புதன், 18 மார்ச், 2015

சுய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகத்தின் திசாபுத்தி நடைமுறைக்கு வரும் பொழுது யோகபலன்களை வாரி வழங்குமா ?




 ஒருவரின் சுய ஜாதகத்தில் ராசி அல்லது அம்ச நிலையிலோ  ஆட்சி, உச்சம் பெற்று இருக்கும் கிரகங்களின் திசாபுத்திகள் நடைமுறைக்கு வரும்பொழுது, ஜாதகர் யோக பலன்களை அனுபவிப்பார், பகை நீச்சம் பெற்று இருக்கும் திசாபுத்திகள் நடைமுறைக்கு வரும்பொழுது, ஜாதகர் அவயோக பலன்களை அனுபவிப்பார், என்பது பொதுவான கருத்தாக உள்ளது, கிரகங்களின் ஆட்சி,உச்சம்,சமம்,நட்பு,பகை,நீச்ச நிலைகளுக்கும், சுய ஜாதகத்தில் தனது திசாபுத்தி காலங்களில் அவர்கள் தரும் பலாபலன்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதே உண்மை.

 மேலும் கிரகங்களின் ஆட்சி,உச்சம்,சமம்,நட்பு,பகை,நீச்ச நிலைகள் யாவும் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு உண்டான வலிமை அமைப்பே அன்றி, சுய ஜாதகத்திற்கு அவர்கள் தரும் பலன் அல்ல வலிமையையும் அல்ல, ஒருவரின் சுய ஜாதக அமைப்பில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டே கிரகங்களின் வலிமையை நிர்ணயம் செய்ய இயலும், மேலும் 12பாவகங்களின் தன்மையை நிர்ணயம் செய்ய இயலும், பொதுப்படையாக சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் ஆட்சி உச்ச நிலையில் உள்ளதால் யோகத்தை செய்யும் என்று முடிவு செய்வதும், பகை நீச்சம் பெற்று உள்ளதால் தீமையை செய்யும் என்று முடிவு செய்வதும் சரியான ஜாதக கணித பலனாக இருக்க வாய்ப்பில்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து.

மேற்கண்ட கருத்தை உறுதி செய்யும் விதத்தில் சரியான உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் தர ஜோதிடதீபம் கடமைபட்டுள்ளது.

உதாரண ஜாதகம் 1



லக்கினம் : மகரம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : ஆயில்யம் 4ம் பாதம் 

இந்த மகர இலக்கின ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை மீனத்தில் உச்சம் பெற்று  தனது  திசாபுத்தி  பலன்களை 17/03/1997 முதல் 17/03/2017 வரை வழங்குகிறார், பொதுவாக இவரது ஜாதகத்தை ஆய்வு செய்யும்  அன்பர்கள் அனைவரும் 5,10க்கு உடைய சுக்கிர பகவான் திசை 3ம் பாவகமான மீனத்தில் உச்சம் பெற்று நடத்துவதால் ஜாதகருக்கு சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும் 5,10ம் பாவக வழியில் இருந்தும் 3ம் பாவக வழியில் இருந்து மித மிஞ்சிய யோக பலன்களை, மகர லக்கினத்திற்கு யோக காரனான சுக்கிரன்  வாரி வழங்குகிறார் என்ற கருத்தை பலனாக சொல்லியிருக்கின்றனர், ஜாதகரும் இதை நம்பி செய்த காரியங்கள் யாவும் தோல்வி மேல் தோல்வியே கிடைத்து இருக்கின்றது, ஜீவன வழியில் இருந்து அதிக சிரமங்கள், திடீர் சொத்து இழப்புகள், சுய தொழில் செய்யும் நோக்கத்தில்  வாங்கிய கடன் தொல்லைகள், மூட நம்பிக்கையின் பெயரில் இழந்த பொருள் இழப்புகள் என ஜாதகர் தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை, ஜோதிடர்கள் கூறிய பலனுக்கு நேர்எதிரான பலாபலன்களை அனுபவித்து கொண்டு  இருக்கிறார், ஜாதகரின் இந்த நிலைக்கு காரணம் என்ன ?

சுய ஜாதகத்தில் சுக்கிரன் உச்ச நிலையில் இருந்தாலும் கூட, அவர் தனது திசாபுத்தி காலங்களில் ஏற்று நடத்தும் பாவக பலன்களை பற்றி தெரியாமல் பலன் கண்டதே இதற்க்கு காரணம், இந்த ஜாதகருக்கு உண்மையில் சுக்கிரன் மீனத்தில் உள்ள 2ம் பாவகத்தில் அமர்ந்து  தனது திசையில் 6,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 4,10ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் பலன்களை தருவது, ஜாதகருக்கு வந்த இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணமாக கொள்ளலாம்.

ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 4ம் பாவக வழியில் இருந்து தனது சொத்து வண்டி வாகனம் என அனைத்தையும் திடீரென இழந்து வாடும் சூழ்நிலையை தந்தது, சுக போக வாழ்க்கைக்கு ஆசைபட்டு சொத்து சுகத்தை அனைத்தையும் இழக்கும் தன்மையையும், தனக்கு உள்ள சொத்துகளை துச்சமென மதித்து, அதன் மதிப்பு தெரியாமல் ஜாதகர் அனைத்தையும் இழந்து நிற்கும் தன்மையை தந்தது, 10ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சொந்த தொழில் செய்யும் உத்தேசத்தில் செய்த காரியங்கள் யாவும் பெரிய பின்னடைவையும், பெருத்த நஷ்டத்தையும் தந்தது, தனது முன்னோர்கள் சேர்த்து வைத்திருந்த ஜீவன கௌரவத்தையும் இழந்து, தொழில் முறையில் ஜாதகர் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தார், உச்சம் பெற்ற சுக்கிரன் திசை என்று உசுபேத்திய ஜோதிடர்களின் வழிகாடுதல்களின் பெயரில் அகல கால் வைத்து மிகப்பெரிய நஷ்டங்களை ஜாதகர் சந்தித்தை இவரது நலம் விரும்பிகாளால் கூட தடுக்க இயலவில்லை, மேற்க்கண்டவை  சுக்கிரன் திசை ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதால் ஏற்ப்பட்ட 80% விகித இழப்புகள்.

ஜாதகருக்கு 6,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதே 200% சதவிகித இன்னல்களை வாரி வழங்கியது, அதாவது ஜாதகர் 6ம் பாவக வழியில் இருந்து ஜீவனம் மேற்கொள்வதற்காக வாங்கிய கடனே  வட்டி குட்டி போட்டு கடன்தொகையை விட 10 மடங்கு அதிகரித்து நின்றது, இதன் காரணமாக ஜாதகர் தனது முன்னோர்களின் ஜீவன சொத்துகளையும், பாரம்பரிய சொத்து, பூர்வீக பூமி ஆகியவற்றை அனைத்தும் இழந்து செய்வது அறியாமல் திகைக்க வைக்க, உடல் ரீதியான பிரச்சனைகளுக்காக மருத்துவ செலவுகள் ஒருபக்கம் ஜாதகரை வேறு வழியில் இன்னல்களை வாரி வழங்கியது, 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் எவ்வித அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெற இயலாமல், பிற்போக்கு சிந்தனையுடனும், அறிவார்ந்த செயல்பாடுகள் இல்லாமலும், எவர் எதை சொன்னாலும் அதை உண்மை என நம்பி செய்த காரியங்களில் ஏற்ப்பட்ட பொருள் இழப்புகள் என்பதும் மிக மிக அதிகம், ஜாதகரின் சிந்தனை திறனின் செயல்பாடுகள் முடங்கியதற்கு இதுவும் ஓர் காரணமாகவே கருதலாம், ஆக உச்சம் பெற்ற சுக்கிரன் திசை ஜாதகருக்கு பாதிப்படைந்த பாவக தொடர்புகளை பெற்றதால் ஜாதகருக்கு எவ்வித யோக பலன்களையும் சுக்கிரன் திசை வழங்க வில்லை என்பதே முற்றிலும் உண்மை , பொதுவாக சுய ஜாதகத்தில் கிரகங்கள்  ஆட்சி உச்ச நிலையை கருத்தில் கொண்டு பலன் காணாமல், தனது திசாபுத்தி காலங்களில் எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்ற உண்மை நிலையை உணர்ந்து ஜாதக பலன் காணும் பொழுதே, சம்பந்தபட்ட ஜாதகருக்கு மிக துல்லியமான ஜாதக கணித பலன்களை சொல்ல இயலும் என்பது மறுக்க இயலாத உண்மை.

 உதாரண ஜாதகம் 2

லக்கினம் : மிதுனம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : அவிட்டம் 2ம் பாதம் 

இந்த மிதுன இலக்கின ஜாதகருக்கு மகரத்தில் நீச்ச நிலையில் அமர்ந்த குரு பகவானின் திசை 26/05/2007 முதல் 26/05/2023 வரை நடைபெறுகிறது, தற்பொழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று, ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து நல்ல உடல் நலம், மன நலம், புகழ், வெற்றி, கீர்த்தி ஆகியவற்றை வாரி வழங்குவதுடன், ஜாதகர் தனக்கு வரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகத்தை தருகிறது, 5ம் பாவக வழியில் இருந்து இறை அருளின் கருணையை பரிபூரணமாக பெரும் யோகத்தையும், தனது பூர்வீகத்தில் இருந்துகொண்டே வாழ்க்கையில் சகல யோகத்தையும் பெரும் தன்மையை தருகிறது, ஜாதகரின் நுண்ணறிவு திறன் ஜாதகர் செய்யும் சுய தொழில் அமைப்பில் மிகுந்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்குகிறது, ஜாதகரின் புதிய சிந்தனையும் செயல்பாடுகளும், மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை உறுதி செய்கிறது.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது, ஜாதகரின் நண்பர்கள் தொழில் முறை கூட்டாளிகள் மூலம் மிகுந்த அதிர்ஷ்ட வாய்ப்பையும், சிறந்த உதவிகளையும், எதிர்பாராத வருமான வாய்ப்பையும் பெரும் யோகத்தை தருவது சிறப்பான விஷயமாக கருதலாம், ஜாதகர் செய்யும் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் சிறந்து விளங்கும் தொழில் திறமைகளை பெற்று இருப்பது மேற்க்கண்ட 7ம் பாவக வழியில் இருந்தே என்றால் அது மிகையில்லை. 

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நீடித்த அதிர்ஷ்டத்தையும், முற்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகத்தை தருவது கவனிக்க தக்கது, ஜாதகர் நினைக்கும் எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வருவதும், செய்யும் காரியங்கள் யாவும் நல்ல அதிர்ஷ்ட வாழ்க்கையை தருவது 11ம் பாவக வழியில் இருந்தே, மேலும் ஜாதகருக்கு உதவி செய்ய பலர் காத்து இருப்பது வரவேற்க தக்கது, ஜாதகரின் தேவையும், ஜாதகருடைய தேவைகளையும் நிறைவேற்றும் விதத்தில், ஜாதகரை சுற்றி உள்ளவர்கள் இருப்பது 11ம் பாவகத்தின் வலிமையே, ஆக நீச்சம் பெற்ற குரு திசை ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று, மிக பெரிய  யோக வாழ்க்கையை தனது திசையில் வாரி வழங்குவது ஆட்சி,உச்சம்,பகை,நீச்சம் என்ற வலிமையின் நடைமுறையில் வழங்கும், முரண்பட்ட பலாபலன்களின் தன்மையை மேற்கண்ட உதாரண ஜாதகம் மூலம் நாம் உணர்ந்து கொள்ள இயலும் அன்பர்களே!

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 14 மார்ச், 2015

ராகுகேது தோஷம் சுய ஜாதகத்தில் வழங்கும் அவயோக பலன்கள் !




ஜோதிடதீபம் பொதுவாக, சாய கிரகமான ராகு கேது, சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் அமரும் பொழுது, ஜாதகருக்கு  தரும் யோக பலன்களை பற்றி வெகுவாக பதிவு செய்திருக்கிறது இதற்க்கு முன் எழுதிய கட்டுரைகளில், மேலும் சுய ஜாதகத்தில் ராகு கேது எங்கு அமர்ந்தால் நன்மையை செய்வார்கள் என்று சில விளக்கங்களும், கட்டுரைகளில் தெளிவுபட தெரிவித்திருக்கும், ஆனால் ராகு கேது ஒருவரது ஜாதகத்தில் பாதிப்பான பலனை தரும் அமைப்பில் அமர்ந்து இருப்பின் அவர்கள் தரும் அவயோக பலன்களை பற்றி குறிப்பிட்ட அளவிலேயே பதிவு செய்திருக்கும், இந்த பதிவில் ராகுகேது பாதிப்பை தரும் அமைப்பில் இருப்பின் ஜாதகரின் வாழ்க்கை எவ்வித இனல்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

சாய கிரகங்களான ராகு கேது சுய ஜாதகத்தில் வலிமை பெற்று அமரும் பொழுது எந்த அளவிற்கு யோக பலன்களை வாரி வழங்குகிறதோ? அதை போன்றே பன்மடங்கு அவயோக பலன்களை வாரி வழங்கும் தான் அமர்ந்த நிலையில் வலிமை அற்ற தன்மையுடன் இருப்பின், பொதுவாக சுய ஜாதகத்தில் ராகு கேது பாதிப்பை தாராமல் வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு மிகுந்த நலன்களை தரும், ஒருவேளை ராகு கேது பாதிப்படைந்து அமர்ந்த பாவகத்தின் பலனை நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம்  மற்றும் சூட்சமம்  அல்லது எதிர்வரும்திசை,புத்தி,அந்தரம்  மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகருக்கு நல்லது, ஒருவேளை குறிப்பிட்ட பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகர் அந்த பாவக வழியில் இருந்து பெரும் அவயோக பலன்களை எந்த விதத்திலும் தவிர்க்க இயலாது அனுபவித்தே தீரவேண்டி வரும், மேலும் சாய கிரகங்களுடன் சேர்ந்த கிரகங்களின் பலா பலன்களையும் அனுபவிக்கும் தன்மையை தரும், தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் பலன்களையும் தானே ஏற்று நடத்த ஆரமிபித்து விடும் வல்லமை பெற்றது, இந்த  சாயா கிரகங்களான ராகு கேது  என்றால் அது  மிகையில்லை.

சரியான உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் காண்போம் :



லக்கினம் : கும்பம்
ராசி : துலாம்
நட்சத்திரம் : சுவாதி 4ம் பாதம்

ஜாதகருக்கு கும்ப லக்கினம் ராகு கேது சுய ஜாதகத்தில் முறையே,  தனுசு ராசியில் உள்ள 10ம் பாவகத்தில் ராகுவும், மிதுன ராசியில் உள்ள நான்காம் பாவகத்தில் கேதுவும் அமர்ந்து, 10ம் பாவகத்தையும், 4ம் பாவகத்தையும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கும் வல்லமையை பெறுகின்றனர், இனி ஜாதகருக்கு சாயா கிரகங்கள் தரும் பலன்களை பற்றி சிந்திப்போம்.

பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் சுக ஸ்தானம் எனும் 4ம் பாவகமும், ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகமும் பாதிப்பது ஜாதகருக்கு சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து அதிக இன்னல்களை வாரி வழங்கும், மேலும் பாதிப்பிற்கு சாயாகிரகங்கள் காரணமாக அமைந்தால் ஜாதகரின் நிலை மிகவும் பரிதாப நிலைக்கு ஆளாக்கும், இந்த ஜாதகம் ஆண்  என்பதால் பாதிப்பின் தன்மை மிகவும் கடுமையானதாக அமைந்தது, உத்தியோகம் புருஷ லட்சனம் என்று சொல்வார்கள், இவரது ஜாதகத்தில் ராகு பகவான் ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்து ஜாதகரின் தொழில் மற்றும் வேலை வாய்ப்பை கடுமையாக பாதித்து ஜீவன வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றினார், ஜாதகருக்கு இதுவரை சரியான தொழில் அமையவில்லை, சிறு வேலைகூட கிடைக்கவில்லை, மேலும் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகம் பெற்ற தகப்பனை குறிக்கும் என்பதால், ஜாதகருக்கும் ஜாதகரின் தகப்பனாருக்கும் ஒட்டு உறவு இல்லாமல் செய்தது, தனது தகப்பனார் வழியில் இருந்து பெற வேண்டிய  எந்த ஒரு நன்மையையும் ஜாதகர் பெற இயலாமல், அதிக இன்னல்களுக்கு ஆளானார்.

 ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியாக வருவதால், ஜாதகர் எந்த ஒரு வேலையை செய்தாலும் சம்பந்தபட்ட இடத்தில் இருந்து நர்ப்பெயரோ, முன்னேற்றமோ கிடைக்கவில்லை, கிடைத்தது அனைத்தும் அவமானங்களும், துன்பமும்தான், ஜாதகரை மேற்கண்ட விஷயங்கள் வெகுவாக பாதிப்பை தந்தது, ஜீவன ரீதியான வாழ்க்கையில் ஜாதகர் இதுவரை கடுமையாக போராடிக்கொண்டு வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழ்நிலையே ஏற்ப்பட்டது, எதிர்பாராத சந்தர்ப்பங்களில் ஜாதகரின் கௌரவம் பலரால் கடுமையாக பாதிக்கபட்டது, இதனால் வேலை இழப்பு, தொழில் வெற்றி கிடைக்காமல் ஜாதகர் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி, விரக்தியின் உச்ச நிலைக்கே செல்லும் தன்மையை தந்தது, ஜாதகர் தனது தகப்பனார் வழியில் இருந்து எந்த ஒரு வழிகாட்டுதலும் பெற இயலாமல், தனி ஒருவராக வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திக்க வைத்தது, ஜாதகர் ஜீவன வழியில் தொடர்பு பெற்ற அன்பர்கள் யாவரும் ஜாதகரை தனது சுய லாபத்துக்காக மட்டும் பயன்படுத்தி கொண்டனர், இவருக்கு எவ்வித சிறு நன்மையையும் செய்யவில்லை என்பது கவனிக்க தக்கது.

சொத்து சுகம், வண்டி வாகனம், நிலபுலன்கள் என்ற விஷயங்களை குறிக்கும் சுக  ஸ்தானமான நான்காம் பாவகம் ஜாதகருக்கு மிதுன ராசியில் வியாபித்து, அங்கு அமர்ந்த கேது பகவான், ஜாதகரின் சுக போகமான வாழ்க்கைக்கு, வேட்டு வைத்தார், பொதுவாக 10ம் பாவகம் தகப்பனாரையும், 4ம் பாவகம் தாயரையும் குறிக்கும், இவரது ஜாதகத்தில் இந்த இரண்டு பாவகமும் கடுமையாக பாதிப்பதால், ஜாதகர் சிறுவயது முதல் 10 மற்றும் 4ம் பாவக வழியில் இருந்து நன்மை பெற இயலவில்லை, பெற்றோரை பிரிந்து ஜாதகர் தனது வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்மையை தருகின்றது என்றால், ஜாதகரின் நிலை என்ன ? என்பதை அன்பர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறது " ஜோதிடதீபம் " பெற்றோரை பிரிந்த குழந்தையின் வளர்ப்பும், வாழ்க்கையும் எவ்விதம் இருக்கும், அடிப்படையில் கிடைக்க வேண்டிய பெற்றோரின் பாசமே கிடைக்காத, இந்த ஜாதகரின் வாழ்க்கைக்கு அடிப்படை காரணமாக அமைந்தது, இவரது ஜாதகத்தில் அமர்ந்த சாயா கிரகங்களான ராகுகேது என்றால் அது மிகையில்லை.

சுக ஸ்தானமான 4ம் பாவகம் கேது பகவானால் பாதிப்படைந்ததால், ஜாதகருக்கு குடியிருக்க ஒரு நல்ல வீடு இன்னும் அமையவில்லை, சிறந்த போக்குவரத்து வாகனம் அமையவில்லை, நிம்மதியாக உறங்குவதற்கு வசதியற்ற ஒரு சூழ்நிலையில், ஜாதகர் தனது இருப்பிடத்தை அமைத்துகொள்ளும் சூழ்நிலையை தந்துள்ளது, தான் கற்ற கல்வி வழியில் இருந்தும் ஜாதகரால் பெரிய அளவில் எதையும் செய்ய இயலாவண்ணம், சந்தர்பம் மற்றும் சூழ்நிலைகள் அமைந்தது, மிதுனம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியாக அமைவதால், ஜாதகரின் முயற்ச்சிகள் யாவும் படு தோல்வியை சந்தித்தது, ஜாதகரின் மனமும் மூடநம்பிக்கையால் முடங்கி போனது, பிற்போக்கு சிந்தனைகள் ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதித்து ஜாதகரின் முன்னேற்றத்தை கடுமையாக பாதித்தது, உபய காற்று தத்துவம் என்பதால் ஜாதகரின் அறிவு எவ்வித பலனும் தாராமல், பயனற்று போனது, ஜாதகரின் திட்டங்கள் வெறும் கற்பனையாகவே நின்றது, நடைமுறைக்கு வாராமல், அவரது எண்ணத்திலேயே சமாதி நிலையை கண்டது, ஜாதகரின் முயற்ச்சிக்கும் தன்மை 100% விகிதம் தோல்வியை பெற்றது.

பொதுவாக சுய ஜாதகத்தில் 4,10ம் பாவகங்கள் பெற்றோரை குறிப்பதால், பெற்றவர்களின் அமைப்பில் இருந்து ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையின் தன்மையை இது உறுதி செய்யும், ஆனால் இவரது ஜாதகத்தில் 4,10ம் பாவகங்கள் சாயா கிரகங்களான ராகுகேது பகவானால் பாதிக்க படுவதால், ஜாதகருக்கும் ஜாதகரின் பெற்றோருக்கும், நல்ல உறவு நிலையே அற்றுபோகும் சூழ்நிலையை உருவாக்கியது, ஜாதகரின் லட்சியம், எண்ணம், அறிவு திறனின் செயல்பாடுகள், இறை அருளின் கருணை அனைத்தையும் ஏக காலத்தில் இழந்து, வாழ்க்கையில் போராட்டத்தை அதிக அளவில் சந்திக்கும் தன்மையை தந்தது, தற்பொழுது நடைபெறும் சனி திசையும் ஜாதகருக்கு 4ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையில் உள்ள இன்னல்களையும், எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் கட்டியம் கூறுகிறது, நடைபெறும் சனி திசை, ஜாதகருக்கு கேது அமர்ந்த 4ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, உபய காற்று தந்து அமைப்பில் இருந்து அதிக துன்பங்களையும், சுக ஸ்தான அமைப்பில் இருந்து வரும் பிரச்சனைகளையும் காட்டுகிறது, ஜாதகர் சரியான அமைப்பில் உள்ள வீட்டில் குடியிருந்தால் மட்டுமே, சனி திசை ஜாதகருக்கு 30% விகித நன்மையை செய்ய கூடும், இல்லை எனில் ஜாதகரின் வாழ்க்கை கடுமையாக பாதிப்பதை தடுப்பது குதிரை கொம்பாகவே இருக்கும்.

குறிப்பு :

(சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது நல்ல வலிமையுடன் அமர்ந்தால், அந்த ஜாதகருக்கு அவர்கள் தரும் யோக வாழ்க்கை என்பது அளவில்லாத தன்மையுடன் இருக்கும், ஜாதகரின் யோக  வாழ்க்கைக்கு எவராலும் தடை போட முடியாது, யோக பலனின் தன்மை முழு வீச்சில் வேலை செய்யும், சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது வலிமை அற்ற தன்மையில் அமரும் பொழுது ஜாதகரின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறுவதை, எவராலும் தடுக்க இயலாது, குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்களுக்கு ஒரு வரைமுறை இருக்காது, ஒருவேளை நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ராகுகேது அமர்ந்த பாவக பலனை ஏற்று நடத்தாமல், இருந்தால் ஜாதகர் தப்பித்தார், ஏற்று நடத்தினால் ஜாதகரின் கதி அதோ கதிதான்.)


வாழ்க வளமுடன்  
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 1 மார்ச், 2015

யோகம் உள்ள மனைவி அமையுமா ?வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிர்ஷ்டம் உண்டா?




கேள்வி :

அய்யா எனக்கு யோகம் உள்ள மனைவி அமையுமா ? வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிர்ஷ்டம் உண்டா ?

பதில் : 

அன்பரே தங்களது ஜாதக அமைப்பில் குடும்பம்,பூர்வபுண்ணியம்,களத்திரம் மற்றும் ஆயுள் பாவகம் வலிமை பெற்று இருப்பின் தங்களின் கேள்விக்கு உண்டான பதில் நிச்சயம் உண்டு, மேலும் தங்களது ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் நல்ல வலிமையுடனே உள்ளது, இருப்பினும் தாங்கள் பொருத்தம் பார்க்க அனுப்பிய பெண்ணின் ஜாதகத்தில் இதற்க்கு நேர்மாறாக அமைந்திருக்கிறது, அந்த ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையை பற்றி கிழ்கண்ட வரிகளில்  தெளிவு படுத்துகிறோம், அதன் பிறகு தங்களின் முடிவை நிர்ணயம் செய்யுங்கள்.

பொதுவாக திருமணம் செய்துகொள்வதற்கு வது வரன் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்ளும் பொழுது, அவர்களது ஜாதக ரீதியாக கவனிக்க பட வேண்டிய சில விஷயங்கள் கிழ்கண்டவாறு அமையும்.

1) ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பது அவசியம், குடும்ப ஸ்தானம் வலிமை பெற்று அமைவது தம்பதியரின் குடும்ப வாழ்க்கையில் நல்ல வருமான வாய்ப்புகளையும், பொருளாதார வசதிகளையும் வாரி வழங்கும், தம்பதியரின் ஒருமித்த கருத்துகளை புரிந்துகொள்ளும் வல்லமையை தரும், ஒருவர் நினைப்பதை குறிப்பால் உணர்ந்து குடும்ப வாழ்க்கையை சிறப்பாக நடத்தும் யோகத்தை தரும், இருவரின் பேச்சிலும் இனிமை மேலோங்கும், வெறுப்பு கலந்த வார்த்தைகள் அல்லது வீண் விவாதங்களுக்கு இடமளிக்காமல், குடும்பத்தையும், குடும்பத்தில் உள்ளோரையும் அனுசரித்து செல்லும் சிறப்பான வாழ்க்கையை தரும், மேலும் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு  6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறாமலும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமலும் இருப்பது நல்லது.

2) குழந்தை பாக்கியத்தை வழங்கும் 5ம் பாவகம் வலிமையுடன் இருப்பது தனது சந்ததிக்கு நல்ல வாரிசை பெற்று தரும், எனவே 5ம் பாவகம் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறாமலும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமலும் இருப்பது அவசியமாகும் மேலும் சிறப்பாக கவனிக்க வேண்டிய பாவகமாக 5ம் பாவகத்தை கருதலாம், தம்பதியருக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்த போதிலும் இறை அருளின் கருணையினால், தன்பதியரை பிரிவு என்ற நிலைக்கு தள்ளாமல், பெரியோர்களின் ஆசியுடன் நீண்ட நெடுங்காலம் சிறப்பாக வாழ இந்த பாவகம் துணை புரியும்.

3) கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சிறப்பாக புரிந்துகொண்டு, ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து செல்லும் இனிய வாழ்க்கையை வாரி வழங்குவது களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் என்பதால், இந்த 7ம் பாவகம் இருவரது ஜாதகத்திலும் நல்ல வலிமையுடன் இருப்பது சிறப்பு, மேலும் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறாமலும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமலும் இருப்பது திருமண வாழ்க்கையின் வெற்றியை, பொருத்தம் காணும் பொழுதே உறுதி செய்துவிடும்.

4) கணவன் வழியில் இருந்து மனைவியும், மனைவி வழியில் இருந்து கணவனும் பெரும் யோக வாழ்க்கையை நிர்ணயம் செய்வது ஆயுள் ஸ்தானம் என்று அழைக்கப்படும் 8ம் பாவகம் என்பதால் இருவரது சுய ஜாதகத்திலும் 8ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது சிறப்பு, மேலும் இருவரது ஆயுள் பலத்தையும் விருத்தி செய்யும் என்பதால் இந்த பாவக வழிமையை பற்றி கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம், மேலும் இந்த ஆயுள் பாவகம் 1,6,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறாமலும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமலும் இருப்பது தம்பதியரின் யோக வாழ்க்கையை உறுதி செய்யும்.

5) ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் இருவரது ஜாதகத்திலும் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியம் ஏனெனில், தம்பதியரின் கெளரவம் அந்தஸ்து மற்றும் சமுதாயம் மதிக்கும் வழியில் வாழும் யோக வாழ்க்கையை  வாரி வழங்குவது ஜீவன ஸ்தானம் என்பதால் இருவரது சுய ஜாதகத்திலும் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது சகல நிலைகளில் இருந்தும் யோகத்தை தரும், கௌரவம் குறையாத, கருத்து வேறுபாடற்ற, மணவாழ்க்கையில் பிரிவு நிலையை தாராத தாம்பத்திய வாழ்க்கையை வழங்கும், மேலும் ஜீவன ஸ்தானம் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறாமலும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமலும் இருப்பது நல்லது.

தாங்கள் அனுப்பிய வதுவின் ( பெண் ) ஜாதக நிலை :



1) குடும்ப ஸ்தானம் 6ம் வீட்டுடன் தொடர்பு அடிப்படையில் குடும்ப ஸ்தானம் பாதிப்படைந்திருக்கிறது,
2) பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் 6ம் வீட்டுடன் தொடர்பு, குழந்தை பாக்கிய அமைப்பில் ஆண்  வாரிசு கேள்விக்குறியாக மாற வாய்ப்புகள் அதிகம்.
3) களத்திர பாவகம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம், பெறுவது திருமண வாழ்க்கையில் வரும் இன்னல்களை குறிக்கிறது.
4) ஆயுள் பாவகமான 8ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, இந்த ஜாதகியை மனம் செய்து கொள்பவருக்கு மன நிம்மதி என்பது கேள்வி குறி? மேலும் வீண் விரையங்களையும் இழப்புகளையும் தவிர்க்க இயலாது. 
5) நடைபெறும் சந்திரன் திசை பூர்வ புண்ணியமான 5ம் பாவகம் எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவது மிகுந்த இன்னல்களை சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து 100% விகிதம் தரும்.

ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை இதுவே, எனவே இறுதி முடிவு தங்களின் பார்வைக்கே விட்டு விடுகிறது ஜோதிடதீபம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696