சனி, 28 டிசம்பர், 2013

குழந்தை பிறக்கும் நேரம் என்று எதை எடுத்துகொள்வது ? குழந்தை தலை வெளிவரும் நேரமா ? அல்லது முதல் இதய துடிப்பு நேரமா ?





பொதுவாக குழந்தை பிறந்த நேரத்தை நிர்ணயம் செய்வதில் பல குழப்பங்கள் இந்த நவீன காலத்தில் ஏற்ப்படுகிறது, தாங்கள் சொன்னது போல் குழந்தை தலை வெளிவரும் நேரம் என்று எடுத்து கொண்டாலும் குழப்பமே மிஞ்சும், முதல் இதய துடிப்பு நேரம் என்று எடுத்து கொள்ளவும் முடியாது ஏனெனில் குழந்தையின் இதய துடிப்பு தாயின் கருவிலேயே துவங்கி விடும் .


ஆக குழந்தை எப்பொழுது சுயமாக பூலோக காற்றை சுவாசிக் ஆரம்பித்து தனது, ஜீவ வாழக்கையை ஆரம்பிக்கிறதோ அந்த வினாடியே குழந்தை உண்மையான பிறந்த நேரம் என்று நிர்ணயம் செய்யலாம், குறிப்பாக குழந்தையின் சரியான பிறந்த நேரத்தை துல்லியமாக நிர்ணயம் செய்ய நமது ஜோதிட முறையில் சிறப்பான வழிகாட்டுதல்கள் உண்டு, எனவே நமது ஜோதிட முறையில் பலன் காணும் அன்பர்களுக்கு இந்த குழப்பம் ஏற்ப்பட வாய்ப்பு மிக மிக குறைவு என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி .

ஒரு குழந்தையின் பிறப்பை துல்லியமாக தெரிந்துகொண்டால், குழந்தை பருவம் முதல் முதுமை பருவம் வரை நடைபெறும் நன்மை தீமை பலன்களை தெள்ள தெளிவாக நாம் உணர்ந்துகொள்ள முடியும் , ஜாதகர் அடிப்படையில் வளரும் சூழ்நிலை , ஜாதகருக்கு அமையும் உடல் நிலை , கல்வியில் பெரும் வெற்றி, ஜீவன வாழ்க்கையில் ஏற்ப்படும் முன்னேற்றம் , இல்லற வாழ்க்கையில்  அனுபவிக்கும் இன்பம், ஜாதகருக்கு அமையும் குழந்தை பேரு, என்ற நிலைகளில் இருந்து , ஜாதகரின் ஆயுள் அமைப்பினை பற்றியும் தெளிவாக தெரிந்துகொள்ள இயலும்.

பொதுவாக குழந்தை பிறப்பில் சில நிமிடங்கள் குழப்பம் வர கூடும், அந்த குழப்பத்தை நீக்கவும் , சரியான பிறந்த நேரத்தை தெளிவாக தெரிந்து கொள்ளவும் நமது ஜோதிட முறையில் வழி உண்டு , இதற்க்கு தேவை 1) ஜாதகரின் பிறந்த தேதி , 2) ஜாதகரின் பிறந்த நேரம் 3) ஜாதகரின் பிறந்த இடம் ஆகியன மட்டுமே, மேற்க்கண்ட விபரங்கள் இருந்தால் ஜாதகரின் துல்லியமான பிறந்த நேரத்தை எடுத்துவிட முடியும் , ஜாதகரின் ஜாதக பலன்களை தெளிவாக தெரிதுகொள்ள முடியும் இதன் மூலம் ஜாதகரின் வாழ்க்கையை செழுமையாக வாழும் நிலையினை பெறலாம்.

மேலும் நவீன காலத்தில் நல்ல நேரம் பார்த்து குழந்தை பிறப்பினை பலர் நிர்ணயம் செய்கின்றனர், இந்த அமைப்பும் ஜாதகருக்கு சரியான பலனை நிர்ணயம் செய்வதில்லை என்ற உண்மையை உணருவது அவசியம், இயற்கையாக பிறக்கும் குழந்தையின் ஜாதக அமைப்பிற்கும், நல்ல நேரம் பார்த்து அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தையின் ஜாதக அமைப்பிற்கும் பல சூட்சம விஷயங்கள் உண்டு , அறுவை சிகிச்சையின் மூலம் பிறக்கும் குழந்தையின் சரியான ஜாதகத்தை எடுப்பதே ஜோதிடரின் முழு திறமை அடங்கி இருக்கிறது .

எந்த காரணத்தை கொண்டும் இயற்கையாக பிறக்கும் குழந்தையை, நல்ல நேரம் பார்த்து அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறப்பை நாம் நிர்ணயம் செய்வது, ஜாதகத்தில் யோக பலன்களை வாரி வழங்கி விடாது என்ற உண்மையை உணருவது அவசியம், சிறப்பான நேரம் என்று தாங்கள் நிர்ணயம் செய்யும் நேரம் கூட சில வினாடிகளில் ஜாதக பலன்களை மாற்றி அமைத்துவிடும் .

நமது பூர்வ புண்ணிய அமைப்பினை கொண்டும், பாக்கிய நிலையின் அடிப்படையிலும், நாம் செய்த வினை பதிவின் அடிப்படையிலுமே, நமக்கு பிறக்கும் குழந்தையின் வாழ்க்கை மற்றும் ஜாதக யோக நிலை இறை அருளால் நிர்ணயம் செய்யபடுகிறது என்ற அடிப்படை விஷயத்தை அனைவரும் கருத்தில் கொண்டால், நிச்சயம் மேற்கண்ட குழப்பங்கள் வர சிறிதும் வாய்ப்பில்லை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969
9842421435 


வியாழன், 26 டிசம்பர், 2013

பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் தரும் யோக அவயோக பலன்கள் !



ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் ஜாதகரின் நல்லறிவு, சிந்தனை திறன், தனக்கு அமையும் வாரிசுகளின் நிலை, கலை துறையில் பெரும் வெற்றி, இயல் இசை நாடக துறையில் ஏற்ப்படும் தனிப்பட்ட திறமை மற்றும் புலமை, தனது குழந்தைகளால் ஏற்ப்படும் யோக வாழ்க்கை, தனது எண்ணத்தின் வலிமை அதனால் கிடைக்கும் வெற்றி என்ற அமைப்பில் இருந்தும்.

 ஆய கலைகள் 64ல் தேர்ச்சி, தர்ம சிந்தனை , இறைசிந்தனை, இறை அருளின் கருணையை பெரும் யோகம், ஜாதகரின் தனிப்பட்ட புத்திசாலித்தனம் என்ற நிலைகளில் தரும் பலன்களை பற்றியும், ஜாதகரின் வாத திறமையினையும், சரியான நேர்மையான தீர்பளிக்கும் தன்மையினையும், தனது சுய அறிவாற்றல் கொண்டு வாழ்க்கையில் தேடும் செல்வ நிலையினை பற்றியும், தனது காதல் வெற்றியினை பற்றியும், தனிப்பட்ட விளையாட்டு திறமைகளை பற்றியும் தெளிவாக தெரிந்துகொள்ள பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவக நிலையினை வைத்து தெளிவாக தெரிந்துகொள்ள இயலும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நல்ல நிலையில் இருப்பின் மேற்கண்ட அமைப்பில் இருந்து ஜாதகர் யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும், இதற்க்கு மாறாக ஐந்தாம் பாவகம் 4,8,12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றாலோ ? ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன்  (சர லக்கினத்திற்கு 11வீடு , ஸ்திர லக்கினத்திற்கு 9 வீடு , உபய லக்கினத்திற்கு 7வீடு ) சம்பந்தம் பெற்றாலோ? ஜாதகருக்கு மேற்கண்ட அமைப்பில் இருந்து எதிர்பதமாக தீய பலன்களே நடைபெறும் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நெருப்பு ராசியாக அமைந்து நல்ல நிலையில் இருந்தால் :

 ஜாதகர் தனது பூர்விக அமைப்பில் இருப்பதால் வாழ்க்கையில் நிலையான வெற்றியை தரும், குறிப்பாக ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் மிக சுறுசுறுப்பாக அமையும், விரைவான செயல்பாடுகளாலும் விரைந்து முடிவெடுக்கும் தன்மையினாலும் ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றம் பெரும், ஜாதகருக்கு பிறக்கும் குழந்தைகளால் ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றம் மற்றும் செல்வ சேர்க்கை குறுகிய காலத்தில் அபரிவிதமான நிலைக்கு எடுத்து செல்லும், ஜாதகரின் சிந்தனை ஆற்றல் அபரிவிதமாக வேலை செய்யும், மற்றும் அதி புத்திசாலித்தனம் ஜாதகரை வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நெருப்பு ராசியாக அமைந்து பாதிக்க பட்ட  நிலையில் இருந்தால் :

ஜாதகரை தனது பூர்வீகத்தில் இருந்து சிறு வயதிலேயே வெளியே துரத்தி ஜீவிக்க வைத்து விடும், அல்லது  கல்விக்காவோ, ஜீவனம் தேடியோ வெளி ஊருக்கு அனுப்பி விடும், ஒருவேளை ஜாதகர் தனது பூர்விகத்தில் இருப்பின் ஜாதகரின் குணம் மிக மோசமான அமைப்பை பெற்று இருக்கும், தெளிவான செயல்பாடுகள் அற்றவராகவும், முரட்டு பிடிவாதம் கொண்டவராகவும், குரூர எண்ணம் கொண்டவராகவும், தனது சுய லாபத்திற்காக எதை பற்றியும் சிந்திக்காமல் படு பாதக செயல்களை கூச்சம் இன்றி செய்பவராக இருப்பார், மனித நேயம் என்பது ஜாதகரிடம் மருந்துக்கு கூட இருக்காது, மேற்கண்ட அமைப்பே ஜாதகரின் அழிவுக்கு காரணமாக அமைந்துவிடும், மேலும் ஜாதகருக்கு வாரிசு கிடைப்பது அரிதிலும் அரிது.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நில ராசியாக அமைந்து நல்ல நிலையில் இருந்தால் :

ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருப்பதால் நல்ல உடல் நிலையினையும் தெளிவான சிந்தனை ஆற்றலையும் தரும், ஜாதகருக்கு பூர்வீக சொத்து சுகங்கள் இயற்கையா நல்ல நிலையில் அமையும், ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் அமையும், எதையும் பலமுறை யோசனை செய்து சரியாக செய்யும் தன்மையை தரும், ஜாதகரின் பொறுமை வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை வாரி வழங்கும், ஜாதகருக்கு நல்ல வாரிசுகள் அமையும், அவர்களாலும் சொத்து சுக சேர்க்கை ஏற்ப்படும், மேலும் ஜாதகர் தனது சுய  உழைப்பால் பல தலமுறைக்கு சொத்து சுகங்களை தேடி வைக்கும் தன்மையை தரும் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நில ராசியாக அமைந்து பாதிக்க பட்ட நிலையில் இருந்தால் :

ஜாதகர் பிறந்த சில வருடங்களிலேயே தனது பூர்வீகத்தில் தனக்கு அமைந்த சொத்து சுகங்களை இழந்து பரதேச ஜீவனத்தை தந்துவிடும், தனது மூதாதையர்கள் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தினையும் இழக்கும் தன்மையை தரும், மேலும் ஜாதகரின் உடல் நிலை கடினமாக பதிக்க படும், இதன் காரணமாக தனது சொத்து சுகங்களை இழக்கும் சூழ்நிலையை கூட தரக்கூடும், மேலும் ஜாதகரின் சிந்தனை ஆற்றலும் பாதிக்க படும், ஜாதகருக்கு உதவி செய்ய யாரும் முன் வர யோசனை செய்வார்கள், இறை அருளின் கருணை ஜாதகருக்கு துணை நிற்க வாய்ப்பு மிக மிக குறைவு, குழந்தை பாக்கியம் அமைவது சற்று பாதிக்கப்பட கூடும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் காற்று  ராசியாக அமைந்து நல்ல நிலையில் இருந்தால் :

ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருப்பதால் நன்மை உண்டாகும், குறிப்பாக ஜாதகரின் அறிவாற்றலின் வீச்சு மிக பெரிய அளவில் இருக்கும், ஜாதகரின் அறிவார்ந்த செயல்கள் யாவும் பொதுமக்களிடையே பெரிய அளவில் பேசப்படும், ஜாதகரால் இயலாத காரியம் ஒன்றும் இல்லை என்ற நிலையை தரும், தம்மை நாடி வரும் அன்பர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவிகரமாக இருப்பார், ஜாதகரின் ஆலோசனை படி நடக்கும் அன்பர்கள் யாவரும் குபேர சம்பத்தை பெறுவார்கள், ஜாதகரின் வாக்கு வன்மை மிக சிறப்பாக அமையும், வாக்கு பலிதம் உண்டாகும், ஜாதகரின் முன்னோர்கள் போன்றே ஜாதகரும் சமுதாயத்தில் மக்களுக்கு பிரதி பலன் பாராமல், தொண்டு செய்யும் மனப்பான்மையை தரும், ஜாதகருக்கு நல்ல வாரிசுகள் அமையும், அவர்களின் வாழ்க்கையும் செழுமை பெரும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் காற்று  ராசியாக அமைந்து பாதிக்க பட்ட நிலையில் இருந்தால் :

ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருக்கும் வரை ஜாதகரின் அறிவாற்றல் சிறிதும் வேலை செய்யாது , மற்றவர்களை சார்ந்து ஒட்டுண்ணி போல் வாழும் சூழ்நிலையை தரும், ஒரு சிறு தேவைகளை நிறைவு செய்வதற்கும் மற்றவர்கள் கையை பார்த்து வாழும் சூழ்நிலையை தரும், அப்படி இருந்தாலும் கூட ஜாதகருக்கு உதவி செய்ய யாரும் முன்வர மாட்டார்கள், மேலும் ஜாதகர் சொல்லும் யோசனைகள் யாவும் பெரும் தோல்வியை தரும், நாளடைவில் ஜாதகரின் சிந்தனை மாறும் அறிவு திறன் வெகுவாக மழுங்க ஆரம்பிக்கும், ஜாதகர் செயல்பாடுகள் யாவும் ஜாதகருக்கே எதிராக திரும்பும், தனது அறிவற்ற செயல்களால் அனைத்தையும் இழந்து நடு தெருவுக்கு வரும் சூழ்நிலையை தந்துவிடும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நீர்  ராசியாக அமைந்து நல்ல நிலையில் இருந்தால் :

ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருப்பதால் வாழ்க்கையில் பல அதிர்ஷ்டங்களை அடைவார், குறிப்பாக கலைத்துறையில் ( இயல், இசை, நாடகம் ) மிகப்பெரிய வெற்றியை பெரும் தன்மையை தரும், குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் யோகம் கொண்டவர்கள், அனைவரிடமும் இனிமையாக பழகும் தன்மை பெற்றவர்கள், ஜாதகரின் முன்னேற்றம் என்பது அதிர்ஷ்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வெற்றி காணும் தன்மையை பொறுத்து அமையும், எந்த ஒரு விஷயத்திலும் நேர்மறை எண்ணங்களை கொண்டு மிகப்பெரிய சாதனைகளை படைக்கும் யோகத்தை தரும், நல்ல அதிர்ஷ்டம் நிறைந்த குழந்தைகளை பெறுவார், மனதில் நினைக்கும் எந்த ஒரு காரியத்தையும் சாதிக்கும் தன்மை கொண்டவர்கள்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நீர்  ராசியாக அமைந்து பாதிக்க பட்ட நிலையில் இருந்தால் :

ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருந்தால் ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும்  ஆளாகும் சூழ்நிலையை தரும், இதனால் ஜாதகரை சார்ந்தவர்களுக்கும் அதிக மன கவலைகளை ஏற்ப்படுத்துவார், குறிப்பாக போதை வஸ்துகளை பயன்படுத்தி தனது ஆரோக்கியத்தை தானே  கெடுத்து கொள்ளும்  நிலையை தரும், ஜாதகரின் முன்னேற்றம் என்பது சிறிதும் இருக்காது, சற்றே கவனிக்காமல் இருந்தால் ஜாதகர் வெகு விரைவில் மன நோய்க்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், ஜாதகர் செய்யும் செயல்கள் யாவும் மிகப்பெரிய இன்னல்களையே உருவாக்கும், குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது, இவர்களை சிறு வயது முதற்கொண்டு சரியாக நேர்வழி பாதையில் நடத்தி செல்வது அவரது பெற்றோரின் கடமை, ஜாதகருக்கு மன நிலை பாதிக்க பட்டால் ஜாதகரை அதில் இருந்து மீட்டு எடுப்பது மிக சிரமமே.

மேற்கண்ட அமைப்பில் ஐந்தாம் பாவகம் நன்மை தீமை பலன்களை தரும், மேலும்  ஐந்தாம் பாவக நிலையை தெளிவாக உணர சர,ஸ்திர,உபய ராசிகளின் அமைப்பை வைத்து நிர்ணயம் செய்வது அவசியம், ஒரு ஜாதகருக்கு நல்ல அறிவு , பூர்வ புண்ணிய சொத்துகள், சிறந்த புத்திசாலித்தனம், சமயோசித புத்திசாலித்தனம், இறை நிலையின் பரிபூரண கருணை, குல தேவதையின் அருள் மற்றும் நல்ல புத்திர சந்தானம் அமைவது ஜாதகரின் பூர்வபுண்ணிய நிலையின் அடிப்படியிலேயே என்றால் அது மிகையாகாது . 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969
9842421435

ஞாயிறு, 3 நவம்பர், 2013

திசா புத்திகளும், சுய ஜாதகத்தில் பாவாக அமைப்பில் ஏற்று நடத்தும் பலாபலன்களும் !



பொதுவாக சுய ஜாதக நிலையை வைத்து நடந்த,நடக்கின்ற,நடக்க இருக்கின்ற பலன்களை சொல்வதற்கு, ஜோதிடர்கள் பல கணித முறைகளை பின்பற்றுகின்றனர், இதில் ஜாதகருக்கு நடந்த திசை என்ன ? பலனை வழங்கியது, நடக்கின்ற திசை என்ன? பலனை வழங்கி கொண்டு இருக்கிறது, இனி நடக்க இருக்கும் திசை என்ன? பலனை வழங்கும் என்ற கணிதத்தில் ஜோதிடர்களுக் மத்தியிலேயே பல முரண்பாடுகள் உண்டு.

 மேலும் ஜாதகத்தை ஒரு ஜோதிடர் கணித்து பலன் சொன்னதிற்கும், அதே ஜாதகத்தை மற்றொரு ஜோதிடர் கணித்து பலன் சொன்னதிற்கும் நிறை வேறுபாடுகள் வருகிறது எனும் பொழுது, ஜாதக பலன் அறிந்துகொள்ள வந்த நபரின் நிலை என்னவாகும், ஒருவர் சுப யோக பலன் என்கிறார்,வேறொருவர் அவ யோக பலன் என்கிறார், இந்த விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ள, தொலைகாட்சியில் வரும் தின ராசிபலனை கேட்டாலே போதும். ( ராசி பலன் என்பது சரியாக சுய ஜாதகத்திற்கு பொருந்தாது, கட்டுபடுத்தாது  என்பது வேறு விஷயம் )


 இந்த நிலை ஏற்ப்பட காரணம் ஒருவருடைய சுய ஜாதகத்தில் நடை பெரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் அவருக்கு எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்று தெரியாத பொழுதும், தற்பொழுது உள்ள கோட்சார கிரகங்கள் குறிப்பிட்ட பாவகங்களுக்கு கோட்சார ரீதியான பலன்களை எவ்விதம் வழங்குகிறது என்று தெரியாத நிலையிலேயே, ஜோதிடர்கள் தனது அறிவுக்கு உட்பட்டு, இதற்க்கு முன் அறிந்த அனுபவத்திற்கு ஏற்ப பலாபலன்களை எடுத்துரைக்கின்றனர்.


 உண்மையில் சுய ஜாதக ரீதியாக நடக்கும் திசை தரும் பாவக பலன்களுக்கும், அதற்கும் எவ்வித சம்பந்தமும் இருக்காது , ஒருவேளை சொல்லும் பலன் பொருந்தி இருப்பின் "காகம் அமர பனம்பழம் விழுந்த" கதையாகவே இருக்கும். ஜோதிடர்கள் உறுதியாக அறுதியிட்டு கூற இயலாத நிலையில் பலன்கள் நடக்கலாம், என்ற வார்த்தையை உபயோகிக்கும் சூழ்நிலையை ஜோதிடர்களுக்கு வரக்கூடும்.


 குறிப்பாக பாரம்பரிய ஜோதிடத்தில் ராகு,கேது,சனி,செவ்வாய் மற்றும் சூரியன் திசைகளில் ஜாதகர் அதிக இன்னல்களுக்கு ஆர்படும் நிலையை தரும் என்ற ரீதியிலும் , சந்திரன்,சுக்கிரன்,குரு மற்றும் புதன் திசைகள் மிகுந்த யோக வாழ்க்கையை வழங்கும் என்ற ரீதியிலுமே பலன்களை "கணித்து" சொல்லுவதுண்டு அல்லது மேற்கண்ட கிரகங்கள் ஜாதகத்தில் எங்கு அமர்ந்திருக்கின்றனர்  என்ற நிலையை வைத்தும், ( ராசி மற்றும் அம்ச நிலை, சந்திரனுக்கு கோட்சார நிலை ) ஆட்சி,உச்ச,நட்பு,பகை மற்றும் நீட்ச நிலை கருத்தில் கொண்டும் ஜாதக பலன்களை நிர்ணயம் செய்கின்றனர், இதிலும் பல கருத்து வேறுபாடுகள் வருவதுண்டு, இன்னும் சிலர் நட்சத்திரம் மற்றும் சார பலம் என்றும் பல் வேறு கருத்துகளை சொல்வதுண்டு, எது எப்படி இருந்தாலும்  நமது ஜோதிட முறையில் நம்மை நம்பி வரும் ஒருவருக்கு சரியான உறுதியான முறையில் ஜாதக பலன் காணும் எளிய முறையினை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம்.



ஜாதகரின் விபரம்




லக்கினம் : தனுசு

ராசி : கும்பம்
நட்சத்திரம் : சதயம் 4ம் பாதம்

ஒருவருடைய ஜாதக அமைப்பில் லக்கினம் முதற்கொண்டு 12 பாவகங்கள் அவரின் வாழ்க்கை முறையினையும், வாழ்க்கையில் அடையும் வெற்றி தோல்வி, நன்மை தீமை யோக அவயோக பலன்களை நிர்ணயம் செய்கின்றது என்றால் அது மிகையில்லை.


 லக்கினம் ஜாதகரின் உடல் உயிர் நிலை பற்றியும், வளரும் சூழ்நிலையை பற்றியும், 2ம் பாவகம் ஜாதகரின் வாக்கு, தனம், குடும்பம் அடிப்படை கல்வி பற்றியும், 3ம் பாவகம் சகோதரர், எடுக்கும் முயற்சிகளில் வரும் வெற்றி வீரியம் பற்றியும், 4ம் பாவகம் தனது தாய், சொத்து,வீடு,வண்டி வாகன வசதி பற்றியும், ஜாதகரின் குண இயல்பு பற்றியும் உயர் கல்வி பற்றியும் ( பெண்கள் ஜாதகத்தில் தந்தையை பற்றியும் ), 5ம் பாவகம் தனது நினைவாற்றல் குல தெய்வ ஆசி, குழந்தை செல்வம் பற்றியும், தான் கற்ற கல்வியினால் வரும் யோக அமைப்பை பற்றியும், 6ம் பாவகம் தனது எதிரிகளால் வரும் நன்மை தீமை, உடல் நலம் நலமின்மை, கடன் பெறுவதால் வரும் யோக அவயோக நிலையை பற்றியும்.


7ம் பாவகம் தனது நண்பர்கள் வழக்கை துணை, கூட்டாளிகள், பொதுமக்கள் அதரவு, அரசியலில் ஜாதகர் பெரும் வெற்றி, வியாபர நிலையை பற்றியும், 8ம் பாவகம் ஜாதகருக்கு தீடீரென நிகழும் யோக அவயோக நிலையை பற்றியும் , ஆயுள் நிலையை பற்றியும், விபத்து மற்றும் சிகிச்சை பற்றியும், 9ம் பாவகம் ஆன்மீக பெரியோரின் ஆசியை பற்றியும், தான் செய்த பாக்கிய அமைப்பினால் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையை பற்றியும், சமுதாயத்தில் ஜாதகருக்கு கிடைக்கும் நர்ப்பெயர் பற்றியும், 10ம் பாவகம்  ஜாதகரின் தந்தையை பற்றியும் ( பெண்கள் ஜாதகத்தில் தாயை பற்றியும்) ஜாதகரின் கௌரவம் , ஜீவனம் , கர்ம நிலையை பற்றியும், 11ம் பாவகம் ஜாதகர் இந்த பிறவி எடுத்ததின் காரணம் பற்றியும் தனது நீடித்த அதிர்ஷ்டத்தை பற்றியும், மூத்த சகோதர அமைப்பை பற்றியும், இரண்டாவது திருமண வாழ்க்கை பற்றியும், 12ம் பாவகம் ஜாதகரின் நிம்மதி, உறக்கம், வாழ்க்கை துணையுடன் உண்டான அன்யோன்யம் மற்றும் சுக வாழ்வு பற்றியும் ஜாதகர் செய்யும் மிகப்பெரிய முதலீடுகள் பற்றியும், வாழ்க்கையின் இறுதியில் அவரது ஆன்மா பெரும் யோக நிலையை பற்றியும் நாம்  தெளிவாக தெரிந்துகொள்ள உதவும்.


மேற்கண்ட 12 பாவகங்கள் சுய ஜாதகத்தில் பெரும் வலிமைக்கேற்ப சம்பந்தபட்ட ஜாதகரின் வாழ்க்கை அமையும், மேற்கண்ட 12 பாவக நிலையை ஏற்று யோக அவயோக பலன்களை ஜாதகருக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் அமைப்புகள் வாரி வழங்கும், மேற்கண்ட 12 பாவக நிலையை  பற்றியும், கோட்சார ரீதியாக அந்த பாவகங்களுக்கு நவ கிரகங்கள் தரும் பலன்களை பற்றியும் துல்லியாமாக கணிதம் செய்தால், நம்மை நாடி வரும் அன்பர்களுக்கு தெளிவான ஜாதக பலன்களை உறுதியாக சொல்விட இயலும்.


இனி மேற்கண்ட ஜாதகருக்கு பலாபலன்களை நிர்ணயம் செய்வோம்.


ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :


1,3ம் வீடுகள் சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்.

2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சமபந்தம்.
6,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
11ம் வீடு அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட ஜாதகத்தில் நன்மையையும் யோகத்தையும் தரும்.

ஜாதகத்தில் பாதிக்கபட்ட நிலையில் இருக்கும் பாவகங்கள் :


8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன்  சம்பந்தம். ( 8ம் வீடு ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது நீண்ட ஆயுளை தரும் இருப்பினும் உடல் தொந்தரவுகளை அடிக்கடி தரும் )

9ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதக அமைப்பில் தீமையையும் அவயோகத்தையும் தரும்.

ஜாதக பொது பலன்கள் :


1,3ம் வீடுகள் சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு இலக்கின அமைப்பில் இருந்தும் 3ம் பாவக வழியில் இருந்தும் 80 சதவிகித யோக பலன்களை தரும் , ஜாதகருக்கு நல்ல உடல் நிலையையும், வளரும் சூழ்நிலையையும் , நிறைவான அறிவாற்றலையும், நீண்ட ஆயுளையும் இலக்கின அமைப்பில் இருந்து பெறுவார், லக்கினம் தனுசு ராசியாக வருவதும், இந்த ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியாக வருவதும், அது உபய நெருப்பு தத்துவ ராசியாக அமைவதும், ஜாதகருக்கு பரந்த விசாலமான மனதினை தரும், தனது எண்ணத்திலும் செயலிலும் தூய்மையை தரும், தனது சிந்தனையில் வரும் விஷயங்களை நடைமுறையில் காணும் யோகம் உண்டாகும், சமுதாயத்தில் எப்பொழுதும் நர்ப்பெயர் கிடைக்கும், ஆன்மீக  பெரியோர்களின் நல்லாசியும், வழிகாட்டுதலும் ஜாதகருக்கு எப்பொழுதும் கிடைத்து கொண்டே இருக்கும் , தனது பெற்றோர்கள் மற்றும் முன்னோர்கள்  செய்த புண்ணியத்தின் பலனை ஜாதகருக்கு 100 சதவிகிதம் யோகமாக தரும் இதன் வழியில் ஜாதகரின் முன்னேற்றம் அமையும் .


3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் அந்த மூன்றாம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியாகவும் ஸ்திர காற்று தத்துவ ராசியாக அமைவது ஜாதகரின் அதிர்ஷ்டத்தையும், எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெரும் யோகத்தையும் தரும், குறிப்பாக ஜாதகருக்கு தனது அறிவாற்றல் மூலம் மிகப்பெரிய யோக வாழ்க்கையை தரும், வியாபாரம் வெளிநாடுகளில் இருந்து வரும் பொருளாதார முன்னேற்றம், செல்வ சேர்க்கை மற்றும் செல்வ செழிப்பு, எதிரிகளை வெல்லும் ஆற்றல், நல்ல ஸ்திரமான மன நிலை, தைரியம், பயணங்களில் லாபம் மற்றும் முன்னேற்றம், வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் புதிய சூழ்நிலைகள், ஏஜென்சி துறையில் அபரிவிதமான முன்னேற்றம் என்ற அமைப்பில் யோக பலன்களை வாரி வழங்கும். 


2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து  இசையில் ஈடுபாடும் நல்ல ஞானத்தையும் தரும், திரைப்படம், நாடகம்,விளையாட்டு, பொழுது போக்கு போன்ற விசயங்களில் ஈடுபாட்டினையும், வெற்றியையும் வாரிவழங்கும், தனது குழந்தைகளால் வாழ்க்கையில் யோக அமைப்பை பெறுவார் நிறைவான செல்வ சேர்க்கையை பெரும் யோகம் உண்டாகும், மேலும் ஐந்த பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியாக வருவதும், அது மேஷ சர நெருப்பு தத்துவ அமைப்பாக வருவதும் யோக அமைப்பே, குறிப்பாக ஜாதகருக்கு சுய  கட்டுப்பாட்டினையும் , சிறந்த உடல் ஆரோக்கியத்தையும் தெளிவான வாக்கு வன்மையையும், இனிமையான பேச்சு திறனையும் சரளமாக வாரி வழங்கும்.


5ம் பாவக வழியில் இருந்து கலைகளில் வெற்றியும், கலைஈடுபாட்டினையும், தானியம் மற்றும் உணவு பொருட்களாலும், நீர்ம பொருட்களாலும் அதிக லாபத்தையும் , புத்திசாலித்தனமான நடவடிக்கையின் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பையும், தனது வாத திறமையினால் அனைத்தையும் வெல்லும் யோகம் உண்டாகும், தனது பேச்சு திறனால் அனைவரையும் மயக்கும் ஆற்றல் உண்டாகும், மேலும் தர்ம சிந்தனை, நல்ல குழந்தைகள், விளையாட்டு வீரர், தன்னம்பிக்கை மிகுந்த மன நிலை, இறை அருளின் கருணையை பரிபூரணமாக அனுபவிக்கும் யோகம், குல தேவதையின் கருணையை விரைவில் பெரும் யோகம் என ஜாதகர்க்கு மிகுந்த யோகத்தை வாரி வழங்கும்.


4,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சமபந்தம் பெறுவது, ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து கல்வியில் உயர்வு, கல்வி சார்ந்த விஷயங்களிலும் கல்வி நிறுவனங்களினாலும் லாபம், ஆய்வு மனப்பான்மை, பல திருத்தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு , ஏற்றுமதி இறக்குமதி  வியாபர விருத்தி, ஆன்மீக ஈடுபாடு என்ற அமைப்பில் யோகத்தை தரும், 9ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் பாவகமாக வருவதாலும் , 9ம் பாவகம் சிம்ம ஸ்திர நெருப்பு ராசியாக இருப்பதாலும் ஜாதகருக்கு ஆன்மீகத்திலும், இறை நிலையின் பரிபூரண கருணையும் நிச்சயம் உண்டாகும்.

12ம் பாவக வழியில் இருந்து வெளிநாடுகளில் இருந்து யோக வழக்கை, பயணங்களால் அதிக லாபம், வசதிமிக்க பொறுப்புகள் திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பெரிய தன சேர்க்கை, தொழில் மற்றும் இடமாற்றம் மூலம் அதிக லாபம், வெளி வட்டார பழக்க வழக்கங்களில் நர்ப்பெயரும் யோகமும் உண்டாகும் தன்மை , தனது அறிவாற்றல் மூலம் எவ்வித பிரச்சனைக்கும் தீர்வு காணும் புத்திசாலித்தனம் என்ற அமைப்பில் சுபயோக பலன்களை வழங்கும்.

6,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் வீடாகவும் உபய நில தத்துவ ராசியாகவும் இருப்பதால், ஜாதகருக்கு ஜீவனம் என்பது, மண் சார்ந்த தொழில் அமைப்பையும், இதன் வகை தொழில்களில் வெற்றிமேல் வெற்றியையும், ஜீவன மேன்மையும் தரும், தனது தந்தையின் மூலம் ஜாதகர் வாழக்கையில் நல்ல படிப்பினையை பெறுவார், அவர்களின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம், பெரும் அமைப்பை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சிறந்த பொருத்தமான வாழ்க்கை துணையை  தமது விருப்பம் போல் பெரும் யோகத்தை தரும், சிறந்த நண்பர்களும் நடப்பும் வாழ்க்கையில் சரியான நேரத்தில் கிடைக்கும், இதன் மூலம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் பெறுவார், அரசியலில் எதிர்பாராத வெற்றியை தரும் , பொதுமக்கள் ஆதரவு ஜாதகருக்கு எப்பொழுதும் உண்டு, ஜாதகருக்கு அரசியலில் வெற்றி, வியாபாரத்தில் வெற்றி, சமூகத்தில் நல்ல அந்தஸ்து என்ற நிலையில் யோக பலன்களை வாரி வழங்கும்.

10ம் பாவக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம் அல்லது தொழில் அமையும் , வியாபாரத்தில் அபரிவிதமான வளர்ச்சியை ஜாதகர் தொடர்ந்து பெரும் யோகத்தை தரும், பல் வகை தொழில் முன்னேற்றத்தை பெரும் யோகம் உண்டு, கம்பீரமான தோற்றமும், தீர்க்கமான வாத திறமையும் ஜாதகரின் வெற்றிக்கு வழிவகுக்கும், எந்த நிலையிலும் ஜீவன வழியில் இருந்து பின்னடைவை தராது, வெற்றிமேல் வெற்றி உண்டாகும்.

11ம் வீடு அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக அமைப்பிலேயே 200 சதவிகித யோகத்தை தரும், ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி, அனைத்திலும் லாபம், நல்ல  குணம் என்ற வகையில் பலன்களை வாரி வழங்கும், மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜாதகரின் 11ம் பாவகம் 7ம் ராசியாக வருவதும் அது துலாம் சர காற்று தத்துவ ராசியாக இருப்பதும் மிகுந்த யோக அமைப்பை தரும் நிலையாகும், இந்த பாவகத்தின் பலன் நடை பெரும் பொழுது ஜாதகர் செய்யும் விஷயங்கள் யாவும் 100 சதவிகித வெற்றியை தரும் என்றால் அது மிகையில்லை , சர காற்று தத்துவ ராசியின் தன்மையே மனிதர்களுக்கு சிறந்த அறிவாற்றலையும் திட்டமிடுதலையும் அதன் வழியில் நடந்து வாழ்க்கையில் வெற்றி பெறுதலையும் குறிக்கிறது.

8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தந்த போதிலும், அதற்க்கு இணையான பொருள் இழப்பை தரும் , குறிப்பாக பொருளாதரத்தில் ஏற்ற இறக்கங்களை ஜாதகர் அடிக்கடி கவனத்தில் கொள்வது நல்லது , ஜாதகரின் 8ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் வீடாக வருவதும், அந்த ராசி சர கடகமாக அமைவதும், ஜாதகரின் மன இயல்பில் வரும் மாற்றங்களை குறிக்கிறது, எடுத்துகாட்டாக தேவையற்ற மன கவலை ஜாதகரின் முன்னேற்றமான வாழ்க்கையை பதம் பார்க்கும், வீண் கவலைகளை தவிர்த்து எதிர்த்து நிற்பது ஜாதகருக்கு மிகுந்த நன்மையை தரும், தனது பெயரில் உள்ள சொத்து அமைப்புகளில் சற்றே கவனம் செலுத்துவதும் நல்லது, சிறு சிறு உடல் தொந்தரவுகளை தவிர்க்க இயலாது, இதனால் ஜாதகருக்கு நன்மையே உண்டாகும்.

9ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதக அமைப்பில் சற்றே பொருளாதார விரையத்தை கொடுக்கும் , ஜாதகரின் 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் வீடாக   வருவது இழப்பின் வீரியத்தை குறிக்கிறது மேலும் ஸ்திர நீர் ராசியாக இருப்பதால், ஜாதகருக்கு ஏற்ப்படும் இழப்பு அதிக நாள் மன நிம்மதியற்ற நிலையை காட்டுகிறது , இந்த காலகட்டங்களில் ஜாதகர் சற்றே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது , வாழ்க்கையை துணிவுடன் எதிர்கொள்ளவேண்டிய நேரமிது , 8,12ம் பாவக வழியில் இருந்து பலன்கள் நடை பெரும் பொழுது மட்டும் ஜாதகர் சற்றே கவனமுடன் இருப்பது நலம் தரும், திசை மற்றும் புத்திகளிலும், கோட்சார நிலைகளிலும் மேற்கண்ட பாவக பலன்கள் நடை முறைக்கு வரும் பொழுது எவ்வித பணியையும் மேற்கொள்ளாமல் இருந்தாலே போதும்.

ஜாதகருக்கு திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் எந்த எந்த பாவகங்களின் பலனை ஏற்று நடத்துகிறது என்று இனி பார்ப்போம் .

ராகு திசை : (பிறந்த தேதி முதல்  28/10/1961 வரையிலும் ) 

2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையையும்,  8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று தீமையையும் தந்திருக்கிறது .

குரு திசை : ( 28/10/1961 முதல் 28/10/1977 வரை )

9ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று குரு திசையானது பெரிய யோகத்தையும் தரவில்லை.

சனி திசை:( 28/10/1977 முதல் 28/10/1996 வரை) 

9ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சனி  திசையானது பெரிய யோகத்தையும் தரவில்லை.

புதன் திசை : ( 28/10/1996 முதல் 28/10/2013 வரை )

11ம் வீடு அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200 சதவிகித நன்மையையும், 4,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சமபந்தம் பெற்று 80 சதவிகித நன்மையையும் வாரி வழங்கி இருக்கிறது.

கேது திசை : (28/10/2013 முதல் 28/10/2020 வரை)

1,3ம் வீடுகள் சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200 சதவிகித யோக பலன்களை வழங்கி கொண்டு இருக்கிறது.

சுக்கிரன் திசை :(28/10/2020 முதல் 28/10/2040 வரை )

4,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சமபந்தம் பெற்று 80 சதவிகித நன்மையையும் வாரி வழங்கும்.

சூரியன் திசை : ( 28/10/2040 முதல் 28/10/2046 வரை )

11ம் வீடு அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200 சதவிகித நன்மையை வாரி வழங்கும்.

சந்திரன் திசை : ( 28/10/2046 முதல் 28/10/2056 வரை)

1,3ம் வீடுகள் சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200 சதவிகித யோக பலன்களை  வாரி வழங்கும்.

செவ்வாய் திசை : ( 28/10/2056 முதல் 28/10/2063வரை)

8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை தரும் .

ஆக மேற்கண்ட ஜாதகத்தில் செவ்வாய்,குரு,சனி மகா திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஜாதகருக்கு தாம் தொடர்பு கொண்ட பாவக அமைப்பில் இருந்து அவயோக பலன்களையும்.

ராகு,புதன்,கேது,சுக்கிரன்,சூரியன் மற்றும் சந்திர மகா திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஜாதகருக்கு தாம் தொடர்பு கொண்ட பாவக அமைப்பில் இருந்து யோக பலன்களையும் வழங்கிக்கொண்டு இருப்பது உறுதியாகிறது .

எனவே ஜாதகர்  செவ்வாய்,குரு,சனி மகா திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலகட்டங்களில் சற்றே எச்சரிக்கையாகவும், அவைகள் தொடர்பு பெரும் பாவக சம்பந்தம் பெற்ற விஷயங்களில் ஈடுபடாமலும் இருந்தாலே ஜாதகருக்கு நன்மையே உண்டாகும் , மேற்கண்ட பாவகங்களுடன் கோட்சார கிரக அமைப்பை கருத்தில் கொண்டு பலன் காணும் பொழுது ஜாதகரின் வாழ்க்கையை பற்றி தெளிவாக ஜாதக பலன்களை சொல்லவிட இயலும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
9842421435
Jothidadeepam@gmail.com

புதன், 30 அக்டோபர், 2013

ஒருவர் சுய ஜாதக ரீதியாக, ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெறவும்? பங்கு வர்த்தக தொழில் மூலம் நல்ல வருமானம் பெறவும், யோகம் தரும் பாவகங்கள் எது என்று சொல்ல இயலுமா ?



நிச்சயமாக சொல்ல இயலும் அன்பரே !

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் அபரிவிதமான வருமானம் பெற களத்திர ஸ்தானம் மிகுந்த வலிமை பெற்று இருப்பது அவசியம், அதாவது களத்திர ஸ்தானம் வெளிவட்டார தொடர்புகளையும், பொதுமக்களையும், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானத்தையும், வேற்று இன மக்கள் மூலம் வரும் லாபத்தையும் குறிக்கும் எனவே சுய ஜாதகத்தில், சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் சர ராசிகளுடன் தொடர்பு பெறுவது சிறப்பு .

களத்திர ஸ்தானம் சர ராசியுடன் தொடர்பு பெற்று 100 சதவிகித நன்மை தரும் அமைப்பில் இருந்தால் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய தன சேர்க்கையை வாரி வழங்கிவிடும், மேலும் ஜாதகர் செய்யும் தொழிலானது விரைவில் மிக பிரபலாமாக மக்கள் மத்தில் சென்றடையும் , ஜாதகர் விளம்பரம் எதுவும் செய்யாமலேயே தனது வியாபரத்தை பன்மடங்கு வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லும் திறமை கொண்டவராக இருப்பார், இவருடன் தொழில் தொழில் செய்யும் அன்பர்கள் யாவரும் நேர்மை மிகுந்தவர்களாகவும் உண்மையாக இவர்களுக்கு உழைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

களத்திர ஸ்தானம் ஸ்திர ராசியுடன் தொடர்பு பெற்று 100 சதவிகித நன்மை தரும் அமைப்பில் இருந்தால் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில், படிப்படியான நிலையான வளர்ச்சியை தரும், தனது தொழிலை ஜாதகர் பல தலைமுறைக்கு நடத்தும் தன்மையுடன், சரியான திட்டமிடுதலுடன் செம்மையாக தொழில் நிர்வாகம் செய்வார் , இவர்களின் முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது, தான் செய்யும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் வாழையடி வாழையாக செழித்தோங்கும் தன்மையுடன், சிறப்பான தொழில் முன்னேற்றத்தை பெறுவார்கள், இவர்களின் சிந்தனையெல்லாம் பல தலைமுறைக்கு தனது தொழில் சீரும் சிறப்புமாக நடைபெறும் அளவிற்கும் சரியான திட்டமிடுதலுடன், தொலை நோக்கு பாரவையுடன் இருக்கும்.

களத்திர ஸ்தானம் உபய ராசியுடன் தொடர்பு பெற்று 100 சதவிகித நன்மை தரும் அமைப்பில் இருந்தால் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் தொய்வில்லாத சீரான வருமானத்தை பெரும் அமைப்பிலான வியாபாரங்களை  செய்வார், அதிக ரிஸ்க் இல்லாத தொழில்களாகவும், நிர்ணயக்கபட்ட வருமானம் உள்ள தொழில்களை தேர்ந்தெடுத்து செய்யும் தன்மை கொண்டவர்கள், இந்த அமைப்பை பெற்றவர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் இழப்பு மற்றும் நஷ்டம் என்பதே இருக்காது, சீரான  நிலையான வருமானத்தை ஜாதகரின் வாழ்நாள் முழுவதும் பெற்றுகொண்டே இருக்கும் விதத்தில் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில் அமையும்.

மேற்கண்ட அமைப்பில் களத்திர ஸ்தானம் அமைந்த போதிலும், களத்திர ஸ்தானம் சுய ஜாதக அமைப்பின் படி பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று விட்டல் ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது , மேற்கண்ட பலன்களுக்கு  எதிர்மறையான பலன்களை வழங்கிவிடும், தீய பலன்கள் 200 மடங்கு  நடை பெரும்.

மேலும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகமும், சுக ஸ்தானமான  4ம் பாவகமும் நல்ல நிலையில் இருப்பது ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் மிகுந்த வற்றி வாய்ப்பை வாரி வழங்கும் .

பங்கு வர்த்தக தொழில்களில் ஜாதகர் நிறைவான வருமானத்த பெற , சுய ஜாதகத்தில் மற்றவர் பணத்தை குறிக்கும் 6ம் பாவகமும், திடீர் அதிர்ஷ்டம் மற்றும் வர்த்தகத்தால் வரும் வருமானத்தை தரும் 8ம் பாவகமும், முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தை குறிக்கும் 12ம் பாவகமும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் மேற்கண்ட அமைப்பில் 6,8,12ம் பாவகங்கள் ஒருவர் ஜாதகத்தில் நல்ல வலிமையுடன் 100 சதவிகிதம் சிறப்பாக இருந்தால், பங்குவர்த்தக தொழில்களில் கொடிகட்டி பறக்கலாம், அபரிவிதமான வருமானத்தை பெறலாம்.

மாறாக மேற்கண்ட 6,8,12ம் பாவகங்கள் வலிமை இழந்தோ, தனது பாவகத்துடன் சம்பந்தம் பெற்றோ, விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருந்தாலோ , பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று இருந்தாலோ, ஜாதகர் பங்கு வர்த்தக தொழில் பக்கம் தலை வைத்து படுப்பது கூட ஆகாது, மீறி செய்தால்  ஜாதகரின் "கெளனபீடம்"
(கோவணம்) வரை உருவி விடும் .

எனவே எந்த ஒரு ஜாதகரும் சுய ஜாதக ரீதியாக தனக்கு ஏற்ற ஜீவனம் எதுவென்பதை நல்ல ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று செய்வது சிறப்பு, அதிலும் தற்பொழுது நடை பெரும் திசை மற்றும் புத்திகள் நல்ல யோக பலன்களை  வழங்குவது நல்லது, சுய ஜாதகம் மட்டும் வலிமை பெற்று தற்பொழுது  நடைபெறும் திசை மற்றும் புத்தி  சிறப்பாக இல்லையெனில் ஜாதகர் செய்யும் தொழில் மிகப்பெரிய வெற்றியை தர வாய்ப்பில்லை என்பது மட்டும் உண்மை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
9842421435

லக்கினம் முதல் களத்திர ஸ்தானம் வரை கிரகங்கள் அமர்ந்து, கால சர்ப்ப தோஷம் ஏற்ப்பட்டாலும், லக்கினத்தில் அமர்ந்த ராகு அல்லது கேது நன்மையை செய்யுமா ?



கேள்வி : 

லக்கினம் முதல் களத்திர ஸ்தானம் வரை கிரகங்கள் அமர்ந்து, கால சர்ப்ப தோஷம் ஏற்ப்பட்டாலும், லக்கினத்தில் அமர்ந்த ராகு அல்லது கேது நன்மையை செய்யுமா ?

பதில் : 

சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு உற்பட்ட பாகைக்குள் அமரும் ராகுவோ அல்லது கேதுவோ , லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மையை செய்வார்கள், இதில் எவ்வித சந்தேகமும் இல்லை, இதில் கால சர்ப்ப தோஷத்திற்கு இடமில்லை, இங்கே லக்கினத்தில் அமரும் ராகு கேது லக்கினத்தை 100 சதவிகித வலிமையை தந்துவிடுவார்கள், ஜாதகரின் லக்கினம் சரமாக அமைந்தால் செயல்பாடுகளில் வேகத்தையும், ஸ்திரமாக அமைந்தால் நிலையான வாழ்க்கையையும், உபயமாக அமைந்தால் தனது வாழ்க்கையை பிறருக்கு உபயோகப்படும் விதத்திலும் , ஜாதகரின் வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடும்.

மேலும் லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்து, லக்கினம் நெருப்பு தத்துவ ராசி என்றால் ஜாதகர் மிகுந்த உடல் வலிமையுடன் சுறு சுறுப்பாக செயல்படும் தன்மையையும், நீண்ட ஆயுளையும், எவ்வித உடல் துன்பத்தையும் ஏற்கும் மன வலிமையை தரும், உடல் மற்றும் மனம் சிறப்பாக செயல்பட்டு நினைத்ததை அடையும் தன்மையை தரும், குறிப்பாக லட்சிய புருஷராக ஜாதகர் திகழ்வார், நெருப்பு தத்துவ ராசியில் நன்மை தரும் அமைப்பில் அமரும் ராகு கேது சிறந்த நிர்வாக திறமையை தரும்.

லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்து, லக்கினம் நில தத்துவ ராசிஎன்றால், ஜாதகரின் உடல் நிலை எப்பொழுது சீராக இருக்கும் தன்மையை பெற்று விடும், ஜாதகரின் குணம் மிகவும் பண்பாடு உடையதாகவும், பொறுமையின் சின்னமாகவும் அமைந்து விடும், தனது தெளிவான சிந்தனையாலும், திட்டமிடுதாலும் வாழ்க்கையில் மிக பெரிய சொத்து சுகங்களை நிர்வகிக்கும் யோகத்தை தரும், நில தத்துவ ராசியில் நன்மை தரும் அமைப்பில் அமரும் ராகு கேது சிறந்த உடல் நிலையையும் பொருள் ஆதாயத்தையும் தரும்.

லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்து, லக்கினம் காற்று தத்துவ ராசியாக அமைந்தால், ஜாதகரின் அறிவாற்றலே மிகுந்து நிற்கும் , தனது அறிவாற்றலால் சாதிக்க இயலாத காரியத்தை கூட எவரும் எதிர்பார்க்காத விதத்தில் சாதிக்கும் தன்மையை தரும் , சாய கிரகங்கள் காற்று தத்துவ ராசியில் சிறப்ப செயல்படும் தன்மை உண்டாகும் , எவ்வித பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வை சொல்லும் சிறந்த அறிவு ஆற்றலை தரும் அமைப்பாக இதை கருதலாம், எந்த ஒரு ஜாதகத்திலும் ராகு அல்லது கேது காற்று தத்துவ ராசியில் நல்ல நிலையில், எந்த ஒரு பாவகத்திலும்  அமர்ந்து இருப்பது, ஜாதகருக்கு வெற்றி மேல் வெற்றியை தரும் அமைப்பாகும்.

லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்து, லக்கினம் நீர் தத்துவ ராசியாக அமைந்தால் மனித வாழ்க்கையின் பரிபூரண நிலையை அனுபவிக்க வைக்கும், பூ உலக வாழ்க்கையில் சகல யோகங்களையும் வாரி வழங்கும் தன்மையை தரும் , ரத கஜ துரகதிபதிகளுடன் மேன்மைதரும் அரசியல் வெற்றியையும் தரும், சகல யோகங்களையும் தவிர்த்து , ஆன்மீக வாழ்க்கையில் எளிமையான முறையில் இறை நிலையை அடையும் யோக வாழ்க்கையை தரும் , ஆக நீர் ராசியில் ராகு கேது நல்ல நிலையில் அமர்வது மேற்கண்ட யோக பலன்களை தரும் , ஒரு வேலை நீர் ராசியில் ராகு கேது பாதிப்பான பலனை தரும் நிலையில் அமர்ந்துவிட்டால் ஜாதகர் போதை பொருட்களுக்கு அடிமையாகும் தன்மையை தரும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ராகு கேது லக்கினத்தில் ( அதாவது லக்கினம் ஆரபிக்கும் பாகையில் இருந்து, லக்கினம் முடிவடையும் பாகைக்குள் ராகு கேது  இருக்க வேண்டும் ) அமர்ந்திருக்கிறது என்றால் நிச்சயம் லக்கினத்திற்கு, 100 சதவிகித வெற்றியை தரும் , லக்கினத்திற்கு எதிர்பாவகமாக  வரும் களத்திர ஸ்தானத்தில் அமரும் ராகுவோ அல்லது கேதுவோ சிறப்பான நன்மைகளை தருவார்கள் என்று எதிர்பார்க்க இயலாது , களத்திர  பாவக அதிபதியின் தன்மையை வைத்தே களத்திர ஸ்தானம் நன்மையை தருமா ? தீமையை தருமா ? என்று நிர்ணயம் செய்ய இயலும்.

 எடுத்து  காட்டாக களத்திர ஸ்தான அதிபதி வளர் பிறை சந்திரன், குரு, சுக்கிரன், சூரியனுடன் சேராத புதன் என்றால் களத்திர ஸ்தானத்தை 100 சதவிகிதம் கெடுத்து அவயோக பலன்களை வாரி வழங்கிவிடும், மாறாக களத்திர ஸ்தானாதிபதி செவ்வாய்,சூரியன்,சனி, தேய்பிறை சந்திரன், சூரியனுடன் சேராத புதன் என்றால் களத்திர ஸ்தானம் 100 சதவீதம் வலிமை பெற்று களத்திர ஸ்தான அமைப்பில் இருந்து 100 சதவிகித யோக வாழ்க்கையை தந்துவிடும் . 

முதலில் ராகு கேது என்ற கிரகம் சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு உற்பட்ட பாகைக்குள்தான், அமர்ந்திருக்கிறார்களா ? என்று தெளிவாக தெரிந்து கொண்ட பிறகே மேற்கண்ட முறையில் பாவக வலிமையை நிர்ணயம் செய்ய வேண்டும், ராகு கேதுவுக்குள் அனைத்து கிரகம் அடங்கி இருக்கிறது என்பதற்காக ராகு கேது சர்ப்ப தோஷத்தை தரும் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது , எது எப்படியோ லக்கினத்தில் அமரும் ராகு கேது லக்கினத்தை  100 சதவிகிதம் வலிமை பெற செய்வார்கள் என்பது மட்டும் உறுதியானது  உண்மையானது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

10 பொருத்தம் அமைந்தும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாததிர்க்கு காரணம் என்ன ?



கேள்வி :

திருமணம் செய்வதற்க்கு ஆலோசனை கேட்ட போது ....இரண்டு ஜாதகத்துக்கும் 10 பொருத்தம் உள்ளது.வசிய பொருத்தம் உள்ளது..அருமை பெருமை என்று சொன்னார்கள் ஜோதிடர்கள். அது மட்டும் இல்லாமல் ஆண் ஜாத்கத்தில் 7 வது இடத்தில் சனி உள்ளது பெண் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சனி உள்ளது..செம பொருத்தம் என்று சொன்னார்கள்.

கல்யாணம் முடிந்து ஒரு வருடம் ஆகி விட்டது...வசிய பொருத்தம் எல்லாம் ஒரு 60 நாள் தான் வேலை செய்தது. ஏக பட்ட முரண் பாடுகள். வாழ்க்கையே வெறுத்து விட்டது...இத்தனைக்கும் என் சித்தப்பா 5,6 இடங்களில் ஜோதிடம் பார்த்தார், உண்மையில் இரு ஜாதகத்தில் யாரிடம் தான் பிரச்சினை உள்ளது.? தயவு செய்து விளக்கவும்

பதில் :

 பொதுவாக நட்சத்திர பொருத்தம் என்பது இல்லற வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ண நலன்களையும் வாரி வழங்குவதில்லை, குறிப்பாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை பெற்று அமையாத பொழுது, வரன் வதுவின் ஜாதகத்தில்  நட்சத்திர பொருத்தம் 10க்கு 10 அமைந்தாலும் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய சிறிதும் வாய்ப்பில்லை, தம்பதியரின் ஜாதக அமைப்பில் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய அடிப்படையில் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடும், களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் வீடும் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெற்று மிகவும் நல்ல வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, ( குறிப்பாக திருமணம் நடைபெறும் தருணத்தில் சுய ஜாதகத்திலும் சரி, கோட்சார அமைப்பிலும் சரி ) அது மட்டுமல்ல இல்லற வாழ்க்கையில் இணைந்த பிறகு தம்பதியருக்கு நடைமுறையில் வரும் நவகிரகங்களின்  திசை மற்றும் புத்திகள், இருவருக்கும் சுய ஜாதக அமைப்பில் வலிமை பெற்ற பாவக பலனை  ஏற்று நடத்துவது நடத்துவது தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றியையும் மிகுந்த யோகத்தை தரும் .

இன்றைய பதிவில் தங்களது ஜாதகத்தையும், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தையும் இந்த ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் :

தங்களது ஜாதக நிலை 

தங்களது ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :

2,5,8,11ம் வீடுகள் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், தங்களது ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் ஆகும்.

தங்களது ஜாதக அமைப்பில் பதிக்க பட்ட நிலையில் இருக்கும் பாவகங்கள் :

1,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் அதிக தீய பலன்களை வழங்கும் அமைப்பாக கருதலாம்.

தங்களது ஜாதகத்தில் தற்பொழுது நடக்கும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் :

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலனையே செய்துகொண்டு இருக்கிறது.



தங்களது வாழ்க்கை துணையின் ஜாதக நிலை 

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :

1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 2,3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகத்தில் சிறந்த அமைப்பு.

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதக அமைப்பில் பதிக்க பட்ட நிலையில் இருக்கும் பாவகங்கள் :

6ம் வீடு எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 5,8,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் கடுமையான பாதிப்பை தரும் அமைப்பாக கருதலாம்.

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் தற்பொழுது நடக்கும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் :

3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது சிறப்பான அம்சம், ஆனால் தற்பொழுது நடந்துகொண்டு இருக்கும் கோட்சார பலன்கள் சிறப்பாக இல்லை.



மேற்கண்ட இரண்டு ஜாதக அமைப்பில் தங்களது ஜாதக அமைப்பில் லக்கினம் என்ற பாவகம் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களது வாழ்க்கையில்  மன நிம்மதியை குலைக்கும் விதமான பலன்களை வழங்கும், 6ம் வீடு விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தேவையில்லாத விஷயங்கள் தங்களுக்கு எதிராக உருவெடுத்து தங்களது மன நிம்மதியை பதம் பார்க்கும், 10ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜீவன வழியில் இருந்து வரும் இன்னல்களை அதிகரிக்கும், 12ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது இல்லற வாழ்க்கையையும் அதனால் வரும் பிரச்சனைகளால், மன நிம்மதியை குறைக்கும்.

3,9ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது 200 மடங்கு தீமையை தரும் அமைப்பாக கருதலாம் எடுத்துகாட்டாக, 9ம் பாவக வழியில் இருந்து தேவையில்லாமல் மற்றவர்களிடம் அவ பெயரை பெற்று தரும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகள் யாவும் தோல்வியை தரும் .

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதக அமைப்பில் 5ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது குல தேவதை சாபத்தையும், திருமண வாழ்க்கையில் நிம்மதி அற்ற நிலையை தரும்.

8ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தனது வாழ்க்கை துணையின் அமைப்பில் இருந்து வரும் இன்னல்களையும், இழப்புகளையும் தரும்.

11ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தனது வாழ்க்கையில் வரும் அதிர்ஷ்டங்களை, நல்ல வாய்ப்புகளை தவிர்க்கும் தன்மையை தரும்.

6ம் வீடு எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது உடல் ரீதியான பிரச்சனைகளையும், வயிறு சம்பந்தபட்ட தொந்தரவுகளையும் தரும் ( தனது வாழ்க்கை துணையை சிறப்பாக வைத்திருக்க உதவுவது 6ம் பாவகமே, இந்த 6ம் பாவகம் பாதிப்பது நல்லதல்ல )

12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மன நிம்மதியையும், திருமண வாழ்க்கையில் அதிக இன்னல்களையும் தரும் .

தற்பொழுது தங்களது வாழ்க்கை துணையின் ஜாதக அமைப்பில் தற்பொழுது நடக்கும் திசையில், கோட்சார பலன்கள் மிகவும் தீய பலன்களை தந்து கொண்டு இருப்பது நல்லதல்ல இது எதிர் வரும் 06/11/2014 வரையில் நடை முறையில் உள்ளது .

தங்களது இருவரது ஜாதக அமைப்பிலும் முக்கியமான பாவகங்கள் பாதிக்க பட்டு இருப்பது மிகுந்த பாதிப்பை தரும் அமைப்பாக கருதலாம், குறிப்பாக எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தான பலனை தருவது 200 மடங்கு தீமையை செய்யும்.

சனியை வைத்தெல்லாம் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்ய இயலாது, உண்மையில் தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் துலாம் ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் சனி பகவன் அமர்ந்திருக்கிறார்.

மேற்கண்ட ஜாதகங்களின் முழு பலன்களையும் தெளிவாக தெரிந்து கொள்ளவும், ஜாதக ரீதியான சரியான தீர்வை பெறவும், அலைபேசியில் முன் அனுமதி பெற்று ஜோதிட ஆலோசனை பெற்று கொள்ளுங்கள் .

ஒருவருடைய திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து வைப்பது 10 பொருத்தம் அல்ல, நல்ல நிலையில் அமைந்திருக்கும் பாவக வலிமையே என்றால் அது மிகையில்லை, நட்சத்திர பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் பொழுது இது மாதிரியான பாதிப்புகள் வருவது இயற்கையே, ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு திருமணம் செய்தால் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
 jothidadeepam@gmail.com

வெள்ளி, 25 அக்டோபர், 2013

ஒரு கிரகம் தனது திசையில் சுய புத்தியில் நன்மையை செய்தால்,மற்ற புத்திகளில் தீமையை மட்டுமே செய்யுமா?



கேள்வி :

" ராகு சுயபுத்தியில் நல்ல பலனை வழங்கினால் பின்பு வரும் மற்ற புத்திகளில் தீய பலன்களை தருமா ? அல்லது ஒரு தசா சுயபுத்தியில் அதிகமான நன்மையை வழங்குகிறது என்றால் பிறகு வரும் புத்திகள் மிகப்பெரிய கெடுதலை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டியதில்லை "

என்பது உண்மையா? இந்த ஜாதகத்தை உங்களது பாணியில் விளக்கி தெளிவை கொடுக்க முடியுமா?   ஆள் ஆளுக்கு ஒன்னா சொன்னா மனுசன் எதை நம்புறது ?

பதில் :

பொதுவாகவே பாரம்பரிய ஜோதிடத்தில் இந்த குழப்பங்கள் அதிகம் வருவது உண்டு, எடுத்துகாட்டாக ஒரு கிரகம் தனது திசையில் தனது புத்தியில் யோக பலன்களையும் நன்மையையும் வழங்கினால் மற்ற புத்திகளில் தீமையை செய்யும் என்று தானும் குழம்பி ஜோதிடம் பார்க்க வந்தவரையும் கிறுக்கு பிடிக்க வைப்பதில் போலி ஜோதிடர்களுக்கு நிகர் அவர்களே !

தாங்கள் கேட்ட கேள்வியில் ராகு என்ற கிரகம் " சுய புத்தியில் அதிக நல்ல பலன்களை செய்தால், பிறகு வரும் புத்தியில் மிகப்பெரிய கெடுதலை தரும் இதில் எவ்வித சந்தேகம் வேண்டியதில்லை" என்று சொல்வதாக குறிப்பிட்டு இருந்தீர்கள், ஒரு வேலை நவ கிரகங்கள் போலி ஜோதிடரிடம் நேரில் வந்து      " நான் எனது புத்தியில் நன்மை செய்துவிட்டேன் எனவே இனி வரும் புத்திகளில் மிகப்பெரிய கெடுதலையே செய்வேன்" என்று கையில் அடித்து சந்தியம் செய்திருக்குமோ ? என்ற சந்தேகம் தோன்றுகிறது  நண்பரே !

இதை போன்ற மூட நம்பிக்கைகளை நம்பி தனது வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய பலவிஷயங்களை தவிர்த்து, ஜாதகத்தை காரணம் கட்டிக்கொண்டு வீண் கதை பேசிக்கொண்டு  இருப்பவர்களை விடுத்து, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வே ஜோதிடதீபம் பரிந்துரை செய்கிறது, இந்தமாதிரியான ஜோதிட பலன்கள் எப்படி சொல்கிறார்கள் என்பதே தெரியவில்லை நண்பரே !

இந்த இடத்தில் நான் ஒரு உதாரண ஜாதகம் கொண்டு தங்களுக்கு விளக்க கடமை பட்டுள்ளேன், அதாவது ஒருவரின் சுய ஜாதகத்தில் ஒரு திசை பலனை நடத்தும் பொழுது அந்த கிரகம், அவரது ஜாதகத்தில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது  என்ற விஷயம் தெரியாத பொழுது, போலி ஜோதிடர்களுக்கு வாயில் வந்ததை பலனாக சொல்லி, ஜாதகம் காண வந்தவரை மண்டை காய வைப்பதுண்டு, கொஞ்சம் தங்களுக்கு விழிப்புணர்வு இல்லை எனில் , நவகிரகங்களுக்கு தான் தான் அதிபதி, நான் சொல்வதைத்தான் நவகிரகங்கள் தங்களுக்கு பலனாக தரும் என்று தங்களுக்கு கிலியை ஏற்படுத்தவும் செய்வார்கள் , இதற்க்கு ஒரு படி மேலே சென்று சிலர், கிரகங்களை அக்டிவேசன், டிஅக்டிவேசன் செய்பவர்களும் உண்டு. 

 தாங்கள் வினவிய வினாவில் சிறிதும் உண்மை இல்லை அன்பரே! எடுத்துகாட்டு ஜாதகத்தை இனி பார்ப்போம்.



மேற்கண்ட துலாம் இலக்கின ஜாதகருக்கு தற்பொழுது கேது திசையில் கேது புத்தி  நடை பெற்று கொண்டு இருக்கிறது ( 25/05/2013 முதல் 21/10/2013 வரை ) தற்பொழுது நடை பெற்று கொண்டு இருக்கும் கேது திசையானது 7,11ம் வீடுகள் முறையே  ஜீவன ஸ்தானமான 10 ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவது, ஜாதகருக்கு ஜீவன ரீதியாக அபரிவிதமான முன்னேற்றத்தை  தரும் அமைப்பு .

 மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் என்பது சர நீர் தத்துவ ராசியாக இருப்பதும், அது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் பாவகமாக வருவது சிறந்த விஷயமே, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் பாவகம் ஜாதகருக்கு ஜீவன ஸ்தானமாக வருவதால் இந்த கேது திசை  காலத்தில் ஜாதகருக்கு வீடு,மண்,மனை, வண்டி,வாகனம், என்ற அமைப்பில் மிகுந்த  யோக பலன்களையும் அதன் வழியில் தொழில் முன்னேற்றத்தையும்  தரும் இங்கே கேது திசை கேது புத்தி ஜாதகருக்கு, ஜீவன ஸ்தான அமைப்பில் நன்மையை செய்கிறது .

கேது திசையில் அடுத்து வரும் சுக்கிரன் புத்தி 1,3வீடுகள் சகோதர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றும், 2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையையும் ,

கேது திசையில் சுக்கிரனுக்கு அடுத்து வரும் சூரியன் புத்தி 06,09வீடுகள் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும்.

கேது திசையில் சூரியனுக்கு அடுத்து வரும் சந்திரன் புத்தி 05ம் வீடு பூர்வ புண்ணியமான புத்திர  ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும்.

கேது திசையில் சந்திரனுக்கு அடுத்து வரும் செவ்வாய் புத்தி 12ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும்.

கேது திசையில் செவ்வாய்க்கு அடுத்து வரும் ராகு புத்தி 1,3வீடுகள் சகோதர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும்.

கேது திசையில் ராகுக்கு அடுத்து வரும் குரு புத்தி  05ம் வீடு பூர்வ புண்ணியமான புத்திர  ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும்.

கேது திசையில் குருவுக்கு அடுத்து வரும் சனி புத்தி 2,4,7,8,10,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும்.

கேது திசையில் சனிக்கு அடுத்து வரும் புதன் புத்தி 7,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையையும் செய்கின்றது.

மேற்கண்ட ஜாதக அமைப்பை பார்க்கும் பொழுது ஜாதகருக்கு கேது திசையில் செவ்வாய் புத்தி  ஒன்று மட்டுமே தீமையை செய்கிறது, மற்ற அனைத்து புத்திகளும் நன்மையையே வாரி வழங்குகிறது, தான் ஏற்றுகொண்ட பாவகத்தின் தன்மைக்கு ஏற்ப்பவே ஒரு கிரகம் தனது திசையிலோ புத்தியிலோ நன்மை தீமை பலனை நடத்துகிறது, ஆக ஒரு திசையான தனது சுய புத்தியில் நன்மையை செய்தால் மற்ற புத்த்திகளில் தீமையை செய்யும் என்பது முற்றிலும் தவறான கருத்து , எனவே ஒரு கிரகம் தான் ஏற்று கொண்ட பாவகத்தின் தன்மையை பலனாக நடத்துகிறது என்பது உறுதியாகிறது , மேலும் மற்ற புத்திகளும் தான் ஏற்றுகொண்ட பாவகத்தின் தன்மையையே பலனாக தருகிறது என்பதே முற்றிலும் உண்மை .

தாங்கள் கேட்ட கேள்விக்கு இது தக்க பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன், மேலும் தனது சுய புத்தியில் ஒரு கிரகம்  நன்மையை செய்தால் அதன் பிறகு வரும் அனைத்து புத்திகளிலும் தீமையை செய்யும் என்று சொல்வது ஜோதிட அறிவு சிறிதும் இல்லாத மடையர்கள் சொல்லும் வெறும் வாய் ஜாலமே , இதனை நம்பிக்கொண்டு தங்களது இனிமையான எதிர்காலத்தை சூன்ய நிலைக்கு எடுத்து சென்று விடாதீர்கள் அன்பர்களே !...

ஒரு திசையோ அல்லது புத்தியோ எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்ற கணிதம் தெரியாத நிலையிலும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களின் நிலையை பற்றியே அதன் வலிமையை பற்றியோ, தெளிந்த ஜோதிட அறிவு அற்ற நபர்களால் மட்டுமே மேற்க்கண்ட குழப்பம் விளைகிறது, எனவே சிறந்த ஜோதிடரை நாடி நலம் பெறுங்கள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com

ராகுகேது ஏன் எப்போதும் ரிவர்ஸ்கியர்ல் வண்டி ஓட்டுகிறார்கள் ?



கேள்வி :

ராகு கேது என்பது உண்மையில் என்ன? இவர்கள் ஏன் எப்போதும் ரிவர்ஸ் கியர்ல் வண்டி ஓட்டுகிறார்கள் ? அறிவியல் ரீதியாக விளக்கம் தர முடியுமா?

பதில் :

ஒரு  நான்கு சக்கர வாகனத்தை முன்னால் இயக்க எப்படி 5 கியர் இருக்கிறதோ, அதே போல் பின்னல் இயக்க ரிவேர்ஸ் கியர் ஒன்று உண்டு, இவை அனைத்தும் சரியாக இயங்கினால் மட்டுமே வாகனம் முன்னும் பின்னும் இயக்க முடியும், ரிவேர்ஸ் கியர் இல்லை எனில் வாகனத்தை முனால் மட்டுமே இயக்க முடியும் அது மிகவும் கடினம் மேலும் பல இடையூறுகள் ஏற்ப்படும், மேற்கண்ட அமைப்பில் ஒரு வாகனத்திர்க்கே ரிவேர்ஸ் கியர் தேவை படும் பொழுது 6 அறிவு கொண்ட மனிதனுக்கு ராகு கேது எனும் இரண்டு சாயா கிரகங்களும் எதிர் வட்ட பாதையில் சஞ்சாரம் செய்யும் பொழுதே நான்கு சக்கர வாகனத்தை போன்று , மனித வாழ்க்கை முழுமை பெறுகிறது.

பொதுவாக ராகு கேது கிரகங்கள் என்பது சாய கிரகம் ஆகும் ( உருவம் அற்ற தன்மை ) சூரியனை சுற்றி எதிர் வட்ட பாதையில் எப்பொழுதும் நிலையாக சுற்றி வந்துகொண்டு இருக்கும் காந்த அலை பாதைகள், எனவே நமது ஜாதகங்களை எதிர் திசையில் சஞ்சாரம் செய்து நன்மை தீமை பலன்களை எவ்வித பாகுபாடுகள் இன்றி வாரி வழங்கி கொண்டு இருக்கிறது, மேலும் ராகு கேது எனும் சாயா கிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் பலன்களை வழங்குவதில், மற்ற கிரகங்களின் தன்மையை போல் அன்றி தனிப்பட்ட சிறப்பை பெற்று இருப்பதை எவராலும் மறுக்க இயலாது .

குறிப்பாக ராகுவோ அல்லது கேதுவோ ஒருவரின் சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்கிறதோ அந்த பாவகத்தின் தன்மையை முழுமையாக தானே ஏற்று நடத்தும் வலிமையை இயற்கையாக பெற்று விடும் , இதனுடன் சேர்ந்த கிரகத்தின் தன்மையினையும், பார்த்த கிரகத்தின் தன்மையையும் தானே ஏற்று நடத்தும் என்பதனையும் இங்கே குறிப்பிட வேண்டியது அவசியம், ஆக மற்ற கிரகத்திற்கு இல்லாத  தனி தன்மை இந்த சாய கிரகங்களுக்கு உண்டு மேலும் தான் தரும் நன்மை தீமை பலன்களில் எவ்வித குறையும் இன்றி சிறப்பாக செய்யும் என்பதனையும் இங்கே கவனிக்க வேண்டியது அவசியம் .

ஆக ராகு கேது கிரகங்கள் எதிர் திசையில் சஞ்சாரம் செய்யும் பொழுதே இவை சாத்தியமாகின்றது , இந்த இயற்க்கை அமைப்பை இறை நிலை சாயாகிரகங்களுக்கு  வழங்கி இருப்பதில் ஆச்சர்யம் இல்லை, ஒருவரின் ஆன்மீக வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், பூலோக வாழ்க்கையில் தன்னிறைவான தன்மையையும் முறையே கேதுவும் , ராகுவும் வழங்குகிறது , ஒருவரின் கருமைய்யம் தெளிவு பெற உதவுபவர் ராகு, ஒருவரின் துரிய நிலையை விழிப்பிற்கு கொண்டு வரும் தன்மையை கேது வழங்குகிறார், எனவே ராகு கேது கிரகங்களின் எதிர் வட்ட பாதை சஞ்சாரம் ஒரு ஜாதகத்தில் மிக மிக அவசியமான ஒன்று என்பதை கருத்தில் கொண்டே இறை நிலை இந்த இயக்கத்தை சாயா கிரகங்களுக்கு வழங்கி இருக்க கூடும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திசாசந்திப்பும் திருமண வாழ்க்கையும் ?!

திசாசந்திப்பு என்றால் என்ன ?  இதானால் திருமண வாழ்க்கையில் சாதக பாதம் உண்டா ? 




மேற்கண்ட கேள்வியை தம் பிள்ளைகளுக்கு வாழ்க்கை துணை தேடும் அன்பர்களும், பொருத்தம் காண வரும் பெற்றவர்கள் பலர் கேட்பதுண்டு, சிலகாலமாகவே இந்த திசாசந்திப்பு என்பது பரவலாக பேசபட்டு வருகிறது, அதிலும் சில ஜோதிட அன்பர்கள் வரன், வது  இருவருக்கு சமகாலத்தில் ஏக திசை நடந்தால் திருமணம் செய்ய கூடாது! என்று அறிவுருத்துவதும், மீறி திருமணம் செய்தால் தம்பதியர் வாழ்க்கை மிகுந்த பாதிப்பை தரும் என்று பயமுறுத்துவதும் கூட,  தற்பொழுது நடந்துகொண்டு இருப்பது, எம்மை ஜோதிட ஆலோசனைக்காக காண வரும் அன்பர்கள் பேச்சில் இருந்து உணர முடிகிறது . 

எடுத்து காட்டாக கிழ்கண்ட ஜாதகம் இரண்டை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே, இந்த இரண்டு ஜாதகத்தை பொருத்தம் பார்த்த பல ஜோதிடர்கள் ஜாதக பொருத்தம் என்பது முற்றிலும் இல்லை என்ற கருத்தை கூறியிருக்கின்றனர் , இந்த இரண்டு ஜாதகமும் திருமண வாழ்க்கைக்கு ஏற்ற அமைப்பை பெறுகிறதா? இல்லையா ? என்பதை இறுதியில் தெரிந்து கொள்வோம் .

ஆண் ஜாதகம் :



மேற்கண்ட ஆணின் ஜாதகத்தில் தற்பொழுது சூரியன் திசை நடந்து வருகிறது (16/12/2015) வரை, தற்பொழுது நடைபெற்று வரும் சூரியன் திசையானது ஜாதகருக்கு 3,9ம் வீடுகள் முறையே பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிகுந்த யோக பலன்களையே தந்து கொண்டு இருக்கிறது, மேலும் ஜாதகரின் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மட்டும் 12ம் பவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகரின் திருமண வாழ்க்கை 32 வயதுக்கு மேல் அமையும் என்பதை தெரிவிக்கிறது, இதை தவிர ஜாதகத்தில் வேறு எந்த பாவகமும் பாதிப்படையவில்லை என்பது ஜாதகருக்கு மிகுந்த யோகமே.

பெண்ணின் ஜாதகம் :



மேற்கண்ட பெண்ணின் ஜாதகத்தில் தற்பொழுது சூரியன் திசை நடந்து வருகிறது (19/03/2014 ) வரை, தற்பொழுது நடைபெற்று வரும் சூரியன் திசையானது ஜாதகிக்கு 2,5,11ம் வீடுகள் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிகுந்த யோக பலன்களையே தந்துகொண்டு இருப்பது சிறப்பான ஒரு விஷயமே , ஆக மேற்க்கண்ட இரண்டு ஜாதகத்திலும் நடை பெற்று கொண்டு இருக்கும் சூரியன் திசையானது மிகுந்த நன்மையான பலன்களையே தருகிறது என்பது உறுதியாகிறது.

ஆனால் மேற்கண்ட இரண்டு ஜாதகத்திற்கும் , இதற்க்கு முன் பொருத்தம் பார்த்த ஜோதிடர்கள் அனைவரும் ஜாதகம் பொருந்தாது என்றும் இருவருக்கும் ஒரே திசை நடப்பதால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது என்று அச்சுருத்தியதாகவே தெரிகிறது , இதை போன்றே நன்றாக பொருந்தி வரும் பல ஜாதகங்களை பல ஜோதிடர்கள் திசா சந்திப்பை காரணம் காட்டி பல திருமணங்களை நடைபெறாமல் கால தாமதம் ஏற்ப்படுவதிர்க்கும், தடுப்பதிர்க்கும்  ஜோதிடர்களே காரணமாக இருப்பது வருத்தத்திற்கு உரிய ஒன்றாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, இந்த குழப்பங்கள் ஏன் ? ஏற்படுகிறது .

பொதுவாக பாரம்பரிய ஜோதிடத்தில் திசைகளின் பலன்கள் என்ற தலைப்பில் பல ஜோதிட நூல்களில் எழுதியிருக்கும் விஷயங்களை கருத்தில் வைத்துகொண்டு பொருத்தம் காணும் பொழுது இதை போன்ற பல தவறுகள் ஏற்ப்பட வாய்ப்புகள் உண்டு, மேலும் திசா புத்தி பலன்கள் என்ற தலைப்பில் பல ஜோதிட நூல்களில் எழுதியிருக்கும் விஷயங்கள் அனைத்தும் பொது பலன்களே அன்றி, அவை சுய ஜாதகத்தை கட்டுபடுத்த வாய்ப்பில்லை என்பதே முற்றிலும் உண்மை .

ஒருவரின் ஜாதகத்தில் நடைபெறும் திசை மற்றும் புத்தி அவரின் ஜாதகத்தில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்று அறியாத பொழுதும், குறிப்பிட்ட ஜாதகத்தில் ஒவ்வொரு பாவகத்தின் தன்மை எப்படிபட்ட நிலையில் இருக்கிறது  என்ற உண்மை நிலை அறியாத பொழுதுமே மேற்கண்ட திசா சந்திப்பு என்ற குழப்பம் ஏற்ப்பட்டு , பொருத்தம் காண வந்தவர்களுக்கு சரியான பதிலை தெரிவிக்காத நிலையை தருகிறது, ஆக ஒருவரின் ஜாதகத்தில் எவ்வித தவறும் இல்லை, அரை குறை ஜோதிடர்களிடம் ஆலோசனை கேற்கும் பொழுது வரும் வினையே இது என்றால், அது மிகையில்லை .

ஒருவரின் ஜாதகத்தில் நடைமுறையில் நடந்துகொண்டு இருக்கும் திசையானது எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்று தெரியாத ஜோதிடனிடம் தனது ஜாதகத்தை தந்து பொருத்தம் பார்க்கும் அன்பர்களின் நிலையை பற்றியே ஜோதிடதீபம் அதிக கவலை கொள்கிறது, பலரது திருமணத்திற்கு தடையாக மேற்கண்ட திசாசந்திப்பு மட்டுமா காரணமாக அமைகிறது, மக்களை பயமுறுத்த மேலும் பல விஷயங்கள் அரைகுறை மற்றும் ஜோதிட கணிதத்தில் தேர்ச்சி அற்ற போலி ஜோதிடர்களிடம் நிறைய உண்டு அவையாவன, 1 ராகு கேது தோஷம், 2 செவ்வாய் தோஷம், 3 சர்ப்ப தோஷம், 4 நாக தோஷம், 5 ஏழரை சனி, 6 களத்திர தோஷம் என வகைக்கு 5,6 தோஷங்களை சொல்லி பொதுமக்களை குழப்பம் ஏற்ப்படுத்தி அதில் குளிர் காயும் போலி ஜோதிடர்களே கலிகாலத்தில் அதிகம் .

ஒருவரின் ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை பற்றியும், அவர்களுக்குள் இருக்கும் பொருத்தங்கள் பற்றியும் பாவக வலிமையின் நிலையை கருத்தில்  கொண்டு பலன் காணும் பொழுதே சிறப்பான திருமண வாழ்க்கை அமையும், இதில்  தச வித பொருத்தமான நட்சத்திர பொருத்தம் 10ம் கூட தேவையில்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து .

இதை அடிப்படையாக வைத்து பார்க்கும் பொழுது, பல ஜோதிடர்களால்  திசா சந்திப்பு ஏற்ப்படுவதால் பொருத்தம் அற்ற ஜாதகம் என்று ஒதுக்கிய மேற்கண்ட இரண்டு ஜாதகத்திற்கும்  திருமண பொருத்தம் என்பது பாவக வலிமை  கொண்டு காணும் பொழுது மிக சிறப்பாக இருக்கிறது, மேலும் இவர்கள் திருமணம் செய்து கொள்வதால் திசா சந்திப்பு என்ற ஒரு விஷயம், இவர்களை எந்த விதத்திலும் சிறு பாதிப்பையும் கூட, தர வாய்ப்பில்லை என்பதே உண்மை என்ற விஷயத்தை உணர வைத்து இருவருக்கும் சிறப்பாக திருமணம் நடக்க ஜோதிடதீபம் ஆலோசனை வழங்கியதை நினைத்து ஜோதிடதீபம் பெருமை கொள்கிறது. 

குறிப்பு :

ஆண் பெண் இருவரின் ஜாதகத்தில் திசாசந்திப்பு என்பது இல்லாத நிலையிலும் கூட அவர்களின் சுய ஜாதகத்தில் குடும்பம் எனும் 2ம் பாவகம் பாதிக்கபட்டு இருந்தாலோ, களத்திரம் எனும் 7ம் பாவகம் பாதிக்கபட்டு இருந்தாலோ, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பொழுதுதான் திருமண வாழ்க்கை என்பது மன முறிவு வரை  எடுத்து செல்கிறது என்ற உண்மையை பொதுமக்கள் உணருவது அவசியம் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 17 அக்டோபர், 2013

ஆட்சி பெற்ற சனி திசை யோக பலன்களையும் நன்மைகளையும் வாரி வழங்குமா ?


ஆட்சி பெற்ற சனி திசை யோக பலன்களையும் நன்மைகளையும் வாரி வழங்குமா ? என்ற கேள்விக்கு கிழ்க்கண்ட அன்பரின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம்.

லக்கினம் : மிதுனம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 2 ம் பாதம் 


நடப்பு திசை சனி திசை ( 01/09/2013 முதல் 01/09/2013 வரை )
நடப்பு புத்தி  சனி புத்தி ( 01/09/2013 முதல் 04/09/2016 வரை )

பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் சில கிரகங்கள் ஆட்சி,உச்சம் பெற்று அமர்ந்திருந்தால் சிறப்பு என்றும், அப்படி அமர்ந்த கிரகத்தின் திசை வரும் பொழுது ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றமும் தன்னிறைவான பொருளாதார சேர்க்கையும், எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும் வாரி வழங்கும் என்பது பல ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது, உண்மையில் சுய ஜாதகத்தில் ஒருகிரகம் ஆட்சி உச்ச நிலையில் அமர்ந்து, அந்த கிரகத்தின் திசை வரும்பொழுது ஜாதகனுக்கு முன்னேற்றத்தை வழங்குமா என்பதை பற்றி இன்றைய ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் .

மேற்கண்ட ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும் சனி திசை ஆனது சுய ஜாதகத்தில் சனி கும்பத்தில் ஆட்சி நிலை பெற்று அமர்ந்திருக்கு நிலையில் தனது திசை நடத்துகிறது இருப்பினும் இந்த ஜாதகருக்கு நடைபெறும் சனிதிசையால் அதிக இன்னல்களையும் இழப்புகளையுமே பலனாக தருகிறது, மேலும் தொழில் ரீதியாக ஜாதகருக்கு கடுமையான பின்னடைவும், மன நிம்மதி இழப்புமே மிஞ்சி இருக்கிறது  இதற்க்கு காரணம் என்ன ?

சுய ஜாதகத்தில் சனி ஆட்சி நிலையில் அமர்ந்த பொழுதிலும், ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும் சனி திசை 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் ( உபய லக்கினத்திற்கு 7ம் பாவகம் பாதக ஸ்தானம் )சம்பந்தம் பெற்று பலனை தருவதே மேற்கண்ட இன்னல்களும், துன்பங்களும் ஏற்ப்பட காரணம் , ஒருவருக்கு நடக்கும் திசை ஆனது பாதக ஸ்தானம் பலனை தரும் பொழுது ஜாதகரின் நிலை சற்றே கவலைப்படும் விதத்தில் தான் இருக்கும், அந்த கிரகம் சுய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று அமர்ந்திருந்தாலும் சரி வேறு சிறப்பு வாய்ந்த நிலையில் இருந்தாலும் சரி , இவரது ஜாதகத்தில் சனி ஆட்சி பலம் பெற்றிருப்பது நன்மை என்றாலும் கூட, தான் ஏற்று நடத்தும் பாவக பலன் என்று பார்க்கும் பொழுது பாதக ஸ்தான பலனை ஏற்ப்பது சிறப்பான விஷயம் அல்ல , எனவே இந்த ஜாதகர் சனி திசை, சனி புத்தி, சனி அந்தரம் நடை பெரும் காலங்களில் பாதக ஸ்தான பலனையே அனுபவிக்க வேண்டி வரும் என்பதே உண்மை .

மேலும் இந்த ஜாதகருக்கு பாதக ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் வீடாக வருவதும், அது உபய ராசியாக இருப்பதும் ஜாதகர் தனது முன்னோர்களின் வினை பதிவினை தான் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலையை தரும் என்பது உறுதியாகிறது , எனவே தனது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கடமைகளை முறையாக செய்யும் பொழுது ஜாதகருக்கு தீமையான பலன்கள் குறைந்து நன்மைகள் நிச்சயம் கிடைக்கும், மேலும் நல்ல ஆன்மீக பெரியவர்களிடம் தீட்சை பெறுவதும் , வயது முதிர்ந்த பெரியவர்களின் ஆலோசனை படி நடப்பதும் ஜாதகருக்கு சனி திசை தரும் பாதக ஸ்தான பலன்களில் இருந்து மீண்டு நன்மைகள் உண்டாகும்.

இதற்க்கு முன் நடந்த குரு திசையும் ஜாதகுக்கு 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவக அமைப்புடன் தொடர்பு பெற்று தீமையான பலனை தந்தது வருந்த தக்க விஷயமே , எனவே ஜாதகர் குரு திசையிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறவில்லை என்பது உறுதியாகிறது , இனி வரும் காலங்களில் ஜாதகர் சனி திசை சனி புத்தி வரை புதிய முயற்சிகளில் இறங்காமல் , அதிக முதலீடுகளை செய்யாமல் இருப்பதே நல்லது மேலும் பாதக ஸ்தானம் என்பது ஒரு வகையில் களத்திர ஸ்தானமாக வருவதால் ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் சிறு சிறு இன்னல்களை அனுசரித்தும், நண்பர்கள் மற்றும் பொது மக்கள் வழியில் இருந்து வரும் இனல்களை அனுசரித்தும் செல்லும் பொழுது , பாதக ஸ்தான பலன்கள் குறைந்து அந்த பாவக வழியில் இருந்து நன்மைகள் நடைபெறும்.  

பொதுவாக ஒரு கிரகம் சுய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருக்கிறது என்ற ஒரு விஷயத்தை மட்டும் வைத்துகொண்டு அந்த கிரகத்தின் திசை மிகப்பெரிய நன்மையை செய்து விடும் என்று கணிதம் செய்வது ஜோதிடத்தின் அடிப்படை கூட தெரியாத நபர்கள் செய்யும் ஒரு வேலை என்பதை உணர்வது அவசியம், இதை போன்றே ஒரு கிரகம் நீச்சம் பகை பெற்று இருக்கிறது என்றால் அந்த கிரகத்தின் திசை தீமை செய்யும் என்று முடிவு செய்வதும் தவறான அணுகு முறையே என்றால் அது மிகையில்லை.

ஒரு கிரகத்தின் திசை எவ்வித பலன்களை தருகிறது என்று அறிய மூன்று விதிகளை உணர்வது அவசியம் அவையாவன :

1 ) நடப்பு திசை எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது?
2 ) அந்த பாவகம் சுய ஜாதகத்தில் நன்மையை தருகிறதா? தீமையான பலன்களை தருகிறதா ?
3 ) அந்த பாவகத்திர்க்கு தற்பொழுது உள்ள கோட்சார கிரகங்கள் நன்மையை தருகிறதா? தீமையை தருகிறதா? 

என்ற விஷயங்களை நிர்ணயம் செய்து விட்டால் ஒருவருக்கு நடக்கும் திசை, புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகின எவ்வித பலன்களை வழங்குகிறது என்பதை பற்றிய தெளிவான மிக மிக துல்லியமான பலன்களை நிர்ணயம் செய்துவிட முடியும், இதை ஜாதகர் பின் பற்றி நடந்தால் ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் யோக காலமே.

வாழ்க வளமுடன்  
ஜோதிடன் வர்ஷன் 
9443355696






திங்கள், 30 செப்டம்பர், 2013

அளவற்ற நன்மைகள் வாரி வழங்கும் புரட்டாசி அமாவாசை வழிபாடு !



புத்திர பாக்கியம் உண்டாக :

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பது போல், குடும்பத்தில் குழந்தை செல்வம் இருப்பின் வீட்டில் மகிழ்ச்சிக்கு குறை என்பதே இருக்காது, பல காலங்கள் அல்லது வருடங்கள் குழந்தை பாக்கியம் அற்ற தம்பதியர்கள் எதிர்வரும் புரட்டாசி அமாவாசை தினத்தில் தங்களது குல தேவதை எங்கு உள்ளதோ அங்கு சென்று , தங்களது வழக்கமான குல தேவதை வழிபாட்டினை செய்யும் பொழுதும் , தங்களது பிதுருக்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யும் பொழுது 54 வருடங்களாக இருந்துவரும் குல தெய்வ சாபமும், பித்ரு சாபமும் நீங்கி எதிர்வரும் ஒருவருட காலகட்டத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சியும், புத்திர சந்தானமும் உண்டாகும்.

கல்வியில் தடை நீங்க :

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற பழமொழிக்கு ஏற்ற போல் தங்களது குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் , கல்வியில் ஏற்ப்படும் தடைகளை தகர்த்தெறிந்து கல்வியில் வெற்றிவாகை சூட , எதிர்வரும் புரட்டாசி அமாவாசை தினத்தில் குலதேவதைக்கு வஸ்திர தானம் செய்து வழிபடும்பொழுது சம்பந்த பட்ட குழந்தைகள் கல்வியில் மிகப்பெரிய வெற்றியையும் , சிறந்த மதிப்பெண்களையும் பெறுவார்கள்.

 மேலும் தான் கற்ற கல்வியின் மூலம் தனது அறிவாற்றலை வளர்த்துகொண்டு, தனக்கும் தன்னை சார்ந்த உறவுகளுக்கும் பெற்றோருக்கும், வாழ்க்கையை கற்றுத்தரும் இந்த சமுதயத்திற்கும் பயனுள்ள வகையில் தனது வாழ்க்கையை தானாகவே சுயமாக அமைத்துகொள்ளும் தன்மையை பெறுவார்கள், எவருடைய உதவியும் நாடாமல் தனது சொந்த காலில் நிற்கும் தனி திறமையை தரும் மேற்கண்ட குல தேவதை வழிபாடு.

உடல் நலம் மேலோங்கவும், விபத்தினை தவிர்க்கவும் :

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு இணங்க ஒருவரின் வாழ்க்கையில் உடல் ஆரோக்கியம் என்பது இன்றியமையாத விஷயமாக கருதலாம், பல இடங்களுக்கு சென்று வரும் நமக்கு எந்த நேரத்தில் என்ன ? நேரும் என்று சொல்ல இயலாது, ஒரு விபத்தில் உயிர் பிழைக்கும் பொழுது அந்த இடத்தில் உள்ள பெரியவர்கள் சொல்லும் முதல் வாக்கியம் "என்ன புண்ணியம் செய்தார்களோ இவரது பெற்றோர்கள்" பெரிய பாதிப்பில்லாமல் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துவிட்டார் என்பதாக இருக்கும் , இந்த புண்ணிய பதிவினை ஜாதகனுக்கு சரியான நேரத்தில் கொடுத்து உயிர் காக்கும் தன்மையை தருவது பித்ரு வழிபாடு என்றால் அது மிகையில்லை.

 ஒருவர் அல்லது அவரை சார்ந்த முன்னோர்கள் பல புண்ணிய காரியங்களை செய்திருந்தாலும் அதை பெறுவதற்கு, சம்பந்த பட்ட ஜாதகர் வருடம் தவறாமல் பித்ரு கடமையை செய்து வந்தால் மட்டுமே, ஜாதகர் தாம், தமது முன்னோர்கள் செய்த புண்ணிய பதிவின் பலன்களை அனுபவிக்க இயலும், எனவே எதிர்வரும் புரட்டாசி அமாவாசை தினத்தில் பித்ரு கடமைகளை முறையாக பிண்டம் வைத்து செய்யும் பொழுது , சம்பந்தபட்ட ஜாதகரின் குடும்பத்தில் உடல் நலம் இன்றி இருந்தவர்களின் ஆரோக்கியம் மேம்படும், திடீர் என நிகழும் விபத்துகளில் இருந்து ஜாதகரும், ஜாதகரின் குடும்பமும் காப்பாற்ற படும் .

செய்யும் தொழில் சிறக்கவும், திடீர் பொருள் இழப்பை தவிர்க்கவும் :

சில அன்பர்கள் செய்யும் தொழில் திடீர் என முடங்கிவிடும், அல்லது பணியாற்றும் இடத்தில் இருந்து வேலை பறிபோய்விடும், இதனால் ஜாதகர் செய்வது அறியாமல் திகைக்கும் சூழ்நிலையை தரும் , சில நேரங்களில் கூட்டு  தொழில் செய்யும் அன்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு தொழில் பிரிவினை ஏற்படும் , இதனால் சம்பந்தபட்ட இருவரும் கடுமையான பொருளாதார சிக்கல்களை சந்திக்கும் நிலையை தரும், மேலும் செய்யும் தொழில் முன்னேற்றம் இல்லாமல் வெகுவான தொழில் சிக்கல்களை தர கூடும் இதனால் ஜாதகரும், ஜாதகரை சார்ந்தவர்களும் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

 இந்த நிலையில் இருந்து மீண்டு வரவும் செய்யும் தொழில் அபரிவிதமான முன்னேற்றம் பெறவும், திடீர் பண பொருள் இழப்பில் இருந்து மீண்டு செய்யும் தொழில் முன்னேற்ற பாதையிலே செல்லவும் பொருளாதார ரீதியான தன்னிறைவை பெறவும், ஜாதகர் எதிர்வரும் புரட்டாசி அமாவாசை தினத்தில் தனது குல தேவதைக்கு பால்,தேன்,இளநீர்,மஞ்சள்,குங்கும அபிஷேகம் செய்து , கனி வகைகளை தானம் செய்து தொழில் முன்னேற்றத்தை பெறலாம், இதை தொடர்ந்து வருடம் தவறாமல் செய்யும் பொழுது ஜாதகருக்கு படிப்படியான தொழில் முன்னேற்றத்தை மட்டுமே இறைஅருள் தந்துகொண்டு இருக்கும் .

திருமண தடை நீங்கவும் தம்பதியர் ஒற்றுமை ஓங்கவும் :

சரியான பருவ வயதில் திருமணம் நடை பெறாமல், திருமணம் வாழ்க்கை தள்ளி போவதற்கும், திருமணம் ஆன தம்பதியர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு திருமண வாழ்க்கையில் மன முறிவு ஏற்படுவதற்கும் அதி முக்கிய காரணமாக அவர்களது ஜாதகத்தில் பித்ரு தோஷமும், குலதெய்வ சாபமுமே காரணமாக அமைகிறது, குறிப்பாக பெண்களின் ஜாதகத்தில் இந்த நிலை ஏற்ப்படும் பொழுது அவர்களின் வாழ்க்கை நிலை பெரிய கேள்வி குறியாக மாறிவிடுகிறது, பெற்றோர் அதரவின்றியும், வாழ்க்கை துணையின் ஆதரவின்றியும், சமுதாயத்தின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தந்து, கடுமையான மன போராட்டத்திற்கு தள்ளிவிடும் தன்மையை தரும்.

 மேலும் வாழ்க்கையை நேர்கோட்டில் வழ தவறிவிட்டால் அவர்களின் நிலை இதைவிட மோசமான சூழ்நிலையையும், தற்கொலை செய்துகொள்ளும் மன நிலையை தந்துவிடும் , இந்த நிலையில் இருந்து சம்பந்தபட்டவர்கள் வாழ்க்கை நிலை மாறவும், தம்பதியர் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கவும், திருமணம் ஆகாத பெண்களுக்கும் ஆண்களுக்கும் சிறப்பான திருமண வாழ்க்கை அமையவும் எதிர்வரும் புரட்டாசி அமாவாசை தினத்தில், அவரவர் குல தெய்வ கோவிலுக்கு சென்று தனது பெற்றோர்களுக்கு புத்தாடை தானம் செய்து ( அல்லது பிராமணர்களுக்கு வஸ்திர தானம் செய்யலாம் ) அவர்கள் கையால் அட்சதை ஆசிர்வாதம் பெற்றால், சம்பந்த பட்ட அன்பர்களின் வாழ்க்கையில் திருமணம் சிறப்பான முறையில் அமையும், திருமணம் செய்துகொண்ட தம்பதியர் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் தாம்பத்தியம் சிறக்கும், மன வாழ்க்கை இனிக்கும் .

மேற்கண்ட பெருமைகள் பெற்ற புரட்டாசி அமாவாசை தினத்தில் தனது குல தெய்வ கடமையையும், பித்ரு கடமையையும், பிராமண தர்மத்தையும் சிரத்தையுடன் செய்து தங்களது வாழ்க்கையில் இறையருளின் கருணையினால் சகல நலன்களையும் 16 வகை செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ இறை அருள் துணை நிற்கட்டும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696