ஞாயிறு, 29 ஜூலை, 2018

சுய ஜாதக ஆலோசணை : குரு திசை தரும் பலன் என்ன? எதிர்வரும் சனி திசை யோக வாழ்க்கையை தருமா?



 நவகிரகங்கள்  தனது திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் சுய ஜாதகத்தில் உள்ள பாவக பலனையே ஏற்று நடத்தும், தனிப்பட்ட ஆளுமையுடன் ஜாதகருக்கு யோக அவயோக பலாபலன்களை வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்பதே உண்மை நிலை, ஒருவரது சுய ஜாதகத்தில் எந்த கிரகத்தின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் நடைபெற்றாலும் சரி, அது சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவக தொடர்பின் தன்மையை உணர்ந்து பலன் காண முற்படுவதே மிக துல்லியமான ஜாதக பலாபலன்களை எடுத்துரைக்க வழிவகுக்கும், உதாரணமாக கீழ்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவாகங்கள் தொடர்பு பெரும் தன்மையை பற்றியும், நவகிரகங்கள் தனது திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் பற்றியும், அது தரும் நன்மை தீமை யோக அவயோக நிலை பற்றியும் இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் சிறப்பு தூர பிரயாணம் மூலம் லாபம், நல்லறிவு,  தெய்வீக சிந்தனை, மனோதத்துவ அனுபவம், ஆன்மீக ஈடுபாடு, அறிவுத்திறன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறுதல், உறவுகள் வழியிலான ஆதரவு, பெரியோர் மற்றும் ஆன்மீக அன்பர்களின் ஆசியை பெறுதல், சிந்தனையும் செயல்பாடும் ஜாதகருக்கு சிறப்பாக அமையும் தன்மை, எதிர்ப்புகளை இறை அருளின் கருணையின் மூலம் வெற்றி கொள்ளும் யோகம், புதுவித அணுகுமுறை, புதிய சிந்தனை, சிறந்த கல்வி மற்றும் அனுபவ அறிவு, நன்மைகள் ஜாதகருக்கு தேடி வரும் வாய்ப்பு, எந்த ஓர் சூழ்நிலையையும் சிறப்பாக எதிர்கொண்டு நலம் பெரும் தன்மை, அனைவரின்  நன்மதிப்பை பெறுதல் என்ற வகையிலும், பரந்த மனப்பக்குவம், மனதில் நினைத்தைதை சாதிக்கும் யோகம், ஸ்திரமான மன நிலை என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

9ம் பாவக வழியில் இருந்து மிகசிறந்த அறிவாளி, பயனவிரும்பி, தொலைதூர பயணங்கள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் தன்மை, புகழ் மிக்க கோவில்கள், புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், ஆன்மீக பெரியோரின் ஆசியை பெரும் தன்மை, இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பம் என்ற வகையிலும், ஆய்வு கல்வி அல்லது புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதர வசதியை பெரும் தன்மை, பெரியோரின் வார்த்தைகளை மதிக்கும் தன்மை, பித்ருக்கள் ஆசியின் மூலம் சகல சௌபாக்கியங்களையும் தன்னிறைவாக பெரும் யோக அமைப்பு, நல்லறிவு செய்யும் தொழில் வழியிலான நுணுக்கங்கள், திட்டமிட்டு  வெற்றியடையும் யோகம் அனைவரிடமும் நற்ப்பெயர் எடுக்கும் வல்லமை ஒழுக்கம், கட்டுப்பாடு, சுய அறிவு திறன் என்ற வகையில் ஜாதகருக்கு பாக்கிய ஸ்தான வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

2,8ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்திலேயே மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்பு ஆகும் ஜாதகருக்கு 2,8ம் பாவக வழியில் இருந்து அபரிவிதமான யோக வாழ்க்கை தேடிவரும், குறிப்பாக 2ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம்  நண்பர்கள் ஆதரவு, செல்வச்செழிப்பு, இனிமையான பேச்சு திறன், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, தன்னிறைவான வருமானம் , பொருளாதர வழியிலான அபரிவித வளர்ச்சி, தொடர்ச்சியான வருமான வாய்ப்புகள், அதிர்ஷ்டகரமான வாழ்க்கை முறை, வாக்கு சாதுர்யம், மண் மனை வண்டி வாகனம் மூலம் நல்ல வருமானம், புதிய சிந்தனைகள் மூலம் பொருளாதர தன்னிறைவை பெரும் யோகம் , திடீர் அதிர்ஷ்டம், வாழ்க்கை துணை  வழியிலான வருமானம் மற்றும் பொருளாதார உதவிகள், இனிமையான இல்லற வாழ்க்கை, தனது வாழ்க்கைக்கு உகந்த செயல்களை செய்து முன்னேற்றம் பெரும் தன்மை, வாக்கு பலிதம், தெய்வீக அனுக்கிரகம் மூலம் வரும் பொருளாதார சேர்க்கை,  நேர்மையான முறையில் ஜீவன முன்னேற்றம் பெரும் தன்மை என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு  புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை வாரி வழங்கும், ஜாதகரின் மனதின் ஆசைகள் யாவும் நிறைவேறும், நல்ல எண்ணங்கள் யாவும் ஜாதகருக்கு சிறப்பினை தரும், வாழ்க்கை துணை வழியிலான பெரும் தனசேர்கை உண்டாகும், திருமணத்திற்கு பிறகான  அதிர்ஷ்டம் என்பது ஜாதகருக்கு மிகவும் சிறப்பாக அமையும், வழக்கு, போட்டி, பந்தையங்களில் வெற்றியை தரும், போனஸ் பங்கு  வர்த்தகத்தில் வருமானம் உண்டு, கூட்டாளிகள் மற்றும் நண்பர்களின் மூலம் தனசேர்க்கையை தரும், வெளிநாடுகளில் இருந்துவரும் பொருளாதார உதவிகள் ஜாதகருக்கு சிறப்பு மிக்க எதிர்காலத்தை வாரி வழங்கும், திருப்தியான மனம் உண்டு, பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் ஜாதகருக்கு சிறப்பு மிக்க முன்னேற்றத்தை தரும், பொது வாழ்க்கையில்  பிரகாசிக்கும் யோகம் உண்டு, ஜாதகரின் 11ம்  பாவகம் சர மண் தத்துவத்தில் 15 பாகைகளையும், ஸ்திர காற்று தத்துவத்தில் 16 பாகைகளையும் கொண்டிருப்பது  ஜாதகருக்கான கவுரவம் அந்தஸ்துடன் கூடி அதிர்ஷ்டங்களை பரிபூர்ணமாக தரும் என்பதை மறுப்பதற்க்கு வாய்ப்பில்லை, ஜாதகரின் நேர்மையான நடவடிக்கைகளும், அறிவார்ந்த செயல்பாடுகளும், பொறுமை மிக்க குணாதிசயமும் லாப திடீர் அதிர்ஷ்டத்தை குறிக்கும் ஆயுள் பாவக  வழியில் இருந்து சுபயோகங்களை தருவதுடன், நீண்ட ஆயுளையும் வாரி  வழங்கும், தன் வாழ்நாள் முழுவதும் சுபயோகங்களை எதிர்பாராமல் சந்திக்கும் வல்லமை பெற்றவர் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

4,5,6,11ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து சிறந்த கல்வி அறிவு, வழக்குகள் மூலம் சொத்து கிடைக்கும் வாய்ப்பு, சிறந்த குடும்பஸ்தராக விளங்கும் தன்மை, தேர்வு தேர்தலில் வெற்றி, தொழில் துறையில் அதீத ஈடுபாடு, பணியாளர்களுடன் நட்புறவு, எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றிகொள்ளும் தன்மை, உடல் நல  பாதிப்பு, பண்ணை தொழில் அல்லது விவசாயம் ஜாதகருக்கு சிறப்பை தரும், துணி வகை சார்ந்த தொழில் வழியில் நல்ல முன்னேற்றம் உண்டு, ஜாதகரின் நல்ல  குணம் அனைவராலும் விரும்பபடும், பண்ணை தொழில் ஜாதகருக்கு அபரிவித   வளர்ச்சியை வாரி வழங்கும், அரசியலில் நல்ல லாபமும், எதிர்பாராத பதவியும் தேடி வரும், சுகபோக யோக வாழ்க்கையை அனுபவிக்க தடையேதும் இருக்காது.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சகல நிலைகளில் இருந்தும் வெற்றி வாய்ப்பை நல்கும், சூது மூலம் அதிர்ஷ்டம் உண்டாகும், பங்கு சந்தை தரகு தொழில் வழியில் நல்ல வருமானம் உண்டு, தெய்வீக அனுக்கிரகம், குலதெய்வ வசியம் மூலம் நினைக்கும் அனைத்து காரியங்களையும் வெற்றிகொள்ளும் தன்மையை தரும், ஜாதகரின் புத்திசாலித்தனம் மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும் , சமயோசித அறிவு திறன் ஜாதகருக்கு நீண்ட நாள் பொருளாதர வசதி வாய்ப்பை நல்கும், புதுமை மற்றும் புதிய சிந்தனைகள் மூலம் ஜாதகர் மிகப்பெரிய வெற்றிகளை சுவீகரிக்கும் யோகத்தை தரும், நல்ல குழந்தைகள், அவர்கள் வழியிலான யோக வாழ்க்கை என்ற வகையிலும், மகிழ்ச்சி மிக்க குடும்ப வாழ்க்கை என்ற வகையிலும் நன்மைகளை வாரி வழங்கும்.

6 ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறு சிறு உடல்நல குறைவை தருவதுடன் கடன்சார்ந்த இன்னல்களை தரக்கூடும் இருப்பினும் பொருளாதரா தன்னிறைவை தரும் மற்றவர்கள் செல்வத்தை ஆளுமை செய்யும் யோகம் உண்டு, எதிர்ப்புகள் பெரிய அளவில் வந்த போதிலும் அதனை மிக எளிதாக வெற்றிகொள்ளும் சூட்ஷமம் அறிந்தவராக திகழ்வார், போட்டி பந்தயம், தேர்தலில் வெற்றியை தரும், அதிகார பதவியை பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும், வழக்குகளில் வெற்றி உண்டு, சிறந்த உழைப்பாளி, நோய் எதிர்ப்பு திறன் குறைவு, மற்றவர்களால் தானும், தன்னால் மற்றவரும் இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், கேட்க்கும் இடத்தில் இருந்து கடன் கிடைக்கும், இருப்பினும் சிறந்த நிதி நிர்வாக திறனை வளர்த்துக்கொள்வது சகல நன்மைகளையும் தரும்.

11ம் பாவக வழியில் இருந்து தேர்தல், போட்டி பந்தயங்களில் வியக்கத்தக்க வெற்றியை  தரும், வேலையாட்கள் மூலம் அபரிவித வளர்ச்சியை பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும், தன்னிலை உணர்வும், எச்சரிக்கை மனப்பான்மையும் ஜாதகருக்கு வரும் இன்னல்களை வெகுவாக தடுக்கும், எதிரிகளின் வழியிலான லாபம் அதிகரிக்கும், போட்டியாளர்களின் செயல்பாடுகள் ஜாதகருக்கான அதிர்ஷ்டத்தை வெகுவாக வாரி வழங்கும், வருமுன் உணரும் சக்தி உண்டு என்பதால் ஜாதகர் சிறப்பான நன்மைகளை தொடர்ந்து  பெறுவார், நல்ல யோகமிக்க பணியாளர்கள் அமைவார்கள், அவர்களின் உண்மையான உழைப்பு ஜாதகருக்கு மிகப்பெரிய தனசேர்க்கையை வாரி வழங்கும், வாழ்க்கையை மிக சிறப்பு மிக்கதாக மாற்றிக்கொள்ளும் வல்லமை கொண்டவராக திகழ்வார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

10ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு எதிர்பாராத கவுரவ குறைவை தரக்கூடும், மற்றவர்களின் விஷயத்தில் தலையீடு செய்வது ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், தொழில் வழியில் மிகுந்த சிரமத்தை தரும், சுய தொழில் வழியிலான இன்னல்கள் அதிகரிக்கும், அதிக வேலைப்பளு, திருப்தி இல்லாதா மனநிலை, தொழில் மற்றும் பொது வாழ்க்கையில் பின்னடைவு, சரியான முடிவு மேற்கொள்ள இயலாத சூழ்நிலை, எதிர்பாராத ஏமாற்றங்கள், பதவியில் இருந்து திடீர் இழப்பு என்ற வகையில் இன்னல்களை தருவதுடன் அந்தஸ்தை வெகுவாக குறைக்கும், சரியான திட்டமிடுதல் இல்லை எனில் ஜாதகரின் வாழ்க்கையில் முரண்பட்ட நிகழ்வுகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும், குறிப்பாக ஜாதகர் எதிர்பாலின அமைப்பினரிடம்  எச்சரிக்கை உடன் பழகுவதுடன், வலிமை பெற்ற ஜாதகியை வாழ்க்கை துணையாக ஏற்பது நன்மையை தரும், மேலும் தொழில் வழியிலான இன்னல்களுக்கு உடனடி தீர்வை நாடுவது நன்மையை தரும்.

3,7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து மருந்து, மருத்துவ உபகரணம் மூலம் அபரிவித லாபம் உண்டாகும், விட்டுக்கொடுக்கும் தன்மை, எதிர்ப்புகளை சமாளிக்கும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தந்த போதிலும் ஜாதகரின் முயற்சி இன்மை வெகுவான தாமதத்தை தரும், முயற்சிக்கும் காரியங்களும்  சிலநேரங்களில் தோல்வியை தரக்கூடும், வேற்று இனம், வேற்று மதத்தினர் மூலம் நல்ல லாபங்கள் உண்டாகும், ரகசிய காதல், சட்டம் மூலம் ஆதாயம், புதிய  அறிய கண்டுபிடிப்புகள், தர்ம சிந்தனை, உண்மை மற்றும் சத்தியத்தை மதித்து நடக்கும் யோகம் உண்டாகும், சகோதர வழி ஆதரவு இன்மையும், வீரியமிக்க செயல்திறனில் பாதிப்பையும் தரும் என்பதால், ஜாதகர் அதீத விழிப்புணர்வுடன் செயல்படுவது சகல நன்மைகளையும் தரும்.

7 ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கூட்டளிகள் நண்பர்கள் வழியிலான பொருளாதார முன்னேற்றம் பெறுவார் என்ற போதிலும் இறுதியில் மனக்கசப்பை தரும், கூட்டு முயற்சி ஜாதகருக்கு வீண் விரயத்தை தரும், நல்ல நண்பர்கள் அமைவது அரிது, வெளியூர் வெளிநாடுகளில் இருந்து தனசேர்க்கை உண்டு என்ற போதிலும், ஜீவனம் செய்ய உகந்ததாக அமையாது, அனைத்து காரியங்களையும் ஜாதகர் ரகசியமாக மேற்கொள்வதே சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும், சரியான வாழ்க்கை துணையை தேர்வு செய்யவில்லை எனில் விவாகரத்து செய்யும் சூழ்நிலையை தரும், அரசியலில் திடீர் சிக்கல்களை தரும், தனிப்பட்ட முயற்சிகள் மட்டுமே ஜாதகருக்கு சிறப்பான யோக வாழ்க்கையை தரும், வெகுவான துன்பங்களையும், தொல்லைகளையும் ஜாதகர் எதிர்கொண்டே ஆக வேண்டிய கட்டாயம் உருவாகலாம் என்பதை மனதில் வைத்து செயலாற்றுவது ஜாதகருக்கு சுபயோகங்களை தரும்.

12ம் பாவக வழியில் இருந்து அனைவராலும் தொல்லை உண்டாகும், மன நிம்மதி மன அழுத்தம் இரண்டும் வெகுவாக ஜாதகரை பாதிக்கும், திடீர் இழப்புகள் ஜாதகருக்கு பொருளாதார நெருக்கடிகளை தரும், நிறைய வீண் செலவினங்களை தரும், பங்கு சந்தை முதலீடுகள் வெகுவாக பாதிக்கும், சூது மூலம்  அனைத்தையும் இழக்கும் தன்மையை தரும், எதிர்பாராத விபத்து ஜாதகரின் வாழ்க்கையையே கடுமையாக பாதிக்கும் என்பதால், பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வது சகல நன்மைகளையும் தரும், தாம்பத்திய வாழ்க்கையில் விட்டு கொடுத்து செல்வது ஜாதகருக்கு சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை தரும், பிடிவாதம், முரட்டுத்தனம் ஜாதகரின் வாழ்க்கையை  வெகுவாக பாதிக்கும் என்பதுடன் மனஅழுத்தத்தை அதிகரிக்கும், ஆன்மீக பெரியோரின் ஆசிர்வாதம் ஜாதகருக்கு மேற்கண்ட இன்னல்களில் இருந்து விடுதலையை தரும்.

நடைபெறும் குரு திசை தரும் பலன்கள் : ( 20/02/2012 முதல் 20/02/2028 வரை  )

ஜாதகருக்கு குரு பகவான் தனது திசையில் 1,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 2,8ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் 1,2,8,9ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்குவது ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும் விஷயமாகும், குறிப்பாக 2,8ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் வியக்கத்தக்க  நன்மைகளை வாரி வழங்கும், வருமானம் பொருளாதாரம் உயரும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி ஜாதகருக்கு மிகவும் அபரிவிதமாக அமையும், குரு திசையில் தற்போழுது நடைபெறும் புதன் புத்தி  ஜாதகருக்கு ( 26/01/2019 வரை ) 8,12ம் பாவக தொடர்பை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை 3,7,10,12ம் வீடுகள் வழியில் இருந்து தரும் என்பதால் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டிய கட்டாயம் ஜாதகருக்கு  அதிக அளவில் உள்ளது, எதிர்வரும் கேது புத்தி ( 02/01/2020 வரை ) 4,6ம் வீடுகள் சத்ரு  ஸ்தானமான 6ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஓரளவிற்கு நன்மையை தரும், அதன் பிறகு வரும் சுக்கிரன் புத்தி ( 02/09/2022 வரை ) ஜாதகருக்கு 1,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் 4,6ம் வீடுகள் சத்ரு  ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் யோக வாழ்க்கையை தருவது வரவேற்கத்தக்கது, எனவே குரு திசையில் எதிர்வரும் புத்திகள் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புள்ள வீடுகளின் பலாபலன்களை தருவது ஜாதகரின் எதிர்கால வாழ்க்கைக்கு உகந்த நன்மைகளை தரும்.

எதிர்வரும் சனி திசை தரும் பலன்கள் : ( 20/02/2028 முதல் 19/02/2047 வரை )

ஜாதகருக்கு எதிர் வரும் சனி திசை தனது திசையில் 2,8ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் 2,8ம் வீடுகள் வழியில் இருந்து அதிர்ஷ்டத்தையும் யோக வாழ்க்கையையும் 100% விகிதம் தருவது வரவேற்கத்தக்கது, எதிர்வரும் சனி திசையில் ஜாதகர் பொருளாதர ரீதியாகவும், குடும்ப வாழ்க்கையிலும் நீடித்த அதிர்ஷ்டங்களை பெற்று பெருவாழ்வு பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும் என்பதுடன் இதுவரை இல்லாத முன்னேற்றங்களும், சொத்து சுக சேர்க்கை வண்டிவாகன யோகம், வீடு மனை இடம் ஆகியவற்றை தனது சுய உழைப்பின் மூலம் பெறுவதற்கான வாய்ப்புகளை வாரி வழங்கும், ஜாதகரின் பேச்சு திறன் பன்மடங்கு லாபங்களை வாரி வழங்கும், எதிர்பாராத லாபமும் அதிர்ஷ்டமும் ஜாதகருக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், 8ம் பாவக வழியில் இருந்து வரும் திடீர் அதிஷ்டம் ஜாதகருக்கான  யோக வாழ்க்கையை உறுதி செய்யும், வாழ்க்கை துணை வழியிலான அதிர்ஷ்டம், முன்னேற்றம் ஆகிவை பொருளாதர ரீதியாக வந்து சேரும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் ஜாதகரின் வாழ்க்கை சனி திசையில் செல்வச்செழிப்புடன் திகழும், நீண்ட ஆயுள் உண்டு என்பதால் ஜாதகரின் வாழ்க்கை சுபயோகங்கள் நிறைந்ததாக விளங்கும்.

குறிப்பு :

ஜாதகருக்கு நடைபெறும் குரு திசையும், எதிர்வரும் சனி திசையும் யோக வாழ்க்கையே தருகின்றது என்பதால் எதிர்காலம் மிகவும் யோகமிக்கதாக காணப்படுகிறது, எனவே ஜாதகர் விழிப்புணர்வுடன் செயல்பட்டு சகல சௌபாக்கியங்களையும் பெறுக.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 25 ஜூலை, 2018

சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களின் வலிமை, ராகுகேதுவினால் ஜாதகர் பெரும் நன்மை !

 

 சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் முற்பகுதியில் சிறு சிறு இன்னல்களை தந்த போதிலும் ( வளரும் சூழ்நிலை பாதிப்பு, பெற்றோரை விட்டு பிரிந்து வாழும் சூழ்நிலை, கல்வியில் தடை, தொழில் வழியில் தடை, வாழ்க்கை துணையை தேடுதலில் இன்னல்கள், உடல் மனம் பாதிக்கும் தன்மை என்ற வகையில் ) பிற்பகுதியில் அபரிவிதமான யோக வாழ்க்கையை வழங்குவது வரவேற்கத்தக்க விஷயமாகும், மேலும் நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது, சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு மிகுந்த நன்மையான பலாபலன்களையே வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது, பொதுவாக சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு புலனுக்கு அப்பாற்பட்ட அறிவுத்திறனை வாரி வழங்கிவிடுகிறது, ஜாதகர் சுய ஒழுக்கம் மட்டும் கட்டுப்பாட்டை பேணும் தன்மை கொண்டவராக இருப்பின், அவரது வாழ்க்கை மிகவும் சுவாரஷ்யம் மிக்கதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை அன்பர்களே! இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : விருச்சிகம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : பூரம் 2ம் பாதம்

இந்த விருச்சிக லக்கின ஜாதகருக்கு 5ல் ராகுவும், 11ல் கேதுவும் அமர்ந்திருப்பது மேலோட்டமாக காணும் பொழுது 5ல் அமர்ந்த ராகு புத்திர தோஷத்தை தரும் என்று  கருதக்கூடும், பாவக வழியிலான ஆய்வில் ராகு அமர்ந்த 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த வலிமை பெற்ற அமைப்பாகும், மேலும் ஜாதகரின் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியான மீனராசியில் 8பாகைகளையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷத்தில் 21 பாகைகளையும் கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகரின் மனம் மிக வேகமாக சஞ்சரிக்கு வல்லமை கொண்டது என்பதுடன் ஜாதகரின் மனதில் எண்ணிய காரியங்களை மிக விரைவாக முடிக்கும் வல்லமையை தரும், தனது சுய அறிவு திறன் மற்றும் அதி புத்திசாலித்தனம் இரண்டு ஜாதகருக்கு சரியான நேரத்தில் நல்லொதொரு பலாபலன்களை வாரி வழங்கும், ஜாதகரின் குல தெய்வ ஆசி செயற்கரிய காரியங்களை மிக எளிதாக செய்துமுடிக்கும் வல்லமையை தரும், நல்லோர் சேர்க்கையும், ஆன்மீக பெரியோரின் ஆசியும் ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க எதிர்காலத்தை வாரி வழங்கும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தருவதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியை வாரி வழங்கும்.

ராகு பகவானின் அமர்வு என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு அயன சயன ஸ்தானமாகவும், ஜென்ம ஸ்தானமாகவும் அமைவது, ஜாதகரின் நல்லறிவும் ஆராய்ச்சி மனப்பக்குவமும் சிறப்பு மிக்க எதிர்காலத்தை அமைத்து தரும் மிதமிஞ்சிய நல்ல வாய்ப்புகளையே உருவாக்கி தரும், புதிய கண்டுபிடிப்புகள் அல்லது புதிய முயற்சிகளில் நல்லதோர் எதிர்காலத்தை தரும், ஜாதகரின் மனமும் உடலும் மிக சிறப்பாக இயங்கும் என்பது கவனிக்கத்தக்கது, சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை அற்றவர்கள்  ஓர்  காரியத்தை செயல்வடிவமாக பார்க்க பகிர்தனா கஷ்டங்களை சந்திக்கும் பொழுது சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை பெற்ற அன்பர்கள் மிக எளிதாக ஓர் செயலை செய்து செயல்வடிவம் காண்பார்கள், தன்னம்பிக்கையும், முற்போக்கு சிந்தனையும்  ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும், எதையும் சாதிக்கும் வலிமையை  ஜாதகருக்கு  பரிபூர்ணமாக  நல்கும் என்பது கவனிக்கத்தக்கது.

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ராகு 5ல் அமர்ந்து வலிமை பெறுவதும், 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் சுபயோக வாழ்க்கையை தருவதில் யாதொரு தடைகளையும் வழங்காது என்பது கவனிக்கத்தக்கது, தனது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஜாதகர் 5ம் பாவக வழியில் செலுத்த ஆரம்பிக்கும் பொழுது 5ம் பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான்  வழங்கும் சுபயோக வாழ்க்கையை யாதொரு தடையும் இன்றி  சுவீகரிக்கலாம்.

சம வீடான 11ல் கேது அமர்வது ஜாதகருக்கான அதிர்ஷ்டத்தை பரிபூர்ணமாக பெரும் வாய்ப்புகளை  வாரி வழங்கும், ஜாதகருக்கான அதிர்ஷ்டம் என்பது ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் வழியில் இருந்தும், சத்ருக்கள் வழியில் இருந்தும் வரக்கூடும் என்பதுடன், உபய மண் தத்துவம் சார்ந்த அமைப்பில் இருந்தும் சர காற்று தத்துவ அமைப்பில் இருந்தும் வந்து சேரும், மேலும் எதிர்பாலினம் நண்பர்கள், கூட்டாளிகள் வெளியூர் அல்லது வெளிநாடு என்ற அமைப்பில் இருந்து ஜாதகருக்கு பரிபூர்ண சுபயோகங்களை நல்கும், கேது பகவானின் வலிமை ஜாதகருக்கு அபரிவித நன்மைகளை சிந்தனை ஆற்றல் வழியில் இருந்து  வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, குறிப்பாக வியாபாரம் சார்ந்த அமைப்பில் ஜாதகரின் முன்னேற்றம் தன்னிறைவாக அமையும் அல்லது வெளிநாடுகளிலான ஜீவனம் ஜாதகருக்கு மிதமிஞ்சிய அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு 11ல் கேது வலிமை பெற்று அமர்வதுடன், சுய ஜாதகத்தில் பாவக  வழியிலான தொடர்பு என்பது 11ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது நிறைவான சொத்து சுக சேர்க்கையை வாரி வழங்கும், நல்ல குணமும் ஜாதகரின் செயல்பாடுகளும் சமூக அந்தஸ்த்தை குறுகிய காலத்தில் பெற்றுத்தரும், ஜாதகரின் தன்னம்பிக்கை லட்சியம், மனோதிடம் போன்றவை 11ம் பாவக வழியில் இருந்து சில எதிர்பாராத நன்மைகளை தருவதுடன் சிறந்தவற்றை தேர்ந்துஎடுக்கும் வல்லமையை  தரும், வண்டிவாகன யோகம், வீடு நிலம் சார்ந்த தொழில்கள் வழியில் இருந்து ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும் மிதமிஞ்சிய லாபங்கள் வந்து சேர்வதுடன் தொழில் விருத்தியும் அபரிவிதமாக அமையும், ஜாதகரின் லாப ஸ்தானத்தில் பெரும்பகுதி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் ராசியிலேயே வியாபித்து நிற்பது ( 21 பாகைகள் ) ஜாதகர் வெளிநாடுகளில் மிதமிஞ்சிய  அதிர்ஷ்ட வாழ்க்கையை பெறுவார் என்பதை கட்டியம் கூறுகிறது.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் ஒருவருக்கு சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்திற்க்கு வலிமை சேர்க்கும் விதத்தில் இருப்பின், ஜாதகருக்கு விவரிக்க இயலாத சில தனி திறமைகளை கொண்டவராக திகழ்வார், தன்னிடம் உள்ள தனித்திறனை கண்டுணர்ந்து அதில் ஆர்வம் காட்டுவது ஜாதகருக்கான வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பதுடன், பிரபல்ய யோகமும், உலகப்புகழ் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை இந்த கட்டுரையில் பதிவு செய்ய "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 20 ஜூலை, 2018

12ல் செவ்வாய் தோஷம் தனது திசையில் நன்மை செய்யுமா? எதிர்வரும் ராகு திசை தரும் பலன் என்ன ?


கேள்வி :
12ல் செவ்வாய் தோஷம் உள்ளது, தற்போழுது செவ்வாய் திசையே நடைமுறையில் உள்ளது செவ்வாய் தோஷம் என்பதால் தனது திசையில் இன்னல்களை தருமா ? லாப ஸ்தானமான 11ல் நின்ற ராகு திசை எனக்கு யோக வாழ்க்கையை வழங்குமா? எதிர்காலம் எப்படி இருக்கும் ?

பதில் :

 " ஜோதிடம் ஒரு கடல் " இதில் நீச்சல் தெரிந்தவர்கள் மூழ்கி முத்துஎடுக்கலாம், தெரியாதோர் கரையில் நின்று வேடிக்கை மட்டும் பார்க்க இயலும் என்பது உண்மை நிலை, தங்களது கேள்வியிலேயே, செவ்வாய் தோஷம் உள்ளதால் செவ்வாய் திசை இன்னல்களை தரும் என்ற எண்ணமும், 11ல் அமர்ந்த ராகு தனது திசையில் யோக வாழ்க்கையை தரும் என்ற எதிர்பார்ப்பும் இழையோடி நிற்பது தெளிவாகிறது அன்பரே, தங்களின் மனஓட்டம் நிறைவேறுகின்றதா ? என்பதை தங்களது சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : கடகம் 
ராசி : தனுசு 
நட்ஷத்திரம் : பூராடம் 1ம் பாதம் 

தங்களது ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை ( 15/01/2017 முதல் 16/01/2024 வரை ) லக்கினத்திற்கு விரைய ஸ்தானமான 12ல் அமர்ந்து நடைபெற்ற போதிலும் தனது திசையில் தங்களது ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்கது, அதாவது செவ்வாய் தனது திசையில் 3,7ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று சகோதரம் மற்றும் வீரிய ஸ்தானமான 3ம் பாவக வழியில் இருந்தும், களத்திரம் மற்றும் வியாபர விருத்தியை தரும் 7ம் பாவக வழியில் இருந்து தங்களுக்கு மிகுந்த சுபயோகங்களை நல்குவது வரவேற்கத்தக்கது, 3,7ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெறுவது தங்களுக்கு 3ம் பாவக வழியில் இருந்து நிலையான சுய முன்னேற்றம், எளிதான பொருள் வரவு, செய்யும் தொழில் வழியில் அபரிவித முன்னேற்றம், வீரியமிக்க செயல்பாடுகள், சகல சௌபாக்கியம், கலையில் தேர்ச்சி, சமூக அந்தஸ்து, அரசியலில் வெற்றி, தீர்க்காயுள், பெரியோர் வழியிலான ஆசி, அறிவு திறன் புத்திகூர்மை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுதல், நியாமான வியாபார விருத்தி, விவசாயம் பத்திரிக்கை துறையில் முன்னேற்றம், சாஸ்திர ஆராய்ச்சி மூலம் லாபம், விளையாட்டு, இசை துறையில் ஆர்வம், லாட்டரி யோகம், வழக்கு போட்டி பந்தயங்களில் வெற்றி, வெளியூர் வெளிநாடு பயணம், ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், என்ற வகையில் சிறப்புகளை தரும், எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி மேல் வெற்றியை தரும், முன்னேற்றம் என்பது தன்னிறைவாக அமையும், மனோதைரியமும், தன்னம்பிக்கையும் வெகுவாக யோக பலன்களை வாரி வழங்கும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு பன்மடங்கு பெருகும், அவர் வழியிலான உதவிகள் ஜாதகருக்கு மிதமிஞ்சிய லாபங்களை வாரி வழங்கும், அரசியல், கூட்டு தொழில், நண்பர்கள் மூலம் வியாபாரம் விருத்தி அடையும், பிரபல்ய யோகம் உண்டு என்பதால் ஜாதகரின் முன்னேற்றம் வெகு விரைவில் அமையும் என்பது கவனிக்கத்தக்கது, நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் ஜாதகருக்கு சிறப்பாக அமைவார்கள், தனசேர்க்கை ஜாதகருக்கு பெரிய திட்டமிடுதல்களை மிக எளிதாக வெற்றிகொள்ளும் வாய்ப்பை நல்கும், சமூகத்தில் ஜாதகருக்கு மதிப்பு  மரியாதையும், கவுரவ பதவிகளும் தேடி வரும், எதிர்பாரத தொழில் வெற்றிகளை சுவீகரிக்கும் வல்லமையை தற்போழுது நடைபெறும் 12ல் அமர்ந்த செவ்வாய் திசையையே ( 12ல் செவ்வாய் தோஷம் ) தங்களுக்கு வாரி வழங்குகிறது என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

எதிர்வரும் ராகு திசை தரும் பலன்கள் : ( 16/01/2024 முதல் 16/01/2042 வரை )

ராகு தனது திசையில் தங்களுக்கு 1,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தர இருப்பதும், 5,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தர இருப்பதும் தங்களுக்கு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவக வழியில் இருந்தும், 200% விகித இன்னல்களை தரும் பாதக ஸ்தான வழியில் இருந்து ஏக காலத்தில் வெகுவான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், ராகு திசையில் தாங்கள் எடுக்கும் முடிவுகள் யாவும் கடும் சேதாரத்தையே வாரி வழங்கும், லக்கின  பாவக வழியில் இருந்து உடல் நலம் மற்றும் மனநலம் பாதிக்கும், சூழ்நிலை சந்தர்ப்பங்களை அடிபணியும் நிலையை தரும், நினைத்த காரியங்கள் நடைபெற கடும் போராட்டத்தை மேற்கொள்ளும் சூழ்நிலையை தரும், சரியான முடிவுகளை மேற்கொள்ள பகிர்தனா முயற்சிகள் எடுக்கும் சூழ்நிலையை தரும், உதவி செய்ய யாருமற்ற நிலையை தரும், எதிர்பார்ப்புகள் யாவும் பொய்த்துப்போகும், நிம்மதியை வெகுவாக பாதிக்கும், 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமின்மையால் மிகுந்த சிரமங்களை எதிகொள்ளும் சூழ்நிலையை தரும், பிற்போக்குத்தனம், கற்பனையில் சஞ்சரிக்கும் நிலை, மூடநம்பிக்கையில் ஆர்வம், மற்றவருடன் குற்றம் கண்டுபிடிக்கும் மனநிலை என்ற வகையில் தங்களின் முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும்.

5ம் பாவக வழியில் இருந்து தங்களின் பூர்வீக இடத்தில் இருந்து வெகு தொலைவு  சென்று பரதேஷ ஜீவனம் மேற்கொள்ளும் நிலையை தரும், குழந்தைகள் வழியிலான இன்னல்கள் அதிகரிக்கும், தெளிவில்லாத சிந்தனை, தவறான முடிவுகள் மூலம் மிகப்பெரிய இழப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும், உறவுகள் வழியிலான மனக்கசப்பு அதிகரிக்கும் என்பது கவனிக்கத்தக்கது, 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்பு, உடல் நல பாதிப்பு, வீண் விரையம், மருத்துவ செலவினங்கள், விபத்தின் மூலம் பாதிப்பு, வண்டி வாகனம் மூலம் வரும் பெரும்செலவுகள், உடலில் காயங்கள் ஏற்படுதல் அதனால் வரும் மருத்துவ செலவினங்கள், நம்பிக்கை இன்மை, அனைவராலும் தொல்லை, பொது வாழ்க்கையில் அவப்பெயர் என்ற வகையில் தங்களுக்கு 11ல் வலிமை பெற்று அமர்ந்து இருக்கும் ராகு திசை மிகுந்த இன்னல்களையே வாரி வழங்க உள்ளது என்பதை கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட்டு அவயோக பலாபலன்களை தவிர்க்க முற்படுங்கள்.

குறிப்பு :

12ல் தோஷம் தரும் செவ்வாய், தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தி யோக பலன்களையும், 5ல் வலிமை பெற்று அமர்ந்து இருக்கும் ராகு தனது திசையில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாதகம் மற்றும் ஆயுள் ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கான விதி அமைப்பு இதை ஜாதகர் தனது மதிகொண்டு வெல்ல இறையருள் கருணைபுரியட்டும் வாழ்த்துகள்......

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 19 ஜூலை, 2018

சுய ஜாதக ஆலோசணை : ராகு திசை மற்றும் ராகு புத்தியால் என்ன நடக்கும் ?



கேள்வி :

 பிறந்த தேதி : ( 12/07/2017 )  நேரம் இரவு : (11.10) இடம் : சென்னை

எனது மகனின் பெயர்  கோகுல், ராகு  திசை ராகு புத்தி பிறந்துள்ளான், தற்போழுது உடல் வலிமை இல்லாமல் இருக்கின்றான், இதற்கான காரணம் என்ன ? ராகு திசை மற்றும் ராகு புத்தியால்  என்ன நடக்கும் ? எனது மனம் மிகுந்த  குழப்பத்தில் உள்ளது, சரியான பதில் மற்றும் தீர்வை தர இயலுமா ?

பணிவுடன்
வேல்முருகன்
சென்னை



பதில் :

 பொதுவாக நாம் நமது சுய ஜாதக வலிமையை பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நமது ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை சுவீகரிக்கவும், அவயோகங்களை தவிர்க்கவும் நமக்கு நல்லதோர் வழிகாட்டுதல்களை வாரி வழங்கும், தாங்கள் வினவியிருக்கும் தங்களது மகனின் ஜாதகத்திற்க்கான பதில்களை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே! சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் வலிமை பெற்று இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு வளரும் சூழ்நிலையில் சிறப்பு, உடல் ஆரோக்கியம், மனநலம், தெய்வீக அனுக்கிரகம், தன்னம்பிக்கை மிக்க மனநிலை, நோய் எதிர்ப்பு சக்தி, புகழ், வெற்றி, எதிர்ப்புகள் அனைத்தையும் சமாளிக்கு வல்லமை, தெளிவான சிந்தனை, நீண்ட ஆயுள், சுய ஜாதகத்தில் உள்ள யோகங்களை சுவீகரிக்கும் வல்லமை என்ற வகையில் நன்மைகளை தரும் என்பது கவனிக்கத்தக்கது.

 ஆனால் தங்களது மகனின் ஜாதகத்தில் 1,2,7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது லக்கினம் சற்று வலிமை இழந்து காணப்படுகிறது, மேலும் குடும்ப ஸ்தானமான 2ம் வீடு, களத்திர ஸ்தானமான 7ம் வீடு, அயன சயன ஸ்தானமான 12ம் வீடுகள் அனைத்தும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கான நெருக்கடிகளை அதிக அளவில் தரும் என்பது கவனிக்கத்தக்கது, தங்களுக்கு உண்டான நல்ல செய்தி என்னவென்றால் ஜாதகருக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவகம் கும்ப ராசியில் 22பாகைகளையும்,  மீன ராசியில் 13பாகைகளையும் கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாகும், காற்று தத்துவம் மற்றும் நீர் தத்துவ ராசிகள் விரைய ஸ்தான அமைப்பில் வியாபித்து நிற்பது உடல் தொந்தரவை தந்த போதிலும் அதில் இருந்து ஜாதகருக்கு நிவாரணத்தையும் தரும் என்பதுடன், பாதிப்பு கடுமையாக இருக்காது, எனேவ ஜாதகருக்கு ஏற்படும் உடல் நல குறைவிற்க்கான காரணத்தை அறிந்து மருத்துவம் மூலம் குணம் அடைய செய்யுங்கள்.

ராகு திசை, ராகு புத்தி

ஜாதகன் ராகு திசை ராகு புத்தியில் ஜெனனித்து இருந்தாலும், ராகு தனது திசையிலும் , புத்தியிலும் 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை மட்டும் ஏற்று நடத்துவது  வீண் விரையத்தை பொருளாதர ரீதியாக வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, தங்களது வருமானம் மருத்துவ செலவுகள் என்ற வகையில் விரையமாகலாம், எதிர்பாராத வீண் செலவுகளை தரலாம் எனவே ராகுதிசை, ராகு புத்தி தங்களது பொருளாதர முன்னேற்றத்தை சற்று கடுமையாக பாதிக்கும் என்பதுடன் , வீண் மனக்கவலை, மனப்போராட்டம் என்ற வகையில் இன்னல்களை  தரக்கூடும்.

மேலும் தங்களது மகனின் சுய ஜாதகரீதியாக பலாபலன்களை மின் அஞ்சல் அல்லது அலைபேசி மூலம் அறிந்து நலம் பெறுங்கள் " வாழ்த்துகள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696


செவ்வாய், 17 ஜூலை, 2018

ஜாதக ஆலோசணை : திருமணம்,தொழில்,பொருளாதரம் எப்படி அமையும் ?

  
 சுபயோகம் மிக்க ஓர் ஜாதகத்தை ஆய்வு செய்வது என்பதே அலாதியான மகிழ்வை தரக்கூடிய நிகழ்வுதான் என்றால் அது மிகையில்லை, தங்களது ஜாதகமும் அதுபோன்று லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் மிகவும் வலிமை மிக்கதாக இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், தங்களது ஜாதகம் வெகுவாக வலிமை பெற்று இருந்த போதிலும் திருமணம், தொழில், போன்றவை சிறப்பாக அமையவில்லை என்பதற்கான காரணத்தை தங்களது ஜாதக ஆய்வு மூலம் மிக தெளிவாக அறிந்துகொள்ள முற்படுவோம் அன்பரே, தங்களது ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் வழியில் இருந்து பெரும் நன்மைகளை பற்றி தெளிவாக காண்போம், நடைமுறையில் உள்ள திசாபுத்திகள், எதிர்வரும் திசாபுத்திகள் தரும் பலாபலன்களையும், இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : தனுசு
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : அஸ்தம் 3ம் பாதம்

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,3,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து சகல  சௌபாக்கியங்களையும் சுய உழைப்பின் மூலம் சுவீகரிக்கும் வல்லமையை தரும், அடிப்படையில் ஜாதகரின் நல்ல குணமும், வளரும் சூழ்நிலையில்  மற்றவர்கள் மூலம் பெரும் சிறப்புகளும் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்துஇருக்கும், வண்டிவாகன யோகம், சொத்து சுக சேர்க்கை, இடம் வீடு, நிலம் சார்ந்த வரவுகள் ஜாதகருக்கு தேடிவரும், உடல் ஆரோக்கியம் மற்றும் மனநலம் ஜாதகருக்கு சிறப்பாக அமையும், செய்யும் செய்யும் செயல்களில் வெற்றியும் புகழும் உண்டாகும், தெய்வீக அனுகிரகம் ஜாதகருக்கு புதுவித உத்வேகத்தையும், சரியான வாழ்க்கை பாதையையும் அமைத்துத்தரும், ஜாதகரின் எண்ணமும் செயலும் நேர்மை நிறைந்தததாகவும், ஒழுக்கத்தை கடைபிடிக்கும் விதமாகவும் அமைந்திருக்கும், ஜாதகரின் பரோஉபகார நடவடிக்கைகள் பொதுமக்கள் ஆதரவையும், அவர்கள் வழியிலான முன்னேற்றங்களையும் தன்னிறைவாக வாரி வழங்கும், ஜாதகர் எந்த சூழ்நிலையையும் சிறப்பாக எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றிகரமானமனிதராக திகழ்வார் என்பதுடன் சுக போகமிக்க யோக  வாழ்க்கையை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

3ம் பாவக வழியில் இருந்து வண்டி வாகன தொழில், வீடு நிலம் இடம் சார்ந்த தரகு வியாபாரத்தில்  பரிபூர்ண வெற்றிகளை தரும், சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் பெரிய சொத்துக்களை வாங்கும் யோகம் பெற்றவர், தைரியமும் தன்னம்பிக்கையும் ஜாதகரின் வாழ்க்கையில் பலவித சுபயோகங்களை வாரி வழங்கும், தைரியமிக்க முடிவுகளை வெகு விரைவாக மேற்கொண்டு அதன் வழியில் வரும் நன்மையை சுவீகரிக்கும் யோகம் உண்டாகும், கமிஷன், ஏஜென்சி, தரகு தொழில்கள் ஜாதகருக்கு அபரிவித வளர்ச்சியை தரும், குறிப்பாக ஏஜென்சி தொழிலில் ஜாதகருக்கு எதிர்பாராத லாபங்களும் அதிர்ஷ்டங்களும் தேடிவரும், எதையும் துணிந்து செய்து வெற்றியை பரிபூர்ணமாக சுவீகரிக்கும் யோகமிக்கவர், சாஸ்திர ஞானமும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களும் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், பொது வாழ்க்கையில் புகழ் மிக்க பொறுப்புகள் தேடிவரும், தனது வாழ்க்கையை சிறப்பான வெற்றிப்பாதையில் நடைபோட செய்யும் சூட்ஷமம் தெரிந்தவர் என்பது ஜாதகருக்கான சிறப்பு இயல்புகள்.

4ம் பாவக வழியில் இருந்து சொத்து, இடம், வீடு வண்டி வாகனம் போன்றவற்றில் இருந்து ஜாதகருக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் , பெரிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு, நல்ல குணமும், பரந்த மனப்பக்குவமும் ஜாதகருக்கு எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்கும், பெற்றோர் வழியிலான ஆசிர்வாதம் ஜாதகருக்கு  நல்ல முன்னேற்றத்தையும், சிறப்பு மிக்க பொறுப்புகளையும் தேடித்தரும், வலிமை மிக்க பதவிகள் ஜாதகரை தேடிவரும், எதிர்பார்ப்புகள் யாவும் ஜாதகருக்கு நிறைவேறும், மனதில் நினைத்த காரியங்கள் ஜாதகருக்கு நடைமுறைக்கு வரும், சுகபோகம் மிக்க யோக வாழ்க்கையை ஜாதகர் தன்னிறைவாக பெறுவதற்கான சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும்  இளம் வயதிலேயே உண்டாகும், ஜாதகரின் மனவலிமை மற்றும் மனஉறுதி  சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத்தரும், தனது பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் வண்டிவாகனங்கள் ஜாதகருக்கு தொடர் வருமான வாய்ப்பை நல்குவதுடன், பொருளாதார தன்னிறைவை தரும், அனைவரிடமும் அனுசரித்து செல்லும் குணம் ஜாதகரின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்கும், வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜாதகர் ஜீவனம் செய்வது  ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை முழுவதும் சுவீகரிக்கும் வல்லமையை தரும்.

2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்திலே மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்பாக கருதலாம், 2ம் பாவக வழியில் இருந்து வாக்கு வன்மையினால் அதிர்ஷ்டம் உண்டாகும், நல்ல நண்பர்கள் மாற்று கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகத்தை தரும், பேச்சு திறன் மூலம் வாழ்க்கையில் ஜீவன மேன்மை அடையும் தன்மையை தரும், பொருளாதர வசதி வாய்ப்புகள் பரிபூர்ணமாக  அமையும் செல்வச்செழிப்பு மூலம் வாழ்க்கையில் தன்னிறைவான யோக வாழ்க்கையை பெறுவார், ஏதாவது ஒருவழியில் இருந்து வருமானம் ஜாதகருக்கு வந்துகொண்டே இருக்கும், திருமணத்திற்கு பிறகான குடும்ப வாழ்க்கையில் ஜாதகருக்கு அதிர்ஷ்டம்  வெகுவாக அதிகரிக்கும், வாழ்க்கை துணை வழியிலான யோகங்களை இல்லற வாழ்க்கையில் ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார், அபரிவித தனசேர்க்கையை பெறுவதற்கான வல்லமையை தரும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பூர்வீகத்திலான வளர்ச்சி என்பது 100% விகிதம் அமையும், சமயோசித புத்திசாலித்தனமும், தெளிவான சிந்தனையும் ஜாதகரின் முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமையும், எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றி மேல் வெற்றியை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார், லட்டரியோகம், புதிசாலிதனத்தல் ஆதாயம், எப்பொழுதும் மகிழ்சியுடன் வாழ்வதற்கான வாய்ப்பு, குழந்தைகள் மனைவி குடும்பத்துடன் சகல சௌபாக்கியங்களையும் பெற்று இனிமையாக வாழும் தன்மையை தரும், ஜாதகரின் நுண்ணறிவு பிரகாசிக்கும், குல தெய்வ ஆசியின் மூலம் ஜாதகர் மேற்கொள்ளும் சுபகாரியங்கள் யாவும் தடையின்றி நடைபெறும், புதிய சிந்தனை, புதிய வாய்ப்புகள் ஜாதகருக்கு தேடி வரும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்துவரும் பொருட்கள் மூலம் நல்ல லாபம்உண்டாகும், ஜாதகரின் அறிவு திறன் பூர்வீகத்தில் ஜீவித்து இருக்கும் வரை முழுவீச்சில் செயல்படும், அனைத்தையும் வெற்றிகரமாக பெரும் யோகத்தை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நீடித்த அதிர்ஷ்டம் உள்ளவர் என்பதுடன், நல்ல மனமும் சிறந்த குணமும் கொண்டவர், தனது முற்போக்கு சிந்தனையின் மூலம் வாழ்க்கையில் வியக்கத்தகு சாதனைகளை சாதிக்கும் யோகம் பெற்றவர், மிகுந்த அதிர்ஷ்டம், அனைத்திலும் லாபம், நல்ல குணம் போன்றவை ஜாதகருக்கு விரைவான மக்கள் ஆதரவை தரும், ஜாதகரின் முன்னேற்றம் என்பது பொதுமக்கள் மற்றும் எதிர்பாலின அமைப்பினரிடம் இருந்து வரும் என்பது கவனிக்கத்தக்கது, பொதுமக்கள் தொடர்பு சார்ந்த ஜீவனத்தை மேற்கொள்வது ஜாதகருக்கான முன்னேற்றத்தை பன்மடங்கு அதிகரிக்கும், ஜாதகரின் மனதில் உள்ள லட்சியங்கள், ஆசைகள்  யாவும் பரிபூர்ணமாக நடைமுறைக்கு வரும், வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு ஜாதகருக்கு மிகப்பெரிய அந்தஸ்த்தை வாரி வழங்கும்.

6,9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து பயணங்கள் மூலம் லாபம் உண்டாகும், சமாதான பிரியர், தெய்வீக அனுக்கிரகம் பெற்றவர், எதிரிகளையும் கட்டியாலும் வல்லமையை தரும், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகரின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக விளங்கும், மதம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றியை தரும், உடல் நலம் மனநலம் சிறந்து விளங்கும், விரைவாக இன்னல்களில் இருந்து விடுபடும் தன்மையை தரும், வாழ்க்கை துணையை, குடும்பத்தை கவனமாக காக்கும் தன்மையை தரும், எதிர்ப்புகளை சமாளித்து வெற்றிகொள்ளும் தன்மையை தரும் அடிக்கடி ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் யோகத்தை தரும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் அறிவுத்திறன் வெகு பிரகாசமான எதிர்காலத்தை தரும், நல்ல ஆன்மீக பெரியோர்களின்  ஆசீர்வாதம் ஜாதகரின் யோக வாழ்க்கையை உறுதி செய்யும், சாஸ்திர ஞானம், கலைகளில் தேர்ச்சி, பெருந்தன்மையான குணம், பெரிய மனிதர்களின் ஆதரவு, உயரிய பதவிகள் என ஜாதகருக்கு பாக்கிய ஸ்தான வழியில் இருந்து சுபயோக பலன்களே நடைமுறைக்கு வரும், பொது வாழ்க்கையில் நற்பெயரும், சமூக அந்தஸ்தும் தேடி வரும், பயணங்களில் விருப்பம், அறிவாளி, தெய்வீக அனுபவம், இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் ஆதித ஆர்வம், புதுவித முயற்சிகளில் வெற்றி, பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகத்தை தரும், ஜாதகரின் அறிவு திறன் பல அன்பர்களுக்கு நல்லொதொரு வாழ்க்கையை அமைத்துத்தரும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வெளிநாடுகளில் இருந்து வரும் யோகத்தை முழுவதுமாக சுவீகரிக்கும் வல்லமையை தரும், பயணங்கள் மூலம் நல்ல லாபத்தையும், உல்லாசம் மிக்க யோக வாழ்க்கையையும் சுவீகரிக்கும் வலிமையை தரும், தொழில் மற்றும் இருப்பிடத்தை மாற்றுவதன் மூலம் அதீத நன்மைகளை ஜாதகர் பெறுவார், பிறவியற்ற நிலையை அடைவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும், மனம் ஒருநிலைப்படும், ஆன்மீக பெரியோர்கள் ஆசிர்வாதம் ஜாதகருக்கு கிடைத்தற்கரிய பொக்கிஷங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை பெற்று தரும், இல்லற வாழ்க்கையில் திருப்தியும், போதுமென்ற மனமும் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை பெற்று தரும்.

7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 7ம் பாவக வழியில் இருந்து தாமத திருமணத்தை தரும், இருப்பினும் நல்ல அந்தஸ்து உள்ள வாழ்க்கை துணையை தரும், நல்ல நண்பர்கள் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய அந்தஸ்தை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார், அரசியலில் வெற்றியும் உயரிய பதவிகளை அலங்கரிக்கும் யோகமும் உண்டாகும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான முன்னேற்றங்களை தங்கு தடையின்றி பெறுவார், வியாபாரம் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை தரும், சமூகத்தில் மதிப்பு மிக்க மனிதராக ஜாதகர் விளங்குவார், பொது வாழ்க்கையில் வெற்றி உண்டாகும், திருமணத்திற்கு பிறகான அதிர்ஷ்ட வாழ்க்கை ஜாதகருக்கு மிகவும் அபரிவிதமாக அமையும், பொதுமக்கள் ஆதரவு ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். மிகசிறந்த வியாபாரியாக ஜாதகர் திகழ்வார், எதிர்பார்ப்புகள் யாவும் ஜாதகருக்கு பரிபூரணமாக நிறைவேறும்.

10ம் பாவக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம், நல்ல தொழில் முன்னேற்றம், செய்யும் சுய தொழில் மூலம் அபரிவித லாபங்கள், புதிய வாய்ப்புகள் , தன்னிறைவான பொருளாதரா நன்மைகளை ஜாதகர் பரிபூரணமாக பெரும் யோகம், கவுரவம் மிக்க  பதவிகள், சுய அந்தஸ்து, பல தொழில் செய்யும் வாய்ப்பு என்ற வகையில் சிறப்புகளை தரும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியான கன்னியில் 10 பாகைகளையும், 7ம் ராசியான துலாமில் 20 பாகைகளையும் கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது, ஜாதகருக்கு ஜீவனம் என்பது உபய மண் தத்துவ அமைப்பிலும் சர காற்று தத்துவம் சார்ந்த அமைப்பிலும் சிறப்பாக அமையும், உதாரணமாக உணவு பொருட்கள் சார்ந்த தொழில்கள், விவசாய விளைபொருட்கள், தானிய வியாபாரம், வண்டி வாகன உபகரண பொருட்கள், தொழில் நுட்பம் சார்ந்த உபகரண பொருட்கள் வழியில் இருந்தும், சர காற்று ராசியை  குறிக்கும், தரகு மற்றும் கமிஷன் வியாபாரம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள், தனது அறிவு திறன் கொண்டு முதலீடு இல்லாமல் செய்யும் அனைத்து தொழில்களும் ஜாதகருக்கு மிகவும் பொருத்தமாக அமையும், அல்லது வெகுஜன மக்கள் விரும்பு பொருட்களை வியாபாரமாக செய்வதன் மூலம் ஜாதகருக்கு சிறந்த தொழில் முன்னேற்றம் உண்டாகும், ஏஜென்சி தொழில் மூலம் நல்ல லாபம் கிட்டும், பிரபல்ய யோகம் உண்டு என்பதால் ஜாதகர் ஏதாவது வியாபாரம் செய்வது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தரும் என்ற போதிலும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, குறிப்பாக ஜாதகர் பாதுகாப்பான பயன்களை மேற்கொள்வது நல்லது, ஜாதகருக்கு வரும் திடீர் இழப்புகள் யாவும் ஜாதகரின் மனம்போன போக்கில் செல்வாதாலேயே ஏற்படும், மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகள் யாவும் திடீர் இழப்பை தருவதுடன், ஜாதகரின் முன்னேற்றத்தையும் வெகுவாக தடுக்கும், ஜாதகரின் ஆயுள் ஸ்தானம் கடக ராசியில் 15 பாகைகளையும் சிம்ம ராசியில் 17 பாகைகளையும் கொண்டு இருப்பது ஜாதகருக்கு மனக்குழப்பத்தையும், உறுதியற்ற தன்மையால் ஏற்படும் இழப்பையும் அதிகரிக்கும், தெளிவில்லாமல் செய்யும் காரியங்கள் யாவும் ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், குறிப்பாக ஜாதகரின் சுகபோக வாழ்ககையை வெகுவாக பாதிக்கும், அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் யாவும் ஜாதகருக்கு பெரும் இன்னல்களையே ஏற்படுத்தும், சுய கட்டுப்பாடு இழப்பது, முரண் பட்ட வாழ்க்கையை தேர்வு செய்வது ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள சுபயோகங்கள் யாவையும் " யோக பங்கம் " என்ற நிலைக்கு ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்க.

மேற்கண்ட ஜாதகருக்கு ஆயுள் ஸ்தானத்தை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிக மிக வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சம் என்பதுடன் சுய ஜாதகம் வலிமை பெற்றுள்ளது என்பதை மிக துல்லியமாக கூறலாம் ஆனால் விதியின் தன்மை வேறுவிதமாக உள்ளது ஜாதகருக்கு  சுய ஜாதகத்தில் உள்ள யோக பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமையை வெகுவாக பாதிக்கிறது, ஜாதகரின் இளமை காலத்தில் அதாவது ( 12/07/1992 முதல் 12/07/2010 வரை ) நடைபெற்ற ராகு திசை ஜாதகருக்கு  8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் வலிமை இழந்த ஆயுள் ஸ்தான பலனை தந்ததும், ஜாதகர் தனது பூர்வீகத்தில் இருந்து வெகு தொலைவு சென்று ஜீவனத்தை தேடியதும், ஜாதகத்தில் யோகம் இருந்தும் அதை சுவீகரிக்க இயலாத சூழ்நிலையை உருவாக்கியது.

 தற்போழுது நடைமுறையில் குரு திசை ( 12/07/2010 முதல் 12/07/2026 வரை ) ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை வாரி வழங்குவது வரவேற்கத்தக்கது, மேலும் ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவனம் மேற்கொண்டு வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெற " ஜோதிடதீபம் " தனது அறிவுரைகளை வழங்குகிறது, குறிப்பாக ஜாதகரின் தொழில் பூர்வீகத்தில் அமைவது ஜாதகருக்கான முன்னேற்றத்தை பன்மடங்கு அதிகரிக்கும், பொருளாதர ரீதியான முன்னேற்றம் என்பது ஜாதகருக்கு வெகு அற்புதமாக அமையும், ஜாதகர் 2,5,11ம் பாவக வழியில் இருந்து நன்மைகளை சுவீகரிக்க  ஏதுவான சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்வது நல்லது, மேலும் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி ( 25/05/2018 முதல் 23/01/2021 வரை ) ஜாதகருக்கு ஏக காலத்தில் 7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று யோக பலன்களை தருவது, ஜாதகருக்கு திருமணத்திற்க்கான முயற்சியில் நல்ல வெற்றியையும், மனதிற்கு இசைந்த வாழ்க்கை துணையையும் தேடித்தரும் என்பதுடன், கூட்டு முயற்சியில் நல்லதோர் தொழில் வாய்ப்பையும் நல்கும், குரு திசை சுக்கிரன் புத்தி ஜாதகருக்கு மிகவும் சாதகமாக இருப்பதை சுவீகரிக்க, ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவிப்பதை உறுதிசெய்துகொள்வது நல்லது வாழ்த்துகள் அன்பரே!

எதிர்வரும் சனி திசை தரும் பலாபலன்கள் : ( 12/07/2026 முதல் 12/07/2045 )

எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலாபலன்களை ஜீவன ஸ்தான வழியில் இருந்து தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும் ஜாதகர் எதிர்வரும் சனி திசை காலத்தில் தொழில் ரீதியான விருத்தியை தன்னிறைவாக பெறுவார் என்பதுடன், ஜாதகருக்கான யோக வாழ்க்கையை தற்போழுது  நடைபெறும் குரு திசையும், எதிர்வரும் சனி திசையும் உறுதி செய்வது வரவேற்கத்தக்கது, வாழ்த்துக்கள் அன்பரே !

குறிப்பு :

சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட ஆயுள் ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க ஜாதகர் முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுக.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 14 ஜூலை, 2018

ஜாதகஆலோசணை : அரசு வேலை அமையுமா ? தனியார் துறையில் பணியாற்றும் வாய்ப்பு உள்ளதா?


கேள்வி :

வணக்கம் எனக்கு இரு மகன்கள் உள்ளனர் ( இரட்டை குழந்தைகள் ) , இதில் இளையவர் சிறப்பு மிகுந்த இந்திய ஆட்சி பணியில் தேர்ச்சி பெற்று அரசு பணியில் உள்ளார், மூத்தவருக்கு இதுவரை யாதொரு வேலையும் அமையவில்லை, இருவருக்கும் பிறந்த நேரம் வெறும் 5நிமிடம் மட்டுமே வித்தியாசம், இருவரது ஜாதகமும் ஒன்றை போலவே உள்ளது, ஒரே லக்கினம், ஒரே நட்ஷத்திரம், ஒரே ராசி, நடைபெறும் திசாபுத்திகளும் ஏறக்குறைய ஒரே அமைப்பில் உள்ளது இருப்பினும் இருவருக்கும் முரண்பட்ட பலாபலன்கள் நடைபெற காரணம் என்ன ? மூத்தவருக்கு அரசு வேலை அமையுமா ? தனியார் துறையில் பணியாற்றும் வாய்ப்பு உள்ளதா? சற்று தெளிவுபடுத்த வேண்டுகின்றேன் .

பதில் :

இரட்டை குழந்தைகள் ஜாதகத்தில் பிறந்த நேரம் என்பது சில நிமிடங்கள் வித்தியாசம் இருப்பினும், ஜாதகத்தில் லக்கினம்,ராசி,நட்ஷத்திரம் மற்றும் திசாபுத்திகள் ஒரேமாதிரியாக இருப்பது வியப்பில்லை, ஆனால் சுய ஜாதக வலிமை என்பது ( லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகள் தொடர்பு பெரும் பாவக நிலை ) வெகுவான வித்தியாசங்களை கொண்டு இருக்கும், சில நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டையர் ஜாதகம் மேலோட்டமாக பார்க்கும் பொழுது ஒன்றைப்போலவே ஒன்று இருப்பினும், பாவக வலிமை என்பது ஒன்றைப்போல் ஒன்று இருக்காது என்பதை கருத்தில் கொள்வது நல்லது, தங்களது மகன்கள் இருவரும் இரட்டை பிறவிகள் என்பதாலும், 5 நிமிட வித்தயாசத்தில் பிறந்து இருப்பதாலும் இருவருக்கும் ஒரே மாதிரியான பலாபலன்கள் நடைமுறைக்கு வரும் என்று கருதுவது முற்றிலும் தவறான அணுகுமுறை அன்பரே ! இதை பற்றி இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

அண்ணன் ஜாதகம் :


லக்கினம் : சிம்மம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : அவிட்டம் 1ம் பாதம்

ஜாதகருக்கு பாவக தொடர்புகள் :

1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1,5,7,11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் என்பதால் ஜாதகத்தில் மேற்கண்ட பாவக தொடர்பு வலிமை மிக்கதாக எடுத்துக்கொள்ளலாம்.

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், வீடு நிலம், இடம், வண்டி வாகனம் போன்ற அமைப்பில் இருந்து சுகபோகங்களை வாரி வழங்கும் என்பதால் ஜாதகத்தில் மேற்கண்ட பாவக தொடர்பையும் வலிமை மிக்கதாக எடுத்துக்கொள்ளலாம்.

2,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2,6,10,12ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும் மேலும் ஜாதகரின் 12ம் பாவகம் கடக ராசியில் 9 பாகைகளையும், அரசு துறையை குறிக்கும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மத்தில் 21 பாகைகளையும் கொண்டு வலுவிழந்து நிற்பது ஜாதகருக்கான அரசுத்துறை பணி என்ற விஷயத்தை "கானல்நீராக" மாற்றிவிடும் என்பதால் ஜாதகருக்கு மேற்கண்ட பாவக தொடர்புகள் ஜாதகத்தில் வலிமை அற்று இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் படுதோல்வியையும், வீரியமிக்க செயல்திறன் அற்றவர் என்பதையும் தெளிவுபடுத்துகிறது, 9ம் பாவக வழியில் இருந்து உயர் கல்வி மற்றும் ஆய்வு படிப்பு போன்றவற்றில் தேர்ச்சி  பெற வலிமையற்றவர் என்பதை உறுதி செய்கிறது, ஜாதகர் வீண் கற்பனையில் உலகில் சஞ்சரிக்கும் தன்மை பெற்றவர் என்பதையும் அறுதியிட்டு சொல்கிறது, மேலும் சுய ஜாதகத்தில் 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 200% விகித இன்னல்களை தரும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது, எனவே ஜாதகர்  இந்தியாவின் உயரிய படிப்பான இந்திய ஆட்ச்சிப்பணிக்கு படிப்பது என்பது " எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போகிறார் " என்பதற்கான நிலையை தந்துவிடும் என்பதே சுய ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு பூர்ண ஆயுளை தந்த போதிலும், திடீர் இழப்புகளையும், ஏமாற்றங்களையும் தவிர்க்க இயலாது, தொடர் தோல்விகளை தரக்கூடும், நிம்மதியின்மை என்பது ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும்.

மேற்கண்ட ஜாதகத்தில் 1,4,5,7,11ம் வீடுகளை தவிர மற்ற 7வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, குறிப்பாக 3,9ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வாரி வழங்கும்.

நடைபெறும் குரு திசையில் சனி புத்தி 5ம் பாவக வழியில் இருந்து நன்மையை தந்த போதிலும், தேர்வுக்கான முயற்சி செய்த நேரத்தில் ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை நடைமுறைக்கு கொண்டு வந்தது யாதொரு நன்மையையும் பெற இயலாத நிலையை தந்து விட்டது, மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பாவக வழியிலான வலிமை இன்மை சரியான ஜீவனத்தை வழங்கவில்லை என்பதே உண்மை நிலை.

தம்பி ஜாதகம் :


லக்கினம் : சிம்மம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : அவிட்டம் 2 ம் பாதம்

1,3,5,7,9,11ம் வீடுகள் அனைத்தும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1,3,5,7,9,11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும், குறிப்பாக 1ம் பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் சிறப்பு, சுய கட்டுப்பாடு, நல்ல உடல் மன ஆரோக்கியம் என்ற வகையிலும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, லட்சியங்களை அடைதல், சிறந்த தகவல் தொழில்நுட்ப அறிவு, வீரியமிக்க செயல்பாடுகள், வெற்றியை பெறுதல், தன்னம்பிக்கை என்ற வகையிலும், 5ம் பாவக வழியில் இருந்து சமயோசித அறிவு திறன், அதிபுத்திசாலித்தனம், வாய்ப்புக்களை பரிபூர்ணமாக பெற்று நலம் பெறுதல், இறை அருள் கருணையினால் அனைத்தும் எளிதாக கிடைத்தல், கற்ற கல்வி வழியிலான அபரிவித முன்னேற்றம் என்ற வகையிலும், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், அவர்கள் வழியிலான ஆதரவு, பொதுமக்கள் ஆதரவு, செல்லும் இடங்களில் கிடைக்கும் மதிப்பு மரியாதை, பரிபூர்ண நன்மைகளை சுவீகரிக்கும் வல்லமை என்ற வகையிலும், 9ம் பாவக வழியில் இருந்து மிகசிறந்த அறிவு திறன், உயர்கல்வி, ஆய்வுக்கல்வி, நிர்வாக படிப்பு போன்றவற்றில் அதீத தேர்ச்சி, கற்ற கல்வி வழியிலான நன்மைகளை ஜாதகர் சுவீகரிக்கும் வல்லமை, அரசு துறை ஆதரவு என்ற வகையிலும், 11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டம், முற்போக்கு சிந்தனை, மிக எளிதாக அனைத்தும் கிடைத்தல், தெய்வீக அனுக்கிரகம், அறிவார்ந்த முயற்சிகள் வழியிலான ராஜயோக பலன்கள் என்ற வகையிலும் சிறப்பான நன்மைகளை தரும் என்பது கவனிக்கத்தக்கது.

2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் சிறந்த வாக்கு வன்மையும், பேச்சு திறனும் கொண்டவர் என்பதை தெளிவு படுத்துகிறது, தனம் சார்ந்த விஷயங்களில் தன்னிறைவு கொண்டவர் என்பதுடன் ஒழுக்கம் மற்றும் நேர்மையை கடைபிடிக்கும் வல்லமை பெற்றவர் என்பதுடன், நிறைவான பொருளாதர முன்னேற்றம் மற்றும் இனிமையான குடும்ப வாழ்க்கையை பெற்று மகிழ்ச்சியுடன் இல்வாழ்க்கையை நடத்த தகுதி கொண்டவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

4,8,10,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், நல்ல குணம், சுய உழைப்பில் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுபவர் என்பதையும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டம்,  அந்தஸ்த்து கவுரவம் போன்றவற்றை விரைவாக பெறுதல், சகல வசதிமிக்க உத்தியோகம், பதவியில் திடீர் உயர்வு என்ற வகையிலும், 10ம் பாவக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம், வியாபார முன்னேற்றம், செய்யும் தொழில் வேலை முதலியவற்றில் அபரிவித வளர்ச்சி, வெற்றிகரமான யோக வாழ்க்கை, கம்பீரமான பேச்சு, தீர்க்கமான வாத திறன் என்ற வகையிலும், 12ம் பாவக வழியில் இருந்து எதிரிகளின் சூழ்ச்சியே ஜாதகருக்கு சாதகமாக மாறும், அரசு பதவியில் திடீர் உயர்வு, தொழில் மற்றும் பணியில் திடீர் அதிர்ஷ்டம், ரகசிய ஏஜென்ட் என்ற வகையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பங்கு கொள்ளும் அனைத்து தேர்விலும் தேர்ச்சியை தரும், வழக்குகளில் வெற்றி என்றவகையில் நன்மையை தந்த போதிலும், உடல் நலம் சார்ந்த பாதிப்புகள் சில நேரங்களில் தொந்ததரவை தரக்கூடும் என்பது மட்டும் சற்று கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

இந்த ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகளும் தாம் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து சகல யோகங்களையும் தருவது கவனிக்கத்தக்கது, மேலும் நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று ஜாதகருக்கான அரசு வேலையை உறுதி  செய்தது, குரு திசையில் சனி புத்தி 5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வி வழியிலான அதிர்ஷ்டத்தை பரிபூர்ணமாக தந்தது, ஜாதகருக்கான ஜீவன மேன்மையை மேலும் அதிர்ஷ்டகரமானதாக மாற்றியது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

இருவரது ஜாதகத்திலும் 5நிமிட வித்தியாசம் என்ற போதிலும் பாவக வழியிலான தொடர்புகள் வெகுவாக மாறியிருப்பது கவனிக்கத்தக்கது, இது நிமிடத்திற்கு நிமிடம் மாற்றம் பெரும் என்பதுடன், இருவரும் சுவீகரிக்கும் பலாபலன்கள் என்பது முற்றிலும் வேறுபடும் என்பதே உண்மை நிலை, இரட்டை பிறவிதானே இருவருக்கும் ஒரே பலாபலன்கள் நடைபெறும் என்று கருதுவது சுய ஜாதக கணிதம் பற்றிய நுணுக்கம் அறியாமல் வைக்கப்படும் வாதமாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது.

தங்களின் கேள்விக்கான பதில்

தங்களின் மூத்த மகனுக்கு அரசு பணி கிடைக்க வாய்ப்பு என்பது சற்று குறைவு, ஜாதகர் சிறு வியாபாரம் அல்லது ஓர் அடிமை தொழிலை தேர்வு செய்து அதில் வெற்றி பெறலாம், மற்றவர்கள் விஷயத்தில் தலையீடு செய்வது ஜாதகருக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும், தனது முயற்சியை  கைவிடாமல் போராடி நலம் பெறுவது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 13 ஜூலை, 2018

ஜாதக ஆலோசணை : தொழில் முயற்சிகள் யாவும் படுதோல்வியை சந்திக்க காரணம் என்ன ? சுய தொழில் செய்ய வாய்ப்பே இல்லையா ?

 

கேள்வி :


 தொழில் முயற்சிகள் யாவும் படுதோல்வியை சந்திக்க காரணம் என்ன ? சுய தொழில் செய்ய வாய்ப்பே இல்லையா ?

பதில் : 

சுய ஜாதகத்தில் கேந்திர கோணங்கள் வலிமை பெற்று, நடைபெறும் திசா புத்திகள், எதிர்வரும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும், ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் வலிமையை தருவதும் ஓர் ஜாதகருக்கு தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும், ஜாதகர் செய்யும் சுய தொழில் சிறப்பு மிக்க வளர்ச்சியை பெற்று, தன்னிறைவான பொருளாதர முன்னேற்றத்தை தரும், மாறாக சுய ஜாதகம் வலிமை அற்ற, நடைபெறும் திசாபுத்திகள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தி, கோட்சார கிரகமும் ஏற்று ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு வலிமை சேர்க்கும் அமைப்பில் இல்லை எனில் ஜாதகரின் பாடு படுதிண்டாட்டம்தான், பொருள் நஷ்டம், நேரவிரையம், கடன் தொந்தரவு, பலவிதங்களில் இருந்துவரும் இன்னல்கள் என்ற விதத்தில் ஜாதகர் கடுமையான பின் விளைவுகளை சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாக்கும் என்பதில் சந்தேகமில்லை அன்பரே, இன்றைய பதிவில் தங்களது ஜாதகத்தை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : கும்பம் 
ராசி : கும்பம் 
நட்ஷத்திரம் : சதயம் 2ம் பாதம் 

சுய தொழில் முயற்சியை மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் தனது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டு செயல்படுவதும், நடைபெறும் எதிர்வரும் திசை ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டு செயல்படுவதும் வெற்றிகரமான தொழில் வாய்ப்புகளை நல்கி, தன்னிறைவான பொருளாதர வளர்ச்சியை வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் முன்னேற்றத்தை உறுதி செய்யும், 5,9ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகருக்கு தொழில் சார்ந்த நல்லறிவையும், சமயோசித புத்திசாலித்தனத்தையும், தெளிவான திட்டமிடுதல்களையும் வழங்கும், 2,6,8,12ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகருக்கு தொழில் வழியிலான பொருளாதர தன்னிறைவை வழங்கும், சரளமான பண வசதியை வாரி வழங்கும், 3,11ம் வீடுகள் ஜாதகர் மேற்கொண்ட முயற்சிக்கான வெற்றிகளையும், சரியான தகவல் தொடர்புகளையும், வீரியமிக்க செயல்திறனையும், அளவில்லா அதிர்ஷ்ட வாய்ப்புகளையும், தன்னம்பிக்கை மிக்க மனநிலையுடன் கூடிய முற்போக்கு சிந்தனையையும் வாரி வழங்கும், ஜாதகர் செய்யும் தொழில் வழியிலான லாபங்களை பரிபூர்ணமாக அனுபவிக்க 3,11ம் வீடுகளின் வலிமை அவசியம் தேவைப்படுகிறது.

தங்களது ஜாதகத்தில் பெரும்பாலான வீடுகள்  மிக மிக வலிமையுடன் காணப்படுவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும் அன்பரே, இருப்பினும் தங்களது தொழில் சார்ந்த முயற்சிகள் யாவும் படுதோல்வியை சந்திக்க அடிப்படை காரணம் ஒன்று உண்டு அது 5ம் பாவக வலிமையாகும், ஒருவரது சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் வீடு வலிமை பெற்று இருப்பின் தனது தொழில் சார்ந்த முயற்சிகள் யாவினையும் ஜாதகர் தந்தது பூர்வீகம் சார்ந்த இடங்களிலேயே அமைத்துக்கொள்வதை  உறுதி செய்யவேண்டும், ஏனெனில் சுய ஜாதகத்தில் பாவக வலிமையே ஜாதகருக்கான வெற்றிகளை நிர்ணயம் செய்கிறது, தங்களது ஜாதகத்தில் 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  மிகவும் வலிமையுடன் காணப்படுவது தங்களுக்கான தொழில் வெற்றிகளை பூர்வீகத்தில் ஜீவிப்பதால் மட்டுமே பெற இயலும், தாங்கள் இதுவரை முயற்சித்த தொழில் சார்ந்த விஷயங்கள் யாவும் தங்களது பூர்வீகத்தில் இருந்து வெகு தொலைவுக்கு அப்பால் ( 300 கிமீ ) அமைந்ததால் 5ம் பாவகம் வலுவிழந்து சமயோசித அறிவை வழங்கவில்லை, 11ம் பாவகம் தங்களுக்கான லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தையும் வழங்கவில்லை என்பதே உண்மை நிலை.

மேலும் தொழில் சார்ந்த முயற்சிக்கான  நேரத்தில் தங்களுக்கு சனி திசை நடைமுறையில் இருப்பதும், சனி தனது திசையில் 1,2ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவாக பலனை ஏற்று நடத்துவதும், 8,10ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவக பலனை ஏற்று நடத்துவதும் வரவேற்கத்தக்க சிறப்பு அம்சம் என்ற போதிலும், மேற்கண்ட பாவகங்கள் குறிக்கும் தொழிலை தேர்வு செய்யாமல் முரண்பட்ட தொழிலை தேர்வு செய்தது தங்களுக்கான தொழில் வெற்றிகளை பரிபூர்ணமாக தரவில்லை என்பதே உண்மை, 2ம் பாவகம் குறிப்பது சிறு வியாபாரம் அல்லது வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பொழுது  போக்கு அம்சங்களை குறிக்கின்றது, 3ம் வீடு தங்களுக்கு கமிஷன் , தரகு, ஏஜென்சி, தகவல் தொழில் நுட்பம், தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்கள், மின்சாரம், மின்சார உபகரண பொருட்கள் வழியிலான வியாபாரம், காண்ட்ராக்ட் தொழில், ஏற்றுமதி இறக்குமதி தொழில் போன்றவற்றில் பரிபூர்ண வெற்றிகளை தரும் பொழுது, அதுசாராத தொழில்களை சுவீகரித்தது  தங்களது ஜீவன மேன்மையை வெகுவாக பாதித்தது, மேலும் தொழில் நிர்ணயம் செய்த இடம் தங்களது பூர்வீகத்திற்க்கு கட்டுப்படாமல் போனது தங்களின் தொழில் சார்ந்த முயற்சிகள் யாவையும் படுதோல்வியடைய செய்திருப்பது கவனிக்கத்தக்கது.

தற்போழுது நடைபெறும் செவ்வாய் புத்தி தங்களுக்கு 4,7ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று யோக வாழ்க்கையை நல்குவது சிறப்பானதே, 10ம் வீடு தங்களது ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஸ்திர நீர் ராசியில் அமைவதால் உணவு பொருட்கள் சார்ந்த தொழில், தானிய வியாபாரம், விவசாய விளைபொருட்கள், போன்றவற்றை ஜீவனமாக தங்களது பூர்வீகத்தில் ஜீவித்து இருந்து ஏற்று கொள்வது, தங்களுக்கான தொழில் வெற்றியை உறுதி செய்யும், 4ம் வீடு வண்டி வாகனம், இடம், பொருள், வீடு மற்றும் வீட்டு உபயோக பொருட்களை குறிக்கும், 7ம் வீடு பொதுமக்கள், வியாபாரம், கூட்டு முயற்சி, கூட்டு தொழில் போன்றவற்றை குறிக்கும், எனவே தாங்கள் எந்த தொழில் செய்தாலும் சரி தங்களது பூர்வீகத்தில் இருந்துகொண்டு செய்யுங்கள் அது பரிபூர்ண வெற்றிவாய்ப்பை வாரி வழங்குவதுடன், நிறைவான பொருளாதர வசதியையும் பெற்று தரும்.

எதிர்வரும் புதன் திசை 6ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக வாழ்க்கையை தருவது வரவேற்கத்தக்கது, இதில் ஏஜென்சி, காண்ட்ராக்ட் தொழில், தரகு தொழில், கமிஷன் வியாபாரம் போன்றவற்றை பூர்வீகத்தில் நிர்ணயம் செய்து பரிபூர்ண நன்மைகளை பெறுங்கள் , எதிர்வரும் புதன் திசை தங்களுக்கு குறுகிய காலத்தில் தொடர் லாபங்களை, அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும் என்பதால் அது சார்ந்த திட்டமிடுதல்களை மேற்கொண்டு நலம் பெறுங்கள் வாழ்த்துகள்.

குறிப்பு :

சனி திசையில் எதிர்வரும்  ராகு புத்தி 1,2ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையை தருவது பொருளாதர நன்மைகளை வாரி வழங்கும், சனி திசையில் குரு புத்தி 3ம் வீடு லாப  ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை தருவது புதுவிதமான தொழில் முயற்சிகளுக்கு உகந்த நேரமாகும் சனி திசை குரு புத்தியில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு நல்லதோர் ஜீவன வாழ்க்கையை தேடிக்கொண்டு, புதன் திசை தரும் யோக பலன்களை பரிபூர்ணமாக சுவீகரியுங்கள், வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 7 ஜூலை, 2018

திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளதா ? அல்லது சன்னியாச வாழ்க்கையை தந்துவிடுமா ?



 "இல்லற வாழ்க்கை" பருவ வயதில் அமையவில்லை எனில் தங்களின் மனஓட்டமே அனைவருக்கும் ஏற்படும், திருமண வாழ்க்கை சரியான வயதில் அமையவில்லை எனில் நமது சுய ஜாதக வலிமையை பற்றி ஜாதக ஆலோசணை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது, ஏனெனில் நமது ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்று இருக்கின்றதா ? என்பதில் தெளிவு கிடைக்கும், நடைபெறும் திசாபுத்திகள், எதிர்வரும் திசாபுத்திகள் சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவக வலிமையை பற்றியும், அது தரும் யோக அவயோக பலாபலன்கள் பற்றியும் அறிந்துகொள்ள இயலும், இதன் அடிப்படையில் திருமணம் கால தாமதமாக காரணம் என்ன? சுய ஜாதக வலிமை இன்மையா ? நடைபெறும் திசா புத்திகள் திருமண வாழ்க்கைக்கு தடைக்கற்களாக அமைந்து வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துகின்றதா ? என்பது பற்றி ஓர் முடிவுக்கு வர இயலும், தங்களது ஜாதக வலிமையின் அடிப்படையில் இல்லற வாழ்க்கையில் இணைய இயலாமல் கால தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !


லக்கினம் : துலாம்
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : அஸ்தம் 2ம் பாதம்.

 தங்களது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 வீடுகளில் பெரும்பாலான வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தங்களது இல்லற வாழ்க்கைக்கான தடைகளுக்கு அடிப்படை காரணமாக விளங்குகிறது, குறிப்பாக 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு 1,5,7,11ம் வீடுகள் வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு நல்லொதொரு வாழ்க்கை துணை அமைவதற்கான சந்தர்ப்பங்களை வெகுவாக பாதிக்கிறது, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாமும் தங்களுக்கு ஜென்ம லக்கினமாக அமைந்து 200% விகித இன்னல்களை தரும் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது வெகுவாக கவலை தரும் விஷயமாகும், சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7ம் வீடும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாமும் ஏக காலத்தில் வலிமையின்றி பாதக ஸ்தான தொடர்பை பெறுவது தங்களது இல்லற வாழ்க்கை கனவை தகர்த்தெறிகிறது, இதுவே தங்களது திருமண வாழ்க்கை தடைபெறவும் அடிப்படை காரணமாக விளங்குகிறது.

 மேலும் சுய ஜாதகத்தில் 4,6,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களை மேலும் இன்னல்களுக்கு ஆளாக்கும் தன்மை பெற்றது, 5,7 பாத ஸ்தான தொடர்பை பெறுவதும், 8,12 விரைய ஸ்தான தொடர்பை பெறுவதும் தங்களது திருமண முயற்சிகள் யாவற்றையும் படுதோல்வியுற செய்யும் என்பதை கருத்தில் கொள்க, ஏனெனில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12 வீடுகளில் 5,7,8,12 எனும் வீடுகள் கடுமையாக பாதிக்கப்படுவது தங்களுக்கு நன்மையை தரும் அமைப்பு அல்ல என்பதை கவனத்தில் கொள்க.

பருவ வயதில் நடைபெற ராகு திசை ( 12/09/1994 முதல் 11/09/2012 வரை ) தங்களுக்கு 4,8,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் விரைய ஸ்தான பலனை நல்கியதும், தற்போழுது நடைபெறும் குரு திசை  ( 11/09/2012 முதல் 11/09/2028 வரை )  தங்களுக்கு உயிர் உடலாகிய லக்கினம் எனும் 1ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது தங்களது வாழ்க்கையில் மிகுந்த துன்பங்களை தரும் அமைப்பாகும், தாங்க இயலாத இன்னல்களும், உதவி செய்ய யாருமற்ற சூழ்நிலையையும் தரும், எடுக்கும் காரியங்கள் யாவும் தடை தாமதம் என்ற நிலைக்கு ஆளாகும் என்பதனால், ஒவ்வொரு செயலையும் கவனமுடன் செய்வதே தங்களுக்கு நன்மையை தரும்.

தங்களது ஜாதகத்தில் 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும் , எனவே மேற்கண்ட பாவக தொடர்பை ஏற்று நடத்தும் கிரகங்களின் திசாபுத்தி  காலம் அறிந்து திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டால் உறுதியாக தங்களுக்கு ஓர் நல்ல வாழ்க்கை துணையும், சிறந்த இல்லற வாழ்க்கையும் அமையும், மேலும் தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெற்று இருப்பது அவசியமாகிறது என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு திருமணம் தாமதமானாலும் நல்லதோர் இல்லற வாழ்க்கை அமையும் என்பதை தெளிவுபடுத்துகிறது, தற்போழுது நடைபெறும் குரு திசை புதன் புத்தியில் வரும் சனி அந்தரத்தில் திருமண முயற்சிகளை ஜாதகர் மேற்கொள்வது சிறந்த இல்லற வாழ்க்கையை நல்கும், சனி அந்தரமே ஜாதகருக்கு 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் 2ம் பாவக வழியில் இருந்து திருமணத்திற்க்கான சுபயோகத்தை வழங்குகிறது, "வாழ்த்துகள்"

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 3 ஜூலை, 2018

ராகுகேது தோஷம் புத்திர பாக்கியத்தை தடைசெய்கிறதா ? ஆண் வாரிசு கிடைக்குமா ?


 கேள்வி :

 திருமண வாழ்க்கையில் இணைந்து 11 வருடங்கள் கடந்துவிட்டது, இதுவரை குழந்தைக்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியை தந்துவிட்டது, மருத்துவ சிகிச்சையும் பலன் தரவில்லை, எங்களுக்கு நல்ல ஆண் வாரிசு அமைய வாய்ப்பு உள்ளதா? சர்ப்ப தோஷம் எங்களுக்கு புத்திர பாக்கியத்தில் தடை செய்கிறதா? இதற்க்கு சரியான தீர்வுதான் என்ன ?


லக்கினம் : கன்னி
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : மூலம் 1ம் பாதம்

பதில் :

தங்களது சுய ஜாதகத்தில் நல்ல வாரிசு மற்றும் குழந்தை பாக்கியத்தை தரும் 5ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதுடன், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் தற்போழுது நடைபெறும் சூரியன் திசையும் தங்களுக்கு 4,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்ட அயன சயன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது எதிர்பாராத இன்னல்களையும், துன்பங்களையும் 4,8,12ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், சூரியன் திசையில் கேது புத்தி தங்களுக்கு 3,8ம் வீடுகள் பாதகம் மற்றும் விரைய ஸ்தான தொடர்பை பெற்று கடுமையான இன்னல்களை தருவது தங்களுக்கு உகந்ததல்ல, எனவே தங்களது சுய ஜாதகத்தில் 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் கடுமையாக பாதிக்கப்பட்டு, நடைபெறும் சூரியன் திசையும் தங்களுக்கு ஜாதகம் இன்றி இருப்பது புத்திர பாக்கியத்தில் தடை தாமதங்களை வழங்குகிறது.

சாயா கிரகங்களான ராகுகேது தங்களது ஜாதகத்திற்கு தான் அமர்ந்த உயிர் உடலாகிய லக்கின ( கேது ) பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்வதும், களத்திர ஸ்தானமாகிய 7ம் பாவகத்தை ( ராகு ) 100% விகிதம் வலிமை இழக்க செய்வதும் முரண்பட்ட பலாபலன்களை வழங்கும், லக்கினத்தில் அமர்ந்த கேது தங்களுக்கு உடல் ஆரோக்கியம், மனநலம், தெளிந்த நல்லறிவு, யோக வாழ்க்கை, வளரும் சூழ்நிலையில் சிறப்பு, புகழ் வெற்றி அந்தஸ்து என்ற வகையில் நன்மைகளையும், களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு தங்களுக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் பொதுமக்கள் என்ற வகையில் இருந்து அதீத துன்பங்களை வாரி வழங்கும், எனவே சர்ப்ப தோஷம் தங்களது வாழ்க்கையில் புத்திர பாக்கியத்திற்கு தடையா அமையவில்லை, சுய ஜாதகத்தில் 5ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெற்றது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசி கடுமையாக பாதிக்கப்பட்டதும், தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் காரணமாக அமைகிறது.

சந்திரன்,சனி மற்றும் புதன் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்கள் மட்டுமே தங்களுக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறது, இதில் புதன் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் அதே வேளையில் 3,5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது மிகுந்த பாதிப்பை தரும், தங்களது ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் பாதிக்கப்பட்ட பாவக பலனையே ஏற்று நடத்துவதால் தங்களுக்கு இதுவரை புத்திர பாக்கியம் கிட்டவில்லை, எனவே தங்களது ஜாதகத்துடன் தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தையும் தெளிவாக அறிந்துகொள்வதன் மூலம் தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டுமா ? என்பதை உறுதி செய்யலாம், தம்பதியர் இருவரின் ஜாதகம் கொண்டு பாவக வலிமையை பற்றி தெளிவாக அறிந்துகொண்ட பிறகே தங்களது வினாவுக்கான பதில் தர இயலும் சகோதரி.

சரியான தீர்வு :

தங்களது ஜாதகத்தில் 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, இதுவே தங்களது இல்லற வாழ்க்கையில் புத்திர பாக்கியத்தை வழங்கவில்லை என்பதனால், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் எப்படிப்பட்ட வலிமையை பெற்று இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதன் மூலம் தங்களுக்கு ஓர் சரியான தீர்வை தர இயலும், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் மேற்கண்ட விஷயங்கள் வலிமை பெற்று இருப்பின் தங்களுக்கு நிச்சயம் புத்திர பாக்கியம் உண்டு, ஒருவேளை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பின், தாங்களும் தங்களது வாழ்க்கை துணையும் மருத்துவ ஆலோசணையை நாடி, நல்லதொரு குழந்தையை பெறுவதே சரியான தீர்வாக இருக்கும், " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 2 ஜூலை, 2018

தொழிலில் இடமாற்றம் உண்டா ? திருமணம் தாமதமாக காரணம் என்ன ? உயர்கல்வி பயில முயற்சி மேற்கொள்ளலாமா ?



அய்யா,

 தற்பொழுது செய்துவரும் பணியில் இடமாற்றம் உண்டா ? ஊதிய உயர்வு கிடைக்குமா? ஆய்வு கல்விக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாமா, அதற்க்கு உகந்த நேரமாக நிகழ்காலத்தை கருதலாமா? திருமண வாழ்க்கை எப்படி அமையும் ? மனதிற்க்கு இசைந்த இல்லற வாழ்க்கை துணை அமையுமா ? திருமணம் தாமதமாக காரணம் என்ன ? தெளிவான விளக்கம் தர வேண்டுகின்றேன்.


பதில் :

லக்கினம் : மேஷம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம் 

 நடைபெறும் குரு திசை தங்களுக்கு 3ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, குறிப்பாக திடீர் அதிர்ஷ்டம், தொழில் மற்றும் பணியில் ஊதிய உயர்வுடன் கூடிய பணி இடமாற்றம் உண்டாகும், தீர்க்க ஆயுள் உண்டு, திருமணத்திற்கு பிறகான அதிர்ஷ்டத்தை தரும் என்பதால், திருமண முயற்சிகள் கைகூடும், தொட்டது அனைத்தும் துலங்கும், அதிர்ஷ்டத்தின் தாக்கம் திடீரென அதிகரிக்கும், எதிர்கால வாழ்க்கைக்கான நம்பிக்கை உண்டாகும்.

தற்போழுது நடைபெறும் குரு திசையில் சனி புத்தி தங்களுக்கு 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்  பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, இது தங்களுக்கு லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான வழியில் இருந்து சிறப்புகளை வாரி வழங்கும், கல்விக்கான முயற்சிகள் நல்ல வெற்றியை தரும், உடல் நலம் மனஆரோக்கியம் அதிகரிக்கும், தெளிவான சிந்தனை மற்றும் செயல்பாடுகள் தங்களின் வாழ்க்கையில் புதியதொரு உத்வேகத்தை தரும், சனி புத்தி 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று யோக பலனை தருவது சகல சுக போகங்களையும் அனுபவிக்கும் தன்மையை தரும், வண்டி வாகன யோகம், புதிய தொழில் வாய்ப்புகள், திடீர் முன்னேற்றம், எதிர்பாராத கவுரவ பதவிகள், சிறந்த நிர்வாக திறனை போற்றும் விதமாக வரும் ஊதிய உயர்வு, புதிய தொழில் வாய்ப்புகள், புதிய மனிதர்கள் வழியில் இருந்து வரும் நம்பிக்கைகள் என்ற வகையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

குரு திசை ஜாதகத்தில் தங்களுக்கு வீரிய ஸ்தான பலனை பரிபூர்ணமாக வழங்குவதுடன், குரு திசை சனி புத்தி தங்களுக்கு 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்றும் யோக பலனை தருவது தங்களது வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையிலான  முன்னேற்றங்கள் வெகுவாக வந்துசேரும், தெய்வீக அனுக்கிரகத்தால் எதிர்ப்புகள் அனைத்தும் விலகி வெற்றிநடை போடும் சுபயோக நேரமிது, வாழ்த்துகள்.

திருமண வாழ்க்கை  சுய ஜாதகத்தில் சனி புத்தியில்  1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால், மேற்கு திசையில் இருந்து வரும் வாழ்க்கை துணை தங்களுக்கு சிறந்த கணவராக அமைவார், மேலும் தங்களுடனான பாசம் அன்பு மாறாத இனிமையான இல்லற வாழ்க்கையை தருவார், குறைந்தது தங்களின் வாழ்க்கை துணை 100 கிமி தூரத்திற்கு அப்பால் இருந்து வருவதுடன், அவரது வீடு மேற்கு திசை வாயிற்படி கொண்டதாக அமைந்திருக்கும், களத்திர ஸ்தான அதிபதி சனி என்பதால் அடிமை தொழில் புரிபவராகவும், நிலையான வருமானத்தை கொண்டவராகவும் திகழ்வார், தனது அறிவுத்திறன் கொண்டு ஜீவன மேன்மையை பெரும் யோகத்தை ஜாதகர் பெற்று இருப்பார்.

திருமணம் தாமதமாக சுய ஜாதகத்தில் 2,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை தங்களுக்கு 2ம் வீடு வழியில் இருந்து தருவாதாலேயே திருமண வாழ்க்கை வெகு தாமதமாகிறது, கடந்த ராகு திசையும் தங்களுக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஜீவன மேன்மையை மட்டுமே வாரி வழங்கிவிட்டது என்பது கவனிக்கத்தக்கது, தற்போழுது நடைபெறும் குரு திசையில் சனி புத்தி 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக நன்மைகளை தருவதால் தங்களுக்கு திருமண வாழ்க்கை கைகூடி வரும் வாழ்த்துக்கள்.

தற்போழுது நடைபெறும் குரு திசையும், எதிர்வரும் சனி திசையும் தங்களுக்கு சிறப்பான நன்மைகளை தருவது வரவேற்கத்தக்கது, குறிப்பாக குரு திசை தங்களுக்கு 3ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், எதிர்வரும் சனி திசை 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்றும் சுபயோக பலாபலன்களை தருவது வரவேற்கத்தக்கது, எனவே தங்களது வாழ்க்கையில் சிறப்பான எதிர்கால நன்மைகள் நடைபெற உள்ளதால், அது சார்ந்த முன்னேற்ப்பாடுகளை செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறுக.

தொழில்,திருமணம்,கல்வி,குழந்தை பாக்கியம், அதீத பொருளாதர வளர்ச்சி என்ற வகையில் எதிர்வரும் காலங்களில் தங்களின் வாழ்க்கை புது பாதையில் பயணிக்க இருப்பது கவனிக்கத்தக்கது, எனவே சரியான வாழ்க்கை துணையை மட்டும் உடனடியாக தேர்வு செய்து நலம் பெறுங்கள்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்பை ஏற்று நடத்தும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் யாவும் சிறப்பான சுபயோக  பலாபலன்களையே தரும் என்பதால், நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி தங்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி  மிக துல்லியமாக அறிந்துவைத்திருப்பது மிக மிக அவசியமாகிறது என்பதை கருத்தில் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 1 ஜூலை, 2018

5ல் ராகு ஆண் வாரிசு அமைந்தது எப்படி ? எதிர்வரும் ராகு திசை தரும் பலாபலன்கள் என்ன ?


கேள்வி :

தங்களிடம் ஜாதக ஆலோசணை பெறும்முன், எனது ஜாதகத்தை பார்த்த அனைவரும் 5ல் ராகு இருப்பதால், கடுமையான புத்திர தோஷம் உள்ளதாகவும், குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது என்றனர், மேலும் ஆண் வாரிசு கிடையாது என்றனர், தங்களிடம் ஆலோசனை பெற்று தாங்கள் பரிந்துரை செய்த ஜாதகத்தை வாழ்க்கை துணையாக அமைத்துக்கொண்டேன், தற்போழுது ஆண் குழந்தை பிறந்து உள்ளது, 5ல் ராகு அமர்ந்தாள் புத்திர பாக்கியம் இல்லை என்பது பொய்யானதா? பிறந்த ஆண் குழந்தை வழியில் இருந்து ஏதாவது இன்னல்கள் வருமா ? ராகு திசை அடுத்து வர இருக்கின்றது, எனக்கும் எனது குழந்தைக்கும் எதிர்வரும் ராகு திசையில் ஏதாவது பாதிப்பை தருமா ? எதிர்காலம் எப்படி இருக்கும் ? தெளிவான விளக்கம் தர வேண்டுகின்றேன் .


லக்கினம் : கன்னி
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : பூரம் 3ம் பாதம்

அடிப்படையில் ஒருவரது சுய ஜாதகத்தில் 5ல் ராகு அமர்ந்து இருப்பதினால் மட்டுமே புத்திர பாக்கியத்தை தடை செய்யும் என்று கருதுவதும், அவருக்கு குழந்தை பிறக்காது என்று முடிவு செய்வதும் முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானது, மேற்கண்ட ஜாதகருக்கு 5ம் பாவகத்தில் ராகு அமர்ந்து சம்பந்தப்பட்ட பாவாகத்தை கடுமையாக பாதிப்பிற்கு ஆளாக்குவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசி 12ம் வீடாக அமைந்து கடுமையாக பாதிக்கப்படுவதும் தங்களது ஜாதகத்தில் 5ம் பாவகம் பாதிப்பின் தன்மை கடுமையாக உள்ளது என்பதே உண்மையானது, இருப்பினும் தங்களது சுய ஜாதகத்தில் பிறந்த நேரத்தின் அடிப்படையில் 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சம்பந்தப்பட்ட பாவக  வழியில் இருந்து வரும் இன்னல்களை யாவற்றையும் தவிர்த்து, 11ம் பாவக வழியிலான நன்மைகளை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், தங்களது சுய ஜாதகத்தில் 5ம் வீடு சர மண் தத்துவ ராசியில் 1 பாகையும் ஸ்திர காற்று ராசியில் 29 பாகைகளையும் கொண்டிருப்பது 5ம் பாவக வழியிலான அதிர்ஷ்ட பலன்களை மட்டும் தடை செய்யும், குல தெய்வ நிந்தனை மூலம் தங்களுக்கு சுப நிகழ்வுகளில் தடை தாமதங்களை தரும், இதுவே தங்களது திருமண தாமதத்திற்கும் காரணமாக அமைந்தது என்பது கவனிக்கத்தக்கது.

ராகு பகவானால் பாதிக்கப்பட்ட 5ம் பாவக பலனை தற்போழுது நடைமுறையில் உள்ள செவ்வாய் திசை ஏற்று நடத்தவில்லை என்பதனால் 5ம் பாவக  வழியில் இருந்து வரும் இன்னல்கள் யாவும் தங்களுக்கு நடைமுறைக்கு வரவில்லை, மேலும் தங்களுக்கு 5ம் பாவகம் ராகு பகவானால்  கடுமையாக பாதிக்கப்படுவது, தங்களது பூர்வீக ஜீவனத்தை வெகுவாக பாதித்து கல்வி காலம் முதல் தற்போழுது வரை பரதேச ஜீவனம் என்ற அமைப்பில் வெளியூர், வெளிநாடுகளிலேயே ஜீவனத்தை மேற்கொள்ள வைத்திருப்பதால், புத்திர பாக்கியத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை, தாங்கள்  வெளிநாட்டில் இருப்பது தங்களது 5ம் பாவக ராகு தரும் இன்னல்களில் இருந்து காத்துஅருள்கிறது, தங்களது ஜீவனம் பூர்வீகத்தில் இருந்து இருப்பின் ( வாய்ப்பு வெகு குறைவு காரணம் 5ம் பாவகம் ராகு பகவானால் பாதிக்கப்படுவது பூர்வீகத்தை விட்டு வெளியேற்றிவிடும் ) ஆண் வாரிசு அமைவது என்பது குதிரைக்கொம்பாகவே அமைந்து இருக்கும்.

சுய ஜாதகத்தில் ராகு கேது 5ல் அமர்ந்து வலுவாக பாதிப்பை பெறுவது சம்பந்த பட்ட ஜாதகருக்கு பரதேச ஜீவனத்தை தந்துவிடும் என்பதற்கு தங்களது ஜாதகமே நல்ல உதாரணம், ஒருவேளை தாங்கள் பூர்வீகத்தில் வலுக்கட்டாயமாக ஜீவித்து இருப்பின், தங்களுக்கு நல்ல கல்வி, தொழில், திருமணம் , வருமானம், குழந்தை பாக்கியம், பொருளாதார முன்னேற்றம் என யாதொரு நன்மைகளையும் அனுபவித்து இருக்க முடியாது என்பதே உண்மை, மேலும் ஒரு சிறு விஷயத்தை பெறுவதற்கு கூட பகிர்தன முயற்சிகளை எடுக்கவேண்டிய சூழ்நிலையை தந்து இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தார் போல் தங்களுக்கு அமைந்த வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் மிகுந்த வலிமையுடன் அமைந்தது, தங்களுக்கு வெகு சாதகமாக அமைந்தது, திருமணம் ஆனா உடனேயே புத்திர பாக்கியம் கிட்டியதுடன், நல்ல ஆண் வாரிசும் பிறந்தது வரவேற்கத்தக்கது, தங்களது ஜாதகத்தில் 5ம் வீடு ராகு பகவானால் பாதிக்கப்பட்ட போதிலும், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் வீடு வலிமை பெற்று இருந்தது ஓர் சிறப்பு அம்சமாகும், மேலும் தாக்களுக்கு நடைபெற்ற செவ்வாய் திசை 5ம் பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருந்ததும், தாங்கள் வெளிநாட்டில் ஜீவனம் செய்து வருவதும் தங்களுக்கு நல்லொதொரு ஆண் வாரிசை நல்கியிருக்கிறது.

எதிர்வரும் ராகு திசை தங்களுக்கு 9ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் அதிர்ஷ்டகரமான யோக பலன்களை வாரி வழங்குவது மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், ராகு திசையும் தங்களுக்கு யாதொரு பாதிப்பையும் தரவில்லை என்பதால் 9ம் பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை பெற தயார் நிலையில் இருப்பதே உசிதமானது.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் 5ம் வீடு சாயா கிரகங்களான ராகுகேதுவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது அல்லது சுய ஜாதகத்தில் 5ம் வீடு 4,8,12ம் பாவக தொடர்பை பெறுவது, பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகருக்கு பூர்வீக வழியில் இருந்து வரும் நன்மைகளை வெகுவாக தடுக்கும், மேலும் ஜாதகரின் சமயோசித அறிவு திறன், பூர்வீக சொத்து, குழந்தை பாக்கியம் போன்ற விஷயங்களை வெகுவாக பாதிக்கும், மேற்கண்ட அமைப்பை பெற்ற அன்பர்களுக்கு சரியான தீர்வு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று ஜீவனம் தேடிக்கொள்வது நல்லது இல்லை எனில், நமது பெரியவர்கள் சொல்லி வைத்த " பாடும் பட்டமாதிரி, வீடும் கெட்ட மாதிரி " என்ற முதுமொழிக்கு நிகரான வாழ்க்கையை தந்துவிடும் என்பதுடன், புத்திர பாக்கியத்தையும் வெகுவாக பாதிக்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696