வெள்ளி, 30 செப்டம்பர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - மீனம் லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "மீன" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                     

மீன லக்கினம் :

7ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மீன லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் வழங்கு பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, பொதுவாக குரு பகவான் லக்கினத்திற்கு 7ல் சஞ்சாரம் செய்வது சிறப்பான நன்மைகளை தரும் என்று கூறுவது உண்டு ஆனால் மீன இலக்கின அன்பர்களுக்கு இது பொருந்தாது, களத்திர பாவகத்தில் சஞ்சார நிலை மீன இலக்கின அன்பர்களுக்கு அதிக இன்னல்களையே தரும் , கூட்டு முயற்ச்சிகள் எதிர்பாராத பின்னடைவை தரும், திருமண வாழ்க்கையில் இன்னல்களும், பொருளாதார சிக்கல்களையும் அதிகஅளவில் சந்திக்கும் சூழ்நிலையை தரும், வெளிநாடு வெளியூர் சார்ந்த பயணங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை, பொது நலம் சார்ந்த சேவைகளை செய்வது தங்களுக்கு நன்மைகளை தரும், கூட்டு தொழில் செய்யும் அன்பர்கள் சற்று கவனமுடன் செயலாற்றுவது நல்லது, வீண் விவாதம் மற்றும் சச்சரவுகள் வர அதிக வாய்ப்பு உள்ளது, தங்களின் உடல் நலனில் அதிக அக்கறையும், மன நலனில் இருமடங்கு அதிக அக்கறையும் கொள்வது நலம் தரும், தங்களுக்கு உகந்தது அல்ல எனும் விஷயங்களில் தாங்கள் தலையீடு செய்யாமல் இருப்பதே சாலசிறந்தது.

 குரு பகவான் தனது 5ம் பார்வையை லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்தை வசீகரிப்பது, மீன லக்கின அன்பர்களுக்கு, அளவில்லா அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் சுய தொழில் செய்யும் அன்பர்களுக்கு எதிர்பாராத லாபங்களும், தொழில் முன்னேற்றங்களும் வந்து சேரும், கௌரவம் குறையாத யோக வாழ்க்கை நிச்சயம் உண்டு, தன சேர்க்கை அளவில்லாமல் வரும் யோகமுண்டு, புதிய தொழில் முயற்ச்சிகள், நல்ல வேலை வாய்ப்புகள் தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், எதிர்ப்புகள் அனைத்தும் விலகும், வெற்றி வாய்ப்புகள் தங்களை தேடி வரும், அரசு கெளரவம், புகழ், பதவி உயர்வு, சிறந்த நிர்வாக திறமை, புதிய சொத்துகள் வண்டி வாகனங்கள், சுப விசேஷங்கள் என இந்த குரு மாற்றம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத வெற்றிகளை வாரி குவிக்கும், தன்னம்பிக்கையும், மனோ தைரியமும் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத வருமான வாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை வாரி வழங்கும், புதிய சிந்தனை, புதிய யுக்திகள் தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை பெரிய அளவில் விருத்தியடைய செய்யும் என்பதில் மாற்று கருத்து இல்லை, எதிர்பாராத இடத்தில் இருந்து வரும் உதவிகள் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய ஜீவன முன்னேற்றத்தை வாரி வழங்கும், செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பான வரவேற்ப்பும், வெற்றிகளும் தங்களின் வாழ்க்கையில் புதுவித உற்சாகத்தை வாரி வழங்கும், ஜீவன ரீதியான வெற்றிகளை இந்த குரு மாற்றம் தங்களுக்கு தவறாமல் வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை லக்கினம் எனும் 1ம் பாவகத்தை வசீகரிப்பது, மீன லக்கின அன்பர்களுக்கு, உடல் மனம் சார்ந்த இன்னல்களை அதிகரிக்கும், தங்களுக்கு வரும் நல்ல வாய்ப்புகளை தாங்களே தவிர்க்கும் சூழ்நிலையை தரும், உடல் உபாதைகள் உள்ளவர்கள் சற்று சிரமங்களை அதிக அளவில் எதிர்கொள்ளும் நிலையை தரும், சிந்திக்கும் திறனும், சரியானதை தேர்வு செய்யும் திறனும் தங்களுக்கு வெகுவாக குறையும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு சோதனை காலம் எனலாம், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்யும் பொழுது தங்களின் வாழ்க்கை வெகுவாக பாதிக்கும், தாமதமாக செயல்படும் காரியங்களில் நிச்சயம் வெற்றி கிட்ட வாய்ப்பு இல்லை, எதிர்பாராத இன்னல்களை தாங்கள் சிறப்பாக கையாளவில்லை எனில் பெரிய பொருள் இழப்புகளும், மன நிம்மதியும் வெகுவாக கெடும், ஆன்மீக வழிபாடும், பெரியோர் ஆசியும் தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், முடிந்த அளவு பெரியோர்களுக்கு தான தர்மங்களை செய்து நலம் பெறவும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிப்பது, மீன லக்கின அன்பர்களுக்கு, வியாபர விருத்தியை வாரி வழங்கும், கமிஷன்,தரகு, இடம்,நிலம், வீடு வாங்குவது விற்பது போன்ற தொழில்களை செய்துகொண்டு இருக்கும் அன்பர்களுக்கு இந்த குரு மாற்றம் அளவில்லா வெற்றிகளை வாரி வழங்கும், வண்டி வாகன துறையில் உள்ள அன்பர்களுக்கும், பங்கு வர்த்த தொழில் செய்துகொண்டு இருக்கும் அன்பர்களுக்கும் சிறப்பான வருமான வாய்ப்புகள் வரும், அந்நிய மொழி பேசும் அன்பர்கள் மற்றும் வேற்று மதத்தினர் மூலம் அளவில்லா லாபங்கள் உண்டாகும், வெளியூர் பயன்கள் மூலம் சிறப்பான தொழில் முன்னேற்றத்தை பெறலாம், பல இடங்களுக்கு சென்று தொழில் சார்ந்த அறிவு திறனை பெற்று மிகப்பெரிய தன சேர்க்கையை பெறுவதற்கு உண்டான திட்டமிடுதல்களை தாங்கள் மேற்கொள்வீர்கள், தங்களின் எதிரிகள் மூலம் லாபம் பெரும் யோகம் உண்டாகும், செய்யும் காரியங்களில் எதிர்பாராத நன்மைகளையும், லாபங்களையும் பெறுவீர்கள், தங்களின் வீரியம் மிக்க செயல்பாடுகள் தங்களின் முன்னேற்றத்தை முழு சதவிகிதத்தில் உறுதிபடுத்தும், வட்டி தொழில், ஜோதிடம், ஆசியர், எழுத்தாளர்கள், கலை துறை அன்பர்கள், விவாசாயம் சார்ந்த தொழில் புரிவோருக்கு இந்த குரு மாற்றம் அளவில்லா நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும்.

குறிப்பு :

மீன லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 7,11,1,3ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 29 செப்டம்பர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - கும்ப லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "கும்ப" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                     

கும்ப லக்கினம் :

8ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் கும்ப லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் வழங்கு பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, ஆயுள் பாவகமான 8ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் கும்ப இலக்கின அன்பர்களுக்கு உடல் ரீதியான சிறு சிறு தொந்தரவுகளை தரகூடும், பொருளாதார சிக்கல்களை வழங்கவும் வாய்ப்பு உள்ளது, அவசரகதியில் செய்யும் காரியங்கள் யாவும் மிகுந்த இன்னல்களை தங்களுக்கு வழங்கும் நிலை இருப்பதால், பொறுமையை கடைபிடிப்பது சகல நலன்களையும் தரும், மேலும் மருத்துவ செலவினங்களை தவிர்க்க வாய்ப்பு இல்லை எனலாம், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் வீண் செலவினங்களை தவிர்க்க இயலாது, எதிர்பார்ப்புகள் சற்று ஏமாற்றத்தை தரும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும், போராட்டம் அதிகரிக்கும், முரட்டு சுபாவும், பிடிவாத குணமும் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத இன்னல்களை வாரி வழங்கும், சுய கௌரவம் வெகுவாக பாதிக்கப்படும், குடும்பம் சார்ந்த பிரச்சனைகளை கவனமாக எதிர்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது, இல்லை எனில் தங்களின் வாழ்க்கை பாதையே மாறிவிட வாய்ப்பு அதிகம் மேலும் தேவையில்லாத எதிர்பாலின தொடர்புகள் தங்களின் அந்தஸ்து மற்றும்  கௌரவத்தை வெகுவாக பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்வது தங்களுக்கு நல்லது, எதிர்பாராத விபத்துகளை தவிர்க்க பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதும், பாதுகாப்பை உறுதி செய்தபின் வாகனத்தை இயக்குவதும் தங்களுக்கு மிகுந்த நன்மைகளை வழங்கும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையை விறைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிப்பது, கும்ப லக்கின அன்பர்களுக்கு, ஜீவன வழியிலான மன நிம்மதி இழப்பை தரும், இதனால் வெகுவாக உடல் மற்றும் மன நலம் பாதிக்க வாய்ப்பு உண்டு, செய்யும் தொழிலில் மிகுந்த கவனமாக இருப்பது தங்களுக்கு வரும் வீண் விரையத்தை தவிர்க்க உதவும், பணிபுரியும் அன்பர்கள் தங்களின் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது சகல நன்மைகளையும் தரும், உயர் அதிகாரிகளிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது சகல நன்மைகளையும் தரும், எதிர்பார்ப்புகள் நிறைவேற காலதாமதம் ஆக வாய்ப்பு உண்டு, பொறுமையை கடைபிடித்து நலம் பெருக, தங்களுக்கு வரும் உடல் உபாதைகளை உடனடியாக சிகிச்சை பெற்று நலம் பெறுவது அவசியமாகிறது, இல்லை எனில் மிகப்பெரிய பாதிப்பிற்கு தங்களை அழைத்து சென்று விடும், தாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பெரியோர் ஆலோசனையை பெற்று செய்வது சகல நலன்களையும் தரும், இல்லற வாழ்க்கையில் எதிர்ப்புகள் வர அதிக வாய்ப்பு உண்டு என்பதால், வாழ்க்கை துணையுடன் சுமுக போக்கையும், அன்பார்ந்த செயல்பாடுகளையும் தாங்கள் மேற்கொள்வது இல்லற வாழ்க்கையில் இனிமை சேர்க்கும், வெளிநாடுகளில் உள்ள அன்பர்கள் தங்களது பணியில் மிக கவனமுடன் இருப்பதும், வெளிநாடு சார்ந்த ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்கள், பெரிய முதலீடுகளை செய்யாமல் இருப்பதும் தங்களுக்கு சகல நன்மைகளையும் மன நிம்மதியையும் வாரி வழங்கும், வீண் கற்பனை தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களை வாரி வழங்கிவிடும் என்பதால், மிகுந்த விழிப்புணர்வுடன் தங்களுக்கு வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள " ஜோதிடதீபம் " அறிவுறுத்துகிறது.

குரு பகவான் தனது 7ம் பார்வையை குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது, கும்ப லக்கின அன்பர்களுக்கு, வருமான வாய்ப்புகளை பாதிக்கும், இதனால் மன பயமும், மன அழுத்தமும் உருவாக வாய்ப்பு உண்டு என்பதை கவனத்தில் கொள்க, மற்றவர்களிடம் பேசும் பொழுது வாக்குவாதம் செய்வது தங்களின் மன நிம்மதியை வெகுவாக பாதிக்கும், தங்களுடன் பழகும் அன்பர்களிடம் பகைமை பாராட்டாமல் இருப்பதே தங்களுக்கு நலம் தரும், குடும்ப வாழ்க்கையில் வரும் இன்னல்களையும், பணம் சார்ந்த பிரச்சனைகளை தாங்களே தீர்வு காண்பது சிறப்பான நன்மைகளை தரும், மேலும் ஜாமீன் கையெழுத்து, பொருளாதார உதவி மற்றவர்களுக்கு செய்வது தங்களின் எதிர்கால வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும், எந்த ஒரு காரியத்திலும் வாக்கு சாதூர்யத்தை கடைபிடிப்பது தங்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும், சுப விரயம் செய்ய வாய்ப்பு உண்டு என்பதால், வண்டி வாகனம், வீடு நிலம் வாங்க தங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி வழிவகுக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை, மேலும் புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும், வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது, கும்ப லக்கின அன்பர்களுக்கு, சொகுசு வண்டி வாகன சேர்க்கையையும், புதிய சொத்து சுக சேர்க்கையையும் வாரி வழங்கும், இருப்பினும் அது சார்ந்த இன்னல்களும் வர வாய்ப்பு உண்டு, பெற்றோருடன் தாங்கள் அதிக அன்பு பாராட்டுவது தங்களின் ஜீவன மேன்மையையும், சுக போக யோகங்களையும் நல்கும், பயணங்கள் மூலம் எதிர்பாராத வருமானம் வர வாய்ப்பு உண்டாகும், வெளிநாடு வெளியூர் பயணம் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும், வியாபாரிகளுக்கு சிறப்பான வருமானங்கள் வந்து சேரும், வாக்கை தொழிலாக கொண்ட அன்பர்களுக்கு எதிர்பாராத லாபங்களும் முன்னேற்றமும் நிச்சயம் உண்டு என்பதால், தன சேர்க்கை மிகவும் அபரிவிதமாக அமையும், வண்டி வாகன தொழில் செய்யும் அன்பர்களுக்கு மிகுந்த முன்னேற்றத்தை வாரி வழங்கும், சரளமான பண வசதி வாய்ப்புகள் உண்டாகும், செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்ப்பையும், சிறப்பான அறிமுகத்தையும் வாரி வழங்கும், உறவுகள் சார்ந்த உதவிகள் தங்களை தேடி வரும், பொருளாதாரம் சார்ந்த முன்னேற்றத்திற்கு தங்களின் சரியான திட்டமிடுதல்கள் சிறப்பான வளர்ச்சியினை தரும், சேமிக்கும் வல்லமையை தாங்கள் இனிவரும் காலங்களில் மேற்கொள்வது நல்லது, இல்லை எனில் எதிர்பார்ப்புகள் அனைத்தும் வீண் கனவாக மாறிவிட வாய்ப்பு உள்ளது.

குறிப்பு :

கும்ப லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 8,12,2,4ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 28 செப்டம்பர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - மகர லக்கினம் !




திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "மகர" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                    

மகர லக்கினம் :

9ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மகர லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் வழங்கு பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மகர இலக்கின அன்பர்களுக்கு இனி வரும் ஒரு வருட காலம் பாக்கிய ஸ்தான வழியில் மிகுந்த யோகங்களை வாரி வழங்குவது உறுதியாகிறது, உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு சார்ந்த விஷயங்களை மேற்கொள்ளும் அன்பர்களுக்கு தட்டாமல் வெற்றிகளை வாரி வழங்கும், பெரிய மனிதர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்களின் ஆசியும், உதவியும் சரளமாக கிடைக்க பெரும் யோக காலமாக இந்த குரு பெயர்ச்சி அமையும், பயணங்கள் மூலம் அதிக லாபம் உண்டாகும், இதுவரை தடைபெற்ற நற்காரியங்கள் யாவும் சிறப்பாக நடைபெறும், திருமணம், புதிய வீடு வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும், அறிவு சார்ந்த முயற்ச்சிகள் யாவும் தங்கு தடையின்றி நிறைவேறும், சகல யோகங்களையும் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் தங்களுக்கு விரைவாக வந்து சேரும், பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகமும், அதனால் ஐஸ்வர்யமும் நிறைவாக கிடைக்க பெரும் வாய்ப்பு உண்டாகும், தங்களது வார்த்தைகளுக்கு இனிவரும் காலங்களில் அனைவரும் செவி சாய்ப்பார், மற்றவர்களை தங்களது கட்டுபாட்டில் வைத்திருக்கும் வல்லமை உண்டாகும், சிறந்த நிர்வாக திறமையின் காரணமாக இனிவரும் காலங்களில் தங்களின் தொழில் அபரிவிதமான வெற்றிகளை குவிக்கும், தாங்கள் பணியாற்றும் இடத்தில் பதவி உயர்வுகள் தேடி வரும், சுய ஜாதகத்தில் புதன் கோண அதிபதியாக இருப்பின் மேற்கண்ட பலாபலன்கள் 100 சதவிகிதம் நடைமுறைக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் இதுவரை வாழ்க்கையில் போராட்டங்களை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு, இனிவரும் காலம் மிகுந்த யோகபலன்களை வாரி வழங்கும் என்பது உறுதி.

 குரு பகவான் தனது 5ம் பார்வையை லக்கினம் எனும் 1ம் பாவகத்தை வசீகரிப்பது, மகர லக்கின அன்பர்களுக்கு, புகழ் மிக்க யோக வாழ்க்கையை நல்கும், இருப்பினும் உடல் சார்ந்த தொந்தரவுகள் வர வாய்ப்பு உள்ளது, பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு சிறப்பான நன்மைகள் உண்டாகும், சுய தொழில் செய்யும் அன்பர்களுக்கு நல்ல விருத்தியும், அதிக லாபங்களும் வந்து சேரும், ஜீவன ரீதியான முன்னேற்றம் என்பது எதிர்பாராத வகையில் இருக்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும், கல்வி துறை மற்றும் மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை வாரி வழங்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், புதிய ஆராய்ச்சி மற்றும் முயற்ச்சிகள் தங்களுக்கு மிகுந்த நன்மைகளையும் லாபங்களையும் வாரி வழங்கும், அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு பதவி உயர்வு, அதிகார பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், வெளிநாடு செல்லும் யோகம் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் லாபம் தங்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும், வீட்டில் தடைபெற்ற சுப காரியங்கள் தங்களின் எண்ணப்படி இனிதே நடைபெறும், குறிப்பாக தங்களின் வாழ்க்கையில் லட்சியங்கள் அனைத்தும் நிறைவேறும் யோக காலமாக இந்த குரு பெயர்ச்சி அமையும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிப்பது, மகர லக்கின அன்பர்களுக்கு அளவில்லா செல்வ வளங்களை வாரி வழங்கும், எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் வெற்றி பெரும், போட்டி, பந்தையம், வழக்குகளில் வெற்றி கிட்டும், நிம்மதியான மன நிலை, போதும் என்ற மனம், திருப்தியான வாழ்க்கை என தங்களின் வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், சகோதர வழி ஆதரவு தங்களுக்கு நல்ல மன தைரியத்தை வழங்கும், இல்லற வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சி கிட்டும், குடும்பத்தில் உள்ளோர் ஆதரவும், அரவணைப்பும் தங்களுக்கு புதிய உலகத்தில் பிரகாசிக்க செய்யும், வியாபர விருத்தி என்பது தாங்கள் எதிர்பாராத வண்ணம் மிக பெரிய அளவில் அமையும், அதிர்ஷ்டம் மற்றும் திறமைகளின் தாக்கத்தை இனிவரும் காலங்களில் தாங்கள் சிறப்பாக உணரலாம், சுய மரியாதை கௌரவம், அந்தஸ்து ஆகியவை தங்களை தேடிவரும், எதிர்பாராத உதவிகள் தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியத்தையும் வாரி வழங்கும், குறிப்பாக ஏஜென்சி துறை, கமிஷன் வியாபரம், தரகு தொழில், வட்டி தொழில் ஆகியவற்றில் உள்ள அன்பர்கள் இனிவரும் காலங்களில் நல்ல முன்னேற்றத்தையும், கை நிறைவான வருமான வாய்ப்புகளையும் தங்கு தடையின்றி சரளமாக பெறுவார்கள் என்பது கவனிக்க தக்க விஷயமாகும், இந்த குரு பெயர்ச்சி தங்களுக்கு வெற்றி மேல் வெற்றியை வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிப்பது, மகர லக்கின அன்பர்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தான அமைப்பில் இருந்து சிறப்பான நன்மைகள் நடைமுறைக்கு வரும் வாய்ப்பினை தரும், புத்திர பாக்கியமற்ற தம்பதியருக்கு நல்ல வாரிசு அமையும், குல தெய்வத்தின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் பல வியக்க தக்க அதிசயங்கள் நடைபெறும், சுய அறிவு திறனும், புத்திசாலி தனமும் தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமையும், கல்வி கேள்விகளிலும், கலைத்துறையிலும் பிரகாசிக்கும் வல்லமையை தரும், கலைத்துறையில் உள்ள அன்பர்களுக்கு யோகம் மிகுந்த வாழ்க்கையையும், லாபங்களையும் வாரி வழங்கும், புதிய முயற்ச்சிகள் மூலம் வெளி உலக பிரபல்யம் கிட்டும், எதிர்பாராத அதிர்ஷ்டத்தின் மூலம் வாழ்க்கையில் வெற்றி படிக்கட்டுகளில் ஸ்திரமாக நின்று அதிர்ஷ்டத்தின் முழு பலனையும் அனுபவிக்கும் யோகத்தை தரும், குறிப்பாக தங்களை ஏளனமாக பார்த்த அனைவருக்கும் சரியான விளக்கத்தை தங்களின் வளர்ச்சி வழங்கும், வருமானம் என்பது தன்னிறைவாக அமையும், எதிர்பாராத சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன வசதி, புதிய வீடு என்ற வகையில் தங்களுக்கு தங்கு தடையின்றி வந்து சேரும், தங்களின் பல வருட உழைப்பிற்கு உண்டான பலாபலன்களை இனிவரும் ஒருவருட காலத்தில் முழு வீச்சில் அனுபவிக்கலாம், நினைத்ததை சாதிக்கும் வல்லமையும், சகல முயற்ச்சிகளில் முழு வெற்றியையும் தங்களின் குல தெய்வத்தின் அருளால் தங்கு தடையின்றி பெரும் யோகத்தை தரும், மேலும் திருமண தடை, புத்திர பாக்கிய தடை, தொழில் முன்னேற்றம் இன்மை, வருமான பற்றாகுறை அனைத்தும் நீங்கி தங்களின் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

குறிப்பு :

மகர லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 9,1,3,5ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

மங்களங்கள் நல்கும் சர்வ மஹாளய அமாவாசை வழிபாடு !

 

ஒருவர் மேற்கொள்ளும்  எந்த ஒரு நல்ல காரியங்களிலும் வெற்றி பெற அவருக்கு சுய அறிவு திறனின் வல்லமையும், இறைஅருளின் கருணையும், பித்ருக்களின் ஆசியும் சரி விகிதத்தில் அமைந்து இருப்பின், நிச்சயம் 100 சதவிகித வெற்றிகளை பெற்று தரும், இதை சுய ஜாதக ரீதியாக லக்கினம் எனும் முதல் பாவகமும், பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமும், பாக்கிய ஸ்தானம் எனும் ஒன்பதாம் பாவகமும் நிர்ணயம் செய்கின்றது, ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் சுபயோகங்களை நல்கும் "கோண" வீடுகளாக வர்ணிக்க படுகிறது, மேற்கண்ட பாவகங்கள் ஒருவரது சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருப்பின் சம்பந்த பட்ட ஜாதகருக்கு வரும் இன்னல்கள் துன்பங்கள் நீங்குவதற்கு, ஜாதகரின் அறிவு, குல தேவதையின் கருணை, பித்ருக்களின் ஆசி, ஆகியவை முழு வீச்சில் செயல்பட்டு ஜாதகருக்கு சரியான, அவருக்கு உகந்த நன்மையான பலன்களை நடைமுறைக்கு கொண்டு வந்துவிடும், தீமைகளின் தாக்கம் ஜாதகருக்கு யாதொரு பாதிப்பையும் தாராது என்பது கவனிக்க தக்க விஷயம் ஆகும்.

ஜெனன ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கபட்டோ, அல்லது பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ இருப்பின், சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் வரும் இன்னல்களின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கும், குறிப்பாக ஜாதகர் மேற்கொள்ளும் எந்த ஒரு முயர்ச்சியும் பலன் தாராது, உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை உருவாக்கும், அனைவராலும் தொல்லை துன்பங்களை சந்திக்கும் நிலை, எதிர்பாராத இன்னல்கள், விபத்து மற்றும் மருத்துவ செலவுகளை தரும், உடல் மனம் இரண்டும் கடுமையாக பாதிக்கும், வீண் விரையங்களை தவிர்க்க இயலாது, தொழில் முடக்கம், திடீர் நஷ்டம், முன்னேற்ற தடைகள், நல்ல வாழ்க்கை துணை அமையாதது, குழந்தை பாக்கியம் இன்மை, நல்ல ஆண் வாரிசு அமையாத நிலை, குடும்பத்தில் நிம்மதி அற்ற சூழ்நிலை, தீய பழக்கத்திற்கு ஆர்படுதல், மற்றவர்களுக்கு கட்டுப்பட்டு சுய தன்மையை இழத்தல், எந்த ஒரு காரியத்திலும் முன்னேற்றம் இன்மை, தோல்வி மற்றும் அதிக மன கவலை, மன அழுத்தம் போன்ற இன்னல்களுக்கு ஆளாகி தனது வாழ்க்கையை தானே பாதிக்க செய்துகொள்ளும் சூழ்நிலையை தந்து விடும், குறிப்பாக ஜாதகரின் வாழ்க்கையில் சுப நிகழ்வுகளுக்காக மிகப்பெரிய போராட்டங்களையும், மிகுந்த இன்னல்களையும் ஜாதகர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கும்.

மேற்கண்ட இன்னல்களை தவிர்க்க எதிர்வரும் "சர்வ மஹாளய அமாவாசை வழிபாடு" அனைவருக்கும் நன்மைகளையும் சரியான வழிகாட்டுதல்களையும் நல்கும், குறிப்பாக சுய ஜாதகத்தில் லக்கினம், பூர்வ புண்ணியம், பாக்கிய ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும், 1,5,9ம் வீடுகள் பாதிக்கப்பட்ட அன்பர்கள், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவசை தினத்தில் குல தேவதை வழிபாட்டினை முறையாக செய்வதும், பித்ரு வழிபாட்டினை முறையாக செய்வதும் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சகல நன்மைகளையும் வாரி வழங்கும், இந்த நல்ல வாய்ப்பினை அனைவரும் தமது குல தெய்வ கோவில்களிலும், இஷ்ட தெய்வ கோவில்களிலும் செய்வது சால சிறந்தது, இதனால் சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல உடல் ஆரோக்கியம், மனதில் தைரியம் மற்றும் மனஉறுதி கிட்டும், சுய ஜாதகத்தில் உள்ள அவயோகங்கள் வெகுவாக தனது தாக்கத்தை குறைத்துகொள்ளும், சிந்தனையும் செயல்பாடும் எதிர்பாராத முன்னேற்றங்களை வாரி வழங்கும், முற்போக்கு சிந்தனை, வருமுன் உணரும் அறிவு திறன், நல்லவர் சேர்க்கை என  சகல அமைப்புகளில் இருந்தும் முன்னேற்றங்கள் வந்து சேரும்.

 ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படையில் இருந்து அமைய வேண்டிய, உடல் நலம், கல்வி அறிவு,நல்ல வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், பொருத்தமான வாழ்க்கை துணை, சிறந்த வாரிசு, நல்ல நண்பர்கள் சேர்க்கை, சொத்து சுகம், வண்டி வாகன சேர்க்கை, உயர் பதவி, சமூக அந்தஸ்து, செல்வாக்கு, எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை, செய்யும் காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் என சகல நலன்களையும் வாரி வழங்கும் வல்லமை "மஹாளய அமாவாசையில்" செய்யும் குல தெய்வ வழிபாடு மற்றும் பித்ரு வழிபாடு இரண்டிற்கும் நிச்சயம் உண்டு எனலாம், எந்த ஒரு வேலை இருப்பினும் முறையாக மேற்கண்ட வழிபாட்டினை கடைபிடிப்பது அவசியமாகிறது என்பதை கருத்தில் கொள்க அன்பர்களே, ஏனெனில் மேற்கண்ட வழிபாடுகள் வருடம் தோறும் செய்து வரும் அன்பர்களுக்கு வரும் இன்னல்கள் யாவும் நிச்சயம் சூரியனை கண்ட பனித்துளி போல் காணாமல் போக அதிக வாய்ப்புகள் உண்டு, மேலும் நமது வாழ்க்கையில் நல்ல ஜீவன முன்னேற்றத்தையும், சரளமான வசதி வாய்ப்பினையும், நல்ல குழந்தை பாக்கியத்தையும் நல்கும், எதிர்பாராமல் நடைபெறும் இன்னல்களில் இருந்து உடனடி தீர்வுகள் கிடைக்கும், உறவுகள் மற்றும் அனைவரின் ஆதரவும் கிடைக்க பெறுவீர்கள், இல்லற வாழ்க்கையில் பிரிந்து இருந்த தம்பதியர் ஒன்று கூட வாய்ப்பை ஏற்படுத்தி தரும், பொதுமக்கள் ஆதரவும் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தும் உண்டாகும்.

தொழில் ரீதியான இன்னல்களில் உள்ள அன்பர்களுக்கு மேற்கண்ட வழிபாடுகள் சிறப்பான வெற்றி வாய்ப்பினை நல்கும், எதிர்பாராத முன்னேறமும் செல்வ சேர்க்கையும் கிடைக்க பெறலாம், புதிய முயற்ச்சிகள், புதுவித அணுகு முறைகளை கடைபிடித்து ஜீவன ரீதியான வெற்றிகளை 100 சதவிகிதம் பெற வாய்ப்பை ஏற்படுத்தி தரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், நல்லோர் ஆதரவு பரிபூர்ணமாக கிடைக்கும், முன்னோர்கள் ஆசியும் வழிகாட்டுதல்களும் தங்களின் வாழ்க்கையில் சகல யோகத்தையும் வாரி வழங்கும், இதுவரை தடைபட்ட எந்த ஒரு காரியங்களும், சிறப்பான வெற்றிகளை நல்கும், குடும்பத்தில் கஷ்டம் நீங்கும், திடீர் இழப்புகள் மற்றும் வீண் விரையங்கள் தவிர்க்கப்படும், விபத்து மருத்துவ செலவினங்கள் வெகுவாக குறையும், அனைத்து அமைப்புகளில் இருந்தும் முன்னேற்றமும் நன்மைகளும் நடைமுறைக்கு வரும் என்பதை கருத்தில் கொண்டு எதிர்வரும் அமாவாசை தினத்தில் குல தெய்வ வழிபாடு மற்றும் பித்ரு வழிபாட்டினை முறையாக செய்து சகல நலன்களையும் பெருக.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சுய ஜாதக ஆலோசனை, கேள்வி பதில்


கேள்விகள்


1.என் ஜாதகத்தி அனைத்து கிரகாமும்  ராகு கேதுக்குள் அடக்கியுள்ளது இது கால சர்பதோஷமா?

 கேள்வியே தவறாக உள்ளது, கேது ராகுவுக்குள் அனைத்து கிரகங்களும் அடங்கி உள்ளதை, ராகு கேதுக்குள் அடக்கியுள்ளது என்று கூறுகிறீர்கள், இருப்பினும் இது கால சர்ப்ப தோஷம் அல்ல என்பதை தெளிவாக சொல்லலாம், மேலும் 4 ம் பாவகத்தில் அமர்ந்துள்ள ராகு அந்த பாவகத்திற்கு வலிமையும், 10ம் பாவகத்தில் அமர்ந்துள்ள கேது அந்த பாவகத்திற்கு வலிமை அற்ற நிலையையும் தருகின்றனர்.

2.எனது  ஜாதகத்தில் உள்ள யோகங்கள்  மற்றும் அவயோகங்கள் என்ன?என்  எதிர்காலம் எப்படியுள்ளது?

ஜாதகத்தில் 2,4,6,8,9,12ம் பாவகங்கள் பாதிக்கபடுவது அவயோகமாகவும், 1,3,5,7,10,11ம் பாவகங்கள் வலிமை பெறுவது யோக அமைப்பாகவும் கருதலாம், மேலும் 4,7,10ம் பாவக வழியில் இருந்து தங்களுக்கு யோக பலன்கள் பரிபூர்ணமாக நடைமுறைக்கு வரும்.

3.எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் ? திருமணம் தாடைக்கான கரணம் என்ன ?

தங்களுக்கு களத்திர பாவக பலனை ஏற்று நடத்துவதுமான புதன் அந்தரம் எதிர்வரும் ( 02/03/2017 to 21/06/2017 ) வரையிலான காலகட்டத்தில் திருமணம் சிறப்பாக நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது, தங்களது திருமண தாமதத்திற்கு காரணமாக சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவக வலிமை அற்ற தன்மையே முழு முதற்க் காரணமாகிறது, எனவே தங்களுக்கு திருமணம் தாமதமாகவே அமையும்.

4.என்ன பரிகாரம் செய்யவேண்டும் ?

அண்ணதானம் செய்வதும், குல தெய்வ வழிபாடு, சப்த கன்னிமார் வழிபாடும் களத்திர வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

5.நல்ல பண்புள்ள பெண் மனைவியாக அமையுமா ?

நல்ல யோகமுள்ள வாழ்க்கை துணை அமையும், இருப்பினும் வாக்குவாதம் புரியும் குணம் அவர்களுக்கு இயற்கையாக அமைந்திருக்கும்.

6.எப்படிப்பட்ட இடத்திலிருந்து  பெண் மனைவியாக அமையும் ? எந்த திசை இருந்து அமையும் ?

நல்ல வசதி பெற்ற இடத்தில் இருந்து வாழ்க்கை துணை அமையும், தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து மேற்கு, வடக்கு திசையில் இருந்து அமையும், வாழ்க்கை துணையின் ஊர் வெகு தொலைவில் இருக்கும்.

7.அந்த பெண்ணுடன்  பிறந்தவர்கள் எத்தனைபேர் ?

ஒரு சகோதரர் உண்டு

8.பணியில் உள்ள பெண்தான் மனைவியாக அமையுமா?

நிச்சயமாக பணியில் உள்ள பெண்தான் வாழ்க்கை துணையாக அமையும்.

9.எனது பெற்றோர் உடல் நலம் குறித்து விளக்கவும்?

பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை 

10.எனது ஜாதகத்தில்  புத்திரபாக்கியம் எப்படி உள்ளது? எத்தனை  குழந்தை பிறக்கும் ?

பெண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பு உண்டு, மூன்று குழந்தைகள் உண்டு.

11.நான் சொந்தத்தொழில் செய்யலாமா அல்லது  வெளிநாடு செல்லவாய்ப்பு உள்ளதா ?

சொந்த தொழில் கூட்டாக செய்யலாம், இருப்பினும் வெளிநாட்டில் மிகசிறந்த யோக வாழ்க்கையை பெற இயலும், எதிர்காலம் தங்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல்களை வழங்கும்.


12.எனது ஜாதகத்தில் லக்கினமும் ராசியும்  ஒன்றாக உள்ளது மற்றும் குரு சந்திரனோடு  சேர்த்து  மகரத்தில்  நீச்சம் அடைத்துள்ளதால் குரு பலன்கள் கிடைக்காத ?

சுய ஜாதக அமைப்பின் படி லக்கினம் மிக மிக வலிமையாக இருப்பது தங்களுக்கு மிகுந்த நன்மைகளையும் யோகங்களையும் வழங்கும், லக்கினத்தில் அமர்ந்த கிரகம் நீசம் பெறுவதால் தங்களுக்கு யாதொரு பாதிப்பும் வாராது, மேலும் குரு நீச நிலையை பெறுவது கால புருஷ தத்துவ அமைப்பிற்கே, தங்களது லக்கினத்திற்கு அல்ல என்பதை கவனத்தில் கொள்க, மேலும் லக்கினம் வலிமை பெறுவது தங்களின் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் வாரி வழங்கும்.

12. என் ஜாதகத்தில்  குருவும்  சந்திரனும்  அதன் பலன் என்னா எப்பொழுது வேலைசெய்யும் ?

புதன் மற்றும் கேது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் இலக்கின பாவக பலன் நடைமுறைக்கு வரும்.

13. மூன்றாம் இடமான மீனத்தி சுக்கிரன்  செவ்வாய் உள்ளது ஆதன் பலன் என்ன?

வீரியமிக்க செயல்பாடுகள், நல்ல அயன சயன சுகம், விளையாட்டு மற்றும் கலைகளில் அதிக ஆர்வம், எதிர்பால் இன கவர்ச்சி, சிறந்த நிர்வாக திறமை, அறிய கலைகளில் தேர்ச்சியை தரும்.


14.  வாக்கிய பஞ்சகம்  முறைப்படி என் ஜாதகத்தில்  10ல்  கேது மற்றும் சனி  சேர்த்து உள்ளது , அனால் திருக்கணித முறைப்படி  10ல் கேது , மற்றும் 11ல் சனி  உள்ளது இதன் பலன்கள் மாறுமா ?

தங்களது சுய ஜாதக அமைப்பின் படி, ஜீவன ஸ்தானம் எனும் 10,11ம் பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்க தக்கது, மேலும் மேற்கண்ட இரண்டு பாவகங்களும் சிறிதேனும் பாதிப்பை பெறவில்லை என்பதனால், தங்களுக்கு யாதொரு தீமையும் நேராது என்பதை கவனத்தில் கொள்க, தற்பொழுது நடைபெறும் குரு திசை 1௦ம் வீடு வலிமை பெற்ற சுக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது தங்களின் வாழ்க்கையில் ஜீவனம் மற்றும் சுக ஸ்தான வழியில் இருந்து அளவில்லா யோக பலன்களே நடைமுறைக்கு வரும் என்பதால் மகிழ்ச்சி கொள்க, வாழ்த்துகள் 

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - தனுசு லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "தனுசு" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                      

தனுசு லக்கினம் :

10ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் தனுசு லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் வழங்கு பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, தனசு லக்கினத்திற்கு அதிபதியான குரு பகவான் ஜீவன ஸ்தானமான 10 ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது தனுசு இலக்கின அன்பர்களுக்கு உகந்தது அல்ல என்றே சொல்லலாம், ஜீவன ரீதியான இன்னல்களை அதிக அளவில் தரக்கூடும், மேலும் கௌரவம் சுய மரியாதை, பதவி ஆகியவற்றிற்கு இன்னல்கள் வர அதிக வாய்ப்புள்ளது, அடிமை தொழில் செய்யும் தனுசு இலக்கின அன்பர்கள் இனிவரும் காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது, பணிபுரியும் இடத்தில் இருந்து அதிக தொல்லைகள் வர வாய்ப்பு உண்டு, எதிர்பால் அமைப்பினரிடம் அதிக கவனமாக இருப்பது சகல நலன்களையும் தரும், இல்லை எனில் வீண் அவபெயரும் துன்பமும் உண்டாகும், மேல் அதிகாரிகளிடம் சுமுக போக்கை கடைபிடிப்பது தங்களின் ஜீவன வாழ்க்கையில் மேன்மையை தரும், வாக்குவாதத்தை தவிர்ப்பது தங்களின் முன்னேற்றத்தை உறுதி படுத்தும், மேலும் உடல் நலம் சார்ந்த தொந்தரவுகள் இருப்பின் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது தங்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும், வீண் விரையத்தை தவிர்க்க உதவும், தொழில் செய்யும் அன்பர்கள் புதிய முயற்ச்சிகளை மேற்கொள்வது மிகுந்த இன்னல்களை தர கூடும், செய்யும் தொழிலில் எவ்வித தடைகளும் ஏற்ப்படாமல் சிறந்த நிர்வாகத்தை மேற்கொள்வது தங்களின் தொழில் ரீதியான வெற்றிகளை உறுதிபடுத்தும், பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்ப்பது சகல நலன்களையும் தரும், கடன் பெற்று செய்யும் தொழில்கள் அல்லது காரியங்கள் தங்களுக்கு மிகப்பெரிய இன்னல்களை தரக்கூடும் என்பதால் மிகுந்த கவனத்துடன் தொழில் அல்லது ஜீவனத்தை மேற்கொள்வது தனுசு இலக்கின அன்பர்களுக்கு மிகுந்த பாதுகாப்பை தரும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையை குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது, தனுசு லக்கின அன்பர்களுக்கு, வருமான ரீதியான பிரச்சனைகளையும், குடும்ப வாழ்க்கையில் இன்னல்களையும் தரக்கூடும், தங்களின் கட்டுப்பாடு அற்ற வார்த்தைகள் தங்களின் மன நிம்மதியை கேள்விக்குறியாக்கும், வரவுக்கு மீறிய செலவினங்கள் தங்களின் கடன் சுமையை அதிகரிக்கும், தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதே தங்களுக்கு தனசு இலக்கின அன்பர்களுக்கு  நன்மைகளை தரும், வாழ்க்கை துணையுடன் உண்டான பிரச்சனைகளை சுமுகமாக பேசி தீர்வு காண்பதும், முடிந்த அளவு எதிர்வாதம் புரியாமல் இருப்பதும் தங்களின் இல்லறவழ்க்கையை இனிமையாக நடத்த வழிவகுக்கும், மேலும் இதுவரை இருந்த வருமானத்தை விட அதிகபடியான வருமான வாய்ப்புகளை தாங்கள் தேடிகொள்வது மிகுந்த நன்மையை தரும், பெரும்பாலும் தங்களின் வாக்கின் வழியில் இருந்தே இன்னல்கள் வர கூடும் என்பதால், எவரிடம் பேசினாலும் வார்த்தைகளில் கவனம் கொள்வது தங்களுக்கு மிகுந்த நன்மையை தரும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது, தனுசு லக்கின அன்பர்களுக்கு இடம் வீடு வண்டி வாகனம் சார்ந்த சிறு விரையங்களை அல்லது சுப  விரையங்களை ஏற்படுத்த கூடும், மேலும் புதிய சொத்துகளை வாங்கும் பொழுதும் வண்டி வாகனங்களை வாங்கும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள்வது நலம் தரும் ஏமாற்றங்களை தவிர்க்க உதவும், தாயார் உடல் நிலையில் அதிக அக்கறை கொள்வது நலம் தரும், தேவைகளை வெகுவாக குறைத்துகொல்வதும், ஆடம்பர விஷயங்களை தவிர்த்து விடுவதும் தங்களுக்கு மிகுந்த யோகத்தை தரும், முடிந்த அளவு கோவில் வழிபடு ஆன்மீக ஈடுபாடு தங்களின் இன்னல்களை களைய வழிவகுக்கும், கையில் உள்ள சொத்துகளை விற்று பணம் சேர்க்க உகந்த காலமாக இந்த குரு பெயர்ச்சி அமையக்கூடும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டிய காலம் இது இல்லை எனில் வீண் அவபெயரும், பதவியில் சிக்கல்களும் ஏற்பட கூடும், அதிக அளவில் மன உறுதியுடன் செயல்படுவது எதிர்கால வாழ்க்கையில் தங்களின் முன்னேற்றத்தை அதிகரிக்கும், பொது காரியங்களில் அல்லது மற்றவர் விஷயங்களில் ஆர்வம் செலுத்துவதை தவிர்ப்பது நலம் தரும் மேலும், சுய முன்னேற்றத்திலும் உடல் ஆரோக்கியத்திலும்  மிகுந்த அக்கறையுடன் இருப்பதும், குடும்பத்தில் உள்ள நபர்களை அனுசரித்து செல்வதும் தங்களின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிப்பது, தனசு லக்கின அன்பர்களுக்கு, சிரசு சார்ந்த இன்னல்களை தர கூடும், மேலும் உடல் ரீதியான தொந்தரவுகளும் இன்னல்களும் அதிகரிக்கும், அக உறுப்புகள் சார்ந்த கோளாறுகள் தங்களுக்கு சிறு சிறு இன்னல்களை தரக்கூடும், கடன் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை உடன் இருப்பது நலம் தரும், எதிர்பார்ப்புகள் சில நேரங்களில் நடைபெறாமல் போக வாய்ப்பு உண்டு, மன பயமும் மன கிலேசமும் தங்களின் முன்னேற்றத்தை பாதிக்க கூடும், இருப்பினும் தன வரவு சரளமாக இருக்கும், மற்றவர்கள் செல்வம் தங்களின் கட்டுப்பாட்டில் வரும் என்பதால் கவனமாக கையாள்வது தங்களின் பெயருக்கு புகழ் சேர்க்கும், மறை பொருள் வழியில் இருந்து வருமானம் உண்டாகும், வட்டி தொழில் அல்லது கமிஷன் வியாபாரத்தில் உள்ள அன்பர்களுக்கு அளவில்லா செல்வ சேர்க்கை உண்டாகும், பொது மக்களிடம் அதிக நம்பிக்கையும் ஆதரவும் எதிர்பாராமல் கிடைக்கக் பெறுவீர்கள், போட்டி பந்தையம், தேர்தலில் பிரகாசமான வெற்றி வாய்ப்பும், சிறப்பான எதிர்காலமும் உண்டாகும்.

குறிப்பு :

தனுசு லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 10,2,4,6ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - விருச்சிக லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "விருச்சிக" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                      

விருச்சிக லக்கினம்

11ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் ராஜயோக பலன்களை வாரி வழங்குவார் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை 11ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையையும், தெளிவான சிந்தனைகளையும் வாரி வழங்குவார், மனதில் உள்ள எண்ணங்களும் ஆசைகளும் பரிபூர்ணமாக நிறைவேறும், உடல் நலம் மற்றும் மன நலம் விருச்சிக லக்கின அன்பர்களுக்க சிறப்பான நன்மை பெறுவதற்கு உண்டான உகந்த பாதையை அமைத்து தரும், மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும், பொது வாழ்க்கையில் தேர்தலில் வெற்றி கிட்டும், மருத்துவ துறையில்  பணியாற்றும் அன்பர்களின் வாழ்க்கையில் சகல நலன்களுக்கும் மிக பெரிய முன்னேற்றமும் உண்டாகும், வியாபாரிகளுக்கு உகந்த யோக காலமாக  இனிவரும் ஒரு வருடம் அமையும், மேலும் வாழ்க்கையில் முன்னேற்றம் நோக்கி அடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு விருச்சிக லக்கின அன்பர்களுக்கு மிக சிறந்த யோக பலன்களை  வழங்க "தேவகுரு"  தயாராக உள்ளார் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் வாழ்க்கையில் சகல யோகங்களையும் இனிவரும் ஒரு வருட காலத்திற்கு விருச்சிக லக்கின அன்பர்களுக்கு குரு பகவான் வாரி வழங்குவார் என்பது விருச்சிக அன்பர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையை வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிப்பது, விருச்சிக லக்கின அன்பர்களுக்கு சகல சௌபாக்கியத்தையும் நல்கும் அமைப்பாகும், தேர்வுகளில் வெற்றி, பதவி உயர்வு, ஆபரணம் மற்றும் வஸ்திர சேர்க்கை உண்டாகும், புதிய சொத்துக்கள் வண்டி வாகனம், வீடு ஆகியவை எதிர்பாராமல் வந்து சேரும், எடுக்கும் முயற்ச்சிகள் யாவிலும் வெற்றிமேல் வெற்றி உண்டாகும், சுய தொழில் அல்லது வியாபாரம் செய்யும் அன்பர்களுக்கு இனிவரும் ஒரு வருடம் யோக காலமாக அமையும், புதிய முயற்ச்சிகள் கைகூடி வரும், வீண் மன பயம் அகலும், தெய்வ சிந்தனை மேலோங்கும், திடீர் பயணங்கள் மூலம் அபரிவிதமான லாபங்கள் வந்து சேரும், பல தொழில் செய்யும் யோகமும், செய்யும் தொழில் மூலம் அதிக லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், வெளிநாடுகள் அல்லது வெளியூரில் இருந்து நல்ல செய்தியும், திடீர் அதிர்ஷ்டமும் உண்டாகும், சிந்தனை செய்யும் காரியங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், இன்சூரன்ஸ் துறையில் உள்ள அன்பர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும், இயற்கையாகவே தொழில் துறையும், தொழில் துறையில் பணியாற்றும் அன்பர்களுக்கும்  மிகுந்த லாபமும் அதிர்ஷ்டமும் தொடர்ந்து சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிப்பது, விருச்சிக லக்கின அன்பர்களுக்கு அறிவு சார்ந்த முயற்ச்சிகள் எதிர்பாராத வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், கல்வி துறையில் உள்ள அன்பர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு உண்டாகும், புதிய கண்டுபிடிப்புகள் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு ராஜ யோக வாழ்க்கையை நல்கும், நல்ல புத்திர பாக்கியமும் ஆண் வாரிசும் அமையும், குல தெய்வத்தின் ஆசியினால் வாழ்க்கையில் சகல யோகங்களையும் தங்கு தடையின்றி பெரும் யோகத்தை நல்கும், தடைபட்ட காரியங்கள் யாவும் சிறப்பாக நடைபெறும், எதிர்கால வாழ்க்கைக்கு உண்டான திட்டமிடுதல்கள் மற்றும் வழிமுறைகள் நடைமுறைக்கு வரும், ஆன்மீக வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு யோகங்களை வாரி வழங்கும், திருத்தல பயணம் மற்றும் ஆன்மீக பெரியோர் ஆசிர்வாதம் எதிர்பாராமல் அமையும், மன நிம்மதியும் மன நிறைவும் பரிபூர்ணமாக கிடைக்க பெறுவீர்கள், நல்ல அயன சயன சுகத்தையும், இறை அருளின் கருணையும் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு தடையின்றி இனிவரும் காலங்களில் கிடைக்கும், வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆதரவின் மூலம் அறிய பல நிகழ்வுகளை நிகழ்த்த குருபகவான் சஞ்சார நிலை தங்களுக்கு வல்லமையை வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தை வசீகரிப்பது, விருச்சிக லக்கின அன்பர்களுக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்தும், நண்பர்கள் வழியில் இருந்து நிறைய செலவினங்களை வாரி வழங்கும், வருமானம் நிறைவாக வந்த போதிலும் செலவுகளை கட்டுக்குள் வைப்பது குதிரை கொம்பாக இருக்கும், வாக்குவாதம் எதிர்பாராத சில பிரச்சனைகளை தரும், குறிப்பாக வாழ்க்கை துணையுடனான வாக்குவாதம் மிக பெரிய இன்னல்களை தரும், மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவது தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அவமானத்தையும், கௌரவ குறைவையும் தரும், செல்லும் இடங்களில் மிகுந்த கவனமுடன் சூழ்நிலைகளை கையாள்வது  தங்களுக்கு சிறந்த நன்மைகளை தரும், அதிகமாக சிந்தனை செய்து செயல்படுவது தங்களின் மன நிம்மதியை  காப்பாற்றும், திருமண தடைகள் நீங்கும் இருப்பினும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் அதிக கவனம் தேவை என்பதை கருத்தில் கொள்க, பொருத்தமற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்வது தங்களின் வாழ்க்கையில் மிகுந்த  இன்னல்களை வாரி வழங்கும்.

குறிப்பு :

விருச்சிக லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 11,3,5,7ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 10 செப்டம்பர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - துலாம் லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "துலாம்" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

துலாம் லக்கினம் 

துலாம் லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான், துலாம் லக்கின அன்பர்களுக்கு இனி வரும் ஒருவருட காலம், விரைய ஸ்தான வழியில் இருந்து சில இன்னல்களை தரக்கூடும், குறிப்பாக உடல் நலம் சார்ந்த தொந்தரவுகள், வயிறு சார்ந்த தொந்தரவுகள், வீண் விரையம் என்ற வகையில் இன்னல்களை தர கூடும், வீடு நிலம், வண்டி வாகன யோகம் என்ற வகையில் சுப விரைய செலவுகளையும், திருமணம் மற்றும் சுப விசேஷங்கள் என்ற வகையில் செலவுகளையும் தர வாய்ப்புண்டு, விவசாயம் மற்றும் பண்ணை தொழில் செய்ப்பவர்க்ளுக்கு நல்ல வருமானம் வர வாய்ப்பு அதிகம் உண்டு, பயணங்களில் நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும், எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு, தமது உடமைகளை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்வதும், பயணங்களில் அதிக பாதுகாப்பை கையாள்வதும், தங்களக்கு திடீர் இழப்புகளில் இருந்து காப்பாற்றும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையை சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது, தங்களின் தொழில் மற்றும் சொத்து சார்ந்த தொந்தரவுகளை அதிகரிக்க கூடும், மேலும் விரைந்து முடிவெடுக்கும் விஷயங்கள் யாவும் தங்களுக்கு அதிக இன்னல்களையும் துன்பங்களையும் தர கூடும், ஏமாற்றங்கள் அதிக அளவில் வர வாய்ப்பு உண்டு, குறிப்பாக தொழில் தொழிலாளர் மாற்று வேலை ஆட்களுடன் அதிக விழிப்புணர்வுடன் நடந்துகொள்வது நலம் தரும், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கு நல்ல விருத்தியை தந்த போதிலும், மிகப்பெரிய சட்ட சிக்கல்களை அதிகரிக்கும், வாகன தொழில் விருத்தி அடையும் இருப்பினும் நிலையற்ற தொழில் அமைப்பினை வழங்கும், புதிய சொத்துக்கள் வீடு நிலம் போன்றவற்றை வாங்கும் முன் அதிக கவனம் தேவை, மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவது மிகப்பெரிய அவ பெயரையும், பின்னடைவையும் தரக்கூடும், வாழ்க்கை துணையுடன் சுமுக போக்கை கையாள்வது நல்லது இல்லையெனில்  தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களை வாரி வழங்க கூடும்,

 குரு பகவான் தனது 7ம் பார்வையை சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிப்பது, துலாம்  லக்கின அன்பர்களுக்கு, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ செய்யும் யோகத்தை தரும், வம்பு வழக்கு, போட்டி பந்தயம் மற்றும் எதிர்ப்புகள் யாவும் அகன்று நன்மைகளும் அதிர்ஷ்டமும் உண்டாகும், இருப்பினும் தீராத மன கவலையையும், குறையையும் தரும், மருத்துவ செலவை தவிர்க்க இயலாது, முதலீடுகளில் இருந்து திடீர் வருமானம் உண்டாக வாய்ப்பு உண்டு, நிம்மதியான உறக்கம் கெடும், வீண் அலைச்சல் தங்கள் உடல் நிலையை வெகுவாக பாதிக்கும், எதிர்பால் இன அமைப்பினரிடம் அதிக கவனமாக இருப்பது நலம் தரும், இல்லை எனில் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அவ பெயரை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்குவது, ஆதரவு தருவது இரண்டும் தங்களின் வாழ்க்கையை வெகுவாக பதம்பார்க்கும், உறவுகளின் ஆதரவின்மை தங்களுக்கு நல்ல வாழ்க்கை பாடத்தை கற்று தரும், தாம் உண்டு தமது வேலை உண்டு என்று இருப்பது தங்களின் மனதுக்கும், உடலுக்கும்  சகல நலன்களையும் வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தை வசீகரிப்பது, துலா லக்கின அன்பர்களுக்கு, புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை வழங்க கூடும், வெளிநாடுகளில் இருந்து அல்லது வாழ்க்கை துணை நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து அதிகப்படியான வருமானம் திடீரென வந்து சேரும், இருப்பினும் விபத்து மற்றும் வீண் செலவுகள் தங்களை வெகுவாக சிரமப்படுத்தும், பெரிய சொத்துக்கள் வாங்க இனிவரும் காலம் வழிவகுக்கும், பொது வாழ்க்கையில் சிறப்பான எதிர்காலம் உண்டு, அரசியலில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டாகும், இன்சூரன்ஸ் மற்றும் வாகன காப்பீடு துறையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றம் மிகுந்த யோக காலம் இதுவாக அமைய  வாய்ப்பு உண்டு, பொதுமக்கள் வழியில் இருந்து அதிகப்படியான வருமான வாய்ப்புகள் வந்து சேரும், வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும், வெளிநாட்டில் உள்ள சில அன்பர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாக வாய்ப்பு உண்டு, மன வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு இது சோதனை மிகுந்த காலமாக அமையும், வீண் பேச்சு, வீண் வாதம் தங்களின் இல்லற வாழ்க்கையை  வெகுவாக பாதிக்கும் என்பதால்  மௌனம் காப்பது சகல நலன்களையும் தரும் இல்லற வாசிகளுக்கு, மேலேயும் மனபயம் துலாம் லக்கின அன்பர்களை வாட்டி வதைக்கும்.

 குறிப்பு :

துலா லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 12,4,6,8ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஜாதக ஆலோசனை : வேலை மற்றும் திருமண யோகம் !


கேள்வி பதில் :

1) எதிர்காலம் எப்படி இருக்கும்? நல்ல வேலை நல்ல சம்பளத்துடன் அமையுமா? வெளிநாடு யோகம் உண்டா ?   

அன்பு சகோதரிக்கு " வணக்கம் " 

தங்களின் சுய ஜாதக அமைப்பின் படி எதிர்கால வாழ்க்கை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, தற்போழுது நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மையை வைத்து தெளிவாக அறிந்துகொள்ளலாம், தற்போழுது தங்களுக்கு சுக்கிரன் திசை ( 07/05/2012 முதல் 07/05/2032 வரை ) நடைமுறையில் உள்ளது, நடைபெறும் சுக்கிரன் திசை தங்களுக்கு 2,4,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஸ்திர நெருப்பு ராசியான சிம்ம வீட்டின் பலனை ஏற்று நடத்துகிறது, எனவே சுக்கிரன் திசை தங்களுக்கு 2ம் பாவக வழியில் இருந்து குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இழப்பு, வருமானம் இன்மை வாக்கினால் துன்பம் மற்றும் இன்னல்களையும், 4ம் பாவக வழியில் இருந்து தகப்பனார் மற்றும் சுக போக வாழ்க்கையில் இன்னல்களையும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்பு,வீண் செலவு,ஏமாற்றம் மற்றும் மருத்துவ செலவு உடல் நல குறைபாட்டினையும் வழங்கும், 12ம் பாவக வழியில் இருந்து அனைவராலும் தொல்லை, மன நிம்மதி இழப்பு, எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஏமாற்றம் தரும் நிலை, மன அழுத்தம், மன போராட்டம், அனைத்திலும் விரையம் என்ற வகையில் பலன்களை தரும், எனவே தங்களுக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை அவயோக பலன்களை ஸ்திரமாக வாரி வழங்கிகின்றது என்பது மட்டும் உண்மை, மேலும் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசையில் சந்திரன் புத்தி  ( 06/09/2016 முதல் 07/05/2018 வரை ) 1,9ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது சகல நன்மைகளையும் வாரி வழங்கும் லக்கின பாவக வழியில் இருந்து சில அதிர்ஷ்டங்களை முன்னேற்றங்களையும் பெரும் யோகம் உண்டாகும், எடுக்கும் முயற்சிகள் லாபம் தரும் அதிர்ஷ்டகரமான சில நிகழ்வுகள் தங்களுக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

அடுத்து வரும் சூரியன் திசை 5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது தங்களுக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து அதாவது குழந்தை பாக்கியம் மற்றும் களத்திர பாவக வழியில் இருந்து அதிக அளவில் ( 200% சதவிகித ) இன்னல்களை வழங்க வாய்ப்பு உண்டு என்பதால், சரியான வாழ்க்கை துணையை தங்கள் தேர்வு செய்வது அவசியமாகிறது.


 2) கல்யாணம் எப்போது நடக்கும்? எப்படி பட்ட துணை அமையும். பரிகாரம் செய்தால் தான் திருமணம் நடைபெறுமா?

தற்போழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை சந்திரன் புத்தியில்  ( 06/09/2016 முதல் 07/05/2018 வரை ) திருமணத்திற்கு உண்டான முயற்சி எடுத்தால் தங்களுக்கு திருமணம் சிறப்பாக நடைபெற அதிக வாய்ப்புள்ளது, மேலும் தங்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமல், சுய ஜாதகம் வலிமை உள்ள ஒரு வரனை தேர்வு செய்தால் தங்களின் வாழ்க்கை சிறப்பான நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், தங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஊரிலேயே இருந்து நல்ல வரன் வர வாய்ப்பு உண்டு, சுய ஜாதகத்தில் 2,7,12ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்படுவதால் திருமணம் நடைபெற முறையான பரிகாரங்களை நாடுவதே மிகுந்த நன்மைகளை தங்களுக்கு வாரி வழங்கும், குறிப்பாக களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு திருமண தடைகளை ஏற்படுத்தும், இதற்கான பரிகாரங்களை முறைப்படி அறிந்து நலம் பெறுவது அவசியமாகிறது.


3) தற்போது உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்க பட்டுள்ளது. காரணம் என்ன ?

நடைபெறும் சுக்கிரன் திசை தங்களுக்கு சாதகமாக இன்றி இருப்பதும், சுய ஜாதகத்தில் நெருப்பு மற்றும் மண் தத்துவ ராசிகள் கடுமையாக பாதிக்கப்படுவதும் தங்களுக்கு மிகுந்த இன்னல்களை உடல் மற்றும் மனம் ரீதியாக வாரி வழங்கும், இதற்கான பரிகாரங்களை மேற்கொள்வதும் உடல் மற்றும் மன நலனில் அக்கறை செலுத்துவதும் தங்களுக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.


4) சில சோதிடர்கள் எனக்கு திருமணம் நான்கு ஆண்டுகளுக்க மேல் ஆகும் என்கிறார்கள்? உண்மையில் திருமணம் நடைபெறுமா?

  இந்த கூற்றில் சிறிதும் உண்மை இல்லை தங்கள், சில விஷயங்களில் விரைவாக முடிவு எடுத்தல் எதிர்வரும் 3 மாதங்களில் தங்களுக்கு சிறப்பாக திருமணம் நடைபெறும், தடைகள் யாவும் தகர்ந்து, இனிமையான இல்லறம் அமைய அதிக வாய்ப்பு உண்டு என்பதால் விரைவாக சில முயற்சிகளை மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

5) மாப்பிள்ளை திசை வீடு குடும்பம் படிப்பு ஜாதி வேற்று மதம் இனம் அமையுமா. வேற்று இனத்தில் திருமணம் செய்தால் குடும்ப வாழ்வில் பிரச்சனைகள்  ஏற்படுமா?                         

வடகிழக்கு அல்லது வடக்கு சார்ந்த திசைகளில் இருந்து வாழ்க்கை துணை அமையும், மிக அருகாமையில் வாழ்க்கை துணையின் இல்லம் அமைந்து இருக்கும், நல்ல கல்வி மற்றும் சிறப்பான பணியில் இருப்பார், வேற்று ஜாதியில் திருமணம் தங்களுக்கு நன்மைகளை தரும், வேற்று இனத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கையில் யோகமும் முன்னேற்றமும் உண்டாகும்.

6) குழந்தை பாக்கியம் உண்டா?

நிச்சயம் உண்டு முதலில் பெண் குழந்தை அமைய அதிக வாய்ப்பு உள்ளது, இருப்பினும் தங்களது எதிர்கால வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை உணர்ந்து தெளிவாக சொல்ல இயலும்.
                        
7) எனக்கு பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளின் ஆதரவு இன்றி உள்ளேன். கல்யாண வரன் பார்ப்பதில் நண்பர்களின் ஆதரவுமில்லை. இப்படிப்பட்ட சூழலில் உண்மையில் திருமணம் நடைபெறுமா? 

நிச்சயம் நடைபெறும், தங்களுக்கு திருமணம் சார்ந்த விஷயங்களில் உதவி வரும், குல தெய்வத்தின் ஆசியுடன் வாழ்க்கையில் திருமணம் சிறப்பாக நடைபெறம், எதிர்காலம் தங்களுக்கு மிகுந்த நன்மைகளை வழங்கும்.

8) ஐயா நான் தற்போது பிறந்த ஊரில் உள்ளேன். குறைந்த வருவாயில் வேலை. நான் வேலை தேடி இடமாற்றம் சென்றால் சிறப்பாக இருக்குமா? 

இது ஒரு "உத்தமமான சிந்தனை" தங்கள் விரைவில் வெளியூர் அல்லது வெளிநாடு சென்று ஜீவனம் செய்வதற்கு உண்டான முயற்சியை மேற்கொள்வது நல்லது, மேலும் தாங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது வெளியூர் அல்லது வெளிநாட்டில் ஜீவனம் செய்ப்பவராக தேர்வு செய்வது சகல நலன்களையும் வாரி வழங்கும், இல்லற வாழ்க்கையில் வரும் யோகத்தை உறுதி செய்யும்.

9) வேலை கிடைப்பதில் மற்றும் வரன் சரியாக அமைவதில்லை மற்றும் வருவதுமில்லை. இடமாற்றம் செய்தால் கல்யாணம் மற்றும் வேலைக்கு சரி வருமா?                         

சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும், இடமாற்றம் தங்களுக்கு மிகுந்த யோகத்தை வாரி வழங்கும், குறிப்பாக தங்களது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் தேடுவதும், வாழ்க்கை துணையை தேடுவதும் தங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை நன்மைகளையும் வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் பூர்வீக ஸ்தானம் எனும் 5ம் வீடு  பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு அளவில்லா இன்னல்களை வாரி வழங்கும், பூர்வீகத்தில் குடியிருக்கும் வரையிலும், எனவே இதில் இருந்து தப்பிக்க நல்ல உபாயம் தங்களது பூர்வீகத்தில் இருந்து 100 மைல் தொலைவிற்கு அப்பால் சென்று குடியிருப்பது சகல நலன்களையும் வாரி வழங்கும்.
                        
10) என்னுடைய திருமணம் நடைபெறும் பொழுது பெற்றோர் உடன் இருப்பார்களா?                         

நிச்சயம் இருப்பார்கள், இருப்பினும் தங்களது விருப்பப்படி திருமணம் நடைபெறும், இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.

11) திருமணம் வேலை மற்றும் எந்த வேலையிலும் தடைகள் இருப்பதை களைய பரிகாரம் உள்ளனவா?

தங்களது சுய ஜாதகத்தில் 3,5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சகோதரம்,பூர்வபுண்ணியம் மற்றும் களத்திர வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், மேலும் 2,4,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்பம்,சுகம்,ஆயுள் மற்றும் விரைய பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களை தரும் அமைப்பாகும், எனவே மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்கவும், மேற்கண்ட பாவக வழியில் இருந்து நன்மைகளை பெறவும், முறையான பிரீதி பரிகாரங்களை பற்றி நேரில் வந்து தெளிவாக ஆலோசனை பெற்று, தங்களது வாழ்க்கையில் சகல நலன்களையும் பெற "ஜோதிடதீபம்" வாழ்த்தி வரவேற்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

குரு திசையில் திருமண தடைகள் ஏற்ப்பட காரணம் என்ன? திருமணம் எப்பொழுது நடைபெறும் ?


திருமணம் நடைபெறாமல் தடைகளையும் தாமதங்களையும் சந்திக்கும் ஒவ்வொரு ஜாதகருக்கும் ( ஆண் பெண் ) சுய ஜாதக வலிமை இன்மையே காரணமாக அமையும் என்றால் அது மிகையில், திருமண தடைக்கு காரணமாக அமையும் சில ஜாதக ரீதியான காரணங்களை பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே ! 

திருமண தடைக்கு ஜாதக ரீதியான காரணங்கள் :

1) சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் உயிர் உடலாகிய லக்கினம் எனும் முதல் பாவகம், குடும்ப ஸ்தானமான 2ம் பாவகம், களத்திர ஸ்தானமான 7ம் பாவகம், அயனசயன ஸ்தானமான 12ம் பாவகம், திருமண வயதில் உள்ள வது அல்லது வரன் ஜாதகத்தில் வலிமை அற்று காணப்பட்டால், நிச்சயம் சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகளையும் தாமதங்களையும் வழங்க வாய்ப்புள்ளது.

2) சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபம், 7ம் வீடான துலாம், 12ம் வீடான மீனம் ஆகியவைகள் கடுமையாக பாதிக்கப்படுமாயின், சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகளையும் தாமதங்களையும் வழங்க வாய்ப்புள்ளது.

3)  திருமண வயதில் உள்ள வது அல்லது வரன் ஜாதகத்தில் தற்போழுது நடைமுறையில் உள்ள திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம், பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினாலோ, பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினாலோ, சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகளையும் தாமதங்களையும் வழங்க வாய்ப்புள்ளது.

4) திருமண வயதில் உள்ள வது அல்லது வரன் ஜாதகத்தில் தற்போழுது நடைமுறையில் கோட்சார கிரகங்களினால், 1,2,7,12ம் பாவகங்கள் பாதிக்கப்படுமாயின் சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகளையும் தாமதங்களையும் வழங்க வாய்ப்புள்ளது.

5) திருமண வயதில் உள்ள வது அல்லது வரன் சுய ஜாதகத்தில் மேற்கண்ட விஷயங்கள் யாவும் இல்லாத பொழுது, ஜாதகரே தனது சுய ஜாதகத்தை யோக பங்கத்திற்கு காரணமாக இருந்தால் ( சகவாச தோஷம் ) சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகளையும் தாமதங்களையும் வழங்க வாய்ப்புள்ளது.

6) திருமண வயதில் உள்ள வது அல்லது வரன் தமக்கு வரும் யோக பலன்களை வேண்டாம் என்று உதறும் தன்மை ( பல காரணங்களால் ) கொண்டு  இருப்பாரெனில் சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகளையும் தாமதங்களையும் வழங்க வாய்ப்புள்ளது.

இதை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : துலாம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : அவிட்டம் 1ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகிக்கு வயது 28 நடந்துகொண்டு இருக்கின்றது, திருமணத்திற்க்காக எடுத்த முயற்ச்சிகள் யாவும் தோல்வியில் முடிவடைந்து விட்டது, மேலோட்டமாக ஜாதகத்தை பார்க்கும் பொழுது எவ்வித தோஷமும் அற்ற ஜாதகமாக தெரிந்தாலும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களில் குடும்பம் மற்றும் ஜீவன ஸ்தானத்தை தவிர மற்ற அணைத்தது பாவகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதும், 1,5,7 மற்றும் 11ம் வீடுகள் 200% விகித இன்னல்களை தரும்  பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது கவலைக்கு உரிய விஷயமாகும், மேலும் கடந்த ராகு திசை ஜாதகிக்கு பாதிக்கப்பட்ட விரைய ஸ்தான (3,9ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் ) பலனை ஏற்று நடத்தியது ஜாதகியின் வாழ்க்கையில் திருமண முயற்ச்சிகளில் மிகப்பெரிய பின்னடைவை தந்தது, இருப்பினும் தற்போழுது நடைபெறும் குரு திசை ஜாதகிக்கு வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வரவேற்க தக்கது ( 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் ) மேலும் தற்போழுது நடைபெறும் குரு திசையில் சனி புத்தி ஆயுள் பாவகமான 8ம் பாவக பலனை ( 4,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் 8ம் பாவகத்துடன் சம்பந்தம் )  ஏற்று நடத்துவது இன்னல்களை தரும் அமைப்பாகும்.

மேற்கண்ட ஜாதகிக்கு திருமண தாமதம் ஆக காரணங்கள் கீழ்வருமாறு வகை படுத்தலாம்.

1) சுய ஜாதகத்தில் 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும் , குறிப்பாக களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும் ஜாதகிக்கு திருமண தடைகளை வழங்குவதற்கு முழு முதற் காரணமாக அமைகிறது, ஜாதகியின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மேஷ ராசியில் அமைவது, தெளிவான முடிவுகளை ஜாதகி மேற்கொள்ள இயலாத சூழ்நிலையை உருவாக்கும், ஜாதகியின் சுய முடிவுகள் தாமதங்களையும் இன்னல்களையும் வழங்கும்.

2) கடந்த ராகு திசை ( விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்தி ) ஜாதகிக்கு திருமண வாய்ப்புகளை வெகுவாக தடை செய்தது, தற்போழுது நடைபெறும் குரு திசை ஜீவன ஸ்தான வழியில் மட்டும் நன்மைகளை தருகிறது, குரு திசையில் தற்போழுது நடைபெறும் சனி புத்தியும் ஜாதகிக்கு சாதகமான அமைப்பில் இல்லை என்பது வருந்தத்தக்கது.

3) நடைபெறும் குரு திசை நன்மையை வழங்கி, சனி புத்தி இன்னல்களை தருவது திருமண முயற்ச்சிகளை தடை செய்கிறது, மேலும் கேட்சார கிரக நிலையும் ஜாதகிக்கு சாதகமாக இல்லை.

4) அடிப்படையில் சுய ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் வலிமை இழந்து காணப்படுவதும், களத்திர ஸ்தானம் பாதிக்கப்படுவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபம், 7ம் வீடான துலாம், 12ம் வீடான மீனம் ஆகியவைகள் கடுமையாக பாதிக்கப்படுவதும், ஜாதகிக்கு இல்லற வாழ்க்கை அமைவதில் அதிக தடைகளையும் தாமதங்களையும் வழங்குகிறது, 

ஜாதகிக்கு திருமணம் கைகூடும் கால நேரம் :

தற்போழுது நடைபெறும் குரு திசை, சனி புத்தியில் எதிர்வரும் செவ்வாய் அந்தரத்தில் ( 26/01/2017 முதல் 21/03/2017 வரை ) திருமண வாய்ப்புகள் கைகூடி வரும், கூடி வரும் நல்ல வாய்ப்பினை ஜாதகியும், ஜாதகியின் பெற்றோரும் ஏற்றுக்கொண்டு ஜாதகிக்கு நல்ல இல்லற வாழ்க்கையை அமைத்து தருவது அவசியமாகிறது, இதை தவிர்த்தால் குரு திசை சனி புத்தியில் வரும் குரு அந்தரத்திலோ, அதற்க்கு அடுத்து வரும் புதன் திசை புதன் புத்தியிலோ ஜாதகிக்கு திருமணம் கைகூடி வரும் வாய்ப்பு உண்டாகும் என்பதை கவனத்தில் கொள்வது நலம் தரும்.

குறிப்பு :

ஜாதகிக்கு சுய ஜாதகம் சற்று வலிமை குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு, தமக்கு வரும் வரன் ஜாதகத்தை வலிமை மிக்கதாக தேர்வு செய்வது, தம்பதியரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், மாறாக வலு குறைவான வரன் ஜாதகத்தை தேர்வு செய்தால், தாம்பத்திய வாழ்க்கையில் பல இன்னல்களை ஜாதகி எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதை ஜாதகியும், ஜாதகியின் பெற்றோரும் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696