செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

சுக்கிர திசை தரும் நன்மை தீமை பலன்கள் !




பொதுவாக பல ஜோதிடர்கள் சுக்கிர திசை ஒருவருடைய ஜாதகத்தில் வந்தால் மிகுந்த யோகம் என்று மிகை படுத்தி கூறுவது உண்டு  , மேலும் சுக்கிர திசை நடக்கும் காலங்களில் ஜாதகர் அளவில்லா செல்வ வளங்களையும் , பொன் பொருள் சேர்க்கையும் , மாட மாளிகையையும் , கூட கோபுரங்களையும் பெறுவார் என்று அளவுக்கு மீறி  கதை அளப்பதும் உண்டு , மேலும் சுக்கிர திசை ஒருவருக்கு நடந்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளையும் பெண்கள் வழியில் இருந்து ஆதரவும் கிடைக்கும் என்றும் , வண்டிவாகன யோகம் ஏற்ப்படும் என்றும் , திருமண வாழ்க்கை இனிதே அமையும் என்றும் சொல்பவர்களும் உண்டு .

மேலும் ஒருவருடைய வாழ்க்கையில் குரு திசை , சுக்கிர திசை , சந்திர திசை , புதன் திசை அமைப்புகள் யோக பலன்களையும் , சூரியன் , செவ்வாய்சனி , ராகு , கேது திசை அமைப்புகள் அவயோக பலனையும் தரும் என்று நிர்ணயம் செய்கின்றனர் இதில் எது உண்மை , எது உண்மைக்கு மாறானது என்று இந்த பதிவில் காண்போம்.

மேற்கண்ட ஜாதக அமைப்பில் ஜாதகருக்கு கும்ப லக்கினம் , லக்கினத்திற்கு யோக அதிபதி என்று வர்ணிக்கும் சுக்கிர பகவானின் திசை ஜாதகருக்கு ( 17 /03 /1990 முதல் 17 /03 /2010 ) வரை நடை பெற்றது , மேலும் இந்த சுக்கிரன் திசை சந்திரன் புத்தியில் ஜாதகருக்கு திருமணம் அமைந்தது , ( விருப்ப மனம் ) சுக்கிரன் திசை குரு புத்தியில் ஆண் வாரி ஜாதகருக்கு கிடைத்தது , சுக்கிர திசை சனி புத்தியில் தம்பதியர் பிரிவி , இப்பொழுது வழக்கு நீதிமன்றாத்தில் நிலுவையில் உள்ளது , ஜாதகரின் மன நிம்மதி அறவே இல்லாமால் தவித்துக்கொண்டு இருக்கிறார், தன்மீது எவ்வித தவறும் இல்லாத நிலையில் ஜாதகரின் வாழ்க்கை கேள்வி குறியாக மாறி நிற்கிறது .

இந்த நிலையில் ஜாதகருக்கு சுக்கிர திசை எவ்வித நன்மையையும் தரவில்லை ( சுக்கிரன் யோக அதிபதியாக இருந்தும் கூட ) ஜாதகருக்கு ஏன் இந்த நிலை ?

பொதுவாக ஒருவருக்கு நடக்கும் திசை என்னவாக இருந்தாலும் , அது சுய ஜாதக அமைப்பில் எந்த வீடுகளின் பலனை  பெற்று நடத்துகின்றது என்பதை தெரிந்தால் மட்டுமே , ஜாதகருக்கு குறிப்பிட்ட திசை நன்மையை செய்கிறதா ? தீமையை செய்கிறதா ? என்று நிர்ணயம் செய்ய இயலும் , மேற்கண்ட ஜாதக அமைப்பில் சுக்கிரன் தனது திசை முழுவதும் 6 ,9 ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை நடத்தி இருப்பதே இதற்க்கு காரணம் , மேலும் ஜாதகருக்கு  திருமணம் நடை பெரும்பொழுது நடந்த  சந்திரன் புத்தியும் 6 ,9 ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை செய்யும்பொழுது நடந்ததால், தனக்கு பொருத்தமற்ற வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க காரணமாக அமைந்தது ,
(
ஜாதகருக்கு குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் நல்ல நிலையில் இருந்தும் கூட இந்த நிலை )

அதற்க்கு பிறகு குரு புத்தியில் ஆண் வாரிசு , ஜாதகருக்கு குரு புத்தியும் 12 ம் பாவகம் 12 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலன் நடத்தியது , இதனால் ஜாதகருக்கு குழந்தை பிறந்த நாள் முதற்கொண்டு மன நிம்மதி போனது , சனி புத்தியில் தம்பதியர் பிரிவு சுய ஜாதகத்தில் சனி புத்தி நன்மையை செய்தாலும் சனி புத்தி காலகட்டத்தில் கோட்சார அமைப்பு நல்ல நிலையில் இல்லாத காரணத்தால் குடும்ப வாழ்க்கையில் ஜாதாகருக்கு பிரிவு ஏற்ப்பட்டது , இதற்க்கு பிறகு நடந்த காலகட்டங்களில் ஜாதகர் கோர்ட்டு கேசு என்று அலைந்து திரிந்து , மன நிம்மதி இழப்பையும் , பொருளாதார இழப்புகளையும் சந்திக்க வேண்டி வந்தது .

சரியான வயதில் ( அதாவது இளம் வயதில் ) வந்த சுக்கிரன் திசை ஜாதகரை படுத்தி எடுத்து விட்டது , இதில் இருந்து நாம் உணர்வது என்ன வென்றால் , ஒருவருடைய ஜாதகத்தில் நடக்கும் திசை பலனை நிர்ணயம் செய்வதில்லை , அது சம்பந்தம் பெரும் பாவக அமைப்பே நன்மை தீமையை பலனை நிர்ணயம் செய்கிறது என்பதே உண்மை , இதே ஜாதகருக்கு சுக்கிர திசைக்கு பிறகு தற்பொழுது நடக்கும் சூரிய திசை மிகுந்த நன்மையை வாரி வழங்கி கொண்டு இருக்கிறது ஏனெனில் சூரியன் திசை 2,5,8,11 ம் வீடுகள் 11 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலனை நடத்துவதே இதற்க்கு காரணம் .

எனவே சுபகிரகங்களின் திசை அனைத்தும் நன்மை செய்யும் என்று கணிதம் செய்வதும் , அசுபகிரகங்களின் திசை அனைத்தும் தீமை செய்யும் என்றும் கணிதம் செய்வது , குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் அமைப்பிற்கு ஒப்பானது , ஒருவருடைய ஜாதக அமைப்பில் நடக்கும் எந்த திசை என்றாலும் அவை எந்த பாவக பலனை செய்கிறது என்று தெளிவாக தெரிந்துகொண்டு பலன் சொல்வதே ஜோதிட ஆலோசனை பெற வரும் அன்பர்களுக்கு அதிக நன்மை தரும் , இதற்க்கு மாறாக உங்களுக்கு சுக்கிரதிசை ஆரம்பித்து விட்டது இனியெல்லாம் யோகமே என்று மேற்க்கண்டவரிடம் சொல்லி புதிதாக முதலீடு செய்து தொழில் துவங்குங்கள் என்று சொல்லியிருந்தால் , ஜாதகரின் நிலையை சற்றே நினைத்து பாருங்கள் என்னவாகி  
இருக்கும் என்று ? தான் செய்வதெல்லாம் சரி என்று ஜாதகர்  நினைத்து கொண்டு அனைத்தையும் இழக்கும் சூழ்நிலையே ஏற்ப்படும் .

ஜாதகத்தில் பலன் நிர்ணயம் செய்யும்பொழுது அதிக கவனத்துடன் , நாடி வந்தவருக்கு சரியான ஜோதிட பலனையே சொல்ல வேண்டும் , இதுவே ஜோதிட தர்மம் . இல்லை எனில் தவறான பலன் சொல்லியதற்கு உண்டான பாவவினை பதிவின்  பலனைஜோதிடர்கள் அனுபவிக்க வேண்டிவரும் .வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

      

5 கருத்துகள்:

  1. ayya naan meena raasi matrum utthirattathhi natchatthiram 3 paatham .ayya yenakku tharpozhuthu kethu thasaiyil sani putthiyum matrum yenathu raasippadi astama saniyum nadakkirathu . ayya naan vaivittu solla mudiyaatha thunbangalaiyum , thuyarangalaiyum anubavitthu varukiren , itharkku yethaavathu parikaaram undaaa. avaludan kaathirukkiren

    பதிலளிநீக்கு
  2. ayya naan kumbha rasi kumbha kumbha lagnam 2-sukaran uchham epothu guru dhasai sani bhuthi nadanthukondu irukirarathu enku nala vaelai kidaikuma marriage epo nadakum.entha rasi lagnam nala irukum marriage pnrathuku.

    பதிலளிநீக்கு
  3. kadaga rasi, rishabha lagnam, poosam star.

    Sukra dasa sukra bukthi, starting from December 8th 2020. Positive or negative?

    பதிலளிநீக்கு