வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

நவ கிரகங்கள் ஜெனன ஜாதகத்தில் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பது யோகத்தை தருமா ? தனது திசாபுத்திகளில் சுபயோகங்களை வாரி வழங்குமா?



கேள்வி : 

 நவ கிரகங்கள் ஜெனன ஜாதகத்தில் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பது நமக்கு யோகத்தை தருமா ? தனது திசாபுத்திகளில் சுபயோகங்களை வாரி வழங்குமா?

பதில் :

 தங்களது கேள்வி " சிகப்பாக இருப்பவர் பொய் சொல்லமாட்டார் " என்ற வடிவேலின் திரைப்பட நகைச்சுவைக்கு இணையானதாக இருக்கின்றது, தாங்கள் மட்டுமல்ல பெரும்பாலானோர் தமது ஜாதகத்தில் ராசியிலோ அல்லது அம்சத்திலோ நவகிரகங்கள் ஆட்சி உச்ச நிலையில் இருப்பது சிறப்பு மிக்க சுபயோகங்களை வாரி வழங்கும் என்றும், அதன் திசா புத்தி காலத்தில் சுபயோக நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும் என்றும் ஓர் தவறான கண்ணோட்டத்தை பெற்று இருக்கின்றனர், மேலும் பகை நீசம் பெற்ற கிரகம் தமக்கு இன்னல்களை தரும் என்றும், அதன் திசா புத்தி காலங்கள் மிகுந்த துன்பத்தையும் அவயோக பலாபலன்களை தரும் என்றும் கருதிக்கொண்டு இருக்கின்றனர்.

இது முற்றிலும் தவறான கருத்தாகும் ஏனெனில் சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பெரும் ஆட்சி,உச்சம்,நட்பு,சமம், பகை, நீசம் போன்றவை சுய ஜாதகத்திற்கு யோக அமைப்பையோ, அவயோக அமைப்பையோ வழங்குவதில்லை, மாறாக பிறந்த தேதி நேரம் மற்றும் இடம் ஆகிவற்றை அடிப்படையாக கொண்டு கணிதம் செய்யப்படும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமையே ஜாதகருக்கு யோக அவயோக பலாபலன்களை வாரி வழங்குகிறது, எடுத்துக்காட்டாக சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஜாதகருக்கு யோக பலனையும், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகள் ஜாதகருக்கு தான் சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்து அவயோக பலன்களையும் தருகின்றது என்பதே உண்மை நிலை, இதை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலாபலன் காண முற்படுவதே நமது வாழ்க்கையில் ஜாதக ரீதியான நன்மைகளையும், சுபயோகங்களையும் சுவீகரிக்கும் தன்மையை தரும், கீழ்கண்ட உதாரண ஜாதகத்தை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம்
ராசி : விருச்சிகம்
நட்ஷத்திரம் : அனுஷம் 1ம் பாதம்

ஜாதகருக்கு தற்போழுது கேது திசை ( 05/11/2017 முதல் 05/11/2024 வரை )  நடைமுறையில் உள்ளது, சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு கேது பகவான் மேலோட்டமாக பார்க்கும் பொழுது 9ல் அமர்ந்து இருப்பதை போன்று தெரிந்தாலும் பாவக கணிதத்தின் அடிப்படையில் விருச்சிக ராசியில் உள்ள 8ம் பாவகத்தில் அமர்ந்து உள்ளது, ஜாதகருக்கு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகம் துலாம்  ராசியில் 205:09:09 பாகையில் ஆரம்பித்து விருச்சிக ராசியில் உள்ள 233:05:10 பாகையில் முடிவடைகிறது, இதற்க்கு உற்ப்பட்ட பாகையான 222:16:35 பாகையில் கேது பகவான் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு உச்சம் பெற்று அமர்ந்து இருக்கிறார், எனவே ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் கேது திசை யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்ற தவறான புரிதல் ஜாதகருக்கு இருப்பது அவரது அறியாமையை காட்டுகிறது.

தற்போழுது நடைபெறும் கேது திசை ஜாதகருக்கு விருச்சிக ராசியில் உச்சம் பெற்று தனது திசையினை நடத்தினாலும், சுய ஜாதகத்தில் அவர் ஏற்று நடத்தும் பாவக தொடர்பு என்பது கவனிக்கத்தக்க விஷயமாக அமைகிறது, ஜாதகருக்கு  தற்போழுது நடைபெறும் கேது திசை 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று ஆயுள் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு திடீர் பொருள் இழப்பு, வீண் மருத்துவ செலவுகள், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் மனஅழுத்தம், மனப்போராட்டம் மற்றும் விபத்து, திடீர் செலவினங்கள், எதிர்பாராத இன்னல்கள் என்ற வகையில் பாதிப்பை தந்துகொண்டு இருக்கின்றது, சுய ஜாதகத்தில் கேது உச்சம் பெற்று இருப்பினும் தனது திசையில் வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு உகந்ததல்ல.

அடுத்து வரும் சுக்கிரன் திசை ரிஷபத்தில் உள்ள 3ம் பாவகத்தில் ஆட்சி பெற்று, தனது திசையில் 9ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு தனது அறிவு திறன், பயணம், உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தின் வழியில் இருந்து சுபயோக வாழ்க்கையை சுக்கிரன் திசை முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரும், ஜாதகருக்கு சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி பெற்று அமர்வதும், தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், எனவே சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  ஆட்சி,உச்சம்,நட்பு,சமம், பகை, நீசம் போன்ற நிலையை பெறுவது யோக வாழ்க்கையை வாரி வழங்காது, நவ கிரகங்கள் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு எப்படிப்பட்ட நிலையில் அமர்ந்தாலும், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதே ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் சுபயோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதை கருத்தில் கொள்வது  அவசியமாகிறது.

குறிப்பு :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நவகிரகங்கள் பெரும் வலிமையை கருத்தில் கொண்டு பலன் காண முற்படுவது முற்றிலும் தவறான அணுகுமுறையாக " ஜோதிடதீபம் " கருதுகிறது, சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் வலிமை பெற்ற பாவக பலனை தனது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் ஏற்று நடத்துகிறதா ? வலிமை அற்ற பாவக பலனை  தனது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் ஏற்று நடத்துகிறதா ? என்பதில் தெளிவு பெற்று இருப்பதே சுய ஜாதக பலாபலனை தெளிவாக  அறிந்துகொள்ள வழிவகுக்கும், " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

வெளிநாட்டில் தொழில் யோகம் உண்டா ? எதிர்வரும் செவ்வாய் திசை தரும் பலன்கள் என்ன?



வெளிநாடு வெளியூர் சென்று தொழில் மேன்மையும், வேலை வாய்ப்பில் நன்மைகளும் பெறுவதற்கு சுய ஜாதகத்தில் அடிப்படையில் 7ம் வீடான களத்திர ஸ்தானம் மிகவும் வலிமை பெற்று இருப்பதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும் மேற்கண்ட வீடுகளுக்கு 1,4,10ம் வீடுகள் உறுதுணையாக அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் பரிபூர்ண அயல் தேச ஜீவன மேன்மையை வாரி வழங்கும், தொழில் அல்லது வேலை என்ற அமைப்பில் இது சிறப்பான நன்மைகளை ஜாதகருக்கு வாரி வழங்கும், குறிப்பக தற்போழுது நடைமுறையில் உள்ள திசையும், எதிர்வரும் திசையும் ஜாதகருக்கு மேற்கண்ட வலிமை பெற்ற 7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கான முன்னேற்றம் வெளிநாடுகளில் இருந்து சரளமாக கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : மீனம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : மகம் 1ம் பாதம்

ஜாதகத்தில் மிகவம் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு அளவற்ற செல்வம், குடும்ப ஒற்றுமை, நல்ல உணவு, சிறந்த பேச்சு திறன் என்ற வகையில் சிறப்பை தரும்,
3,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவக தொடர்பை பெறுவது மண் மனை வண்டி வாகன யோகம், முதுமையிலும் சுகபோகம், பெண்கள் ஆதரவு, போட்டி பந்தயங்களில் எளிதில் வெற்றி, போக்குவரத்து துறை, வீட்டு மிருகங்கள், விவசாயம் மூலம் லாபம் உண்டு, 4ம் பாவக வழியில் இருந்து, வடக்கு திசை வாயிற்படி வீடுகளில் குடியிருப்பது சகல சௌபாக்கியத்தையும் தரும், சுய முன்னேற்றம் பெறுவதற்கான யோகம் உண்டு, மண் மனை வண்டி வாகன யோகம் உண்டு.

5,8,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து பரிபூர்ண அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், குறிப்பாக லாட்டரி யோகம், புத்திசாலித்தனம் மூலம் லாபம், எப்போதும் மகிழ்ச்சி, குழந்தைகள் வழியில் யோகம், குடும்பம் வாழ்க்கை துணை வழியிலான ஒற்றுமையை வெகுவாக தரும், நீண்ட ஆயுள், திடீர் அதிஷ்டம், எதிர்பாராத பொருளாதார வசதி வாய்ப்புகள் உண்டு, நல்ல அந்தஸ்து, நண்பர் உதவி, மன நிறைவான யோக வாழ்க்கை, சுய தொழில் முன்னேற்றம், நல்ல நிதி மேலாண்மை, அனைவரிடமும் அனுசரித்து செல்லுதல், எல்லாம் வெற்றி மயம், மிகுந்த அதிர்ஷ்டம்,அனைத்திலும் லாபம், நல்ல குணம் என்ற வகையில் சிறப்பை தரும்.

6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு கடன் தொல்லை, வேலை வாய்ப்பில் இன்னல்கள், தேவையற்ற மருத்துவ செலவுகள், பிறந்த ஊரை விட்டு வெகு தொலைவில் சென்று முன்னேற்றம் பெறுதல், நிறைய செலவினங்கள், பங்கு சந்தையில் திடீர் இழப்புகள், திருப்தி இல்லா வாழ்க்கை, அனைவராலும் இன்னல்கள் என்ற வகையில் இன்னல்களை தரக்கூடும்,

1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் இன்னல்கள், கல்வியில்  தடை, சுய முன்னேற்றத்தில் பாதிப்பு, தெளிவில்லாத முடிவுகள் மூலம் பாதிப்பை தானே சுவீகரிக்கும் நிலை, எதிர்ப்புகளை அதிக அளவில் சம்பாதிக்கும் நிலை, உடல் மனம் சார்ந்த விஷயங்களில் சிறு சிறு இன்னல்கள் என்ற வகையில் பாதிப்பை தரும், 7ம் பாவக வழியில் இருந்து நண்பர்கள் கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் இன்னல்கள், கூட்டு முயற்சியால் வரும் பாதிப்புகள், வெளியூர் அல்லது வெளிநாட்டில் முயற்சிக்கும் காரியங்கள் பெரும் பாதிப்பு, வெளிநாட்டில் யோகமின்மை, எதிர்பாலின சேர்க்கை மூலம் வரும் கடுமையான பாதிப்பு என்ற வகையில் இன்னல்களை தரும், பொது வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களையும் தோல்வியையும் கடுமையாக தரும்.

நடைபெறும் சந்திரன் திசையில் அடுத்தது வரும் சூரியன் புத்தி மட்டும் ஜாதகருக்கு சில இன்னல்களை தரக்கூடும், இருப்பினும் அதற்க்கு அடுத்து வரும் செவ்வாய் திசை ஜாதகருக்கு 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவக தொடர்பை பெற்று யோக பலனையும், 3,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவக தொடர்பை பெற்று சுபயோக பலாபலன்களை வாரி வழங்குவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை சிறப்பாக வாரி வழங்கும், கைநிறைவான வருமானம், பொருளாதார வசதி வாய்ப்புகள், தெய்வீக அனுகிரகம், புதிய சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், வீடு நிலம் வாங்கும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும், ஜாதகருக்கான யோக வாழ்க்கை எதிர்வரும் செவ்வாய் திசையில் பரிபூர்ணமாக கிடைக்கும்.

குறிப்பு :

 ஜாதகருக்கு பூர்வீக அமைப்பிலேயே சிறப்பான யோகங்கள் நடைமுறைக்கு வரும் என்பதால், ஜாதகர் வடக்கு திசை சார்ந்த வீட்டில் குடியிருப்பது மட்டுமே ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை பரிபூர்ணமாக வாரி வழங்கும், மேலும் எதிர்வரும் செவ்வாய் திசை 2,3,4ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்குவது, ஜாதகருக்கு தன்னிறைவான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், வெளிநாடு யோகம் ஜாதகருக்கு இல்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து, "வாழ்த்துகள்"


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

சுய ஜாதக ஆலோசணை மூலம் வாழ்க்கையில் நலம் பெறுவது எப்படி ? சுக்கிரன் திசை சுபயோக வாழ்க்கையை தருமா ?


ஒவ்வொருவரும் சுய ஜாதக ஆலோசணை மூலம்  வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது, நமது பிறப்பின் ரகசியம்  அறியவும், படைப்பின் சாராம்சம் பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளவும் நமது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவக வலிமை பற்றியும், நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்பு பற்றியும் துல்லியமாக அறிந்துகொண்டு, அதன் வழியில் சரியான திட்டமிடுதல்களை மேற்கொண்டு வெற்றி பெறுவது மிக மிக அவசியமாகிறது, கீழ்கண்ட ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் சுய ஜாதக ரீதியாக பெற்றுள்ள வலிமை பற்றியும், நடைபெறும் திசா புத்திகள் தரும் யோக அவயோக பலாபலன்கள் பற்றியும் இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,3,5,7,11,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து சிறப்பான வளரும் சூழ்நிலை, நிறைவான கல்வி, அதீத லாபங்கள் மற்றும் அதிர்ஷ்டம், செல்வச்செழிப்பு, அனைவர் வழியில் இருந்து வரும் உதவிகள், நோய் பாதிப்பில் இருந்து விரைவில் விடுபடும் தன்மை, வருமுன் காக்கும் வல்லமை, நினைத்த எண்ணங்கள் யாவும் பலிதம் பெறுதல், திருமண வாழ்க்கையில் சந்தோசம் மற்றும் அதிர்ஷ்டம், அதிக குழந்தைகள் அவர்கள் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை, தன்னம்பிக்கை மிக்க மனநிலை, எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் போராடும் வலிமை, புதிய சிந்தனை, முற்போக்கு சிந்தனை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் தன்மை, நீடித்த அதிர்ஷ்டம் மற்றும் நீண்ட ஆயுள் உண்டாகும்.

3ம் பாவக வழியில் இருந்து எண்ணத்தின் வலிமை அதிகரிக்கும், நல்ல வியாபர முன்னேற்றம், மிகத்தைரியமான மனநிலை, எதையும் சாதிக்கும் வல்லமை, எடுக்கும் முயற்சிகளில் இருந்து வரும் வெற்றிகள், அதிக வாகன வசதி சொகுசு வாகன யோகம், விவசாய வழியில் இருந்து வரும் முன்னேற்றம், நிறைய சொத்து சுக சேர்க்கை, தர்மத்தை மதித்து நடத்தல், சாஸ்திர அறிவு, அதன் வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கை, கணிதத்தில் தேர்ச்சி, விளையாட்டில் ஆர்வம், திருமணத்திற்கு பிறகான  அதிர்ஷ்ட வாழ்க்கை, வீரியமிக்க செயல்திறன், எதையும் வெற்றிகொள்ளும் மனப்பான்மை, துல்லியமான கணிப்பு திறன் என்ற வகையில் சுபயோகங்களை தருவதுடன், தகவல் தொழில் நுட்ப அறிவையும் அதிகரிக்கும், நிறைவான நல்லறிவு ஜாதகருக்கு சிறப்பான எதிர்காலத்தை வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் லாட்டரி யோகம், தனது புத்திசாலித்தனத்தால் ஆதாயம், குலதெய்வ அனுக்கிரகம் மூலம் வாழ்க்கையில்  சுபகாரியங்களை சிறப்பாக செய்யும் தன்மை, கற்ற கல்வி வழியில் இருந்து வரும் யோகம், தெளிவான சிந்தனை, சமயோசித புத்திசாலித்தனம் மற்றும் நுண்ணறிவு கொண்டு வாழ்க்கையில் அனைத்தையும் வெற்றிகொள்ளும் தன்மை, தெய்வீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், எதிர்பார்த்த நன்மைகள் நடைமுறைக்கு வரும் தன்மை, பெற்ற குழந்தைகள் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை, நல்ல  ஆண்வாரிசு, பூர்வீகத்தில் இருந்து அபரிவித முன்னேற்றங்களை சுவீகரிக்கும் யோகம் என மிகுந்த நன்மைகளை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல யோகமிக்க வாழ்க்கை துணை அமையும், சிறந்த நண்பர்கள் வழியில் ஆதரவும், உதவி செய்யும் நல்ல கூட்டாளிகளும் ஜாதகருக்கு அமைவார்கள், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து சிறப்பான வருமான வாய்ப்புகள் உண்டாகும், வியாபாரம் ஜாதகருக்கு மிகச்சிறப்பாக அமையும், தம்பதிய வாழ்க்கையில் வெற்றியும், பொதுமக்கள் வழியில் இருந்துவரும் ஆதரவும் ஜாதகருக்கு மிகவும் அபரிவிதமானதாக அமையும், வெளியூர் வெளிநாடு பயணங்கள் மூலம் ஜாதகர் தன்னிறைவான முன்னேற்றங்களை பெறுவார், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் கைகொடுக்கும், ஏஜென்சி தரகு தொழில் ஜாதகருக்கு அபரிவித வளர்ச்சியினை வாரி வழங்கும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி , ஜாதகர் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களிலும் வெற்றியும், லாபமும் உண்டாகும், ஜாதகரின் முற்போக்கு சிந்தனை எதிர்பாராத வெற்றிகளுடன் கூடிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்கும், நேர்மறை எண்ணங்களால் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த சுவாரஷ்யம் மிக்கதாக அமைந்திருக்கும், மற்றவர்களையும் தன்னையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும் வலிமை உண்டாகும், ஜாதகரின் நேர்மையான குணம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நிறைவான லாபங்கள் உண்டாகும், வியாபாரத்தில் அபரிவித வளர்ச்சி உண்டு, சுபவிரையங்கள் அதிகரிக்கும், ஆன்மீகத்தில் நல்ல நாட்டமும், தெய்வீக திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகமும் உண்டாகும், நல்ல ஆன்மீக குருவின் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும், தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியும், மனநிறைவான யோக வாழ்க்கை அமையும், முதலீடுகள் வழியில் பெருத்த லாபங்கள் உண்டாகும், தெய்வீக குணம் அதிகரிக்கும், மனதில் உள்ள லட்சியங்கள் யாவும் நிறைவேறும்.

2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு, 2ம் பாவக வழியில் இருந்து தந்தையின் ஆசியின் மூலம் வருமான அதிகரிக்கும் என்ற போதிலும் நிதி மேலாண்மை சார்ந்த விஷயங்களில் ஓர் நேர்த்தி இருக்காது, இன்சூரன்ஸ், உயில், போனஸ், கிராஜுவிட்டி போன்றவற்றின் மூலம் லாபம் கிட்டும், திருமணம் தாமதமாக வாய்ப்பு உள்ளது, ஆயுள் பாவக தொடர்பை பெரும் 2ம் வீடு ஜாதகருக்கு நிதானமான நிதி மேலாண்மை திறன் இல்லை எனில் வெகு வேகமாக தனம் கரையும் என்பதை கருத்தில் கொள்க.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு என்ற போதிலும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, குறிப்பாக மருத்துவ செலவுகள், வீண் விரையம், தொழில் வழியிலான பாதிப்புகள், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் வீண் செலவினங்கள், வாகனம் சார்ந்த விரைய செலவுகள் போன்றவை கடுமையான பாதிப்பை தரும் என்பதால் ஆயுள் காப்பீடு போன்றவற்றில் முதலீடு செய்து வரும் பாதிப்பில் இருந்து விடுபடலாம், குறிப்பாக அனைத்து பொருட்கள் இடம், வேண்டி வாகனம் போன்றவற்றை காப்பீடு செய்துகொள்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும்.

4,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து நல்ல ஞானத்தையும், சிறந்த நற்குணத்தையும் தரும், உயர்கல்வி ஆய்வு கல்வியில் தேர்ச்சியை தரும், வருமுன் உணரும் தன்மையையும், இரசாயனம், கனிம பொருட்கள் சுரங்க பொருட்கள் வழியில் அபரிவித லாபத்தையும் வாரி வழங்கும், பல  அறிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு, தர்மத்தையும் சத்தியத்தையும் மதித்து போற்றும் குணத்தை தரும், மதம் சார்ந்த நன்மைகள் உண்டாகும், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் அபரிவித யோகம் உண்டு, வண்டி வாகன தொழில் வழியில் லாபம் உண்டு, சுய   உழைப்பின் மூலம் வெற்றி பெற்ற மனிதராக திகழ்வார் என்பது கவனிக்கத்தக்கது.

6ம்  பாவக வழியில் இருந்து பயணம் மூலம் லாபம் உண்டாகும், சமாதான  முறையால் சகல சௌபாக்கியங்களையும் பெறுவார், மதம் சார்ந்த விஷயங்களில் நன்மைகளும் ஆதரவும் தேடி வரும், உடல் நல பாதிப்பில் இருந்து விரைவாக குணம் பெரும் தன்மையை தரும், கடன் சார்ந்த தொல்லைகள் ஜாதகரின் நடவடிக்கைகள் மூலம் நிறைவடையும், நீண்ட நாள் ஆசை லட்சியம் யாவும் நிறைவேறும், அதீத எதிர்ப்புகள் உண்டான போதிலும் இறுதியில் வெற்றியே ஜாதகர் பெறுவார், பொறுமையை கடைபிடிப்பது ஜாதகருக்கான வெற்றிகளை அதிகரிக்கும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வரும் துன்பங்களை ஜாதகரே தனது அறிவுத்திறன் கொண்டு வெற்றி பெறுவார், ஜாதகரின் முன்னோர்கள் செய்த பாக்கியத்தின் பலாபலன்களை முழுவதும் சுவீகரிக்கும் வல்லமை உண்டாகும், தெளிந்த நல்லறிவு, அதீத செயல்திறனும் ஜாதகருக்கு உலக புகழை பெற்று தரும், அனைவரிடமும் நற்ப்பெயரை பெறுவதற்கான சந்தர்ப்பம் உண்டாகும், தனது நிறுவனத்தின் பெயரை மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையச்செய்யும் யோகம் பெற்றவர் என்பதுடன், தொழில் வழியில் அழியா புகழை பெறுவார், இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் அதீத ஆர்வம் உண்டாகும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு , உத்தியோகம் வியாபாரம் மற்றும் சுய தொழில் வழியிலான தன்னிறைவான வெற்றிகளை வாரி வழங்கும், கம்பீரமான நிர்வாக திறனை தரும், தீர்க்கமான வாத திறமையையும், விரைவான செயல்பாடுகளையும் தரும், பொது வாழ்க்கையில் வெற்றி உண்டாகும், தான் செய்யும் தொழில் வழியில் இருந்து 100% விகித வெற்றிகளையும் லாபங்களை பெறுவதுடன், கவுரவம் அந்தஸ்து குறையாத யோக வாழ்க்கையை தரும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பதால் எதிர்கால வாழ்க்கை பரிபூர்ண வெற்றிகள் நிறைந்ததாக விளங்கும்.

நடைபெறும் திசாபுத்திகள் தரும் பலாபலன்கள் :

சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் ( 20/03/2009 முதல் 20/03/2029 வரை )

நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, மேற்கண்ட பாவக வழியில் இருந்து சற்று இன்னல்களை தரக்கூடும், வருமானம், இழப்பு என்ற  வகையில் இன்னல்கள் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் ஜாதகரின் நிதி சார்ந்த மேலாண்மை மிகவும் சிறப்பாக அமைவது அவசியமாகிறது, முடிந்த அளவு கடன் சார்ந்த இன்னல்களில் இருந்து விடுபட முயற்சிப்பது அவசியமாகிறது, அதீத தன்னம்பிக்கை ஜாதகருக்கான பொருளாதார முன்னேற்றங்களை அபரிவிதமானதாக மாற்றி அமைக்கும், தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசையில் ராகு புத்தி 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது வரவேற்கத்தக்கது, தன்னிறைவான பொருளாதர முன்னேற்றங்களையும், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் நல்கும், குலதெய்வத்தின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும்.
எதிர்வரும் குரு புத்தியும் தங்களுக்கு 1,3,7,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக பலனை  ஏற்று  நடத்துவது தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளில் இருந்து விடுதலையும், பொருளாதார மேன்மையையும் வாரி வழங்கும், புதிய சிந்தனை புதிய செயல்பாடுகள் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்குவதுடன் இல்லற வாழ்க்கையில் சந்தோசம், குழந்தை பாக்கியத்தை தடையின்றி வழங்கும், சுக்கிரன் திசை 2,8ம் பாவக வழியில்  இருந்து இன்னல்களை தந்த போதிலும், நடைபெறும், எதிர்வரும் புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை தருவது வரவேற்க்கத்தக்கது " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன் 
 ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை அள்ளித்தரும் சுய ஜாதக பாவக வலிமை!



பிறந்த தேதி,நேரம் மற்றும் இடம் ஆகிய குறிப்புகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும் நமது சுய ஜாதகம் வலிமை பெற்று அமைவது நமது வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளையும், தன்னிறைவான பொருளாதார வசதியுடன் கூடிய முன்னேற்றங்களை தங்குதடையின்றி வாரி வழங்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை, சுய ஜாதக வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கையை சுவீகரிக்க அடிப்படையில் நமது ஜாதகத்தில் லக்கினம் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும்  நமது ஜாதகத்தில் சுபயோகங்களை எந்த எந்த பாவக வழியில் இருந்து சுவீகரிக்க இயலும் என்பதில் தெளிவு பெற்று இருப்பது மிக மிக அவசியமாகும், இதை ஓர்  உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : விருச்சிகம்
ராசி : சிம்மம்
 நட்ஷத்திரம் : பூரம் 2ம் பாதம்

மேற்கண்ட விருச்சிக லக்கின ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் நல்ல வலிமையுடனே காணப்படுகிறது, பனிரெண்டு வீடுகளும் தாம் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளையே தரும் அமைப்பில் இருப்பது கவனிக்கத்தக்கது, சுய ஜாதகத்தில் பாவக தொடர்புகள் வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகளை பாவக  வலிமையின் அடிப்படையில் ஆய்வு செய்வோம் அன்பர்களே !

1,4,7,9ம் வீடுகள் லாப  ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு உயிர் உடலாகிய லக்கின பாவக வழியில் இருந்து பரிபூர்ண அதிர்ஷ்டம் நிறைந்தவர் என்பதை உறுதி செய்கிறது மேலும் ஜாதகர் முற்போக்கு சிந்தனையுடன் எதையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் யோகம் பெற்றவர் என்பதையும் தெளிவாக்குகிறது, தான் வளரும் சூழ்நிலையில் நல்ல ஆரோக்கியம், சிறந்த மனவலிமை கொண்டுள்ளவராகவும், திறன்மிக்க செயல்களை சிறப்பாக  செய்யும் ஆற்றல் பெற்றவராகவும் திகழ்வார், தெளிவான சிந்தனை, தெய்வீக அனுக்கிரகம் போன்றவற்றின் மூலம் வாழ்க்கையில் வியக்கத்தக்க நன்மைகளை அனுபவிக்கும் தன்மை பெற்றவர், நோய் எதிர்ப்புத்திறனுடன் வலிமை மிக்க உடல் அமைப்பை பெற்றவர் என்பதை உறுதி செய்வதுடன், ஜாதகருக்கு அறிவார்ந்த முயற்சிகள் வழியில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்  என்பது கவனிக்கத்தக்கது, ஜாதகரின் லக்கினம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கான அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாழ்நாள் முழுவதும் வாரி வழங்கும் என்பதுடன் நீடித்த அதிர்ஷ்டம் பெற்றவர் என்பது உறுதியாகிறது.

4ம் பாவக வழியில்  இருந்து ஜாதகருக்கு நிறைவான மனம், நல்ல குணம், நண்பர்கள் ஆதரவில் சுகபோக யோக வாழ்க்கையை சுவீகரிக்கும் தன்மையை தரும், ஜாதகரின் தாய் வழியில் இருந்து வரும் சுபயோகங்களை பரிபூர்ணமாக பெரும் தன்மையை தரும், தாய் வழி சொத்துக்கள் கிடைக்கும், அனைத்திலும் வெற்றியை தரும், மண் மனை வண்டி வாகன யோகம் உண்டாகும், தனது சுய உழைப்பில் மேற்கண்டவற்றை சுவீகரிக்கும் யோகத்தை தரும், அரசியல் அல்லது  அரசு சார்ந்த உதவிகள் உண்டு, பெரியமனிதர்களின் ஆதரவின் வழியில் குறுகியகால வெற்றிகளை பெறுவார், அந்நியர், வேற்று மதத்தினர் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை ஜாதகருக்கு தன்னிறைவான பொருளாதர முன்னேற்றத்தை வாரி வழங்கும், எளிதான வெற்றிகள், உடல்நலம் சார்ந்த இன்னல்களில் இருந்து விரைவில் குணம் பெரும் தன்மையை தரும், பொருத்தன்மையான நடவடிக்கை ஜாதகருக்கு மிகப்பெரிய  அந்தஸ்த்தை வாரி வழங்கும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு, யோகம் மற்றும்  அதிர்ஷ்டமிக்க வாழ்க்கை துணையை பெறுவார் என்பதுடன், திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி ஜாதகருக்கு மிகவும் அபரிவிதமானதாக அமையும், ஜாதகரின் லாப ஸ்தானம் பெரும் பகுதி கால புருஷ தத்துவ  அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசியில் 21 பாகைகளை கொண்டு இருப்பது ஜாதகருக்கான வாழ்க்கை துணை வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்து வருவார் என்பதை குறிப்பதுடன் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை  வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து தனது சுய அறிவு திறன் கொண்டு சுவீகரிக்கும் வல்லமையை  தரும் என்பதை ஜாதகர் தனது கருத்தில் நிறுத்துவது அவசியமாகிறது, மேலும் ஜாதகர் திருமணம் செய்வதை தாமதம் செய்வது ஜாதகருக்கான வெற்றி வாய்ப்புகளை வெகுவாக குறைக்கும், சுய ஜாதகத்தில்  களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை  தனது  வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள், கூட்டு தொழில் மற்றும் வெளியூர் வெளிநாடுகளில் இருந்து வாரி வழங்கும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தெய்வீக அனுக்கிரகமும், ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பின் வழியில் இருந்து யோக  வாழ்க்கையையும் பெறுவார், பல அறிய  புனித திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகத்தை தரும், எதிர்பாராத ஆன்மீக பெரியோர்களின் தரிசனம் ஜாதகரின் வாழ்க்கையில் சிற்பபு மிக்க வெற்றிகளை வாரி வழங்கும், தனது அறிவு திறன் மூலம் சகல இன்னல்களில் இருந்தும் மீண்டு வரும் யோகத்தை தரும், பயணங்களில் வெற்றியும், வெளிநாட்டில் கல்வி அதன் வழியில் இருந்து வரும் ராஜயோக வாழ்க்கை  என்ற விதத்தில் சுபயோகங்களை வாரி வழங்கும், ஜாதகரின் ஆன்ம பலமும், தெய்வீக  தன்மையும் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், எளிதில் அனைத்தையும் பெரும் தன்மை உண்டு.

2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து அளவற்ற செல்வசேர்க்கை, இனிமையான  பேச்சு திறன், வாக்கு வன்மை, இனிமையான இல்லற வாழ்க்கை, சிறந்த உணவு மற்றும் விருந்து அனுபவிக்கும் யோகம், சேமிப்பு திறன், செல்லும் இடங்களில் இருந்துவரும் சிறப்பான வரவேற்பு, குடும்பத்தில் ஒற்றுமை , அனைவரையும் அனுசரித்து செல்லும் வல்லமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் காரியங்களில் வெற்றி, லட்சியம் நிறைவேறும் தன்மை, செல்வசெழிப்பு, எதிரிகள் எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் தன்மை,  நல்ல மனநிலை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வல்லமை, உண்மை பேசுதல், சத்தியத்தை மதித்தல்,  சாகச ஆர்வம், அதீத பயனவிருப்பம், கல்வியில் ஆர்வம், விளையாட்டில் ஆர்வம் கலைத்துறையில் வெற்றி, ஆய்வு  செய்வதில் வெற்றி, தன்னம்பிக்கை மனோதிடம்,  புதிய சூழ்நிலைகளில் விருப்பம், எஜென்சி துறையில் அபரிவித வளர்ச்சி மற்றும் தன சேர்க்கை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  கலைகளில் தேர்ச்சியை தரும், தெய்வீக அனுகிரகமும் உண்டாகும், மிகசிறந்த புத்திசாலித்தனமும், சமயோசித அறிவுத்திறனையும் தரும் , குல தெய்வ ஆசியின் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழும் யோகத்தை தரும், சிறந்த  தீர்வுகளை காணும் அறிவு திறனும், சரியான வழியை பரிந்துரைக்கும் வல்லமையை தரும், கல்வியில் ஆராய்ச்சியில் வெற்றியை தரும், அனைவராலும் நன்மைகளை பெறுவதுடன் நற்ப்பெயரும் உண்டாகும், தெளிவான சிந்தனை, சான்றோர் ஆதரவு ஜாதகரின் வாழ்க்கையில் சுபயோகங்களை வாரி வழங்கும், சிறந்த வாதத்திறமை உண்டாகும், குழந்தைகளுடன் இணக்கம், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, தன்னிறைவான பொருளாதார முன்னேற்றங்களை பெரும் அமைப்பை தரும்.

8,11ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 8ம் பாவக வழியில் இருந்து திடீர் விபத்து, பொருள் இழப்பு, உடல் நல பாதிப்பு, மருத்துவ செலவினங்கள், எதிர்பாராத முன்னேற்ற தடைகள், காதல் தோல்வி, எதிர்பாலின அமைப்பினரால் வரும் பாதிப்பு என்ற வகையில்  இன்னல்களை தரும், மனம் ஒருநிலை படுவது ஜாதகரின் வாழ்க்கையில் சகல நன்மைகளுக்கும் நல்ல ஆரம்பத்தை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து மண் மனை வண்டி வாகன யோகத்துடன் நவீன கருவிகளை பயன்படுத்தும் யோகம், அதீத வசதி வாய்ப்புகளை அனுபவிக்கும் தன்மை, புதிய வண்டி வாகனங்கள், அதிநவீன வசதி வாய்ப்புகள், சொகுசு வாழ்க்கை என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும், ஜாதகரின் நல்ல குணம் அனைவராலும் பாராட்டப்படும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது உத்யோகம், வியாபாரம் தொழில் முதலியவற்றில் அபரிவித வளர்ச்சியை வாரி  வழங்கும், கவுரவம் குறையாத யோக வாழ்க்கையை தரும், கம்பீரமான தொழில் வாய்ப்புகள், தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ளும் தைரியம், சிறந்த நிர்வாக வல்லமை, திட்டமிட்டு செயலாற்றி வெற்றிபெறும் யோகம், குறுகிய காலத்தில் அபரிவித வளர்ச்சி என்ற வகையில் சிறப்புக்களை வாரி வழங்கும், கூட்டு தொழில் வழியிலான நன்மைகளை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவதுடன், எதிர்பாராத நன்மைகளையும் பெறுவார்.

6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து கடன் சார்ந்த இன்னல்கள் வெகுவான பாதிப்புகளை வாரி வழங்கும், கடன் மற்றும் வேலை ஆட்கள் மூலம் அதீத தொல்லைகளை  வாரி வழங்கும், உடல் நலம் கடுமையாக பாதிக்க கூடும், எதிரி தொல்லை ஜாதகருக்கு சற்று அதிக அளவிலேயே இருக்கும், உடல் நலம் மனநலம் சார்ந்த பாதிப்புகளை ஜாதகர் அனுபவிக்கும் தன்மையை தரும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நிறைய செலவினங்களை தரும், பங்கு சந்தை லாட்டரியில் நஷ்டத்தை தரும், அதிக அளவிலான முதலீடுகள் ஜாதகரின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை தந்து தொழில் முடக்கத்தை வழங்க கூடும், உறவுகள் வழியில் இருந்து ஜாதகர் சில நேரங்களில் அதீத மனஉளைசலுக்கும், போராட்டத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும்.

நடைபெறும் செவ்வாய் திசை தரும் பலன்கள் : ( 28/04/2016 முதல் 29/04/2023 வரை )

 நடைபெறும் செவ்வாய் திசை ஜாதகருக்கு 8,11ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவது, ஜாதகருக்கு ஆயுள் ஸ்தான வழியில் இருந்து திடீர் இழப்பு, மருத்துவ செலவினங்கள், பொருளாதார  தடைகள், எடுக்கும் காரியங்கள் பின்னடைவை சந்தித்தல் எதிலும் திருப்தி இன்மை என்ற வகையில் இன்னல்களை தந்த போதிலும், லாப ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகருக்கு எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் வந்து சேரும், தனது வாழ்க்கை முன்னேற்றத்திற்கான சரியான முடிவுகளை மேற்கொள்ளும் யோகம் உண்டாகும், புதிய சிந்தனை, புதிய யுக்திகளை கையாண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டு, வெளியூர் வெளிநாடுகளை சார்ந்த அன்பர்களின் ஆதரவில் சுகபோக யோக வாழ்க்கையை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் தேடி வரும், எதிர்வரும் சனி புத்தி ஜாதகருக்கு எடுக்கும் காரியங்களில் நல்லதொரு வெற்றிகளை வாரி வழங்கும், திருமண முயற்சி, வேலைவாய்ப்பிற்க்கான முயற்சி, தொழில் வழியிலான செயல்பாடுகளில் பரிபூர்ண நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும் என்பது ஜாதகருக்கான சிறப்பு நினைவூட்டல் ஆகும்.

எதிர்வரும் ராகு திசை தரும் பலன்கள் ( 29/04/2023 முதல் 29/04/2041 வரை )

எதிர்வரும் ராகு திசை ஜாதகருக்கு 1,7,9ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்றும், 11ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் வாரி வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது, இருப்பின் இதே ராகு திசையில் ஜாதகருக்கு 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெற்று அவயோக பலனையும், 8ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவக தொடர்பை பெற்று அவயோக பலனையும் தருவது 6,8,12ம் பாவக வழியிலான இன்னல்களை தவிர்க்க இயலாத சூழ்நிலையை தரும், ஜாதகர் வெளியூர் அல்லது வெளிநாட்டில் ஜீவனம் மேற்கொள்வது  மேற்கண்ட பாதிப்பில் இருந்து விடுபட நல்லதோர் வாய்ப்பை நல்கும் என்பது கவனிக்கத்தக்கது, ஜாதகர் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து நன்மைகளையும், வலிமை அற்ற பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்கவும் தயார் நிலையில் இருப்பது நல்லது, ராகு திசை ஜாதகருக்கு பெரிய அளவிலான நன்மைகளையே தரும் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

பரிகாரம் :

1) ஜாதகர் திருவக்கரை சென்று முறையாக குரு பகவானுக்கு வக்கிரக நிவர்த்தி செய்து நலம் பெறுவது அவசியமாகிறது, வக்கிரக நிவர்த்தி செய்வதன் மூலம் ஜாதகர் சுய ஜாதகத்தில் உள்ள யோகங்களை சுவீகரிக்கும் வல்லமையை பரிபூர்ணமாக தரும்.

2) தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வருவது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க முன்னேற்றங்களை வாரி வழங்கும், தொழில் வழியிலான நன்மைகள் அதிகரிக்கும்.

3) திருவெண்காடு சென்று முக்குணநீராடி  சகல சௌபாக்கியங்களையும் பெறுக , சிவபெருமான் தரிசனம் சகல யோகங்களையும் சுவீகரிக்கும் வல்லமையை தரும்.

4) 48 நாட்கள் ஜாதகர் வீட்டில் விளக்கேற்றுவது சகல நன்மைகளையும் தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

சுய ஜாதக ஆலோசணை : சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் ( திருமணம்,தொழில்,குழந்தைபாக்கியம் )


சுய ஜாதக ஆலோசணை


லக்கினம் : சிம்மம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 3ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 1ம் பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் சிறப்பு, கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம், எடுக்கும் முடிவுகள் ஸ்திர தன்மையுடன் உறுதியாக அமையும் அமைப்பு, உடல் நலம், மனநலம் சிறப்பாக அமையும் தன்மை, எதிர்பாராத நன்மைகள் அதிர்ஷ்டங்களை பரிபூர்ணமாக பெரும் தன்மை, நம்பிக்கை லட்சியம் போன்றவை மிக எளிதாக சுவீகரிக்கும் வல்லமை, எதையும் சிறப்பாக செய்து வெற்றிகொள்ளும் யோகம், சுய முன்னேற்றம் பெறுவதில் ஆர்வம், முற்போக்கு கருத்துக்களை ஆமோதித்தல், புதிய சிந்தனை மற்றும் புதிய வாய்ப்புகளை சுவீகரிக்கும் வல்லமை, சுய ஆளுமை திறனுடன் வாழ்க்கையில் சிறப்பான எதிர்காலத்தை பெரும் யோகம்,  சுய முயற்சியில் சகல சௌபாக்கியங்களையும் ஜாதகி தேடி பெரும் யோகம் உண்டாகும்.

5ம் பாவக வழியில் இருந்து கலைத்துறையில் பிரகாசமான எதிர்காலத்தை தருவதுடன், கலைகளில் தேர்ச்சியை தரும், நாடகம், திரைத்துறையில் புகழ் உண்டாகும், குழந்தைகள் வழியிலான யோக வாழ்க்கை ஜாதகிக்கு பரிபூர்ணமாக உண்டாகும், விளையாட்டில் ஆர்வம், வாழ்க்கையில் உயர்ந்த நிலை, புத்திசாலித்தனம் மிக்க செயல்பாடுகள், அதீத கலைஆர்வம், இசையில் ஈடுபாடு என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும், சுய அறிவு திறன் ஜாதகிக்கு பன்மடங்கு தொழில் விருத்தியையும், சமயோசித புத்திசாலித்தனம் ஜாதகியின் வாழ்க்கையில் வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், கற்ற கல்வி ஜாதகிக்கு பெருமை மிக்க யோக வாழ்க்கையை தரும்.

9ம் பாவக வழியில் இருந்து  ஜாதகி பெருந்தன்மை மிக்க குணம் கொண்டவராக திகழ்வதுடன், அதீத அறிவு திறன் உள்ளவராக விளங்குவர், தன்னை விட வயதில் அதிகமுள்ள பெரியோர் அறிவுரையின் படி நடப்பதன் மூலம் வாழ்க்கையில் வியக்கத்தக்க நன்மைகளை பெறுவார், எதையும் பகுத்தறியும் தன்மை பெற்றவராக இருப்பர், ஜாதகியின் முன்னோர் செய்த புண்ணியத்தின் பலாபலன் ஜாதகிக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகிக்கு வெகுவான சுபயோகங்களை வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சுகபோக யோக வாழ்க்கையை பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும், புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு, நிறைந்த நல்லறிவு ஜாதகிக்கு அதிர்ஷ்டங்களை பரிபூர்ணமாக சுவீகரிக்கும் வல்லமையை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு தெளிந்த மனப்பான்மையும், பயமற்ற மனோநிலையையும் தரும், அதிர்ஷ்டகரமான நிகழ்வுகள் மூலம் வாழ்க்கையில் எதிர்பாராத யோக வாழ்க்கையை பெறுவார், நல்ல குணம் ஜாதகியின் வாழ்க்கையில் சிறந்த நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை பெற்று தரும், அதிர்ஷ்டம் உள்ளவர் என்பதால் ஜாதகியின் வாழ்க்கை மிகவும் சுவாரஷ்யம் மிக்கதாக திகழும், அரசு துறை அல்லது அரசியல்வாதிகள் மூலம்  அபரிவித லாபங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு, நீடித்த அதிர்ஷ்டம் உள்ளதால் வாழ்க்கையில் தான் நினைத்ததை அடையும் யோகம் உண்டு என்பதுடன் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

2,4,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தாமத திருமணம் என்ற போதிலும், தனம் சார்ந்த முன்னேற்றங்கள் உண்டு, பொருளாதார தன்னிறைவு ஏற்படும், குடும்ப  வாழ்க்கையில் சிக்கல்கள் உண்டு என்ற போதிலும், தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக அமையும், போட்டி, பந்தயம், தேர்வுகளில் அபரிவித வெற்றி உண்டு, மற்றவர்களிடம் கவனமாக பேசுவது அவசியமாகிறது, மருந்துகள் மூலம் லாபம் வருமானம் உண்டு, பண்ணை தொழில் வழியில் சிறப்பான முன்னேற்றம் உண்டு, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் எதிர்பாராத  நன்மைகளும் வெகுவான முன்னேற்றங்களும் உண்டாகும்.

4 ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு மன அழுத்தம் மற்றும் போராட்டத்தை தரும், நுண்ணறிவு ஞாபக சக்தி குறைபாட்டை தரும், வண்டி வாகன பாதிப்பு, திடீர் இழப்பும் ஏற்படும், தனது பெயரில் உள்ள சொத்துக்கள் திடீர் இழப்பை சந்திக்கக்கூடும், குணநலம் சார்ந்த பாதிப்பு உண்டாகும், தகப்பனாருக்கு வெகுவான பாதிப்பை தரும், மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதால் இன்னல்கள் அதிகரிக்கும், உறவுகள் வழியிலான துன்பங்கள் வெகுவான பாதிப்பையும் அமைதியின்மையையும் தரும்.

12ம் பாவக வழியில் இருந்து அடிப்படையில் மனநிம்மதி குறையும், தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்கள் உண்டாகும், அறிவில் விழிப்புணர்வு வெகுவாக குறையும், மனஅழுத்தம், மனப்போராட்டம் அதிகரிக்கும், திருப்தி இல்லாத தன்மை ஜாதகியின் வாழ்க்கையில் அளவிற்கு அதிகமான போராட்டங்களை வாரி வழங்கும் என்பதால், எதையும் பலமுறை சிந்தனை செய்து செயல்படுவது சகல சௌபாக்கியங்களையும் பெற வழிவகை அமைத்து தரும், இல்லற வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு தானே சரியான தீர்வுகளை எடுப்பது சிறந்ததாக அமையும்.

3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  ஜாதகிக்கு 3ம் பாவக வழியில் இருந்து வெற்றியும், அதிர்ஷ்டமும் கொண்டவர் என்பதை உறுதி செய்யும், தான் மேற்கொள்ளும் காரியங்கள், முயற்சிக்கும் செயல்களில் முழு அளவிலான வெற்றியை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர், செல்வச்செழிப்பு, எதிரிகளை வெல்லுதல், நல்ல சிந்தனை, சிறந்த மனநிலை, உண்மை சத்தியத்தை மதித்தல், சாகசம் செய்வதில் ஆர்வம், துணிந்து எதையும் செய்யும் வல்லமை, பயணங்களில் விருப்பம், வெளியூர் வெளிநாடுகள் சென்று வரும் வாய்ப்பு, தகவல் தொழில்நுட்பம், எழுத்து துறை, கலைத்துறையில் வெற்றியை தரும், சகோதர வழி ஆதரவு உண்டு அல்லது அது சார்ந்த முன்னேற்றங்கள் உண்டாகும்.

7ம் பாவக வழியில் இருந்து தாமத திருமணம் அல்லது விருப்ப திருமணம் அமையும் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது, சுய ஜாதகம் வலிமை பெற்ற ஜாதகரை வாழ்க்கை துணையாக ஜாதகி தேர்வு செய்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும், சுய ஜாதகத்தில் 7ம் வீடு களத்திர ஸ்தான தொடர்பை பெறுவது, ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையில் மிகுந்த யோகத்தை தரும் தன்மையை காட்டுகிறது, தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகிக்கு மிகுந்த நன்மைகளை பெறுவார், இல்லற வாழ்க்கையில் மனமொத்த தம்பதிகளாக திகழும் யோகமுண்டு, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், எனவே திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் முன் ஜாதகி சரியான முடிவுகளை மேற்கொண்டு  நலம் பெறுவது  அவசியமாகிறது, ஜாதகிக்கு அமையும் கணவர் நல்லவர் என்பது கவனிக்கத்தக்கது.

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  6ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு, குறிப்பாக வயிறு சார்ந்த இன்னல்கள் உண்டாகும், முயற்சிக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், கடன் மற்றும் எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் பாதிப்புகள் ஜாதகிக்கு சற்று கடினமாகவே அமைய கூடும், தெளிவற்ற  முடிவுகளால் ஜாதகி பெருவாரியான பாதிப்புகளை அனுபவிக்க நேரும், யாரிடமும் பகைமை பாராட்டாமல் நட்ப்புறவை பேணுவது சகல சௌபாக்கியங்களையும் தரும், வியாதியை எதிர்க்கும் தன்மை குறைவு என்பதால் வருமுன் காப்பது அவசியமாகிறது, அதிக அளவிலான செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரித்துக்கொள்வது நன்மையை தரும், கணவருக்கு பொருளாதார வெற்றியை நல்கும்.

 10ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 10ம் பாவக வழியில் இருந்து ஏஜென்சி, காண்ட்ராக்ட் தொழில் விருத்தியை தரும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஜீவனம் மூலம் நல்ல வெற்றி உண்டாகும், இருப்பினும் தாய் வழியிலான இன்னல்கள் அதிகரிக்கும்,  சுய தொழில் முயற்சிகள் பேரிழப்பை தரக்கூடும், மற்றவர்களால் கவுரவ குறைவு உண்டாகும் என்பதால் அதிக கவனம் தேவை , மக்கள் ஆதரவும் ஜீவன மேன்மையும்  ஜாதகிக்கு தேடிவரும், வாழ்நாள் முழுவதுமான ஜீவன முன்னேற்றம் சிறப்பாக அமையும், கவுரவம் அந்தஸ்து சுயமரியாதை சார்ந்த விஷயங்களில் வெகு கவனமுடன் செயல்பட்டு நலம் பெறுவது அவசியமாகிறது, தெய்வீக அனுகிரகம் மூலம் ஜாதகிக்கு செல்வவளம் அதிகரிக்கும், தொழில் வழியிலான தனித்திறமை கொண்டவராக விளங்குவார் என்ற போதிலும் சுய தொழில் வழியில் மிகப்பெரிய இழப்புகளையே தரும், மிகுந்த பொறுப்புணர்வு கடமையுள்ளம் கொண்டவராக இருப்பார் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 8ம் பாவக வழியில் இருந்து விபத்து, மருத்துவ சிகிக்சை, அனைத்திலும் ஏமாற்றம், மனக்குழப்பம், சரியான முடிவுகளை மேற்கொள்ள இயலாத சூழ்நிலை, தலைவலி, கண்பாதிப்பு உடல்நலம் சார்ந்த தொல்லைகள் என்ற வகையில் வெகுவான பாதிப்பை தரும், வலிமை பெற்ற ஜாதகரை வாழ்க்கை துணையாக தேர்வு செய்யவில்லை எனில் ஜாதகியின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும், வாழ்க்கை துணை வழியிலான பேரிழப்புகளை தவிர்க்க இயலாது என்பதுடன் விவாகரத்து அல்லது வாழ்க்கை துணையை பிரிந்து வாழும் சூழ்நிலையை தரக்கூடும்.


நடைபெறும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் : ( 21/05/2005 முதல் 21/05/2025    வரை )

நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகிக்கு 6ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலாபலன்களை தருவது ஜாதகிக்கு உகந்தது அல்ல, இது ஜாதகிக்கு உடல் நல பாதிப்பு, எதிரி தொல்லை, தீய சக்தி பாதிப்பு போன்ற இன்னல்களை வாரி வழங்கும், அனைவரிடமும் பகைமை பாராட்டும் தன்மையை தருவதுடன், எதிரியின் சதியில் இன்னலுறும் தன்மையை தரக்கூடும், கடன் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது, உடல் நலம் மன நலம் இரண்டிலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது, சுக்கிரன் திசையில் தற்போழுது நடைபெறும் சனி புத்தி 2,4,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலாபலன்களை வாரி வழங்குவது ஜாதகிக்கு கடும் நெருக்கடிகளை தரும், அனைவரிடமும் மிகவும் கவனமாக இருப்பதுடன் வார்த்தைகளில் அதீத கவனம் செலுத்துவதும், இனிமையான பேச்சும் ஜாதகிக்கு நன்மையை தரும், தனது வாழ்க்கை சார்ந்த முடிவுகளை மிக கவனமாக மேற்கொள்வதும், தனது பெயரில் உள்ள சொத்துக்களை பாதுகாப்பதும் அவசியமாகிறது, குணநலன் சார்ந்த விஷயங்களில் அதீத கவனம் தேவை, நிம்மதியற்ற மனமும், சரியான தீர்வுகளை காண இயலாத தன்மையும் சுக்கிரனை புத்தி தரும் என்பதால் மிகுந்த எச்சரிக்கை தேவை, பாதுகாப்பான பயணம் ஜாதகிக்கு நன்மையை தரும், சுக்கிரன் திசையில் சனி புத்தி ஜாதகிக்கு சற்று பின்னடைவை தரக்கூடும் என்பதால், திட்டமிட்டு செயலாற்றி நலம் பெறுவது அவசியமாகிறது.

எதிர்வரும் குரு திசை தரும் பலன்கள் : ( 21/05/2025 முதல் 21/05/2031 வரை )

எதிர்வரும் சூரியன் திசை ஜாதகிக்கு 1ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று முழு வீச்சில் சுபயோக பலாபலன்களை வாரி  வழங்குவது வரவேற்கத்தக்கது, ஜாதகியின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும் என்பதுடன், திருமணம், தொழில், குழந்தைகள் பொருளாதாரம் என்ற வகையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பது வரவேற்க்கத்தக்க சிறப்பு அம்சமாகும்,அதிர்ஷ்டத்தின் தாக்கம் ஜாதகிக்கு சூரியன் திசையிலேயே பரிபூர்ணமாக கிடைக்கும்.

பரிகாரம் :

1) திருவக்கரை வளர்பிறை சனி கிழமை  சென்று சனி பகவானுக்கு வக்கிரக நிவர்த்தி செய்து நலம் பெறுவது அவசியமாகிறது.
2) குலதெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்தில் செய்து நலம் பெறுக.
3) வருடம் ஒருமுறை பழனி சென்று வருவது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.
4) சர்ப்ப சாந்தி பரிகாரம் கால ஹஸ்த்தி சென்று முறையாக செய்து பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்கலாம்.
5) தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வருவது சகல நன்மைகளையும் தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696