திங்கள், 31 ஆகஸ்ட், 2015

திசாசந்திப்பும் ( ஏக திசை ) திருமண பொருத்தமும் !


திருமண பொருத்தம் காண வரும் பெற்றோர்கள் தற்பொழுது திசா சந்திப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டா ? இதனால் திருமணதிற்கு பிறகு தம்பதியருக்குள் பிரச்சனைகள் வருமா ? ஒரே நேரத்தில் தம்பதியர் இருவரும் ஒரு திசை நடைமுறையில் இருந்தால் திருமண வாழ்க்கையில் இன்னல்கள் வரும் என்று கூறுகின்றனர் எனவே தம்பதியரின் ஜாதகத்தில் திசாசந்திப்பு உள்ளத என்பதை சொல்லுங்கள் என்ற ஒரு கேள்வியை முன் வைக்கின்றனர், திருமண பொருத்ததில் ஏக திசை சந்திப்புக்கு முக்கியதுவம் தருவது அவசியம் என அனைத்து ஜோதிடர்களும் அறிவுறுத்துகின்றனர், அதாவது திருமணம் செய்வதற்கு முன் வது,வரனின் ஜாதகத்தில் இருவருக்கும் ஒரே திசை நடைபெற்றால் ஜாதக பொருத்தம் கிடையாது, திருமணம் செய்தால் இருவருக்கும் ஒரே திசை நடைமுறையிலும், தொடர்ந்தும் வரும் பொழுது நன்மை நடைபெறாது என்பது பல ஜோதிடர்களின் வாதமாக இருக்கிறது, சமீப காலங்களில் இது அதிக அளவில் மிகைபடுத்தபட்டு, பொதுமக்களிடம் சென்று இருக்கிறது, திசாசந்திப்பு ( ஏக திசை ) பற்றியும் அதன் உண்மை நிலையை பற்றியும் சற்று இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!

தம்பதியர் இருவருக்கும் ஒரே திசை நடைமுறையில் இருந்தால் நன்மையை தாராது, இன்னல்களை தரும் என்ற வாதமே தவறானதாக "ஜோதிடதீபம் " கருதுகிறது, பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை எவ்வித பலன்களை  ( எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற அடிப்படை விஷயம் ) வழங்குகிறது என்பது தெரியாத பொழுதே இந்த குழப்பம் ஏற்ப்பட வாய்ப்புண்டு அன்பர்களே ! 

பொருத்தம் காண வரும் ஆண் பெண் இருவரது ஜாதகத்திலும் ஒரே திசை நடைமுறையில் இருந்தாலும், ஆணுக்கு நடைபெறும் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது, பெண்ணுக்கு நடைபெறும் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற தெளிவு பெறுவது மிக மிக அவசியமாகிறது, இருவருக்கும் நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவக பலனை நடத்தினால், தம்பதியர் இருவருக்கும் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளே நடைபெறும், ஒரு வேலை பாதிக்கபட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே அவயோக பலன்கள் நடைமுறைக்கு வரும், பொதுவாக இருவருக்கும் ஒரே திசை நடைபெறுவது இன்னல்களையே தரும் என்று முடிவு செய்வதும், பொருத்தம் இல்லை என முடிவு செய்வதும் ஜாதக கணிதம் பற்றிய தெளிவும், ஜோதிட ஞானமும் அற்றவர்கள் செய்யும் காரியமாகவே படுகிறது.

கிழ்கண்ட தம்பதியரின் ஜாதகங்களை உதாரணம் கொண்டு காண்போம் அன்பர்களே !

ஆண் ஜாதகம் :



பெண் ஜாதகம் :


மேற்கண்ட இருவருக்கும் திருமணம் நடந்து 4 வருடங்கள் முடிந்துவிட்டது, ஜாதகர் ஒரு சிறந்த வெளிநாட்டு நிறுவனத்தில் பணியில் உள்ளார், ஜாதகி வீட்டு கடமைகளை சிறப்பாக கவனித்து வருகிறார், சிறந்த ஆண் வாரிசு உண்டு, திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக உள்ளது, திருமணதிற்கு பிறகு ஜாதகர்  பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நல்ல முன்னேற்றங்களை பெற்று வருகிறார், இனி விஷயத்திற்கு வருவோம்.

தம்பதியர் இருவருக்கும் தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை குரு திசையாகும், குரு திசை ஜாதகருக்கு ( 20/04/2015 முதல் 20/04/2031 வரையிலும் )  நடைபெறுகிறது, ஜாதகிக்கு குரு திசை ( 27/02/2014 முதல் 27/02/2030 வரையிலும் ) நடைபெறுகிறது, எனவே இருவரும் ஒரே திசை சந்திப்பு பெறுவதால் இன்னல்களே நடைபெறும் என்று முடிவு செய்யலாமா? அப்படி செய்தால் அதைவிட முட்டாள் தனம் வேறு ஒன்றும் இல்லை மேலும் ஜாதகத்தை கணிதம் செய்தவருக்கு ஜோதிடம் சாஸ்திரம் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்பதே முற்றிலும் உண்மை.

இருவருக்கும் நடைபெறும் குரு திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை ஆய்வு செய்வது குரு திசை இருவருக்கும் தரும் பலாபலன்கள் பற்றி தெளிவை தரும்.

ஜாதகருக்கு நடைபெறும் குரு திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் மற்றும் பலன்கள் :

2,5,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று குரு திசை யோக பலன்களை  வாரி வழங்குவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும், நல்ல வருமான வாய்ப்புகளையும், 5ம் பாவக வழியில் இருந்து குழந்தைகள் மூலம் யோகமும், நல்ல வாரிசும், தனது சுய புத்திசாலிதனத்தால் தொழில் அபவிரித்தியும், 11ம் பாவக வழியில் இருந்து செய்யும் தொழிலில் அபரிவிதமான வளர்ச்சியும், அதிர்ஷ்ட வாய்ப்புகளையும், பதவி உயர்வுகளையும், சமுதாயத்தில் கௌரவம் அந்தஸ்து போன்ற விஷயங்கள் ஜாதகரை தேடி வரும் யோகத்தையும் பெறுகின்றார்.

ஜாதகிக்கு நடைபெறும் குரு திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் மற்றும் பலன்கள் :

9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று குரு திசை  யோக பலன்களை  வாரி வழங்குவது ஜாதகிக்கு எங்கு சென்றாலும் நற்ப்பெயரும் புகழும் உண்டாகும், தனது அறிவு வழியில் பல யோக பலன்களை ஜாதகி அனுபவிக்கும் தன்மையை தரும், கற்ற கல்வியின் மூலம் வாழ்க்கையில் சுய முன்னேற்றம் பெரும் யோகத்தை தரும், ஆக தம்பதியர் இருவருக்கும் தற்பொழுது நடைபெறும் குரு திசை மிகுந்த யோக பலன்களை வாரி வழங்குவது தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், தொழில், பொருளாதார ரீதியான வளர்ச்சிகளையும் 100% விகிதம் வாரி வழங்குவதும், ஏக திசை தம்பதியருக்கு மிகுந்த யோக பலன்களையே தருகிறது என்பது தெளிவாகிறது.

அடுத்து வரும் சனி திசை தரும் பலன்களை பற்றி சிறிது சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

ஜாதகருக்கு அடுத்து வரும் சனி திசை 1ம் வீடு உயிர் உடலாகிய லக்கினத்துடன் தொடர்பு பெற்று, 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு மிகுந்த யோக பலன்களையே வாரி வழங்குகிறது.

ஜாதகிக்கு அடுத்து வரும் சனி திசை 2,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2ம் பாவக வழியில் இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும், சிறந்த வருமான வாய்ப்புகளையும், 6ம் பாவக வழியில் இருந்து செய்யும் தொழிலில் திடீர் அதிர்ஷ்டங்களும் முன்னேற்றங்களையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும், 10ம் பாவக வழியில் இருந்து நிரந்தரமான தொழில் வாய்ப்புகளையும்,தொழில் ரீதியான அபரிவித வளர்ச்சிகளையும், வாரி வழங்குவது தெளிவாகிறது.

எனவே அன்பர்களே, தம்பதியரின் ஜாதகங்களில் இருவருக்கும் ஒரே திசை நடைபெற்றாலும், நடைபெறும் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு பலன் கூறுவதே சரியான ஜோதிட கணிதம், சுய ஜாதகத்தில் உள்ள பலன்களுக்கு மாறாக பலன்களை கூறுவது, ஜாதக பலன்கான வந்தவருக்கு இன்னல்களை தரும், அதை பலனாக கூறியவருக்கு மிகுந்த இன்னல்களை வாரி வழங்கிவிடும்.

குறிப்பு :

மேற்கண்ட ஜாதகங்களுக்கு ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று திருமணத்தை நிறுத்தும் நிலைக்கு வந்த வரன் வதுவின் பெற்றோர்களுக்கு, ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை நிலையை பற்றியும், நடைபெறும் திசைகள் தரும் யோகங்கள் பற்றியும் "ஜோதிடதீபம் " சரியான விளக்கம் தந்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன் திருமண வாழ்க்கையில் இணைத்து வைத்தது, அதன் பிறகு இது வரையிலும் தம்பதியரின் வாழ்க்கையில் யோகங்களுக்கு குறைவு இல்லை  முன்னேற்றத்திற்கும் தடையில்லை என்பது கவனிக்க தக்கது, இவை அனைத்திற்கும் காரணம் இறை அருளின் கருணையே!

எனவே திருமண வாழ்க்கையில் சுய ஜாதகத்தில் பாவக வலிமையை உணர்ந்து திருமணம் அமைத்து தரும் பொழுது, தம்பதியரின் வாழ்க்கை மிகவும் வெற்றிகரமாக அமைகிறது, இதில் செவ்வாய் தோஷமோ, சர்ப்ப தோஷமோ, களத்திர தோஷமோ,ரஜ்ஜு பொருத்தமோ, திசாசந்திப்போ,
 எவ்வித இன்னல்களையும் தருவதில்லை அன்பர்களே, இதுவே முற்றிலும் உண்மை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

தொழில் நிர்ணயம் : சுய ஜாதக வலிமைக்கு பொருத்தமான தொழில் அல்லது வேலையை தேர்வு செய்வது எப்படி ?


" உத்தியோகம் புருஷ லட்சனம் " என்ற பழமொழிக்கு வலிமையை சேர்ப்பது அனைவரின் ஜாதகத்தில் உள்ள ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகமே, ஒரு ஜாதகரின் தொழில் அல்லது வேலைய நிர்ணயம் செய்வதில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் பங்கு வகித்தாலும், ஜீவன ஸ்தானமே முக்கிய பங்குவகிக்கிறது, சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு உண்டான சரியான தொழில் தேர்வு செய்யவும், சரியான நேரத்தில் ஜாதகருக்கு ஜீவன ரீதியான அறிமுகங்களையும் தேர்ச்சியும் தந்து வாழ்க்கையில் தொழில் ரீதியான முன்னேற்றங்களை வாரி வழங்குகிறது.

அடிப்படையில் ஒருவர் தொழில் அல்லது வேலையை தேர்வு செய்யும் முன் தனது சுய ஜாதகத்தில் உள்ள ஜீவன ஸ்தான வலிமையையும், மற்ற பாவகங்களின் வலிமையையும் கருத்தில் கொண்டு சரியான தொழில் அல்லது வேலையை தேர்வு செய்து வெற்றி பெறலாம், சுய தொழில் செய்ய விருப்பமுள்ள ஒவ்வொருவரும் தனது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் மிக மிக வலிமையாக இருப்பது அவசியமாகிறது, ஒருவரது சுய ஜாதகத்தில் 10ம் பாவகம் 6,8,12ம் வீடுகளுடனோ, பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெற்று இருந்தாலோ, நடைபெறும் அல்லது எதிர் வரும் திசை ஜாதகருக்கு பாதிக்க பட்ட பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினாலோ, ஜாதகர் எக்காரணத்தை கொண்டும் சுய தொழில் செய்வதை தவிர்ப்பதே நல்லது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருந்து, நடைபெறும் திசை எதிர்வரும் திசை வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் தொழில் மற்றும் ஜீவன மேன்மை மிகவும் சிறப்பாக அமையும்.

உதாரணமாக கிழ்கண்ட ஜாதகிக்கு, ஜாதக ரீதியாக தொழில் நிர்ணயம் செய்வது  பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!


லக்கினம் : கன்னி 
ராசி : கன்னி 
நட்சத்திரம் : அஸ்தம் 3ம் பாதம் 

ஜாதகிக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகி ஒரு இடத்தில் வேலை செய்வதை விட சுய தொழில் செய்வதே சிறப்பான வெற்றிகளை தரும் என்பது உறுதியாகிறது, ஜாதகியின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் வீடாக அமைவதும், உபய காற்று தத்துவத்தில் இயக்கம் பெறுவதாலும், ஜாதகிக்கு ஏஜென்சி துறையிலும், தரகு சார்ந்த தொழில்களிலும் வெற்றியை தரும், தனது அறிவு திறனை பயன்படுத்தி செய்யும் தொழில்களில் ஜாதகிக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

ஜாதகிக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது என்பதை ஆய்வு செய்வோம், ஜாதகியின் குடும்பம் மற்றும் வருமானத்தை குறிக்கும் 2ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாக வருவது ஜாதகி வாழ்க்கை துணை, நண்பர்கள், பொதுமக்கள் வழியில் இருந்து வருமான வாய்ப்பை தனது அறிவு சார்ந்த விஷயங்களில் இருந்து பெறுவார் என்பது தெளிவாகிறது, வரும் வருமானம்  ஜாதகிக்கு மீண்டும் தொழில் முதலீட்டில் பயன்படும் என்பதை 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது உறுதிபடுத்துகிறது, பொதுவாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது சம்பந்தபட்ட ஜாதகருக்கு சுய தொழில் வாய்ப்பை வழங்கும், லாப ஸ்தானமான  11ம் பாவகம் வலிமை பெறுவது செய்யும் தொழிலில் நல்ல லாபத்தை தரும்.

மேற்கண்ட ஜாதகிக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று உபய ராசியில் அமைவது செய்யும் சுய தொழில் சிறு முதலீடு செய்வதையும், லாப ஸ்தானம் வலிமை பெற்று சர ராசியில் அமைவது செய்யும் தொழிலில் பெரும் அபரிவிதமான லாபத்தையும் தெளிவுபடுத்துகிறது, ஜாதகி தான் செய்யும் தொழிலை தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டும் என்பதையும், கூட்டு தொழில் ஜாதகிக்கு பெரிய இழப்பை தரும் என்பதை 7ம் வீடு ஆயுள் மற்றும் திடீர் இழப்பை தரும் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிக தெளிவாக ஜாதகம் அறிவுறுத்துகிறது.

நடைபெறும் குரு திசை ஜாதகிக்கு பாக்கிய ஸ்தான பலனை செய்வது யோகம் என்ற போதிலும், குரு திசை சனி புத்தியே ஜாதகிக்கு 2,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதால், குரு திசை சனி புத்தியே ஜீவன ரீதியான முன்னேற்றத்தையும், தொழில் துவக்கத்தையும் தரும் என்பது கவனிக்க தக்கது, ஆக ஜாதகிக்கு எதிர்வரும் சனி புத்தி சுய தொழில் துவங்கவும், தொழில் ரீதியான வெற்றிகளை பெறுவதற்கும் வாய்ப்பை தரும் என்பது தெளிவாகிறது.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பின் ஜாதகர் சுய தொழில் செய்ய யோகம் பெற்றவராகிறார், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை இழக்கும் பொழுது ஓரிடத்தில் பணியாற்றும் யோகத்தையே பெறுகிறார், மேலும் 7ம் பாவகம் வலிமை பெற்றால் மட்டுமே ஜாதகருக்கு கூட்டு தொழில் முன்னேற்றம் தரும், சுய ஜாதகத்தில் 7,10ம் வீடுகள் பாதிக்கப்படும் பொழுது ஓரிடத்தில் பணிபுரிவதே சால சிறந்தது என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

குறிப்பு :

ஜீவன ஸ்தானம் ஜாதகிக்கு வலிமை பெற்று மிதுனத்தில் அமைவதால், சிறிய முதலீட்டின் மூலம் ஒரு ஏஜென்சி எடுத்து நடத்துவது மிகுந்த லாபத்தை தரும் என்பது கவனிக்க தக்கது, தரகு சார்ந்த வியாபாரங்கள் மூலமும் நல்ல வருமானம் கிடைக்கும், இருப்பினும் ஜீவன ஸ்தான அதிபதியை கருத்தில் கொண்டு தொழிலை தேர்வு செய்யும் பொழுது தொழில் ரீதியான வெற்றி 100% விகிதம் உறுதிபடுத்தப்படும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696    

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

திருமண தடைகளையும், திருமணத்திற்கு பிறகு இன்னல்களையும் அனுபவிக்கும் ஜாதக நிலை !


 திருமணம் ஒருவருக்கு சரியான வயதில், சிறப்பாக அமைவது என்பது அவரின் வாழ்க்கையில் வரும் முன்னேற்றங்களுக்கு சரியான அடித்தளத்தை அமைத்து தரும், ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை பரிபூரணமாக அனுபவிக்கும் சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் தங்கு தடையின்றி வாரி வழங்கும், ஆண்  என்றாலும் சரி பெண் என்றாலும் சரி, திருமண வயது வந்தவுடன் எந்த காரணத்தை கொண்டு திருமணத்தை தள்ளிபோடாமல், இல்லற வாழ்க்கையில் இணைந்து நன்மைகளையும் யோகங்களையும் அனுபவிப்பதே சிறந்த வாழ்க்கையை தரும்.

தன் ஜாதகம் சற்று பாவக வலிமை அற்று இருப்பினும், தனது வாழ்க்கை துணையின் ஜாதகம் சிறப்பாக அமைந்தால் இல்லற வாழ்க்கையில் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கும், இதற்க்கு தனது சுய ஜாதகத்தின் பாவக வலிமை நாம் உணர்ந்து இருப்பது நல்ல ஏனெனில், நமது ஜாதக நிலையை பற்றிய தெளிவு இருந்தால் மட்டுமே, வாழ்க்கை துணையுடன் நமது இல்லற வாழ்க்கை எப்படி அமையும் என்ற விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள இயலும், மாறாக நமது ஜாதக வலிமையை உணராத பொழுது, விதியின் மீது காரணம் சொல்லிக்கொண்டு முரண்பட்ட இல்லற வாழ்க்கையை, போராட்டத்துடன் சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமைக்கு ஏற்ப்பவே நமக்கு நடைபெறும் பலாபலன்கள் நடைமுறைக்கு வருகிறது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து யோக பலன்களும், வலிமை அற்ற பாவக வழியில் இருந்து அவயோக பலன்களும் நடைபெறுகிறது, இதை திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் நடைமுறைக்கு கொண்டுவருகிறது, ஒரு சில வினாடிகள் வித்தியாசத்தில் பிறந்த இரட்டையர்களுக்கு கூட ஒரே பலாபலன்கள் நடைமுறைக்கு வருவதில்லை, காரணம் பாவக வலிமை என்பது ஒரு வினாடியில் மாற்றம் பெறக்கூடும், சுய ஜாதக வலிமையை பற்றி தெளிவு பெரும் பொழுது தமது வாழ்க்கை பாதையை மிகவும் சிறப்பாக அமைத்துக்கொண்டு, வாழ்க்கையில் பல வெற்றிகளை மிக எளிதாக பெற இயலும் அன்பர்களே!

கிழ்கண்ட ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையை பற்றியும், நடைபெறும் திசை, எதிர்வரும் திசை தரும் பலாபலன்கள் பற்றியும், தனது ஜாதக வலிமைக்கு ஏற்ப தனது வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக 
அமைத்துக்கொண்டு வெற்றி பெறுவது என்பதை பற்றியும் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

இயற்கையாக நமது சுய ஜாதகம் வலிமை பெரும் பொழுதும், நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசைகள் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் பொழுதும் சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து யோக பலன்களை நாம் தங்குதடையின்றி அனுபவிக்க இயலும், மாறாக சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை குறைந்து, நடைபெறும் அல்லது எதிர்வரும் திசைகள் வலிமை அற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால், எப்படிபட்ட தீர்வுகளை  விழிப்புணர்வுடன் நாம் கையாண்டு, நன்மைகளை பெறுவது என்பதை பற்றி இனி பார்ப்போம்.

கிழ்கண்ட ஜாதகிக்கு 

லக்கினம் : மேஷம் 
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : ரோகிணி 4ம் பாதம் 


ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலை 

1,4,5,7,9,11,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்,
2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்,
3ம், வீடு சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்,
6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம்,
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்,

எனவே ஜாதகி 1,4,5,7,9,11,12ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும், 2,6,8ம் பாவக வழியில் இருந்து 60% விகித இன்னல்களையும், 3ம் பாவக வழியில் இருந்து 30% விகித நன்மைகளையும், 10ம் பாவக வழியில் இருந்து 100% விகித நன்மைகளையும் அனுபவிக்கும் தன்மையை தரும்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசை ஜீவன ஸ்தான பலனையும், பாதக ஸ்தான பலனையும் கலந்து நடைமுறை படுத்துகிறது, எனவே ஜாதகி ஜீவன வழியில் இருந்து யோக பலன்களையும், பாதக ஸ்தான வழியில் இருந்து அவயோக பலன்களையும் அனுபவிக்கும் தன்மையை தரும், எதிர்வரும் குரு திசை ஜாதகிக்கு பாதக ஸ்தான பலனை மட்டுமே நடைமுறைபடுத்துவது, மிகுந்த இன்னல்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாக்கும் என்பதால், இனி வரும் காலங்களில் ஜாதகி அதிக விழிப்புணர்வுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும்.

பெரும்பாலான பாவகங்கள் (3,10 பாவகங்களை தவிர ) ஜாதகிக்கு மிகுந்த பாதிப்பை தருவதால் ஜாதகி பாதிக்க பட்ட பாவகங்களில் இருந்து வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மன நிலைக்கு வந்துவிடுவது, ஜாதகியை பாதிக்கபட்ட பாவக வழி இன்னல்களை மிக எளிதாக கையாளும் வாய்ப்பை தரும், ( உதாரணமாக 7ம் பாவக வழியில் இருந்து இன்னல்கள் வரும் எனும் பொழுது ஜாதகி அடிப்படையில் தனது நண்பர்களை தேர்வு செய்யும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்கலாம், கூட்டு முயற்ச்சியை தவிர்க்கலாம், வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது அவரது ஜாதகம் மிகவும் வலிமை உடையதாக தேர்வு செய்யலாம், பொது காரியங்களில் ஈடுபடாமல், தனது வேளையில் மட்டும் கவனம் செலுத்தலாம் ) தனது ஜாதகம் வலிமை அற்று இருப்பதை உணர்ந்தால் மட்டுமே மற்ற விஷயங்களில் ஜாதகி கவனமுடன் இருந்து நன்மைகளை பெற இயலும், தனது ஜாதக வலிமையை பற்றி தெரியாத பொழுது ஜாதகி பாவகங்களின் தன்மைக்கு ஏற்ப விதி பயனை அனுபவிக்கும் சூழ்நிலையை தந்துவிடும்.

ஜாதகிக்கு வயது 25, இதுவரை தனக்கு வந்த நல்ல வரன்கள் அனைத்தையும் ஏதாவது காரணங்களை சொல்லி தவிர்த்து வருகிறார், தனது ஜாதக வலிமையை பற்றி தெரியாமல், ஜாதகி விதி பயனை அனுபவித்துக்கொண்டு இருப்பது எதார்த்தமான உண்மை, மேற்கண்ட ஜாதக வலிமையை பற்றிய விஷயத்தை ஜாதகிக்கு எடுத்து கூறி, சரியான இல்லற வாழ்க்கையை அமையை " ஜோதிடதீபம் " அறிவுறுத்தியது, ஜாதகியின் பாவக வலிமைக்கு ஏற்றப்ப, மிகவும் வலிமையான பாவகங்களை பெற்ற, வரனின் ஜாதகத்தை தேர்வு செய்து ஜாதகிக்கு பரிந்துரை செய்தது, ஜாதகியும் ஜாதகியின் பெற்றோரும் இதை ஏற்றுக்கொண்டு சரியான இல்லற வாழ்க்கையை தமது மகளுக்கு அமைத்து தர இசைந்தது இறை அருளின் கருணையே.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696   

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

திருமண பொருத்ததில் வது வரனின் ஜாதகத்தில் பாவக வழி ஆய்வு!

 

 திருமண பொருத்ததில் வது வரனின் ஜாதகத்தில், 12 பாவகங்களின் வலிமையை அடிப்படையாக கொண்டும், நடைமுறையில் உள்ள திசை புத்திகளும், எதிர்வரும் திசைபுத்திகளும், எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை கருத்தில் கொண்டும் பொருத்தம் நிர்ணயம் செய்யும் பொழுது தம்பதியரின் எதிர்கால வாழ்க்கை எவ்விதம் அமையும் என்பதை தெளிவாக உணர்ந்துகொள்ள இயலும், இதை இரண்டு உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !

வதுவின் ஜாதக நிலை :

 
லக்கினம் : மகரம் 
ராசி : கும்பம் 
நட்சத்திரம் : சதயம் 1ம் பாதம் 

பெண்ணின் ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு,
2,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு,
3,4,5,8,11,12ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு,
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு,

( பெண்ணின் ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதிக்கபடாமல் இருப்பது வரவேக்க தக்கது )

வரனின் ஜாதக நிலை :


லக்கினம் : கன்னி 
ராசி : சிம்மம் 
நட்சத்திரம் : பூரம் 3ம் பாதம் 

ஆணின் ஜாதகத்தில் பாவக தொடர்புகள்:

1,3,5,7,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு,
2,4,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு,
8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு,

( ஆணின் ஜாதகத்தில் 8,12ம் வீடுகள் மட்டும் பாதிக்க பட்டு இருப்பது 50% விகித இன்னல்களை மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் அனுபவிக்க கூடும், 12ம் பாவக பலனை  தற்பொழுது அல்லது எதிர் வரும் திசை ஏற்று நடத்தினால் மட்டுமே இது சாத்தியம் )

தம்பதியரின் திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்யும் விஷயங்கள் கிழ்கண்டவாறு :

லக்கினம் :

தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் லக்கினம் முறையே பெண்ணுக்கு களத்திர பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், ஆணுக்கு லாப ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவதும் உடல் உயிரான இலக்கின வலிமையை தெளிவு படுத்துகிறது, பெண் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து யோகங்களையும், ஆண் லாப ஸ்தான வழியில் இருந்து அதிர்ஷ்டத்தையும், யோகங்களையும் பெரும் தன்மையை தருகிறது.

2ம் வீடு குடும்ப ஸ்தானம் :

பெண்ணின் ஜாதகத்தில் 2ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது குடும்ப வாழ்க்கையில், சந்தோஷத்தையும் முன்னோர்களின் ஆசியையும் பெரும் யோகத்தை தருகிறது, ஆணின் ஜாதகத்தில் 2ம் வீடு கௌரவத்தையும், ஜீவனத்தையும் குறிக்கும் 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் மேன்மையுடன் கூடிய வருமானத்தை தருகிறது.

4ம் வீடு சுக ஸ்தானம் :

பெண்ணின் ஜாதகத்தில் 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது நல்ல உயரிய குணத்தையும், பெருந்தன்மையான மன நிலையையும் தருகிறது, சுக போக வாழ்க்கையில் யோகத்தை வாரி வழங்குகிறது, ஆணின் ஜாதகத்தில் 4ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் தொழில் மூலம் சொத்து சுக சேர்க்கையையும் அபரிவிதமான சுக போக வாழ்க்கையும், நல்ல குணத்தையும் தருகிறது.

5ம் வீடு புத்திர ஸ்தானம் :

பெண்ணின் ஜாதகத்தில் 5ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது புத்திர பாக்கியத்தில் சிறு கால தாமத்தை தந்தபோதிலும், நல்ல குழந்தை பாக்கியத்தை தரும், ஜாதகியின் புத்திசாலித்தனம் வாழ்க்கையில் பல யோகங்களை வாரி வழங்கும், ஆணின் ஜாதகத்தில் 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தனது குலம் விளங்க நல்ல அதிர்ஷ்டகரமான ஆண்  வாரிசை வழங்கும், ஜாதகரின் சமயோசித புத்திசாலித்தனம் ஜாதகரின் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும்.

7ம் வீடு களத்திர ஸ்தானம் :

பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீடு களத்திர பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தனது வாழ்க்கை துணையுடன் உண்டான பிரிவு இல்லா இணக்கமான தாம்பத்தியத்தை வழங்கும், வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகி யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும், ஆணின் ஜாதகத்தில் 7ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, திருமணத்திற்கு பிறகு தனது வாழ்க்கை துணையின் மூலம் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை பெரும் யோகத்தை தரும், மகிழ்ச்சிக்கும் தாம்பத்திய இன்பத்திற்கும் குறைவில்லா யோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானம் :

பெண்ணின் ஜாதகத்தில் 8ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சொத்து சுக சேர்க்கையும், அதிக வருமானங்களையும், நீண்ட ஆயுளையும் பெற்று தரும், தனது வாழ்க்கை துணை மூலம் மிகப்பெரிய சொத்து சுக சேர்க்கையை வழங்கும், ஆணின் ஜாதகத்தில் 8ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருள் இழப்பையும், சிறு கருத்து வேறுபாடும் ஏற்ப்பட்ட போதிலும் ஆயுள் பூரணமாக உண்டு.

10ம் வீடு ஜீவன ஸ்தானம் :

தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது, கௌரவம் குறையாத யோக வாழ்க்கையை தரும், ஜாதகி சுய தொழில் மூலம் வெற்றியும், ஜாதகருக்கு செய்யும் தொழில் மூலம் அதிர்ஷ்டமும் அபரிவிதமான லாபங்களும் உண்டாகும்.

12ம் வீடு சயன ஸ்தானம் :

தம்பதியர் ஜாதகத்தில் பெண்ணின் ஜாதகத்தில் 12ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தாம்பத்திய வாழ்க்கையில், இருவருக்கு உண்டான நெருக்கத்தையும், அன்பையும் அதிகரிக்கும், வாழ்க்கை துணைக்கு பரிபூர்ண அன்பையும் பாசத்தையும் வழங்கும் சிறந்த பதிவிரதையாக ஜாதகி விளங்குவார், ஆணின் ஜாதகத்தில் 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவக்த்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் இல்லற வாழ்க்கையில் எவ்வித இன்னலையும் தாராது என்ற போதிலும், தேவையில்லாத மன கவலைகளையும், மன உளைச்சல்களையும் வழங்க கூடும், இருப்பினும் பெரிய இன்னல்கள் எதுவும் நடைபெறாது என்பதால் ஜாதகர் 12ம் பாவக வழியில் இருந்து நன்மையையே அனுபவிக்கும் தன்மையே தரும்.


தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை தரும் பலன்கள் :

பெண்ணிற்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு திசை 2,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது ஜாதகிக்கு மிகுந்த நன்மைகளை தரும், ஆணின் ஜாதகத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள செவ்வாய் திசை 2,4,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும், 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது திடீர் பொருள் இழப்புகளையும்,வீண் மன கவலைகளையும் தர கூடும்.

எதிர் வரும் திசை தரும் பலன்கள் :

பெண்ணிற்கு எதிர்வரும் சனி திசையும் 2,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்க தக்க ஒரு சிறப்பான அம்சமே, ஆணின் ஜாதகத்தில் எதிர்வரும் ராகு திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிக பெரிய அளவில் யோக வாழ்க்கை தருவது திருமண வாழ்க்கை, குழந்தை பாக்கியம், பொருளாதார வெற்றிகள், அதிர்ஷ்டம் என்று 100% விகித யோக வாழ்க்கையை தம்பதியருக்கு தங்கு தடையின்றி தரும், வாழ்த்துகள்.

 வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

சுய தொழில் முன்னேற்றமும், அதிர்ஷ்டகரமான மித மிஞ்சிய யோக பலன்களும் !



 சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் வலிமை பெறுவதும், வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை நடைமுறையில் உள்ள திசை ஏற்று நடத்துவதும், ஜாதகருக்கு ஜீவன ரீதியான நன்மைகளை வாரி வழங்கும், பொதுவாக ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும், குறிப்பாக ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ( சர லக்கினத்தை தவிர்த்து ) ஜாதகரை தொழில் ரீதியான அதிர்ஷ்டங்களையும் மிதமிஞ்சிய லாபங்களையும் வாரி வழங்கி சிறந்த தொழில் அதிபர் என்ற நிலைக்கு விரைவில் உயர்த்தும், ஒரு சிறந்த தொழில் அதிபரின் ஜாதகம் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக, கிழ்கண்ட ஜாதகம் விளங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !



லக்கினம் : மீனம் 
ராசி : தனுசு 
நட்சத்திரம் : பூராடம் 4ம் பாதம் 

ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை :

1,6,7,12ம் வீடுகள் குடும்பம் ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம்,
2ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்,
3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்,
4,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்,
5ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்,
8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்,

1,6,7,12ம் வீடுகள் குடும்பம் ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது இலக்கின வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த வருமான வாய்ப்புகளையும், இனிமையான பேச்சு திறனையும், வாத திறமையாலும் சரளமான பேச்சினாலும், செய்யும் தொழிலில் மிகுந்த லாபத்தையும் வெற்றிகளையும் குவிக்க வைக்கும், சிறந்த உடல் நலத்தையும், மன நலத்தையும் ஜாதகர் இயற்கையாகவே பெற்று இருப்பார், வங்கி பரிவர்த்தனைகள் மூலம் மிகுந்த லாபத்தையும், நிலையான கையிருப்பையும், வரவு செலவுகளில் தன்னிறைவையும், தொடர்ந்து தன சேர்க்கையையும் ஜாதகர் பெறுவார்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வாங்கும் கடன்களும் ஜாதகருக்கு நல்ல வருமானத்தையே தரும், பொருளாதார தன்னிறைவையும், வங்களின் உதவிகளையும், கேட்ட உடன் வங்கி கடன் உதவி பெரும் யோகத்தையும் வாரி வழங்கும், சிறப்பான வெற்றிகரமான நிதி நிலையை ஜாதகருக்கு தொடர்ந்து கொடுத்தவண்ணம் இருக்கும், ஜாதகருக்கு அமையும் தொழிலாளர்கள் அனைவரும் நல்ல விசுவாசியாகவும், கடமை உணர்ச்சி கொண்டவர்களாகவும் திகழ்வார்கள்.

7ம் பாவக வழியில் இருந்து திருமணம் மூலம் அபரிவிதமான அதிர்ஷ்டத்தையும் வருமான வாய்ப்புகளையும், நிறைவான லாபத்தையும் ஜாதகருக்கு வாரி வழங்கும், வாழ்க்கை துணை,கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் வழியில் இருந்து 100% விகித யோக வாழ்க்கையை அனுபவிக்க நிலையை தரும், கூட்டாளிகள், கூட்டு தொழில் மூலமும் அளவில்லா வருமானங்களை ஜாதகருக்கு வாரி வழங்கும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சிறந்த தான சேர்க்கையை தரும், செய்த முதலீடுகளில் இருந்து 100% விகித வருமானத்தை தரும், செல்வத்தை கையாளுவதில் சிறந்த நுட்பங்களை ஜாதகர் கடைபிடிப்பார், பணம் ஒன்றே குறிகோளாக செயல்பட வைக்கும், சரியான திட்டமிடுதல்களையும் அதன் வழியில் இருந்து நல்ல லாபங்களையும் தரும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை தரும் அமைப்பாக இதை கருதலாம்.

2ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, கலைத்துறையில் ஈடுபாட்டையும், வாக்கு பலிதத்தையும், இயல்,இசை, நாடக துறையில் சிறந்த ஆளுமையை தரும், பொழுதுபோக்கு அமசங்களில் இருந்து ஜாதகருக்கு எதிர்பாராத வருமானமும் லாபமும் உண்டாகும், தனது அறிவு திறனால் மிகப்பெரிய வெற்றிகளையும், தொழில் வாய்ப்புகளையும் ஜாதகர் உருவாக்கும் தன்மையை தரும், பூர்வீகத்தில் நல்ல வருமானமும், பெயரும் புகழும் உண்டாகும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும், குடும்பத்தில் குதூகுலமும் சந்தோஷமும் நிறைந்து நிற்கும், ஜாதகரின் வார்த்தைக்கு அனைத்து இடத்திலும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சிகளில் அனைத்திலும் வெற்றியே உண்டாகும், ஏஜென்சி துறையில் கொடிகட்டி பறக்கும் வாய்ப்புகளை வாரி வழங்கும், வெளிநாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள மக்களின் ஆதரவும் ஜாதகருக்கு பரிபூரணமாக கிடைக்கும், புதியவர்கள் வெளிநாட்டினர்கள் மூலம் வியாபர விருத்தி உண்டாகும், ஆராய்ச்சி மூலம் புதிய யுக்திகளை கையாளும் தன்மையை தரும், அனைத்திலும் வெற்றி நினைக்கும் எண்ணங்களை நடைமுறைக்கு கொண்டு வந்து நன்மைகளை பெரும் யோகம், சாஸ்திர ஞானமும், தேர்ச்சியும் உண்டாகும், அனைவரின் மன நிலையையும் உணர்ந்துகொள்ளும் மனோசக்தி உண்டாகும்,  ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் எதிர்பாராத லாபம் உண்டாகும், இசை துறையிலும் ஜோதிடத்திலும் மிதமிஞ்சிய புலமை உண்டாகும், தியானம் யோகங்களில் ஆர்வமும், விளையாட்டில் வெற்றியும், மண்ணிற்கு கிழ் கிடைக்கும் கனிம பொருட்கள், உலோகம் அலோகம் சார்ந்த பொருட்களில் மிகுந்த லாபம் உண்டாக்கும், அனைத்தும் ஜாதகருக்கு சாதகமாக அமையும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சிறந்த அறிவு திறனையும், தன்னிகரில்லாத சிந்தனை ஆற்றலையும் வாரி வழங்கும், பயணங்களில் விருப்பத்தையும், இடம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் ஆர்வத்தை அதிகரிக்கும், சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் ஜாதகருக்கு நற்ப்பெயரும் ஆதரவும் தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருக்கும், தான் செய்யும் தொழிலில் கைராசியையும், நிலைத்து நிற்கும் வித்தையையும் ஜாதகர் தெளிவாக அறிந்து வைத்திருப்பார்.

4,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதே ஜாதகத்தில் உள்ள மித மிஞ்சிய யோக பலன்களை வாரி வழங்கும் அமைப்பாக கருதலாம், 4,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 11ம் பாவகம் ஜாதகருக்கு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு தொழில் ஸ்தானமாகவும், சர மண் தத்துவமாக அமைவது கவனிக்க தக்க அம்சமாகும், சர ராசிகளின் தன்மை பொதுவாக தான் தரவேண்டிய பலன்களை தங்குதடை இன்றி 100% விகிதம் மிக குறுகிய காலத்தில் வாரி வழங்கும், ஜாதகருக்கு நடைபெறும் அல்லது  எதிர்வரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 11ம் பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு எதிர்பாராத லாபங்களும் அதிர்ஷ்டங்களும் தொழில் ரீதியாகவும், வியாபர ரீதியாகவும் வாரி வழங்கிவிடும்.

4ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நண்பர்கள் ஆதரவு நிரந்தரமாக கிடைக்கும் யோகத்தை தரும், போதும் என்ற மன நிறைவையும், சுக போக வாழ்க்கையில் தன்னிறைவையும் தரும், தனது பெயரில் உள்ள அசையும் அசையா சொத்துகள் வழியில் இருந்து நிறைவான லாபங்கள் வந்துகொண்டே இருக்கும், வண்டி வாகனம், புதிய சொத்துகள் வாங்கும் யோகம், கால்நடைகள் வழியில் மிதமிஞ்சிய லாபம், புதிய அனைத்து வசதிமிக்க வீடு கட்டும் அல்லது வாங்கும் யோகத்தை தரும், ஜாதகரின் நல்ல குணம் உலக புகழை பெற்று தரும், சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவியும் தேடிவரும், எடுக்கும் காரியங்களில் சுலப வெற்றியை பெற்று தரும்.

10ம் பாவக வழியில் சிறந்த கௌரவமான யோக வாழ்க்கை, அரசியலில் பெரிய பதவிகளை அலங்கரிக்கும் யோகம், அனைவருடன் அனுசரித்து செல்லும் யோகம், தொழில் ரீதியான வெற்றிகளையும் லாபங்களையும், ஜாதகர் முன்கூட்டியே திட்டமிட்டு பெரும் யோகத்தை தரும், ஜாதகரின் கணிப்பு தவறாமல் ஜாதகருக்கு நன்மைகளையும், யோகத்தையும் வாரி வழங்கும், வெற்றி மயமான எதிர்கால வாழ்க்கை, எந்த செயலையும் நம்பிக்கையுடன் செய்து 100% விகித வெற்றியை பெரும் யோகத்தை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் தன்னம்பிக்கையும், மன உறுதியும் மிதமிஞ்சிய அளவில் செயல்படும், சிறந்த குணம் ஜாதகரின் வாழ்க்கையில் பல திருப்பு முனைகளை தரும், மிகுந்த அதிர்ஷ்டத்தின் பலனை ஜாதகர் தங்குதடையின்றி பெறுவார், பொருளாதரத்தில் தன்னிறைவான யோக வாழ்க்கையை ஜாதகர் மிக இளம் வயதிலேயே பெற்றுவிடுவார், ஜாதகரின் எண்ணங்களும் செயல்களும் மிகவும் நேர்மையானதாகவும், சத்தியத்திற்கும் சட்டத்திற்கும் கட்டுப்பட்டதாக அமைந்திருக்கும்.

5ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் சுய முயற்ச்சியில் வெற்றிபெற்ற ஒரு சிறந்த வெற்றியாளனாக சமுதாயத்தில் அறிமுகம் செய்துவைக்கும், தனது சிந்தனை மற்றும் அறிவு புத்திசாலித்தனம் அனைத்தையும் தான் செய்யும் தொழிலில் பயன்படுத்தும் வல்லமையை தரும் என்ற போதிலும், தனது தந்தையுடன் மிகுந்த கருத்துவேறுபாடுகளை தொடர்ந்து கொடுத்தவண்ணம் இருக்கும், கலை துறையில் ஜாதகருக்கு தனிப்பட்ட அடையாளத்தையும், மிகப்பெரிய வெற்றிகளையும் வாரி வழங்கும், ஆய கலைகள் 64ல் ஜாதகர் தேர்ந்து எடுக்கும் கலையில் மிகுந்த தேர்ச்சியை தரும், ஜோதிடம் கணிதம் இசை சார்ந்த விஷயங்களில் தனிப்பட திறைமைகளை ஜாதகர் பயன்படுத்தும் யோகத்தை தரும், இறைஅருளின் கருணை  ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்திருக்கும், முப்பெரும் தேவியரின் ஆசிகளுக்கும் அருளுக்கும் பாத்தியமாகும் யோகத்தை வழங்கும்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள செவ்வாய் திசை ஜாதகருக்கு 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவதும், அடுத்து வரும் ராகு திசையும் ஜாதகருக்கு 2ம் பாவக பலனை ஏற்று நடத்துவதும், ஜாதகரை தொழில் மற்றும் ஜீவன ரீதியான வெற்றிபடிகளில் தொடர்ந்து உயர்ந்து சென்றுகொண்டு இருக்கும் வாய்ப்பை தங்கு தடையின்றி வழங்கும், தொழில் ரீதியான மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை, ஜாதகர் உருவாக்குவதற்கு நல்ல வாய்ப்புகளை நிச்சயம் ஏற்ப்படுத்தும்.

குறிப்பு :

தற்பொழுது நடைபெறும் சனி புத்தி மட்டும் 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 
8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சற்று அதிக சிரமங்களை தரக்கூடும், மனோ ரீதியான போராட்டங்களை அதிக அளவில் தர கூடும், திடீர் இழப்புகள் சில நேரங்களில் தவிர்க்க இயலாது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 26 ஆகஸ்ட், 2015

தாமத திருமணம் அல்லது திருமண வாழ்க்கையில் தடை ஏன் ?


" இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே " என்ற பாடல்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வு செய்யும் பொழுது அன்பர்களே ! 

மேலும் தம்மிடம் உள்ளது முயலா? ஆமையா ? என்பதும் தெரியாமல் ஆமையை பிடித்துகொண்டு முயலை போல் ஓடவேண்டும் என்று கட்டளையிட்டால் எப்படி சாத்தியமாகும், பொதுவாக ஆணாக இருந்தால் திருமணம் செய்ய உகந்த வயது 25, அதுவே பெண்ணாக இருப்பின் திருமணம் செய்ய உகந்த வயது 21, இது இயற்கையாக உள்ள நடைமுறை, இதற்க்கு மாறாக திருமண வயதை தள்ளிபோடுவது என்பது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி சரியான விஷயமாக படவில்லை, அது ஜோதிட ரீதியாக இருந்தாலும் சரி, மருத்துவ ரீதியாக இருந்தாலும் சரி.

 திருமணத்தை தள்ளிபோடுவதர்க்கு இன்றைய இளம் தலைமுறையினர் சொல்லும் காரணம் பொருளாதார தன்னிறைவு, பொருளாதார தன்னிறைவை அடைந்த பிறகே திருமணம் என்ற வாதம் இன்றைய இளம் தலைமுறையினரை, சரியான முன்னேற்றத்தை நோக்கி அழைத்து செல்லும் என்று நிச்சயம் சொல்ல இயலாது, காரணம் ஒவ்வொரு வயதுகளிலும் பொருளாதார தேவைகள்  நிச்சயம் இருந்துகொண்டே இருக்கும், இந்த பொருளாதார தேவைகளை முடிவுக்கு கொண்டு வருவது என்பது சாத்தியமில்லாத ஒன்று, அதுவும் திருமணம் ஆகாமல் தனியாளாக சமாளிப்பது என்பது நிச்சயம் இயலாது, காரணம் திருமணதிற்கு பிறகே ஒருவரின் சுய ஜாதகத்தில் களத்திர பாவக பலன்கள் நடைமுறைக்கு வருகிறது,.
 
அதன்பிறகே ஜாதகருக்கோ அல்லது ஜாதகிக்கோ சமுதாயத்தில் மதிப்பு மரியாதையும், சமூக அந்தஸ்தும் உண்டாகிறது, வெளிவட்டடார பழக்கவழக்கங்களும், 7ம் பாவக வழியில் இருந்து பெரிய மனிதர்களின் ஆதரவும் ஜாதகருக்கு முழு வீச்சில் செயல்பட துவங்குகிறது, ஜாதகர் ஒருவேளை களத்திர பாவக பலனை நடைமுறைக்கு கொண்டு வராமல் இருப்பின் 7ம் பாவக வழியில் இருந்து வரும் எவ்வித யோக பலனையும் அனுபவிக்க தகுதியற்றவராக மாறிவிடுகிறார், இதை கருத்தில் கொண்டே சரியான வயதில் திருமணத்தை நடத்தி வைத்து சம்பந்தபட்ட தம்பதியருக்கு சமூகத்தில் ஒரு அந்தஸ்தையும், அங்கீகாரத்தையும்  நமது பெரியோர்கள் கொடுத்தார்கள், இதன் அடிப்படையிலேயே தம்பதியரின் நல்வழ்க்கையும் சிறப்படைந்தது.

திருமணம் எனும் விஷயம் என்று பெரியவர்களின் கைகளை விட்டு, இளைய தலைமுறையினரின் கைகளுக்கு சென்றதோ, அன்றே நமது இளைய தலைமுறையினரின் வாழ்க்கை வெகுவாக பாதிப்பிற்கு உள்ளாகியது எனலாம், கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : ரிஷபம்  
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஷ்வினி 4ம் பாதம் 

ஜாதகிக்கு வயது 40, தனது 21 ஒரு வயதில் இருந்து ஜாதகிக்கு வரன் பார்க்கின்றனர், இன்னும் வரன் அமைந்தபாடில்லை, ஜாதகி ஓரளவு படித்தவர் மேலும் தனது வருமானத்தில் சுயமாக வாழும் தன்மையை பெற்றுள்ளது குறிப்பிட தக்கது, மேலும் ஜாதகிக்கு தனது மனதில் தனது கணவனை பற்றிய கற்பனையில் வரன் தேடியதால், தனது கற்பனைக்கு நிகரான ஒரு வாழ்க்கை துணையை ஜாதகி இதுவரை சந்திக்கவில்லை, மேலும் தனது பேச்சுக்கு குடும்பத்தில் யாரும் எதிர்த்து பேசாததால், ஜாதகியின் போக்கே திருமண தாமதத்திற்கு காரணமாக அமைந்தது, தனக்கு வரும் நல்ல வரன்களை கூட ஜாதகி தட்டி கழிப்பது  இன்னும் நடைமுறையில் உள்ளது , ஜாதகி செய்யாத பரிகாரங்கள் இல்லை எனலாம், இனி ஜாதகியின் சுய ஜாதகத்தை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற அமைப்புகள் :

1ம் வீடு முதல் பாவகமான லக்கினத்துடன் தொடர்பு பெற்றதும்,
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதும் மிகவும் வலிமையான அமைப்பு.

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் வலிமை அற்ற அமைப்புகள் :

2,4,7,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதும்,
3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதும்,
5,11ம் வீடுகள் சத்துரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதும், மிகவும் வலிமை அற்ற அமைப்பு.

மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் எனும் 2பாவகங்களும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் திருமண வாழ்க்கையை வெகுவாக பாதிப்பிற்கு ஆளாக்கியது, ஜாதகியின் 8ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக அமைந்து தனது முன்னோர்கள் செய்த வினை பதிவின் தன்மையை ஜாதகி குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான அமைப்பில் இருந்து அனுபவிக்கும் சூழ்நிலையை தந்தது, தந்துகொண்டு இருக்கிறது எனவே ஜாதகிக்கு வயது 40 ஆகியும் திருமணம் நடைபெறாமல் இன்னும் முதிர்கன்னியாகவே வாழும் சூழ்நிலையை தந்துகொண்டு இருக்கிறது, ஜாதகியும் தனது ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை உணராமல், தனக்காக ஒரு ராஜகுமாரன் வருவான் என்ற கற்பனையில், கோட்டை கட்டி வாழ்ந்துகொண்டு இருக்கிறார், தனது பேச்சுக்கு எவரும் எதிர்த்து பேசாத சூழல் உள்ளதால் ( பெற்றோருக்கு வயதாகிவிட்டதால் ) தான் வைத்ததே சட்டம் என்று வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

சுய ஜாதகத்தில் 1,10ம் பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவகமும் கடுமையாக பாதிக்கபட்டு இருப்பது, ஜாதகியின் விதிபயனை சரியாக அனுபவித்துக்கொண்டு இருப்பதை உறுதி செய்கிறது, லக்கினம் வலுபெருவது உடல் மற்றும் மன நலனில் நன்மையையும், ஜீவன ஸ்தானம் வலுபெருவது நல்ல வேலையும் அதன் வழியில் இருந்து வரும் வருமானத்தையும் உறுதி செய்கிறது.

2ம் பாவகம் பாதிப்பது 40 வருடங்கள் ஆகியும் குடும்ப வாழ்க்கை அமையாமல் சிரமத்தையும், வரும் வருமானம் அனைத்தையும் வீண் விரையத்தையும் தருகிறது, ஜாதகியின் பேச்சும் மற்றவர்கள் ரசிக்கும்படி இனிமையாக இல்லாதது கவனிக்கதக்கது, 4ம் பாவகம் பாதிப்பது சுக போக வாழ்க்கை இல்லாமல், தடுமாறும் சூழ்நிலையும், ஜாதகியின் பெயரில் எவ்வித சொத்து வண்டி வாகனம் இல்லாத நிலையை தருகிறது,7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் இல்லை, சரியான வாழ்க்கை துணை அமையவில்லை, 8ம் பாவக வழியில் இருந்து பூர்ண ஆயுள் உள்ள போதும், வீண் இழப்புகளை தவிர்க்க இயலவில்லை, வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் வருமான வாய்ப்பையும் தவிர்க்க வைக்கிறது.

3ம் பாவாகம் பாதிப்பது சகோதர ஆதரவு இல்லை, எடுக்கும் செயல்களிலும், முயற்ச்சிகளிலும் தொடர் தோல்விகளை சந்திக்கும் தன்மையை தருகிறது, 6ம் பாவகம் பாதிப்பது ஜாதகிக்கு நிறைய எதிர்ப்புகளும், எதிரிகளும் மிக அதிக அளவில் உள்ளது ஜாதகியின் திருமண வாழ்க்கையை தாமத படுத்த ஒரு காரணமாக அமைகிறது, 9ம் பாவகம் பாதிப்பது பெரியமனிதர்களின் உதவி இல்லாமல் அவர்களின் வெறுப்பிற்கு ஆளாகும் சூழ்நிலையை தந்தது, 12ம் பாவகம் பாதிப்பது ஜாதகியை வீண் கற்பனையில் கனவு கோட்டை கட்டி வாழும் சூழ்நிலையை தந்தது.

5ம் பாவகம் பாதிப்பது, சொல்புத்தியும் இல்லாமல் சுய அறிவும் இல்லாமல், தான்தோன்றி தனமாக நடக்கும் நிலையை தந்துகொண்டு இருக்கிறது, 11ம் பாவகம் பாதிப்பது ஜாதகிக்கு எவ்வித அதிர்ஷ்டமும் இல்லாமல், 400 வரன்கள் வந்த போதிலும் தனக்கு பொருத்தம் இல்லை என வரன்கள் அனைவரையும் தவிர்க்க வைத்து, சரியான வயதில் நடக்கவேண்டிய விஷயங்கள் யாவும் நடைபெறாமல் துரதிர்ஷ்ட வாழ்க்கையும், மூட பழக்க வழக்கங்களில் திளைத்து தனது வாழ்க்கையை தானே பாழ்படுத்திகொள்ளும் சூழ்நிலையை தந்துள்ளது.

சுய ஜாதகத்தில் ஜாதகிக்கு 12 பாவகங்களில் 10 பாவகங்கள் வலிமை அற்று காணப்பட்டாலும், இதற்க்கு முன் நடந்த சந்திரன் திசை 24/08/2012 வரை நல்ல நல்ல வாய்ப்புகளையும், வரன்களையும் வழங்கிய போதும் ஜாதகியின் கற்ப்பனை ஜாதகியின் வாழ்க்கையை வெகுவாக பாதித்தது, குறிப்பாக திருமணம் எனும் ஒரு விஷயம் இதுவரையிலும் தடையாகவே அமைந்துவிட்டது, ஜாதகிக்கு பிறகு இரண்டு சகோதரிகள் உண்டு அவர்களுக்கும் திருமணம் இன்னும் நடைபெறவில்லை என்பது வருந்தத்தக்க ஒரு விஷயமாகவே படுகிறது, தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசை 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகியின் கற்பனை வாழ்க்கைக்கு இன்னும் சற்று அதிகமாகவே தூபம் போடும் என்பது மட்டும் மறுக்க இயலாத உண்மை.

குறிப்பு :

ஜாதகி இனிவரும் காலங்களிலாவது, தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் வலிமையுள்ள சாதகமாக தேர்ந்தெடுத்து இல்லறவாழ்க்கையில் இணைய, இறையருள் கருணை செய்யட்டும் என ஜோதிடதீபம் வேண்டுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

புத்திரபாக்கியமும் ( ஆண் வாரிசு ) சுய ஜாதகத்தில் 5ம் பாவக வலிமையையும்!


 தனது குலம் தழைக்கவும், சந்ததி விருத்திக்காகவும் திருமணம் ஆனா சில வருடங்களிலேயே ஒரு நல்ல ஆண் மகவை பெற்று தரும் பெண்களுக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையையும், இந்த சமூகம் கொடுக்க தவறியது இல்லை எனலாம், பொதுவாக ஆண் வாரிசு அமைவது மருத்துவ ரீதியாக தம்பதியரில் ஆணுக்கே அதிக பங்கு உண்டு என்று சொன்னாலும், ஜாதக ரீதியாக தம்பதியர் இருவருக்கும் பங்கு உண்டு என்பதே உண்மை, சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் என்று வர்ணிக்கப்படும் 5ம் பாவகம் திருமணமான தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் வலிமை பெற்று இருப்பதே சிறந்த புத்திர ( ஆண் ) பாக்கியத்தை தரும், மேலும் பிறந்த குழந்தையின் வழியில் இருந்து யோக வாழ்க்கையை அனுபவிக்கவும் வழிவகுக்கும்.

தம்பதியரின் சுய ஜாதகங்களில் 5ம் பாவகம் ஒருவருக்கு நல்ல வலிமை பெற்று இருப்பதும், ஒருவருக்கு வலிமை அற்ற நிலையில் இருப்பதும் அல்லது இருவருக்கும் 5ம் பாவகம் வலிமை அற்று இருப்பதும் பெண்குழந்தை பிறப்பில் தடை எதையும் செய்வதில்லை, ஆனால் ஆண்வாரிசு அமைவதற்கு பல தடைகளை தருகிறது, சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் 4,6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறுவதும் அல்லது பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவதும் புத்திரபாக்கியத்தில் குறையை தருகிறது, தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் 5ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது புத்திர பாக்கியத்தை ( பெண் குழந்தைக்கு அமைவதற்கு கூட ) கேள்விக்குறியாக்கும், இந்த அமைப்பை பெற்ற தம்பதியர் 5ம் பாவக வழியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து புத்திர பாக்கியங்களை பெறுவதற்கு, சுய ஜாதகமும், இறை அருளும் வழிகாட்ட வேண்டும், இதற்க்கு எதிர்பதமாக அமையும் பொழுதே தம்பதியருக்கு புத்திர பாக்கியம் அற்ற நிலையை தருகிறது.

இதை ஓர் உதாரண ஜாதகங்களை கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !

தம்பதியருக்கு திருமணம் நடந்து 7 வருடங்கள் முடிந்து விட்டது, இதுவரை தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள், ஆண் வாரிசு இல்லை, இவர்களது சுய ஜாதகத்தை ஆய்வு செய்வோம்.

ஆண் ஜாதகம் :


லக்கினம் : தனுசு 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : உத்திராடம் 4ம் பாதம் 

பெண் ஜாதகம் :


லக்கினம் : மகரம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : உத்திராடம் 4ம் பாதம் 


தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் 5ம் பாவகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! 

ஆணின் ஜாதகத்தில் குழந்தை பாக்கியத்தை குறிக்கும் 5ம் பாவகம் சத்ரு ஸ்தானமான 6ம் வீட்டுடன் தொடர்பு, மேலும் தற்பொழுது  நடைபெறும் ராகு திசையும் ஜாதகருக்கு 7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனைதருவது சிறப்பானது அல்ல, மேலும் 12ம் பாவகம் பாதிக்க பட்டு ஜாதகருக்கு தனுசு ராசியிலேயே அமைவதும், தனுசு ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக வருவதும் ஜாதகரின் முன்னோர்கள் செய்த வினை பதிவை அனுபவிக்கும் தன்மையை தருகிறது.

பெண்ணின் ஜாதகத்தில்  குழந்தை பாக்கியத்தை குறிக்கும் 5ம் பாவகம் பாதக ஸ்தானமான 11ம் வீட்டுடன் தொடர்பு, எனவே ஜாதகிக்கு ஆண்வாரிசு இல்லை என்பதை தெள்ள தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது, ஜாதகிக்கு நடைபெறும் ராகு திசை 3,9ம் பாவக பலனை ஏற்று நடத்துவது குழந்தை இல்லை என்ற குறையை ( பெண் குழந்தை ) போக்கியது, மேலும் ஜாதகியின் 11ம் பாவகமும் தனுசு ராசியில்  அமைவதும், தனுசு ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக வருவதும் ஜாதகியும் தனது முன்னோர்கள் செய்த வினை பதிவை அனுபவிக்கும் தன்மையை தருகிறது.

தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் 5ம் பாவகங்கள் முறையே ரிஷபத்திலும், மிதுனத்திலும் அமைவது, ஜாதகருக்கு ஸ்திர மண் தத்துவ ( உடல் ) அமைப்பில் இருந்து பிரச்சனைகளையும், ஜாதகிக்கு உபய காற்று தத்துவ  ( மன ) அமைப்பில் இருந்து பிரச்சனைகளையும் தொடர்ந்து தருவது புத்திர பாக்கியத்தை கேள்விகுறி ஆக்கும் அமைப்பாக கருதலாம்.

ஒருவரின் சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகமோ, அல்லது பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகமோ பாதிக்கபட்டு இருப்பின் ( பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று இருந்தாலும் சரி ) மிக எளிதாக நிவர்த்தியை பெற்று 5,9ம் பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை பெற இயலும் என்பது  கவனிக்கத்தது, சுய ஜாதக அமைப்பின்படி சரியான தீர்வுகளை தேடி நலம் பெருக.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

தொழில் முன்னேற்றமும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையையும்!


 ஒருவரின் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானத்தை வைத்து தொழில் நிர்ணயம் செய்யும் முன் சம்பந்தபட்ட ஜாதகரின் ஜீவன ஸ்தானத்தின் வலிமையை கருத்தில் கொண்டு பலன்கான முற்படுவதே சரியான விஷயமாக இருக்கும், பெரும்பாலும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே சம்பந்தபட்ட ஜாதகருக்கு சுய தொழில் அல்லது கூட்டு தொழில் செய்ய பரிந்துறை செய்வது, ஜாதகரை தொழில் ரீதியான வெற்றிகளையும் நன்மைகளை பெறுவதற்கு வாய்ப்பளிக்கும், மாறாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் வலிமை அற்று காணப்படும் பொழுது ( உதாரணமாக ஜீவன ஸ்தானம் 2,6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெற்றோ, பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ இருப்பின் ) ஜாதகரை சுய தொழில் அல்லது கூட்டு தொழில் செய்ய பரிந்துரை செய்வது நீச்சல் தெரியாதவரை கிணற்றில் கல்லைகட்டிகொண்டு தள்ளிவிடுவதற்கு சமமான பலனை வழங்கி விடும்.

மேலும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் ஒன்று மட்டுமே தொழில் முன்னேற்றத்தை நிர்ணயம் செய்துவிடுவதில்லை, ஏனெனில் பெரும்பாலான பன்முக தொழில்கள் அனைத்தும் அங்கு வேலை செய்யும் பணியாட்களை சார்ந்தும் நடைபெறுவதால், ஜீவன ஸ்தானம் ஒன்று மட்டுமே தொழில் வெற்றிகளை வாரி வழங்கி விடுவதில்லை, ஒரு வேலை ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று, ஜாதகர் மட்டுமே ஒரு குறிப்பிட்ட தொழிலை செய்வதாக இருந்தால் மட்டுமே, சுய ஜாதகத்தில் உள்ள தொழில் ஸ்தான வலிமை ஜாதகருக்கு நன்மைகளை வாரி வழங்கும், அதற்கும் ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை அல்லது எதிர்வரும் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தவேண்டும்.

அடிப்படையில் ஒருவரின் தொழில் அமைப்பை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்தபட்ட  ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமையை முதலில் ஆய்வுக்கு எடுத்துகொள்வது நல்லது, 1) சுய ஜாதகப்படி 10ம் பாவக வலிமை பெற்று இருக்கின்றதா ? அல்லது வலிமை அற்ற நிலையில் இருக்கின்றதா ? என்பதில் தெளிவு வேண்டும், 2) சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பின் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெற்றுள்ள பாவகத்தின் தன்மையை கருத்தில் கொள்வது ( சர,ஸ்திர,உபய இயக்கமா? நெருப்பு,மண்,காற்று,நீர் தத்துவமா? ) இது ஜாதகர் செய்யும் தொழில் நிலையை தெளிவு படுத்தும். 3) ஜாதகரின் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெற்ற பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு என்ன வீடாக வருகிறது என்பதையும் கருத்தில் கொள்வது நல்லது. 4) ஜீவன ஸ்தான அதிபதியையும், ஜீவன ஸ்தானம் தொடர்பு பெற்ற பாவகத்தின் அதிபதியையும் கருத்தில் கொள்வது சம்பந்தபட்ட ஜாதகர்  ஈடுபடவேண்டிய தொழில் மற்றும் வேலையை உறுதி செய்ய 100% விகிதம் உதவி புரியும்.

 பொதுவாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் சுய தேடுதல்களுடன் நல்ல தொழிலை ஜாதகரே அமைத்துக்கொள்ள வழிவகுக்கும், லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரை செய்யும் தொழில் விருத்தியில் ஆர்வமுடன் செயலப்டவைக்கும், 2ம் பாவகம் வலிமை பெறுவது செய்யும் தொழில் வழியில் இருந்து வருமான வாய்ப்புகளை வாரி வழங்கும் அல்லது ஜாதகருக்கு வருமானம் வரும் வழிகளை தெளிவுபடுத்தும், 3ம் பாவகம் வலிமை பெறுவது தொழில் அமைப்புகளில் ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகளையும், பெரும் வருவாயினையும் தொடர் லாபங்களையும், தரகு சார்ந்த வரவுகளையும் நிர்ணயம் செய்யும், 4ம் பாவகம் வலிமை பெறுவது தொழில் ரீதியான அசையும் அசையா சொத்துகளையும், தொழில் மூலம் ஈட்டிய வருமானத்தை இடம்,பொருள்,வண்டி வாகனம், சொத்து முதலியவற்றில் முதலீடு செய்யும் விஷயங்களை குறிப்பிடும், 5ம் பாவகம் வலிமை பெறுவது தொழில் அறிவு திறனையும், சமயோசித புத்திசாலிதனத்தையும் செய்யும் தொழிலில்  பயன்படுத்தி வெற்றிகாணும் தன்மையை குறிப்பிடும், 6ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகரின் கடன் நிலை, ஜாதகருக்கு அமையும் நல்ல விசுவாசமான வேலையாட்கள், வேலையாட்கள் மூலம் ஜாதகர் பெரும் யோகங்களையும், சிறு சிறு வருமான வாய்ப்புகளையும் குறிப்பிடும்.

7ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் ஏற்றுமதி இறக்குமதி தொழில் விருத்திகளையும், பொதுமக்களுடன் தனது தொழிலில் உள்ள உறவு நிலைகளையும், உலகலவியா வியாபர விருத்திகளையும், ஜாதகரின் கூட்டாளிகள் மற்றும் அவர்களுடன் உண்டான தொழில் விருத்தி மட்டும் லாபங்களை குறிக்கும், 8ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் செய்த தொழில் கிடைக்கும் குறுகிய கால வெற்றிகளையும் லாபங்களையும், இழப்புகள் மூலம் பெரும் காப்பீடுகலையும், திடீர் அதிர்ஷ்டங்களையும் தெளிவுபடுத்தும், 9ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் தான் செய்த தொழில் கிடைக்கும் நர்ப்பெயரினையும், பாரம்பரிய வளர்ச்சியையும், பல தலைமுறைகளாக செய்துவரும் தொழில் விருத்தியையும் உறுதி படுத்தும், 10ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் தான் செய்யும் தொழிலில் அடையும் வெற்றியையும், லட்சியங்களை நோக்கி எடுத்துவைக்கும் பாதையையும் தெளிவு படுத்தும், தொழிலில் ஜாதகரின் கௌரவம், அந்தஸ்து, புகழ் மற்றும் சுய மரியாதையும் பன்மடங்கு பெருக வைக்கும், ஜாதகர் செய்யும் தொழில் என்ன ? என்பதையும் தெள்ள தெளிவாக அறிவுறுத்தும், 11ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் செய்யும் தொழில் வழியில் இருந்து அனுபவிக்கும் லாப விஷயங்களையும், அதிர்ஷ்டம் மற்றும் திடீர் மற்றும் நிரந்த முன்னேற்றங்களையும், தொழில் ரீதியாக ஜாதகர் கொண்டு இருக்கும் தன்னம்பிக்கை மற்றும் முற்போக்கு சிந்தனை, திட்டமிடுதல்கள் பற்றியும் அறிவுறுத்தும். 12ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகரின் அதிகபடியான முதலீடுகளையும், முதலீடுகளால் ஜாதகர் பெரும் தொழில் விருத்தி மற்றும் பெருத்த லாபங்களை பற்றியும் குறிப்பிடும், மேலும் ஜாதகருக்கு செய்யும் தொழில் உள்ள மன நிறைவையும், மன நிறைவான வருமானத்தையும் தெளிவுபடுத்தும்.


சுய ஜாதக ரீதியாக ஒருவர் தொழில் செய்ய முற்படும் முன் ஜீவன ஸ்தான வலிமையை கொண்டு தொழில் நிர்ணயம் செய்த பின்பு, நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசை,புத்திகள் ஏற்று நடத்தும் பாவக பலன்களை கருத்தில் கொண்டு தொழில் துவங்க சொல்வதும், செய்து கொண்டு இருக்கும் தொழிலை விஸ்தரிக்க சொல்வதும், தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும், தங்கு தடையில்லாத தொழில் முன்னேற்றத்தை நிரந்தரமாக பெறவும், கை நிறைவான வருமானத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும்.

எந்த ஒரு ஜாதகத்திலும் ஜீவன ஸ்தானம் மட்டும் வலிமை பெறுவது தொழில் வெற்றிகளை உறுதி செய்யாது, லாப ஸ்தானமும் வலிமை பெறுவது சிறப்பான அதிர்ஷ்டங்களை பெற வாய்ப்பளிக்கும், சுய ஜாதகங்களில் 12 பாவகங்களும் வலிமை பெரும் பொழுதோ, அல்லது வலிமை பெற்ற பாவகங்களின் பலனை மட்டும் திசை,புத்திகள் ஏற்று நடத்தினாலோ ஜாதகர் ஜீவன ரீதியான நன்மைகளை தொடர்ந்து பெற இயலும், மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியன்களை நிறுவி வெற்றிகரமாக நடத்தும் வாய்ப்பை வழங்கும்.

ஒருவரது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று, லாப ஸ்தானம் வலிமை அற்ற நிலையில் இருப்பின் ( 2,6,8,12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றோ, பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ இருப்பின் ) ஜாதகரின் உழைப்பு மற்றும் திறமைகள் அனைத்தும் வீணாகிவிட வாய்ப்புண்டு, இந்த அமைப்பை பெற்றவர்கள் மட்டும் சற்று கவனமுடன் தொழில் விஷயங்களை கையாள்வது சம்பந்தபட்ட ஜாதகருக்கு நன்மையை தரும்.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானம் எவ்வளவு வலிமை பெற்று இருந்தாலும், தற்பொழுது அல்லது எதிர்வரும் திசை மேற்கண்ட ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, ஜாதகருக்கு தொழில் ரீதியான வெற்றியும் லாபங்களும் உண்டாகும், மாறாக நடைபெறும் திசை அல்லது எதிர்வரும் திசை ஜீவன மற்றும் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருந்தாலும் எவ்வித பயனும் இல்லை என்ற நிலையை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் பாதக ஸ்தானம் !


" மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் " முற்றிலும் உண்மையே, பொதுவாக வாழ்க்கை துணையின் வழியில் இருந்து யோகங்களை பெறுபவர்களும் உண்டு, அவயோகங்களை பெறுபவர்களும் உண்டு, இவையெல்லாம் ஒவ்வொருவர் சுய ஜாதகபடியே நிகழ்ந்தாலும், தனக்கு அமைந்த வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் குடும்பம்,களத்திரம் அல்லது ஆயுள் பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும்பொழுது ஜாதகரின் வாழ்க்கையில் விதி விளையாட தொடங்கிவிட்டது என்று உறுதி செய்துகொள்ளலாம், மேலும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் தற்பொழுது அல்லது எதிர்வரும் திசை புத்தி, பாதக ஸ்தானதத்தால் பாதிக்கபட்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் கதி அதோ கதிதான், ஜாதகரை காப்பாற்ற எவராலும் இயலாது என்று முடிவு  செய்து கொள்ளலாம்.

 திருமண பொருத்தம் காணும் பொழுது அடிப்படையில் வது வரனின் ஜாதகத்தில் இந்த ஒரு விஷயத்தை ஜோதிடரால் குறிப்பிட்ட ஜாதகருக்கு தெளிவுற அறிவுறுத்த இயலவில்லை எனில் ஜாதகரின் வாழ்க்கையே படுகுழியில் தள்ளிய பெருமை சம்பந்தபட்ட ஜோதிடரையே சாரும் அன்பர்களே !

ஜோதிடர்கள் பலர் எவ்வளவு அறிவுறுத்தியும் ஜாதகர் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் தனது எண்ணம் போல் காதல் திருமணம் புரிந்து, இடியாப்ப சிக்கலில் மாட்டிகொண்டு இன்னலுறும் ஒரு அன்பரின் வாழ்க்கை துணையின் ஜாதகம் இது, திருமணதிற்கு பிறகு வாழ்க்கை துணை வழியில் இருந்து குறுகிய காலத்தில் அனுபவித்த இன்னல்களும், வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை நிலையையும் இனி ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஷ்வினி1ம் பாதம் 

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,8ம் வீடுகள் உயிர் உடல் ஆனா லக்கினத்துடன் தொடர்பு.
2,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு.

3,5,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு.
6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு.

அடிப்படையில் ஜாதகிக்கு களத்திர ஸ்தானமான 7ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 11ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ( குடும்பம் ) ரிஷபத்தில் அமைவதும் ஜாதகிக்கு களத்திர பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை வாரி வழங்கும் அமைப்பாகும், ஜாதகியை திருமணம் செய்த முதல் மாதத்தில் இருந்தே ஜாதகர் வருமானம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை பெரிய அளவில் ஸ்திரமாக சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, குடும்பம் நடத்த ஜாதகர் பெரிய அளவில் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது.

 மேலும் 3,5,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகி 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் தோல்வியையும், தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அற்ற நிலையையும், 5ம் பாவக வழியில் இருந்து திருமணம் நடந்து 3வருடங்களுக்கு மேல் ஆகியும் புத்திர பாக்கியத்தில் 
தடைகளையும், தெளிவான சிந்தனை மற்றும் புத்திசாலிதனத்தில் 
போதிய பக்குவம் இன்மையையும், 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்லாமல் வீண் சந்தேகங்களையும்,
பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாமல் கருத்து வேறுபாடுகளுடன் சச்சரவையும், 9ம் பாவக வழியில் இருந்து பெரியோருக்கு கட்டுப்படாமல் தனது எண்ணம்போல் செயலாற்றும் தன்மையையும், தனக்கே அனைத்து தெரியும் என்ற அகம்பாவத்தையும் தந்தது, 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம் இல்லாத வாழ்க்கையும், பிற்போக்கு தனமான மூட நம்பிக்கைகளில் பற்று கொண்டு தனது இல்லற வாழ்க்கையை தானே கெடுத்துகொள்ளும் நிலையை தந்தது.

 தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிர திசை 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவது ஜாதகியின் இல்லற வாழ்க்கையை வெகுவாக பதம்பார்த்து கொண்டிருப்பதும், ஜாதகியின் கணவர் ரத்தகண்ணீர் வடிக்காத குறையாக போராடிகொண்டிருக்கும் சூழ்நிலையை தந்து இருப்பதும் கவனிக்கத்தக்கது.

நல்ல வேலை எதிர்வரும் சூரியன் திசையும், அடுத்து வரும் சந்திரன் திசையும் முறையே 8ம் வீடு லக்கினத்துடன் தொடர்பு பெற்று நன்மையையும், 2,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று நன்மையையும் செய்வது ஜாதகிக்கு நல்லது, மேற்கண்ட ஜாதகிக்கு கடந்த 20 வருடங்களாக சுக்கிர திசை நடைபெற்ற போதிலும், சுக்கிரன் தனது திசையில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தியதால் 3,9ம் பாவக வழியில் இருந்து பாதகமான பலன்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது, அதிக அளவில் இன்னல்களையே ஜாதகி சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, திருமணதிற்கு பிறகும் தனது கணவனுக்கு யோகம் அற்ற நிலையையே தருவது கவலைக்கு உரிய விஷயமே.

6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, மன நிம்மதியில்லாத வாழ்க்கையும், இல்லற வாழ்க்கையில் அதிக மன போராட்டங்களையும், மன உளைச்சல்களையும் வாரி வழங்குவது கவனிக்க தக்கது, 6ம் பாவக வழியில் இருந்து வீண் மன கவலைகளை மனதில் கொண்டு தனது உடல் நிலையை பாதிக்கும் விதமான செய்கைகளை ஜாதகி முட்டாள் தனமாக செய்ய வைத்தது, இதனால் ஜாதகி வயிறு சார்ந்த அதிக தொந்தரவுகளையும், இன்னல்களையும் அனுபவிக்க நேர்ந்தது. 10ம் பாவக வழியில் இருந்து தொழில் மற்றும் வேலை இல்லா தன்மையையும், கௌரவ குறைவான செயல்களில் ஈடுபட்டு வீண் மனகவலைக்கு ஆளாகும் துர்பாக்கிய நிலையை ஜாதகியே ஏற்ப்படுத்திகொண்டார். 12ம் பாவக வழியில் ஜாதகி வீண் கற்பனைகளுக்கும், மனோரீதியான பிரச்சனைகளுக்கும் இடம்கொடுத்து குடும்பத்தில் நிம்மதியில்லாமல் தவிக்கும் நிலைக்கு ஆளானார்.

சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை பெறுவது தனது கணவர் வழியில் இருந்து தேவையான அளவிற்கு பொருளாதார உதவிகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்பை மட்டும் ஜாதகிக்கு தங்கு தடையின்றி வழங்குவது வரவேற்க தக்கது என்றாலும், தனது கணவர் அதற்காக படும் சிரமங்களை ஜாதகி சிறிதும் சிந்தித்து பார்க்காமல் தனது மனம்போல் வீண் விரையம் செய்வது வருந்ததக்கது.

மேற்கண்ட ஜாதகியை திருமண செய்து கொண்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில் 1,5,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றது, ஜாதகரே தனது இல்லற வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள காரணமாக அமைந்தது, 1ம் பாதக ஸ்தானதுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர் தனது உடல் மற்றும் மனதை தானே பாதிப்பிற்கு உள்ளாக்குவார், மேலும் 5ம் பாவகம் பாதிக்க பட்டதால் சுய சிந்தனையும் அற்று பெரியோர்களின் ஆலோசனையும் கேட்கவில்லை, 7ம் பாவகம் பாதிக்க பட்டதால் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து இன்னல்களை அனுபவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது, பொருத்தம் இல்லாத பெண்ணை திருமணம் செய்ய நேர்ந்தது, 9ம் பாவகம் பாதிக்க பட்டதால் பெரியோர் ஆதரவும், இறை அருளின் கருணையும் இன்றி இல்லற வாழ்க்கையில் தனித்து போராட வேண்டிய சூழ்நிலையை ஜாதகரே உருவாக்கி கொண்டார், தம்பதியர் இருவருக்கும் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் நல்ல நிலையில் இருப்பதால், குடும்ப வாழ்க்கையில் பிரிவு இல்லாமல், இல்லற வாழ்க்கையை பல சிரமங்களுடன் நகர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுவிட்டது.

மேற்கண்ட இன்னல்களுக்கு சுய ஜாதக ரீதியான பாவக வலிமையை உணராமல், நட்சத்திர பொருத்தம் 10ற்கு மட்டும் முக்கியத்துவம் தந்து திருமணம் செய்துகொண்டதும், நடைமுறையில் இருவருக்கும் நடைபெறும் திசை புத்திகள் எவ்வித பலனை தருகிறது என்பதை ஆய்வு செய்யாமலும் திருமணம் செய்தது காரணமாக அமைந்துவிட்டது, எனவே திருமணம் செய்யும் முன் இருவரது சுய ஜாதகங்களிலும் உள்ள பாவக நிலையை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசை புத்தி, எதிர் வரும் திசை புத்தி ஏற்று நடத்தும் பாவக பலனை கருத்தில் கொண்டும் திருமண பொருத்தம் காண்பதே சாலசிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

பூர்வ புண்ணிய ஸ்தான வலிமையும், ஜாதகரின் மதிநுட்பமும் !




வாழ்க்கையில் அறிவு சார்ந்த விஷயங்களில் புதுமையான அணுகுமுறையும், புதிய திட்டங்களை நடைமுறைபடுத்தி பல வியக்கத்தக்க வெற்றிகளை குவிக்க வைக்கும் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக வலிமையை பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்ற வாக்கிற்கு இணங்க சுய ஜாதகத்தில் அதி புத்திசாலிதனமான நுண் அறிவுக்கும், 64 கலைகளில் தேர்ச்சிக்கும் வழிகோலுவது பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகமே என்றால் அது மிகையில்லை, 5ம் பாவகம் வலிமை பெற்ற ஜாதகருக்கு, நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் வலிமை பெற்ற 5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் அறிவு திறனுக்கும், புதிய அணுகுமுறைக்கும் பஞ்சமே இருக்காது, மேலும் ஜாதகரின் சமயோசித புத்திசாலிதனத்தால் ஆதாயம் என்பது பன்மடங்கு கூடும் என்பது கவனிக்க தக்கது, பலவிதமான புதிய விதிகளை உலகிற்கு அறிமுகம் செய்யும் வல்லமையை தந்துவிடும்.

ஜாதகரின் புதிய கண்டுபிடிப்புகள் பூமியில் உள்ள மனிதர்களின் வாழ்க்கையில் பங்கெடுக்கும், மனித குலத்திற்கு பெருமைசேர்க்கும், அனைவருக்கும் பயன்படும் விதத்தில் இவர்களின் கண்டுபிடிப்புகள் பயனுள்ளதாக அமையும், புதிய சிந்தனை மற்றும் புதிய மாற்றங்களுக்கு உரிமை கொண்டாடும் தனித்திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ள அன்பர்களின் ஜாதகங்களில், 5ம் பாவக வலிமையை நாம் உணர இயலும், இயற்கையாகவே இவர்களின் சிந்தனை மற்றும் கேள்விகளுக்கு சரியான பதில்களை இந்த பிரபஞ்சம் வாரி வழங்கும், எவ்வித பிரச்சனைகள் மற்றும் இன்னல்களுக்கும் சரியான தீர்வுகளை, சரியான நேரத்தில் வழங்கும் வல்லமை கொண்டவர்கள், சிறு வயதுமுதலே அறிவுத்திறனில் சிறந்து விளங்கும் யோகம் பெற்றவர்கள், பன்முக திறமை சாஸ்திர அறிவு, சாஸ்திரத்தில் தேர்ச்சி, கற்ற கல்வியை தனது முன்னேற்றத்திற்கும் தன்னை சார்ந்தவர்களின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தும் யோகம் பெற்றவர்கள், குறிப்பாக 5ம் பாவகம் வலிமை பெற்றுள்ள அன்பர்கள் பெரும் யோகத்தை  விட, இவரை சார்ந்தவர்கள் பெரும் யோகம் மிகவும் அளப்பரியதாக அமையும் என்பது கவனிக்க தக்கது.

குல தெய்வத்தின் பரிபூர்ண ஆசிகளின் மூலம் வாழ்க்கையில் சகல நலன்களையும் பெரும் யோகத்தை தரும், வருமுன் உணரும் சில சிறப்பு சக்திகள் இயற்கையாகவே அமையபெற்று இருப்பார்கள், வாக்கு பலிதமும், உள்மனதின் எண்ண ஓட்டங்களை தெளிவாக உணரும் யோகம் பெற்றவர்கள், யோகம்,தியானம்,தவம் மூன்றிலும் தேர்ச்சி பெறுவார்கள், சிந்தனை திறனும் செயல்திறனும் ஒருங்கே அமையபெற்றவர்கள், ஆராய்ச்சிகளில் வெற்றியும் புகழும் உண்டாகும், கலைத்துறையில் சிறந்து விளங்கும் யோகம் உண்டு, இயல், இசை, நாடக துறைகளில் அபரிவிதமான தேர்ச்சியை தரும், உலக புகழ் பெரும் யோகமும், சுய முயற்ச்சியிலேயே தன்னிறைவான வாழ்க்கை வசதிகளையும் அனுபவிக்கும் தன்மையும், மிகப்பெரிய நிறுவனங்களையும், சாம்ராஜ்ஜியத்தையும் உருவாகும் சிற்ப்பிகளாக திகழ்வார்கள்.

பொதுவாக பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவது குறிப்பிட்ட ஜாதகருக்கு சிறந்த புத்திர பாக்கியத்தை நல்குகிறது, தனக்கு பிறகு தனது எண்ணங்களையும் லட்சியங்களையும் நிறைவேற்றும் விதமான வாரிசு அமைப்பை ஜாதகர் பெறுகிறார், ஜாதகருக்கு பிறக்கும் குழந்தையும் நல்ல அறிவு திறனும், புத்திசாலித்தனமும் நிரம்பபெற்ற குழந்தையாகவே அமைவது சுய ஜாதகத்தில் உள்ள புத்திர ஸ்தான வலிமையே, " தோன்றின் புகழோடு தோன்றுக" என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க ஜாதகரும், ஜாதகரின் வாரிசும் நல்லறிவும் நல்ல குணமும், பரந்த மனப்பக்குவமும் பெற்று இருப்பார்கள், இவர்களின் வாழ்க்கையில் 5ம் பாவக பலன்கள் நடைமுறையில் வரும் பொழுது கலைகளில் தேர்ச்சி, கல்வியில் வெற்றி, போட்டி பந்தையங்களில் சிறப்பான வெற்றிகள், சமுதாயத்தில் தனது அறிவுக்கும் ஆற்றலுக்கும் அங்கீகாரம், அரசு ஆதாயம் என மிகுந்த நன்மைகளை பெறுவார்கள்.

5ம் பாவக வலிமை என்பது தனது சந்ததிகளையும், தம்மை சார்ந்தவர்களையும் வாழ்க்கையில் தன்னிறைவான சுகபோகங்களை அனுபவிக்க வைக்கும் அறிவும், புத்திசாலித்தனமும் கொண்டவர்களாக இருப்பார்கள், குறிப்பாக பல கோடிரூபாய் செலவு செய்யுங்கள், ஆனால் ஒரு ரூபாய்கூட விரையம் செய்தீர்கள் என்ற வார்த்தைக்கு உதாரணமாக திகழ்வார்கள், இதை போன்றே  இவர்களுக்கு சம்பாத்தியம் என்பது மிக கடினமான விஷயமாகவே இருக்க வாய்ப்பில்லை, அதேசமயம் சத்தியம் வாய்மையை காப்பாற்றும் குணம் கொண்டவர்கள், இவர்களின் செயல்களினால் எந்த ஒரு சிறு இன்னல்களும் மற்றவர்களுக்கு ஏற்ப்படாவண்ணம் பார்த்துகொல்வதில் கைதேர்ந்தவர்கள், வியாபாரத்தில் பல நுணுக்கமான விஷயங்களை கையாளும் திறமை பெற்றவர்கள்.

முற்போக்கு சிந்தனையும், வருமுன் காக்கும் திட்டமிடுதல்களுடன் செயல்படும் அன்பர்கள், மன உறுதி, மனோதிடம் நிறைவாக பெற்றவர்கள் என்பதால் எந்த ஒரு காரியத்தையும் உறுதியாக தன்னம்பிக்கையுடன் செய்து வெற்றி பெரும் யோகம் கொண்டவர்கள், வாழ்க்கையில் ஏற்ப்படும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை தகர்த்தெறிந்து, தெளிவான சிந்தனையுடனும் உறுதியான மன நிலையுடன் வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ளுவார்கள், இவர்களின் ஆலோசனையின் பெயரில் நடைபோடும் அனைவருக்கும், பல வெற்றிகள் வாழ்க்கையில் வந்து குவியும் என்பது மறுக்க இயலாத உண்மை, மேலும் சிறந்த குடும்ப நல ஆலோசகர், ஆசிரியர், மருத்துவர், வழக்கறிஞர், ஜோதிடர் போன்றோர் ஒருவருக்கு சரியாக அமைவதும் 5ம் பாவக வலிமையே, சரியான கால நேரம் அறிந்து செயலாற்றுவதும், தனக்கு அமைந்த நேரத்தை சிறந்த நேரமாக மாற்றும் வல்லமை பெற்றவர்கள்.

எந்த ஒரு ஜாதகத்திலும் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் வலிமை பெற்று அமைவது, குறிப்பிட்ட ஜாதகத்தில் மற்ற பாவகங்களில் இருந்து வரும் இன்னல்களை களைந்து வாழ்க்கையில் வெற்றி நடை போடவைக்கும், ஜாதகருக்கு அறிவு திறனும், புத்திசாலித்தனமும் மிதமிஞ்சி நிற்கும், மேலும் சுய ஜாதகத்தில் எந்த லக்கினம் என்றாலும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசி ( சிம்ம ராசி எந்த பாவகமாக அமைந்தாலும் அந்த பாவகம் வலிமை பெறுவது ) வலிமை பெற்று அமைவது ஜாதகருக்கு ஒரு வரபிரசாதமே, தனக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இன்னல்களுக்கும் சுயமாகவே தீர்வு கண்டு வாழ்க்கையில் வெற்றி காண்பார்கள், பல்துறை அறிவும், ஒரே நேரத்தில் பலவிஷயங்களில் கவனம் செலுத்தும் வல்லமையை தரும், 5ம் பாவக வலிமை தனக்கு நிகராக வேறொருவரும் இல்லை என்ற நிலையை தரும், உலகில் தனித்து வெற்றிகரமாக இயங்கும் சக்தியை இறைஅருள் மற்றும் இயற்க்கை இவர்களுக்கு அளித்த கொடையாகவே கருதலாம். 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

திருமண வாழ்க்கை வெற்றியும், சுய ஜாதகத்தில் பாவக வலிமையும் !




 திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வதில் மிக முக்கிய பங்கு வகிப்பது சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையே அன்றி வேறு எதுவும் இல்லை, பொதுவாக திருமண பொருத்தம் காணும் பொழுது பெரும்பாலான அன்பர்கள், நட்சத்திர பொருத்தம், ஜாதக கிரக நிலை, ஏக திசை சந்திப்பு, சர்ப்ப,களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், நடைமுறையில் உள்ள திசை தரும் பலன்கள், ஜாதகத்தில் உள்ள தோஷ நிலைகள் என பல விஷங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றார்களே அன்றி, பொருத்தம் காணும் ஜாதகங்களின் பாவக வலிமை நிலையை பற்றி சிந்திப்பதே இல்லை, நட்சத்திர பொருத்தம், ஜாதக பொருத்தம், ஏக திசை பொருத்தம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தருவதை விட சுய ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு திருமண பொருத்தம் காணும் பொழுது தம்பதியரின் திருமண வாழ்க்கை மிகவும் வெற்றிகாரமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே!

திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்யும் முக்கிய விஷயங்கள் :

1) தம்பதியர் சுய ஜாதகங்களில் லக்கினம் எனும் முதல் பாவகமும், குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும் மிகவும் வலிமையுடன் இருப்பது தம்பதியரின் இல்லற வாழ்க்கையை மேம்படுத்த உதவும், லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் ஆயுளையும், ஜாதகரின் உடல் மற்றும் நலம் மன நலம் என்ற விஷயங்களில் மிகுதியான நன்மையான பலன்களை வாரி வழங்கும், தம்பதியரின் குண நலன்களை லக்கினமே குறிப்பிடுவதால், லக்கினம் வலிமை பெரும் பொழுது தம்பதியரின் குண நலன்கள் மேம்பட்டு இருக்கும், ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளும் தன்மையை தரும், இதுவே தாம்பத்திய வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.

குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் பேச்சு, வருமானம் மற்றும் குடும்ப வாழ்க்கையின் தன்மையை தெளிவு படுத்தும், 2ம் பாவகம் வலிமை பெரும் பொழுது தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் புரிந்துகொண்ட நடந்து கொள்ளவும், இனிமையான பேச்சின் மூலம் குடும்ப வாழ்க்கையை செம்மையாக நடத்துவதற்கு வாய்ப்பை வாரி வழங்கும், 2ம் பாவகம் வலிமை இழக்கும் பொழுது, தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டு குடும்ப வாழ்க்கையை தமது பேச்சின் மூலமே கெடுத்து கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கும், குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் வலிமை பெரும் பொழுது குடும்பம் நடத்த ஜீவ ஆதாரமான வருமானம் மிகுந்த அளவில் வந்து கொண்டே இருக்கும், பெரும்பாலான குடும்ப பிரச்சனைகளுக்கு காரணமாக அமைவது, தம்பதியரின் பேச்சும், அவர்களின் பொருளாதார நிலையுமே என்பதை கவனத்தில் கொள்வது நலம், தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் இந்த இரண்டாம் பாவகம் மிகவும் வலிமையுடன் அமையும் பொழுது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவேது.

2)  தம்பதியரின் சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவாகம் மிகவும் வலிமையுடன் அமைவது நல்லது, பொதுவாக 5ம் பாவகத்தை குழந்தை பாக்கியத்தை தரும் அமைப்பாக அனைவரும் கருதுவார்கள், 5ம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியருக்கு தனது குலம் தழைக்க நல்ல வாரிசை மட்டும் அமைத்து தருவதில்லை, தம்பதியரின் புத்திசாலிதனத்தையும், சமயோசித அறிவு திறனையும் வெகுவாக தமது வாழ்க்கையில் பயன்படுத்தும் சூழ்நிலையை தரும், எந்த ஒரு சிரமமான சூழ்நிலையையும் சிறப்பாக கையாண்டு வாழ்கையில் வெற்றி பெரும், சில ரகசியமான வித்தைகளை தம்பதியருக்கு வழங்கும், மேலும் குல தெய்வத்தின் பரிபூரண நல்லாசிகளுக்கு ஆளாகும் தன்மையை தருவதால், எந்த நேரத்திலும், எங்கு சென்றாலும் தம்பதியருக்கு உதவி செய்ய பலர் காத்துகொண்டு இருப்பார்கள் என்பது கவனிக்க தக்கது, தம்பதியருக்கு பிறக்கும் குழந்தை ஆண்வாரிசாக அமைவதும், அந்த குழந்தையின் வழியில் இருந்து யோக வாழ்க்கை தம்பதியர் பெறுவதற்கும் அடிப்படையாக அமைவது பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவக வலிமை நிலையே காரணமாக அமையும்.

3) தம்பதியரின் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மிகவும் வலிமையுடன் அமைவது அவசியம், தாம்பத்திய வாழ்க்கையில் தம்பதியர் இருவரின் மனம் மட்டும் உடல் இயக்கம், எண்ணங்களின் தன்மை என சகல விஷயங்களையும் இயக்குவதில் களத்திர பாவகமே முக்கிய பங்கு வகிக்கிறது, கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் புரிந்துகொள்ளும் தன்மையை தருவது களத்திர பாவக வலிமையே, மனதில் உள்ள எண்ணங்களின் தன்மையை பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் சொல்லாமலே புரிந்துகொள்வதும், பரஸ்பர அன்பு  காட்டுதலுக்கும் அடிப்படையாக அமைவது களத்திர பாவக வலிமையே, எந்த ஒரு சூழ்நிலையிலும் பிரிவு நிலையை தாராமல், தம்பதியர் ஒற்றுமையாக வாழ்வதற்கும், ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து இனிமையான களத்திர வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கும் களத்திர பாவக வலிமையே அடிப்படையாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

4)  தம்பதியரின் சுய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகம் வலிமையுடன் இருப்பது தம்பதியரின் ஆயுள் வலிமையை குறித்த போதிலும், ஒருவரின் வழியில் இருந்து ஒருவர் பெரும் வருமான வாய்ப்பையும் குறிக்கும், ஆயுள் பாவகம் மிகவும் வலிமையுடன் அமையும் பொழுது தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர பொருளாதார தன்னிறைவை பெரும் வருமானங்களை பெறுவார்கள் என்பதை உறுதிபடுத்தும், மேலும் கணவனுக்கு மனைவியாலும், மனைவிக்கு கணவனாலும் வருமான வாய்ப்புகள் வந்து குவியும், தமது வாழ்க்கை துணையை ஜாதகர் அல்லது ஜாதகி எப்படி நடத்துவார் என்ற  விஷயத்தையும் ஆயுள் பாவக வலிமையை வைத்து நிர்ணயம் செய்யலாம்.

மேலும் தம்பதியரின் சுய ஜாதகங்களில் அயன சயன ஸ்தானமான 12ம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் அந்தர வாழ்க்கையின் மகிழ்ச்சியையும், பரஸ்பர தாம்பத்திய இன்பங்களையும் வாரி வழங்கும், மேலும் திடீர் பொருள் வரவையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தின் மூலம் வாழ்க்கையில் சகல வசதி வாய்ப்புகளையும் அனுபவிக்கும் யோகத்தை தரும்.

5) தம்பதியரின் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி மற்றும் எதிர்வரும் திசை,புத்தி தம்பதியர் இருவருக்கும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்துவது திருமண வாழ்க்கையின் வெற்றியை 100% சதவிகிதம் நிர்ணயம் செய்யும், ( தம்பதியர் இருவருக்கும் ஏக திசை அதவாது ஒரே திசை நடைமுறையில் இருந்தாலும் சரி வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் திருமண வாழ்க்கையின் வெற்றி நிச்சயம் என்பதில் மாற்று கருத்து இல்லை) மேற்கண்ட 5ந்து விஷயங்களை கருத்தில் கொண்டு, திருமண வாழ்க்கையை  அமைத்து  தரும் பொழுது தம்பதியரின் வாழ்க்கை வாழையடி வாழையாக செழித்து ஓங்கும், சகல சௌபாக்கியமும் பெற்று வளமுடன் வாழும் வாய்ப்பை தரும், மேற்கண்ட 5ந்து விஷயங்கள் சிறப்பாக அமையும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகங்களுக்கு, நட்சத்திர பொருத்தம் தேவையில்லை, செவ்வாய் தோஷ நிர்ணயம் தேவையில்லை, சர்ப்ப தோஷ நிர்ணயம் தேவையில்லை, பொதுவாக பார்க்கும் தசவித பொருத்தங்களும் ( ரச்சு பொருத்தம் உற்பட ) எதுவும் தேவையில்லை அன்பர்களே, திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.

மாறாக மேற்கண்ட பாவகங்கள்  6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெற்றோ, பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ, இருப்பது திருமண வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களுக்கும், தோல்விக்கும் அடிகோலும், மேலும் நடைமுறையில் உள்ள திசை,புத்தி அல்லது எதிர்வரும் திசை,புத்தி  6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெற்ற அல்லது  பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் தம்பதியரின் இல்லற வாழ்க்கை கேள்விக்குறியாகவே அமையும் என்பதில் சந்தேகமே இல்லை, இதில் நட்சத்திர பொருத்தங்கள் பத்தும் ஒன்றும் செய்ய இயலாத, சம தோஷம், ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம் மற்றும் ஏக திசை பொறுத்தமும் ஒன்றும் செய்ய இயலாது. 


குறிப்பு :

 ஆக திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வது தம்பதியரின் சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையையும், நடைமுறையில் உள்ள திசை மற்றும் எதிர்வரும் திசையின் வலிமையுமே என்பதில் சந்தேகமே இல்லை அன்பர்களே, எனவே திருமண பொருத்தம் காணும் பொழுது  பாவக வலிமையை கருத்தில் கொண்டும் திசை புத்தி ஏற்றுநடத்தும் பாவக வலிமையை கொண்டு நிர்ணயம் செய்யும் பொழுது திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே!

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696