வியாழன், 30 ஜூலை, 2015

குரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான் இலக்கின வாரியாக தரும் பலன்கள் - மீனம்

 பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும்  எடுத்துகொள்வோம் அன்பர்களே!


மீன லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியான கும்ப ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 6,10,12,2ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், மீன இலக்கின அன்பர்களுக்கு 6ல் அமர்ந்த குரு தங்களுக்கு பித்தம் சார்ந்த உடல் தொந்தரவுகளை தர கூடும், உடல் ஆரோக்கியம் சார்ந்த தொந்தரவுகள் தங்களுக்கு வெகுவான பாதிப்புகளையும், திடீர் செலவினங்களையும் தருவதற்கு உண்டான வாய்ப்புகள் ஏற்ப்படும், எதிரிகள் தொந்தரவுகள், கடன் பிரச்சனைகள் தங்களுக்கு மனதளவில் அதிக போராட்டங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்க கூடும், பல விஷயங்களில் எதிர்ப்புகளையும், ஆதரவின்மையையும் தர கூடும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு வீண் அவபெயரும், சமூக அந்தஸ்தும் வெகுவாக பாதிக்கும், அவசர கதியில் செய்யும் காரியங்கள் யாவும் தங்களுக்கு எதிராகவும், பெரிய பாதிப்புகளையும் தரக்கூடும், சிந்தனையும் செயல் திறனும் வெகுவாக குறையும், வீண் கற்பனையும், வீண் மன பயமும் தங்களது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தடையாக அமையும்.

6ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தை வசீகரிப்பது மீன லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, தொழில் ரீத்யான முயற்ச்சிகளுக்கு நல்ல வாய்ப்புகளை வாரி வழங்கும், கல்வி துறையில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றமும் பதவி உயர்வும் உண்டாகும், ஜீவன வழியில் இருந்து கை நிறைவான வருமானமும், வியாபர விருத்தியும் உண்டாகும், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கு ஆய்வுகளில் புதிய கண்டுபிடிப்புகளையும், நவீன யுக்தியை பயன்படுத்தி தீர்வு காண இயலாத பல நோய்களுக்கு குணம் தரும் வாய்ப்பை வழங்கும், சமூகத்தில் நற்பெயரும் புகழும் உண்டாகும், பொது வாழ்க்கையிலும் ஆன்மீகத்திலும் உள்ள அன்பர்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தையும், புதிய பொறுப்புகளையும் வாரி வழங்கும், ஆன்மீக தேடுதல்களுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைக்க பெறுவீர்கள், மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஞாணமும் தெளிவும் உண்டாகும், புதிய சிந்தனைகளும், அறிவாற்றலும் மிகுதியாகி தங்களின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களுக்கு அடித்தளமான விஷயங்களை அமைத்து தரும், தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் அன்பர்களுக்கு நல்ல பொருள் வரவும் விருத்தியும் உண்டாகும், தடைகள் நீங்கி வெற்றியை நோக்கி பயணிக்கும் யோக காலமாக 10ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும் முன்னேற்றத்தையும் தரும் விதமாக தங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அமையும்.

6ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தை வசீகரிப்பது மீன லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, மன நிம்மதியயை வெகுவாக குறைக்கும், பெரிய அளவில் முதலீடுகளை தவிர்த்து எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது, தனக்கு வரும் லாபம் மற்றும் அதிர்ஷ்டங்களை மற்றவர்கள் தட்டி பறிக்கும் சூழ்நிலை ஏற்ப்படும் என்பதால் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன், விழிப்புணர்வுடனும் நடந்துகொள்வது நல்லது, தங்களின் செயல்கள் தங்களுக்கு எதிர்பதமாக அமையாதவாறு தங்களின் திட்டமிடுதல்களை வகுத்துகொல்வது நல்லது,  சூழ்நிலைக்கும் சந்தர்ப்பங்களுக்கும் கட்டுப்படும் நிலை வரும் என்பதால், பெரிய அளவில் திட்டமிடுதல்களை தவிர்த்து விடுவதும், தொலைநோக்கு பார்வையுடன் அனைத்து விஷயங்களையும் எதிர்கொள்வது தங்களின் வாழ்க்கையில்  முன்னேற்றத்தை வாரி வழங்கும், வீண் விரையங்களையும் பொருள் இழப்புகளையும் தவிர்க்க அனைவரிடமும் எச்சரிக்கையுடன் பழகுவதும், ஜாமீன் போன்ற விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது, அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வரும் என்பதால் தன்னம்பிக்கையை அதிக அளவில் வளர்த்துகொள்வது நலம் தரும்.

6ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது மீன லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, திடீர் திருமண வாய்ப்புகள் சிறப்பாக அமையும், திருமணம் தடைகளை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு, எவ்வித தடையும் இன்றி விரைவாக மணவாழ்க்கை அமையும், புதிய நபர்களின் வழியில் இருந்து நல்ல வருமானமும் முன்னேற்றமும் உண்டாகும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும், வருமான வாய்ப்புகளை தாங்களே சிறப்பாக உருவாக்கி கொள்ளும் வல்லமை உண்டாகும், பல விஷயங்களில் இருந்து தங்களுக்கு நன்மைகளும் வருவாயும் கிடைக்க பெறுவீர்கள், குடும்பத்தில் உள்ள நபர்கள் தங்களின் வருமானம் உயர்வதற்கு உதவிகரமாக அமைவார்கள், சரளமான பேச்சு திறமை தங்களின் வாழ்க்கையில் பல வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், வாக்கின் வழியில் இருந்து ஜீவனம் தேடும் அன்பர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டாகும், அரசியலில் உள்ள அன்பர்களுக்கு இனி வரும் ஒரு வருடம் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளையும், பதவி உயர்வுகளை வாரி வழங்கும், தனிப்பட்ட வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் என்பது தன்னிறைவாக அமையும் என்பது கவனிக்க தக்க விஷயம், மேலும் பல வெளிநாடுகள் அல்லது வெளியூர் சென்று வரும் யோகம் உண்டாகும், பயணங்கள் மூலம் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும்.

குறிப்பு : 

மீன லக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும்  திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 6,10,12,2ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
  

இந்த குரு மாற்றத்தின் மூலாம் 30% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது கும்ப லக்கினமே மூன்றாவது இடத்தை பெறுகிறது, வாழ்த்துகள் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696   

புதன், 29 ஜூலை, 2015

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலன்களை ( யோக பலன்களை ) ஏற்று நடத்தும் திசை புத்தியை எப்படி தெரிந்து கொள்வது ?


தங்களின் ஜாதக  நிலையை பார்க்கும் பொழுது, ஒரு திரைப்படத்தில் வந்த வசனம் நினைவிற்கு வருகிறது அன்பரே ! " இருக்குது ஆனால் இல்லை " "இல்லை ஆனால் இருக்குது " வேற மாதிரி இருக்குது " தங்களின் சுய ஜாதக வலிமையை காணும் பொழுது மிக பெரிய அளவில் வியப்பே உண்டாகியது, தங்களது சுய ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் மிகவும் வலிமையாக உள்ளது வரவேற்க்கதக்க விஷயம் எனவே "இருக்குது".

தங்களது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்களின் பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை ஏற்று நடத்தவில்லை என்பதால் " இல்லை " .

ஆனால் எதிர்வரும் திசை மிகவும் வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்துவதால் "வேற மாதிரி இருக்குது ".

சரி இனி தங்களது சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலையையும், நடைபெறும் மற்றும் எதிர்வரும் திசை வழங்கும் பலாபலன்களையும் சிந்தனைக்கும் ஆய்வுக்கும் எடுத்துகொள்வோம் அன்பரே!


லக்கினம் : கன்னி 
ராசி : தனுசு 
நட்சத்திரம் : பூராடம் 1ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக நிலைகள் : 

1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதக அமைப்பிலே மிகுந்த வலிமை பெற்ற பாவகங்களாக கருதலாம்,

2,4,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான நன்மையை செய்யும் பாவகங்களாக கருதலாம்,

8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களது ஜாதகத்தில் பாதிக்கபட்டுள்ள பவகங்களாக கருதலாம்,

 எனவே ஜாதகர் 11ம் பாவக வழியில் இருந்து, தான் தொடர்பு பெற்ற வீடுகள் அமைப்பில் இருந்து  நன்மையான பலன்களை 100% விகிதம் அனுபவிக்கும் யோகத்தை தரும், நல்ல உடல் நிலை மற்றும் மன நிலை, தெளிவான சிந்தனை, அறிவுபூர்வமான செயல்கள் மூலம் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் யோகம், எடுக்கும் முயற்ச்சிகளில் வெற்றி விரீயமிக்க செயல்பாடுகள், தன்னம்பிக்கை மற்றும் தைரியம், சிறந்த சமயோசித புத்திசாலித்தனம், பூர்விகத்திலும் குழந்தைகளாலும் அதிர்ஷ்டம், வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து யோக வாழ்க்கை, ஏற்றுமதி இறக்குமதி வியாபார வாய்ப்புகள், சமூகத்தில் மதிப்பு மரியாதை மற்றும் அந்தஸ்து, பெரிய மனிதர்களின் ஆதரவு, எங்கு சென்றாலும் நற்ப்பெயர் மற்றும் வரவேற்ப்பு, நல்ல குணம் நீடித்த அதிர்ஷ்டம் என ஜாதகரின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட தேவதையின் கருணை பரிபூரணமாக கிடைக்க பெறுவார்.

மேலும் 10ம் பாவக வழியில்  தான் தொடர்பு பெற்ற வீடுகள் அமைப்பில் இருந்து  நன்மையான பலன்களை 40% விகிதம் அனுபவிக்கும் யோகத்தை தரும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, கை நிறைவான வருமானம், இனிமையான பேச்சு திறமை, தீர்க்கமான வாதம், சுய முன்னேற்றத்திலும், சுய வருமானத்திலும் அதிக ஆர்வம், வண்டி வாகனம் மூலம் யோகம், சுகபோக வாழ்க்கை, தேவைக்கேற்ற சொத்து சுக சேர்க்கை, நல்ல குணநலன்கள், முற்ப்போக்கு சிந்தனை, எதிரிகள் மூலம் நன்மை, வட்டி வரவுகள்,  வங்கி உதவி மூலம் தொழில் விருத்தி, உடல் நலனில் அதிக கவனம், அபரிவிதமான தொழில் வாய்ப்புகள், வியாபாரம் மூலம் அதிக லாபம், குறைவான முதலீட்டில் அதிக லாபம், சமூகத்தில் கௌரவம், அந்தஸ்த்து தேடி வரும் யோகம், புகழ் மிக்க பொறுப்புகளை சிறப்பாக கையாளும் யோகம், சுய தொழில் மூலம் அபரிவிதமான வளர்ச்சியை பெரும் தன்மை என ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை ஜீவன வழியில் இருந்து வாரி வழங்கும்.

சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட 12ம் பாவக வழியில் தான் தொடர்பு பெற்ற விடுகள் அமைப்பில் இருந்து, வாழ்க்கை துணையின் மூலம் விரைய செலவுகள், திடீர் இழப்புகள், விபத்து, மருத்துவ செலவினங்கள், மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்களில் இருந்து வரும் திடீர் இழப்புகள், மன வாழ்க்கையில் வரும் சிறு சிறு பிரச்சனைகள், தன்னம்பிக்கை குறையும் விதமாக நடைபெறும் நிகழ்வுகள் ஜாதகருக்கு கடும் நெருக்கடிகளை தரும், மேலும் அனைவராலும் தொல்லை அதிக அளவில் மன போராட்டம், வீண் விரையம் செலவுகளை கட்டுபடுத்த இயலாத சூழ்நிலை, அதிக முதலீடுகள் செய்வதால் வரும் திடீர் இழப்புகள், அதிக அளவில் மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகும் சூழ்நிலை, வீண் அவபெயர்கள் என விரைய ஸ்தான அமைப்பில் இருந்து கடும் நெருக்கடிகளை ஸ்திரமாக தரும்.

ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள சந்திரன் திசை ( 15/05/2008 முதல் 15/05/2018 வரை )  8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, தனது திசையில் 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்த போதிலும் எவ்வித நன்மையையும் பெற இயலாத தன்மையை தருகிறது, சுய ஜாதகத்தில் எவ்வித யோகங்கள் இருந்த போதிலும் நடைமுறையில் உள்ள திசை அல்லது எதிர்வரும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்கள் நடைமுறைக்கு வரும் என்பதால், ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள சந்திரன் திசை ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை நடைமுறைபடுத்த வாய்ப்பில்லை, ஆனால் அடுத்து வரும் செவ்வாய் திசை ஜாதகருக்கு 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை ஏற்று  நடத்தும் 7 வருட காலங்களில் ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோக பலன்களை தங்கு தடையின்றி நடத்துவார் என்பது, வரவேற்க்கதக்க அம்சமாக கருதலாம், சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை அனுபவிக்கும் காலமாக செவ்வாய் திசை அமைவதும், யோகங்களை சரியான வயதில் அனுபவிக்கும் தன்மையையும் ஏக காலத்தில் ஜாதகர் பெறுவார் என்பதும் சிறப்பான விஷயமாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

செவ்வாய், 28 ஜூலை, 2015

தொழில் முன்னேற்றமும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையையும் !




 தொழில் ரீதியான முன்னேற்றங்களை வாரி வழங்குவதில் சுய ஜாதகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் பாவகம் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகமே என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று அமரும் பொழுது ஜாதகருக்கு தொழில் வாய்ப்புகள் தேடிவந்து மிக பெரிய அளவில் நல்ல முன்னேற்றங்களை தந்து விடும், மாறாக ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் தொழில் ரீதியான முன்னேற்றங்களை பெற இயலாமல் வாழ்க்கையில் அதிக அளவில் ஜீவன வழியில் இருந்து எதிர்ப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மேலும் தனக்கு உகந்த தொழில் எது என்ற குழப்பத்திலேயே காலம் கடத்தும் சூழ்நிலையை தரும், பெரும்பாலும் சரியான வேலை அல்லது தொழில் அமையாமல் குழப்பத்தில் போராடிக்கொண்டு இருக்கும் அன்பகளின் சுய ஜாதகங்களில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் பாதிக்க பட்டு இருக்கும் அல்லது நடைபெறும் திசை மற்றும் புத்திகள் பாதிப்பான பலன்களை தந்துகொண்டு இருக்கும், கிழ்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று அமைந்த போதிலும், ஜாதகர் தொழில் ரீதியான வெற்றிகளை பெரிய அளவில் பெற இயலவில்லை, நடைபெறும் திசையும் ஜாதகருக்கு மிகுந்த நன்மையான பலன்களையே ஜீவன ஸ்தான வழியில் இருந்து தந்த போதிலும் ஜாதகருக்கு இதனால் பயன் ஏதும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது, இந்த நிலை ஏன் என்பதை இன்றைய பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !




லக்கினம் : துலாம் 
ராசி : கன்னி 
நட்சத்திரம் : அஸ்தம் 2ம் பாதம் 

ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் சர நீர் ராசியான கடகத்தில் அமைகிறது, சுய ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் எனும் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகரின் தொழில் வல்லமையை  காட்டுகிறது, ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியாக அமைவது ஜாதகரை வாகன தொழில் துறையில் ஈடுபாட்டை தந்தது கனரக வாகனங்களை இயக்குவதில் நல்ல தேர்ச்சியும், நல்ல அனுபவத்தையும் தந்தது, எனவே ஜாதகர் தனது உறவினர் ஒருவரின் கனரக வாகனத்தை இயக்கம் பொறுப்பை பெற்றார், இந்த தொழிலில் ஜாதகருக்கு நல்ல அனுபவமும் நிர்வாக திறமையும் குறுகிய காலத்தில் கிடைத்தபோதிலும், ஜாதகர் தனது சுய முன்னேற்றத்திற்கு உண்டான எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல், தனது உறவினரின் தொழில் முன்னேற்றம் பெறுவதற்காகவே தனது அனுபவத்தையும் உழைப்பையும்  முழுவதையும் செயல்படுத்தினர், இதன் விளைவாக தொழில் நல்ல விருத்தியும் அதிக லாபத்தையும் பெற்றது, உறவினருக்கு கைநிறைவான வருமான வாய்ப்புகள் வந்து குவிந்தது, வண்டி வாகனங்கள்  பெருகியது, ஆனால் ஜாதகருக்கு கிடைத்ததோ வெறும் மாத சம்பளம் மட்டுமே.

சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசையும் சரி இதற்க்கு முன் நடந்த திசையும் சரி ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து நல்ல யோக பலன்களையே தந்த போதிலும், ஜாதகருக்கு இதனால் பயன் ஏதும் இல்லை கடந்த 12 வருடங்களாக வண்டி வாகன துறையில் நல்ல அனுபவமும் சிறந்த நிர்வாக திறனையும் பெற்ற போதிலும் ஜாதகரின் முன்னேற்றம் மட்டும் கிணறில் இட்ட கல் போல் இருப்பதற்கு காரணம் என்ன என்பதை இனி சிந்திப்போம் அன்பர்களே !

1) ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற போதிலும். தனது சுய  வாழ்க்கைக்கு உண்டான முயற்ச்சிகளை எடுக்க வைக்கும், வீர்ய ஸ்தானமான 3ம் பாவகம் ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை பெற்றது, ஜாதகரின் சுய முன்னேற்ற தன்மையை வெகுவாக பாதித்தது, இது சார்ந்த  சிந்தனைகளுக்கு ஜாதகர் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை என்பது  கவனிக்கதக்கது, மேலும் 3ம் பாவகம் வலிமை குறைந்தது, ஜாதகரின் மன தைரியத்தை வெகுவாக குறைத்து மற்றவர்களின் நிழலில் அண்டி வாழும் சூழ்நிலையை தந்து, தனது  எதிர்கால முன்னேற்றத்தை பற்றிய சிந்தனைக்களுக்கு ஜாதகரே எதிர்மறையான எண்ணத்தை மனதில் விதைத்துகொண்டது ஜாதகரின் முன்னேற்றத்தை பாதிக்கும் வண்ணமாக அமைந்தது.

2) ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற போதிலும், வலிமையான பூர்வ புண்ணிய ஸ்தான பலன்களை அனுபவிக்கும் தன்மையில்லாமல், தனது பூர்வீகத்தை விட்டு வெளியேறி 200 மையில் தொலைவு அப்பால் ஜீவனம் மேற்கொள்ளும் நிலையை ஜாதகரே ஏற்ப்படுத்தி கொண்டது, ஜாதகரின் தொழில் முன்னேற்றத்தை கேள்விக்குறியாக மாற்றியது, ஜாதகருக்கு பூர்வீகத்தில்தான் ஜீவன முன்னேற்றம் என்ற அமைப்பு உள்ள பொழுது ( சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் மிகுந்த வலிமையுடன் இருப்பது ) தனது தொழில் மற்றும் ஜீவனத்தை தனது பூர்வீகத்தில் அமைத்து கொள்ளாமல், பூர்வீகத்தை விட்டு  வெகு தொலைவு சென்று தனது ஜீவனத்தை அமைத்துகொண்டது ஜாதகரின் முன்னேற்றத்திற்கு ஜாதகரே வைத்துகொண்ட வினை என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல இயலும், ஜாதகருக்கு பூர்வீகம் வலிமை பெற்று பூர்விகத்தை விட்டு வெளியேறியது ஜாதகரின் திருமண தாமத்தை தந்தது, ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து கிடைக்கும் யோக பலன்களை வெகுவாக குறைத்தது, ஏனெனில் ஜாதகரின் புத்திசாலித்தனமும் அறிவும் பூர்விகத்தில் இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு பயன் தரும்.

3) ஜாதகத்தில் அதிர்ஷ்டம் மாறும் லாபத்தை குறிக்கும் 11ம் பாவகம் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றது ஜாதகருக்கு வரும் அதிர்ஷ்டம் மற்றும் லாபம் அனைத்தும் ஜாதகரை சார்ந்த மற்றவர்கள் அனைவரும் அனுபவிக்கும் தன்மையை தந்தது, மேலும் ஜாதகரின் பிறப்பின் பலனை அனுபவிக்க வைக்கும் 11ம் பாவகம் ஜாதகருக்கு எதிராக அமைந்தது கவலைப்படவேண்டிய விஷயம், ஜாதகரின் மூடநம்பிக்கைகள், பிற்போக்கு  தனமான சிந்தனைகள், எதிர்மறையான எண்ணங்கள் ஜாதகருக்கு எதிராக அமைந்தது, மனதில் உறுதி, லட்சியத்தில் உறுதி, விடா முயற்ச்சி எனப்படும் விஷயங்களை வழங்கும் 11ம் பாவகம் சுய ஜாதகத்தில் 200% விகித பாதிப்பை பெற்றது மேற்கண்ட விஷயங்களில் இருந்து சிறிய அளவில் கூட நன்மையை தர இயலவில்லை, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்றது சிறப்பானது, நடந்த,நடைபெற்று கொண்டு இருக்கிற,நடைபெற போகிற திசைகள் யாவும் ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து நன்மைகளை வாரி வழங்கிய போதிலும், ஜாதகர் 3,5,6,11ம் பாவக வழியில் இருந்து அதிக அளவில் தடைகளையே சந்திப்பது வருந்ததக்கது.

4) ஜாதகர் முதலில் தனது பூர்வீகத்தில் குடியேறி ஜீவனத்தை மேற்கொள்வது நல்லது, இது 5ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களை 100% விகிதம் வாரி வழங்கும், தனது எண்ணங்களையும் சிந்தனைகளையும் சுய பரிசீலனை செய்துகொள்வது மிகுந்த நன்மையை தரும், வீண் கற்பனைகளையும்,  எதிர்மறை சிந்தனைகளையும் பிற்போக்கு எண்ணங்களையும் விட்டு விட்டு சரியான பாதையை வகுத்துகொல்வது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து நன்மைகளை அனுபவிக்க உதவும், சுய முன்னேற்றத்தில் அக்கறை காட்டாத வரை ஜாதகரின் ஜீவன பாவக வலிமை பலன் தறதாதகவோ, மற்றவர்களுக்கு முன்னேற்றத்தை வாரி வழங்கும் தன்மையிலோ செயல்படும் என்பது இந்த ஜாதகத்தில் கவனிக்க தக்க அம்சமாக ஜோதிடதீபம் கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


குரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான் இலக்கின வாரியாக தரும் பலன்கள் - கும்பம்



பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும்  எடுத்துகொள்வோம் அன்பர்களே!

கும்ப லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்ப ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 7,11,1,3ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், 7ம் பாவகத்தில் அமர்ந்த குரு பகவான் கும்ப இலக்கின அன்பர்களுக்கு திருமண தடைகளை தகர்த்து, அருமையான வாழ்க்கை துணையை அமைத்து தருவார், வாழ்க்கை துணை வழியில் இருந்து அபரிவிதமான நன்மைகளையும் முன்னேற்றங்களையும் வாரி வழங்குவார், நண்பர்கள் புதிய கூட்டாளிகள் மூலம் தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், பொதுமக்களின் ஆதரவு மற்றும் புதிய பொறுப்புகள் தங்களுக்கு தேடி வரும், தொழில் ரீதியாகவும் வேலை வாய்ப்பு விஷயமாகவும் பல வெளிநாடு பயணங்கள் அமையும், செல்லும் இடங்களில் நல்ல வரவேற்ப்பும் ஆதரவும் கிடைக்கும், தங்களின் சமயோசித புத்திசாலிதன நடவடிக்கைகள் தங்களுக்கு புகழையும் வெற்றியையும் தேடித்தரும், பொன் பொருள் சேர்க்கை மற்றும் தெய்வீக அனுபவங்கள் கிடைக்க பெறுவீர்கள், எந்த ஒரு சூழ்நிலையையும் சிறப்பாக எதிர்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை நோக்கி வெற்றி நடைபோடும் சிறப்பான நேரமிது, சுய முன்னேற்றமும் பொது வாழ்க்கையில் முன்னேற்றமும் ஒரு சேர அமையும், தங்களின் அறிவு திறன் பிரகாசிக்கும் யோக காலமாக இந்த குரு பெயர்ச்சியை கருதலாம்.

7ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக லாப ஸ்தானமான 11ம் பாவகத்தை வசீகரிப்பது கும்ப லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு,  அளவுக்கு அதிகமான அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்கும், கற்ற கல்வி வழியில் இருந்து மிகபெரிய சாதனைகளை படைக்கும் ஆற்றல் உண்டாகும், அதிர்ஷ்ட தேவதையின் அருளாசியினால் பரிபூரண யோகங்களை பெறுவீர்கள், தங்களின் எண்ணங்கள் ஆசைகள் யாவும் நிறைவேறும், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை பெரும் யோகம் உண்டு, பெரிய மனிதர்களின் அறிமுகமும் உதவியும் தங்களை தேடி வரும், எதிர்பாராத ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பும் ஆசியும் தங்களுக்கு நல்ல புதிய வாய்ப்புகளை உருவாக்கி தரும், தங்களின் அறிவு திறனுக்கு நல்ல புதிய வாய்ப்புகளும், சாதனை செய்ய நல்ல போட்டியாளர்களும் தங்களுக்கு உதவிகரமாக அமைவார்கள், எடுத்து கொண்ட செயல்களில் முழு வெற்றியை பெரும் யோகம் உண்டாகும், குடுபத்தில் உள்ள பெரியவர்களின் மூலம் நல்ல உதவியும், வருமானமும் உண்டாகும், கல்வி துறையில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான முன்னேற்றத்தை வாரி வழங்குவார், இதுவரை போராட்ட வாழ்க்கையை மேற்கொண்டு வந்த தங்களின் வாழ்க்கையில் புதிய விடியல் உண்டாகும், உயர்கல்வியில் சாதனை செய்யும் வாய்ப்பும், வேலை வாய்ப்பில் திடீர் அதிர்ஷ்டமும் உண்டாகும், நேற்று வரை சாமானியராக வலம்வந்த தங்களுக்கு திடீர் புதிய பொறுப்புகளும், மதிப்பு மரியாதை அந்தஸ்த்தும் ஏற்ப்படும், இந்த குரு பெயர்ச்சி தங்களின் வாழ்க்கையில் திடீர் திருப்பு முனையை ஏற்ப்படுத்தும்.

7ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக லக்கினமான 1ம் பாவகத்தை வசீகரிப்பது கும்ப லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, திருமண யோகங்கள், சிறந்த யோகமுள்ள வாழ்க்கை துணை, புதிய நண்பர்கள் , புதிய கூட்டாளிகள் என வாழ்க்கையில் பல புதிய மனிதர்களின் அறிமுகத்தால் உற்சாகத்தை வாரி வழங்கும், உடல் நிலையில் நல்ல முன்னேற்றமும், மன தெளிவும் சிறப்பான சிந்தனை ஆற்றலையும் வாரி வழங்கும், திடீர் பயணங்கள் மூலம் நல்ல லாபம் உண்டாகும், முற்போக்கு சிந்தனையுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ்க்கையில் அனைத்து எதிர்ப்புகளையும் சிறப்பாக எதிர்கொள்ளும் வல்லமையை தரும், புதிய நோக்கம், புதிய அணுகுமுறை தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றங்களை தங்குதடையின்றி வாரி வழங்கும், எதிர்ப்புகள் தங்களை விட்டு அகலும், இதுவரை பகைமை பாராட்டியவர்கள் தங்களுடன் நடப்பு மற்றும் இணக்கத்தை நாடுவார்கள், தொழில் முறை போட்டியாளர்கள் கூட தங்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டுதல்களுக்கும் காத்திருக்கும் சூழ்நிலையை ஏற்ப்படுத்தும், சரியான கோணத்தில் சிந்தனை செய்து வாழ்க்கையில் சகல யோகங்களையும் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை இந்த குரு பெயர்ச்சி தங்களுக்கு வாரி வழங்கும்.

7ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிப்பது கும்ப லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, வீரதீர பராகிரம செயல்களில் ஈடுபட செய்து அபரிவிதமான வெற்றிகளை குவிக்கும் தன்மையை தருவார், விளையாட்டு துறையில் உள்ள அன்பகளுக்கு தங்களின் லட்சிய கனுவுகளை, நனவுகள் ஆக்கும் வல்லமையை தருவார், அரசு துறை காவல், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, தீயணைப்பு துறையில் உள்ள அன்பர்களுக்கு மிகுந்த முன்னேற்றத்தையும், யாரும் சாதிக்காத சாதனைகளுக்கு உரிமைதாரர்கள் ஆகும் வாய்ப்பை தருவர், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் பணியாற்றும் அன்பர்களுக்கு புதிய வாய்ப்புகளையும், எதிர்பாராத யோக வாழ்க்கையையும் வாரி வழங்குவார், அரசியலில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகளையும், மிக பெரிய பதவிகளை அலங்கரிக்கும் திடீர் யோகத்தையும் வாரி வழங்கும், சுய சிந்தனை மற்றும் சுய கட்டுபாடு தங்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு நல்ல அடித்தளத்தை அமைத்து தரும், வியாபாரிகளுக்கு நல்ல லாபமும், புதிய அணுகு முறைகளையும் கடைபிடிக்கும் யோகத்தை தரும், போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் வல்லமை உண்டாகும், எதிரிகள் தங்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் பின்னடைவை சந்திப்பார்கள், இந்த குரு பெயர்ச்சி தங்களின் வாழ்க்கையில் பல வெற்றிகளையும் புகழையும் தேடித்தரும்.

குறிப்பு : 

கும்ப லக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட7,11,1,3ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும்  திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 7,11,1,3ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
  

இந்த குரு மாற்றத்தின் மூலாம் 100% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது கும்ப லக்கினமே மூன்றாவது இடத்தை பெறுகிறது, வாழ்த்துகள் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696   

திங்கள், 27 ஜூலை, 2015

குரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான் இலக்கின வாரியாக தரும் பலன்கள் - மகரம்




 பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும்  எடுத்துகொள்வோம் அன்பர்களே!

மகர லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியான மகர ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 8,12,2,4ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், 8ல் அமர்ந்த குரு பகவான் தங்களுக்கு, அவசர கதியில் செய்யும் காரியங்களில் தடைகளையும் தாமதங்களையும் தருவார், சுய கட்டுபாடு மற்றும் தன்னம்பிக்கை இழக்கும் சூழ்நிலைகளை தரக்கூடும், பதட்டத்தில் செய்யும் காரியங்கள் மிகப்பெரிய இழப்புகளை ஏற்ப்படுத்தும், வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனமுடன் இருப்பது நலம் தரும், எதிர்பாராத விபத்துகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும், வெளிநாடுகளில் இருந்து நல்ல வருமான வாய்ப்பை பெற்று தருவார், அதிக அளவில் முதலீடு செய்யும் பொழுது மிகுந்த கவனம் தேவை, வாழ்க்கை துணை மற்றும் தொழில் முறை கூட்டாளிகள் வழியில் இருந்து சிறு சிறு வீண் விரையங்கள் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் மிகுந்த நன்மையை தரும், வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அதிகரிக்கும், வேற்று மதத்தினர் மற்றும் வேற்று மொழி பேசும் அன்பர்கள் வழியில் இருந்து யோக வாழ்க்கை உண்டாகும், தொழில் அமைப்பில் இருந்து எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாக அதிக வாய்ப்பு உண்டு, உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, புதிய சொத்துகள் மற்றும் புதிய பொருட்கள் வாங்க சந்தர்ப்பங்கள் அதிக அளவில் ஏற்ப்படும்.

10ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தை வசீகரிப்பது மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, பெரிய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் வந்த போதிலும் மிகுந்த எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், தேவையில்லாத அவப்பெயர் ஜாதகரை தேடி வரக்கூடும் என்பதால், அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது, தன்னை விட வயதில் அதிகம் உள்ள பெரிய மனிதர்களின் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்வதும், பணிவு காட்டுவதும் முன்னேற்றத்தை தரும், மேலும் பெரியோர்களின் ஆலோசனை படி ஜீவன வாழ்க்கை மேற்கொள்வதும், காரியங்கள் ஆற்றுவதும் சீரான வளர்ச்சியை தரும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்கள் எதிர்பால் அமைப்பினரிடம் அதிக கவனமும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது வீண் அவ பெயரை தவிர்க்க உதவும், முன்னோர்களின் ஆசியை நாடுவது காரியங்களில் ஏற்ப்படும் தடைகளை தகர்த்தெறியும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதமும், புனித திருத்தலங்களின் வழிபாடும் தங்களின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை வாரி வழங்கும்.

10ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, கை நிறைவான வருமான வாய்ப்பை வாரி வழங்கும், இதுவரை வாரா நிலுவை தொகைகள் திடீரென கைக்கு வந்து சேரரும், நிலபுலன்கள், சொத்துகளை விற்று அதிக லாபம் பார்க்கும் யோகம் உண்டாகும், முதலீடு செய்த இடங்களில் இருந்து அதிக படியான வருமானங்கள் வந்து சேரும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும், சுப நிகழ்சிகள் தங்குதடையின்றி நடைபெறும், பிரிவு நிலையில் இருந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும், மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், முற்போக்கு சிந்தனையுடன் சகல காரியங்களிலும் வெற்றியை பெரும் யோக காலமாக இந்த குரு பெயர்ச்சி அமையும், மனதில் நினைத்த எண்ணங்கள் யாவும் நடைபெறும், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும், பொழுதுபோக்கு கேளிக்கை அம்சங்களில் அதிக ஈடுபாடு, பல இடங்களில் இருந்து வரும் ஆதரவு , உறவுகளின் ஒத்துழைப்பு, கூட்டு முயற்ச்சியின் மூலம் தொழில் வெற்றி மற்றும் விருத்தி பெரும் யோகம், நல்ல வேலையாட்கள் மூலம் அபரிவிதமான் தொழில் வளர்ச்சி மற்றும் தன்னிறைவான வருமானம் என 2ம் பாவக வழியில் இருந்து அறிவு சார்ந்த வெற்றிகளை குவிக்கும் யோகம் உண்டாகும்.

10ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, புதிய சொகுசு வண்டி வாகனம் மற்றும் புதிய வசதி மிக்க வீடு வாங்கும் யோகத்தை தரும், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் பணியாற்றும் அன்பர்களுக்கு அபரிவிதமான முன்னேற்றமும், வருமான வாய்ப்புகளும் உண்டாகும், கனரக தொழில் மற்றும் உலோகம் சார்ந்த தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு திடீர் பதவிகள் தேடிவரும், அரசு துறையில் குறிப்பாக கல்வி,மருத்துவம்,நிர்வாகம் சார்ந்த துறைகளில் பணியாற்றும் அன்பர்களுக்கு, எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் வருமான வாய்ப்புகளும் வந்து குவியும், பயணங்களின் மூலம் நல்ல லாபமும் முன்னேற்றமும் உண்டாகும், சுகபோக வாழ்க்கைக்கு உண்டான வசதி வாய்ப்புகள் அனைத்தும் இந்த குரு பெயர்ச்சியின் மூலம் தாங்கள் தடையின்றி பெறும் யோகம் உண்டாகும், கனிம பொருட்கள் ரசாயன பொருட்கள் மூலம் நல்ல லாபமும் முன்னேற்றமும் உண்டாகும், இதுவரை போராடிய விஷயங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும், பல தொழில் செய்யும் வாய்ப்புகள் வந்து சேரரும், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத தன சேர்க்கையும் முன்னேற்றமும் உண்டாகும்.

குறிப்பு : 

மகர லக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட8,12,2,4ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும்  திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 8,12,2,4ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
  

இந்த குரு மாற்றத்தின் மூலாம் 90% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது மகர லக்கினமே மூன்றாவது இடத்தை பெறுகிறது, வாழ்த்துகள் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

வெள்ளி, 24 ஜூலை, 2015

பாதகமான பலன்களை, பாதகம் இல்லாமல் செய்யும், பாதக ஸ்தானம்!




 சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் தொடர்பு பெற கூடாத ஸ்தானம் பாதக ஸ்தானமே, ஏனெனில் மறைவு ஸ்தானம் என்று வர்ணிக்கப்படும் 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெரும் பாவகங்கள் தனது பாவக வழியில் இருந்து சில நன்மைகளை செய்யக்கூடும், ஆனால் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் எந்த ஒரு வீடு ஜாதகருக்கு எவ்வித சிறு நன்மையையும் செய்ய வாய்ப்பில்லை, அதன் பாதிப்பில் இருந்து தப்புவதற்கும் சந்தர்ப்பங்களை தாரது என்பது கவனிக்க தக்கதுஇந்த , மேலும் ஒருவரது சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசை அல்லது எதிர்வரும் திசை, பாதக ஸ்தான பலனை நடத்தும் பொழுது ஜாதகரின் வாழ்க்கை குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 200% சதவிகித இன்னல்களை எவ்வித பாகுபாடும் அனுபவிக்கும் தன்மையை தரும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !



லக்கினம் : சிம்மம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : அவிட்டம் 1ம் பாதம் 

இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு, பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகமே பாதக  ஸ்தானமாக அமைகிறது, மேலும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது சகோதர  பாவகமான 3ம் வீடு, பூர்வபுண்ணியத்தை குறிக்கும் 5ம் வீடு, பாக்கியத்தை குறிக்கும் 9ம் வீடு, எனவே ஜாதகர் ஜாதகர் 3,5,9ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை அனுபவிக்க வேண்டும் என்பது விதி அமைப்பு, ஆக ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து பெரும் இன்னல்கள்  எவ்விதம் அமையும் என்பதை சற்றே சிந்திப்போம் அன்பர்களே !

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் முயற்ச்சிகள் யாவும் பெரிய பின்னடைவை தரும், சகோதர வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது, தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுபாடு வெகுவாக குறையும், கமிஷன் தரகு தொழில்கள் ஜாதகரின் பொருளாதார வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும், திட்டமிடுதல்களும் செயல்திறனும் வெகுவாக குறையும், மிக முக்கியமாக தனது அறிவு திறனும் புத்திசாலித்தனமும் ஜாதகரின் வாழ்க்கைக்கு பலன் தாராது, பொதுமக்கள் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது, பொது காரியங்களில் இறங்கினால் தோல்வியே மிஞ்சும், நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும், எதையும் திட்டமிட்டு செயல் வடிவம் பெற இயலாது, திறமை   இருப்பினும் ஜாதகருக்கு பலன் தாராது.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு உதவி செய்யும் ஆட்கள் மிக குறைவே எனலாம், அனைத்தையும் தானே எதிர்கொண்டு சமாளிக்க வேண்டி வரும், குல தெய்வத்தின் ஆசியை பெற ஜாதகர் மிகுந்த பிரயத்தனம் செய்யவேண்டி வரும், தனது பூர்வீகத்தில் உள்ள வரை ஜாதகரின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கும், தன்னை சார்ந்தவர்கள் மூலம் மிக பெரிய இன்னல்களுக்கு ஆளாக்கும், சுய அறிவும் சமயோசித புத்திசாலித்தனமும் சரியான நேரத்தில் கைகொடுக்காது, வீண் விவகாரங்களில் ஈடுபடும் சூழ்நிலையை தரும், பொது வாழ்க்கையில் அளவில்லா இன்னல்களை வாரி வழங்கும், முரண்பட்ட சிந்தனையும் செயல்பாடுகளும் ஜாதகரின் வாழ்க்கையில் மிக பெரிய ஏமாற்றங்களையும், தொல்லைகளையும் வாரி வழங்கும்,  கற்ற கல்வி ஜாதகருக்கு எவ்வித நன்மையையும் தாரது, சுய அறிவு திறனும் வெகுவாக பாதிக்க படும், சூழ்நிலை கைதியாக தனிமையில் போராடும் சந்தர்ப்பங்களை ஜாதகரே ஏற்ப்படுத்தி கொண்டு தனது வாழ்க்கை முன்னேற்றத்தை தானே பாதிப்பிற்கு    உள்ளாக்குவார் என்பது கவனிக்கத்தக்கது.

9ம் பாவக வழியில் இருந்து சமுதாயத்தில் அவப்பெயர், பொதுமக்கள் வழியில் இருந்து வரும் எதிர்ப்புகள், நம்பிக்கைகள் வீணாகும் சூழ்நிலை, சரியான  சந்தர்பங்களை தவறவிடும் தன்மை, அவசர கதியில் செய்யும் செயல்கள் யாவும் ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்ற தடையாக அமையும் தன்மை, எதிர்பாராத இழப்புகள் நஷ்டங்கள், மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் செய்யும் செயல்கள் யாவும் ஜாதகரின் வாழ்க்கையை பாதிக்கும் தன்மை, பொருளாதார முன்னேற்றத்தில் ஏற்ப்படும் இடையூறுகள், மற்றவர்களின் தவறான வழிகாட்டுதல்கள் மூலம் தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்ளும் அமைப்பு, அனைத்து விஷயங்களை உணர்ந்த போதிலும் சூழ்நிலைக்கு அடிமை ஆகும் தன்மை, ஆன்மீக வாழ்க்கையில் ஏற்ப்படும் இடைஞ்சல்கள், சரியான குரு அமையாத தன்மை, முன்னோர்களின் ஆசிர்வாதமும் வழிகாட்டுதல்களும் இல்லாமல் சுயமாக வாழ்க்கையில் போராடும் சூழ்நிலை, பக்குவம் இல்லாத நடைமுறைகள், சுய கட்டுபாடு இன்றி வீண் பிடிவாதம் என ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும் .

மேற்கண்ட பாதிப்புகளை ஜாதகர் தவிர்க்க இயலாது என்றாலும் கூட, நடைபெறும் எதிர்வரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் மேற்கண்ட 3,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகரின் வாழ்க்கையல் நன்மை உண்டாகும், நடைபெறும் திசை எதிர்வரும்  திசை தரும் பலன்களை பற்றி இனி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை சனி ( 27/10/2013 முதல் 27/10/2032 வரை )

ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சனி தசை 3,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 1,7,11ம் வீடுகள் லாபம்  மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் பலன்களை தருவது லாப ஸ்தான வழியில் இருந்து நல்ல அதிர்ஷ்டமும் லாபமும் கிடைத்த போதிலும், பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது, மேலும் ஜாதகர் 3,5,9ம் பாவகங்களுக்கு   உண்டான பிரீதி பரிகாரங்களை தேடிகொள்வது பாதக ஸ்தான கர்மவினை பதிவுகளை கழித்து கொள்வதற்கு உண்டான வாய்ப்பை  வழங்கலாம்.

குறிப்பு :

ஒருவரது சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவகங்களின் பலனை நடைமுறையில் அல்லது எதிர் வரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகருக்கு பாதக ஸ்தானத்தல் எவ்வித இன்னல்களும் நடைமுறைக்கு வாராது, ஆனால் நடைமுறையில் அல்லது எதிர் வரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தினால் ஜாதகர் பாதக ஸ்தான அமைப்பில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது அனுபவித்து கழித்து  கொள்வதே சால சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

குரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான் இலக்கின வாரியாக தரும் பலன்கள் - தனுசு




பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும்  எடுத்துகொள்வோம் அன்பர்களே!

தனுசு லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியான தனுசு ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 9,1,3,5ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், தனுசு லக்கினத்திற்கு 9ல் அமர்ந்த குரு பகவான் தங்களது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பெரிய அளவிலான உதவிகளை இனிவரும் வருடத்தில் தங்களுக்கு வழங்குவார் குறிப்பாக ஆன்மீக தேடுதல்களுக்கு நல்ல விருத்தியை தருவார், பெரிய மனிதர்களின் ஆதரவும், ஆன்மீக பெரியோரின் ஆசிர்வாதமும் நிறைவாக பெரும் யோகத்தை தரும், தன்னம்பிக்கையும் அறிவுத்திறனும் மேம்படும், பயணங்களில் நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு பெருவாரியான ஆதரவு கிடைக்கும், கல்வி துறை சார்ந்த அன்பர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்புகள் வந்து சேரும், சுய சிந்தனையும், செயல்திறனும் வாழ்க்கையில் அபரிவிதமான நன்மைகளை வாரி வழங்கும், தங்களது வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றங்களை பெறுவதற்கு உண்டான அடித்தளத்தை அமைக்க சரியான நேரமிது, ஆராய்ச்சி மற்றும் உயர்கல்விகளில் சிறந்த வெற்றிகளை பெரும் யோகத்தை தரும்.

9ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக உயிர் ஸ்தானமான 1ம் பாவகத்தை வசீகரிப்பது தனுசு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, உடல் மனம் இரண்டு வலிமை பெரும், சிந்தனையும் அறிவுத்திறனும் பல முன்னேற்றங்களை தரும், கல்வியில் வெற்றி, சாஸ்திரத்தில் தேர்ச்சி, கணித அறிவு, ஜோதிடத்தில் புலமை, வாதத்திறமை, பெரிய மனிதர்களின் ஆதரவு, எண்ணிய நினைவுகள் பலிதம் பெரும் யோகம், உடல் ஆரோக்கியம் மேம்படும் தன்மை, எதிர்பாராத உதவிகள், கற்ற கல்வியின் மூலம் பெரும் யோக வாழ்க்கை, திடீர் முன்னேற்றம், பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கு எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் கை நிறைவான வருமானம், என சுய முன்னேற்றத்திற்கு ஏதுவான நேரமிது, மேலும் பொதுமக்கள் ஆதரவின் மூலம் புதிய பொறுப்புகள் மற்றும் பதவிகளும் தேடிவரும் வாய்ப்பை தரும், ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பும், அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றமும் உண்டாகும்.

9ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிப்பது தனுசு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, எடுக்கும் காரியங்களில் அபரிவிதமான வெற்றி வாய்ப்பை வாரி வழங்கும், அதிர்ஷ்டத்தின் தன்மையை 100% விகிதம் அனுபவிக்கும் யோகத்தை தரும், மனதில் நினைக்கும் எண்ணங்கள் யாவும் பலிதம் பெரும், கமிஷன் மற்றும் தரகு தொழில் செய்துவரும் அன்பர்களுக்கு அளவில்லா லாபமும் முன்னேறமும் உண்டாகும், விளையாட்டு வீரர்களுக்கு புதிய வாய்ப்புகளும், எதிர்பாராத வெற்றிகளும் வந்து குவியும், சுய தொழில் புரிவோருக்கு படிப்படியான ஸ்திரமான முன்னேற்றமும், மக்களிடம் அபரிவிதமான வரவேற்ப்பும் உண்டாகும், புதிய முயற்ச்சிகளில் ஈடுபடும் அன்பர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றமும் லாபமும் உண்டாகும், கல்வி கேள்விகளில் புலமையும் தேர்ச்சியும் உண்டாகும், மனதில் உறுதியுடன் மேற்கொள்ளும் காரியங்களில் முழு வெற்றி கிட்டும், சுய மரியாதை, கௌரவம், அந்தஸ்து உயரும், புதிய வாய்ப்புகள் தங்களின் வாழ்க்கையில் பலவிதமான வசதி வாய்ப்புகளை பெற்றுத்தரும்.

9ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிப்பது தனுசு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, குல தெய்வ அருளாசியின் மூலம் தன்னிறைவான முன்னேற்றத்தை பெரும் யோகத்தை தரும், இது வரை இருந்த தடைகள் யாவும் நீங்கி வாழ்க்கையில் சுபிட்சம் ஓங்கும், தனது சந்ததிக்கு புத்திர சந்தானம் பாக்கியம் கிடைக்கும், இதுவரை திருமண வாழ்க்கை அமையாத அன்பர்களுக்கு சிறப்பான வாழ்க்கை துணை அமைந்து திருமணம் விரைவில் நடைபெறும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோசம் ஓங்கி நிற்கும், எதிர்பாராத சொத்துகள் கிடைக்க பெறுவீர்கள், உறவுகள் ஆதரவும் உதவியும் கிடைக்கும், சமூகத்தில் இதுவரை இருந்துவந்த இடையூறுகள் யாவும் நீங்கி மதிப்பு மரியாதை கிடைக்க பெறுவீர்கள், வெளிநாடுகளில் இருந்து அபரிவிதமான வருமான வாய்ப்பும், மாற்று மதத்தினர் மூலம் மிகுந்த லாபமும் முன்னேற்றமும் உண்டாகும் யோக காலமாக இந்த வருடம் தனுசு இலக்கின அன்பர்களுக்கு அமையும் என்பது கவனிக்க தக்கது, வாழ்த்துகள் 

குறிப்பு : 

தனுசு லக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட9,1,3,5ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும்  திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 9,1,3,5ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
  

இந்த குரு மாற்றத்தின் மூலாம் 100% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது தனுசு லக்கினமே இரண்டாவது  இடத்தை பெறுகிறது, வாழ்த்துகள் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

புதன், 22 ஜூலை, 2015

குரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான் இலக்கின வாரியாக தரும் பலன்கள் - விருச்சிகம்


 பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும்  எடுத்துகொள்வோம் அன்பர்களே!

விருச்சிக லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியான விருச்சிக ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 10,2,4,6ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தில் அமர்ந்துள்ள குரு பகவான் தங்களுக்கு ஜீவன ரீதியான முன்னேற்றத்தையும், தொழில் அனுபவங்களையும் வாரி வழங்குவார், செய்யும் தொழில் சார்ந்த கல்வியினை பெறுவதற்கு சரியான நேரமிது, கல்வி துறையில் பணியாற்றும் அன்பர்களுக்கு நல்ல முன்னேற்றமும், பதவி உயர்வும் உண்டாகும், மேலும் கல்வி துறையில் புகழும் அந்தஸ்து கௌரவம் கிடைக்க பெறுவீர்கள், தங்களின் சார்ந்த முயற்ச்சிகள் யாவும் நிறைவான நன்மைகளை வாரி வழங்கும், வேலைவாய்ப்பில் முன்னேற்றமும், வெளிநாடு சென்றுவரும் யோகமும் இனிவரும் ஒரு வருட  காலத்தில் நிச்சயம் அமையும், மருத்துவ துறையில் உள்ள அனபர்களுக்கு எதிர்பாரத லாபமும் தொழில் முன்னேற்றமும் உண்டாகும், புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை பெரும் யோகத்தை தரும்.

10ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது விருச்சிக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் அளவில்லா தன வரவையும் வாரி வழங்கும், புதிய வருமான வாய்ப்புகள் தங்களுக்கு தேடி வரும், பேச்சு திறமையின் மூலம் நல்ல வாய்ப்புகளையும், முன்னேற்றங்களையும் பெறுவதற்கு உண்டான சந்தர்ப்பங்கள் கூடி வரும், இதுவரை திருமணம் ஆகாத அன்பர்களுக்கு திருமணம் வாய்ப்புகள் கூடி வரும், நல்ல இல்லற வாழ்க்கை அமையும்,  சமூதாயத்தில் உள்ள பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்க பெறுவீர்கள், அரசியல் பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றமிகு யோக காலமாக கருதலாம், புதிய பொறுப்புகள் தங்களை தேடி வரும், எதிரிகளின் செயல்கள் தங்களுக்கு சாதகமாக அமையும், சரளமான வாத திறமையும், சமயோசித புத்திசாலித்தனமும் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், எதிர்பாராத பதவிகளையும் பெற்று தரும், இனி வரும் ஒரு வருடம் கை நிறைவான வருமானத்தை தங்கு தடையின்றி வாரி வழங்கும்.

10ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது விருச்சிக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, புதிய  சொத்துகள் வண்டி வாகனம், மண் மணை யோகத்தை தரும், கட்டுமான துறையில் உள்ள அன்பர்களுக்கு தொழில் ரீதியான வளர்ச்சி மிகவும் அபரிவிதமாக அமையும், சுய முயற்ச்சியின் மூலம் சகல விதமான நன்மைகளையும் முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், தனது பெயரில் உள்ள சொத்துகளை விற்று பெரிய தன வரவையும், புதிய தொழில் முதலீடுகளையும் செய்யும் யோகத்தை தரும், இது வரை விற்பனை செய்ய இயலாத சொத்துகளை இனிவரும் ஒரு வருட காலத்தில் நல்ல லாபத்திற்கு விற்க ஏதுவான சூழ்நிலை அமையும், தங்களின் மனதில் உள்ள எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், தங்களின் திட்டமிடுதல்களும், லட்சியங்களும் நிறைவேறும்.

10ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிப்பது விருச்சிக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, 6ம் பாவக வழியில் இருந்து அதிக அளவில் உடல் தொந்தரவுகளை தரக்கூடும், வயிறு சார்ந்த பிரச்சனைகளும், பித்தம் சார்ந்த தொந்தரவுகளும் அதிக அளவில் துன்பத்தை தரக்கூடும், எதிரிகள்  மூலம் எதிர்பாராத முன்னேற்ற தடைகளை சந்திக்கு சூழ்நிலை தரும், கடன் தொந்தரவுகள்  எதிர்பாராத நேரங்களில் தங்களின் மன நிம்மதியை கேள்விக்குறியாக்கும், புதிய கடன்களை வாங்கும் பொழுதும், மற்றவர்களுக்கு ஜாமீன் இடும் பொழுதும் அதிக கவனமாக இருப்பது நலம் தரும், சிறு பயணங்கள் மூலம் நல்ல லாபம் கிட்டும், மருந்து மருத்துவ உபகரணங்கள் மூலம் எதிர்பாராத நல்ல லாபங்களை பெறுவதற்கு உண்டான சூழ்நிலைகள் உருவாகும், தொழில் புரிவோருக்கும், ஒரு இடத்தில் பணியாற்றும் அன்பர்களுக்கும் எதிர்பாராத இன்னல்கள் ஏற்ப்பட அதிக வாய்ப்புண்டு என்பதால் யாவரிடமும் பகைமை பாராட்டாமல் நடந்துகொள்வது நலம் தரும்.

குறிப்பு : 

விருச்சிக லக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட10,2,4,6ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும்  திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 10,2,4,6ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
  

இந்த குரு மாற்றத்தின் மூலாம் 90% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது விருச்சிக லக்கினமே இரண்டாவது  இடத்தை பெறுகிறது, வாழ்த்துகள் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  



திங்கள், 20 ஜூலை, 2015

குரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான் இலக்கின வாரியாக தரும் பலன்கள் - துலாம்




பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும்  எடுத்துகொள்வோம் அன்பர்களே!

துலா லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு7ம் ராசியான துலாம் ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 11,3,5,7ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், சம வீடான லாப ஸ்தானத்தில், அமர்ந்த குரு பகவான் துலாம் இலக்கின அன்பர்களுக்கு அளவில்லா அதிர்ஷ்டங்களையும், லாபங்களையும் ஸ்திரமாக தொடர்ந்து தருவது வரவேற்க்கதக்க விஷயமாக கருதலாம், கல்வி கேள்விகளில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும், முற்போக்கு சிந்தனையும், சமயோசித புத்திசாலித்தனமும் தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தகு மாற்றங்களை வாரி வழங்கும், இதுவரை நிறைவேறாத ஆசைகள் யாவும் பூர்த்தியாகும், லட்ச்சியங்கள் கைகூடி வரும், அனைத்திலும் நல்ல லாபம் கிட்டும், தனிப்பட்ட செயல்களிலும், தொழில் அமைப்புகளில் இருந்தும் அபரிவிதமான லாபங்கள் வந்து சேரும், தங்களின் பெயரும் புகழும் ஓங்கி நிற்கும், அனைத்து தரப்புகளில் இருந்தும் பாராட்டு கிடைக்கும், குல தேவதையின் கருணையினால் சகல விதமான அதிர்ஷ்டங்களையும் பெரும் யோக காலமாக இனிவரும் ஒருவருடம் தங்களுக்கு மிகவும் சிறப்பாக அமையும்.

11ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிப்பது துலாம் லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சிகளில் அனைத்திலும் வெற்றி உண்டாகும், விளையாட்டு துறையில் உள்ள அன்பர்களுக்கு மிக பெரிய வெற்றிகளை பெற்று தரும் யோககாலமாக கருதலாம், ஏஜென்சி,கமிஷன்,வியாபாரம் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்களுக்கு தொழில் விருத்தி மிக அபரிவிதமாக அமையும், புதிய தொழில் துவங்கும் அன்பர்களுக்கு வியாபாரம் செழிக்கும், தன வரவு மிகவும் அதிக அளவில் வந்து குவியும், பொதுமக்களிடம் நற்ப்பெயரும் ஆதரவும் பெருகும், பயணங்களில் அதிர்ஷ்டமும் செல்லும் இடங்களில் வரவேற்ப்பும் லாபமும் கிடைக்கும், சகோதர வழியில் ஆதரவு  என்பது வியக்கத்தக்க விதத்தில் வந்து சேரும், உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி  சார்ந்த  விஷயங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அபரிவிதமான வெற்றிகள் வந்து சேரும், உடல் மனம் எப்பொழுதும் புத்துணர்ச்சியாக காணப்படும், மிதமிஞ்சிய சக்திகளை பெரும் வாய்ப்புகளை வாரி வழங்கும், புனித திருத்தலங்களுக்கு தடையின்றி  சென்று வரும் யோகத்தை தரும், ஆன்மீகத்தில் வெற்றியும் ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பும் தங்களின் வாழ்க்கையில் நல்ல திருப்பு முனையை ஏற்ப்படுத்தும்.

11ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக பூர்வ புண்ணிய  ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிப்பது துலாம் லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, 5ம் பாவக வழியில் இருந்து சிறு சிறு இன்னல்களை தர கூடும், குழந்தைகள் வழியில் இருந்து இன்னல்களும் சிரமங்களும் ஏற்ப்பட வாய்ப்பு உண்டாகும், அவர்களின் நலன்களில் அதிக அக்கறை கொள்வது சால சிறந்தது, உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், சரியான திட்டமிடுதல்களும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது, எந்த ஒரு விஷயத்தையும் செய்யும் முன் பல முறை யோசனை செய்து இறங்குவது மிகுந்த நன்மைகளை தரும், கற்ற கல்வியினால் பயன் இல்லாத சூழ்நிலையை தரும், சிந்தனை திறனில் சிறு வறட்சி ஏற்ப்பட கூடும்,  சுய முன்னேற்றம் பற்றிய சிந்தனையும் அது சார்ந்த விஷயங்களில் சில நடவடிக்கைகளையும் இனிவரும் காலங்களில் தாங்கள் கட்டாயமாக எடுக்க வேண்டிய சூழ்நிலையை தரக்கூடும், இருப்பினும் இறுதியில் சகல விஷயங்களிலும் நன்மையையும் லாபமும் உண்டாகும் என்பதை நினைத்து பெருமை படலாம்.

11ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தை வசீகரிப்பது துலாம் லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, 7ம் பாவக வழியில் இருந்து சில நன்மைகளை பெற்ற போதிலும், வாழ்க்கை துணையின் வழியில் இருந்து வரும் இன்னல்களுக்காக மண்டையை பிய்த்துக்கொள்ளும் சூழ்நிலையை தரும், வாழ்க்கை துணையின் தேவைகளை பூர்த்திசெய்ய தனிப்பட்ட வருமான வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளும் அவசியம் ஏற்ப்படும், தங்களின் வாழ்க்கை பாதையை திசை திருப்புவதில் தங்களின் வாழ்க்கை துணை மிக முக்கிய பங்கு வகிப்பார் என்பதை தங்களால் தவிர்க்க இயலாது, இருப்பினும் பொதுமக்கள் ஆதரவும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் உதவியும் தங்களின் வாழ்க்கையில் மிகுந்த  நன்மைகளை வாரி வழங்கும், தொழில் ரீதியான வெற்றிகள் தாங்கள் எதிர்பார்த்த அளவில் மிகவும் சிறப்பாக அமையும், அரசியல் ரீதியான நன்மைகளையும் பதவிகளையும்  திடீரென பெரும் யோகத்தை தரும், மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும், பொருளாதார தேடுதல்களுக்கு சிறந்த வாய்ப்புகள் உண்டாகும், செயற்கரிய செயல்களில் ஈடுபடும் வாய்ப்பையும் அதில் வெற்றிகளை குவிக்கும் யோகத்தை தரும்.

குறிப்பு : 

துலாம் லக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட11,3,5,7ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும்  திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 11,3,5,7ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
  

இந்த குரு மாற்றத்தின் மூலாம் 90% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது துலாம் லக்கினமே முதலாவது இடத்தை பெறுகிறது, வாழ்த்துகள் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696