வியாழன், 21 மார்ச், 2019

சுய ஜாதகத்தில் பாவக வலிமை வழியில் இருந்து ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை !


சுய ஜாதக பலன்கள்

ஒருவரது பிறந்த தேதி நேரம் மற்றும் இடம் ஆகிய குறிப்புகளை வைத்து முறையாக உயர் கணித சார ஜோதிட முறைப்படி கணிதம் செய்து, சுய ஜாதகத்தில் உள்ள லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமை உணர்ந்து, நவகிரகங்களின் திசா புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் லக்கினம் முதல் 12 பாவகங்களின் எந்த தொடர்பை பெற்று பலன்களை வழங்குகிறது என்பதில் தெளிவு பெற்று சுய ஜாதக பலன் கூறும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக துல்லியமான பலாபலன்கள் கிடைக்க பெறுவதுடன், சிறப்பான நன்மைகளையும் எதிர்காலத்தில் யோகமிக்க வாழ்க்கையையும் தன்னிறைவாக பெறுவார் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை அன்பர்களே! இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.
 

லக்கினம் : துலாம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 3ம் பாதம்

1,5,9,ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு லக்கின பாவக வழியில் இருந்து மதிப்பு மிக்க செயல்பாடுகள், அதிகாரம் மிக்க பொறுப்புகள், புகழ் மிக்க பதவிகள், வெகுமதி, கவுரவம், சமூகம் மற்றும் தொழில் துறையில் அபரிவித வளர்ச்சி அரசியலில் வெற்றி, வியாபாரத்தில் அதீத லாபங்கள் என்ற வகையிலும், நல்ல உடல் ஆரோக்கியம், மனதில் தெளிவு, மதி நுட்பம் கொண்டு அனைத்திலும் வெற்றி காணும் யோகம், என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும், சுய தொழில் வெற்றி, ஜீவன வழியில் முன்னேற்றம் என வாழ்க்கையில்  சகல சௌபாக்கியமும் உண்டாகும்.

5ம் பாவக வழியில் இருந்து கலைத்துறையில் வெற்றி, ஆராய்ச்சியில் வெற்றி , இயல் இசை நாடகம் சார்ந்த விஷயங்களில் நல்ல ஞானம், குழந்தைகள் வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கை, சமயோசித புத்திசாலி தானம் கொண்டு  வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு தீர்வு காணும் தன்மை என சகல சௌபாக்கியங்களையும் தரும், விளையாட்டில் ஆர்வம் குலதெய்வ அனுக்கிரகம், மேன்மை மிக்க பொறுப்புகள், புத்திசாலித்தனமான செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை பெரும் யோகம் என்ற வகையில் சிறப்பான எதிர்காலத்தை தரும்.

9ம் பாவக வழியில் நுண்ணறிவு திறன், ஆராய்ச்சி கல்வியில் வெற்றி, அனைவரிடமும் நற்பெயர், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம், உயர்ந்த பாரம்பரியத்தை கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர், ஆன்மீகத்தில் வெற்றி,கடவுள் அனுக்கிரகம், செய்யும் காரியங்களில் பரிபூர்ண நன்மைகளை பெரும் யோகம், பித்ருக்களின் ஆசிர்வாதம், மிதம்மிஞ்சிய ஞானம் என்ற வகையில் சிறப்பை தரும்.

2,6,8,12ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவக தொடர்பை பெறுவது  ஜாதகிக்கு 2ம் பாவக வழியில் இருந்து கல்வியில் தேர்ச்சி, நல்ல ஜீவனம் அமையும் தன்மை, கை நிறைவான வருமான வாய்ப்புகள், வியாபார ஞானம், நிர்வாக திறன், இனிமையான பேச்சு திறன், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, நல்ல நண்பர்கள், புகழ் பரிசு அனைத்திலும் வெற்றி என்ற வகையிலும், பொது மக்கள் ஆதரவு, வெளியூர் வெளிநாடு சென்று வரும் யோகம், ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் பெரும் அதீத வருமான வாய்ப்புகள் என சகல சௌபாக்கியமும் உண்டாகும்.

6ம் பாவக வழியில் இருந்து பதவியில் வெற்றி, உத்தியோக ஆர்வம், பதவியில் திடீர் உயர்வு, அதிகாரிகளிடம் இருந்து வரும் ஆதரவு, சொந்த முயற்சியில் முன்னேற்றம் பெரும் தன்மை, உடல் நலனில் அக்கறை, கடன் சார்ந்த வகையில் முன்னேற்றம், எதிர்பார்ப்புகள் அணைத்த்தும் நிறைவேறும் தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி என்ற வகையில் நன்மையை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து விபத்து அறுவை சிகிக்சை மூலம் உடல் ஆரோக்கியம் பெரும் தன்மை, மருத்துவ செலவினங்கள், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் ஆதரவு மற்றும் அன்பு, மனமகிழ்ச்சி, திருமணம் மூலம் யோக வாழ்க்கை, சரியான முடிவுகளை சரியான நேரங்களில் மேற்கொண்டு சகல வழிகளில் இருந்தும் நலம் பெரும் தன்மை, எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் அபரிவித முன்னேற்றம் என்ற வகையில் சுக போகங்களை வாரி வழங்கும்.

12ம் பாவக வழியில் இருந்து முதலீடுகள் வழியில் இருந்து வரும் அதீத வருமானம், தெய்வீக அனுக்கிரகம், ஆன்மீகத்தில் ஈடுபாடு, பொருளாதார தன்னிறைவு, அதிகப்படியான பொருளாதார வரவுகள், தெய்வீக ஆற்றல் வழியில் இருந்து வரும் முன்னேற்றம், புதிய வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் நலம் பெரும் தன்மை, உறவுகள் வழியிலான ஆதரவு, அனைவரின் ஆதரவு மூலம் பெரும் பொருளாதர முன்னேற்றம், மனநிம்மதி, தெளிவான சிந்தனை, நல்ல அயன சயன சுக போக வாழ்க்கை எதிர்ப்புகளை கண்டு அஞ்சாத மனவலிமை என்ற வகையில் சுக போகங்களை வாரி வழங்கும்.

3,11ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு 3ம் பாவக வழியில் இருந்து நிலையான முன்னேற்றம், சுலப பொருள் வரவு, வீரியமிக்க செயல்பாடு, சகல சௌபாக்கியம், முயற்சிக்கும் காரியங்களில் வெற்றி, இசை ஆர்வம், தொழில் முன்னேற்றம், வியாபார விருத்தி, அரசியலில் உயர் பதவி, தீர்க்காயுள், பெரியோர் ஆதரவு மற்றும் ஆசிகள், புத்தி கூர்மை, நியாயமான முறையில் வியாபார வெற்றி,  விவசாயத்தில் அதீத ஆர்வம், தெய்வீக சிந்தனை, லட்சியங்களை அடைதல், தன்னம்பிக்கை, நூல் ஆசிரியர், பத்திரிக்கை நிருபர், தகவல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி, துணிந்து செயலாற்றும் திறன், அதிர்ஷ்டத்தின் தன்மையை முழுவதும் சுவீகரிக்கும் தன்மை சுய ஜாதகத்தில் உள்ள  யோக பலன்களை முழுவதும் அனுபவிக்கும் வல்லமை என சிறப்பான யோக வாழ்க்கையை நல்கும்.

11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டம், தொழில் வழியிலான அதிர்ஷ்ட வாய்ப்புகளை சுவீகரிக்கும் வல்லமை, முற்போக்கு சிந்தனை மற்றும் செயல்பாடுகள், புதுமை விரும்பி, அனைத்தையும் யூகிக்கும் வல்லமை, எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் போராடி வெற்றி பெரும் மனவலிமை, போதுமென்ற மனம், பல தொழில் செய்யும் யோகம், உறவுகள் பெற்றோர்  வழியில் இருந்து பெரும் அதிர்ஷ்டங்கள் என வெகு சிறப்பான நன்மைகளை ஜாதகி பரிபூர்ணமாக பெறுவார்.

4ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு 4ம் பாவக வழியில் இருந்து தந்தையாருக்கு மிகுந்த பாதிப்பு, ஜாதகியின் குணாதிசயம் வெகு சிறப்பாக அமையும், நல்ல தொழில் முன்னேற்றம், நல்ல குணம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, மண் மனை வண்டி வாகன யோக வழியில் பாதிப்பு, வீடு நிலம் இடம் போன்றவற்றில் இருந்து வரும் இழப்புகள், வாகனத்தில் வரும் வீண் செலவினங்கள், வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்க இயலாத சூழ்நிலை, கருத்து வேறுபாடுகள், பிடிவாத குணம் அல்லது மனப்போராட்டம் வழியில் இருந்து வரும் இழப்புகள், திருமணத்திற்கு பிறகான யோக வாழ்க்கை என்ற வகையில் நன்மையை தரும்.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு 7ம் பாவக வழியில் இருந்து தாமத திருமணம், நல்ல அந்தஸ்துள்ள வாழ்க்கை துணை , அரசியலில் வெற்றி, வியாபாரத்தில் வெகு சிறப்பு, சமூக அந்தஸ்த்து, வாழ்க்கை துணையின் ஆதரவு பரிபூர்ணமாக கிடைக்கும் தன்மை, வெளிநாடுகள் சென்று வரும் யோகம், பிறந்த இடத்தை விட்டு வெகு  தொலைவு சென்ற பிறகு கிடைக்கும் ஜீவன மேன்மை, கூட்டு தொழில் வழியில் பெரும் சிறப்புகள், நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், கூட்டு முயற்சியின்  வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கை என்ற வகையில் மிகுந்த சிறப்பை தரும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு 10ம் பாவக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம், அரசு துறையில் பணியாற்றும் வல்லமை, ஜீவன வழியில் இருந்து வரும் படிப்படியான முன்னேற்றம், கவுரவம் குறையாத யோக வாழ்க்கை, எதிர்பார்த்த விஷயங்கள் ஜாதகிக்கு தேடி வரும் தன்மை, கம்பீரமான வாழ்க்கை முறை, தீர்க்கமான வாத திறமை, சுய தொழில் செய்வதால் வரும் அபரிவித முன்னேற்றம், தெளிவான தொழில் ஞானம், திட்டமிட்டு செயலாற்றும் தன்மை, அனைவரையும் அனுசரித்து செல்லும் யோகம், புதிய மாற்றங்களை  ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் என்ற வகையில் சிறப்பான நன்மைகளை தரும்.

குறிப்பு :

பெரும்பாலான பாவக தொடர்புகள் மிகவும் வலிமையுடன் இருப்பது ஜாதகிக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்கிறது, சுய ஜாதகத்தில் ராகு பகவான் லக்கினத்தில் ( துலாம் ) அமர்ந்து இருப்பது ஜாதகிக்கு ஜென்ம லக்கினம் 100% விகித வலிமையை பெற்று சிறப்பான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், மேலும் ஜாதகியின் அறிவுத்திறன் வெகுவாக பிரகாசிக்கும், வியாபாரத்தில் மிகப்பெரிய வெற்றி கிட்டும், மேலும் கேது பகவான் களத்திர ஸ்தானத்தில் ( மேஷம் ) அமர்ந்து இருப்பது ஜாதகிக்கு நல்ல யோகமிக்க வாழ்க்கை துணையை அமைத்து தரும் என்பதுடன், பிரபல்ய யோகமும் வியாபாரத்தில் விருத்தி, அரசியலில் வெற்றி என்ற நிலையை வாரி வழங்கும், கணவருக்கு மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையும், களத்திர ஸ்தான வழியில் இருந்து ஜாதகி பரிபூர்ண நன்மைகளை சிறப்பாக பெறுவார், வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 12 மார்ச், 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : மகர லக்கினம் ( 2019-2020 )




 மகர லக்கின அன்பர்களுக்கு சத்ரு மற்றும் அயன சயன பாவக வழியில் இருந்து யோக அவயோக நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும் நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : மகரம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாகவும், சர மண் தத்துவ ராசியாகவும் விளங்கும் மகர ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்திலும், விரைய ஸ்தானமான  12ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் சத்ரு ஸ்தானத்தில் அமைவது மகர லக்கின அன்பர்களுக்கு தேர்வு, போட்டி பந்தயம், வழக்குகளில் வெற்றியை தரும், உடல் நலனில் நல்ல ஆரோக்கியத்தையும், ஜாதகர் மேற்கொள்ளும் சுய முயற்சியில் வெற்றியையும் தரும், இது புதன் கேந்திராபதியாக சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே சுபயோக பலாபலன்கள் மகர லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், குறிப்பாக ஜாதகரின் அறிவு திறன் மேலோங்கும், சத்ரு வழியில் இருந்து நன்மை உண்டாகும், கடன் பெறுவதால் முன்னேற்றம் ஏற்படும், கேட்ட இடத்தில் இருந்து தன உதவிகள் கிடைக்க பெறுவீர்கள், சரியான  தகவல் தங்களுக்கு  கிடைக்க பெற்று ஆதாயம் அதிக அளவில் கிடைக்கும், வியாபர துறையில் உள்ள அன்பர்களுக்கும், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கும் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும், திடீர் வருமானம் குறுகிய காலங்களில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், பொது வாழ்க்கையில் உள்ளோருக்கு இனிவரும் காலம் நல்ல எதிர்காலத்தை தரும் என்பதுடன் பதவி உயர்வு நல்ல வெற்றி வாய்ப்புகள் உண்டாகும், துணிந்து செய்யும் காரியங்களில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், மருத்துவம் சார்ந்த தொழில் வழியில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் நல்ல மாற்றங்களை வாரி வழங்குவதுடன் கைநிறைவான வருமானமும் சிறப்பாக கிடைக்க பெறுவீர்கள், சத்ரு ஸ்தான வழியில் எதிர்ப்புகளை வென்று நலம் பெரும் நேரமிது.

அதே சமயம் ராகுவின் சஞ்சாரம் களத்திர ஸ்தானத்தில் புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் அவயோக பலாபலன்கள் மகர லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், எதிர் பாரத செலவுகள், வீண் விரையம், பொருளாதார சிக்கல்கள், எதிரிகள் தொந்தரவு, கடன் தொந்தரவு, மறைமுக எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் இன்னல்கள், நோய் பாதிப்பு, திடீர் மருத்துவ செலவினம், தாங்க இயலாத உடல் தொந்தரவுகள், வயிறு சார்ந்த இன்னல்கள், நரம்பு பாதிப்பு, தவறான புரிதல்கள் மூலம் வாழ்க்கையில் அடையும் நஷ்டங்கள், முன்னேற்ற தடை, தெளிவில்லாத நடவடிக்கைகள், சிந்தனை திறன் பாதிப்பு, உறவுகள் வழியில் இணக்கமற்ற சூழ்நிலை, அதீத உடல் பாதிப்பு, அறுவை சிகிக்சை, போராட்ட வாழ்க்கை முறை, எதிர்பாராத பொருள்இழப்பு , ஜாமீன் தருவதால் வரும் பாதிப்பு என சற்று சிரமங்களை அதிக அளவிலேயே தரக்கூடும்.

விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் மகர லக்கின அன்பர்களின் வாழ்க்கையில் அதீத மனப்போராட்டத்தையும், மனஅழுத்தத்தையும் வாரி வழங்கும், பெரியவர்கள், ஆன்மீக பெரியோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து சரியான விஷ்யங்களை மட்டுமே கிரகித்து நலம் பெற வேண்டிய நேரமிது, பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு வீண் அவப்பெயர் உருவாக அதிக வாய்ப்பு உண்டு என்பதால் அதிக விழிப்புணர்வுடன் இருப்பது நலம் தரும், தெய்வீகத்தில் அதிக ஈடுபாடு மற்றும் பித்ரு வழிபாடு இரண்டும் தங்களுக்கான இன்னல்களை வெகுவாக குறைக்கும், மனதில் ஏற்படும் வீண் கற்பனைகளும், பயமும் தங்களின் வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தரும், போதிய தெளிவில்லாமல் தாங்களே பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கும், மனதில் உள்ள ஆசைகள் யாவும் நிறைவேறாமல் வெறும் கற்பனையாகவே மாறிவிட அதிக வாய்ப்பு உண்டு, எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து வீண் அவமானங்களும் துன்பங்களும் உருவாக வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொண்டு நலம் பெறுங்கள்.

வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு காண முயற்சி செய்வது அவசியமானதாக  படுகிறது, சரியான புரிதலுடன் மனம்விட்டு பேசுவதே தங்களுக்கு நல்லது, நேர்மையில் சிறந்து விளங்கும் மகர லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலம் நேர்மைக்கு பல சவால்களை தரும் என்ற போதும், ஸ்திரமாக நின்று வெற்றி பெறுங்கள், வீட்டில் உள்ள பெரியோர்களை மதித்து நடந்து, அவர்கள் ஆசியுடன் வரும் இன்னல்களில் இருந்து விடுபடுங்கள் அன்பர்களே, மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டு கடமையில் இருந்து தவறாமல் கவுரவத்தை காப்பாற்ற வேண்டிய நேரமிது, கல்வித்துறையில் உள்ள அன்பர்களுக்கு சற்று சோதனைகளை அதிக அளவிலேயே தரக்கூடும், வீண் அவப்பெயரை தவிர்க்க கூட்டாளிகள் நண்பர்கள் போன்றோரை சரியாக தேர்வு செய்யவும், மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவதை தவிர்ப்பதே தங்களுக்கான கவுரவத்தை காப்பாற்றும் அன்பர்களே.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் தனுசு லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து தனுசு லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 8 மார்ச், 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : தனுசு லக்கினம் ( 2019-2020 )




தனுசு லக்கின அன்பர்களுக்கு இனிமை மிக்க யோக வாழ்க்கையை சுவீகரிக்கும் நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : தனுசு 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாகவும், உபய நெருப்பு தத்துவ ராசியாகவும் விளங்கும் தனுசு ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்திலும், லக்கினமான  1ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் களத்திர ஸ்தானத்தில் அமைவது மிகசிறந்த யோக பலன்களை தரும் என்ற போதிலும், புதன் கேந்திராபதியாக சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே சுபயோக பலாபலன்கள் தனுசு லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், மேலும் களத்திர ஸ்தான வழியில் இருந்து வாழ்க்கை துணையின் முழு ஆதரவு, நண்பர்கள் சேர்க்கை மூலம் கிடைக்கும் நல்ல வாய்ப்புகள், கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் திடீர் அதிர்ஷ்டம் என வெகு சிறப்பான நன்மைகளை தரும் என்பது கவனிக்க தக்கது, எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், வெளியூர் அல்லது  வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து மிக பெரிய நன்மைகள் நடைமுறைக்கு வரும், வியாபார விருத்தி அளவில்லா லாபங்களை வாரி வழங்கும் பொதுமக்கள் ஆதரவு, விளம்பரம் மூலம் சிறப்பான நன்மைகளை பெரும் நேரமிது, இதுவரை இருந்து வந்த தடைகள் யாவும் விலகி சுபயோக வாழ்க்கையை பரிபூர்ணமாக சுவீகரிக்கும் வாய்ப்பு உருவாகும்.

அதே சமயம் ராகுவின் சஞ்சாரம் களத்திர ஸ்தானத்தில் புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் அவயோக பலாபலன்கள் தனுசு லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், வாழ்க்கை துணையுடன் இணக்கமற்ற சூழ்நிலை, கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் தொல்லைகள், திருப்தி இல்லாத மனநிலை, சரியான தகவல்களை பெற இயலாமல் முரண் பட்ட கருத்துக்களால் தடுமாறும் தன்மை, எதிர்ப்புகள் மூலம் ஏற்படும் நஷ்டங்கள், தெளிவில்லாத முடிவுகள், சிந்தனை திறனில் குறைபாடு, முன்னேற்றமின்மை, பதற்றம், செயல்திறன் பாதிக்கும், முயற்சிக்கும் காரியங்கள் யாவும் தோல்வியை தரும், உறவுகள் வழியில் இருந்து வரும் அதீத தொல்லைகள், பொருள் இழப்பு, மதிப்பு மரியாதை குறைவு, தொழில் முறை கூட்டாளிகளுடன் முரண்பட்ட கருத்து வேறுபாடு, வரும் இன்னல்களை சமாளிக்க இயலாமல் கடுமையாக பாதிக்கும் நிலை என வெகுவான துன்பங்களை தரக்கூடும்.

உயிர் உடலாகிய ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் தனுசு லக்கின அன்பர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்குவார் என்பது கவனிக்க  தக்கது, சுய கட்டுப்பாடு அதிகரிக்கும், உடல் நலம்  மேலோங்கும், எதிர்பார்க்கும் விஷயங்களில் வெற்றி கிட்டும், மனஉறுதி மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் கூடி வரும், சுய முன்னேற்றத்தில் அதீத ஆர்வமும், செயல்பாடுகளில் வீரியமும் அதிகரிக்கும், தெளிவான நடவடிக்கைகள் மூலம் சரியான முடிவுகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள், தங்களின் அறிவு வெகு பிரகாசமாக நன்மைகளை வாரி வழங்கும், புகழ் வெற்றி சமூக அந்தஸ்த்து தேடி வரும், தங்களின் அறிவு திறனை கண்டு அனைவரும் வியந்து நிற்பார்கள், கேதுவின் ஜென்ம லக்கின சஞ்சாரம் தங்களுக்கு அதீத ஞானத்தையும், தெளிவான சிந்தனையையும் வாரி வழங்கும், முழு அளவில் கேதுவின் ஆதிக்கத்தில் தங்களின் உடல்,மனம் கட்டுக்குள் அடங்கி சுபயோக வாழ்க்கையை சுவீகரிக்கும், எந்த ஓர் சூழ்நிலையையும் சிறப்பாக கையாண்டு வெற்றி பெறுவீர்கள், தொழில் வழியிலான திட்டமிடுதல்கள் தங்களுக்கான நெடுநாள் வளர்ச்சியை உறுதி செய்யும், நல்ல ஞானம் வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றங்களை நல்கும்.

ஆன்மீக பெரியோர்கள் சந்திப்பு, ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு தங்களுக்கு பரிபூர்ணமாக கிட்டும், இது தங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், கல்வியில் தேர்ச்சி, குறிப்பாக ஆராய்ச்சி கல்வியில் வெற்றி, வெளியூர் சென்று படிக்கும் யோகம், கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம், விழிப்புணர்வுடன் செயல்பட்டு சகல நன்மைகளையும் பெரும் தன்மை, எதிர்பாராத அதிர்ஷ்டங்களை சுவீகரிக்கும் யோகம், தனது குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் வழியில் இருந்து  வரும் யோக வாழ்க்கை என சிறப்பு மிக்க நன்மைகள் நடைமுறைக்கு வரும், சுய ஞானம், நல்லறிவு, தெளிவான சிந்தனை போன்றவை தங்களின் வாழ்க்கையில் புதுவித உத்வேகத்தை தருவதுடன், நிலையான முன்னேற்றத்தை வாரி வழங்கும், தங்களின் நம்பிக்கை பரிபூர்ண வெற்றியை தரும், எதிர்பார்ப்புகள் நிறைவேறும், லட்சியம் வெற்றி பெரும், தங்களின் செயல்பாடுகளில் வேகமும் விவேகமும் கலந்து நின்று வெற்றியை உறுதி செய்யும், சமூகத்தில் அனைவரிடமும் நற்பெயர் உண்டாகும் என்பதுடன், அரசியல் அல்லது நிர்வாகத்தில் தலைமை பொறுப்பேற்கும் வாய்ப்பு உண்டாகும், செல்லும் இடங்களிலெல்லாம் சிறப்பை சேர்த்து, கவுரவம் அந்தஸ்த்துடன் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் பெரும் நேரமிது.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் தனுசு லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து தனுசு லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 4 மார்ச், 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : விருச்சிக லக்கினம் ( 2019-2020 )




 விருச்சிக லக்கின அன்பர்கள் பொருளாதார திட்டமிடுதல்கள் மற்றும் சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவேண்டிய நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

 லக்கினம் : விருச்சிகம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஆயுள் ஸ்தானமாகவும், ஸ்திர நீர் ராசியாகவும் விளங்கும் விருச்சிக ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்திலும், குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் ஆயுள் ஸ்தானத்தில் அமைவது மிகசிறந்த யோக பலன்களை தரும் என்ற போதிலும், புதன் கேந்திராபதியாக சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே சுபயோக பலாபலன்கள் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், இது ஜாதகருக்கான திடீர் அதிர்ஷ்டத்தை வழங்குவதுடன், முயற்சிக்கும் காரியங்களில் எதிர்பாராத லாபங்களை வாரி வழங்கும், முன்னேற்றம் என்பது திடீரென அமையும், வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு, நண்பர்கள் உதவி, கூட்டாளிகளின் ஒத்துழைப்பு ஆகியவை விருச்சிக லக்கின அன்பர்களுக்கு அதீத அளவில் நன்மைகளை வாரி வழங்கும், இதுவரை இருந்து வந்த ஆரோக்கிய பாதிப்பு வெகு விரைவாக தீரும், மனதளவில் இருந்து வந்த போராட்டங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி பொங்கும், உறவுகள் வழியிலான உதவிகள் தேடிவரும், சிகிச்சை மூலம் உடல் நலம் பெறுவதற்கான வாய்ப்பை வாரி வழங்கும், அந்நியர் ஆதரவு அல்லது வெளிநாட்டினர் மூலம் ஆதாயம் என்ற வகையில் சிறப்புக்களை தரும், வியாபார ரீதியாக நல்லதொரு வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டாகும், தெளிவான சிந்தனை சரியான முடிவு மற்றும் தீர்க்கமான வாதம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத யோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

அதே சமயம் ராகுவின் சஞ்சாரம் ஆயுள் ஸ்தானத்தில் புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் அவயோக பலாபலன்கள் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், எதிர்பார்ப்புகள் நிறைவேறாது, தன்னம்பிக்கை குறையும், திட்டமிட்ட செயல்கள் யாவும் நடைமுறைக்கு வாராது, செயல்பாடுகளில் மந்தம் ஏற்படும், விழிப்புணர்வு இன்றி செய்யும் காரியங்களில் மிகப்பெரிய தோல்விகளை சந்திக்கும் நிலையை தரும், உறவுகளின் ஆதரவு இன்றி தனித்து நிற்கும் சூழ்நிலை உருவாகும், வாழ்க்கை துணை வழியிலான இழப்புகள் அதிக அளவில் ஏற்பட வாய்ப்பு உண்டு தெய்வ நம்பிக்கை குறையும், விபத்து மற்றும் மருத்துவ செலவினங்களை தவிர்க்க இயலாது, செய்து வந்த தொழில்களில் நஷ்டம் மற்றும் பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு, சகோதர வழி இன்னல்கள் தங்களின் நிம்மதியை குறைக்கும், தைரியம் வெகுவாக குறையும், சரியான நிகழ்வுகள் உணராமல் வதந்திகளை நம்பி செய்யும் அனைத்தும் தங்களுக்கு பேரிழப்புகளை வாரி வழங்கும், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து 200% சதவிகித  இன்னல்களையே தரும் என்பதை கவனத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.

குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் தங்களின் வாழ்க்கையில் அதீத பண நெருக்கடிகளை தர கூடும், நாவடக்கம் தேவை என்பதை உணர வேண்டிய நேரமிது, குறிப்பாக வயதில் பெரியவர்கள், ஆன்மீக பெரியோர்களிடம் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனம் தேவை, வீட்டில் உள்ள பெரியோர்களின் வார்த்தைகளை மதித்து நடப்பது தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், வருமானம் சார்ந்த விஷயங்களில் தெளிவான சிந்தனையுடன் செயல்படுவது அவசியமாகிறது, சேமிப்பு என்பது தங்களுக்கு அனைத்து வித தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள், குடும்பத்தில் வரும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை நாடுவதும் குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசுவதும் தங்களுக்கான நெருக்கடிகளை குறைக்க உதவும், கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு உடனடி நிவர்திகளை மேற்கொண்டு விடுபடுவது அவசியமாகிறது.

 கற்ற கல்வி தங்களுக்கு சரியான ஜீவன மேன்மையை வழங்கும் என்பது கவனிக்க தக்கது, திருமண தடைகள் நீங்கும், நல்லதொரு வாழ்க்கை துணையை தேர்வு செய்து நலம் பெறுங்கள், அவசர கதியில் செய்யும் செயல்கள் யாவும் தங்களுக்கு நீண்ட நாள் நீங்காத இன்னல்களை தந்து விடும், திருமண முயற்சிகள் கூடி வரும் என்ற போதிலும் சரியான வாழ்க்கை துணையை தேர்வு செய்வது தங்களின் கடமை என்பதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள், மற்றவர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்படும் தன்மையை தவிர்ப்பது தங்களுக்கு சகல நன்மைகளையும் தரும், எதிர்பாராத நிகழ்வுகள் மூலம் அதீத பொருள் இழப்புகளை தாங்கள் சந்திக்க வேண்டி வரும் என்பதை கவனத்தில் கொண்டு மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகிறது, நிதி சார்ந்த மேலாண்மை இனிவரும் 18 மாதங்களுக்கும் தங்களுக்கான நெருக்கடிகளை குறைத்து நலவாழ்க்கையை தரும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 8,2ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 8,2ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து விருச்சிக லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 1 மார்ச், 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : துலாம் லக்கினம் ( 2019-2020 )


 துலா லக்கின அன்பர்கள் சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ணமாக பெரும்  நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

 லக்கினம் : துலாம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாகவும், சர காற்று ராசியாகவும் விளங்கும் துலாம் ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்திலும், வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் பாக்கிய ஸ்தானத்தில் அமைவது மிகசிறந்த யோக பலன்களை தரும் என்ற போதிலும், புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே சுபயோக பலாபலன்கள் துலா லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும். தனது அறிவு திறன் கொண்டு வாழ்க்கையில் வரும் இன்னல்களை வெகு எளிதாக கடந்து செல்லும் வாய்ப்பை தரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், முயற்சிக்கும் காரியங்கள் இறை அருளின் கருணையினால் சிறப்பான வெற்றிகளை வாரி  வழங்கும், உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் எதிர் பாராத நன்மைகளையும் பாராட்டு மற்றும் பரிசுகளையும் பெறுவதற்கான வாய்ப்பை வாரி வழங்கும், முன்னோர்கள் ஆசிர்வாதம், பெரியமனிதர்கள் ஆதரவு, மக்கள் செல்வாக்கு, பிரபல்ய யோகம், பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு, சரியான வழியில் வாழ்க்கையில் முன்னேற்றங்களை பெரும் தன்மை, அதீத போராட்டங்களை கடந்து சிறப்பான யோக வாழ்க்கையை பெரும் தன்மை, நல்ல மனிதர்களின் சேர்க்கை, ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பு, அவர்கள் வழியிலான வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், புதுவித சிந்தனைகளின் வழியில் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளும் தன்மை என முழு அளவில் நன்மையான பலன்கள் நடைமுறைக்கு வரும், பயணங்கள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம், எதிர்பாராத சந்திப்புகள் மூலம் நலம் பெரும் தன்மை, அந்நியர் மற்றும் மேல்நாட்டினர் மூலம் வழியில் இருந்து பெரும் ஆதாயம் என ராகுவின் சஞ்சாரம் சுபயோகங்களை வாரி வழங்கும்.

 அதே சமயம் புதன் கேந்திர அதிபதியாக 14 பாகைக்குள் சஞ்சாரம் செய்யும் நிலையில்  துலா லக்கின அன்பர்களுக்கு சற்று இன்னல்களை வெகுவாக தரக்கூடும், குறிப்பாக பெயருக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் செயல்படுவதை தவிர்ப்பது நல்லது, பெரியோர்களை மதித்து நடப்பதும், அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதும் சிறப்பான நன்மைகளை தங்களுக்கு வாரி வழங்கும், முறையான பித்ரு காரியங்களை மேற்கொண்டு அவர்களின் ஆசியின் மூலம் நன்மைகளை சுவீகரிப்பது அவசியமாகிறது, மிக சிறந்த ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று முறையான நிவர்த்தி பரிகாரங்களை மேற்கொண்டு சகல சௌபாக்கியங்களையும் பெற "ஜோதிடதீபம்" அறிவுறுத்துகிறது.

 வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் துலாம் லக்கின அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் தான் சஞ்சரிக்கும் 3ம் பாவக வழியில் இருந்து மிதமிஞ்சிய சுபயோகங்களை வாரி வழங்குவார் என்பதில்  சந்தேகம் இல்லை, எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தரும், வியாபார துறையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு யோக காலமாக கருதலாம், தெய்வீக சிந்தனை மேலோங்கும், கமிஷன் அல்லது தரகு வழியில் ஜீவனம் மேற்கொள்ளும் அன்பர்களுக்கு திடீர் யோக வாழ்க்கை அமையும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், லட்சியம் மற்றும் அபிலாசைகள் அனைத்தும் கைகூடி வரும் சுபயோக நேரமிது, புதிய சிந்தனைகள் அறிவார்ந்த செயல்பாடுகள் அனைத்தும் தங்களுக்கு வெகுவாக கைகொடுக்கும், சகோதர வழி ஆதரவு, உறவுகள் வழியில் இருந்து வரும் உதவிகள் என ஒவ்வொரு நாளும் தங்களுக்கு வெகு சிறப்பான நன்மைகளையும், முன்னேற்றங்களையும் பரிபூர்ணமாக வாரி வழங்கும், இதுவரை இல்லாத அதிர்ஷ்ட வாழ்க்கையை அனுபவிக்கும் யோகம் உண்டாகும், கல்வி துறையில் அரசு பணியில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத நன்மைகளும் முன்னேற்றங்களும் கிடைக்க பெறுவார்கள், வியாபாரிகளுக்கு லாபம் பன்மடங்கு கூடி வரும், புதிய தொழில் செய்வோருக்கு இனிவரும் காலம் மிகுந்த சிறப்புக்களையும், அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல வாய்ப்புக்களையும் வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்பதனால் முயற்சித்து சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ணமாக பெறுங்கள்.

தகவல் தொழில் நுட்பம், உயர் கல்வி, பட்டய படிப்பு என துலா லக்கின  அன்பர்களுக்கு கேது பகவானின் சஞ்சாரம் வெகுவான சிறப்புகளை வாரி வழங்கும், புதிய யுக்தியை கையாண்டு குறுகிய காலத்தில் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், சுய அறிவு வெகுவாக பிரகாசிக்கும், பல தொழில் செய்யும் யோகம் உண்டாகும், நல்லவர்கள் சேர்க்கை தங்களின் வாழ்க்கையில் வெகுவான நன்மைகளை வாரி வழங்கும், உயர் ரக தொழில் நுட்பம் சார்ந்த உபகரணங்கள் மூலம் அதீத லாபம் உண்டாகும், வெளிநாடுகளில் இருந்துவரும்  பொருட்கள் மூலம் நல்ல லாபம் உண்டாகும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்களுக்கு மிதம் மிஞ்சிய லாபம் கிட்டும், சுய உழைப்பிற்க்கான பாராட்டுதல்கள் ஊக்குவிப்பு தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், எழுத்து சார்ந்த துறை பத்திரிக்கை துறையில் உள்ள அன்பர்களுக்கு சீரிய முன்னேற்றம் உண்டாகும், கேது பகவானின் வீரிய ஸ்தான சஞ்சாரம் துலா லக்கின அன்பர்களுக்கு சாதிக்க இயலாதது எதுவும் இந்த உலகில் இல்லை என்பதை உறுதி செய்து வெற்றியாளனாக பரிணமிக்க செய்யும் அன்பர்களே, வாழ்த்துக்கள்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 9,3ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் துலா லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 9,3ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து துலா லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696