புதன், 20 ஏப்ரல், 2016

சித்திரை,ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு தீங்கு ஏற்ப்படுமா ?


இயற்கையாகவே இந்தியா வெப்பம் மிகுந்த நாடு, தமிழகத்தின் நிலை சொல்லி தெரிய வேண்டியது இல்லை, மேலும் கோடை காலமான பங்குனி,சித்திரை,வைகாசி மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக கடுமையானதாக இருக்கும், குறிப்பாக சித்திரை மாதத்தில் சூரியனின் வெப்பம் தகிக்கும், இந்த காலங்களில் குழந்தை பிறப்பு அமைந்தால், தாயுக்கும் சேயுக்கும் சிறு சிறு உடல் நல குறைவு ஏற்பட கூடும் என்ற காரணத்தினால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பை நமது முன்னோர்கள் தவிர்த்தனர், இதுவே உண்மையான காரணமாக இருக்ககூடும் அன்பர்களே ! 

மாறாக சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளால், குடும்பத்திற்கு ஆகாது, பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆகாது என்பதெல்லாம் முற்றிலும் மூட நம்பிக்கையே அன்றி, சிறிதும் உண்மையில்லை என்பதை அனைவரும் உணர்வது அவசியமாகிறது, இந்த நவீன உலகில் இயற்க்கை வெப்பத்தின் கொடுமையில் இருந்து நம்மை காத்துக்கொள்ள, பல கருவிகள் வந்துவிட்டது, குளிர்ஊட்டி, மின் விசிறி என அதிநவீன கருவிகள் உள்ளது, எனவே சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் உடல் நலம் மற்றும் தாயின் உடல் நலம் காக்க வழியுண்டு, சித்திரை ஆடி மாதங்களில் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தில் உண்மை இல்லை என்பதை "ஜோதிடதீபம்" கிழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு உறுதியாக பதிவு செய்கிறது, மேலும் கண்ணில் தெரியும் கடவுளான சூரியபகவான் உச்ச நிலையை பெரும் மாதம் சித்திரை மாதம் ஆகும், இந்த சித்திரையில் பிறக்கும் குழந்தைகள் இயற்கையாகவே ஆதிக்க சக்தி மிகுந்ததாகவும், அதிகாரம் செய்யும் யோகம் கொண்டதாகவும், தேசஸ் மிகுந்து உடல் வலிமை பெற்றதாகவும் திகழும், சந்திரன் ஆட்சி பெரும் மாதம் ஆடி மாதமாகும், இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகள் அதிர்ஷ்டம் மிகுந்ததாகவும், குறுகிய காலத்தில் மிகப்பெரிய பதவிகளையும், அந்தஸ்தையும் அடையும் என்பதால, மற்ற குழந்தைகளில் இருந்து சிறு வயது முதல் வித்தியாசமான நடவடிக்கைகளை சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் பிறக்கும் குழந்தைகள் கொண்டிருக்கும் என்பதே உண்மை, இதை அறிந்தவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டனர், அறியாதோர் மேற்கண்ட மூட நம்பிக்கைகளில் மூழ்கி முத்து எடுத்துகொண்டு இருக்கின்றனர் .

ஒருவரது சுய ஜாதகத்தில் சூரியன் வலிமை பெற்று இருப்பதும், சந்திரன் வலிமை பெற்று இருப்பதும் சம்பந்த பட்ட ஜாதகருக்கு மிகுந்த யோக பலன்களை வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகர் பிறப்பில் ஏழ்மை நிலையில் இருந்தாலும் ஜாதகர் வளர வளர, வாழ்க்கையில் சகல யோகங்களையும் தங்கு தடையின்றி அனுபவிக்கும் நிலையை தரும், ( சித்திரை மாதத்திலும், ஆடி மாதத்திலும் பிறந்த பல அன்பர்கள் அரசு பதவிகளிலும், அதிகார பதவிகளிலும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது )  ஜாதகருக்கு சிறப்பான உடல் மற்றும் மன நிலையை தரும், எண்ணமும் அறிவு திறனும் சிறப்பாக செயல்படும், ஜாதகரின் லட்சியங்கள் யாவும் வெற்றி பெரும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையை தரும், மிகப்பெரிய அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், மற்றும் மக்கள் செல்வாக்கினை பெற்ற மனிதர்கள் அனைவரின் சுய ஜாதகத்திலும், வலிமை பெற்ற சூரியன் அல்லது சந்திரன் 12 பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை வாரி வழங்கிக்கொண்டு இருப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.

ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வது, பிறந்த மாதமோ, நட்சத்திரமோ, ராசியோ, கிழமையோ நிர்ணயம் செய்வதில்லை, ஜாதகரின் பிறந்த  நேரமும் அதன் அடிப்படையில் அமைந்த லக்கினமும், 12 பாவகங்களின் வலிமை நிலையும், வலிமை பெற்ற 12 பாவகங்களின் பலன்களை, நவகிரகங்கள் தமது திசா புத்திகளில் ஏற்று நடத்தும் பலாபலன்கள் அடிப்படையிலேயே ஒருவரது வாழ்க்கை யோக பலன்களையும், அவயோக பலன்களையும் தருகிறது, மேலும் சுய ஜாதகத்தில் ஓரிரு வினாடிகள் கூட மிகப்பெரிய பாவக வலிமை வித்தியாசங்களை தரக்கூடும், எனவே பிறந்த நேரம் என்பதே சுய ஜாதகத்தை நிர்ணயம் செய்யும் என்பதால், சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பது தீமையை தரும் என்ற மூட நம்பிக்கையை களைவதே சால சிறந்தது.

சித்திரை மாதம் பிறந்த ராஜயோக ஜாதகத்தை இன்றைய சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !



லக்கினம் : மீனம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : விசாகம் 2ம் பாதம் 

சித்திரை மாதத்தில் பிறந்த இந்த ஜாதகருக்கு லக்கினம் முதல் 12 பாவகங்களும் மிகவும் வலிமையான நிலையில் அமைந்திருக்கின்றது, ஜாதகர் பிறந்ததில் இருந்தே இவரது குடும்பம் நல்ல முன்னேற்றங்களையும், பொருளாதார வளர்ச்சியையும் தொடர்ந்து பெற்று கொண்டுதான் இருக்கின்றது, நல்ல உடல் நிலை, சிறந்த மன நிலை, தெளிவான அறிவு திறன், கௌரவம் குறையாத யோக வாழ்க்கை என ஜாதகர் இதுவரை யோக  பலன்களையே அனுபவித்து கொண்டு இருக்கின்றார்.

சுய ஜாதக வலிமை அடிப்படையில் ஜாதகருக்கு நல்ல வளரும் சூழ்நிலையை தந்தது, பால்ய வயதில் அடிப்படை கல்வி சிறப்பாக கற்றார், இளமையில் சிறப்பாக பட்டய கல்வியில் முதன்மையில் தேர்ச்சி பெற்றார், அரசு துறையில் பணியாற்றும் யோகத்தை பெற்றார், சரியான வயதில் திருமணம் அமைந்து நல்ல வாரிசும் அமைந்தது, பதவி உயர்வு ஜாதகரை தேடி வந்தது, சுயமாக தொழில் ஒன்றை கூட்டு முறையில் அமைத்துக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றார், அனைத்து வசதி வாய்ப்புகளையும் அனுபவிக்கும் யோகம் ஜாதகருக்கு கிடைத்துள்ளது கவனிக்க தக்க அம்சமாகும், சுய ஜாதகத்தில்  இதற்க்கு முன் நடைபெற்ற சனி திசை ஜாதகருக்கு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் வீடு வாக்கு குடும்பம் எனும் 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை வாரி வழங்கி உள்ளது, 2ம் பாவகம் ஜாதகருக்கு சர நெருப்பு ராசியான மேஷத்தில் அமைவது, ஜாதகரின் வெற்றிகளை 100% விகிதம் உறுதிபடுத்தியது.

 தற்பொழுது நடைபெறும் புதன் திசை ஜாதகருக்கு 7ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை தரும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோகபலன்களை வழங்குவது, ஜாதகருக்கு புதன் திசையும் அதிர்ஷ்டங்களையும் லாபங்களையும் தொடர்ந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, எனவே சுய ஜாதக பாவக வலிமையே ஜாதகருக்கு யோக, அவயோக பலன்களை   வழங்குகிறது, பிறந்த மாதங்களோ, பிறந்த நாட்களோ, ஜென்ம நட்சத்திரமோ, ஜென்ம ராசியோ அல்ல என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, எனவே சித்திரை மாதம் ஆடி மாதம்  பிறக்கும் குழந்தைகள், குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற மூட நம்பிக்கையை களைவது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 14 ஏப்ரல், 2016

திசா சந்திப்பும், ஏகதிசை நடப்பும் தம்பதியர் வாழ்க்கையில் பிரிவை தருமா?

 
 
திருமண பொருத்ததில் அதிமுக்கியமான பொருத்தமாக கருதபடுவது, ஏக திசை நடப்பு எனும் திசா சந்திப்பு என்றால் அது மிகையில்லை, அதாவது வரணுக்கும் வதுவுக்கும் தற்பொழுதோ, எதிர்காலத்திலோ ஏக திசை நடைமுறைக்கு வருமாயின், தம்பதியரின் வாழ்க்கையில் புயல் அடிக்கும், திருமண வாழ்க்கை மன முறிவை நோக்கி இழுத்து செல்லும், எந்த ஒரு விஷயத்தாலும் தம்பதியரின் வாழ்க்கையில் பிரிவு என்ற நிலையை தடுத்து நிறுத்தி விட முடியாது, எனவே திருமண பொருத்தம் காணும் பொழுது எந்த பொருத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், திசா சந்திப்பு எனும் ஏக திசை நடப்பு இல்லாமல் பார்த்து கொள்வது தம்பதியரின் வாழ்க்கையில் பிரிவு நிலையை தாராது, ஏனெனில் தம்பதியருக்கு எதிர்வரும் காலங்களில் குரு திசை, மற்றும் சனி திசை ஏக காலத்தில் நடைபெறும் என்பதால், குரு திசையில் தம்பதியருக்கு இடையே பிரச்சனை ஏற்ப்பட வாய்ப்புள்ளது, சனிதிசை மிகுந்த தீமையை செய்யும் என்பதால், சனி திசையில் தம்பதியருக்குள் பிரச்சனை ஏற்ப்பட்டு நிச்சயம் பிரிவை தரும், சனி பகவானின் திசை என்றாலே தீமையைதான் செய்யும் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய தேவையில்லை, எங்களது தலை சிறந்த ஜாதகத்தின் கணிப்பை மீறி திருமண செய்தால், அதற்க்கு பிறகு வரும் இன்னல்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

என்று பொருத்தம் பார்க்க சென்ற உங்களை மிரட்டினால், துண்டை காணம் துணிய காணம் என்று ஓட்டம் பிடிப்பீர்களா? மாட்டீர்களா ? இவர்களது ஜாதக பொறுத்த கணிதத்தில் கல்லை கொண்டுதான் அடிக்க வேண்டும், மேற்கண்ட வாதத்திற்கு உற்பட்ட வது வரனின் ஜாதகத்தில் உள்ள உண்மை நிலையை ஆய்வு செய்வோம் அன்பர்களே ! இவர்களின் கூற்படி தம்பதியருக்கு திருமணம் நடைபெற்றால் வாழ்க்கையில் ஏக திசை நடைபெறும் காலத்தில் திருமண வாழ்க்கையில் பிரிவை தருமா? குரு,சனி திசை தம்பதியருக்கு இன்னல்களை தருமா? என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

வரன் ஜாதகம் :

லக்கினம்: சிம்மம்
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : மிருகசீரிடம் 1ம் பாதம் 

வது ஜாதகம் 


லக்கினம் : ரிஷபம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 3ம் பாதம் 

வரனின் ஜாதகத்தில் தற்பொழுது குரு திசை நடைமுறையில் உள்ளது, வதுவின் ஜாதகத்தில் தற்பொழுது ராகு திசை நடைமுறையில் உள்ளது,

இருவருக்கும் நடைபெறும் திசை தரும் பலன்கள் பற்றி சிந்திப்போம் :

ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் குரு திசை 2,6,8,12ம் வீடுகள் ஜீவன  ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2ம் பாவக வழியில் இருந்து நல்ல வருமான வாய்ப்புகளையும், சிறந்த பேச்சு திறமையையும்,  இனிமையான குடும்ப வாழ்க்கையையும் தரும், 6ம் பாவக வழியில் இருந்து பதவியில்  வெற்றி, பதவி உயர்வு, அதிகாரிகள் உதவி, சொந்த முயற்ச்சியில் வெற்றி பெரும் யோகம், நல்ல உடல் நிலை, சிறப்பான பொருளாதார வளர்ச்சியை தரும், 8ம் பாவக வழியில் இருந்து நல்ல பொருளாதார முன்னேற்றத்தை  விரைவில் அடைதல், வசதிமிக்க உத்தியோகம், திடீர் பதவி உயர்வு, வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டம் என்ற  வகையில் யோகத்தை தரும், 12ம் பாவக வழியில் இருந்து எதிரிகள் சூல்சியே ஜாதகருக்கு சாதகமாக மாறி நன்மையை செய்யும், நல்ல அயன சயன சுகத்தை தரும், திடீர் பதவி உயர்வு, தொழில் துறையில் திடீர்  முன்னேற்றம், மன நிம்மதியான வாழ்க்கை என்ற வகையில் குரு திசை ஜாதகருக்கு யோகத்தை  தரும்.

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் ராகு தசை 1ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள் வெளிவட்டார பழக்க வழக்கம் மூலம் பெயரும் புகழும் கிடைத்தல், நல்ல வாழ்க்கை துணை கிடைத்தல், வாழ்க்கை துணை வழியில் இருந்து யோக வாழ்க்கை, பொதுமக்கள் ஆதரவு, சமூகத்தில் பெயரும் புகழும் கிடைத்தல் என்ற வகையில் யோகத்தை தரும்.

ஜாதகிக்கு அடுத்து வரும் குரு திசை 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4ம் பாவக வழியில் இருந்து நல்ல சுக  போகங்களையும், நிறைவான சொத்து சுக சேர்க்கை மற்றும் வண்டி வாகன  யோகத்தையும் ஸ்திரமாக வாரி வழங்கும், 10ம் பாவக வழியில் இருந்து திடீர் தொழில் முன்னேற்றங்களையும், கெளரவம் குறையாத யோக வாழ்க்கையையும், ஜீவன வழியில் இருந்து நல்ல முன்னேற்றங்களையும்,  நிலையான பதவியையும், தொழில் துறையில் நல்ல  முன்னேற்றத்தையும் தரும், எனவே வரன் வதுவின் ஜாதகத்தில் நடைபெறும் குரு திசை மிகுந்த யோக பலன்களையே வாரி வழங்கும் என்பது தெளிவாகிறது.

அடுத்து வரும் சனி திசை வரன் வதுவுக்கு தரும் பலாபலன்கள் :

ஜாதகருக்கு அடுத்து வரும் சனி திசை 6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்க தக்க அம்சமாகும், ஜாதகர் சனி திசை காலங்களில் பதவியில் வெற்றி, செய்யும் தொழில் அபிவிருத்தி, திடீர் முன்னேற்றம், தான் செய்யும்  காரியங்களில் நல்ல முன்னேற்றம், எதிர்ப்புகள் அகலும் தன்மை, எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் யோகம், திடீர் அதிர்ஷ்டம் என்ற வகையில் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

ஜாதகிக்கு அடுத்து வரும் சனி திசை 1ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது, ஜாதகிக்கு தனது கணவன் வழியில் இருந்து அனைத்து நன்மைகளையும் வாரி வழங்கும், தாம்பத்திய வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியை தரும், மக்கள் செல்வாக்கும், ஆதரவும் ஜாதகிக்கு மிகுந்த பெயரையும் புகழையும் பெற்று தரும், தனது வாழ்க்கை துணையுடன் இணைபிரியா யோக வாழ்க்கையை சனி மஹா திசை வாரி வழங்கும் .

இதுவே மேற்கண்ட 2 ஜாதகத்தில், குரு,சனி மகா திசை வழங்கும் பலாபலன்கள் ஆகும், இந்த உண்மைக்கு மாறாக பதிவின் ஆரம்பத்தில் மற்றவர்கள் சொன்ன கருத்துகள் அனைத்தும் தேவையற்ற வீண் மன பயத்தையே தரும் என்பதை "ஜோதிடதீபம்" வரன்,வதுவின் உறவுகளுக்கு தெளிவு படுத்தியது.

நவ கிரகங்கள் தனது திசை புத்தி காலங்களில் தரும் பலாபலன்கள்  பற்றிய தெளிவு இல்லாத பொழுதே இதுபோன்ற குழப்பங்கள் ஏற்ப்படும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது, சுப கிரகங்களின் திசாபுத்திகள் அனைத்தும் நன்மையை செய்துவிடுவதில்லை, அசுப கிரகங்களின் திசை புத்திகள் அனைத்தும் தீமையை செய்யும் என்பதும் முற்றிலும் தவறனா கருத்தாகவே உள்ளது, நவகிரகங்களின் திசா புத்திகள் அனைத்தும், சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கு ஏற்ப்பவே தமது திசை புத்திகளில் யோக அவயோக பலன்களை தருகிறது என்பதை கருத்தில் கொள்வது நல்லது.

சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் 100% விகிதம் ஜாதகருக்கு யோக பலன்களே நடைபெறும், மாறாக வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் நடைபெறும் திசை புத்திகள் சுப கிரகத்தின் திசாபுத்திகள் என்றாலும், ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து மிகுந்த இன்னல்களையே வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 9 ஏப்ரல், 2016

அவயோக ( தீமையான ) பலன்களில் இருந்து விடுபட ஜாதகர் செய்ய வேண்டிய பரிகாரங்கள் ​- ( இலக்கின பாவகம் )


லக்கினம் 

கண்ணாடி நமது உருவத்தை பற்றி அறிந்துகொள்ள உதவுவது போல், சுய ஜாதகம் நமது அகம் புறம் ஆகியவற்றை தெளிவாக உணர்ந்துகொள்ள உதவும், சுய ஜாதகம் என்பது லக்கினத்தை அடிப்படையாக கொண்டே இயங்குகிறது, எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் பாதிக்கபடும் பொழுது ஜாதகர் அந்த பாதிப்பில் இருந்து விடுபட எவ்வித பரிகாரங்களை தேடிகொள்வது என்பது பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! 

சுய ஜாதகத்தில் உயிர் உடலாகிய லக்கினம் எனும் முதல் பாவகம் வலிமை இழப்பின், ஜாதகர் இலக்கின பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலை தரும், குறிப்பாக சுய ஜாதகங்களில் லக்கினம் எனும் முதல் பாவகம் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு அதிக அளவிலான பாதிப்பை தரும், மேலும்  லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை வாரி வழங்கும்.

 சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் வாழ்க்கை பாதிக்க படுவதற்கு "ஜாதகரின் செயல்பாடுகளே" காரணமாக அமையும், மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை, ஜாதகரே தவிர்த்து உதறும் சூழ்நிலையை தரும், ஜாதகர் தனது உடல் மற்றும் மனம் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை எடுத்துகொள்ளாமல், தனது படைப்பின் ரகசியம் அறியாமல் சுக போகங்களிலும், கேளிக்கைகளிலும் தனது உடல் மற்றும் மனம் சார்ந்த ஜீவ சக்திகளை வீண் விரையம் செய்வார், ஜாதகர் எடுக்கும் முடிவுகளே சரியானது என வாதம் செய்வார், ஆனால் நடைமுறையில் ஜாதகர் எடுக்கும் முடிவுகள் யாவும், மிகப்பெரிய பின்னடைவை தரும், சரியென்று நினைத்து ஜாதகர் செய்யும் காரியங்கள் யாவும் மிகப்பெரிய இன்னல்களையும், துன்பத்தையும் வாரி வழங்கும், சுய சிந்தனையும், அறிவும் ஜாதகருக்கு பலன் தாராது, ஜாதகரின் மன நிலையை உணர்ந்த மற்றவர்கள் தமது சுய தேவைகளுக்காக ஜாதகரை மிக  சுலபமாக பயன்படுத்தி கொள்வார்கள், இந்த விஷயத்தை ஜாதகர் உணர்ந்துகொல்வதற்கே வெகு காலம் பிடிக்கும்.

மேலும் லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது, ஜாதகரின் உடல் மனம் மற்றும் வளரும் சூழ்நிலை ஆகியவற்றிற்க்கு உகந்ததது அல்ல, சுயமாக ஒரு முடிவு செய்வதற்கும் உகந்தது அல்ல, எதிர்பார்ப்புகள் யாவும் ஒரு காலகட்டத்தில் பொய்த்து போகும், தனிப்பட்ட வாழ்க்கையில் பல  எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், அவசர கதியில் செய்யும் தனது நிலைப்பாட்டால், தனிமையில் கலங்கி நிற்கும் சூழ்நிலையை தரும், தனக்கு சரியான நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் ஜாதகரின் கணிப்பு 100%  சதவிகிதம் தவறிவிடும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை ஜாதகரே உருவாக்கி கொள்வார்கள், வறட்டு பிடிவாதமும், முரன்பட்ட கருத்து வேறுபாடுகளும் சமுதாயத்தில் ஜாதகரை வேறு கோணத்தில் பார்வைக்கு ஆளாக்கி விடும், எந்த ஒரு விஷயமும் ஜாதகருக்கு மிக எளிதில் கிடைக்காது, ஒருவேளை கிடைத்தால், அந்த விஷயங்கள் வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த இன்னல்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், அடிப்படையில் "மானுட பிறவி பயனின்" பலனை அனுபவிக்க இயலாமலே ஜாதகர் தனது வாழ்க்கையை போராட்டத்துடன் வாழ்ந்து முடிக்கும் தன்மையை தரும், எதிர்ப்புகளும், உதவி இன்மையும் ஜாதகரின் மன நிலை மற்றும் உடல் நிலையை கடுமையாக பாதிக்கும்.

 இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம் 
ராசி : மீனம் 
நட்சத்திரம் : உத்திரட்டாதி 1ம் பாதம் 

ஜாதகருக்கு லக்கினம் மகரம், மகரம் சர ராசியில் இயங்குவதால், ஜாதகருக்கு பாதகஸ்தானம் லாபம் மற்றும் அதிர்ஷ்டம் என்று அழைக்கப்படும் 11ம் பாவகமே பாதக ஸ்தானமாக வருகின்றது, மேலும் ஜாதகருக்கு லக்கினம் எனும் 1ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுகின்றது, ( லக்கினம் மட்டுமல்ல, 1,2,3,7ம் வீடுகளும் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெருன்கினறது ) மேலும் ஜாதகரின் பாதக ஸ்தானம் என்பது தனசு ராசியில் வியாபித்து இருக்கின்றது, தனுசு ராசி என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக, உபய நெருப்பு தத்வத்தில் அமைகின்றது, எனவே ஜாதகர் தனது பித்ருக்களின் கர்ம வினை பதிவினை, தனது இலக்கின பாவகம் பாதக ஸ்தான தொடர்பு வழியில் இருந்து அனுபவிக்கும் சூழ்நிலையை தருகின்றது, ஜாதகர் செய்யும் அவசர கதியிலான செயல்கள் அனைத்தும், ஜாதகரின் வாழ்க்கையில் வீண் அவ பெயரையும், இன்னல்களையும் வாரி வழங்கி கொண்டு உள்ளது, ஜாதகரின் அறிவு திறன் எவ்விதத்திலும் ஜாதகருக்கும், ஜாதகரை சார்ந்தவருக்கும் பலன் தரவில்லை, இயற்கையாக ஜாதகர் சுய கட்டுப்பாடு இன்றி செய்யும் காரியங்களால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை தற்பொழுது அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்.

தன்னை விட வயதில் அதிக உள்ள பெரியவர்களின் சாபத்திற்கும், கோபத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை ஜாதகரே உருவாக்கிக்கொண்டு, அதன் வழியில் இருந்து வரும் இன்னல்களையும் சந்திக்கும் நிலைக்கு தள்ளபடுகின்றார், செய்யும் காரியங்கள் அனைத்திலும் தோல்வி, தடைகள், ஜாதகர் எடுக்கும் முயற்சிகள் யாவும் ஜாதகருக்கே பாதகமாக திரும்பும் சூழ்நிலை, தனது முன்னேற்றத்தை பற்றி சிந்திக்காமல் மற்றவர்கள் விஷயங்களில் கவனம் செலுத்தி வீண் அவபெயரை சந்திக்கும் சூழ்நிலை, முற்றிலும் அதிர்ஷ்டமற்ற ஜாதக நிலை, எதிலும் ஆர்வமின்மை, செய்யும் தொழில் வழியில் இருந்து வரும் வருமானத்தை மற்றவர்கள் அனுபவிக்கும் தன்மை, தமது எதிர்காலம் பற்றிய சிந்தனை அற்ற நிலை, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆர்ப்பட்டு தனது உடலையும் மனதையும் வெகுவாக கெடுத்து கொள்ளும் அமைப்பு என, ஜாதகர் தமது வாழ்க்கைக்கு தாமே முடிவுரை எழுதிக்கொண்டு இருக்கின்றார்.

ஜாதகம் என்பது தம்மை பற்றி ஒரு தெளிவு பெறுவதற்கும், எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொள்வதற்கும் சரியான வழிகாட்டுதல்களை வழங்குவதை அறிந்துகொள்ளாமல், தமக்கு அனைத்தும் தெரியும் என்ற மிதமிஞ்சிய அசட்டு தைரியத்துடன், ஜாதகரின் செயல்பாடுகள் அமைந்து இருப்பது வருத்தத்திற்கு உரியதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஜாதகருக்கு இதற்க்கு முன் பெரியோர்கள் வழங்கிய அறிவுரைகளையும், ஜாதக பலாபலன்களையும், பரிந்துரை செய்த பரிகாரங்களையும்  இம்மியளவும் ஜாதகர் ஏற்றுகொள்வதாக தெரியவில்லை "விதி வலியது" ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் கேது திசையும், அடுத்து வரும் சுக்கிரன் திசையும் பாதக ஸ்தான பலனையே ஏற்று நடத்துவது ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையை மிக பெரிய கேள்விக்குறியாக மாற்றும் என்பது மட்டும் உறுதி, இதற்கு முன் நடைபெற்ற புதன் திசை ஜீவன வழியில் இருந்து யோக பலன்களை வழங்கியது, ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல பொருளாதார முன்னேற்றத்தை தந்தது, கேது திசை ஆரம்பித்ததும், பொருளாதாரம் ஆதால பாதாளத்துக்கு சென்று கொண்டு இருப்பதை ஜாதகர் இன்னும் உணரவில்லை என்றே தோன்றுகிறது.

இலக்கின பாவக வழியில் இருந்து ஜாதகர் நலம் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் :

1) தாம் எடுக்கும் முடிவுகள் சரியானது என்ற எண்ணத்தை ஜாதகர் முதலில் விட வேண்டும்.
2) பாதக ஸ்தானம் என்பது ஜாதகருக்கு நெருப்பு தத்துவ ராசி என்பதால், சுய கட்டுப்பாடும், பொறுமையும் அவசியம் தேவை.
3) தம்மை விட வயதில் அதிகம் உள்ள பெரியோர்களின் ஆலோசனையை பெற்று வாழ்க்கை நடத்துவது சகல நலன்களையும் தரும்.
4) பித்ரு வழிபாடு சகல நலன்களையும் வாரி வழங்கும்.
5) சுய ஒழுக்கமும், உடல் மன நலனில் அதிக அக்கறையும் கொள்வது ஜாதகருக்கு நல்லது.
6) தம்மிடம் உள்ள தீய பழக்க வழக்கங்களில் இருந்து ஜாதகர் அறவே விடுபடுவது சகல விதங்களில் இருந்தும் நலம் தரும்.
7) எந்த காரணத்தை கொண்டும் மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது நல்லதல்ல.
8) முறையாக ஆன்மீக தீட்சை நல்ல குருவிடம் பெற்று, தனது நிலையை பற்றி தெளிவு பெறுவது நல்லது. ( வாய்ப்பு குறைவு இருப்பினும் விடா முயற்ச்சி நன்மையை தரும் )
9) பணிவு,அன்பு,ஸ்திரமான மன நிலை, சுய ஒழுக்கம், விட்டு கொடுத்து செல்லும் மன நிலை ஆகியவை ஜாதகரின் வாழ்க்கையில் பாதக ஸ்தான தீமைகளில் இருந்து மீட்டு எடுக்கும்.

குறிப்பு :

பரிகாரம் என்பது சுய ஜாதகத்தில் எந்த பாவகங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதோ, அந்த பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்று கொண்டு, கர்ம வினையினை கழித்து கொள்வதே சிறப்பானது, மேலும் சுய ஜாதக அடிப்படையில் தமக்கு உகந்த கோவில் வழிபாடு, ரத்தின ஆகர்ஷ்ணம், ஹோமம், தான தர்மங்கள் மூலம் சரியான நிவர்த்திகளை தேடி வாழ்க்கையில் சகல நலன்களையும், யோகங்களையும் சிறப்பாக பெறலாம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 2 ஏப்ரல், 2016

களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால், மணமுறிவை தருமா?


சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும் பாவகங்கலான குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் எந்த காரணத்தை கொண்டும் பாதிக்கப்பட கூடாது, ஒருவேளை பாதிக்க பட்டால் சம்பந்த பட்ட ஜாதகர் இல்லற வாழ்க்கையில் இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், குறிப்பாக பெண்களின் ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்கள் பாதிக்க படுவது சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து மிகுந்த இன்னல்களை தரும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது ஜாதகியின் இல்லற
வாழ்க்கையில் தாங்க இயலாத துன்பங்களையும், எதிர்பாராத இழப்புகளையும் கடுமையாக வாரி வழங்கும்.

 ஜாதகி சமுதாயத்திற்கு உற்படாத, கட்டுபடாத முரண்பட்ட வாழ்க்கை முறையையும் வழங்கி விடும், தனது வாழ்க்கை துணை வழியில் இருந்தும், எதிர்பால் அமைப்பினரிடம் இருந்தும் அதிக அளவில் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாக்கும், நடைபெறும் திசா புத்தியும் சாதகமாக அமையாவிடில், சம்பந்தப்பட்ட ஜாதகியின் வாழ்க்கை நரக வாழ்க்கைக்கு இணையான பலன்களை தர ஆரம்பித்துவிடும், இயற்கையாகவே குடும்ப கௌரவம் என்பது பெண்களின் வாழ்க்கை முறையின் அடிப்படையிலேயே அமைவதால், பெண்களின் ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திரம் பாதிக்கபடுவது, ஜாதகிக்கு குடும்பம், சமுதாயம் மற்றும் ஜாதகியை சார்ந்தவர்களுக்கு நன்மையை தரும் அமைப்பு அல்ல, மேலும் ஜாதகியின் வாழ்க்கை பலரின் விமர்சனத்திற்கும் பரிகாசத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும்.

பெண்களின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, அதிக அளவில் சம்பந்த பட்ட ஜாதகியின் வாழ்க்கை துணையான கணவரையே வெகுவாக பாதிக்கும், பாதிப்பின் தன்மை உணர்வதற்கு பாதக ஸ்தானம் சர, ஸ்திர, உபய இயக்க நிலையையும், நெருப்பு,நிலம்,காற்று மற்றும் நீர் தத்துவ ராசிகளின் தொடர்பை தெளிவாக உணர்வது அவசியமாகிறது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : மீனம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சுவாதி 3ம் பாதம் 

ஜாதகிக்கு மீன லக்கினம், உயிர் உடலாகிய லக்கினம் ஜாதகிக்கு தொடர்பு பெறுவது திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகம், எனவே அடிப்படையிலேயே ஜாதகிக்கு வளரும் சூழ்நிலை சிறப்பாக அமையவில்லை, தனது உடல் மற்றும் மன நிலையை தானே சிதைத்துகொள்ளும் தன்மையையும், பெற்றோர் மற்றும் உறவுகளின் ஆதரவில்லாமல் தனது போக்கிற்கு வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தந்தது, ஜாதகி செய்யும் காரியங்கள் யாரும் அறியாவண்ணம் ரகசியமாக அமைந்தது, வழிகாட்டுதல்கள் இல்லாத வாழ்க்கை முறை ஜாதகியின் குணநலன்களை வெகுவாக பாதித்தது, ஜாதகிக்கு லக்கினம் பாதிக்க படுவது,உடல்,மனம் மற்றும் வாழ்க்கை முறையை வெகுவாக பாதித்தது, இந்நிலை தற்பொழுதும் தொடர்வது ஜாதகிக்கு உகந்ததல்ல.

ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் பேச்சு மற்றும் வாக்குவாதம் ஜாதகிக்கு பேரிழப்பை வழங்கியது, இதன் தாக்கம் தற்பொழுதும் தொடர்ந்து கொண்டு இருப்பது வருததக்கது, ஜாதகியின் வருமான நிலை தொடர்ந்து கேள்வி குறியாக இருப்பது பொருளாத பின்னடைவை தொடர்ந்து வழங்கி கொண்டு இருக்கிறது, மேலும் திருமணம் நடை பெற்றும் குடும்ப வாழ்க்கை என்பது ஜாதகிக்கு சிறப்பாக அமையாத சூழ்நிலையே நிலவுகிறது, பல எதிர்ப்புகளை தனது வாக்குவாதத்தின் மூலம் ஜாதகி உருவாக்கி கொள்வது வாடிக்கையாக மாறிவிட்டது, குடும்ப வாழ்க்கையில் ஜாதகிக்கு ஆர்வம் இல்லாத தன்மையும், தேவையில்லாத வாக்குவாதமும் எதிர்பாராத இழப்புகளை ஜாதகிக்கு தொடர்ந்து வழங்கி கொண்டு இருப்பது 2ம் பாவகத்திர்க்கு நன்மை தரும் அமைப்பல்ல.

மேற்கண்ட பாவக வலிமை அற்ற நிலைக்கு, சிகரம் வைத்தார் போல் ஜாதகிக்கு களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, பாதக ஸ்தான பலனை களத்திர ஸ்தான வழியில் இருந்து திருமணம் ஆனா சில நாட்களிலேயே வழங்க துவங்கியது ஜாதகியின் கணவருக்கு, திருமணதிற்கு முன்பு நல்ல வேலையில் ஜாதகியின் கணவர் கைநிறைவான வருமானத்துடன் இருந்தார், திருமணம் ஆனா 10 நாட்களிலேயே ஜாதகருக்கு வேலை பறிபோனது மட்டும் இன்றி, இதுவரை அவருக்கு ஒரு சிறு வேலை வாய்ப்பும் அமையவில்லை, ஜாதகர் வீணாக அலைந்தது மட்டுமே பலனாக கிடைத்தது, தனது மனைவி வழியில் இருந்து 200% விகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை ஜாதகர் பெற்றார், ஜீவன வாழ்க்கை முற்றிலும் முடங்கியது, வருமானம் முற்றிலும் நின்றது, எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் தோல்வியை தழுவியது, மேலும் இதுவரை சிறப்பாக இருந்த, ஜாதகரின் சுய கௌரவமும், அந்தஸ்தும் வெகுவாக  பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது ( இதற்க்கு காரணமாக ஜாதகரின் சுய ஜாதக நிலையும் காரணமாக அமைந்தது கவனிக்க தக்க அம்சமாகும் ) திருமணதிற்கு முன்பு ஜீவன வழியில் இருந்து ஜாதகர் யோக பலன்களை அனுபவித்த போதிலும், திருமணதிற்கு பிறகு ஜாதகரின் சூழ்நிலை நேரெதிராக மாறி ஜீவன வழியில் இருந்து அவயோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தந்து ஜாதகரை திக்குமுக்காட வைத்து கொண்டு இருக்கிறது, தற்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கும் திசா புத்திகள் ஜாதகிக்கு சாதகமாக இருப்பது, ஜாதகியின் இல்லறவாழ்க்கையில் பிரிவை தர  வாய்ப்பில்லை என்ற போதிலும், களத்திர பாவக வழியிலான 200% விகித இன்னல்களை ஜாதகிக்கும், ஜாதகியின் கணவருக்கும் தங்கு தடையின்றி தரும் என்பது கவலைக்கு உரியதாகும்.

பெண்களின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் பாதிக்க படுவது, ஜாதகியின் கணவருக்கு நன்மைகளை தாராது, களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பாதிக்க படும்பொழுது, தம்பதியரின் இல்லற வாழ்க்கை கடுமையாக பாதிக்க படும், திருமண பந்தம் விவாகரத்தில் முடியவும் வாய்ப்புள்ளது, எனவே திருமணதிற்கு முன்பே வாழ்க்கை துணையை ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை உணர்ந்து  தேர்வு செய்வது சிறந்த இல்லற வாழ்க்கையை  அமைத்து தரும், அதற்க்கு முன் தமது ஜாதகத்தில் 2,7ம் பாவக  வலிமையை பற்றி  தெளிவாக தெரிந்து வைத்திருப்பது, தமது வாழ்க்கை துணையை தேர்ந்து எடுக்க சிறப்பான வழிகாட்டுதல்களை வாரி வழங்கும்.

குறிப்பு :

 வரனின் ஜாதகதிலோ, வதுவின் ஜாதகதிலோ 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின், அவருக்கு அமையும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது இல்லற வாழ்க்கையில் வரும் இன்னல்களை தவிர்க்க உதவும், இனிமையான இல்லறம் அமைய வாய்ப்புண்டு, தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்திலும் 2,7ம் வீடுகள் பாதிக்கபடுவதும், பாதக ஸ்தான தொடர்பை பெறுவதும், இல்லற வாழ்க்கையில் மன கசப்பையும், பிரிவு என்ற நிலையையும் நிச்சயம் தரும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்க பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால, 200% விகித இன்னல்களை இருவரும் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது மாற்ற இயலாத ஜாதக நிலையாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696