" ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே " என்ற முதுமொழிக்கு ஏற்ப ஒரு ஆண் மகனின் வாழ்க்கையில் அடிஎடுத்து வைக்கும் பெண் யோகமானவராக இருந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களும் வந்துசேரும், இதற்க்கு எதிர்மறையாக அமைந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இல்லமால் போய்விட வாய்ப்புண்டு, சம்பந்தப்பட்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில் பல யோகங்கள் இருந்தாலும் அதை பரிபூரணமாக அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும், முன்னேற்றம் என்பது கடுமையாக பாதிக்கப்படும், ஜாதகரின் திட்டமிடுதல்கள், கனவுகள் மற்றும் லட்சியங்கள் யாவும் நிறைவேறாத கானால் நீராகவே மாறிவிட வாய்ப்பு உண்டு.
இன்றைய இளைஞர்கள் தமக்கு உகந்த கல்வி, வேலை மற்றும் வசதிவாய்ப்புகளை தேர்வு செய்வதில் வல்லவர்களாகவே உள்ளனர், ஆனால் தமது வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் மட்டும் ஒரு தெளிவான கண்ணோட்டத்தில் இல்லாமல், மனம் சொல்வதை மட்டும் ஏற்றுக்கொண்டு, அறிவு சொல்வதை நிராகரித்து விடும் தன்மையை பெற்றுள்ளனர், நம்மால் அனைத்தும் முடியும் என்ற குருட்டு நம்பிக்கையில், சில தவறான முடிவுகளால் தமது வாழ்க்கைக்கும் தமது நலனிற்கும் சற்றும் பொருத்தம் இல்லாத நபர்களை தேர்வு செய்து, அதனால் வரும் துன்பங்களை தவிர்க்க இயலாமல் இன்னலுக்கு ஆளாகின்றனர், மேலும் தமது சுய ஜாதக வலிமை நிலையை பற்றி உணராமல் வாழ்க்கையில் கிடைக்க இருக்கும் யோகங்களையும், முன்னேற்றங்களையும் உதறித்தள்ளும் நிலைக்கு வந்துவிடுகின்றனர், இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது, தமது சுய ஜாதக வலிமைக்கு சற்றும் பொருத்தமில்லாத வரனையோ, வதுவையோ தேர்வு செய்யும் ஆண், பெண் இருவருக்கும், திருமணதிற்கு முன்பு வரை உயிராக இருந்தவர்கள் கூட பரம எதிரியாக மாறிவிடும் தன்மையை தந்துவிடுகிறது.
இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கையில் எவ்வித தவறான தேர்வுகளுக்கும், மாற்று வழிவகைகள் உண்டு, வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் தவறு செய்தால் வாழ்நாள் முழுவதும் அதன் பாதிப்பு இருந்துகொண்டே இருக்கும் என்பதுமட்டும் உறுதி, மேலும் சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையும், தனது லட்சியம் மற்றும் கனவுகளை நிறைவேற்ற இயலாமல் கடுமையான போரற்றங்களையும், இன்னல்களையும் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் சூழ்நிலையை தந்துவிடும், தமது வாழ்க்கை துணையை தேர்வு செய்வதற்கு முன் அவர்களது சுய ஜாதக பாவக வலிமையை தெளிவாக உணர்ந்து, தமக்கு பொருத்தமானவர்தான? என்பதை உறுதி செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் இணைவதே சால சிறந்தது, கண்களையும் மனம் சொல்வதையும் ஏற்றுக்கொண்டு வாழ்க்கை துணையை தேர்வு செய்தால் திருமணத்திற்கு பிறகு வாழும் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று உறுதியாக சொல்வதற்கு இல்லை, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு இந்த பதிவில் ஆய்வு செய்வோம் அன்பர்களே!
லக்கினம் : மேஷம்
ராசி : மீனம்
நட்சத்திரம் : உத்திரட்டாதி 2ம் பாதம்
மேற்கண்ட ஜாதகிக்கு திருமணம் நடைபெற்று 2 வருடங்கள் கடந்துவிட்டது, ஜாதகியின் கணவர் ஜாதகம் மிகவும் வலிமை பெற்ற ஜாதகம், இருப்பினும் திருமணம் நடைபெற்ற 3 மாதத்தில் பெற்றோர் வீட்டுக்கு சென்றவர் இதுவரை கணவர் வீட்டிற்கு வரவில்லை, ஜாதகரின் முயற்ச்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்வியிலேயே முடிந்தது, திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் எனில் தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் 2,5,7,8,12ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, இதில் ஜாதகருக்கு மேற்கண்ட பாவகங்கள் சிறப்பாக அமைந்திருக்கிறது, ஆனால் ஜாதகிக்கு 5,7ம் வீடுகள் மட்டும் வலிமையாக இருக்கின்றது,2,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று கடுமையான பாதிப்பை பெற்று இருக்கின்றது, 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகி மன நிம்மதி இழப்பையும், தேவையற்ற பேச்சு மற்றும் வாத பிரதி வாதங்களால் குடும்பத்தில் சண்டை சச்சரவையும், குடும்ப வாழ்க்கையில் நிம்மதி அற்ற தன்மையையும் தருகிறது, 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்புகளையும், வீண் செலவினங்களையும், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இழப்புகளையும் தருகிறது, 12ம் பாவக வழியில் இருந்து நல்ல அயன சயன சுகமற்ற நிலையையும், அனைவராலும் தொல்லை மற்றும் துன்பங்களையும், மன நிம்மதி அற்ற சூழ்நிலையையும் தருகிறது , மேலும் லாப ஸ்தானம் 11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகியின் யோக வாழ்க்கையை கேள்விக்கு ஆளாக்குகிறது.
5ம் பாவகம் வலிமை பெற்றது ஜாதகிக்கு தெய்வ அனுகிரகத்தையும், சிறந்த புத்திர பாக்கியத்தை எதிர்காலத்தில் வழங்கும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது, 7ம் பாவகம் வலிமை பெற்றது ஜாதகிக்கு நல்ல யோகம் நிறைந்த கணவனை வழங்கி இருக்கின்றது, ஜாதகியை சிறப்பாக புரிந்துகொள்ளும் தன்மையை பெற்றவர் என்பதை தெளிவுபடுத்துகிறது, இருப்பினும் 2,8,12ம் வீடுகளின் பாதிப்பு ஜாதகிக்கு திருமண வாழ்க்கையில் இன்னல்களை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, பாதக ஸ்தான தொடர்பு சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை மற்றவர்கள் அனுபவிக்கும் தன்மையை தருகிறது, திருமணத்திற்கு பிறகு வந்த இந்த பிரிவு நிலை மற்றும் இன்னல் அனைத்திற்கும் காரணம் தனது சுய ஜாதகத்தில் 2,8,11,12 வீடுகளின் வலிமை அற்ற நிலையே காரணம் என்பதை ஜாதகி தெளிவாக உணர்ந்து, அதற்க்கு உண்டான பிரயசித்ததை தேடிகொள்வது ஜாதகிக்கு குடும்ப வாழ்க்கையில் சகல மகிழ்சிகளையும் வழங்கும், மேலும் தனது கணவரின் ஜாதகம் யோகம் நிறைந்தது என்பதனையும், அவரின் வழியில் இருந்து சகல நன்மைகளையும் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை ஜாதகி தேடிகொள்வது மட்டுமே சரியான தீர்வாக இருக்கும் என்பதை உணர்வது அவசியமாகிறது.
கடந்த புதன் திசை ஜாதகிக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தி மிகுந்த இன்னல்களுக்கும், சிரமங்களுக்கும் ஆளாக்கியது, ஆனால் தற்பொழுது வந்துள்ள, நடைபெறுகின்ற கேது திசை ஜாதகிக்கு 1,4,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களை தருவது சிறப்பான அம்சமாகும், எனவே கேது திசை வழங்கும் ராஜயோக பலன்களை தனது வாழ்க்கை துணையுடன் சேர்ந்திருந்து பரிபூரணமாக அனுபவிக்க இறைஅருள் கருணை புரியட்டும்.
நமது ஜாதகம் வலிமை அற்று இருக்கும் பொழுது நாம் தேர்வு செய்யும் நண்பர்கள், வாழ்க்கை துணை, மற்றும் கூட்டாளிகளின் ஜாதகம் மிகவும் வலிமையாக இருப்பது நமக்கு நன்மையை தரும், மேற்கண்ட ஜாதகிக்கு திருமண வாழ்க்கை சிறப்பிக்க உதவும் 2,7ம் வீடுகளில் 2ம் வீடு கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது குறையாக இருந்த போதிலும், அவரின் கணவர் ஜாதகத்தில் 2,ம் வீடும் 7ம் வீடும் மிகவும் வலிமையாக இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், எனவே தமது 2ம் பாவக வலிமை அற்ற நிலையை மாற்றிக்கொள்ள, தமது கணவருடன் சேர்ந்து இல்லறவழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்வதே சால சிறந்த வழிமுறையாகும், தமக்கு வரும் இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் தமது சுய ஜாதக பாவக வலிமையின்மையே முழு முதற்காரணம் என்பதை ஜாதகி உணர்ந்து, மற்றவர்களை குறை சொல்லாமல், வீண் பிடிவாதத்தை விட்டு தமது வினை பதிவை கழித்துகொள்வதர்க்கு இறைஅருள் கொடுத்த நல்ல வாய்ப்பாக கருதி வாழ்க்கையில் வளம் பெற "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.
குறிப்பு :
திருமண வாழ்க்கையில் இன்னல்களை சந்தித்துக்கொண்டு இருக்கும் தம்பதியர் அனைவரும் தமது சுய ஜாதக நிலை பற்றி, சுய பரிசோதனை செய்துகொள்வது நல்லது, திருமண வாழ்க்கையை ஆரம்பிக்க இருக்கும் அன்பர்கள் தமது ஜாதக வலிமையை பற்றியும், தமக்கு வர இருக்கும் வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை பற்றியும் தெளிவு பெறுவது, எதிர்கால வாழ்க்கையை மிகவும் யோகம் நிறைந்ததாக மாற்றியமைக்கும் என்ற உண்மையை உணர்வது அவசியமாகிறது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696