வியாழன், 31 ஆகஸ்ட், 2017

ராகு திசை தம்பதியருக்கு ( கணவன் மனைவிக்கு ) ஏக காலத்தில் நடைபெற்றால் இல்லற வாழ்க்கை பாதிக்கப்படுமா ?



கேள்வி :

கணவன் மனைவிக்கு ஒரே நேரத்தில் ராகு திசை நடைமுறைக்கு வந்தால் தம்பதியரின் இல்லற வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும், பிரிவு, துன்பம், உடல் நிலை பாதிப்பு மற்றும் தாங்க இயலாத கஷ்டங்களை தரும் என்று கூறுகின்றனர், எங்களது இருவரது சுய ஜாதகத்தையும் ஆய்வு செய்து இது உண்மையா ? என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறோம், முறையான ஆலோசனை மற்றும் அதற்க்கான தீர்வை பெற விரும்புகிறோம், நன்றி.






பதில் :

 எந்த ஓர் அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் கூறப்படும் கருத்தாகவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது தங்களின் வினாவில் உள்ள சாராம்சம், ஒருவரின் சுய ஜாதகப்படி நடைபெறும் திசா புத்திகள் தரும் பலாபலன்கள் என்பது சம்பந்தப்பட்ட ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையை ஏற்று நடத்தும் என்ற ஓர் விஷயம் அறியாத நிலையில், மேற்கண்ட குழப்பங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது, தங்களது இருவரது சுய ஜாதகத்திலும் தற்போழுது நடைபெறும் ராகு திசை தரும் பலாபலன்கள் என்ன ? என்பதனை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


மனைவி ஜாதகத்தில் நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள்  ( 13/05/2005 முதல் 13/05/2023  வரை ) :

ராகு பகவான் தனது திசையில் 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஆயுள் பாவக வழியில் இருந்து சுபயோக பலன்களை தருவது ஜாதகிக்கு சிறப்பான நன்மைகளை ஜீவன வழியில் இருந்து வழங்கும், குறிப்பாக ஜாதகி தனது வழக்கை துணை வழியில் இருந்து ஓர் நல்ல தொழில் வாய்ப்புகளையும், அவர் வழியிலான வருமானங்களையும் பொருளாதார சேர்க்கைகளையும் வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் ராகு களத்திர பாவகத்தில் ( பாவக நிலையில் ) வலிமை அற்று அமர்ந்து இருந்த போதிலும், தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகிக்கு சிறப்பான நன்மைகளை ஆயுள் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், தற்பொழுது நடைபெறும் ராகு திசை ஜாதகிக்கு தனது கணவன் வழியில் இருந்து சுப யோகங்களையும், தொழில் வாய்ப்புகளில் வெற்றிகளையும் வாரி வழங்கும், திடீர் முன்னேற்றங்களை ஜாதகி தொழில் வழியில் எதிர்பாராத நேரத்தில் பெறுவார், குறிப்பாக மருத்துவம் மற்றும் காப்பீடு துறை சார்ந்த தொழில் வழியில் இருந்து அபரிவிதமான நன்மைகளை தரும், ராகு திசை நடைபெற்ற போதிலும் ஜாதகிக்கு சுபயோக பலன்களே நடைமுறைக்கு வருவது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும், எனவே ஜாதகிக்கு நடைபெறும் ராகு திசை சிறப்பான நன்மைகளை கணவன், தொழில் வழியில் இருந்து நன்மைகளை தருவது தெளிவாகிறது.


கணவன் ஜாதகத்தில் நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள்  ( 13/05/2005 முதல் 13/05/2023  வரை ) :

 ராகு பகவான் ஜாதகருக்கு தனது திசையில் 2,8ம் வீடுகள் ஆயுள்  ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2,8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு இன்னல்களை தரும், குறிப்பாக 2ம் பாவக வழியில் இருந்து குடும்பத்தில் வாக்குவாதம், வருமான பாதிப்பு, திடீர் செலவினங்கள், மருத்துவ செலவுகள், விபத்து தனம் சார்ந்த இழப்புகள் என்ற வகையில் இன்னல்களை தரும், 8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள், உடல் நலம் சார்ந்த தொந்தரவுகள், வாழ்க்கை துணை வழியிலான செலவினங்கள் என்ற வகையில் சிக்கல்களை தந்த போதிலும், தற்போழுது நடைபெறும் சந்திரன் புத்தி, அடுத்து வரும் செவ்வாய் புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதால் ராகு திசையினால் ஏற்படும் இன்னல்கள் ஏதும் நடைமுறைக்கு வாராது, சந்திரன் புத்தி வலிமை பெற்ற பாக்கிய ஸ்தான பலனையும், அடுத்து வரும் செவ்வாய் புத்தி வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான யோக பலனை வாரி வழங்கும், ஜாதகருக்கு ராகு திசை பாதிக்கப்பட்ட 2,8ம் பாவக பலனை ஏற்று நடத்திய போதிலும், தற்போழுது நடைமுறையில் உள்ள புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதால்,  இல்லற வாழ்க்கையில் யாதொரு இன்னல்களும் ஏற்பட்ட வாய்ப்பு இல்லை என்பதே உண்மை நிலை.

மேலும் ஜாதகருக்கு ஆயுள் பாவகம் நீர் தத்துவ ராசி என்பதனால் மனம் சார்ந்த அழுத்தம் மற்றும் போராட்டங்களை மட்டும் தரும் என்பதால், பெரிய பாதிப்புகள் ஏதும் ஜாதகருக்கு இருக்காது, குறிப்பாக தற்போழுது நடைபெறும் சந்திரன் புத்தி  இல்லற வாழ்க்கையில் இன்னல்களை தர சிறிதும் வாய்ப்பில்லை என்பதால் ராகு திசை பாதிப்பை பற்றி தம்பதியர் எந்த கவலையும் கொள்ள தேவையில்லை.

அடுத்து வரும் குரு திசை தம்பதியருக்கு  தரும் பலாபலன்கள்  :

எதிர்வரும் குரு திசை ஜாதகிக்கு 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக  பலனை ஏற்று நடத்துவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை தரக்கூடும், ஜாதகருக்கு எதிர்வரும் குரு திசை 4,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக பலனை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், எனவே தம்பதியரின் வாழ்க்கையில் சிறு சிறு மனஸ்தாபங்கள் இருப்பினும், கடுமையான துன்பங்கள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை, தாம்பத்திய வாழ்க்கையில் பிரிவும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதனை தம்பதியர் இருவர் ஜாதகத்திலும் உள்ள களத்திர ஸ்தான வலிமை,  பூர்வ புண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தான வலிமை தெளிவு படுத்துகிறது, எனவே தம்பதியர் இருவரும் வரும் பிரச்சனைகளுக்கு பெரியோர் வழங்கும்  தீர்வை நாடி நலம் பெறுக " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கும்பம்!



 சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

கும்பம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்ப ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இனிவரும் இரண்டரை வருடம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், கும்ப லக்கின அன்பர்களுக்கு கோட்சார ரீதியாக வழங்கும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், " நிறைகுடம் நீர்தளும்பாது " என்ற பழமொழிக்கு இணங்க தனது செயல்திறன் மூலம் எடுத்துரைக்கும் கும்ப இலக்கின அன்பர்களுக்கு, இதுவரை ஜீவன ஸ்தானத்தில் நின்று இன்னல்களை தந்துகொண்டு இருந்த சனி பகவான், லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யது முழுஅளவில் சுபயோக பலன்களை வாரி வழங்க இருக்கின்றார், ஜாதகரின் லாப ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக வருவது ஜாதகர் தான் செய்த பாக்கியத்தின் வலிமையை அதிர்ஷ்ட ஸ்தான வழியில் இருந்து அனுபவிக்கும் யோகத்தை தரும், குறிப்பாக ஜாதகரின் அறிவுத்திறன் மூலம் நல்ல லாபமும், நிறைந்த தன சேர்க்கையையும் வாரி வழங்கும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தெளிவான சிந்தனை மற்றும் செயல்பாடுகள் மகர இலக்கின அன்பர்களுக்கு நீண்ட நெடுங்கால வளர்ச்சியை தொழில் வழியில் வாரி வழங்கும், எதிர்ப்புகள் யாவும் குறைந்து ஆதரவும் மக்கள் செல்வாக்கும் பெருகும், இதனால் ஜாதகருக்கு புது நம்பிக்கையும், புதிய எதிர்காலமும் சிறப்பாக அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது, உயர்கல்வி ஆராய்ச்சி கல்வி ஆகியவற்றில் தேர்ச்சி உண்டாகும், தெய்வீக தரிசனம் செய்ய பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும், அறிய பல திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகம் உண்டாகும், எதிர்பாராத விதத்தில் அந்நிய மொழி பேசும் நபர்கள் வழியில் இருந்து அதிர்ஷ்டம் தேடிவரும், தங்களது தூரத்து உறவுகள் வழியில் இருந்து ஆதரவும் அவர்கள் வழியிலான நன்மைகளும் தேடிவரும், தங்களின் வாழ்க்கையில் சனி பகவானின் லாப ஸ்தான சஞ்சாரம் நீடித்த அதிர்ஷ்டங்களை வாரி வழங்க தயார் நிலையில் உள்ளது என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

4ம் பாவகத்தை தனது 6ம் பார்வையினால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு வண்டிவாகன யோகம் மற்றும் வீடு நிலம் சார்ந்த வருமான வாய்ப்புகளை பரிபூர்ணமாக வாரி வழங்குவார், வாக்கை தொழிலாக கொண்டுள்ள அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி அபரிவிதமான லாபங்களை வாரி வழங்கும், குடும்பத்தில் சுப நிகழ்வுகளுக்கு உண்டான செலவினங்கள் அதிகரிக்கும், தாய் வழியிலான சொத்து கும்ப லக்கின அன்பர்களுக்கு தேடிவரும், எதிர்பாராத உதவிகள் குடும்ப நபர்கள் மூலம் கிடைக்க பெறுவீர்கள், நெடுநாள் ஆசைகளான புதிய வீடு மற்றும் புதிய சொகுசு வாகனம் போன்றவை இனிவரும் காலங்களில் தங்களுக்கு அமையும், வங்கிகள் வழியில் இருந்து கடன் தேடிவரும், இதனால் தங்களின் தொழில் வழியிலான வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும், கடன் உதவிகள் கேட்ட இடத்தில் இருந்து தங்களுக்கு கிடைக்கும், தங்களின் சொத்துக்கள் வழியிலான வருமானம் அதிகரிக்கும், வாக்கு வன்மை அதிகரிக்கும், எதிர்பார்த்த நல்ல செய்திகள் தங்களை தேடிவரும், நிதி துறை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வரும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் நல்லாதோர் முன்னேற்றங்களையும்  தொடர் வருமான வாய்ப்புகளையும் வாரி வழங்கும், தனது தாயார் உடல் நிலை சார்ந்த அக்கறை தங்களுக்கு வீண் செலவினங்களை தவிர்க்க உதவும், எதிர்பாராத நேரத்தில் தங்களுக்கு வரும் பொருளாதர உதவிகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு தங்களின் பொருளாதார சிக்கல்களில் இருந்து வெளியேற நல்ல வாய்ப்புகள் உண்டாகும், உடல் ஆரயோக்கியம் மேம்படும், சுய முயற்சிகள் நன்கு பலிதம் பெரும் நேரமிது என்பதனை மட்டும் கருத்தில் கொண்டு செயலாற்றும் நேரமிது, சுபயோகங்கள் சுக ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ணமாக நடைமுறைக்கு வரும்.

5ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு பூர்வீகம் சார்ந்த வழியில் இன்னல்களையும், தங்களின் குழந்தைகள் வழியிலான பிரச்சனைகளையும் அதிகரிப்பார், தங்களின் சமயோசித புத்திசாலித்தனம் யாவும் வீண் விரையம் ஆகும், தங்களின் திட்டமிடுதல்கள் யாவும் தடைகளையும் தாமதங்களையும் சந்திக்கும் நேரமிது, குலதெய்வ நிந்தனை தங்களின் வாழ்க்கையில் ஓர் வெற்றிடத்தை ஏற்படுத்தும், சிந்தனை திறன்  பாதிக்கப்படும், தங்களது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனத்தை தேடும் நிலை ஏற்படும், தங்களது சுய முயற்சிகள் யாவும் எதிர்பாராத பின்னடைவை சந்திக்க நேரும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை உருவாக்கும், நன்மை செய்ய சென்று வீண் அவபெயரை சம்பாதிக்கும் நிலை உருவாகும் என்பதானால் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது தங்களுக்கு நன்மையை தரும், 5ம் பாவக வழியில் இருந்து தாங்கள் அதிக அளவில் இன்னல்களை சந்திக்க வேண்டிவரும் என்பதனால் தங்களின் குல தேவதை வழிபாட்டினை முறையாக செய்து சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்ன்னல்களில் இருந்து விடுபடுங்கள்.

8ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனிபகவான் கும்ப இலக்கின அன்பர்களுக்கு திடீர் என பெரும் செல்வாக்கையும், தன சேர்க்கையும் வாரி வழங்குவார், குறிப்பாக மருத்துவம் மற்றும் நிதி துறையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு பொற்க்காலம் என்றால் அது மிகையாகாது, உடல் நலம் சார்ந்த இன்னல்களில் இதுவரை போராடிக்கொண்டு இருந்த கும்ப இலக்கின அன்பர்களுக்கு உடனடி நிவர்த்தியும், சுகமும் கிடைக்க பெறுவார்கள், மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும், இன்சூரன்ஸ் மற்றும் போனஸ் மூலம் பெரும் தன வரவை பெற வாய்ப்பு அதிகம் உண்டு, கும்ப இலக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத பணவரவு என்பது தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருக்கும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை பெறுவதற்கு சனிபகவானின் 10ம் பார்வை வழிவகுக்கும், சில அன்பர்களுக்கு தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் செல்வ சேர்க்கை உண்டாகும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் வருமானம் உண்டாகும், வெளிநாடுகளில் இருந்து வரும் புதிய பொருட்கள் மூலம் அதித லாபம் உண்டாகும், வெளிநாடு மற்றும் வெளியூர் வழியில் இருந்து பெரும் தன சேர்க்கையை கும்ப இலக்கின அன்பர்கள் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக பெறுவார்கள் என்பது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும்.

குறிப்பு :

கும்ப லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 11,4,5,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  11,4,5,8ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கும்ப லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

சனி, 26 ஆகஸ்ட், 2017

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - ( கடக லக்கினம் )

 

 சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஆவணி மாதம் 01ம் தேதி ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 18ம் தேதி இரவு 02-32க்கு ராகு பகவான் சிம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். சாயா கிரகங்களான ராகுகேது  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!


கடகம் லக்கினம் :

காலபுருஷ தத்துவத்திற்க்கு 4ம் ராசியான கடகத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, உடல் உயிர் ஸ்தானமான 1ம் பாவகத்தில் ராகு பகவானும், களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் கேது பகவானும் தனது சஞ்சார காலம் வரை தரும் பலன்களை ஆய்வு செய்வோம் அன்பர்களே! உண்மையில் இந்த சாயா கிரகங்களின் பெயர்ச்சியினால் 100% சதவிகித சுபயோகங்களை பெரும் அன்பர்கள் என்ற விதத்தில் கடக லக்கின அன்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம், லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் தங்களின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க முன்னேற்றங்களை அதிரடியாக வாரி வழங்க இருக்கிறார் என்பதை கவனத்தில் கொண்டு, நன்மைகளை பெறுங்கள் கடக லக்கின அன்பர்களே! தங்களின் மனதில் உள்ள எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கும் வரும் யோக காலம் இது என்றால், அது மிகையில்லை, தங்களின் லட்ச்சியங்கள் நிறைவேறும், ஆசைகள் அனைத்தும் நிறைவேறும், புதிய சுக போக வாழ்க்கை உண்டாகும், உடல் மனம் இரண்டும் சிறப்பாக செயல்படும், தன்னம்பிக்கை அதிகரிக்கும் எதையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும், திடீர் பதவிகள் தேடிவரும், இதுவரை இருந்து வந்த இன்னல்கள் யாவும் விரைவாக குறையும், புதிய வண்டி வாகனம் மற்றும் வீடு நிலம் வாங்க யோகம் உண்டாகும், தனது தாய் வழியிலான சொத்துக்கள் கடக லக்கின ஜாதகருக்கு தேடிவரும், புதிய வாய்ப்புகள் வீடு தேடிவரும், சுகபோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் யோகத்தை ராகு பகவான்  தனது சஞ்சார காலத்தில் திகட்ட திகட்ட வாரி வழங்குவார், தெய்வீக சக்திகள் மூலம் தங்களின் வாழ்க்கையில் அதிசயத்தக்க நிகழ்வுகள் நடைமுறைக்கு  வரும், மனோரீதியான பிரச்சனைகளை மிக எளிதாக கையாண்டு தங்களின் வாழ்க்கையில் முன்னேற்றங்களை பெரும் யோக காலமாக இந்த சாயா கிரகங்களின் பெயர்ச்சி அமையவிருக்கிறது, கலைத்துறை, கல்வி துறை, தொழில் துறை உள்ள அன்பர்கள் அனைவரும் அபரிவிதமான வளர்ச்சியை பெறுவார்கள், மனதிற்கு இனிய சம்பவங்கள் தங்களின் வாழ்க்கையில் தொடர்ந்து நடைபெறும், தங்களின் புகழ் கீர்த்தி உலக பிரபல்யத்தை தேடித்தரும், இதுவரை இருந்த தடைகள் யாவும் தங்களைவிட்டு நீங்கி, வெற்றி திருமகளின் பரிபூர்ண ஆசியை பெரும் யோகத்தை தரும்.

களத்திர பாவக கேதுவின் சஞ்சாரம் கடக லக்கின அன்பர்களுக்கு மிக அருமையான இல்லற வாழ்க்கை துணையை அமைத்துத்தர இருக்கின்றது, தங்களின் தகுதிக்கு மீறிய இடத்தில் இருந்து வாழ்க்கை துணையை பெரும் யோகம் உண்டாகும், வசதி வாய்ப்புகள் நிறைந்த இடத்தில் இருந்து வரும் வாழ்க்கை துணை தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தகு மாற்றங்களை தருவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இதுவரை திருமண தடையை சந்தித்து கொண்டு இருந்த வரன் வதுவுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து குறுகிய காலத்தில் மனதிற்கு இனிய வாழ்க்கை துணை அமையப்பெறுவார்கள், காதல் திருமணம் கைகூடி வரும், மனதில் நினைத்தவரையே வாழ்க்கை துணையாக பெற்று, சுபயோக வாழ்க்கையை கடக லக்கின அன்பர்கள் அமைத்துக்கொள்வார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை, தெய்வீக பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும், கடக லக்கின அன்பர்களுக்கு புதிய நடப்புறவு அல்லது கூட்டாளிகள் மூலம் பொருளாதார வளர்ச்சியை பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும், நேர்மையான வழியில் சொத்து சுக சேர்க்கையை பெற்று அதன் வழியிலான வருமானங்களை பெறுவதற்கு கடக லக்கின அன்பர்களுக்கு கேது பகவான் நல்லதொரு வாய்ப்புகளை வாரி வழங்குவர், வெளிநாடு வெளியூர் சென்று பெரும் தனசேர்க்கையை பெறுவதற்கு  கேது பகவான் முழு ஆசியையும் வாரி வழங்க இருக்கின்றார், தங்களின் வெளிநாடு கனவுகள் யாவும் பரிபூர்ணமாக நிறைவேறும், கடக லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலம் வாழ்க்கை துணை வழியிலான யோகம், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியிலான யோகம் வெளிநாடு மற்றும் வெளியூர் சார்ந்த சுபயோகங்கள் தேடி வரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, மேலும் இதுவரை நல்ல தொழில் அமையாமல் போராடிக்கொண்டு இருந்த அன்பர்களுக்கு அதிர்ஷ்ட பரிசு காத்துகொண்டு இருக்கின்றது என்பதை வாழ்த்துக்களுடன் கூற கடமைப்பட்டு இருக்கின்றது "ஜோதிடதீபம்" கடக லக்கின அன்பர்களே இந்த சாயகிரகங்களின் பெயர்ச்சி தங்களின் வாழ்க்கையில் அளவில்லா சுபயோகங்களை தர காத்துகொண்டு இருக்கின்றது என்பதனை கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட்டு, அதிர்ஷ்டங்களை அள்ளிச்செல்லுங்கள், தங்களின் வாழ்க்கையில் இனிவரும் 18மாதங்கள் ஓர் பொற்காலம்  என்றே சொல்லலாம், ராகு கேதுவின் உண்மை வலிமையினை  கடக லக்கின அன்பர்கள் இனிவரும் காலங்களில் பரிபூர்ணமாக உணர்வார்கள்  " வாழ்த்துக்கள் " " கேதுபகவான் கெடுப்பான்" என்ற பழமொழியினை பொய்யாக்கும் விதமாக, கடக லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் கேதுபகவான் வாரி கொடுப்பார் இதை கடக லக்கின அன்பர்கள் பரிபூர்ணமாக உணருவார்கள்.

குறிப்பு :

 கடக லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கடக லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

திசாசந்திப்பும் ( ஏக திசை நடப்பு ) திருமண வாழ்க்கையும் !

 

 திருமண பொருத்தம் காண்பதில் தற்போழுது " திசாசந்திப்பு " எனும் புதுவித பொறுத்த நிர்ணயம் மிக பிரபல்யம் அடைந்து வருகின்றது, திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய இது அவசியம் என்பதனை வலியுறுத்தி கூறுகின்றனர், பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் அடிப்படையாக நட்ச்சத்திர பொருத்தம் எனும் 10 பொருத்தங்கள் கண்டு, ஜாதகத்தில் ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம் மற்றும் களத்திர தோஷம் என்ற விஷயங்களை அலசி ஆராய்ந்த பிறகு மணமகனுக்கும், மணமகளுக்கும் ஏக காலத்தில் ஒரே திசை நடைமுறைக்கு வரும்பொழுது திசாசந்திப்பு எனும் விஷயம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது, அதாவது இருவருக்கும் ஒரே திசை சில வருடங்கள் முன்பின் நடைபெற்றால் தம்பதியர் வாழ்க்கை இன்னலுறும் என்பதும், இதனால் திருமண பொருத்தம் இல்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது, ஒருவேளை தம்பதியர் இருவருக்கும் ஒரே திசை நடைபெற்றால் ஏக காலத்தில் இன்னல்களையும், ஏக காலத்தில் நன்மைகளையும் அனுபவிக்க வேண்டி வரும் என்பது, பொருத்தம் காண வரும் அன்பர்களின் கேள்வியாகவும் இருக்கின்றது, உதாரணமாக மணமகனுக்கும் மணமகளுக்கும் முன்பின் குரு திசை நடைபெறும் காலத்தில் தம்பதியர் இருவரும் நன்மைகளையும், சனி திசை நடைபெறும் காலத்தில் துன்பங்களையும் அனுபவிக்க வேண்டி வரும் என்ற கருத்தை வரன் வதுவின் பெற்றோர்கள்  முன் வைக்கின்றனர்.

இது எந்த அளவிற்கு உண்மை என்பதனை இன்றைய பதிவில் உதாரண ஜாதகம் கொண்டு  சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

வரன் ஜாதகம்


லக்கினம் : கன்னி
ராசி : கன்னி
நட்சத்திரம் : சித்திரை 2ம் பாதம்


வது ஜாதகம்


லக்கினம் : விருச்சிகம்
ராசி : ரிஷபம்
நட்சத்திரம் : ரோஹிணி 4ம் பாதம்

மேற்கண்ட தம்பதியர் இருவருக்கும் தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை குரு திசை, திருமணம் 2015ம் வருடம் ஜூன் மாதம் நடைபெற்றது, தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும் ஏக காலத்தில் குரு திசை நடைபெறுவதால் திருமணம் செய்ய வேண்டாம் என்ற கருத்தை அதிகம் பேர் பரிந்துரை செய்து இருக்கின்றனர், இருப்பினும் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியரின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பதை இனி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!  தம்பதியரின் இல்லறவாழ்க்கை மிகவும் சிறப்பாக சென்று கொண்டு இருக்கின்றது, மேலும் நல்ல ஆண் வாரிசும் அமைந்து இருக்கின்றது, தம்பதியர் இருவரும் புதிய வீடு ஒன்று விலைக்கு வாங்கி இருக்கின்றனர், எனவே இருவருக்கும் குரு திசை நடைமுறையில் இருப்பதால் சுபயோக பலன்கள் என்று எடுத்துக்கொள்ளலாம? என்றால் அது சரியாக வர வாய்ப்பில்லை காரணம் தம்பதியரில் வதுவுக்கு நடைபெறும் குரு திசை 10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தந்து கொண்டு இருக்கின்றது, வரனுக்கோ 1,3,5,7,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலனை லாப ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது,  எனவே குரு  திசை இருவருக்கும் நன்மையை செய்யும் என்ற வாதம் முற்றிலும் தவறாக போகிறது, அடுத்து வரும் சனி திசை தம்பதியர் இருவருக்கும் தரும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

ஜாதகிக்கு 26/02/2031 வரை நடைபெறும் குரு திசை தனது திசையில் 10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருகின்றது, ஜாதகருக்கு குரு திசை 09/04/2018 வரை நடைபெற்று 1,3,5,7,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனை தருகின்றது, இருவருக்கும் அடுத்து வரும் சனி திசை ஜாதகிக்கு  5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனையும், 9ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும் தருகின்றது, ஜாதகருக்கு 2,6ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஒரு வகையில் நன்மைகளையும், 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிதம்மிஞ்சிய சுக போகங்களையும், 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும் தர தயார் நிலையில் உள்ளது, சனி திசை காலத்தில் ஜாதகி பாதக ஸ்தான வழியில் இன்னல்களையும், பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும் அனுபவிப்பார், ஜாதகர் சுக ஸ்தான வழியில் இருந்தும், சத்ரு ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும், விரைய ஸ்தான வழியில் இருந்து இன்னல்களையும் அனுபவிப்பார் இதுவே மேற்கண்ட தம்பதியர் ஜாதகத்தில் சனி திசை தரும் பலாபலனாகும்.

மேற்கண்ட  தம்பதியர் இருவரது சுய ஜாதகப்படியும் நடைபெறும் குரு மற்றும் சனி திசை தம்பதியரின் இல்லற வாழ்க்கையை பாதிக்கும் வண்ணம் இல்லை என்பதே உண்மை நிலை, சுய ஜாதகத்தில் குறிப்பாக வதுவின் ஜாதகத்தில் 2,7ம் வீடுகளை கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே ( அதாவது பாதக ஸ்தானத்துடன் தொடர்பு ) தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும், மேற்கண்ட தம்பதியர் இருவரது சுய  ஜாதகத்திலும் 2,7ம் வீடுகள் மிகவும்  வலிமையுடன் இருப்பதால் இல்லற வாழ்க்கை பாதிக்க சிறிதும் வாய்ப்பு இல்லை, குறிப்பாக தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது சிறப்பான இல்லற வாழக்கையை  தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, இல்லற வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்கள் வரும் அது எதார்த்தமான விஷயம், ஆனால் பிரிவு என்ற நிலையை தரும் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

உதாரண ஜாதகத்தில் நடைபெறும் ஏக திசை எனும் திசா சந்திப்பு  என்பது தம்பதியரின் இல்லற வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதனை "  ஜோதிடதீபம் " தெளிவாக பதிவு செய்ய விரும்புகிறது, மேலும் திசாசந்திப்பு, ஏக திசை நடப்பு என்பதெல்லாம் வரன் வதுவுக்கு நடைபெறும் ஒரே கிரகத்தின் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகின்றது என்ற உண்மை தெரியாத  நிலையிலும், தம்பதியரின் சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகளின் வலிமை நிலை அறியாத நிலையிலும் கூறப்படும் கற்பனை கதையே அன்றி உண்மையில்லை என்பதனை அன்பர்கள் அனைவரும் உணர்வது அவசியமாகிறது, திருமண பொருத்தம் காணும்  பொழுது நட்ச்சத்திர பொருத்தம் மற்றும் தோஷங்களுக்கு முன்னுரிமை தாராமல், வரன் வதுவின் சுய ஜாதகத்தில் 1,2,5,7,8,12ம் பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொண்டு பொருத்தம் காணும் பொழுதும், தம்பதியருக்கு திசாசந்திப்பு எனும் ஏக திசை நடைபெற்ற போதிலும் கிரகங்களின் திசை ஏற்று நடத்தும் பாவகங்களின்  வலிமையை கருத்தில் கொண்டு பொருத்தம் காண்பதே திருமண வாழ்க்கையை  வெற்றிகரகமாக அமைத்து தரும்.

குறிப்பு :

 திசாசந்திப்பு என்பது தம்பதியர் இருவருக்கும் நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவக வலிமையின் தன்மையை பற்றி தெளிவு இல்லாத நிலையில் கூறப்படும் கற்பனையே, இதில் சிறிதும் உண்மையில்லை அன்பர்களே! திருமண பொருத்தம் காணும் பொழுது வரன் வதுவுக்கு ஏக திசை நடைபெற்ற போதிலும் நடைபெறும் ஏக திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று  நடத்தினால் தம்பதியர் வாழ்க்கையில் சுபயோக பலாபலன்களே நடைமுறைக்கு வரும் என்பதனை நினைவில் கொள்க, திருமண வாழ்க்கை வெற்றி பெற்ற தாம்பத்திய வாழ்க்கையாக மாற வரன் வதுவின் சுய ஜாதகத்தில்  உள்ள 1,2,5,7,8,12ம் பாவகங்களின் வலிமை நிலையே என்பதில் கவனத்தில் கொண்டு திருமண பொருத்தத்தை நிர்ணயம் செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறுங்கள், " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

செவ்வாய் மஹா திசை தரும் ஜீவன ஸ்தான சுபயோகங்கள் !


 வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதும், சுப யோகங்கள் என்பதும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையின் அடிப்படையிலேயே நடைமுறைக்கு வருகின்றது, நமது சுய ஜாதகத்தின் வலிமை நிலை பற்றி ஓர் தெளிவு இல்லாத பொழுது நமது லட்ச்சியங்கள், கனவுகள் மற்றும் தகுதி நிலை பற்றிய விழிப்புஉணர்வு அற்றவர்களாக செயல்படும் தன்மையை தரும், மாறாக நமது சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் தன்மையை பற்றி உணர்ந்து செயலாற்றும் பொழுது நமது உழைப்பு வீணாகாது, நம்பிக்கை குறையாது, நேரவிரையம் ஏற்பட்ட வாய்ப்பில்லை, நமது வாழ்க்கையின் முன்னேற்றத்தை நாமே மிக எளிதாக நிர்ணயம் செய்ய இயலும், மேலும் நமது ஜாதக வலிமை பற்றிய தெளிவு என்பது தடைகளற்ற ஓர் நேர் வழியில் சென்று வெற்றிவாகை சூடும் யோகத்தை தரும் என்பது மறுக்க இயலாத உண்மை.

இதை கருத்தில் கொண்டே, சித்தர்களும், ஞானிகளும் சாஸ்திர வல்லுனர்களும் நமக்கு " ஜோதிட கணிதம் " எனும் பொக்கிஷத்தை விட்டு சென்று இருக்கின்றனர், அதன் பெருமை உணர்ந்து ஜோதிட சாஸ்திரத்தை நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் சகல நலன்களையும் பெறுவதே நாம் செய்த புண்ணியம் நமது முன்னோர்கள் செய்த பாக்கியம், உதாரணமாக கீழ்கண்ட ஜாதகத்தை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை என்ன ? தற்போழுது நடைபெறும் திசை தரும் பலன்கள் என்ன? எதிர்வரும் திசா புத்திகள் தரும் பலாபலன்கள் என்ன ? இதை ஜோதிட சாஸ்திர கணிதம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : கடகம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் :  பூராடம் 1ம் பாதம் .

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,
3,7ம்  வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்  பெறுவதும்,
6,10ம்  வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,
9ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், சுய ஜாதகத்தில்  வலிமை பெற்ற பாவக தொடர்புகள் ஆகும், ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து சுபயோகன்களை அனுபவிப்பார்.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

1,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,
4,12 ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,
5,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் சுய ஜாதகத்தில்  வலிமை அற்ற பாவக தொடர்புகள் ஆகும், ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து கடுமையான இன்னலைகளை அனுபவிப்பார், குறிப்பாக 1,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் மிதம்மிஞ்சிய கடுமையான நெருக்கடிகளை தரும், 1,11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த இன்னல்களை சந்திப்பார்.

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 6பாவகங்கள் வலிமையுடனும், 6பாவகங்கள் வலிமை அற்றும் இருப்பது சுய ஜாதகத்தின் வலிமை நிலையாகும், இனி இந்த ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெறுவது ஜாதகரின் தற்போதைய நிலையை சிறப்பாக எடுத்து கூறும்.

செவ்வாய் திசை ( 15/01/2017 முதல் 16/01/2024 வரை ) :

செவ்வாய் திசை ஜாதகருக்கு 3,7ம்  வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று செவ்வாய் திசை முழுவதும் 3,7ம் வீடுகள்  வழியில் தொழில் முன்னேற்றங்களை வாரி வழங்குகிறது, 3ம் பாவக  வழியில் இருந்து ஜாதகர் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெரும், தன்னம்பிக்கை  மற்றும் தைரியம் அதிகரிக்கும், வெற்றி மேல் வெற்றி உண்டாகும், வியாபாரம் செய்வதற்கு உண்டான நல்ல வாய்ப்புகளும், சகல சௌபாக்கியமும் ஜாதகருக்கு தேடிவரும், செல்வச்செழிப்பில் ஜாதகர் பரிபூர்ண நன்மைகளை பெறுவார், 7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல  நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் அமைவர், வெளியூர் வெளிநாடு யோகம் உண்டாகும், தொழில் விருத்தி அபரிவிதமாக அமையும், வாழ்க்கை துணையின் ஆதரவு மற்றும் மக்கள் ஆதரவு மூலம் ஜாதகர் மிகப்பெரிய வெற்றிகளை ஜீவன வழியில் இருந்து தடையின்றி பெறுவார், எனவே ஜாதகருக்கு தற்ப்பொழுது நடைபெறும் செவ்வாய் மஹா திசை ஜாதகருக்கு முழு வீச்சில் சுபயோக பலன்களை ஜீவன ஸ்தான வழியில் இருந்து தருகிறது, ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷத்தில் 12 பாகைகளும், இரண்டாம் ராசியான ரிஷபத்தில் 18 பாகைகளையும் கொண்டு இருப்பது ஜாதகர் தனது சுய முயற்சியினாலும், வாக்கு வன்மையினாலும் வருமான வாய்ப்புகளையும், அளவில்லா ஜீவன முன்னேற்றத்தை பெறுவார் என்பதை உறுதி செய்கிறது.

செவ்வாய் திசைக்கு அடுத்து வரும் ராகு திசை தரும் பலன்கள் :

 ஜாதகருக்கு செவ்வாய் திசை சுபயோக பலனை தந்த போதிலும், அடுத்து வரும் ராகு திசை 1,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருவது ஜாதகருக்கு நல்லதல்ல, எனவே ராகு திசை ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும் என்பதுடன், அதற்க்கு காரணகர்த்தாவாக ஜாதகரே இருப்பார் என்பது கவனிக்க தக்க விஷயமாகும்.

குறிப்பு :

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை சுப யோகங்களை தருவது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும், ஆனால் ராகு திசை சிறப்பான பலனை தருவதற்கு வாய்ப்பு இல்லை என்பதை கருத்தில் கொள்வது ஜாதகருக்கு நன்மையை தரும், சுய ஜாதகத்தில் மேற்கண்ட அமைப்பில் பாவக வலிமை நிலை உணர்ந்து செயல்படுவது சம்பந்தப்பட்ட ஜாதகர் அனைவருக்கும் நலன்களை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

ஜாதகருக்கு சுப யோகங்களையும், சிறந்த வாழ்க்கை பாதையினையும் அமைத்து தரும் கோண பாவகங்கள் !


" தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று "

என்ற வள்ளுவரின் வாக்கிற்க்கு இணங்க புகழ் மிக்க வாழ்க்கையை வாரி வழங்கும் வல்லமை கொண்டவை கோண பாவகங்கள் எனும் 1,5,9ம் பாவகங்கள் என்றால் அது மிகையில்லை, ஓர் ஜாதகருக்கு வாழ்க்கை இறைவன் விதித்த தர்மத்தின் படி நடைபெறுகிறது என்றால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் கோண பாவகங்கள் மிகவும் வலிமை பெற்று இருக்கின்றது என்பதே சத்தியம், இதை எவராலும் மறுக்க இயலாது, இது ஜாதகர் முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் தாக்கத்தையும், ஜாதகரின் பெற்றோர் மற்றும் முன்னோர் செய்த பாக்கியத்தின் தாக்கத்தையும் ஒன்றிணைத்து தரும் சுபயோக பலாபலனாகும், ஜாதகரும் ஜாதகரின் முன்னோர்களும் தர்மத்தின் வழியில் நடந்து பெற்ற "தவபலன்" என்றே சொல்லலாம் அனபர்களே.

 கோண பாவகங்கள் வலிமை பெற்ற ஜாதகரின் வாழ்க்கையில் வரும் துன்பங்கள் யாவும் தொலைந்து ஓடும், தர்ம தேவதைகளின் அருட்காப்பில் ஜாதகருக்கு சுப யோகங்கள் நடைமுறைக்கு வரும் குறிப்பாக ஜாதகருக்கு நல்ல உடல் மற்றும் மன நலம் சிறப்பாக அமையும், தெய்வீக ஆசிர்வாதம் மூலம் நல்ல கல்வி ஞானம் உண்டாகும், நல்லோர் சேர்க்கையின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பாதையை சிறப்பாக அமைத்துகொள்ளும் யோகம் உண்டாகும், தீயவைகள் யாவும் விலகி நன்மைகள் யாவும் நடைமுறைக்கு வரும், ஆத்ம ஞானமும், நல்லறிவும் ஜாதகரின் வாழ்க்கையை சிறப்பிக்கும், ஜாதகரின் நல்ல எண்ணங்கள் யாவும் வாழ்க்கையாக விரிவடையும், லட்சியங்கள் கைகூடி வரும், தனக்கு வரும் சவால்களை ஜாதகரே தனது சுய அறிவு திறன் கொண்டு வெற்றி வாகை சூடுவார், எவர் உதவியும் இன்றி வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்வார் என்பதுடன் தர்மத்தை போற்றி காக்கும் ஒழுக்கசீலராகவும் திகழ்வார் மேலும் தர்ம தேவதை ஜாதகரை எந்த சூழ்நிலையிலும் கைவிடாது என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : கடகம் 
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : கிருத்திகை 2ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினம் எனும்  முதல் ( கோணம், கேந்திரம் எனும் சம வீடு ) வீடு  கடக ராசியில் 118.55.30  பாகையில் ஆரம்பித்து சிம்ம ராசியில் 148.16.46 பாகையில் முடிவடைகிறது எனவே ஜாதகருக்கு லக்கினம் கடகம் என்ற போதிலும் கடக ராசியில் 01.05.30 பாகை மட்டும் கொண்டுள்ளது சிம்மத்தில் 28.16.46 பாகையை பெற்றுள்ளது என்பதால் ஜாதகரின் குணாதிசயம்  கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான ( பூர்வ புண்ணிய ஸ்தானம் )  சிம்மத்தின் தத்துவ ஆளுமையின் கீழ் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, ஜாதகர் சர லக்கினத்தை பெற்ற போதிலும், ஸ்திர நெருப்பு ராசியின் தன்மையையே முழு அளவில் பெற்று இருப்பர் என்பதை முதலில் பதிவு செய்ய விரும்புகிறோம், மேலும் ஜாதகரின் முதல் வீடான லக்கினம் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்று இருப்பதும், ஜாதகரின் 9ம் வீடு மீன ராசியில் 359.41.25 பாகையில் ஆரம்பித்து ரிஷப ராசியில் 30.54.50 பாகையில் முடிவடைகிறது, எனவே ஜாதகரின் பாக்கிய ஸ்தானம் என்பது மீன ராசியில் இறுதி பாகையில் ஆரம்பித்து, ரிஷப ராசி முதல் பாகையில் முடிவடைகிறது, பெரும்பாலும் ஜாதகரின் பாக்கிய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் வீடான மேஷ ராசியின் தன்மையை முழு அளவில் பெற்று இருப்பது கண்கூடான உண்மை, எனவே லாக்கினம் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 9ம் பாவகம் சர நெருப்பு தத்துவ ராசியான மேஷமாகவும், மேலும் மேஷ ராசியின்  குணமான, சத்தியத்தை மதித்தல், நேர்மை, உண்மை மாறாத குணம், சுய கட்டுப்பாடு, தெளிவான முடிவுகளை மேற்கொள்ளும் வல்லமை, சிறந்த ஆளுமை திறன், செய்யும் பணியில் நேர்த்தி, சிறந்த அறிவு திறன், மிதம்மிஞ்சிய தொழில்நுட்ப அறிவு, லட்ச்சியத்தை பூர்ணமாக அடையும் யோகம், என்ற வழியிலும் ஜாதகர் பாக்கிய ஸ்தான பலனை லக்கின வழியில் இருந்து அனுபவிப்பார் என்பது மிக துல்லியமான ஜாதக பலாபலன்கள், எனவே ஜாதகரின் முதல் கோண வீடான லக்கினம் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு லக்கின பாவக வழியிலான சுபயோகங்களை நல்கும்.

இரண்டாம் கோண வீடான 5ம் வீடு ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் இரண்டாம் கோண பாவகமான 5ம் பாவகத்தை மிக வலிமை பெற செய்துவிடுகிறது, மேலும் ஜாதகரின் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் வீடான தனுசு ராசியில் ( 240.39.12 பாகையில் ஆரம்பித்து 269.35.31 பாகையில் முடிவடைகிறது ) 29 பாகையை கொண்டு  வியாபித்து நிற்பது ஜாதகரின் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வலிமை சேர்க்கும் அமைப்பாகும், இதனால் ஜாதகரின் கல்வி அறிவு மிதம்மிஞ்சி நிற்கும், அனுபவ அறிவு ஜாதகரின் இன்னல்களுக்கு நல்ல தீர்வுகளை தரும், அதிபுத்திசாலித்தனமும், சமயோசித அறிவாற்றலும் ஜாதகருக்கு வரும் இன்னல்களை தடுத்து நிறுத்தும் கேடயமாக விளங்கும், எந்த சூழ்நிலையிலும் தன்னிலை மறவாத மன நிலையை ஜாதகர் பெற்று இருப்பர், மேலும் ஜாதகரின் அறிவு எவர் போற்றுதலுக்கும் மயங்காது, பதவி வரும் பொழுது பணிவும் வரவேண்டும், நல்ல துணிவும் வரவேண்டும் என்ற கவிஞரின் வாக்கிற்க்கு பொருத்தமான செயல்பாடுகளை ஜாதகருக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் வழங்கும், மேலும் ஜாதகரின் நுண்ணறிவு என்பது..

" எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண் பதறிவு "

என்பதற்கு இணங்க மெய்பொருள் காணும் அறிவை ஜாதகர் பெற்று இருப்பார் என்பது  கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் ஜாதகருக்கு பிறக்கும் குழந்தைகள் நல்ல யோகமுடன் திகழும் என்பதுடன் "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு " என புகழ் பெற்று கீர்த்தியுடன் வாழும் யோகத்தை தரும், தெய்வீக நம்பிக்கை ஜாதகருக்கு அதிக அளவில் அமைந்திருக்கும் என்பதுடன், குல தேவதையின் ஆசிர்வாதத்துடன் ஜாதகர் சுப யோகங்களையும் பெறுவார் என்பது ஜாதகரின் சிறப்பு அமசமாகும்.

மூன்றாம் கோண வீடான 9ம் வீடு ஜாதகருக்கு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் மூன்றம் கோண பாவகமான 9ம் பாவகத்தை மிக வலிமை பெற செய்துவிடுகிறது, 9ம் பாவகத்தை பற்றி விரிவாக லக்கினத்துடன் தொடர்பு பெரும் பாக்கிய ஸ்தானம் என்ற பத்திகளில் விரிவாக பார்த்து விட்டதால், இனி பாக்கிய ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகளை பற்றி மட்டும் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம், ஜாதகருக்கு பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது ஆராய்ச்சி கல்வியில் நல்ல வெற்றிகளை தரும், ஆன்மீக பெரியோரின் சந்திப்பின் மூலம் தனது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை பெறுவார், எதிர்ப்புகளை கடந்து சிகரம் தொடும் யோகம் உண்டாகும், ஜாதகரின் அறிவு திறனின் வீச்சு பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் வல்லமை கொண்டதாக திகழும், நல்ல ஆன்மிகம் மற்றும் யோக மார்க்கம் ஜாதகருக்கு பிறவி பயனை அடைய செய்யும், அனைத்திற்க்கும் சரியான தீர்வு சொல்லும் ( தர்மத்தின் படி ) வல்லமை கொண்டவராக திகவார்கள், மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் கோண வீடுகளான 1,5,9ம் வீடுகள் மிக மிக வலிமையாக காணபடுவது, ஜாதகரின் சிறப்புகளை கால ஓட்டத்தில் இந்த பூஉலகம் புரிந்து செயலாற்றும், இறைஅருள் அதற்க்கான வாய்ப்புகளை நிச்சயம் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - ( மிதுன லக்கினம் )



சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஆவணி மாதம் 01ம் தேதி ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 18ம் தேதி இரவு 02-32க்கு ராகு பகவான் சிம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். சாயா கிரகங்களான ராகுகேது  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!


மிதுனம் லக்கினம் :

காலபுருஷ தத்துவத்திற்க்கு 3ம் ராசியான மிதுனத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் ராகு பகவானும், ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தில் கேது பகவானும் தனது சஞ்சார காலம் வரை தரும் பலன்களை ஆய்வு செய்வோம் அன்பர்களே! ராகு பகவானின் குடும்ப ஸ்தான சஞ்சாரம் தேய்பிறை காலங்களில் மிதம் மிஞ்சிய சுப யோகங்களை 2ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், மிதுன லக்கின அன்பர்களுக்கு சரளமான தனவரவை தரும், பேச்சு திறன் மூலம் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், தெய்வீக அனுகிரகம் மூலம் வாழ்க்கையில் சுப நிகழ்வுகள் நடைபெறும், திருமண தடைகளை சந்தித்து கொண்டு இருந்தவர்களுக்கு, தடைகள் நீங்கி நல்ல வாழ்க்கை துணையுடன் இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் யோகம் உண்டாகும், புதிய தொழில் வழியில் இருந்து வருமானம் வரும், குறிப்பாக விவசாயம் மற்றும் உணவு பொருள் சார்ந்த தொழில் செய்து வரும் அன்பர்களுக்கு நல்ல வருமானமும் தனசேர்க்கையும் உண்டாகும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்பட்டு நன்மைகளை பெறுக, மேலும் வண்டி வாகனம், போக்குவரத்து தொழில் சார்ந்து இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் சிறப்பான வளர்ச்சியை வாரி வழங்கும், வரும் வருமானம் கடன்களை நிறைவு செய்து முழு உரிமையாளராக திகழும் யோகத்தை தரும், செழிப்பு மிக்க எதிர்காலத்தை தேய்பிறையில் ராகுவின் சஞ்சாரம், மிதுன லக்கின அன்பர்களுக்கு வாரி வழங்கும், வளர்பிறை காலத்தில் எதிர் மறையான இன்னல்களை மிதுன லக்கின அன்பர்கள் சந்திக்கும் சூழ்நிலையை தரும், வாக்கு வழியிலான தொல்லைகள் அதிகரிக்கும், முறையற்ற தெளிவற்ற வார்த்தைகள் கடுமையான இன்னல்களை தரும், வாக்குவாதம் கடுமையான நிம்மதியிழப்பை தரும், வளர்பிறை காலத்தில் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது மிதுன லக்கின அன்பர்களுக்கு சகல நலன்களையும் தரும், குறிப்பாக குடும்பத்தில் வாழ்க்கை துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சுமூக போக்கை கடைபிடிப்பதே சாலசிறந்தது, மேலும் மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையீடு செய்யாமல், தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பதே மிதுன லக்கின அன்பர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் சுக போகங்களை வாரி வழங்கும்.

 கேது பகவானின் ஆயுள் பாவக சஞ்சாரம் வாழ்க்கை துணை வழியிலான பொருள் வரவை அதிக அளவில் வாரி வழங்கும், மேலும் திடீர் அதிர்ஷ்டம் மூலம் பொருளாதார வளர்ச்சியை மிதுன லக்கின அன்பர்கள் அனைவரும் தனது தொழில் வழியில் இருந்து அபரிவிதமாக பெறுவார்கள், நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் வழியில் தன சேர்க்கை உண்டாகும், இதுவரை செய் தொழிலில் இன்னல்களை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு இனிவரும் காலம் வெகு வேகத்தில் தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும், எதிர்பால் இனஅமைப்பினர் மூலம் சிறந்த செல்வாக்கை மிதுன லக்கின அன்பர்கள் பெறுவார்கள், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை அவரவர் செய்யும் தொழில் வழியில் இருந்து பெறுவார்கள், மிதுன லக்கின அன்பர்களுக்கு புதிய தொழில் துவக்க இதுவே சரியான நேரமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை, புதிய முயற்சிகள் மற்றும் தொழில் சார்ந்த நடவடிக்கைகள் மிக அபரிவிதமான வளர்ச்சியை வாரி வழங்கும், கனவுகளும் நனவாகும் நேரமிது, எனவே மிதுன லக்கின அன்பர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வெற்றிகளை பெற இறைஅருள் கருணை புரியட்டும், திடீர் செல்வ சேர்க்கையை தரும் என்பதால் அதை முறைப்படுத்துதலும், பாதுகாப்பதும் மிதுன லக்கின அன்பர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள் என்பதை கருத்தில் கொள்க.

  குறிப்பு :

 மிதுன லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 2,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  2,8ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மிதுன லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 

9443355696

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - ( ரிஷப லக்கினம் )


சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஆவணி மாதம் 01ம் தேதி ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 18ம் தேதி இரவு 02-32க்கு ராகு பகவான் சிம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். சாயா கிரகங்களான ராகுகேது  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

ரிஷப லக்கினம் :

காலபுருஷ தத்துவத்திற்க்கு 2ம் ராசியான ரிஷபத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தில் ராகு பகவானும், பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் கேது பகவானும் தனது சஞ்சார காலம் வரை தரும் பலன்களை ஆய்வு செய்வோம் அன்பர்களே! ராகு பகவானின் வீர்ய ஸ்தான சஞ்சாரம் ரிஷப லக்கின அன்பர்களுக்கு முயற்சிக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றி மேல் வெற்றி தரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், சுய முன்னேற்றம் சார்ந்த திட்டமிடுதல்கள் யாவும் முழு அளவிலான நன்மைகளை தரும், ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் யாவும் குறைந்து ஆதாராவும், உதவிகளும் தேடி வரும், ஜாதகரின் தனிப்பட்ட அபிலாசைகள் யாவும் நிறைவேறும், குறிப்பாக காதல் வெற்றி பெற்று இனிமையான இல்லற வாழ்க்கை அமையும், தெவீக பலம் கூடுவதால் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகள் நடைமுறைக்கு வரும், ஜாதகருக்கு எதிர்பால் இன சேர்க்கை மூலம் லாபங்களும் அதிர்ஷ்டங்களும் ஏற்பட்ட வாய்ப்புகள் அதிகம் உண்டு, ரிஷப லக்கின அன்பர்களின் மனபயம் நீங்கி தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், செயல்பாடுகளில் வேகமும் விவேகமும் அதிகரிக்கும், புதிய முயற்சிகள் மூலம் ஜாதகரின் தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும், வியாபாரம் சார்ந்த விஷயங்களில் ரிஷப லக்கின அன்பர்களுக்கு இந்த ராகு சஞ்சாரம் அபரிவிதமான வளர்ச்சியை வாரி வழங்கும், தெய்வீக நம்பிக்கை மேலோங்கும், வண்டி வாகனம் மற்றும் சொத்து வீடு ஆகியவற்றின் மூலம் ஜாதகர் தொடர் லாபங்களை பெரும் யோகத்தை தரும், தனம் சார்ந்த தொழில் செய்யும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் ஏற்றமிகு சிறப்புகளை வாரி வழங்கும், முன்னேற்றத்தின்பால் நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் ( ரிஷப லக்கின ) அபரிவிதமான வளர்ச்சியை தற்போழுது நிகழ்ந்துள்ள ராகு பகவானின் கடக ராசி சஞ்சாரம் தட்டாமல் தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை ரிஷப லக்கி அன்பர்களே!

கேது பகவானின் பாக்கிய ஸ்தான சஞ்சாரம், ரிஷப இலக்கின அன்பர்களுக்கு உகந்த நன்மைகளை தருமா ? என்றால் அது கேள்விக்குறியே, கேது பகவானின் பாக்கிய ஸ்தான சஞ்சாரம் சற்று கடுமையான விளைவுகளை தங்களுக்கு தர கூடும் என்பதால் எந்த ஓர் விஷயத்தையும் சற்று ஆலோசனை செய்து வயதில் பெரியோர் வார்த்தைகளை மதித்து செயல்படுவது தங்களுக்கு சகல நன்மைகளையும் தரும், இதில் சற்று கவனம் இன்றி செயல்பட்டால் வீண் அவ பெயரும் கௌரவ குறைவும் உண்டாகும் என்பதை மறுப்பதற்கு இல்லை, மனதில் நினைத்தவுடன் திரு தளங்களுக்கு சென்று வந்துவிடுவது தங்களின் ஆத்ம பலத்தை அதிகரிக்கும், தொழில் சார்ந்த நடவடிக்கைகளில், நல்ல ஆலோசகர் மற்றும் அனுபவஸ்தர் அறிவுரைபடி நடந்துகொள்வது தங்களுக்கு வீண் செலவினங்களை குறைக்க உதவும், நீடித்த தொழில் வெற்றிக்கு இதுவே உகந்த நன்மைகளை தரும், பொறுப்பு மிக்க செயல்பாடுகள் மூலம் தங்களுக்கு வரும் அவபெயரில் இருந்து தாங்கள் விடுபடலாம், தொழில் துறை கூட்டு தொழில் அல்லது சுய தொழில் செய்யும் அன்பர்கள் இனிவரும் காலங்களில் அதிக பொறுப்புடனும், நாவடக்கத்துடனும் நடந்துகொள்வது சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும், தெய்வீக நம்பிக்கை உள்ளோர் குல தேவதை வழிபாட்டையும், பித்ரு வழிபாட்டையும் முறையாக செய்வது பாக்கிய ஸ்தான கேது சஞ்சார நிலையால் வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும், யோக வாழ்க்கையை நிலை நிறுத்தும், ரிஷப இலக்கின அன்பர்களுக்கு கேது பகவானின் சஞ்சாரம் சற்று இன்னல்களை தரும் என்பதை மறுப்பதற்கு இல்லை, முறையான ராகுகேது பிரீதி பாரிகாரங்கள் சகல நன்மைகளையும் தரும்.

குறிப்பு :

 ரிஷப லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 3,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  3,9ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் ரிஷப லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 

9443355696


வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

ஜாதகத்தில் உள்ள யோகங்களும், யோகங்களை வழங்கும் திசா புத்திகளும், தொடர்ச்சி....



கடந்த பதிவில் உதாரண ஜாதகத்தில் உள்ள வலிமை பெற்ற பாவக நிலையை ( யோக நிலை ) பற்றி சிந்தனைக்கு எடுத்துகொண்டோம், அதில் 1,3,4,5,6,7,9,10ஆகிய 8 பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பதை கண்டோம், குறிப்பாக பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் வீடுகள் வழியில் இருந்து ஜாதகர் அனுபவிக்கும் யோக பலன்களை பற்றி தெளிவு பெற்றோம், இனி சம்பந்தப்பட்ட ஜாதகர் தமது சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான தொடர்புகளை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 2ம் பாதம்

ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

2,12ம்  வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து வருமானம் சார்ந்த இன்னல்களையும் இழப்புகளையும் தரக்கூடும், 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீர்ய ஸ்தானமாக அமைவது ஜாதகரின் சில முயற்சிகள் தடைபெறக்கூடும், தாமதம் மற்றும் தடங்கல் மூலம் ஜாதகர் சில நேரங்களில் அதிக மன உளைச்சல்களை சந்திக்கும் நிலை ஏற்படலாம், 2ம் வீட்டிற்கு 12ம் பாவகம் 11ம் வீடாக அமைவது ஒரு வகையில் ஜாதகருக்கு சரளமான பேச்சு திறனையும், மிதம்மிஞ்சிய வருமானத்தையும் தரக்கூடும், இருப்பினும் ஜாதகருக்கு வரும் வருமானம் அனைத்ததையும் ஜாதகர் பயன் படுத்த இயலாத சூழ்நிலையை தரக்கூடும், வாக்கு பலிதம் உண்டாகும், வாக்கு வன்மையின் மூலம் வாழ்க்கையில் சுபயோகங்களை பெறுவதற்கு உண்டான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிக அளவிலான மன அழுத்தம் மற்றும் மன போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலை தரும், குறிப்பாக ஜாதகர் செய்யும் பெரிய முதலீடுகள் ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், நல்ல உறக்கம் பாதிக்கும், விபத்து நஷ்டம் மற்றும் மருத்துவ செலவினங்களை ஜாதகரால் தவிர்க்க இயலாது, மனோபயம் ஜாதகரின் முன்னேற்றத்தையும், மன தைரியத்தையும் பதம் பார்க்கும், பதட்டமான நேரங்களில் ஜாதகர் எடுக்கும் முடிவுகள் ஜாதகரின் பொருளாதார இன்னல்களை தரக்கூடும், திருப்தி இல்லாத மன நிலை ஜாதகரின் வாழ்க்கையில் ஓர் வெற்றிடத்தை எப்பொழுதுமே வைத்திருக்கும், மோட்ச வாழ்க்கைக்கு உண்டான தடைகளையும் தாமதங்களையும் தரக்கூடும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு பூர்ண ஆயுளை தரும், இருப்பினும் உடலில் ரண சிகிச்சையை தரக்கூடும், வலி தாங்கும் வல்லமையை ஜாதகர் பெற்றிருப்பர், தனது வாழ்க்கை துணை வழியிலான சில நன்மைகளை ஜாதகர் தன்னிறைவாக பெரும் யோகம் உண்டாகும், பாதுகாப்பான பயணம் ஜாதகரின் இன்னல்களை வெகுவாக  குறைக்கும்,  வெளியூர் வெளிநாடுகள் வழியில் இருந்து தன சேர்க்கை அதிக அளவில் உண்டாக வாய்ப்பு உள்ளது, ஜாதகரின் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் வீடாக அமைவது ஜாதகருக்கு வரும் இன்னல்களை ஜாதகரே தனது அறிவு திறனால் வெற்றி கொள்வார்  என்பதனை தெளிவுபடுத்துகிறது, பூர்ண ஆயுள் என்பதனால் ஜாதகர் உடல் நிலையில் மட்டும் சற்று கவனம் செலுத்துவது அவசியமாகிறது, பயணங்களிலும் பாதுகாப்புடன் இருப்பது வீண் விரையங்களை தவிர்க்க உதவும்.

11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகம் ஆகும், இதனால் ஜாதகரின் முன்னேற்றம்  பெரிய அளவில் பாதிக்கப்பட கூடும் முன்னேற்றம், ஜாதகருக்கு வரும் அதிர்ஷ்டங்கள் தடைபட கூடும், தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதி ஜாதகரின்  வாழ்க்கையில் சில நேரங்களில் பெரிய பாதிப்புகளை தருவதை தவிர்க்க இயலாது, சுய ஜாதகத்தில் எந்த ஓர் பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு உகந்தது அல்ல, மேலும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக பலனை நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தாமல் இருப்பது ஜாதகருக்கு சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும் அமைப்பாகும்.

மேற்கண்ட ஜாதகருக்கு வலிமை பெற்ற 1,3,4,5,6,7,9,10ம் பாவக வழியில் ஜாதகர் யோக பலன்களை அனுபவித்த போதிலும் 2,8,11,12ம் பாவக வழியில் இருந்து அவயோக பலன்களை எதிர்கொள்ளும் நிலையை தரும், எனவே ஜாதகர் 2,8,11,12ம் பாவக வழியிலான விஷயங்களில் அதிக கவனமுடன் இருப்பது அவசியமாகிறது, குறிப்பாக 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தனக்கு வரும் வருமானங்களை பாதுகாக்கும் திட்டமிடுதல்களை செய்வது சிறப்பை தரும், அனைவரிடமும் பேச்சில் சமாதானத்தை கடைபிடிப்பது சுய முன்னேற்றத்தை அதிகரிக்கும், பொருளாதார திட்டமிடுதல்கள் ஜாதகரின் வாழ்க்கையில்  சுபயோகங்களை வாரி வழங்கும், 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பாதுகாப்பான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது, குறிப்பாக உடல் நிலை சார்ந்த விஷயங்களில் சற்று அதிக கவனம் வேண்டும், எதிர்பாராத நேரங்களில் வரும் இன்னல்களை தனது அறிவு திறன் கொண்டு வெற்றி பெறுவது அவசியமாகிறது, 11ம் பாவக வழியில் இருந்து அதீத தன்னம்பிக்கையும், முற்போக்கு சிந்தனையும் ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகம்  மூலம் வாழ்க்கையில் வெற்றி உண்டாகும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் செய்யும் முதலீடுகளில் அதிக கவனம் தேவை, திருப்தியான மனநிலை மற்றும் சரியான திட்டமிடுதல்கள் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும், மற்றவர்கள் வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க சற்று எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது ஜாதகருக்கு உகந்த சிறப்புகளை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696  

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

ஜாதகத்தில் உள்ள யோகங்களும், யோகங்களை வழங்கும் திசா புத்திகளும் !



சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வருகின்றது, சுப யோகங்களை தரும் திசா புத்திகள் எதுவென்பதில் தெளிவு பெறுவது சம்பத்தப்பட்ட ஜாதகருக்கு உறுதியான வெற்றி வாய்ப்புகளை பெறுவதற்க்கு பேருதவியாக அமையும் என்பதில் மாற்று கருத்து என்பது இல்லை, பொதுவாக சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை பற்றிய தெளிவு இல்லாதா பொழுது நமது உழைப்பும் நேரமும் வெகு அளவில் விரையமாகும், கிராமங்களில் சொல்லும் செலவடையான " பாடும் பட்டது போல் வீடும் கெட்டது போல் " என்பதற்க்கு இணையான பலனை தந்து விடும், தனது பிறவிப்பயனை தெளிவாக உணர்ந்துகொள்ள சுய ஜாதகத்தில் லக்கின முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை பற்றிய விழிப்புணர்வு நம் அனைவருக்கும் தேவை படுகிறது என்ற விஷயத்துடன் ஓர் உதாரண ஜாதகத்தை ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 2ம் பாதம்

மேற்க்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்பு :

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள், சிறந்த உடல் ஆரோக்கியம், தெய்வீக அனுபவம், இறை அருளின் கருணையை பரிபூர்ணமாக பெரும் யோகம், பல திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், பெரிய மனிதர்கள் ஆதரவு, அரசு ஆதரவு, முக்கிய பதவிகள் கற்ற கல்வி வழியிலான யோக வாழ்க்கை, தமக்கு சாதகமாக வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ளும் அறிவு திறன், அதி புத்திசாலித்தனம், வருமுன் உணரும் உள்ளுணர்வு திறன், தெய்வீக நம்பிக்கை, சுய ஆளுமை திறன், பெருந்தன்மையான குணம், எதிர்ப்புகளை சமாளிக்கும் வல்லமை, சமூக அந்தஸ்து, நல்லோர் ஆதரவு, எங்கு சென்றாலும் ஜாதகருக்கு கிடைக்கும் நற்ப்பெயர், தன்னம்பிக்கை குறையாத மனநிலை, நிறைந்த நல்லறிவு என்ற வகையில் சுபயோக பலன்களை தரும் மேலும் ஜாதகரின் பாக்கிய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு உபய மீன ராசியில் கடைசி பாகையில் ( 359.41.25 ) ஆரம்பித்து மேஷ ராசி முழுவதும் வியாபித்து இருப்பது, ஜாதகரின் சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், நேர்மை, மனஉறுதி, விரைந்து செயலாற்றும் திறன் , எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் யோகம், புகழ் கீர்த்தி என முழு அளவிலான நன்மைகளை  வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகரின் கல்விஅறிவு உலக புகழை பெற்றுத்தரும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சகலவித சௌபாக்கியமும் பெரும் அருகதை உடையவர், ஆராய்ச்சி மனபக்குவம், எடுக்கும் காரியங்களில் வெற்றி, வீரியமிக்க செயல்பாடுகள், முற்போக்கு சிந்தனை மற்றும் நேர்மறை எண்ணங்கள் மூலம் சுபயோகங்களை பெரும் அமைப்பு, காரிய சிந்தி, நேர்மையான குணம், உதவி செய்ய ஓடிவரும் மக்கள் செல்வாக்கு, மிதமிஞ்சிய தைரியம், தன்னிலை உணரும் யோகம், சித்தர்கள் ஆசிர்வாதம், பரிபூர்ண லக்ஷ்மி கடாட்சம், அனைவரின் மன நிலையையும் அறியும் யோகம், பெண் தெய்வங்களின் ஆசியை குறுகிய காலத்தில் பெரும் யோகம், விளையாட்டுகளில் ஆர்வம், போட்டி பந்தையங்களில் வெற்றி, எதிர்பாராத அதிர்ஷ்டம் என்ற வகையில் நன்மைகளை தரும், குறிப்பாக ஜாதகரின் தைரியாமான சில முடிவுகள் எதிர்பாராத வெற்றிவாய்ப்புகளை வாரி வழங்கும் .

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் யோகம் மிக்க நல்ல வாழ்க்கை துணையை பெறுவதின் மூலம் இல்லற வாழ்க்கையில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள் அமைவார்கள், வெளிநாடு வெளியூரில் இருந்து வரும் சுபயோக வாய்ப்புகளை ஜாதகர் அனுபவிக்கும் யோகத்தை தரும், எந்த ஓர் சூழ்நிலையிலும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் ஆதரவு பரிபூர்ணமாக அமையும், திடீர் செல்வாக்கின் மூலம் பொருளாதார வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும், எதிர்பால் இன சேர்க்கை மூலம் சுபயோகங்கள் உண்டாகும், சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ள அன்பர்கள் ஆதரவு ஜாதகருக்கு தேடி வரும், அரசியல் பதவிகள், அரசு சார்ந்த உதவிகள் ஜாதகருக்கு பெருமளவில் கிடைக்கும், ஜாதாகர் களத்திர ஸ்தான வழியில் இருந்து பெரும் யோகங்களை முழு அளவில் பெறுவார், நல்ல வலிமை மிக்க கூட்டாளி அமைவார் அல்லது வெளியூர் வெளிநாடுகளில் ஜாதகருக்கு பிரபலத்துவம் எதிர்பாராமல் உண்டாகும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல குணமும், நல்ல எண்ணமும் மனதில் உள்ள லட்சியங்களை வெற்றி பெற செய்யும், தனது வாழ்க்கையை சிறப்பாக வாழும் யோகம் பெற்றவர்கள், ஜாதகரின் முன்னோர்கள் மற்றும் ஜாதகர் செய்த புண்ணியத்தின் பலன்களை ஜாதகர் பாக்கிய ஸ்தான வழியில் இருந்து அனுபவிப்பர், தெய்வீக அனுகிரகம் ஜாதகரின் வாழ்க்கையில் பல புதுவித மாற்றங்களை  வாரி வழங்கும், கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற பழமொழியின் பலாபலன்களை ஜாதகர் அனுபவிப்பார், ஜாதகர் வாக்கு பலிதம் பெரும், ஆசிர்வாதம் சகல துன்பங்களையும் நீக்கும், வாக்கு வன்மை அதிகரிக்கும் என்பதால் ஜாதகர் எவரை சபிக்காமல், ஆசிர்வதிப்பது சுபயோக வாழ்க்கையை தரும்.

4ம் வீடு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் சுகபோக வாழ்க்கையின் தன்மையை நமக்கு சிறப்பாக எடுத்துறைக்கிறது, குறிப்பாக ஜாதகருக்கு நல்ல வீடு, வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, தனது தாய் வழியில் இருந்து பெரும் யோக வாழ்வு, நல்ல குணம், தனது சுய உழைப்பின் மூலம் பொருளாதர முன்னேற்றத்தை பெரும் தனி தன்மை என்ற வகையில் நன்மைகளை தரும், மேலும் ஜாதகரின் சுக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஆயுள் ஸ்தானமான விருச்சிக ராசியில் அமைவது, ஜாதகருக்கு இன்சூரன்ஸ், போனஸ், கிரசுவிடி அமைப்பில் இருந்து புதையலுக்கு நிகரான வருமான வாய்ப்பை தரும், மேலும் ஜாதகரின் மனோ வலிமை சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், வடக்கு திசை சார்ந்த மனைகளில் ஜாதகர் குடியிருப்பது, ஜாதகரின் சுக போக வாழ்க்கையை 100 % விகிதம் உறுதி செய்யும், மேலும் இடம் நிலம் வீடு, வண்டி வாகனம்  ஆகிய வழியில் இருந்து வருமான வாய்ப்புகளையும் ஜாதகருக்கு பரிபூர்ணமாக வாரி வழங்கும்.

5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் சமயோசித புத்திசாலித்தனத்தை கட்டியம் கூறும், நிறைந்த கல்வி அறிவு ஜாதகரின் வெற்றிகளுக்கு உறுதுணை புரியும், ஜாதகர் செய்யும் அனைத்து காரியங்களிலும் ஜாதகரின் புத்திசாலித்தனம் மிளிரும், எவரும் தீர்வு காணாத விஷயங்களுக்கு ஜாதகரின் தீர்வே இறுதியான நல்ல முடிவை தரும், ஜாதகரின் குல தேவதையின் ஆசி சகல யோகங்களை வாரி வழங்கும், பிரச்சனைகளுக்கான உடனடி தீர்வுகள் காண்பதில் வல்லமை உண்டாகும், சுய ஆளுமையின் மூலம் வாழ்க்கையில் தொடர் வெற்றிகளை ஜாதகர் பெற்றுகொண்டே இருப்பார், கலைத்துறையில் பிரகாசிக்கும் யோகமும், சாஸ்திர ஞானமும் ஜாதகருக்கு பரிபூர்ணதுவத்தை தரும், தெய்வீக அனுபவம் மூலம் விடையறிய கேள்விகளுக்கு பதில் தெரிய வரும், கணிதம் ஜோதிடம், வானவியலில் நல்ல தேர்ச்சி உண்டாகும், நுண்ணறிவு திறன் ஜாதகரின் வாழ்க்கையை சிறப்பிக்க செய்யும்.

6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து குறுகிய கால வெற்றிகளை தொழில் ரீதியாக வாரி வழங்கும், ஜாதகரிடம் மற்றவர்களின் தனத்தை ஆளுமை செய்யும் யோகம் உண்டாகும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் எனலாம், ஜாதகரை தொழில் ரீதியாக எதிர்பவர்களின் கதி மிக மோசமாக அமைந்துவிடும், கடன் வாங்குவது கொடுப்பது ஜாதகருக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றங்களை தரும், சுபயோக வாழ்க்கையை தன்னிறைவாக பெரும் யோகம் உண்டாகும், ஜாதகரின் சத்ரு ஸ்தான தொடர்பு ரிஷப ராசியுடன் என்பதால் ஜாதகரின் பேச்சு திறன் எதிரியையும் மயங்க செய்யும், எதிர்ப்பவர்களையும் மண்டியிட செய்யும், ஜாதகரின் ஜீவன ஸ்தான வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஓர் விஷயமாகும்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நல்ல தொழில் அமைப்பு, நல்ல பதவி, செய்யும் தொழில் வழியில் வரும் முன்னேற்றம், தீர்க்கமான வாத திறமை, உயர் பதவி தேடி வரும் யோகம், மேலும் மேலும் ஜீவன ரீதியான நன்மைகளை பெரும் அமைப்பு, லட்சியங்கள் அடைவதின் மூலம் மன திருப்தி, நிறைந்த செல்வாக்கு, சுய கௌரவம், நல்ல அந்தஸ்து என  ஜாதகர் ஜீவன ஸ்தான வழியில் இருந்து முழு நன்மைகளையும் பெறுவார், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் ரிஷபத்தில் அமைவது வாக்கின் வழியிலான தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும், எதிர்பாராத வெற்றிகளை ஜாதகர் ஜீவன ரீதியாக தங்கு தடையின்றி பெறுவார், வாழ்நாள் முழுவதும் ஜாதகருக்கு தொழில் முன்னேற்றம் என்பது அபரிவிதமாக வந்து கொண்டே இருக்கும், சுய தொழில் செய்யும் எண்ணம் இருப்பின் ஜாதகருக்கு உகந்த தொழில்களாக ஆலோசனை வழங்குதல் ( தனம் சார்ந்த ) ( தொழில் ஆலோசகர் ) வட்டி தொழில், நிதி நிறுவனம் ( வண்டி வாகனம் மற்றும் சொத்துகள் அடிப்படையில் நிதி உதவி செய்தல் ) நல்ல தொழிலாக இருக்கும், அல்லது சேவை துறை சார்ந்த தொழில்கள் மூலம் நிறைவான வருமானத்தை பெறுவார்.

அடுத்த பதிவில் மேலும் ஆய்வு செய்வோம் ......

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 2 ஆகஸ்ட், 2017

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - ( மேஷ லக்கினம் )


   சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஆவணி மாதம் 01ம் தேதி ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 18ம் தேதி இரவு 02-32க்கு ராகு பகவான் சிம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். சாயா கிரகங்களான ராகுகேது  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

மேஷ லக்கினம் :

மேஷ லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் ராகு பகவானும், ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தில் கேது பகவானும் தனது சஞ்சார காலம் வரை தரும் பலன்களை ஆய்வு செய்வோம் அன்பர்களே! பொதுவாக சுய ஜாதகத்தில் சாயாகிரகங்களுக்கு தனிப்பட்ட வலிமை உண்டு, அதாவது தான் நின்ற இடத்தின் பலனை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் வல்லமையும், தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் வலிமையை தனது பலனாக ஏற்று நடத்தும் வல்லமையும்  பெற்ற கிரகங்கள் ராகு கேது என்றால் அது மிகையில்லை, அப்படிப்பட்ட ராகு கேது மேஷ லக்கின அன்பர்களுக்கு இரு கேந்திர பாவகமான 4,10ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் அமைப்பு வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாக கருதலாம், ராகுவின் 4ம் பாவக சஞ்சாரம் ஜாதகருக்கு தேய்பிறை காலங்களில் அபரிவிதமான யோக பலன்களை வாரி வழங்கும், புதிய வண்டி வாகன சேர்க்கை, சொத்து சுக சேர்க்கை, மண் மனை யோகம், புதிய பொருட்கள் வாங்கும் யோகம், சுப நிகழ்ச்சிகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி, எதிர்பாராத சொத்து மற்றும் ஆபரண சேர்க்கை, நல்ல குண நலத்துடன் அனைவரையும் மகிழ்விக்கும் யோகம், தாய் வழியிலான நன்மைகள் மற்றும் யோகங்கள் என்ற வகையில் சுபயோக பலன்களை வாரி வழங்கும், தங்களின் மனவலிமை அதிகரிக்கும், மனத்தெளிவு, சீரிய சிந்தனை, அனைத்தையும்  வெற்றிகொள்ளும் யோகம் என்ற வகையில் நன்மைகளை தரும், இருப்பினும் வளர்பிறை காலங்கள் தங்களுக்கு கடுமையான நெருக்கடிகளை  தரக்கூடும், காரிய தடை, முன்னேற்ற தடை, எதிர்ப்புகள், தனது குண நலன்களை தாமே கெடுத்துக்கொள்ளும் நிலை என சற்று இன்னல்களை தரக்கூடும் என்பதால் வளர்பிறை காலங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது சகல நலன்களையும் தரும்.

கேதுவின் 10ம் பாவக சஞ்சாரம் மேஷ லக்கின அன்பர்களுக்கு ஜீவன வழியில் இருந்து சகல யோகங்களையும் வாரி வழங்க தயார் நிலையில் உள்ளது என்பதை மறுக்க இயலாது, தங்களின் தொழில் வளர்ச்சி என்பது இனி வரும் காலங்களில் மின்னல் வேகத்தில் வளர்ச்சி பாதையில் வெற்றிநடைபோடும், சுய கவுரவம் ஓங்கி நிற்கும், சமூக அந்தஸ்து அதிகாரிக்கு, அதிகார பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், கேது மகர ராசியில் சஞ்சாரம் செய்யும் காலம்  முழுவது தங்களுக்கு அபரிவிதமான வளர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது, உதவி  செய்வோர் எண்ணிக்கையும், மக்கள் செல்வாக்கும் அதிகரிக்கும், இதுவரை இல்லாத தொழில் முன்னேற்றம் இனிவரும் காலங்களின் தங்களுக்கு தடையின்றி கிடைக்கும், தங்களின் திட்டமிடுதல்கள் அனைத்தும் தொடர்ந்து  வெற்றிகளை வாரி வழங்கிக்கொண்டே இருக்கும், ஆத்ம பலம்  ஆன்மீக பலம் இரண்டும் தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், புதிய தொழில் முயற்சிகள் நல்ல வெற்றிகளை  தரும், முன் பின் அறிமுகம் அற்ற நபர்கள் வேற்று மதத்தினர், வேற்று நாட்டினர் மூலம் அபரிவிதமான ஜீவன முன்னேற்றத்தை  தடையின்றி கேதுவின் சஞ்சாரம் வாரி வழங்கும், மண் தத்துவம் ( சர ) சார்ந்த  தொழில்களில் இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் ஓர் அதிர்ஷ்டம் நிறைந்த  பூரண நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, தெய்வீக அனுக்கிரகமும், தொழில் மீது கொண்டுள்ள பக்தியும் தங்களுக்கு அபரிவிதமான ஜீவன முன்னேற்றத்தை வாரி வழங்க காத்துகொண்டு இருக்கின்றது என்பதால் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு  நலம் பெறுங்கள் .

குறிப்பு :

மேஷ லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 4,10ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  4,10ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேஷ லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696