புதன், 31 மே, 2017

சுய ஜாதக வலிமையும், தொழில் ரீதியான வெற்றி வாய்ப்புக்களும் !


 சுய ஜாதகம் வலிமை பெறாமல் ஒரு ஜாதகரால் சிறு துரும்பை கூட நகர்த்த இயலாது, எனவே சுய ஜாதக வலிமை என்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சிறந்த யோகங்களை வாரி வழங்கும் என்றால் அது மிகையில்லை, குறிப்பாக ஜீவன ரீதியான முன்னேற்றங்களை ஜாதகர் பெற வேண்டுமெனில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரமும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமும் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும் தற்போழுது நடைமுறையில் உள்ள திசாபுத்திகள் மற்றும் எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது சிறப்பான தொழில் நன்மைகளை தரும், குறிப்பாக வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது தொழில் ரீதியான அபிவிருத்தி மற்றும் முன்னேற்றங்கள் சிறப்பாக அமையும்.
சுய ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்கள் வலிமை பெறுவது ஜாதகருக்கு பொருளாதர ரீதியான வெற்றிகளையும், திரிகோண ஸ்தானங்கள் வலிமை பெறுவது அறிவு சார்ந்த வெற்றிகளையும் தரும், மேலும் மனதை ஆளுமை செய்யும் சந்திரனின் ஆதிக்கமும், உயிரை ஆளுமை செய்யும் சூரியனின் ஆதிக்கமும் சுய ஜாதகத்தில் சிறப்பாக அமைவது ஜாதகரின் தொழில் மற்றும் ஜீவன ரீதியான வெற்றி வாய்ப்புகளை 100% விகிதம் உறுதி செய்யும், மேற்கண்ட விஷயங்கள் சுய ஜாதகத்தில் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் கடுமையான ஜீவன போராட்டங்களையும், சுய முன்னேற்றம் அற்ற சூழ்நிலைகளில் மாட்டிக்கொண்டு வாழ்க்கையில் இன்னலுறும் தன்மையை தருகின்றது, எனவே தனது சுய ஜாதகத்தில் பாவக வலிமை நிலையையும், ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவக வலிமையையும் கருத்தில் கொண்டு தொழில் சார்ந்த தேடுதல்களில் ஜாதகர் ஈடுபடுவது, சுய ஜாதக வலிமைக்கு உற்ப்பட்ட ஜீவனம் சார்ந்த நன்மைகளை பெற முடியும், இதை கீழ்க்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : சிம்மம் 
ராசி : தனுசு 
நட்ஷத்திரம் : பூராடம் 2ம் பாதம் 

ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபத்தில் 07.47.48 பாகைகளும், மிதுனத்தில் 07.30.08 பாகைகளும் வியாபித்து இருக்கின்றது, ஜீவன ஸ்தான ஆளுமை என்பது ஜாதகருக்கு ரிஷபத்தில் 22பாகைகளும், மிதுனத்தில் 8 பாகைகளும் அமைகிறது, ரிஷபம் ஸ்திர மண் தத்துவ ராசி, மிதுனம் உபய கற்று தத்துவ ராசி, ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு தொடர்பு பெறுவது 4ம் பாவகத்துடன் ஜாதகரின் நான்காம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஆயுள் பாவகமான விருச்சிக ராசி மற்றும் பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் வியாபித்து இருப்பது சிறப்பான அம்சமாகும், மேலும் விருச்சிகம் ஸ்திர நீர் ராசியிலும், தனுசு உபய நெருப்பு ராசியிலும் அமைவது ஜாதகருக்கு மேற்கண்ட தத்துவ ரீதியான தொழில் வாய்ப்புகளை வழங்கும்.

ஜாதகரின் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் வாழ்க்கையில் நீர் மற்றும் நெருப்பு தத்துவ ரீதியிலான தொழில் வாய்ப்புகளை தரும், உதாரணமாக ஜாதகர் அழிவு பொருட்கள் சார்ந்த தொழில்களில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறலாம் அதாவது உணவு பொருட்கள், பால் பொருட்கள், நீர்ம பொருட்கள், அரிசி, தானியம் சார்ந்த தொழில்களில் அபிவிருத்தி உண்டாகும், மேலும் உபய நெருப்பு தத்துவம் சார்ந்த தொழில்களில் சிறப்பான வெற்றிகளை தரும், தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்கள், ஆசிரிய பணி, வண்டி வாகனம் சார்ந்த தொழில்கள், தகவல் தொழில் நுட்பம், மென்பொருள் சார்ந்த தொழில்களில் சிறப்பான விருத்தியை தரும்.

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசையும், எதிர்வரும் ராகு திசையும் 3ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் 7ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது என்பதனால், ஜாதகர் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமும் வலிமை பெற்று இருப்பதால் தகவல் தொழில் நுட்பம் சாந்த துறையில் சிறப்பான நன்மைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார், அதாவது ஜாதகர் மென்பொருள் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார், தொழில் செய்வதும் வெளிநாடுகளில் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், இதற்க்கு ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை 3ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, தனது திசையில் 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும் அமைப்பாகும், மேலும் ஜாதகரின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமாகவும், ஸ்திர காற்று தத்துவ ராசியில் அமைவது ஜாதகருக்கு அறிவு சார்ந்த தொழில் முன்னேற்றத்தையும், வெளிநாடு மற்றும் வெளியூர் சார்ந்த ஜீவன வாழ்க்கையையும் வாரி வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது, இது ஜாதகரின் வாழ்க்கையில் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறையில் பன்மடங்கு வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கி கொண்டு இருக்கின்றது மேலும் எதிர்வரும் ராகு திசையும் 3ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது சிறப்பான நன்மைகளையும் தொழில் விருத்தியையும் தரும் என்பது ஜாதகர் தொடர்ந்து தான் செய்யும் தொழில் வழியிலான முன்னேற்றங்களை 100% விகிதம் வாரி வழங்கும் என்பது ஜாதகர் ஜீவன ரீதியாக பெரும் யோக வாழ்க்கை ஆகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 29 மே, 2017

சுய ஜாதகம் வலிமை அற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்வதால் வரும் இன்னல்கள் !


" திருமணம் ஆயிரம்காலத்து  பயிர் " என்பது முதுமொழி, தனது சந்ததிகள் வாழையடி வாழையாக தழைத்து ஓங்கி வாழ சுய ஜாதகம் வலிமை பெற்ற ஓர் ஜாதகத்தை தனது வாழ்க்கை துணையாக தேர்வு செய்வது அவசியமாகிறது, இதை கருத்தில் கொண்டே முன்னோர்களும் பெரியவர்களும் சுய ஜாதக வலிமை அறிந்து திருமணம் செய்வது அவசியம் என்பதனை வலியுறுத்துகின்றனர், இதை ஏற்றுக்கொண்டு தமது இல்லற வாழ்க்கையில் சரியான பொருத்தம் நிறைந்த வலிமை பெற்ற ஜாதகத்தை தேர்வு செய்யும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பல சிறப்புகளை பெறுகின்றது, குறிப்பாக ஜாதகரின் வாரிசுகள் யோகம் நிறைந்ததாகவும், வாழ்க்கையில் குன்றாத வளம் நிறைந்தததாகவும் அமைகிறது, சுய ஜாதக வலிமை மற்றும் பொருத்தம் ஆகியவற்றில் சிறிது தவறு செய்தாலும் தம்பதியரின் வாழ்க்கை முற்றிலும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தருகிறது, கருத்துவேறுபாடு ஏற்பட்டு இல்லற வாழ்க்கை பிரிவை நோக்கி செல்கிறது.
இந்த இடர்பாடுகளை தவிர்க்க தம்பதியரின் சுய ஜாதக வலிமையை தெளிவாக உணர்ந்து வலிமை பெற்ற ஜாதகத்தை இல்லற வாழ்க்கையில் சங்கமிக்கும் பொழுது திருமணம் என்னும் உயர்ந்த பந்தம், இல்லற வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும், சுகபோகங்களையும் தர தவறுவதில்லை, தனது வாழ்க்கை துணையாக கீழ்கண்ட ஜாதகத்தை தேர்வு செய்யலாமா ? என்ற ஓர் அன்பரின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட ஜாதகத்தை இன்றைய ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : துலாம் 
ராசி : சிம்மம் 
நட்ஷத்திரம் : மகம் 2ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகியை திருமணம் செய்துகொள்ளலாம ? நட்ச்சத்திர பொருத்தங்கள் 9 உண்டு என்பதால் பொருத்தம் சிறப்பாக இருக்கின்றது  இல்லற  வாழ்க்கை யோகத்தை தரும் என்கின்றனர் தங்களின் ஆலோசனை  என்ன ? என்பது  ஜாதகரின் கேள்வி, பெரும்பாலும் திருமணம் பொருத்தம் காண்பதில் சுய ஜாதக வலிமை கருத்தில் கொள்ளாமல், தசவித பொருத்தம், தோஷ நிர்ணயம், ஏக திசை பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம் போன்றவற்றிற்கு மட்டும் முக்கியத்துவம் தந்து திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வது  கல்லை கட்டிக்கொண்டு கடலில் இறங்குவதற்கு சமம் என்பதை கருத்தில் கொள்வது நலம், சுய ஜாதகம்  வலிமை பெறாமல் எந்த பொருத்தங்கள் இருந்தாலும் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையாது என்பதே உண்மை, மேற்கண்ட ஜாதகத்திற்கு நட்ச்சத்திர பொருத்தம் ஒன்றை மட்டும் அடிப்படையாக கொண்டு திருமணம் செய்ய பரிந்துரை செய்து இருக்கின்றனர், இது  எவ்வளவு பெரிய இன்னல்களை மணமகனுக்கு தரும் என்ற விஷயம் அறியாமலே, இனி ஜாதகியின் சுய ஜாதக வலிமையை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் .

திருமண வாழ்க்கையில் பெண்ணின் ஜாதகத்தில் அடிப்படையில் மிகவும் வலிமை பெற்று இருக்க வேண்டிய பாவகம் லக்கினமாக, லக்கினம் வலிமை பெறுவது ஜாதகியின் உயர்ந்த குணத்தையும், வளரும் சூழ்நிலை, மனவலிமை, உடல் ஆரோக்கியம் மற்றும் ஜாதகியின் கீர்த்தி புகழ்  போன்றவற்றை எடுத்துரைக்கும், இந்த ஜாதகிக்கு லக்கினம் எனும் முதல் பாவகம்  பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, அடிப்படையில் லக்கினம் எனும் முதல் பாவகமே வலிமை அற்று காணப்படுகிறது என்பதும், ஜாதகி லக்கின பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை அனுபவிக்க பிறந்தவர் என்பதும் தெளிவாகிறது, குறிப்பாக  ஜாதகி பிற்போக்கு தனமான எண்ணமும், சுய ஆளுமை திறன் அற்றவர் என்பதும் உறுதியாகிறது.

அடுத்து குடும்ப ஸ்தானமான 2ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகியின் இல்லற வாழ்க்கை, தனம் சார்ந்த முன்னேற்றம், இனிமையான வாக்கு வன்மை ஆகியவற்றை பறைசாற்றும், ஜாதகியின்  2ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்ப வாழ்க்கையில் பலவித இன்னல்களை சந்திக்கும் நிலைக்கு ஜாதகி ஆளாகும் சூழ்நிலையை தரும் என்பதும், இனிமையான பேச்சு திறன் அற்றவர் என்பதும், பொருளாதார ரீதியான நெருக்கடி மற்றும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அற்ற தன்மையை தரும் என்பதும் உறுதியாகிறது, எனவே ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

அடுத்து தனது குலம் தழைக்க நல்ல வாரிசை நல்கும் அமைப்பான 5ம் வீடு  ஜாதகிக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல, மேலும் ஜாதகிக்கு சுய சிந்தனை, சமயோசித புத்திசாலித்தனம், நுண்ணறிவு ஆகியவை திறம்பட செயலாற்ற வாய்ப்பில்லை, மேலும் ஜாதகிக்கு புத்திர பாக்கியம் சார்ந்த இன்னல்களும் ஏற்படும், தெய்வத்தின் அனுக்கிரகமும், இறையருளின் கருணையையும் ஜாதகி பெறுவது என்பது குதிரை கொம்பாகவே இருக்கும், மேலும் புதிய சிந்தனை, அறிவு சார்ந்த முயற்சிகள் என்பது ஜாதகிக்கு சற்று குறைவு என்பது கவலை அளிக்கும் விஷயமாகும், இதனால் ஜாதகியின் வாழ்க்கை துணை பெரும் சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், தன்னம்பிக்கை குறையும், வீண் வாதமும், பிற்போக்குத்தனமான எண்ணங்களால் சூழப்பட்ட மனநிலையை  பெற்றவர் என்பதும் உறுதியாகிறது.

அடுத்து கணவன் எனும் 7ம் வீடு  ஜாதகிக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் கணவர் ஜாதகம் வலிமை பெற்று இருக்கவில்லை எனில் அவரின் கதி அதோகதிதான், அடிப்படையில் கணவன் மனைவி என்ற பிணைப்பே இருக்காது, தனது வாழ்க்கை துணையை ஓர் எதிரியாக பாவிக்கும் மனநிலையை ஜாதகிக்கு தந்துவிடும், திருமணத்திற்கு பிறகு கணவரின் அனைத்து செயல்பாடுகளும் முழுவதுமாக முடங்கும், ஜாதகரின் சுய வலிமை அனைத்தும் செயலற்று சூனியமாக மாறிவிடும், தம்பதியர் இருவருக்கும் மிகுந்த கருத்துவேறுபாடு உருவாகும், தம்பதியர் இருவரும் ஒருவர் வழியில் இருந்து ஒருவர் கடுமையான இன்னல்களை சந்திக்கும் நிலையை தரும், இல்லற வாழ்க்கையில் நிம்மதி என்பதே சிறிதும் இருக்காது, 7ம் வீடு பெண்களின் ஜாதகத்தில் பாதிக்கப்படுவது  கணவருக்கு மிகப்பெரிய நெருக்கடிகளை கொடுக்கும் என்பதும், இல்லற வாழ்க்கையில் பிரிவு ஏற்படும் என்பதும் கவலை தரும் விஷயமாகும்.

அடுத்து ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் வீடு  ஜாதகிக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கும் ஜாதகியின் கணவருக்கும் பேரிழப்புகளையும், திடீர் இழப்புகளையும் தரும், விபத்து, உடல்நல குறைபாடு, தனம் சார்ந்த நஷ்டங்கள், என தம்பதியர் இருவரும் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையை தரும், மேலும் ஆயுள் பாவகம் என்பது  ஜாதகி தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் வருமானம் மற்றும்  பொருளாதார வசதி வாய்ப்புகளை  குறிக்கும், இந்த பாவகமும் ஜாதகிக்கு பாதிக்கப்படுவது ஜாதகி தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து கடுமையான இழப்புகளை சந்திக்கும் நிலைக்கு ஆளாவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

அடுத்து அயன சயன ஸ்தானம் எனும் 12ம் வீடு ஜாதகிக்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு சில நன்மைகளை தந்த போதிலும், இல்லற இன்பம் எனும் விஷயங்களில் முரண்பட்ட வாழ்க்கையை தந்துவிடும் என்பதால் இதுவும் உகந்ததல்ல, எனவே  மேற்கண்ட ஜாதகியின் சுய  ஜாதக வலிமை என்பது மிகவும் வலிமை அற்று காணப்படுவது, ஜாதகியை மணந்துகொள்ள நினைக்கும் அன்பருக்கு நல்லதல்ல, ஒருவேளை மணந்துகொள்ள நினைக்கும் அன்பரது சுய ஜாதகம் மிகவும் வலிமை பெற்று இருந்தால் ஓரளவிற்கு ஜாதகர் சமாளிக்க கூடும் என்பது மட்டுமே ஆறுதலான, விஷயம்.

தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் அன்பர்கள்! அவரது சுய ஜாதக வலிமை நிலையை உணர்ந்து தேர்வு செய்வது நல்லது, இல்லை எனில் தனது  சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையும், யோக பங்கமாக மாறிவிட வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்க, மேலும் நட்ச்சத்திர பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ராகுகேது தோஷம், ஏக திசை பொருத்தம் போன்றவை எல்லாம் ஓர் ஜாதகத்தை ஆளுமை செய்யாது, அதனால் யாதொரு பாதிப்பும் வாராது, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் மட்டும் வலிமை பெற்று இருப்பதை உறுதி செய்து தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம், சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்து நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் நட்ச்சத்திர பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ராகுகேது தோஷம், ஏக திசை பொருத்தம் ஆகியவை இல்லை என்றாலும், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பாதிக்கப்பட்டு, நடைபெறும் எதிர்வரும் திசாபுத்திகள், வலிமை அற்ற  பாவக பலனை ஏற்று நடத்தினால், நட்ச்சத்திர பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ராகுகேது தோஷம், ஏக திசை பொருத்தம் ஆகியவை இருந்தாலும் அதனால் யாதொரு பலனும் இருக்காது, இல்லற வாழ்க்கையும் சிறப்பிக்காது, என்பதை உணர்ந்து செயல்படுவதே புத்திசாலித்தனம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 27 மே, 2017

சுய ஜாதகத்தில் நமக்கு வரும் நல்ல நேரம், கெட்ட நேரம் பற்றி துல்லியமாக அறிந்துகொள்வது எப்படி ?


 சுய ஜாதகத்தில் நமக்கு வரும் நல்ல நேரம், கெட்ட நேரம் பற்றி துல்லியமாக அறிந்துகொள்வது எப்படி ?

மிக சிறந்த கேள்வி, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை, வலிமை அற்ற நிலை ஆகியவை பற்றி தெளிவு பெறுவதும், நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் தனது சுய ஜாதகத்தில் எந்த எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை பற்றி தெளிவு பெறுவதும், அதற்க்கு கோட்சார கிரகங்கள் தனது கோட்சார நிலையில் இருந்து வழங்கும் பலாபலன்கள் பற்றிய தெளிவும், ஒருவரது சுய ஜாதகத்தில் வரும் நல்ல நேரம் மற்றும் கெட்ட நேரம் பற்றி மிக துல்லியமாக அறிந்துகொள்ள உதவும், சுய ஜாதகத்தில் தற்போழுது எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து யோக பலன்களையும் ( நல்ல நேரம் ), வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து அவயோக பலாபலன்களையும் ( கெட்ட நேரம் ), அனுபவிக்கும் நிலையை தரும்.

எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் முதல்  பனிரெண்டு பாவகங்களின் வலிமையே ஓர் ஜாதகரின் நல்ல நேரம் மற்றும் கெட்ட நேரத்தை நிர்ணயம் செய்கிறது, நடைபெரும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தி ஜாதகருக்கு யோக அவயோக பலாபலன்களை வாரி வழங்குகிறது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம், பொதுவாக சுய ஜாதகத்தில் பாவக கிரகங்களின் திசா புத்திகள் நடைபெறும் பொழுது ஜாதகருக்கு அவயோக பலன்களும், சுப கிரகங்களின் திசா புத்திகள் நடைபெறும் பொழுது ஜாதகருக்கு சுபயோக பலாபலன்களும் நடைமுறைக்கு வரும் என்பது பொது கருத்தும், மேற்கண்ட கருத்தும் என்பது முற்றிலும் ஜோதிட உண்மைக்கு புறம்பானது, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் பலாபலன்களை நவகிரகங்களின் திசா புத்திகள் ஏற்று நடத்துகிறது என்பதே உண்மை, நவகிரகங்கள் ஜாதகருக்கு தனிப்பட்ட பலாபலன்களை வழங்காது என்பதனை கீழ்கண்ட உதாரணம் மூலம் தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மிதுனம் 
ராசி : விருச்சகம் 
நட்ஷத்திரம் : கேட்டை 4ம் பாதம்

ஜாதகருக்கு தற்போழுது ராகு திசை நடைபெறுகிறது, ( 05/03/2009 முதல் 05/03/2027 வரை நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு தரும் பலன் என்ன ? என்பதை சற்று சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! ராகு சுய ஜாதகத்தில் அமர்ந்திருக்கும் இடம் எது ? தான் அமர்ந்த பாவகத்திற்கு ராகு வலிமை சேர்க்கும் விதத்தில் இருக்கின்றாரா ? தனது திசையில் எந்த எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார் என்பதை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

சுய ஜாதகத்தில் ராகு விருச்சிக ராசியில் உள்ள 5ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார், தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை அற்ற நிலையில் காணப்படுகிறார், இருப்பினும் தனது திசாபுத்தி காலங்களில் 2,4ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவிலான சுபயோக பலாபலன்களை வாரி வழங்கி கொண்டு இருப்பது ஜாதகருக்கு மிக சிறந்த நல்ல நேரத்தை தரும் அமைப்பாகும், குறிப்பாக ஜாதகர் ராகு திசை ராகு புத்தியில் நற்பலன்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் யோகத்தை தந்தது, இதற்க்கு காரணமாக ராகு திசை மற்றும் புத்தி வலிமை பெற்ற 2,4ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தந்ததே என்றால்? அது மிகையில்லை.

மேலும் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷத்தில் 5 பாகைகளும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாம் ராசியான ரிஷபத்தில் 25 பாகைகளும் கொண்டதாக அமைந்தது, ஜாதகர் அசையா மண் தத்துவம் சார்ந்த தொழில் மூலம் அபரிவிதமான வருமான வாய்ப்பை ஸ்திரமாக பெற்றார், பொருளாதார ரீதியான வெற்றி ஜாதகருக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது, ராகு சுய ஜாதகத்தில் வலிமை அற்று நின்ற போதிலும், தனது திசாபுத்தியில் வலிமை மிக்க பாவக பலனை ஏற்று நடத்தியது ஜாதகருக்கு சிறப்பான வெற்றிகளையும், தனசேர்க்கையையும் வாரி வழங்கியது.

ராகு திசையில் குரு புத்தி ஜாதகருக்கு வழங்கி பலன் என்ன? என்பதனை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், ஜாதகருக்கு ராகு திசையில் குரு புத்தி ( 16/11/2011 முதல் 11/04/2014 வரை ) நடைபெற்றது, நடைபெற்ற குரு புத்தி ஜாதகருக்கு 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஒருவரது சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்லதல்ல, சம்பந்தம் பெற்றாலும் நவகிரகங்கள் தனது திசா புத்திகளில் சம்பந்தம் பெற்ற பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாமல் இருப்பது நல்லது, ஆனால் மேற்கண்ட ஜாதகருக்கு முழு முதற் சுப கிரகமான "குரு" தனது திசையில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தியது ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான இன்னல்களை வாரி வழங்கியது, குறிப்பாக ஜாதகரின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் 8பாகைகளும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசியில் 19பாகைகளும் கொண்டு இருப்பது, ஜாதகருக்கு அறிவு சார்ந்த முயற்சிகளில் தோல்வியையும், தொழில் வழியிலான திடீர் இழப்புகளையும், ஜீவன ரீதியான  ( வியாபாரம் மற்றும் கூட்டு தொழில், ஏற்றுமதி இறக்குமதி ) தொடர் நஷ்டங்களையும் 200% விகிதம் வாரி வழங்கியது, இதனால் ஜாதகர் கடுமையான பொருளாதார சிக்கல்களை சந்திக்கும் நிலை உண்டானது, ஜாதகருக்கு ராகு திசை வலிமை பெற்ற பாவக பலனை தந்த போதிலும், ராகு திசையில் குரு புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தியது ஜாதகருக்கு லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான வழியிலான இன்னல்களை கடுமையாக தந்தது, நடைபெறும் திசா அல்லது புத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்த வில்லை எனில் ஜாதகரின் பாடு, படுதிண்டாட்டம் ஆகிவிடும் என்பதற்கு மேற்கண்ட உதாரணம் சரியாக பொருந்தும்.

ராகு திசையில் ராகு புத்தி யோக பலனையும் ( நல்ல நேரம் ) குரு புத்தி அவயோக பலனையும் ( கெட்ட நேரம் ) தந்தது, அடுத்து வந்த சனி புத்தி ஜாதகருக்கு வழங்கிய பலன்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! ராகு திசையில் சனி புத்தி ( 11/04/2014 முதல் 15/02/2017 வரை ) ஜாதகருக்கு 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று குரு புத்தியில் வழங்கிய இன்னல்களை தொடர்ந்த போதிலும், 3ம் வீடு  வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோகங்களை தந்தது, இதனால் ஜாதகர் பாதக ஸ்தான வழியில் இன்னல்களை சந்தித்த போதிலும் ( கெட்ட நேரம் ) வீரிய ஸ்தான வழியில் இருந்து சிறப்பான யோக பலன்களை ( நல்ல நேரம் ) அனுபவிக்கும் யோகம் உண்டானது , ஜாதகருக்கு சகோதர  வழியிலான நன்மைகள், புதிய முயற்சிகள் மற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியம் உண்டானது, மனதில் தைரியம் அதிகரித்தது, ஜாதகருக்கு  நல்ல தொடர்புகள் மூலம் வியாபர விருத்தி உண்டானது, தரகு, கமிஷன் மற்றும் ஏஜென்சி துறை மூலம் நல்ல பொருளாதார விருத்தியை முழுஅளவில் வாரி வழங்கியது, ஜாதகரின் வீரிய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைந்தது இறை அருளின் பரிபூர்ண கருணையை முழு அளவில் அனுபவிக்கும் யோகத்தை தந்தது, இதனால் ஜாதகரின் வாழ்க்கையில் பல சுப நிகழ்வுகள் அரங்கேறியது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

ராகு திசையில் தற்பொழுது நடைபெறும் புதன் புத்தி ( 15/02/2017 முதல் 04/09/2019 வரை ) ஜாதகருக்கு 2,4ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவிலான சுபயோக பலாபலன்களையும், 6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 30% விகித இன்னல்களையும் தருவது ஜாதகருக்கு சுபயோக பலாபலன்களையே ( நல்ல நேரம் ) அதிக அளவில் தரும் அமைப்பாகும், எனவே தற்போழுது நடைமுறையில் உள்ள ராகு திசையும், புதன் புத்தியும் 2,4ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவிலான சுபயோக பலாபலன்களை வாரி வழங்குவது ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் நல்ல நேரத்தை கட்டியம் கூறுகிறது.

எனவே ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசையும் சுபயோக பலன்களை தருவதும், ராகு திசையில் புதன் புத்தியும் சுபயோக பலன்களை தருவதும் தற்போழுது நடைபெறும் ஜாதகரின் நல்ல நேரத்தை உறுதிப்படுத்துகிறது.

ராகு திசையில் புதன் புத்திக்கு அடுத்து வரும் கேது புத்தி ஆயுள் பாவக பலனையும் ( கெட்ட நேரம் ), சுக்கிர புத்தி சுக ஸ்தான பலனையும் ( நல்ல நேரம் ) சூரியன் புத்தி ஜீவன ஸ்தான பலனையும் ( நல்ல நேரம் )  சந்திரன் புத்தி வீரிய ஸ்தான பலனையும் ( நல்ல நேரம் )  செவ்வாய் புத்தி விரைய ஸ்தான பலனையும் ( கெட்ட நேரம் ) தருவது ராகு திசையில் மற்ற புத்திகள் தரும் பலாபலன்கள் ஆகும், எனவே ராகு திசை ஜாதகருக்கு பொதுவாக சுபயோக பலன்களை தருவது ( நல்லநேரம் ) என்றே எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பு :

சுய ஜாதகம் வலிமை பெற்று இருப்பது ஜாதகரின் நல்ல நேரத்தை உறுதிப்படுத்தும், வலிமை அற்று இருப்பது ஜாதகரின் கெட்ட நேரத்தை உறுதிப்படுத்தும், எனவே ஒருவரது சுய ஜாதகத்தில் பாவக வலிமை நிலையையும், நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமை நிலையையும் தெளிவாக உணர்ந்து நல்ல நேரம் மற்றும் கெட்ட நேரத்தை உணர்ந்து நலம் பெறலாம்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 15 மே, 2017

சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் ஜாதகர் பெரும் யோக அவயோகங்கள் !



சுய ஜாதகத்தை இயக்குவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே என்றால் அது மிகையில்லை, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற அல்லது வலிமை அற்ற பாவக பலனையே நவகிரகங்களின் திசா புத்திகள் ஏற்று நடத்தும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது, நவகிரகங்களுக்கு தனது திசா புத்திகளில் தனிப்பட்ட நன்மை தீமை பலாபலன்களை ஏற்று நடத்த சிறப்பு தகுதி இல்லை என்பதையும் சுய ஜாதகத்தில் என்ன உள்ளதோ ( பாவக வலிமை அல்லது பாவக வலிமை அற்ற நிலை ) அதை மட்டுமே ஏற்று நடத்தும் என்பதை, இந்த இடத்தில் பதிவு செய்ய " ஜோதிடதீபம் " கடமைப்பட்டுள்ளது.

கீழ்கண்ட ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையையும், நவகிரகங்கள் தனது திசா புத்திகளில் ஏற்று நடத்தும் பலாபலன்கள் பற்றியும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! சுய ஜாதகம் வலிமை பெரும் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியிலான நன்மை மற்றும் சுபயோகங்களையும், சுய ஜாதகம் வலிமை இழக்கும் பொழுது சம்பந்தப்பட்ட பாவக வழியிலான அவயோகம் மற்றும் இன்னலைகளையும் ஜாதகர் எதிர்கொள்ளும் நிலையை தரும் என்பதை கருத்தில் கொள்வது நலம் தரும் .


லக்கினம் : துலாம்
ராசி : மிதுனம்
நட்ஷத்திரம் : திருவாதிரை 3ம் பாதம்

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்பு :

1,3,8ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 1ம் பாவக வழியில் இருந்து சிறந்த மனநிலை, தைரியம், ஆர்வம், வீரியமிக்க செயல்திறன், உடல் வலிமை மனவலிமை, பயணம் மூலம் லாபம், சகோதர வழியிலான ஆதரவு, அனைவருடன் இணக்கமாக பழகும் தன்மை, அனைவரின் ஆதரவு மற்றும் உதவிகளை பெறுதல், முற்போக்கு சிந்தனை, நீண்ட ஆயுள், வலி தாங்கும் தன்மை, விரைவில் குணம் பெரும் உடல் அமைப்பு, செய்யும் காரியங்களில் வெற்றி, ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த துறைகளில் பணியாற்றும் யோகம் என்ற வகையில் நன்மைகளை தரும்,மேலும் ஜாதகரின் வீர்ய ஸ்தானம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக அமைவது ஜாதகர் முயற்சிக்கும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்றம் உண்டாகும், பெரிய மனிதர்கள் ஆதரவும், ஆசிர்வாதமும் கிடைக்கப்பெறுவார், பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகமும், தன்னிலை உணரும் வாய்ப்பும் உண்டாகும், குல தெய்வ அனுக்கிரகமும், இறையருளின் பரிபூர்ண கருணையும் ஜாதகருக்கு மிக எளிதாக அனுபவப்படும் வாய்ப்பு உண்டாகும்.

3ம் பாவக வழியில் இருந்து செல்வசெழிப்பு, எதிரிகளை வெல்லும் தன்மை, நல்ல மனநிலை, சிறப்பாக சிந்திக்கும் ஆற்றல், சத்தியத்தை மதித்தல், தைரியம், பயணங்களில் விருப்பம், கல்வியில் ஆர்வம், மாற்றம் மற்றும் புதிய சூழ்நிலைகளில் விருப்பம், ஏஜென்சி துறையில் நல்ல வெற்றி வாய்ப்புகள், அறிவுபூர்வமான செயல்பாடுகள், தகவல் தொழில் நுட்ப துறை மற்றும் ஆராய்ச்சி துறையில் வெற்றி வாய்ப்புகள், தன்னம்பிக்கை குறையாத மனநிலை, நினைத்ததை சாதிக்கும் வல்லமை, மக்கள் ஆதரவு, எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை, என்ற வகையில் சுப யோகத்தை தரும், கற்ற கல்வி வழியிலான யோக வாழ்க்கை பரிபூர்ணமாக அமையும், பெரிய மனிதர்களின் தொடர்புகள் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய அந்தஸ்த்தை பெரும் யோகம் உண்டாகும்.

8ம் பாவக வழியில் இருந்து லாட்டரி யோகம், புதையல் யோகம், மனதிற்கு எட்டாத விஷயங்களில் ஆர்வம், நீண்ட ஆயுள், வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் வழியிலான முன்னேற்றம், வெளிநாடுகள் அல்லது வெளியூரில் இருந்து வரும் வருமான வாய்ப்புகள், சுலப வழியிலான தனசேர்க்கை, எஜென்ஜி மற்றும் கான்ராக்ட் தொழில் வழியிலான லாபங்கள் என்ற வகையில் நன்மைகளை வாரி தரும், குறிப்பாக வாழ்க்கை துணை எதிர்ப்பால் இனஅமைப்பினர் மூலம் தனசேர்க்கை உண்டாகும்.

4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றம், பெயரும் புகழும் உண்டாகும், மண் மனை, வண்டி வாகனம், வீடு நிலம் மற்றும் சொத்து சுக சேர்க்கை அபரிவிதமாக அமையும், மிக பெரிய சொத்துக்கள், அரசு கெளரவம், சமூக வாழ்க்கையில் தனி அந்தஸ்து, அரசியலில் வெற்றி வாய்ப்பு, பொருளாதார வசதிகள், நல்ல வேலையாட்கள், கலைகளில் ஆர்வம், முக்கிய பொறுப்புகளை ஆளுமை செய்யும் வலிமை என்ற வகையில் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

10ம் பாவக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம், வியாபாரத்தில் வெற்றி, செய்யும் தொழில் வழியிலான முன்னேற்றங்கள், கம்பீரமான வாத திறமை, கவுரவம் குறையாத யோக வாழ்க்கை, செய்யும் தொழில் வழியில் அபரிவிதமான வளர்ச்சி, செல்லும் இடங்களில் இருந்து வரும் மதிப்பு மரியாதை, பெரிய பதவிகளை வகிக்கும் யோகம், இறைநிலையின் பரிபூர்ண கருணை என்ற வகையில் யோகத்தை தரும், மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கடக ராசியில் அமைவது, அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை  ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து வாரி வழங்கும், மிகப்பெரிய கவுரவ பதவிகள் அந்தஸ்து தேடி வரும், ஜீவன வழியிலான பரிபூர்ண முன்னேற்றத்தை தங்கு தடையின்றி வாரி வழங்கும்.

5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 5ம் பாவக வழியில் இருந்து நல்ல ஆரோக்கியம், விரைவாக முடிவெடுக்கும் தன்மை, அதிபுத்திசாலித்தனம், நுண்ணறிவு, பல்துறை ஆராய்ச்சி  மூலம் புதிய கண்டுபிடிப்புகளை காணுதல், அமைதியான மனம், மகிழ்ச்சியான வாழ்க்கை, சமாதானத்தில் விருப்பம், நல்ல பழக்க வழக்கங்கள், குல தெய்வத்தின் ஆசியை பரிபூர்ணமாக பெறுதல், கற்ற கல்வி வழியிலான யோக வாழ்க்கை, பெற்ற குழந்தைகள் வழியிலான முன்னேற்றம், சுயமாக வாழ்க்கையில் முன்னேனேற்றம் பெரும் யோகம், எந்த சூழ்நிலையிலும் இறை அருளின் கருணை மூலம் வாழ்க்கையில் நன்மையை அடையும் யோகம் என்றவகையில் சிறப்புகளை தரும்.

9ம் பாவக வழியில் இருந்து அறிவுத்திறன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் அமைப்பு, பயண விருப்பம், தெய்வீக ஞானம், ஆன்மீகத்தில் வெற்றி, இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பம், மிக சிறந்த ஆன்மீக பெரியோர்களின் ஆசியை பெரும் அமைப்பு, பித்ருக்கள் வழியிலான ஆசிகள் மூலம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை பெறுதல், அறிவில் விழிப்பு நிலை, குருவின் ஆசியுடன் சூட்ஷம அறிவை பெறுதல், தேடுதல் மூலம் மோட்ச நிலையை அடைதல் என்ற வகையில் சிறப்புகளை தரும், தெய்வீக சிந்தனை மேலோங்கும், கற்ற கல்வி ஜாதகருக்கு நல்லதொரு வாழ்க்கையை நிர்ணயம் செய்யும், தனிமை விருப்பம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகருக்கு சாதகமாக மாறும், ஜாதகரின் சிந்தனை மற்றும் செயல்பாடுகள் மிக பெரிய அளவில் வெற்றிகளை தரும்.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சக்தி வாய்ந்த கூட்டாளி மற்றும் நண்பர்களை தரும், நல்ல யோகம் உள்ள வாழ்க்கை துணை அமையும், வியாபாரம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஜாதகருக்கு சரளமான வருமான வாய்ப்புகள் வந்து சேரும், கூட்டு முயற்சி வெற்றி தரும், தெய்வீக ஆளுமை மூலம் உலக புகழ் பெரும் யோகம் உண்டாகும், பிரபல்ய யோகமும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையை ஜாதகருக்கு இயற்கையாகவே அமைந்து இருக்கும், எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும், பொது வாழ்க்கை மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் நற்பெயர் மற்றும் உயர் பதவிகள் கிட்டும், எதிர்பாராத உதவிகள் வாழ்க்கை துணை வழியில் இருந்து கிடைக்க பெறுவார், பொதுமக்கள் ஆதரவும் பெரிய அளவில் உண்டு, வியாபாரம் விருத்தி அடையும், வாழ்க்கை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்.

ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான சவால்களை ஏற்படுத்தும், தெளிவற்ற சிந்தனைகள் மற்றும் குழப்பமான மனநிலையில் ஜாதகர் செய்யும் காரியங்கள் யாவும் கடும் தோல்வியை தரும், ஜாதகரின் மனதில் சில நேரங்களில் இனம் புரியா சந்தேகங்கள் அதிக அளவில் ஏற்படும், அதிர்ஷ்டத்தின் தாக்கம் ஜாதகருக்கு முழு அளவில் பயன் தாராது, பிற்போக்குத்தனமான எண்ணங்கள் மற்றும் மூட நம்பிக்கைகள் ஜாதகரின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை தந்துவிடும், நல்ல குரு அமைவது ஜாதகருக்கு சற்று கடுமையான காரணமாக அமையும், பாதக ஸ்தான வழியில் இருந்து ஜாதகர்  கடுமையான இன்னல்களை வெகு அளவில் சந்திக்கும் நிலையை தரும், ஜாதகரின் 11ம் வீடு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியாகவும், ஸ்திர நெருப்பு தத்துவ ராசியான சிம்மத்தில் அமைவது ஜாதகரின் ஆன்மீக தேடுத்தல்களை கடுமையான சிக்கல்களுக்கு ஆளாக்கும், அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை தரும், பாதக ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் 200% விகித இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

2,6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 2ம் பாவக வழியில் இருந்து குடும்பம் மற்றும் வருமானம் சார்ந்த இன்னல்களை தரக்கூடும், வரும் வருமானம் ஜாதகருக்கு வீண் செலவுகளை ஏற்படுத்தும், வாக்கு வன்மை குறையும், குடும்ப வாழ்க்கையில் அதிக அளவிலான மன அழுத்தங்களை ஜாதகர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், வாக்கு வழியிலான பிரச்சனைகள் அதிகரிக்கும், எதிர்பாராதஇழப்புகள் பொருளாதார ரீதியாக ஜாதகர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், இருப்பினும் அருங்கலைகளில் ஆர்வம், ஆய்வுகளில் வெற்றி, பணியில் திருப்தி என்ற நிலையை தரும்.

6ம் பாவக வழியில் இருந்து கடன் வாங்குவது கொடுப்பது இரண்டும் ஜாதகருக்கு இன்னல்களை தரும், பணி சார்ந்த மனஅழுத்தம் அதிகரிக்கும், பணியாட்கள் மூலம் சிறு சிறு தொல்லைகள் உண்டாகும், தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும், எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஜாதகரை வெகுவாக பாதிக்கும், நிம்மதி இழப்பு உண்டாகும், தனம் சார்ந்த திட்டமிடுதல்கள் இல்லை எனில் வாழ்க்கை ஜாதகருக்கு சுமையாக மாறிவிட வாய்ப்பு உண்டு, எதிரிகள் வழியில் நன்மை உண்டானாலும், அவர்களால் மனநிம்மதி கெடும்.

12ம் பாவக வழியில் இருந்து நிறைய வீண் செலவினங்களை தரும், சூது மூலம் நஷ்டம் உண்டாகும், திருப்தி இல்லாத மனநிலை, அணியவராலும் இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலை, எதிர்பாராத விபத்து என்ற வகையில் கடுமையான பாதிப்பை தர கூடும், நல்ல உறக்கம் இன்மை அல்லது உடல் நல பாதிப்பை தரக்கூடும், சரியான திட்டமிடுதல்கள் இல்லாத காரணத்தால் சில இடர்பாடுகளை அதிக அளவில் சந்திக்கும் சூழ்நிலையை தரும், ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தும், தெய்வீக சிந்தனை இருந்த போதிலும் முழுமையான வெற்றியை தாராது, அதிக அளவிலான மன போராட்டம் மற்றும் எதிர்ப்புகளை தரும்.

தற்போழுது நடைபெறும் புதன் திசை தரும் பலன்கள் : ( 21/10/2014 முதல் 21/10/2031 வரை )

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் புதன் திசை 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்க அம்சமாகும், மேலும் கடந்த சனி திசையும் ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்ற சுகம் மற்றும் ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தியது ஜாதகருக்கு 4,10ம் பாவக வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கியது, குறிப்பாக ஜாதகரின் ஜீவன வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைந்தது, இந்த நிலை புதன் திசையிலும் தொடர்வது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் பாதிக்கப்பட்ட போதிலும் நடந்த, நடைபெறுகின்ற சனி மற்றும் புதன் திசை 100% விகிதம் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியிலான சுகபோகம் மற்றும் ஜீவன முன்னேற்றங்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும் என்பது மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள சிறப்பு அம்சமாகும்.

மேலும் ஜாதகருக்கு ராகு திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் வலிமை அற்ற பாதக ஸ்தான பலனையும், விரைய ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது 11,12ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும், குரு திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் வலிமை அற்ற விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வீண் விரையம் என்ற நிலையிலும் இன்னல்களை கடுமையாக தரும், குறிப்பாக சுய ஜாதகத்தில் திசா,புத்திகளில் ராகு மற்றும் குரு மட்டுமே ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை தரும், மற்ற கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் வலிமை பெற்ற பாவக தொடர்புகளையே ஏற்று நடத்துவதால் ஜாதகருக்கு யோக பலாபலன்களே நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், நடைபெறும் திசை புத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், ஜாதகருக்கு யாதொரு இன்னல்களும் நேராது, அவயோக பலாபலன்கள் எதுவும் நடைமுறைக்கு வாராது, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருந்தாலும் நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், சுய ஜாதகத்தில் யோகம் இருந்தும் அதனால் ஜாதகருக்கு யாதொரு பலனும் இல்லை என்பதே முற்றிலும் உண்மை, நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 9 மே, 2017

சுய ஜாதகம் என்றால் என்ன ? சுய ஜாதகத்தால் நமக்கு என்ன பயன் ? ( வலிமை பெற்ற சுயஜாதகம் )



சுய ஜாதகம் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, அவரது வாழ்க்கையில் வலிமை பெற்ற பாவக வழியிலான சுபயோகங்களை ஸ்திரமாக பெற்று தரும், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் சுய ஜாதகத்தில் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளையும் சுப யோகங்களையும் வாரி வழங்கும், வலிமை பெற்ற சுய ஜாதகம் ஜாதகருக்கு வழங்கும் சுப யோகங்களை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

அதற்க்கு முன் ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெறுவது, ஜாதகருக்கு எப்படி சுப யோகங்களை வாரி வழங்குகிறதோ? அதை போன்றே சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் மட்டும் வலிமை பெற்று இருந்தாலும், ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை மட்டும் நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தினாலும், ஜாதகருக்கு சுப யோக பலன்களே நடைமுறைக்கு வரும், மேலும் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்களை ஜாதகர் எதிர்கொள்ளும் சூழ்நிலை வர வாய்ப்பில்லை என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், எனவே சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது மட்டுமே சிறப்பான நன்மைகளை ஜாதகருக்கு தந்துவிடாது, நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகள் நடைமுறைக்கு வரும்.


லக்கினம் : தனுசு
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : விசாகம் 1ம் பாதம்

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,3,4,6,9,10,12ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 1ம் பாவக வழியில் இருந்து சிறந்த மனநிலை, தைரியம், ஆர்வம், வீரியமிக்க செயல்திறன், உடல் வலிமை மனவலிமை, பயணம் மூலம் லாபம், சகோதர வழியிலான ஆதரவு, அனைவருடன் இணக்கமாக பழகும் தன்மை, அனைவரின் ஆதரவு மற்றும் உதவிகளை பெறுதல், முற்போக்கு சிந்தனை, நீண்ட ஆயுள், வலி தாங்கும் தன்மை, விரைவில் குணம் பெரும் உடல் அமைப்பு, செய்யும் காரியங்களில் பாதுகாப்பு துறையில் பணியாற்றும் யோகம் என்ற வகையில் நன்மைகளை தரும்.

3ம் பாவக வழியில் இருந்து செல்வசெழிப்பு, எதிரிகளை வெல்லும் தன்மை, நல்ல மனநிலை, சிறப்பாக சிந்திக்கும் ஆற்றல், சத்தியத்தை மதித்தல், தைரியம், பயணங்களில் விருப்பம், கல்வியில் ஆர்வம், மாற்றம் மற்றும் புதிய சூழ்நிலைகளில் விருப்பம், ஏஜென்சி துறையில் நல்ல வெற்றி வாய்ப்புகள், அறிவுபூர்வமான செயல்பாடுகள், தகவல் தொழில் நுட்ப துறையில் வெற்றி வாய்ப்புகள், தன்னம்பிக்கை குறையாத மனநிலை, நினைத்ததை சாதிக்கும் வல்லமை, மக்கள் ஆதரவு, எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை, என்ற வகையில் சுப யோகத்தை தரும்.

4ம் பாவக வழியில் இருந்து மனநிலையில் தெளிவு,  ஞாபக சக்தி மற்றும் நுண்ணறிவு பாதிப்பு, வீடு வண்டிவாகனம் பாதிப்பு, அடிக்கடி மாற்றுதல், கால்நடைகள் மூலம் விரையம், பயணம் மூலம் பாதிப்பு, அமைதியின்மை, பேரம் மாறும் மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதால் நஷ்டம், மற்றவர்கள் விஷயங்களில்  தலையீடு செய்வதால் இன்னல்கள்  என்ற வகையில் சிரமங்களை தந்த போதிலும், நல்ல குணம் அமையும், அறிவு திறன் மூலம் தனது  பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் யோகம் உண்டாகும்.

6ம் பாவக வழியில் இருந்து சிறு சிறு அதிர்ஷ்ட வாய்ப்புகள், ஏஜென்சி மற்றும் காண்ட்ராக்ட் விஷயங்களில் லாபம், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம், எதிர்ப்புகள் நன்மையை தரும், எதிரிகளால் செல்வாக்கு உண்டாகும், சகல சௌபாக்கியம் மற்றும் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும், தெய்வீக சிந்தனை மேலோங்கும், எதிரிகள் பலம் குறையும், எதிர்பாராத வகையில் சொத்தது சுக சேர்க்கை உண்டாகும்.

9ம் பாவக வழியில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று வரும் வாய்ப்பு,  பிரயாணங்களில் விருப்பம், ஆராய்ச்சி துறையில் வெற்றி, பணியில் இடம் மாற்றம், புதிய சூழ்நிலைகளில் ஆர்வம், சகோதர வழி நற்பெயர், தனது அறிவு திறனை எழுத்துருவாக மாற்றும் வல்லமை, அதன் வழியிலான சுய முன்னேற்றம், சுயநலம் கருதா நிலை என்ற வகையில் சுப யோகங்களை நல்கும்.

10ம் பாவக வழியில் இருந்து ஏஜென்சி துறையில் ஜாதகர் புகழ் பெற்ற வியாபாரியாக திகழும் வாய்ப்பை தரும், எழுத்து மற்றும் பத்திரிக்கை துறையில் பெயரும் புகழும் உண்டாகும், வியாபார ஆலோசனை வழங்கும் துறையில் ஜாதகருக்கு பெயரும் புகழும் உண்டாகும், வீரியமிக்க தொழில் துறையில் ஜாதகர் வெற்றி பெறுவார், விளையாட்டு மற்றும் பாதுகாப்பு துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், தெய்வீக சிந்தனை மூலம் ஜாதகர் தொடர் வெற்றிகளை பெறுவார், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும், செய்யும் தொழில் முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமானதாக அமையும், திடீர் செல்வத்தை தொழில் மூலம் ஜாதகர் பெறுவார், அனைத்து செயல்களிலும் வெற்றி உண்டாகும்.

12ம் பாவக வழியில் இருந்து வெளிநாடு யோகம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் வருமானம் அதிகரிக்கும், செய்த முதலீடுகள் வழியிலான லாபம் பெரிய அளவில் வந்து சேரும், நல்ல உறக்கம், சிறந்த ஆன்மீக வழியிலான தேடுதல்கள் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் அமைப்பை தரும், பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகமும், திருப்தியான மனநிலையையும் தரும்.

  2,5,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக  வழியில் இருந்து அதிர்ஷ்டம், நண்பர் உதவி, செல்வச்செழிப்பு, இனிமையான பேச்சு திறன், தன்னம்பிக்கை மிக்க மனநிலை, வாக்கு சாதுர்யம், செய்யும் தொழில் வழியிலான சிறப்பான வருமானம், தெய்வீக சிந்தனை, பரிவு மிக்க செயல்பாடுகள், சிறந்த குடும்ப வாழ்க்கை, பல தொழில் செய்யும் யோகம், முற்போக்கு சிந்தனை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் அமைப்பு என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து நல்ல ஆண் வாரிசு, குழந்தைகள் , மூலம் வாழ்க்கையில்  செல்வச்செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம், லாட்டரி யோகம் அறிவு திறனால் பெரும் வளர்ச்சி, எப்பொழுதும் சந்தோசம், குழந்தைகள் மற்றும் வாழ்க்கை துணையுடன் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழும் யோகம், திருமணத்திற்கு பிறகான தொழில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், குலதெய்வ அனுக்கிரகம், சந்தர்ப்பங்களை சரியாக கையாளும் வல்லமை, எதிர்பாராத வளர்ச்சி மற்றும் அதிர்ஷ்டம், தனது அறிவு திறன் மூலம் சகல செல்வங்களையும் பெரும் யோகம் என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நினைத்த ஆசைகள்  நிறைவேறும்யோகம், மிக சுலபமாக அனைத்தையும் வெற்றி கொள்ளுதல், திருப்தியான  மனநிலை, வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் வழியிலான  வருமான வாய்ப்புகள், திடீர் அதிர்ஷ்டம், புதையல் யோகம், எதிர்பால் அமைப்பினரால் பெரும் வருமானம், நீண்ட ஆயுள், திடீர் பொருள் வரவு, மருத்துவ உபகரணம் மூலம் அல்லது மருத்துவ துறையிலான லாபங்களை குறுக்கியகாலத்தில் பெரும் யோகம், ஆயுள் காப்பீடு, ஊக்க தொகை மூலம் பெரும் சொத்தது சேர்க்கை மற்றும் வருமானம் என்றவகையில்  சுபயோகங்களை வாரி வழங்கும், திருமணத்துக்கு பிறகான வளர்ச்சி ஜாதகருக்கு அபரிவிதமானதாக அமையும்.

11ம் பாவக வழியில் இருந்து மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் திடீரென  பலிதம் பெரும் யோகம், தெய்வீக சிந்தனை, புதிய முயற்சிகள் மூலம் வாழ்க்கையில் அதிர்ஷ்டங்களை தேடி பெரும் யோகம், எதிர்பாராத வருமானம் மூலம் ஜாதகர் பெரும் பொருளாதர தன்னிறைவு, எதிர்ப்புகளை கடந்து  வெற்றிபெறும் யோகம், போட்டி பந்தயங்களில் வெற்றி, வழக்குகளில் வெற்றி, நல்ல மனநிலை, பின்யோக ஜாதகம் ( திருமணத்திற்கு பிறகான முன்னேற்றம் )

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்  பெறுவது ஜாதகத்திலே மிகவும் மோசமான அமைப்பை தரும், மேலும் களத்திர ஸ்தான வழியிலான  இன்னல்கள்  ஜாதகருக்கு 200% விகித துன்பங்களை தரக்கூடும் என்பதால் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது ஜாதகர் மிகவும் கவனமுடன் இருப்பது நலம் தரும், ஜாதகருக்கு நல்ல வாழ்க்கை துணை அமைவது  சற்று சிரமம், நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் அமைவது குதிரை கொம்பு என்றே சொல்லலாம், பொதுமக்கள் வழியிலான வளர்ச்சி வெகுவாக குறையும், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், குறிப்பாக எதிர்பாலின அன்பர்களின் பிரச்சனைகளில்  தலையீடு செய்யலாம் இருப்பதே ஜாதகருக்கு சகல அமைப்புகளில் இருந்தும் நன்மையை தரும்.

நடைபெறும் சனி திசை தரும் பலன்கள் : ( 30/05/2002 முதல் 30/05/2021 வரை )

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சனி திசை 1,3ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், 3ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியாக அமைத்து லாபங்களை அதிர்ஷ்டங்களையும் தான் எடுக்கும் முயற்சிகள் வழியில் இருந்து வாரி வழங்கும், தெளிவான சிந்தனை, விளையாட்டுகளில் ஆர்வம், பாதுகாப்பு துறையில் பணியாற்றும் யோகம் என்றவகையில் ஜாதகருக்கு சனி திசை முழு அளவிலான நன்மைகளையே ஸ்திரமாக வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகம் வாழ்க்கையில் நல்ல வெற்றிகளை பெற்று தரும், எந்த  சூழ்நிலையையும் சிறப்பாக எதிர்கொண்டு வாழ்க்கையில்  வெற்றிநடைபோடும் வாய்ப்பினை தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை 1,3ம் பாவக வழியில் இருந்து தரும், நல்ல ஆரோக்கியம், ஸ்திரமான மனநிலை, பயம் அறியா குணம், வீரியமிக்க செயல்திறம், அரசு துறையிலான ஆதரவு என்ற வகையில் ஜாதகருக்கு  சீரிய முன்னேற்றங்கள் வந்து சேரும், சனி திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற வீரிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு பல சிறப்பான யோகங்களை வாரி வழங்கும்.

சனி திசையில் தற்போழுது நடைபெறும் ராகு புத்தி தரும் பலன்கள் ( 11/01/2016 முதல்  17/11/2018 வரை )

ஜாதகருக்கு சனி திசையில் ராகு புத்தி 2ம் வீடு திடீர் அதிர்ஷ்டத்தை தரும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை தரும், ஜாதகருக்கு திடீர் அதிர்ஷ்டம் மூலம் நல்ல பொருளாதார முன்னேற்றம் உண்டாகும், நிறைவான வருமான வாய்ப்பு வரும்படியான நல்ல பணி அமையும், தெய்வீக சிந்தனை மேலோங்கும், எதையும் சாதிக்கும் துணிச்சல் உண்டாகும், தன்னம்பிக்கை  அதிகரிக்கும், திடீரென எதிர்பாராத சந்தோஷங்கள் மற்றும் மன நிறைவை தரும் காரியங்கள் நடைபெறும், குறிப்பாக திருமண வாய்ப்பு ஜாதகருக்கு திடீரென அமைய  வாய்ப்பு உண்டு என்பதால், விழிப்புணர்வுடன் இருந்து நன்மை பெறுவது  அவசியமாகிறது மேலும் ஜாதகரின் பணியில் நல்ல முன்னேற்றமும், எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெரும் யோகம் உண்டு என்பதால் ஜாதகருக்கு ராகு புத்தி மிகுந்த யோகத்தையே வாரி வழங்குகிறது.

மேற்கண்ட ஜாதகத்தில் 1,2,3,4,5,6,8,9,10,11,12 பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது கவனிக்கத்தக்க அம்சமாகும், மேலும் பாதிக்கப்பட்ட பாவகம் என்பது களத்திர  ஸ்தானம் எனும் 7ம் பாவகம் ஒன்று மட்டுமே மேலும் களத்திர ஸ்தான பாதிப்பு என்பது மிகவும் கடுமையானதாக இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், ஜாதகர் திருமணம் செய்துகொள்ளும் பொழுது வலிமை பெற்ற ஜாதகத்தை  வாழ்க்கை துணையாக தேர்வு செய்யவில்லை எனில், ஜாதகரின் வாழ்க்கை முற்றிலும்  கடுமையான பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலையை தரும் என்பதில் கவனம் கொள்ளக.

திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் :

கேது : 

2ம் வீடு வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை கேது திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

சுக்கிரன் : 

4,6,9,10,12ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுக்கிரன் திசை மற்றும் புத்திகளில் யோக பலன்களை தருகின்றது.

சூரியன் : 

1ம் வீடு வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை சூரியன் திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

சந்திரன் : 

5,8,11ம் வீடுகள்  வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை சந்திரன் திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

செவ்வாய் : 

1,3ம் வீடுகள்  வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை செவ்வாய் திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

ராகு : 

2ம் வீடு வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை கேது திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

குரு : 

3ம் வீடு வலிமை பெற்ற 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனையும், 11ம் வீடு வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனையும் குரு திசை மற்றும் புத்திகளில் தருகின்றது. 

சனி : 

1,3ம் வீடுகள்  வலிமை பெற்ற  3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை சனி திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

புதன் : 

7ம் வீடு பாதகஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஜாதகருக்கு  7ம் பாவக வழியில் இருந்து 200 % விகித கடுமையான இன்னல்களையும் , மிகுந்த பாதிப்பையும் தருகின்றது.

மேற்கண்ட ஜாதகருக்கு  நவகிரகங்களின் திசா புத்திகளில் புதன் திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் மட்டுமே கடுமையான தவிர்க்க இயலாத இன்னல்களை வாரி வழங்கும், மேலும் இதன் பாதிப்பு என்பது எதிர்பால் இனம் அல்லது மற்றவர்களால் நடைபெறும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், எனவே ஜாதகர் புதன் திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் மட்டும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும், மற்ற திசா புத்திகள் யாவும் ஜாதகருக்கு பரிபூர்ண யோக பலன்களையே வாரி வழங்குகிறது.

வலிமை பெற்ற ஜாதகத்திற்க்கு மேற்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம். வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696