செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

செவ்வாய் தோஷம் திருமண வாழ்க்கையில் இன்னல்களை தருமா ?


கேள்வி :

 8ல் செவ்வாய் தோஷம் திருமண வாழ்க்கையில் இன்னல்களை தருமா ? கீழ்கண்ட செவ்வாய் தோஷம் அற்ற ஜாதகரை திருமணம் செய்துகொண்டால் எனது வாழ்க்கை எப்படி இருக்கும் ?

பதில் : 

ஒருவரது சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் யாதொரு தோஷத்தையும் தருவதாக கருதவில்லை, ஏனெனில் சுய ஜாதகத்தை இயங்குவதே லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை பெரும் பொழுது ஜாதகர் யோக பலன்களையும், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை அற்று இருக்கும் பொழுது ஜாதகர் அவயோக பலாபலன்களையம்  அனுபவிக்கும் நிலையை தருகின்றன, இதுவே எதார்த்தமான உண்மை நிலை, இதில் செவ்வாய் தோஷம் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒரு விஷயமாகவே  " ஜோதிடதீபம் " கருதுகிறது, இதை பற்றி கிழ்கண்ட ஜாதகங்களை கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : தனுசு 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : கிருத்திகை 1ம் பாதம் 

தங்களது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்தில் உள்ளது போல் தேற்றம் இருந்தாலும், பாவக கணிதம் கொண்டு காணும் பொழுது உண்மையில் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்திலே அமர்ந்து இருக்கின்றார், எனவே அவர் 8ம் வீட்டில் உள்ளார் என்பதே தவறான கணிதமாகவும், 7ல் அமர்ந்த செவ்வாய் பகவானால் தங்களுக்கு இன்னல்கள் உண்டா என்பதை பார்க்கும் பொழுது, சுய ஜாதகத்தில் 7ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, எனவே களத்திர ஸ்தானம் மிகவும் வலிமை பெறுவது சிறப்பான யோக அமைப்பாகும், அங்கே அமரும் செவ்வாய் பகவானும் தங்களுக்கு யாதொரு தோஷத்தையும், வலிமை இழப்பையும் தரவில்லை என்பதே உண்மை நிலை.

செவ்வாய் தோஷம் என்பது அடிப்படை ஆதாரம் அற்ற ஓர் விஷயமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, செவ்வாய் தோஷம் என்று சொன்னதினால் நிறைய திருமணம் நின்று இருக்க கூடுமே அன்றி, செவ்வாய் 2,4,7,8,12ல் அமர்ந்து இருப்பதால் திருமணம் நின்று இருக்க வாய்ப்பு இல்லை, எனவே இனிவரும் காலங்களில் செவ்வாய் தோஷம் என்பதை கருத்தில் கொள்ளாமல், சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு திருமண வாழ்க்கையை அமைத்துக்கொள்வது சிறப்பான இல்லற வாழ்க்கையை நல்கும், மேலும் தற்போழுது நடைபெறும் ராகு திசை தங்களுக்கு 7ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 11ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் தருவது சிறப்பான யோக வாழ்க்கையை சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், அடுத்து வரும் குரு திசையும் 7ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 11ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையே தருவதால், எதிர்கால வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக அமையும்.

தங்களது ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும்  1,2,5,7,8,12ம் வீடுகளில் 1,7ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது யோகங்களையும்,  2,5,8,12ம் வீடுகள் பாதிக்கப்பட்டு இருப்பது சற்று சிரமத்தை தரக்கூடும், எனவே தங்களது வாழ்க்கை துணையாக தேர்வு செய்யும் அன்பரது சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமையாக இருப்பதை கருத்தில் கொண்டு, தங்களது இல்லற வாழ்க்கையை அமைத்து கொள்வது சிறப்பான யோக வாழ்க்கையை தரும், இதை கருத்தில் கொண்டு கீழ்கண்ட வரனின் ஜாதகத்தை ஆய்வு செய்து தெளிவு பெறுவோம்.


லக்கினம் : சிம்மம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம் 1ம் பாதம்.

 இந்த ஜாதகருக்கு இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும்  1,2,5,7,8,12ம் வீடுகளில் 1,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 2,8,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், குறிப்பாக 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், தங்களின் இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும் அம்சமாகும், எனவே தாங்கள் தேர்வு செய்த ஜாதகம் தங்களின் ஜாதகத்தை விட மிகவும் வலிமையாக இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும்.

தற்போழுது ஜாதகருக்கு நடக்கும் குரு திசை 2,6,8,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஜாதகருக்கு ஜீவன ஸ்தான பலனையே ஏற்று நடத்துவது வரவேற்க தக்க அம்சமாகும், அடுத்து வரும் சனி திசையும் 2,6,8,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஜாதகருக்கு ஜீவன ஸ்தான பலனையே ஏற்று நடத்த இருப்பது சிறப்பான யோகத்தை தரும் அம்சமாகும், எனவே தங்களது தேர்வு மிசிறந்ததாக கருதுகிறோம், மேலும் இருவருக்கும் தற்போழுது, எதிர்வர இருக்கும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை நடத்துவது  இல்லற வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும் அமைப்பாக கருதலாம்.

மேலும் தங்களின் ஜாதகப்படியும், தாங்கள் தேர்வு செய்த ஜாதகப்படியும் முறையான பிரீத்தி பரிகாரங்களை செய்து கொண்டடு, வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும்  பெறலாம், வாழ்த்துகள்.

குறிப்பு :

 சுய ஜாதகம் வலிமை பெற்று இருப்பின், ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் போன்ற எந்த ஒரு தோஷமும் யாதொரு இன்னல்களையும் தாராது, சுய ஜாதக வலிமை இழக்கும் பொழுது, சுய ஜாதகத்தில் எவ்வித கிரக சேர்க்கை, கிரகயோகம், பரிவர்த்தனை யோகம் இருந்தாலும் யாதொரு பயனும் இருக்காது என்பதில் தெளிவு பெறுங்கள், தங்களது ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தாலும், அதனால் எந்த ஒரு தோஷமும் தங்களுக்கு இல்லை, சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது தங்களின் வாழ்க்கையில் இனிமையான, பொருத்தமான இல்லற வாழ்க்கையை அமைத்து தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

காதல் கண்ணை மறைத்தால், வாழ்நாள் முழுவதும் கண்ணீர்தான் மிஞ்சும் !



இன்றைய இளைஞர்களின் அசட்டு துணிச்சலும், தான் திறமையானவன் என்ற எண்ணமும் தனது இளைமை பருவத்திற்கே உண்டான அறியாமையினாலும், வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் மிகப்பெரிய தவறுகளை செய்கின்றனர், குறிப்பாக தனது விருப்படி வழக்கை துணையை தேர்வு செய்துகொள்வது என்பது ( ஆண் பெண் ) பேதம் இன்றி நடைபெறுகிறது, இனகவர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு தனக்கு பொருத்தமற்ற காதல் துணையை தேர்வு செய்து, தனது வாழ்க்கைக்கே தானே தீவிணையை தேடிக்கொள்கின்றனர், தனது வாழ்க்கை துணையாக கிழ்கண்ட ஜாதகியை காதலித்து திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், இந்த ஜாதகியை திருமணம் செய்துகொண்டால் தனது வாழ்க்கையில் முன்னேற்றம் எப்படி இருக்கும் என்று தனது கேள்வியை ஒரு அன்பர் முன்வைத்து இருக்கின்றார், முதலில் பெண்ணின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, ஜாதகத்தில் உள்ள நிறை குறைகளை சிந்தனைக்கு எடுத்து கொள்வோம்.


லக்கினம் : கடகம்
ராசி : சிம்மம்
நட்சத்திரம் : உத்திரம் 1ம் பாதம் 

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய பெண்களின் ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்க வேண்டிய பாவகங்கள் ( 1,2,5,7,8,12 ) ஆகும் பெண்களின் சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது தாம்பத்திய வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றத்தையும், நன்மைகளையும் வாரி வழங்கும், குறிப்பாக பெண்களின் ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் மிகவும் வலிமை பெறுவது கணவனுக்கும், குடும்பத்திற்கும் மிகுந்த யோக பலன்களை நல்கும், லக்கினம் வலிமை பெறுவது ஜாதகியின் குணநலன்களையும், உடல் ஆரோக்கியம் மற்றும் ஜாதகியின் செயல்திறனையும் சிறப்பிக்கும், குடும்ப ஸ்தானம் வலிமை பெறுவது, இனிமையான பேச்சு, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, நிறைவான வருமானம், கணவருடன் அன்னியோன்னியம், மற்றும் சந்தோஷத்தை தரும், பூர்வ புண்ணியம் வலிமை பெறுவது ஜாதகியின் அறிவு, சமயோசித புத்திசாலித்தனம், குழந்தை பாக்கியம், சூழ்நிலைகளை சிறப்பாக கையாளும் வல்லமை என்ற வகையில் சிறப்புகளை தரும், களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது, கணவனுக்கு யோகத்தையும், இணக்கமான நல்லுறவையும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வல்லமையையும் தரும், திருமண பந்தத்தின் புனிதத்தை காக்கும், ஆயுள் பாவகம் வலிமை பெறுவது ஜாதகியின் மூலம் அவரது கணவர் பெரும் யோகங்களையும், தீர்க்க சுமங்கலி யோகத்தையும், நீண்ட ஆயுள் மற்றும் திடீர் அதிர்ஷ்டம் மூலம் சிறப்பான வெற்றிகளையும் வாரி வழங்கும், அயனசயன ஸ்தானம் வலிமை பெறுவது தாம்பத்திய இன்பத்தையும், திருப்தியான யோக வாழ்க்கை, மனநிறைவுடன் கூடிய சந்தோஷத்தை தரும், திருமண பந்தத்தில் பிரிவு இல்லா நிலையை தரும், ஆக வாழ்க்கை துணையாக வரும் பெண்ணின் ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமையை உறுதி செய்து கொண்டு அதன் பிறகு, திருமண பந்தத்தில் இணையும் அன்பர்களுக்கு, திருமண வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி நிச்சயம், இனி மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

1,2,7ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு லக்கின வழியில் இருந்து அதிக மனஉளைச்சலுக்கும், போராட்டத்திற்கும் ஆளாக்கும், எதிலும் திருப்தி அற்ற நிலை, மனக்கிலேசம், நம்பிக்கை அற்ற தன்மை, உறுதியில்லா மனப்பாண்மையை தரும், குடும்ப ஸ்தானம் பாதிக்கப்படுவது, குடும்ப வாழ்க்கையில் திருப்தி இல்லை, வீண் வாக்குவாதம், பொருளாதார நெருக்கடி, நிம்மதியின்மை, எப்பொழுதும் சண்டை சச்சரவு, குடும்ப வாழ்க்கையில் கடுமையான பாதிப்புகள் என்ற வகையில் இன்னல்களை தரும். களத்திர ஸ்தானம் வலிமை இழப்பது ஜாதகி தனது கணவர் வழியில் இருந்து கடுமையான மனபோராட்டத்தை சந்திக்கும் சூழ்நிலையை தரும், ஒற்றுமை இன்மை, தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்கள், வீண் வெறுப்பு, திருப்தி அற்ற நிலை, அனைத்திலும் குற்றம் காணும் சுபாவம் என ஜாதகியை இல்லற வாழ்க்கையில் இணக்கம் காண்பதற்கு உண்டான வாய்ப்பை தாராது, எனவே ஜாதகியின் இல்லற வாழ்க்கை துன்பத்தின் விளிம்பில் வந்து நிற்கும்.

5ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்ல புத்திர சந்தானத்தை தாராது, ஜாதகியின் அறிவு திறனும் மட்டுப்படும், முட்டாள்தனமான செய்கைகள் மூலம் ஜாதகி தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்வார், அனைத்திலும் தோல்வி என்ற நிலையை தரும், குல தேவதையின் ஆசியை பெற ஜாதகி பகிர்தனா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையை தரும், தனக்கு வரும் இன்னல்களை ஜாதகியால் தவிர்க்க இயலாது, புத்திர பாக்கியத்திலும் இன்னல்களை தரும்.

8ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு பரதேச ஜீவனத்தை தரும், தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவிக்கும் தன்மையை தரும், குறிப்பாக இந்த அமைப்பு ஜாதகிக்கு நன்மையை தரும் அமைப்பு அல்ல, கணவன் வழியில் இருந்து தானும், தனது வழியில் இருந்து கனவரும் கடுமையான இழப்புகளை சந்திக்கும் நிலையை தரும்.

12ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்ப வாழ்க்கையில் வரும் கடுமையான பாதிப்புகளை உறுதிப்படுத்துகிறது, குறிப்பாக தனம் சார்ந்த தொந்தரவுகள் கடுமையான நெருக்கடிகளை தரும், அயனசயன சுகம் என்பது ஜாதகிக்கு பெரும் நெருக்கடிகளை தரும், வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும் தன்மை பெற்றது மேற்கண்ட பாவக தொடர்பு, எனவே ஜாதகியை காதல் திருமண செய்து கொள்ள விரும்பும் அன்பரது நிலை மிகுந்த கவலைக்கிடமாக மாற அதிக வாய்ப்பு உள்ளது, ஒருவேளை ஜாதகியை காதல் திருமணம் செய்துகொள்ள விரும்பும் அன்பரது சுயஜாதகம் மிக மிக வலிமையுடன் இருந்தால் மட்டுமே, இல்லற வாழ்க்கை ஓரளவிற்கு நலம் பெரும்.

குறிப்பு :

திருமணம் செய்வதற்கு முன்பு தம்பதியர் இருவரும், தமது சுய ஜாதக வலிமையை உணர்ந்து இல்லற வாழ்க்கையில் இணைவது, சகலவிதங்களில் இருந்து நன்மைகளை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 16 பிப்ரவரி, 2017

ஆருடம் வழங்கும் தீர்வு ( தீர்ப்பு )


"ஜோதிடதீபம்" ஆருடம் கூறியபடியே சரியாக அமைந்த தீர்ப்பு ....

கடந்த 13ம் தேதி தமிழக மக்களின்  மனதில் முக்கியஸ்தர் ஒருவருக்கு வரும் தீர்ப்பு எப்படி இருக்கும்? என்று எழுந்த கேள்விகளுக்கு உண்டான பதிலாக குருவின் ஆசியுடன் ஒரு ஆருடத்தை " ஜோதிடதீபம்" பதிவு செய்து இருந்தது, அதற்க்கு அடுத்தநாளே ஆருடத்தை மெய்பிக்கும் தன்மையாகவும், அவரது எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் விதமாகவும், சம்பந்த பட்ட நபருக்கு தீர்ப்பு அமைந்து இருந்தது, ஆருடம் கேட்ட நேரமும் அதில் இருந்த சிறப்பு சாராம்சங்கள் பற்றியும், ஆருட லக்கினத்திற்கு அமைந்த பாவக தொடர்புகள் பற்றியும், இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !



ஆருட கேள்வி :

சம்பந்தப்பட்ட நபருக்கு வரும் தீர்ப்பு எப்படி அமையும்? அவரின் எதிர்காலம் என்னவாகும் ?

ஆருட பதில் :

ஆருட நேரத்தில் அமைந்த லக்கினம் : கடகம்
ஆருட நேரத்தில் அமைந்த ராசி : கன்னி
ஆருட நேரத்தில் அமைந்த நட்சத்திரம் : உதிரம் 2ம் பாதம்.
ஆருட நேரத்தில் அமைந்த பாவக தொடர்புகள்

1,3,4,6,7,9,10,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5,11 வீடுகள் 200 % விகித இன்னல்களை தரும் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.

1,3,4,6,7,9,10,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  லக்கின வழியில் கலையில் நாட்டம், தனிமை விரும்பி ( சேராமாரி ) முதலீட்டில் விருப்பம், அதிக தொல்லை, பொறாமை, மறைமுக எதிரி, தடங்கல், அடிக்கடி வைத்திய செலவு, சிறை செல்லுதல், ஏமாற்றம், கொள்ளை அடித்தல், இராஜ துரோகம், சதி செய்தல் என்றவகையில் பலனை தரும்,எனவே ஆருட லக்கினம் என்பதே கடுமையாக பாதிக்கப்படுகிறது ( ஆரூடத்தில் லக்கினம் மிக முக்கியமாக கருதப்படும் ) , மேலும் ஆருட லக்கினாதிபதியான செவ்வாய், லக்கினத்திற்கு 8ல் மறைவு அடிப்படையிலேயே லக்கினமும் பாதிக்கப்பட்டு, லக்கினாதிபதியும் பாதிக்கப்படுவது, அவர் அனுபவிக்கும் இன்னல்களுக்கு கட்டியம் கூறுகிறது, 3ம் பாவகம் பாதிக்கப்படுவது அவரது முயற்சியில் பெரும் தோல்வியையும், 4ம் பாவகம் பாதிக்கப்படுவது விபத்து, சொத்துக்களை இழத்தல், தடங்கல், வறுமை, துரதிர்ஷ்டம், மனக்குழப்பம், ஜெயில் வாழ்க்கை, அதிக வேலைப்பளு, விஷ பாதிப்பு என்ற வகையிலும், 6ம் பாவகம் பாதிக்கப்படுவது கடன் கொடுத்தவர்களால் தொல்லை, கடன் பெற்றவர்களால் இன்னல்கள், வேலையாட்கள் விசுவாசிகள் மூலம் அதிக தொல்லை, வேலை நிறுத்தம், தேவையற்ற செலவு, எதிர்பாராத மருத்துவ செலவு, 7ம் பாவகம் பாதிப்படுவது நோயுற்ற வாழ்க்கை துணை, அரசியல் சிக்கல்கள், கூலியாட்கள் மூலம் அதிக தொல்லை, அனைத்திலும் தோல்வி, அதிக இன்னல்கள் என்ற வகையிலும், 9ம் பாவகம் பாதிக்கப்படுவது பித்ருக்கள் ஆசி இன்மை, சரியான நேரத்தில் அனைவரும் காலைவாரிவிடும் சூழ்நிலை, முட்டாள் தனமான செய்கைகள் மூலம் தன்னை ஓர் அறிவிலி என்று நிரூபித்தால், மற்றவர்களை நம்பி சோரம் போகுதல், உடன்பிறப்பை விட்டு, பிறந்த ஊரை விட்டு பிரிதல் என்ற வகையில் இன்னல்களையும், 10ம் பாவகம் பாதிக்கப்படுவது வெளியூர், வெளிநாட்டில் ஜீவனம், அடிக்கடி ஜீவன மாற்றம், வரவைவிட செலவுகள் அதிகம், தவறான வழியில் பணம் ஈட்டுதல், கவுரவ குறைவான காரியங்களில் ஈடுபடுதல், என்றவகையில் இன்னல்களையும், 12ம் பாவகம் பாதிக்கப்படுவது, நிறைய வீண் செலவு, சூது மூலம் பேரிழப்பு, திருப்தி இல்லா வாழ்க்கை, அனைவராலும் தொல்லை, விபத்து  என்ற வகையில் கடுமையான இன்னல்களை தரும், 12ம் வீடு மிதுனத்தில் ஆரம்பித்தாலும் பெரும்பாலும்   கடக ராசியிலே வியாபித்து இருப்பது ஆருடத்தால் சம்பந்தப்பட்ட்டவர் அனுபவிக்கும் மன ரீதியான கடுமையான போராட்டங்களை எடுத்துக்காட்டுகிறது, குறிப்பாக மனபயம், மனப்போராட்டம், மனக்குழப்பம் ஆகியவற்றை தெளிவு படுத்துகிறது.

2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து இன்ஷுரன்ஸ் மூலம் லாபம், குடும்பத்தில் இன்னல்கள்,  வாக்கு தவறும் தன்மை, வருமான பாதிப்பு என்ற வாழ்க்கையிலும், 8ம் பாவக வழியில் இருந்து நல்ல ஆயுள், வாழ்க்கையில் ஏமாற்றம், துயரம், விபத்து, வியாதி, திருப்தி அற்ற மன நிலை, அனைத்தையும் திடீரென இழக்கும் தன்மை எல்லாவகையிலும் இன்னல்களை தரும்.

5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்நதம் பெறுவது, (  எதிர்காலம் ஒன்று இல்லை என்பதை பாதக ஸ்தான தொடர்பு தெளிவுபடுத்துகிறது ) சமயோசித புத்திசாலித்தனம் இல்லாத தன்மை, வாய்ப்புகளை பயன்படுத்த தெரியாமல் வீணடிக்கும் தன்மை, தனது வாழ்க்கைக்கு தானே எதிர்ப்புகளை உருவாக்கி கொள்ளும் தன்மை, குலதெய்வ ஆசிர்வாதம் இல்லாததால் வரும் இன்னல்களுக்கு தீர்வு காண இயலாமல் சிரமப்படும் தன்மை, விதி தரும் இன்னல்களில் இருந்து விடுபட முடியாமல் இன்னலுறும் தன்மை, சுய அறிவு இன்றி  மற்றவர்கள் அறிவுரையை கேட்டு வாழ்க்கையில் இன்னலுறும் தன்மை என்ற வகையில் இன்னல்களை தரும், 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம் இன்மை, துரதிர்ஷ்ட வாழ்க்கை, எதிர்காலம் சூன்யம் ஆகுதல், பிற்போக்கு தனமான செய்கைகள், தன்னம்பிக்கை இன்மை, அவநம்பிக்கையினால் எதிர்கால வாழ்க்கையினை எதிர்கொள்ள இயலாமல் வாழ்க்கையில் இன்னலுறும் தன்மை, அனைத்திலும் தோல்வி என்ற வகையில்  அவயோகத்தையும் வழங்கு, மேலும் பாதக ஸ்தானம் என்பதால் 200 சதவிகித இன்னல்களை தரும்,  ஆரூடத்தில் 1,5,9ம் பாவகங்கள் வலிமை அற்று  இருப்பது மிக மோசமான விளைவை தரும் அமைப்பாகும், இந்த நிலை 17/12/2020 வரை நீடிக்கிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 15 பிப்ரவரி, 2017

சுய ஜாதகத்தை இயக்குவது நவகிரகங்களின் வலிமையா? லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையா?


கேள்வி :

சுய ஜாதகத்தை இயக்குவது நவகிரகங்களின் வலிமையா? லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையா?

பதில் :

 நவ கிரகங்கள் பூமியில் ஜீவித்து இருக்கும் அனைத்து ஜீவா ராசிகளுக்கும் சரிசாம விகிதத்தில், தனது ஜீவகாந்த அலைகளை வாரி வழங்கிகொண்டு இருக்கின்றது. புவியில் பிறந்த மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அவர் அவர் செய்த புண்ணிய பதிவிற்கு ஏற்ற வகையில் சுய ஜாதக பாவக வலிமை அமைகிறது, லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நவகிரகங்களின் ஜீவகாந்த அலையை பெற்று சம்பந்த பட்ட ஜாதகருக்கு, யோக பலன்களையோ அவயோக பலன்களையோ நடைமுறைக்கு கொண்டு வருக்கிறது, குறிப்பாக சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்கள் நவகிரகங்களின் ஜீவகாந்த அலைகளை பெற்று சுபயோக பலன்களையும், வலிமை அற்ற பாவகங்கள் நவகிரகங்களின் ஜீவகாந்த அலையை பெற இயலாமல் அவயோக பலன்களையும் தருகின்றது, இதில் ஒரு சுவாரஷ்யம் என்னவென்றால், சுய ஜாதக பாவக வலிமையை நிர்ணயம் செய்வதும் ஜெனன காலத்தில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு அமரும் நவகிரகங்களின் நிலையே! 

உதாரணமாக சொல்ல வேண்டும் எனில் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களையும் 12 பாத்திரங்களாக கற்பனை செய்து கொண்டால், அந்த பாத்திரங்களில் நிரப்பபடும் நீர்தான் நவகிரகங்களின் ஜீவா காந்த அலைகள், இதில் வலிமை பெற்ற பாவகம் என்பது நல்ல பாத்திரமாகவும், இதில் வலிமை அற்ற பாவகம் என்பது உடைந்த பாத்திரமாகவும் கற்பனை செய்து கொண்டால், வலிமை பெற்ற பாவகத்தில் நிரப்பபடும் ஜீவாகாந்த அலைகள் மூலம் ஜாதகர் யோக பலன்களையும், வலிமை அற்ற பாவகத்தில் நிரப்பபடும் ஜீவாகாந்த அலைகள் மூலம் ஜாதகர் அவயோக பலன்களையும், அனுபவிக்கு தன்மையை பெறுகிறார்.

அடுத்து நவகிரகங்கள் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பெரும், ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் ஆகியவை சுய ஜாதகத்திற்கு யாதொரு நன்மை தீமையும் தருவதில்லை, குறிப்பாக சுய ஜாதகத்தில் கிரகங்கள் ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் ஆகிய நிலைகளில் இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நன்மை தீமைகளை தரும் என்று கருதுவதும், தவறான அணுகுமுறையே, ஏனெனில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு நவகிரகங்கள் பெரும் வலிமையானது ( ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் ஆகியவை ) சுப,அவ யோகங்களை நிர்ணயம் செய்வதில்லை, லக்கினத்திற்கு நவகிரகங்கள் பெரும் வலிமை நிலையம், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களுக்கு நவகிரகங்கள் பெரும் வலிமை நிலையுமே சுய ஜாதகத்திற்கு உண்டான நன்மை தீமை பலன்களையும், யோக அவயோக பலன்களையும் நிர்ணயம் செய்கிறது, இதன் அடிப்படையில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமையையே, நவகிரகங்கள் தனது திசாபுத்திகளில் பலாபலன்களாக ஏற்று நடத்தும், எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமையே சம்பந்த பட்ட ஜாதகருக்கு சுபயோகங்களையும், நன்மையான பலன்களையும் வாரி வழங்கும் என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது.

சுய ஜாதகத்தை இயக்குவதில் ஜெனன நேரத்தில் அமையும், சுய ஜாதக பாவக வலிமையே ( பாவக வலிமையை நிர்ணயம் செய்வது ஜெனன நேரத்தில் உள்ள கிரக நிலை என்பது கவனிக்க தக்கது ) என்றால் அது மிகையில்லை. மேலும் சுய ஜாதக பாவக வலிமை என்பது அவரவர் பதிவிற்கு ஏற்ற வகையில் அமையும் என்பதும், ஒருவருக்கு இருக்கும் ஜாதக பாவக வலிமை போல், மற்றொருவருக்கு இருக்காது என்பது  ( இரட்டை குழந்தை என்ற போதிலும் ) கூடுதல் விஷயம் ஆகும்.

சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு நவ கிரகங்கள் பெரும் ( ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் ) வலிமையை கருத்தில் கொள்ளாமல், லக்கினத்திற்கும், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களுக்கும் நவகிரகங்கள் தரும் வலிமையை கருத்தில் கொண்டும், பனிரெண்டு பாவகங்களின் வலிமை மற்றும் நவகிரகங்கள் தனது திசாபுத்திகளில் ஏற்று நடத்தும் பாவகங்கள் ஜாதகருக்கு தரும் நன்மை தீமை, யோக அவ யோகங்களை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலாபலன்கள் காண்பதே சரியான முறை, அதுவே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு துள்ளியாமான ஜாதக பலன்களை கூற உதவும், இத்துடன் நவகிரகங்கள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும் பலாபலன்களையும் கருத்தில் கொள்வது நலம் தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

நேரம் நல்ல நேரம்


நேரம் நல்ல நேரம்



நல்ல நேரம் என்பது ஒருவருக்கு எப்படி பலன் தருகிறது என்பதை சற்று சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! சுப காரியங்களை செய்ய நாம் நல்ல நேரம் பார்த்தே செய்கின்றோம், குறிப்பாக நல்ல முகூர்த்தம்,நல்ல ஹோரை சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று பஞ்ச பட்சி பார்த்து செயல்படுவது உண்டு, சிலர் அபிஜித் முகூர்த்தத்தை பயன்படுத்துவது உண்டு, தமிழக முன்னாள் முதல்வர் மேற்கண்ட நல்ல நேரத்தை பயன்படுத்தி பதவி ஏற்று கொண்டார், அபிஜித் முகூர்த்தத்தை பயன்படுத்தி பதவி ஏற்றால் அவருக்கு வெற்றிகள் நிச்சயம் என்று பரிந்துரை செய்ததாக செய்தி, அதன் பிறகு முன்னாள் முதல்வர் நிலை என்ன ஆனது என்பதை தமிழகமே அறியும், அடுத்து முதல்வர் ஆசையில் பல பகிரதன முயற்சிகளை மேற்கொண்ட நபருக்கு தற்பொழுது என்ன நடந்தது என்ன என்பதும் நேற்றே உலகம் முழுவது அறிந்திருக்கும், மேலும் தற்பொழுது முதல்வர் பதவியை அடைய முயற்சி செய்யும் அன்பர்கள் படும் பாடு உலகே அறியும்.


முன்னாள் முதல்வர் நல்ல நேரத்தை பயன்படுத்தி, முதல்வராக நீடிக்க முடியாத நிலை ஏன் ஏற்ப்பட்டது? முதல்வர் ஆசையில் பகிரதன முயற்சி செய்த நபருக்கு சிறைவாசம் சென்றது ஏன் ? தற்பொழுது முதல்வர் பதவிக்கு முயற்சிக்கும் அன்பருக்கு இன்னும் நல்ல செய்தி வாராமல் இருப்பதற்கு என்ன காரணம் ? என்பதை இன்றைய சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

நல்ல நேரம் என்பது என்ன ?

பொதுவாக அன்றைய நாளில் நல்ல நேரம் பார்க்கும் அன்பர்கள், தமது சுய ஜாதக வலிமையை பற்றி எவ்வித கவனமும் கொள்வதில், குறிப்பாக தமது ஜாதக வலிமை எப்படி இருந்தாலும், நல்ல நேரம் பார்த்து செய்தால் அனைத்தும் வெற்றிகரமாக அமையும் என்ற எண்ணத்தின் விளைவே, முன்னாள் முதல்வர் முதல்வராக நீடிக்க முடியாததிர்க்கும், முதல்வர் ஆசையில் முயற்சி எடுத்த நபர் சிறை வசம் சென்றதிர்க்கும் , தற்பொழுது முதல்வர் பதவிக்கு முன்னெடுப்பவருக்கு தாமதம் ஆவதற்கும் அடிப்படை காரணமாக அமைகிறது..

ஒருவரது சுய ஜாதகம் வலிமை பெறாமல், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாமல்... ஒருவர் நல்ல நேரம் பார்த்து செய்யும் காரியங்கள் எதுவும் வெற்றி பெறாது.. குறிப்பாக சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்து சம்பந்தப்பட்ட ஜாதகர் ராகுகாலம், எமகண்டம் மற்றும் குளிகை நேரத்தில் ஒரு காரியத்தை செய்தாலும் நிச்சயம் வெற்றி மேல் வெற்றியை தரும், சுய ஜாதக வலிமை இன்றி ஒருவர் நல்ல முகூர்த்தம்,நல்ல ஹோரை மற்றும் பஞ்ச பட்சி பார்த்து செய்தாலும் சம்பந்தப்பட்ட அன்பருக்கு தோல்வியே மிஞ்சும், எனவே நல்ல நேரம் என்பது சுய ஜாதக வலிமையின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதே "ஜோதிடதீபத்தின்" கருத்து.

முன்னாள் முதல்வருக்கு தெரியாத ஜோதிடர்களா? சாஸ்திர வல்லுன்னர்களா? இருப்பின்னும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றும், ஜோதிடர்களின் ஆலோசனை படி நல்ல நேரம் பார்த்து பதவி ஏற்றும் அதில் நீடிக்க முடியவில்லை, முதல்வர் பதவி ஆசையில் ஒருவர் சிறை செல்ல நேர்ந்தது, முதல்வர் பதவியை அடைவதற்கு தற்பொழுது ஒருவர் முயற்சிக்கும் பொழுது அதுவும் தாமதம் ஆகிறது... இங்கே ஒரு நாளில் நிர்ணயம் செய்யும் நல்ல நேரத்தை விட, ஒருவரின் சுய ஜாதக வலிமையே முழுமையாக வேலை செய்கிறது என்பது 100% விகிதம் உறுதியாகிறது அன்பர்களே! எனவே குறிப்பிட்ட நல்ல நாளில் நல்ல நேரம் பார்த்து ஒரு காரியத்தை செய்வதை விட, சுய ஜாதக வலிமை உணர்ந்து ஒரு காரியத்தை செய்வதே முழு அளவிலான வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும் என்பதை மனதில் கொண்டு ஒவ்வொருவரும் செயல்பட்டால், அவர்கள் செய்யும் காரியங்களில் 100 % விகித வெற்றி உறுதி என்பதை "ஜோதிடதீபம்" அழுத்தம் திருத்தமாக பதிவு செய்ய விரும்புகிறது.

வாழ்க வளமுடன் ஜோதிடன் வர்ஷன் 9443355696

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

திருமண பொருத்தம் : வாழ்க்கை துணையாக ( மனைவியாக ) இந்த ஜாதகியை தேர்வு செய்யலாமா ?

திருமண பொருத்தம் 


இல்லறவாழ்க்கை இனிதே அமைய ஒருவர் திருமணத்திற்கு முன்பே, தனது ஜாதக வலிமை நிலையை பற்றியும், தனக்கு வர இருக்கும் வாழ்க்கை துணையின் ஜாதக வலிமை நிலையை பற்றியும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்த பிறகு திருமண வாழ்க்கையில் இணைவது, மணவாழ்க்கையில் வெற்றியையும், சிறப்பையும் தரும், குறிப்பாக தனது வாழ்க்கை துணையாக வரும் பெண்ணின் ஜாதகத்தை பற்றி தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஆணுக்கு சகல யோகங்களையும், தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோஷங்களையும் வாரி வழங்கும், பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் ஆண் பெண் இருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது, மேலும் சகல சௌபாக்கியங்களையும் பெரும் சுபயோக வாழ்க்கையை தம்பதியர் இருவரும் பெறமுடியும்.

தங்களின் கேள்விக்கு உண்டான பதில்களை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் !

வாழ்க்கை துணையாக வர இருக்கும் வதுவின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பதும், தற்போழுது நடைமுறையில் உள்ள திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்திகள் ஜாதகிக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் தாம்பத்திய வாழ்க்கையில் நன்மைகளையும் யோகங்களையும் தரும், தனது கணவருக்கு சிறப்பான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், கீழ்கண்ட ஜாதகிக்கு 2,5,7,8,12ம் பாவகங்களின் வலிமையை பற்றியும், நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் தரும் நன்மை தீமைகள் பற்றியும், தனது இல்லறவாழ்க்கையில் ஜாதகி பெரும் யோக அவயோகங்கள் பற்றியும் ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : கும்பம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 3ம் பாதம் 

ஜாதகிக்கு 2,5,7,8ம் வீடுகள் லாபஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகி இனிமையான குடும்ப வாழ்க்கை , கை நிறைவான வருமான வாய்ப்பு, இனிமையான பேசிச்சு திறன், குடும்பத்தில் அனைவருடன் அனுசரித்து செல்லும் அமைப்பு, சிறப்பாக குடும்பத்தை நடத்திச்செல்லும் வல்லமை, அதிர்ஷ்டம் மற்றும் நட்புகள் வழியில் யோகம் என்றவையில் சுபயோகங்களை தரும்.

5ம் பாவக வழியில் இருந்து அறிவு புத்திசாலித்தனத்தால் ஆதாயம், எப்பொழுதும் மனமகிழ்ச்சி, குல தெய்வ அனுக்கிரகம், குழந்தைகள் வழியில் யோகம், நல்ல குழந்தை பாக்கியம், அனைவரிடமும் பாசமாக நடந்துகொள்ளும் தன்மை, பெருந்தன்மையான குணம், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் அதிபுத்திசாலித்தனம், கடவுள் அனுக்கிரகத்தை பரிபூர்ணமாக பெரும் யோகம் என்றவகையில் சுபயோகங்களை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து கணவருடன் இணக்கம், நல்ல நண்பர்கள் உதவி, தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி, தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டு, மணவாழ்க்கையை சிறப்பிக்கும் யோகம், எந்த சூழ்நிலையிலும் கணவனை விட்டு பிரியாமல் வாழும் யோகம், வியாபர விருத்தி, கணவருடன் செய்யும் சுயதொழில் வளர்ச்சி, எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தம்பதியர் பெரும் யோகம் என்றவகையில் சுபயோகங்களை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து பூர்ண சுமங்கலி, தன்கணவனுக்கு மிதம்மிஞ்சிய சொத்து சுக சேர்க்கையை நல்கும் யோகம் திடீர் அதிர்ஷ்டம்  மூலம் தம்பதியரின் வாழ்க்கை எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெறுதல், போதும் என்ற மனநிறைவு, திருப்தியான யோகம் வாழ்க்கை, நீண்ட ஆயுள், தம்பதியர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்லும் தன்மை, வாழ்நாள் முழுவதும் கணவருக்கு சேவை செய்யும் யோகம் பெற்றவர்.

ஜாதகிக்கு 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மட்டும் சற்று பாதிப்பு, தங்களின் ஜாதகத்தில் 12ம் பாவகம் மிகவும்  வலிமையுடன் இருப்பதால் யாதொரு இன்னல்களும் இல்லை, திருமண வாழ்க்கையில் சந்தோசம் மற்றும் வெற்றி உண்டாகும்.

நடைபெறும் குரு திசை 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று  ஸ்திரமான ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது சிறப்பான யோகமே, மேலும் அடுத்து வரும் சனி திசை ஜாதகிக்கு 1,2,5,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று முழுவீச்சில் லாபஸ்தான பலனை ஏற்று நடத்துவது வரவேற்கதக்க சிறப்புஅம்சம் ஆகும், மேலும் ஜாதகிக்கு 9 பது பாவகங்கள் மிக மிக வலிமையுடன் இருப்பதால் தங்களுக்கு யோக வாழ்க்கையையே தரும், குறிப்பாக 2,5,7ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது தாம்பத்திய வாழ்க்கையில் 100% விகித வெற்றியை  வாரி வழங்கும், இருவரது ஜாதகமும் 100% விகிதம் பொருந்துவதால் தங்கள் தேர்வு செய்த ஜாதகியையே திருமணம் செய்துகொள்வது  தங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

சுய ஜாதக வலிமை பற்றி தெளிவு பெறுவது, சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை பெற்று தருமா ?


கேள்வி :

 சுய ஜாதக வலிமை பற்றி தெளிவு பெறுவது, சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை பெற்று தருமா ? அல்லது தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் வாழ்க்கையில் வெற்றியை பெற்று தருமா ?

பதில் :

 " அவன் இன்றி ஓர் அணுவும் அசைவதில்லை  " எனவே ஒருவரின் வாழ்க்கையில் வரும் நன்மை தீமை, யோக அவயோகங்கள் அனைத்தும், சுய ஜாதகங்களில் உள்ள பாவகங்களின் வலிமையின் அடிப்படையிலும், நவகிரகங்களின் திசை புத்தி ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையின் அடிப்படையிலும், கோட்சார கிரகங்கள் திசை புத்தி ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு வழங்கும் கோட்சர பலன்களுக்கு ஏற்பவும் நடைமுறைக்கு வருகிறது, மேலும் தங்களின் கடின உழைப்பின் தன்மையையும், தாங்கள் கொண்டுள்ள தன்னம்பிக்கையின் வலிமையை பற்றியும் நிர்ணயம் செய்வதே சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே என்பதை கருத்தில் கொள்வது நலம் தரும்,  "எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்" என்பதற்கு இணங்க தங்களின் அனைத்து நிகழ்வுகளையும் உடல் உயிராகிய லக்கினம் முதற்கொண்டு பனிரெண்டு பாவகங்களே ஆதாரமாக அமைகிறது, ஆக தங்களுக்கு நடக்கும் நன்மை தீமை, யோக அவயோகங்களுக்கு அடிப்படையாக விளங்குவது சுய ஜாதக வலிமையே எனும் பொழுது, தங்களின் தன்னம்பிக்கையை கொண்டும், கடின உழைப்பை கொண்டும் சுய ஜாதகத்தில் இல்லாத ஒரு யோக வாழ்க்கையை தாங்கள் பெற இயலாது என்பதை கருத்தில் கொள்வது தங்களுக்கு நன்மைகளை தரும்.

சுய ஜாதக பாவக வலிமையை உணர்வது தங்களுக்கு எவ்வித நன்மைகளை தரும் என்பதை விளக்கம் தர "ஜோதிடதீபம்" கடமை பட்டுள்ளது, ஏனெனில் சுய ஜாதக வலிமையே தங்களின் இயக்கங்களுக்கும், செயல்பாட்டிற்கும் முழுமுதற் காரணமாக அமைகிறது, சுய ஜாதக வலிமை இன்றி தங்களால் ஓர் சிறு துரும்பை கூட கிள்ளி போட முடியாது.

லக்கினம் எனும் முதல் பாவகம் வலிமை பெறுவது தங்களின் வாழ்க்கையில், நல்ல உடல் நலம், மனநலம், வளரும் சூழ்நிலை, நீண்ட ஆயுள், சுய தேடுதல் மூலம்  வெற்றி மற்றும் கீர்த்தியை பெறுதல், நல்ல குண நலம் ஆகியவற்றை பெற இயலும்.

குடும்ப ஸ்தான வலிமையின் மூலம் தங்களின் வாழ்க்கையில், நல்ல கை நிறைவான வருமானம், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, இனிமையான பேச்சு திறன், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்பு, வாழ்க்கை துணையுடனான சந்தோசம், அவர்கள் வழியிலான ஆதரவு ஆகியவற்றை பெற இயலும்.

வீர்ய ஸ்தான வழியில் இருந்து ஜாதகரின் வெற்றிகளையும், சுக ஸ்தான வழியில் இருந்து வண்டி வாகன யோகம், வீடு, வசதி வாய்ப்புகள், சுக போகம், சுபயோக வாழ்க்கையையும், பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து, நல்ல அறிவு திறன் சமயோசித புத்திசாலித்தனம், குல தேவதையின் ஆசியையும், சத்ரு ஸ்தான வழியில் இருந்து போட்டி பந்தயம், வழக்குகளில் வெற்றி, எதிரிகளை வெற்றிகொள்ளும் திறன் மற்றும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், களத்திர ஸ்தான வழியில் இருந்து நல்ல வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் மக்கள் ஆதரவு வியாபாரத்தில் வெற்றிகளையும், ஆயுள் ஸ்தான வழியில் இருந்து திடீர் புதையல் யோகத்தையும், நீண்ட ஆயுள் மற்றும் திடீர் செலவுகளை தவிர்க்கும் அமைப்பையும், பாக்கிய ஸ்தான வழியில் இருந்து முன்னோர்கள் ஆசி, சிறந்த அறிவாற்றல், கல்வியில் நல்ல ஞானம், இறை அருளின் கருணையையும்.

ஜீவன ஸ்தான வழியில் இருந்து தொழில் வாய்ப்புகளையும், சுய கவுரவம், சமூக அந்தஸ்து, செய்யும் தொழில் வழி முன்னேற்றம், பதவி, வேலை, அரசு கவுரவம் போன்றவற்றையும், லாப ஸ்தான வழியில் இருந்து வாழ்க்கையில் ஜாதகரின் யோகம், அதிர்ஷ்டம், தன்னம்பிக்கை, முற்போக்கு சிந்தனை, ஜாதகர்  பெரும் வெற்றிகள், நீடித்த அதிர்ஷ்டம் ஆகியவற்றையும், விரைய ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் நல்ல அயன சயன யோகம், தாம்பத்திய வாழ்க்கையில் இன்பம், நல்ல உறக்கம், மனநிம்மதி, முதலீடுகளில் வரும் பெரும் லாபம், பெரும் அதிர்ஷ்டம், சந்தோசம் ஆகியவற்றையும் சம்பந்தம் பட்ட  ஜாதகர் பெற இயலும்.

 லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும், யோகங்களையும் வாரி வழங்கும், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையற்ற தன்மை, ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து தீமைகளையும் அவயோகங்களையும் வாரி வழங்கும். எனவே தங்களின் சுய ஜாதக பாவக வலிமையை பற்றி தெளிவு பெறுவது தங்களின் வாழ்க்கையில் வரும் நன்மை தீமைகளை பற்றியும், யோக அவயோகங்களை பற்றியும் மிக தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும், மேலும் நடைபெறும் திசாபுத்திகள் தரும் பலாபலன்கள் பற்றிய தெளிவு பெறுவது, தங்களுக்கு கடந்த காலம் பற்றிய அனுபவத்தையும், நிகழ்காலத்தில் தங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும், எதிர்காலத்தில் தாங்கள் பெரும் முன்னேற்றம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் மிக துல்லியமாக அறிந்துகொள்ள முடியும், எனவே தங்களின் சுய ஜாதக வலிமையை பற்றி தெளிவு பெறுவது தங்களின் வாழ்க்கையில் சிறந்த திட்டமிடுதல்கள் மூலம் மிகப்பெரிய அறிய பல சாதனைகளையும், தன்னிறைவான யோக வாழ்க்கையையும் பெற உதவும் என்பதை கருத்தில் கொள்வது நலம் தரும்.

சுய ஜாதக வலிமை பற்றி தெளிவு பெறுவது தங்களை பற்றி ஒரு சுய தேடுதல் மற்றும் தனது வலிமை மற்றும் வல்லமையை பற்றி ஒரு சரியான முடிவுக்கு வர இயலும், நவகிரகங்களின் திசாபுத்திகள் தரும் ( ஏற்று நடத்தும் பாவக பலன்கள் ) பலாபலன்கள் பற்றி தெளிவு பெறுவது தங்களின் முன்னேற்றத்திற்கு உண்டான திட்டமிடுதல்களையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் துல்லியமாக செயல்படுத்த சிறப்பாக உதவி புரியும்.

தங்களின் கடின உழைப்பு சரியான நேரத்தில் அமைந்தால் அது தங்களுக்கு முழு பலனை தரும், மாறாக சரியான நேரம் அறியாமல் தாங்கள் கடின உழைப்பை  போடுவது, கடின உழைப்பிற்க்கேற்ற பலன் பெற இயலாமல் வீண் விரையம் ஆக அதிக வாய்ப்பு உண்டு அல்லது தங்களின் கடின உழைப்பு மற்றவருக்கு பலன்தர வாய்ப்பு உண்டு, இதனால் தங்களின் உழைப்பும் வீணாகும், தன்னம்பிக்கையும் வெகுவாக குறையும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருக்கவில்லை எனில் தங்களின் தன்னம்பிக்கை, கடின உழைப்பு ஆகியவைகள் வெறும் திட்டமிடுதல்களுடன் நின்றுவிடும், நடைமுறைக்கும் செயல்பாட்டிற்கும் வரவே வாராது என்பதை கருத்தில் கொண்டு தங்களின் சுய ஜாதக வலிமை மற்றும் நவகிரகங்கள் திசாபுத்தி  ஏற்று நடத்தும் பாவக வலிமை அறிந்து தங்களின் வாழ்க்கையில் 100% விகித யோக வாழ்க்கையை பெறுக, "வாழ்த்துக்கள்"

குறிப்பு :

 சுய ஜாதக வலிமையின் அடிப்படையிலே ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நன்மைதீமை, யோக அவயோகங்கள் நடைமுறைக்கு வருகின்றது என்பதை அனைவரும் கருத்தில் கொள்வது நலம் தரும், சுய ஜாதக வலிமையை பற்றி தெளிவு பெறுவது தங்களின் வாழ்க்கையில் வரும் இன்னல்களையும் துன்பங்களையும் தவிர்த்து, நன்மைகளையும் யோக வாழ்க்கையையும் பெற உதவும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

சுயஜாதக ஆலோசனை - பாதக ஸ்தான தொடர்பும்,ஜாதகரின் துரதிர்ஷ்ட வாழ்க்கையும் !



கேள்வி :

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம்.நான் 13/11/1987 வருடத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7.58PM மணிக்கு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் என்ற ஊரில் பிறந்தேன்.
இதுவரை எனக்கு திருமணம் நடைபெறவில்லை.நல்ல தொழிலும் அமையவில்லை.சுய தொழிலில் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டு பெரும் கடனாளி ஆகிவிட்டேன்.எனது பூர்விக வீட்டின் மேல் கூட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.சம்மந்தமே இல்லாத நபர் என் வீட்டிற்கு உரிமை கொண்டாடுகிறார்.என் தந்தை கூட என்னையும் என் தாயையும் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.ஒன்றுமே புரியவில்லை, என் ஜாதகத்தை கொடுத்து பல ஜோதிடர்களிடம் பலன் கேட்டுப்பார்த்தேன்.ஆனால் ஒருவர் கூட எனது பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லவில்லை, மதிப்பிற்குரிய ஐயா நான் கடவுளை முழுமையாக நம்புபவன்.ஆனால் இதுவரை எனது வாழ்வில் பெருத்த ஏமாற்றங்களையும், தோல்விகளையுமே சந்தித்துள்ளேன்.

நான் எப்போது எனது வாழ்வில் முன்னேற்றம் காண்பேன்?
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்?
எனது பிரச்னைகள் எப்போது தீரும்?

மதிப்பிற்குரிய ஐயா தயவு செய்து அருள்கூர்ந்து எனது பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லுங்கள்.

இப்படிக்கு
சே.மதிவாணன்.

பதில் :

தங்களின் கேள்விகளுக்கு நிச்சயம் சரியான பதில்களை " ஜோதிடதீபம் " வழங்கும் அன்பரே ! ஆனால் தாங்கள் முறையான ஜாதக ஆலோசனை பெற்றுக்கொள்வது சாலசிறந்தது, ஏனெனில் நல்ல ஜோதிட ஆலோசனை தங்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு சகல விதங்களிலில் இருந்தும் பயனுள்ளதாக அமையும், இருப்பினும் தங்களது ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகங்கள் பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் !

ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நல்லதல்ல, ஏனெனில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடுமையான இன்னல்களை 200% விகிதம் அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், குறிப்பாக லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் சுய  ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை உதறித்தள்ளும் நிலையை தரும் குறிப்பாக, ஜாதகர் முரண்பட்ட குணாதிசயத்தை பெற்று இருப்பார், தங்களின் ஜாதகத்தில்  அவ்வித  பாதிப்புகள் ஏதும் இல்லை என்பதனால், தங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை உறுதியாக சொல்லலாம்.

ஆனால் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசையில், புதன் புத்தி தங்களுக்கு பாதக ஸ்தான பலனையும், திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவக பலனை  ஏற்று நடத்திக்கொண்டு இருக்கிறது என்பது, சற்று கவலை தரும் விஷயமே என்றாலும், இதற்க்கு உண்டான தீர்வுகளையும், பிரீதி பரிகாரங்களையும் மேற்கொள்வது தங்களுக்கு பாதிக்கப்பட்ட பாதக ஸ்தானம் மற்றும் ஆயுள் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க உதவும், மேலும் எதிர் வர இருக்கும் சுக்கிரன் திசை கேது புத்தி, அதற்க்கு அடுத்து வரும் சூரியன் திசை ஏற்று நடத்தும் பாவக பலன்கள் பற்றிய புரிதலுடன், தாங்கள் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.

திருமண தாமதத்திற்கு களத்திர ஸ்தான வலிமை இன்மையே அடிப்படை காரணமாக விளங்குகிறது என்பதை கருத்தில் கொள்க, தங்களது ஜாதகத்தில் பாதக ஸ்தான தொடர்பு தரும் இன்னல்களில் இருந்து விடுபடவும், சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் துன்பங்களில் இருந்து விடுபடவும், முறையான ஜாதக ஆலோசனை பெறுவதே சிறந்தது, தங்களின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ள " ஜோதிடதீபம் " தங்களுக்கு சிறந்த ஜாதக ஆலோசனைகளை வாரி வழங்கும். நேரில் வந்து ஆலோசனை பெற்று கொள்ளுங்கள் " வாழ்த்துகள் "


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

சுய தொழில் அடிமை தொழில் எது சிறப்பை தரும்? புத்திர பாக்கியம் உண்டா ?

கேள்வி :

ஐயா நான் 27/7/84 இரவு 9.50க்கு ஆரணியில்  பிறந்தேன், பிறகு அங்கு இருந்து நான் 6ம் வகுப்பு படிக்கும் தருவாயில் அப்பாவுக்கு தொழில் நஷ்டம் ஏற்ப்பட திருவண்ணாமலைக்கு வந்தோம், 2009; 2011 நான் தொழில் தொடங்கினேன் இரண்டு வருடம் கடுமையான பொருள் சேதம் 10 லட்சம் நஷ்டம்,  அங்கு இருந்து சென்னை வந்தேன் ஆறு வருடம் வேலை பார்த்தேன், தற்பொழுது தொழில் தொடங்கினேன் man power contract இந்த தொழிலும் பண நஷ்டம் வருகின்றது,  இந்த தொழில் நடத்தலாமா?  இல்லை அடிமை தொழிலுக்கே போகலாமா? ஐயா எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆகிறது குழந்தை பாக்கியம் இல்லை, தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

பதில் :

 ஒருவரின் வாழ்க்கையில் கடந்த,நிகழும், எதிர்வரும் மூன்று காலங்களில் நடைபெறும் பலாபலன்கள் பற்றியும், தனது ஜாதகப்படி தனக்கு உள்ள பலம், பலமின்மை, தகுதி, தகுதியின்மை, யோகம் அவயோகம் பற்றிய கேள்விகளுக்கு சரியான பதில் மற்றும் விளக்கத்தை தருவதில் " ஜோதிட சாஸ்திரம் " பயன்படுகிறது என்றால் அது மிகையில்லை, தனது சுய ஜாதகத்தின் வலிமையை பற்றி சிறிதும் அறியாமலேயே, வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருக்கும் அன்பர்களின் ஜாதகத்தில், 5,9ம் பாவக வலிமை இன்மை வெகுவாக தனது ஆளுமையை செலுத்தி கொண்டு இருக்கின்றது என்பதை தவிர வேறு எதுவும் இல்லை அன்பர்களே ! சரியான ஜோதிட பலன் அறிந்துகொள்வதர்க்கே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, மேற்கண்ட கேள்வியை வினவியிருக்கும் அன்பரின் ஜாதக வலிமையை பற்றிய தெளிவு இல்லாமல், ஜாதகர் தனது வாழ்க்கையில் மிகுந்த போராட்டங்களை தற்பொழுது வரை சந்தித்துக்கொண்டு இருக்கின்றார் என்பது அவரது சுய ஜாதகத்தில் சில பாவகங்களின் வலிமை இன்மையை தெளிவுபடுத்துகிறது எனும் பொழுது விதியின் வலிமையை நினைத்து வியப்பு மட்டுமே மிஞ்சுகிறது.

ஜாதகருக்கு கடந்த சனி திசை வழங்கிய பலன்களை மட்டும் இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! தற்பொழுது நடைபெறும் புதன் திசை, எதிர்வரும் கேது மற்றும் சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் பற்றி ஜாதகருக்கு பிராப்தம் இருப்பின் முறையாக ஜாதக ஆலோசனை பெற்று கொள்ள இறை அருள் கருணை புரியட்டும்.


லக்கினம் : மீனம்
ராசி : கடகம்
நட்சத்திரம் : புனர்பூசம் 4ம் பாதம்

ஒருவரது ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை சம்பந்தப்பட்ட ஜாதகர் பெரும் யோகம் அவயோக நிலைகளை பற்றி தெளிவு படுத்தும், மேலும் நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை நிலையை பற்றி தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நவகிரகங்களின் திசாபுத்திகள் தரும் நன்மை தீமையை பற்றி மிகத்துல்லியமாக காண வழிவகை செய்யும், மேற்கண்ட ஜாதகருக்கு கடந்த சனி  திசை ( 25/04/1988 முதல் 25/04/2007 வரை ) தனது திசையில் வழங்கிய பலன்களையும், ஜாதகர் அதனால் பெற்ற நன்மை தீமையை பற்றியும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

சனி திசை ஜாதகருக்கு பால்ய வயதில் வந்துள்ளது, மேலும் சனி திசை 12ம் வீடு திடீர் இழப்பை தரும் 8ம் பாவகமான ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தியிருக்கிறது, நடைபெற்ற சனி திசை காலங்களில் ஜாதகர் நல்ல வளரும் சூழ்நிலை அற்ற தன்மை, உடல் நல பாதிப்பு, கல்வியில் தடை, கற்ற கல்வி வழியிலான பலன்களை அனுபவிக்கும் தன்மை இல்லாதது, எந்த ஒரு விஷயத்தையும் போரடி பெறவேண்டிய கட்டாயம், என சனி திசை மிகுந்த இன்னல்களையே வாரி வழங்கி இருக்கின்றது.

மேலும் ஜாதகரின் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாகவும், சர காற்று தத்துவ ராசியிலும் அமைகிறது, 12ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமாகவும், ஸ்திர காற்று தத்துவ ராசியிலும் அமைவது, ஜாதகர் பொதுமக்கள், வியாபாரம், கூட்டு முயற்சி, சுய தொழில் ( அறிவு சார்ந்த ), ஆகியவற்றை அடிப்படையாக செய்வதற்கு உகந்தவர் அல்ல என்பது தெளிவு படுத்துகிறது, சுய ஜாதகத்தில் காற்று தத்துவ ராசி பாதிக்கபடுவது, ஜாதகரின் அறிவு சார்ந்த முயற்சிகளில் இன்னல்களையும், துன்பத்தையும் தரும் என்பது கவனிக்கதக்கது, இது ஜாதகர் தொழில் துவங்கிய காலங்களில் நடைமுறைக்கு வந்து எதிர்பாராத இழப்புகளையும், நஷ்டங்களையும் வழங்கி இருக்கின்றது.

சுய தொழில் துவங்குவது ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமை கொண்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டிய ஒன்று, மேலும் ஜாதகர் வேலைக்கு செல்வது சிறப்பனதா ? என்பதை சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் முடிவு செய்வது சரியான தீர்வை தரும், புத்திர பாக்கியம் சார்ந்த கேள்விகளுக்கு தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் உள்ள 5ம் பாவக வலிமையின் அடிப்படையில் முடிவு  செய்ய வேண்டும் என்பதால் ஜாதகர் முறையான ஜாதக ஆலோசனை கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

லக்கினாதிபதி திசை நன்மையையே செய்யும் என்றனர், கடுமையான இன்னல்களை தர காரணம் என்ன ? எனது ஜாதகம் யோக ஜாதகமா?


கேள்வி :

எந்த லக்கனம் என்றாலும், அந்த லக்கினத்திற்கு அதிபதியான கிரகத்தின் திசை நன்மையையே தரும் என்றும், யோக அதிபதிகளின் திசையும் ஜாதகருக்கு பரிபூர்ண யோகங்களை நல்கும் என்றும் கூறுகின்றனர், ஆனால் கடந்த சனி திசை ( லக்கினாதிபதி ) எனக்கு மிகப்பெரிய இன்னல்களையும் மீள முடியா துயரங்களையுமே பலனாக தந்தது, சனி திசையில் நான்பட்ட கஷ்டத்திற்கு ஓர் அளவில்லை எனலாம், இது எதனால், தற்போழுது நடைபெறும் புதன் திசையாவது எனக்கு நன்மைகளை தருமா ? 6,9க்கு உடையவன் இன்னல்களை தரக்கூடும் என்கின்றனர், எனது ஜாதகம் யோக ஜாதகமா?

பதில் :

ஒருவரது ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையை அறியாமலும், நவகிரகங்களின் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவகங்கள் ஜாதகருக்கு தரும் நன்மை தீமையை பற்றி அறியாமலும், பொது கருத்தாக , சுப கிரகங்களின் திசாபுத்தி நன்மையையும், அசுப கிரகங்களின் திசாபுத்தி இன்னல்களையும் தரும்  என்று பலன் கூறுவதும், ஜாதக கணிதம் அறியாமல் கூறும் தவறான அணுகுமுறையாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, மேலும் காலபுருஷ தத்துவத்திற்கு நவகிரகங்கள் பெரும் ஆட்சி,உச்சம்,நட்பு, சமம்,பகை,நீச்சம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு
ஆட்சி,உச்சம்,நட்பு, சமம் நிலையில் இருக்கும் கிரகம் மற்றும் கிரகத்தின் திசை யோகங்களை தரும் என்றும், பகை,நீச்சம் நிலையில் இருக்கும் கிரகம் மற்றும் கிரகத்தின் திசை அவயோகங்களை தரும் என்று பலன் கூறுவதும், ஜாதக கணிதம் அறியாமல் நவகிரகங்கள் தனது திசாபுத்தியில் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை மற்றும் யோகம் அவயோகம் பற்றிய புரிதல் இல்லாமலும் கூறும் பொது பலனாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது.

ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை பற்றி ஓர் தெளிவு இல்லை எனில் நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சரியான பலாபலன்கள் கூற இயலாது, மேலும் நடந்த,நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையை பற்றிய புரிதல் இல்லாத பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தனது கற்பனை மூலம் " ஜாதக பலன்களை " வாய் ஜாலம் மூலம் நிகழ்த்த இயலுமோ அன்றி, கூறும் பலாபலன்கள் ஜாதக வலிமையின் அடிப்படையிலானதாக அமைய சிறிதும் வாய்ப்பு இல்லை, இதை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது வாழ்க்கையின் முன்னேற்றங்களுக்கு உண்டான திட்டமிடுதல்களை நடைமுறை படுத்துவது, சம்பந்தபட்ட ஜாதகருக்கு மிகப்பெரிய சவால்களை வாரி வழங்கும், என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையிலேயே ஜாதகர் இயங்குகிறார், பாவக வலிமை தரும் யோக அவயோகங்களையே நவ கிரகங்களின் திசாபுத்தி காலத்தில் ஜாதகர் அனுபவிக்கின்றார், என்பதை கீழ்கண்ட அன்பரின் ஜாதகத்தின் மூலம் சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு, தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : விசாகம் 1ம் பாதம்

லக்கினாதிபதி திசை நன்மையையே செய்யும் என்றனர், கடுமையான இன்னல்களை தர காரணம் என்ன ?

 நவகிரகங்கள் சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையையே தனது திசாபுத்திகளில் காலங்களில் ஏற்று நடத்துகிறது, தனிப்பட்ட முறையிலான யோக அவயோகங்களை தர நவ கிரகங்களுக்கு வலிமை இல்லை என்பதை அடிப்படையில் புரிந்துகொள்வது நல்லது, மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினாதிபதியின் திசையான சனிதிசை, லக்கினாதிபதி என்பதால் ஜாதகருக்கு யோகங்களை தருவார் என்று ஜாதக பலனாக கூறப்பட்டு இருக்கின்றது, ஆனால் லக்கினாதிபதியான சனி திசை ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,7,8,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தனது திசை முழுவதும், பாதக ஸ்தானத்தால் 200% விகிதம் பாதிக்கப்பட்ட 1,7,8,10ம் வீடுகளின் பலனை ஏற்று நடத்தியிருக்கிறது, இதனால் ஜாதகர் சனி திசை முழுவதும் பாதக ஸ்தானம் தரும் கடுமையான இன்னல்களின் பிடியில் மாட்டிக்கொண்டு இன்னலுறும் சூழ்நிலையை தந்து இருக்கின்றது, லக்கினவழியில் இருந்து ஜாதகர் நல்ல வளரும் சூழ்நிலையில் இல்லாமல் தவிக்கும் தன்மையையும், உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த இன்னல்களில் துன்புறும் தன்மையையும், லக்கினாதிபதி திசை தந்து இருக்கின்றது, மேலும் ஜாதகரின் வளர்ச்சி சீரிய முறையில் இல்லாமல் பல தடைகளையும் தாமதங்களையும் சந்தித்து இருக்கின்றார், அடிப்படையில் கல்வி, உடல்நலம், வருமானம், தொழில், திருமணம் ஆகிய வழிகளில் ஜாதகர் அதிக இன்னல்களை சந்தித்து இருக்கின்றார்.

7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் சேர்க்கை இன்மை, கூட்டு முயற்சி தோல்வி, சமூகத்தில் போராட்டம், குறுகிய வட்டத்தில் ஜாதகர் இன்னலுறும் தன்மை என்ற வகையிலும், எதிர்பால் அமைப்பினரால் இன்னல்களையும் சந்திக்கும் நிலையை தந்து இருக்கின்றது, 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்புகள், மருத்துவ செலவினங்கள், வீண் தனவிரையம், உடல்நல கேடு, எதிர்பாராத செலவினங்கள், மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்களின் திடீர் இழப்பு என்ற வகையிலும், 10ம் பாவக வழியில் இருந்து வேலை தொழிலில் முன்னேற்றம் இன்மை, ஜீவன ரீதியான கடுமையான  இன்னல்கள், போராட்டம், தன்னம்பிக்கை பாதிக்கும் விதமான செயல்பாடுகள், தெளிவில்லாத வாழ்க்கை முறை, சுய முன்னேற்றத்தில் அக்கறை இன்மை, தகுதிக்கு உகந்த செயல்களை செய்யாமல், பொழுது போக்கு அம்சங்களில் அதீத ஆர்வம் மற்றும் ஈடுபாடு ஜாதகரின் வாழ்க்கையை கடுமையாக பதித்து இருக்கின்றது, கடந்த லக்கினாதிபதியின் திசையான சனி திசையில்.

எனவே ஜாதகருக்கு நடைபெற்ற திசை லக்கினாதிபதியின் (சனி ) திசை என்றாலும், அவர் ஏற்று நடத்தியது 1,7,8,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக பலன் என்பதனால் ஜாதகர் 1,7,8,10ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை சனி திசையில் அனுபவிக்கும் நிலையை தந்தது, எனவே சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பலன் கூற வேண்டும், அதுவே ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு சிறந்த வழி காட்டுதல்களாக அமையும், மாறாக லக்கினாதிபதி திசை, யோகாதிபதி திசை, ராசியாதிபதி திசை, சுப கிரகத்தின் திசை என்பதால் நன்மையை செய்யும் என்று கூறுவது முற்றிலும் பாவக வலிமையை பற்றிய தெளிவு இல்லாமல் கூறும் வார்த்தைகளாகவே அமையும், தங்களுக்கு கடந்த சனி திசை ( லக்கினாதிபதி திசை என்ற போதிலும் ) அவர் ஏற்று நடத்தியது பாதக ஸ்தான பலன் என்பதால் தாங்கள் 1,7,8,10ம் பாவக வழியிலான கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது என்பதே முற்றிலும் உண்மை அன்பரே !

நடைபெறும் புதன் திசை நன்மையை தருமா ?

நிச்சயமாக மிகுந்த யோக பலன்களை வாரி வழங்கும், ஏனெனில் நடைபெறும் புதன் தசை தங்களுக்கு 6,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விபரீத ராஜயோகத்தை வாரி வழங்குகிறது, குறிப்பாக தொழில் ரீதியான வெற்றிகள் மிதமிஞ்சிய அளவில் இந்த புதன் திசை தங்களுக்கு தரும், சொந்த முயற்சியில் வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம், சொத்து சுக சேர்க்கை, திடீர் அதிஷ்டம் என புதன் திசை தங்களுக்கு சிறந்த நன்மைகளை 100% விகிதம் தர காத்துகொண்டு இருக்கின்றது, 6,9க்கு அதிபதி என்ற போதிலும் அவர் ஏற்று நடத்துவது வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலன் என்பதால் மிகுந்த யோகமும், நன்மையையும் ஜீவன ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், "வாழ்த்துக்கள்"

எனது ஜாதகம் யோக ஜாதகமா ?

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகளை தாங்கள் உணர்ந்து செயல்படுவது அவசியமாகிறது, அடிப்படையில் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு வரும் சிறப்பான யோகங்களை தாங்களே உதறித்தள்ளும் தள்ளும் சூழ்நிலையை தரும், மேலும் போதிய விழிப்புணர்வு இன்றி வாழ்க்கையில் வரும் நன்மைகளை  தாங்கள் தட்டி கழிக்க கூடும், எனவே முறையான ஜாதக ஆலோசனை தங்களுக்கு சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை அனுபவிக்க வழிவகுக்கும், முறையான பீரிதி பரிகாரங்கள், தங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும், வாரி வழங்கும். முறையான ஜாதக ஆலோசனை தங்களுக்கு அவசியம் தேவை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 4 பிப்ரவரி, 2017

நல்ல வேலை, திருமணம் எப்பொழுது அமையும்? சந்திரன் திசை எப்படி இருக்கும்?


 கேள்வி :
இதுவரை எனக்கு நல்ல வேலை அமையவில்லை, அரசு பணியாளர் தேர்வுகள் நிறைய எழுதிவிட்டேன் ஒரு வாய்ப்பும் கிட்டவில்லை, இதனால் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன், எனக்கு அரசு துறையில் பணி அமையுமா? திருமணம் எப்பொழுது அமையும்? எதிர்காலம் நன்றாக இருக்குமா?

பதில் :

 ஒருவரது வாழ்க்கையை சிறப்பாக நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே என்றால் அது மிகையில்லை, உதாரணமாக ஒருவரது ஜாதகத்தில் கோணங்கள் என்று அழைக்கப்படும் 1,5,9ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின், குணம், அறிவு, கல்வி, உதவி, சமூக அந்தஸ்து, உடல் வலிமை, மன வலிமை, தீர்க்கமான முடிவு, சரியான விஷயத்தை தேர்வு செய்து வெற்றி பெறுதல் என்ற வகையிலும், கேந்திரம் என்று அழைக்கப்படும் 2,4,6,7,8,10,12ம் வீடுகள் வலிமை பெறுவது, வருமானம், தானம்,குடும்பம், சொத்து சுகம், வண்டி வாகனம், எதிரிகளை வெல்லுதல், அனைத்திலும் தேர்ச்சி, களத்திர யோகம், கூட்டு முயற்சி, நபர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு, திடீர் அதிர்ஷ்டம், நீண்ட ஆயுள், சுய கவுரவம், அந்தஸ்த்து, ஜீவன முன்னேற்றம், மன நிம்மதி, நல்ல உறக்கம், திடீர் எனவரும் மிக பெரிய சொத்துக்கள், திருப்திகரமான யோக வாழ்க்கை என்ற வகையிலும், சம பாவகங்களான 3,11ம் வீடுகள் வலிமை பெறுவது, ஜாதகரின் வெற்றி, சொல்வாக்கு, லட்சியம் வெற்றி பெறுதல், நினைத்ததை சாதிக்கும் வல்லமை, செல்வ செழிப்பு , மற்றும் திடீர் அதிர்ஷ்டம், முற்போக்கு சிந்தனை, அதிர்ஷ்டத்தின் பரிபூர்ணத்துவம் முழுவதையும் ஜாதகர் அனுபவிக்கும் வல்லமை, வாழ்க்கையில் ஜாதகர் பெரும் நன்மை மற்றும் சுப யோகங்கள் என்ற வகையில் சிறப்புகளை தரும், எனவே ஒருவரது சுய ஜாதகத்தில் பாவகங்கள் பெரும் வலிமையின் அடிப்படையிலேயே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யோக, அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வருகின்றது என்பதால் சுய ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு பலன் காண்பதே சிறப்பான எதிர்காலத்தை அமைத்து  தரும்.


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 1ம் பாதம்

நல்ல வேலை எப்பொழுது அமையும் ?

எதிர்வரும் செவ்வாய் திசையில் அமைய வாய்ப்பு உள்ளது ஏனெனில் எதிர்வரும் செவ்வாய் திசை தங்களுக்கு 4,8ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதால், திடீரென நல்ல வேலை அமையும், ஆனால் அது அரசு பணியாக இருக்க வாய்ப்பு இல்லை, வண்டி வாகனம்  அல்லது இன்சூரன்ஸ் துறையில் பணியாற்ற வாய்ப்பு உள்ளது, அதுவரை தங்களுக்கு உண்டான ஒரு சிறு வேலை வாய்ப்பை தேடிக்கொள்வது நல்லது.

திருமணம் எப்பொழுது அமையும் ?

சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர வீடுகள் முறையே ஆயுள் பாவகம் மற்றும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது, மிக மிக தாமதமான திருமண வாழ்க்கையை தரும், குறிப்பாக சந்திரன் திசையில் நடைபெற சிறிதும் வாய்ப்பு இல்லை, சந்திரன் திசையில் திருமணத்திற்க்காக எடுக்கும் முயற்சிகள் பெரும் பின்னடைவை தரும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நலம் தரும், மேலும் காதல் வயப்படுவது தங்களை, மரணத்தின் விளிம்பிர்க்கே அழைத்து செல்லும், திருமணத்திற்கும் தங்களுக்கு செவ்வாய் திசை செவ்வாய் புத்தியே உகந்ததாக அமையும்.

நடைபெறும் சந்திரன் திசை எப்படி இருக்கும் ?

தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை ( 05/12/2011 முதல் 05/12/2021 வரை ) தங்களுக்கு 7ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தந்துகொண்டு இருப்பது வருந்தத்தக்க விஷயமாகும், இதனால் தங்களின் நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் எதிர்பால் இன அமைப்பினரால் கடுமையான நெருக்கடிகளை சந்திப்பீர்கள், தேவையற்ற அவ பெயரால் மன நிம்மதி கடுமையாக பாதிக்கப்படும், தங்களது மனவலிமைக்கு  பலவிதமான சவால்களை வாரி வழங்கும் திசையாக சந்திரன்  அமைவது வருந்தத்தக்க விஷயமே, எனவே சந்திரன் திசை முழுவதும் தங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிக கவனமுடன் எடுத்து வைப்பது அவசியமாகிறது, குறிப்பாக, சந்திரன் திசை தங்களுக்கு மிகுந்த இன்னல்களையும், துன்பங்களையும் களத்திர ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், இதில் இருந்து விடுபட முறையான பிரீத்தி பரிகாரங்களை மேற்கொள்வது சாலச்சிறந்தது, இதனால் சந்திரன் திசையில் இருந்து வரும் இன்னல்கள் தங்களுக்கு குறைய வாய்ப்பு உள்ளது.

எதிர்காலம் நன்றாக இருக்குமா?

சந்திரன் திசை முழுவதும் பாதக ஸ்தான பலன்களே நடைமுறைக்கு வருவதால் தங்களுக்கு யாதொரு நன்மையையும் நடைபெற வாய்ப்பு இல்லை, ஆனால் எதிர்வரும் செவ்வாய் திசை தங்களுக்கு 4,8ம் வீடுகள் வலிமை  பெற்று ஜீவன ஸ்தான வழியில் இருந்து யோக வாழ்க்கையை வாரி வழங்குவது செவ்வாய் திசை முழுவதும் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

குறிப்பு :

ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து சம்பந்தப்பட்ட ஜாதகர் 200% விகித இன்னலைகளை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும் குறிப்பாக, நடைமுறையில் உள்ள திசாபுத்தி அல்லது எதிர்வரும் திசாபுத்தி பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் கதி அதோகதிதான், ஏனெனில் பாதக ஸ்தானம் தரும் பாதிப்பில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகரால் எதிர்கொள்ளவே இயலாது.

 மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,3,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது லக்கின வழியில் இருந்து உடல்நலம், மனநலம் மற்றும் வளரும் சூழ்நிலையில் இருந்து வரும் இன்னல்களை அதிக அளவில் தரும், 3ம் பாவக வழியில் இருந்து முயற்சிகளில் தோல்வி, முயற்சி இன்மை, வீரியமிக்க செயல்திறன் இன்றி அதிக அளவிலான கவன குறைவு, சரியான தொடர்புகள் இன்றி வாழ்க்கையில் அனைவராலும் இன்னல்களை சந்தித்தால், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளி இல்லாமல் தவறான பாதையில் பயணிக்கும் நிலை, எதிர்ப்பால் அமைப்பினரால் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலை, கூட்டு முயற்சி தோல்வி, தாமத திருமணம் மூலம் இன்னல்கள், 9ம் பாவக வழியில் இருந்து பித்ருக்கள் ஆசியின்மை, யாருடைய உதவியையும் பெற இயலாமல் இன்னலுறும் தன்மை, காரியங்களில் தடை, ஜீவன முன்னேற்றம் இன்மை, அதிக அளவிலான எதிர்ப்புகளை சந்திக்கும் சூழ்நிலை, திருப்தி அற்ற வாழ்க்கை என்ற வகையில் கடுமையான இன்னல்களை பாதக ஸ்தான வழியில் இருந்து வழங்கும், மேலும் தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான இன்னல்களையும், அவயோகங்களையும் தரும் என்பதால் ஜாதகர் தகுந்த பீரிதி பரிகாரங்களை மேற்கொள்வது நன்மையை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

சனிமஹா திசை சுபத்தை தருமா ? அசுபத்தை தருமா ? சுய ஜாதக வலிமை நிலை என்ன ?


கேள்வி :

எனக்கு சனிதிசை சுபத்தை தருமா? அசுபத்தை தருமா?  கிரக பரிவர்த்தனை யோகம் சிறப்பா? தெளிவுபடுத்துங்கள்.

பதில் :

ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும், மேலும் நடைபெறும் திசை அல்லது எதிர்வரும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து யோக பலன்கள் நடைமுறைக்கு வரும், மேற்கண்ட ஜாதகரின் கேள்விகளுக்கான பதில்களை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்!


சுய ஜாதக வலிமை நிலை :

1,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற அமைப்பாகும், மேலும் ஜாதகர் 1,5,9,11ம் பாவக  வழியில் இருந்து சிறப்பான யோக பலன்களை அனுபவிப்பர்.

2,6,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2,6,8ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும்.

4,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 4,10,12ம் பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களை வாரி வழங்கும்.

3,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 3,7ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை பெரிய அளவில் தரும்.

சனி மஹாதிசை தரும் பலன்கள் : ( 14/01/2017 முதல் 14/01/2036 வரை )

தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை ஜாதகருக்கு 2,6,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஆயுள் பாவக பலனை  ஏற்று நடத்துவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து வருமானம்,குடும்பம்,தனம் சார்ந்த இன்னல்களை தரும், மேலும் எதிர்பாராத செலவினங்கள், திடீர் விரையம் என ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், கடன் பெறுவது கொடுப்பது இன்னல்களை தரும், எதிரிகளால் அதிக தொந்தரவு, உடல் நல குறைவை ஏற்படுத்தும், வயிறு சார்ந்த தொந்தரவுகள் அதிகரிக்கும், விபத்து, திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, இருப்பினும் ஜாதகருக்கு பூர்ண ஆயுள் உண்டு, அவசரப்பட்டு செய்யும் காரியங்கள் யாவும் ஜாதகருக்கு எதிர்பாராத இன்னலைகளை கடுமையாக தரும், என்பதால் சனிமகா திசை தங்களுக்கு அவயோகத்தையே தருகிறது.

கிரக பரிவர்த்தனை யோகம் :

பெரும்பாலும் கிரக பரிவர்த்தனை மிகுந்த நன்மைகளை தரும் என்பது பொது கருத்து, கிரகங்கள் பரிவர்த்தனை பெறுவது மட்டும் ஜாதகருக்கு சுபயோகங்களை வழங்கிவிட வாய்ப்பு இல்லை, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையிழந்து காணப்பட்டால், எவ்வித பரிவர்த்தனை யோகமும் ஜாதகருக்கு சுபயோகங்களை வழங்குவதில்லை, உதாரணமா மேற்கண்ட ஜாதகருக்கு செவ்வாய் வீடான மேஷத்தில் சுக்கிரனும் ( மேஷத்தில் உள்ள 7ம் பாவகத்தில் சுக்கிரனும் ) சுக்கிரன் வீடான ரிஷபத்தில் செவ்வாயும் ( ரிஷபத்தில் உள்ள 8ம் பாவகத்தில் செவ்வாயும் ) அமர்ந்து இருப்பது யோக பலன்களை வழங்கும் என்பது முற்றிலும் தவறான கருத்து, இருப்பினும் தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலத்தில் சுக்கிரன் செவ்வாய் இருவரும் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு நன்மைகளை தரும், ஆனால் இதைமட்டும் கருத்தில் கொண்டு பரிவர்த்தனை யோகம் நன்மையை தரும் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, பாதக ஸ்தானம் ஏறிய சுக்கிரன் ( களத்திர ஸ்தானம் ) ஜாதகருக்கு மேற்கண்ட பாதக ஸ்தான பலனையும் தரக்கூடும்.

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்பு இருந்த போதிலும், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்றுநடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகளும் யோகங்களும் நடைமுறைக்கு வரும், மாறாக பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்களே நடைமுறைக்கு வரும்.

எந்த ஒரு ஜாதகத்திலும், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம்  பெற்ற பாவக வழியில் இருந்து மிகுந்த இன்னல்களையும் அவயோகங்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் ஜாதகருக்கு பாதக ஸ்தான தொடர்பு பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளையும், துன்பங்களையும் வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக பலனை, திசாபுத்திகள் ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகருக்கு பாதக ஸ்தானம் சார்ந்த இன்னல்கள் ஏதும் நடைமுறைக்கு வாராது.

குறிப்பு :

ஜாதகருக்கு சனி திசை கடுமையான பாதிப்பை தரும் நிலையில் இருப்பதால், முறையான ப்ரீத்தி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுக, மேலும் அன்னதானம் செய்வது சகல நன்மைகளையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696