திங்கள், 29 அக்டோபர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - மீனம் )


( குரு பெயர்ச்சியின் மூலம் அபரிவித ராஜ யோக பலன்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர்களில் இரண்டாம் இடம் பெறுபவர்கள் மீன லக்கினத்தினரே என்றால் அது மிகையாகாது ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : மீனம்

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியாகவும், உபய நீர் தத்துவ தன்மையை பெற்றதுமான மீன ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, சுய வர்க்க கிரகத்தின் வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் மீன லக்கினத்திற்க்கு, லக்கினாதிபதி, ஜீவன ஸ்தான அதிபதி என்ற வலிமையை பெறுகின்றார், இவர் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது மீன லக்கின அன்பர்களுக்கு கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், பெரிய மனிதர்கள் ஆதரவு , சாஸ்திர ஞானம், தெய்வீக  அனுக்கிரகம், கோவில் திருப்பணிகளை சிறப்பாக செய்யும் ஆற்றல், சமூக அந்தஸ்து, பல புனித திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், அரசியல்வாதிகள் மூலம் பிரபல்ய யோகம், உயர்கல்வி, பட்டய படிப்பில் தேர்ச்சி, பதவி உயர்வு, முன்னோர்களின் சொத்துக்களை பெரும் யோகம், பித்ரு ஆசியின் மூலம் நினைத்த காரியங்கள் மற்றும் லட்சியங்களை அடையும் தன்மை, கலைத்துறை, ஜோதிடம், ஆன்மிகம் போன்றவற்றில் அபரிவிதமான வளர்ச்சி, நல்லோர் அனைவரும் தர்ம்மத்தை காக்கும் யோகம், வெளிநாடு வெளியூர்களில் இருந்து வரும் அபரிவித வளர்ச்சி, வியாபாரத்தில் நார்ப்பெயர், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து வரும் முன்னேற்றம், தன்னம்பிக்கையும், தைரியமும் அதீத அளவில் ஜாதகருக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் "வாழ்த்துக்கள்"

குரு பகவான் தனது 5ம் பார்வையால் மீனா லக்கின அன்பர்களுக்கு உடல் உயிர் ஸ்தானமான லக்கின பாவகத்தை வசீகரிப்பது, சிறப்பிலும் சிறப்பை தரும் அமைப்பாகும், குரு தனது பார்வையின் மூலம் நன்மையை தருகிறார் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம், குரு பகவான் எந்த ஒரு லக்கினம் என்றாலும் சரி 1,5,9ம் பாவகங்களில் சஞ்சாரம் செய்யும் பொழுதும் சரி, தனது 5,9ம் பாவக சுவீகரிப்பின் மூலமும் சரி, சுபயோகங்களை தன்னிறைவாக வாரி வழங்குவார், குறிப்பாக மீன லக்கின அன்பர்களுக்கு லக்கினாதிபதி என்ற முறையில் கோண பாவகத்தில் சஞ்சாரம் செய்து, தனது வீட்டை தானே பார்ப்பது 100% யோக வாழ்க்கையை தரும் அமைப்பாகும், ( சுய ஜாதகத்தில் இந்த அமைப்பு இருப்பின் ஜாதகர் மிகுந்த யோகசாலியாக திகழ்வார் ) உடல் நலம் மன நலம் சிறப்பாக அமையும், தெய்வீக ஆற்றல் ஓங்கும், புதிய சிந்தனை புதிய திட்டமிடுதல்கள் தங்களின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க யோக வாழ்க்கையை நல்கும், இதுவரை சமுதாயத்தில் போராடிக்கொண்டு இருந்தவர்கள் சுயமாக முன்னேற்ற பாதையில் வெற்றிநடை போடுவார்கள், மனநிம்மதியான யோக வாழ்க்கை, முதலீடுகளில் இருந்துவரும் வருமானம், தெய்வீக அனுக்கிரகம், பல தொழில் செய்யும் யோகம், அந்நிய நபர்கள் மூலம் வாழ்க்கையில் அபரிவித யோக வாழ்க்கையை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், லக்கின வழியில் இருந்து 100% விகித நன்மைகளை பெறுவது உறுதி  வாழ்த்துக்கள் .

குரு பகவான் தனது 7ம் பார்வையால் மீன லக்கின அன்பர்களுக்கு வீரிய ஸ்தானம் எனும் மூன்றாம் பாவகத்தை வசீகரிப்பது, வரவேற்கத்தக்கது என்ற போதிலும், சகோதரம் மற்றும் எடுக்கும் முயற்சிகள் வழியில் இருந்து சிறு சிறு இன்னல்கள் உருவாகும், குல தெய்வ ஆசி ஜாதகருக்கு சுபகாரிங்கள் அனைத்திலும் வெற்றியை தரும், கற்ற கல்வி வழியில் இருந்து யோக  வாழ்க்கையும், அபரிவிதமான வருமானமும் தங்களின் வாழ்க்கையில் மேலும் சிறப்பை சேர்க்கும், கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பெயரும் புகழும் உண்டாகும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், தெய்வீக அனுக்கிரகம் கொண்டு வாழ்க்கையில் அறிய பல சாதனைகளை குவிக்கும் நேரமிது, தனது சமயோசித புத்திசாலித்தனம் வாழ்க்கையில் ஏற்றமிகு நல்ல முன்னேற்றங்களை நல்கும், ஆசிரிய பணியில் கல்வி துறையில் உள்ளோருக்கு இந்த குரு பெயர்ச்சி அபரிவித நன்மைகளை வாரி வழங்கும், ஆராய்ச்சியில் உள்ளார்கள் வெற்றி பெறுவார், வியாபாரம் மற்றும் கமிஷன் ஏஜென்ட்  போன்ற தொழில் செய்வோர் வாழ்க்கையில் அபரிவித  முன்னேற்றங்களை  பெறுவார்கள், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும் நல்ல நேரமிது, வீரிய ஸ்தான வழியில் இருந்து மீன லக்கின அன்பர்கள் பரிபூர்ண நன்மைகளையும் யோகங்களையும் பெறுவார்கள்.

 குரு பகவான் தனது 9ம் பார்வையால் மீன லக்கின அன்பர்களுக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் வளர்பிறை காலங்களில் நன்மையை தரும், ஜாதகருக்கு திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், கல்வியில் முன்னேற்றம் உண்டு, உயர் கல்வியில் தேர்ச்சி அடைவர், புது முயற்சிகள் யாவும் தன்னிறைவான வெற்றியை தரும், உறவுகள் வழியிலான நன்மைகள் தேடிவரும், கல்வி துறையில் வெற்றி உண்டாகும், குல தெய்வ ஆசி வாழ்க்கையில் அபரிவிதமான முன்னேற்றங்களை நல்கும், ஆய்வு கல்வியில் தேர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும், பல தொழில் செய்யும் யோகம் உண்டு, உணவு பொருட்கள் சாந்த வியாபாரம் செய்வோர் வாழ்க்கையில் அபரிவித வளர்ச்சியை பெறுவார்கள், நல்ல ஆண் வாரிசு அமையும், அறிவில் சிறந்து விளங்கும் தன்மையும், புதிய கண்டுபிடிப்பின் மூலம் உலக புகழும் ஏற்படும், இந்த குரு பெயர்ச்சியின் மூலம் தன்னிறைவான வாழ்க்கையை பெறுவார்கள் மீன லக்கின அன்பர்கள்.

குறிப்பு :

மீன  லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 9,1,3,5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 9,1,3,5ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

சனி, 27 அக்டோபர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - கும்பம் )



 சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : கும்பம்

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியாகவும், ஸ்திர வாயு தத்துவ தன்மையை பெற்றதுமான கும்ப ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, சுய வர்க்க கிரகத்தின் வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் கும்ப லக்கினத்திற்க்கு குடும்பம் மற்றும் லாப ஸ்தான அதிபதியாகிறார், கும்ப லக்கினத்திற்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்திற்க்கு பெயர்ச்சி ஆகும் குரு பகவான் கேந்திர ஆதிபத்திய தோஷம் என்ற நிலையை பெறுவது கும்ப லக்கின அன்பர்களுக்கு உகந்தது அல்ல, ஒரு வகையில் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் ( சுய வர்க்கம் ) என்பதால் தொழில் வழியில் இருந்து நன்மைகளை வழங்கிய போதிலும், கும்ப லக்கின  அன்பர்கள் தனது மனம் சொன்னபடி நடந்தால் இன்னல்கள் ஏற்படும், கவுரவ குறைவு உண்டாக வாய்ப்பு உண்டு, பொது காரியங்களில் மிகுந்த கவனம் தேவை, தொழில் வழியிலான புதிய முயற்சிகள் அல்லது முன்னேற்றம் சார்ந்த விஷயங்களில் சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே ஈடுபடவும், இல்லையெனில் அமைதி காப்பதே சாலச்சிறந்தது, ஏமாற்றத்தை தவிர்க்க அதுவே சிறந்த வழி, தனது வாழ்க்கை துணை வழியிலான ஆதரவும், பொருளாதர உதவிகளும் கும்ப லக்கின அன்பர்களுக்கு அபரிவிதமாக வந்து சேரும், குறிப்பாக தனது வாழ்க்கை துணையின் பெயரில் செய்யும் தொழில் வழியிலான விருத்தி மிகவும் சிறப்பாக அமையும், தனது பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிக மிக அவசியமானதாகிறது, சுய தொழில் புரிவோர் அனைவரும் மிகுந்த கவனமுடன் இயங்குவது பேரிழப்பை தவிர்க்க உதவும், குறிப்பாக சுய ஒழுக்கமும், மனக்கட்டுப்பாடும் அதிக அளவில் தேவைப்படும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் கும்ப லக்கின அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகத்தை வசீகரிப்பது, வருமானம் சார்ந்த விஷயங்களில் இன்னல்களையும் துன்பங்களையும் அதிக அளவில் தரக்கூடும், குடும்ப வாழ்க்கையில் துன்பங்களும், இல்லற வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்களும் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு, முறையான நிதி மேலாண்மை செய்யவில்லை எனில் கடுமையான நிதி நெருக்கடிகளை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படலாம், தனது பேச்சு திறமையை சிறப்பாக கையாண்டு நன்மைகளை பெரும் நேரமிது, உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலை உருவாகும் என்பதால் நிதி கையிருப்பை உறுதிசெய்துகொள்வது நல்லது, வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் வழியில் வீண் வாக்குவாதங்களை வளர்த்துக்கொள்வதும், உறவுகள் வழியில் பகைமை பாராட்டுவதும் மிகுந்த துன்பங்களை தரக்கூடும், சேமிப்பின் மூலம் நலம்  பெற வேண்டிய நேரமிது, வாழ்த்துக்கள்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் கும்ப லக்கின அன்பர்களுக்கு மாத்ரு ஸ்தானம் எனும் நான்காம் பாவகத்தை வசீகரிப்பது ஆண்கள் எனில் பெற்ற தாய்க்கும், பெண்கள் எனில் பெற்ற தகப்பாவுக்கும் இன்னல்களை தரக்கூடும், உடல் நலம் மற்றும் மருத்துவ செலவினங்களை தவிர்க்க இயலாது, வண்டி வாகனங்களில் செல்வோர் மிகுந்த பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்வது சகல நலன்களையும் தரும், போக்குவரத்து மற்றும் சரக்கு உந்து சார்ந்த தொழில் செய்வோர் வருமானம் சார்ந்த இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலை உருவாகக்கூடும், சுகபோக வாழ்க்கைக்கு யாதொரு குந்தகமும் வாராமல் பார்த்துக்கொள்வது நல்லது, தன்னிறைவான பொருளாதார மேம்பாடு, நிதி மேலாண்மை, சரியான திட்டமிடுதல்கள், எதிர்ப்புகளை சிறப்பாக கையாளும் தன்மை என சில நன்மைகள் நடைமுறைக்கு வந்த போதிலும், பாதிப்புகளை தவிர்க்க இயலாது, கேளிக்கை, பொழுது போக்கு அம்சங்களில் அதீத கவனம் செலுத்தினால் வாழ்க்கையே சூனியமாகிவிட வாய்ப்பு உண்டு என்பதை கருத்தில் கொள்க.

 குரு பகவான் தனது 9ம் பார்வையால் கும்ப லக்கின அன்பர்களுக்கு சத்ரு ஸ்தானம் எனும் ஆறாம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் வளர்பிறை காலங்களில் நன்மையை தரும், இருப்பினும் தேய் பிறை காலங்கள் வெகுவான இன்னல்களை தரும், உடல் நலம், கடன் தொந்தரவு, எதிரி தொந்தரவு, எதிர்ப்புகளை சமாளிக்க இயலாத சூழ்நிலை, போதிய வருமானம் இன்மை, வீண் செலவினங்கள், வட்டி வரவு செலவு சார்ந்த பிரச்சனைகள் என்ற வகையில் துன்பங்களை தரும், புதிய முயற்சிகள் வழியிலான வெற்றிகள் பாதிக்கப்படும் அல்லது தடை ஏற்படும், உறவுகள் வழியில் மனக்கசப்பு, பொருளாதார சிக்கல்கள், சரியான வாழ்க்கை பாதையை நிர்ணயம் செய்ய இயலாத நிலை, வயிறு சார்ந்த இன்னல்கள் என்ற வகையில் அதிக அளவிலான துன்பங்களை வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்கது, எந்த காரணத்தை கொண்டு மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பது உகந்தது அல்ல, அவர்களால் வரும் இன்னல்கள் தங்களின் வாழ்க்கையில் வெகுவான பாதிப்பை தரும், வாழ்க்கை முன்னேற்றத்தை கடுமையாக பாதிக்கும்.

குறிப்பு :

கும்ப லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 10,2,4,6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 10,2,4,6ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 23 அக்டோபர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - மகரம் )



சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : மகரம் 

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியாகவும், சர மண் தத்துவ தன்மையை பெற்றதுமான மகர ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, சுய வர்க்க கிரகத்தின் வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் மகர லக்கினத்திற்க்கு வீரியம் மற்றும் விரைய ஸ்தானத்திற்க்கு அதிபதி என்ற நிலையை பெறுகின்றார், மேலும் தற்போழுது லாப ஸ்தானமான 11ம் பாவகத்திற்க்கு பெயர்ச்சி ஆகும் குரு பகவான் தனது சுப திருஷ்ட்டி என்ற நிலையில் 3,5,7ம் பாவகங்களை வசீகரம் செய்கிறார், இதன் மூலம் மகர இலக்கின அன்பர்கள் 90% சதவித ராஜ யோக பலாபலன்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர்கள் ஆகிறார்கள், 11ல் அமர்ந்த குரு பகவான் சம வீடு என்ற நிலையில் மகர இலக்கின அன்பர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவது வரவேற்க தக்கது, தனது வாழ்க்கை துணை நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து அதிர்ஷ்டங்களை பரிபூரணமாக  சுவீகரிக்கும் வல்லமையை தருகின்றார், எதிர்பாலினம், வெளிநாடுகளில் இருந்து வரும் திடீர் தனவரவு, வியாபர வழியில் இருந்து வரும் அதிக பொருள் சேர்க்கை, தன்னம்பிக்கை, சுய மரியாதை வாழ்க்கை, தெய்வீக அனுகிரகம், எதிர்பாராத அதிர்ஷ்டம் என்றவகையிலும், புதிய முயற்சிகள், புதிய சந்தர்ப்பங்கள், புதிய வாய்ப்புகள் என அனைத்திலும் புதுமையான வெற்றிகளை குவிக்கும் நேரமிது, லாப ஸ்தானத்தில் குருவின் சஞ்சாரம் மகர லக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதுமட்டும் உறுதி வாழ்த்துக்கள்.

 குரு பகவான் தனது 5ம் பார்வையால் மகர லக்கின அன்பர்களுக்கு வீரிய ஸ்தானம் எனும் மூன்றாம் பாவகத்தை வசீகரிப்பது, வரவேற்கத்தக்கது நவ கிரகங்கள் யாவும் சம வீடுகளான 3,11ம் பாவகங்களை வசீகரிப்பதும், சஞ்சாரம் செய்வதும் 100% விகித நன்மைகளை மட்டுமே வாரி வழங்கும் இது பொது விதி, அதன் படி மகர லக்கின அன்பர்களுக்கு குரு பகவானின் லாப ஸ்தான சஞ்சாரமும், வீரிய ஸ்தான வசீகரமும் சிறப்பான யோக வாழ்க்கையை மட்டுமே தருவது கவனிக்கத்தக்கது, எடுக்கும்  காரியங்கள் யாவிலும் வெற்றியை தரும் யோகமான நேரமிது, அதிர்ஷ்ட லட்சுமியின் அருள் பார்வை  மகர லக்கின அன்பர்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், செய்த முதலீடுகள் வழியில் இருந்து அதீத லாபமும் பொருளாதார முன்னேற்றத்தையும் பெறுவார்கள், நல்ல உறக்கமும், நிம்மதியான வாழ்க்கையும் ஜாதகரின் வாழ்க்கையில் புதுவித உத்வேகத்தை வாரி வழங்கும், மனம் அமைதியும் சாந்தமும் பெரும், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், வியாபாரிகளுக்கு அபரிவிதமான யோக வாழ்க்கையை வாரி வழங்கும் நேரமிது, தெய்வீக அனுக்கிரகம் மூலம் புதிய தொழில்  முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிபெறுவார், தகவல் தொழில் நுட்பம் சாந்த துறையில் வெற்றி உண்டாகும், எழுத்து பத்திரிக்கை, ஊடக தொழில் துறையில் உள்ளவர்களுக்கு அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும், நல்ல விஷயங்களும், சரியான அணுகுமுறையும் வாழ்க்கையில் சுபயோகங்களை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை மகர லக்கின அன்பர்களே, அதிர்ஷ்டத்தின் மூலம் வாழ்க்கையில் பல படிகள் முன்னேறி சென்று வெற்றிவாகை சூடும் நேரமிது " வாழ்த்துக்கள் "  

 குரு பகவான் தனது 7ம் பார்வையால் மகர லக்கின அன்பர்களுக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் ஐந்தாம் பாவகத்தை வசீகரிப்பது வரவேற்கத்தக்கது, ரிஷபம் ( சுக்கிரன் ) எதிர்வர்க்க கிரகம் என்ற போதிலும், கோண வீடாக அமைவது மிகுந்த சிறப்புகளை தரும், தான் கற்ற கல்வி, தனது சமயோசித அறிவு திறன், குலதெய்வ ஆசி, இறை அருளின் கருணை, இணையற்ற பேச்சு திறன் யாவும் மகர லக்கின அன்பர்களுக்கு இந்த ஒருவருட காலத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை வாரி வழங்கும், புதிய சகாப்தத்தை வெற்றிகரமாக துவங்கும் வாய்ப்பைத் தரும், எந்த ஓர் நல்ல  காரியமும் துவங்கிய வேகத்தில் வெற்றியை தரும், எதிர்ப்புகள் யாவும் விலகும், நல்லோர் அறிமுகமும்,  பெரிய மனிதர்களால் ஆதாயம், அரசியல் செல்வாக்கு, கலைத்துறை சார்ந்த முன்னேற்றம்,கலைகளில் தேர்ச்சி, கல்வியில் வெற்றி, ஆரோக்கியம் உடல் நலனில் ஆர்வம், அளவில்லா வருமானம், அபூர்வ அதிசய நிகழ்வுகள் மூலம் வாழ்க்கையில் பிரகாசிக்கும் தன்மை என்ற விதத்தில் சுபயோகங்களை வாரி வழங்கும், தொண்மையான புனிதம் மிக்க புண்ணிய ஷேத்திரங்களுக்கு சென்றுவரும் யோகம் உண்டு, இதுவரை புத்திர பாக்கியம் இன்றி தவித்த அன்பர்களுக்கு நல்லதோர் யோகம் மிக்க ஆண் வாரிசு அமையும், வாழ்க்கை இனிமை மிக்கதாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை " வாழ்த்துக்கள் "

குரு பகவான் தனது 9ம் பார்வையால் மகர லக்கின அன்பர்களுக்கு களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ஒரு வகையில் நன்மையை தரும் என்ற போதிலும், மகர லக்கினத்திற்கு களத்திர ஸ்தானம் மற்றும் கேந்திர பாவகமாக அமைவது குரு பார்வையின் மூலம் இன்னல்களை தரும் என்பதை  தவிர்க்க இயலாது, தனது வாழ்க்கை துணை வழியில் வரும் தொல்லைகள் சற்று அதிகமாகவே இருக்கும், வண்டி வாகனம், வீடு நிலம் இடம் சார்ந்த தொந்தரவுகள் சற்று கடுமையான பாதிப்பையும், இழப்பையும் தரக்கூடும், ஆடம்பர செலவுகள் பெருத்த ஏமாற்றங்களை தரக்கூடும், சுக போக வாழ்க்கை சற்று பாதிக்க வாய்ப்பு உண்டு, கூட்டு முயற்சிகள் அதீத தடை தாமதங்களை சந்திக்கும், வெளியூர் வெளிநாடு வாழ்க்கை பெரிய பின்னடைவை தரும் ஏமாற்றங்களும், இழப்புகளும் மகர லக்கின அன்பர்களை வெகுவாக பாதிக்கும், சில இழப்புகள் வாழ்க்கையை வேறு பாதையை நோக்கி இழுத்து செல்லக்கூடும், எதிர்பாலின அமைப்பினரிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதும், தேவையற்ற விஷயங்களில் தலையீடு செய்வது சற்று கடுமையான இன்னல்களை தரும், புதிய கூட்டு முயற்சிகளை தவிர்ப்பது ஜாதகரின் வாழ்க்கையில் நிம்மதியை தரும்.

குறிப்பு :

மகர லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 11,3,5,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 11,3,5,7ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 19 அக்டோபர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - தனுசு )


 சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : தனுசு

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியாகவும், உபய நெருப்பு தத்துவ தன்மை பெற்றதுமான தனுசு லக்கின அமைப்பை பெற்ற அன்பர்களுக்கு, சுய வர்க்க கிரக ஆளுமையின் கீழ் ( செவ்வாய் ) இயக்கத்தை பெற்றிருக்கும் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் ஒருவகையில் லக்கினாதிபதி என்ற அந்தஸ்த்தையும் பெறுகின்றார், சுக ஸ்தானமான 4ம் பாவகத்திற்கு அதிபதி என்ற அந்தஸ்த்தையும் பெறுகின்றார், எனவே லக்கினத்திற்கு 12ல் மறைவும், 4ம் பாவகத்திற்கு 9ல் கோண பலம் பெறுகின்றார், குரு பகவான் விருச்சிகத்தில் அமர்ந்த நிலையில் இருந்து தனுசு லக்கின அன்பர்களுக்கு சற்று வீண் விரயங்களை தரக்கூடும், மேலும் சுப விரையங்களாக மாறுவதற்கான சந்தர்ப்பங்களை தனசு லக்கின அன்பர்கள் உருவாக்கி கொள்வது அவசியமாகிறது, மேலும் எதிர்பாராத மனஉளைச்சல், மனப்போராட்டம், மனஅழுத்தம் போன்றவை மென்மேலும் துன்பங்களை தரக்கூடும், நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்ற நிலையும், அனைவராலும் துன்பம் என்ற நிலையும் தனுசு லக்கின அன்பர்களுக்கு மிகப்பெரிய சவால்களாக அமையும் என்பது கவனிக்கத்தக்கது, லக்கினாதிபதி மறைவு பெறுவதும், சுக ஸ்தான அதிபதி கோணபலம் பெறுவதும் தனுசு லக்கின அன்பர்களுக்கு உகந்தது அல்ல, வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணமும், தான் எடுக்கும் முடிவுகளில் தெளிவும் தேவை என்பதை உணர்வது அவசியமாகிறது, மேலும் அதிக முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் தனுசு லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தானம் எனும் நான்காம் பாவகத்தை வசீகரிப்பது, உகந்தது அல்ல வண்டி வாகனம், வீடு சொத்து சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனம் தேவை, சிறு கவனமின்மை கூட தனுசு லக்கின அன்பர்களுக்கு கடுமையான பாதிப்பையும் இழப்பையும் தரக்கூடும் என்பதால், பயணங்களில் கவனமும், சொத்து சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையும் கொண்டிருப்பது அவசியமாகிறது, தனது பெற்றோரை கவனமுடன் பாதுகாப்பது ஜாதகருக்கு வரும் இன்னல்களில் இருந்து காத்தருளும், அனைவரிடமும் சுமுக போக்கை கையாள்வது ஜாதகருக்கான வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும், புதிய வீடு, வண்டி வாகனம் போன்றவற்றில் முதலீடு செய்யுமுன் சுய ஜாதக வலிமை நிலையை தெளிவாக உணர்ந்து செய்வதே சகல நலன்களையும் வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் தனுசு லக்கின அன்பர்களுக்கு சத்ரு ஸ்தானம் எனும் ஆறாம் பாவகத்தை வசீகரிப்பதும், ரிஷபம் எதிர் வர்க்க கிரகம் என்பதும் சற்று கடுமையான இன்னல்களை தரும் அமைப்பாகும், குரு பார்வை பொதுவாக கோண வீடுகளை ( 1,5,9 ) சுவீகரிக்கும் பொழுதும், சம வீடுகளை ( 3,11 ) சுவீகரிக்கும் பொழுது மட்டுமே சுபயோகங்களை வாரி வழங்கும் , கேந்திர வீடுகளை பார்வை செய்யும் பொழுது இன்னல்களையே வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, குருபகவானின் சமசப்த பார்வை சத்ரு ஸ்தானத்திற்கு விழுவது கடுமையான இன்னல்களையே தரும், குறிப்பாக ஜாதகரின் குறுகிய கால வருமானங்களில் தொய்வு ஏற்படும், உடல் நலம் பாதிக்கும் குறிப்பாக தலை மற்றும் வயிறு சார்ந்த இன்னல்கள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு, மேலும் கடன், வரவு செலவுகள் வெகுவாக பாதிக்க வாய்ப்பு உண்டு என்பதால் நிதி சார்ந்த விஷயங்களில் யோசித்து முடிவெடுப்பது சகல நன்மைகளையும் தரும், மேலும் தனது வார்த்தைகள் மூலம் அதீத துன்பங்கள் உண்டாகவும், எதிர்ப்புகள் அதிகரிக்கவும் சந்தர்ப்பம் உண்டு என்பதால் நாவடக்கம் தனுசு லக்கின அன்பர்களுக்கு அவசியமாகிறது, குரு பார்வையால் ஏற்படும் ஒரே நன்மை மற்றவர்கள் பணம் தன் கையிருப்பாக மாறும், அதன் வழியிலான வருமானம் அதிகரிக்கும் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் தனுசு லக்கின அன்பர்களுக்கு ஆயுள் ஸ்தானம் எனும் எட்டாம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக அமைவதும் சிறப்பான நன்மைகளை தரும், திடீர் அதிர்ஷ்டம் என்பது தனுசு லக்கின அன்பர்களுக்கு தேய்பிறை காலங்களில் கைகொடுக்கும், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் ஆதரவும், பொருளாதார உதவிகளும் தனுசு லக்கின அன்பர்களுக்கு பேருதவியாக அமையும், ஆயுள் நீடிக்கும், உடல் நலம் மற்றும் இழப்புகளில் இருந்து மீண்டு வரும்  யோகம் உண்டாகும், பங்கு சந்தை லாட்டரியில் யோகம் உண்டு, புதையல் கனிம பொருட்கள் வழியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் வழியில் இருந்தும் ஜாதகருக்கு அபரிவிதமான தனசேர்க்கை உண்டாகும், தெய்வீக  அனுக்கிரகம் சுய ஜாதகத்தில் ஆளுமை செய்யும் என்பதால் ஆன்மீக வெற்றி உண்டாகும், புதிய மனிதர்கள், வேற்று மதத்தினர், வேற்று இனத்தினர் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெரும் யோகம் உண்டாகும் என்பது தனுசு லக்கின அன்பர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி வழங்கும் நன்மையாகும்.

குறிப்பு :

தனுசு லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 12,4,6,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,4,6,8ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

வியாழன், 18 அக்டோபர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - விருச்சிகம் )



சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் ராஜ கிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை அன்பர்களே !

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : விருச்சிகம்

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியாகவும், ஸ்திர நீர் தத்துவ தன்மையை பெற்றதுமான விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கும் குரு பகவான், தனது வர்க்க கிரக ஆளுமையின் கீழ் ( செவ்வாய் ) இயக்கத்தை பெற்றிருக்கும் விருச்சிக ராசிக்கு அடிப்படையிலே சுபயோகங்களை வாரி வழங்கும் தன்மை பெற்றவர் என்பதில் மாற்று கருத்து இல்லை, விருச்சிக லக்கின அன்பர்களுக்கு ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் கல்வி கேள்விகளில் தேர்ச்சியையும், தெளிவான சிந்தனை மூலம் சுபயோகங்களை பெரும்  தன்மையையும் தருவார், விசாலமான மனம் கொண்டவர்கள் விருச்சிக லக்கின அன்பர்கள் என்பதால், இவர்களின் மனதில் உள்ள அபிலாசைகள், லட்சியங்கள், நல்ல எண்ணங்கள் யாவும் நிறைவேறும் தருணம் இது, மனம் சந்தோசம் கொள்ளும் நிகழ்வுகளுக்கு இந்த வருடத்தில் குறைவு இருக்காது, கல்வியில் தேர்ச்சி, உயர் கல்வி வாய்ப்பு, தெய்வீக அனுக்கிரகம், திருமண யோகம், குழந்தை பாக்கியம், தர்ம சிந்தனை, சமுதாயத்தில் உயரிய அந்தஸ்து, அரசு ஆதரவு, அழிவு பொருட்கள் சார்ந்த வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் அன்பர்களின் வாழ்க்கையில் திடீர் முன்னேற்றம் மற்றும் பொருளாதார தன்னிறைவு, உடல் நல பாதிப்பில் இருந்து விரைவில் விடுபடும் தன்மை என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும், விருச்சிக ராசி அன்பர்களின் ஆசைகள் எண்ணங்கள் யாவும் பூர்த்தியாகும் நேரம் இதுவென்பதால், விழிப்புணர்வுடன் செயல்பட்டு வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் ஐந்தாம் பாவகத்தை வசீகரிப்பது, சிறப்பான யோக வாழ்க்கையை தரும், கல்வியில் சிறந்து விளங்கும்  யோகத்தை தரும், திருமணம் கைகூடி வரும், காதல் நிறைவேறும், குரு பகவான் கோண பலம் பெற்று தனது வீட்டையே வசீகரம் செய்வது வரவேற்கத்தக்கது, இது 5ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்யும், இதனால், விருச்சிக லக்கின  அன்பர்களுக்கு தன்னிறைவான யோக வாழ்க்கை அமையும், அதிர்ஷ்டம், ஆண்வாரிசு, பூர்வீக சொத்து வழியில் முன்னேற்றம், லாட்டரியில் யோகம், பங்கு சந்தை மூலம் அதீத லாபம், தனது சமயோசித புத்திசாலித்தனம் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பு, குல தெய்வ ஆசீர்வாதம் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம், புதிய முயற்சிகள் வெற்றி பெரும் தன்மை, தெய்வீக அனுபவம், ஆன்மீக பெரியோர் ஆசிர்வாதம் என்ற வகையில் மிகுந்த சுபயோகங்களை வாரி வழங்கும், மனநிம்மதியான  வாழ்க்கை அமையும் அனைத்திலும் திருப்தி, உறவுகள் வழியில் ஆதரவும் தேடி வரும், பெற்ற குழந்தைகள் பெற்றோருக்கு பெருமை சேர்ப்பார்கள், தொழில் வழியிலான  நுண்ணறிவு மேலோங்கி அபரிவித வளர்ச்சியும், வருமான வாய்ப்பும் அதிகரிக்கும், குரு பகவானின் 5ம் பார்வை விருச்சிக லக்கின அன்பர்களுக்கு சுபயோகங்களையே பரிபூர்ணமாக வாரி வழங்குகிறது.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகத்தை வசீகரிப்பது, உகந்தது அல்ல இது வாழ்க்கை துணை வழியில் இருந்தும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்தும் வீண் செலவினங்களை வாரி வழங்கும், மேலும் இவர்களுடனான நல்லுறவை பாதிக்கும் வண்ணம் சில நிகழ்வுகள் நடைபெற கூடும் என்பதால் இந்த ஒரு வருடம் விருச்சிக லக்கின அன்பர்கள் தனது வார்த்தையிலும், பேச்சிலும் அதிக கவனமும் எச்சரிக்கையும் கொண்டு இருப்பது அவசியமாகிறது, மேலும் நிதி சார்ந்த மேலாண்மையில் அதிக கவனம் தேவைப்படும், கூட்டு முயற்சியை தவிர்ப்பதும், வெளியூர் வெளிநாடு பயணங்களில் சரியான திட்டமிடுதல்களை மேற்கொள்வது அவசியமாகிறது, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை மனதில் கொண்டு விட்டுக்கொடுத்து செல்லும் தன்மையின் மூலம் நலம் பெரும் கட்டாயத்தில் விருச்சிக லக்கின அன்பர்கள் உள்ளனர் வாழ்த்துகள்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு பாக்கிய ஸ்தானம் எனும் ஒன்பதாம் பாவகத்தை வசீகரிப்பது, விருச்சிக லக்கின அன்பர்களின் வாழ்க்கையில் சுபயோகங்களை வாரி வழங்க தயார் நிலையில் இருப்பது உறுதியாகிறது, குறிப்பாக சமூக அந்தஸ்து, அரசியல் பதவிகள், தெய்வீக அனுபவம், ஆன்மீக திருத்தலங்களுக்கு புண்ணிய யாத்திரை செல்லும் யோகம், பெரிய மனிதர்களின் ஆதரவின் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பு, புதிய சிந்தனைகள் மூலம் எதிர்கால வாழ்க்கைக்கான திட்டமிடுதல்களை மேற்கொள்ளும் தன்மை, எதிர்பாராத உதவிகள், கற்ற கல்வி வழியிலான  முன்னேற்றம் எதிர்ப்புகளை வெல்லும் தன்மை, நல்ல மனநிலை, தெளிவான சிந்தனைகள், ஆய்வு கல்வியில் தேர்ச்சி, என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும், தனது வர்க்க கிரகமான சந்திரனின் வீட்டை ( கடகம் ) சுவீகரிக்கும், குரு பகவான் பெயரும் புகழும், மதிப்பு மரியாதையையும் வாரி வழங்குவார், தெய்வீக ஆற்றல் மூலம் வாழ்க்கையில் அபரிவிதமான வளர்ச்சியை பெரும் நேரமாக இதை கருதலாம், சாஸ்த்திர ஞானம் கொண்டு வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தன்னிறைவாக பெறுவதற்கான சந்தர்ப்பங்களை குருவின் சுபதிருஷ்ட்டி வாரி வழங்கும் நேரமிது என்பதால், விருச்சிக லக்கின அன்பர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வெற்றிக்கனியை பறிக்க "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.

குறிப்பு :

விருச்சிக லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 1,5,7,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 1,5,7,9ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 6 அக்டோபர், 2018

ஜோதிட ஆலோசனை : வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு உண்டா ? சிறப்பான வேலை அமையுமா ?


கேள்வி :

பிறந்த தேதி : 04.05.1995. 
பிறந்த நேரம் : இரவு 10.10. 
இடம் : கும்பகோணம். 

1) வெளி நாட்டில் படிக்க ஆசைப்படுகிறார். அதற்கு நேரம் காலம் நன்றாக உள்ளதா என்று ஆய்வு செய்து சொல்ல வேண்டுகிறேன். 

2) லக்னாதிபதி 12ல் இருப்பதும், 4ம்இடம், 6ம்இடம், 8ம் இடங்களைப் பார்ப்பதும், 6ஆம் அதிபதி உச்ச மாகி குரு பார்வை பெறுவதால் உள்ள பலன். 

3) செவ்வாய் 8இல் நீசபங்கமாகி குரு பார்ப்பதால் உள்ள பலன். 

4) சந்திரன் ஸப்தம கேந்திரத்தில் இருக்கும் பலன்கள். 

5) சனியின் 3ம் இட பலன்கள், பார்வை பலன்களை பார்த்து சொல்ல வேண்டுகிறேன். 

6) ராகு 11லும்,கேது 5ல்இருக்கும்(சூரியனின் சேர்ந்து) 
பலன்கள். 

7) சனியின் 2,3 இட ஆதிபத்யம் சனி திசை யில் எப்படி இருக்கும். செவ்வாய், குரு, சுக்கிரன், பாதகாதிபதியின் சாரத்தில் இருக்கும் பலன்கள். 


பதில் :

1) நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 6,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சற்று கடுமையான இன்னல்களை தருவது கவலை தரும் விஷயம் என்ற போதிலும், குரு திசையில் தற்போழுது நடைமுறையில் உள்ள ராகு புத்தி ஜாதகருக்கு 2,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் யோக பலன்களை தருவது வரவேற்கத்தக்கது, எனவே ஜாதகர் ராகு புத்தியில் கல்வி சார்ந்த விஷயங்களில் நல்லதொரு முன்னேற்றங்களையும், வெற்றியையும் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை, இருப்பினும் சுய ஜாதகத்தில் வெளியூர் அல்லது வெளிநாடு சார்ந்த முன்னேற்றங்களை குறிக்கும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, வெளிநாடு சார்ந்த கல்வி அமைப்பில் வெகுவான தடைகளை தரக்கூடும் என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகிறது, இருப்பினும் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் மிகவும் வலிமை பெற்று இருப்பது ( லாப ஸ்தானம் ) வரவேற்கத்தக்கது வெளிநாட்டில் கல்வி சார்ந்த வெற்றிகளை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதிப்பது வெளிநாடு செல்வதில் அதீத தடைகளை தரக்கூடும், நடைபெறும் ராகு புத்தி மிகவும் வலிமை பெற்ற 2,5,11ம் வீடுகளின் பலாபலன்களை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு கல்வி சார்ந்த விஷயங்களில் அபரிவிதமான நன்மைகளை வாரி வழங்கும், ஜாதகர் பூர்வீகத்தில் ( தமிழகத்தில் ) கல்விக்கான முயற்சிகளை மேற்கொள்வது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், மேலும் ஜாதகர் தனது உடல் நலம், நிதி மேலாண்மை, நண்பர்கள் கூட்டாளிகள்  அமைப்பில் இருந்து வரும் இன்னல்களை மிக நுணுக்கமாக கையாண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.

2) லக்கினாதிபதி 12ல் இருப்பது ஜாதகருக்கு சற்று இன்னல்களை தரும் என்ற போதிலும், லக்கினம் எனும் முதல் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வரவேற்கத்தக்கது, ஜாதகருக்கு சுய ஒழுக்கம், பெரியோர் ஆதரவு, பித்ருக்கள் ஆசி என்ற விதத்தில் யோகத்தை தரும், கல்வியில் வெற்றியும், அறிவு திறன் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்களை அதிகரிக்கும், ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றத்தை தருவதுடன் பட்டய படிப்பில் மிகப்பெரிய வெற்றியும், முதல் நிலையையும் தரும். குருவின் பார்வைகள் சுய ஜாதகத்திற்கு வலிமை சேர்க்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது இருப்பினும் 4ம் வீடு சற்று வலிமை பெற்று இருப்பது வரவேற்கத்தக்கது, 6,8ம் வீடுகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, சுக்கிரன் குரு பார்வை பெறுவதும் சிறப்பானததல்ல.

3) செவ்வாய் குரு பார்வை பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தரும் என்பதுடன், உடல் வலிமையை அதிகரிக்கும், இருப்பினும் சுய ஜாதகத்தில் 8ம் வீடு பாதிக்கப்படுவது ஜாதகருக்கு ரண சிகிச்சையை தரக்கூடும், வாழ்க்கை துணை வழியில், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் எதிர்பாராத இழப்புகளையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

4) சந்திரன் இங்கு நிற்பது கடுமையான இன்னல்களை தரக்கூடும் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து, மேலும் நண்பர்கள் கூட்டாளிகள் மூலம் தாங்க இயலாத  மனத்துயரத்தை தருவதை தவிர்க்க இயலாது, லக்கினத்தை பார்வை செய்வது ஜாதகருக்கு சற்று நன்மையை தரும் என்பதுடன், வரும் இன்னல்களில் இருந்து விடுபட சரியான முன்யோசனைகளை வழங்கும்.

5) சனி தான் அமர்ந்த நிலையில் நன்மையையும், 6ம் பார்வை அமைப்பில் யோகத்தையும், 7ம் பார்வை அமைப்பில் இன்னல்களையும், 10ம் பார்வை அமைப்பில் துன்பத்தையும் தரக்கூடும் என்ற போதிலும், பொதுவாக சனி பகவான் ஜாதகருக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை வழங்குகின்றார் என்பது கவனிக்கத்தக்கது, நல்லோர் சேர்க்கை ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க முன்னேற்றத்தை வாரி வழங்கும்.

6) உண்மையி ஜாதகருக்கு 4ல் ( பாவக கணித முறைப்படி ) மேஷத்தில் அமர்ந்து சிறப்பான நன்மைகளை தருவது கவனிக்கத்தக்கது, சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், நல்ல குணம், வண்டி வாகன யோகம், வடக்கு திசை வாயிற்படி உள்ள வீடுகளில் குடியிருப்பதால் வரும் யோக வாழ்க்கை என்ற வகையில் நன்மைகளையே தருகின்றது, 10ல் அமர்ந்த ராகு ஜாதகருக்கு ஜீவனம் சார்ந்த இன்னல்களையும் மற்றவர்களால் வரும் வீண் அவப்பெயரையும் தவிர்க்க இயலாமல் வழங்குவது வருத்தத்த்திற்கு உரியது, ஜாதகர் எந்த காரணத்தை கொண்டும் சுய மரியாதை இழக்கும் விதத்திலான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது, நல்ல தொழில் விருத்தி ராகு பகவானால் உண்டாகும்.

7) சனி திசை ஜாதகருக்கு 2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக தொடர்பை பெற்று சுபயோகங்களையும், 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவக தொடர்பை பெற்று வீடு வண்டி வாகன யோகம் என்ற வகையில் நன்மைகளையும் ஒருசேர வழங்குவது வரவேற்க தக்கது, தற்போழுது நடைபெறும் குரு திசை பாதக ஸ்தான பலனை தருவது மட்டுமே ஜாதகருக்கான நெருக்கடிகளை அதிர்க்காரிக்கும், எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 2,4,5ம் வீடுகள் வழியில் இருந்து சுபயோக சுக வாழ்க்கையை தருவது வரவேற்க தக்கது, வாழ்த்துக்கள்.

செவ்வாய், குரு பகவானின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  ஜாதகருக்கு கடுமையான இன்னல்களையும், சுக்கிரனின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் நன்மையையும் தரும். எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 2,4,5ம் வீடுகள் வழியில் இருந்து சுபயோக சுக வாழ்க்கையை வாரி வழங்க காத்து இருப்பது வரவேற்க தக்கது, ஜாதகருக்கு நல்லதொரு வாழ்க்கை துணை, நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் சேர்க்கை இல்லை எனில் வாழ்க்கை மிகவும் துன்ப நிலைக்கு எடுத்துச்செல்லும் என்பதை கவனத்தில் கொள்க, நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் சேர்க்கை அவசியம் என்பதை வலியுறுத்தவும், வாழ்த்துக்கள்.

பரிகாரம் :

1) தினமும் சூரிய நமஸ்காரம் மேற்கொள்வது சிறப்பான எதிர்காலத்தை தரும்.
2) திருவக்கரை வக்கிர காளி அம்மன் கோவிலுக்கு சென்று முறையாக குரு பகவானுக்கு வக்கிரகநிவர்தி செய்து நலம் பெறுவது அவசியமாகிறது.
3) சனி பிரீதி வழிபாடு ஜாதகருக்கான இன்னல்களில் இருந்து நலம் தரும், பாதக ஸ்தான இன்னல்களை வெகுவாக குறைக்கும்.
4) வருடம் ஒரு முறை பழனி சென்று வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.
5) குல தெய்வ வழிபாடு எதிர்வரும் புரட்டாசி அமாவாசை அன்று செய்து நலம் பெறவும், அண்ணதானம் செய்து வழிபடுவது சகல நன்மைகளையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 5 அக்டோபர், 2018

ரஜ்ஜு பொருத்தம் மற்றும் திசா சந்திப்பும் - திருமண பொருத்தம் காண்பதில் பாவக வலிமை அடிப்படையிலான அணுகுமுறை !



  இன்றைய தலைமுறையினர் திருமண வாழ்க்கை குறுகிய காலத்தில் முடிவுக்கு வருவதற்கும், இல்லற வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி நிற்பதற்கும், கணவன் மனைவி ஒற்றுமை இன்மைக்கும், கருத்து வேறுபாடுகளுடன் பிரிந்து நிற்பதற்கும் அடிப்படை காரணம் சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் பாவகங்களின் வலிமை அற்ற தன்மையே காரணமாக அமைகின்றது, திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது சுய ஜாதக வலிமைக்கு முக்கியத்துவம் தாராமல், நட்ச்சத்திர பொருத்தம் மற்றும் தோஷ நிர்ணயம் எனும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவதும், அதன் அடிப்படையில் திருமண பந்தத்தில் இணைவதே மேற்கண்ட இன்னல்களுக்கு அதி முக்கிய காரணமாக அமைகிறது, திருமண பொருத்தம் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் எப்படி பார்ப்பது, இதனால் வரன் வது இருவருக்கும் கிடைக்கும் நன்மைகள் என்ன ? என்பதை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

வரன் ஜாதகம் :


வது ஜாதகம் :



இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில்  முக்கிய பங்கு வகிப்பது  சுய ஜாதகத்தில் 2,5,7,812ம் வீடுகள் என்றால் அது மிகையில்லை, குறிப்பாக வது, வரன் ஜாதகத்தில் 2,5,7ம் வீடுகள் வலிமை பெறுவது திருமண வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வழங்கும், தம்பதியரின் வாழ்க்கையில் சுபயோகங்களையும், மனக்கசப்பற்ற தாம்பத்யத்தையும் தரும், மேற்கண்ட வரன், வது ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகளின் வலிமையை பற்றியும், அவை பெரும் தொடர்புகள் பற்றியும் இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு இவர்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்தால் ஏற்படும் நன்மை தீமை யோக அவயோக நிகழ்வுகள் பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே !

வரனின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகளின் வலிமை நிலை :

ஜாதகருக்கு 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு அளவற்ற செல்வ வளம், இனிமையான வாக்கு வன்மை, யோகம் மிக்க குடும்ப வாழ்க்கை, குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்து செல்லும் தன்மை, ஒற்றுமையுடன் சேர்ந்து வாழும் தன்மை, நிறைவான வருமான வாய்ப்புகள், நல்ல உணவு, பேச்சு திறன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம், குழந்தைகளுடன் அன்பு பாசம், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி என்ற வகையில் சிறப்பான நன்மைகளை தரும்.

5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நிறைவான கல்வி அறிவு, கலைகளில் தேர்ச்சி, சமயோசித அறிவு திறன், எதையும் எதிர்கொள்ளும் துணிவு, வாத திறமை, புத்திசாலித்தனம் மூலம் இன்னல்களை வெற்றிகொள்ளும் தன்மை, தன்னிறைவான செல்வ வளம், நல்ல குழந்தைகள், குடும்பத்தில் மகிழ்ச்சி, விளையாட்டில் ஆர்வம், காதலில் வெற்றி, காதல் திருமணம் மூலம் யோக வாழ்க்கை, தர்ம சிந்தனை, கற்ற கல்வி வழியில் இருந்து வரும் தனசேர்க்கை, குல தெய்வ ஆசிர்வாதம், மனதில் உள்ள எண்ணங்கள் யாவும் பலிதம் பெரும் தன்மை, குழந்தைகள் மூலம் யோகம், நல்ல ஆண் வாரிசு என்ற வகையில் சிறப்புகளை தரும்.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சிறந்த வாழ்க்கை துணையை பெற்று தரும், சக்தி வாய்ந்த கூட்டாளி, நல்ல நண்பர்கள், வெளிநாடு யோகம், கூட்டு முயற்சி மூலம் வாழ்க்கையில் நலம் பெரும் தன்மை, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, திருமணதிற்கு பிறகான யோக வாழ்க்கை, தன்னிறைவான பொருளாதர முன்னேற்றம், வியாபர துறையில் மிக பெரிய முன்னேற்றம் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும், இல்லற வாழ்க்கை இனிதே அமையும், தெய்வீக அனுகிரகம் மூலம் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

8,12ம் வீடுகள் உயிர் உடலாகிய லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு ஆயுள் பாவக வழியில் இருந்து தீர்க்காயுள், தொல்லையில்லா யோக வாழ்க்கை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் அன்பு மற்றும் ஆதரவு, குறிக்கோள்கள் மிக எளிதாக நிறைவேறும் தன்மை, மருத்துவ உபகரணம் அல்லது ஆயுள் காப்பீடு போனஸ் இன்சூரன்ஸ் மூலம் மிகுந்த லாபத்தை தரும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு ஏற்படும் நஷ்டமே மிகுந்த லாபத்தை தரும், மற்றவர்களின் பணம் தன்னிடம் கையிருப்பாக இருக்கும், சிக்கனநடவடிக்கை மூலம் செல்வசேர்க்கை உண்டாகும், சிறு முதலீடுகள் கூட மிகுந்த லாபத்தை தரும், விரோதிகள் மறைவர், நல்ல சொத்து சுக சேர்க்கை உண்டு என்பதுடன், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

ஜாதகருக்கு நடைபெறும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் : ( 21/06/2018 முதல் 21/06/2038 வரை )

நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவக தொடர்பை பெற்று தனது திசையில் யோகமிக்க குடும்ப வாழ்க்கையை வழங்குவது வரவேற்கத்தக்கது, இதனால் ஜாதகர் நல்ல இல்லறவாழ்கை, மகிழ்ச்சியான குடும்பம், தன்னிறைவான வருமானம், செல்வச்செழிப்பு, பொருளாதார முன்னேற்றம், எதிர்ப்புகளை வெற்றிகொண்டு யோக வாழ்கையை பெரும் தன்மை, நம்பிக்கை மிக்க எதிர்காலம் என்ற வகையில் ஜாதகருக்கு சுக்கிரன் திசை அளவற்ற செல்வத்துடன் சுகபோக யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை வாழ்த்துகள்.

வதுவின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகளின் வலிமை நிலை :

2,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு வருமானம் சார்ந்த இன்னல்களை தரக்கூடும், இருப்பினும் இல்லற  வாழ்க்கையை சிறப்பாக அமையும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், வாக்கு சார்ந்த விஷயங்களில் அதீத கவனம் ஜாதகிக்கு தேவை, 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகி எடுக்கும் முடிவுகளை மிகவும் ஆழ்ந்து யோசித்து எடுப்பது வீண் பண விரயத்தை தவிர்க்க உதவும், மேலும் பொறுமை காப்பதும், பெரியோர் ஆலோசனையை பெறுவதும் ஜாதகிக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், குறிப்பாக பணத்தை முதலீடு செய்யுமுன் ஆழ்ந்து யோசித்து செய்வதே சகல நன்மைகளையும் தரும்.

5,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு அதிர்ஷ்ட லட்சுமியின் அருள் பார்வை எப்பொழுதும் பரிபூர்ணமாக அமைந்து இருக்கும், குறிப்பாக ஜாதகிக்கு பிறக்கும் குழந்தைகள் வழியில் இருந்து பரிபூர்ண அதிர்ஷ்டம் உண்டாகும், நிறைந்த நல்லறிவும், சமயோசித புத்திசாலித்தனமும் ஜாதகியின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், எதிர்ப்புகளை தனது அறிவு திறன் கொண்டு வெல்லும் வல்லமையை தரும், குல தெய்வத்தின் ஆசியின் மூலம் ஜாதகிக்கு சகல நன்மைகளும் நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது, 7ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு கணவர் வழியில் இருந்தும், நண்பர்கள், கூட்டாளிகள், வெளியூர் அல்லது வெளிநாடுகள் வழியில் இருந்து சகல யோகமும் உண்டாகும் நன்மைகள் மேலோங்கும், கூட்டு முயற்சி பலிதம் பெரும் வாழ்க்கை துணை வழியிலான நன்மைகளை ஜாதகியும், ஜாதகியால் வழக்கை துணையும் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும், இல்லற வாழ்க்கை ஜாதகிக்கு விரும்பியது போல் அமையும் என்பது கவனிக்கத்தக்கது.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு நீண்ட ஆயுளை தரும், இருப்பினும் சிறு சிறு மருத்துவ செலவினங்களை தரக்கூடும், உடல் நலனில் அதீத அக்கறை கொள்வது ஜாதகிக்கு மிகுந்த நன்மைகளை தரும், முதலீடுகளில் அதீத கவனமும் தேவை, மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது வெகுவான இன்னல்களை தரக்கூடும்.

ஜாதகிக்கு நடைபெறும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் : ( 01/07/2014 முதல் 01/07/2034 வரை )

ஜாதகிக்கு நடைபெறும் சுக்கிரன் திசை 3,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 3,7ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவது வரவேற்கத்தக்கது, சுக்கிரன் திசையில் ஜாதகி எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி பெரும், நினைக்கும் எண்ணங்கள் யாவும் நிறைவேறும், விளையாட்டில் ஆர்வம் பரிசுகள், தெய்வீக அனுபவம், கமிஷன் வியாபாரம், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறையில் வெற்றி என்ற வகையில் சிறப்பான யோக வாழ்க்கையை தரும், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல  யோகமிக்க வாழ்க்கை துணை, வெளிநாடுகளில் யோக வாழ்க்கை, கூட்டு முயற்சியில் வெற்றி, அரசு கவுரவம், வாழ்க்கை துணைக்கு அதிர்ஷ்டம், பிரபல யோகம், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி, வியாபர விருத்தி மற்றும் அதன் வழியிலான யோக வாழ்க்கை என்ற அமைப்பில் சுபயோகங்களை  வாரி வழங்கும்.

திசா சந்திப்பு :

வரனுக்கும் வதுவுக்கும் ஏக காலத்தில் சுக்கிரன் திசை நடைமுறையில் இருப்பதால் திசா சந்திப்பு அல்லது ஏக திசை நடப்பு தோஷம் என்று கூறக்கூடும், வரன் வது இருவருக்கும் நடைபெறும் சுக்கிரன் திசை 2ம் பாவக வழியில் இருந்தும் 3,7ம் பாவக வழியில் இருந்தும் சுபயோகங்களை வாரி வழங்குவதால் இல்லற வாழ்க்கை மிகவும் யோகமிக்கதாகவே அமையும் என்பதை உறுதியாக கூறலாம், மேலும் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று அறிவுறுத்த கூடும், வரன் வது ஜாதகத்தில் பாவக வலிமை மிதமிஞ்சி நிற்பதால் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்பதால் யாதொரு இன்னல்களும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொண்டு திருமணம் சிறப்பாக செய்யலாம் என்பது " ஜோதிடதீபம் " வழங்கும் அறிவுரை, வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696