திங்கள், 29 அக்டோபர், 2012

ஏழரை,அஷ்டம,அர்த்தாஷ்டமச் சனி மற்றும் ராகுகேது பெயர்ச்சி,குரு பெயர்ச்சி சுய ஜாதகத்தில் தரும் பலாபலன்கள் !




அண்ணா,
     
ஜோதீட தீபத்தின் கருத்துக்கு எதிர்க் கருத்தை முன்மொழிபவனில்லை. நிச்சயம் உண்மையான கருத்துக்கள் தான்.ஒரு ஜாதகத்தில் கிரகப்பெயர்ச்சிகளைப் பலன் சொல்வதற்கு எந்தளவுக்குப் பயன்படுத்துவது ?. ஏழரை,அஷ்டம,அர்த்தாஷ்டமச் சனி மற்றும் ராகு,கேதுப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சியைவைத்துப் பல ஜோதிடர்கள் பலன் சொல்வதைப் பார்த்திருக்கிறேன். இது எந்தளவுக்கு சுய ஜாதகத்தைக் கட்டுப்படுத்துகிறது. நான் கருதுவது கிரகப்பெயர்ச்சி என்பது மனரீதியான பாதிப்புகளைத்தான் உண்டாக்குகிறது என நினைக்கிறேன். மேற்சொன்ன கருத்துக்கள் பற்றிய தாங்களின் நிலைப்பாடு என்ன?.

அன்பு தம்பி தங்களின் கருத்திற்கு  நன்றி !

 தாங்கள் கிரக பெயர்ச்சி பலன்கள் என்று சொல்வது சந்திரன் இருக்கும் இடத்தை அடிப்படையாக வைத்து ( அதாவது ராசியை ) சொல்லப்படும் கோட்சார பலன்களை பற்றியதாக இருக்கும் என்று நம்புகிறேன் , பொதுவாக பல ஜோதிடர்கள் ஒருவருடைய ஜாதக அமைப்பில் பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது , சந்திர ராசிக்கு சனி , குரு , ராகு கேது கிரகங்கள் , கோட்சார ரீதியாக சம்பந்தம் பெரும் அமைப்பை வைத்து பலன் காணுகின்றனர் , இதில் சனி பகவான் சந்திரன் இருக்கும்  ராசிக்கு கோச்சார ரீதியாக 12 ல் வரும் பொழுது விரைய சனி என்றும், சந்திரன் இருக்கும் ராசியில் சஞ்சாரம் செய்யும் பொழுது ஜென்ம சனி என்றும் ,சந்திரன் இருக்கும் ராசிக்கு 2 ல் வரும் பொழுது குடும்ப சனி என்றும் பலன் காணுகின்றனர் , மேலும் மேற்கண்ட அமைப்பில் சந்திரன் இருக்கும் ராசியிலும் , முன் பின் ராசியிலும் சனிபகவான் சஞ்சாரம் செய்யும் ஒவ்வொரு இரண்டரை ஆண்டு காலத்தை ஏழரை சனியாக கொண்டு பலன் காணுகின்றனர்.

 மேலும் இந்த ஏழரை காலகட்டமும் ஜாதகருக்கு அதிக இன்னல்களை தரும் என்றும் , இந்த காலகட்டங்களில் ஜாதகர் எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருப்பது நலம் என்றும் , எச்சரிக்கை செய்கின்றனர் , இது எந்த அளவிற்கு உண்மை என்று யாரும் ஆய்வு செய்வதில்லை , மேலும் ஏழரை சனி என்றாலே ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை தரும் , விபத்தை தரும் , இழப்பை தரும் என்றும் , எழரை சனி காலத்தில் ஜாதகர் திருமணம் செய்வது அதிக இன்னல்களையும் , பிரிவை தரும் என்று சொல்பவர்களும் உண்டு , இதை போன்றே அஷ்டம,அர்த்தாஷ்டமச் சனி மற்றும் ராகு,கேதுப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சியை அடிப்படையாக வைத்துப் பல ஜோதிடர்கள் பலன் சொல்வதும் உண்டு , இதில் எந்த அளவிற்கு உண்மை என்பதை பற்றி நாம் இந்த பதிவில் நாம் காண்போம் .

மேற்கண்ட அமைப்பில் பலன் காணும் முறையெல்லாம் ஒருவருடைய ஜாதகத்தில்,சரியான பலன் காண சிறிதும் உதவாது என்பதே ஜோதிட தீபத்தின் கருத்து .


மேலும் கோட்சார கிரகங்கள் மன ரீதியான பாதிப்பை மற்றுமே தரும் என்பதும் தவறான அணுகு முறை என்பதும் ஜோதிட தீபத்தின் கருத்து , காரணம் கோட்சார கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சாரம் செய்யும் பொழுதும் , சம்பந்த பட்ட ராசி என்ன தத்துவமோ , அதற்க்கு தகுந்தார் போல் நன்மை தீமை பலன்களை வழங்கும் என்பதே உண்மை , எடுத்துகாட்டாக சர ராசியுடன் சம்பந்தம் பெரும் பொழுது , விரைவான பலன்களையும் , ஸ்திர ராசியுடன் சம்பந்தம் பெரும் பொழுது நிலையான தொடர் பலன்களையும் , உபய ராசியுடன் சம்பந்தம் பெரும்பொழுது சிறு சிறு நன்மை தீமை பலன்களையும் தரும் .

 மேலும் நெருப்பு ராசியில் ஜாதகரின் செயல்பாடுகளையும் , நில ராசியில் ஜாதகரின் உடல் , சொத்து சுக அமைப்பிலும் , காற்று ராசியில் ஜாதகரின் அறிவாற்றல் சம்பந்தபட்ட அமைப்பிலும் , நீர் ராசியில் ஜாதகரின் மன நிலையை கொண்டும் நன்மை தீமை பலன்களை தரும் , மேற்கண்ட ராசி நிலைகளை தொடர்பு படுத்தி பலன் காணுவது , கோட்சார பலன்களை சரியாக சொல்ல உதவும் என்பதே உண்மை , தாங்கள் சொல்வது போல் மன ரீதியான பாதிப்பை மட்டுமே செய்யும் எனில் கோட்சார கிரகங்கள் நீர் ராசியுடன் சம்பந்தம் பெற்று நன்மை தீமை பலனை செய்தால் மட்டுமே மன ரீதியான பாதிப்பை தரும் என்று ஏற்றுகொள்ள இயலும் .


கோட்சார கிரகங்கள் தரும் பலனை சரியாக நிர்ணயம் செய்ய, ஜாதக ரீதியாக கடை பிடிக்க வேண்டிய விதிகளை இனி பார்ப்போம் :

1 ) நடக்கும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை எந்த பாவகத்தின் பலனை நடத்துகிறது .
2 ) அந்த பாவகம் சுய ஜாதகத்தில் எப்படி பட்ட நிலையில் இருக்கிறது , அதாவது நல்ல நிலையில் இருக்கிறதா ? பாதிக்கபட்டு இருக்கிறதா ?
3 ) அந்த பாவகத்துடன் தற்பொழுது நவகிரகங்கள் கோட்சார ரீதியாக சம்பந்தம் பெறுகிறதா ?
4 ) அப்படி சம்பந்தம் பெறும் கோட்சார கிரகங்கள் சம்பந்த பட்ட பாவகத்திற்க்கு நன்மை தருகிறதா? தீமையை தருகிறதா ?

மேற்கண்ட விதிகளை கடைப்பிடித்து , துல்லியமான ஜோதிட கணிதம் கொண்டு நவ கிரகங்களை நிலையை தெளிவாக தெரிந்து கொண்டு ஜாதக பலன்களை நிர்ணயம் செய்து சொல்லும் பொழுது , நிச்சயம் ஜாதக பலன்கள் துல்லியமாக வரும் என்பதில் சந்தேகம் இல்லை . மேற்கண்ட அமைப்பு மட்டுமே ஜாதக பலன்களை சரியாக சொல்ல உதவும் தம்பி .


இதை விடுத்து சந்திர ராசியை வைத்து பலன் காணுவது என்பது நிச்சயம் சரியான பலன் சொல்ல முடியாது என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து . 



எடுத்துகாட்டாக :

மேற்கண்ட சிம்ம லக்கின , துலாம் ராசி ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும் குரு திசை , 1 ,3 ,5 ,9 ,11 ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலன்களை மட்டுமே செய்து கொண்டு இருக்கிறது , மற்ற ஜோதிடர்கள் துலாம் ராசியை வைத்து எழரை சனி நடக்கிறது என்று சொல்லி , சனிபகவானால் நடக்கும் அத்தனை தீமையும் தங்களுக்கு வரும் என்று எச்சரிக்கை செய்வார்கள் .

 ஆனால் உண்மையில் இந்த சிம்ம லக்கின ஜாதகருக்கு நடக்கும் குரு திசை மூன்றாம் பாவக  பலனை நடத்தினால் மட்டுமே , ஜாதகருக்கு தற்பொழுது கோட்சார கிரகமாக இருக்கும் சனிபகவானால் நன்மை தீமை பலன்கள் நடை பெரும் , ஆனால் குருதிசை 11 ம் பாவக பலனை செய்வதால் , இந்த 11 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் கோட்சார கிரகங்கள் நன்மை செய்கிறதா ? தீமையை செய்கிறதா ? என்று பார்த்தால் மட்டுமே போதும்.

இங்கே  ராசிக்கு கோட்சார ரீதியாக வரும் ஏழரைசனி எவ்வித பலனையும் தராது ,  எட்டில் இருக்கும் குருவும் எவ்வித பலனையும் தராது , 4 மற்றும் 10 ல் இருக்கும் ராகு கேது கிரகமும் எவ்வித பலனையும் தராது , ஏனெனில் இந்த சிம்ம லக்கின , துலாம் ராசிக்கு நடக்கும் குரு திசை  11 ம் பாவக பலனை மட்டுமே நடத்துகிறது, என்பதால் மேற்கண்ட கிரகங்கள் 11 ம் பாவகத்துடன் எவ்வித சம்பந்தம் பெறாத காரணத்தினால் , சனி , குரு , ராகு கேது கிரக நிலையை பற்றி நாம் எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை , மேலும் தற்பொழுது நடக்கும் குரு திசை 11 ம் பாவக பலனை நடத்துவதால் குரு திசை அதிக நன்மையான பலன்களை வாரி வழங்கும் என்பதே உண்மை .

ஆக சந்திரன் நிற்கும் இடத்தை ( அதாவது ராசியை வைத்து ) பலன் காணுவது என்பது , குத்து மதிப்பாக சொல்லும் ஜாதக பலனாகவே இருக்கும் என்பதும் , இதை நம்பி செய்யும் காரியங்கள் ஜாதகருக்கு அதிக பாதிப்பை தரும் என்பதே உண்மை , இதை வைத்து தனது வாழ்க்கை பாதையை ஜாதகர் சரியாக அமைத்து கொள்வது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதை ஆகிவிடும் என்பதே உண்மை .


சரியான ஜோதிடரை கண்டு , சரியான ஜோதிட ஆலோசனை பெற்று வாழ்க்கையில் நலம் பெறுங்கள் அன்பர்களே .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969
jothidadeepam@gmail.com  

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதை போன்று, சுய ஜாதகத்தில் யோகம் இருந்தும் அனுபவிக்க முடியாத ஜாதக நிலை !






மேற்கண்ட ஜாதகத்தில் லக்கினம் , சுகம் , களத்திரம் , ஜீவனம் எனும் நான்கு வீடுகளும் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகத்தில் ஒரு சிறப்பான யோக நிலை , மேலும் இந்த நான்கு வீடுகளும் ஜீவன ஸ்தானமான சர மகர ராசியுடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த யோக பலனை தங்கு தடையின்றி வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை , குறிப்பாக லக்கினம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரின் உடல் மனம் இரண்டு அமைப்பிலும் நன்மைகளை வாரி வழங்கும், நீண்ட ஆயுள் , நல்ல வளரும் சூழ்நிலை , நேர்மையான குணம் , பெரியோர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்படும் தன்மை , சுய கட்டுபாடு , ஒழுக்கம் போன்ற விஷயங்களில் சிறப்பான பலன்களை வழங்கும் .

சுக ஸ்தானம் எனும் நான்காம் பாவகம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று வலிமை பெறுவது , ஜாதகருக்கு தாயின் வழியில் ஆதரவும் , தனது அம்மாவிற்கு நன்மைகளையும் , தாய் பாசமுடன் வளரும் தன்மையும் , நல்ல வண்டி வாகன யோகமும் , வசதி மிக்க வீடு , சிறப்பான கல்வி , உயர் கல்வி , பட்டபடிப்பு , கல்விகாலங்களில் சிறந்து விளங்கும் தன்மை , தனது சுய உழைப்பால் வண்டி வாகனம் , சொத்து சுகம் , போன்றவைகளை வாங்கும் யோகம் என நான்காம் பாவக அமைப்பில் இறுதி நன்மைகளை வாரி வழங்கும் .

களத்திர ஸ்தானம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகருக்கு நல்ல நண்பர்கள் சேர்க்கையும் , சமுதாயத்தில் சிறப்பான நற்பெயரும் , பொது மக்கள் செல்வாக்கும் , பெண் நண்பர்கள் மூலம் அளவில்லா நன்மைகளும் , வெளிநாடுகளில் இருந்து அளவில்லா செல்வ வளமும் , வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றமும்  உண்டாகும் . மேலும் ஜாதகரின் கூட்டாளிகள் மூலம் சிறப்பான எதிர்காலம் கிடைக்கும் , வாழ்க்கை துணை வழியில் இருந்து சகல யோகமும் நிச்சயம் உண்டாகும் , தன்னம்பிக்கை அதிகரிக்கும் , விரைவான சுறுசுறுப்பான செயல் திறன் கொண்டவராக இருப்பார் .

பத்தாம் வீடு ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது , செய்யும் தொழில்களில் எல்லாம் வெற்றிமேல் வெற்றி உண்டாகும் , தனது தகப்பனாருக்கு சொத்து சுக சேர்க்கையும் , ஜீவன மேன்மையும் வாரி வழங்கும் , குறிப்பாக ஜாதகர் செய்யும் தொழில்கள் எல்லாம் 100 சதவிகிதம் வெற்றி பெரும் மருத்துவம் சார்ந்த தொழில்களில் கொடி கட்டி பறக்கும் அளவிற்கு முன்னேற்றம் உண்டாகும் , நல்ல கைராசி , மக்கள் செல்வாக்கு , கூட்டு தொழில் செய்வதால் முன்னேற்றம் மற்றும் அளவில்லா வருமானம் , சுயமாக சிந்தனை செய்து வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம் என ஜீவன வழியில் வெற்றியை தரும் .

மேற்கண்ட  நன்மையான பலன்கள் எல்லாம் ஜாதகருக்கு சூரியன் மற்றும் செவ்வாய் திசையில்,சூரியன் மற்றும் செவ்வாய் புத்திசூரியன் மற்றும் செவ்வாய் அந்தரம்,சூரியன் மற்றும் செவ்வாய் சூட்சமம் போன்ற அமைப்பில் மட்டுமே நடை பெறுகிறது , தற்பொழுது நடக்கும் சூரியன் திசை மேற்கண்ட வீடுகளின் பலனை நடத்துவது நன்மையை தரும் , அடுத்து வரும் சந்திரன் திசை பாதக ஸ்தான பலனை செய்கிறது , அதற்க்கு அடுத்து வரும் செவ்வாய் திசை மேற்கண்ட வீடுகளின் பலனை நடத்துவது நன்மையை தரும் , ஆனால் இதற்க்கு பிறகு வரும் அனைத்து திசைகளும் முறையே ராகு திசை விரைய ஸ்தான பலனையும் , குரு திசை பாதக ஸ்தான பலனையும் ,சனி திசை எட்டாம் வீட்டு பலனை செய்வதும் ஜாதகருக்கு 200 சதவிகிதம் மிகுந்த பாதிப்பையே வாரி வழங்கும் , நன்மையான பலன்கள் இந்த திசைகளில் நடப்பது என்பது மிகவும் குறைவே .

எனவே மேற்கண்ட ஜாதக அமைப்பில் சூரியன் திசையும் , செவ்வாய் திசையும் சிறு வயதிலேயே ஜாதகத்தில் நடைமுறைக்கு வந்துவிடுவதால் , ஜாதகர் அதிக நன்மைகளை பெற  முடியாது , ஏனெனில் அது ஜாதகரின் குழந்தை பருவம் மற்றும் கல்வி காலம் என்பதால் , உடல் நிலை , வளரும் சூழ்நிலை ,கல்வியில் மட்டுமே யோக நிலை நன்மையை செய்யும் , தொழில் , திருமணம் , வாழ்க்கையில் முன்னேற்றம் போன்றவைகள் நடை பெரும் காலமான 23 வயது முதல் 60 வயது வரை நடக்கும் திசையாவும் தீமையான பலனையே வாரி வழங்குவதால் , ஜாதகத்தில் வலிமை பெரும் பாவக அமைப்பில் இருந்து ஜாதகர் எவ்வித நன்மையையும் பெற முடியாது என்பதால் , ஜாதகத்தில் யோக அமைப்பு இருந்தும் , பலன் அனுபவிக்க முடியாத படி ஜாதகருக்கு தடைகளை தரும் என்பதில் சந்தேகமே இல்லை .

ஆக ஜாதகத்தில் யோகம் இருப்பது பெரிய விஷயமல்ல , அந்த யோக பலன்கள்  நடைமுறையில் திசை, புத்தி, அந்தரம், மற்றும்  சூட்சமத்தில் நடந்து பலன் தர வேண்டும் , அப்பொழுதுதான் ஜாதகர்  யோக வாழ்க்கையை பெற முடியும் , இல்லை எனில் ஜாதகர் நிலை இலவுகாத்த கிளி கதைக்கு ஒப்பாக இருக்கும் , யோக வாழ்க்கையை நினைத்து வெறும் கனவு மட்டுமே காண  முடியும் நடை முறையில் , சிரமத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டி வரும் , இதனால் யோக நிலைகள் பற்றி சில விஷயங்களை தெரிந்து கொண்ட  சில அரை குறை  ஜோதிடர்கள் உங்களது ஜாதகத்தில் அந்த யோகம் இருக்கிறது , இந்த யோகம் இருக்கிறது என்று உசுப்பேத்தி உசுபேத்தி உங்களை ரணகளமாக்க கூடும் , தங்களது ஜாதக அமைப்பின் படி உள்ள உண்மை நிலையை தெளிவாக தெரிந்து கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுங்கள் , வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com