புதன், 30 மார்ச், 2022

கடகம் 2022-2023 ராகுகேது பெயர்ச்சி பலன்கள் !

 


மேஷ ராசியில் ராகுபகவான் சஞ்சாரம் : 

 கடக லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான ராகு பகவான், தான் சஞ்சாரம் செய்யும் 10ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்க்கும் அமைப்பில் தனது இயக்க நிலையை செயல்படுத்தும் காரணத்தால், கடகலக்கின அன்பர்களுக்கு தொழில் மேன்மை என்பது அபரிவிதமான தன்மையில் பிரகாசிக்கும், இதுவரை ஜீவன ரீதியாக போராடிக்கொண்டு இருந்த கடகலக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை பெறுவதற்கான சந்தர்ப்பம் தேடி வரும், அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த அன்பர்களுக்கு எதிர்பாராமல் அரசு பணியை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், தனியார் துறையில் தனது தகுதிக்கான சரியான வேலைவாய்ப்பும், திறமைக்கான பதவி உயர்வும் உறுதியாக கிடைக்க பெறுவார்கள், குறிப்பாக தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், மக்கள் சேவை, வண்டி வாகனம், வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, பயண சேவை, உணவு தானியம், கனிம பொருட்கள், சுரங்க தொழில்கள், எரிபொருள் போன்ற துறைகளில் உள்ள கடகலக்கின அன்பர்களுக்கு காய் நிறைவான வருமான வாய்ப்பும், பதவி உயர்வும், பொருளாதர முன்னேற்றமும் உண்டாகும், பாதுகாப்பு துறை, ராணுவம், காவல்துறை, தீயணைப்பு துறை, உயிர்காக்கும் மருத்துவ துறையில் உள்ள அனைவருக்கும் எதிர்பாராத வகையிலான பதவி உயர்வும், ஊதிய உயர்வும் நிச்சயம் உண்டு, தான் பணிபுரியும் இடத்தில் நல்ல கவுரவமும் அந்தஸ்தும் தேடிவரும், இதுவரை இல்லாத மதிப்பும் மரியாதையும் தங்களுக்கான இடத்தை உறுதி செய்வதுடன் மேலிடத்தில் நம்பிக்கைக்கு உரிய அன்பராக திகழ்வதற்க்கான சந்தர்ப்பங்கள் உண்டு, அரசு கவுரவமும், அரசு மரியாதையுடன் கூடிய அங்கீகாரமும் தங்களுக்கு தேடிவரும் என்றால் அது மிகையில்லை.

 ராகுவின் ஜீவன ஸ்தான சஞ்சாரம் முழு அளவில் நன்மைகளை வாரி வழங்குவது மேஷ லக்கின அன்பர்களுக்கு முன் எப்பொழுதும் இல்லாத சுறுசுறுப்பையும், உடல் ஆரோக்கியத்தையும் வாரி வழங்கும், தனக்கு வழங்கப்பட்ட கடமையை வெகு சிறப்பாக கையாளும் சந்தர்ப்பம் உண்டாகும், தொழில் ரீதியாக இதுவரை இருந்த தடைகள் நீங்கி வெற்றிகள் கைகூடும், தங்களின் மனதில் உள்ள திட்டமிடுதல்கள் அனைத்தும் இந்த நேரத்தில் செயல்பாட்டுக்கு வருவதற்கான சந்தர்ப்பங்களை அதிக அளவில் வழங்கும், இயற்கையாகவே அதீத கருணை உள்ளம் கொண்ட கடகலக்கினத்தை சார்ந்த அன்பர்களின் மனம் வெகுவாக பரோஉபகரமான செயல்களில் தீவிரம் காட்டும் நல்ல வாய்ப்பை தரும், உறவுகள், நண்பர்கள், தன்னை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான சேவையை வெகு சிறப்பாக செய்வதற்கான சந்தர்ப்பங்கள் கைகூடும், தங்களால் பலரது குடும்பம் தழைத்து ஓங்கும் வாய்ப்பை பெறுவார்கள், இது தங்களுக்கான புண்ணிய பதிவை அதிகரிக்கும், தொழில் முறையில் உள்ள கூட்டாளிகள் தங்களால் லாபம் பெறுவதுடன் தங்களுக்கான அங்கீகாரத்தை உறுதி செய்வார்கள், தங்களை அதிகார பதவியில் அமரவைத்து அழகு பார்க்கும் யோகம் உண்டாகும், தன்னை சார்ந்தவர்கள் தரும் உற்சாகமும், உத்வேகமும் தங்களின் செயல்திறனை தொழில் வழியில் இருந்து வெகு சிறப்பான வெற்றிகளை பெற்றுத்தரும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை என்பதை கருத்தில் கொள்க. 

 கடக லக்கினத்தை சார்ந்த ஆண் அன்பர்களுக்கு தனது தகப்பனார் வழியில் இருந்தும், பெண் அன்பர்களுக்கு தனது தாயார் வழியில் இருந்தும், சுபயோகங்கள் கைகூடிவரும் தனது பரம்பரை தொழிலை தான் முன் நின்று நிர்வகிக்கும் யோகம் அமைவதுடன், அதில் தனது தனித்திறனை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமும் உண்டாகும், தொழில் முறை பணியாளர்களுடன் ஒரு இணக்கமான சூழ்நிலையில் வெகு அற்புதமான முன்னேற்றங்களை சுவீகரிப்பதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பாக அது அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, ராகு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த 18 மாதமும் கடகலக்கின அன்பர்கள் அனைவரும் ஏதாவது ஒருவகையில் பதவி உயர்வு அல்லது முன்னேற்றம் போன்ற சுபயோக பலன்களை சிறப்பாக பெறுவதற்கான சந்தர்ப்பத்தை தருவதுடன், அதிகாரமிக்க பதவிகளை மிக எளிதாக பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்குவார், மிகவும் விழிப்புணர்வுடன் இருந்து சாயா கிரகம் தரும் இந்த சுபயோக பலனை சிறப்பாக சுவீகரித்து நலம் பெறுக, தனது துறை சார்ந்த கவுரவம் அந்தஸ்து சிறப்பு அங்கீகாரம் போன்றவற்றை வெகு எளிதாக பெற்றுத்தருவார் இந்த ராகு பகவான், எங்கும்  வெற்றி எதிலும் வெற்றி என்ற அமைப்பில் எண்ணத்தின் வலிமையின் தன்மை கடகலக்கின அன்பர்களுக்கு விண்ணளவு உயர்வை பெறுவதற்கான அற்புதமான சந்தர்ப்பங்களை வாரி வழங்கும் நேரமிது, எதிர்பாராத சுபயோகங்கள் தங்களுக்கு அதிகார பதவியை பெறுவதற்கு உறுதுணையாக அமைவதுடன், புதிய தொழில், புதிய வேலைவாய்ப்பு, கூட்டு தொழில் யோகம், அரசு பதவி, வெளிநாடுகளில் இருந்துவரும் தொழில் வாய்ப்புகள் என்ற அமைப்பில் சிறப்புகளை கடக லக்கினத்தை பெற்ற தங்களுக்கு 100%விகிதம் வாரி வழங்கும்.

துலாம் ராசியில் கேது பகவான் சஞ்சாரம் :

கடக லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான கேது பகவான், தான் சஞ்சாரம் செய்யும் பாவகத்தை 100% விகிதம் பாதிப்பிற்க்கு ஆளாக்கும் காரணத்தால், ஆண்கள் என்றால் தனது தாயார் வழியில் இருந்து வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் குறிப்பாக தாயராது உடல் ஆரோக்கியத்தில் அதீத அக்கறை எடுத்துக்கொள்ளும் சூழ்நிலை தரும், அவர்களது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் கடமை தங்களுக்கு உண்டு என்பதை கவனத்தில் நிலை நிறுத்துவது அவசியமானது, ஏனெனில் தாயாரின் வாழ்த்துக்கள் தங்களுக்கான சுகபோகங்களை அதிகரிப்பதுடன், தற்போழுது கேதுபகவானின் சஞ்சார நிலையில் இருந்துவரும் இன்னல்களுக்கு சரியான தீர்வாகவும் அமையும், தாயாரை பேணிப்பாதுகாப்பது கேது தரும் இன்னல்களுக்கு பரிகாரமாக அமையும், தங்களது பெயரில் உள்ள சொத்துக்கள் வண்டி வாகனங்கள் இடம் பொருள்கள் ஏதாவது விரைய செலவுகளை தரக்கூடும், குறிப்பாக தனது பெயரில் உள்ள சொத்துக்களை பாதுகாப்பதில் அதிக அக்கறை கொள்வது நல்லது ஏதாவது வில்லங்கம் பிரச்சனைகள் இருப்பின் மிக நேர்த்தியாக கையாண்டு அந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது நல்லது இல்லை எனில் சொத்துக்களை இழந்து நிற்கும் சூழ்நிலையை தரும், புதிய சொத்துக்களை வாங்கும் பொழுது அதிக விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது, தேவையற்ற வீண் செலவுகளை அது தவிர்க்க உதவும், மேலும் தனது குணநலன் சார்ந்த விஷயங்களில் ஒரு சுய மதிப்பீடு செய்து கொள்வது நல்லது இல்லை எனில் தன்னை சார்ந்தவர்கள் வழியில் இருந்து வெறுப்புக்கும் ஏளனத்துக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரக்கூடும், குறிப்பாக அனைவரிடமும் அன்பு பாராட்டுவது அவசியமானது, தங்களின் கருத்தை திணிப்பதற்கு பதிலாக தங்களை சார்ந்தவர்களுடன் கருத்து ஆலோசனையில் ஈடுபடுவது தங்களின் தனி திறமையை வெகு அற்புதமாக வெளிப்படுத்தும், அனைவரின் கருத்துக்கும் மதிப்பளித்து அரவணைத்து செல்லுங்கள். 

 கேதுவின் 4ம் பாவக சஞ்சாரம் பெண்களுக்கு தனது தகப்பனார் வழியில் இருந்து கிடைக்க வேண்டிய நன்மைகளை தாமதப்படுத்தும், தனது தந்தைக்கும் தனக்கும் கவுரவ குறைவான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது அவசியமானது, கேதுவின் சஞ்சாரம் தங்களை வெகு விரைவில் பிரச்சனைகளை தந்து வீண் அவப்பெயரை தந்துவிடும் என்பதால் சற்று விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமானது, அந்நியர்களிடம் எச்சரிக்கை உணர்வுடன் பழகுவது நல்லது, இல்லை எனில் உடலுக்கும் மனதுக்கும் துன்பம் இழைப்பதுடன் தங்களின் எதிர்கால வாழ்க்கையை பாழாக்கிவிடுவார், இதில் ஆண் பெண் பாகுபாடு இல்லை என்பதை கவனத்தில் கொள்க, தகப்பனாரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்க, பெற்றோர்கள் தங்களுக்கு வழங்கிய அன்பையும் பாசத்தையும் பன்மடங்கு திருப்பி தரவேண்டிய அருமையான சந்தர்ப்பம் இது என்பதை கவனத்தில்  கொள்ளுங்கள், இது தங்களுக்கான கவுரவம் மற்றும் தொழில் மேன்மையை  வாரி வழங்கும்.

கடக லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதமும் வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ளும் தன்மையை உறுதி செய்ய வேண்டி வரும், எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் கையாள்வதற்கான ஆயத்த நிலையில் தாங்கள் இருப்பது அவசியமானது, துணிவும், தெளிவான மனநிலையும் தங்களுக்கு அதிக அளவில் தேவைப்படும், கேது தரும் சோதனை சுகஸ்தான நிலையில் இருந்து வருகின்றது என்பதால் தங்கள் அதிக அளவிலான சுகபோகங்களில் ஈடுபாடு பாடு  காட்டுவதை விடுத்து, உணவு கட்டுப்பாடு, உடல் ஆரோக்கியத்தில் கவனம், புலன் இன்பங்களில் அதீத கட்டுப்பாடு, ஒழுக்கம், கடமை உணர்வு, சரியான புரிதல், வீண் வாக்குவாதத்தில் ஈடுபடாமை, தன்னை பற்றிய சுய மதிப்பீடு ஆகியவை தங்களின் வாழ்க்கையில் கேது பகவான் தரும் இன்னல்களில் இருந்து மீட்டு எடுக்கும், கடகலக்கின அன்பர்களே இனிவரும் 18 மாதம் தாங்கள் அனைவரும் ஆன்மீக (MODE) "மோடுக்கு" சென்றுவிடுவது நல்லது, இது தங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.

குறிப்பு :

மேற்சொன்ன ராகுகேது பெயர்ச்சி பலன்கள் என்பது தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா புத்தி ஜீவன ஸ்தானம் மற்றும் சுக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசா புத்தி ஜீவன ஸ்தானம் மற்றும் சுக ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கோட்சார ரீதியாக யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில்கொள்க 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696

திங்கள், 28 மார்ச், 2022

மிதுனம் 2022-2023 ராகுகேது பெயர்ச்சி பலன்கள் !

 


மேஷ ராசியில் ராகுபகவான் சஞ்சாரம் :

"திர்ஷ்டம்" என்பது கண்ணுக்கு தெரிந்து வரும் சுபயோகம்,

"அதிர்ஷ்டம்" என்பது கண்ணுக்கு தெரியாமல் வரும் ராஜயோகம்,

ராகுகேது பெயர்ச்சியினால் முழு அளவில் சுபயோகங்களை சுவவீகரிக்கும் ராசிகளில் முதன்மை பெறுவது மிதுனமே என்றால் அது மிகையில்லை, மிதுன லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு லாப ஸ்தானமான 11ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான ராகு பகவான், தான் சஞ்சாரம் செய்யும் 11ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்க்கும் அமைப்பில் தனது இயக்க நிலையை செயல்படுத்தும் காரணத்தால், அதிர்ஷ்டம் என்பது இவர்களுக்கு அளவில்லாதன்மையில் சுபயோகங்களை வாரி வழங்கும், இதுவரை சந்தித்துவந்த விரயங்களும் கவலைகளும் நீங்கி, லாபமும் மனமகிழ்ச்சியும் உண்டாகும், தெய்வீக சக்திகள் தங்களுக்கான வாழ்க்கை வழிகாட்டுதல்களை பரிபூர்ணமாக வாரி வழங்க ஆரம்பிக்கும், மனதில் உள்ள பிற்போக்கு தனமான எண்ணங்கள் நீங்கி முற்போக்கு சிந்தனையுடன் வாழ்க்கையில் வெற்றிநடை போடும் நேரமிது, தங்களின் சிந்தனைத்திறன் ஏதாவது ஒருவகையில் தங்களுக்கான நலவாழ்வினை சீர்படுத்தும், புதிய நபர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கு வெகுவாக உதவி செய்வார்கள், எல்லா நேரமும் நல்ல நேரமாக தங்களுக்கு சுபயோகங்களை வாரி வழங்க ஆரம்பிக்கும், நீங்கள் நினைக்கும் காரியங்கள் தங்களுக்கு நடைமுறைக்கு வரும்.

 இதுவரை தங்களின் கற்பனையில் இருந்த திட்டமிடல்கள் யாவும் சரியாக நடைமுறைக்கு வர ஆரம்பிக்கும், தங்களின் அண்ணன் அக்காள் இருவர் வழியில் இருந்து வரும்  அதிர்ஷ்டவாய்ப்புகள் தங்களது தங்களது வாழ்க்கையில் வியக்கத்தக்க முன்னேற்றங்களை வாரி வழங்கும் என்பதால் அவர்களுடன் அதீத இணக்கத்தையும் அன்பையும் பகிர்ந்துகொள்வது நல்லது அவர்கள் வழங்கும் அறிவுரைகளை முழுமையாக ஏற்றுக்கொள்வது சிறப்பை தரும், கணினி மென்பொருள் கட்டுமான தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு அதிர்ஷ்டம் அதிக அளவில் கைகொடுக்கும், பதவி உயர்வு வெகு சிறப்பாக வந்து சேரும், மருத்துவ துறை வல்லுநர்கள், பொறியியல் துறை வல்லுநர்கள், அரசுத்துறையை சார்ந்த அன்பர்கள் அனைவருக்கும் பதவி உயர்வுடன் கூடிய பாராட்டுதல்கள் முழுமையாக வந்து சேரும், அறிவு சார்ந்த உழைப்பாளர்கள் தங்களின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கும் சுபயோகமான நன்நேரமிது, எதிர்ப்புகள் வெகுவாக குறைந்து ஆதரவுகள் பெருகும், உலகில் தனித்துவம் வாய்ந்த தனக்கான இடத்தை உறுதி செய்துகொள்ளும் அற்புதமான நேரமிது, அதிர்ஷ்டங்களை முழுவீச்சில் வழங்கும் ராகு பகவான் தங்களுக்கு, தேவையற்ற விஷயங்களையும், முறையற்ற உறவுகளையும் தங்களுக்கு வழங்குவதில் பாரபட்சம் காட்டமாட்டார், இருப்பினும் தங்கள் விழிப்புணர்வுடன் செயல்படவில்லை எனில் அடுத்த சாயா கிரகங்களின் பெயர்ச்சியில் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்.

வருமானம் என்பது திருப்திகரமானதா அமைந்த போதிலும், முறையற்று வரும் செல்வம் தங்களின் உடல்நலனை வெகுவாக பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்க எதிர்பாராத விபத்துகளை தந்து அதீத செலவினங்களை ஏற்படுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்க, புது வாழ்க்கை தங்களின் மனதில் அதீத புத்துணர்ச்சியை நல்கும், வரும் செல்வம் அனைத்தையும் சேமித்து வைப்பது எதிர்காலத்தில் தங்களுக்கான ஒரு சொகுசு வாழ்க்கையை நல்கும், வீண் விரையம் செய்வது அடுத்த சாயாகிரகங்களின் பெயர்ச்சியின் பொழுது தங்களுக்கு தாங்கஇயலாத தன்மையிலான துன்பங்களை தரும் என்பதால் சற்று விழிப்புணர்வுடன் நிதி திட்டமிடுதல்களை செயல்படுத்துவது நன்மைகளுடன் கூடிய சுபயோகங்களை வாரி வழங்கும், எதிர்பாராத அதிர்ஷ்டம் தங்களுக்கான பொருளாதார தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதுடன், பொருளாதார தன்னிறைவையும் வாரி வழங்கும், "பலகோடிகள் செலவு செய்தாலும் 1ரூபாய் கூட விரையம் செய்யாதே" என்ற முன்னோர்களின் செலவேந்திரத்தை சிந்தனையில் நிறுத்துவது, மிதுன லக்கின அன்பர்களுக்கு மிக மிக நல்லது என்பதுடன் எதிர்கால வாழ்க்கையை வெகு சிறப்பாக அமைத்துத்தரும் வல்லமை பெற்றது என்பதை கருத்தில் கொள்க, தங்களைவிட வயதில் அதிகம் உள்ள உறவுகள் அல்லது பெரிய மனிதர்கள் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வது நல்லது, இனிவரும் 18மாதமும் ராகுவின் சஞ்சாரம் தங்களுக்கு தொடர்ந்து நன்மைகளையும் சிறப்பான வாய்ப்புகளையும் வாரி வழங்கிக்கொண்டே இருக்கும் என்பதை கருத்தில்  கொள்க இவற்றை விழிப்புணர்வுடன் இருந்து முழுமையாக சுவீகரிப்பது தங்களது கடமை என்பதை கருத்தில் கொள்க.

துலாம் ராசியில் கேது பகவான் சஞ்சாரம் : 

மிதுன லக்கினத்தை சாந்த அன்பர்களுக்கு "பூர்வ புண்ணிய" ஸ்தானமான 5ம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் மேற்கண்ட பாவகத்தை முழு அளவில் வலிமை சேர்க்கும் தன்மையில் இயங்குவதால், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைமுறைக்கு வரும் திருமணம், புத்திர பாக்கியம், புதுவீடு புகுவிழா, புதிய வண்டி வாகனம், தொழில் மற்றும் வியாபாரத்தில் அதீத லாபங்களை சமயோசித புத்திசாலித்தனம் கொண்டு சுவீகரிக்கும் தன்மை என மிகுந்த நன்மைகள் நடைமுறைக்கு வரும், பொதுவாக "பூர்வபுண்ணிய" ஸ்தானமான 5ம் இடத்தில் சாயா கிரகமான "ராகு கேது" அமர்ந்து இருப்பது சஞ்சாரம் செய்வது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு புத்திர பாக்கியத்தை நல்காது என்பது ஒரு சாராரின் கருத்து இது முற்றிலும் சுய ஜாதக வலிமைக்கு புறம்பானது, ஏனெனில் ஒருவரது சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாக ரிஷபம், மிதுனம் (சூரியனுடன் சேராத புதன்), கடகம் (வளர்பிறை சந்திரன்), கன்னி (சூரியனுடன் சேராத புதன்), துலாம், தனுசு மற்றும் மீன ராசிகள் அமைந்து அந்த பாவகத்தில் அமரும் சாயா கிரகமான ராகு கேது சம்பந்தப்பட்ட பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்த்து நல்ல யோகம் மிக்க ஆண் வாரிசை வழங்குவார்கள் என்பதை கருத்தில் கொள்வது அவசியமானது, எனவே 5ல் ராகுகேது அமர்ந்தாலே புத்திர பாக்கியத்தை தடை செய்யும் என்ற தவறான கருத்தை புறம்தள்ளுவது நல்லது, அந்த வகையில் மிதுன லக்கினத்திற்கு 5ம் பாவகமான துலாம் ராசியில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் திருமணம் ஆன இளம் தம்பதிகள், வெகு காலமாக புத்திர பாக்கியம் அமையாத தம்பதிகளுக்கு நல்ல யோகம் மிக்க சிறப்பான ஆண் வாரிசை திடீரென நல்குவார், பிறக்கும் யோகம் மிக்க அந்த குழந்தை வழியில் இருந்து மிதுன லக்கினத்தை சார்ந்த அன்பர்கள் அனைவரும் சுபயோகங்களை முழுமையாக பெற்று மகிழ்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

கேது பகவானின் 5ம் பாவக சஞ்சாரம் மிதுன லக்கின அன்பர்களுக்கு காதல் வாழ்க்கையை சுவீகரிக்கும் யோகத்தை நல்குவார், இந்த சூழ்நிலையில் இவர்களுக்கு வரும் காதல் என்பது ஒரு புரிதல்களுடன் கூடிய வலிமை மிக்க காதலாக அமையும், இந்த  காதல் என்பது மிதுன லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 

“யாயும் ஞாயும் யாராகியரோ 

எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் 

யானும் நீயும் எவ்வழி அறிதும் 

செம்புலப் பெயல்நீர் போல 

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’’

என்ற "குறுந்தொகை" பாடலுக்கு நிகரான ஒரு வலிமை மிக்க புரிதலுடன் கூடிய காதலாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை பார்த்த அடுத்த வினாடியே காதலில் விழுந்தேன் என்ற பினாத்தலுடன் சுற்றிவரும் அருமையான நேரமிது, எனவே மிதுன லக்கின யுவதிகளும் யுவன்களும் தங்களுக்கான வாழ்க்கை துணையை இந்த கேதுவின் துலாம் ராசி (5ம் பாவக)சஞ்சாரத்தில் பெற்று 100%விகித யோக வாழ்க்கையை சுவீகரித்து நலம் பெறுக, என்ன ஒரு சிக்கல் எனில் தங்களின் காதலி அல்லது காதலன் வேற்று மாதத்திலோ, இனத்திலோ அல்லது வேறு சமூகத்திலோ இருப்பார்கள் என்பது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாகும். 

கல்வி கேள்விகளில் சிறப்பான தேர்ச்சியை தரும் கலைத்துறையில் உள்ள நபர்களுக்கு எதிர்பாராத சுபயோகங்களை பரிபூர்ணமாக வாரி வழங்கும், உலக பிரபல்யம் அடையும் யோகம் உண்டாகும், கற்ற கல்விக்கான முழு அங்கீகாரம் கிடைக்கும், கல்வியில் நல்ல தேர்ச்சியையும், கலைகளில் நல்ல ஞானத்தையும் வாரி வழங்கும், தங்களது திறமைக்கான அங்கீகாரம் சிறப்பாக கிடைப்பதுடன், முழு திறமையும் பயன்படுத்தி தங்களது வாழ்க்கையை வெகு சிறப்பாக நிலைநிறுத்திக்கொள்ள நல்ல சந்தர்ப்பங்கள் கிட்டும், அந்நிய தேசங்களில் இருந்து வரும் ஆதரவு தங்களது வாழ்க்கையில் பொருளாதார சுபயோகங்களை முழுமையாக சுவீகரிக்க உதவும், அறிவு வெகு சிறப்பாக செயல்படும் என்பதால் பல புதுமைகளை தங்களது துறையில் பரீக்ஷித்து பார்க்கும் யோகம் உண்டாகும், எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு அங்கீகாரம் தங்களுக்கு தேடிவரும், "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு " என்ற வார்த்தைகள் தங்களது வாழ்க்கையில் பல மாற்றங்களை நிகழ்த்தும், கலைத்துறையில் அபரிவிதமான முன்னேற்றமும் மக்கள் ஆதரவும் வெகு சிறப்பாக அமையும், குறிப்பாக வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து வரும்  சுபயோகங்களை முழுமையாக சுவீகரிக்க தயாராகுங்கள்.  

ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்களுக்கு இனிவரும் 18மாதமும் தன்னிறைவான வருமான வாய்ப்பை தனது சமயோசித புத்திசாலித்தனம் கொண்டு சுவீகரிக்கும் யோகத்தை நல்கும், துணிந்து செய்யும் எந்த காரியமும் தங்களுக்கு முழு அளவிலான நன்மைகளை பரிபூரணமாக வாரி வழங்கும், தங்களின் தனித்திறமை அபரிவிதாமாக வெளிப்படும், வெளிநாடு பயணம் மற்றும் வெளிநாடுகளில் குடி உரிமை பெரும் யோகம் இந்த கேதுவின் சஞ்சாரம் தங்களுக்கு வெகு சிறப்பாக பெற்றுத்தரும், வாழ்க்கை துணை மற்றும் தங்களின் வாரிசு வழியில் இருந்து வரும் சுபயோகங்கள் தங்களுக்கு எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்கும் உறவுகள் ஆதரவும் வாழ்க்கை துணையின் ஆதரவும் தங்களை ஊர் சாதனையாளராக மற்றும் என்பதில் மாற்று கருத்து என்பதே இல்லை, குல தேவதையின் முழு ஆசிர்வாதமும் தங்களுக்கு இந்த காலத்தில் முழுமையாக கிடைக்கும் என்பதால் குலதெய்வ வழிபாட்டில் அதிக அக்கறை செலுத்துங்கள், குறிப்பாக அமாவாசை  தினத்தில் அன்னதானம் வஸ்த்திரதானம் செய்து வழிபடுவது சிறப்பான சுபயோகங்களை வாரி வழங்கும்.

குறிப்பு :

மேற்சொன்ன ராகுகேது பெயர்ச்சி பலன்கள் என்பது தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா புத்தி லாப ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணியஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசா புத்தி லாப ஸ்தான மற்றும் பூர்வபுண்ணிய  ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கோட்சார ரீதியாக யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில்கொள்க 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696




வெள்ளி, 25 மார்ச், 2022

ரிஷபம் 2022-2023 ராகுகேது பெயர்ச்சி பலன்கள் !




மேஷ ராசியில் ராகுபகவான் சஞ்சாரம் :

ரிஷப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு அயன சயன ஸ்தானமான 12ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான ராகு பகவான், தான் சஞ்சாரம் செய்யும் 12ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்க்கும் அமைப்பில் தனது இயக்க நிலையை செயல்படுத்தும் காரணத்தால், ரிஷப லக்கினத்தை சாந்த அன்பர்களுக்கு மனநிறைவு என்பது வெகு சிறப்பாக அமையும், பொதுவாகவே ரிஷப லக்கின அன்பர்கள் தன்னை சார்ந்தவர்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டவர்கள், மற்றவர்களை பராமரித்து காப்பதில் வல்லவர்கள் இவர்களின் கண்காணிப்பில் பாதுகாப்பில் இருக்கும் அன்பர்களின் வாழ்க்கை 100%விகிதம் பாதுகாப்பானது என்பதில் சந்தேகம் இல்லை, ராகுவின் சஞ்சாரம் ரிஷப லக்கின முதலீட்டாளர்களுக்கு செய்த முதலீடுகள் வழியில் இருந்து வரும் லாபம் என்பது மிக பெரிய அளவில் மகிழ்சியை தரும், திருப்திகரமான மனநிலையுடன் செய்யும் காரியங்கள் யாவிலும் வெற்றிமேல் வெற்றி உண்டாகும், தாம்பத்தியம் மகிழ்ச்சிகரமானதாக அமையும், இல்லற வாழ்க்கையில் தனது வாழ்க்கை துணை உடனான அன்னியோன்னியம் அதிகரிக்கும், புதிய தொழில்களிலும், புதிய சொத்துக்கள் மேலேயும் முதலீடு செய்யும் யோகம் உண்டாகும், புதிய இயந்திரங்கள் தொழில் சார்ந்த அமைப்புகளில் வாங்கும் யோகம் உண்டாகும், புதிய தங்க ஆபரங்கள் சேர்க்கை உண்டாகும், ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ளும் சந்தர்ப்பமும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதமும் முழுமையாக கிடைக்கப்பெறுவீர்கள், ராகு பகவான் தங்களுக்கு புதிய முதலீடுகள் சார்ந்த அறிவையும் அந்த முதலீடுகள் வழியிலான மிக பெரிய லாபங்களை தன்னிறைவாக வாரி வழங்குவர் என்பதில் சந்தேகம் இல்லை. 

சில ரிஷப லக்கின அன்பரக்ளுக்கு போக வாழ்க்கையில் அதீத நாட்டத்தை  தரும் ராகுவின் சஞ்சாரம் மனமகிழ்ச்சிக்கு குறைவே வைக்கவாய்ப்பில்லை என்பது கவனிக்கத்தக்கது, தன்னுடைய பிதுரதிபதிகளின்  சொத்துக்களை ஏக காலத்தில் சுவீகரிக்கவும் ஆளுமை செய்யவும் தற்போழுது வாய்ப்புகளை வாரி வழங்குவர், கனவுகள் கற்பனைகள் ஆசைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேறும் யோகத்தை தரும், புதையல் யோகமும் கிடைக்க வாய்ப்பு உண்டு, தொழில் நுட்பம் சார்ந்த அமைப்புகளில் முதலீடு செய்யும் ரிஷப லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலம் அதி அற்புதமான  சுபயோகங்களை வாரி வழங்க தயார் நிலையில் உள்ளார் என்பது  கவனிக்க தக்கது, கலைத்துறையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு இது ஓர் அற்புதமான  நேரமாக கருதலாம், தனது மனதின் லட்சியங்களை நடைமுறைப்படுத்தும் அற்புதமான நேரமாக இது அமையும், இயக்குனர்கள் இணை இயக்குனர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய வாய்ப்புகளை ராகுபகவான் வாரி வழங்குவர், தொழில் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவார், அதிகாரம் செய்யும் யோகமும் தான் பணியாற்றும் துறையில் சிறந்த நிர்வாக திறனை  வெளிப்படுத்தும் யோகத்தையும் தன்னிறைவாக வாரி வழங்குவார். 

 வெளிநாடு யோகம் ரிஷப லக்கின அன்பர்களுக்கு தற்ப்பொழு வெகு சிறப்பாக அமையும், வெளிநாடுகளில் இருந்து வரும் தொழில் வாய்ப்பு என்பது அபரிவிதமான தன்மையில் பொருளாதார சேர்க்கையை நல்கும், எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும் நேரமிது, குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறையில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் நீடித்த நன்மைகளை பெறுவதற்கான நல்ல அடித்தளத்தை அமைத்து தரும், எந்த ஒரு செயலையும் முழு மனதோடு செய்து வெற்றி பெறுவார்கள், தனது மேலதிகாரிகளின் முழு ஆதரவையும் அவர்களின் பரிபூரண ஒத்துழைப்பையும் பெற்று தனது வாழ்க்கையில் பல அற்புதமான முன்னேற்றங்களை சந்திக்க இருக்கின்றார், இளம்வயதினர் இனிவரும் காலங்களில் ராகு பகவான் தரும் இமாலய வெற்றிகளை சுவீகரிக்க இருக்கின்றனர் கல்வி உடல்நலம் விளையாட்டு தனித்திறன் முற்போக்கு சிந்தனை விழிப்புணர்வு தெளிந்த நல்லறிவு சிறந்த ஒழுக்கம் என  வாழ்க்கையில் இவர்களுக்கு வரும் சிறப்புகள் என்பது மிக அதிக அளவில் உண்டு, மனம் ஒருநிலையில் இயங்க ஆரம்பிக்கும், தன்னை சார்ந்தவர்களுடன் உறவுகளுடன் கருத்து ஒற்றுமையுடன் எதிர்பாராத சுபயோகங்களை சுவீகரிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை, எதிர்பாராத தன்மையில் இவர்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகள் என்பது சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தை நல்குவதுடன் அரசு கவுரவத்தையும் பெற்றுத்தரும்.

ராகுவின் அயன சயன சஞ்சாரம் திருமண தடைகளை தகர்த்து எரிவதுடன், மனதிற்கு இசைந்த நல்ல இல்லறவாழ்க்கையை திடீரென அமைத்துத்தருவார், ரிஷப லக்கின அன்பர்களுக்கு முன் பின் அறிமுகம் இல்லாத நபர்கள் வழியில் இருந்து வாழ்க்கை துணை அமையலாம் அல்லது தனது தந்தை வழியில் இருந்து வரும் சொந்தங்கள் மூலம் அமையலாம், ராகு பகவானின் 12ம் இட சஞ்சாரம் ரிஷப லக்கின அன்பர்களுக்கு சிறந்த முதலீடுகளையும், எதிர்பாராத பொருளாதார முன்னேற்றத்தையும் இனிவரும் 18மாதமும் வழங்க இருக்கின்றார் என்பது கவனிக்கத்தக்கது.

துலாம் ராசியில் கேது பகவான் சஞ்சாரம் :

ரிஷப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான கேது பகவான், தான் சஞ்சாரம் செய்யும் பாவகத்தை 100% விகிதம் பாதிப்பிற்க்கு ஆளாக்கும் காரணத்தால் உடல்நலம் மற்றும் கடன் சார்ந்த பிரச்சனைகள் அதிக அளவில் நடைமுறைக்கு வரும், எதிர்ப்புகளும் எதிரிகளும் தங்களை அதிக அளவில் சோதனைகளை தருவார்கள், வீண் வம்பு வழக்குகள் தங்களின் உடல்நலம் மனநலம் இரண்டையும் வெகுவாக பாதிக்கும், புதிய எதிரிகள் தங்களின் பொருளாதார முன்னேற்றத்தை கேள்விக்குறி ஆக்குவதுடன், அதீத சிக்கல்களையும் தருவார்கள், அதிக அளவில் கடன் பெரும் சூழ்நிலைகளை கேதுபகவான் தருவார் என்பதால் கடன் பெற்று முதலீடு  செய்யும் விஷயத்தை மட்டும் செய்துவிடாதீர்கள் இது தங்களின் முதலீட்டை முழுவதுமாக கபளீகரம் செய்து கடனை மட்டும் பரிசாக தந்துவிடும், முடிந்த அளவு யாரிடமும் பகைமை பாராட்டாமல் இணக்கமாக இருப்பது நல்லது. 

ரிஷப லக்கின அன்பர்களுக்கு கேதுபகவானின் 6ம் இட சஞ்சாரம் தனது சுய முயற்சி மற்றும் கடுமையான உழைப்பு ஆகிய இரண்டையும் பாதிப்படைய செய்வார் என்பதுடன் அனைத்திலும் சலிப்பையும் சகிப்பு தன்மை அற்ற மனநிலையும் தருவார், திடீர்  செலவினங்களை கடன் பெற்று நடத்த வேண்டிய கட்டாயத்தை தருவார், பூர்வீகத்தில் இருந்து தங்களுக்கு வரவேண்டிய சில வருவாய் சார்ந்த விஷயங்களை முடக்குவதுடன் பூர்வீகம் சார்ந்த சொத்து பிரச்சனைகளை அதிக அளவில் தருவார், தங்களின் நுண்ணறிவு திறன் பாதிக்கும், குலதெய்வ வழிபாடு ஒன்றே தீர்வாக அமையும், தனது ரத்த சம்பந்தஉறவுகள் மற்றும் தாய் மாமன் ஆகியோரின் வழியில் இருந்து வீண் செலவினங்களும், தவிர்க்க இயலாத தொல்லைகளையும் தரக்கூடும். 

கடினஉழைப்பு வீணாகும் சுய முயற்சி தடைகளை சந்திக்கும், அறிவு சார்ந்த செயல்பாடுகள் தங்களுக்கு பலன்தராது, ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்வோர் ஏதாவது ஒரு வகையில் சிக்கல்களை சந்திக்கவேண்டி வரும் அல்லது முன்னேற்ற தடைகளை எதிர்கொள்ள வேண்டி வரும், ஊடக துறையில் உள்ளோர் சந்திக்கும் இன்னல்கள் என்பது மிகுந்த மனஅழுத்தத்தை தருவதுடன் எதிர்மறையான விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் சூழ்நிலையை தரும், இயர்கையாகவே பயந்த சுபாவம் கொண்ட ரிஷப லக்கின அன்பர்களுக்கு இந்த கேதுவின் சஞ்சாரம் மிகுந்த மனபயத்தையும், மனக்கிலேசத்தையும் தரும் என்பதால் தேவையற்ற விஷயங்களில் தர்க்கம் செய்வதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட்டு நலம் பெறுங்கள்.  

குறிப்பு :

மேற்சொன்ன ராகுகேது பெயர்ச்சி பலன்கள் என்பது தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா புத்தி அயன சயன ஸ்தானம் மற்றும் சத்ரு ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசா புத்தி அயன சயன மற்றும் சத்ரு  ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கோட்சார ரீதியாக யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில்கொள்க 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696

புதன், 23 மார்ச், 2022

மேஷம் 2022-2023 ராகுகேது பெயர்ச்சி பலன்கள் !



மேஷ ராசியில் ராகுபகவான் சஞ்சாரம் :

மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான ராகு பகவான், தான் சஞ்சாரம் செய்யும் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்க்கும் அமைப்பில் தனது இயக்க நிலையை செயல்படுத்தும் காரணத்தால், மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு உடல்நலம் சிறப்பாக அமையும், மனவலிமை அதிகரிக்கும், ஜீவிக்கும் சூழ்நிலையில் பல அற்புதமான வெற்றிகளை வாரி வழங்க ஆரம்பிப்பார், பொதுவாக சாயா கிரகங்களான ராகு கேது ஒரு ராசியில் அதவாது ஒரு பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது தனது முழு சக்தியையும் பிரயோகித்தது சம்பந்தப்பட்ட பாவகத்தை அல்லது ராசியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு நன்மையையே தீமையையே முழுமையாக வழங்குவார்கள், தன்னுடன் சேர்ந்த கிரகங்கள், தன்னுடன் சேர்ந்து சஞ்சரிக்கும் கிரகங்கள் மற்றும் பார்த்த கிரகங்களின் ஜீவகாந்த சக்தியையும் தனது பலனாக வழங்கும் சிறப்பு தகுதி பெற்றவர்கள் இந்த சாயா கிரகங்கள், அந்த வகையில் தற்போழுது மேஷ ராசியில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு முழு அளவில் நன்மைகளை மட்டுமே வழங்குவதால், இவர்கள் பெரும் சிறப்புகள் மற்றும் முன்னேற்றம் என்பது வியக்கத்தக்க வகையில் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை,

குறிப்பாக காவல்துறை, ராணுவம், தீயணைப்பு துறை, மருத்துவம், அரசியல் பொது வாழ்க்கையில் உள்ள மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு அபரிவிதமான நன்மைகளும் முன்னேற்றங்களும் வந்து சேரும் யோகமான நேரமிது, புதிய சிந்தனை, புதிய திட்டமிடுதல்கள், புதிய வாய்ப்புகள் அனைத்தும் இந்த நேரத்தில் வெகு சிறப்பாக அமையும், சொத்து சுக சேர்க்கை வண்டி வாகன யோகம், புதிய தொழில் வாய்ப்புகள், புதிய வீடு போன்றவற்றை வெகு சிறப்பாகவும் வெகு விரைவாகவும் சுவீகரிக்கும் வல்லமையை தரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், மனோதைரியம் செயல்பாடுகளில் வெற்றியை தரும், தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடும் அன்பர்களுக்கு வெற்றிவாய்ப்புகள் அதிக அளவில் வந்து குவிய ஆரம்பிக்கும், பொறியியல் துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு ஏற்றம் மிகுந்த நல்ல காலம் இதுவென்றே சொல்லலாம்.

தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர், சிறு தொழில் செய்யும் அன்பர்களின் வாழ்க்கையில் வெகு சிறப்பான பொருளாதார முன்னேற்றங்களை தன்னிறைவாக வாரி வழங்க ஆரம்பிப்பார், எதிர்பார்ப்புகள் மற்றும் லட்சியங்கள் நிறைவேற ஆரம்பிக்கும், மனதிலும் உடலிலும் அதீத புத்துணர்ச்சி உண்டாகும், தெளிவான சிந்தனையும் சமயோசித புத்திசாலித்தனமும் இவர்களது வாழ்க்கையில் தொடர் வெற்றிவாய்ப்புகளை வாரி வழங்க ஆரம்பிக்கும், இதுவரை முடங்கி இருந்த தொழில்கள் அனைத்தும் வீறுநடை போட ஆரம்பிக்கும், தொழில் முதலீடுகள் என்பது இவர்களுக்கு தேடி வரும், பலதொழில் செய்யும் யோகமும், செய்கின்ற தொழில் வழியில் அபரிவிதமான முன்னேற்றமும் தன்னிறைவாக வந்து சேரும், பொதுமக்கள் ஆதரவு தொழில் ரீதியான வெற்றிகளை பன்மடங்கு உயர்த்துகின்ற அற்புதமான வாய்ப்பை இந்த ராகு கேது பெயர்ச்சி மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு வெகு சிறப்பாக வழங்குவதுடன், வெற்றி புகழ் கீர்த்தி, அரசு வழி ஆதாயம், புதிய தொழில் யோகம், அந்நிய நபர்களின் உதவி என்ற வகையில்  மிகுந்த நன்மைகளை மட்டுமே வாரி வழங்குவது வரவேற்க்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேஷ லக்கினத்தை சார்ந்த பெண்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும், திருமணத்தடைகளை சந்தித்துக்கொண்டு இருந்த இளம்பெண்களுக்கு சரியான வாழ்க்கை துணை அமைவதுடன், நல்ல சந்தானபாக்கியமும் அமையும், புதிய சொத்துக்கள் ஆடை ஆபரண சேர்க்கை வெகு சிறப்பாக அமையும், சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிப்பதுடன், அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு நல்ல பதவி உயர்வும், ஊதிய உயர்வும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அமையும், சுய தொழில் செய்ய விருப்பம் உள்ள பெண்களுக்கு இதுவே சரியான நேரமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை, எனவே அதிக புத்துணர்ச்சியுடன் வாழ்க்கையில் வெற்றிகாணுங்கள்.

துலாம் ராசியில் கேது பகவான் சஞ்சாரம் :

மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான கேது பகவான், தான் சஞ்சாரம் செய்யும் பாவகத்தை 100% விகிதம் பாதிப்பிற்க்கு ஆளாக்கும் காரணத்தால் வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் துன்பங்கள் அதிகரிக்கும், தேவையற்ற வாக்குவாதம் இல்லற வாழ்க்கையில் பிரிவு வரை எடுத்து செல்லும் சந்தர்ப்பம் உள்ளதால், மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்கள் இனிவரும் 18மாதமும் வாழ்க்கை துணையுடனான இணக்கத்தை மிக கவனமாக கையாள வேண்டும் என்பது கட்டாயமாகிறது, குறிப்பாக தங்களின் அறிவு சார்ந்த முயற்சிகளை வெகுவாக தடை செய்யும், தனி திறமை சார்ந்த விஷயங்களில் ஒரு சுய விழிப்புணர்வுடன் நடந்துகொள்வது தங்களின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வழங்கும், தொழில் முறை கூட்டாளிகள் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரிடமும் மிக கவனமாக நட்புணர்வை பேணுவது அவசியமாகிறது, இது தங்களது வாழ்க்கையில் அதீத முன்னேற்றத்திற்க்கான வாய்ப்புகளை வாரி வழங்கும் என்பதை கவனத்தில் கொள்க.

வெளிநாடு வெளியூர் பயணங்களை சற்று கவனமாக பரிசீலனை செய்து மேற்கொள்வது நல்லது, பயணங்களின் பொது சற்று பாதுகாப்புடன் இருப்பது நல்லது, எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து அதீத துன்பம் வரும் என்பதால் சற்று கவனமாக செயல்படுவது நல்லது வீண் அவப்பெயரை தவிர்க்க அதுவே சரியான தீர்வாக அமையும், முன் பின் அறிமுகம் இல்லாத அன்பர்களிடம்  சற்று கவனமுடன் பழகுவது நல்லது, ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியில் இருக்கும் சிக்கல்களை மிக கவனமாக எதிர்கொண்டு தங்களின் தொழில் வெற்றியை உறுதி செய்துகொள்ளவும், ஏதாவது கவனக்குறைவாக செய்யக்கூடிய காரியங்கள் வழியில் இருந்து வரும் நஷ்டம் என்பது தங்களது தொழில் வாழ்க்கையையே கேள்விக்குறியானதாக மாற்றிவிடும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

மணவாழ்க்கையில் மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்கள் மிக கவனமுடனும், அதிக அக்கறையுடனும் செயல்படவேண்டிய நேரமிது, குடும்பத்திற்க்காக அதிக நேரம் செலவிடுவது மேற்சொன்ன கேது பகவான் தரும் பாதிப்புகளில் இருந்து தங்களை வெகு சிறப்பாக மீட்டு எடுக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள், ஆண் என்றால் தனது மனைவிமீது அதிக அக்கறையும், பெண் என்றால் தனது கணவன் மீது அதீத அன்பையும் செலுத்துவது மிக மிக நல்லது, இது தங்களது இல்லற வாழ்க்கையில் வரும் அனைத்து இன்னல்களையும் தீர்க்கும் அருமருந்து, கேதுபகவானின் துலாம் ராசி சஞ்சாரம் தங்களின் வாழ்க்கையில் களத்திர ஸ்தான வழியில் இருந்து சற்று நெருக்கடிகளை அதிக அளவில் தரும் என்பதை கவனத்தில் கொள்க.

குறிப்பு :

மேற்சொன்ன ராகுகேது பெயர்ச்சி பலன்கள் என்பது தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா புத்தி ஜென்ம லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசா புத்தி ஜென்ம லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கோட்சார ரீதியாக யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில்கொள்க 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696