ஜாதகர் எதிர்கொள்ளவேண்டிவரும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு பூர்ண ஆயுளை தரும், இருப்பினும் சில திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, தனது வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் எதிர்பாலின சேர்க்கை மூலம் அளவில்லா பொருளாதார செலவினங்களை ஜாதகர் எதிகொள்ளும் நிலையை தரும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, ஏமாற்றமும், சிக்கல்களும் ஜாதகருக்கு அதிக அளவில் தேடிவரும், விபத்து அதன் வழியிலான மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

12ம் வீடு சத்துரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் தோல்வி மற்றும் ஏமாற்றங்கள் சாதகமான பலனை தந்துவிடும், இருப்பினும், வருமுன் காக்கும் வல்லமை இராது முன்யோசனை அற்ற வாழ்க்கை முறை  கடுமையான இன்னல்களை தரும், அனைவரையும் வெறுக்கும் நிலைக்கு ஆளாக்கும், குற்றம் கண்டுபிடிக்கும் குணம் ஜாதகரின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும், தாம்பத்திய வாழ்க்கையில் நெறிமுறையில்லா தன்மையை தரும், இதனால் கடுமையான உடல் நல பாதிப்பை ஜாதகர் எதிர்கொள்ளவேண்டி வரும், திருப்தி இல்லா வாழ்க்கை ஜாதகரின் தாம்பத்திய வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும்.

நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சத்ரு ஸ்தான பலனை ஏற்று நடத்துவது தனம் சார்ந்த நன்மைகளை வழங்கிய போதிலும், உடல் நலம் சார்ந்த தொந்தரவுகள் அதிகரிக்கும், குறிப்பாக, ஜாதகர் வயிறு சார்ந்த உபாதைகளை அதிக அளவில் எதிர்கொள்ளும் நிலையை தரும், மருத்துவ சிகிச்சை ஜாதகருக்கு அடிக்கடி தேவைப்படும்.

அடுத்து வரும் சனி திசையும் ஜாதகருக்கு 6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சத்ரு ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு உகந்த நன்மைகளை தரும் அமைப்பல்ல என்பதால் சனி திசை ஜாதகருக்கு சாதகமான பலாபலன்களை தர வாய்ப்பில்லை.

மேற்கண்ட இரண்டு ஜாதகத்திற்கும் ஏக திசை நடப்பு என்று சொல்வார்கள், ஆனால் இருவருக்கும் நடைபெறும் குரு திசையும் சரி, எதிர் வர இருக்கும் சனி திசையும் சரி வலிமை அற்ற பாவக பலனையே ஏற்று நடத்துகிறது என்பதால் நிச்ச்யம் இன்னல்களையே தரும், ஒருவேளை இருவருக்கு நடைபெறும் குரு,சனி திசைகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் நிச்சயம் சுபயோக பலாபலன்களே நடைமுறைக்கு வரும் என்பதை இந்த இடத்தில் " ஜோதிடதீபம் " குறிப்பிட்ட விரும்புகிறது, தம்பதியர்  இருவருக்கும் ஏக திசை நடைமுறையில்  இருந்தாலும், நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது நன்மைகளையே தரும், மேற்கண்ட ஜாதகத்தில் அந்த அமைப்பு இல்லை என்பது ஓர் துரதிர்ஷ்டமே.

களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற ஜாதகத்தை வாழ்க்கை துணையாக ஏற்பது ஜாதகிக்கு கடுமையான இன்னல்களை வாழ்க்கை துணை வழியில் இருந்து ஏற்படுத்தும் மேலும் ஜாதகியின் குடும்ப ஸ்தானமும், அயன சயன ஸ்தானமும் வலிமை அற்ற இருப்பதாலும், எதிர் வரும் சனி திசை விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவதாலும், மேற்கண்ட வரனின் ஜாதகத்தை தவிர்த்துவிடுவதே ஜாதகிக்கு நல்லது, மேலும் வரனின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், நடைபெறும் எதிர்வரும் திசைகளான குரு மற்றும் சனி சத்ரு ஸ்தான  பலனை ஏற்று நடத்துவது ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையில் இன்பத்தை தராமல், கடுமையான இன்னல்களை தரும் என்பதால், புத்திசாலித்தனமாக மேற்கண்ட வரனின் ஜாதகத்தை தவிர்த்துவிட்டு, தமக்கு உகந்த 2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை பெற்று, நடைமுறை மற்றும் எதிர்வரும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் வரனின் ஜாதகத்தை தேர்வு செய்து நலம் பெறுவது அவசியமாகிறது.

குறிப்பு :

இல்லற வாழ்க்கையை இனிமையாக்குவது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே, நட்ச்சத்திர பொருத்தம் என்பது சுய ஜாதகம் அற்றவர்களுக்கு பெயரின் முதல் எழுத்தை கொண்டு திருமணம் செய்ய கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால ஜோதிட முறை, நவீன காலத்தில் சுய ஜாதகம் உள்ள பொழுது ( பிறந்த தேதி, நேரம், இடம் அடிப்படையாக கொண்ட ) சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டே திருமண பொருத்தம் காண்பது புத்திசாலித்தனம் ஆகும், சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைவது தாம்பத்திய வாழ்க்கையை 100% விகிதம் வெற்றிகரமாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை, வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 16 நவம்பர், 2017

ஜாதக ஆலோசணை : சுய ஜாதகத்தில் உள்ள சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் !



 எதிர்காலத்தை பற்றியும், நிகழ்கால நடைமுறைகளை பற்றியும், தனது சுய முன்னேற்றம் பற்றியும் ஜாதகரின் கேள்விகள் நமது சிந்தனையை தூண்டும்விதமாக அமைவதை பாராட்ட வார்த்தைகள் இல்லை, சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் ஜாதகரின் எதிர்கால திட்டமிடுதல்கள் மற்றும் செயல்பாட்டிற்கான ஆயத்த நிலையில் ஜாதகர் இருப்பதை இது தெளிவுபடுத்துகிறது, " வாழ்த்துக்கள் " அன்பரே !


லக்கினம் : துலாம்
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : சித்திரை 1ம் பாதம்

ஜாதகரின் கேள்விகள் என்ன? அதற்க்கான விளக்கம் மற்றும் பதில்கள் என்ன? என்பதனை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

கேள்வி :

எனது ஜாதகத்தில் சொந்த தொழில் செய்யும் அமைப்பு உள்ளதா? தற்போது செய்யலாமா? நிலைத்து நீடிக்குமா?

பதில் :

தங்களின் ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரமும், தங்களது சுய ஜாதகத்திற்கு ஜீவன ஸ்தானமான கடகமும் மிகவும் வலிமையுடன் இருப்பதால் தாங்கள் சுய தொழில் செய்வதற்கான முழு தகுதியை பெற்று இருக்கின்ரீர்கள் என்பதை உறுதிபட சொல்ல இயலும், மேலும் சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது தங்களின் சுய  தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும், குறிப்பக தங்களின் ஜீவன ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானம் சார்ந்த தொழில் வழியில் இருந்து பரிபூர்ண வெற்றிகளை தடையின்றி பெறுவீர்கள் என்பதை கவனத்தில் கொள்க, மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம்,சுகம்,களத்திரம் மற்றும் ஜீவனம் எனும் நான்கு கேந்திர பாவகங்களும் வலிமையுடன் இருப்பது தங்களை ஓர் தொழில் அதிபராக முன்னெடுத்து செல்லும் என்பதால் தங்கள் சொந்த தொழில் செய்யும் அமைப்பு உள்ளது என்பதை "ஜோதிடதீபம்" உறுதியாக பதிவு செய்கிறது.

தற்போழுது நடைபெறும் சனி திசை, சனி புத்தி சொந்த தொழில் செய்ய சாதகம் இன்றி இருக்கின்றது, எதிர்வரும் சனி திசையில் புதன் புத்தி சுய தொழில் செய்ய முழு வலிமையை தருகின்றது என்பதால், புதன் புத்தியில் தாங்கள்  சுய தொழில் முயற்சியை மேற்கொள்ளலாம்.

தாங்கள் செய்யும் தொழில் நீடித்து நின்று விருத்தி பெரும் என்பதை தங்களின்  ஜீவன ஸ்தான வலிமையையும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசியின் வலிமையையும் தெளிவாக உறுதி செய்கிறது.

கேள்வி :

எப்படிப்பட்ட தொழில்கள் எனக்கு சரியாக வரும்? உதாரணமாக டிராவல் ஏஜென்ட்டு, கமிஷன் தொழில், விளம்பரம், டிசைனிங்,
என் கையில் காசு தங்குமா? சேமிப்பு வருமா?

பதில் :

தங்களது சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவகங்கள் 7,10ம் வீடுகள் ஆகும், எனவே தாங்கள் FMCG சார்ந்த அணைத்தது தொழில்களும் சரியாக வரும், உணவகம், துணி கடை, வண்டி வாகன தொழில், பால் பொருட்கள், தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள் நல்ல முன்னேற்றத்தை தரும் மேலும் தாங்கள் கூறியபடி டிராவல் ஏஜென்ட்டு, கமிஷன் தொழில், விளம்பரம், டிசைனிங் தொழில்களும் நல்ல விருத்தியை தரும், மக்கள் தொடர்புள்ள அணைத்து தொழில்களும் தங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரும்.

கையில் காசு தங்குவது சற்று சிரமம்தான் எனவே செலவுகளை குறைத்துக்கொண்டு சேமிப்பை அதிகரிப்பதே நல்லது, சுய ஜாதகத்தில் 2ம் வீடு வலிமை அற்று இருப்பது நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடுதல் அற்றவர் என்பதை தெளிவாக கூறுகிறது, கையில் இருக்கும் பணம் தங்களுக்கு வீண் விரையம்  ஆகும் என்பதால், வங்கியில் பணத்தை வைத்து கையாள்வதே தங்களின் தனம் சார்ந்த இன்னல்களுக்கு தீர்வாக அமையும், தங்கள் மன உறுதியுடன் சேமித்தால் நிச்சயம் சேமிப்பு தங்களை தேடி வரும்.

கேள்வி :

எனது ஜாதகத்தில் 10ம் பாவகத்தை பற்றி சொல்லுங்கள்
பங்கு  மார்கெட் தொழில் நமக்கு சரி வருமா?

பதில் :

தங்களுக்கு 4,10ம் வீடுகள்  ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிக சிறப்பான யோகத்தை தரும் நிலையாகும், குறிப்பாக 4ம் பாவக வழியில் இருந்து மண் மனை வண்டி வாகன யோகம், சொந்த வீடு மற்றும்  நிலபுலன்கள் வாங்கும் யோகம், வண்டி வாகன தொழில் வழியில் இருந்து வருமானம், நல்ல குணம், தாயார் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை, சுய சம்பாத்தியம், நல்ல தொழில் முன்னேற்றம், பெயரும் புகழும் உண்டாகுதல், சிறந்த நிர்வாக திறமை மூலம் பல தொழில் நிர்வகிக்கும் வல்லமை, பெரிய சொத்துக்கள், அரசு கவுரவம், சமூகம் மற்றும் அரசியலில் வெற்றி என்றவகையில் சிறப்புகளை தரும்.

10ம் பாவக வழியில் இருந்து  நல்ல உத்தியோகம், வியாபர விருத்தி, செய்யும்  தொழில் வழியில் இருந்து முன்னேற்றம், கம்பீரமான நிர்வாக திறமை, சுய தொழில் செய்வதன் மூலம் வாழ்க்கையில் சகல சம்பத்துக்களையும் பெரும் அமைப்பு, சிறந்த வாத திறமை மூலம் சாதகமான பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமை என்ற வகையில் சிறப்புக்களை தரும், கவுரவம் குறையாத யோக  வாழ்க்கையை தரும், தங்களின் பரந்த மனப்பக்குவம் அனைவராலும் கவரப்பட்டு தொழில் ரீதியான நன்மைகளை தரும்,  ஜீவன ஸ்தானம்  என்பது சர நீர் தத்துவ ராசியில் அமைவதால், தங்கள் மனதில் என்ன நினைக்கிண்றீர்களோ அதுவே நடைமுறைக்கு வரும், எனவே தங்களின் எண்ணத்தின் வலிமையை அதிகரித்துக்கொள்வது  சகல சௌபாக்கியங்களையும்  தரும், நீர்த்துவம் சார்ந்த தொழில் வழியில் இருந்து தங்களுக்கு  அபரிவிதமான வருமான வாய்ப்புகள் வந்து சேரும் என்பதால், நீர்த்தத்துவம் சார்ந்த தொழில்களை சுவீகரித்து 100% விகித நன்மைகளை பெறுங்கள், வாழ்த்துக்கள்.

பங்கு வர்த்தக தொழில் தங்களை படுகுழியில் தள்ளிவிட்டுவிடும் என்பதால் அதன் சுவாசம் கூட படாமல் தாங்கள் நடந்துகொள்வது நல்லது, பங்கு வர்த்தக துறையில் வெற்றி பெறுவதற்கான பாவக வலிமை தங்களது ஜாதகத்தில் சிறிதும் இல்லை என்பதை கருத்தில் கொள்க என்று "ஜோதிடதீபம்" தங்களை எச்சரிக்கை செய்கிறது.

கேள்வி :

வீட்டு மனை வாங்கியாச்சு. சொந்த வீடு எப்போது கட்டுவேன்?

பதில் :

சொந்தவீடு கட்ட எதிர்வரும் சனி திசையில் புதன் புத்தி வழிவகை செய்யும், வடக்கு, தெற்கு சார்ந்த வாயிற்படி கொண்ட வீட்டை நிர்ணயித்து சகல நலன்களையும் பெறுங்கள், வாழ்த்துக்கள்.

கேள்வி :

நான் செய்ய வேண்டிய கர்மவினை கழிப்பு பற்றி சொல்லுங்கள் ?

பதில் :

சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 3,5,9,11ம் பாவக வழியில் இருந்து வரும்  இன்னல்களை ஏற்று அது சார்ந்த உறவுகளுக்கு நன்மை செய்து நலம் பெறுங்கள் உதாரணமாக, உடன் பிறப்பு, குழந்தைகள், பித்ருக்கள், இளைய சகோதரம் என்ற வகையில் கர்மா வினை பாதிப்பை கழித்துக்கொள்வது நல்லது.

கேள்வி :

தற்பொழுது ராகு கேது பெயர்ச்சி மற்றும் வரப்போகும் சனிப் பெயர்ச்சி யோக பலன்களை தருமா?

பதில் :

ராகு கேது முழு வீச்சில் சுபயோக பலன்களை 4,10ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்குகிறது , சனி பெயர்ச்சி யாதொரு பலாபலன்களை தங்களுக்கு தற்போழுது  தரவில்லை என்பதே உண்மை நிலை.

கேள்வி :

தொழில் ஸ்தான வலிமையும், நான் பெரும் தொழில் ரீதியான முன்னேற்றமும் ! வெளிநாட்டில் தொழில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டா ?

பதில் :

தொழில் ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது தங்களுக்கு சிறப்புகளை வாரி வழங்கும், தொழில் ரீதியான முன்னேற்றம் என்பதும் சிறப்பாக சீரிய முறையில் படிப்படியாக  அமையும், தங்களுக்கு சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமையுடன் இருப்பது வெளிநாட்டில் தொழில் ரீதியான முன்னேற்றம் என்பது  மிகவும் அபரிவிதமானதாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை குறிப்பாக தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களை தாங்கள் தேர்வு செய்து வெளிநாடுகளில் சிறப்பான முன்னேற்றங்களை பெறலாம்.

கேள்வி :

கூட்டு தொழில் செய்வது சரியானதா ? சுய தொழில் செய்வது சரியானதா?

பதில் :

கூட்டு தொழில் வெளிநாடுகளில் செய்வது சிறப்பான வளர்ச்சியை தரும், சுய தொழில் செய்வதும் தங்களுக்கு எதிர்பாராத முன்னேற்றத்தையே வாரி வழங்கும்  என்பதால், சுய தொழில் செய்யவும், கூட்டு தொழில்  செய்யவும் தங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது தங்களின் விருப்பம் எதுவோ ? அதை தேர்வு செய்து வெற்றி காணலாம்.

கேள்வி :

களத்திர ஸ்தானமும், குடும்ப ஸ்தானமும் பாதிக்கப்பட்டுல்லதா?

பதில் :

குடும்ப ஸ்தானம் மட்டும் சிறிது பாதிக்கப்பட்டு இருக்கின்றது, களத்திர ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது தங்களுக்கு 7ம் பாவக வழியில் இருந்து  100% விகித சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும்.

கேள்வி :

சர லக்கினத்திற்கு 11ம் பாவகம் பாதக ஸ்தானமாக அமைவதால், லாப ஸ்தான வழியில் இருந்து யோகங்களை பெற முடியுமா?

பதில் :

3,5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால், நிச்சயம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் 3,5,9,11ம் பாவாக வழியில் இருந்து தங்களால் சுபயோக பலன்களை பெற இயலாது, எனவே மேற்கண்ட பாவக  பலனை ஏற்று நடத்தும் ராகு,சனி திசா புத்திகளில் எச்சரிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது தங்களுக்கு நன்மையை தரும்.

கேள்வி :

சனி திசை  தொழில் முன்னேற்றமும் எப்படி அமையும் ?

பதில் :

சனி திசையில் சனி புத்தி மற்றும் ராகு புத்தியை தவிர மற்ற புத்திகள் வலிமை பெற்ற  பாவக பலனை ஏற்று நடத்துவதால், தங்களின் தொழில் முன்னேற்றம் மிகவும் சிறப்பாகவே அமையும், மேலும் தாங்கள் சனி திசையில் சனி புத்தி, ராகு  புத்தியில் மட்டும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது சகல விதங்களில் நன்மையை  தரும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 15 நவம்பர், 2017

ஏழரை சனி என்ன செய்யும் ? ஜென்ம சனியாக ஜென்ம ராசியில் சஞ்சாரம் கடுமையான பாதிப்பை தருமா ?

  
 
 ஏழரை சனிக்கு பயப்படாதவர்களே இல்லை என்று சொல்லிவிடலாம், குறிப்பாக சந்திரன் நின்ற ராசிக்கு முன்பின் ராசிகளிலும் சந்திரன் நின்ற ராசியிலும் சனிபகவான் சஞ்சரிக்கும் காலங்களை ஏழரை சனி என்று வர்ணிக்கின்றனர், இந்த ஏழரை சனி காலத்தில் சம்பந்தப்பட்ட ஜாதகர் படும் இன்னல்களுக்கு ஓர் அளவு இருக்காது என்றும், துன்பத்தை மட்டுமே சனிபகவான் பலனாக வாரி வழங்குவார் என்றும் கூறுவது உண்டு, குறிப்பாக ஓர் ஜாதகத்தில் ஏழரை சனி நடைபெறும் ( ஏழரை வருட ) காலங்களில் ஏற்படும் இன்னல்கள் அனைத்திற்கும் காரணகர்த்தாவாக சனிபகவானை காணும் அன்பர்கள், அவர் இன்னல்களை மட்டுமே தருவார் என்ற கற்பனை எண்ணத்தை அனைவரிடமும் விதைத்து இருக்கின்றனர் என்பதே உண்மை, அடிப்படையில் நவகிரகங்கள் தனிப்பட்ட ஆளுமையின் கீழ் ஓர் ஜாதகருக்கு நன்மை தீமை பலாபலன்களை வழங்க வல்லமை அற்றவர்கள் என்பதை உணர்ந்தவர்களுக்கு " ஏழரை சனி " என்பதே ஓர் பொய்யான கூற்று என்பதை தெளிவாக விளக்கம் தரமுடியும், ஏனெனில் சுய ஜாதகம் என்பது லக்கினம் முதல் 12பாவகங்களின் வலிமையின் அடிப்படையில் இயங்குவது, அதாவது பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகிய குறிப்புகளை கொண்டு சுய ஜாதகம் நிர்ணயம் செய்யப்படுகிறது , ஓரிரு நிமிடங்களில் சுய ஜாதகம் என்பது பல மாற்றங்களை சந்திக்கும் நிலையில் சந்திரனை அடிப்படையாக கொண்ட ஏழரை சனி தரும் பலன் என்பது கற்பனையானது என்று விளக்கம் தரவேண்டிய அவசியமில்லை என்று " ஜோதிடதீபம் " கருதுகிறது, கீழ்கண்ட ஜாதகத்தை உதாரணமாக கொண்டு கோட்சார சனிபகவான் தரும் பலாபலன்களை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மிதுனம் 
ராசி : தனுசு 
நட்ஷத்திரம் : பூராடம் 3ம் பாதம் 

 ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் ராகு திசை ( 05/04/2002 முதல் 05/04/2020 வரை ) 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையான யோக பலாபலன்களை பூர்வபுண்ணிய ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது என்பது ஜாதகருக்கு சுபயோகங்களை தரும்  அமைப்பாகும், குறிப்பாக ஜாதகர் 5ம் பாவக வழியில் இருந்து கலைத்துறையில் வெற்றி, கற்ற கல்வி வழியிலான யோக பலன்கள், சமயோசித புத்திசாலித்தனம், குலதெய்வ அனுக்கிரகம், தெய்வீக அனுபவம், வாதத்திறன் கொண்டு அனைத்தையும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் யோகம், நிறைவான செல்வசேர்க்கை, நல்ல யோகம் மிக்க குழந்தைகளை பெரும் யோகம், அவர்கள் வழியிலான சுயோக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி சந்தோசம், காதல் வெற்றி, சாஸ்திர ஞானம், கணித தேர்ச்சி , திட்டமிட்டு செயல்படும் தன்மை, சீரான முன்னேற்றம், தர்மசிந்தனை, அனைவருக்கும் உதவும் குணம் என்ற வகையில் சிறப்புகளை ராகு திசை முழு வீச்சில் சுபயோக பலாபலன்களை பூர்வபுண்ணிய ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது.

ராகு திசையில் தற்போழுது நடைமுறையில் உள்ள சந்திரன் புத்தி ஜாதகருக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது ஜாதகர் மாத்ரு ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை அனுபவிக்கும் தன்மையை தருகின்றது, புதிய மண் மனை வண்டி வாகன யோகம் உண்டாகும், ஜாதகரின் சுகபோக வாழ்க்கையின் தன்மை அதிகரிக்கும், தெய்வ அனுக்கிரகம் மூலம் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும், கல்வியில் வெற்றி, உறவுகள் வழியிலான ஒத்துழைப்பு என்றவகையில் சிறப்புக்களை தரும், ஜாதகரின் சுக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சிம்மராசியில் 1 பாகையில் ஆரம்பித்தது கன்னி ராசியில்  முழுவதும் வியாபித்து நிற்பது ஜாதகருக்கு தனது அறிவு சார்ந்த விஷயங்களிலும், தனம் சார்ந்த விஷயங்களிலும் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும், மேலும் குறுகிய கால லாபங்களை ஜாதகர் பெறுவதற்கு உண்டான வாய்ப்புக்களை தரும் என்பது கவனிக்கத்தக்கது .

ஆக ஜாதகருக்கு நடைபெறும் ராகு திசை 5ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், ராகு திசையில் தற்போழுது நடைமுறையில் உள்ள சந்திரன்  புத்தி 4ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும் வாரி வழங்குவது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் நன்மையான பலாபலன்கள் ஆகும், இதில் தற்போழுது தனுசு ராசிக்கு ஏழரை சனி என்றும் அதனால் ஜாதகர் இன்னல்களை சந்திப்பார் என்பது முற்றிலும் கற்பனை என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை, தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் ஜாதகரின் நான்காம் பாவகத்தை தனது 10ம் பார்வையாக வசீகரிப்பதும், 4ம் பாவகம் தனது வர்க்க கிரகமான புதபகவானின் வீடான கன்னியில் அமைவதும் ஜாதகருக்கு சுபயோக பலன்களையே தரும், சனி பகவான் சஞ்சாரம் செய்யும் 7ம் பாவக பலனை ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசையும், சந்திரன் புத்தியும் ஏற்று நடத்தவில்லை என்பதால் சந்திரன் நின்ற ராசிக்குள் சஞ்சாரம் செய்யும் ( ஏழரை சனி ) சனி பகவான் யாதொரு நன்மை தீமையை தரவில்லை என்பதே முற்றிலும் உண்மை, கிரகங்களின் சஞ்சாரம் என்பது தற்போழுது நடைமுறையில் உள்ள திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்புடன் எந்த விதத்திலாவது சம்பந்தம் பெற்றால் மட்டுமே நன்மை தீமை பலன்களை நடைமுறைப்படுத்திடும், தற்போழுது நடைமுறையில் உள்ள திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்புடன் எந்த விதத்திலும் சம்பந்தம் பெறவில்லை எனில் கோட்சர கிரகத்தால் யாதொரு பலாபலனும் நடைமுறைக்கு வாராது, சந்திரன் நின்ற ராசிக்கு கோட்சார பலன் காண்பதெல்லாம் கற்பனை கட்டுக்கதையாகவே அமையும் என்பதை கருத்தில் கொள்வது நலம், அடிப்படையில் சந்திரன் நின்ற ராசிக்கு பலாபலன்கள் காண்பதென்பது சுய ஜாதக  வலிமை மற்றும் அது தரும் பலாபலனுக்கு சற்றும் பொருந்தாதது என்பதை நினைவில் கொள்வது அவசியமாகிறது.

மேற்கண்ட ஜாதகருக்கு ஏழரை சனி என்னும் விஷயமே தவறான பலாபலன்களை கூறுவதற்கு வழிவகுத்துவிடும், ஏனெனில் சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு லக்கினம் முதல் 12 பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பதுடன், நடைபெறும் நவக்கிரத்தின் திசாபுத்திகள் அனைத்தும் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவதால், ஜாதாருக்கு ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி என அனைத்து சனிகளும் சகல நிலைகளில் இருந்தும் நன்மையான பலன்களையே தரும் என்பது கவனிக்கத்தக்கது.

எனவே சுய ஜாதக பலாபலன்களை நிர்ணயம் செய்வது சுய ஜாதக வலிமையே அன்றி, சந்திரன் நின்ற ராசிக்கு கோட்சார கிரகங்கள் தரும் ராசி பலன்கள் அல்ல என்பதை கருத்தில் கொள்வது நல்லது, குறிப்பாக ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, குரு பலம், ராசிக்கு குரு சஞ்சாரம் செய்யும் நிலை இவையெல்லாம், சுய ஜாதக வலிமை தெரியாமல் அது தரும் பலாபலன் பற்றிய அறியாமல் உளறும் உளறல்களே என்பதை அனைவரும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டி " ஜோதிடதீபம் " வைக்கும் வேண்டுகோள் ஆகும்.

குறிப்பு :

சுய ஜாதக வலிமை நிலையை தெளிவாக உணர்ந்து, பாவக வலிமையின் தன்மையை கருத்தில் கொண்டு எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக திட்டமிட்டு முன்னேற்றம் காண்பதே புத்திசாலித்தனம், ஜோதிடரீதியாக உள்ள மூடநம்பிக்கைகளை பலாபலன்கள் என்று கருதி வாழ்க்கையில் நமக்கு வரும் நல்ல வாய்ப்புகளை உதறித்தள்ளுவது என்பது முற்றிலும் தவறான வழிமுறையாகும், நல்ல ஜோதிடம் தங்களின் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றங்களை நிச்சயம் வாரி வழங்கும், இதில் மாற்று கருத்து என்பதே இல்லை "வாழ்த்துக்கள்"

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 14 நவம்பர், 2017

தொழில் ஸ்தான வலிமை தரும் கைநிறைவான வருமான வாய்ப்புகள் !

 
 
சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையில் ஒருவர் தனது தொழிலை நிர்ணயம் செய்வது என்பது, ஜாதகர் தனது வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார வளர்ச்சியை பெறுவதற்கான ஸ்திரமான அடித்தளம் என்றால் அது மிகையில், தமக்கு சற்றும் பொருந்தாத தொழிலை தேர்வு செய்வது என்பது ஜாதகர் தமது வாழ்க்கையில் அதிக அளவிலான போராட்டங்களையும் இன்னல்களையும் எதிர்கொள்ளவதற்கான ஆயத்த பணி இதை அனுபவித்தவர்களுக்கு தெளிவாக புரியும், தமது ஜாதக வலிமைக்கு உகந்த தொழிலை ஜாதகர் தேர்வு செய்யும் பொழுது ஜாதகரின் உழைப்பு, அறிவு திறன், முன்னெற்றம் மற்றும் பொருளாதார தன்னிறைவு அனைத்தும் ஒரு நேர்கோட்டில் இயங்கி தொழில் ரீதியான வெற்றி வாய்ப்புகளை பரிபூர்ணமாக பெற வழிவகை செய்யும், மாறாக சுயஜாதக வலிமைக்கு சற்றும் பொருந்தாத தொழிலை ஜாதகர் தேர்வு செய்யும் பொழுது அடிப்படையில் நேர விரையம் என்பது அதிகரிக்கும், ஆர்வம் குறையும், உழைப்பின் தரம் குறையும், நம்பிக்கை அற்ற தன்மை  தொழில் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும், குறுகிய காலத்தில் பெறவேண்டிய நன்மைகளை ஜாதகர் நெடுங்காலம் காத்திருந்து சிறிய அளவில் அனுபவிக்கும் தன்மையை தரும், மேலும் ஜாதகரின் தொழில் வல்லமை " குடத்தில் இட்ட விளக்கு போல் பிரகாசம் இன்றி " அவதியுற நேரும், தமக்கு உகந்த தொழிலை தேர்வு செய்வது என்பது சுய ஜாதகத்தின் அடிப்படையில் அமைவதே ஜாதகருக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத்தரும்.

சுய ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் வலிமை அற்ற பாவக தொடர்பை பெறுவது ஜாதகரின் தொழில் வாய்ப்புகளை தடை செய்யும், பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகரின் தொழில் வாய்ப்புகளை கேள்விக்குறியாக மாற்றும் ஜாதகருக்கு ஓர் நல்ல வேலை அல்லது தொழில் அமைவது என்பதே குதிரை கொம்பாக மாறிவிடும், எனவே சுய ஜாதகத்தில் எந்த காரணத்தை கொண்டும் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு வலிமை அற்று இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு உகந்தது அல்ல என்பதை கருத்தில் கொள்வது  நல்லது பெரும்பாலான அன்பர்கள் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமை அற்று காணப்படுவதாலேயே சுய தொழில் முயற்சி செய்து பேரிழப்புகளையும், பெரும் நஷ்டங்களையும் சந்திக்கின்றனர்.

ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது தொழில் ஸ்தான அமைப்பில் இருந்து  ஜாதகருக்கு தொழில் முன்னேற்றங்களை நல்குகின்றதோ ? அதை போன்றே களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு வலிமை பெறுவது ஜாதகரின் கூட்டு தொழில் அமைப்பை நிர்ணயம் செய்கின்றது, பெரும்பாலும் 7ம் வீடு வலிமை அற்ற தன்மையில் அமைந்து கூட்டு தொழில் செய்து அதனால் ஏற்பட்ட நஷ்டத்தால் நடுத்தெருவில் நின்றவர்கள் ஏராளம் எனலாம், சுய ஜாதகத்தில்  களத்திர ஸ்தானம் வலிமை அற்று இருக்கின்றது என்றால், எக்காரணத்தை கொண்டும் சம்பந்தப்பட்ட ஜாதகர் கூட்டு தொழில் முயற்சியில் இறங்குவது என்பது சரியானது அல்ல இதை உதாசீன படுத்தினால் ஜாதகர் " புலிவாலை பிடித்த கதைதான் " குறிப்பாக 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருக்கும் ஜாதகர் கூட்டு தொழில் செய்வது என்பது மடியில் கல்லைக்கட்டிக்கொண்டு கடலில் குதிப்பதற்கு நிகரான பலாபலன்களை தந்துவிடும், ஜாதகர் இதில் இருந்து மீண்டு வருவது என்பது மிக மிக சிரமமே, எனவே சுய தொழில் கூட்டு தொழில் நிர்ணயம் என்பது சுய ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்வதே சாலச்சிறந்தது.

 கீழ்கண்ட உதாரண ஜாதகத்தை கொண்டு ஜீவன ஸ்தான வலிமையை பற்றியும் , ஜாதகர் அதன் வழியில் இருந்து பெரும் தன்னிறைவான வருமான வாய்ப்புகளை பற்றியும் தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம் 
ராசி : கன்னி 
நட்ஷத்திரம் : அஸ்தம்2ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும், சுய ஜாதகத்தில்  ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் என்பது மிக வலிமையுடன் இருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது, ஓர் ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் வலிமை பெறுவது என்பது ஜாதகருக்கு சிறந்த தொழில் வாய்ப்புகளை எவ்வித தடையும் இல்லாமல் வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகர் ஓர் இடத்தில் பணிபுரியவும், சுய தொழில் செய்யவும் முழு தகுதி உடையவர் என்பதை ஜீவன ஸ்தான வலிமையே உறுதிப்படுத்தும். 

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பின் படி பெரும்பாலான பாவகங்கள் மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது அதாவது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் கீழ்கண்டவாறு அமைகிறது.

1,3,6,7,9,12ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் லக்கின பாவக வழியில் இருந்து நல்ல ஆரோக்கியம், சிறந்த மனநிலை, வளரும் சூழ்நிலையில் அதிர்ஷ்டம் தெளிந்த நல்லறிவு என்ற வகையிலும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, தன்னம்பிக்கை மாறாத தன்மை, முழு முயற்சியுடன் செயல்பட்டு நன்மைகளை பெறுதல், சகல சௌபாக்கியம், சிறந்த வியாபார அறிவு, செய்யும் காரியங்களில் நேர்மை, தொழில் வழியில் சத்தியத்தை கடைபிடித்தல், மக்களின் நம்பிககையை பரிபூர்ணமாக பெரும் யோகம் என்றவகையில் சிறப்புகளை தரும், 6ம் பாவக வழியில் இருந்து குறிகிய கால வருமான  வாய்ப்புகளை பெறுதல், எதிரியின் சொத்து ஜாதகருக்கு கிடைத்தால், நல்ல வேலைஆட்கள், வாங்கி உதவி, கேட்கும் இடத்தில் இருந்து கிடைக்கும் பண உதவி என்றவையில் நன்மையை தரும், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் பொருளாதர உதவிகளை பெறுதல், கூட்டு தொழில் செய்வதால் ஜாதகருக்கு நல்ல வருமானம் கிடைத்தால், மக்கள் செல்வாக்கு , பிரபல்ய யோகம், வெளிநாடுகளில் இருந்து வரும் தனசேர்க்கை என்ற வகையில் சிறப்புகளை தரும், 9ம் பாவக வழியில் இருந்து பெற்றோர் வழியில் சொத்து மற்றும் முன்னோர்கள் சொத்துக்களை பெறுதல், நற்பெயர், ஸ்திரமான தொழில் முன்னேற்றம் நிறைவான வருமானம் என்ற வகையில் சிறப்பை தரும், 12ம் பாவக வழியில் இருந்து நன்றாக சேமிக்கும் வல்லமை, சிக்கன பேர்வாழி, லட்சியத்தின்  வழியில் பெரும் தனசேர்க்கையை பெரும் யோகம், நல்ல மனநிம்மதி திருப்தியான யோக வாழ்ககையை தரும்.

4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் 4ம் பாவக வழியில் இருந்து வண்டி வாகன யோகம், சொத்து  சுக சேர்க்கை, வீடு மனை யோகம், அது சார்ந்த தொழில் வழியில் லாபம் மற்றும் சுய முயற்சியின் மூலம் பெரிய சொத்துக்களை பெரும் அமைப்பை தரும், குறிப்பாக ஜாதகருக்கு நல்ல பொருளாதார முன்னேற்றத்தை சுக ஸ்தான வழியில் இருந்து தரும், 10ம் பாவக வழியில் இருந்து கவுரவம் குறையாத தொழில் முன்னேற்றம், செய்யும் தொழில் வழியிலான வருமானம் மற்றும் சிறந்த நிர்வாக திறமை, சமூக அந்தஸ்து, பல தொழில் செய்யும் யோகம் என்றவகையில் சிறப்புகளை தரும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் வீடான தனுசு ராசியில் 8 பாகையும், புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடான மகரத்தில் 22 பாகையும் கொண்டு இருப்பது ஜாதகரின் தொழில் முன்னேற்றத்தை சிறப்பாக அமைத்து தரும், ஜாதகர் உபய நெருப்பு மற்றும் சர மண் தத்துவ அமைப்பில் இருந்து தொழில் விருத்தியை பெறுவதை உறுதி செய்கிறது.

5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சமயோசித புத்திசாலித்தனத்தை தரும், இது சுய தொழில் அல்லது கூட்டு தொழில் செய்யும் அன்பர்களுக்கு மிக முக்கியமானது, ஏனெனில் சரியான நேரத்தில் சரியான திட்டமிடுதல்களை மேற்கொள்வதும் தொழில் ரீதியான நன்மைகளை வாரி வழங்கும்.

11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் அதிர்ஷ்டத்தை உறுதி செய்கிறது, சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற அமைப்பாக இதை கருதலாம், ஜாதகர் எது செய்தாலும் அதனால் ஏற்படும் நன்மைகளை ஜாதகரும் ஜாதகரை சார்ந்தவர்களும் அனுபவிக்க சுய ஜாதகத்தில் லாபம் மற்றும் அதிஷ்டம் என்று அலைக்கும் 11ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது மிக மிக அவசியமாகிறது, சுய ஜாதகத்தில் இது வலிமை பெறவில்லை எனில் ஜாதகர் சுய ஜாதகத்தில் மற்ற பாவக வழியில் இருந்து வரும் சுபயோக பலாபலன்களை சுவீகரிக்க இயலாது, மேற்கண்ட ஜாதகருக்கு 11ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது ஜாதகரின் ஜீவன ஸ்தான யோக பலன்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் தன்மையை தருகின்றது, சுய ஜாதகத்தில் 11ம் பாவகம் வலிமை பெறவில்லை எனில் ஜாதகரின் உழைப்பும் யோகமும் மற்றவர்களால் சுவீகரிக்க படும் என்பது கவனிக்கத்தக்கது.

வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தரும் என்ற போதிலும் நம்பிக்கையின் பெயரில் செய்யும் அதிக முதலீடுகள் கடுமையான நஷ்டங்களை ஏற்படுத்தும், தனது மேற்பார்வையின் கீழ் இல்லாத தொழில் வழியில் இருந்து நஷ்டங்களே உண்டாகும், விபத்து, மருத்துவ செலவினங்கள், மற்றவர்கள் வழியிலான நஷ்டங்கள் என சற்று பாதிப்பை தரக்கூடும்.

2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது குடும்ப செலவினங்களை அதிகரிக்கும், தொழில் வழியிலான ஆதரவு ஜாதகருக்கு குடும்பத்தில் இருந்து கிடைக்க வாய்ப்பு இல்லை, சில நேரங்களில் பணத்திற்க்காக பெரிய அளவிலான திண்டாட்டங்களை சந்திக்கும் நிலையை தரும், வாக்கு வன்மை எதிர்பாராத இன்னல்களை உருவாக்கும்.

மேற்கண்டவை சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் அடிப்படையில் ஜாதகர் பெரும் நன்மைகள் தீமைகள், ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியிலான சுப யோக பலன்களை தருவது எப்பொழுது? அவயோக பலன்களை தருவது எப்பொழுது? என்று நிர்ணயம் செய்வது நவகிரகங்களின் திசா புத்திகளே, அதை உணர்ந்து ஜாதகர் செயல்பட்டால் மட்டுமே ஜாதகருக்கு தொழில் ரீதியான வெற்றிகள் கைகூடி வரும், வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்றுநடத்தும் திசாபுத்திகளில் ஜாதகரின் தொழில் ரீதியான முயற்சிகள் நல்ல பலன்களையும், வலிமை அற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் திசாபுத்திகளில் ஜாதகரின் தொழில் ரீதியான முயற்சிகள் அவயோக பலன்களையும் தரும், தற்போழுது நடைபெறும் திசை ஜாதகருக்கு தரும் பலாபலன்கள் என்ன? என்பதை பார்ப்போம்.

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் விரைய ஸ்தான பலனை தருவது, ஜாதகரின் வாழ்க்கையில் குடும்பம், வருமானம் மற்றும் தொழில் சார்ந்த அமைப்பில் இருந்து வீண் விரயங்களை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, எனவே சுய ஜாதகம் மிகுந்த வலிமையுடன் காணப்பட்டாலும், நடைபெறும் குரு திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாதது ஜாதகருக்கு ஜீவன ரீதியான நன்மைகளை பெற இயலாமல் போராடும் சூழ்நிலையே தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஜாதகர் சுய தொழில் அல்லது கூட்டு தொழில்  செய்ய முழு தகுதியை பெற்ற போதிலும், தற்போழுது நடைமுறையில் உள்ள குரு திசை சாதகம் இன்றி இருப்பது " கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த " கதையாவே உள்ளது, எல்லாம் விதியின் விளையாட்டு என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696