சனி, 29 நவம்பர், 2014

ஆதார் அடையாள அட்டையும், சுய ஜாதகத்தில் பாவகத்தின் தன்மைகளும் !


ஆதார் அடையாள அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். இந்த அட்டையில் கண்ணின் விழித்திரை, கைரேகை போன்ற உயிரியளவுகளும், இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும். பிற அடையாள அட்டைகளிளுருந்து முற்றிலும் தனிப்பட்டதாக வடிவைக்கப் பட்டுள்ளது. இந்திய அரசால் 12 இலக்க எண் பொறித்த அட்டையாக வழங்கப்படும்.

சுய ஜாதகம் என்பது 12பாவகங்களுடன்12 இலக்க எண் பொறித்த அட்டையை போல் தனிப்பட்ட வலிமையுடன் ) இறை அருளால், ஒவ்வொருவரும் தாம் செய்த வினை பதிவிற்கு ஏற்றார் போல் 12 பாவக அமைப்பில் இருந்து பாவக வலிமை மற்றும் சிறப்பு தன்மை என்ற அடிப்படையில் வழங்கபடுகிறது, எப்படி ஒரு நபருக்கு ஆதார் அடையாள அட்டையில் உள்ள விபரங்கள் மற்ற ஒருவருக்கு ஒத்து போகாதோ, அதை போன்றே ஒருவரின் ஜாதகத்தில் உள்ள பாவகத்தின் தன்மை மற்ற ஒருவருக்கு ஒத்து போகாது, ஆதார் அடையாள அட்டையில் உள்ள பொதுவான விஷயங்களான கண்ணின் விழித்திரை, கைரேகை,பெயர், முகவரி, பிற சுய குறிப்புகள்,புள்ளி விவரங்கள் ஆகியவை அனைவருக்கும் பொதுவாக இருப்பது போல், நவகிரகங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே விதமான அமைப்புடன், தனது ஜீவ சக்தியை வழங்குகிறது, மேற்கண்ட குறிப்புகளான கண்ணின் விழித்திரை, கைரேகை,பெயர், முகவரி, பிற சுய குறிப்புகள்,புள்ளி விவரங்கள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசம் பெறுவது போல், சுய ஜாதகத்தில் 12 பாவகங்களும் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலை என்ற அமைப்பில் வித்தியாசபடுகிறது. எனவே நவகிரகங்கள் பூமியில் ஜெனனம் செய்யத மனிதர்கள் அனைவருக்கும், ஒரே மாதிரியான ஜீவ காந்த சக்தியையே தருகிறது, மனிதர்களின் சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்கள் தனது கொள்ளளவுக்கு ஏற்றவகையில் கிரகங்களின் ஜீவசக்தியை பெற்று ஒரு ஜாதகருக்கு தனது பாவக வழியில் இருந்து யோக பலன்களையோ, அவயோக பலன்களையோ வாரி வழங்குகிறது.

அன்பர்களே மேற்கண்ட உதாரணம் எதற்காக என்பதை தங்களுக்கு ஜோதிடதீபம் விளக்கம் தர கடமைபட்டுள்ளது, மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவர்களது சுய ஜாதக வலிமைக்கு ஏற்றார் போலவே வாழ்க்கையில் பலாபலன்கள் நடைபெறுகிறது என்பதை தெளிவு படுத்தவே, ஒரு வேலை தாங்கள் ஒரே மாதிரியான ஜாதகம் எம்மிடம் உள்ளது என்றால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள், அப்படி பட்ட ஜாதகங்கள் பாவக அமைப்பில் எப்படி தனித்துவம் பெறுகிறது என்பதை ஜோதிடதீபம் தங்களுக்கு உண்மையான விளக்கத்தை தர கடமைபட்டுள்ளது, ஒருவரின் ஜாதகத்திற்கு ஜோதிட ரீதியாக கணிதம் கொண்டு பலன் காண முற்படும் பொழுது, அவர்களது ஜாதகத்தில் பாவகத்தின் தன்மை அறிந்து ஜாதக பலன்களை கூறுவதே மிக துல்லியமாக இருக்கும், ஏனெனில் ஒட்டி பிறந்த இரடையர்கள் ( சில வினாடிகள் வித்தியாசத்தில் ) ஜாதகத்தில் கூட பாவகங்களின் தன்மை வித்தியாசம் பெறுகிறது என்பதை, அந்த ஜாதகத்தில் பாவக வலிமையை ஜோதிட கணிதம் கொண்டு நிர்ணயம் செய்யும் பொழுது நமக்கு மிக தெள்ள தெளிவாக புரியும்.

நவகிரகங்கள் மனித ஜீவன்களுக்கு தரும் ஜீவகாந்த சக்தி என்பது பொதுவானது, ஆனால் ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை என்பது ஒவ்வொருவருக்கும்  நிச்சயம் வித்தியாசம் பெரும் என்பதை எவராலும் மறுக்க இயலாது, உண்மையும் அதுதான், பொதுவாக ஒருவரின் ஜாதகத்தை காணும் ஜோதிடர்கள், இதற்க்கு முன் வாழ்ந்த ஜாதகர்களுக்கு ஒப்பிட்டு பலன் சொல்வதுண்டு, இது உண்மைக்கு புறம்பானது ஏனெனில் ஒருவரது ஜாதகத்தில் உள்ளதுபோல் நவகிரகங்கள் அமர்ந்து இருக்கலாம், ஆனால் பாவக வலிமை என்பது நிச்சயம் ஒருவருக்கு இருப்பதை போல் மற்றவருக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதே முற்றிலும் உண்மை, பாவக வலிமை என்பது இறையருள் அவருக்கு கொடுக்கும் தனிப்பட்ட அடையாளமாகவே ( ஆதார் அடையாள அட்டையை போல் ) இருக்கும் என்பதை ஜோதிடதீபம் இந்த இடத்தில் ஆணித்தரமாக வலியுறுத்துகிறது, இதற்க்கு தங்களின் விமர்சனங்கள் வரவேற்க படுகிறது, ஒருவரது ஜாதகத்தை போல் மற்றொருவருடைய ஜாதகத்தை தாங்கள் ஜோதிட தீபத்திற்கு காட்டி விளக்கம் தந்து நிருபித்து விட்டால் அவர்களுக்கு ஜோதிடதீபம் 5000/- ரூபாய் பரிசாக தருகிறது என்று உறுதி அளிக்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


வியாழன், 27 நவம்பர், 2014

வாழ்க்கை துணை மூலம் ஒரு ஜாதகருக்கு யோக வாழ்க்கையா ? அவயோக வாழ்க்கையா ? என்பதை நிர்ணயம் செய்வது எப்படி ?


ஒருவரின் சுய ஜாதகத்தை வைத்து தனக்கு வரும் வாழ்க்கை துணை வழியில் இருந்து யோகத்தை அனுபவிப்பாரா ? அல்லது அவயோக வாழ்க்கையை அனுபவிக்கும் சூழ்நிலையை தருமா ? என்ற எதிர்பார்ப்பு திருமணம் ஆகாத அன்பர்களுக்கு நிச்சயம் இருக்கும், இந்த விஷயத்தை சம்பந்தபட்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில் இருந்தே மிக தெளிவாக நாம் தெரிந்துகொள்ள இயலும், சில அன்பர்கள் திருமண வாழ்க்கைக்கு முன்பு வரை சாதராரண வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருந்தவர்களுக்கு, திருமணம் நடந்தவுடன் குறுகிய காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறுகின்றனர், சில அன்பர்கள் திருமண வாழ்க்கைக்கு முன்பு வரை நல்ல நிலையில் இருந்தவர்கள், திருமணத்திற்கு பிறகு மிகப்பெரிய இழப்புகளை சந்தித்து வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து கொண்டு போராட்ட வாழ்க்கையை மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஆக ஒருவரின் வாழ்க்கையில் திருமணதிற்கு பிறகு யோக வாழ்க்கையோ அல்லது அவயோக வாழ்க்கையோ சுய ஜாதக ரீதியாக அனுபவிக்கும் தன்மையை தருகிறது என்பதை மறுக்க இயலாது, நமது கிராமங்களில் ஒரு இடத்தில் பெண் எடுத்து திருமணம் செய்யது வந்த பிறகு சம்பந்தபட்டவர்களின் குடும்பம் நல்ல முன்னேற்றத்தை காணும் பொழுது, அருகில் உள்ள மக்கள் அல்லது உறவினர் குறிப்பிட்ட பெண்ணை பார்த்து, மகராசி வந்தவுடன் இந்த குடும்பம் செழித்து நலம் பெற்றதாக வாழ்த்துவார்கள், இதற்க்கு நேர்மாறாக நடைபெற்றால் அந்த பெண்ணை வசைபாடுபவர்களும் உண்டு, உண்மையில் இது பெண்களுக்கு மட்டும் பொருந்தாதது, ஆண்களுக்கும் பொருந்தும் என்பதை மறந்து விடுகின்றனர், இதை ஒரு உதாரணா ஜாதகம் கொண்டு காண்போம் அன்பர்களே !



இந்த ஜாதகர் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்தார், ( பெரியோர்களால் நிச்சயம் செய்த பிறகு ) இடையில் சிறு பிரச்சனையின் காரணமாக திருமணம் பாதியில் நின்றது, இருப்பினும் அந்த பெண்ணும் இவரும் தொடர்ந்து காதலித்து வந்தனர், இந்த விஷயம் பெண் வீட்டாருக்கு தெரிந்து பிரச்சனை ஆரம்பித்தது, அந்த பெண்ணின் கல்வி தடை பெற்றது, காதலர்கள் இருவரும் சந்திக்க இயலாத சூழ்நிலை வந்தது, இதற்க்கு பிறகு நடந்த விஷயம் தான் ஜாதகரையும், அந்த பெண்ணின் குடும்பத்தையும் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கியது, காதலர்களுக்கு பிரிவு ஏற்ப்பட்ட 5மாத இடைவெளியில் அந்த பெண் வேற்று மதத்தை சார்ந்த ஒரு நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டு ஊரை விட்டே வெளியூருக்கு சென்று விட்டார், இந்த அவமானத்தையும், அதிர்ச்சியையும் அந்த பெண்ணின் குடும்பத்தார் தாங்க இயலாத சூழ்நிலையை தந்துவிட்டது, ஜாதகருக்கு கிட்டதட்ட தற்கொலை செய்து கொள்ளும் நிலை வரை சென்று, உறவினர்களால் காப்பாற்றபட்டு உடல்நலம் பெற்றார் , ஆனால் மனதளவில் இன்னும் கடுமையாக பாதிக்கபட்டே இருக்கிறார் என்பது வருத்தத்திற்கு உரியது, இனி அவரது ஜாதகத்தை ஆய்வுக்கு  எடுத்துகொள்வோம் அன்பர்களே!

பொதுவாக ஒருவரின் சுய ஜாதகத்தில் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து  பெரும் யோக வாழ்க்கையை குறிப்பிடும் பாவகம் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகம் என்றால் அது மிகையில்லை ஏனெனில் 7ம் வீட்டிற்கு இரண்டாம் பாவகம் 8ம் வீடாகும், ஒரு ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் ( 7ம் வீடு )  இருந்து குடும்ப வாழ்க்கையில் ( 8ம் வீடு ) பெரும் யோக அவயோக பலன்களை குறிப்பிடுவதால், திருமண வாழ்க்கையில் வாழ்க்கை துணை வழியில் இருந்து யோகங்களை பெற ஒருவரின் சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் மிக மிக வலிமையாக இருப்பது அவசியம் என்பதால், திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது விபரம் அறிந்த ஜோதிடர்கள் வரன் வது இருவரின் ஜாதகத்தில் ஆயுள் பாவகத்தின் தன்மையை ஆய்வு செய்து, ஆயுள் பாவகத்திர்க்கு முக்கியதுவம் தந்து பொருத்தம் நிர்ணயம் செய்வார்கள், எனவே வாழ்க்கை துணை வழியில் இருந்து ஒருவர் யோகங்களை அனுபவிக்க ஆயுள் பாவகம் வலிமை பெறுவது அவசியம்.

இந்த ஜாதகரின் சுய ஜாதகத்தில் 8ம் வீடு, ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று 100% பாதிப்பை பெறுகிறது, இந்த ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடாக வருவதால், ஜாதகருக்கு பூரண ஆயுளை தந்த போதிலும், தனது அறிவை கொண்டு வெற்றிபெறும் யோகத்தை தடுத்து நிறுத்தியது, குல தெய்வத்தின் அருளாசியை பெற இயலாமல், குல தெய்வ சாபத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தந்தது, அடிப்படையில் இந்த ஜாதகருக்கு 8ம் பாவகம் பாதிக்க பட்டு ஸ்திரமான இன்னல்களை தருகிறது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியான விருச்சிகம் ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமைந்து 3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிக கடுமையான பாதிப்பை பெற்று இருக்கிறது, ஆக இவரது ஜாதகத்தில் சுய இலக்கின அடிப்படையில் 8ம் பாவகமும் பாதிக்க பட்டு, கால புருஷ தத்துவத்திற்கு 8ம் ராசியான விருச்சிகமும் பாதக ஸ்தானமாக அமைந்து 11ம் வீடான பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றதால், ஜாதகர் அந்த பெண்ணின் குடும்பத்தில் கால் வைத்தவுடன் ஸ்திர நீர் தத்துவ விருச்சிகமும், ஸ்திர நெருப்பு தத்துவ சிம்மமும் தனது விளைவுகளை காட்ட ஆரம்பித்தது, இதற்க்கு இவரது ஜாதகமே காரணம் என்று முடிவு செய்ய இயலாது, அந்த பெண்ணின் ஜாதகத்திலும் களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று இருந்ததை இங்கே குறிப்பிட விரும்புகிறோம், விதி அமைப்பு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இப்படி தொடர்பு படுத்தி தனது விளையாட்டை மிக செம்மையாக நடத்துவதை ஜோதிடதீபம் குறிப்பிட விருபுகிறது.

இவரது ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் வீடான விருச்சிக ராசி 11ம் பாவகமாக வந்து பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றது, தனது வாழ்க்கை துணையாக நினைத்தவரின் வழியில் இருந்து அதிக மனக்கவலையும் ( ஸ்திர நீர் என்பதால் ஆறாத மனக்காயம் ) , தனது லக்கினபடி 8ம் பாவகம் பாதிக்க பட்டது ஜாதகரின் செயல் திறனையும் ஸ்திரமாக முடக்கியது ( ஸ்திர நெருப்பு ஜாதகரின் செயல்திறனை குறிக்கும் ) இவர் அந்த குடும்பத்தில் நுழையும் வரை எந்த பிரச்சனையும் இல்லை, இவர் நுழைந்த பிறகு அவர்களது குடும்பமும் பல மான அவமானங்களை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, மேற்கண்ட பலன்கள் யாவும் ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை, சுக்கிரன் புத்தி( 08/03/2013 முதல் 07/07/2016 வரை ) 3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தந்த காலத்திலேயே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பர்களே தங்களது வாழ்க்கை துணை வழியில் இருந்து யோக வாழ்க்கையை பெறவேண்டும் எனில் தங்களின் ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் பாவக வலிமையை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் அல்லது தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை பெற்று இருக்கிறதா என்பதையும் தெளிவாக தெரிந்துகொண்டு நலம் பெறுங்கள், 8ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பின் புதையலுக்கு ஈடான பொருள் வரவையும், அதிர்ஷ்டத்தையும் தரும், 8ம் பாவகம் பாதிக்க பட்டால் திடீர் இழப்புகளை அளவுக்கு அதிகமாக தகுதிக்கு மீறி தரும் என்பதால், திருமணதிற்கு பிறகு சிலர் திடீர் முன்னேற்றம் பெறுவதும், திடீர் விழ்சியை பெறுவதும் ஏன் என்பது வாசகர்களுக்கு புரியும் என்று ஜோதிடதீபம் கருதுகிறது .

குறிப்பு : 

அன்பர்களே மேற்கண்ட விஷயங்கள் யாவும் வாழ்க்கை துணைக்கு மட்டும் பொருந்தும் என்று முடிவு செய்வது சரியாக இருக்கும் என்று தெரியவில்லை, சில நபர்களுக்கு தேவையில்லாத தவறான தொடர்புகள் மூலமும் யோகம் அவயோக பலன்கள் நடைமுறைக்கு வருகிறது, சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை பெற்று இருக்கும் அன்பர்களுக்கு பெரிய பாதிப்பை தருவதில்லை, சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை இன்றியோ, பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெற்று இருந்தாலோ ஜாதகர் எக்காரணத்தை கொண்டும் முறை தவறிய தொடர்புகளை தவிர்த்து விடுவதோ, அல்லது இது போன்ற சூழ்நிலைக்கு ஆட்படாமல் தப்பித்து கொள்வது சால சிறந்தது, இல்லையெனில் வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி வரும், அதன் பாதிப்புகளை ஜாதகரால் தாங்க இயலாது என்பது ஜோதிடதீபத்தின் அறிவுரைகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696



திங்கள், 24 நவம்பர், 2014

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - கன்னி


சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   


ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது .


கன்னி லக்கினம் :


3ல் அமர்ந்த சனிபகவான் கன்னி லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, ஜாதகர் செய்யும் முயற்ச்சிகளில் எதிர்பாராத வெற்றிகளை வரி வழங்கும், வீரியம் மிக்க செயல்களால் ஜாதகர் மக்களின் பாராட்டுகளை பெரும் சந்தர்ப்பங்கள் ஏற்ப்படும் , ஜாதகரின் மன நிலை மிகவும் தெளிவாக செயல்படும், பரந்த மனப்பக்குவமும், ஜாதகரின் நல்லெண்ணங்களும் பலிதம் பெரும் யோக காலம் இதுவென்றால் அது மிகையில்லை, ஜாதகருக்கு சுய முன்னேற்றத்தில் தீவிர ஆர்வம் உண்டாகும், சகோதர வழியில் இருந்து உதவிகளும், ஆதரவும் எதிர்பாராவண்ணம் சிறப்பாக அமையும், ஜாதகர் தனது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் நேரம் வந்துவிட்டது எனலாம், ஜாதகருக்கு வெளிநாடுகளில் இருந்து நல்ல வேலைவாய்ப்பு, எதிர்பாராத வருமான வாய்ப்பும் நிச்சயம் வந்து சேரும், ஜாதகர் ஆன்மீக வாழ்க்கையில் முதல் படி எடுத்து வைக்கும் வாய்ப்பை தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனி பகவான் வாரி வழங்குகிறார் என்றால் அது மிகையில்லை.

8ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனிபகவான் கன்னி லக்கினத்தாருக்கு, விபரீத ராஜ யோக பலன்களை வாரி வழங்குகிறார், ஜாதகரின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருக்கும் சோம்பேறித்தனம் இன்றி ஜாதகர் சுறுசுறுப்பாக உழைக்கும் யோக காலமாக கருதலாம், ஜாதகருக்கு புதையலுக்கு ஈடான பொருளாதார வரைவை பெரும் தன்மையை தரும், ஜாதகரின் உடல் நிலை மிகவும் சிறப்பாக இருக்கும், இதுவரை இருந்த உடல்  உபாதைகள் ஜாதகருக்கு சரியான மருத்துவ உதவியினால் குணம் பெற்று குறுகிய காலத்தில் நலம் பெரும் யோகத்தை தரும், ஜாதகர் செய்து வரும் தொழில்களில் எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும் என்பதை மறுக்க இயலாது, நெருப்பு தத்துவம் சார்ந்த தொழில்களை இருக்கும் அன்பர்களுக்கு இது ஒரு ஏற்றமிகு யோக காலம் எனலாம், முன் பின் தெரியாத நபர்கள் மூலமும் ஜாதகரு திடீர் வருமானம் உண்டாகும், கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும், வட்டி வரவு செலவுகள் சிறப்பாக அமையும்.

9ம் பாவகத்தை 7ம் பார்வையாக வசீகரிக்கும் சனிபகவான், ஜாதகர் பொது காரியங்களில் ஈடுபடும் பொழுது அதிக கவனத்தை கொண்டு இயங்குவது நலம் தரும், எதிர்பாராத சில அவபெயர்களை சந்திக்கும் சூழ்நிலையை தர கூடும், பெண்கள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழகும் பொழுது மிக கவனமாக  இருப்பது நலம் தரும், தேவையில்லாமல் மற்றவர் விஷயங்களில் மூக்கை நுழைப்பது, ஜாதகரின் குடும்ப வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிவிட வாய்ப்பு அதிகம், எந்த ஒரு சூழ்நிலையிலும் ஜாதகர் இடம்,பொருள்,ஏவல் தெரிந்து பேசுவது நலம் தரும், இல்லை எனில் ஜாதகரின்  பேச்சே ஜாதகருக்கு எதிரியாக மாறிவிட வாய்ப்பு உண்டு , மற்றவருக்கு வாக்கு கொடுப்பதென்றாலும் நிறைய யோசனை செய்து கொடுப்பது வீண் அவபெயரை  தவிர்க்கும், கன்னி லக்கினத்தாருக்கு சனி பகவான் குடும்பம்,வாங்கு,தனம், சமூக வாழ்க்கை என்ற அமைப்பில் இருந்து சில சிரமங்களை தந்த போதிலும், கை நிறைவான வருமானத்தை நிலையாக வாரி வழங்குவார் என்பது ஆறுதலான விஷயம்.

12ம் பாவகத்தை 10ம் பார்வையாக வசீகரிக்கும் சனிபகவான் ஜாதகருக்கு, சிறந்த ஆன்மீக வெற்றியை வழங்குகிறார், ஜாதகரின் சிந்தனையும் அறிவாற்றலும் சமாதானத்தை விரும்பு தன்மையை தரும், ஜாதகர் பல திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகத்தையும், மருத்துவ துறையில் இருக்கும் அன்பர்களுக்கு இது ஏற்றமிகு யோககாலமாக கருதலாம், ஜாதகரின் வாழ்க்கையில் பல பெரிய மனிதர்களின் அறிமுகமும், ஆன்மீக அன்பர்களின் நல்லாசியும் ஒன்று சேர கிடைக்கும் யோக காலம் இது, ஜாதகர் இறை அருளின் தன்மையை பரிபூரணமாக உணரும் வாய்ப்புகள் இனிவரும் காலங்களில் ஏற்ப்படும் என்பதை மறுக்க இயலாது, ஜாதகர் செய்த முதலீடுகள் நல்ல லாபம் தரும், எந்த ஒரு சூழ்நிலையில் இருந்தும் ஜாதகர் இறை அருளின் கருணையினால் மீண்டு வரும் யோகத்தை தரும் இதற்க்கு முன் நடந்த காலங்களில் ஏற்ப்பட்ட கசப்பான அனுபவங்கள், இனிவரும் காலங்களில் நல்ல அனுபவத்தை பெற்று தரும், ஜாதகர் இனிவரும் காலங்களில் சனிபகவானால் சுடர்விட்டு எரியும் ஒளிவிளக்காக பிரகாசிப்பார், இதன் மூலம் ஜாதகர் மற்றும் ஜாதகரை சார்ந்தவர்களும் நிலையான நன்மைகளை பெறுவார்கள் என்பது மட்டும் உறுதி.

கன்னி இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட3,8,9,12ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின் கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 3,8,9,12ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 19 நவம்பர், 2014

எண்கணிதம் ஒருவரின் வாழ்க்கையில் நடத்தும் மாயாஜாலங்கள் ! தொடர்ச்சி.....


இனி 2 வது உதாரண பிறந்த தேதியை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே :

தமிழகத்தை முதல்வரகளாக ஆட்சி செய்த மூன்று தலைவர்களின் பிறந்த தேதியை எடுத்து கொள்வோம், அதில் இரண்டாவதாக புரச்சி தலைவர் MGR அவர்களின் பிறந்த தேதி மற்றும் பலன்கள்  



புரட்சி தலைவர் எம்ஜிஆர் பிறந்த தேதி ( 17/01/1917 )
நமது எண்கணித முறைப்படி    8-1-9-9

பிறந்த தேதியில் 8ம் எண் வந்தது ஜாதகரை சிறு வயதிலேயே பல சிரமங்களுக்கு ஆளாக்கியது, வறுமையின் கோர பிடியில் சிக்கி ஜாதகர் சிறு வயது முதல் தனது 15வது வயது வரை பல சிரமங்களை எதிர்கொள்ளும் தன்மையை தந்தது, அடிப்படையில் ஜாதகரின் கல்வி வாழ்க்கையை கேள்விக்குறியானது, ஜாதகர் தனது பெற்றோர் வழியில் இருந்து பெரும் நன்மையில் சிறிதேனும் அனுபவிக்க இயலாத தன்மையை தந்தது, அவரது பெற்றோருக்கும் பல சிரமங்களை வாரி வழங்கியது, ஜாதகரின் முயற்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்விகளையே வழங்கியது, பால்ய பருவத்திலே பசியின் கொடுமையை உணர்ந்தவர் என்பதால் பின்னாளில் தனது வீட்டுக்கு வரும் எவரும் வெறும் வயிற்றுடன் செல்லக்கூடாது என்ற கொள்கையை வைத்திருந்தார், பொதுவாக 8ம் எண் ஒரு மனிதருக்கு உலக பிரபலத்தை தந்த போதிலும் சுய வாழ்க்கையில் பிரகாசிக்காத தன்மையை தந்துவிடுகிறது, ஊருக்கு உத்தமன் வீட்டிற்கு ஊதாரி என்ற பழமொழியை நினைவுகூர வைத்துவிடுகிறது, 8ம் எண்ணில் பிறந்த ஒவ்வொருவரின் உழைப்பும் மற்றவருக்கே பலன் தருகிறது சம்பந்தபட்டவருக்கு பெரிய நன்மைகளை தருவதில்லை, தலைவர் இறுதி வரை தனக்காக எதையும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை நினைவு கூர்வது அவசியம், 8ம் எண்ணை சார்ந்தவர்கள் பல சிரமங்களை அனுபவித்த போதிலும் நேர்மை மாறாத குணம் அவர்களை புகழின் உச்சிக்கே எடுத்து செல்கிறது என்பதை மறுக்க இயலாது.

பிறந்த தேதியில் மாதத்தில் 1ம் எண் வந்தது ஜாதகரை இளம் வயதிலேயே சோர்வு அறியாத கடின உழைப்பாளியாக நிலைநிறுத்தியது, தான் எடுத்துக்கொண்ட கொள்கையிலும், லச்சியத்திலும் குறிக்கோளாக இருந்து வெற்றி கனியை பறிப்பதற்கு உண்டான ஆளுமையை தந்தது, இளம் வயதில் சிரமபட்ட போதிலும், 15 வருடங்களுக்கு பிறகு ஜாதகர் தனது 30வது வயது வரை சகல விஷயங்களிலும் தேர்ச்சியும், நுண்ணறிவையும் பெரும் யோகத்தை தந்தது, சூரியனுக்கு உரிய 1ம் எண் ஜாதகருக்கு 15 முதல் 30 வயது வரை தனி திறன்களை வளர்த்துகொள்ளும் வாய்ப்பையும், தடை பட்ட கல்வியை தனது சுய முயற்ச்சியின் மூலமே கற்றுகொள்ளும் யோகத்தை தந்து, ஜாதகருக்கு அரசியில், கலைத்துறை, பொதுமக்களின் ஆதரவு இதற்குண்டான அறிமுகங்களை வழங்கிய காலம் இதுவென்றால் அது மிகையில்லை, ஒரு சிறந்த புகழ் பெற்ற மனிதராக பரிணமிக்க அடிப்படை அடித்தளம் அமைந்த காலம் இதுவே, எனவே ஜாதகர் சகல விஷயங்களையும் கற்று தேர்ந்த காலம் இதுவென்றால் அது மிகையில்லை.

பிறந்த தேதியில் வருடத்தில் 9ம் எண் வந்தது ஜாதகரை படி படியாக வெற்றிபடிகளில் கால் வைக்கும் யோகத்தை தந்தது எனலாம், ஜாதகர் தனது 30 வது வயது முதல் 45 வது வயது வரை வெற்றி படிகட்டுகளில் ஏற ஆரம்பித்த காலம் என்றால் அது மிகையில், தொடர் வெற்றிகளை கொடுக்கும் எண்ணான 9ம் எண்ணில் பயணம் செய்த புரட்சி தலைவர் தனது தனிப்பட்ட திறன்களையும், நல்ல குணங்களையும் பொதுமக்களுக்கு கலை துறை மூலம்  பிரதிபலித்தார், மேலும் மக்களின் பேர்அன்பிற்கும், பெரும் மதிப்பிற்கும் உரியவர் என்ற நிலையான நம்பிக்கையை மக்கள் மனதில் பசுமரத்தில் பதித்த ஆணி போல் மக்களின் மனதில் உயர்ந்து நின்றார், 9ம் எண்ணான செவ்வாயின் ஆதிக்கம் மக்கள் மனதில் நிலையான கதாநாயகன் அந்தஸ்தை பெற்று தந்து, இவரின் முகம் பார்க்க மக்கள் ஏங்கி கிடந்தனர், இவரின் வார்த்தைக்கு தமிழகமே கட்டுபட்டது, இவர் பயணம் செய்த 9ம் எண் ( 30 முதல் 45 வயது வரை ) தனது துறையிலும் தனிப்பட்ட வாழ்கையிலும்  பிரகாசிக்க வைத்த காலம் இதுவென்றால் அது மிகையில்லை.

பிறந்த தேதியில் கூட்டு எண்ணாக மீண்டும் 9ம் எண் வந்ததே ஜாதகரின் அபரிவிதமான வெற்றிக்கும், பொருளாதார ரீதியான உச்சத்திற்கும் கொண்டு சென்றது, ஜாதகரின் 45 வயது முதல் வாழ்வின் இறுதி வரை தொடர் வெற்றிகளையே வாரி வழங்கியது, ஜாதகருக்கு பிறந்த எண்களில் வெற்றிகளை குவிக்கும்  9ம் எண் மீண்டும் வந்தது, கலைத்துறை, அரசியல், பொதுவாழ்க்கை ஆகிய அமைப்பில் உச்ச நிலையை பெற வைத்தது, ஜாதகருக்கு பிறந்த தேதியில் வந்த 8ம் எண் வறுமையின் உச்சத்தை பார்க்க வைத்தது, வருடம் மற்றும் கூட்டு எண்ணில் வந்த 9ம் எண்கள் ஜாதகரை வசதி வாய்ப்பு மற்றும் புகழின் உச்சத்தை பார்க்க வைத்தது, ஜாதகருடன் மோதிய பலரது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியது, வெற்றி தேவதையின் பரிபூரண பிடியில் ஜாதகர் உலா வந்த காலம் இதுவென்றால் அது மிகையில்லை, ஜாதகரை புகழின் உச்சிக்கும் உலக அளவில் பிரபலம் பெரும் யோகத்தையும் தந்த காலம் இதுவே, ஜாதகர் கலை துறையில் பல வெற்றிகளை குவிக்கவும், அரசியலில் கொடிகட்டி பறக்கவும் மேற்கண்ட செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற 9ம் எண்ணே வழிவகுத்தது எனலாம், ஒருவரின் பிறந்த தேதியில் 9ம் எண் வருவது வெற்றிகரமான வாழ்க்கையை உறுதி செய்யும், பெயரும் 9ம் எண்ணில் அமைந்தது  ( MGR ) வெற்றியின் சதவிகிதத்தை 200% வாரி வழங்கியது என்பதை நாம் இதன் மூலம் தெளிவாக உணரலாம்.

அன்பர்களே ! எண்களின் வலிமை பலன் தருவது, அதன் ஆதிக்கத்தின் கிழ் பயணம் செய்யும் பொழுது மட்டுமே என்பதை உணர்வது அவசியம் ஒருவரின் பிறந்த தேதியில் இருக்கும் எண் மற்றும் கூட்டு எண் ஆகியவை மற்றுமே ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்து விடாது நமது எண்கணித முறைப்படி பிறந்த தேதி, மாதம், வருடம் மற்றும் கூட்டு எண் ஆகியவை அனைத்தும் ஒருவரின் வாழ்க்கையில் அதன் ஆதிக்கத்தின் கிழ் பயணம் செய்யும் வயதுகளில் யோக அவயோக பலன்களை எண்களின் தன்மைக்கு ஏற்றார் போல் பலன் தரும், பொதுவாக இவரது பிறந்த தேதியை வைத்து பலன்களை நிர்ணயம் செய்யும் எண் கணித நிபுணர்கள் இவரது வெற்றிக்கு காரணம் 8ம் எண்ணாக வர்ணிப்பது உண்டு, உண்மை அதுவல்ல இவரது பிறந்த தேதியில் வருடம் மற்றும் கூட்டு எண்ணில் இருக்கும் 9ம் எண்ணுக்கே அந்த பெருமையெல்லாம் சாரும் என்பதை எண்கணித ஆர்வலர்கள் புரிந்துகொள்வது சிறப்பு, 8ம் எண் ஜாதகருக்கு கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டுடன் நேர்மையையும் வழங்கியது என்பதை மறுக்க இயலாத போதிலும், இவரது புகழ் மிக்க வெற்றிகரமான வாழ்க்கையை நிர்ணயம் செய்தது நிலையான வெற்றிகளை வாரி வழங்கும் 9ம் எண் என்றால் அது மிகையில்ல அனபர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 17 நவம்பர், 2014

ஏக திசை சந்திப்பும் திருமண வாழ்க்கையில் வரும் இன்னல்களும் !



  திருமண பொருத்தம் பார்ப்பதில் தற்பொழுது மிக பிரபலம் ஆகிக்கொண்டு இருக்கும் ஒரு வார்த்தை " ஏக திசை சந்திப்பு " அதாவது திருமண பொருத்தம் காண வரும் வது வரன் இருவரின் ஜாதகத்தை ஆய்வு செய்யும் ஜோதிடர்கள், வது வரனின் ஜாதகத்தில் நட்சத்திர பொருத்தம் 10 க்கு எத்தனை இருக்கின்றது என்பதை உறுதி செய்துகொண்டு, இருவருக்கு தற்பொழுது நடைபெறும் திசை ஒரே கிரகத்தின் திசையாக இருப்பின், இந்த ஜாதகங்கள் பொருந்தாது என்று கூறி தவிர்க்க சொல்கின்றனர், இதை கேட்ட உடன் ஜாதகம் காண வந்தவர்களும் பொருத்தம் இல்லை என்று நினைத்து, திருமண பேச்சை அத்துடன் விட்டு விடுகின்றனர், இதன் உண்மை நிலையை இன்றைய பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


கிழ்கண்ட ஜாதகங்கள் இதற்க்கு முன் 3 ஜோதிடர்கள் ஆய்வு செய்து இருவருக்கும் ஒரே திசை நடைபெறுவதால் ( சுக்கிரன் திசை ) பொருத்தம் வராது என்று, வரனின் ஜாதகத்தில் 5ல் ராகு  இருப்பதால் புத்திர பாக்கியம் இருக்காது என்று காரணம் சொல்லி ஜாதகம் காண வந்தவர்களின் வயிற்றில் புளியைகரைத்து அனுப்பி விட்டனர், உண்மையில் இரு தரப்பினருக்கும் ஜாதக பொருத்தம் பார்க்கும் முன்பு வரை மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்துள்ளனர் வதுவுக்கும் வரணுக்கும் பிடித்து விட்டதால் திருமணத்தை நடத்திவிடலாம் என்று, ஜாதகம் பார்க்க போன இரு தரப்பினருக்கும் இந்த பதிலால் கிலியடித்து, திருமணத்தையே நிறுத்தி விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர், இவர்களை எமது நண்பர் விபரம் சொல்லி நம்மிடம் அழைத்து வந்தார், வது வரனின் ஜாதகத்தை தெளிவாக ஆய்வு செய்து இரு தரப்பினருக்கும் விளக்கத்தை எடுத்து உரைத்து, ஜாதகத்தில் உள்ள உண்மை நிலையை தெளிவு படுத்தி திருமணம் நடத்தி வைத்தோம் அன்பர்களே !

ஜாதக ஆய்வு 

வரனின் ஜாதக நிலை :



வதுவின் ஜாதக நிலை :



மேற்கண்ட இரண்டு ஜாதகத்திலும் சுக்கிர திசை நடைமுறையில் இருக்கிறது, ஜோதிடர்கள் காரணமாக கூறியது இருவருக்கு ஒரே திசை நடைபெறுகிறது எனவே திருமணம் செய்ய கூடாது என்பது, இதற்க்கு ஜோதிடதீபம் கிழ்கண்ட வாறு  விளக்கம் தந்தது.

வரனின் ஜாதகத்தில் நடைபெறும் சுக்கிரன் திசை ( 30/03/2013 முதல் 30/03/2033 வரை )

 ஜாதகனுக்கு சுக்கிர திசை களத்திர ஸ்தானமான 7ம் வீடு , சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த யோகத்தை தந்துகொண்டு இருக்கிறது, ஜாதகருக்கு 7ம் வீடு தொடர்பு பெரும் நான்காம் பாவகம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் வீடாக அமைந்து சர நெருப்பு தத்துவ அமைப்பில் செயல்படுவதால், ஜாதகர் சுய கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, ஒழுக்கம், நேர்மையான குணம், செய்யும் தொழில் தனது செயல்பாடுகள் மூலம் வெற்றி பெற்று சுய உழைப்பின் மூலம் வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, நினைத்ததை சாதிக்கும் வல்லமை, நல்ல உடல் நிலை மற்றும் மன நிலையை பெரும் யோகம், மற்றவர் போற்றும் அருங்குணங்கள், சமுதாய அந்தஸ்து மற்றும் ஏற்றமிகு பெருவாழ்வை குறுகிய காலத்தில் ( சரம் ) பெரும் யோகத்தை தரும்.

வதுவின் ஜாதகத்தில் நடைபெறும் சுக்கிரன் திசை ( 16/12/2002 முதல் 16/12/2022 வரை )

 ஜாதகிக்கு சுக்கிரன் திசை 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த யோகத்தையே தந்துகொண்டு இருக்கிறது, ஜாதகிக்கு 7ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடாக அமைந்து சர மண் தத்துவ அமைப்பில் நடைபெறுவதால், ஜாதகி பொறுமையான குணமும், சிறந்த உடல் நலமும், மற்றவர் போற்றும் பெருந்தன்மையையும் கொண்டிருப்பார், தனது நிதானமான செய்கையினாலும், பெரியோர்களின் ஆசிர்வாதமும் பாராட்டுகளையும் பெறுவார், இதில் கவனிக்க தக்க விஷயம் எதுவெனில் ஜாதகியின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவத்திற்கு 10ம் வீடாகி ஜீவன ஸ்தானமான வருவது ஜாதகியை திருமணம் செய்துகொள்ளும் அன்பருக்கு! அளவில்லா ( சரம் ) தொழில் விருத்தியை வாரி வழங்கும், இதுவரை ஜீவனத்திர்க்கே சிரம பட்ட நபராக இருந்தாலும் சரி, இந்த வதுவை திருமணம் செய்த சில நாட்களிலேயே தொழில் ரீதியான அபிவிருத்தியை எதிர்பாரா வண்ணம் பெறுவார், அவரின் கௌரவமும் அந்தஸ்தும் சமுதாயத்தில் மேலோங்கும்.

மேற்கண்ட இருவரின் சுய ஜாதக ரீதியாக நடைபெறும் சுக்கிரன் திசை வரனின் ஜாதகத்தில் 4ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையும், வதுவின் ஜாதகத்தில் 7ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையும் வாரி வழங்குவது ஏக திசா சந்திப்பால் எவ்வித துன்பமும் நடைபெற வாய்ப்பில்லை, மேலும் இவர்கள் திருமணம் செய்துகொள்வதால் திருமண வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும் என்பது உறுதி, எனவே திருமண வாழ்க்கை மிகவும்  சிறப்பாக நடைபெற்று தம்பதியர் யோக வாழ்க்கையையே பெற்றார்கள் என்பது உறுதி செய்யபட்ட விஷயமாக இருக்கிறது அன்பர்களே !

இருவருக்கும் நடைபெறும் சுக்கிரன் திசை யோக பலன்களையே வழங்குவதால், ஏக திசை சந்திப்பு எப்படி தீமையை செய்யும் என்று ஜோதிடர்கள் நிர்ணயம் செய்தனர் என்பது எமக்கு புரியவில்லை, ஆக வதுவின் ஜாதகத்திலும், வரனின் ஜாதகத்திலும் நடைபெறும் சுக்கிரன் திசை எந்த பாவக பலனை தருகிறது என்று தெரியாத பொழுதே ஜோதிடர்களுக்கு இந்த குழப்பம் ஏற்ப்பட்டு இருக்கும், இருவருக்கும் நடைபெறும் சுக்கிரன் திசை வரனின் ஜாதகத்தில் 4ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையும், வதுவின் ஜாதகத்தில் 7ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களை, தருகிறது என்று தெரிந்து இருந்தால் இவர்கள் ஜாதக பொருத்தம் இல்லை என்று ஏக திசை சந்திப்பை காரணம் காட்டி இருக்க வாய்ப்பில்லை அன்பர்களே ! இந்த மாதிரி குத்து மதிப்பாக தவறாக ஜாதக பலன் சொன்னால், இதற்க்கு உண்டான வினை பதிவு, ஜோதிடர்களின் சந்ததியை பாதிக்கும் என்பதும் ஜோதிடர்களையும் பாதிக்கும் என்பதும் ஏன் இவர்களுக்கு புரியாமல் போய்விடுகிறது, நாம் காணும் ஜாதக கணிதம் குறைந்த பட்சம் நம்மை நம்பி வருபவர்களுக்கு நன்மை செய்யாவிட்டலும் பரவாயில்லை, தீமை நடைபெறாமல் இருப்பது முக்கியமல்லவா அன்பர்களே !

பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் வது வரன் ஜாதகத்தில் அடிப்படையாக கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருப்பது குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமுமே, இந்த இரண்டு பாவகமும் மிக வலிமையாக இருந்து நடைபெறும் திசை, எதிர்வரும் திசைகள் வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால் நிச்சயம் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாகவே அமையும், இத்துடன் 5ம் பாவகமும் இருவரின் ஜாதகத்தில் வலிமை பெற்று அமையும் பொழுது, நிச்சயம் சிறந்த புத்திர பாக்கிய யோகத்தை வாரி வழங்கிவிடும்.

பொருத்தம் இல்லை என்பதற்கு ஜோதிடர்கள் சொன்ன மற்றொரு காரணாம், " 5ல் ராகு புத்திர பாக்கியம் இல்லை " ஒருவரது ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருக்கிறாரா?  பாதிக்கபட்டு இருக்கிறாரா ? என்று ஆய்வு செயாமல், ராகு 5ல் அமர்ந்தால் புத்திர பாக்கியம் இல்லை என்று முடிவு செய்வது உண்மைக்கு புறம்பான ஒரு விஷயம் அல்லவா ? பொதுவாக ராகு 5ல் அமர்ந்து அந்த பாவகத்திர்க்கு அதிபதி சுக்கிரன்,குரு,வளர்பிறை சந்திரன், சூரியனுடன் சேராத புதன் ( சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் அமர்ந்த நிலை) ஆகியோர் பொறுப் ஏற்றால் புத்திர ஸ்தானமான 5ம் பாவகம் 100% வலிமை பெற்று விடும் ஜாதகருக்கு பிறக்கும் குழந்தைகள் யாவும் ஆண் குழந்தைகளாகவே இருக்கும், ( ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவனம் செய்து வந்தால் ) ஆக மேற்கண்ட வரனின் ஜாதகத்தில் சுக்கிரன் வீடான ரிஷபத்தில் அமரும் ராகு பகவான் ஜாதகருக்கு சிறந்த ஆண்வாரிசை வழங்குகிறார் என்பது உறுதியாகிறது, ஜாதகத்தில் உண்மையான விஷயங்கள் இப்படி இருக்க, இப்படி உண்மைக்கு புறம்பான ஜாதக பலன்களை சொல்லும் ஜோதிடர்களை என்ன செய்வது ? நாம் தான் தலையில் அடித்துக்கொள்ளவேண்டும்.

மேற்கண்ட சரியான உண்மையான விளக்கத்தை இரு தரப்பிற்கும் தெளிவாக சொன்ன பின்னரே இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர், தற்பொழுது தம்பதியருக்கு சந்தான பாக்கியம் கிட்டியாதாக நம்முடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர், வாழையடி வாழையாக அவர்களது குடும்பம் 16 வகை செல்வமும் பெற்று செழித்து ஓங்கட்டும், இந்த பெருமை எல்லாம் எனது குருவையே சாரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 14 நவம்பர், 2014

ஜாதகத்தில் 5ல் ராகு இருப்பதால் புத்திரபாக்கியம் இல்லை என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர் இது உண்மையா ?



அண்ணா எனது ஜாதகத்தில் 5ல் ராகு இருப்பதால் புத்திரபாக்கியம் இல்லை என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர் இது உண்மையா ? 

தம்பி பொதுவாக பாரம்பரிய முறையில் மேலோட்டமாக உனது ஜாதகத்தை பார்க்கும் பொழுது விருச்சிக லக்கினத்திற்கு, 5ம் வீடான மீனத்தில் ராகு அமர்ந்து இருப்பதை கருத்தில் கொண்டு 5ல் அமர்ந்த ராகு புத்திர பாக்கியத்தை  தாராது என்ற பொது கருத்தை ஜாதக பலனாக தங்களுக்கு ஜோதிடர்கள் கூறியிருக்க கூடும்,  மேலும் 5ல் ராகு என்றவுடன் புத்திர பாக்கியத்தை தராது என்று முடிவு செய்வது முற்றிலும் தவறான ஜாதக கணிதம், எப்பொழுதுமே ஒருவரின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்ளும் பொழுது லக்கினம் ஆரம்பிக்கும் பாகையின் அடிப்படையில் 12 பாவகங்களை நிர்ணயம் செய்து, எந்த எந்த பாவகத்தில் நவ கிரகங்கள் அமர்ந்து இருக்கின்றது என்பதை துல்லியமாக கணிதம் செய்து பலன் காண்பது, சரியான ஜாதக பலனை காண வழிவகுக்கும்.




 உனது ஜாதகத்தில் லக்கினம் விருச்சிக ராசியில் 16:42:29 பாகையில் ஆரம்பித்து, தனுசு ராசியில் 15:41:31 பாகையில் முடிவடைகிறது, அதாவது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியான விருச்சிகத்தில் 226:42:29 பாகையில் ஆரம்பித்து கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியான தனுசு ராசியில் 255:41:31 பாகையில் முடிவடைகிறது, ஆக உனது லக்கினம் விருச்சிகமாக இருந்தாலும் பாகை கணித அடிப்படையில் லக்கினமான முதல் பாவகம் விருச்சிக ராசியிலும், தனுசு ராசியிலும் வியாபித்து இருக்கிறது உனது லக்கினம் இரண்டு ராசிகளுடன் சம்பந்தம் பெறுகிறது.

ராகு 5ல் என்பது ஜோதிடர்களின் கணிப்பு என்பதால் உனது ஜாதகத்தில் 5ம் பாவக நிலையை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம், பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் உனக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியான மீனத்தில் 20:39:01 பாகையில் ஆரம்பித்து, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷத்தில் 20:05:32 பாகையில் முடிவடைகிறது, ஆக உனது லக்கினத்திற்கு 5ம் பாவகம் மீனமாக இருந்தாலும் பாகை கணித அடிப்படையில் லக்கினத்திற்கு 5ம் பாவகம் மீன ராசியில் 350:39:01 பாகையில் ஆரம்பித்து, மேஷ ராசியில் 20:05:32 பாகையில் முடிவு பெறுகிறது.

மேற்கண்ட அமைப்பில் 5ம் பாவகம் வியாபித்து இருக்கும் 350:39:01 முதல் 20:05:32 வரையிலான 5ம் பாவகத்தில் ராகு அமர்ந்து இருகின்றார ? என்பதை கவனிக்கும் பொழுது ராகு தங்களது ஜாதகத்தில் மீனத்தில் 341:56:49 பாகையில் அமர்ந்து இருக்கிறார், தங்களுக்கு ஐந்தாம் பாவகம் மீனமாக இருந்த போதிலும், மீன ராசியில் உள்ள நான்காம் பாவகத்தில் அமர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது, தங்களின் 4ம் பாவகம் கும்பத்தில் 318:30:50 பாகையில் ஆரம்பித்து மீனத்தில் 350:39:01 பாகையில் முடிவடைகிறது, 4ம் பாவகத்திர்க்கு உற்பட்ட பாகைக்குள் ( 341:56:49 ) ராகு அமர்ந்து இருப்பதால் தங்களின் ஜாதகத்தில் ராகு பகவான் 4ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கிறார் என்பதே சரியான ஜோதிட பாவக கணிதம்.

தங்களின் ஜாதகத்தில் ராகு 5ல் உள்ளார் என்ற கணிப்பு முற்றிலும் தவறானது, உண்மையில் ஜாதக பாவக கணிதம் கொண்டு ஆய்வு செய்யும் பொழுது 4ம் பாவகத்திலேயே ராகு பகவான் அமர்ந்திருப்பது தெளிவாகிறது, எனவே தம்பி தாங்கள் ராகு 5ல் இருப்பதால் புத்திர பாக்கியம் இல்லை என்ற கவலையை விட்டு விடுங்கள் , மேலும் தங்களின் ஜாதகத்தில் 5ம் பாவகம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடனே இருக்கிறது , எனவே தங்களுக்கு முதல் குழந்தையே ஆண் வாரிசாக அமையும் என்பதால், 5ல் ராகு புத்திர பாக்கியம் இல்லை என்று தவறாக கணித்த ஜோதிடர்களின் கருத்தை முற்றிலுமாக மறந்துவிடுங்கள்.

மேலும் தங்களின் 5ம் வீடு  தொடர்பு பெறுவது லாப ஸ்தானமான 11ம் பாவகம், இந்த லாப ஸ்தானம் தங்களுக்கு கன்னி மற்றும் துலாம் ராசியில் வியாபித்து இருக்கிறது , 11ம் பாவக வலிமையையும் 100% நல்ல நிலையில் இருப்பதால் , தங்களுக்கு பிறக்கும் ஆண் வாரிசு ஜாதக அமைப்பு தங்களுக்கு அதிர்ஷ்டத்தையும், தொழில் விருத்தியையும், பொதுமக்களின் ஏகோபித்த நல்லாதரவையும் வாரி வழங்கும், குறுகிய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்தை வாரி வழங்கும், மேலும் 11ம் பாவகம் உபய மண் தத்துவம், சர காற்று தத்துவம் என்ற அமைப்பில் இயங்குவதால், தங்களுக்கும் தங்களது வாரிசுக்கும் நல்ல உடல் நலத்தையும், சிறந்த அறிவு திறனையும் பரிபூர்ணமாக வாரி வழங்கும்.

குறிப்பு :

ஒருவரின் சுய ஜாதக அடிப்படையில் 5ம் பாவகத்திர்க்கு உற்பட்ட பாகைக்குள் ராகு அமர்ந்து 5ம் பாவகத்தை 100% பாதிப்பிற்கு உள்ளாக்கினால் மட்டுமே, ஜாதகருக்கு புத்திர பாக்கியம் ( ஆண் வாரிசு ) இல்லாமல் போகும், ஒருவேளை 5ம் பாவகத்தில் அமரும் ராகு பகவான் 5ம் பாவகத்தை 100% வலிமை  படுத்தினால், ஜாதகருக்கு ஆண் குழந்தைகளே அமையும், பெண் குழந்தை  கிடைக்காது, மேற்கண்ட அமைப்பை நிர்ணயம் செய்யும் பொழுது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவக நிலையை கருத்தில் கொள்வது புத்திர பாக்கியத்தை பற்றிய தெளிவான விளக்கம் தர இயலும், ராகு 5ல் அமர்ந்தாலே புத்திர பாக்கியம் இல்லை என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான கருத்து  தம்பி.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


வியாழன், 13 நவம்பர், 2014

எண்கணிதம் ஒருவரின் வாழ்க்கையில் நடத்தும் மாயாஜாலங்கள் !



அன்பர்களே !

இந்த பதிவில் எண்கணிதம் பற்றியும், எண்களின் வலிமையை பற்றியும் சற்றே சிந்தனைக்கு எடுத்துகொள்வோம், ஒருவரின் வாழ்க்கையில் நன்மை தீமையை வாரி வழங்கும் தன்மை 0-9 வரை உள்ள எண்களுக்கு நிச்சயம் உண்டு, இதில் சுய ஜாதகத்தில் ராசி மற்றும் லக்கினத்திற்கும் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லை, சுய ஜாதகத்தில் உள்ள நவகிரகங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை ஜோதிடதீபம் அடிப்படையிலேயே தெளிவுபட தெரிவிக்கிறது, ஒருவரின் பிறந்த தேதியை மட்டும் அடிப்படையாக வைத்து எண்கணிதம் என்பதை சிந்தனைக்கு எடுத்துகொள்ளுங்கள், எண்கணிதம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் பிறந்த தேதி, மாதம், வருடம் மற்றும் கூட்டு எண் ஆகிய எண்களின் அடிப்படையிலேயே இங்கே விவாதிக்க படுகிறது, ஜாதகத்திற்கும் எண் கணிதத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை முதலிலேயே ஜோதிடதீபம் தங்களுக்கு அறிவுறுத்துகிறது, இனி வரும் விஷயங்கள் யாவும் ( 0 முதல் 9 வரையிலான ) எண்களின் அடிப்படையிலேயே இருக்கும் அன்பர்களே ! 

அடிப்படையில் ஒருவரின் பிறந்த தேதியில் 2,7,8 ம் எண்கள் இருப்பின் குறிப்பிட்ட நபர் மேற்கண்ட எண்களின் ஆதிக்கத்தின் கிழ் பயணிக்கும் குறிப்பிட்ட காலம் வரை மிகுந்த இன்னல்களுக்கும் தொந்தரவுகளுக்கும் ஆட்படும் சூழ்நிலையை தரும், மேற்கண்ட எண்களுக்கு அருகில் இருக்கும் எண்கள் இந்த எண்களுக்கு நட்பு நிலையில் இருப்பின், இந்த எண்களின் பாதிப்பு குறையும், ஒரு வேலை இந்த எங்களுக்கு பகை நிலையில் இருப்பின் பாதிப்பின் தன்மை மிக அதிகமாக இருக்கும். எனவே ஒருவரின் பிறந்த தேதியில் ( தேதி,மாதம்,வருடம் மற்றும் இவற்றின் கூட்டு எண் ) ஆகியவற்றில் மேற்கண்ட எண்கள் இல்லாமல் இருப்பின் சம்பந்தபட்டவர் வாழ்க்கையில் பெரிய அளவில் சிரமங்களை எதிர்கொள்ளாமல் சிறப்பான முன்னேற்றங்களை தனது வாழ்க்கையில் பெறுவார் என்பதுமட்டும் நிதர்சனமான உண்மை அன்பர்களே !

இனி உதாரண பிறந்த தேதியை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே :

தமிழகத்தை முதல்வரகளாக ஆட்சி செய்த மூன்று தலைவர்களின் பிறந்த தேதியை எடுத்து கொள்வோம் 

1) கலைஞர் கருணாநிதி 
2) புரட்சி தலைவர் எம்ஜிஆர் 
3) புரட்சி தலைவி ஜெயலலிதா 

கலைஞர் கருணாநிதி பிறந்த தேதி ( 03/06/1924 ) 
நமது எண்கணித முறைப்படி    3-6-7-7

புரட்சி தலைவர் எம்ஜிஆர் பிறந்த தேதி ( 17/01/1917 )
நமது எண்கணித முறைப்படி    8-1-9-9

புரட்சி தலைவி ஜெயலலிதா பிறந்த தேதி ( 24/02/1948 )
நமது எண்கணித முறைப்படி   6-2-4-3


கலைஞர் கருணாநிதி பிறந்த தேதி ( 03/09/1924 ) 
நமது எண்கணித முறைப்படி    3-6-7-7



பிறந்த தேதியில் 3ம் எண் வந்தது அதிபுத்திசாலிதனமான செய்கையினால் வெற்றிவாய்ப்புகளை  பெரும் யோகத்தை தந்தது, பிடிவாத குணத்தால் சில விஷயங்களை  சாதிக்கும் வல்லமையை தந்து, தனது பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் மக்களிடம் பிரபலம் ஆகும் வாய்ப்பை 3ம் எண்ணே வாரி வழங்கியது , இவர் சொல்லும் வார்த்தைக்கும், எழுத்து நடைக்கும் தனி ரசிகர் பட்டாளமே  இருந்தது, மொழி புலமையும் வாக்கு வன்மையும் எழுத்து நடையும் தனிப்பட்ட அடையாளத்தை தமிழகத்தில் பெற்று தந்து, 3ம் எண் இவரின் பிறப்பில் இருந்து முதல் 15 வருடங்களை தனது ஆளுமைக்கு கொண்டு வந்து அடித்தளத்தை அமைத்து தந்து .

பிறந்த தேதியில் மாதத்தில் 6ம் எண் வந்தது சில எதிர்பாராத வெற்றிவாய்ப்புகளை வாரி  வழங்கியது, பெரிய மனிதர்களின் ஆதரவும் ஆசிகளும் சிறப்பாக அமைந்து வெளி உலகத்திற்கு இவரின் செயல்கள் மற்றும் சேவைகள்  தெரிய ஆரம்பித்தது, இந்த நேரத்தில் தான் ஏற்றுகொண்ட துறையில்  பிரகாசிக்கும் வெற்றி வாய்ப்பை வாரி வழங்கியது, கற்பனை  வளமும் எழுத்தின் வல்லமையும் தமிழக மக்களுக்கு இடையே நல்ல வரவேற்ப்பை  பெற்று தந்தது, வெற்றிகரமான முன்னேற்ற வாழ்க்கையை இவரின் 15 வது வயது முதல் 30 வது வயது வரை 9ம் எண் ஸ்திரமாக நிர்ணயம் செய்து  வெற்றிகளை வாரி குவித்தது சிறந்த அறிமுகம் கிடைத்தது.

பிறந்த தேதியில் வருடத்தில் 7ம் எண் வந்தது பொதுமக்களிடம் பிரபலமாக்கியது ,  பொதுமக்களின் நன்மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நபராக வலம் வர செய்தது, இந்த காலகட்டத்தில் அரசியல் ரீதியான செல்வாக்கும் அரசியல் ஆதாயமும் எதிர்பாராத வகையில் அமைந்த போதிலும், சுய வாழ்க்கையில் பல முரண்பட்ட விஷயங்களில் ஈடுபட வைத்தது இவரின் எதிர்மறையான செய்கைகளும் மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது, பொது வாழ்க்கையில் பிரகாசித்த அளவிற்கு தனிப்பட்ட வாழ்க்கை  சிறப்பாக அமையவில்லை, எதிர்மறையான கருத்துக்களும் இவருக்கு பிரபலமான அரசியல் வாழ்க்கையை தந்தது, இவரின் 30 வது வயது முதல் 45 வது வயது வரை 7ம் எண் பிரபலமான மனிதர் என்ற பெயரையும், பொருளாதார ரீதியான அபரிவிதமான் வளர்ச்சியின் ஆரம்பத்தையும் தந்து.

பிறந்த தேதியில் வரும் கூட்டு எண் 7ம் எண்  வந்தது நீண்ட ஆயுளை வாரி வழங்கியது, முதுமை வயதிலும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் மிக சிறப்பாக அமைந்தது, தமிழகத்தில் மட்டும் பிரபலமாக இருந்த இவருக்கு இந்தியா முழுவதும் செல்வாக்கு கிடைத்த காலம் இதுவே எனலாம், 8ம் எண்ணுடன் மோதி தனது வலிமையை இழந்த காலம் இதுவே என்றால் அது  மிகையில்லை, இவரது பிறந்த தேதியில் உள்ள 3ம் எண்  இவரது கட்சியில் இருந்த 8ம் எண் கொண்ட அன்பருடன் மோதல் போக்கை கடைபிடிதததால், அவர்  வழியில் இருந்து மிகப்பெரிய இழப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, இருப்பினும் தொடர்ந்து வல்லமையுடன் போராடும் குணத்தை தந்தது, இந்த போராட்ட குணம் பின்னாளில் நல்ல பலனை தந்தது எனலாம், இவரின் 45 வது வயது முதல் தற்பொழுது உள்ள காலம் வரை 7ம் எண் தனது ஆளுமைக்கு  கிழ் கொண்டு வந்து வெற்றி தோல்வி பலன்களை மாறி மாறி தந்துகொண்டே இருக்கிறது, பல சாதனைகளுக்கு சொந்தக்காராக இன்னும் மக்கள் சேவை செய்யும் யோகத்தை தந்துகொண்டு இருப்பது 7ம் எண்ணின் வலிமையே என்றால் அது மிகையில்லை .

தொடரும்........

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - சிம்மம்



சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   


ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது .


சிம்ம லக்கினம் :

சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் அமர்ந்த சனிபகவான் சிம்ம இலக்கின ஜாதகருக்கு சுக ஸ்தான அமைப்பில் இருந்து திடீர் என வீடு வாங்கும் யோகம், வீடு கட்டும் யோகம், புதிய சொகுசு வாகனம் வாங்கும் யோகம், கூட்டு முயற்சியாக பல தொழில்களில் முதலீடு செய்யும் அமைப்பு, வாழ்க்கை துணை வழியில் இருந்து  கிடைக்கும் எதிர்பாராத பொருளாதார உதவிகள், வெளியூர் பயணங்களால் ஜாதகருக்கு கிடைக்கும் யோக அமைப்புகள், ஆன்மீக பெரியவர்கள் மூலம் ஜாதகருக்கு திடீர் என கிடைக்கும் நல்லாசிகள் , போதும் என்ற மனம், விவாசாயத்தில் எதிர்பாராத நல்ல லாபம்,  வண்டிவாகன தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும், கலைத்துறையில் உள்ளவர்கள் மிகப்பெரிய அதிர்ஷ்ட வாழ்க்கை பெறுவார்கள் இதுவரை உழைத்த உழைப்பிற்கு இனிவரும் காலங்கள் சிறந்த  நன்மைகளை  ஸ்திரமாக தொடர்ந்து வழங்கும் என்பதால் இந்த சனி பெயர்ச்சி, சிம்ம இலக்கின ஜாதகர்களுக்கு 4ம் பாவக வழியில் இருந்து 100%  யோகத்தையே வாரி வழங்கும்.

6ம் பார்வையாக பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்தை பார்வை செய்யும் சனி பகவான் பொது காரியங்களில் ஈடுபடும் அன்பர்களுக்கு மிகப்பெரிய சோதனைகளை தருவார், மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையீடு செய்தால் , ஜாதகருக்கு வீண் அவபெயரும் மனோரீதியான போராட்டங்களையும்  எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மற்றவருக்கு ஜாமீன் தருவது , மற்றவருக்காக பொறுப்பை ஏற்று கொள்வது போன்றவை மிக பெரிய  துன்பங்களை வாரி வழங்கும், எந்த காரணத்தை கொண்டு எதிர்பால் அமைப்பினரிடம் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டிய காலம் இது ஏனெனில் ஆண் என்றால் பெண்களாலும், பெண் என்றால் ஆண்களாலும் தேவையில்லாத வீண் அவபெயரை சந்திக்கும் சூழ்நிலையை தரும், இதனால் தங்களின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்ப்பட அதிக வாய்ப்பு உண்டு அன்பர்களே, இது ஒரு வகையில் சிரமங்களை தந்த போதிலும் ஜாதகர் பல திரு தளங்களுக்கு சென்றுவரும் யோகம் உண்டாகும், சிறந்த ஆன்மீக பெரியோர் மற்றும் சமுதாய  பெரிய மனிதர்களின் ஆசிர்வாதமும், ஜாதகருக்கு பரிபூரணமாக் கிடைக்கும், எவ்வளவு துன்பம் வந்த போதிலும் ஜாதகருக்கு இறுதியில் நன்மையே உண்டாகும்.

7ம் பார்வையாக ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்தை பார்வை செய்யும் சனிபகவான் சிம்ம இலக்கின ஜாதகர்களுக்கு தொழில் ரீதியான வெற்றிகளை 100% வாரி வழங்குகின்றார், ஜாதகருக்கு வருமான வாய்ப்புகள் தொடர்ந்து  வந்தவண்ணம் இருக்கும் என்பதால் இது சிம்மலக்கினத்தருக்கு வருமான வாய்ப்பையும், தொழில் முன்னேற்றத்தையும் வாரி வழங்கும்,  சமுதாயத்தில்  கௌரவம் மற்றும் அந்தஸ்து சுய மரியாதை ஓங்கி நிற்கும், ஜாதகரின் புகழும் கீர்த்தியும் உலகம் முழுவதும் பிரபலமாகும், பொது மக்களை சார்ந்து தொழில் செய்துவரும்  சிம்ம இலக்கின அன்பர்களுக்கு அபரிவிதமான யோகங்களை வாரி வழங்கும், பொதுமக்கள் வழியில் இருந்து நல்ல வருமானத்தையும், நீடித்த ஆதரவையும் வாரி வழங்கும், ஜாதகரின் பேச்சு திறமையும், வாக்கு வன்மையும் பிரகாசிக்கும், நிதி நிறுவனம் அல்லது பணம் சார்ந்த தொழில்களை  செய்துவரும் அன்பர்களுக்கு இது ஒரு அபரிவிதமான வருமானத்தை வாரி வழங்கும் யோக காலம், இதுவரை திருமணம் ஆகாமல் தடைபெற்று  வந்த சிம்ம இலக்கின அன்பர்களுக்கு திடீரென குறுகிய காலத்தில்  திருமணம் நடைபெறும், சிறந்த குடும்ப வாழ்க்கை அமையும் என்பது  கவனிக்கத்தக்கது, சிம்ம இலக்கின அன்பர்களுக்கு இனிவரும் இரண்டரை வருடம்  சனிபகவான் மிகுந்த யோகத்தை ஜீவன வழியில் இருந்து வாரி வழங்குகிறார் என்பதால் சிம்ம இலக்கின அன்பர்கள் விழிப்புணர்வுடன் இருந்து தமக்கு வரும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் பெற ஜோதிடதீபம் வாழ்த்துகிறது.

10ம் பார்வையாக லக்கினத்தை பார்வை செய்யும் சனிபகவான், சிம்ம இலக்கின அன்பர்களுக்கு சிறந்த உடல் நலத்தையும், மன ஆரோக்கியத்தையும், அறிவில் தெளிவையும் தரும் காலம் இது, தனது சுய அறிவை கொண்டு, சாதுர்யமான செயல்களால் பல சாதனைகளை செய்யும் வாய்ப்பை தருவார் சனிபகவான் என்றால் அது மிகையில்லை, ஜாதகர் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் எவ்வித தடையும் இன்றி குறுகிய காலத்தில் சிறந்த வெற்றிகளை பெரும் யோகத்தை தரும், ஜாதகரின் சுய அறிவு திறன் பிரகாசிக்கும் யோக காலமாக இதை கருதலாம் அன்பர்களே !  உயர்கல்வி ரீதியாக ஜாதகர் எடுக்கும் முயற்சிகள் யாவும் நல்ல முன்னேற்றத்தையும் வெற்றியையும் தரும், கலைத்துறையில் இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் இரண்டரை வருடம் மிகப்பெரிய முன்னேற்றங்களை வாரி வழங்கும், புகழ் மிக்க பொறுப்புகளை ஜாதகர் ஏற்று நடத்தும் யோகம் உண்டாகும், குறுகிய வட்டத்தில் இருந்த அன்பர்களுக்கு இனிவரும் காலம்  உலகபிரசித்தியை பெற்றுத்தரும், உலக அளவில் சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்கள் பிரகாசிக்கும் யோக காலம் இது என்பதால், சிம்மலக்கினத்தை சார்ந்த அன்பர்கள் தனது தகுதிகளையும் திறமைகளையும் உலக அளவில் அறிமுகம் செய்து வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை பெறுங்கள் வாழ்த்துகள் .

 சிம்ம இலக்கின அன்பர்களே! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட1,4,9,10ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின் கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 1,4,9,10ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துக்கள் 


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 11 நவம்பர், 2014

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - கடகம்



சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   


ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது .


கடக லக்கினம் :

5ல் அமர்ந்த சனி பகவான் ஜாதகருக்கு நினைவாற்றலையும், சிந்தனை திறனையும் வெகுவாக குறைப்பார், ஞாபக மறதியால் திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது , வெளிநாடுகளில் இருப்பவர்கள் முதலீடுகளை செய்யும் பொழுது அதிக கவனமுடன் இருப்பது நலம், மற்றவருக்கு பண உதவிகள் செய்யும் பொழுது  உண்மை காரணத்தை அறிந்து செய்யுங்கள், இல்லை எனில் தேவையில்லாத மன உளச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும் காலம் இதுவென்பதால் ஜாதகர் தனது பிரச்சனைகளுக்கு தானே தீர்வுகளை தேடிகொள்வது சால சிறந்தது, முன் பின் யோசனை செய்யாமல் எடுக்கும் எந்த ஒரு காரியமும் எதிர்பாராத தடைகளை சந்திக்கும் என்பதால், நன்கு ஆலோசனை செய்து செயல்படுவது மிகுந்த யோகத்தை  தரும், இனிவரும் காலங்களில் ஜாதகர் மனோ ரீதியான பிரச்சனைகளை சந்திக்கும் சூழ்நிலைகளை அதிகம் தருவதால், தன்னம்பிக்கையை வளர்த்துகொள்வது நல்லது, அல்லது நல்ல ஆன்மீக பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவதும், தனது தாய் தந்தையின் மனம் நோகமால்  நடந்துகொள்வது சிறந்த நன்மைகளை வாரி வழங்கும்.

6ம் பார்வையாக ஜீவன ஸ்தானத்தை பார்வை செய்யும் சனிபகவான், ஜாதகருக்கு தொழில் ரீதியான முன்னேற்றத்தை அபரிவிதமாக வாரி வழங்குகிறார், இதுவரை மந்த நிலையில் சென்று கொண்டு இருந்த தொழில் இனி காட்டு தீ போல் வெகு வேகமாக முன்னேற்றத்தை தரும், குறிப்பாக தினம் தினம் அழியும் தன்மை கொண்ட உணவு பொருட்களை, வியாபாரமாக செய்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம், மேலும் விவசாயம், விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்தும் தொழில்களில் உள்ளவர்களுக்கு இது  ஒரு வருமான வாய்ப்பை வழங்கும் பொற்காலம், அரசு துறை வேலையை எத்திர்பார்த்து  இருப்பவர்களுக்கு திடீரென வேலைவாய்ப்பு கிடைக்கும், அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு திடீரென பதவி உயர்வு உண்டாகும், ராணுவம் மற்றும் காவல் துறையில் பணிபுரியும் அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும், சுய தொழில் செய்வோருக்கு இனி வரும் இரண்டரை வருடங்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், பொருளாதார ரீதியான தன்னிறைவையும் வாரி வழங்கும் .

7ம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்வை செய்யும் சனிபகவான், ஜாதகருக்கு அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே சகல அதிர்ஷ்டங்களையும் பெரும் யோகத்தை  தருகிறார், நேற்றுவரை சாமானியராக இருந்தவர்கள் இன்றுமுதல் அதிர்ஷ்ட தேவதையில் அருளை பெற்றவர்கள் ஆகிறார்கள், வருமான வாய்ப்பு ஜாதகரின் வாயிற்க் கதவை வழிய வந்து தட்டும், குறிப்பாக வட்டி தொழில் நகை வீடு அடமான கடன் தொழில் செய்பவர்களுக்கு இது ஏற்றமிகு யோக காலம்,  குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், ஜாதகரின் பேச்சுக்கு நல்ல மதிப்பு இருக்கும், ஜாதகரின் கட்டளைக்கு அனைவரும் அடிபணிந்து நடக்கும் யோகத்தை தரும், தனது சுய உழைப்பால் வீடு வண்டி வாகனம் வாங்கும் யோகத்தை தரும், முற்போக்கு சிந்தனையுடன் ஜாதகர் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெரும் , தனது வாத திறமையால் அனைத்தையும் சாதிக்கும் வல்லமையை தரும்.

10ம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்வை செய்யும் சனிபகவான், ஜாதகருக்கு குடும்பத்தில் சிறு சிறு சிரமங்களை தந்த போதிலும், வருமான வாய்ப்பை குறைக்க மாட்டார், ஜாதகர் தனது குல தெய்வத்தை நாடி வழிபாடு செய்வதால் சகல நலன்களும் பெறுவார், தனக்கு வரும் வருமானத்தை தேவையில்லாத செலவுகளை செய்து வீண் விரயம் செயாமல் இருப்பது  நலம் தரும், குடும்ப நலனை கருத்தில் கொண்டு செயல்படுவது சால சிறந்தது, உதாரணமாக குடும்பத்தில் உள்ள அனைவரது உடல் நலனிலும் அதிக அக்கறை கொள்வது நலம் தரும், அதே போன்று தங்களின் உடல் நலனினிலும் கவனமாக இருப்பது நலம், குறிப்பாக வயிறு சார்ந்த தொந்தரவுகள் அதிகரிக்க கூடும், உணவு பழக்க வழக்கங்களில் அதிக கவனமாக இருப்பது நலம் தரும், ஜாதகர் தனக்கு வரும் வருமானத்தை சேமிக்கவும், திட்டமிட்டு செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இனி வரும் இரண்டரை வருடகாலம் தரும்.

கடக இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட2,5,10,11ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின் கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 2,5,10,11ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 10 நவம்பர், 2014

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - மிதுனம்



சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   


ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது .

மிதுன லக்கினம் :

மிதுன லக்கினத்திற்கு 6ல் அமர்ந்த சனிபகவான் விபரீத ராஜ யோக பலன்களை வாரி வழங்க இருக்கிறார், உடல் ரீதியான சில பிரச்சனைகளால் பாதிக்க பட்டு இருந்த அன்பர்களுக்கு தற்பொழுது அதில் இருந்து குணம் பெரும் யோகத்தை தருகிறார், சிறு முதலீடுகளில் இருந்து எதிர்பாராத பெரிய தன வரவை பெரும் யோக காலமாக இந்த இரண்டரை வருட காலத்தை கருதலாம், மேலும் வெளிநாடுகளில் இருந்து திடீர் தனவரவை பெரும் யோகமும், புதிய பொருட்கள் வாங்கும் யோகமும், புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம், எதிர்பாராத புதிய உறவுகளின் ஆதரவு, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும்  மனமகிழ்வு மற்றும் பொருளாதார உதவிகள், புதிய தொழில் துவங்கும் யோகம், மக்கள் தொடர்புள்ள தொழில்களில் இருப்பவர்களுக்கு அபரிவிதமான தொழில் முன்னேற்றத்தை வாரி வழங்கும்  யோக காலமாக மிதுன  லக்கினத்தை சார்ந்தவர்கள் இந்த சனி பெயர்ச்சி இருக்கும்  என்பதை மறுப்பதற்கு இல்லை.

மிதுன லக்கினத்திற்கு 6ம் பார்வையாக 11ம் பாவகத்தை பார்வை செய்யும் சனி பகவான் ஜாதகருக்கு மிகுந்த அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்குகிறார், குறிப்பாக ஜாதகரின் செயல்பாடுகளும் , முயற்சிகளும் எளிதில் வெற்றி பெரும் யோக காலம் இது, ஜாதகரின் உடல் நலம் மற்றும் மன நலம் மிகவும் சிறப்பாக இருக்கும், நீடித்த அதிர்ஷ்டத்தை தொடர்ந்து வழங்கிய வண்ணம் சனிபகவான் இருப்பார், ஜாதகரின் சுறுசுறுப்பான செயல்கள் யாவும் புதிய வாய்ப்புகளை  வாரி வழங்கும், மேஷம் சர நெருப்பு தத்துவ அமைப்பில் செயல்படுவதால், ஜாதகருக்கு தரவேண்டிய யோக பலன்கள் யாவும் வெகு விரைவாக  குறுகிய காலத்தில் கிடைக்கும், ஜாதகரின் நம்பிக்கைகள் யாவும் அபரிவிதமான வெற்றியை பெரும் யோக காலம் இது, ஜாதகர் எந்த ஒரு   காரியத்திலும் மன உறுதியாக செயல்பட்டு பல சாதனைகளையும், அதிர்ஷ்டங்களையும், பெரும் யோக காலம் இதுவென்றால் அது மிகையில்.

மிதுனலக்கினத்திற்கு 7ம் பார்வையாக 12ம் பாவகத்தை பார்வை செய்யும் சனிபகவான் திருமணம் ஆகாத  மிதுன லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு உடனடியாக திருமண வாழ்க்கையை அமைத்து தருவர், இதுவரை வருமான வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அன்பர்களுக்கு நிலையான நீடித்த வருமான வாய்ப்பை தொழில் மூலமாக வாரி வழங்குவார், ஜாதகரின் பேச்சு திறமையும், தீர்க்கமான வாதமும் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்று தரும், ஜாதகரின் குடும்ப வாழ்க்கையில்  மகிழ்ச்சி பொங்கும், முதலீடு செய்த அமைப்பில் இருந்து எதிர்பாராத  தன வரவை பெறுவார்கள், வட்டி தொழில் மிகுந்த லாபத்தை தரும், ஜாதகரின் பண தேவைகள் யாவும் இனி வரும் காலங்களில் பூர்த்தியாகும், சிலருக்கு புதியதாக வீடு கட்டும் யோகம் அல்லது வாங்கும் யோகம் உண்டாகும், பல தொழில் செய்யும் யோகமும் பல வகையான வருமான வாய்ப்புகளும் மிதுன லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு பொருளாதார ரீதியான தன்னிறைவையும், மன நிம்மதியான குடும்ப வாழ்க்கையையும் வாரி வழங்கும்.

மிதுன லக்கினத்திற்கு 10ம் பார்வையாக 3ம் பாவகத்தை பார்வை செய்யும் சனிபகவான் திருமணம் ஆனா தம்பதியருக்கு உடனடியாக புத்திர சந்தான பாக்கியத்தை வாரி வழங்குகிறார், தனது குலம் செழிக்க நல்ல வாரிசு அமையும், குழந்தை பிறந்த நேரம் அனைவருக்கும் யோக காலத்தை வாரி வழங்கும், தற்பொழுது நடைபெற்ற  சனிபெயர்ச்சி மிதுன லக்கினத்தாருக்கு ஏஜென்சி துறையில் புகழ்பெற்ற வெற்றி வாய்ப்ப்களை வாரி வழங்கும், தன்னம்பிக்கையுடன் உழைத்து வாழ்க்கையில் குறுகிய காலத்தில் நல்ல அந்தஸ்தை நிலையாக பெரும் யோகத்தை தரும், ஜாதகரின் அறிவாற்றலும் சிந்தனைகளும் நீடித்த நன்மைகளை வாரி வழங்கும், ஜாதகர் எங்கு சென்றாலும் நல்ல வரவேற்ப்பையும்,சமூக  கௌரவம் மரியாதையை பெரும் யோகத்தை தரும், புதிய பதவிகளை அலங்கரிக்கும் யோகத்தை தரும், அரசியல் ரீதியான வெற்றிகள், மக்கள் ஆதரவை பெற்று தரும் யோக காலமாக இதை  கருதலாம்.

மிதுன இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட3,6,11,12ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின் கோட்சார நன்மைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 3,6,11,12ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696