ஞாயிறு, 24 டிசம்பர், 2023

கடகராசி புனர்பூசம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

 

 கடகராசி "புனர்பூசம் நட்சத்திரம்" கல்வியில் மேன்மையையும், நிர்வாக திறனில் புதுமையையும் வெளிப்படுத்தும் தனித்திறன் வாய்ந்த நட்சத்திரம், கற்றுஉணர்வதிலும் கல்வியை போதிப்பதிலும் சிறப்பான நடைமுறையை கையாளும் வல்லவர்கள், தெய்வீக சக்தி இயற்கையாக அமைந்திருக்கும், பாதுகாப்பது பராமரிப்பது இரண்டும் இவர்களுக்கு "கைவந்தகலை" நினைத்த காரியங்களை சாதிக்கும் வல்லமை பெற்றவர்கள், தொலைநோக்கு பார்வையுடன் எந்த ஓர் விஷயத்தையும் மிக சிறப்பாக அணுகுவார்கள், பொருளாதார அறிவாற்றல் அதிகம் உள்ளவர்கள், பயணங்கள் மூலம் மிகப்பெரிய தனசேர்க்கையை சுவீகரிக்கும் யோகம் பெற்றவர்கள், எண்ணத்தின் வலிமை அதிக அளவில் வெற்றிகளை பெற்றுத்தரும், களங்கமற்ற மனநிலையை பெற்றவர்கள், குழந்தை வளர்ப்பில், குடும்ப பராமரிப்பில், வாழ்க்கை துணை தேவைகளை நிறைவு செய்வதில், தாய் தந்தையர் மற்றும் பெரியோர்களை மனநிறைவு செய்து கவனித்து கொள்வதில் சிறந்தவர்கள், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

அலர்மேல் மங்கை "ஸ்ரீ பத்மாவதி தாயார்"  புனர்பூசம் நட்சத்திர அன்பர்களுக்கு பரிபூர்ண நன்மைகளையும் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் திருக்கோவிலாகும், திருமலை திருப்பதி செல்லும்பொழுது அலர்மேல் மங்காபுரம் சென்று, வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை சுக்கிர ஹோரையில் ( காலை 6:00 முதல் 7:00 வரை ) வெண் வர்ண பட்டு, தாமரை மலர் மாலை சாற்றி வழிபடுவோருக்கு 10நாட்களில் வெகு சிறப்பான சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும் என்பது உறுதி, புனர்பூசம் நட்சத்திர அதிபதி தேவர்களின் தாயான "அதிதி" என்பதால் "ஸ்ரீ பத்மாவதி தாயார்" கடகராசியில் புனர்பூச நட்சத்திரத்தில் உதித்த அன்பர்களின் வாழ்வில் வியக்கத்தக்க சுபயோகங்களை வாரிவழங்குவார், தாயாரின் தரிசனமும் வழிபாடும் புனர்பூசம் நட்சத்திர அன்பர்களுக்கு நிலையான சௌபாக்கியங்களை நல்கும், சிறந்த அறிவுத்திறனும், பொருளாதார முன்னேற்றமும், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியும், திருமண வாழ்வில் கணவன் மனைவி ஒற்றுமையும், குழந்தை பாக்கியமும், புகழ்மிக்க பொறுப்புகளை அலங்கரிக்கும் யோகமும் உண்டாகும். 

 அரசியல் ரீதியான நிர்வாகம், அரசு பதவிகள், அரசு சம்பந்தப்பட்ட தொழில்களில் தங்களுடைய பங்களிப்பை வெற்றிகரமாக வழங்கும் வலிமை பெற்றவர்கள், நிர்வாகத்தில் தனது தனித்துவமான செயல்பாடுகள் மூலம் வியக்கத்தக்க வெற்றிகளை பெறுபவர்கள், கல்வி நிலையங்கள், கல்லூரிகள், விளையாட்டு துறையில் மாணவர்களின் சிறப்பு திறன் உணர்ந்து அவர்களை சரியான பாதையில் வழிநடத்தும் வல்லமை பெற்றவர்கள், உணவு பொருள் சம்பந்தப்பட்ட ஞானமும், உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட முழுமையான புரிதலும் கொண்டவர்கள், ஒருவரை உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் பண்பட்டவர்களாக மாற்றும் வல்லமை பெற்றவர்கள். அன்பு, பாசம், கருணை மனம்  கொண்டு அனைவரையும் அனுசரித்து செல்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே என்றால் அது மிகையாகாது, எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது சுயகட்டுப்பாட்டையும், கடமை கண்ணியத்தையும் விட்டுக்கொடுக்காமல் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழும் யோகம் பெற்றவர்கள் கடகராசி புனர்பூச நட்ச்சத்திர அன்பர்கள், தெய்வீக அனுக்கிரகமும் பல புண்ணிய திருத்தலங்களுக்கு மிக எளிதாக சென்றுவரும் யோகமும், ஆன்மீக பெரியோர்களின் பரிபூரண நல்லாசிகளை மிக எளிதாக சுவீகரிக்கும் யோகமும் இவர்களுக்கு இறைஅருள் வழங்கிய நன்கொடையாகும்.

 குறிப்பு :

கடகராசியில் "புனர்பூசம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள்,நிர்வாக துறையில் மிகப்பெரிய உச்சத்தை தொடும் யோகம் உண்டு, கலை மற்றும் கல்வியில் நிச்சய வெற்றிபெறுவார்கள், திடீர் தனயோகம் அதிர்ஷ்ட வாய்ப்புகள், கமிஷன் தொழில், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான லாபங்கள், நிர்வாக திறமை கொண்டு அரசு ஆதாயம் பெரும் வல்லமை, எதிர்பாராத செல்வாக்கு, பொது சேவையை செய்வதின் வழியில் வரும் புகழ்மிக்க பொறுப்புகள், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தெய்வீகஅனுகூலம், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் என்ற வகையில் மிகுந்த சுபயோக பலாபலன்களை சுவீகரிக்க, மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

சனி, 16 டிசம்பர், 2023

மிதுனராசி புனர்பூசம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!



" புனர்பூசம் நட்சத்திரம் " உயர்ந்த லட்சியங்கள் மற்றும் குறிக்கோள்களை மிக சிறப்பாக வென்றெடுக்கும் வலிமை வாய்ந்த நட்சத்திரம், நோக்கமும் செயலும் இலக்கை நோக்கி சரியாக பாயும் யோகம் பெற்றவர்கள், அர்ச்சுனனின் காண்டீபத்தில் இருந்து வெளிப்படும் அம்புபோல் சென்றடையும் செயல்திறன் பெற்றவர்கள், தெய்வீகத்தில் ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடும், தலைமை பொறுப்பேற்கும் யோகமும், பல இடங்களுக்கு சென்று தனது திறமையை நிரூபிக்கும் வல்லமை பெற்றவர்கள், தனது ஆழ்ந்த அறிவாற்றல் அனைவருக்கும் பயன்தரும் விதத்திலான செயல்களை செய்து புகழ் பெறுவார்கள், மனம் உடல் செயல் மூன்றிலும் ஸ்திரத்தன்மையான செயல்பாடுகளை பிரயோகம் செய்யும் அன்பர்கள், எதிர்கால திட்டமிடுதல்கள், உயரிய நோக்கம், வித்தையில் தேர்ச்சி, எதிலும் வெற்றி, எடுத்துக்கொண்ட காரியங்களில் கண்ணும் கருத்துமாக செயல்படுவது, பொறுப்புகளை மிக சிறப்பாக நிர்வகிக்கும் வல்லமை, பழமொழிகளை கற்றுணர்ந்து புலமை பெறுவது, பல தேசங்கள் சென்றுவரும் யோகம், பயணங்கள் வழியிலான வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை தன்னிறைவாக சுவீகரிப்பார்கள், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

"சமயபுரம் மாரியம்மன்"  புனர்பூசம் நட்சத்திர அன்பர்களுக்கு பரிபூர்ண நன்மைகளையும் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் திருக்கோவிலாகும், வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை சுக்கிர ஹோரையில் ( காலை 6:00 முதல் 7:00 வரை ) சிகப்பு வர்ண பட்டு, மல்லிகை மலர் மாலை சாற்றி வழிபடுவோருக்கு 30நாட்களில் வெகு சிறப்பான சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும் என்பது உறுதி, புனர்பூசம் நட்சத்திர அதிபதி தேவர்களின் தாயான "அதிதி" என்பதால் தாய் வழிபாட்டின் முதன்மையான இடமான "சமயபுரம் மாரியம்மன்" புனர்பூசம் நட்சத்திர அன்பர்கள் வாழ்வில் சுபயோகங்களையும், நன்மைகளையும் முழுமையாக வாரி வழங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை, குறிப்பாக கலைகளில் தேர்ச்சி கல்வியில் மேன்மை, படைப்பு திறன், பலதொழில் செய்யும் யோகம், அயல் தேச பயணங்கள் வழியிலான வெற்றி வாய்ப்புகள், தொல்லியல் மற்றும் சுற்றுலாதுறையில் புகழ் மிக்க பொறுப்புகள், கற்பனை வளம், இயல் இசை நாடகம் அல்லது எழுத்து பணியில் சாதனை புரியும் வாய்ப்பு என புனர்பூசம் நட்சத்திர அன்பர்களின் வாழ்வில் வியக்கத்தக்க மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது.

 வியாபார துறையில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகள், பொதுமக்கள் தொடர்புடைய பணிகளில் சிறப்பான செயல்பாடுகள், பொது வாழ்வில் புகழ்மிக்க பொறுப்புகளை மிக எளிதாக சுவீகரிக்கும் யோகம், அமைதியை நிலைநாட்டும் ஆளுமை திறன், பொறுப்புணர்வுடன் செயல்பட்டு குடும்பநலன் காப்பது, உறவுகளை மிகச்சிறப்பாக வசீகரித்து தமது காரியங்களை சாதிப்பது, திருப்திகரமான செயல்பாடுகள் மூலம் மனநிறைவு பெறுதல், போதும் என்ற மனநிலை, பேச்சு திறன் மூலம் வாழ்வின் முன்னேற்றத்தை வெகு சிறப்பாக நிலைநிறுத்திக்கொள்ளும் யோகம், தெய்வீக சிந்தனை, வருமுன்  காக்கும் தன்மை, நிறைவான வாழ்வை குறைவின்றி வாழும் யோகம், சரியான வழிகாட்டுதல்கள், பொது சேவையை சிறப்பாக செய்து அதன்வழியில் அரசியல் அதிகார பதவிகளை வெற்றிகொள்ளுதல், புகழ் மிக்க பொறுப்புகளை மிக எளிதாக சுவீகரித்தல், அனைத்தையும் அடையும் மனவலிமை, ஞானம் மற்றும் அறிவார்ந்த செயல்பாடுகள், பொதுஅறிவு திறன், கல்வியில் வெற்றி, அரியகலைகளில் தேர்ச்சி, ஆட்சிப்பணி சம்பந்தப்பட்ட கல்வியில் மிகப்பெரிய சாதனை படைக்கும் பேராற்றல், எந்த ஒரு விஷயத்தையும் மிக நுணுக்கமாக அணுகும் வல்லமை, புன்னகை மாறாத பேச்சு திறன், நகைசுவை உணர்வுடன் மற்றவரை மகிழ்விக்கும் வல்லமை, எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் வெற்றிநடை போடும் யோகம் என்றவகையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

குறிப்பு :

மிதுனராசியில் "புனர்பூசம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், விளையாட்டு துறையில் மிகப்பெரிய உச்சத்தை தொடும் யோகம் உண்டு, போட்டி பந்தயங்களில் நிச்சய வெற்றிபெறுவார்கள், திடீர் தனயோகம் அதிர்ஷ்ட வாய்ப்புகள், கமிஷன் தொழில், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான லாபங்கள், தொழில் திறமை கொண்டு அரசு ஆதாயம் பெரும் வல்லமை, எதிர்பாராத செல்வாக்கு, பொது சேவையை செய்வதின் வழியில் வரும் புகழ்மிக்க பொறுப்புகள், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தெய்வீகஅனுகூலம், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் என்ற வகையில் மிகுந்த சுபயோக பலாபலன்களை சுவீகரிக்க, மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

வியாழன், 14 டிசம்பர், 2023

மிதுனராசி திருவாதிரை நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!


" திருவாதிரை நட்சத்திரம் " படைப்பாளியாகவும் புதுமைவிரும்பியாகவும் பிரகாசிக்க வைக்கும் சிறப்பு நட்சத்திரம்,  கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மூன்றாவது உபய காற்று ராசியான மிதுன ராசியில் வியாபித்து இருக்கும் "ராகுவின்" திருவாதிரை நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்கள் புதுமையான சிந்தனை, படைப்புதிறன், அறியகலைகளில் சிறப்பான தேர்ச்சி, தெய்வீகஅனுகிரகம், புலனுக்கு அப்பாற்பட்ட அறிவாற்றல், கலைரசனை, எழுத்தாற்றல், கவி புனையும் வல்லமை, கற்பனைதிறன், எழுத்தை ஜீவனமாக முன்னெடுக்கும் வாய்ப்பு, பத்திரிக்கை ஊடகம், தொலைதொடர்பு, தொலைக்காட்சி போன்றவற்றி சாதிக்கும் யோகம் பெற்றவர்கள், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

 சங்கரநாராயணன் திருக்கோவிலில் (சங்கரன்கோவில்) மார்கழி மாத திருவாதிரை வழிபாடு மிகவும் விமர்சையாக நடைபெறும், அதன்படி திருவாதிரை 7ம் திருநாளில் நடராஜர் சிவப்பு உடை அலங்காரங்கள் செய்து ருத்ரன் அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருள்வார், திருவாதிரை நட்சத்திர அன்பர்கள் இந்த ருத்ரன் அம்ச வழிபாட்டில் கலந்துகொண்டு, சிவப்பு வஸ்திரம் மற்றும் சிவப்புதாமரை மலர் சாற்றி வழிபாடு செய்வது என்பது 9 நாட்களில் சகல சௌபாக்கியங்களையும் திருவாதிரை நட்சத்திர அன்பர்களுக்கு வாரி வழங்கும் வழிபாடு ஆகும், குறிப்பாக கலைதுறையில் வெற்றி, அரசியல் அதிகாரம், அரசு துறையில் வேலைவாய்ப்பு, அதிகாரம்மிக்க பதவிகள், வியாபாரத்தில் வெற்றி, பலதொழில் செய்யும் யோகம், பத்திரிகை மற்றும் ஊடக துறையில் வெற்றிவாய்ப்பு, மக்கள் துயர்துடைக்கும் பொதுவாழ்வில் தொடர் வெற்றிகள், ஏஜென்சி மற்றும் கமிஷன் வழியிலான பொருளாதர முன்னேற்றங்கள், சேவை தொழில் வழியிலான மிகப்பெரிய வளர்ச்சி, பொதுமக்கள் ஆதரவு வழியிலான அதிகாரங்கள், உடல் மனம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து மற்றவர்களை காப்பாற்றும் வல்லமை என மிகுந்த சிறப்புகளை தன்னிறைவாக வழங்கும்.

 புதுமையான விஷயங்களை உலகுக்கு அறிமுகம் செய்து அதன்வழியிலான சுபமுன்னேற்றங்களை மற்றவர்களுக்கு வழங்கும் அறிவுத்திறன் மிகுந்தவர்கள், கற்ற கல்வியை தனது சுய முன்னேற்றத்திற்கும், ஆரோக்கியமான சமுதாயம் காண்பதற்கும் உபயோகிக்கும் வல்லமை பெற்றவர்கள், அதிகாரங்களை நடைமுறைப்படுத்தவும், நிர்வாக திறன் கொண்டு வாழ்வை நெறிப்படுத்தவும் இவர்களுக்கு மிக எளிதான காரியமாக அமையும், மற்றவர்கள் தோல்வியடையும் துறையில் இவர்களின் வெற்றி அபரிவிதமானதா இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது, இவர்களை சார்ந்து இருப்பவர்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவுஇருக்காது, சுயநலம் இன்றி செயல்படுவார்கள், சுய கட்டுப்பாடு, உண்மை சத்தியம் போன்றவற்றை தமது வாழ்வில் சிறப்பாக கடைபிடிக்கும் சத்திய சீலர்கள், ஒழுக்கம் பண்பாடு நாகரீகம் போன்ற நற்குணங்களால் அனைவராலும் போற்றப்படும் யோகம் உண்டு, தனது எழுத்து மூலம் உலகில் பலமாற்றங்களையும் அறிய பல சாதனைகளையும் செய்யும் வல்லவர்கள், புதிய கருவிகளையும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களையும் மிக சிறப்பாக கையாளும் அறிவாற்றல் சிறு வயதுமுதலே இவர்கள் பெற்று இருப்பது அதிசயிக்கத்தக்க விஷயமாகும்.

குறிப்பு :

மிதுனராசியில் "திருவாதிரை" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், தகவல் தொழில் நுட்பம், ஊடகம்  மற்றும்  பத்திரிகை துறையில் சாதனை புரியும் யோகம் பெற்றவர்கள், கமிஷன் ஏஜென்சி தரகுதொழில் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியில் சிறப்பான முன்னேற்றத்தை நல்கும், தொலைத்தொடர்பு சாதனங்கள் மின்னணு கருவிகள், கணினி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் வழியில் பெரிய தனசேர்க்கையினை பெறுவார்கள், சிறந்த திட்டமிடுதல்கள் இவர்களது வாழக்கையை சிறப்பாக நிலைநிறுத்தும், தெய்வீகம் மற்றும் ஆன்மிகம் இவர்களது வாழ்வை பிரகாசிக்க வைக்கும், இயற்கையாவே  இவர்களுக்கு இறையருளின் தரிசனம் கிட்டும், சுயமாக வாழ்வில் அறிய பல சாதனைகளை படைக்கும் பேராற்றல் இவர்களுக்கு நிச்சயம் உண்டு,  மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696

செவ்வாய், 12 டிசம்பர், 2023

மிதுனராசி மிருகசீரிடம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

 "மிருகசீரிடம் நட்சத்திரம்" கணிதம் மற்றும் வியாபாரநுணுக்கமும் ஒருங்கே அமையப்பெற்ற அருமையான நட்சத்திரம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மூன்றாவது உபய காற்று ராசியான மிதுன ராசியில் வியாபித்து இருக்கும் "செவ்வாயின்" மிருகசீரிடம் நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்கள் இயற்கையிலேயே வியாபர தந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தகவல் தொழில் நுட்ப அறிவுத்திறன் கொண்டவர்கள், இவர்களது அறிவுத்திறன் என்பது சிக்கலான பல பாதுகாப்பு விஷயங்களையும், வியாபார ரீதியான திட்டமிடுதல்களையும் மிக லாவகமாக கையாளும் தன்மை பெற்றவர்கள், கருத்து பரிமாற்றம், புதிய தொழில் நுட்ப கருவிகளை கண்டுபிடிப்பது மற்றும் கையாள்வது, எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் தைரியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், விளையாட்டு துறையில் புகழ்மிக்க பதவி மற்றும் பரிசுகளை சுவீகரிக்கும் யோகம், உலகப்புகழ், உழைப்பிற்க்கான முழுமையான அங்கீகாரம் போன்றவற்றை மிக குறிக்கியகாலத்தில் பெற்று சாதனை புரிவார்கள், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

நாமக்கல் "நரசிம்மர் திருக்கோவில்" மிருகசீரிடம் நட்சத்திரம் மிதுன ராசி அன்பர்களுக்கு நினைக்கும் காரியங்கள் யாவற்றையும் சாதிக்கும் பேராற்றலை 18நாட்களுக்குள் வாரி வழங்கும் வல்லமை பெற்ற திருக்கோவில், நரசிம்மரும் நாமகிரி தாயாரும் மிருகசீரிடம் நட்சத்திரம் மிதுன ராசி அன்பர்களுக்கு உலகப்புகழ், வியாபார வெற்றி, திருமணயோகம், அரசுத்துறை ஆதாயங்கள் என்ற வகையில் சிறப்பான நற்பலன்களை தடையின்றி வாரி வழங்குவார்கள், வளர்பிறை செவ்வாய் அல்லது வெள்ளி கிழமைகளில் செவ்வாய், சுக்கிர ஹோரையில் வெண்ணிற பட்டு வஸ்த்திரம், மல்லிகை மலர்மாலை சாற்றி, நரசிம்மர் மற்றும் தாயாரை வழிபாடு செய்யும் அன்பர்களுக்கு மேற்சொன்ன சுபயோக பலன்கள் என்பது மூன்று வாரங்களில் வெகுசிறப்பாக நடைமுறைக்கு வரும், குறிப்பாக தொழில் ரீதியான தடை, திருமண தடை, புத்திர பாக்கிய தடைகளை சந்தித்துக்கொண்டு இருக்கும்  மிருகசீரிடம் நட்சத்திரம் மிதுன ராசி அன்பர்களுக்கு சிறப்பான நற்பலன்கள் நடைமுறைக்குவரும் என்பது உறுதியான அம்சமாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரம் மிதுன ராசி அன்பர்கள் விளையாட்டு மற்றும் வியாபார துறையில் கொடிகட்டி பறக்கும் யோகம் கொண்டவர்கள், சிறு வயது முதலே விளையாட்டு துறையில் அதீத ஆர்வமும், மிக எளிதான வெற்றிகளையும் பெறுவார்கள், பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை மிக சிறப்பாக கையாளும் தன்மை பெற்றவர்கள், மேலும் திட்டமிட்டு காரியங்களை சாதிக்கும் குணம் பெற்றவர்கள், இவர்கள் சொல்வதுபோல் செயலிலும் தமது திறமையை காட்டும் வல்லவர்கள், குறிக்கோள்கள் லட்சியங்கள் போன்றவற்றில் தங்களது தனித்திறமையை வெகு அற்புதமாக வெளிப்படுத்துவார்கள், எந்த ஒரு விஷயத்தையும் சரியான கோணத்தில் அணுகும் வல்லமை பெற்றவர்கள், இவர்களது அறிவுரைப்படி செய்யும் காரியங்கள் மிகுந்தபாதுகாப்புடன் கூடிய வெற்றிகளை வாரிவழங்கும், நிதி சம்பத்தப்பட்ட திட்டமிடுதல்கள், சேமிப்பின் மூலம் வாழ்வை முன்னேற்ற பாதையில் நகர்த்திச்செல்லும் வல்லமை, தன்னிறைவான வருமான வாய்ப்பு, தொழில் சார்ந்த விஷயங்களில் தொலைநோக்கு பார்வை மற்றும் திட்டமிடுதல்கள், தொழிலாளர்கள் மற்றும் வேலையாட்களை நெறிப்படுத்தி, உயர்ந்த லட்சியங்களை மிக சிறப்பாக சுவீகரிக்கும் யோகம் என்ற வகையில் மிகுந்த நற்பலன்களை பெறுவார்கள்.

குறிப்பு :

மிதுனராசியில் "மிருகசீரிடம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், தகவல் தொழில் நுட்ப அறிவாற்றல் வியாபார நுணுக்கம் மற்றும் விளையாட்டு துறையில் சாதனை புரியும் யோகம் பெற்றவர்கள், விரல்நுனியில் சகல விஷயங்களையும் வைத்திருக்கும் வல்லமை பெற்றவர்கள், திட்டமிடுதல் என்பது இவர்களின் தாரக மந்திரமாகும், செய்யும் காரியங்களில் மிக நேர்த்தியான விஷயங்களை கடைபிடிப்பவர்கள், சிரமமான நேரங்களில் தனது அறிவாற்றல் கொண்டு சிக்கல்களை தீர்க்கும் வல்லமை பெற்றவர்கள், இயல் இசை நாடக துறையில் புகழ்மிக்க கவுரவ பதவிகளை சுவீகரிப்பார்கள், ரகசிய கலைகளையும் தற்காப்பு விஷயங்களையும் முறைப்படி கற்றுணர்ந்தவர்கள், தேவையான நேரத்தில் சரியான முடிவுகளை மேற்கொள்ளும் ஆளுமை திறனும் இவர்களுக்கு அமையப்பெற்று இருக்கும், இவர்களுக்கு மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

ரிஷபராசி மிருகசீரிடம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!


"மிருகசீரிடம் நட்சத்திரம்"
அதிகாரமும் ஆளுமைத்திறனும் ஒருங்கே அமையப்பெற்ற அருமையான நட்சத்திரம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாவது ஸ்திர நிலதத்துவ ராசியான ரிஷப ராசியில் வியாபித்து இருக்கும் "செவ்வாயின்" மிருகசீரிடம் நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்கள் இயற்கையிலேயே அதீத திறமைசாலிகள் என்றால் மிகையாகாது, பேச்சு திறன், அனைவரையும் ஒன்றிணைக்கும் தன்மை, சேமிப்பில் அதீத ஆர்வம், சிறந்த நிதி மேலாண்மை, பொருளாதர ரீதியான வெற்றிகளை குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்தும் ஆற்றல், புலனுக்கு அப்பாற்பட்ட அறிவாற்றல் என்ற வகையில் சிறப்பை தரும், இவர்களது  வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் வழிபாடு மிருகசீரிடம் நட்சத்திர அன்பர்களுக்கு வேண்டும் வரங்களை 27நாட்களுக்குள் வாரிவழங்கும் வல்லமை பெற்றவர், வளர்பிறை செவ்வாய் அல்லது வெள்ளி கிழமைகளில் செவ்வாய் சுக்கிர ஹோரையில் சிகப்பு பட்டு, செவ்வரளி மாலை சாற்றி வழிபாடு செய்யும் மிருகசீரிடம் நட்சத்திர அன்பர்கள் தங்களது வாழ்க்கையில் நிறைவான சுபயோகங்களை பெற்று மகிழ்வார்கள், அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும் "சோமாஸ்கந்தர்" சிவன் பார்வதி தம்பதிகள் தங்கள் குழந்தையான கந்தனுடன் காட்சியளிப்பதை "சோமாஸ்கந்தர்" என்று அழைக்கிறோம். இவ்வடிவத்தில் சைவம் (சிவன்), சாக்தம் (உமை), கௌமாரம் (கந்தன்) ஆகிய மூன்று இறைநிலையின் தன்மையை மிருகசீரிடம் நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்கள் சுவீகரிப்பது சகல சௌபாக்கியங்களையும் தன்னிறைவாக வாரி வழங்கும்.

 மிருகசீரிடம் நட்சத்திர அன்பர்கள் வாக்கு வன்மையும், வீரதீர செயல்களில் அதீத ஆர்வமும், தற்காப்புக்கலைகளில் சிறப்பான தேர்ச்சியும், கலைத்துறையில் ( நடிப்பு ) மிகப்பெரிய வெற்றிவாய்ப்புகளையும், நிலையான பொருளாதர முன்னேற்றத்தையும் சுயமாக சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள், மற்றவர்களை சார்ந்து வாழாமல் தனக்கான தனித்துவத்தை உலகுக்கு பறைசாற்றி மற்றவர்கள் பயனுற வாழும் யோகம் கொண்டவர்கள், தனது குடும்ப உறுப்பினர்கள் மீது அதீத அக்கறை கொண்டவர்கள், முரட்டுசுபாவம் கொண்டவர்களாக வெளிகாட்டிக்கொள்ளும் இவர்கள், உண்மையில் பாசம் அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள், ஆண் பெண் இருபாலரும் அழகிய தோற்றம் கொண்டவர்களாக இருப்பது கவனிக்கத்தக்கது, தனது அழகாலும் செயல்பாடுகளாலும் மற்றவர்களை மிக எளிதாக வசீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள், கடவுள் அருளாசியும், ஆன்மீகத்தில் அதீத பற்றும் கொண்டவர்கள், தமது புதிய கண்டுபிடிப்புகள் வழியில் உலகின் பார்வையை தமது பக்கம் திரும்பிப்பார்க்க வைக்கும் தன்மை பெற்றவர்கள், பல அறிய சாதனைகளுக்கும், ஆளுமை திறன் தேவை படும் துறைகளில் மிகப்பெரிய வெற்றிகளுக்கும் தமது வாழ்வை அர்ப்பணிக்கும் யோகம் பெற்றவர்கள், இவர்களது அறிவுரைப்படி நடக்கும் பொதுமக்கள் சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்த்தையும் கவுரவத்தையும் மிக எளிதாக பெறுவார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

குறிப்பு :

 ரிஷபராசியில் "மிருகசீரிடம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், சாஸ்திர வல்லுனர்களாகவும், தொழில்நுட்ப அறிவுத்திறன் அதிக அளவிலும், தற்காப்பு கலைகளில் சிறப்பான தேர்ச்சியையும், மருத்துவம், ஜோதிடம், கட்டிட கலை, ஆகம சாஸ்திரம், இரத்தின கற்களை பிரயோகிக்கும் வல்லமை, தலைமை பொறுப்பு ஏற்கும் யோகம், சரியான திட்டமிடுதல், அனைவரையும் அனுசரித்து செல்லும் யோகம், கூட்டு அமைப்பு, பொதுமக்களை தனது பேச்சு திறனால் ஒன்றிணைக்கும் தன்மை, அதிகாரம் செய்வதன் மூலம் சமுதாயத்திற்க்கு பயனுள்ள காரியங்களை செய்வது, வருமுன் காப்பது, மற்றவர்களை துன்பத்தில் இருந்து காக்கும் வல்லமை, தனது வாழ்நாள் மற்றும் அதன் பிறகும் பெயரும் புகழும் கொண்ட பயனுள் வாழ்க்கையை வாழும் யோகம் பெற்றவர்கள், இவர்களுக்கு மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696

வெள்ளி, 8 டிசம்பர், 2023

ரிஷபராசி ரோஹிணி நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

"ரோஹிணி நட்சத்திரம்" அதிர்ஷ்டமும் அறிவாற்றலும் ஒருங்கே அமையப்பெற்ற அற்புதமான நட்சத்திரம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாவது ஸ்திர நிலதத்துவ ராசியான ரிஷப ராசியில் வியாபித்து இருக்கும் "சந்திரனின்" ரோஹிணி நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்கள் இயற்கையிலேயே அதிர்ஷ்டசாலிகள் என்றால் அது மிகையாகாது, ஏனெனில் இவர்கள் நினைக்கும் விஷயங்கள் யாவும் நிச்சயம் நடைமுறைக்கு வரும், அது நன்மை தரும் காரியங்கள் என்றாலும் சரி, தீமை தரும் காரியங்கள் என்றாலும் சரி, எனவே ரோஹிணி நட்சத்திர அன்பர்கள் அனைவரும் தனது மனதில் நேர் மறை எண்ணங்களை மட்டுமே சிந்திப்பது அவசியமானது, இவர்களது  வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

"திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்" இக்கோயில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள திருப்பட்டூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. ரோஹிணி நட்சத்திர அதிதேவதை "பிரம்மா" என்பதனாலும், பிரம்மாவிற்கு சாப நிவர்த்தி செய்த திருத்தலம் என்பதாலும், பிரம்மாவிற்கு தனிச்சன்னதி வழங்கிய இறைவன் இத்திருத்தலம் நாடி வரும் அன்பர்களுக்கு மறுபிறவி நல்க பணித்ததாலும், இங்கு வரும் அனைத்து அன்பர்களின் வாழ்விலும் நல்மாற்றங்கள் 48நாட்களுக்குள் நிகழும் என்பது கவனிக்கத்தக்கது, பிரம்ம தீர்த்தத்தில் நீராடி "இறைவன் பிரம்மபுரீசுரவரர் இறைவி பிரம்மநாயகி" வழிபாடு செய்த பிறகு, பிரம்மாவை வளர்பிறை திங்கள் அன்று வெண் நிற மலர்கள் வெண்பட்டு சாற்றி வழிபடும் ரோஹிணி நட்சத்திர அன்பர்களுக்கு, வாழ்வில் வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழும் என்பது கண்கூடான உண்மையாகும்.

பிறப்பின் அருமை, பிறவிப்பயன், உடல் ரீதியான மாற்றங்கள், அறிவுபூர்வமான செயல்பாடுகள், கல்வியில் அபரிவிதமான முன்னேற்றம், கலைகளில் தேர்ச்சி, பிரபல்ய யோகம், அரசு பதவிகளை அலங்கரிக்கும் யோகம், தெய்வீக அனுகூலம், தீர்க்கமான வாதத்திறமை, வாக்குபலிதம், மற்றவர்களை தமது வார்த்தைக்கு கட்டுப்படுத்தும் தன்மை, மதிப்பு மரியாதை, மற்றவர்களை சார்ந்து வாழாமல் தனித்து புகழ் பெறுதல், ஆயகலைகளில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு, இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் சிறப்பான வெற்றிகள், வருமானத்திற்க்கு குறைவில்லா நிலை, பற்றாக்குறை என்பது இல்லாமல் தன்னிறைவான பொருளாதார வளர்ச்சி, முற்போக்கு சிந்தனை, கலைத்துறையில் அதீத ஆர்வம் அதன்வழியிலான அதிர்ஷ்டவாய்ப்புகள், தனது படைப்பு திறன் கொண்டு அனைவரையும் தனது பக்கம் ஈர்க்கும் வல்லமை, அரசியலில் புகழ் பெரும் யோகம், சரித்திரம் படைக்கும் பேராற்றல் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும்.

குறிப்பு :

 ரோஹிணி நட்சத்திரத்தை தமது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள் இயற்கையாவே மற்றவர்களை கவரும் தன்மை பெற்றவர்கள், எதிலும் தனித்து தெரியும் தன்மையும், தனது சுய முயற்சி வழியிலான சாதனைகளை மிக சிறப்பாக முன்னெடுக்கும் பேராற்றல் பெற்றவர்கள் என்றால் அது மிகையாகாது, அரசியல், கலைத்துறை, விளையாட்டு, புதிய கண்டுபிடிப்புகள், சாஸ்திர ஞானம், தெய்வீக தன்மை, முற்போக்கு சிந்தனை, எதிர்பாலின கவர்ச்சி, தன்னிறைவான பொருளாதார வளர்ச்சி என்ற வகையில் சிறப்பை பெறுவார்கள், இவர்களுக்கு மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696

புதன், 6 டிசம்பர், 2023

ரிஷபராசி கார்த்திகை நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு !

 "ரிஷபராசி கார்த்திகை நட்சத்திரம்" கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு இரண்டாம் ராசியாகவும், ஸ்திர நில தத்துவ ராசியாகவும் விளங்கும் ரிஷப ராசியில் "சூரியனின்" கார்த்திகை நட்சத்திரத்தை, தனது ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்களுக்கு, வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும்.

 சூரியனார் கோயில், தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை அருகே அமைந்துள்ளது. இத்திருக்கோவிலுக்கு வளர்பிறை ஞாயிறு அன்று சென்று, அதிகாலை 5:30 முதல் 7:00 மணிக்குள் சூரிய ஹோரையில் சூரிய பகவானை தாமரை மலர் அல்லது வெள்ளெருக்கு மலர் மாலை மற்றும் ஆரஞ்சு மஞ்சள் கலந்த வர்ண வஸ்திரம் சாற்றி, இறைவனை தரிசனம் செய்து வழிபடும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களுக்கு வாழ்வில் மேற்கண்ட சுபயோகங்கள் யாவும் 3 மாத காலத்தில் நடைமுறைக்கு வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட விஷயமாகும்.

  ரிஷபராசி கார்த்திகை நட்சத்திர அன்பர்கள் பொதுவாகவே மருத்துவத்திலும், தற்காப்பு கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக திகழ்வார்கள், புதிய மருத்துவ கண்டுபிடிப்புகள், மருத்துவ ரீதியான உபகரணங்கள் போன்றவற்றை மிக சிறப்பாக கையாளும் அறிவுத்திறன் கொண்டவர்கள், மனிதர்களின் உடல் ரீதியான பிணிகளை நிவர்த்தி செய்யவும் அவர்களுக்கு உடல் மனம் ஆகிய நிலைகளில் சுகமளிக்கும் கைராசி பெற்றவர்கள், இவர்களது கரங்கள் தொட்டவுடன் மற்றவர்கள் உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் சுகம் பெறுவார்கள் என்பது கவனிக்கத்தக்கது, வீர தீர செயல்களில் அதீத ஆர்வம் கொண்டவர்கள், ரகசிய கலைகளை சரியாக பிரயோகம் செய்யும் வல்லமை பெற்றவர்கள், சாதார நிலையில் இருந்து உலக புகழ் பெரும் யோகமும் பொருளாதர ரீதியான தன்னிறைவை மிக குறுகிய காலத்தில் சுவீகரிக்கும் யோகம் பெற்றவர்கள், தனக்கு கீழ் மிக பெரிய சாம்ராஜ்ஜியத்தையே நிறுவும் திறன் பெற்றவர்கள் என்பது பிறவியிலே ( சிறு வயதுமுதல் அனைத்திலும் முன்னிலை ) மற்றவர்களுக்கு அறிவுறுத்தும் தன்மை பெற்றவர்கள், சமூகத்திற்கு சரியான வழிகாட்டியாகவும், சீர்திருத்த வாழ்வியலை மிக எளிதாக மக்களிடம் நடைமுறைப்படுத்தும் வல்லமையும், எதிர்கால வாழ்வை சிறப்பாக எதிர்கொள்ளும் தன்மையை பொருளாதார அறிவுடன் மற்றவர்களுக்கு வழங்கும் யோகம் பெற்றவர்கள், இவர்களது பெற்றோரும், உற்றார் உறவினர்களும், இவரை சார்ந்து வாழ்வோரும் சகலவிதமான சௌபாக்கியங்களையும் தன்னிறைவாக பெற்று சுகமடைவர்.

குறிப்பு :

 கார்த்திகை நட்சத்திரத்தை தமது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள் இயற்கையாவே ( ஹீலிங் பவர் ) சுகமளிக்கும் வல்லமை கொண்டவர்கள், மருத்துவம் சம்பந்தப்பட்ட துறைகளில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தும் வல்லமை பெற்றவர்கள், அறிய கலைகளை கற்றுணர்ந்து பிரயோகம் செய்யும் தன்மை சிறுவயது முதலே இவர்களுக்கு இறையருள் வழங்கி இருக்கும், செய்யும் காரியங்களில் ஒரு நேர்த்தியான விஷயங்களை கடைபிடிப்பார்கள், இவர்களது ரகசியங்களை எவரும் அறிய இயலாது என்பது கவனிக்கத்தக்கது, மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 


ஜோதிடன் வர்ஷன் 

9443355696

திங்கள், 4 டிசம்பர், 2023

மேஷராசி கார்த்திகை நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு !

 "கார்த்திகை அகஇருளை அகற்றும் அகல்விளக்கு" அறியாமை எனும் அகஇருளை  அகற்றி "அறிவு" எனும் சுடரொளி  பிரகாசிக்க வைக்கும் அற்புதமான நட்சத்திரம், கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு முதல் நெருப்பு தத்துவ ராசியான மேஷ ராசியில் பிறந்து, சூரியனின் கார்த்திகை 1 ம் பாதத்தை ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்களுக்கு, அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை என்பதற்கு இணங்க

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.

என்ற திரு குறளுக்கு ஏற்ப தமது வாழ்வில் அறிவுத்திறன் கொண்டு எதிலும் முன்னிலை பெரும் அற்புதமான நட்சத்திரம், தமது வாழ்க்கையில் சிறந்த நிர்வாக திறனை சிறு வயது முதலே சிறப்பாக பெற்று இருப்பார்கள், எந்த ஒரு கடுமையான சூழல்களையும் மிக எளிதாக சமாளிக்கும் வல்லமை பெற்று இருப்பார்கள், அரசு முதன்மை பணிகளை ( இந்திய ஆட்சி பணி ) மிக எளிதாக சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள், செல்லும் இடமெல்லாம் புகழ் பெரும் யோகம் பெற்றவர்கள், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நேர்மை, உண்மை, சத்தியம் போன்றவற்றை கடைபிடிக்கும் ஒழுக்கசீலர்கள், தம்மை சார்ந்தவர்களுக்கு சரியான பாதையை வழிகாட்டும் வல்லவர்கள், சுய கட்டுப்பாடு, நேர்த்தியான செயல்பாடுகள், வருமுன் காக்கும் பேராற்றல், பிறப்பின் அருமை உணர்ந்து செய்யப்படும் தன்மை, சரியான நேரத்தில் சரியான காரியங்களை செய்யும் வல்லமை, எதிர்ப்புகளை மிக எளிதாக சமாளிக்கும் பேச்சு திறன், அதிகாரம் செய்யும் யோகம், அனைவரையும் தமது பேச்சுக்கு கட்டுப்பட செய்யும் வலிமை, புதிய சிந்தனை, புதிய அணுகுமுறை, தனக்கான பாதையை தானே கட்டமைத்துக்கொள்ளும் யோகம் என்ற வகையில் சிறந்த நற்பலன்களை பெரும் அன்பர்கள் இவர்களே என்றால் அது மிகையாகாது, மிகுந்த வலிமை பெற்ற கார்த்திகை நட்சத்திர அன்பர்கள் தமது வாழ்வில் சகல சௌபாக்கியம் மற்றும் சுபயோகங்களை தன்னிறைவாக பெற, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும்.

"நினைத்தாலே முக்தி நல்கும் திருவண்ணாமலை" திருக்கோவிலே கார்த்திகை நட்ஷத்திரம் முதல் பாதத்தில் பிறந்த "மேஷ ராசி" அன்பர்களுக்கு வெற்றியை பரிபூரணமாக வழங்கும் திருத்தலமாகும், தமது ஜென்ம நட்சத்திரம் அன்றோ அல்லது வளர்பிறை ஞாயிற்று கிழமை அன்றோ அண்ணாமலையாரை அபிஷேக திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து, மஞ்சள் அல்லது வெண் பட்டாடை சாற்றி வழிபாடு செய்வோருக்கு, அரசியல் ஆதாயம், அரசு பதவி, அரசு வேலைவாய்ப்பு, அமைதியான இல்லற வாழ்க்கை, உடல் மற்றும் மனதில் சிறப்பான முன்னேற்றம், பிறவி பயனை முழுமையாக சுவீகரிக்கும் ஆற்றல், கல்வியில்  தேர்ச்சி, நிர்வாக திறன் அதிகம் தேவைப்படும் துறைகளில் வெற்றி வாய்ப்புகள், சுய முன்னேற்றத்தில் அதீத ஆர்வம், தொழில் வழியிலான அபரிவிதமான வளர்ச்சி, ஆன்மீக ரீதியான வெற்றி, மணிபூரகம் சிறப்பாக  செயல்படும் தன்மை, நேர்மையான வழியில் சொத்து சுக சேர்க்கை, புகழுடன் தோன்றும் புத்திரபாக்கியம், பெற்ற பிள்ளைகள் வழியிலான சௌபாக்கியம், தடைகள் யாவும் தகர்த்தெறிந்து முன்னிலை பெரும் அமைப்பு என வாழ்வில் பல வியக்கத்தக்க நல்மாற்றங்களை முழுமையாக வாரி வழங்கும்.

 குறிப்பு :

 கார்த்திகை முதல் பாதத்தை தனது ஜென்ம நட்சத்திரமாக பெற்றோ அல்லது ஜென்ம லக்கினம் இந்த நட்ஷத்திரத்தில் முதல் பாதத்தில் அமைய பெற்ற அன்பர்கள் அரசு பதவிகளையும் அதிகார பதவிகளையும் மிக எளிதாக சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்களாக திகழ்வார்கள், மேலும் பொது மக்கள் நன்மதிப்பை பெற்று அரசாளும் யோகமும் இவர்களுக்கு உண்டு, ஆய கலைகளில் "ஜோதிட துறையில் " தேர்ச்சி பெற சுய ஜாதகத்தில் இந்த நட்சத்திரம் வலிமை பெற்று இருப்பது அவசியமானது, முக்காலங்களை கண்டுணரும் வல்லமையை தரும், திரு அண்ணாமலையார்  வழிபாடு கார்த்திகை நட்ஷத்திர அன்பர்கள் வாழ்வில் புகழ் மிக்க பொறுப்புகளையும் "ராஜயோகத்தையும்" தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696


சனி, 2 டிசம்பர், 2023

மேஷராசி பரணி நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு !


 "பரணி தரணி ஆளும்" என்பதற்கு இணங்க 
கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு முதல் நெருப்பு தத்துவ ராசியான மேஷ ராசியில் பிறந்து, சுக்கிரனின் பரணி நட்ஷத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்களுக்கு, இறையருள் கலைஞானமும், சாஸ்திர ஞானமும் ஒருங்கே அமையப்பெற்ற   திறமையாளர்களாக திகழும் தன்மையை நல்கும், இவர்கள் தமது வாழ்வில் உடல் நலம் மனோ வலிமை, தெய்வீக வெற்றி, கல்வி கேள்விகளில் தேர்ச்சி, தொழில்வழியிலான அபரிவிதமான முன்னேற்றம், கவுரவமான பதவி, இனிமையான வாழ்க்கை துணை, நல்லதோர் இல்லற வாழ்க்கை, அறவழியிலான தனசேர்க்கை, புகழ் மிக்க பொறுப்புகள், வேற்று நாடுகளில் இருந்து வரும் பொருளாதார முன்னேற்றம் போன்ற சுபயோகங்களை தன்னிறைவாக பெற, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும்.

 நாகபட்டினம் மாவட்டம் திருப்புகலூரில் உள்ள அக்னீஸ்வரர் திருக்கோவில் "பரணி" நட்ஷத்திரத்தை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு சகல சௌபாக்கியத்தையும் 100% விகிதம் வாரி வழங்கும் திருக்கோவில் ஆகும், அக்கினிபுரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 75ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் தலவிருட்சமாக புன்னை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தம் மற்றும் பாண தீர்த்தம் ஆகியவை உள்ளன, வருடம் ஒரு முறை வளர்பிறை ஞாயிறு அன்று சூரியன் அல்லது செவ்வாய் ஹோரையில் செவ்வரளி மலர்கள் கொண்டும், சிகப்பு வர்ண பட்டு வஸ்த்திரம் சாற்றியும் மனமுருக தங்களின் கோரிக்கைகளை வேண்டுதல் செய்ய, பரணி நட்ச்சத்திர அதிதேவதையான அக்னி பகவான் தங்களின் கோரிக்கைகளை 16 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து அருளாசி வழங்குவார்.

 "பரணி தரணி ஆளும்" என்பதற்கு இணங்க முழுமையான ராஜயோக வாழ்வை வழங்கும் ரகசிய இறைவழிபாடு இதுவே ஆகும், எனவே பரணி நட்சத்திர அன்பர்கள் தங்களது சுய ஜாதக வலிமைக்கு ஏற்ற நன்னாளில் மேற்கண்ட வழிபாட்டினை வெகு சிறப்பாக முன்னெடுக்கும் பொழுது தங்களின் வாழ்க்கையில் பல வியக்கத்தக்க மாற்றத்தையும், தரணி ஆளும் யோகத்தையும் பரிபூர்ணமாக பெற இயலும்.

குறிப்பு :

  பரணி நட்ச்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது ஜென்ம லக்கினம் இந்த நட்ஷத்திரத்தில் அமைந்த அன்பர்கள் மிகுந்த கலாரசனை பெற்றவர்களாக திகழ்வார்கள், கலைத்துறையில் கதா நாயகன் கதா நாயகியாக குறுகிய காலத்தில் புகழ் மிக்க வாழ்க்கையை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள், மேலும் பொது மக்கள் நன்மதிப்பை பெற்று அரசாளும் யோகமும் இவர்களுக்கு உண்டு என்பதனால், இந்த இறை வழிபாடு அவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696

வெள்ளி, 1 டிசம்பர், 2023

மேஷராசி அஸ்வினி நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் இறைவழிபாடு !

 


 கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு முதல் ராசியான மேஷ ராசி "அஸ்வினி" நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களுக்கு தமது வாழ்வில் தன்னிறைவான சுகபோகங்களை சுவீகரிக்கவும், உடல்நலம் மனோவலிமை, செய்யும் காரியங்களில் வெற்றி, கல்வியில் மேன்மை, தொழில் யோகம், திருமணம் மற்றும் இனிமையான இல்லற வாழ்க்கை, புத்திர பாக்கியம், பொருளாதார வளர்ச்சி என ராஜயோக வாழ்வை பெற மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும்.

 வளர்பிறை செவ்வாய் கிழமை அன்று குரு ஹோரையில் ( மதியம் 12மணி முதல் 1மணி வரை ) திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள கலை தெய்வமாம் "மகா சரஸ்வதி தேவி கோவிலுக்கு" வருடத்தில் ஒரு முறை சென்று வெண்ணிற புஷ்பம் ( மல்லிகை மலர் ) வெண் பட்டு வஸ்த்திரம் சாற்றி மனமுருக தங்களின் கோரிக்கைகளை வேண்டுதல் செய்ய, அஸ்வினி நட்ச்சத்திர அதிதேவதையான சரஸ்வதி தேவி தங்களின் கோரிக்கைகளை 48 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து அருளாசி வழங்குவார்.

கல்வி ஞானம், சாஸ்த்திர ஞானம், அறிய கலைகளில் தேர்ச்சி, கலைதுறையில் வெற்றி, இயல் இசை நாடகம் போன்றவற்றில் புகழ் பெற  "மகா சரஸ்வதி தேவி கோவிலுக்கு" அவரவர் சுய ஜாதக வலிமை பெற்ற நாட்களில் சென்று வழிபட சகல சௌபாக்கியமும் வந்து சேரும் என்பது ஓர் வியக்கத்தக்க அதிசயம் ஆகும், குறிப்பாக மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தை தமது ஜென்ம லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு 100% வெற்றியை தரும் மிக சிறப்பான வழிபாடு இதுவே ஆகும்.

குறிப்பு :

  அஸ்வினி நட்சத்திரத்தை தமது ஜென்ம லக்கினமாக கொண்ட அன்பர்கள் இயற்கையாவே வீரியமிக்க செயல்பாடுகளை முன்னெடுக்கும் வல்லமை பெற்றவர்கள், மேலும் தொழில் நுட்ப அறிவியலில் சிறந்து விளங்கும் தன்மை பெற்றவர்கள், சிறந்த நிர்வாக திறமை, சரியான திட்டமிடுதல்கள், பொருளாதார முன்னேற்றத்தில் அதீத ஆர்வம் கொண்டவர்கள் என்பதனால், இந்த இறை வழிபாடு அவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696