வியாழன், 27 ஏப்ரல், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் மகரம் !



சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

தனுசு :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பத்தாம் ராசியான மகர ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இனிவரும் இரண்டரை வருடம் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், மகர லக்கின அன்பர்களுக்கு கோட்சார ரீதியாக வழங்கும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், தர்மம் ஒற்றை காலில் நின்று, கால்பங்கு பரிபாலனம் செய்யும் கலியுகத்தில், தான் மட்டும் முழு அளவிலான தர்மத்தை உறுதியுடன் போற்றி நடக்கும் மகர லக்கின அன்பர்களுக்கு, இதுவரை லாப ஸ்தானத்தில் நின்று சுபயோகங்களை வாரி வழங்கிய சனி பகவான், விரைய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் காலம் சற்று  இன்னல்களை மகர லக்கின அன்பர்களுக்கு தர கூடும், குறிப்பாக மனநிம்மதி இழப்பு, குழப்பம், தெளிவற்ற சிந்தனை, கல்வியில் தடை, முதலீடுகளில் திடீர் இழப்பு, நல்ல உறக்கமின்மை, பெரியோர் ஆதரவு இன்மை, தெய்வீக அனுக்கிரகம் இன்மை, செய்யும் காரியங்களில் தடையை, அவசர கதியில் செய்யும் காரியங்கள் பெரும் தோல்வியையும், நஷ்டத்தையும் தர கூடும், இருப்பினும் தங்களின் நம்பிக்கையும், கடின உழைப்பும் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து தரும், முடிந்த அளவு தங்களின் குடும்பத்தில் உள்ள  பெரிய மனிதர்களின் ஆதரவை பெற்று அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுங்கள், வரும் எதிர்ப்புகள் யாவும் ஆதவனை கண்ட பனிபோல் விலகிவிடும், மேலும் எதிர்ப்பால் அமைப்பினரிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நலம் தரும், தங்களின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பார்கள், மேலும் தேவையற்ற அவப்பெயரை தங்களுக்கு ஏற்படுத்த கூடும் என்பதால் அதிக கவனம் தேவை, தொழில் ரீதியாக அதிக முதலீடுகளை  தவிர்ப்பது நலம் தரும் மேலும் முதலீடுகளை மிக சிறப்பாக கையாள வேண்டும் இல்லை எனில் மிகுந்த பேரிழப்பை தாங்கள் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கி விடும், மற்றவர் விஷயங்களில் தாங்கள் தலையீடு செய்வது தங்களின் எதிர்கால வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும், புலன் இன்பங்களில் நாட்டத்தை தவிர்த்து, சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய நேரமிது, சனிபகவானின் விரைய ஸ்தான சஞ்சாரம் தங்களின் மன நிம்மதியை சற்று அசைத்து பார்க்கும்.

5ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் மகர லக்கின அன்பர்களுக்கு புத்திரர் சார்ந்த சில சிரமங்களை தரக்கூடும், தனது பூர்வீகத்தில் இருந்து வேறு இடம் பெயர்ந்து, ஜீவனம் செய்யும் சூழ்நிலையை தரும், குலதெய்வ ஆசியை பெற ஜாதகர் கடின முயற்சியை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை தரும், உதவி செய்ய யாரும் அற்ற  நிலையையும், தனியாக போராட வேண்டிய நிலையை தரக்கூடும், எதிர்ப்புகளை சமாளிக்க தாங்கள் சற்று கடுமையாக போராட வேண்டிவரும், சுபகாரிய செலவினங்கள் அதிகரிக்கும், அறிவு திறனும், செயல்படும் வேகமும் வெகுவாக குறையும், சட்ட சிக்கல்கள் மூலம் பணவிரயம், செய்யும் காரியங்களில் போராட்டம் என்ற நிலையில் இன்னல்களை தரக்கூடும், சுய சிந்தனை மற்றும் அறிவு திறன் சரியான நேரத்தில் தங்களுக்கு பலன் தாராது, மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு நலம் பெற வேண்டிய நேரமிது, சனியின் சத்ரு ஸ்தான பார்வை, தங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை கடுமையாக பாதிக்கும், வருமானம் மற்றும் புத்திசாலித்தனம் மட்டுப்படும்.

6ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் மகர லக்கின அன்பர்களுக்கு குறுகியகால வெற்றிகளை தங்கு தடையினின்றி தருவார், கடன் பெறுவது கொடுப்பது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை நல்கும், எதிரிகள் தரும் இன்னல்கள் தங்களுக்கு சாதகமான வெற்றிகளை வாரி வழங்கும், பயணங்கள் மூலம் நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், வேலையாட்கள், தொழிலாளர்கள் மூலம் தங்களின் முன்னேற்றம் சிறப்பாக  அமையும், சுய தொழில் புரிவோருக்கு ஏற்றமிகு பொருளாதார வசதிவாய்ப்புகளை வாரி வழங்கும், உடல் நலம் மனநலம் சிறப்பாக அமையும், கூட்டு வியாபாரத்தில் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், எதிரிகள் தங்களின்  வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிவிடும் சூழ்நிலையை தரும், பொது வாழக்கையில் உள்ளோருக்கு மிக சிறப்பான நேரமிது, திடீர் மக்கள் செல்வாக்கு, அரசு பதவி, தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள்  வந்து சேரும், எதிர்காலத்திற்கான பொருளாதார உதவிகள் தங்களை தேடி வரும், மற்றவர்கள் தனம் தங்களின் முன்னேற்றத்திற்கு பெரும் உதவிகளை வாரி வழங்கும், சனிபகவானின் 7ம் பார்வை தங்களுக்கு சத்ரு ஸ்தான  வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் தரும். 

9ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் மகர லக்கின அன்பர்களுக்கு சற்று சிரமங்களை அதிக அளவில் தரக்கூடும், குறிப்பாக மற்றவர்கள் விஷயங்களில் ஆர்வம் செலுத்தினால் தங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும், சந்தேகங்கள் மற்றும் நம்பிக்கை இன்மை தங்களின் வாழ்க்கையை பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்த கூடும், பெரியோர் வார்த்தைகளை மதிக்காமல் செய்யும் காரியங்கள் எதிர்பாராத சிரமங்களை தங்களுக்கு தரக்கூடும், நிலையான மனம், திட சிந்தனை தங்களுக்கு இல்லை எனில் தங்களின் வாழ்க்கை பாதை மாறிவிடும், எதிர்பாராத இன்னல்களை தாங்கள் பெரிய அளவில் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், குறிப்பாக தங்களின் பெயர் பாதிக்கப்படாமல் பார்த்து கொள்வது  தங்களின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பிக்கும், வரும் இன்னல்களை கருத்தில் கொள்ளாமல், முழு வீச்சில் காரியமாற்றுவது தற்போதுள்ள சூழ்நிலையை மாற்றி தங்களின்  வாழ்க்கையில், சுபயோகங்களை நல்கும், எதிர்காலம் தங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை வாரி வழங்கும், சனி பகவானின் 10ம் பார்வை தங்களுக்கு பாக்கிய ஸ்தான வழியில் இருந்து அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதால், அதிக கவனம் தேவை, சரியான திட்டமிடுதல்கள் தங்களின் வாழ்க்கையை மிக நேர்த்தியாக சுபயோகங்களை  வாரி வழங்கும்.

குறிப்பு :

மகர லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 12,5,6,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  12,5,6,9ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மகர லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

சுய ஜாதகம் என்றால் என்ன ? சுய ஜாதகத்தால் நமக்கு என்ன பயன் ? ( பாவக வலிமை )


 சுய ஜாதகம் என்பது அவரவர் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, துல்லியமாக கணிதம் செய்யப்படுவதாகும், இந்த குறிப்புகள் ஓர் ஜாதகரின் லக்கினம், ராசி, நட்ஷத்திரம் மற்றும் ஜாதகரின் ஜெனன கால திசா புத்திகள் பற்றிய விபரங்களை நாம் துல்லியமாக தெரிந்துகொள்ள உதவும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை ஓர் ஜாதகரின் வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமை மற்றும் யோக அவயோக நிகழ்வுகளை நிர்ணயம் செய்கிறது என்றால் அது மிகையில்லை, ஒரு ஜாதகரை பற்றிய முழு விபரம் அறிய அவரது சுய ஜாதகத்தில் உள்ள பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொண்டும், நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் மிக எளிதாக நிர்ணயம் செய்து விடலாம், அவரின் வாழ்க்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற, நடைபெற இருக்கின்ற பலாபலன்களை மிக தெளிவாகவும், துல்லியமாகவும் நாம் உணர்ந்து தெளிவாக அவர்களுக்கு கூறிவிட முடியும்.

சுய ஜாதகத்தில் 1,3,11ம் வீடுகள் ஜாதகரின் ஆரயோக்கியம், மனநிலை, புகழ், கீர்த்தி, செயல்பாடுகள், தன்னம்பிக்கை, இயக்க நிலை என்ற வகையிலும், சுய முயற்சி, வீரியம், வேகம், செயல் திறன், வெற்றி, பொறுப்பு, முன்னேற்றம், சுய சிந்தனை திறன், ஜாதகரின் தைரியம், விளையாட்டில் ஆர்வம், வீரம் மிக்க கலைகளில் தேர்ச்சி, சாகச விரும்பி, அறிய சாதனைகளை படைக்கும் வல்லமை, எதிர்ப்புகளை வெற்றி கொள்ளும் யோகம்  என்ற வகையிலும், லாபம் அதிர்ஷ்டம், முற்போக்கு சிந்தனை, நேர்மை எண்ணங்கள், கருத்து ஒற்றுமை, யோகங்களை பரிபூர்ணமாக பெரும் அமைப்பு, மிதம்மிஞ்சிய நம்பிக்கை, உறுதி மிக்க செயல் பாடுகள், நீடித்த அதிர்ஷ்டம், சிறப்பு மிக்க குணாதிசயம், எதிர்ப்புகளை வெல்லும் வல்லமை என்ற வாகையிலும் சிறப்பு பலன்களை  தரும், சுய ஜாதகத்தில் 1,3,11ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின் சுய முன்னேற்றத்தை நிலை நிறுத்தும்.

சுய ஜாதகத்தில் 5,9ம் வீடுகள் ஜாதகரின் பாரம்பரியம் சார்ந்த அறிவு திறன், சமயோசித புத்திசாலித்தனம், நுண்ணறிவு, அதிபுத்திசாலித்தனம், தனது பாரம்பரியம் சார்ந்து ஜாதகர் அனுபவிக்கும் யோகம், கலைகளில் தேர்ச்சி மற்றும் ஆர்வம், கல்வியில் தேர்ச்சி மற்றும் முதன்மை நிலையை பெறுதல், ஜாதகருக்கு வரும் இன்னல்களை முன்கூட்டியே தெரிவிக்கும் குலதெய்வ ஆசி, அறிவு சார்ந்த வழியிலான உழைப்பு திறன், தெய்வீக அனுக்கிரகம், உதவிகள் தேடிவரும் வாய்ப்பு, சூழ்நிலையை மிக எளிதாக சமாளிக்கும் வல்லமை என்ற வகையிலும், அறிவார்ந்த பெரியோர்களின் ஆசி, பித்ருக்கள் ஆசி, தெய்வீக அனுக்கிரகம், நல்ல கல்வி, கற்ற கல்வி வழியிலான யோக வாழ்க்கை, ஆய்வு சார்ந்த வெற்றிகள், மற்றவர்கள் வாழ்க்கையில் சுப மாற்றங்களை தரும் அமைப்பு, தனது பாரம்பரிய ஜீவனத்தை காக்கும் வல்லமை, பழமையை மறவாத குணம், நல்ல குரு, நல்ல ஆசான் அமையும் யோகம், சூழ்நிலை மாறினாலும் தன்னிலை மாறாமல் திகழும் வல்லமை, சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, தெய்வீக அனுக்கிரகத்தால் தானும் பலன் பெற்று மற்றவருக்கும் பலன்பெறுமாறு வாழும் யோக வாழ்க்கை என்ற வகையில் சிறப்பு பலன்களை தரும், சுய ஜாதகத்தில் 5,9ம் வீடுகள் வலிமை பெறுவது  ஜாதகரின் அறிவார்ந்த செயல்களை நிலை நிறுத்தும்.

சுய ஜாதகத்தில் 2,4,7,10ம் வீடுகள் ஜாதகரின் வருமானம், குடும்ப வாழ்க்கை, வாக்கு வன்மை, பேச்சு திறன், சம்பாதிக்கும் ஆற்றல், நிதி நிலை, தன்னுடைய வருமானத்தை சேமிக்கும் வல்லமை, சரியான திட்டமிடுதல், மக்களை தன்வசப்படுத்தல், அனைத்திலும் லாபம் பார்க்கும் வல்லமை, குடும்ப வாழ்க்கையை திறம்பட நடத்தும் யோகம், திறமையான வாதம், அதன் வழியில் பெரும் வருமானம் என்றவகையிலும், சொத்து சுகம், வண்டி வாகனம், நிலம் இடம் வீடு சார்ந்த சேர்க்கைகள், ஜாதகரின் குணம், ஜாதகரின் பொருளாதார நிலவரம், கையிருப்பு, நகை, ஆபரணம், அணியும் ஆடைகள் தரம், தோற்ற பொலிவு, எண்ணத்தின் வலிமை, சுக போகங்களை சுவீகரிக்கும் வல்லமை, தேடும் பொருள் சேரும் யோகம் என்ற வகையிலும், திருமணம்,  திருமணத்தால் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை, வாழ்க்கை துணையின் ஆதரவு, நண்பர்கள் ஆதரவு, கூட்டாளிகளின் ஆதரவு, சக்தி மிக்க கூட்டாளி, மேற்கொண்டவர்கள் வழியிலான உதவிகள் மற்றும் முன்னேற்றம், பொதுமக்கள் ஆதரவு மற்றும் வசீகரம், அவர்கள் வழியிலான முன்னேற்றம் மற்றும் பதவி யோகம், வெளிநாடுகள் மற்றும் வெளியூர் சார்ந்த முன்னேற்றம் மற்றும் பணவரவு, சிறந்த வியாபார யோகம் என்ற வகையிலும், சிறப்பு மிக்க ஜீவன முன்னேற்றம், நிர்வாக திறன், பதவி யோகம், செய்யும் தொழிலை விரும்பி செய்யும் அமைப்பு, அதன் வழியிலான முன்னேற்றம், பதவி உயர்வு, சிறந்த ஜீவன வாழ்க்கை முறை, கவுரவம் அந்தஸ்து குறையாத யோக வாழ்க்கை, தனது ஜீவன வழியிலான நிரந்தர முன்னேற்றம், அரசு பதவி, அரசு உதவி, தனிப்பட்ட வியாபர திறமைகள், ஜீவன வழியிலான முன்னேற்றங்கள் என்ற  வகையில் யோகங்களை தரும், சுய ஜாதகத்தில் 2,4,7,10 ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின் பொருளாதர முன்னேற்றத்தை நிலை நிறுத்தும்.

சுய ஜாதகத்தில் 6,8,12ம் வீடுகள் ஜாதகரின் உடல் ஆரோக்கியம், குறுகிய கால தனவரவு, கடன் அதனால் பெரும் வருமானம், எதிரிகள் வழியிலான நன்மைகள், எதிர்ப்பவர் வழியிலான நன்மைகள், கடன் பெறுவது, கொடுப்பது மூலம் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை, கல்வி கேள்விகளில் தேர்ச்சி, போட்டி பந்தயங்களில் வெற்றி, வழக்குகளில் வெற்றி, நீதியை பெரும் யோகம், சிறு சிறு ஆதாயங்களை அடிக்கடி பெரும் யோகம், விரைவாக குணம் பெரும் அமைப்பு, நோய் எதிர்ப்பு திறன், சத்ரு வழியிலான பெரும் முன்னேற்றம் என்ற வகையிலும், திடீர் அதிர்ஷ்டம், வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மாற்றும் பொதுமக்கள் வழியிலான தன சேர்க்கை, புதைபொருள் பொருள் யோகம் மண்ணிற்கு அடியில் உள்ள பொருட்கள் வழியிலான திடீர் தன சேர்க்கை, மனதிற்கும் அறிவுக்கும்  எட்டாத விஷயங்கள் வழியிலான தனசேர்க்கை மற்றவர்கள் செல்வத்தை ஆளுமை செய்யும் யோகம், நீண்ட ஆயுள், திடீர் என செல்வந்தன் ஆகும் யோகம்,  மருத்துவம் மற்றும் மருத்துவ துறை  சார்ந்த யோக வாழ்க்கை, ஆயுள் காப்பீடு மூலம் அதிர்ஷ்ட யோகம் என்ற வகையிலும், முதலீடுகள் அல்லது மூதாதையர் சொத்துக்கள் மூலம் பெரும் செல்வசேர்க்கையை அடையும் யோகம், மனநிம்மதியான வாழ்க்கை, வெளிநாடுகளில் இருந்து வரும் திடீர் ஆதாயம், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி, சுக போக வாழ்க்கையினை ராசிக்கும் யோகம், நல்ல உறக்கம், மனதில் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றும் வல்லமை, கனவுகள் வழியிலான லாபங்கள், பெரிய சொத்துக்களை ஆளுமை செய்யும் யோகம், திடீரென வரும் பெரும் செல்வம் என்ற வகையில் நன்மைகளை தரும், 6,8,12ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின் அபரிவிதமான திடீர் செல்வசேர்க்கையை  நிலை நிறுத்தும்.

சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெறுவதால் ஜாதகர் பெரும் யோகங்களை பற்றி இன்றைய சிந்தனைக்கு " ஜோதிடதீபம் " பதிவு செய்திருக்கிறது .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

சுய ஜாதகம் என்றால் என்ன ? சுய ஜாதகத்தால் நமக்கு என்ன பயன் ?



உன் ஜாதகம்...

1) உன்னை நீ கெடுத்துக் கொண்டால் 
ராகு திசை...
2)பிறரை நீ கெடுக்க நினைத்தால்
கேது திசை...
3)பிறரை நீ பழிவாங்க நினைத்தால் 
சனி திசை...
4)உன் செல்வாக்கு உயர்ந்திட்டால்
செவ்வாய் திசை...
5)உனக்கு நல்புத்தி வந்துவிட்டால் 
புதன் திசை...
6) நிலையான முயற்சி செய்தால்
சூரிய திசை...
7) நிலையற்ற செயல்களென்றால் அங்கே
சந்திர திசை...
8)உனக்காக நீ புண்ணியம் செய்தால்
சுக்ர திசை...
9)உலகிலுள்ள அனைவருக்காகவும் நீ புண்ணியம் செய்தால் உனக்கு குரு திசை...

நேர்மையாக வாழ்பவருக்கு அனைத்தும் சாதகம், 

பாவம் செய்தவருக்கே ஜாதகம்.

மேற்கண்ட தகவல் வாட்ஸ் அப்பில் வந்ததது, இதை பகிர்ந்த அன்பருக்கு உண்மையில் ஜோதிடம் என்றால் என்னவென்றே புரியவில்லை என்பதை தவிர வேறு என்னவென்று சொல்வது, இறுதியில் " நேர்மையாக வாழ்பவருக்கு அனைத்தும் சாதகம் " " பாவம் செய்தவருக்கே ஜாதகம் " என்ற தத்துவ வாசகம் வேறு,  இதற்க்கு விளக்கம் தார " ஜோதிடதீபம் " கடமைப்பட்டுள்ளது.

 " அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது " என்பது இறைநிலையின் வலிமையை உணர  நமக்கு பெரியோர் சொன்ன தத்துவ வார்த்தை, அதைப்போன்றே சுய ஜாதக வலிமை இன்றி சிறு அசைவையும் ஒருவர் நிகழ்த்த இயலாது என்பதனை " ஜோதிட சாஸ்திரம்" பற்றி தெளிவாக உணர்ந்த அறிவார்ந்த சான்றோர் பெருமக்கள் ஏற்றுக்கொள்வார்கள், ஏனெனில்  ஒருவர் நேர்மையாளனாக திகழ்வதும், அநீதி இழைப்பவனாக இருப்பதும் சுய ஜாதகத்தின் வலிமை நிலையே என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறாமல் ஒருவன் நேர்மையாளனாக வாழ இயலாது, சுய ஜாதக வலிமை பெறாமல் ஓர் சிறு துரும்பை கூட  அசைக்க இயலாது  என்ற உண்மையை தெளிவாக தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

தத்துவங்களும் வாய் வார்த்தைகளும் ஒருவருக்கு சிறப்பான வாழ்க்கையை தந்துவிடாது, சுய ஜாதக வலிமையே ஒருவரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தரும், மேலும் அன்பர் பதிவு செய்த கருத்துக்கள் அணைத்தும் உண்மைக்கு புறம்பானது, ராகு, கேது, சனி, சந்திரன் திசைகள் ஒருவருக்கு இன்னல்களை தரும் என்ற விதத்திலும், செவ்வாய்,புதன்,சூரியன், குரு, சுக்கிரன் திசைகள் ஒருவருக்கு நன்மைகளை தரும் என்ற விதத்திலும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது, இது அடிப்படையிலே உண்மை அற்ற கருத்து, ஜோதிட சாஸ்த்திரம் பற்றிய ஓர் தெளிவில்லாமல் விரக்தியின் வெளிப்பாடாக, குத்து மதிப்பாக வாயில் வந்த வார்த்தையாக " ஜோதிடதீபம் " கருதுகிறது, இவர்கள் முதலில் சுய ஜாதகம் என்றால் என்ன? அதன் வலிமை நிலை என்றால் என்ன ? என்பதில் தெளிவு பெறுவது மிக்க நலம் தரும்.

உன்னை நீ கெடுத்துக் கொண்டால்
ராகு திசை...

அப்படியெனில் ராகு திசை நடைபெறும் அன்பர்கள் அனைவரும் அவரவர்களே தம்மை கெடுத்து கொள்வார்கள் என்ற விதத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற லக்கினத்தின் பலனை ராகு திசை ஏற்று நடத்தினால், ஜாதகர் தம்மை வாழ்க்கையில் மிக சிறந்தவனாக நிலை நிறுத்திக்கொள்வார், ஒழுக்க சீலராக திகழ்வார் என்பது தெரியுமா ?

பிறரை நீ கெடுக்க நினைத்தால்
கேது திசை...

வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை கேது திசை  ஓர் ஜாதகருக்கு  ஏற்று நடத்தினால், ஜாதகர் பிறருக்கு பலவிதங்களில் உபகார வாழ்க்கையை வழங்குவார் என்பது தெரியுமா ? 

பிறரை நீ பழிவாங்க நினைத்தால்
சனி திசை...

வலிமை பெற்ற சத்ரு ஸ்தான பலனை சனி திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், எதிரியையும் நேசிக்கும் வல்லமை கொண்டவராகவும், மக்கள் செல்வாக்கை பெற்று உயர் பதவியை பெறுவார் என்பதும் தெரியுமா?

உன் செல்வாக்கு உயர்ந்திட்டால்
செவ்வாய் திசை...

வலிமை அற்ற ஆயுள் ஸ்தான பலனை செவ்வாய் திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், அனைத்தையும் இழந்து நிர்கதியாக நிற்பர் என்பது தெரியுமா ?

உனக்கு நல்புத்தி வந்துவிட்டால்
புதன் திசை...

வலிமை அற்ற பூர்வ புண்ணிய ஸ்தான பலனை புதன் திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், ஜாதகர் சுய அறிவு அற்ற ஓர் அறிவிளியாக இருப்பர் என்பது தெரியுமா?

நிலையான முயற்சி செய்தால்
சூரிய திசை...

வலிமை அற்ற  சகோதர ஸ்தான பலனை சூரியன்  திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், ஜாதகர் எடுக்கும் முயற்சிகள் யாவும் படுதோல்வி அடையும் என்பது தெரியுமா ?

நிலையற்ற செயல்களென்றால் அங்கே
சந்திர திசை...

வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை சந்திரன் திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், ஜாதகர் தன்னம்பிக்கை மிக்கவராகவும், முற்போக்கு சிந்தனையும் உறுதியான மனபக்குவத்துடன் அதிர்ஷ்டங்களை பரிபூர்ணமாக சுவீகரிக்கும் வல்லமை பெற்றவராக திகழ்வார் என்பது தெரியுமா?

உனக்காக நீ புண்ணியம் செய்தால்
சுக்ர திசை...

வலிமை அற்ற பாதக ஸ்தான பலனை சுக்கிரன் திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், ஜாதகர் தானும் புண்ணியம் செய்யாமல், மற்றவர்கள் செய்யும் புண்ணிய காரியத்தையும் கெடுப்பார் என்பது தெரியுமா ?

உலகிலுள்ள அனைவருக்காகவும் நீ புண்ணியம் செய்தால் உனக்கு குரு திசை...

பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்ற 1,5,9ம் ஸ்தான பலனை குரு திசை ஓர் ஜாதகருக்கு ஏற்று நடத்தினால், ஜாதகர் பாவ காரியங்களுக்கான மொத்த உருவமாக திகழ்வார் என்பது தெரியுமா ?


 சுய ஜாதக நிலையை பற்றியும், ஜோதிட சாஸ்திரம் பற்றியும் சிறிதும் அறியாமல், சுப கிரகங்கள் திசை நன்மையை செய்யும் என்றும், அசுப கிரகங்களின் திசை தீமையை செய்யும் என்றும் சொல்வது முற்றிலும் ஜோதிட சாஸ்திர  உண்மைக்கு புறம்பானது, சுய ஜாதக வலிமை உணர்ந்தும், ஜோதிட சாஸ்திரம் பற்றிய தெளிவுடன் சுய ஜாதக பலாபலன் காண்பதே அனைவருக்கும் உகந்தது.

ஒருவர் புண்ணியம் செய்வதும், பாவம் செய்வதும் அவரவர் சுய ஜாதக வலிமையே அன்றி வேறு இல்லை, இதற்க்கு அடிப்படை காரணமாக திகழ்வதே சுய ஜாதக வலிமைதான் என்பதை உணர்வது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 22 ஏப்ரல், 2017

அட்சய திரிதியை சிறப்பும், வாழ்க்கையில் பெரும் சுபயோகங்களும் !


அட்சய திரிதியை 

நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளாகிய "இறை அருள் " மனித வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வழங்கும், சுபயோக நாள் மற்றும் நேரங்களில் " அட்சய திரிதியை " முதன்மை வகிக்கிறது என்றால் அது மிகையில்லை, "அட்சய திரிதியை" என்பது செல்வ வளம் தரும் நாளாக போற்றப்படுகிறது. இன்றைய தினம் நாம் செய்யும் நற்காரியங்கள் மேன் மேலும் வளரும் என்பது ஐதீகம். சித்திரை மாதம் அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாள் அட்சய திரிதியை நாளாகும்.

எதிர்வரும் அட்சய திரிதியை நாள் ( 29/04/2017 )  மேலும் சில சிறப்புகளை பெற்று இருப்பது கவனிக்கத்தக்க அம்சமாகும், ஏனெனில் நட்ஷத்திரங்களில் முதன்மையானதும், சந்திரனால் மிகவும் விரும்பப்படுவதுமான " ரோஹிணி " நட்ஷத்திரம் அன்றைய நாளில் அமைகிறது, மேலும் விருத்தியை குறிக்கும் ( சனி பெருக்கம் ) சனிக்கிழமை நாளில் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து வருவது சுபயோகங்களை தரும் தனி சிறப்பான " அட்சய திரிதியை " நாளாக அமைவது கவனிக்கத்தக்க விஷயமாகும். ( கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபத்தில் சந்திரன் உச்ச நிலையை பெறுவதுடன், ரோஹிணி நட்ஷத்திரத்தில் சஞ்சாரம் செய்வது நிலையான வருமான வாய்ப்பை நல்கும் அமைப்பாகும், மேலும் இந்தநாளில் அட்சய திரிதியை வருவது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் )

சாதாரணமாக ரோகிணி நட்ஷத்திரத்துடன் கூடிய சனிக்கிழமை நாளில், அமிர்த யோகத்தில் தங்கம் வாங்குவது சம்பந்தப்பட்ட அன்பர்களுக்கு, பெரியஅளவிலான " சொர்ண ஆகர்ஷ்ணத்தை " நல்கும், எதிர்வரும் அட்சய திருதியை நாளில் திரிதியை திதி, ரோஹிணி நட்ஷத்திரம், சனி கிழமை மற்றும் அமிர்த/சித்த யோகங்கள் அனைத்தும் ஒன்று கூடி வருவது, ஏழ்மை நிலையில் வாடிய குசேலனுக்கு பகவான் " ஸ்ரீ கிருஷ்ணன் " வாரி வழங்கிய பெரும் செல்வத்திற்க்கு நிகரான வாழ்க்கையை நமக்கும் வாரி வழங்கும், இந்த நாளில் தங்கம் வாங்குவது நமது வாழ்க்கையில் சகல வித சௌபாக்கியங்களையும் நிறைவாக தரும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பாக எதிர்வரும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க நமது முன்னோர்களும், சாஸ்திர வல்லுனர்களும் ஏன் பரிந்துரை செய்தனர் என்றால் ? சுப யோகங்களுக்கு முழு முதற் சுப கிரகமாகவும், பொன்னவன் என்று சாஸ்திர வல்லுநர்களால் போற்றப்படுபவருமான " குரு பகவான் " பரிபூர்ணமாக நிறைந்து நிற்கும் உலோகம் "தங்கம்" அப்படி பட்ட தங்கத்தை நமது வீட்டிற்கு அட்சய திரிதியை நாளில் கொண்டுவரும் பொழுது இதுவரை இருந்த துன்பங்கள் யாவும் விலகி குருபகவானின் அருள் கருணையினால் தொடர்ந்து சுபயோகங்கள் மற்றும் அதிர்ஷ்டம் அனைவரது வாழ்க்கையிலும் நடைபெறும் என்ற விஷயத்தை அனுபவபூர்வமாக உணர்ந்த ஆன்மீக பெரியோர்களும், சாஸ்திர வல்லுனர்களும் " யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் அனைவரும் பயனுற இந்த அட்சய திரிதியை   நாளை நமக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

எதிர்வரும் அட்சய திரிதியை ( 29/04/2017 ) நாளில், தாங்கள் ஓர் குண்டுமணி அளவு தங்கத்தை சுவீகாரம் செய்தாலும், அது தங்களது வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும், நீடித்த அதிர்ஷ்டத்தையும்  வாரி வழங்கும், சுப யோக நிகழ்வுகள்  தங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து நடைபெறும், குரு பகவானின் அருள் கருணை தங்களது வாழ்க்கையில் சகல விதங்களில்  இருந்தும் முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

 மேலும் "அட்சய திரிதியை" உடன்  சனி கிழமையில் ரோகிணி நட்ஷத்திரமும் அமிர்த/சித்த யோகமும் கூடி வருவது அளவில்லா " சொர்ண ஆகர்ஷ்ணத்தை" வாரி வழங்கும் என்பது எதிர்வரும் அட்சய திரிதியை நாளுக்கான தனி சிறப்பு என்பதை கருத்தில் கொண்டு ஏழை எளியவரும் வாழ்க்கையில் நலம் பெற இந்த நல்ல நாளை பயன்படுத்தி நலம் பெறுங்கள், எதிர்வரும் அட்சய திரிதியை நாளில் புதிய தங்கம் வாங்குவதுடன் சுப காரியங்கள் மற்றும்  புதிய தொழில் துவக்கம், புதிய வண்டி வாகனம், புதிய சொத்து, புதிய வீடு, புதிய வஸ்திரம் என்ற விஷயங்களை வாங்கும் பொழுது வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும், வசதி குறைவாக உள்ளோர் இந்த அட்சய திரிதியை யில் சிறிது தங்கம் வாங்கும் பொழுது,  அதனால் வரும் குரு பகவானின் கருணையினால் அடுத்த அட்சய திரிதியையில் மேற்கண்ட சுப யோகங்களை தங்கு தடையின்றி பெறுவார்கள் என்பது சாஸ்திர வல்லுநர்கள் மற்றும் முன்னோர்கள்  சத்திய வாக்கு.

அட்சய திரிதியை சிறப்பு :

செல்வத்திற்கு அதிபதியான குபேரன் தான் இழந்த சங்க நிதி, பதும நிதிகளை பெற்றது அட்சய திரிதியை நாளில்தான். பாண்டவர்கள் வன வாசத்தின் போது சூரியனிடம் இருந்து அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் பெற்றது இந்த நாளில்தான். 

அதேபோல் மணிமேகலையும் இந்த நாளில்தான் அட்சய பாத்திரம் பெற்றுள்ளார். அனைத்து வளங்களையும் இழந்து பிச்சாடனரான சிவபெருமான் தன் கையில் இருந்த கபாலத்தில் காசி அன்னபூரணியிடம் இருந்து உணவு பெற்று பிரமகத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டதும் இந்த நாள்தான். 

கனகதாரா ஸ்தோத்திரம் : 

ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி ஏழை பெண்ணுக்கு தங்க நெல்லிக்கனி மழை பெய்ய வைத்த நாளும் அட்சய திரிதியை நாள்தான். கிருஷ்ணா அவதாரத்தில் குசேலர் அளித்த அவலை சாப்பிட்டு அவரை செல்வத்திற்கு அதிபதியாக உயர்த்திய நாளும் இந்த நாள்தான். 

குபேரன் மகிமை :

 செல்வத்திற்கும் தன தான்யத்திற்கும் அதிபதியான குபேரரை வணங்கினால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. குபேர வழிபாட்டின் போது லட்சுமியையும் வணங்கவேண்டும். இதனால் வழிபாட்டின் முழு பலனும் கிடைக்கும். குபேரர் நிலத்தில் விளையும் தானியங்களுக்கு அதிபதியாக திகழ்கிறார். இதனால் விவசாயிகள் தங்கள் விவசாய விளை பொருட்களை குபேரர் முன் வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் விவசாயம் செழிப்படையும் என்பது நம்பிக்கை. அறுவடை காலங்களில் குபேரனுக்கு காணிக்கையாக விளை பொருட்களை படைக்கின்றனர்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் தனுசு !


 சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

தனுசு :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஒன்பதாம் ராசியான தனுசு  ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, ஜென்ம ஸ்தானமான 1ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், தனுசு லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், இயற்கையிலேயே மிதம்மிஞ்சிய அறிவு திறனையும், இறையருளின் பரிபூர்ண கருணையையும் பெற்ற தனுசு லக்கின அன்பர்களுக்கு இதுவரை விரைய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்த சனி பகவான் தங்களுக்கு வீண் மனக்கவலைகளையும், வீண் விரைய செலவுகளையும் சற்று கடுமையாக வழங்கி இருக்கிறார், ஆனால் தற்பொழுது ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு, உடல் வலிமையையும், மனவலிமையையும் சிறப்பாக வாரி வழங்குவார், புது தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், செய்யும் செயல்களில் பொறுப்பும் கவனமும் அதிகரிக்கும் இதனால் தாங்கள் செய்யும் காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும், நேர்மை உண்மை சத்தியம் தவறாத தங்களின் நடவடிக்கைகள் மூலம் மற்றவர்கள் அதிகம் ஈர்க்கப்படுவார்கள், தொன்மையான புராதன திருக்கோவில்களுக்கு சென்றுவரும் யோகம் உண்டாகும், ஆன்மீகத்தில் உயர்நிலையை தரும், சமூகத்தில் மக்கள் செல்வாக்கு மூலம் அரசுபதவி தங்களுக்கு தேடிவரும், இதுவரை இருந்த உடல் நலக்குறைவு மாற்று மனப்போராட்டங்களுக்கு நல்லதோர் தீர்வும், அதனால் மனநிம்மதியும் கிட்டும், லக்கின பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு நல்ல படிப்பினையும், சத்தியத்தின் வலிமையையும் உணரவைப்பார்.

  6ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் தனுசு லக்கின அன்பர்களுக்கு குறுகியகால லாபங்களை தொடர்ந்து வழங்குவார், வழக்கில் சாதகமான தீர்ப்பு கிட்டும், தேர்வில் நல்ல தேர்ச்சியும், போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பும் உண்டாகும், ரத்த உறவுகள் வழியிலான லாபங்கள் மற்றும் வருமானம் வந்து சேரும், உடல் நிலையில் நல்ல முன்னேற்றமும், வயிறு சார்ந்த இன்னல்கள் இருப்பின் அதற்க்கான மருத்துவம் மூலம் ஆரோக்கியமும் உண்டாகும், கடன் சார்ந்த விஷயங்களில் தங்களுக்கு நல்ல யோகம் உண்டாகும், திடீர் பண உதவி தங்களை தேடிவரும், குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும், வாக்குவன்மை மூலம் நிலையான வருமானம் பெரும் யோகமும், பேச்சு திறன் மூலம் வாழ்க்கையில் சிறப்பான  பொருளாதார  முன்னேற்றமும் உண்டாகும், எதிரிகளால் தங்களுக்கு நேர இருந்த இன்னல்கள் களைந்து, நன்மைகள் நடைபெற ஆரம்பிக்கும், சத்ரு ஸ்தானத்தை பார்வை செய்யும் சனிபகவான் தங்களின் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ செய்வார்.

7ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் தனுசு லக்கின அன்பர்களுக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளியூரில் இருந்தும் சுபயோக வாழ்க்கையை வாரி வழங்குவார், அந்நிய நபர்கள் அல்லது அந்நிய தேசத்தினர் மூலம் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை நல்குவார், திருமணம் சார்ந்த தடைகளை  சந்தித்துக்கொண்டு இருக்கும் ஆண் பெண் அன்பர்களுக்கு விரைவாக திருமண வாழ்க்கை அமையும், சனி பார்வை மிதுனத்திற்கு 7ம் பார்வையாக விழுவதும், புதன் சனி வர்க்க கிரகமாக அமைவதும் திருமண தடைகளை தகர்த்து சிறப்பான திருமண வாழ்க்கையை அமைத்து தரும், பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் யோகம் உண்டாகும், நல்ல மனிதர்களின் அறிமுகமும் ஆதரவும் தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், குறிப்பாக வியாபாரம், கூட்டு தொழில் அல்லது வெளிநாடுகளில் ஜீவனம் செய்யும் அன்பர்களுக்கு சனியின் 7ம் பார்வை சிறப்பு மிக்க யோகங்களை வாரி வழங்கும்.

10ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் தனுசு லக்கின அன்பர்களுக்கு அளவில்லா ஜீவன முன்னேற்றத்தை குறுகிய காலத்தில் வாரி வழங்குவார், சுய தொழில் புரியும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் சிறப்பான முன்னேற்றத்தை வாரி வழங்கும், பொருளாதார முன்னேற்றம் அபரிவிதமாக அமையும், குறிப்பாக கடன் பெற்று தொழில் செய்யும் அன்பர்களுக்கு 100% விகித யோக வாழ்க்கையை நல்கும், தேடிவரும் தொழில் மற்றும் பண உதவிகள் தங்களின் வாழ்க்கையில் சுப யோகங்களை வாரி வழங்கும், பொதுமக்களை சார்ந்து தொழில் புரியும் அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி அளவில்லா வருமானங்களை வாரி வழங்கும், சுய கெளரவம் மற்றும் அந்தஸ்து அதிகரிக்கும், உறுதிமிக்க செயல்பாடுகள் தீர்க்கமான வாத திறமை தங்களின் ஜீவன முன்னேற்றத்தை பலமடங்கு முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும், சீரிய முயற்சிகள் மூலம் பல வெற்றிகளை பெற சரியான நேரம் இதுவே, சனி பகவானின் ஜீவன ஸ்தான வசீகரம் தனுசு லக்கின அன்பர்களுக்கு தொழில் ரீதியான நிச்சய வெற்றிகளை வாரி வழங்கும் என்றால் அது மிகையில்லை.

குறிப்பு :

தனுசு லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 1,6,7,10ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  1,6,7,10ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் தனுசு லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 19 ஏப்ரல், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் விருச்சகம் !



சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

விருச்சகம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு எட்டாம் ராசியான விருச்சக  ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், விருச்சக லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், மறைபொருள் உண்மைகளை உலகிற்க்கு ஒளிமறைவின்றி அனைவருக்கும் பிரதிபலன் எதிர்பாரமால் விளக்கம் தரும் வல்லமை பெற்ற விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு இதுவரை ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்து மனம் மற்றும் உடல் ரீதியாக கடுமையான இன்னல்களையும், திடீர் இழப்புகளையும் தந்துகொண்டு இருந்தார், குறிப்பாக மன ரீதியான கடுமையான இன்னல்களை விருச்சக இலக்கின அன்பர்கள் மிக பெரிய அளவில் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தந்தது, லக்கினத்தில் சனியின் சஞ்சாரம் தங்களுக்கு மிகுந்த துன்பத்தை  தந்தது, ஆனால்  இனி வரும் காலங்களில் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு வருமான வாய்ப்புகளை பெரிய அளவில் தரக்கூடும், மேலும் வாக்கின் வழியில் நின்று தங்களது வெற்றிகரமான வாழ்க்கைக்கு  உறுதுணை புரிவார், இருப்பினும் குடும்ப வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்கள் ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகம், ஆன்மீக வாழ்க்கையில் நல்ல வெற்றியும் ஆசிர்வாதமும் உண்டாகும், தெய்வீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும், இனிமையான வார்த்தைகளை கையாண்டு வாழ்க்கையில் சுபயோகங்களை பெறுவதற்கு உண்டான நேரம் இது என்பதனை கருத்தில் கொண்டு செயல்படுங்கள், சனி பகவானின்  2 ம் பாவக சஞ்சார நிலை விருச்சக இலக்கின அன்பர்களுக்கு தனம் சார்ந்த முன்னேற்றங்களையும், வாக்கு சார்ந்த இன்னல்களையும் நல்கும்.

7ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு இதுவரை இருந்த திருமண தடைகளை தகர்த்து விரைவாக திருமண வாழ்க்கையை அமைத்து தருவார், கூட்டு தொழில் செய்து வரும்  அன்பர்களுக்கு யோகம் மிகுந்த வாழ்க்கையையும், தொழில் வழியிலான லாபங்களை வாரி வழங்குவார், எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து முன்னேற்றம் என்பது அபரிவிதமாக வந்து சேரும், தொழில் வழியிலான  வருமானம் என்பது நிரந்தரமாக அமையும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதனால் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட்டு வாய்ப்புகளை பயன்படுத்திகொள்வது நல்லது, மேலும் வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள்  வழியிலான ஆதரவும், உதவிகளும் பெரிய அளவில் கிடைக்க பெறலாம், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், வெளிநாடு வெளியூர் வழியில் இருந்து லாபம் மற்றும் அதிர்ஷ்டம் உண்டாகும், குடும்பத்தில் உள்ள நபர்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள், கைநிறைவான வருமானம், பொருளாதார முன்னேற்றம், கேட்கும் இடங்களில் இருந்து வரும் கடன் உதவி என சனி பகவானின் 6ம் பார்வை, களத்திர ஸ்தானத்திற்கு முழு அளவில் நன்மைகளை வாரி வழங்கும், பிரபல்ய யோகம் வியாபார அபிவிருத்தி உண்டாகும்.

8ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் உடல் நலபாதிப்பில் உள்ள அன்பர்களுக்கு அதில் இருந்து விரைவான குணமும், சரியான மருத்துவ சிகிசிச்சையும், வீண் செலவுகளையும் வெகுவாக குறைக்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சகல விஷயங்களில் இருந்தும் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், தனது வாழ்க்கை துணை வழியிலான பொருளாதர உதவிகள் தங்களுக்கு தேடிவரும், அவர்களின் உதவி தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றங்களை நல்கும், சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும், தொலைதூர பயணங்கள் மூலம் லாபம் கிட்டும், திடீர் தனவரவுகள் தங்களின் வாழ்க்கையில் பலமாற்றங்களை தரும், எதிர்ப்பால் அமைப்பினர் மூலம் வாழ்க்கையில் மிகுந்த லாபம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும், பொதுமக்களை ஆதாரமாக கொண்டு தொழில் புரியும் அன்பர்களுக்கு அபரிவிதமான லாபம் உண்டாகும், சனி பகவானின் 7ம் பார்வை ஆயுள் ஸ்தான வழியில் 100% விகித நன்மைகளை வாரி வழங்கும்.

11ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவார், சத்ரு வழியில் இருந்தும் லாபத்தை பெரும் யோகம் உண்டாகும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் பல வழியில் இருந்து தன லாபங்கள் வந்துசேரும், எதிர்பாராத சொத்து சுக சேர்க்கை உண்டாகும், தன்னம்பிக்கையும் முற்போக்கு சிந்தனையும் தங்களின் வாழ்க்கையில் பலமடங்கு முன்னேற்றங்களை வாரி வழங்கும், இதுவரை போராட்டத்தை சந்தித்து கொண்டிருந்தவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தின் தாக்கம் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தனது உறவுகள் வழியிலான உதவிகளும் பொதுமக்கள் ஆதரவும் புதியநம்பிக்கையை தரும், இதனால் தங்களின் உழைப்பின் வேகம் அதிகரிக்கும் முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமாக அமையும், சனி பகவானின் 10ம் பார்வை லாப ஸ்தான வழியில் 100% விகித நன்மைகளை வாரி வழங்கும்.

குறிப்பு :

விருச்சிக லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 2,7,8,11ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  2,7,8,11ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 17 ஏப்ரல், 2017

சுக்கிரன் திசை நடைபெற்றும் திருமணம் தாமதம் ஆக காரணம் என்ன ?


கேள்வி : 

சுக்கிரன் திசை சுக்கிரன் புத்தியில் திருமணம் நடைபெறும் என்றனர், அதற்க்கான அறிகுறி சிறிதும் இதுவரை தெரியவில்லை, திருமணம் நடைபெறுமா? ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இதனால்தான் திருமணம் சுக்கிரன் திசை சுக்கிரன் புத்தியில் நடைபெறவில்லை, திருமணம் தாமதமாக காரணம் இதுவே என்கின்றனர் ? உண்மையில் என்ன நடக்கிறது ? சரியான தீர்வு என்ன ?

பதில் :

தங்களது சுய ஜாதக வலிமையை கருத்தில் கொள்ளாமல், கூறப்பட்ட பொது கருத்தாகவே தங்களின் கேள்வியில் உணர்கிறது " ஜோதிடதீபம் "  மேலும் திருமண வாழ்க்கைக்கும் நடைபெறும் சுக்கிரன் திசைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை அன்பரே ! பொதுவாக சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை குறிக்கும்  2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பதும், சரியான பருவ வயதில் நடைபெறும் திசா புத்திகள் எதுவென்றாலும் வலிமை பெற்ற 2,5,7,8,12ம் பாவக பலனை ஏற்று நடத்துவதும் ஒருவரின் திருமண வாழ்ககையை சிறப்பாக அமைய சுய ஜாதகத்தில் உள்ள வலிமையான நிலையாகும், குறைந்த பட்சம் சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, ஏனெனில் ஒருவரின் இல்லறவாழ்க்கை சிறப்பாக சரியான வயதில் நடைபெற சுய ஜாதகத்தில் அடிப்படையாக அமையும் வலிமை நிலையாகும், மேலும் வரனுக்கோ வதுவுக்கோ பருவ வயதில் திருமணம் நடைபெற மேற்கண்ட பாவகங்கள் வலிமையுடன் இருப்பதுடன், நடைபெறும் திசா புத்தியும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது, தாமதம் இல்லா திருமண வாழ்க்கையை  மிகவும் சிறப்பாக அமைத்து தரும்.

 தங்களது சுய ஜாதக வலிமை நிலையை பற்றியும், நடைபெறும் சுக்கிரன் திசை தங்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றியும் சற்று சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !


லக்கினம் : மகரம் 
ராசி : விருச்சகம்
நட்ஷத்திரம் : அனுஷம் 3ம் பாதம் 

தங்களது ஜாதகத்தில் தற்போழுது சுக்கிரன் திசை நடைபெறுகின்றது, அதில் மாற்றம் இல்லை இருப்பினும் நடைபெறும் சுக்கிரன் திசை தங்களுக்கு 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க விஷயமல்ல, சுக்கிரன் திசை தங்களுக்கு திடீர் இழப்பை, எதிர்ப்பால் அமைப்பினரால் இன்னல்கள், தெய்வீக அனுகூலம் இன்மை, எடுக்கும் காரியங்கள் தடைபடும் தன்மை என்ற வகையில் இன்னல்களை தந்து கொண்டு இருக்கின்றது என்பதனால் சுக்கிரன் திசை தங்களுக்கு யோக பலாபலன்களை தரவில்லை என்பது உறுதியாகிறது, சுக்கிரன் திசை நடைபெற்றால் திருமணம் நடைபெறும் என்பது உண்மை அற்ற கருத்து என்பது, ஒருவேளை நடைபெறும் சுக்கிரன் திசை வலிமை பெற்ற களத்திர  ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு திருமணம் சிறப்பாக அமையும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள், தங்களுக்கு நடைபெறும் சுக்கிரன் திசை வலிமை அற்ற ஆயுள் பாவக பலனை தருவது திடீர் இழப்புகளையும், மருத்துவ செலவுகளையும் தரும் என்பது மட்டுமே உண்மை, மேலும் சுக்கிரன் திசையில்  தற்போழுது நடைபெறும் சூரியன் புத்தியும் 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்ற ஆயுள் பாவக பலனை தருவது தங்களது திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்ய உகந்தது அல்ல.

சுக்கிரன் திசையில் அடுத்து வரும் சந்திரன் புத்தியும் தங்களுக்கு 9ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை தருவது தங்களுக்கு மன ரீதியான நெருக்கடிகளை கடுமையாக தரும் என்பதனால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நலம் தரும், தங்களுக்கு உள்ள வாய்ப்பு  என்பது ? வரும் வதுவின் ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பதாக தேர்வு செய்து திருமணம் செய்துகொள்வது மட்டுமே, இதற்க்கு தாங்கள் தங்களது குடும்பத்தில் உள்ள பெரியோரின் ஆதரவை நாடுவது மட்டும் சிறந்த வழிமுறையாக கருதுகிறோம்.

தங்களது சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் வலிமை பெற்று இருந்தாலும், தற்போழுது  நடைபெறும் சுக்கிரன் திசை தங்களுக்கு சாதகமான பலனை தரவில்லை என்பது வருந்தத்தக்கது என்றால் அது மிகையில்லை, மேலும் 1,4,7,10ம் பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தங்களது வாழ்க்கையில் சிறப்பை தரும் அம்சமல்ல என்பதை கருத்தில் கொள்வது தங்களுக்கு நலம் தரும், வலிமை பெற்ற பெண்ணின் ஜாதகத்தை தாங்கள் தேர்வு செய்யவில்லை எனில் தங்களது இல்லற வாழ்க்கை மிகவும் சிரமத்திற்கு ஆளாகும் என்பதை கவனத்தில் கொள்க .

செவ்வாய் தோஷம் என்பதே முற்றிலும் தவறான கருத்தாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, மேலும் தங்களுக்கு 8ல் செவ்வாய் தோஷம் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள், இதுவே தங்களது சுய ஜாதகத்தில் உள்ள உண்மை நிலைக்கு புறம்பானது, ஏனெனில் தங்களது சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் சிம்மத்தில் உள்ள 7ம் பாவகத்தில் உள்ளார் என்பதில் தெளிவு பெறுங்கள், மேலும் தங்களது திருமண வாழ்க்கை தடைபெற உண்மையான காரணம் செவ்வாய் தோஷம் அல்ல, தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை தங்களுக்கு  சாதகமாக இல்லை என்பதும், சுக்கிரன் திசையில் சுக்கிரன்,சூரியன்  மற்றும் சந்திரன் புத்திகளும் வலிமை பெற்ற களத்திர பாவக பலனை ஏற்று நடத்தவில்லை  என்பதே முழு முதற் காரணமா என்பதில் தெளிவு பெறுங்கள்.

வலிமை பெற்ற வதுவின் ஜாதகத்தை குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவுடன் தேர்வு செய்து திருமணம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு  வாழ்க்கையில் நலம் பெறுங்கள் ( தாங்கள் யாதொரு எதிர்பார்ப்பும் இன்றி நல்ல  வதுவின் ஜாதகம் வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுவதே தங்களது இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும் ) 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ராகு பகவான் தனது திசையில் தரும் பலாபலனும், சுய ஜாதகத்தில் நின்ற இடத்திற்கு தரும் யோகமும் !



 சுய ஜாதகத்தில் ராசியில் வலிமை பெற்ற ஓர் கிரகம் ( ஆட்சி,உச்சம் அல்லது  சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு தான் நின்ற இடத்தில் வலிமை பெறுவது ) தனது திசையில் சம்பந்த பட்ட ஜாதகருக்கு சுபயோகங்களை தரும் என்று கருதுவதும், தான் நின்ற பாவக பலனையே தரும் என்று கருதுவதும் முற்றிலும் ஜாதக உண்மைக்கு புறம்பானது, இதை போன்றே சுய ஜாதகத்தில் ராசியில் வலிமை அற்ற ஓர் கிரகம் ( நீசம்,பகை அல்லது சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு தான் நின்ற இடத்தில் வலிமை அற்று இருப்பது ) தனது திசையில் சம்பந்த பட்ட ஜாதகருக்கு அவயோகங்களை தரும் என்று கருதுவதும், தான் நின்ற பாவக பலனையே தரும் என்று கருதுவதும் முற்றிலும் ஜாதக உண்மைக்கு புறம்பானது, இதற்க்கு கீழ்கண்ட ஜாதகத்தை உதாரணமாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : விருச்சகம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 4ம் பாதம்

மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினத்தில் இருந்து 5ம் பாவகத்தில் ( மீனத்தில் )  மிகவும் வலிமையுடன் அமர்ந்து இருக்கும் ராகு பகவான், தனது திசையில் ஜாதகருக்கு தந்த பலாபலன்கள் என்ன ? என்பதனை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! பொதுவாக சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் தான் அமர்ந்த பாவக பலனை தரும் என்ற கருத்து உள்ளது, இது சுய ஜாதகத்தில் ஆய்வுக்கு பிறகு முடிவு செய்யும் விஷயமாகும், மேற்கண்ட ஜாதகருக்கு மீனத்தில் ( 5ல் ) அமர்ந்த ராகு பகவான் தனது திசையில் ( 12/03/1969 முதல் 13/03/1987 வரை ) தான் அமர்ந்த பாவக பலனை ஏற்று நடத்தவில்லை, அதற்க்கு மாறாக 2,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் 8,12ம் பாவக தொடர்பு வழியிலான இன்னல்களை ஜாதகருக்கு வாரி வழங்கியுள்ளது.

ராகு திசை காலத்தில் ஜாதகருக்கு குழந்தை மற்றும்  இளமை பருவம் என்பதாலும், வளரும் சூழ்நிலையில் கடுமையான இன்னல்களையும், பெற்றோர் வழியிலான ஆதரவின்மையையும், சுகபோக வாழ்க்கையில் தடைகளையும், கல்வியில் கடுமையான நெருக்கடிகளையும், உடல் தொந்தரவுகள் மற்றும் மருத்துவ செலவினங்களையும் ஜாதகர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தந்தது, குறிப்பாக பொருளாதார ரீதியான கடுமையான இன்னல்களை ஜாதகரும் ஜாதகரின் குடும்பமும் ஏக காலத்தில் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தந்தது, ஜாதகருக்கு ராகு பகவான் வலிமை பெற்று 5ம் பாவகத்தில் அமர்ந்தாலும் தனது திசையில் வலிமை அற்ற பாவக  பலனை ஏற்று நடத்தியது ( 2,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் 8,12ம் பாவக பலனை தனது திசை முழுவதும் தந்தது ) ஜாதகருக்கு 2,4,8,10,12ம் பாவக வழியிலான இன்னல்களை கடுமையாக தந்தது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

சுய ஜாதகத்தில் ஓர் கிரகம் தான் அமர்ந்த பாவகத்தின் பலனையே தரும் என்று கருதுவது சுய ஜாதக வலிமையை பற்றியும், நவகிரகங்கள் தனது திசையில் ஏற்று நடத்தும் பாவக தொடர்பு நிலையை பற்றி சிறிதும் அறியாமல் சொல்லும் விஷயம் என்பதை பதிவு செய்ய " ஜோதிடதீபம் " கடமைப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஜாதகருக்கு ராகு திசைக்கு அடுத்து வந்த குரு திசை ( குரு லக்கினத்திற்க்கு  10ல் நின்று இருக்கின்றார் ) ஜாதகருக்கு தான் அமர்ந்த ஜீவன ஸ்தான பலனை தரவில்லை ( சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது ) அதற்க்கு மாறாக ஜாதகத்தில் வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை தனது திசை முழுவதும் ஏற்று நடத்தி ஜாதகருக்கு வெளிநாடு, வெளியூர், நண்பர்கள், வாழ்க்கை துணை, கூட்டு முயற்சி வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கியது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் ஜாதகர் குரு திசை காலத்தில் அபரிவிதமான யோக பலனை களத்திர ஸ்தான வழியில் இருந்து  அனுபவித்தார் என்றால் அது மிகையில்லை.

குரு திசைக்கு அடுத்து தற்போழுது நடைபெறும் சனி திசையும் ஜாதகருக்கு வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வாழ்க்கையில் 7ம் பாவக வழியிலான சுபயோகங்களை தொடர்ந்து அனுபவிக்கும் நிலையை தந்து கொண்டு இருக்கிறது என்பது அவரது சுய ஜாதகத்தில் உள்ள சிறப்பு அம்சமாகும், ஆக ஜாதகர் தனது 19வது வயது முதல் தற்போழுது வரை முழு வீச்சில் களத்திர ஸ்தான பலனை அனுபவித்து கொண்டு இருப்பது, ஜாதகரின் வாழ்க்கையை சிறப்பு மிக்க முன்னேற்றங்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது கண்கூடான உண்மை.

அடுத்து வரும் புதன் திசை, புதன் ஜீவன ஸ்தானத்தில் நின்றாலும் வலிமையற்ற பாதக ஸ்தான பலனையும் ( 6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் ) வலிமை பெற்ற வீர்ய ஸ்தான பலனையும் ( 1,3ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் ) ஏக காலத்தில் பாதக ஸ்தான வழியில் இன்னல்களையும், வீரிய ஸ்தான வழியில் நன்மைகளையும் ஜாதகருக்கு தருவது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் ஓர் கிரகம்  தான் நின்ற பாவக பலனை தனது திசையில் தரும் என்ற கருத்து சுய ஜாதக ஆய்வுக்கு பிறகே முடிவு செய்ய வேண்டிய விஷயமாகும், சுய ஜாதகத்தில் நவ கிரகங்கள் எங்கு அமர்ந்து இருந்தாலும் சரி தனது திசையில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற உண்மை தெரிந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது வாழ்க்கையை மிக சிறப்பாக அமைத்துக்கொள்ள இயலும், சரியான திட்டமிடுதல்கள் மூலம் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றங்களை பெற இயலும் என்பதால், சுய ஜாதக வலிமை உணர்வு ஒவ்வொருவருக்கும் மிக மிக அவசியம் என்பது  "ஜோதிடதீபம்" கூறும் கருத்தாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

சர்ப்ப தோஷம் ( ராகு கேது ) கூட்டு திசை ( ஏகதிசை நடப்பு ) திருமண வாழ்க்கையில் இன்னல்களை தருமா ?


 திருமணம் பொருத்தம் காண்பதில் நட்ச்சத்திர பொருத்தம், ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், சனி நின்ற பலன், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், ராசி பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், ஏக திசை பொருத்தம், சனிசெவ்வாய் சேர்க்கை, குரு பலம், 10 பொருத்த நிர்ணயம் போன்றவை கடந்த தலைமுறையை சார்ந்த அன்பர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும், தற்போழுது உள்ள தலைமுறையை சார்ந்த அன்பர்களுக்கு இது சிறிதும் பொருந்தாது என்பதை அனைவரும் உணர்ந்துகொள்வது நல்லது, ஏனெனில் கடந்த தலைமுறையை சார்ந்த அன்பர்களுக்கு பெரும்பாலும் 20 முதல் 30 சதவிகித அன்பர்களுக்கே சுய ஜாதகமும் , பிறந்த குறிப்பும் இருந்தது ( பிறந்த தேதி , நேரம் , இடம் ) கடந்த தலைமுறையில் ஜாதகம் இல்லாத அன்பர்களுக்கு அவர்களின் பெயரின் முதல் எழுத்தை அடிப்படையாக கொண்டு நாம நட்ஷத்திரம் மற்றும் ராசி அறியப்பட்டது , திருமண பொருத்தமும் நாம நட்ஷத்திரம் மற்றும் ராசியை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டது, இது அவர்களது வாழ்க்கையில் சகல செல்வங்களையும் தந்ததா என்றால் கேள்விக்குறியே, ஒருவேளை  நாம நட்ஷத்திரம் மற்றும் ராசியை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்ட  திருமணம் வாழ்க்கை சிறப்பாக அமைந்து இருப்பின் " காகம் அமர பனம்பழம் விழுந்த கதை " சிறப்பாக அமையவில்லை எனில் விதி விட்ட வழி என கடந்த தலைமுறையை சார்ந்த ஆணும் பெண்ணும் சகிப்பு தன்மையுடன் இல்லற வாழ்க்கையை நடத்தினர், அதற்க்கு கூட்டு குடும்பமும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது.

ஆனால் தற்பொழுது உள்ள தலைமுறையினர் அப்படிப்பட்ட சகிப்பு தன்மையுடனானா வாழ்க்கையை வாழ தயாராக இல்லை என்பதை கடந்த 15  வருடங்களில் நீதிமன்றத்தில் குவிந்துகொண்டு இருக்கும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையை வைத்து நாம் மிக எளிதாக புரிந்துகொள்ள முடியும், மேலும் விவாகரத்து கோரும் அன்பர்களின் ஜாதக பொறுத்த நிலையை பார்க்காமலா ? அவர்களின் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து இருப்பார்கள் ? நிச்ச்யம் இல்லை, அப்படி இருக்க ஏன் இந்த பிரிவு நிலை ஏற்படுகிறது ? ஜோதிடம் தவறா ? ஜோதிடர்கள் கண்ட பொருத்தம் தவறா ? என்ற கேள்விகள் பல ஏற்படுவது இயற்க்கை, இதற்கான உண்மை காரணத்தை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

மாற்றம் ஒன்றே மாறாதது, அதற்க்கு ஆய கலைகள் 64 ம் பொருந்தும் , இதற்க்கு  ஜோதிட சாஸ்த்திரமும் விதிவிலக்கல்ல, கடந்த தலைமுறையினர் திருமண வாழ்க்கைக்கு பொருத்தம் கண்ட நாம நட்ச்சத்திர பொருத்தம், ராசி பொருத்தம்,ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், சனி நின்ற பலன், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், ராசி பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், ஏக திசை பொருத்தம், சனிசெவ்வாய் சேர்க்கை, குரு பலம்  ஆகியவற்றை தற்போழுது  மாற்றம் பெற்றுள்ள தற்கால தலைமுறையினரிடம் பரிசோதிப்பதே அடிப்படை காரணமாக அமைகிறது, மேலும் மேற்கண்ட விஷயங்களை தற்போழுது உள்ள தலைமுறையினரிடம் பொருத்திப்பார்ப்பது என்பது ? கண்ணை கட்டிக்கொண்டு தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுவதற்கு சமமானது, ஏனெனில் மாற்றங்கள் இன்றைய இளைய தலைமுறையினரை  வெகுவாக மாற்றிவிட்டது.

அப்படிப்பட்ட இளைய தலைமுறையினருக்கு, கடந்த தலைமுறையினர் பயன்படுத்திய திருமண பொருத்த நிர்ணயத்தை, தற்கால தலைமுறையினரிடம்  பயன்படுத்துவது முற்றிலும் பொருந்த்தாத விஷயம் என்பதை  அனைவரும் கருத்தில் கொள்வது நலம்தரும், இன்றைய தலைமுறையை சார்ந்த அன்பர்களுக்கு பெரும்பாலும் அனைவர்க்கும் சுய ஜாதகம் /உண்டு, பிறந்த குறிப்பு தெளிவாக வைத்து இருக்கின்றனர், மேலும்  நல்ல நேரம் பார்த்து குழந்தை பிறப்பை நிர்ணயம் செய்யும் ஜோதிட பிரம்மாக்களும் புவியில் உள்ளனர் ( இது எவ்வளவு மேசமான விளைவை தரும் என்பது எவருக்கும் புரிவதில்லை, இயற்கையாக குழந்தை பிறப்பை இறைஅருள் நிர்ணயம் செய்வதே சகல நன்மைகளையும் தரும் ) எனவே இன்றைய கால சூழ்நிலையில் இளைய தலைமுறையினருக்கு திருமண பொருத்தம் காணும் பொழுது அவர்களது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை கருத்தில்கொண்டும்  ( பிறந்த தேதி, நேரம், இடம் ) வரன் வதுவுக்கு தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் தரும் பலாபலன்கள், எதிர்வரும் திசாபுத்திகள் தரும் பலாபலன்களை கருத்தில்கொண்டும் திருமண பொருத்தம் நிர்ணயம் செய்வதே, சம்பட்ட தம்பதியரின் வாழ்க்கையில் நன்மைகளையும் யோகங்களையும் தரும், இதற்க்கு மாறாக  இன்றைய தலைமுறைக்கு சற்றும் பொருந்தாத நட்ச்சத்திர பொருத்தம், ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், சனி நின்ற பலன், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், ராசி பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், ஏக திசை பொருத்தம், சனிசெவ்வாய் சேர்க்கை, குரு பலம் என்பதை கூறி கற்பனையில் பொருத்தம் கண்டு, திருமண பொருத்தம் நிர்ணயம் செய்வது என்பது ஜோதிட சாஸ்திரம் தற்பொழுது பெற்றுள்ள புதிய மாற்றங்களை பற்றியும், புதிய பரிமாணங்கள் பற்றியும் அறியாமல் சொல்லும் கற்பனை என்பதை தவிர உண்மை இல்லை.

தற்பொழுது உள்ள இளைய தலைமுறையினருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் அடிப்படையில் திருமண பொருத்தம் நிர்ணயம் செய்யும் பொழுது, அவர்களது வாழ்க்கை பதினாறு வகை செல்வங்களையும் பரிபூர்ணமாக பெற்று வாழையடி வாழையாக செழித்து வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை, இதை ஓர் வரன் வது சுய ஜாதகத்தை உதாரணமாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : கன்னி
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : ஸ்வாதி 2ம் பாதம்



லக்கினம் : கன்னி
ராசி : கும்பம்
நட்ஷத்திரம் : அவிட்டம் 4ம் பாதம்

பாவக வலிமை அடிப்படையிலான திருமண பொறுத்த நிர்ணயம் :


மேற்கண்ட வரன் வது ஜாதகத்தில் வதுவின் ஜாதகம் மிகவும் வலிமையுடன் உள்ளது, வரனின் ஜாதகம் சற்று வலிமை குறைவாக காணப்படுகிறது, பொருத்தம் சார்ந்த ஆலோசணை வேண்டியவர் வரன் என்பதால் அவர் வாழ்க்கை சிறப்பாக அமைய மேற்கண்ட வதுவை திருமணம் செய்துகொள்வதே ஜாதகருக்கு சிறப்பான இல்லற வாழ்க்கையை  வழங்கும்,

மேலும் தற்போழுது வரனுக்கு நடைபெறும் குரு திசை விரைய ஸ்தான பலனை நடத்துவதும், எதிர்வரும் சனி திசை பாதக ஸ்தான பலனை நடத்துவதும் ஜாதகருக்கு உகந்தது அல்ல, மேற்கண்ட வதுவுக்கு நடைபெறும் சனி திசை பாக்கிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகிக்கும், ஜாதகியை மணந்துகொள்ளும் வாழ்க்கை துணைக்கும் சிறப்பான நன்மைகளை தரும்.

குறிப்பு :

மேற்கண்ட முறையில் சுய ஜாதக பாவக வலிமைக்கும், நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் தரும் நன்மை தீமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, வரன் மற்றும் வதுவுக்கு சுய ஜாதகத்தில் உள்ள வலிமை நிலையை உணரவைத்து திருமணம் நடத்திவைப்பது, தாம்பத்திய வாழ்க்கையில் சுபயோகங்களை நல்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 8 ஏப்ரல், 2017

அதிர்ஷ்டம் நிறைந்த மனைவி அமையும் யோகமும், திருமண பொருத்தமும் !


 திருமண வாழ்க்கையில் யோகத்தையும், தம்பதியா வாழ்க்கையில் மனமகிழ்வையும் வாரி வழங்குவதில் நட்ச்சத்திர பொருத்தத்தை விட சுய ஜாதக பாவக வலிமையே முதன்மை வகிக்கிறது என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகம் வலிமை உள்ள ஓர் வரனையோ அல்லது வதுவையோ திருமணம் செய்துகொள்ளும் அன்பர்களுக்கு தனது ஜாதகம் பாவக வலிமை குறைவாக இருந்தாலும், இல்லற வாழ்க்கை யோகம் நிறைந்ததாகவும், மகிழ்ச்சிக்கு எப்பொழுதும் குறைவு இல்லாத நிலையையும் தரும், எனவே தனது வாழ்க்கை துணையாக வரும் அன்பரின் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொள்வது சம்பந்தப்பட்ட வரனுக்கோ வதுவுக்கோ மிகுந்த நன்மைகளையும் யோகங்களையும் தரும் என்றால் அது மிகையில்லை.

தனது ஜாதகம் வலிமை அற்று இருந்த போதிலும், தனது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை தனக்கு சாதகமாக அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் பெற்றி பெரும் யோகம் சிலருக்கே உண்டு, தனது ஜாதக வலிமை தனது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமை  இரண்டில் சிறப்பானது எது என்பதை தெளிவாக உணர்ந்து அதன் வழியில் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்வதே புத்திசாலித்தனம் எனலாம், இதை ஓர் உதாரண ஜாதகம்  கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : விருச்சகம்
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 1ம் பாதம்

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சிறப்பான குடும்ப வாழ்க்கை, கைநிறைவான வருமான வாய்ப்புகள், இனிமையான பேச்சு திறமை, பொருளாதாரத்தில் தன்னிறைவு என்ற வகையில் யோகத்தையும், சிறந்த அறிவு திறன், அதிபுத்திசாலித்தனம், தெய்வீக அனுக்கிரகம், கற்ற கல்வி  வழியிலான முன்னேற்றம், தனது குழந்தைகள் வழியில் சிறப்பு, சூழ்நிலைகளை சிறப்பாக கையாளும் வல்லமை, எதிர்கால வாழ்க்கைக்கு உண்டான திட்டமிடுதல்கள் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு தனது வாழ்க்கை துணை வழியிலான  பொருளாதார உதவி, முழுமையான ஆதரவு, புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை, நீடித்த அதிர்ஷ்டம் நல்ல குணம், வாழ்க்கை துணையின் மூலம் ஜாதகர் பொருளாதார ரீதியாக மிக பெரிய அந்தஸ்த்தை பெரும் யோகம், மிதம்மிஞ்சிய தன்னம்பிக்கை, முற்போக்கு சிந்தனை மூலம் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் யோக வாழ்க்கையை பெரும் தன்மை, எதிர்பாலின அமைப்பினரால் மிகுந்த முன்னேற்றத்தை பெரும் அமைப்பு என்ற வகையில் நன்மைகளை தரும்.

தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் : ( 18/09/2016 முதல் 18/09/2036 வரை )

சுக்கிரன் திசை ஜாதகருக்கு 2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுக்கிரன் திசை 20 வருடமும் 2,5ம் பாவக வழியிலான நன்மைகளையும் யோகங்களையும் தரும், ஜாதகரின் 5ம் பாவகம் மீனத்தில் 7 பாகைகளும் மேஷத்தில் 21 பாகைகளும் வியாபித்து இருப்பது ஜாதகருக்கு வரும் யோகத்தின் தன்மையை மிக பெரிய அளவில் தரும், குறிப்பாக ஜாதகருக்கு நல்ல குடும்ப வாழ்க்கை அமையும், நிறைவான வருமானமும், பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும், நல்ல புத்திர பாக்கியம் கிட்டும், தனது புத்திசாலித்தனத்தால் தனது வாழ்க்கையை ஜாதகர் மிகுந்த யோகமுள்ளதாக மாற்றிக்கொள்ளும் வல்லமையை சுக்கிரன் வாரி வழங்கும், அதற்க்கு ஜாதகரின் வலிமை பெற்ற 2,5ம் பாவகங்கள் காரணமாக அமையும்.

ஜாதகருக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

1,3,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட 1,3,7,9ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும், 4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட 4,6,10,12ம் பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை தரும் என்ற போதிலும், ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை வலிமை பெற்ற 5ம் பாவக பலனை ஏற்று நடத்துவது மேற்கண்ட பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்களை தவிர்க்க உதவும், மேலும் ஜாதகர் தேர்வு செய்த வாழ்க்கை துணையின் ஜாதகம் ஜாதகருக்கு தரும் யோக பலன்களை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !



லக்கினம் : சிம்மம்
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : சித்திரை 2ம் பாதம்

ஜாதகிக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,3,5,9ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், ஜாதகியின் லாப ஸ்தானம் மிதுனத்தில் 1 பாகையும், கடகத்தில் 29 பாகையும் கொண்டு இருப்பது 100% விகித அதிர்ஷ்டங்களை 1,3,5,9ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், லக்கின வழியில் இருந்து அதிர்ஷ்டம், நீண்ட ஆயுள், நல்ல குணம், குபேர யோகம், நல்ல ஆரோக்கியம், தெளிவான சிந்தனை, சுய கட்டுப்பாடு, எதிர்பாராத நீடித்த அதிர்ஷ்டங்கள் என்ற வகையில் யோகத்தை தரும், 3ம் பாவக வழியில் இருந்து சகல சௌபாக்கியம், வியாபர விருத்தி, துவங்கும் காரியங்களில் வெற்றி வாய்ப்பு, அனைத்திலும் சுபம் என்ற வகையிலும், 5ம் பாவக வழியில் இருந்து நிறைவான புத்திசாலித்தனம், கற்ற கல்வி வழியிலான யோக வாழ்க்கை, மதிப்பு மிக்க செய்லபாடுகள், தன்னம்பிக்கை, சிறப்பான புத்திர பாக்கிய யோகம், குழந்தைகள் வழியிலான யோகம் என்ற வகையிலும், 9ம் பாவக வழியில் இருந்து நல்ல குணம், பொறுப்பு மிக்க வாழ்க்கை, பெரியோர் ஆசிர்வாதம், பெரிய மனிதர்கள் ஆதாரவு, ஆன்மீக ஈடுபாடு, ஆன்மீகத்தில் வெற்றி, தெய்வீக அனுபவம், தன்னை சார்ந்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வல்லமை, நல்ல பெருந்தன்மையான மனம் என்ற வகையில் சிறப்புகளை தரும்.

4,8ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, நிறைய சொத்து சுக சேர்க்கை, வாழ்க்கை துணையின் உதவிகளுடன் புதிய சொத்துக்கள் மற்றும் வீடு வண்டி வாகனம் வாங்கும் யோகம், நிலம் வண்டி வாகனம் சார்ந்த தொழில்கள் வழியிலான வருமானம் வாய்ப்பு என்ற வகையிலும், 8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள், வாழ்க்கை துணைக்கு யோகம், திடீர் அதிர்ஷ்டம், புதையலுக்கு நிகரான சொத்து சுக  சேர்க்கையை தனது தொழில் வழியில் இருந்து பெரும் யோகம் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

7,11ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 7ம் பாவக வழியில் இருந்து ஜாதகி யோகம் மிக்க வாழ்க்கை துணையை பெறுவார், தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தி, கணவருக்கு யோகம், கணவர் வழியில் இருந்து பரஸ்பர யோக வாழ்க்கை, சமூக அந்தஸ்து, உயர் பதவி, மக்கள் செல்வாக்கு, வெளிநாடு மற்றும் வெளியூர் வழியிலான முன்னேற்றங்கள் என்ற வகையிலும், திடீர் அதிர்ஷ்டம், தெய்வீக அனுகூலம், தன்னம்பிக்கை, வியாபார விருத்தி, செல்வாக்கு, அரசு பதவி மற்றும் ஆதாயம் என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

மேலும் தற்போழுது நடைபெறும் குரு திசை தரும் பலன்கள் : ( 10/04/2006 முதல் 10/04/2022 )

ஜாதகிக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள குரு திசை 4,8ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4,8ம் பாவக வழியிலான நன்மைகளையும் யோகங்களையும் தந்து கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், குறிப்பாக ஜாதகி 4ம் பாவக வழியில் இருந்து சுகபோக வாழ்க்கையையும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டம் மற்றும் எதிர்பாராத முன்னேற்றத்தையும் தரும், மேலும் தனது கணவன் வழியிலான  கவுரவ வாழ்க்கையையும் திடீர் அந்தஸ்த்தையும் பெறுவார். எதிர்வரும் சனி திசையும் ஜாதகிக்கு 3ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக வாழ்க்கையை  தருவது சனி திசை முழுவதுமான சிறப்புகளை தரும், எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,10ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 2,10ம் பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களையும், 6,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 6,12ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும் தரும் இருப்பினும் தற்போழுது நடைபெறும் குரு திசை, எதிர்வரும் சனி திசை  இரண்டும் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவதால் ஜாதகிக்கு பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்கள் எதுவும் நடைபெறாது என்பது வரவேற்கத்தக்க  அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட ஜாதகர்  தனது ஜாதகத்தில் 8பாவகங்கள் வலிமை அற்று இருந்த போதிலும், வாழ்க்கை துணையாக வரும் ஜாதகியின் சுய ஜாதகம் வலிமை  பெற்று இருப்பதாக தேர்வு செய்தது வரவேற்கத்தக்க அம்சம், அதற்க்கு காரணமாக ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் தசையும், வலிமை பெற்ற 5ம்  பாவகமுமே காரணமாக அமைந்திருப்பது ஜாதகருக்கு இறை அருள் தந்த  வரம் என்றே சொல்லலாம்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 5 ஏப்ரல், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் துலாம் !



சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

துலாம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஏழாம் ராசியான துலாம் ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், துலாம் லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், பொதுமக்கள் செல்வாக்கு, சுய அறிவு திறன் கொண்டு தனது வாழ்க்கையில் அறிய பல சாதனைகளை செய்யும் அன்பர்களான துலாம் லக்கின அன்பர்களுக்கு இதுவரை லக்கினத்திற்கு 2ல் நின்று கடும் பொருளாதார நெருக்கடிகளை தந்து கொண்டு இருந்த சனி பகவான், தற்போழுது வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது துலா லக்கின அன்பர்களுக்கு, முன்னெடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றிமேல் வெற்றியை வாரி வழங்குவார், சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்த்தில் உள்ள அன்பர்களின் ஆதரவும் உதவிகளும் தங்களை தேடிவரும், பொறுப்பு மிக்க பதவிகள் அரசு ஆதரவு, செல்வச்செழிப்பு, வசதி வாய்ப்புகள் என தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் யோக நேரமாக இதை  கருதலாம், தங்களின் லட்சியங்கள் நிறைவேற சரியான சந்தர்ப்பங்களை இயற்க்கை தங்களுக்கு வாரி வழங்கும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் யோகம் உண்டாகும், இதுவரை இல்லாத பொருளாதார முன்னேற்றம் தங்களின் வாழ்க்கையில் சிறப்பு அந்தஸ்த்தை வாரி வழங்கும், ஜாதகரின் திட்டமிடுதல்களும், செயல்திறனும் மற்றவர்களை  மிரள செய்யக்கூடும், அதிரடியான சில நடவடிக்கைகள் தங்களை சார்ந்தவர்களை சிறிது பாதித்த பொழுதும் நெடுநாள் நன்மைகளை எதிர்காலத்தில் வாரி வழங்கும், தன்னம்பிக்கையும், தைரியமும் தங்களின் வாழ்க்கையில் அடுத்தகட்ட நகர்வுக்கு அழைத்து செல்லும், சுய தொழில் செய்வோர்க்கு பெரிய அளவிலான தொழில் விருத்தியும், பணியாற்றுவோருக்கு திடீர் உயர்பதவிகளும் தேடிவரும், சனிபகவானின் வீர்ய ஸ்தான  சஞ்சாரம்  வாழ்க்கையில் எதிர்பாராத வெற்றிகளை சரளமாக வாரி வழங்கும்.

   8ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் துலாம் லக்கின அன்பர்களுக்கு மிதமிஞ்சிய வருமான வாய்ப்புகளை வாரி வழங்குவார், கைநிறைவான வருமானம் தங்களுக்கு எப்பொழுதும் வந்துகொண்டே இருக்கும், புதையலுக்கு நிகரான வருமான வாய்ப்பை பெறுவதற்கு தங்களுக்கு திடீர் சந்தர்ப்பங்கள் ஏற்படும், குடும்ப வாழ்க்கையில் சந்தோசம், செய்யும் தொழில் வழியிலான வருமானம் அதிகரிப்பது, புதிய தொழில் ஆரம்பம் அதன் வழியிலான வருமானம், இனிமையான பேச்சு திறமை , திருமண தடைகள் நீங்குதல், நல்ல வாழ்க்கை துணை அவர் வழியிலான ஆதரவு, செல்வசேர்க்கை, மறைமுக வருமானம், சிறந்த உடல்  ஆரோக்கியம் , இதுவரை உடல் நலபாதிப்பு இருப்பின் சரியான மருத்துவம் மூலம் குணம் பெறுதல், இன்சூரன்ஜ் பங்கு வர்த்தகத்தில் லாபம், பொறுமையுடன் அனைத்தையும் கையாண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுதல், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றம், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை  பெரும் யோகம், தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் சொத்து சுக  சேர்க்கை மற்றும் திடீர் அதிர்ஷ்டம், என சனிபகவானின் 6ம் பார்வை துலா லக்கின  அன்பர்களுக்கு பொருளாதார முன்னேற்றங்களை தடையின்றி தரும், சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் துலா லக்கின அன்பர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.

9ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் துலா லக்கின அன்பர்களுக்கு, எதிர்பாலின அன்பர்களால் சிறு சிறு அவப்பெயரை ஏற்படுத்த கூடும், மற்றவர்களுக்கு உதவ செல்வதுகூட தங்களுக்கு  பெரும் வினையாக மாறிவிடும், வீண் அவப்பெயர்களை சந்திக்கும் சூழ்நிலை வரும் என்பதால் அதிக கவனம் தேவை, தங்களது விஷயங்களில் யாரும் தலையீடு செய்வது  பெருவாரியான இன்னல்களை தரக்கூடும், தெய்வீக அனுக்கிரகம் கூட முறையான கோவில் வழிபாடுகளை மேற்கொள்வது  தங்களது இன்னல்களை வெகுவாக குறைக்கும், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் வயதில் அதிகம் உள்ள அன்பர்களின் ஆலோசனை தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை வாரிவழங்கும், கல்வியில் \நல்ல  முன்னேற்றம் உண்டாகும், மாணவ மாணவியருக்கு தேர்வில் வெற்றிகளை  வரி வழங்கும் , ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றுவரும் அதிர்ஷ்டம் உண்டு என்பதால், வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி நலம் பெறுக, முறையான குலதெய்வ வழிபாடு மற்றும் அன்னதானம் தங்களின் வாழ்க்கையில் வரும் இன்னல்களை  வெகுவாக குறைக்கும்.

12ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் துலா லக்கின  அன்பர்களுக்கு முதலீடுகள் வழியிலான லாபங்களை பன்மடங்கு அதிகரிக்கும் பங்கு வர்த்தக லாபங்கள் எதிர்பார்த்த வகையில் அமையும், நல்ல அயன சயன சுகத்தையும், வெளிநாடுகள் பயணத்தையும் அதன் வழியிலான முன்னேற்றங்களை வாரி வழங்குவார், எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு வெகு சாதகமாக மாறும், மனநிம்மதி மற்றும்  திருப்திகரமான யோக வாழ்க்கையை தங்களுக்கு சனிபகவான் நிறைவாக வழங்குவார், இதுவரை  தடைபட்ட காரியங்கள் யாவும் நல்ல முறையில் நடைபெறு வெற்றிகளை தரும், தெய்வீக அனுபவம் மற்றும் ஆன்மீக தொடர்புகள் மூலம் சிறப்பான எதிர்காலம் அமையும், பெரும் முதலீடுகளை  செய்து தொழில் செய்யும் நல்லதொரு வாய்ப்புகள் தங்களுக்கு உண்டாகும், மனதில் அமைதியும்  சாந்தியும் கிட்டும், தெளிவான சிந்தனையும், நிம்மதியான வாழ்க்கையையும் சனிபகவான் தனது 10ம் பார்வையால் தங்களுக்கு இனிவரும் காலங்களில் வாரி வழங்குவர் .

குறிப்பு :

துலாம் லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 3,8,9,12ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  3,8,9,12  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் துலா லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

ராகு பகவான் சுய ஜாதகத்தில் பெரும் வலிமையும், தனது திசையில் தரும் பலாபலன்களும் !


தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று.

என்ற திருக்குறளுக்கு சரியான எடுத்துகாட்டாக விளங்க, ஒருவர் ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது பெரும் வலிமையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஜாதகர் சகல யோகங்களையும் பெறுவார் என்று தெளிவாக கூறிவிட முடியும், சுய ஜாதகத்தில் சாயகிரகங்கள் வலிமை பெறும் அமர்வதும், தனது திசாபுத்திகளில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும், ஜாதகரை மேற்கண்ட குறளுக்கு பொருத்தமான வாழ்க்கையை பிறவியிலே நல்கும், ஜாதகர் பிறப்பில் இருந்தே வாழ்க்கையில் யோக பலாபலன்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவராக திகழ்வார், சுய ஜாதகத்தில் சாயாகிரகங்கள் வலிமை பெறுவது சம்பத்தப்பட்ட ஜாதகருக்கு வழங்கும் யோக வாழ்க்கை என்பது கற்பனைக்கு கூட எட்டாத வகையில் அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

ஒரவர் ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை பெரும் பொழுது எப்படி பட்ட யோக பலன்களை தருகின்றதோ, அதற்க்கு நிகரான இன்னல்களையும் சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை அற்று நிற்பதும், தனது திசையில் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்றுநடத்துவதும் ஜாதகருக்கு பாகுபாடு இன்றி கடுமையான இன்னல்களை தரும், சுய ஜாதகத்தில் ராகு வலிமை அற்று நிற்பதும், தனது திசையில் வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் எவ்வித இன்னல்களை தரும் என்பதனை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : ரிஷபம் 
ராசி : விருச்சகம் 
நட்சத்திரம் : கேட்டை 4ம் பாதம் 

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்தில் வலிமை பெற்ற அமைப்பாகும்.

ஜாதகருக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

3,7,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயில் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்தில் வலிமை அற்ற அமைப்பாகும்.

ஜாதகருக்கு ராகு பகவான் மேலோட்டமாக காணும் பொழுது ஜீவன ஸ்தானமான 10ம் வீட்டில் அமர்ந்து இருப்பதை போன்ற தோற்றத்தை  தந்தாலும், பாவக நிலையை கருத்தில் கொண்டு காணும் பொழுது ( கும்பத்தில் ) பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் வலிமையற்றும், தான் அமர்ந்த பாவகத்தை 100% விகித பாதிப்பிற்கு ஆளாக்கி அமர்ந்திருப்பது தெளிவாகும், எனவே மேற்கண்ட ஜாதகருக்கு சாயா கிரகமான ராகு சுய ஜாதகத்தில் தாம் அமர்ந்த நிலையில் கடுமையான பாதிப்பை பிறவியில் இருந்தே வழங்கி கொண்டு இருப்பதும், அமர்ந்த பாவகம் ஜாதகருக்கு பாக்கிய ஸ்தானம்  என்பதால் ஜாதகருக்கு நடக்க வேண்டிய சுப நிகழ்வுகள் யாவும், கடுமையான தடைகளையும், தாமதங்களும் வழங்கி கொண்டு இருந்து இருக்கின்றது, அதாவது ஜாதகருக்கு அடிப்படையில் நல்ல கல்வி அறிவு இல்லை, சுய சிந்தனையும் தனித்திறனும் பலன்தரவில்லை, கால தாமத திருமணம், மற்றவர்களை சார்ந்து வாழும் சூழ்நிலை, சொத்து வசதிகள் இருந்த போதிலும் அதனால் ஜாதகருக்கு யாதொரு பலனும் இல்லை, ஆண் வாரிசு அற்ற சூழ்நிலை, சிறு வயது முதலே ஜாதகர் உடல் ரீதியான தொந்தரவுகளை கடுமையாக சந்தித்துக்கொண்டு இருக்கின்றார்.

மேலும் சுய ஜாதகத்தில் 7ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு அமைந்த வாழ்க்கை துணை வழியிலான இன்னல்கள் மற்றும் பொருத்தம் அற்ற வாழ்க்கை துணை வழியிலான சிரமங்களையும் ஜாதகர் எதிர்கொள்ளும் நிலை என ஜாதகரை வாட்டி வதைத்து எடுத்துவிட்டது.

 தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு 7ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான இன்னல்களை கடந்த பல வருடமாக  தந்துகொண்டு இருக்கின்றது, வயதான காலத்தில் வாழ்க்கை துணையின் அரவணைப்பு இன்றி தவிக்கும் சூழ்நிலை. வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் இன்னல்கள், திடீர் இழப்புகள்,  எதிர்பாராத மருத்துவ  செலவினங்கள், தொடர்ந்து உடல்நிலையில் முன்னேற்றம் அற்ற சூழ்நிலை, வாழ்நாளை எண்ணிக்கொண்டு ஜீவிக்கும் தன்மை, ஆதரவு அற்ற சூழ்நிலை, சந்தர்ப்பவாதிகள் மற்றும் சுயநலம் கொண்டோரின் மூலம் வாழ்க்கையில் இன்னலுறும் தன்மை என தற்போழுது  நடைபெறும் ராகு திசை 6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  மேற்கண்ட பாவக வழியிலான இன்னல்களை தொடர்ந்து வழங்கிகொண்டு இருக்கின்றது.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ராகு பகவான் பாதிக்கப்பட்டும், தனது திசையில்  பாதிக்கப்பட்ட பாவக தொடர்பு பெற்றும் இன்னல்களை தந்து கொண்டு இருப்பது ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதித்து இருப்பது ராகு பகவானின் வலிமை அற்ற தன்மையை பறைசாற்றுகிறது, ஜாதகரின் கடுமையான உடல் நல பாதிப்பிற்கு, ராகு பகவானின் ஆதிக்கம் பெற்ற போதை வஸ்துக்கள் காரணமாக அமைந்துஇருப்பது ராகுவின் தாக்கம் ஜாதகரை படுத்திஎடுத்து இருப்பதை தெளிவு படுத்துகிறது, ஜாதகர் ராகு திசையினை பூர்ணம் பெற செய்வது இறையருளின் கருணையில் உள்ளது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696