செவ்வாய், 28 மே, 2019

வெளிநாடு யோகம், தொழில் முன்னேற்றம் - ஜாதக ஆலோசணை !


கேள்விகள்:

1.தற்போது அவருக்கு புதன் தசை சுக்கிர புக்தி நடக்கிறது.
இங்கு நாங்கள் (அமெரிக்காவில்) பல வருடங்களாக இருந்தும் நிரந்தர குடியுரிமை (Green card) கிடைக்க மிக தாமதமாகிறது. அதனால் செய்யும் வேலையில் சிறிது பயம்  இருந்து கொண்டு இருக்கிறது.  Green card க்கு அப்ளையும்  செய்தாகி விட்டது. இன்னும் கிடைக்கவில்லை எப்போது கிடைக்கும்?


பதில் :

 நடைபெறும் புதன் திசை ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று யோக பலன்களை தருவது வரவேற்கத்தக்கது, ஜாதகருக்கு இந்த புதன் திசை தனது சுய உழைப்பின் வழியில் இருந்தும், கற்ற கல்வி, சமயோசித அறிவு திறன் வழியில் இருந்தும், குலதெய்வ ஆசியின் மூலம் சகல சௌபாக்கியத்தையும் தரும், களத்திர ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும், வெளிநாடுகளில் சிறப்பான முன்னேற்றத்தையும் தரும், வாழ்க்கை துணை வழியில் இருந்து யோக வாழ்க்கையை வாரி  வழங்கும், நண்பர்கள் கூட்டு முயற்சி சிறப்பான வெற்றியை தரும், வெளிநாட்டில் ஜீவிக்கும் யோகம் உண்டாகும், லாப ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் பரிபூர்ண அதிர்ஷ்டத்தை பெறுவதுடன், தன்னம்பிக்கை, முற்போக்கு சிந்தனை அதிகரிக்கும், எதிர்ப்புகள் யாவும் களைந்து வெற்றி பெரும் யோகம் உண்டாகும், வெளிநாடு வாழ் குடியுரிமை 24/04/2020க்கு மேல் உறுதியாக கிடைக்கும், நடைபெறும் சுக்கிரன் புத்தி குடியுரிமை அமைப்பில் தாமதத்தை தரக்கூடும்.

2. முதல் பெண் குழந்தை கிடைக்க தாமதம் (5 வருடம்). தற்போது அவளுக்கு 8 வயது. அடுத்து ஆண் குழந்தை உண்டா??

பதில் :

தங்களது சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தை குறிக்கும் 5ம் பாவகம் மிக வலிமையாக இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இருப்பினும் தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவக வலிமையை அறிந்த பிறகே தங்களுக்கு ஆண் வாரிசு அமையுமா ? என்பதை துல்லியமாக கூற இயலும்.

3. இப்போது இருக்கும் வீடு அவ்வளவு திருப்தியாக இல்லை. வீட்டை விற்று இங்கே வேறு ஊருக்கு செல்லலாமா?

பதில் :

எதிர்வரும் சூரியன் புத்தியில் 24/04/2020க்கு மேல் முயற்சி செய்வது வெற்றியை தரும், தாராளாமாக வேறு இடத்திற்கு குடிபெயரெலாம்.


4. இங்கு நிரந்தர குடியுரிமை உண்டெனில் business ஆரம்பிக்கலாமா?

பதில் :

நிச்சயமாக குடியுரிமை கிடைக்கும், தாராளமாக தாங்கள் சுய தொழில் அல்லது  கூட்டு தொழில் ஆரம்பிக்கலாம்.

5.மேலும் எனது கணவரது regular predictions பற்றியும் வேண்டிய பரிகாரம் பற்றியும் விரிவாக தெரியப்படுத்தவும்.

பதில் சுய ஜாதகத்தில்  1,5,7,11ம் வீடுகள் லாபஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கும், மேலும் 2,4,8,10ம் வீடுகளும் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெறுவது சகல சௌபாக்கியத்தையும் வாரி வழங்கும், குறிப்பாக 2ம் பாவக வழியில் இருந்து வருமானம், இனிமையான பேச்சு திறன், குடும்ப வாழ்க்கையில் வெற்றி, இனிமையான வாழ்க்கை என்ற வகையிலும், 4ம் பாவக வழியில் இருந்து சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், நல்ல வசதி மிக்க வீடு, நல்ல குணம் என்ற அமைப்பில் சிறப்பை தரும், 8ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் யோகம், வருமானம், பொருளாதார உதவிகள், ஆதரவு என்ற வகையிலும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை தரும், மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வ சேர்க்கை  அதிகரிக்கும், 10ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தொழில் வழியில் முழு யோகத்தையும் அனுபவிக்கும் வல்லமையை தரும், தொழில் ரீதியான விருத்தி சிறப்பாக அமையும்.

மேலும் 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறந்த  ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகத்தை தருவதுடன் ஆண் வாரிசுக்கான வாய்ப்பை தரும், ஆன்மீக பெரியோர்கள் வழியில் இருந்து வரும் ஆசி ஜாதகருக்கு சகல சௌபாக்கியத்தையும் தரும்.

3,6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது மட்டும் ஜாதகருக்கு சற்று கடுமையான நெருக்கடிகளை தரக்கூடும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் சில தோல்விகளை சந்திக்கும் சூழ்நிலையை தந்த போதிலும் விடா முயற்சி சகல சௌபாக்கியத்தையும் தரும், 6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் உடல் நலனில் அதீத அக்கறை கொள்வதும், கடன் சார்ந்த இன்னல்களில் இருந்து விடுபடுவதும் அவசியமாகிறது, எதிரிகள் தொந்தரவு அதிகம் பாதிக்கும் என்பதால், யாரிடமும் பகைமை பாராட்டாமல் நடந்து கொள்வது சகல நலன்களையும் தரும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு கடுமையான மனப்போராட்டத்தை தரக்கூடும், மன அழுத்தம் மற்றும் உறக்கமின்மையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது, முதலீடு செய்யுமுன் சிந்தனை  செய்து கவனமுடன் செயல்படுவது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696